பூமிக்கு அடுத்து மனிதன் எங்கே வாழப் போகின்றான்…?

பூமிக்கு அடுத்து மனிதன் எங்கே வாழப் போகின்றான்…?

 

கிறிஸ்து பிறந்தநாளில் வான மண்டலத்திலிருந்து “புதிய நட்சத்திரங்கள் தோன்றிப் பிரகாசமான ஒளி தந்ததை” அன்று வாழ்ந்து வந்தவர்களில் பலர் பார்த்ததாகவும் செப்புகின்றனர்.

வான மண்டலத்தில் தோன்றிய அந்நட்சத்திரத்தின் பிரகாசமான ஒளி எந்நிலையில் வந்தது…? அவற்றின் நிலை இப்பூமியின் மேல் எப்படிப் படிந்தது…? என்ற நிலையென்ன…?

இப்பூமி சுழலும் வேகத்தில், பால்வெளி மண்டலத்தில் சுற்றிக் கொண்டுள்ள எண்ணிலடங்கா பல நட்சத்திரங்களை இப்பூமி ஓடும் ஓட்டத்தில் காண்கின்றது.

இப்பூமி சுழன்று ஓடும் வேகத்தில் அங்கங்குள்ள அமில நிலையினால் உருப்பெற்ற இந்நட்சத்திர மண்டலங்கள் இப்பூமியின் ஈர்ப்பில் சிக்கி இப்பூமியுடன் வந்து சேருகின்றது.

நட்சத்திர மண்டலங்கள் அனைத்தும் கரையும் தன்மை கொண்ட அமில சக்தியினால் மின்னுவதுதான்.

1.நட்சத்திர மண்டலத்திற்கும், பால்வெளி மண்டலத்திற்கும், நம் பூமியின் சக்திக்கும்
2.நம் பூமி தொடர்புபடுத்தி நம் பூமி சுழன்று ஓடும் வேகத்தில் பால்வெளி மண்டலத்தில் நம் பூமியின் சக்தி மோதும் ஈர்ப்புத் தன்மை கொண்டு,
3.இப்பூமிக்குகந்த அமில சக்தியுடைய நட்சத்திர மண்டலமாய் இருந்திட்டால்
4.இப்பூமியின் பிடிப்புடன், அந்நட்சத்திர மண்டலத்தை இப்பால்வெளி மண்டலத்திலுள்ள காற்று மண்டலம் அதன் மேல் மோதி
5.இவ் ஈர்ப்பு சக்தியில் அந்நட்சத்திர மண்டலம், இச் சூழலும் வேகத்தில் பட்டு,
6.ஒன்றுக்கொன்று திடமாய் உறைந்த அமில சக்தியைக் கொண்ட அந்நட்சத்திர மண்டலமே
7.இப் பூமியின் ஈர்ப்பில் வந்து சிக்கியவுடன், கரைந்த அமிலமாய், இப்பூமியைச் சுற்றியுள்ள காற்று மண்டலத்தில் கலந்து விடுகின்றது.

இந்நிலைப்போல்தான் பல கோடி நட்சத்திர மண்டலங்களும்‌.

இப்பெரிய கோளங்கள் சுழன்று ஓடும் ஈர்ப்பில் அதனதன் அமில சக்தியின் தொடர் நிலைகொண்ட நட்சத்திர மண்டலங்களெல்லாம்… அது ஈர்த்து, செயல் கொண்ட சக்தியிழந்து, அந்நட்சத்திர மண்டலத்தின் ஆத்மாவும் பிரிந்து அதன் சக்தி அமிலம் மற்றப் பெரிய மண்டலங்களின் அமிலமுடன் அமிலமாய்க் கலந்து விடுகின்றது.

இப்பெரிய மண்டலங்களின் ஈர்ப்பில் சிக்காமல் இம் மண்டலத்துடன் தொடர்பு கொண்டே பல நட்சத்திர மண்டலங்கள் சுழன்று கொண்டே ஓடி வருகின்றன.

இன்னும் சில நட்சத்திர மண்டலங்கள்…
1.இப்பெரிய மண்டலங்கள் ஓடும் நிலையில் இவ்வமிலத்திற்கும்
2.நட்சத்திர மண்டலத்தின் அமிலத்திற்கும் சத்ரு மித்ரு நிலையாய் இருந்தால்
3.இம்மோதுண்ட நிலையில் எரி நட்சத்திரமாய் எரிந்து அந்நிலையிலேயே கருகிய நிலையில் செயலற்றதாகி விடுகின்றன.

இவ்வான மண்டலத்தில் இப்பால்வெளி மண்டலத்தில் நடந்திடும் சக்தி நிலை எண்ணிலடங்கா நிலை கொண்டவைகளாக உள்ளன.

இப்பூமியில் இருந்து வாழ்ந்து சாதாரண நிலையில் ஆயுள் பிரிந்த ஆத்மாக்கள் அனைத்துமே… இப்பூமியிலிருந்து இப்பூமியைச் சுற்றி படர்ந்துள்ள இக்காற்று மண்டலத்தில் ஒட்டிய நிலையிலேயே தான் இவ்வனைத்து ஆவி ஆத்மாக்களும் சுற்றிக்கொண்டே உள்ளன.

இப்பூமியில் சுவாசித்து வாழ்ந்ததின் நிலைக்கொப்ப உள்ள காற்று மண்டலத்துடனே தான் உடலை விட்டுப் பிரிந்த ஆவிகளின் சுவாச நிலையும் கலந்துள்ளது.

மற்ற மண்டலத்திற்குச் செல்லவோ… இப்பூமியின் காற்று மண்டலத்திற்கு மேல் உள்ள இயற்கை நிலையுடனோ.. இப்பூமியில் உயிரணுவாய் உருப்பெற்று வாழ்ந்து ஆவி உலகிற்கு வந்த உயிரணு உயிராத்மா எல்லாம் இவற்றின் நிலையில் படர்ந்தே தான் சுற்றிக் கொண்டிருக்க முடியும்.

வான மண்டலத்தில் நட்சத்திர மண்டலமாய் மின்னும் சக்திக்குக்கூட இப்பூமியில் உதித்த உயிரணுக்களினால் சுவாச நிலை மாறி வளர்ச்சி நிலை பெறும் நட்சத்திரமாய் மின்ன முடியாது.
ஆனால் இப்பூமியிலேயே பிறப்பில் வந்து இப்பிறப்பின் பயனைப் பெற்று சூட்சம நிலைகொண்ட ஆத்மாக்கள் பல இன்று நட்சத்திர மண்டலமாய் ஒளிர்ந்து வாழ்கின்றன.

இன்று இப்பூமியில் உள்ள நிலைபோல் மனித ஆத்மாக்களாய் வாழும் நிலை கொண்ட ஆத்மாக்கள் இப்பூமியைச் சார்ந்த இந்த 48 மண்டலங்களிலும் இல்லை என்று உணர்த்தினேன்.

இதுவே
1.இன்னும் இருபது முப்பது ஆண்டிற்குள் இப்பூமியில் உடலுடன் வாழ்ந்திடும் மனித ஆத்மாக்களே
2.இன்று செயற்கையுடன் ஆசை கொண்டு சந்திர மண்டலத்திற்குக் குடியேறும் நிலைக்காக ஆராயும் மனிதர்களே
3.வரப்போகும் இக்கலியின் மாற்றத்தினால்
4.இன்று இப்பூமியிலுள்ள சக்தியின் தொடர் சக்தியின் வளர்ச்சி நிலை பெற்ற சந்திரனில் வாழத்தான் போகின்றான்.

இன்று நாம் வாழும் இப்பூமியின் சக்தி நிலையின் வளர்ச்சி நிலையினால் வரப்போகும் கல்கியில் பெரும் மாற்றம் கொண்டதாக இயற்கை சக்தியே செயல் கொள்ளப் போகின்றது.

இம்மாற்றத்தின் அசைவினால் இப்பூமியுடன் பல நட்சத்திர மண்டலங்களின் குவிப்பு சக்தி சேரப் போகின்றது.

1.மனித ஆத்மாக்களினால் இக்கலியின் கொடுமையினால் “இவ்வியற்கையின் சக்தி கொண்ட இப்பூமியின் ஆத்மாவே”
2.இம்மனித ஆத்மாக்களின் அழிக்கும் எண்ண சக்தி கொண்ட ஆத்மாக்களைச் சீற்றம் கொண்டே மாற்றி
3.இன்னும் சக்தி கொண்ட பூமியாகத் தான் நம் பூமி சுழலப் போகின்றது.

இப்பூமியில் உதித்த மனித ஆத்மாவினால் தான் இக்கலியின் நிலையும் மாற்றம் கொள்ளப் போகின்றது.

“ஞான மகசூலாக நீங்கள் இருக்கின்றீர்கள்” என்பதை உணர்ந்து செயல்படுங்கள்

“ஞான மகசூலாக நீங்கள் இருக்கின்றீர்கள்” என்பதை உணர்ந்து செயல்படுங்கள்

 

இன்று இந்தப் பூமியில் மனிதனின் “தேவையின் வேகம்” விஞ்ஞானத்தின் அலையால் விஞ்ஞானத்துடனே ஓடிக் கொண்டுள்ளது.

உணர்வின் எண்ணச் சுழற்சியே விஞ்ஞானத்துடன் ஒன்றிய நிலையில்
1.தன் ஞானத்தை வளர்க்கக்கூடிய உணர்வு குண சித்து நிலையின் செயலுக்கு
2.நம் பூமியின் மனித ஆத்மாக்களின் ஈர்ப்பை எடுக்கக்கூடிய நிலையும்
3.சப்தரிஷிகளும் சித்தர்களும் அவர்கள் பெற்ற சக்திகளை மெய் ஞான விளைச்சலாக
4.இப்பூமியில் விளைய வைத்து அதன் மகசூலைப் பெருக்கச் செயல் கொல்கிறது.

ஆனால் இன்று இப்பூமியில் விஞ்ஞானத்தால் வாழ்ந்திட்ட செயற்கையின் செயல் குண உணர்வுடன் உள்ள நிலைகளை மெய் ஞானம் கொண்டு
1.எண்ணத்தால் மனித குணங்களைப் பக்தி ஞானம் என்ற உயர் குண உணர்வு எண்ண சுவாசம் எடுத்து
2.நல்ல உணர்வில் தான் (சப்தரிஷிகள்) பெற்ற சக்தி அலையைப் பயிர் செய்ய
3.அவ்வுணர்விற்கே மனித எண்ணங்களைத் திருப்ப முடியாமல் உள்ளது
4.விதியின் பயன்… விதியின் பயன்… என்று முன்னோர்கள் உணர்த்திய விதிச் செயலாகவே இந்தப் பூமி உள்ளது.

காந்த மின் அலையைப் பலவாகப் பல ரூபங்களில் பிரித்தெடுத்து விட்டான்… இன்னும் பிரித்து எடுக்கின்றான். உலகையே நிலை தடுமாற நிகழப் போகும் மாற்றத்தின் வித்தையும் ஊன்றிவிட்டான்.

இன்று இப்பூமியில் நடக்கும் சில இடங்களின் மாற்ற நிலைகளும்… போர்களும்…
1.இந்தப் பூமியின் காற்று மண்டலத்தையே முழுமையாக விஷமாக்கி விட்டது.
2.அதனால் உணவாக உட்கொள்ளும் பல பொருள்கள் விஷத் தன்மையில் கூடப் போகின்றன.

வரப் போகும் எதிர்கால முறை எல்லாமே விஞ்ஞான வளர்ச்சியில் பூமியின் இயற்கைச் சக்தியை உறிஞ்சி எடுத்ததனால் பூமியின் வலுக் குன்றி “தன் வலுவைத் தான் பெருக்க…” நிகழப் போகும் மாற்ற குணம் நெருங்கிவிட்டது.

சப்தரிஷிகளும் பல கோடிச் சித்தர்களும் தன் சக்தி உணர்வின் செயலைக் குன்றவிடாமல் வளர்த்துக் கொண்டிருந்தால் தான்
1.ஞானக் கரு உரு மனிதனை உண்டாக்கி
2.ஞானத்தால் வளரக்கூடிய சக்திகளின் வளர்ச்சிக்கே சக்தி கூடும்.

ஊரே உலகமே மாறு கொண்டு அழியும் தருவாயில் நம் உயிராத்மா மேலா…? நாம் மட்டும் இருந்தென்ன பயன்…? எல்லாமே விஷமாக உள்ள பொழுது ஜெப முறையில் எப்படித் தான் நாம் இருந்தாலும் விஷத்தின் சுழற்சியில் சிக்க்த்தானே வேண்டும்…! என்ற வினா எழும்பலாம்.

இம்மனித ஜீவ உடலில் உணர்வின் எண்ண அலையை நல்ல உரமான சக்தி உரத்தை இட்டு ஆத்ம பலம் என்னும் ஞான பலத்தைக் கூட்டி
1.ஒவ்வொரு அணுவையும் உணர்வின் எண்ணத்தால் ஒளியின் அணுவாக உணர்வாக்கி விட்டால்
2.விஷமுடன் நாம் இருந்தாலும் அந்த விஷம் நம் உடலில் பாயாது.

அதற்குகந்த பக்குவத்தைத்தான் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் இங்கே வெளிப்படுத்தும் தன்மையில் பக்குவப்படுத்திக் கொண்டே வருகின்றோம்.

1.ஓர் ஆத்மா சக்தி கொண்டு வந்தால்
2.அச்சக்தியைக் கொண்டு பல சக்தியை வளரச் செய்யத்தான்
3.இந்தத் தியானத்தின் மூலம் என்ற ஆத்ம பலம் கொள்ளுங்கள் என்று உணர்த்துகின்றோம்.

எல்லாம் போகும் பொழுது நாமிருந்து என்ன பயன்…? என்று எண்ணாமல் ஓர் ஏக்கர் நிலத்தில் பத்து மூடை நெல் வந்தால் எல்லாமே உணவாகி விட்டால் விதை நெல் வேண்டுமல்லவா…!

விதை நெல் இருந்தால் தான் மீண்டும் மீண்டும் பயிர் செய்ய முடியும். குண வம்சமே அழிந்து விட்டால் அதன் குண வளர்ச்சியின் விதை வேண்டாமா…?

அதைப் போல் உணர்வால் எடுக்கும் தியானம் கொண்டு ஆத்ம பலம் என்ற ஞான வளர்ச்சியின் வழிக்கு வாருங்கள்.

1.உற்றார் உறவினர் என்ற சுழற்சியில் உணர்வின் எண்ணத்தைப் பதியச் செய்து
2.அதே சுழற்சி வலையில் சிக்குண்டு சிதறாமல்
3.உணர்வின் எண்ணத்தை உயர் தியானத்தால் ஞானம் கொண்டு
2.ஒவ்வொரு ஜீவ பிம்ப உடல்களையும் உம் எண்ண உணர்வால்
3.நல் உணர்வின் அலையைப் பாய்ச்சி உம் உணர்விற்குப் பலம் கூட்டுங்கள்.

இந்தப் பூமியில் பயிராகியுள்ள “மனித மகசூலின் விதையாக நீங்கள் இருக்க…” உணர்வின் எண்ணத்தை ஒவ்வொருவரும் நற்குணத் தியானமாக வழியமைத்துக் கொள்வீர்களாக..!

கலி முடிந்து “கல்கி வரும் நேரம்”

கலி முடிந்து “கல்கி வரும் நேரம்”

 

ஜென்மத் தொடருடனே ஒவ்வொருவரும் வாழ்வது பலரும் சொல்லும் உண்மை நிலை தான். சொந்தம் என்பது எதுவப்பா…?

பந்தங்களுடன் வாழ்கின்றோம். இவ் வாழ்க்கையில். ஆதியில் மனித உயிரணு மற்ற ஜீவராசிகளின் உயிரணு தோன்றியதை ஒரே நாளில் தோன்றியதாகவும் ஒரே நாளில் அனைத்து ஜீவராசிகளும் மடியப்போவதாகவும் உபதேசம் செய்கின்றார்கள்.

1.அனைத்து உயிரினங்களும் ஒரே நாளில் தோன்றியனவா…?
2.ஒரே நாளில் தோன்றியிருந்தால் சுற்றிக்கொண்டே உள்ள மண்டலங்களிலிருந்து பெறும் சக்திக்கெல்லாம்
3.ஒரு நாள் மட்டும் தான் படைக்கும் வேலையா…? பாக்கி காலங்களில் அதை வளர்த்துக் காக்கின்றதா…?

ஒவ்வொரு நாளும் பல மண்டலங்களின் தொடர்புடன் ஒன்றுக்கொன்று ஈர்த்துப் பல சக்திகளைப் பெற்ற சூரியன் அதன் ஒளிக்கதிரிலிருந்து தினமும் தினமும் என்பது மட்டுமல்ல ஒவ்வொரு நொடி… நொடிக்கும் குறைவான நேரத்திலும் பல உயிரினங்கள் தோன்றித் தோன்றி வளர்கின்றன.

இந்நிலை உள்ள பொழுது ஒரு நாளில் தோன்றிய உயிரணுக்கள் எல்லாமே என்பதன் பொருள் என்ன…? ஆரம்பக் காலத்தில் இருந்த ஜீவராசிகளும் இப்போதைய ஜீவராசிகளும் ஒரே அளவுடனா உள்ளன…?

புதிய புதிய உயிரணுக்கள் வளர்ந்து கொண்டே தான் உள்ளன.

1.இவ்வுலகம் எந்த நிலையில் தோன்றிற்று…?
2.வருடக் கணக்கும் நாள் கணக்கும் என்னிட முடியுமாப்பா…?
3.இவ்வுலகம் மட்டும் தனியாக தானாகவா வளர்ந்தது…?
4.என்று தோன்றியது…? என்று அழிகின்றது…? என்று சொல்லும் சக்தி யாராலும் முடிந்திடாது.

அழியா உலகம் என்றேன். ஆனால் காலங்கள் தான் மாறி மாறி வருகின்றன. நாம் அதற்குச் சூட்டிய பெயர் தான் கல்கி கலி இராமாவதாரம் கிருஷ்ணாவதாரம் மச்சாவதாரம் இப்படிப் பல நாமங்கள்.

எல்லா மண்டலங்களிலுமே உயிரினங்கள் உண்டு என்றிட்டேன் முதலில். ஒவ்வொரு மண்டலத்தின் தன்மையும் இது போல் தான் சுற்றிக் கொண்டுள்ளது

இன்று ஒரு நாட்டில் பனி பெய்கின்றது… ஒரு நாட்டில் அதி வெப்பமும்… சமமான நிலை ஒரு இடத்திலும்… அதி மழை பெய்து கொண்டே உள்ள இடமும்… குளிர்ந்த நிலை கொண்ட இடமும்… இப்படிப் பல நிலைகளைக் கொண்ட இவ்வுலகினில் பாலைவனம் நீர் நிலை இப்படி ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு தன்மை உள்ளதன் விளக்கத்தை முதலிலேயே சொல்லி உள்ளேன்.

இந்நிலைகள் எல்லாம் இப்பொழுது உள்ள உயிரினங்களின் நிலையும் இப்படியே இருக்கப் போவதில்லை. கலி கடைசியில் உயிரினங்கள் எப்படி மாறிக் கல்கிக்கு வருகின்றன…? என்பதனைத் தான் நாம் அறிய வேண்டும்.

உலகமே அழிகின்றது என்றாய்…! எப்படி அழியும் இவ்வுலகம்…? இவ்வுலகம் அழிந்து மற்ற மண்டலத்தின் மேல் போய் விழுமா…? இவ்வுலகம் இல்லாவிட்டால் சந்திரனும் செவ்வாயும் உயிர் வாழ முடியுமா…? செவ்வாயும் சந்திரனும் இல்லாவிட்டால் அதன் தொடர்புடைய மண்டலங்களின் நிலை என்ன…?

1.இவ்வுலகம் அழிகிறது என்றால்
2.சக்தியின் சொரூப நிலையே அழிய வேண்டும்.

சக்தியின் சொரூப நிலை அழிந்தாலும் சக்தியின் உயிர் பெற்ற மண்டலங்கள் எல்லாமே… மண்டலங்கள் எல்லாமே என்பது அனைத்து மண்டலங்களும் ஜீவன் இல்லாமல் ஒன்றின் மேல் ஒன்று விழுந்து ஜீவனில்லாமல் இருக்கும் நாள் எதுவப்பா…?

அனைத்து மண்டலங்களும் ஜீவன் இல்லாமல் விழுந்தாலும் இப்பொழுது உள்ள உலகின் ஜடப்பொருள்கள் எல்லாம் எங்கப்பா செல்லும்…? அழிவு என்பதற்கே அர்த்தம் இல்லையப்பா…! காலங்கள் மாறுபடுகின்றன.

இப்பொழுது இக்கலி முடிகிறது என்கின்றோம். இக்கலி எப்படி முடிகின்றது என்பீர்…? இக்கலியில் உள்ள நிலை மாறுபடத்தான் சில இடங்களில் நில அதிர்வும் நெருப்புக் கோளங்களும் அதி மழையினால் வரும் சேதங்களும்.

இப்புமி ஈர்த்து வெளியில் கக்கும் நிலையில் இருந்துதான் ஒவ்வொன்றும் நடக்கின்றது.

இக்கலியில் வந்த மனிதர்களினால் அவர்கள் எண்ணத்தைக் கொண்டு வாழும் சுகத்திற்காகச் “செய்த வினையான இச்செயற்கை என்னும் நிலை பல ஏற்படுத்தி” விஞ்ஞானம் கொண்டே தன்னைத்தானே அழிக்கச் செய்த வினையப்பா.

இவ்வினையெல்லாம்… பூமித்தாயின் உன்னத பொக்கிஷங்களைச் செயற்கைக்கு எடுத்து விட்டானப்பா திரவங்களாகவும் உலோகங்களாகவும்.

இவன் செயற்கைக்கும் இயற்கையை அழித்துத் தான் உண்டு பண்ணுகின்றான். முதல் பாடத்திலேயே சொல்லி உள்ளேன் ஒன்றை அழித்து ஒன்று சக்தி பெறுகிறது என்று.

இந்நிலை புரிந்ததா…?

பூமியில் உள்ள பொக்கிஷத்தை இவன் எடுத்ததினால் வந்ததின் வினை தான் இந்நிலையெல்லாம்.

முன் காலத்தில் கால நிலை ஒன்று போல் இருந்தது ஆடி மாதத்தில் காற்றும் ஐப்பசியில் மழையும் மார்கழியில் குளிரும் சித்திரையில் வெப்பமும் இப்படிக் காலநிலை ஒன்று போல் இருந்ததப்பா.

மனநிலை மாறுபடுகின்றது மனநிலை மாறிபடுகின்றது என்பதெல்லாம் இச்செயற்கைக்கு ஏங்கும் மனிதர்களின் ஆசைக்காக பூமித்தாயின் சக்தியைத் தோண்டி எடுத்ததின் வினையைச் செப்புகின்றேன்.

இவன் பூமியிலிருந்து செயற்கையாகப் பல சக்திகளை எடுத்ததினால் இப்பூமியின் தன்மையே மாறுபட்டு இப்பொழுது கடலாக உள்ள இடமெல்லாம் பாலைவனமாகி… பாலைவனமாக உள்ள இடமெல்லாம் கடலாகிச் சுற்றிக் கொண்டே உள்ள பூமித்தாய்
1.ஒரு நொடியில் ஏற்படுத்தும் சிறு அசைவினால் உண்டாகும் நிலையால் இக்கால நிலை மாறி கலி முடிந்து கல்கி வரும் நிலை.
2.அதன் ஆரம்ப நிலை நான் இப்பொழுது சில இடங்களில் நடந்திடும் இக்கோர நிலையெல்லாம்.
3.இவ்வினையெல்லாம் ஆண்டவன் செய்யவில்லை அவனவனே செய்ததுதான்.
4.இனியும் வருவது இதன் தொடர்ச்சி தான்.

ஆத்மாவைச் சுகமாக வைத்துக் கொள்ளுங்களப்பா…!

ஆத்மாவைச் சுகமாக வைத்துக் கொள்ளுங்களப்பா…!

 

கண்டெடுத்த இரசாயணத்தைக் கண்ணாடியில் பூசித் தன் பிம்பத்தை தானே காணும் நிலை அறிந்துள்ளீர். இம்மாயக்கலியில் அவதரித்த செயற்கை யுகம் கொண்ட மனிதர்கள் எல்லாம் தன் எதிரில் உள்ள பிம்பத்தைத்தான் அக்கண்ணாடியில் காண்கின்றார்கள்.

அன்றே கண்டான் அச்சித்தன் தன் கண்ணால் எல்லாமுமே…!

உலக நிலையையும் மற்ற மண்டலங்களின் நிலையையும் அறிந்து வாழ்க்கைக்கு என்ன பயன்…? என்று சிலர் எண்ணிடலாம்.
1.இப்பாட நிலைக்கு வந்தவர்களுக்கு
2.ஆத்ம நிலையைத் தன் வழிக்கு ஏற்க வந்தவர்களுக்கு அறிந்திடத் தான் இப்பாட நிலை.

மனித சக்தியில் எந்த நிலையில் சக்தி நிலை கலந்துள்ளது என்று அறிந்திடவும்… இப்பூமி எப்படிச் சூரியனிலிருந்து வரும் அணுக்கதிர்களைத் தன் சக்தியில் ஈர்த்துப் பல நிலைகளை நமக்கு அளிக்கின்றாளோ பூமித்தாய்… அந்நிலையான சக்தி எல்லாமே பூமியில் வாழ்ந்திடும் நமக்கும் அவ்ஈர்க்கும் தன்மை எல்லாமே உள்ளன.

சூரியனிலிருந்து வெளிப்படும் தன்மை எல்லாவற்றையுமே நாம் நேராகவே நம் நிலைக்கு ஈர்த்து விடலாம்.
1.நம் உடலில் உள்ள பிணிக்கும் அச்சூரிய சக்தியிலிருந்து “பல வகை மூலிகைகள் கொண்ட மருந்தின் நிலையை” நம் உடலுக்கும் நாம் ஈர்த்திடலாம்.
2.நம் செவிக்கு நம்மைச் சுற்றியுள்ள ஒலிகள் கேட்பதைப் போல் நம் காணா இடத்தில் உள்ள ஒலிகளையும் ஈர்த்திடலாம்.

நம் சக்தியில் நாம் எடுக்கும் சுவாசத்தில் அவ்ஒலியுடன் கலந்துள்ள ஒளியை நாம் ஈர்க்கும் பொழுது எங்கெங்கும் நடக்கும் நிலையையும் நாம் ஈர்க்கும் தன்மை கொண்டு… அவ்வொளியின் பிம்பம் படும் நிலையில் உள்ளவை எல்லாவற்றையுமே இருந்த நிலையிலையே கண்டிடலாம்.

இம்மனித சக்திக்குத் தான் கால நிலை பூகம்ப நிலை பெரும் மழை வரும் நிலை எல்லாவற்றையும் உணரும் தன்மை இவ் உடலில் இருக்கின்றது நம் நினைவை மாற்றி விடுவதினால் அதை எல்லாம் அறிந்திடாமல் தவற விடுகின்றோம்.

பூமிக்கு எப்படி ஈர்ப்பு நிலை என்னும் காந்த சக்தி உள்ளதுவோ அதைப் போல்
1.பூமியில் உதித்த உயிரணுக்கள் எல்லாவற்றுக்குமே உள்ளன என்றாலும்
2.மனித உடலில் பெற்ற ஆத்மாக்களுக்கு அனைத்தையும் அறிந்திடும் சக்தி உள்ளது.
3.செயல்படுத்தும் தன்மை வாய்ந்த உறுப்புகளும் உள்ளன.

இம்மனிதன் உண்டு உடுத்தி உறங்குவது தான் சுக வாழ்க்கை என்று சுகத்தை எண்ணுகின்றான்.

இச்சுகம் எத்தனை நாளைக்கு…? தன் எண்ண சுகத்தைக் கொண்டே ஆத்மாவைச் சுகமாக்கிடாமல் இவ் உடல் சுகத்தைத் தான் எண்ணி வாழ்கின்றான்.

இவ் உடல் என்னும் கூட்டிற்கு அனைத்து சக்திகளையும் அறிந்தே வாழும் சக்தி உள்ளது… அதை ஞான வளர்ச்சிக்குப் பயன்படுத்துங்களப்பா…!

உயிரின் துடிப்பு அதிகரிக்கும் போது மனிதன் அசுரனாகி விடுவான்

உயிரின் துடிப்பு அதிகரிக்கும் போது மனிதன் அசுரனாகி விடுவான்

 

நட்சத்திரங்களின் மின் கதிர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி எதிர்மறையாகி மின்னலாகக் கடலில் பாய்ந்தால் கடல் உப்பின் தன்மை அதை அடக்கி மணலாக மாற்றுகின்றது.

அதையே மனிதன் யுரேனியமாகப் பிரித்து எடுக்கின்றான். அணுவைப் பிளந்து அணுக்கதிரியக்கங்களை உருவாக்கி அணு உலைகளை உருவாக்கி இயந்திரங்களைத் துரித கதியில் வெப்பமாக்கும் நிலைக்குச் செயல்படுத்துகின்றார்கள்.

“மின்னல் தாக்கும் பொழுது… எவ்வளவு தூரம் விரிவடைந்து அது செயல்படுகின்றதோ” அதைப் போன்று
1.மனிதன் அணுவைப் பிளந்து அதன் உணர்வைச் சேமித்து
2.ஹைட்ரஜன் என்ற நீரின் அழுத்தத்தைக் கொண்டு அதை அடக்கி
3.மற்ற இயந்திரங்களை உருவாக்கி விஷத்தன்மை ஊட்டி இயக்கினாலும்
4.அதனின் கசிவுகள் வெளிவரும் பொழுது “சூரியனுடைய காந்த சக்தி” ஆதைக் கவர்ந்து தான் தீரும்.

இது பரவப் பரவ நச்சுத்தன்மைகளாக மாறி… சிந்திக்கும் தன்மை இழக்கச் செய்து விடும்.

அது மட்டுமல்ல…! அணுக்கதிரியக்கத்தின் தன்மை துரிதப்படுத்தி இயக்கப்பட்டு உலகம் முழுவதும் பரவச் செய்த பின்
1.அது சூரியனால் மீண்டும் ஈர்க்கப்பட்டு அதனுள் சென்ற பின் கொதிகலனாக மாறி அது வெடிக்கின்றது.
2.பூமிக்குள் எப்படி நிலநடுக்கம் ஆகின்றதோ அது போன்று சூரியனுக்குள் இத்தகைய நிலைகள் வெளிப்படுத்தும் நிலைகளும் வந்துவிட்டது.

காரணம்… சூரியன் இயற்கையாகக் கவரும் விஷத் தன்மைகளும் மனிதன் செயற்கையாக உருவாக்கிய கதிரியக்கப் பொறிகள் இரண்டும் மோதும் போது
1.எலக்ட்ரிக் அதிகமாகி… பொறிகளாக உருவாகி
2.கொதிகலனாகிக் காந்தப் புயல்களாக வீசுகின்றது.

ஒரு மேக்னட்டை அதிகமாக்கிச் சுழற்றும் போது காந்தம் அதிகமாகி மின் உற்பத்தி அதிகமானால் அது அதனுடன் பொருத்தப்பட்டுள்ள வயர்களைக் கருக்குகின்றது… அதில் இயக்கக்கூடிய மோட்டார்களையும் ஃபுயூஸ் ஆக்கிவிடுகின்றது.

இதைப் போன்று நம்மை இயக்கக்கூடிய உயிரின் தன்மையும்
1.எலக்ட்ரானிக்காக உற்பத்தி ஆகி கொண்டிருக்கும் உயிரின் துடிப்பு அதிகமானால்
2.நம் உடலுக்குள் அதன் தொடர் கொண்டு இயக்கும் அணுக்களின் நிலையும் பாய்ச்சலாகிச் சிந்தனைகள் இழக்கப்பட்டு
3.இந்த உணர்வின் தன்மை அதீத நிலைகள் கொண்டு நாம் சிந்திக்கும் செயலிழக்கப்பட்டு
4.ஆதிகாலத்தில் ஒன்றை ஒன்று கொன்று எப்படிப் புசித்து வாழ்ந்தார்களோ
5.இதைப் போன்று அசுர உணர் கொண்டு செயல்படும் நிலையாக வந்துவிடும்.

ஆப்பிரிக்கா நாடுகளில் இன்றும் மனிதனுக்கு மனிதன் கொன்று புசித்திடும் நிலையும்… இறந்த மனிதனை உணவாக உட்கொள்ளும் அநாகரீக நிலைகளாக அங்கே வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையும் உண்டு.

அது போல் மக்கள் வாழும் காட்டுப் பகுதிகளிலும் மலைப்பகுதிகளில் சில இடங்களில் இத்தகைய மனிதனைப் புசிக்கும் நிலைகள் உண்டு.
1.நகரப் பகுதிகளில் விஞ்ஞான அறிவு வளர்ந்து இருந்தாலும் இதனுடைய வளர்ச்சி அங்கே சுருங்கி இருந்தாலும்
2.உலகம் முழுவதும் பரவும் நிலை மனிதனுக்கு மனிதன் கொன்று புசிக்கும் நிலை வந்துவிட்டது.

உணர்வின் அதிர்வுகள் அதிகரிக்கப்படும் பொழுது எலெக்ட்ரிக் என்ற எர்த் நிலையில் வரப்படும் பொழுது எலக்ட்ரானிக் என்று நமக்குள் இயக்கும் “உணர்வுகள்” செயலிழக்கத் தொடங்கிவிடும்.

அதே போல் விஞ்ஞானத்தால் கண்டுபிடிக்கப்பட்ட எலக்ட்ரானிக் கருவிகளும் திசை மாறிக் கணக்கீடுகளை தப்பாக இயக்கும்.

அதாவது… ஒவ்வொரு நாட்டிலும் அணுகுண்டுகளையும் மற்ற ஆயுதங்களையும் கம்ப்யூட்டரால் கண்கானிக்கப்பட்டுப் பாதுகாப்பாக வைத்துள்ளார்கள்.

வெப்பங்கள் தாக்காது இருப்பதற்காக கட்டுப்படுத்தி வைத்துள்ளார்கள் மின்னலோ மற்ற இயற்கையினுடைய சீற்றங்களும் தாக்காதபடி பாதுகாப்பாக வைத்துள்ளார்கள்.

கால நிலைகள் உணர்ந்து அத்தனை வெடிகுண்டுகளையும் பாதுகாக்கும் கம்ப்யூட்டரும்
1.மாறுபட்ட நிலை கொண்டு சிதைவுண்டால் புதைத்து வைத்திருக்கும் குண்டெல்லாம் வெடிக்கும் நிலைக்கு வந்துவிடும்.
2.வெடித்து விட்டால் உலகம் முழுமைக்குமே விஷத்தின் தன்மைகள் பரவிவிடும்.
3.மனிதர்களுக்குள் இது ஊடுருவினால் உருவம் இருக்கும் ஆனால் அவருடைய சிந்தனைகள் குலைந்து விடும் உடலை மாற்றிவிடும்

அது பரிசுத்தமாக எண்ணிலடங்காத வருடங்கள் ஆகிவிடும்.

அத்தகைய சூழ்நிலையில் தான் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆகவே இந்த உடலில் நல்ல நினைவிருக்கும் பொழுதே நாம் எதைப் பெற வேண்டும் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

நான் சொல்வது வெறும் சொல்லாகவோ எளிதாகவோ தெரியலாம். யாம் ஏற்கனவே சொன்னது அனைத்துமே என்று விஞ்ஞானிகள் நிரூபித்துக் கொண்டுதான் உள்ளார்கள்.

சூரியனுக்குள் எரிமலைகள் உருவாகும் என்று முன்பே சொல்லியிருந்தோம். இப்போது அடிக்கடி எரிமலைகள் சூரியனில் உருவாகி அது கக்கிக் கொண்டிருக்கிறது என்று சொல்கிறார்கள்.

இது பரவப் பரவ பூமியில் இயங்கக்கூடிய கம்ப்யூட்டர்கள் இயங்காத நிலையில் ஆகிவிடும்.
1.அதைப் போன்று தான் மனிதனுடைய உணர்வின் எண்ணங்கள்.
2.உணர்வுகள் அழுத்தம் அதிகமானால் மனிதனுடைய செயல்கள் மாற்றம் அடைந்து விடும்.

உயிர் எலக்ட்ரிக் நாம் எடுக்கும் உணர்வுகள் அனைத்தும் எலக்ட்ரானிக் ஜீவ அணுக்களாக மாற்றுகின்றது… அந்த உணர்வின் செயலாகத் தான் கம்ப்யூட்டர் இயந்திரம் இயக்குகின்றது உணர்வின் உணர்ச்சிகள் அதன் வழியே இயக்குகின்றது

ஆகவே சற்று சிந்தித்துப் பாருங்கள்…!

1.நல்ல நினைவு இருக்கும் போதே அருள் மகரிஷிகள் உணர்வைப் பற்று கொள்ளுங்கள்.
2.பகைமை உணர்வுகளை அகற்றிப் பழகுங்கள்
3.அசுர உணர்வுகள் பரவாது அருள் ஞானிகள் உணர்வு கொண்டு நம்மை பாதுகாத்திடும் நிலையாகச் செயல்படுத்த வேண்டும்.

துருவ நட்சத்திரம் இதையெல்லாம் வென்றது. அதை எடுத்து நமக்குள் வளர்த்து இந்த உலகம் முழுவதும் பரவச் செய்து எல்லோரையும் காக்கக்கூடிய சக்தியாக நாம் செயல்படுத்துவோம்.

ஆரம்பத்திலே சூரியனைப் பார்த்து தியானிக்கும்படி சொல்லி இருந்தோம். ஆனால் சூரியன் பாழடைந்து அதற்குள் எரிமலைகள் உருவாகத் தொடங்கும் பொழுது அதை நிறுத்தி… யாரும் சூரியனைப் பார்க்க வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்

ஏனென்றால் அதில் உருவாக்கும் கசிவுகளை நாம் நுகர்ந்தால் அசுர உணர்வு நம்மையும் இயக்கிவிடும். ஆனால் இதையெல்லாம் வென்றது துருவ நட்சத்திரம்
1.அந்த துருவ நட்சத்திரத்தின் சக்தியைத் தான் இப்பொழுது எடுக்க உங்களுக்கு பயிற்சி கொடுக்கின்றோம்
2.அதை எடுத்து வளர்த்து அனைவரையும் காத்திடும் சக்தியாக நீங்கள் செயல்படுத்துங்கள்.

உணர்வுகளின் கலவைகளையும் அது நம்மை இயக்குவதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்

உணர்வுகளின் கலவைகளையும் அது நம்மை இயக்குவதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்

 

உதாரணமாக ஒரு மனிதன் கோபமாகப் பேசுகிறான் என்றால்… அவனுக்குள் விளைந்த கோபமான உணர்வைச் சூரியனின் காந்த சக்தி கவருமே என்றால் அதன் உணர்வின் தன்மையை மற்றொரு மனிதன் நுகர்ந்தால்… அந்த உணர்ச்சியின் தன்மை அவனுக்குள் வந்து பெண் சக்தி என்ற நிலைகள் “காளியாக” மாறுகின்றது.

உயிரிலே பட்டு அந்த உணர்ச்சிகள் உணர்ச்சியின் வேகங்கள் வரும் பொழுது அந்த எண்ணங்கள் வருகின்றது.

ஆக… கண் கொண்டு ஒருவர் தவறு செய்யும் உணர்வினைக் கண் கருவிழி பதிவாக்கித் தன் உடலுக்குள் வைத்துக் கொண்ட பின் இந்த உணர்வுகள் உயிரிலே பட்ட பின் இந்த எண்ணங்கள் வருகின்றது.

அந்த எண்ணங்கள் வரும் பொழுது தான்
1.கோபத்தின் நிலை கொண்டு இந்த உணர்வுகள் இவன் எப்படிக் கோபப்பட்டானோ
2.அதே மாதிரி இந்த உணர்வுகளைத் தூண்டச் செய்து அந்த உணர்வின் அறிவாக அங்கே இயக்குகின்றது.

ஆனால் அவன் நுகர்ந்த உணர்வுகள் காளியாகி உடலான “சிவன் ருத்ர தாண்டவமாக” அந்த உணர்ச்சிக்கொப்ப உடலின் அங்கங்களும் அசைவுகளும் வருகின்றது.

அதே சமயத்தில் மகிழ்ச்சி பெறும் உணர்வுகளை நமக்குள் எடுத்துக் கொண்டால் மகிழ்ச்சியான எண்ணங்களைத் தோற்றுவித்து அரவணைக்கும் தன்மை வருகின்றது.

மகிழ்ச்சி பெறும் உணர்வை ஒரு மனிதன் வெளிப்படுத்துகின்றான் என்றால்… கண்ணில் உள்ள கருவிழி அந்த மகிழ்ச்சி பெறும் மனிதனைப் பதிவாக்கி விட்டால்
1.கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலன் சத்தியபாமா அவன் மகிழ்ச்சி பெறும் உணர்வினை நாம் நுகரப்படும் பொழுது
2.உயிரிலே பட்டபின் இனிமையான நாதங்களாக வாசிக்கின்றது.

உதாரணமாக நான் உபதேசித்துக் கொண்டிருக்கும் பொழுது ஒரு நாய் தனது நிலைகளுக்கொப்ப குரைக்கப்படும் பொழுது “இடைமறித்தால்” எப்படி வருகின்றது…?

1.உபதேசத்தைக் கூர்ந்து கேட்க வேண்டும் என்ற எண்ணமும்
2.நாய் குரைத்து அதைக் கேட்க விடாது இப்போது தடைப்படுத்துகிறதே…! என்ற உணர்வும் இந்த இரண்டும் கலந்த எண்ணங்களாக நமக்கு வருகின்றது.

ஆகவே நாம் நுகரும் உணர்வுகள் எதுவோ இது கலவையின் உணர்வின் தன்மையாக அணுவாக உருவாக்குவது இந்திரீகம் என்பது. ஆகவே இந்த உடலில் இந்திரலோகம் என்று அதைக் காரணப் பேர் வைத்து அழைத்தார்கள்.

நல்ல உணர்வுகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் பொழுது இன்னொரு எதிர்மறையான உணர்வு இரண்டும் கலக்கப்படும் பொழுது
1.நமது உயிர் இதனை நன்மை என்று கருதினாலும் இந்த உணர்ச்சிகள் நமக்குள் அதன் மீது “வெறுப்பான உணர்வுகளும்” கலக்கின்றது.
2.வெறுப்பு கலந்த பின் நம் உடலுக்குள் அது இந்திரீகமாக மாறுகின்றது
3.சாமி நன்றாக பேசிக் கொண்டிருந்தார்… இந்த நாய் குரைத்தது கேட்க முடியாமல் போய்விட்டது…! என்று திரும்பத் திரும்ப எண்ணினால்
4.இந்த உணர்வின் “அதிர்வுகள்” அடுத்தாற் போல் அந்த அணுவின் தன்மை அடைகின்றது.

நாம் நல்ல நிலைகளைச் செயல்படுத்தி வந்தாலும் இதே குணங்கள் என்ன செய்யும்…?

கண்ணால் பார்க்கப்பட்டது ஹரி கிருஷ்ணா. சூரியன் ஹரி…! அந்த உணர்வின் தன்மை தனக்குள் பதிவாகிய நிலைகள் வந்தாலும்… செவி வழி கொண்டு உணர்வின் தன்மை வரும் பொழுது… நினைவு அதன் பால் கவர்ந்து இந்த உணர்வின் தன்மை தனக்குள் எடுத்து “இரண்டும் கலந்து” அது இந்திரீகமாக மாறுகின்றது.

அவ்வாறு இந்திரீகமாக மாறினால் அதன் உணர்வின் தன்மை மீண்டும்… “சாமி அன்றைக்குச் சொல்லிக் கொண்டிருந்தார்… அதைக் கேட்க விடாது நாய் குரைத்துக் கொண்டே இருந்தது…” என்ற அந்த உணர்வும் கலந்து கலந்து இதன் அணுவின் தன்மையாக விளையும் தன்மை வந்து விடுகின்றது.

அப்படிப்பட்ட அணுத்தன்மை அடைந்து விட்டால் பிரம்மா…! நான் சொன்ன உணர்வும் நாய் குரைத்த உணர்வுகளும் கலக்கப்பட்டு அந்த உணர்வின் இயக்கமாக அணுவின் தன்மை அதையே உணவாக எடுத்து நமக்குள் இந்திரலோகத்தில் சேர்கின்றது.
1.நல்ல கருத்துக்களைக் கேட்க விரும்பினோம்
2.இடைமறித்து நாய் குரைத்துத் தடுத்தது என்ற எண்ணங்களும் வரும்.

இதே போன்று நீங்கள் யாரிடமும் எடுத்து இதைச் சொல்லும் பொழுது நல்ல செயல்களை செய்தாலும் அடுத்து எவராவது இடைமறித்தால் தாங்கும் நிலை இல்லாது “அவர் மீது வெறுப்பின் உணர்வு கொண்டு” நல்ல வார்த்தை இல்லாதபடி நம்முடைய சொல்லும் சொல்ல வேண்டி வரும்.

ஆக மையமாக இருந்து… சொல்வதைக் கேட்டாலும் அவருக்குள் என்ன இப்படிப் பேசுகின்றார்…? என்று வெறுப்பின் தன்மை வரும். ஆனால் நாம் தவறு செய்யவில்லை.

சந்தர்ப்பம்…!
1.உணர்ச்சியின் தன்மை செவி வழி உந்தி
2.கண் வழி அந்த உணர்வினை நுகரும் தன்மையும்
3.நுகர்ந்த உணர்வு உயிரின் தன்மை கொண்டு உணர்ச்சிகளின் தன்மை உடலை இயக்குவதும்
4.அதற்குள் எண்ணம் சொல் செயல் என்ற நிலைகளை எப்படி உருவாக்குகின்றது…? என்பதனை
5.நமது குருநாதர் ஒவ்வொரு நிலைகளிலும் அனுபவரீதியிலே எம்மை அறியும்படி செய்தார்.

தன்னைத்தானே அழிக்கப் பார்க்கும் “அழிவு நிலைக்கு ஏன் செல்ல வேண்டும்…?”

தன்னைத்தானே அழிக்கப் பார்க்கும் “அழிவு நிலைக்கு ஏன் செல்ல வேண்டும்…?”

 

ஜீவனுள்ள மண்டலம் ஜீவனற்ற மண்டலம் என்று இரண்டு நிலை பெற்ற மண்டலங்கள் பல சுற்றி கொண்டுள்ளன. ஜீவனுள்ள மண்டலங்களைப் பகர்ந்துள்ளேன் பல நிலையில்.

ஜீவனற்ற மண்டலம் எந்நிலையில் வந்தது…? அஜ்ஜீவனற்ற மண்டலங்களில் ஒலி ஒளி காற்று நீர் மற்ற ஜீவராசிகள் எவையுமே அந்நிலையில் இல்லை.

வெறும் கல்லும் மண்ணும் கலந்த பெரும் பெரும் கோளங்களாக இருண்ட நிலைகள் கொண்டு அந்தரத்தில் அப்படியே நிற்கும் நிலையில் பல மண்டலங்கள் உள்ளன.
1.அம்மண்டலங்கள் மற்ற மண்டலங்களுடன் மோதும் தன்மையும் இல்லை
2.சூரியன் தன்னுள் அதை ஈர்க்கும் தன்மையும் அதற்கு இல்லை… ஜீவனே இல்லாமல் உள்ளன அம்மண்டலங்கள்.
3.வளர்ச்சியும் இல்லை குறைவும் இல்லை…
4.எந்த நிலையில் அது பிற மண்டலத்தில் இருந்து ஜீவன் இல்லாத நிலையில் உதிர்ந்ததுவோ
5.அதே நிலையில் அந்த நிலை கொண்டே அது உள்ளது… அம் மண்டலங்களுக்கு ஒலியும் இல்லை.

இப்பொழுது பூமி சுற்றும் வேகத்தில் ஓ…ம் ஓ…ம் என்ற ஒரு நிலை கொண்ட நாதத்தில் சுற்றிக் கொண்டுள்ளது. அந்நாதத்திற்குத் தகுந்த மணங்களைத் தான் நாம் பெறுகின்றோம்.

நம் பூமிக்கு மேல் பெரிய பூமியான வியாழனின் நாதம் வேறுபடுகின்றது. நம்மைக் காட்டிலும் சிறிய மண்டலமான சந்திரன் செவ்வாய் இப்படிப் பல மண்டலங்களின் நாதமும் வேறுபட்டுத் தான் உள்ளது.

அதனதன் ஈர்ப்புத் தன்மையைக் கொண்டும் அவை சுற்றும் நிலையைக் கொண்டும் அவற்றின் நாதம் வேறுபடுகின்றது.
1.சூரியனின் வேகம் வெகு துரிதமாக உள்ளதால் அதனுடைய வேகத்தைக் கொண்டு
2.அதனுடைய ஓங்கார இசை பெரும் ஓசையான “ஓ-ஓ…” என்றே தான் அதுவும் சுற்றுகின்றது.

இம்மண்டலங்களின் ஒவ்வொன்றின் நிலையையும் ஊன்றிப் பார்த்தால் பல உண்மை நிலைகளை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ளலாம்.

இப்பொழுது இப்பாடநிலையில் வரும் மண்டலங்களின் தன்மையை வைத்து இதைப் படித்திடும் ஒவ்வொருவரின் நிலைக்கும்
1.அவரவர்களின் நிலைக்கு ஏற்ப எண்ணங்கள் தோன்றி இந்நிலையின் தத்துவம் உண்மையா…? என்ற வினாவும் எழுந்திடலாம்.
2.இந்நிலை கொண்ட வினா எழும்பத்தான் இப்பாட நிலையே வந்துள்ளது.

கண்டார் விண்டதில்லை விண்டார் கண்டதில்லை என்று உரைப்பர் நம் முன்னோர். நாம் நம் ஜெப அருளினால் கண்டுள்ளோம் இவ்வுண்மையை. நாம் அறியா உண்மை பலவும் உள்ளன.

இவ்வுலகினில் உதித்துள்ள மனித உயிரணுக்கள் எல்லாம் தாம் செய்யும் ஜெப நிலையால்
1.நாம் வேறல்ல இவ்வுலகம் வேறல்ல இவ்வுலகைச் சுற்றியுள்ள பிற மண்டலங்கள் வேறல்ல. தனித்து நிற்பவை எவையும் இல்லை.
2.எல்லாவற்றிலுமே எல்லாமாகக் கலந்துள்ள நாம்… நம் உயிராத்மாவை பெரும் சக்தியுள்ளதாக ஆக்கி… சகல நிலையையும் ஈர்த்தெடுத்து அறிந்திடலாம்.
3.இவ்வுலகத்தின் உண்மை மட்டுமல்ல பல மண்டலங்களின் நிலையையும் அறிந்திடலாம்.

ஆனால் இன்று நம்மில் இருந்து நம்முடன் கலந்து பிறந்த பல ஜீவாத்மாக்கள் விஞ்ஞானத்தின் துணை கொண்டு தன்னைத்தானே அழிக்கும் நிலையில் ஒரு மண்டலத்தில் இருந்து இன்னொரு மண்டலத்திற்குச் செல்லும் நிலைக்காகப் பல நிலைகளை விஞ்ஞானத்தில் சென்று காண பல முயற்சிகளைச் செய்கிறார்கள்.

நல்வழிக்குச் செய்திடலாம். ஆனால் ஒருவர் செய்வதை ஒருவன் அழிப்பதற்காக இவ்வுலகின் காற்று மண்டலத்தில்… காற்று மண்டலத்திற்கு மேலும் பல நிலை கொண்ட விஷ ஊசிகளை (இராக்கெட்டுகளை) ஏவி விட்டிருக்கின்றார்கள்.

அவன் செய்து அனுப்பிய விஷ ஊசிகள் அவனைத் தாக்காத நிலை கொண்டு அவன் அனுப்பும் கூடுகளை அவ்விஷ ஊசிகள் வந்து தாக்கினாலும் பாதிக்காத தன்மையில் பல நிலைகளில் பறக்க விட்டுள்ளான்.

பிற மண்டலங்களின் நிலையை அறிந்திட தன்னைத்தானே அழித்து ஒருவனுக்கு மேல் பொறாமை கொண்டு விஞ்ஞானம் என்ற நிலையில் காலத்தைக் கடத்திக் கொண்டு ஏனப்பா அந்த நிலை பெற வேண்டும்…?

அன்றிலிருந்து இன்று வரை பல சித்தர்கள் பல உண்மை நிலைகளைத் தன் எண்ணத்திலும் தன் ஜெபத்திலும் ஈர்த்து எடுத்துத் தன் உடலுடனே பறந்து பல மண்டலங்களுக்குச் சென்று… பல ஆற்றல்களை அறிந்து அவர்கள் எழுதிய பல நூல்கள் தானப்பா… இன்றைய விஞ்ஞானிகள் ஆராயும் தன்மை கொண்டு நடத்தி வரும் நாடகங்கள் எல்லாம்.

அந்நாடகத்தின் நிலையினால் தன்னைத்தானே அழிக்கப் பார்க்கும் அழிவு நிலைக்கு ஏன் செல்ல வேண்டும்…?

உண்மை நிலைதனை ஜெப நிலை கொண்டு அறிந்திடத் தான் நாம் அறிந்த உண்மைகளை இந்த நூல் வழியில் ஒவ்வொருவரும் அறிந்து நல் ஜெபம் பெற்று நடத்திடத் தான் இப்பாட நிலை.

இப்பாட நிலையில் உள்ள கருத்துக்களின் உண்மையை அறிந்திட ஒவ்வொருவருமே ஜெபத்தில் இருந்து கண்டிடலாம்.
1.எல்லோருமே அச்சக்தியின் சக்திகள் தான்
2.ஜெபம் பெறும் நிலையில் இது உண்மைகளை எல்லோரும் அறிந்திடலாம்.

பிற ஆவிகளுக்கு அடிபணிந்து வாழ்கின்றதப்பா இன்றைய இவ்வுலகமே

பிற ஆவிகளுக்கு அடிபணிந்து வாழ்கின்றதப்பா இன்றைய இவ்வுலகமே

 

இவ்வுலக நிலையினிலே நாம் பெறும் சக்தி நிலை கொண்டே ஒவ்வொரு உயிரணுவின் நிலையும் மனிதர்களின் நிலையும் உள்ளதுவே.

1.நாம் எந்த நிலையில் வசிக்கின்றோமோ அந்த நிலை கொண்ட பழக்க வழக்கங்களும் இந்நிலை கொண்ட சுவாச நிலையும்
2.ஒவ்வொரு தன்மையில் கூடி வசிக்கின்ற மனிதர்களின்
3/எண்ண நிலைகளும் உருவ அமைப்புகளும் எப்படி ஏறக்குறைய ஒன்று போல் உள்ளனவோ
4.அவற்றை ஒத்துத் தான் அவரவர்கள் எடுக்கும் எண்ண நிலையும் சுவாச நிலையும் உள்ளன.

இன்று உலகில் ஒவ்வொரு பாகத்திலும் வசிக்கின்ற மக்களின் எண்ணம் வாழ்க்கை முறை இதைப் பொறுத்து அங்காங்கு வாழும் மக்களின் வாழும் வாழ்ந்திட்ட காலத்தில்
1.அவர்கள் எந்த நிலை கொண்ட சுவாச நிலையில் வாழ்ந்தார்களோ அந்த நிலைகொண்டே
2.அவர்கள் ஆவி பிரிந்து அந்தந்த நிலையில் அவ்வாவிகள் சுற்றிக் கொண்டே உள்ளன.

இந்தியா என்று பெயர் வைத்துள்ள இந்தத் தேசத்தில் தெய்வப்பற்றும் ஒற்றுமைப் பற்றும் கொண்ட கூட்டு நிலை கொண்ட குடும்ப நிலைகளும்… அன்று வாழ்ந்த சித்தர்களின் நிலையினால் இங்கு ஆண்டவன் என்ற பக்தியை மக்களின் மனதில் பல ரூபம் கொண்ட கல்களிலே வடித்து உணர்த்திச் சென்ற நிலைதனிலே… இங்கு வாழ்ந்த மக்களின் எண்ணம் எல்லாம் ஏறக்குறைய ஒன்றுபோல் சுற்றிக் கொண்டுள்ளதினால்… அத்தெய்வத்தையே கல்லின் ரூபத்தில் பக்தி கொண்டு வணங்கிய நிலை கொண்டு… இங்கு வாழ்ந்த மக்கள் அவரவர்கள் வாழ்ந்த காலத்தில் எடுத்த சுவாசத்தையும் எண்ணத்தையும் கொண்டே… அவர்கள் உடலை விட்டு ஆவி பிரிந்து சென்ற பிறகும் அந்நிலையிலேயே அவ்வாவிகள் சுற்றிக் கொண்டுள்ளன.

தன் சுவாச நிலைக்கு ஏற்ப அந்த நிலை கொண்டு தான் இங்குள்ள மக்களின் மனோநிலையும் தெய்வ பக்தியும்… தன் எண்ணத்திற்கு உகந்த நிலை கொண்டு இங்கு சுற்றியுள்ள ஆவிகள் கோவிலுக்குச் சென்று வணங்கிடும் நிலையில் உள்ளவர்களின் நிலையில்… நிலையில் என்னும் பொழுது
1.அவ்வாவி அவர்களின் உடலுக்குள் சென்று சில நிலைகளைச் சொல்லுவதும்
2.சாமி வந்து வாக்குச் சொல்கிறது என்பதும் அருள் வந்து ஆடுவதும் எல்லாம் இந்நிலை கொண்ட இந்நாட்டில் தான்.

நம்மை நம் முன்னோர்கள் நடத்திச் சென்ற பாஷையில் வந்ததுவே இந்நிலை இந்நாட்டினிலே. இந்த நிலை ஒவ்வொரு நாட்டிலும் வேறுபட்ட நிலையில் உள்ளது.

அங்குள்ள மக்களின் எண்ண நிலைகளும் வாழ்ந்த நிலைகளும் எத்தன்மையில் அங்குள்ளனவோ தன் நிலை கொண்ட வாழ்க்கை வாழ்ந்த நாட்டில்… பக்தி தெய்வப்பற்று என்ற நிலைகளை எல்லாம் எந்தெந்த நிலை கொண்டு அங்குள்ள மக்கள் வழி நடத்திச் சென்றார்களோ… அந்தந்த நிலை கொண்டு தான் அங்கு வாழ்ந்தவர்களின் ஆத்மாக்கள் அவர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்றன.

அந்த நிலைகொண்டே அது சுற்றிக் கொண்டுள்ள நிலையில் தன் எண்ணத்திற்கும் செயலுக்கும் உடைய உடல்களை ஏற்று வருகின்றது அங்கங்கு உள்ள நிலை.

பக்தி என்னும் நிலையில் இங்கு ஏன் இந்த நிலை…? இங்கு மட்டும்தான் ஆண்டவன் உள்ளானா…? இங்கு தான் அருள் வருமா…? ஆண்டவன் எந்த நிலையில் இங்கு அருள் தருகின்றான்…? என்றெல்லாம் இங்கு மற்ற பாகங்களின் உள்ளவர்களின் எண்ணத்திலே.

இங்கு ஆண்டவனின் நிலை நம் சித்தர்கள் நமக்கு உணர்த்திய நிலையை நாம் ஏற்றுக் கொண்ட நிலை கொண்டு வந்ததுவே இந்நிலை.

இன்னும் பல பாகங்களில் பல நிலை கொண்டு ஆண்டவனை எண்ணி பல வழிகளில் வணங்குகிறார்கள்.
1.அவர்களெல்லாம் எந்த நிலையில் நம் ஆண்டவனின் அருள் வருகிறது…? என்ற
2.புரியாத நிலை கொண்டு வணங்குகிறார்கள்.

இன்று இவ்வுலகினில் எல்லாப் பாகங்களிலுமே தன்னைத்தான் நம்பாமல் ஜோசியம் என்ற நிலையில் நம்பி வாழுகின்றார்கள். அந்த நிலையில் எல்லாம் யார் வந்து சொல்கிறார்கள் என்று உணராமல் “பல ஆவிகளின் தொடர்புடன்” தன்னைத்தான் நம்பாமல் பிற ஆவிகளுக்கு அடிபணிந்து வாழ்கின்றதப்பா இன்றைய இவ்வுலகமே.

ஆவியின் நிலை எந்த நிலையில் தன் எண்ணத்தை ஈடேற்றிக் கொள்ளலாம் என்று சுற்றிக் கொண்டுள்ளது.
1.அந்நிலைக்கே அடிபணிகின்றான் ஆண்டவனின் ரூபமாக
2.அவ்வாவியையே வணங்கி இன்றைய மனிதன் வாழுகின்றான்.

எந்த நிலையில் வாழ்ந்தால் என்ன…? அவ்வாவியே வந்து நமக்கு நல் உபதேசம் அளிக்கும் பொழுது பல நன்மைகளை நமக்கு அது செய்யும் பொழுது நாம் ஏன் அதை ஏற்கக் கூடாது…? என்று எண்ணிடலாம் எல்லோரும்.

ஆவிகளின் நிலை எல்லாம் எம் மனிதன் மேல் சென்று அதன் காரியத்தைச் செலுத்துகின்றதோ அதே நிலையில் அம் மனிதன் உள்ள நாள் வரை தான் அது மனிதனுக்கு உதவி செய்திடும்.

அதன் எண்ணமும் அது ஏற்றிருக்கும் மனிதனின் எண்ணமும் மாறுபடும் பொழுது… எந்த நிலை கொண்டெல்லாம் அது மனிதனுக்கு உதவி வந்ததோ அதற்கு மேல் தீமை செய்ய வல்லது அவ்வாவிகளின் நிலை எல்லாம்.

இதிலிருந்து மனிதன் மீள்வதற்கு…
1.தன் எண்ணத்தையும் தன் செயலையும் தன்னைத்தான் நம்பும் நிலையையும்
2.தன்னுள் எந்தத் தீய சக்திகளுக்கும் இடம் தந்திடாமல்
3.தன் உணர்வின் கோபத்தையும் அச்சத்தையும் அகற்றித் தன் நிலையைச் சமமாக்கி வாழ்ந்திடும் நிலையில்
4.அவன் எடுக்கும் எண்ணத்தையும் சுவாசத்தையும் கொண்டே நல் நிலை பெற்று வாழ்ந்திட வேண்டும்.

பூமியில் மனிதராகப் பிறவி எடுத்த உயிராத்மாக்களின் நிலையெல்லாம் ஒரே ஆத்மாவைக் கொண்டு இவ் உடலில் வாழ்ந்திடவில்லை. பல அணுக்களின் நிலை எல்லாம் மனிதர்களின் நிலைக்கு வந்து தாக்கித்தான் இம்மனிதன் வாழ்கின்றான்.

ஆகவே… நல் உணர்வை எடுங்கள்…!

இவ்வுலகுடனே மட்டும் நாம் வாழவில்லை. இவ்வுலகைச் சுற்றியுள்ள இவ்வுலகில் தொடர்புடைய 48 மண்டலங்களுடன் அம்மண்டலங்களுக்குத் தொடர்புடைய பல நிலை கொண்ட மண்டலங்களின் தொடர்புடனும் வாழ்கின்றோம் என்பதனை உணர்ந்து…
1.நாம் இந்நிலை கொண்டு வாழ்வதற்கு
2.எந்தெந்த நிலையில் இருந்தெல்லாம் நமக்குச் சக்தி கிடைக்கிறது…? என்பதனை உணர்ந்து வாழ்ந்திட வேண்டும்.

மனிதன் ஆறாவது அறிவிலிருந்து ஏழாவது நிலைக்குத் தான் செல்ல வேண்டும்… ஐந்து அறிவுக்கல்ல…!

மனிதன் ஆறாவது அறிவிலிருந்து ஏழாவது நிலைக்குத் தான் செல்ல வேண்டும்… ஐந்து அறிவுக்கல்ல…!

ரிஷிகளுடன் இணைந்த நிலையில் சூட்சும உலகத்திற்குச் செல்லும் தன்மைக்கு வருவதற்குத் தான் இந்தப் போதனைகள் எல்லாம் இங்கே கொடுக்கப்படுகிறது.

மனிதச் சரீரத்தில் உள்ள பொழுது கோபம் குரோதம் கடும் விஷம் கலந்த சூட்சுமத்தன்மை இந்நிலை எல்லாம் மனதினைச் செலுத்திய மனிதர்கள் அவர்கள் உடலை விட்டு ஆவி பிரிந்த நிலையில்
1.அவர்கள் உடலுடன் உள்ள பொழுது எந்த நிலையில் சுவாசம் பெற்று சப்த அலைகளை வெளியிட்டார்களோ
2.அந்த நிலையிலேயே அவர்களின் ஆவியைச் சுற்றி அவர்கள் வெளியிட்ட சப்த அலைகளும் சுற்றிக் கொண்டே உள்ள தன்மையில்
3.அந்நிலையில் உள்ள மிருகத்தின் நிலையும் அம்மிருகம் எடுக்கும் சுவாச அலையும்
4.அம்மிருகத்தைச் சுற்றிக் கொண்டே உள்ள மிருகத்தின் சப்த அலையும் ஒரே தன்மையில் உள்ள பொழுது
5.ஒன்றை ஒன்று எதிர்ப்படும் தன்மையில் இரு சப்த அலைகளும் ஒன்றுபட்டு இம்மனிதனின் உயிரணு அந்த மிருகத்தின் உடலுடன் செல்கின்றது.

இந்நிலையில் அம்மிருகத்தின் ரத்த நாளங்களில் கலந்து மிருகத்தின் ஜனனத்திற்கும் இம்மனிதன் வருகின்றான். மிருகமாகப் பிறக்கும் தன்மைக்கு வந்து… மனிதன் மிருக நிலைக்கும் வருகின்றான் என்பதின் பொருள் இதுவே.

சில ஆவிகளின் நிலை மிருக உடலுக்கு வந்த பிறகு அம்மிருகத்தின் ஆயுட்காலம் முடிந்து அந்த மிருகம் இறக்கும் வரை அவ்வுடலில் இருந்து வெளிப்படும் நிலையில் பிற ஒரு ஜென்மத்திற்கு மனிதச் சரீரம் எடுக்கும் தன்மை அற்று மிருக ஜனனத்திற்குத் தான் வரமுடிகிறது அவ்வாவியினால்.

ஆனால் மிருக உடலுக்குச் சென்ற உயிரணு ஏன் அந்த உடலில் இருந்து வெளிப்பட முடிந்திடாதா…? என்று எண்ணிடலாம்.

மிருக உடலுக்குச் சென்ற பிறகு மிருகத்தின் சுவாச நிலை மாறுபட்டால் தான் அவ்வாறு வெளிவர முடிந்திடும்.
1.மிருகத்தின் எண்ணம் ஒரே நிலையில் இருக்கும் போது
2.இந்த மனித உயிரணு எப்படி மீண்டும் வெளிவர முடிந்திடும்…?

ஆக்ரோஷம் கொண்ட இம்மனித ஆவிகள் எல்லாம் மிருகமாகவே தான் மிருகத்தின் சப்த அலையுடன் கலந்து மிருகமாகவே செல்கிறது என்பதல்ல.

மிருக சரீரத்திற்குள் சென்ற உயிரணுக்கள் அதே சரீரத்தில் அம்மிருகம் எடுத்த சுவாச நிலையையே தானும் பெறுவதால் அம்மிருகத்தின் உடல் பழுதுபட்டவுடன் இவ் உயிரணுக்களின் நிலை எல்லாம் புழுவாகின்றன.

சில உயிரணுக்கள் வெளிப்பட்டு அம்மிருகத்தின் உடலுடன் உள்ள நிலையில் எந்த நிலை கொண்ட சுவாச அலைகளைப் பெற்றதோ அதே நிலையில் தான் மிருக ஜனனத்திற்கு வருகிறது.

மனிதனின் உயிரணுக்கள் மட்டும் மிருகத்தின் சுவாச நிலைக்குச் செல்கிறது என்பதல்ல. மிருகத்தின் உயிரணுவும் மனிதனின் சரீரத்தில் வந்து தாக்கும் தன்மை உள்ளது.

இம்மனிதன் எடுக்கும் சுவாச நிலையில் மிருகத்தின் குணங்கள் பெற்று கோபம் வெறி குரோதம் இந்நிலை கொண்ட உணர்வுகளைப் பெற்ற மனிதர்களின் உடலில்
1.இவன் எடுக்கும் சுவாச நிலைக்கும் அம்மிருகத்தின் சுவாச நிலைக்கும் ஒன்று படும்பொழுது
2.மிருகத்தின் உயிரணு மனிதனின் உடலில் செல்லும் நிலையில் அம்மனிதனையே அவ்வுயிரணு மிருகமாக்கும் தன்மையில்
3.மனித உடலில் மிருக உயிரணுக்களின் தாக்குதலைப் பெற்று… மிருகத்தின் குணநிலைக்கு அம்மனிதனின் நிலையும் செல்வதனால்
4.அம்மனிதனின் நிலை மிருகத்தின் குணத்திலிருந்து மாறுபட முடியாமல்
5.மென்மேலும் விரோதத்தையும் வெறியையும் அதிகமாக்கி வாழும் நிலைக்குத்தான் மனிதனின் தன்மையும் வருகிறது.

அந்நிலையில் இருந்து மீண்டு… மனிதன் மனிதனாகவே வாழும் தன்மைக்கு வர அன்பு பாசம் என்ற சாந்தமான நிலையில்…
1.கோபம் துவேஷம் வஞ்சம் இப்படிப் பல கெட்ட குண நிலைகளைத் தன்னை விட்டகற்றி…
2.தனக்குள் அவ்வன்பே தெய்வமான… அன்பென்னும் தெய்வ சக்தியைப் பெற்று வாழ்ந்திடும் நிலையில்தான் மீண்டு வந்திட முடியும்.

சூரியனுக்குள் பரவிய நஞ்சினால் “இரு மடங்கு கரண்டை” அது உருவாக்கப் போகிறது

சூரியனுக்குள் பரவிய நஞ்சினால் “இரு மடங்கு கரண்டை” அது உருவாக்கப் போகிறது

 

இருபத்தி ஏழு நட்சத்திரங்கள் நுகரும் விஷத்தன்மையை சூரியன் தனக்கு அருகில் கொண்டு வரப்படும் பொழுது தனக்குள் விளைய வைத்த உணர்வின் வலுவால் எதிர்த்துத் தாக்கி வெப்பமாக்கி விஷத்தைப் பிரித்து அதற்குள் உண்டான சத்தை ஒளிக்கதிர்களாக மாற்றும் நிலை பெறுகின்றது.
1.விஷத்தைப் பிரித்து வெப்பமும் காந்தமும் உருவாக்கப்படுகிறது.
2.ஆனால் நகர்ந்து செல்லும் பொழுது முதலிலே நுகர்வது விஷத்தன்மையைத்தான்.
3.காரணம் அந்த விஷம் இயக்கச் சக்தியாக வருகின்றது
4.காந்தம் அரவணைக்கும் சக்தியாகவும் வருகின்றது வெப்பம் உருவாக்கும் சக்தியாகவும் உருவாக்குகின்றது.
5.அதன் வழியில் இந்தப் பிரபஞ்சத்திற்குள் சூரியனால் உருவாக்கப்பட்ட மனிதர்கள் தான் நாம்.
6.ஆனால் மனிதனால் உருவாக்கப்பட்ட நஞ்சுகள் அனைத்தும் சூரியனுக்குள்ளும் இன்று பரவிக் கொண்டுள்ளது.

காரணம்… மிக சக்தி வாய்ந்த விஷத்தன்மைகளை உருவாக்கத் தெரிந்து கொண்டான் மனிதன். அதை வைத்து மற்ற நாட்டை அழிக்க வேண்டும் என்ற உள்நோக்குடன் தான் அதைச் செயல்படுத்துகின்றான். “மற்றவர்களை அடிமைப்படுத்த வேண்டும்” என்று தான் விஞ்ஞான அறிவு கூறுகின்றது.

ஆனால் மெய்ஞான அறிவு விஷத்தை ஒடுக்கித் “தனக்குள் ஒளியின் அறிவாக வளர்க்க வேண்டும்…” என்று கூறுகின்றது. சற்று சிந்தித்துப் பாருங்கள்.
1.ஆக இன்று உலக நாடுகள் அனைத்துமே தன் நாட்டைக் காக்க வேண்டும் என்று செய்தாலும்
2.அவர்கள் நாட்டையும் அவரால் இன்று காக்க முடியவில்லை

உலகத்தையே அடிமையாக்கி தன் சொல்லுக்குக் கீழ் கொண்டு வர வேண்டும் என்று இன்றும் அமெரிக்கா சில செயல்களைச் செய்து கொண்டுதான் இருக்கின்றது.

மற்றவர்கள் யாரும் அவனை மீறி எதுவும் செய்யக்கூடாது. தானே அனைத்தும் செய்ய வேண்டும் என்று “வான மண்டலத்தையே நச்சுத் தன்மையாக்கி விட்டார்கள் அமெரிக்காவும் ரஷ்யாவும்…”

அவர்களைப் பின் தொடர்ந்த மற்ற நாடுகளும் வான மண்டலத்தை விஷத்தன்மை ஆக்கிக் கொண்டுள்ளார்கள்

1.அதனால் சூரியன் ஜீரணிக்கும் சக்தி இழந்து அந்த விஷத்தன்மைகளை சிறிதளவு தான் இப்போது மாற்றிக் கொண்டுள்ளது
2.விஷக் கதிர்கள் அதற்குள் தாக்கப்பட்டு நல்ல சக்திகளை உருவாக்கும் தகுதியை சூரியன் இழந்து கொண்டுள்ளது.

குருநாதர் இதைத் தெளிவாகக் காட்டுகின்றார்.

இப்படி உலகின் நிலைகள் இன்று எத்தனையோ வளர்ந்து விட்டது வளர்ந்து கொண்டே உள்ளது சிந்திக்கும் திறனை இழக்கச் செய்கின்றது… தன்னம்பிக்கை இழக்கச் செய்யும் பக்தி மார்க்கங்கள் ஏராளமாக வந்துவிட்டது.

அரசர்கள் வாழ்ந்த காலத்தில் உள்ளது போன்று… மனிதனை மனிதனாக வாழ விடாது ஆசையின் உணர்வுகள் தூண்டப்பட்டு அவ்வழியிலேயே வாழ்வோம் என்று உருவாக்கப்பட்டு விட்டது.

தான் எண்ணியது கிடைக்கவில்லை என்றால் வேதனைப்பட்டு அந்த நஞ்சை வளர்த்து நஞ்சு கொண்ட உணர்வின் அணுக்களாக மாற்றி மனிதனல்லாத உருவைப் பெறும் நிலையாக இன்று உருவாகிக் கொண்டுள்ளது. சற்று சிந்தித்துப் பாருங்கள்.
1.இதிலிருந்து விடுபட குரு காட்டிய அருள் வழியில்
2.தெளிந்த மனம் கொண்டு ஒவ்வொருவரும் அருள் வழியில் வளர வேண்டும்.

அருள் ஒளியின் உணர்வை வளர்த்துக் கொண்டால்… அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து… அங்கே நிலை கொண்டு பேரண்ட அகண்ட உலகில் உருப் பெறும் உணர்வினை ஒளியாக மாற்றி… என்றும் பேரின்ப்ப் பெரு வாழ்வாகவும்… மரணமில்லாப் பெருவாழ்வாகவும் வாழ்ந்திடவும் முடியும்

1.இதை நீங்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும்
2.இந்த உடலை விட்டு அகன்றால் அடுத்து மீண்டும் இன்னொரு உடல் பெறும் நிலையே இருக்கக் கூடாது

அப்படி நிலை பெற்றவர்கள் தான் சப்தரிஷி மண்டலங்களாக வாழ்கின்றார்கள்
1.அதனுடைய எல்லையை அடைவது தான்
2.நம்முடைய வாழ்க்கையின் லட்சியமாக இருத்தல் வேண்டும்.