பூமியில் ஏற்படும் பகல் இரவு… நான்கு பருவ கால மாற்றங்கள்

பூமியில் ஏற்படும் பகல் இரவு… நான்கு பருவ கால மாற்றங்கள்

 

இப்பூமியும் இப்பூமியைப் போன்ற இப்பூமியைச் சார்ந்த 48 மண்டலங்களும் நம் சூரியனின் குழந்தைகளான நம் மண்டலங்கள் சுற்றி ஓடும் விகித நிலைப்படுத்தி ஒரு வருடம் என்ற நிலையில் 365 நாள் விகிதக் கணக்குப்படுத்தியும் நான்கு வருடத்திற்கு ஒரு நாள் அதிகப்படுத்தி லீஃப் வருஷம் என்றும் சூரியனைச் சுற்றி ஓடும் நிலை உணர்ந்து இவ்வான சாஸ்திரத்தில் வருடம், நாள், வாரம் இப்படி நிலையுணர்ந்திடப் பல நிலைகளை இவ்வுலகின் நிலையில் உணர்த்தியுள்ளார்கள்.

இப்பூமிக்கும் நம் சூரியனுக்கும் உள்ள தொடர்பு நிலை எந்நிலை கொண்டுள்ளது…? காலங்களில் நான்கு வகைக் காலங்களும் ஒரு நாளில் காலை, பகல், இரவு என்ற மூன்று நிலைகளும் ஒவ்வொரு நொடியும் ஒரு நொடியைப் போலில்லாமல் இவ்வுலக ஓட்டமும் சூரியனின் ஓட்டமும் சுழன்று கொண்டே உள்ளன.

உதய காலத்தில் நாம் காணும் சூரியனின் விகித நிலை உருவமே பெரிதாகவும், பகல் ஏற ஏற நம் பூமிக்கு நேர் மையத்தில் சூரியனின் நிலையைக் காணும் பொழுது உதய காலத்தில் கண்டிட்ட சூரியனின் உருவ அமைப்பைவிட உச்சிக் காலத்தில் சிறிய கோளமாகவும் பகல் மாறி மாலை சூரியனின் அஸ்தமத்தில் உதய காலத்தில் கண்ட நிலைப்படி உருவ அமைப்புப் பெரிதாகவும் காண்கின்றோம்.

எந்நிலை கொண்டு…?

உதய காலத்தில் சூரியனின் நிலை நம் பூமியின் நிலைக்கும் இடைப்பட்ட தூரம் குறைவு. நமக்கு அருகாமையில் சூரியனின் நிலை உள்ளது.

ஒவ்வொரு நொடியும் உச்சிப்பகல் வருவதற்குள்
1.நம் பூமியின் ஓட்டமும் சூரியனின் ஓட்டமும் ஓடும் நிலையில்
2.“நாம் உள்ள இடத்தில்…” சூரியனின் நிலை நமக்கும் நேர் மேலே வரும் பொழுது
3.உதய காலத்திற்கும் பகல் உச்சி நேரத்திற்கும் “நம் பூமிக்குச் சூரியனின் தூர விகிதம் மிகவும் அதிகமாகி விடுகிறது…”

உதய கால தூர விகிதப்படி உச்சிக் காலத்தில் இருந்திட்டால்… நம் பூமி சுழற்சி வேகமும் சூரியனின் சுழற்சி வேகமும் சூரியனிலிருந்து வந்திடும் ஒளிக்கதிர்களின் வெப்பநிலை நம் பூமியின் நேர் மையத்தில் பட்டுப் “பூமியே வெடிப்பு நிலையில் சிதறுண்டிருக்கும்…”

உச்சி நிலையில் நம் பூமிக்கும் சூரியனின் நிலைக்கும் தூர விகிதம் அதிகப்படுவதினால் சூரியக் கோளின் உருவ அமைப்பைச் சிறிதாகக் காண்கின்றோம்.

பகல் மாறி மாலை வர வர நமக்கு அருகாமையில் சூரியனின் நிலை வருவதினால் மாலையிலும் இந்நிலை போன்ற சூரியனின் உருவ நிலையைப் பெரிதாகக் காண்கின்றோம்.

ஆனால் உதய காலத்தில் நமக்கு அருகாமையில் உள்ள சூரியனின் வெப்பநிலை நமக்குக் குறைந்தும் பகல் நேரத்தில் நம் பூமிக்கும் சூரியனின் நிலைக்கும் தூர விகிதம் நீண்டுள்ள நிலையில் வெப்பத்தை அதிகமாக எடுக்கின்றோம்/ எந்நிலை கொண்டு…?

நம் பூமிக்கு உள்ள நான்கு திசைகளில் வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு என்ற நிலையில்
1.வட துருவத்திலும் தென் துருவத்திலும் நம் பூமியின் அச்சாய் நிறைந்துள்ள
2.நம் பூமியின் பொக்கிஷக் கடல்களான அந் நீர்நிலைகளின் மேல் இவ்வுதய கால சூரிய அலைகளின் வெப்பம் பட்டு
3.அவ்வொளிக் கதிர்களின் எதிர் வீச்சின் சக்தி தான் காலையும் மாலையும் உள்ள கால நிலைகள்.

நம் பூமியின் இவ்வட துருவ தென் துருவ நிலைகளில் அமைந்துள்ள இக் கடல்களின் சக்தியினால்தான் நம் பூமியின் சக்தியே இந்நிலையில் அமைந்துள்ளது.

ஒவ்வொரு மண்டலத்தின் நிலையும் ஒவ்வொரு தன்மை கொண்ட சக்தி நிலையில் உருப்பெற்ற மண்டலமாய்ச் சுழல்கின்றது.

நம் பூமியின் இயற்கை தந்த பொக்கிஷ நிலைதான் இன்று நான்கு வகைக் காலங்களை அடைந்த நிலை.

சூரியனின் விகித தூரத்திற்கும் மற்ற மண்டலங்களில் இருந்தும் நம் பூமிக்கு ஏற்படும் ஈர்ப்பு சக்தியின் நிலைக்கொப்பத்தான் கோடை காலம், வசந்த காலம், இளவேனிற் காலம், குளிர் காலம் இப்படி நிலை பிரித்து நாமமிட்டு நாம் அழைக்கும் இக்காலங்கள்.

நம் பூமியின் வட துருவ தென் துருவ நீர்நிலைகளின் மேல் சூரியனின் தூர விகிதமும் நம் பூமிக்கு அருகாமையில் உள்ள சந்திரனின் தூர விகிதமும் உள்ள நிலையில் வட துருவ, தென் துருவ நீர்நிலைகளின் மேல் அம்மண்டலங்களில் இருந்து தாக்கிடும் அணு சக்திகளின் நிலை கொண்டுதான் இப்பூமிக்கு ஏற்படும் காற்று மண்டலங்களின் சக்தி நிலைக்கொப்ப நம் பூமியின் கால நிலைகள் மாறு கொள்ளுகின்றன.

ஒவ்வொரு நொடியும், இப்பூமி தோன்றிய நாள் தொட்டே மாற்றம் கொண்டேதான் சுழன்று கொண்டுள்ளது.

1.நொடிக்கும் குறைவான நிலையிலேயே ஒவ்வொரு நிலையும் மாறி மாறியேதான் இன்றளவும்
2.இனி நடந்திடும் பல ஆயிரம் கோடி ஆண்டுகளும்
3.இப்பூமியின் நிலையும் மற்ற எல்லா மண்டலங்களின் நிலையும் ஒரு நொடியைப் போல் ஒரு நொடி இல்லாமல் சுழன்றே ஓடிடும்.

நம்முடைய மோப்பம் எதிலே இருக்கிறது…?

நம்முடைய மோப்பம் எதிலே இருக்கிறது…?

 

அதை யாராவது நாம் சிந்திக்கின்றோமா என்றால் இல்லை. நன்றாக யோசனை செய்து பாருங்கள். கோவில் என்பது எவ்வளவு பெரிய புனிதமான இடம் அதே சமயத்தில்

கருப்பணசாமியைக் காட்டி அதன் பக்கத்தில் மோப்ப நாயை வைத்துள்ளார்கள். மோப்ப நாயை வைத்ததன் பொருள் என்ன…?

“எனக்கு இப்படி தவறு செய்தார்…” என்று மோப்பத்தைப் பிடிக்கின்றோம். அப்பொழுது தவறு செய்தான் என்று சொன்னவுடனே…
1.உதாரணமாக நாய் என்ன செய்கின்றது…? யார் வளர்க்கின்றார்களோ அவர்களைத் தான் பாதுகாக்கின்றது,
2.நாம் மோப்பம் பிடிப்பதே… “எனக்குத் தீங்கு செய்வார்கள்” என்று நினைத்து நுகர்ந்தவுடன் என்ன செய்கின்றது…?
3.நம் நல்ல குணங்கள் இருண்டு போகின்றது.

அந்த நேரத்தில் அவனுக்கு எப்படியும் தீங்கு செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றோம். தீங்கு செய்யக்கூடிய அந்த உணர்வுகள் நமக்குள் வருகின்றது..
1.அவன் நன்றாக இருந்தால் நமக்கு எப்படியும் கெடுதல் செய்வான் என்ற வகையில் நாம் நினைக்கின்றோம்… ஆயுதத்தை கையிலே கொடுக்கின்றார்கள்.
2.எதை…? அரிவாளைக் காட்டுகின்றார்கள்.
3.எங்கே…? எப்படியும் அவனிடம் இருந்து தப்புவதற்குத் தன்னைப் பாதுகாக்க வேண்டும் என்று அரிவாளை எடுக்கின்றான்.

ஆனால் அவன் செய்த தீங்கான உணர்வை நுகர்ந்து கொண்ட பின் என்ன செய்கின்றது…? எதை மோப்பம் பிடித்தோமோ அது நம் உடலுக்குள் வந்து அவன் செய்த தீங்கான எண்ணங்கள் நமக்குள் விளைகிறது. அது நம் நல்ல குணங்களைக் கொல்கின்றது.

நாம் நுகர்ந்தது நம் உடலுக்குள் சென்று நமக்குள் என்ன செய்கின்றது? அதற்கு நீ எப்படி நுகர வேண்டும்…? என்பதற்காக வேண்டி இப்படிப்பட்ட உருவங்களை வைத்துக் காட்டுகின்றார்கள்… நம் உடலுக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களைக் கொல்கின்றது என்று…!

ஏனென்றால் நாம் சுவாசித்த அந்த விஷமான உணர்வுகள் நம் நல்ல குணங்களைக் கொல்கிறது. அந்த இடத்தில் நாம் எதை எண்ண வேண்டும்…?

துருவ நட்சத்திரம் இந்த விஷத்தை நீக்கியது. இப்பொழுது உங்களிடம் அதைத்தான் பதிவு செய்கின்றேன்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று அதை நாம் நுகர வேண்டும்
2.அதை ஆசைப்பட்டு நுகர்ந்தவுடன் உயிரிலே படுகின்றதுல்… அருள் உணர்வுகள் தோன்றுகின்றது.
3.இரத்தத்தில் கலந்த பின் தீங்கு செய்வதை அது குறைக்கின்றது.
(தங்கத்தில் திரவகத்தை ஊற்றியவுடன் இரண்டற இணைந்திருக்கும் செம்பும் பித்தளையும் ஆவியாக மாறுவது போல்).

நாம் இதற்கு முன்னாடி வேதனை என்ற உணர்வுகள் இரத்தத்தில் கலந்திருந்தாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அடிக்கடி சேர்த்துக் கொண்டால் அது வீரியத் தன்மையைக் குறைத்து நல்லதாக மாற்றக்கூடிய சக்தி பெறுகின்றது. இதை உருவம் அமைத்து நமக்குக் காட்டுகின்றார்கள்.

கருப்பணசாமி கோவிலுக்குப் போய்… விவசாயத்தில் நல்ல வெள்ளாமை வந்தால் நான் உனக்கு ஆட்டைக் கொடுக்கின்றேன் கோழியைக் கொடுக்கின்றேன் என்று நேர்த்திக்கடன் வைத்து அதை வைத்துக் கும்பிட்டவுடன் ஜெயித்து விட்டால் கொடுக்கின்றார்கள்

ஜெயிக்கவில்லை என்றால் நேர்த்திக் கடனை மனதில் ஏற்றுக் கொண்டாய். ஆனால் நீ செய்யவில்லை அதனால் சாமி உனக்குத் தண்டனை கொடுக்கின்றது. என்று சொல்வார்கள்.

வியாபாரம் ஆரம்பித்தேன்… அவன் எனக்குத் தொல்லை கொடுத்து கொண்டு இருக்கிறான். நான் கடன் கொடுத்தேன் அவன் கொடுக்காமல் என்னை ஏமாற்றிக் கொண்டுள்ளான்…! என்று இந்த உணர்வுகளை எல்லாம் சாமியை நினைத்து என்ன செய்கின்றோம்…? நான் உனக்கு காணிக்கை கொடுக்கின்றேன், எனக்குப் பணம் வர வேண்டும் என்று.
1.பணம் வரவில்லை என்றால் கடைசியில் வேதனையைத் தான் எண்ணுகின்றோம்.
2.அப்பொழுது நாம் என்ன செய்கின்றோம்…? நம் உடலுக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களைக் கொல்கின்றோம்.

ஆனால் நல்ல குணங்களைக் காக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும். அவர்கள் சிந்தித்துச் செயல்படும் சக்தி பெற வேண்டும், அவர்கள் சொல் வைரத்தைப் போன்று சொல் ஜொலிக்க வேண்டும், அவர்கள் வாழ்க்கை ஜொலிக்க வேண்டும். நல்ல தெய்வப் பண்பும் தெய்வீக குணமும் அவர்கள் பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணினால் இந்த நல்ல சக்திகள் உங்கள் உடலில் விளைகிறது.

பிறரின் செயலைப் பார்க்கும் போது தீயது என்று காட்டுகின்றது இங்கே கோவிலுக்கு வந்தால் இந்த தெய்வம் நல்லது செய்யும் என்று காட்டுகின்றார்கள்.
1.எனவே அந்த நல்லதை எண்ணி நமக்குள் வளர்க்க வேண்டும்.
2.தெய்வ குணமும் நல்ல செயலும் நாம் பெற வேண்டும் என்று கோவிலில் எண்ணி எடுக்கச் சொல்கின்றார்கள்.

அதாவது கெட்டது வருவதையும் அதை நல்லதாக்க வேண்டிய வழியையும் காட்டி நமக்கு உண்மையை உணர்த்துகின்றார்கள்.

முதல் பாதம் இரண்டாம் பாதம்

முதல் பாதம் இரண்டாம் பாதம்

ஆதியில் இருந்து இன்றளவும் நமக்குக் கதைகளாகவும் பாடல்களாகவும் போதனை நிலைகளாகவும் இத்தெய்வீக நிலைகளை நமக்கு உணர்த்தியவர்கள் எல்லாம், சூட்சுமப்படுத்தி மறைக்கப்பட்டு அதிலுள்ள ஜீவநிலையை மக்களுக்குப் புரியும் நிலையில் கதைகள் ரூபத்திற்காக அன்று வெளியிட்ட முனிவர்களின் ரிஷிகளின் நிலையையே காலப்போக்கில் பல வடிவங்களைச் சேர்த்து “இன்றைய நிலைக்கு நம்பா நிலைப்படுத்தி விட்டார்கள்…”

அவரவர்கள் வாழும் நிலைப்படுத்தி அவரவர்களின் ஆத்மா பிரிந்து சென்ற பிறகு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாதமுண்டு.

முதல் பாதம் இரண்டாம் பாதம் இப்படி வரிசைப்படுத்தி எல்லாவற்றிற்கும் மேல்பாதம் சென்ற பிறகுதான் அவ் ஆண்டவனுடன் ஐக்கியப்பட்டிடலாம் என்ற நிலையில் உணர்த்தி வருகின்றனர்.

இப்பாத நிலைபெறும் நிலையென்ன…?

ஒவ்வொரு பாதத்தில் இருந்தும் முதல் படி, இரண்டாம் படி, மூன்றாம் படி இப்படிப் பள்ளியில் படித்திடும் நிலைக்கொப்ப கடைசிப் படியில் பட்டம் வாங்குவதைப் போலல்ல அவ்வாண்டவனிடம் ஐக்கியப்படும் நிலை.

எங்கும் நிறைந்துள்ள நம்முள்ளும் கலந்துள்ள நம் ஆத்மாண்டவனின் சக்தியை நமக்கு அளித்த இவ்வேழு பிறவியில் நாம் வாழ்ந்த நிலை கொண்டுதான்… நம் ஆத்மா பிரிந்து சென்ற பிறகு நமக்குகந்த அபிலாஷைப்படி இவ் ஏழு பிறப்புகளை நம் எண்ண நிலையில் நாம் மேம்படுத்திடாவிட்டால்… நம் ஆத்மாவிற்கு இம்மனித உடலை ஏற்கும் சக்தியிழந்து விடுகிறோம்.

இவ்வேழு பிறப்பிலும் நம் எண்ண நிலைக்கொப்ப நாம் சேமித்துச் செயல்படுத்திட்ட பல தீய சக்திகளின் அமில சக்தியின் நிலை, இவ் ஏழாம் பிறப்பில் அதன் துரித சக்தியினால் இவ் ஏழு பிறப்பில் சேமித்த நற்சக்திகளையும் இத்துரிதம் கொண்ட தீய சக்தியின் நிலையுடன் கலந்து, இவ் ஏழாம் பிறப்பில் நம் ஆத்மா பிரிந்து சென்ற பிறகு,
1.நம் எண்ண சக்தியை தீய சக்திக்கு அடிபணிந்திட்ட நிலையில் நாம் ஆவி உலகில் பல காலம் சஞ்சரிப்பதினால்
2.அந்நிலையில், அந்நிலையின் குண நிலைக்கொப்ப மிருகங்கள் உடலில் ஏறியும் அங்ககீனமுற்ற குண நிலையிலும் பிறப்பிற்கு வருகின்றோம்.

நாமாய்ச் சேமித்து வழி சென்றிடும் நிலைதான் இந்நிலை. முதல் பாதம் இரண்டாம் பாதம் என்பது எல்லாம் ஒவ்வோர் உடலை ஏற்று அவ் உடல்களில் நாம் ஏற்படுத்திடும் சக்தி நிலைக்கொப்பத்தான் பிறவி நிலை பெறுகின்றோம்.

சூட்சும நிலைக்குச் சென்ற நிலையில் இந்த ஞான சக்தியின் தொடர்பு நிலை கொண்டு
1/இவ்வுலக நிலையில் “பற்றற்ற நிலைப்படுத்தி…
2.பக்தி நிலையின் சித்து நிலை பெற்ற பிறகுதான்” சூட்சம நிலைக்கே சென்றிட முடியும்.

இவ்வாத்மாவுடன் கூடிய இவ்வுடலில் வாழும் காலத்திலேயே நம் எண்ணத்தில் தீய அணுக்களின் சக்தி நிலையை நாம் அடக்கிப் பழகிடல் வேண்டும்.

கோபத்தையும் குரோதத்தையும் சஞ்சலத்தையும் சலிப்பையும் நம் எண்ணத்தில் வளர விட்டு ஜெபம் கொண்டால் அப்பக்தியில் எப்பலனும் நம் ஆத்மாவிற்குக் கூடுவதில்லை.

நம் ஆத்மாவுடன் அன்பு கொண்ட நல்லுணர்வையே வளரவிட்டால் அன்றி ஞான சக்தியின் தொடர் அறிவதும் கடினமே.
1.முதலில் நம்மையே நாம் உணர்ந்து நற்சக்திகளின் வழித்தொடர் பெற்று
2.ஞான வழியின் தொடரினால் அத்தொடர் நிலை கொண்டோரின் தொடர் சக்தியையும் பெற்று
3.இவ்வழியிலேயே இவ்வழித் தொடரினை அறிந்து சப்தரிஷியின் நிலை பெற்று
4.ஒளியின் ஒளியாய்க் கலந்து செயல்படும் நிலைதான் அவ் ஆண்டவன் நிலை பெறுவது.

இந்நிலையை உணர்ந்திடத்தான் முதல் பாதம் இரண்டாம் பாதம் என்றெல்லாம் வழிப்படுத்தி உணர்த்தி உள்ளனர்.
1.ஆண்டவனேதான் நாம்; அவனே தான் மற்ற எல்லாமுமே.
2.யாரும் நமக்கு அப்பதவி நிலையை அளிப்பதல்ல.
3.நாமேதான் நம் பதவியை அடைந்திடல் வேண்டும்.

ஆவி உலகில் உள்ள ஆத்மாக்களினால்… தன் அறிவு நிலையை வளர்ச்சியில் செயல்படுத்திட முடிந்திடாது. ஆசை நிலை நல்லுணர்வுக்குத் தோன்றினாலும் பிறப்பெடுத்து இவ்வுடல் கொண்ட ஆத்ம வழியில் தான் எச்சக்தியின் தொடரையும் நாம் அறிந்திடல் முடிந்திடும்.

நாகரீகமில்லாது… ஆயிரம் காலம் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களும் நம் பூமியில் உண்டு

நாகரீகமில்லாது… ஆயிரம் காலம் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களும் நம் பூமியில் உண்டு

 

இன்றளவும் இப்பூமியின் நியதியையும் இம்மனித ஆத்மாக்களின் எண்ண நிலையையும் ஆவி உலக ஆத்மாக்களின் செயல் நிலையையும் இப்பூமியுடன் தொடர்பு கொண்ட மற்ற மண்டலங்களின் நிலையின் வழித்தொடரையும் சிறுகச் சிறுக உணர்த்தி வந்துள்ளேன்.

இனி நாம் எந்நிலை கொண்ட ஜெபத்தினால் இக்கலியின் பிடியிலிருந்து மீள முடியும்…? என்ற சக்தித் தொடரைத்தான் செயலாக்கிடல் வேண்டும்.

இப்பூமியில் நாம் இம்மனித ஆத்மாக்களாய் வாழ்ந்திட நம் ஆத்மாவுடன் பெற்ற சக்தியின் ஜெயத்தினால் தான் இன்று இந்நிலையில் வாழ்ந்திடும் இப்பாக்கியமே.

இப்பூமி தோன்றிப் பல கோடி ஆண்டுகளுக்குப் பிறகுதான்…
1.இப்பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மனித ஆத்மாவாய்
2.மனித உடல் கொண்ட ஜீவன்கள் வளர்ச்சி கொண்டு வாழ்ந்திட முடிந்தது.

இவ்வளர்ச்சி கொண்ட இம்மனித ஆத்மாக்களின் எண்ண செயல் நிலையும் இப்பூமியில் எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இல்லாமல்… இந்த ஞான வளர்ச்சி ஜீவ ஆத்மாக்களில் வாழ்ந்த ஆத்மாக்களே… இப்பூமியில் ஆயிரத்தில் ஒன்றிரண்டு விகித நிலைகளை விடக் குறைவுதான்.

நாகரீக வளர்ச்சி கொண்ட ஆத்மாக்கள் வாழ்ந்திடும் நிலைகள்தான் நமக்குத் தெரிகின்றது. இவ்வெண்ண நிலைக்கொப்ப ஆயுட்காலமும் இம்மனித ஆத்மாக்களின் நிலையில் ஒத்துள்ளன.

1.நாம் அறிந்திடாமல் “நமக்கும் மேல் நீடித்த ஆயுள் காலங்கள் கொண்ட” ஆத்ம உடல் கொண்ட மனிதர்கள் இப்பூமியில் பலர் உள்ளனர்.
2.ஆயிரம் காலங்களும் மாற்றுடல் ஏறாமல், ஒரே உடம்பில் வாழ்ந்திடும், எண்ண வளர்ச்சி நிலையில்லாத
3.ஒரே நிலை கொண்ட குறுகிய எண்ணத் தொடரில் ஆத்ம உடல் பிம்பங்கள் கொண்டவர்கள் பலர் உள்ளனர்.
4.இந்நாகரீக வளர்ச்சி கொண்ட மனித ஆத்மாக்களின் உடல் நிலையின் வளர்ச்சி நிலை அங்கில்லை.

இவ்வெண்ண வளர்ச்சியின் நிலையினால்தான் இம்மனித ஆத்மாக்களின் பெருக்கமே கூடிவிட்டது.

ஆனால் நாம் அறிந்திடாமல் இப் பூமியில் வாழ்ந்திடும் நாகரீக அறிவு வளர்ச்சியற்ற ஆத்ம உடல் கொண்ட மனிதர்களின் நிலை
1.நம் நிலைக்கு மாறுகொண்டதாக உள்ளது… மிருகங்களின் நிலைக்கொப்ப
2.ஆனால் அவ்வுடல்களில் எவ்விஷத்தன்மையும் பாய்ந்திடாது.

காடுகளில் பாம்பு, நரி இப்படி உள்ள மிருக இனங்கள் எப்படி வாழ்கின்றனவோ அப்படியே தன் இன வர்க்கத்தை “இவ்வெளியுலக பிடிக்குச் சிக்கா வண்ணம்” அவ்வுடல் ஆத்மாக்கள் கொண்டவர்கள் வாழ்கின்றனர்.

ஆனால் இவ்வெண்ணத் தொடரின் வழித்தொடரில் வந்த நம் மனித உடல்கள்தான் இக்கலியின் மாற்றத்தில் எண்ணச் சிதறல் பட்டும்… இவ்வியற்கையின் சீற்றத்திற்கு அடிபட்டும் மாளப்போகின்றன.

இவ்வெளி உலகப் பார்வையில் சிக்காமல் இப்பூமியில் மனித ஆத்மாவாய் பல ஆயிரம் ஆண்டுகளாக உள்ள மனித இன வர்க்கம் எல்லாம்… இக்கலியிலும் ஜீவன் பிரியாமல் வரப்போகும் கல்கியிலும் வழித்தொடர் பிடித்தேதான் வாழப் போகின்றனர்.
1.அவர்களின் எண்ணத்தில் இம்மாற்றமும் இவ்வியற்கையின் சீற்றத்தின் பயமும் எதுவும் தாக்கிடாது.
2.இன்றைய செயற்கையினால் ஏற்படுத்திய வெடிகுண்டுகளைப் பாய்ச்சினாலும் அவ் உடல்களை பாதிக்காது.

எண்ண நிலையேயில்லாமல் குறுகிய நோக்கில் தன்னைக் காத்து வழிவந்த ஆத்மாக்களுக்கு நம்மைக் காட்டிலும் வீரிய சக்தி பெற்றுள்ளபோது ஞான சக்தியின் செயலாக்கும் அறிவு வளர்ச்சி பெற்ற நாம்… நம் ஆத்மாவை விஷக்காற்றிலிருந்தும் விஷமாய் இவ்வுலக நிலையையே மாற்றம் கொள்ளும் இவ்வெண்ண நிலையின் தாக்குதலில் இருந்தும்…
1.எவ் அணு வெடிகள் நம் மேல் பாய்ந்தாலும் நம் உடலில் உள்ள அத்தீய சக்தியை ஏற்கா வண்ணமும்
2.நம்மை நாம் இவ்வொளி ஒளியாய் ஒளிர்ந்திடும் சக்தியில் நம் உடல் பிம்பத்தையும் நம் ஆத்மாவையும் செயலாக்கிடல் வேண்டும்.

இப்பூமியிலே நம்மைப் போன்ற ஆத்ம உடல் கொண்டு வாழ்ந்து வாழ்க்கையின் உன்னத சக்தி உணர்ந்து சூட்சும நிலை கொண்ட பல கோடி நற்பெரியோர்களின் ஆசையின் தொடர் நிலையை நம் ஆத்மாவின் சக்தியில் செயலாக்கிட… “அவர்களின் வழித்தொடர் நமக்கும் கிட்டும்…”

1.இவ்வுலகில் தோன்றிய ஆசை நிலையினால் இவ்வுலகைக் காத்திடும் ஆசையிள்
2.பல ஆத்மாக்களை இப்பக்தியின் ஈர்ப்பில் பல சித்தர்களும் பல ரிஷிகளும் செயல்படுத்தி வருகின்றனர்.

நம் எண்ண நிலையை ஒருநிலைப்படுத்தி இவ் ஓங்கார நாதம் கொண்ட ஒலியுடனே கலந்து… ஒளிபெறும் சக்தி நிலையை நாம் அடைந்திடும் வழித்தொடர் நிலையை அறிந்தே வாழ்ந்திடுவோம்.

பூமிக்கு அடுத்து மனிதன் எங்கே வாழப் போகின்றான்…?

பூமிக்கு அடுத்து மனிதன் எங்கே வாழப் போகின்றான்…?

 

கிறிஸ்து பிறந்தநாளில் வான மண்டலத்திலிருந்து “புதிய நட்சத்திரங்கள் தோன்றிப் பிரகாசமான ஒளி தந்ததை” அன்று வாழ்ந்து வந்தவர்களில் பலர் பார்த்ததாகவும் செப்புகின்றனர்.

வான மண்டலத்தில் தோன்றிய அந்நட்சத்திரத்தின் பிரகாசமான ஒளி எந்நிலையில் வந்தது…? அவற்றின் நிலை இப்பூமியின் மேல் எப்படிப் படிந்தது…? என்ற நிலையென்ன…?

இப்பூமி சுழலும் வேகத்தில், பால்வெளி மண்டலத்தில் சுற்றிக் கொண்டுள்ள எண்ணிலடங்கா பல நட்சத்திரங்களை இப்பூமி ஓடும் ஓட்டத்தில் காண்கின்றது.

இப்பூமி சுழன்று ஓடும் வேகத்தில் அங்கங்குள்ள அமில நிலையினால் உருப்பெற்ற இந்நட்சத்திர மண்டலங்கள் இப்பூமியின் ஈர்ப்பில் சிக்கி இப்பூமியுடன் வந்து சேருகின்றது.

நட்சத்திர மண்டலங்கள் அனைத்தும் கரையும் தன்மை கொண்ட அமில சக்தியினால் மின்னுவதுதான்.

1.நட்சத்திர மண்டலத்திற்கும், பால்வெளி மண்டலத்திற்கும், நம் பூமியின் சக்திக்கும்
2.நம் பூமி தொடர்புபடுத்தி நம் பூமி சுழன்று ஓடும் வேகத்தில் பால்வெளி மண்டலத்தில் நம் பூமியின் சக்தி மோதும் ஈர்ப்புத் தன்மை கொண்டு,
3.இப்பூமிக்குகந்த அமில சக்தியுடைய நட்சத்திர மண்டலமாய் இருந்திட்டால்
4.இப்பூமியின் பிடிப்புடன், அந்நட்சத்திர மண்டலத்தை இப்பால்வெளி மண்டலத்திலுள்ள காற்று மண்டலம் அதன் மேல் மோதி
5.இவ் ஈர்ப்பு சக்தியில் அந்நட்சத்திர மண்டலம், இச் சூழலும் வேகத்தில் பட்டு,
6.ஒன்றுக்கொன்று திடமாய் உறைந்த அமில சக்தியைக் கொண்ட அந்நட்சத்திர மண்டலமே
7.இப் பூமியின் ஈர்ப்பில் வந்து சிக்கியவுடன், கரைந்த அமிலமாய், இப்பூமியைச் சுற்றியுள்ள காற்று மண்டலத்தில் கலந்து விடுகின்றது.

இந்நிலைப்போல்தான் பல கோடி நட்சத்திர மண்டலங்களும்‌.

இப்பெரிய கோளங்கள் சுழன்று ஓடும் ஈர்ப்பில் அதனதன் அமில சக்தியின் தொடர் நிலைகொண்ட நட்சத்திர மண்டலங்களெல்லாம்… அது ஈர்த்து, செயல் கொண்ட சக்தியிழந்து, அந்நட்சத்திர மண்டலத்தின் ஆத்மாவும் பிரிந்து அதன் சக்தி அமிலம் மற்றப் பெரிய மண்டலங்களின் அமிலமுடன் அமிலமாய்க் கலந்து விடுகின்றது.

இப்பெரிய மண்டலங்களின் ஈர்ப்பில் சிக்காமல் இம் மண்டலத்துடன் தொடர்பு கொண்டே பல நட்சத்திர மண்டலங்கள் சுழன்று கொண்டே ஓடி வருகின்றன.

இன்னும் சில நட்சத்திர மண்டலங்கள்…
1.இப்பெரிய மண்டலங்கள் ஓடும் நிலையில் இவ்வமிலத்திற்கும்
2.நட்சத்திர மண்டலத்தின் அமிலத்திற்கும் சத்ரு மித்ரு நிலையாய் இருந்தால்
3.இம்மோதுண்ட நிலையில் எரி நட்சத்திரமாய் எரிந்து அந்நிலையிலேயே கருகிய நிலையில் செயலற்றதாகி விடுகின்றன.

இவ்வான மண்டலத்தில் இப்பால்வெளி மண்டலத்தில் நடந்திடும் சக்தி நிலை எண்ணிலடங்கா நிலை கொண்டவைகளாக உள்ளன.

இப்பூமியில் இருந்து வாழ்ந்து சாதாரண நிலையில் ஆயுள் பிரிந்த ஆத்மாக்கள் அனைத்துமே… இப்பூமியிலிருந்து இப்பூமியைச் சுற்றி படர்ந்துள்ள இக்காற்று மண்டலத்தில் ஒட்டிய நிலையிலேயே தான் இவ்வனைத்து ஆவி ஆத்மாக்களும் சுற்றிக்கொண்டே உள்ளன.

இப்பூமியில் சுவாசித்து வாழ்ந்ததின் நிலைக்கொப்ப உள்ள காற்று மண்டலத்துடனே தான் உடலை விட்டுப் பிரிந்த ஆவிகளின் சுவாச நிலையும் கலந்துள்ளது.

மற்ற மண்டலத்திற்குச் செல்லவோ… இப்பூமியின் காற்று மண்டலத்திற்கு மேல் உள்ள இயற்கை நிலையுடனோ.. இப்பூமியில் உயிரணுவாய் உருப்பெற்று வாழ்ந்து ஆவி உலகிற்கு வந்த உயிரணு உயிராத்மா எல்லாம் இவற்றின் நிலையில் படர்ந்தே தான் சுற்றிக் கொண்டிருக்க முடியும்.

வான மண்டலத்தில் நட்சத்திர மண்டலமாய் மின்னும் சக்திக்குக்கூட இப்பூமியில் உதித்த உயிரணுக்களினால் சுவாச நிலை மாறி வளர்ச்சி நிலை பெறும் நட்சத்திரமாய் மின்ன முடியாது.
ஆனால் இப்பூமியிலேயே பிறப்பில் வந்து இப்பிறப்பின் பயனைப் பெற்று சூட்சம நிலைகொண்ட ஆத்மாக்கள் பல இன்று நட்சத்திர மண்டலமாய் ஒளிர்ந்து வாழ்கின்றன.

இன்று இப்பூமியில் உள்ள நிலைபோல் மனித ஆத்மாக்களாய் வாழும் நிலை கொண்ட ஆத்மாக்கள் இப்பூமியைச் சார்ந்த இந்த 48 மண்டலங்களிலும் இல்லை என்று உணர்த்தினேன்.

இதுவே
1.இன்னும் இருபது முப்பது ஆண்டிற்குள் இப்பூமியில் உடலுடன் வாழ்ந்திடும் மனித ஆத்மாக்களே
2.இன்று செயற்கையுடன் ஆசை கொண்டு சந்திர மண்டலத்திற்குக் குடியேறும் நிலைக்காக ஆராயும் மனிதர்களே
3.வரப்போகும் இக்கலியின் மாற்றத்தினால்
4.இன்று இப்பூமியிலுள்ள சக்தியின் தொடர் சக்தியின் வளர்ச்சி நிலை பெற்ற சந்திரனில் வாழத்தான் போகின்றான்.

இன்று நாம் வாழும் இப்பூமியின் சக்தி நிலையின் வளர்ச்சி நிலையினால் வரப்போகும் கல்கியில் பெரும் மாற்றம் கொண்டதாக இயற்கை சக்தியே செயல் கொள்ளப் போகின்றது.

இம்மாற்றத்தின் அசைவினால் இப்பூமியுடன் பல நட்சத்திர மண்டலங்களின் குவிப்பு சக்தி சேரப் போகின்றது.

1.மனித ஆத்மாக்களினால் இக்கலியின் கொடுமையினால் “இவ்வியற்கையின் சக்தி கொண்ட இப்பூமியின் ஆத்மாவே”
2.இம்மனித ஆத்மாக்களின் அழிக்கும் எண்ண சக்தி கொண்ட ஆத்மாக்களைச் சீற்றம் கொண்டே மாற்றி
3.இன்னும் சக்தி கொண்ட பூமியாகத் தான் நம் பூமி சுழலப் போகின்றது.

இப்பூமியில் உதித்த மனித ஆத்மாவினால் தான் இக்கலியின் நிலையும் மாற்றம் கொள்ளப் போகின்றது.

“ஞான மகசூலாக நீங்கள் இருக்கின்றீர்கள்” என்பதை உணர்ந்து செயல்படுங்கள்

“ஞான மகசூலாக நீங்கள் இருக்கின்றீர்கள்” என்பதை உணர்ந்து செயல்படுங்கள்

 

இன்று இந்தப் பூமியில் மனிதனின் “தேவையின் வேகம்” விஞ்ஞானத்தின் அலையால் விஞ்ஞானத்துடனே ஓடிக் கொண்டுள்ளது.

உணர்வின் எண்ணச் சுழற்சியே விஞ்ஞானத்துடன் ஒன்றிய நிலையில்
1.தன் ஞானத்தை வளர்க்கக்கூடிய உணர்வு குண சித்து நிலையின் செயலுக்கு
2.நம் பூமியின் மனித ஆத்மாக்களின் ஈர்ப்பை எடுக்கக்கூடிய நிலையும்
3.சப்தரிஷிகளும் சித்தர்களும் அவர்கள் பெற்ற சக்திகளை மெய் ஞான விளைச்சலாக
4.இப்பூமியில் விளைய வைத்து அதன் மகசூலைப் பெருக்கச் செயல் கொல்கிறது.

ஆனால் இன்று இப்பூமியில் விஞ்ஞானத்தால் வாழ்ந்திட்ட செயற்கையின் செயல் குண உணர்வுடன் உள்ள நிலைகளை மெய் ஞானம் கொண்டு
1.எண்ணத்தால் மனித குணங்களைப் பக்தி ஞானம் என்ற உயர் குண உணர்வு எண்ண சுவாசம் எடுத்து
2.நல்ல உணர்வில் தான் (சப்தரிஷிகள்) பெற்ற சக்தி அலையைப் பயிர் செய்ய
3.அவ்வுணர்விற்கே மனித எண்ணங்களைத் திருப்ப முடியாமல் உள்ளது
4.விதியின் பயன்… விதியின் பயன்… என்று முன்னோர்கள் உணர்த்திய விதிச் செயலாகவே இந்தப் பூமி உள்ளது.

காந்த மின் அலையைப் பலவாகப் பல ரூபங்களில் பிரித்தெடுத்து விட்டான்… இன்னும் பிரித்து எடுக்கின்றான். உலகையே நிலை தடுமாற நிகழப் போகும் மாற்றத்தின் வித்தையும் ஊன்றிவிட்டான்.

இன்று இப்பூமியில் நடக்கும் சில இடங்களின் மாற்ற நிலைகளும்… போர்களும்…
1.இந்தப் பூமியின் காற்று மண்டலத்தையே முழுமையாக விஷமாக்கி விட்டது.
2.அதனால் உணவாக உட்கொள்ளும் பல பொருள்கள் விஷத் தன்மையில் கூடப் போகின்றன.

வரப் போகும் எதிர்கால முறை எல்லாமே விஞ்ஞான வளர்ச்சியில் பூமியின் இயற்கைச் சக்தியை உறிஞ்சி எடுத்ததனால் பூமியின் வலுக் குன்றி “தன் வலுவைத் தான் பெருக்க…” நிகழப் போகும் மாற்ற குணம் நெருங்கிவிட்டது.

சப்தரிஷிகளும் பல கோடிச் சித்தர்களும் தன் சக்தி உணர்வின் செயலைக் குன்றவிடாமல் வளர்த்துக் கொண்டிருந்தால் தான்
1.ஞானக் கரு உரு மனிதனை உண்டாக்கி
2.ஞானத்தால் வளரக்கூடிய சக்திகளின் வளர்ச்சிக்கே சக்தி கூடும்.

ஊரே உலகமே மாறு கொண்டு அழியும் தருவாயில் நம் உயிராத்மா மேலா…? நாம் மட்டும் இருந்தென்ன பயன்…? எல்லாமே விஷமாக உள்ள பொழுது ஜெப முறையில் எப்படித் தான் நாம் இருந்தாலும் விஷத்தின் சுழற்சியில் சிக்க்த்தானே வேண்டும்…! என்ற வினா எழும்பலாம்.

இம்மனித ஜீவ உடலில் உணர்வின் எண்ண அலையை நல்ல உரமான சக்தி உரத்தை இட்டு ஆத்ம பலம் என்னும் ஞான பலத்தைக் கூட்டி
1.ஒவ்வொரு அணுவையும் உணர்வின் எண்ணத்தால் ஒளியின் அணுவாக உணர்வாக்கி விட்டால்
2.விஷமுடன் நாம் இருந்தாலும் அந்த விஷம் நம் உடலில் பாயாது.

அதற்குகந்த பக்குவத்தைத்தான் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் இங்கே வெளிப்படுத்தும் தன்மையில் பக்குவப்படுத்திக் கொண்டே வருகின்றோம்.

1.ஓர் ஆத்மா சக்தி கொண்டு வந்தால்
2.அச்சக்தியைக் கொண்டு பல சக்தியை வளரச் செய்யத்தான்
3.இந்தத் தியானத்தின் மூலம் என்ற ஆத்ம பலம் கொள்ளுங்கள் என்று உணர்த்துகின்றோம்.

எல்லாம் போகும் பொழுது நாமிருந்து என்ன பயன்…? என்று எண்ணாமல் ஓர் ஏக்கர் நிலத்தில் பத்து மூடை நெல் வந்தால் எல்லாமே உணவாகி விட்டால் விதை நெல் வேண்டுமல்லவா…!

விதை நெல் இருந்தால் தான் மீண்டும் மீண்டும் பயிர் செய்ய முடியும். குண வம்சமே அழிந்து விட்டால் அதன் குண வளர்ச்சியின் விதை வேண்டாமா…?

அதைப் போல் உணர்வால் எடுக்கும் தியானம் கொண்டு ஆத்ம பலம் என்ற ஞான வளர்ச்சியின் வழிக்கு வாருங்கள்.

1.உற்றார் உறவினர் என்ற சுழற்சியில் உணர்வின் எண்ணத்தைப் பதியச் செய்து
2.அதே சுழற்சி வலையில் சிக்குண்டு சிதறாமல்
3.உணர்வின் எண்ணத்தை உயர் தியானத்தால் ஞானம் கொண்டு
2.ஒவ்வொரு ஜீவ பிம்ப உடல்களையும் உம் எண்ண உணர்வால்
3.நல் உணர்வின் அலையைப் பாய்ச்சி உம் உணர்விற்குப் பலம் கூட்டுங்கள்.

இந்தப் பூமியில் பயிராகியுள்ள “மனித மகசூலின் விதையாக நீங்கள் இருக்க…” உணர்வின் எண்ணத்தை ஒவ்வொருவரும் நற்குணத் தியானமாக வழியமைத்துக் கொள்வீர்களாக..!

கலி முடிந்து “கல்கி வரும் நேரம்”

கலி முடிந்து “கல்கி வரும் நேரம்”

 

ஜென்மத் தொடருடனே ஒவ்வொருவரும் வாழ்வது பலரும் சொல்லும் உண்மை நிலை தான். சொந்தம் என்பது எதுவப்பா…?

பந்தங்களுடன் வாழ்கின்றோம். இவ் வாழ்க்கையில். ஆதியில் மனித உயிரணு மற்ற ஜீவராசிகளின் உயிரணு தோன்றியதை ஒரே நாளில் தோன்றியதாகவும் ஒரே நாளில் அனைத்து ஜீவராசிகளும் மடியப்போவதாகவும் உபதேசம் செய்கின்றார்கள்.

1.அனைத்து உயிரினங்களும் ஒரே நாளில் தோன்றியனவா…?
2.ஒரே நாளில் தோன்றியிருந்தால் சுற்றிக்கொண்டே உள்ள மண்டலங்களிலிருந்து பெறும் சக்திக்கெல்லாம்
3.ஒரு நாள் மட்டும் தான் படைக்கும் வேலையா…? பாக்கி காலங்களில் அதை வளர்த்துக் காக்கின்றதா…?

ஒவ்வொரு நாளும் பல மண்டலங்களின் தொடர்புடன் ஒன்றுக்கொன்று ஈர்த்துப் பல சக்திகளைப் பெற்ற சூரியன் அதன் ஒளிக்கதிரிலிருந்து தினமும் தினமும் என்பது மட்டுமல்ல ஒவ்வொரு நொடி… நொடிக்கும் குறைவான நேரத்திலும் பல உயிரினங்கள் தோன்றித் தோன்றி வளர்கின்றன.

இந்நிலை உள்ள பொழுது ஒரு நாளில் தோன்றிய உயிரணுக்கள் எல்லாமே என்பதன் பொருள் என்ன…? ஆரம்பக் காலத்தில் இருந்த ஜீவராசிகளும் இப்போதைய ஜீவராசிகளும் ஒரே அளவுடனா உள்ளன…?

புதிய புதிய உயிரணுக்கள் வளர்ந்து கொண்டே தான் உள்ளன.

1.இவ்வுலகம் எந்த நிலையில் தோன்றிற்று…?
2.வருடக் கணக்கும் நாள் கணக்கும் என்னிட முடியுமாப்பா…?
3.இவ்வுலகம் மட்டும் தனியாக தானாகவா வளர்ந்தது…?
4.என்று தோன்றியது…? என்று அழிகின்றது…? என்று சொல்லும் சக்தி யாராலும் முடிந்திடாது.

அழியா உலகம் என்றேன். ஆனால் காலங்கள் தான் மாறி மாறி வருகின்றன. நாம் அதற்குச் சூட்டிய பெயர் தான் கல்கி கலி இராமாவதாரம் கிருஷ்ணாவதாரம் மச்சாவதாரம் இப்படிப் பல நாமங்கள்.

எல்லா மண்டலங்களிலுமே உயிரினங்கள் உண்டு என்றிட்டேன் முதலில். ஒவ்வொரு மண்டலத்தின் தன்மையும் இது போல் தான் சுற்றிக் கொண்டுள்ளது

இன்று ஒரு நாட்டில் பனி பெய்கின்றது… ஒரு நாட்டில் அதி வெப்பமும்… சமமான நிலை ஒரு இடத்திலும்… அதி மழை பெய்து கொண்டே உள்ள இடமும்… குளிர்ந்த நிலை கொண்ட இடமும்… இப்படிப் பல நிலைகளைக் கொண்ட இவ்வுலகினில் பாலைவனம் நீர் நிலை இப்படி ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு தன்மை உள்ளதன் விளக்கத்தை முதலிலேயே சொல்லி உள்ளேன்.

இந்நிலைகள் எல்லாம் இப்பொழுது உள்ள உயிரினங்களின் நிலையும் இப்படியே இருக்கப் போவதில்லை. கலி கடைசியில் உயிரினங்கள் எப்படி மாறிக் கல்கிக்கு வருகின்றன…? என்பதனைத் தான் நாம் அறிய வேண்டும்.

உலகமே அழிகின்றது என்றாய்…! எப்படி அழியும் இவ்வுலகம்…? இவ்வுலகம் அழிந்து மற்ற மண்டலத்தின் மேல் போய் விழுமா…? இவ்வுலகம் இல்லாவிட்டால் சந்திரனும் செவ்வாயும் உயிர் வாழ முடியுமா…? செவ்வாயும் சந்திரனும் இல்லாவிட்டால் அதன் தொடர்புடைய மண்டலங்களின் நிலை என்ன…?

1.இவ்வுலகம் அழிகிறது என்றால்
2.சக்தியின் சொரூப நிலையே அழிய வேண்டும்.

சக்தியின் சொரூப நிலை அழிந்தாலும் சக்தியின் உயிர் பெற்ற மண்டலங்கள் எல்லாமே… மண்டலங்கள் எல்லாமே என்பது அனைத்து மண்டலங்களும் ஜீவன் இல்லாமல் ஒன்றின் மேல் ஒன்று விழுந்து ஜீவனில்லாமல் இருக்கும் நாள் எதுவப்பா…?

அனைத்து மண்டலங்களும் ஜீவன் இல்லாமல் விழுந்தாலும் இப்பொழுது உள்ள உலகின் ஜடப்பொருள்கள் எல்லாம் எங்கப்பா செல்லும்…? அழிவு என்பதற்கே அர்த்தம் இல்லையப்பா…! காலங்கள் மாறுபடுகின்றன.

இப்பொழுது இக்கலி முடிகிறது என்கின்றோம். இக்கலி எப்படி முடிகின்றது என்பீர்…? இக்கலியில் உள்ள நிலை மாறுபடத்தான் சில இடங்களில் நில அதிர்வும் நெருப்புக் கோளங்களும் அதி மழையினால் வரும் சேதங்களும்.

இப்புமி ஈர்த்து வெளியில் கக்கும் நிலையில் இருந்துதான் ஒவ்வொன்றும் நடக்கின்றது.

இக்கலியில் வந்த மனிதர்களினால் அவர்கள் எண்ணத்தைக் கொண்டு வாழும் சுகத்திற்காகச் “செய்த வினையான இச்செயற்கை என்னும் நிலை பல ஏற்படுத்தி” விஞ்ஞானம் கொண்டே தன்னைத்தானே அழிக்கச் செய்த வினையப்பா.

இவ்வினையெல்லாம்… பூமித்தாயின் உன்னத பொக்கிஷங்களைச் செயற்கைக்கு எடுத்து விட்டானப்பா திரவங்களாகவும் உலோகங்களாகவும்.

இவன் செயற்கைக்கும் இயற்கையை அழித்துத் தான் உண்டு பண்ணுகின்றான். முதல் பாடத்திலேயே சொல்லி உள்ளேன் ஒன்றை அழித்து ஒன்று சக்தி பெறுகிறது என்று.

இந்நிலை புரிந்ததா…?

பூமியில் உள்ள பொக்கிஷத்தை இவன் எடுத்ததினால் வந்ததின் வினை தான் இந்நிலையெல்லாம்.

முன் காலத்தில் கால நிலை ஒன்று போல் இருந்தது ஆடி மாதத்தில் காற்றும் ஐப்பசியில் மழையும் மார்கழியில் குளிரும் சித்திரையில் வெப்பமும் இப்படிக் காலநிலை ஒன்று போல் இருந்ததப்பா.

மனநிலை மாறுபடுகின்றது மனநிலை மாறிபடுகின்றது என்பதெல்லாம் இச்செயற்கைக்கு ஏங்கும் மனிதர்களின் ஆசைக்காக பூமித்தாயின் சக்தியைத் தோண்டி எடுத்ததின் வினையைச் செப்புகின்றேன்.

இவன் பூமியிலிருந்து செயற்கையாகப் பல சக்திகளை எடுத்ததினால் இப்பூமியின் தன்மையே மாறுபட்டு இப்பொழுது கடலாக உள்ள இடமெல்லாம் பாலைவனமாகி… பாலைவனமாக உள்ள இடமெல்லாம் கடலாகிச் சுற்றிக் கொண்டே உள்ள பூமித்தாய்
1.ஒரு நொடியில் ஏற்படுத்தும் சிறு அசைவினால் உண்டாகும் நிலையால் இக்கால நிலை மாறி கலி முடிந்து கல்கி வரும் நிலை.
2.அதன் ஆரம்ப நிலை நான் இப்பொழுது சில இடங்களில் நடந்திடும் இக்கோர நிலையெல்லாம்.
3.இவ்வினையெல்லாம் ஆண்டவன் செய்யவில்லை அவனவனே செய்ததுதான்.
4.இனியும் வருவது இதன் தொடர்ச்சி தான்.

ஆத்மாவைச் சுகமாக வைத்துக் கொள்ளுங்களப்பா…!

ஆத்மாவைச் சுகமாக வைத்துக் கொள்ளுங்களப்பா…!

 

கண்டெடுத்த இரசாயணத்தைக் கண்ணாடியில் பூசித் தன் பிம்பத்தை தானே காணும் நிலை அறிந்துள்ளீர். இம்மாயக்கலியில் அவதரித்த செயற்கை யுகம் கொண்ட மனிதர்கள் எல்லாம் தன் எதிரில் உள்ள பிம்பத்தைத்தான் அக்கண்ணாடியில் காண்கின்றார்கள்.

அன்றே கண்டான் அச்சித்தன் தன் கண்ணால் எல்லாமுமே…!

உலக நிலையையும் மற்ற மண்டலங்களின் நிலையையும் அறிந்து வாழ்க்கைக்கு என்ன பயன்…? என்று சிலர் எண்ணிடலாம்.
1.இப்பாட நிலைக்கு வந்தவர்களுக்கு
2.ஆத்ம நிலையைத் தன் வழிக்கு ஏற்க வந்தவர்களுக்கு அறிந்திடத் தான் இப்பாட நிலை.

மனித சக்தியில் எந்த நிலையில் சக்தி நிலை கலந்துள்ளது என்று அறிந்திடவும்… இப்பூமி எப்படிச் சூரியனிலிருந்து வரும் அணுக்கதிர்களைத் தன் சக்தியில் ஈர்த்துப் பல நிலைகளை நமக்கு அளிக்கின்றாளோ பூமித்தாய்… அந்நிலையான சக்தி எல்லாமே பூமியில் வாழ்ந்திடும் நமக்கும் அவ்ஈர்க்கும் தன்மை எல்லாமே உள்ளன.

சூரியனிலிருந்து வெளிப்படும் தன்மை எல்லாவற்றையுமே நாம் நேராகவே நம் நிலைக்கு ஈர்த்து விடலாம்.
1.நம் உடலில் உள்ள பிணிக்கும் அச்சூரிய சக்தியிலிருந்து “பல வகை மூலிகைகள் கொண்ட மருந்தின் நிலையை” நம் உடலுக்கும் நாம் ஈர்த்திடலாம்.
2.நம் செவிக்கு நம்மைச் சுற்றியுள்ள ஒலிகள் கேட்பதைப் போல் நம் காணா இடத்தில் உள்ள ஒலிகளையும் ஈர்த்திடலாம்.

நம் சக்தியில் நாம் எடுக்கும் சுவாசத்தில் அவ்ஒலியுடன் கலந்துள்ள ஒளியை நாம் ஈர்க்கும் பொழுது எங்கெங்கும் நடக்கும் நிலையையும் நாம் ஈர்க்கும் தன்மை கொண்டு… அவ்வொளியின் பிம்பம் படும் நிலையில் உள்ளவை எல்லாவற்றையுமே இருந்த நிலையிலையே கண்டிடலாம்.

இம்மனித சக்திக்குத் தான் கால நிலை பூகம்ப நிலை பெரும் மழை வரும் நிலை எல்லாவற்றையும் உணரும் தன்மை இவ் உடலில் இருக்கின்றது நம் நினைவை மாற்றி விடுவதினால் அதை எல்லாம் அறிந்திடாமல் தவற விடுகின்றோம்.

பூமிக்கு எப்படி ஈர்ப்பு நிலை என்னும் காந்த சக்தி உள்ளதுவோ அதைப் போல்
1.பூமியில் உதித்த உயிரணுக்கள் எல்லாவற்றுக்குமே உள்ளன என்றாலும்
2.மனித உடலில் பெற்ற ஆத்மாக்களுக்கு அனைத்தையும் அறிந்திடும் சக்தி உள்ளது.
3.செயல்படுத்தும் தன்மை வாய்ந்த உறுப்புகளும் உள்ளன.

இம்மனிதன் உண்டு உடுத்தி உறங்குவது தான் சுக வாழ்க்கை என்று சுகத்தை எண்ணுகின்றான்.

இச்சுகம் எத்தனை நாளைக்கு…? தன் எண்ண சுகத்தைக் கொண்டே ஆத்மாவைச் சுகமாக்கிடாமல் இவ் உடல் சுகத்தைத் தான் எண்ணி வாழ்கின்றான்.

இவ் உடல் என்னும் கூட்டிற்கு அனைத்து சக்திகளையும் அறிந்தே வாழும் சக்தி உள்ளது… அதை ஞான வளர்ச்சிக்குப் பயன்படுத்துங்களப்பா…!

உயிரின் துடிப்பு அதிகரிக்கும் போது மனிதன் அசுரனாகி விடுவான்

உயிரின் துடிப்பு அதிகரிக்கும் போது மனிதன் அசுரனாகி விடுவான்

 

நட்சத்திரங்களின் மின் கதிர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி எதிர்மறையாகி மின்னலாகக் கடலில் பாய்ந்தால் கடல் உப்பின் தன்மை அதை அடக்கி மணலாக மாற்றுகின்றது.

அதையே மனிதன் யுரேனியமாகப் பிரித்து எடுக்கின்றான். அணுவைப் பிளந்து அணுக்கதிரியக்கங்களை உருவாக்கி அணு உலைகளை உருவாக்கி இயந்திரங்களைத் துரித கதியில் வெப்பமாக்கும் நிலைக்குச் செயல்படுத்துகின்றார்கள்.

“மின்னல் தாக்கும் பொழுது… எவ்வளவு தூரம் விரிவடைந்து அது செயல்படுகின்றதோ” அதைப் போன்று
1.மனிதன் அணுவைப் பிளந்து அதன் உணர்வைச் சேமித்து
2.ஹைட்ரஜன் என்ற நீரின் அழுத்தத்தைக் கொண்டு அதை அடக்கி
3.மற்ற இயந்திரங்களை உருவாக்கி விஷத்தன்மை ஊட்டி இயக்கினாலும்
4.அதனின் கசிவுகள் வெளிவரும் பொழுது “சூரியனுடைய காந்த சக்தி” ஆதைக் கவர்ந்து தான் தீரும்.

இது பரவப் பரவ நச்சுத்தன்மைகளாக மாறி… சிந்திக்கும் தன்மை இழக்கச் செய்து விடும்.

அது மட்டுமல்ல…! அணுக்கதிரியக்கத்தின் தன்மை துரிதப்படுத்தி இயக்கப்பட்டு உலகம் முழுவதும் பரவச் செய்த பின்
1.அது சூரியனால் மீண்டும் ஈர்க்கப்பட்டு அதனுள் சென்ற பின் கொதிகலனாக மாறி அது வெடிக்கின்றது.
2.பூமிக்குள் எப்படி நிலநடுக்கம் ஆகின்றதோ அது போன்று சூரியனுக்குள் இத்தகைய நிலைகள் வெளிப்படுத்தும் நிலைகளும் வந்துவிட்டது.

காரணம்… சூரியன் இயற்கையாகக் கவரும் விஷத் தன்மைகளும் மனிதன் செயற்கையாக உருவாக்கிய கதிரியக்கப் பொறிகள் இரண்டும் மோதும் போது
1.எலக்ட்ரிக் அதிகமாகி… பொறிகளாக உருவாகி
2.கொதிகலனாகிக் காந்தப் புயல்களாக வீசுகின்றது.

ஒரு மேக்னட்டை அதிகமாக்கிச் சுழற்றும் போது காந்தம் அதிகமாகி மின் உற்பத்தி அதிகமானால் அது அதனுடன் பொருத்தப்பட்டுள்ள வயர்களைக் கருக்குகின்றது… அதில் இயக்கக்கூடிய மோட்டார்களையும் ஃபுயூஸ் ஆக்கிவிடுகின்றது.

இதைப் போன்று நம்மை இயக்கக்கூடிய உயிரின் தன்மையும்
1.எலக்ட்ரானிக்காக உற்பத்தி ஆகி கொண்டிருக்கும் உயிரின் துடிப்பு அதிகமானால்
2.நம் உடலுக்குள் அதன் தொடர் கொண்டு இயக்கும் அணுக்களின் நிலையும் பாய்ச்சலாகிச் சிந்தனைகள் இழக்கப்பட்டு
3.இந்த உணர்வின் தன்மை அதீத நிலைகள் கொண்டு நாம் சிந்திக்கும் செயலிழக்கப்பட்டு
4.ஆதிகாலத்தில் ஒன்றை ஒன்று கொன்று எப்படிப் புசித்து வாழ்ந்தார்களோ
5.இதைப் போன்று அசுர உணர் கொண்டு செயல்படும் நிலையாக வந்துவிடும்.

ஆப்பிரிக்கா நாடுகளில் இன்றும் மனிதனுக்கு மனிதன் கொன்று புசித்திடும் நிலையும்… இறந்த மனிதனை உணவாக உட்கொள்ளும் அநாகரீக நிலைகளாக அங்கே வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையும் உண்டு.

அது போல் மக்கள் வாழும் காட்டுப் பகுதிகளிலும் மலைப்பகுதிகளில் சில இடங்களில் இத்தகைய மனிதனைப் புசிக்கும் நிலைகள் உண்டு.
1.நகரப் பகுதிகளில் விஞ்ஞான அறிவு வளர்ந்து இருந்தாலும் இதனுடைய வளர்ச்சி அங்கே சுருங்கி இருந்தாலும்
2.உலகம் முழுவதும் பரவும் நிலை மனிதனுக்கு மனிதன் கொன்று புசிக்கும் நிலை வந்துவிட்டது.

உணர்வின் அதிர்வுகள் அதிகரிக்கப்படும் பொழுது எலெக்ட்ரிக் என்ற எர்த் நிலையில் வரப்படும் பொழுது எலக்ட்ரானிக் என்று நமக்குள் இயக்கும் “உணர்வுகள்” செயலிழக்கத் தொடங்கிவிடும்.

அதே போல் விஞ்ஞானத்தால் கண்டுபிடிக்கப்பட்ட எலக்ட்ரானிக் கருவிகளும் திசை மாறிக் கணக்கீடுகளை தப்பாக இயக்கும்.

அதாவது… ஒவ்வொரு நாட்டிலும் அணுகுண்டுகளையும் மற்ற ஆயுதங்களையும் கம்ப்யூட்டரால் கண்கானிக்கப்பட்டுப் பாதுகாப்பாக வைத்துள்ளார்கள்.

வெப்பங்கள் தாக்காது இருப்பதற்காக கட்டுப்படுத்தி வைத்துள்ளார்கள் மின்னலோ மற்ற இயற்கையினுடைய சீற்றங்களும் தாக்காதபடி பாதுகாப்பாக வைத்துள்ளார்கள்.

கால நிலைகள் உணர்ந்து அத்தனை வெடிகுண்டுகளையும் பாதுகாக்கும் கம்ப்யூட்டரும்
1.மாறுபட்ட நிலை கொண்டு சிதைவுண்டால் புதைத்து வைத்திருக்கும் குண்டெல்லாம் வெடிக்கும் நிலைக்கு வந்துவிடும்.
2.வெடித்து விட்டால் உலகம் முழுமைக்குமே விஷத்தின் தன்மைகள் பரவிவிடும்.
3.மனிதர்களுக்குள் இது ஊடுருவினால் உருவம் இருக்கும் ஆனால் அவருடைய சிந்தனைகள் குலைந்து விடும் உடலை மாற்றிவிடும்

அது பரிசுத்தமாக எண்ணிலடங்காத வருடங்கள் ஆகிவிடும்.

அத்தகைய சூழ்நிலையில் தான் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆகவே இந்த உடலில் நல்ல நினைவிருக்கும் பொழுதே நாம் எதைப் பெற வேண்டும் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

நான் சொல்வது வெறும் சொல்லாகவோ எளிதாகவோ தெரியலாம். யாம் ஏற்கனவே சொன்னது அனைத்துமே என்று விஞ்ஞானிகள் நிரூபித்துக் கொண்டுதான் உள்ளார்கள்.

சூரியனுக்குள் எரிமலைகள் உருவாகும் என்று முன்பே சொல்லியிருந்தோம். இப்போது அடிக்கடி எரிமலைகள் சூரியனில் உருவாகி அது கக்கிக் கொண்டிருக்கிறது என்று சொல்கிறார்கள்.

இது பரவப் பரவ பூமியில் இயங்கக்கூடிய கம்ப்யூட்டர்கள் இயங்காத நிலையில் ஆகிவிடும்.
1.அதைப் போன்று தான் மனிதனுடைய உணர்வின் எண்ணங்கள்.
2.உணர்வுகள் அழுத்தம் அதிகமானால் மனிதனுடைய செயல்கள் மாற்றம் அடைந்து விடும்.

உயிர் எலக்ட்ரிக் நாம் எடுக்கும் உணர்வுகள் அனைத்தும் எலக்ட்ரானிக் ஜீவ அணுக்களாக மாற்றுகின்றது… அந்த உணர்வின் செயலாகத் தான் கம்ப்யூட்டர் இயந்திரம் இயக்குகின்றது உணர்வின் உணர்ச்சிகள் அதன் வழியே இயக்குகின்றது

ஆகவே சற்று சிந்தித்துப் பாருங்கள்…!

1.நல்ல நினைவு இருக்கும் போதே அருள் மகரிஷிகள் உணர்வைப் பற்று கொள்ளுங்கள்.
2.பகைமை உணர்வுகளை அகற்றிப் பழகுங்கள்
3.அசுர உணர்வுகள் பரவாது அருள் ஞானிகள் உணர்வு கொண்டு நம்மை பாதுகாத்திடும் நிலையாகச் செயல்படுத்த வேண்டும்.

துருவ நட்சத்திரம் இதையெல்லாம் வென்றது. அதை எடுத்து நமக்குள் வளர்த்து இந்த உலகம் முழுவதும் பரவச் செய்து எல்லோரையும் காக்கக்கூடிய சக்தியாக நாம் செயல்படுத்துவோம்.

ஆரம்பத்திலே சூரியனைப் பார்த்து தியானிக்கும்படி சொல்லி இருந்தோம். ஆனால் சூரியன் பாழடைந்து அதற்குள் எரிமலைகள் உருவாகத் தொடங்கும் பொழுது அதை நிறுத்தி… யாரும் சூரியனைப் பார்க்க வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்

ஏனென்றால் அதில் உருவாக்கும் கசிவுகளை நாம் நுகர்ந்தால் அசுர உணர்வு நம்மையும் இயக்கிவிடும். ஆனால் இதையெல்லாம் வென்றது துருவ நட்சத்திரம்
1.அந்த துருவ நட்சத்திரத்தின் சக்தியைத் தான் இப்பொழுது எடுக்க உங்களுக்கு பயிற்சி கொடுக்கின்றோம்
2.அதை எடுத்து வளர்த்து அனைவரையும் காத்திடும் சக்தியாக நீங்கள் செயல்படுத்துங்கள்.

உணர்வுகளின் கலவைகளையும் அது நம்மை இயக்குவதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்

உணர்வுகளின் கலவைகளையும் அது நம்மை இயக்குவதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்

 

உதாரணமாக ஒரு மனிதன் கோபமாகப் பேசுகிறான் என்றால்… அவனுக்குள் விளைந்த கோபமான உணர்வைச் சூரியனின் காந்த சக்தி கவருமே என்றால் அதன் உணர்வின் தன்மையை மற்றொரு மனிதன் நுகர்ந்தால்… அந்த உணர்ச்சியின் தன்மை அவனுக்குள் வந்து பெண் சக்தி என்ற நிலைகள் “காளியாக” மாறுகின்றது.

உயிரிலே பட்டு அந்த உணர்ச்சிகள் உணர்ச்சியின் வேகங்கள் வரும் பொழுது அந்த எண்ணங்கள் வருகின்றது.

ஆக… கண் கொண்டு ஒருவர் தவறு செய்யும் உணர்வினைக் கண் கருவிழி பதிவாக்கித் தன் உடலுக்குள் வைத்துக் கொண்ட பின் இந்த உணர்வுகள் உயிரிலே பட்ட பின் இந்த எண்ணங்கள் வருகின்றது.

அந்த எண்ணங்கள் வரும் பொழுது தான்
1.கோபத்தின் நிலை கொண்டு இந்த உணர்வுகள் இவன் எப்படிக் கோபப்பட்டானோ
2.அதே மாதிரி இந்த உணர்வுகளைத் தூண்டச் செய்து அந்த உணர்வின் அறிவாக அங்கே இயக்குகின்றது.

ஆனால் அவன் நுகர்ந்த உணர்வுகள் காளியாகி உடலான “சிவன் ருத்ர தாண்டவமாக” அந்த உணர்ச்சிக்கொப்ப உடலின் அங்கங்களும் அசைவுகளும் வருகின்றது.

அதே சமயத்தில் மகிழ்ச்சி பெறும் உணர்வுகளை நமக்குள் எடுத்துக் கொண்டால் மகிழ்ச்சியான எண்ணங்களைத் தோற்றுவித்து அரவணைக்கும் தன்மை வருகின்றது.

மகிழ்ச்சி பெறும் உணர்வை ஒரு மனிதன் வெளிப்படுத்துகின்றான் என்றால்… கண்ணில் உள்ள கருவிழி அந்த மகிழ்ச்சி பெறும் மனிதனைப் பதிவாக்கி விட்டால்
1.கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலன் சத்தியபாமா அவன் மகிழ்ச்சி பெறும் உணர்வினை நாம் நுகரப்படும் பொழுது
2.உயிரிலே பட்டபின் இனிமையான நாதங்களாக வாசிக்கின்றது.

உதாரணமாக நான் உபதேசித்துக் கொண்டிருக்கும் பொழுது ஒரு நாய் தனது நிலைகளுக்கொப்ப குரைக்கப்படும் பொழுது “இடைமறித்தால்” எப்படி வருகின்றது…?

1.உபதேசத்தைக் கூர்ந்து கேட்க வேண்டும் என்ற எண்ணமும்
2.நாய் குரைத்து அதைக் கேட்க விடாது இப்போது தடைப்படுத்துகிறதே…! என்ற உணர்வும் இந்த இரண்டும் கலந்த எண்ணங்களாக நமக்கு வருகின்றது.

ஆகவே நாம் நுகரும் உணர்வுகள் எதுவோ இது கலவையின் உணர்வின் தன்மையாக அணுவாக உருவாக்குவது இந்திரீகம் என்பது. ஆகவே இந்த உடலில் இந்திரலோகம் என்று அதைக் காரணப் பேர் வைத்து அழைத்தார்கள்.

நல்ல உணர்வுகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் பொழுது இன்னொரு எதிர்மறையான உணர்வு இரண்டும் கலக்கப்படும் பொழுது
1.நமது உயிர் இதனை நன்மை என்று கருதினாலும் இந்த உணர்ச்சிகள் நமக்குள் அதன் மீது “வெறுப்பான உணர்வுகளும்” கலக்கின்றது.
2.வெறுப்பு கலந்த பின் நம் உடலுக்குள் அது இந்திரீகமாக மாறுகின்றது
3.சாமி நன்றாக பேசிக் கொண்டிருந்தார்… இந்த நாய் குரைத்தது கேட்க முடியாமல் போய்விட்டது…! என்று திரும்பத் திரும்ப எண்ணினால்
4.இந்த உணர்வின் “அதிர்வுகள்” அடுத்தாற் போல் அந்த அணுவின் தன்மை அடைகின்றது.

நாம் நல்ல நிலைகளைச் செயல்படுத்தி வந்தாலும் இதே குணங்கள் என்ன செய்யும்…?

கண்ணால் பார்க்கப்பட்டது ஹரி கிருஷ்ணா. சூரியன் ஹரி…! அந்த உணர்வின் தன்மை தனக்குள் பதிவாகிய நிலைகள் வந்தாலும்… செவி வழி கொண்டு உணர்வின் தன்மை வரும் பொழுது… நினைவு அதன் பால் கவர்ந்து இந்த உணர்வின் தன்மை தனக்குள் எடுத்து “இரண்டும் கலந்து” அது இந்திரீகமாக மாறுகின்றது.

அவ்வாறு இந்திரீகமாக மாறினால் அதன் உணர்வின் தன்மை மீண்டும்… “சாமி அன்றைக்குச் சொல்லிக் கொண்டிருந்தார்… அதைக் கேட்க விடாது நாய் குரைத்துக் கொண்டே இருந்தது…” என்ற அந்த உணர்வும் கலந்து கலந்து இதன் அணுவின் தன்மையாக விளையும் தன்மை வந்து விடுகின்றது.

அப்படிப்பட்ட அணுத்தன்மை அடைந்து விட்டால் பிரம்மா…! நான் சொன்ன உணர்வும் நாய் குரைத்த உணர்வுகளும் கலக்கப்பட்டு அந்த உணர்வின் இயக்கமாக அணுவின் தன்மை அதையே உணவாக எடுத்து நமக்குள் இந்திரலோகத்தில் சேர்கின்றது.
1.நல்ல கருத்துக்களைக் கேட்க விரும்பினோம்
2.இடைமறித்து நாய் குரைத்துத் தடுத்தது என்ற எண்ணங்களும் வரும்.

இதே போன்று நீங்கள் யாரிடமும் எடுத்து இதைச் சொல்லும் பொழுது நல்ல செயல்களை செய்தாலும் அடுத்து எவராவது இடைமறித்தால் தாங்கும் நிலை இல்லாது “அவர் மீது வெறுப்பின் உணர்வு கொண்டு” நல்ல வார்த்தை இல்லாதபடி நம்முடைய சொல்லும் சொல்ல வேண்டி வரும்.

ஆக மையமாக இருந்து… சொல்வதைக் கேட்டாலும் அவருக்குள் என்ன இப்படிப் பேசுகின்றார்…? என்று வெறுப்பின் தன்மை வரும். ஆனால் நாம் தவறு செய்யவில்லை.

சந்தர்ப்பம்…!
1.உணர்ச்சியின் தன்மை செவி வழி உந்தி
2.கண் வழி அந்த உணர்வினை நுகரும் தன்மையும்
3.நுகர்ந்த உணர்வு உயிரின் தன்மை கொண்டு உணர்ச்சிகளின் தன்மை உடலை இயக்குவதும்
4.அதற்குள் எண்ணம் சொல் செயல் என்ற நிலைகளை எப்படி உருவாக்குகின்றது…? என்பதனை
5.நமது குருநாதர் ஒவ்வொரு நிலைகளிலும் அனுபவரீதியிலே எம்மை அறியும்படி செய்தார்.