வாழ்க்கைக்குத் தேவையானவற்றைத் தியானத்தின் மூலம் பெற முடியுமா…?

eternal blissful life

வாழ்க்கைக்குத் தேவையானவற்றைத் தியானத்தின் மூலம் பெற முடியுமா…?

 

கேள்வி:-
லௌகீக வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படையான விஷயங்களை (வீடு வேலை குழந்தைகள் படிப்பு) தியானத்தின் மூலம் பெற நினைப்பது சரியா…?

பதில்:-
லௌகீக வாழ்க்கைக்கு என்று தனியாக எதையும் தேட வேண்டியதில்லை. பசிக்கும் பொழுது உணவைத் தேடுகின்றோம். உணவை உட்கொள்கிறோம். அது உடலுக்கு அவசியம் தான்..!

ஆனால் உடலை உருவாக்கிய உயிரின் அருள் பசியைப் போக்க நாம் என்ன செய்கிறோம். உடல் பசியைத் தினமும் மூன்று வேளை போக்குகின்றோம். ஆனால் அருள் பசியைத் தினமும் தணிக்கின்றோமா…? இல்லையே…!

அதை விடுத்துவிட்டு நம் உடலுக்கு… இந்த லௌகீக வாழ்க்கைக்குத் தேவையான எல்லாம் பெற்றிருந்தாலும் மனிதனல்லாத உடலுக்குள் சென்ற பின் நம்முடைய நிலை என்ன…?

அருள் வாழ்க்கை வாழ்ந்தால் பொருள் நம்மைத் தேடி வரும். பொருளை மட்டும் தேடிக் கொண்டிருந்தாலோ அல்லது பொருள் இருந்தால் தானே அருளைப் பெற முடியும் என்று சொல்லிக் காலம் தாழ்த்திக் கொண்டே இருந்தாலோ பொருள் கிடைக்கும். ஆனால்
1.நம் ஆயுள் முடிந்து மீண்டும் இன்னொரு சரீரத்திற்குள் சென்று
2.மறுபடியும் அதே பொருளையே தேடிக் கொண்டிருக்க வேண்டியது தான்.
3.ஒவ்வொரு சரீரத்திலேயும் பொருளையே தேடலாம்.
4.இதை முடிவு செய்து கொண்ட பின் தியானிக்கலாம்…!

ஆகவே தியானம் என்றால் என்ன என்று முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்…! இது மிகவும் முக்கியம். இதைத் தெரிந்து கொண்டால் கேள்விக்குண்டான பதில் உங்களுக்கே தன்னாலே வரும்.

ஒன்றை மீண்டும் மீண்டும் மீண்டும் எண்ணிக் கொண்டிருப்பதே தியானம் ஆகும். எதை எண்ணுகின்றோமோ அதை அடுத்தவர்களிடத்தில் சொல்லிக் கொண்டேயிருந்தால் அல்லது அதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தால் அதற்குப் பெயர் ஜெபம் ஆகும். அதாவது ஜெபித்தல் என்று பொருள்.

மனிதன் என்றாலே மனது உள்ளவன்… அதாவது எண்ணத்தின் ஆற்றல் பெற்றவன்… எண்ணியதைச் செயல்படுத்துபவன்…! என்று பொருள்.

1.நாம் எதை எண்ண வேண்டும்…?
2.நாம் எதைச் செயல்படுத்த வேண்டும்…?
3.நாம் எதைத் தியானிக்க வேண்டும்…?
4.நாம் எதை ஜெபிக்க வேண்டும்…? என்பதைத் தீர்மானித்தாலே நாம் பெறவேண்டியதை எளிதில் பெறலாம்.

நாம் நல்லதை எண்ணுவோம். அதைச் செயல்படுத்துவோம் ஆனால் நடக்கவில்லை என்ற உடனே நல்லதை எண்ணுவதை விட்டு விட்டுச் சோர்வடைவோம்… கோபப்படுவோம்… ஆத்திரப்படுவோம்…! ஒன்றும் முடியவில்லை என்கிற பொழுது கடைசியில் வேதனைப்படுவோம்.

நடக்கவில்லை… நடக்கவில்லை…! என்று அதையே தியானித்து விட்டு குடும்பத்திலும் சரி நண்பர்களிடமும் சரி பார்க்கும் அனைவரிடமும் அந்த வேதனையைச் சொல்லி மீண்டும் மீண்டும் ஜெபித்துக் கொண்டே இருப்போம்.

நல்லதை முதலில் நினைத்திருந்தாலும் கடைசியில் தியானிப்பது வேதனையைத்தான்…! வேதனைப்பட்டால் எந்தக் காரியத்தையும் சீராகச் செய்ய முடியுமா…?

ஆனால் நல்லது நடக்கவில்லை என்றால்… அது எப்படி வேதனைப்படாமல் எப்படி இருக்க முடியும் என்பார்கள்…! வேதனை என்பதே விஷம். கோபம் என்றால் காரம். விஷத்தையும் காரத்தையும் வாயிலே போட்டால் எப்படி நல்ல சுவை வரும்…?

நல்ல சுவை வேண்டும் என்றால் விஷத்தை வேக வைக்க வேண்டும். காரத்தைத் தணிக்க வேண்டும். நல்ல சரக்குகளை இதனுடன் இணைக்க வேண்டும். இதைச் செய்யாதபடி நல்ல சுவை வராது.

அதைப் போன்று தான் நம்முடைய வாழ்க்கையில் வரும் தீமைகளை அதாவது விஷத்தை வேக வைப்பதற்காக மகரிஷிகளின் உணர்வுகளை எடுத்துத் தான் ஆக வேண்டும். அதை எடுக்காதபடி நல்லதைப் பெற முடியாது.

அதை எடுத்து வலுவாக ஆக்கிக் கொண்ட பின்
1.எந்த நல்லது நடக்க வேண்டுமோ
2.அது மகரிஷிகள் உபதேசித்த அருள் வழிப்படி நடக்க வேண்டும் என்று சீராக எண்ணினால்
3.அதைச் செயல்படுத்தும் ஞானமும் வழி முறைகளும் தன்னாலே வரும்.

ஆனால் மகரிஷிகளின் உணர்வுகளை எடுத்து விஷத்தை அடக்காதபடி விஷத்தையே மீண்டும் மீண்டும் சேர்த்தால் முடிவில் சுவை வராது.
1.தியானமிருக்கும் பொழுது முதலில் நடந்தது
2.இப்பொழுது நடக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டியதிருக்கும்.

முதலில் ஆர்வ உணர்வுகள் இயக்கும் பொழுது நம் எண்ணம் சீராகவும் வலுவாகவும் இயக்கும். ஆர்வம் தணியும் பொழுது எண்ணம் சீராக இருப்பதில்லை… வலுவாகவும் இருப்பதில்லை.

எண்ணம் வலுவாகவும் சீராகவும் இருந்தால் தான் இயக்கம் தெளிவாக இருக்கும். அந்த எண்ணம் வலுவாகவும் சீராகவும் இருக்க வேண்டும் என்றால் மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் எடுத்துச் சேர்த்து வலுவாக ஆக்கிக் கொண்டே வர வேண்டும்.

ஏனென்றால் வாழ்க்கையில் நாம் எண்ணியபடி நடக்கவில்லை.. கிடைக்கவில்லை… என்ற நிலை ஆனவுடன் நம்மை அறியாமலே சோர்வும் கோபமும் ஆத்திரமும் வேதனையும் நமக்குள் வரத் தொடங்குகிறது.
1.அதற்குச் சிறிதளவு இடம் கொடுத்தால் என்ன ஆகும்…?
2.நம் உயிர் அதை இயக்கத் தொடங்கும். அந்த உணர்ச்சிகளை ஊட்டும்.

நாம் சாப்பிடும் உணவில் சுவையற்ற பொருள் இருந்தால் சாப்பாட்டை எப்படி வெறுக்கின்றோமோ அதே மாதிரி உடனே நமக்கு வெறுப்பு வரும். வெறுப்பு வந்தால் அடுத்து நம்முடைய தியானம் எதுவாக ஆகின்றது என்று சிந்தித்துப் பாருங்கள்…!

ஞானிகள் உணர்வை நெருங்க வேண்டும் என்றால் இந்தத் தெளிவு நமக்குள் வர வேண்டும். இத்தகைய தெளிவுடன் ஞானிகளின் உணர்வை எடுத்தால் அருள் ஆனந்த வாழ்க்கை நிச்சயம் வாழ முடியும். அருளைப் பெற்றால் இந்த லௌகீக வாழ்க்கையும் அதன் வழியிலே எளிதாகச் செல்லும்.

உடலை விட்டுப் பிரிந்தால் மீண்டும் எந்த உடலின் ஈர்ப்புக்குள்ளும் செல்லாது நேரே துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் உள்ள சப்தரிஷி மண்டலத்துடன் ஐக்கியமாகலாம்.

தியானம் செய்து செய்து என்னத்தைக் கண்டேன்…? ஒன்றும் நடக்கவில்லையே… கிடைக்கவில்லையே…! என்றால் அதன் காரணம் என்ன…?

Lightning souls

தியானம் செய்து செய்து என்னத்தைக் கண்டேன்…? ஒன்றும் நடக்கவில்லையே… கிடைக்கவில்லையே…! என்றால் அதன் காரணம் என்ன…?

 

விவசாயப் பண்ணைகளில் பல பல உணர்வினை இணைத்துப் புதுப் புது வித்தினை உருவாக்குகின்றார்கள். அவர்கள் கொடுத்த அந்த வீரிய வித்துக்களை வாங்கி நிலத்தில் ஊன்றுகின்றோம்.

அந்தப் பயிர்களைச் சீராக வளர்க்கும் பக்குவப்படுத்தும் முறைகளையும் உபாயத்தையும் அவர்களே கொடுக்கின்றார்கள். அவர்கள் சொன்ன வழியில் செயல்படுத்தும் போது பயிர் செழிப்பாக வளர்கின்றது. நல்ல மகசூலையும் கொடுக்கின்றது.

ஆனாலும் அந்தப் பயிர் இனங்களைப் பக்குவப்படுத்தி வளர்க்கும் போது இடைமறித்துக் களைகளும் முளைக்கின்றது. களைகளை அகற்றவில்லை என்றால் எவ்வளவு உயர்ந்த தர வித்துகளாக நாம் விதைத்திருப்பினும் அதனுடைய செயலாக்கங்கள் இழக்கப்படுகின்றது. பயிரின் விளைச்சல் குன்றி மீண்டும் தரமான வித்துக்களை உருவாக்க முடியாது.

இதைப் போன்று தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியுல் மெய் ஞானிகளின் அருள் வித்துக்களை உங்களுக்குள் அடிக்கடி உபதேசத்தின் மூலம் பதிவாக்குகின்றோம். வளர்க்கும்படி செய்கிறோம்.
1.உங்களுக்குள் அருள் ஞான வித்தாக விளைய வைத்ததை
2.ஒவ்வொரு நிமிடமும் நீங்கள் பாதுகாத்தல் வேண்டும்.

ஏனென்றால் நம்முடைய இந்த மனித வாழ்க்கையில் பெரும்பகுதி உடலின் இச்சைகளுக்கே நம் எண்ணத்தைச் செலுத்தி வாழ்ந்து வருகின்றோம்.

இதை எதற்குச் சொல்கிறோம் என்றால் தியானம் இருக்கும் பொழுது எதை எல்லாம் நாம் எதிர்பார்க்கின்றோம் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

நான் செய்யும் இந்தத் தியானத்தின் மூலம்
1.என் உடல் நலம் பெற வேண்டும் என்றும்
2.எனக்குத் தொழில் வளம் பெருக வேண்டும் என்றும்
3.நான் எண்ணியது எல்லாம் இந்த உடலின் வாழ்க்கைக்கு நடக்க வேண்டும்…! என்றும் ஏங்குகின்றோம்.

அது கிடைக்கவில்லை என்றால் “என்னத்த… நான் தியானத்தைச் செய்தேன்…! தியானம் செய்து செய்து எனக்கு என்ன கிடைத்தது…? ஒன்றும் நடக்கவில்லை…! என்று இந்தச் சோர்வான உணர்வினை எடுத்துக் கொள்கிறார்கள்.

அது மட்டுமல்ல. அவர்கள் பெறவில்லை என்றாலும்… தியானம் செய்யும் அடுத்தவர்களிடமும் சென்று “இத்தனை காலமாக நீங்கள் தியானம் செய்கிறீர்கள் அல்லவா…! அதில் என்ன பெற்றீர்கள்…?” என்று இவர்களே கேட்கத் தொடங்குகின்றார்கள்.

தான் எதிர்பார்க்கும் நிலைகளுக்கு…
1.இந்த உடலின் இச்சையை வளர்ப்பதற்குத் தான் தியானம் இருக்கிறோம் என்ற எண்ணங்களில் இருக்கின்றோமே தவிர
2.இந்த மனித உடலை விட்டுக் கடந்தால் எங்கே செல்ல வேண்டும்…?
3.அதற்கு எந்தச் சக்தியைச் சேர்க்க வேண்டும்…? என்ற எண்ணமே இல்லை.

உடல் பெறும் உணர்வுகளை மாற்றி என்றுமே அழியாத ஒளி உடலை நாம் வளர்க்க வேண்டும் என்பதைத் தான் யாம் (ஞானகுரு) சொல்லிக் கொண்டு வருகின்றோம்.
1.இதை வளர்க்க வாழ்க்கையில் வரும் அனைத்துத் துன்பங்களும் அகலும்.
2.(சீராகக் கடைப்பிடிப்பவர்கள் இதை நிச்சயம் உணரலாம்)

அதை விடுத்து விட்டு சாமி (ஞானகுரு) சொல்கிறார். தியானத்தையும் செய்தோம். அப்படியானால் ஏன் இது நடக்கவில்லை…? என்பார்கள்.

இது ஏன் என்றால் இரண்டு ஆசை இருக்கும். எப்படி…?

அதாவது பிள்ளைக்கு நல்ல இடத்தில் கல்யாணம் நடக்க வேண்டும் என்று நினைக்கிறோம். அதற்குண்டான நிலைகளை செய்து கல்யாணம் நடந்து முடிகின்றது.

திருமணம் முடிந்தாலும் யாம் உபதேசத்தின் வாயிலாகச் சொல்லி வந்த ஞானிகளின் அருள் உணர்வுகளை வாழ்க்கையில் நடக்க வேண்டிய அந்தப் பக்குவத்தை குழந்தைகளுக்கும் கண்டிப்பாக எடுத்துச் சொல்ல வேண்டும்.

அதைச் செய்வதில்லை. பிள்ளை மேல் மிகுந்த பாசமாக இருந்து கொண்டு மருமகன் தன் பிள்ளையை ஏசி விட்டால் போதும்…!
1.நல்வழியில் நடக்கும் உணர்வுகளை ஊட்டுவதற்குப் பதில்
2.எதிர்ப்பு உணர்வு கொண்டு வெறுக்கும் உணர்வுகளையே வளர்க்க நேர்கின்றது.

அப்படி வளர்த்துக் கொண்ட பின் சாமி சொன்ன வழியில் நாம் தியானம் இருந்தோமே… இப்பொழுது என்ன ஆனது…? சாமி ஆசீர்வாதம் செய்து தானே திருமணம் நடத்தினார்…!

அப்படியானால் மகளுக்கும் மருமகனுக்கும் ஏன் ஒருவருக்கொருவர் சண்டை வருகிறது…? என்ற வினாக்களை எழுப்பி புவியின் ஈர்ப்பின் பற்றுதலுக்கே நாம் வந்து விடுகின்றோம்.

வெறுக்கும் உணர்வையும் தியானத்தின் உணர்வையும் இது இரண்டையும் இணைத்து “நல்லது நடக்கவில்லையே…!” என்ற இந்த உணர்வினை நாம் நுகரப்படும் போது ஓ…ம் நமச்சிவாய…! அதைத்தான் நமக்குள் உருவாக்கிக் கொள்கிறோம்.
1.எந்த வெறுப்பையும் கோபத்தையும் எண்ணி இந்த உணர்வை நுகர்ந்தோமோ
2.அந்த அணுவாக உருவாக்கிவிடுகின்றோம்.

இந்த உணர்வின் சத்தை வளர்த்து அதை உணவாக நம் உடலிலுள்ள அணுக்களுக்குக் கொடுக்கும் பொழுது அது அந்த இனத்தைத் தான் பெருக்கும்.

அப்புறம் நீங்கள் எங்கேதான் போனாலும் கூட உயர்ந்த சக்தியைப் பெறுவதற்கு மாறாக தன்னையே இழி நிலைச் சரீரம் பெறும் நிலைக்கே இழுத்துக் கொண்டு போகும். எண்ணியது நடக்கவில்லை எனறால் வேதனை என்ற உணர்வை நுகர்ந்து விஷத்தின் தன்மையைத் தான் வளர்க்க முடியும்.

முதலில் சாதாரணமாக இருக்கும் போது அந்த விஷம் வேறு. ஆனால் தியானமும் செய்துவிட்டு தான் எண்ணியபடி நல்லதைப் பெற முடியவில்லை என்ற ஆசையின் நிலைகளில் செல்லும் பொழுது கடும் வேதனையாகின்றது.

இத்தகைய உணர்வுகளை உருவாக்கப்படும் போது முதலில் இருந்ததைக் காட்டிலும் விஷத்தின் தன்மையை அதிகமாக வளர்த்து விஷப் பூச்சியாக நம்மை மாற்றும் தன்மையைத்தான் பெறுகின்றோம் என்பதை யாரும் மறந்து விட வேண்டாம்.

ஆகவே இந்த உடலின் இச்சைக்குள் தான் இந்தத் தியானத்தைக் கொண்டு வருகின்றோமே தவிர
1.இந்த உடல் நமக்குச் சொந்தமல்ல.
2.எத்தனை காலம் இந்த உடலில் நாம் வாழ்கின்றோம்…! வளர்கின்றோம்…? என்ற தெளிவான எண்ணங்கள் இல்லை.

உடலை விட்டுப் பிரிந்தால் இனிப் பிறவி இல்லா நிலைகள் அடைய வேண்டும் என்பதற்குத்தான் நாம் இதைச் செயல்படுத்துகின்றோம்.
1.இந்த உடலில் நீங்கள் கோடி சுகத்தைப் பெறுங்கள்
2.(முதலில்) டாக்டரை வைத்தாவது இந்த உடலில் உள்ள எல்லா நோயையும் நீக்கிக் கொள்ளுங்கள்…!
3.அப்புறம் எத்தனை காலம் இந்த உடல் வாழுகின்றது…? சற்று சிந்தித்துப் பாருங்கள்.
4.ஒரு சில காலத்திற்கே வாழுகின்றது. பின் இந்த உணர்வின் தன்மை முதிர்வாகி இறந்து விடுகின்றது.
5.இதை இல்லை என்று யாராவது மறுக்க முடியுமா…?

மகரிஷிகளும் ஞானிகளும் இந்த உடலை விட்டுப் பிரிந்தனர். பிரிந்தாலும் அவர்கள் அனைவரும் ஒளியின் சரீரமாக இன்றும் சப்தரிஷி மண்டலமாக இருக்கின்றனர்.

நாம் அவர்கள் சென்ற வழியில் அதைப் பற்றுடன் பற்றிடல் வேண்டும்.
1.அதைப் பற்றினால் அந்த எல்லையை அடைய
2.இந்த உடல் வாழ்க்கைக்கு எது தேவையோ அது தானாக வரும்.
3.எது நடந்தாலும் நன்மை பயக்கும் செயலாகவே அது முடியும்.
4.நமக்கு எந்த வேதனையும் வராது. வெறுப்பும் வராது. ஏகாந்தமாக வாழ முடியும்…!
5.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குக் காட்டியது இதைத்தான்…!

விண் செல்லும் ஆற்றலும்… விண் செலுத்தும் ஆற்றலும்…!

இந்த உடலில் நேரமாகிவிட்டது

யாம் சொல்லும் வழிகளில் வடிகட்டி வருபவர்கள் யார்…?

இருளா… ஒளியா…?

வேதனையை நீக்கும் சக்தி – சப்தரிஷி மண்டலம் போகும் வழி

உயிரை மணியாக்கும் நிலை – ஒளியான அண்டங்கள்

பெண்களுக்குண்டான சக்தி – பிற கோள்களுக்குச் சென்று வாழ முடியுமா…?

சப்தரிஷி மண்டலத்தின் வாழ்க்கை முறை – கூட்டுத் தியானத்தின் முக்கியத்துவம்

விண் செல்லும் ஆற்றல்

ஆறாவது நிலையிலிருந்து பத்தாவது நிலைக்குச் செல்லும் வழி

குரு அடைந்த சொர்க்கத்தை நாமும் அடைவோம்

இந்த உடல் வேண்டாம்… சப்தரிஷி மண்டலத்தை நான் அடைய வேண்டும்

நினைவு நாள்

தியானம் செய்வோர் விண் செல்லும் காலம்

சாகாக்கலை வேகாநிலை

27 நட்சத்திரத்தின் சக்தியைப் பெற வேண்டியதன் அவசியம்

விண் செலுத்த… முன்னாடி அங்கே பெரியவர்கள் இருக்க வேண்டும்

பேரருள் பேரொளி

உணர்வுகளை உயிரின் ஜொலிப்பாக மாற்ற வேண்டும்

நமது எல்லை

பிறவியில்லா நிலை அடைய எப்படி எண்ண வேண்டும்…?

உடலுடன் யாரும் சொர்க்கம் அடைய முடியாது

ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று தான் உபதேசிக்கின்றேன்

கல்கி செல்ல விரும்புவோருக்கு

மனிதன் விண் செல்லும் வழியைத் தான் காட்டுகிறது “வேதங்களும் உபநிஷத்துக்களும்”

கல்கி

நீங்கள் ஒன்றுமே தெரியாதவர்களாக இருப்பினும்… பிறவி இல்லா நிலை அடைய முடியும்

வேகாநிலை போகாப்புனல்

விண்ணிலிருந்து வந்த நாம்… (வாழ்க்கையின்) “திசையைத் திருப்பி” மீண்டும் விண்ணுக்கே செல்ல வேண்டும்

“விண் செல்லும்… விண் செலுத்தும் ஆற்றலைத் தான்” குருநாதர் நமக்குக் கற்றுக் கொடுக்கின்றார்

“எப்பொழுது… எந்த நிலையில் ஆன்மா பிரிந்தாலும்…” மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நாம் இணைய வேண்டும்

விண்ணுக்குச் செல்லும் “உந்து விசை”

“நம்முடைய இச்சை” எதுவாக இருக்க வேண்டும்

இராமேஸ்வரத்தில்… நேரமாகிவிட்டது

நாம் மேலே செல்வதற்குப் பதில்… கீழே இந்த உடலுக்குள் இழுத்து விடக்கூடாது

குருநாதர் காட்டிய வழியில் எத்தனையோ மகான்களை விண் செலுத்தினோம் – ஞானகுரு

சப்தரிஷி மண்டலத்தில் இணையும்… இணைக்கும் யுக்தி

உயிரான்மா ஒளியாக மாறினால் “அகண்ட அண்டத்தில் எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியும்”

உடலுக்குப் பின் நாம் சென்றடைய வேண்டிய இடமும்… அதற்குண்டான வழி முறையும்

சப்தரிஷி மண்டலத்திற்குச் செல்லும் பாதை உருவானதும்.. அடைபட்டதும்…!

தேன் கூட்டில் தேனீக்கள் தேனைச் சேகரிப்பது போல் தான் உயிருடன் ஒன்றும் உணர்வுகளை நாம் ஒளியாக மாற்றுவதும்…!

பிறவி இல்லா நிலை அடைய இது தான் சுருக்கமான வழி…!

பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்ற அந்த ஒன்றை அடிப்படை ஆதாரமாக வைத்து வாழ்வோம்

இந்த உடலுக்குப் பின் நாம் எங்கே இருக்க வேண்டும்…?

எதனையுமே ஒளியாக மாற்றும் கலை தான் வேகாக்கலை

தேறாதது எது… தேறுவது எது…!

கணவனும் மனைவியும் ஒன்றிணைந்து ஒளியாக ஆவதற்குத் தான் திருப்பூட்டும் பழக்கத்தை ஏற்படுத்தினர் ஞானிகள்

அருள் ஒளி உடலுக்குள் அதிகரிக்க உடல் பெறும் அணுக்கள் கரையத் தான் செய்யும்… கரைந்தால் தான் உயிருடன் ஒன்றி ஒளியாக மாற முடியும்

உடலை விட்டுப் பிரியும் போது பறக்கும் நிலை பெற வேண்டும்

காலை துருவ தியானத்தில் கணவன் மனைவி ஒன்றிணைந்து எடுக்கும் தியானத்தால் கிடைக்கும் பலன்

விண் செல்ல வேண்டும் என்றால் உயிரான்மாவின் முகப்பில் வைக்க வேண்டிய சக்தி எது…?

விண்ணுலகம் அடையச் செய்யும் இரகசியம்

சூரியனுக்கே இல்லாத சிறப்பு நமக்கு உண்டு

மனிதன் அடைய வேண்டிய முழுமையின் நிலை

உடலுக்குப் பின் நாம் செல்ல வேண்டியது எங்கே…?

முதுமை என்பது உடலுக்குத் தான்… நமக்கு இல்லை…!

இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லா நிலை அடைய வேண்டும்.. அதற்குத் தான் எமது உபதேசம்

தியானத்தைச் சீராகக் கடைப்பிடிப்போருக்கு உடலுக்குப் பின் எங்கே போகிறோம் என்று தெரியும்… அடுத்தவருக்கும் உணர்த்தும்

குருநாதரின் உயிராத்மா ஒளியாக மாறியதையும் அதிலிருந்து பளீர்… பளீர்… என்று ஒளிக்கற்றைகள் பரவுவதையும் காட்டினார்

உடலை விட்டுப் பிரிந்த உயிரான்மாக்களை விண் செலுத்தும் பழக்கம் வளர்ந்து விட்டால் “உந்துவிசை இல்லாமல் நாம் விண் செல்ல முடியும்…!”

உடலை விட்டுப் பிரிந்தால் மீண்டும் மனிதனின் ஈர்ப்பு வட்டத்திற்குள் சிக்கிவிடக் கூடாது

நட்சத்திரங்களின் ஒளிக் கற்றைகளைத் தியானத்தில் நுகர வேண்டியதன் முக்கியத்துவம்

என் கடைசி எல்லை பிறவி இல்லா நிலை தான்..! என்ற உறுதி கொள்ளுங்கள்

நாம் அடைய வேண்டிய மெய் உலகம்…!

விண் செல்லும் மார்க்கத்தைக் காட்டுகின்றோம்… விரும்புவோருக்கு அது கிடைக்கும்

சப்தரிஷி மண்டலம் – மனிதனின் கடைசி எல்லை

27 நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறுங்கள்

பிறவியில்லா நிலை

விண் செல்லும் ஆற்றலையும் விண் செலுத்தும் ஆற்றலையும் வளர்த்துக் கொள்ளுங்கள்

ஆண் பெண் என்ற நிலையில் தான் விண் செல்ல முடியும் – இல்லை என்றால் முனி தான்

இராக்கெட் போல் நாம் விண் செல்ல வேண்டும்

அகஸ்தியன், ஈஸ்வராய குருதேவர் வழியில் நட்சத்திரத்தின் ஆற்றலால் விண் செல்லுங்கள்

.விண் சென்றவர்களைப் பார்த்து நாமும் ஏன் அந்த நிலை பெற முடியாதா என்று ஆசைப்படுங்கள்

குருநாதர் விண் சென்ற நிலை – அகஸ்தியன் குடும்பம் துருவ நட்சத்திரமாக ஆன நிலை

போகரை விண் செலுத்தும்படி செய்தார் குருநாதர்

பேரருள் பெறச் செய்த நமது பிரபஞ்சத்தைப் போற்றுதல் வேண்டும்

விண் செல்லும், விண் செலுத்தும் மார்க்கம் – முன்னோர்களை விண் செலுத்தினால் நாமும் எளிதில் விண் செல்ல முடியும்

நமது எல்லை எது…?

என்றுமே மாறாத வாழ்க்கை வாழ என்ன செய்ய வேண்டும்…?

உடல் பற்று கொண்ட சகோதரரின் நிலை – சாமிகள்

மின்னலைப் பேரொளியாக மாற்றிக் கொள்ளும் பக்குவம்

1500 ஆண்டு மனிதனை வாழ வைக்க முடியுமா…?

மரணமில்லாப் பெருவாழ்வை எப்படிப் பெறுவது..?

விஷத்தைப் பேரொளியாக மாற்றும் யுக்திகள்

உயிரை ஒளியாக்கும் சந்தர்ப்பம் – 27 நட்சத்திரம்

மரணம் அடைவதற்கு முன்னாடி அரிதாக சில பேர் சொல்லிவிட்டே போகிறார்கள்

உடலை விட்டுச் செல்லும் பொழுது யாருடன் செல்ல வேண்டும…?

மரணமில்லாப் பெரு வாழ்வு…!” வாழ வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

இந்த உடலுக்குப் பின் நாம் எங்கே செல்ல வேண்டும்…? என்ற சிந்தனையுடன் இருப்பதே உண்மையான தியானம்

நாம் செய்யும் தியானத்தின் முக்கிய நோக்கம்

உடலை விட்டுச் சென்றால் பறக்கும் நிலையை நாம் பெறவேண்டும்

உடலை விட்டுச் சென்றால் பறக்கும் நிலையை நாம் பெறவேண்டும்

பிரம்மத்தின் இரகசியத்தைத் தெரிந்து ஒளியாகப் படைக்கும் திறன் பெற்றவர்கள் தான் “அகஸ்தியரும் அவரைப் பின்பற்றியவர்களும்

விஷம் குடித்து இறந்த ஆன்மா மனைவியின் உணர்வுடன் சேர்ந்து விண் சென்றது

உடல் பெறும் உணர்வைக் கரைத்து நாம் உயிருடன் ஒன்றி ஒளியாக மாறவேண்டும்

இந்த உடலை விட்டுப் பிரியும் நேரம் நம்முடைய கடைசி நினைவு எதன் மீது இருக்க வேண்டும்…?

என்ன வாழ்க்கை இது…? என்று நரகலோகத்திலே தான் பெரும்பகுதிப் பேர் வாழ்கின்றனர்

மனித (உடல்) வாழ்க்கையின் பற்றை வளர்ப்பதைக் காட்டிலும் ஞானிகளைப் பற்றுடன் பற்றுவதே நல்லது…! ஏன்…?

நமது எல்லை எது…?

இன்றைய சூழ்நிலையில் நிச்சயம் உங்களால் அழியா ஒளிச் சரீரம் பெற முடியும்…!

உடலை விட்டுப் பிரியும் போது குருநாதர் சொன்ன விண் செல்லும் மார்க்கம்

கூட்டம் தேவை இல்லை…!

விண் செல்லும் மார்க்கம்

உடலுடன் வாழும் பொழுதே விண் செல்லும் ஆற்றலைப் பெருக்கிடல் வேண்டும்

.நம் முன்னோர்களை பிறவா நிலை பெறச் செய்ய வேண்டியதன் முக்கியத்துவம்

இந்த மனித வாழ்க்கையில் அந்தச் சப்தரிஷி மண்டலத்தை அடைய வேண்டுமென்று எண்ணும்போது நாம் அங்கே செல்கின்றோம்

நமது எல்லை பிறவியில்லா நிலை அடைவதே…!

சப்தரிஷி மண்டலம் தான் நமக்கு உகந்த இடம்…!

என்றுமே அழியாத துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்கு நாம் செல்ல வேண்டும்

உடல் என்ற விதிக்கு இனி செல்ல வேண்டாம்…!

மன அமைதியை இழக்கும் சந்தர்ப்பங்களை எல்லாம் மனதை உற்சாகப்படுத்தும் சந்தர்ப்பமாக எப்படி மாற்ற வேண்டும்..?

Agathiyams

மன அமைதியை இழக்கும் சந்தர்ப்பங்களை எல்லாம் மனதை உற்சாகப்படுத்தும் சந்தர்ப்பமாக எப்படி மாற்ற வேண்டும்…? 

 

சகஜ வாழ்க்கையில் எல்லோரும் நல்லதைத்தான் எண்ணுகின்றோம். யாரும் தவறு செய்யவில்லை. இருந்தாலும் சந்தர்ப்பங்கள் எப்படி நம்மை இயக்குகிறது என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் இன்றைய இளைய தலைமுறையினர் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி அடுத்தவர் ஏதாவது தன்னைப் பற்றிச் சிறிதளவு பிடிக்காமல் சொல்லிவிட்டாலும்.. :உடனே எனக்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது..!” என்று வந்துவிடுகின்றார்கள்.

1.கேட்டால் வேலை பார்க்கிற இடத்திலே என்னைத் திட்டுகிறார்கள். வீட்டிலேயும் திட்டுகிறார்கள்.
2.நண்பர்களும் சரியாக என்னிடம் பேசுவதில்லை.
3.என்னை யாருக்குமே பிடிக்கவில்லை.
4.என் மனது சரியில்லை… நான் வாழ்ந்து என்ன செய்யப் போகிறேன்..! என்று மிகுந்த மன உளைச்சலுடன் இருப்பார்கள்.

என்ன நடந்தது…? எதனால் இப்படி ஆனார்கள்..? என்று சிந்தித்துப் பார்த்தால் வாழ்க்கையை வெறுக்கும்படியாக அதில் ஒன்றுமே இருக்காது.

ஒன்றுமே இல்லை என்றால் அது எப்படி…?

1.நம் கையில் ஒரு அழுக்கோ தூசியோ ஒட்டினால் அதற்காக யாராவது டென்ஷன் ஆவோமா…?
2.தினசரி உடல் அழுக்கு ஆகிறது உடுத்தியிருக்கும் உடை அழுக்காகின்றது குளிக்காமல் இருப்போமா..?
3.அல்லது துணியைப் துவைக்காமலோ துணியைப் போடாமலோ இருப்போமா..? இல்லை.

சோப்பைப் போட்டு நல்ல நீரில் குளித்தால் அழுக்குகள் எல்லாம் ஓடிப் போகுமா இல்லையா…! சோப்பைப் போட்டு நுரையை ஏற்றினால் துணியிலிருக்கும் அழுக்குப் போகுமா இல்லையா…!

புறத் தூய்மை எப்படிச் செய்கிறோமோ அதே மாதிரித்தான் நம் மனதிலும் நம் எண்ணத்திலும் ஒட்டிக் கொள்ளும் அழுக்கைச் சோப்பைப் போட்டுக் கழுவுவது போல கழுவ முடியும்.

எத்தனை தடவை அழுக்கானாலும் நம் மனதையும் எண்ணத்தையும் தங்கம் போல பளிச் என்று வைத்துக் கொள்ள முடியும். அதனால் தான் வாழ்க்கையில் எந்த ஒரு காரியத்திற்காகவும்… “மன உளைச்சல் பட வேண்டியதில்லை…!” என்று சொல்கிறோம்.

ஏனென்றால் நம்மைத் திட்டுகிறவர்கள் திட்டி முடிந்ததும் அதை விட்டுவிட்டு வேறு வேலையைப் பார்க்கத் தொடங்குகிறார்கள். ஆனால் திட்டினார்கள்… திட்டினார்கள்…! என்று அதையே நாம் நினைத்துக் கொண்டிருக்கின்றோம்.

அங்கே தான் நாம் தவறு செய்கிறோம்.

1.கையில் எடுத்த ஒரு வேண்டாத பொருளை கீழே அப்படியே போட்டு விடுவது போல்
2.அவர்கள் திட்டியதை நாம் அனாதையாக்க வேண்டும்.
3.அதற்குப் பதிலாக நாம் நல்லதை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அவசரமாக ஊருக்குப் போகும் பொழுது ரோட்டில் சண்டை போட்டால் அதைப் பார்ப்போமா…? இல்லை. பார்த்தால் ட்ரெயினைப் பிடிக்க முடியாது. எப்படிச் சண்டை போட்டாலும் ஏசினாலும் பேசினாலும் அதை நின்று பார்க்க மாட்டோம்.. கேட்கவும் மாட்டோம்.

அது போல் தான் வாழ்க்கையில் எத்தனையோ கெட்டது வந்தாலும் அதன் மேல் நினைவைச் செலுத்த வேண்டியதில்லை,

மனதை எப்படிக் கழுவுவது என்று பார்ப்போம்.
1.நம் கண் ஒன்றைப் பார்க்கிறது.
2.சப்தம் காதிலே படுகிறது.
3.உடனே நினைவு கண்ணுக்கு வந்த பின் இழுத்துச் சுவாசிக்கிறோம்.
4,சுவாசித்தது உயிரில் படுகிறது…!
5.உயிர் ஒரு நெருப்பு. நெருப்பில் எதைப் போடுகிறோமோ அந்த வாசனை தான் வரும்.
6.அதிலே நல்ல பொருளைப் போட்டால் நல்ல வாசனை தான் வரும்.

கோயிலில் சாமி சிலைக்குப் பால் பன்னீர் சந்தனம் தேன் மலர்கள் கனிகள் இதேல்லாம் அபிஷேகம் செய்ற மாதிரி நம் உயிருக்கு அபிஷேகம் செய்தால் நம் மனதும் எண்ணங்களும் தங்கம் போல் பளபளப்பாகிவிடும்.

நம் உடலில் பாலையோ பன்னீரையோ சந்தனைத்தையோ ஊற்றினால் சந்தோஷம் வருமா இல்லையா…? ஆனால் மிளகாயை அரைத்து ஊற்றினால் எரியுதே எரியுதே உஷ்..உஷ்… ஆ…ஆ… என்று தான் சொல்வோம்.

அது மாதிரித்தான் திட்டுகிறவர்களை நினைத்தாலோ வேண்டாததை நினைத்தாலோ எரிச்சல் தான் வரும். டென்சன் தான் ஆவோம். மனதும் கெடும் உடலும் கெடும்.

அதற்குப் பதிலாக அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று புருவ மத்தியில் இருக்கும் உயிரில் திரும்பத் திரும்ப இணைத்தால் “அமைதியும் சந்தோஷமும் தன்னாலே தேடி வரும்….!”

ஓ…ம் ஈஸ்வரா…! என்று நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று எண்ணினாலே போதும்.

1.ஒரு இரண்டு மூன்று தடவை இப்படி எண்ணினாலே
2.SUDDEN BRAKE…! (பிரேக்) போட்ட மாதிரி மற்றவர்களைப் பற்றிய எண்ணமே மறந்து போகும்.
3.அடுத்து நம் வேலையை நாம் பார்த்துக் கொண்டு போகலாம்…!

மனது கெடும் பொழுதெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் ஈஸ்வரா என்ற இந்தச் சோப்பைப் போட்டால் கெட்டதெல்லாம் நம்மை விட்டு விலகும்.

செய்து பாருங்கள்…! செய்த பின் மிகுந்த உற்சாகம் வருகிறதா இல்லையா என்று…?

சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள பேருண்மைகள்

இந்திரலோகம் – அதோ வருகிறான் நாரதன்

சாஸ்திரங்கள் கூறும் உண்மை நிலைகள்

வேதங்கள் – சைவ சித்தாந்தம்

விநாயகரைக் கும்பிடாமல் போனால் பலன் இல்லை – விளக்கம்

சதுர்த்தி – கணஹோமம் – யாகம் – நெய்

ஆறாவது அறிவான முருகனின் தத்துவம்

ஈஸ்வரபட்டர் அபிராமிபட்டர் – 108, 1008 பற்றிய உண்மைகள்

நாராயணன் விஷ்ணு இராமன்

கிரேதா – வெப்பம் காந்தம் விஷம்

விநாயகர் தத்துவமும் – சதுர்த்தியும்

கூர்மை… நரசிம்ம… கல்கி அவதாரம்

அவதாரங்களில் இருக்கும் தத்துவம்

தூப ஸ்தூபி – ஆலய்த்தில் வணங்கும் முறை

மாரி – அக்னி

சாப அலைகளின் இயக்கம் – இராமாயணக் காவியம்

விநாயகர் தத்துவமும் நாரதனும்

ரிக் சாம அதர்வண யஜூர் – வேதங்கள்

ஆலயத்தில் அபிஷேகப் பண்புகள்

வலிமை மிக்க சக்தி வள்ளி – கார்த்திகேயா

நாராயணனின் அவதாரங்கள்

முருகனும் விநாயகனும்

தீய வினைகளைச் சதுர்த்தி செய்து நல் வினைகளைச் சேர்க்க வேண்டும்

தெய்வங்களைப் பற்றிய விளக்கம்

மகாபாரதம்

இராமாயணம்

வேதங்கள் யுகங்கள் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்

கார்த்திகை ஜோதிச் சுடர்

கோவிலில் நாம் வணங்க வேண்டிய முறை

போகர் உருவாக்கிய முருகன் சிலையிலிருந்து வரும் வாசனையும் பஞ்ச அபிஷேகமும்

விநாயகரை வணங்கும் முறை

ஆலயங்களின் தத்துவமும் கடவுள் பக்தியைப் பற்றிய விளக்கங்களும்

சிவ தத்துவம்

கருப்பணச்சாமி கால பைரவர் சுடலை மாடன்

தீமைகளை நீக்கிடும் சேனாதிபதி முருகன் – வள்ளி

நாராயணன் – நரசிம்ம அவதாரம்

எமலோகம் என்றால் என்ன..?

மாரியம்மன் கோவிலில் அக்னி குண்டம் ஏன் வைத்துள்ளார்கள்…?

நம் ஆன்மாவைச் சுத்தமாக்கும் விநாயகர் தத்துவம்

காயத்ரி மந்திரம் – சித்திரை – மார்கழி – ஏகாதசி

தெய்வங்களைப் பற்றிய தத்துவ விளக்கம்

உடலான இந்திரலோகம் எப்பொழுது நரகலோகமாக மாறுகிறது

அங்காளேஸ்வரி விளக்கம்

ஆலய வழிபாடு எப்படி இருக்க வேண்டும்..?

நாரதன் எல்லா இடத்திற்கும் செல்கிறான் – விளக்கம்

பங்குனி உத்திரம் – கார்த்திகைப் பெண்கள்

பராசக்தி குளிக்கும் இடத்தில் ஆண்கள் குளித்தால் பெண்களாக மாறுவார்கள் ஏன்…?

விநாயகர் சதுர்த்தி

வடக்கு வாசல் – சொர்க்க வாசல்

மாசி மகம் என்றால் என்ன…?

பரமபதம் எது…?

சாங்கிய சாஸ்திரம் என்றால் என்ன…? மதங்களின் இன்றைய நிலை என்ன…?

சிவன் இராத்திரி – விரதம்

பூப்புனித நீராட்டு எப்படிச் செய்ய வேண்டும்…?

போகர் உருவாக்கிய பழனி முருகன் சிலையின் உள் நோக்கம் –  முருகன் சிலையில் உள்ள கண்ணாடிக் கற்கள், தீமையை நீக்கும் மனோசிலை

சஷ்டியை நோக்க சரவணபவனார் – கார்த்திகேயா – செவ்வாய்க் கோள் – நம் இரத்தம் சிவப்பு நிறமாக இருப்பது ஏன்..?

சிவ தனுசு விஷ்ணு தனுசு – விஷ்ணு தனுசை எடுத்தால் தீமைகளை வெல்லலாம்…!

பரதன் சொன்னது – தீமைகளை அன்றே கொல்ல வேண்டும்

கௌரவர்கள் பற்றிய தெளிவான விளக்கம்

கைகேயி வரமும் கூனியின் செயலும்

கௌரவ உணர்வுகளால் உடலுக்குள் ஏற்படும் மகாபாரதப் போர்

வாலி – தீமையை நீக்கும் ஆற்றல் பெறுங்கள்

பஞ்ச பாண்டவர்கள் யார்…?

திரௌபதையை சபையில் அவமதித்தார்கள் – விளக்கம்

தர்மன் சூதில் சிக்குகின்றான், கண்ணன் போரில் காக்கின்றான்

நுகரும் சுவாசத்திற்குத்தான் முதலில் மோட்சம் வேண்டும் என்று தர்மன் கேட்டான்

பரமாத்மா, ஜீவாத்மா – வியாசகரின் விளக்கம்

பிடிவாதமான குணம் – கௌரவர்கள் திரௌபதையை அவமதிக்கின்றனர்

வேதங்களின் மூலங்கள் – நான்கு மறை

தீட்டு என்றால் என்ன…?

கண்ணனின் சகோதரன் பலராமன் – விளக்கம்

அனுமான் இலங்கையைத் தீ வைத்தான் விளக்கம் 

இரத்தக் கொதிப்பு, கோபம், இராவணன் மூன்று உலகை அடக்கும் நிலை

இராமன் வீரன் என்றால் வாலியை ஏன் மறைந்திருந்து தாக்கினான் 

இராமாயணம் – விரிவாக்கம்

இராவணனிடமிருந்து சீதாவை மீட்டு வந்தாலும் மக்கள் ஏற்காத போது இராமனின் செயல்கள் என்ன ஆனது

இலங்கையில் சீதாவை அடைத்தான் இராவணன்

குகனைப் பற்றி இராமாயணத்திலும் கந்த புராணதிலும் காட்டியுள்ளார்கள்

லவ குசா சீதா இராமன் – வான்மீகி கூறும் உடலுக்குப் பின் நிலை விளக்கம்

இராமன், சீதா, பரதன், இராவணன் – விளக்கம்

இராமன், சீதா, பரதன், இராவணன், சூர்ப்பணகை – விளக்கம்

இராமாயணத்தில் இராவணன் சீதாவிற்கு நாள் அவகாசம் கொடுக்கின்றான் – விளக்கம்

உடலுக்குப் பின் எங்கே செல்ல வேண்டும் என்று இராமாயணம் காட்டுகின்றது

உயிருடன் ஒன்றும் உணர்ச்சி நம்மை மகிழ்ச்சி பெறச் செய்யும் – இராமாயணம்

கல்யாணராமா, குகன், இராவணனின் தங்கை, உடலுக்குள் தோன்றும் எண்ணங்கள்

காண்டீபத்தை ஒடித்தவன் இராமன் – சக்தி வாய்ந்தவன்

சுக்ரீவன் துணை கொண்டு இராமன் சீதாவை மீட்டினான்

லவா குசா – இராமாயனணத்தில் காட்டப்பட்டுள்ள உண்மை நிலை

வாலி – விஷம், சுக்ரீவன் – துருவ நட்சத்திரம் இருவரும் சகோதரர்கள்

விநாயகனை ஏன் முழு முதல் கடவுள் என்று சொல்கிறோம்…?

நாத விந்துகள் ஆதி நமோ… நமோ… அருணகிரிநாதர் சொன்னது…

சாஸ்திரங்கள் நமக்குக் கூறும் தெளிவான நிலைகள்

கனிக்குள் மறைந்த வித்தினைப் பெறும் நிலை -சித்திரைக் கனி விளக்கம்

சித்திரை – சிறு திரையை நீக்கும் முறைகள்

ஒரு நெல் தன் வாய் திறந்து காந்தப் புலனறிவைக் கவர்ந்து தனக்குள் சத்தைக் கவர்ந்து எப்படி மூடிக் கொள்கின்றது

பிறர் உணர்வுகள் அவர்களுக்குள் கனியானது நமக்குள் வித்தாக எப்படி இணைகின்றது

தீய உணர்வுகள் கனியாவதற்கு முன் அருள் சக்தியைச் சேர்க்க வேண்டும்

சித்திரை – சிறு திரை விளக்கம்

கார்த்திகையன்று மெய்ஞானச் சுடரை உயிருடன் ஒன்று ஏற்றிடல் வேண்டும்

12 மாதங்களிலும் அருள் சக்திகளைப் பெறச் செய்யும் நம் சாஸ்திரங்கள்

இலட்சுமி இலட்சுமணா – விளக்கம்

முருகா அழகா…!

விநாயகர் வள்ளியை முருகனுக்கு மணம் முடிக்க உதவினார்

முருகன் சூரனை அடக்கிய நிலை 

கண்ணன் துகிலை உறிந்தான்

பீஷ்மரைப் பற்றியும் வாலியைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்

ஞானிகள் கொடுத்த ஆலயப் பண்புகள்

வசிஷ்டாத்வைதம் – விளக்கம்

நம் நாட்டு ஞானிகள் காட்டிய ஆலயப் பண்புகள்

மகாமகம்

தமிழர் திருநாள் வீர விளையாட்டு எது..?

தைப் பொங்கல் அன்று சுவைமிக்க உணவை உருவாக்குவதன் காரணம் என்ன…?

மகாபாரதத்தில் திரௌபதியை அவமதிப்பதாகக் காட்டுகின்றார்கள் – விளக்கம்

விநாயகர் தத்துவம்

உடலை விட்டுப் பிரிந்தவர்கள் 48 நாள்களுக்குள் எங்கே செல்கிறது…?

கடவுள் எங்கே எப்படி இருக்கின்றான்…?

ஒரு தெய்வத்தை வணங்குபவர் அடுத்த தெய்வத்தை எப்படி ஏற்றுக் கொள்கிறார்…?

கடவுள் ஒருவனே என்றால் அது எப்படிச் சரியாகும்…?

பரதனுக்குப் பட்டம் சூட்ட வேண்டும் என்ற கைகேயியின் உணர்வுகள்

முன்னோர்களின் ஆன்மாக்களுக்கு இன்றும் நாம் செய்யும் சாங்கியத்தின் விளைவுகள்

வாசல்படிக்குப் போடும் கல்லை வைத்துத்தான் சாமி சிலை செய்கிறார்கள்

ஞானம் – மெய் ஞானம் – உயர் ஞானம்

உடலுக்குள் நடக்கும் மாற்றங்கள் – அகஸ்தியன் தாய் தந்தையர்

மெய்ஞானப் பாடம்

கண்ணன் கூர்மை வராகன் பரசுராம் நரசிம்மா

பூமிக்கு அடியில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் மாற்றங்கள்

சூனிய மண்டலம் பற்றிய பேருண்மைகள்

உடல் இச்சை – நம் கடைசி எல்லை

இயக்கச்சக்தி – ஈஸ்வரா பரமேஸ்வரா சர்வேஸ்வரா

பரிணாம வளர்ச்சி

ஞானகுருவின் ஞானப் பொக்கிஷம்

காலத்தின் காரணத்தினால் திரிபுபடுத்தப்படும் பேருண்மைகள்

நம்மை நாம் நம்புகின்றோமா..? மற்றவர்களை எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றோமா…?

நாம் தெரிந்து கொள்ள வேண்டியது..!

உங்களை நீங்கள் நம்புங்கள்

ஆக்சிடென்ட் (ACCIDENT) எதனால் ஏற்படுகிறது…? 

கந்தகப் பாறைகளின் சூட்சமம் – உலோகங்களைப் பவுடராக்கும் விஞ்ஞானம்

பூமிக்குள் நடக்கும் செயல்களை அறிந்து கொள்ளுங்கள்

கறிவேப்பிலைச் செடி எப்படி உருவாகின்றது

வேதங்களும் உபநிஷத்துக்களும்

போற்றுவது எது…? போற்ற வேண்டியது எது…? போற்றல் எது…?

கிரேதா, திரேதா, துவாரபகா, கலி, கல்கி யுகங்கள், ரிக், சாம, அதர்வண, யஜூர், துவைதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம் – விளக்கம்

கல்வியுடன் சேர்ந்த மெய் ஞானம் வேண்டும்

நம் உடலை உருவாக்கிய அணுக்களும் அதனைப் பற்றிய பேருண்மைகளும்

கோவில் கோபுரக் கலசத்தில் உள்ள வரகு எதற்காக வைக்கப்பட்டுள்ளது…?

பட்டுச் சேலை கட்டினால் ஏற்படும் சில உணர்வின் இயக்கங்கள்

நாம் கவர்ந்து வெளிப்படுத்தும் உணர்வின் ஒலிகளுக்கொப்பத்தான் நம் உருவத்தின் மாற்றம்

இருளை ஒளியாக மாற்றும் அகஸ்தியனின் ஆற்றல் – மெய் ஞானப் பாடம்

கோடிக்கரை தனுசு கோடி இராமேஸ்வரம் விஷ்ணு தனுசு – விளக்கம்

சூட்சமத்தில் உள்ளதை எல்லோராலும் அறிய முடியாது அதற்குத்தான் துவைதம்

ஏழு ஜென்மங்கள் பற்றிய விளக்கம்

சிவ தனுசு விஷ்ணு தனுசு முழுமையான விளக்கம்

வாலியை இராமன் கொல்லவில்லை கல்லைப் போட்டு மூடிவிட்டான்…!

உடலை விட்டுப் பிரிந்தவர்களுக்குக் கணபதி ஹோமம் செய்யலாமா…?

ஆமையைப் போட்டுக் “கூர்மை அவதாரம்” என்று ஞானிகள் காட்டியதன் உட்பொருள் என்ன…?

மனித உடல் பெற்ற காண்டத்தின் இயல்பு

சைவம் அசைவம் விளக்கம்

கோடிக்கரை இராமேஸ்வரம் தனுசுகோடி

 

தாய் கருவில் நாம் ஒவ்வொருவரும் பெற்ற பூர்வ புண்ணியத்தின் இயக்கங்கள் நம்மை எப்படி இயக்குகிறது…?

yashoda-with-kanha

தாய் கருவில் நாம் ஒவ்வொருவரும் பெற்ற பூர்வ புண்ணியத்தின் இயக்கங்கள் நம்மை எப்படி இயக்குகிறது…?

 

பல கோடி சரீரங்களைக் கடந்து கடந்து இன்று நாம் மனிதனான பிறகு நம் உயிர் என்ன செய்கிறது…? ஆகாரத்துடன் கலந்து வரக்கூடிய நல்ல வாசனையுள்ள உணவில் கலந்துள்ள நஞ்சை மலமாக மாற்றி விடுகிறது.
1.நல்ல உணர்வை நம் உடலில் சேர்த்து
2.நல்ல உணர்வைப் பெறக்கூடிய அந்த உணர்வின் சத்தை நம் உடலாக மாற்றுகிறது.

அந்த நல்ல உணர்வின் சத்து வெளிப்படும் போது அந்த மணம் இந்த உடலுக்கு எது தேவையோ அந்த உணர்வின் தன்மையைத் தான் அது பெறும்.

இருந்தாலும் மனிதனாகப் பிறந்த நிலையில் குழந்தையிலிருந்து வளர்ச்சி அடையும் போது ஒவ்வொன்றாகப் பார்க்கிறோம். குழந்தைப் பருவத்திலே
1.தாய் மேலே வெறுப்பாக இருக்கிறது.
2.தன் கூடப் பிறந்தவர்களை உதைக்க வருகிறது.
3.விளையாடும் பொழுது எத்தனையோ முறை தடுக்கி விழுகிறது.

இதற்குக் காரணம் என்ன…? குழந்தை தாய் கருவிலே விளையப்படும் போது வந்த உணர்வுகள் தான் இவை.

தாய் கருவுற்றிருக்கும் சமயம் சந்தர்ப்பவசத்தால் வெறுப்பு கொண்டர்களையோ வேதனை கொண்டவர்களையோ மற்றவர்களைத் தாக்கும் உணர்வுகளையோ பார்க்க நேர்ந்தால் அல்லது பேசுவதைக் கேட்க நேர்ந்தால் வேடிக்கையாகப் பார்த்தாலும் அதைத் தாய் நுகருகிறது. அது இரத்தத்தில் கலக்கிறது.

கரு உருவான ஒன்றிலிருந்து தொண்ணூறு நாட்களுக்குள் இத்தகைய சமபவங்களை உற்றுப் பார்த்தால் இரத்தத்தின் வழியாக அது குழந்தையின் கருவிலே இணைந்து விடும். கருவிலேயே இத்தகைய நிலைகள் உருவாகிறது. குழந்தைக்கு அதுவே பூர்வ புண்ணியமாகிறது.

குழந்தை கருவிலே விளையும் போது அடுத்தவர்களைத் கிள்ளுவது.. தள்ளி விடுவது…! போன்றவற்றைக் கருவுற்ற தாய் பார்த்திருப்பார்கள். பிறந்த உடனே அந்தக் குழந்தையைப் பாருங்கள்.

குழந்தையின் பாஷையும் தோரணையும் அதனுடைய சத்தமும் மற்றவரை அடிப்பதும் வெறுப்பதும் அது வளர்ச்சியாகி வரும் போது அந்த வித்தியாசம் தெரியும்.

ஆனால் சில குழந்தைகளைத் தள்ளி விட்டாலும் அது பேசாமல் இருந்து விட்டு ஒதுங்கிப் போகும். அது அதனுடைய உணர்வுகள்.
1.அப்போது அந்த உணர்வுகொப்ப இயக்கம் இந்த உயிர் தான் இயக்குகிறது.
2.வேறு யாரும் இயக்கவில்லை.

நாம் எண்ணி நுகர்ந்த உணர்வை அணுவாக மாற்றி அந்த அணுவின் மலம் தான் நம் உடலாகிறது. நல்ல அணுக்களாக இருந்தால் நம் உடல் அழகாக இருக்கிறது. அமைதியாக இருக்கிறது. சந்தோஷமாக இருக்கிறது.

ஒரு குழந்தை இன்னொரு குழந்தையைத் தள்ளி விடும் போது கருவுற்ற தாய் “பார்… சிறிய குழந்தையை இப்படித் தள்ளி விடுகிறது…! என்று நினைத்தால் கருவிலிருக்கும் குழந்தைக்கு அதே உணர்வுகள் தான் தோன்றுகின்றன.

அதற்குத் தள்ளி விடும் உணர்வுகள் வருகிறது. அது பிறந்தபின் குழந்தை பருவத்தில் அடுத்த குழந்தையைத் தள்ளி விடும்போது விழுந்த குழந்தையின் பெற்றோருக்குக் கோபம் வருகிறது.
1.கோபம் வந்தால் குழந்தைகளுக்குத் தெரிகிறதா என்றால் இல்லை.
2.ஆனாலும் தன் செயலைத் தான் அது செய்கிறது.

தன் குழந்தை தவறு செய்கிறதே…! என்று தாய் சப்தம் போட்டுக் கூப்பிட்டால் அந்தச் சப்தம் கேட்டு எதிர்த்துக் குழந்தை அழ ஆரம்பித்து விடும். ஆனால் தெரிவதில்லை,

எந்த உணர்வின் அணுவாக உருப்பெற்றதோ அந்த உணர்வின் உணர்ச்சிகள் அது இயங்கி அதையே உணவாக உட்கொண்டு அந்த அணுக்கள் பெருகும்.

நாம் குழந்தை என்று எண்ணுகிறோம். ஆனால் அதன் வளர்ச்சியில் நாளடைவில் தன் உடலுக்குள் பகைமை உணர்வு கொண்ட அணுக்களாக மாறி விடும். அதே சமயத்தில் அந்த உணர்வுகளைக் குழந்தை நுகர நுகர இரத்த நாளங்களில் அந்த உணர்ச்சியின் தன்மைகள் தான் வளரும்.

சூரியன் செடி கொடிகளின் சத்துக்களை எடுத்து இந்தக் காற்று மண்டலத்தில் வைத்துக் கொள்கிறது. செடியில் விளைந்த வித்தைப் பூமியில் விதைத்தால் அந்த பூமியின் ஈர்ப்பின் துணை கொண்டு தன் தாய் செடியின் சத்தை நுகர்ந்து அதன் உணர்வுகொப்ப அதன் மணமும் குணங்களும் அதன் உணர்ச்சிக்குத்தக்க அந்தச் செடியின் ரூபமும் வருகிறது.

இந்தப் பூமியைப் போலத் தான் நம் உடல். சூரியன் எப்படி மற்ற தாவர இனங்களை வளர்க்கச் செயல்படுகின்றதோ அதுபோல நம் உயிரால் உருவாக்கும் நிலைகள் உடலிலே ஜீவ அணுக்களை உருவாக்குகின்றது.

எந்த உடலில் விளைந்த கோபமோ வெறுப்போ வேதனையோ அதனதன் எண்ணங்களாக வெளி வரும் போது இது பல பல வித்துக்களாக மாறும்.

கண் கொண்டு கூர்ந்து பார்க்கும் நமக்குள் போது பதிவாகிறது. பதிவான நிலைகளை ஈர்க்கும் சக்தி பெறுகிறது நம் கண்ணின் காந்தப் புலனறிவு. நுகர்ந்த உணர்வுகள் உயிரிலே பட்டு அந்த உணர்வின் தன்மை தன் உடலிலே அணுவாகப் பெருகத் தொடங்குகிறது.

உருவான அணு தன் இனமான உணர்வை ஈர்க்கும் சக்தி பெற்று அதைக் கவரத் தொடங்குகிறது. அந்த அணுவுக்குத் தேவையான உணர்வை எடுத்துக் கொடுத்து வளர்ப்பது நம் உயிர் தான்.

நுகர்ந்த உணர்வின் அந்தச் சத்துகள் நம் உடலிலே பெருகப் பெருகப் பெருக நம் உடலிலுள்ள மற்ற நல்ல குணங்கள் கொண்ட அணுக்களுக்கு இது இடைஞ்சலாக வரும்.

தாய் கருவிலே இருக்கும் போது வெறுப்புணர்வு கொண்ட உணர்வுகளைத் தாய் கவர்ந்திருந்தால் சந்தோஷமாக அதை உணவாக உட்கொள்ளும். அந்த அணுக்கள் பெருகும்.

அதே சமயத்தில் இந்த உணர்வுகள் இரத்தத்தில் அதிகமான பின் மற்ற நல்ல அணுக்களுக்கு நல்ல உணர்வுகள் இரத்தத்தில் வரவில்லை என்றால் என்ன ஆகும்…? போர் முறை தான்…!
1.ஆக தாய் கருவில் பெற்ற நிலைகளே நமக்குப் பூர்வ புண்ணியமாக அமைந்து
2.அதன் வழியிலேயே நாம் செயல்படுகின்றோம்.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால் தியானம் இருந்தோம் என்று சொல்லிவிட்டு எதிர்த்த வீட்டில் சண்டை போட்டார்களென்றால் அந்தச் சண்டையைக் கொஞ்ச நேரம் நம்மை அறியாமல் நுகர்ந்தால் போதும்.

சண்டை போடுவதை உற்று பார்த்த உடனே
1.நம்மை அறியாமலேயே நமக்கு அந்த உணர்ச்சியின் வேகங்கள் வரும்.
2.உணர்ச்சிகளைத் தூண்டி அதே எண்ணங்கள் வரும். அந்தச் செயல்களும் வரும்.
3.நம் உடலிலுள்ள நல்ல அணுக்கள் இயங்க மறுக்கும்.
4.மறுக்கும் போது நம்மை அறியாமலே ஒரு விதமான இனம் புரியாத எரிச்சல் வரும்.

குழம்பில் காரம் அதிகமாகப் போட்டால் எப்படி இருக்கும்…? அதே போல இந்த உணர்ச்சிகள் நம் உடலில் வந்த உடனே அதே உணர்ச்சியின் எண்ணங்களால் நம் சிந்திக்கும் ஆற்றல் குறையும்.

பதிலுக்கு எப்படியும் எதையாவது சொல்ல வேண்டும் என்ற உணர்வைத் தூண்டும்.
1.அந்த உணர்வைத் தூண்டிய உடனே அவர்களோடு நாம் சண்டைக்குப் போனால்
2.சண்டையிட்டால் “இவருக்கு என்ன வந்தது…?” என்று நம்மிடம் கேட்பார்கள்.

அவர்கள் சண்டை போடும் போது நாம் பார்த்தோம். அதற்கு முன் அவர்கள் எதற்காகச் சண்டை போட்டுக் கொண்டார்கள் என்று நமக்குத் தெரியவில்லை.
1.ஆனாலும் சண்டையைப் பார்த்த உடனே அந்த உணர்வுகள் நம்மை இயக்குகிறது.
2.இயக்கினாலும் பொது வாழ்க்கையில் நாம் யார் யாரோ எப்படி எப்படியோ நாம் பழகத் தான் செய்கிறோம்.
3.ஆனால் நல்லதை நாம் பெறுகின்றோமா… வளர்க்கின்றோமா…?

அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்? “ஈஸ்வரா…!”புருவ மத்தியில் உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஒரு பிரேக் (BRAKE) போட்ட மாதிரி சண்டை போடும் உணர்வை நமக்குள் புகாதபடி நிறுத்த வேண்டும்.

நிறுத்திய உடனே நம் உடல் முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும். எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் கொண்டு வந்து விட வேண்டும். இது கூடிவிட்டால் சண்டை போட்டவர்களின் உணர்வு நம்மை இயக்காது.

பின் மகரிஷிகளின் அருள் சக்தி சண்டையிட்டவர்கள் உடல் முழுவதும் படர வேண்டும். அவர்கள் பொருளறிந்து செயல்படும் அருள் சக்தி பெறவேண்டும். பகைமைகள் அகன்று ஒற்றுமை உணர்வுடன் வாழ வேண்டும் என்று இத்தகைய உணர்வுகளைப் பாய்ச்சிப் பழகுதல் வேண்டும்.

இதனால் பிறரின் தீமைகள் நமக்குள் வராது தடுக்கின்றோம். மற்றவர்களுக்கும் நாம் நல்ல உணர்வைப் பெறச் செய்கின்றோம்.

ஏனென்றால் உங்கள் வாழ்க்கையில் அவ்வப்பொழுது வரும் தீமைகளிலிருந்து நீங்கள் எப்படி விடுபட வேண்டும் என்ற உபாயத்தைத்தான் யாம் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மலேசியாவில் அசைவம் சாப்பிடும் இடத்தில் நடந்த நிகழ்ச்சி

Protected zone - divine

மலேசியாவில் அசைவம் சாப்பிடும் இடத்தில் நடந்த நிகழ்ச்சி

நான் (ஞானகுரு) மலேசியா போய் இருந்தேன். சாப்பிடுவதற்காகச் சென்றால் எந்தக் கடையில் பார்த்தாலும் மட்டன் (மாமிசம்) தான் இருக்கிறது. மட்டன் இல்லாத கடையைப் பார்க்க முடியவில்லை.

அப்பொழுது யாம் சைவ உணவு சாப்பிடுவதற்கே பெரிய கஷ்டமாக இருக்கிறது. அந்த மாமிச உணர்வின் மணம் பட்ட உடனே எப்படிச் சாப்பிடுவது…! என்ற நிலை வருகிறது.

அப்பொழுது அதற்கு நாம் என்ன செய்வது…? என்று அதை நினைக்காதபடி நாம் வேறு எதையாவது சாப்பிடுவோம் என்று சிந்தித்துக் கொண்டிருந்தோம்.

ஒரு சீனர் கடையில் புத்த பிட்சுகள் வந்து சாப்பிடுவார்கள். அதனால் கொஞ்சம் சுத்தமாக இருக்கும் என்று சொன்னார்கள். சைவம் அசைவம் இரண்டு உணவுகளும் இருக்கும் இடத்தில் அசைவத்திற்குப் போடும் கரண்டியை சைவத்திற்குப் போட மாட்டார்கள்.

ஆனால் சில இடங்களில் இரண்டிற்கும் ஒரே கரண்டியைப் பயன்படுத்துவார்கள் என்று அவர்கள் சொன்னார்கள். சரி பரவாயில்லை என்று போனோம்.

இந்தப் பக்கம் நான் வரிசையில் உட்கார்ந்திருக்கிறேன். அடுத்த பக்கம் சீனாவைச் சேர்ந்த புத்த மதத்தைச் சேராதவர்கள் உட்கார்ந்திருக்கிறார்கள்.

அவர்களிடம் ஒரு அடுப்பைக் கொண்டு வந்து கொடுக்கிறார்கள். ஒரு பாத்திரத்தைக் கொண்டு வந்து கொடுக்கிறார்கள். கொஞ்சம் தண்ணீரைக் கொண்டு வந்து கொடுக்கிறார்கள்.

ஒரு மீனைச் சுரண்டிக் கொண்டு வந்து கொடுத்தவுடன் தண்ணீரில் வேக வைக்கிறார். கொடுத்த சாப்பாட்டைச் சாப்பிட்டுவிட்டு நாம் டீ சாப்பிடுவது போல வேக வைத்த மீன் தண்ணீரை அப்படியே குடிக்கிறார்.

அதை என் கண் பார்க்கிறது. ஆனால் அந்த வாசனையை நுகர நேர்கிறது. தப்பு செய்யவில்லை.
1.அந்த உணர்வின் வாசனைகள் அவர்களுக்குத் தெரியவில்லை
2.வாசனை தெரியாததால் அந்த உணவை ரசித்து சாப்பிடுகிறார்கள்.
3.ஆனால் எனக்கு இந்த நிலை வருகிறது.

அப்போது மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் சொன்னபடி அவர்களும் நல்ல வழியிலே இதை மாற்றிச் சாப்பிடக் கூடிய உணர்வுகள் பெற வேண்டும் என்று கொஞ்ச நேரம் பிரார்த்தனை செய்த உடனே “அந்த வாசனையை இழுக்கக் கூடிய சக்தி… என்னிடம் குறைகிறது…!” நடந்த நிகழ்ச்சி இது.

அவர்கள் அசைவத்தைச் சாப்பிடுகிறார்கள். நம்மை ஒன்றும் சொல்லவில்லை. ஆனாலும் அருவருக்கத்தக்க நிலைகளில் அவர்கள் சாப்பிடும் போது அந்த உணர்ச்சிகளை நாம் நுகர நேர்கின்றது.
1.அதைப் பார்க்காத வரையிலும் வாசனை வரவில்லை.
2.ஆனால் அவர்கள் செயலை உற்றுப் பார்த்ததும் வாசனை வருகிறது.

அப்பொழுது அந்த உணர்வு வரும் போது குருநாதர் சொன்னபடி அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை எடுத்து நான் மாற்றிக் கொண்டேன்.

நான் மாற்றிக் கொண்டே வருகின்றேன். எப்படி மாற்ற வேண்டும் என்று உங்களுக்கும் சொல்ல வேண்டும் இல்லையா…? அதற்காகத்தான் அனுபவத்தில் நீங்கள் பெறுவதற்கு இதைச் சொல்கிறேன்.

அவர்கள் சாப்பிடுவது அருவருப்பாக உள்ளது. அப்போது என்ன செய்தேன்…? அவர்களும் இந்த உண்மையை உணர்ந்து அதனால் வரக்கூடிய தீமைகளையும் உணர்ந்து அதிலிருந்து அவர்கள் விடுபட வேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்சினேன்.

ஏனென்றால் மனிதனான பின் மற்ற மாமிசங்களை உணவாக உட் கொண்டால் அது மனித உடல் உறுப்புகளை மாற்றும் சக்தியாகி மனிதன் மீண்டும் மனிதனாகப் பிறக்க முடியாது.

1.உதாரணமாக குளவி புழுவைக் கொட்டி புழு மீண்டும் குளவி ஆவது போல
2.பாம்பு மனிதனைத் தீண்டினால் மனிதன் மீண்டும் பாம்பாவது போல
3.எது எதைத் தீண்டுகிறதோ அதுபோல அந்த உணர்வின் வலுவை எது எடுக்கிறதோ அதைப் போல
4.எந்த உயிரினத்தை உட்கொள்கின்றோமோ அது நமக்குள் வலுவாகி அந்த உயிரினமாக அடுத்துப் பிறக்கும் நிலையில்
5.இந்த மாற்றங்களிலிருந்து அவர்கள் விடுபட வேண்டும் என்று கொஞ்ச நேரம் பிரார்த்தனை செய்து அதன் பிறகு நான் சாப்பிட்டேன்.

இந்த வாழ்க்கையில் இதைப் போன்ற நிலையில் வரும் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்பதற்கே இத்தகைய உபாயங்களை அனுபவரீதியில் பெற்றதை உணர்த்திக் கொண்டு வருகின்றேன்.

அதன் வழி நீங்கள் செல்லும் பொழுது உங்கள் உயிராத்மாவில் அறியாது சேரும் உடல் பெறும் மணத்தை மாற்றிப் பிறவியில்லா நிலை அடைய இது உதவும்.

 

நமது கடைசி எல்லை “அகஸ்தியன் வாழும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டம் தான்..!”

Membership

நமது கடைசி எல்லை அகஸ்தியன் வாழும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டம் தான்..!

 

காட்டில் வாழும் மிருகங்களோ உயிரினங்களோ பெரும்பகுதி இரவிலே தான் தன் இரையைத் தேடி நுகர்ந்தறிந்து செல்லும் திறன் பெற்றது.
1.தன் இரைக்காக ஏங்கும் போது
2.குறைந்த பட்சம் ஒரு மைல் தூரமாவது தன் உணர்வைச் செலுத்துகின்றது,

அவ்வாறு செலுத்தி நுகர்ந்த பின் அந்த உணர்வுகள் உயிரில் மோதி உணர்ச்சிகள் இயக்கப்பட்டு தனக்கு இரை “இன்ன இடத்தில் இருக்கிறது…!” என்று நகர்ந்து சென்று தன் இரையை உட் கொள்கிறது.

அப்படிச் சென்றாலும் எதிரி என்ற உணர்வுகள் கொண்டு தன்னைத் தாக்கிப் புசிக்கும் வலுவான மிருக இனங்களின் மணத்தை நுகர்ந்து
1.அது அருகிலே வர வர தன் மணத்தால் நுகர்ந்தறிந்து
2.அந்தச் சாந்தமான மிருகங்கள் அனைத்தும் குகைகளிலோ அல்லது மற்ற இடங்களிலோ பதுங்கும் நிலைகளைப் பெற்று விடுகிறது.

பதுங்கினாலும் தன் உணவுக்காகத் தேடும் அந்த வலுவான மிருக இனங்கள் இது பதுங்கும் இடங்களை நுகர்ந்து அதைக் கொன்று புசித்து தன் உணவாக உட்கொள்கிறது.

இதனால் புல் போன்றவற்றை உணவாக உட்கொள்ளும் அத்தகைய சாந்த மிருகங்கள்
1.தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் உணர்வுகளை நுகர்ந்து நுகர்ந்து
2.அதனின் உணர்ச்சிகள் அதன் உடலிலே சேர்க்கப்பட்டு
3.அதன் உணர்ச்சிகள் அதனை இயக்கி அதற்குத் தகுந்த எண்ணங்களும்
4.தப்பிக்கும் உணர்வு கொண்டு உடலினை இயக்கும் சக்தியை அது பெறுகிறது.

எந்த வலிமையான உயிரினத்தைக் கண்டு அஞ்சியதோ “அதனிடமிருந்து தப்பிக்க வேண்டும்…!” என்று அது நுகர்ந்த உணர்வுகள் அனைத்தும் தன் இரத்த நாளங்களில் கலப்பதை அது அறிவதில்லை. ஆனால் தாக்க வரும் மிருகத்திடமிருந்து தப்பிக்க பெரும் நிலைகள் படுகின்றது.

உதாரணமாக புழுவை ஒரு குளவி கொட்டியபின் விஷம் அதன் உடலிலுள்ள அணுக்களுக்குள் பாய்கின்றது. பாய்ந்த பின் அந்த உணர்ச்சியின் வேகத் துடிப்பு கொண்டு புழுவை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் விஷத்தின் துடிப்பால் குளவியின் ரூபம் பெற்று அந்தக் குளவியாகவே மாறுகின்றது.

இதைப் போன்றுதான் சாந்தமான அந்த மிருக இனங்கள் வலிமையான மிருகங்கள் தன்னைத் தாக்கும் பொழுது அதனின் உணர்வுகளை நுகர்ந்து தன்னைக் கொன்று புசிக்கும் அந்த மிருகத்தின் ரூபத்தைப் பெறுகின்றது.

நரியோ புலியோ அதைக் கொன்று புசிக்கும் போது அதன் உடல் ஈர்ப்புக்குள் சென்று விடுகிறது சாந்தமான மிருகத்தின் உயிரான்மா.
ஆனால் அவ்வாறு சேருவதற்கு காரணம் எது இதைத் தாக்கியதோ
1.அந்த உணர்வு – தன் நினைவு அனைத்துமே
2.கொன்று புசிக்கும் அந்த மிருகத்தின் மேல் வருகிறது.
3.புலி என்றால் புலியின் உடலுக்குள் செல்லுகிறது.

எது இதைக் கொல்கின்றதோ அதன் உடலுக்குள் சென்று அதன் உணர்வை நுகர்ந்து இந்த உயிர் அதன் உணர்வில் கரு முட்டையாக மாறி அதன் வளர்ச்சியில் தன் இனச் சேர்க்கையில் கரு முட்டையில் இரண்டும் ஒன்றாக இணைந்து வளரும் பருவமும் வளர்த்திடும் பருவமும் பெறுகிறது.

அந்த உணர்வின் உணர்ச்சிகளை ஊட்டி அந்த உணர்வுகொப்ப உடலை மாற்றுகின்றது. இது இயற்கையின் சில நியதிகள். அவ்வாறு வளர்ச்சி பெற்ற அந்த உயிரினங்கள் தான் பரிணாம வளர்ச்சியில் இன்று நம்மை மனிதனாக உருவாக்கி இருக்கிறது.

மனிதனாக உருவான பின் நம்மை ஒரு நரியோ நாயோ கொன்று புசித்தால் அதன் நினைவே வரும். ஒரு வெறி பிடித்த நாய் ஒரு மனிதனைக் கடித்து விட்டால் நாயின் விஷத் தன்மை மனித உடலுக்குள் புகுந்த பின் வெறி பிடித்த நாய்க்கு எப்படி எச்சில் ஒழுகியதோ அதே போல அந்த மனிதனும் அதே நிலை ஆகி இந்த மனிதன் அந்த நாயின் ஈர்ப்புக்குள் சென்று நாயாகப் பிறக்க நேரும். எந்த வைத்தியங்களாலும் அது சரி செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது.

இதே போல ஒரு விஷம் கொண்ட பாம்பினால் தாக்கப்படும் போது பாம்பின் நினைவாற்றல் வந்து மற்றது எதுவும் நினைவில் வராது ஒருமித்த உணர்வுகள் அந்த விஷத்தின் தன்மை பெற்ற பின் எத்தனையோ கோடி சரீரங்களைக் கடந்து வந்த மனிதன் பாம்பின் ஈர்ப்புக்குள் செல்கிறான், பாம்பாகத் தான் அடுத்து பிறக்கின்றான்.

தேன் கூட்டிலிருந்து தேனை எடுக்கச் செல்கிறார்கள் என்று வைத்து கொள்வோம். விஷம் அதிகமாக இருக்கும் நூறு தேனீக்கள் அந்த மனிதனைக் கொட்டினால் மரணமே ஏற்பட்டு விடுகிறது.

தேனீ தன்னைக் கொட்டியது என்ற உணர்வு வரப்படும் போது இத்தனை பெரிய மனித உடலை உருவாக்கிய அணுக்கள் அந்தத் தேனீயின் ஈர்ப்புக்குள் சென்று அதன் உணர்வின் வழிப்படி இயக்கும் சக்தியைப் பெற்றுத் தேனீயின் உடலைப் பெறுகிறது மனிதனின் உயிரான்மா.

இதையெல்லாம் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் யாம் (ஞானகுரு) காடு மேடெல்லாம் சுற்றி அலைந்து அறிந்து கொண்டோம்.

ஆகவே மனிதனாக இருக்கும் நாம்
1.நம் சந்தர்ப்பத்தில் எதை வலுவாக நுகர்கின்றோமோ
2.அதனின் உணர்வாகத்தான் அடுத்த உடல் பெறுகின்றோம் என்பதை
3.தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.

இதைப் போன்ற மனித வாழ்க்கையில் வரும் தீமைகளை எல்லாம் வென்றவன் அகஸ்தியன். இந்தப் புவியில் உடல் பெறும் உணர்வுகளை மாற்றி ஒளி உடல் பெற்றவன் அகஸ்தியன்.

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி இந்தப் பூவுலகில் நஞ்சினை வென்ற உணர்வின் தன்மை பெற்று நஞ்சினை ஒளியாக மாற்றிடும் சக்தியாக இன்றும் துருவ நட்சத்திரமாக வாழ்ந்தும் வளர்ந்து கொண்டும் உள்ளார்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் பெற்றால் அகஸ்தியனைப் போன்றே இந்த உடலுக்குப் பின் அழியாத நிலைகள் பெறலாம். ஆகவே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் புருவ மத்தியில் எண்ணி ஏங்குங்கள்.

உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டி அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியையும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியையும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்குங்கள்.

இவ்வாறு ஏங்கி இருப்பதன் நோக்கமே
1.நாம் எதைப் பெற வேண்டும் என்று ஏங்குகிறோமோ அவை அனைத்தையும்
2.நமது உயிர் “ஓ…” என்று ஜீவ அணுவாக மாற்றும் அந்தச் சக்தியைப் பெறச் செய்கிறது.
3.ஒளியான அணுக்களாக நம் உடலுக்குள் விளைகிறது. நம் உயிராத்மா ஒளியாகின்றது.
4.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழத் தொடங்குகின்றோம்.
5.நம்முடைய கடைசி எல்லை அது தான்..!

அகஸ்திய மாமகரிஷியும் துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலங்களும்

துருவ நட்சத்திரத்தின் முழுமையான இயல்பை நாமும் பெற வேண்டும்

துருவ நட்சத்திரத்தின் சக்தி

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கும் முறையும் மற்றவருக்குப் பாய்ச்சும் முறையும்

ஐதீகம் சாங்கியம் – அகஸ்தியன் கண்ட ஆதியின் இயக்கம்

பிரணவம் – இயற்கையின் இயக்கம் – அகஸ்தியன்

அகஸ்தியன் சக்தி பெற்ற நிலையும் அதை நாம் பயன்படுத்தும் முறையும்

மின்னலுக்குள் இருக்கும் அற்புதங்கள்

அதோ வருகிறான் ரிஷியின் மகன்

27 நட்சத்திரங்கள் – மின்னல் ஒளிக் கற்றைகள் – வியாசகர்

ஆயுள் கால மெம்பர்களுக்குக் கொடுக்கும் பொக்கிஷம்

வேதனையை நீக்கும் ஆலயத்தில் காட்டப்படும் அபிஷேகத் தத்துவம்

மகிழ்ச்சியூட்டும் அகஸ்தியனின் அருள் உணர்வுகள்

அகஸ்தியனுக்குக் கடவுள் தனியாகச் சக்தி கொடுக்கவில்லை

அகஸ்தியன் கண்டுணர்ந்த உயிரணுக்களின் வளர்ச்சியும் மாற்றங்களும்

அகஸ்தியன் குழந்தைப் பருவத்தில் கண்ட அதிசயங்கள்

அகஸ்தியனும் அவன் உருவாக்கிய நீர் சக்தியும்

துருவன் கண்டுணர்ந்த உயிரணுவின் தோற்றங்கள்

ஒவ்வொரு அணுவிலும் விஷத்தை ஒடுக்கும் உணர்வு பெற்றவன் துருவ மகரிஷி

அகஸ்தியன் கண்டுணர்ந்த இயற்கையின் பேருண்மைகள்

அகஸ்தியன் தாய் கருவிலே பெற்ற சக்திகள்

அனைத்தும் அரவணைத்து ஒளியாக இருக்கும் துருவ நட்சத்திரம் – இராமாயணம்

அகஸ்தியனின் தத்துவங்கள் காலத்தால் எப்படி மாற்றப்பட்டது

அகஸ்தியன் 27 நட்சத்திரத்தின் சக்தியை ஏன் எடுத்தான்

அகஸ்தியராக ஒவ்வொரும் மாறுங்கள்

அகஸ்தியன் நுகர்ந்த பச்சிலை மணங்கள் அருள் தாவர இனச் சத்துக்கள் மூலிகைகள்

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக உருவான ஆற்றல்கள்

புலஸ்தியர் வம்சத்தில் வந்த அகஸ்தியர்

துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து உணர்வுகளை உடனடியாக ஒளியாக மாற்றுங்கள்

இருபத்தியேழு நட்சத்திரமும் அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக ஆன நிலைகளும்

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக ஆனதன் உண்மை நிலைகள்

துருவ நட்சத்திரத்தின் சக்தியை நமக்குள் சேர்க்க வேண்டிய முறை

வசிஷ்டர் அருந்ததி நட்சத்திரம் – சப்தரிஷி மண்டலம்

சப்தரிஷி மண்டல ஈர்ப்பு வட்டத்துடன் இணைய வேண்டிய வழி

இராமலிங்கம் – துருவ நட்சத்திரம்

இராமேஸ்வரம் கோடிக்கரை தனுஷ்கோடி துருவ நட்சத்திரம்

தீமைகளை நீக்கி ஒளியாக மாற்றச் செய்யும் அகஸ்தியமாமகரிஷியின் கூட்டமைப்பு

மகரிஷியும் நானும் – அவன் தான் நான்… நான் தான் அவன்…!

அகஸ்தியன் கண்டுணர்ந்த அகண்ட அண்டத்தினை ஒவ்வொருவரும் காண முடியும்… அந்த ஆற்றலைப் பெற முடியும்…!

அகஸ்தியன், துருவ மகரிஷி, துருவ நட்சத்திரம், சப்தரிஷி மண்டலம் – நான்கும் சேர்த்து பிரம்மம்

துருவ நட்சத்திரத்தின் ஆயுள்கால மெம்பராகச் சேர்ந்தவர்கள் நாம் எப்படி இருக்க வேண்டும்…?

அகஸ்தியன் அமர்ந்த இடங்களின் அதிசயங்கள் – நெய்யை விட்டால் வெண்ணையாக மாறும்

ஆயுள் மெம்பரின் இயக்கங்கள் எப்படி இருக்க வேண்டும்…?

27 நட்சத்திரங்களின் ஆற்றலை எடுத்த அகஸ்தியன் பெற்ற நிலையை குருநாதர் எல்லோரையும் பெறச் செய்கின்றார்

அகஸ்தியனைப் பின்பற்றி நாமும் பூமியைச் சமப்படுத்துதல் வேண்டும்

கணவன் மனைவி ஒன்றாக உயிர் பிரிந்தால் அடுத்த உடல் எப்படி இருக்கும் – அகஸ்தியன் தாய் தந்தையர்

அகஸ்தியன் பாதம் பட்ட இடங்களில் பதிந்துள்ள ஆற்றல்களையும் அகஸ்தியர் பெற்ற பச்சிலைகள் மணங்களையும் பெறும் வழிகள்

அகஸ்தியன் தன் இளம் வயதில் பெற்ற விண்ணின் ஆற்றல்கள் – வெள்ளிக் கோள் – வியாழன் கோள் – ஒளியான உணர்வு

அகஸ்தியன், துருவ நட்கத்திரம், சப்தரிஷி மண்டலம்

நாகரத்தினத்திற்கும் வைரத்திற்கும் வித்தியாசம் – இளம் நீல நிறத் துருவ நட்சத்திரம்

கணவன் மனைவி சேர்ந்து மின்னலை நுகரலாம், துருவ நட்சத்திரத்துடன் இணைந்து வாழும் சப்தரிஷி மண்டலம்

வேதனையை ஒடுக்கச் செய்யும் துருவ நட்சத்திரத்தின் நீல ஒளிக்கற்றைகள்

மழை பெய்யச் செய்யும் ஆற்றல்கள்

சப்தரிஷி மண்டலத்தில் இருக்கும் ஒளியான உயிராத்மாக்கள்

அகஸ்தியன் வெளிப்படுத்திய உண்மையான சக்திகளை உங்களுக்குக் கொடுக்கின்றோம்

துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஓ…ம் நமச்சிவாய…! என்று நம் உடலாக மாற்றவேண்டும்

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நுகர்வதால் கிடைக்கும் பேறுகள்

அகஸ்தியன் கண்டுணர்ந்த நட்சத்திரத்தின் ஆற்றல்கள்