மனிதனின் நல்ல சிந்தனைகள் “சிறுகச் சிறுக அழிந்ததன் சரித்திரம்…!”

மனிதனின் நல்ல சிந்தனைகள் “சிறுகச் சிறுக அழிந்ததன் சரித்திரம்…!”

 

கடவுள் எப்படி இருக்கின்றான்…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள் கடவுள் ஒருவனே…! தேவன் ஒருவனே…! என்பதெல்லாம் மதங்களால் உருவாக்கப்பட்ட நிலைகள்.

ஒவ்வொருவரும் தனக்குகந்த உணர்வுகளை அது உருவாக்கி மந்திரங்களை உருவாக்கி… அதனை மனிதனுக்குள் பதிவாக்கி… இன்னென்ன மந்திரங்களைச் சொன்னால் கடவுள் அதற்காக அடிபணிந்து நமக்கு எல்லாம் செய்து தருவான்…! என்று சட்டங்களை இயற்றப்பட்டு… அதற்கென்று வேதங்களை உருவாக்கப்பட்டு… மந்திரங்களை ஒலிக்கச் செய்து கேட்டுணரும்படி செய்து… மனிதனை உருமாற்றிக் கொண்டு வருகின்றார்கள்.

மதங்களால் இயற்றப்பட்ட சட்டத்தை நமக்குள் பதிவாக்கி விட்டால் “அது தான் கடவுளாக இயக்குகின்றது நம்முள் நின்று…!”

ஒருவன் ஒருவன் தீமை செய்கிறான் என்று பார்த்து… தீமை எனக்குச் செய்தான் என்று உணர்வை நுகர்ந்து விட்டால் அந்த உணர்வின் தன்மை ஜீவ அணுவாக மாற்றி அது பிரம்மமாக்கி நம் உடலுடன் சேர்ந்து இயக்கப்படும் பொழுது தீமை செய்யும் கடவுளாக அது உருவாகின்றது.
1.தீமை செய்யும் எண்ணங்கள் அதிகமாகச் சேர்த்து விட்டால்
2.அந்த அணுவின் தன்மை தீமையை உருவாக்கும் கடவுளாக உருவாகின்றது.
3.ஆனால் நன்மை செய்யும் உணர்வுகளை உருவாக்கி விட்டால் நல்ல உணர்வை நுகரும் ஆற்றல் பெறுகின்றோம் நமக்குள் கடவுளாக…!

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் விஞ்ஞானம் இன்று இதைத் தெளிவாக நிரூபிக்கின்றது.

உதாரணமாக ஒரு கம்ப்யூட்டரில் எலக்ட்ரானிக்கை வைத்து அதை இயக்கச் செய்கின்றார்கள்.
1.அதிலே பொருத்தப்பட்டுள்ள நாடாக்களில்
2.காந்தப் புலனறிவை ஈர்த்து ஒலி அலைகளைப் பரப்புவதைக் கவர்ந்து
3.மீண்டும் எதிர் நிலைகளில் உருவாக்கும் ஆற்றலை அதிலே மூலமாகப் பூசி உள்ளார்கள்.

அதில் நாம் தட்டெழுத்தால் (KEY BOARD) எப்படி அடிக்கின்றோமோ… அடித்துக் காந்தப் புலனால் ஒலி அலைகளை எழுப்பப்படும் பொழுது
1.எலக்ட்ரானிக்காக மாற்றுகின்றது
2.ஒலி அலைகளைப் படமாக்குகின்றது… அதற்குத்தக்க உருவத்தையும் காட்டுகின்றது
3.ஒரு மனிதனையே உருவாக்கிக் காட்டுகின்றது.

அதைப் போன்று தான் நம் உயிர் எலக்ட்ரிக்கை உருவாக்குகின்றது. நாம் எண்ணும் எண்ணங்களை எல்லாம் எலக்ட்ரானிக்காக மாற்றுகின்றது. அந்த உணர்வுக்கொப்ப உடலில் உறுப்புகளை இயக்குகின்றது.

மனிதனால் உருவாக்கப்பட்ட கம்ப்யூட்டர் இயக்கினாலும் அதில் இருக்கக்கூடிய காந்தப்புலன்… “தட்டெழுத்தால் அடிக்கும் அந்த உணர்வு கொண்டு…” காந்தப்புலனால் ஈர்க்கப்பட்டு அது செயல்படுத்தப்பட்ட நிலைகள்

அதைச் செயல்படுத்தும் பொழுது “இவன் உணர்வும் அதிலே கலந்து…” அந்த உணர்வின் இயக்கச் சக்தியாக அந்தக் கம்ப்யூட்டர் இயக்குகின்றது.

இதைப் போன்று அது உருவாக்கும் நிலைகள் வரப்படும் பொழுது…
1.அந்தக் கம்ப்யூட்டரை இயக்கப்படுபவனுக்கு குடும்பத்தில் எதிர்மறையான உணர்வுகள் வந்து விட்டால்
2.அது… இவன் தட்டெழுத்தால் அடிக்கும் உணர்வுக்குள் கலந்து “வைரஸ்” என்ற நிலையாக… இது பிழைகள் கொண்டதாக மாற்றி விடுகின்றது.

(இதே நாடாவை மற்றவர்கள் பார்த்து இந்த உணர்வை எடுக்கப்படும் பொழுது தட்டெழுத்துக்களில் இந்த உணர்வின் மாற்றங்கள் அங்கேயும் வைரஸாக வரும்).

பிழைகளை இவன் அழித்து மீண்டும் செயல்படுவான் என்றால்
1.அங்கே திரையில் காட்டும் உணர்வுகளை இவன் நுகர்ந்து உணர்வுக்குத்தக்க மாற்றப்படும் பொழுது
2.இவனுக்குள் தீமையின் உணர்வுகள் விளைந்து… தன் சிந்தனை இழந்து பிரமை பிடித்தவன் போன்று ஆகிவிடுவான்.

இந்த கம்ப்யூட்டரில் தொடர்ந்து வேலை செய்பவர்கள் யார் அதிகமாக அதை இயக்குகின்றார்களோ… அவர்கள் வேறு சிந்தனையே இல்லாது… இதன் உணர்வுளிலேயே இருப்பார்கள்.

எந்திரத்தின் துணை கொண்டு இந்த உணர்வின் தன்மை இயக்குவது போன்று “மனித உணர்வுக்குள் எலக்ட்ரானிக் என்ற நிலைகள் கொண்டு…” மனிதனுக்குள் இயக்கும் இந்த உணர்வுகளுடன் கலந்தே எலக்ட்ரானிக்கின் தன்மை அடைகின்றது.

இவை எல்லாம் விஞ்ஞான அறிவால் உருவானாலும் இயற்கையின் உணர்வுகள் மனிதனான பின் இதனுடன் கலந்தே அது இயக்குகின்றது.

விஞ்ஞான அறிவால் கண்டுபிடிப்புகள் வளர்ச்சி பெற்றிருந்தாலும்
1.எலக்ட்ரானிக் என்ற நிலையில் வருவதை மனிதன் தனக்குள் நுகரப்படும் பொழுது
3.இயற்கையின் நிலைகளை அது மாற்றி விடுகிறது.

ஏனென்றால் நம் உயிர் எலக்ட்ரிக்காக இயங்கி நுகருவதை எலக்ட்ரானிக்காக… உடலையே இயக்குகின்றது. (ஏற்கனவே சொன்னோம்)

விஞ்ஞான அறிவின் தன்மைகள் கொண்டு இயந்திரத்தின் துணையால் எலக்ட்ரானிக் என்ற நிலையில் இந்த உணர்வின் எண்ணங்கள் பரவுகின்றது
1.மெய் (தன் நிலை – இயல்பு) உணர்வுகள் மறைகின்றது…
2.மெய் உணர்வுகளை வளர்க்கும் தன்மை அது இழக்கப்படுகின்றது.

இது மட்டுமல்ல…! வானுலக ஆற்றலை… நஞ்சு கலந்த உணர்வுகளை அளவுகோலிட்டு அதைக் கம்ப்யூட்டரில் இயக்கிப் பார்க்கின்றான்
1.நஞ்சின் தன்மை பூமிக்குள் வருகின்றது… மனிதனைக் காக்கும் உணர்வுகள் அதிலே இல்லை.
2.மனிதனை அழித்திடும் உணர்வுகள்… கண்டுபிடிப்புகள் இங்கே அதிகமாகின்றது
3.இதை இயக்குவனுக்குள் அந்த அழித்திடும் உணர்வுகள் வளர்ந்து எல்லா இடங்களுக்கும் (காற்று மண்டலம்) பரவுகின்றது.

மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்த உணர்வுகள் காற்று மண்டலம் முழுவதும் பரவி
1.மனித இனத்தையே பூண்டோடு அழித்திடும் நிலைகளுக்கு மாற்றிக் கொண்டு வருகின்றது.
2.இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் மீள வேண்டும்.

ஆக கடவுள் யார்…? நமது உயிர் தான்…!

செய்வினை என்பது உண்டா…? அது உண்மையா…!

செய்வினை என்பது உண்டா…? அது உண்மையா…!

 

கரையான் ஒரு மரக்கட்டை மீது செல்லப்படும் பொழுது
1.அதனுடைய மலங்கள் அதிலே பட்ட பின் அந்தக் கட்டை ஆவியாக மாறுகின்றது
2.ஆவியாக மாறும் பொழுது அது எந்த மண்ணில் இருந்த சத்தை எடுத்து மரமாக ஆனதோ அந்த மண்ணாகவே மாறுகின்றது.

கரையான்களாக உருவாகியதைக் கோழியோ குருவியோ அதை உணவாக உட்கொண்டிருக்கும். அதனுடைய அணுவும் இதற்குள் இருக்கும்.

அந்த அணுவின் வளர்ச்சிகள் இதற்குள் வளர்க்கப்பட்டு… கரையான் நுகர்ந்த உணர்வு போன்று “சிலதுகளைக் கரைத்து” அந்த உணர்வின் தன்மை தனது இனங்களாக மாற்றும் சக்தி “புழுவில் இருந்து மனிதனாக வளரும் வரையிலும் வளர்ந்து வந்துள்ளது…”

இது தான் கரையான் மந்திரம் என்று சொல்வது.

அதற்கென்று சில உணர்வுகள்… மந்திரத்தை ஜெபித்து இந்த உணர்வினைப் பெருக்கி விட்டால் அது ஒரு மனித உடலில் இருக்கும். மந்திரங்களை ஜெபிக்கப்படும் பொழுது அந்தக் கரையானைப் போன்று ஒன்றைக் கரைக்கும் சக்தி மனிதனுக்குக் கிடைக்கின்றது.

கரையான் மந்திரத்தைச் சொல்லி… ஒரு கட்டை மீதோ அல்லது ஒரு பாத்திரத்தின் மேலோ இதை தடவி வைத்து இந்த உணர்வின் ஒலிகளை அதிலுள்ள காந்தப் புலனில் ஓதிவிடுவார்கள்.

ஒரு டப்பியில் அது மூடிவிட்டு மந்திரத்தைச் சொல்வார்கள். பின் இன்ன பொருள் இங்கே வர வேண்டும் என்ற நிலையில் உணர்வைப் பாய்ச்சுவார்கள்.

ஊசி முனை அளவு துவாரம் இருந்தால் போதும் அந்த டப்பியிலே…! அந்த உணர்வின் தன்மை ஆவியாக எடுத்துக் கொண்ட பின் இங்கே குவிந்து அதே உருவின் தன்மையை உருவாக்கும்.

1.இப்படித்தான் பல மந்திரங்கள் செய்து பல பொருள்களை வரவழைப்பதும்
2.மனிதனுக்குள் விளைய வைத்த உணர்வினைப் பிரித்துக் கரையான் மந்திரம் என்றும்
3.ஒரு பொருளுக்குள் சேர்த்த பின்… ஒலியை எழுப்பி அதை மறையச் செய்வதும்… இன்னொரு இடத்தில் கொண்டு வருவதும்…!

பல கோடிச் சரீரங்கள் எடுத்து மனிதனாக ஆன பின் மனித உடலில் உருவாக்கிய நிலைகள் மிக மிக சக்தி வாய்ந்தது.
1.மற்றவருக்குள் பாய்ச்சி மனிதனுடைய எலும்புக்குள்ளேயே ஊடுருவி அங்கே தாயத்துகளை வைப்பதும்
2.மனிதனுடைய சிரசிற்குள் தாயத்துகளை ஊடுருவச் செய்வதும்…
3.ஒரு செடியிலே விளைந்த வெள்ளரிக்காயைக் கூட மனித உடலுக்குள் ஊடுருவச் செய்துவிடுவார்கள்.

நான் (ஞானகுரு) சுற்றுப்பயணம் செய்யப்படும் பொழுது ஒரு இடத்திலே ஒரு மனிதன் வயிற்று வலி என்று வந்தான்.

அது எப்படி வந்தது…? என்று குருநாதர் காட்டிய வழியில் எக்ஸ்-ரே பார்ப்பது போன்று அவரை கண்ணுற்றுப் பார்க்கப்படும் பொழுது அவர் வயிற்றிலே “ஒரு பிஞ்சு வெள்ளரிக்காய்” இருப்பது தெரிகிறது.

வயிற்று வலியால் அவதிப்படுகின்றார். மருந்தால் அந்த வலியைப் போக்க முடியாது.

ஏவல் செய்யப்பட்ட அந்த வெள்ளரிக்காயை நீக்குவதற்காக குருநாதர் காட்டிய அருள் வழி கொண்டு
1.மகரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும் என்று நீ எண்ணி ஏங்கு
2.இந்த உணர்வுகள் படரப்படும் பொழுது உனக்குள் செய்வினை செய்த வெள்ளரிக்காய் வெளி வந்து விடும் என்று சொன்னேன்.

அதே மாதிரி அவர் செய்தார் அந்தப் பிஞ்சு வெளி வந்துவிட்டது. பின் அவருடைய வயிற்று வலியும் நீங்கியது.

ஆனால் சிலர் செய்வினை என்பது உண்டா…? உண்மையா…! என்று கேட்பார்கள்.

ஆனால் கரையான் மந்திரத்தைச் சொல்லி ஒரு பொருளை இங்கே வைத்துவிட்டு… “இன்னார் உடல்களிலே அது புக வேண்டும்…” என்றால் அது உடலுக்குள் ஊடுருவிவிடும். ரண வேதனைகளை அங்கே கொடுத்துக் கொண்டிருக்கும்.

இதுகள் எல்லாம் மனிதனில் உருவாக்கப்பட்ட தீமையின் நிலைகள் தான். அதர்வண வேதம் என்ற நிலையில் மீண்டும் மீண்டும் தீமைகள் செய்யும் மந்திர ஒலிகளை எழுப்பப்படும் பொழுது… மனிதன் தனக்குள் கேட்டால்… எந்த மந்திரத்தால் ஏவல் விடப்பட்டதோ… அவன் இறந்த பின் அதே மந்திரத்தால் அவன் ஆன்மாவைக் கைவல்யப்படுத்தி… அவன் இறந்த பின் மீண்டும் இன்னொருத்தருக்குக் கெடுதல் செய்ய முடியும்.

1.வேதங்கள் கூறியதைத் தலை கீழாக மாற்றப்பட்டு
2.அதை மனிதன் எதிரிகளுக்குப் பாய்ச்சுவதும்
3.சுகபோகங்களுக்கு மற்றவர்களை அடிமையாக்கச் செய்வதும்…
4.அரசர்கள் செய்து கொண்டது என்பது இது தான்.

அன்றைய ஆயுதங்களும் இது தான்.

ஆனால் மக்கள் மத்தியிலும் இது பரவி விட்டது. அரசர்கள் அனைவரும் மடிந்து விட்டார்கள். மடிந்தாலும் பூதகணைகளாக மாறி அந்த ஆசை அலைகள் இங்கே பரவப்பட்டு இன்று சுழன்று கொண்டிருக்கின்றது… இயக்கிக் கொண்டுள்ளது.

நாம் எதுவும் செய்ய முடியாது… “அந்த ஆண்டவனால் மட்டுமே முடியும்…!” என்ற வித்தை ஊன்றியவர்களே அன்றைய அரசர்கள் தான்

நாம் எதுவும் செய்ய முடியாது… “அந்த ஆண்டவனால் மட்டுமே முடியும்…!” என்ற வித்தை ஊன்றியவர்களே அன்றைய அரசர்கள் தான்

 

“ஆலயத்திற்குச் சென்று வழிபட்டால் தீமைகள் அகலும்…” என்ற உணர்வுடன் தான் செல்கிறோம். யாகங்கள் வேள்விகள் நடத்தும் பொழுது அதற்கு முன் அமர்கின்றோம்… உற்றுப் பார்க்கின்றோம்… நமக்குள் பதிவாகிறது.

ஆனால் இதற்குப் பெயர் “வசியம்…”

ஏனென்றால் நாம் ஏக்க உணர்வுடன் ஆலயத்திற்கு வரப்படும் பொழுது
1.அங்கே ஓதப்படும் மந்திரங்கள் நம் செவிகளில் ஈர்க்கப்பட்ட பின்
2.உயிருக்குள் மோதும் போது “ஓ…” ஓ…ம் நமச்சிவாய…! என்று அந்த உணர்வுகளை “உயிர்” நமதாக அமைத்து விடும்
3.அங்கே வாசிக்கப்படும் இசைகளை… அந்த ஒலி அலைகளை ஓ…ம் நமச்சிவாய…! என்று நம் உடலுக்குள் பாய்ச்சி விடுகிறது.
4.யாகத் தீயில் போடப்படும் பொருள்களின் வாசனைகளையும் நாம் நுகர நேர்கின்றது
5.இந்த உணர்வுகளும் ஓ…ம் நமச்சிவாய என்று பதிவாகி விடுகின்றது.

இப்படிப் பதிவாகக் காரணம் என்ன…?

இந்தத் தெய்வம் உனக்கு எல்லாவற்றையும் செய்து கொடுக்கும்…! என்று முதலிலே காவியங்களாகத் தீட்டி வைத்து விடுவார்கள் அந்தக் காவியத்தின்படி நமக்குள் ஆசைகள் உருவாகிறது. அதன்படியே அங்கே சொல்லும் மந்திரங்களை நமக்குள் பதிவாக்கி விடுகின்றோம்.

இப்படிப் பதிவாகிய பின்
1.ஆலயங்களுக்குச் செல்லும் போதெல்லாம் அந்த மந்திர ஒலிகளைச் சேர்த்துக் கொண்டே இருப்போம்.
2.(பெரும் பகுதியானோர் மந்திரம் சொல்பவர்களாகத் தான் இருப்பார்கள்).

ஆலயங்களுக்குச் சென்று சாங்கியங்கள் செய்து இன்னென்ன அர்ச்சனை செய்தால் அந்தத் தெய்வம் உன்னைக் காக்கும்.
1.நீ செய்யும் அர்ச்சனை நேராக ஆண்டவனுக்குச் சென்று
2.அவன் மெச்சி உனக்கு வேண்டிய நன்மைகளைச் செய்வான் என்ற உணர்வுகளைத் தான் ஆலயத்தில் தோற்றுவிக்கின்றார்கள்.
3.ஆசைகளை ஊட்டும் ஆலயமாகத் தான் மாற்றி வைத்து விட்டார்கள்.

நேற்று வரையிலும் அந்த ஆலயத்தில் கூட்டம் இல்லை. ஆனால் யாகங்களையும் வேள்விகளையும் அங்கே செயல்படுத்திய பின் “வசியப்படுத்தப்பட்டு…” அந்த ஆலயங்களுக்கு நாம் அதிகமாகச் செல்கின்றோம்.

கடைசியில் “சரணாகதி தத்துவம்” என்று காட்டியிருப்பார்கள்.
1.ஆண்டவனிடத்தில் உன்னுடைய கஷ்ட நஷ்டங்களைச் சொல்லிவிடு.
2.சொல்லி விட்டால்… அபிஷேகம் செய்யும் உயர்ந்த பதார்த்தங்களை எல்லாம் ஏற்றுக் கொண்டு
3.உனக்கு வேண்டியதை அவன் செய்வான்…! என்று இப்படித்தான் அரசர்கள் வழியில் நாம் வணங்கிக் கொண்டுள்ளோம்.

வேதங்கள் கூறியவற்றில் அதர்வண வேதம் என்று மனிதனுடைய நிலைகளை அரசர்கள் மாற்றி… மதம் என்ற நிலைகள் உருவாக்கப்பட்டு அதனின் மறைவிலே தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேதத்தின் தத்துவங்களை குலதெய்வம் என்ற நிலையை அன்றைய அரசர்கள் தன் மக்களுக்குள் பாய்ச்சி… அடிமைகளாக ஆக்கி விடுகின்றார்கள்.

அன்றைய அரச காலங்களின் வழி வழி தான் இன்றும் நாம் வேதங்களைச் சொல்வதும்… அதர்வண வேதங்களைக் கையாள்வதும் அபிஷேகங்களைச் செய்வதும்…
1.ஆண்டவனிடத்தில் வரம் வாங்குவது என்ற நிலைகளில்
2.இன்றும் நாம் வழிபட்டு வந்து கொண்டிருக்கின்றோம்.

தவறு செய்யாமலேயே… தவறுகள் வளர்ந்து கொண்டு வருவதன் காரணம் என்ன…?

தவறு செய்யாமலேயே… தவறுகள் வளர்ந்து கொண்டு வருவதன் காரணம் என்ன…?

 

உதாரணமாக… ரோட்டிலே செல்கின்றோம் அல்லது அக்கம்பக்கத்தில் நடக்கக்கூடிய நிகழ்ச்சிகளை வேடிக்கை பார்க்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம்.

அவர்கள் படும் கோபமோ வெறுப்போ… ஒருத்தருக்கொருவர் சண்டையிடும் பகைமை உணர்வுகளையோ… அல்லது அவர்கள் வேதனைப்பட்டுத் துடித்துக் கொண்டிருப்பதையோ நாம் பார்த்து விட்டால் அது நமக்குள் பதிவாகி விடுகின்றது.

இத்தகைய பதிவின் நிலைகள் நமக்குள் வரும் போது
1.நம் நல்ல குணங்களை இயக்க முடியாது போய் விடுகின்றது.
2.நல்லதைச் சிந்திக்கும் நிலையும் இழந்து விடுகிறோம்.

புதிதாக மருமகள் குடும்பத்திற்கு வந்திருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். மேலே சொன்னதை எல்லாம் வேடிக்கையாகப் பார்த்து அது பதிவாகி இந்த உணர்வுகள் வளர்ந்து விட்டால் அடுத்து அந்த மருமகள் தன் காரியங்களைச் சீராக செயல்படுத்த முடியாதபடி போய் விடுகிறது.

இதற்குக் காரணம் யார்…?

மற்றவர்கள்… அதாவது தவறு செய்வதையும் கோபப்படுவதையும் சண்டையிடுவதையும் நோயுடன் வாடுபவர்களையும் உற்று நோக்கப்படும் பொழுது அந்த உணர்வுகள் பதிவாகி விடுகிறது. நல்லதை எண்ணும் பொழுது அதைச் செயலற்றதாக மாற்றி விடுகின்றது… சிந்தனை குறைகிறது.

இதை எல்லாம் வேடிக்கை பார்த்துவிட்டு வந்த பின்…
1.அந்த மருமகள் ஒரு பொருளைக் கையில் எடுத்தால் அதைப் பலமாக பிடிப்பதற்கு மாறாக…
2.ஒரு கரண்டியோ அல்லது பொருளையோ அல்லது ஒரு கண்ணாடி டம்ளரையோ எடுத்தால்
3.தன்னை அறியாமலே அது நழுவிக் கீழே விழுவதைப் பார்க்கலாம்.

ஏனென்றால் “இவருடைய நினைவாற்றல்… அவர்கள் சண்டையிட்ட உணர்வுகளுடன் செல்லப்படும் பொழுது…” அந்தக் கரண்டியை வலுவாகப் பிடிக்க முடியாத நிலையில் கீழே விழுந்து விடுகிறது.

இந்த உணர்வு வரப்படும் பொழுது
1.“இப்படி விழுந்து விட்டதே…” என்று எண்ணப்படும் பொழுது
2.அடுத்த பொருளையும் தவறிக் கீழே போட்டு விடுவார்கள்.

சிந்தனை இழந்து இப்படிப்பட்ட செயல்கள் நடக்கப்படும் பொழுது… அந்த வீட்டிலே தன்னை அறியாமலே ஒருவருக்கொருவர் சண்டையிடும் நிலை வந்து விடுகின்றது.

ஏன் இப்படிக் கீழே போட்டாய்…? என்று கோபமாக அதைக் கேட்டுப் பதிவாக்கி விட்டால் அடுத்து ஒரு இரண்டு முறை இவ்வாறு நடந்து விட்டால் மருமகள் மீது மாமியாருக்குக் கோபம் வருகிறது.

அந்தக் கோபத்தின் உணர்வு பதிவாகி அது வளர்ந்து விட்டால் “நம்மை இப்படிப் பேசுகின்றார்களே…” என்று மருமகளுக்கு இந்த எண்ணங்கள் வருகின்றது.

அப்படி வந்து விட்டால் அடுத்தடுத்து மற்ற காரியங்களையும் சீராகச் செயல்படுத்த முடியாதபடி ஆகிவிடுகிறது.
1.தவறு செய்யாமலேயே தவறுகள் வளர்ந்து கொண்டே வருகின்றது.
2.இதைத்தான் கீதையிலே எதை நினைக்கின்றாயோ நீ அதுவாகின்றாய் என்று தெளிவாக்கப்பட்டுள்ளது.

இங்கே தான் மகிழ்ச்சியான நிலையில் இருக்கப்படும் பொழுது அதைப் போல் மற்றவர்களும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற ஆசைகள் இருந்தாலும் அடுத்தவர் குடும்பத்தில் நடக்கும் குறைகளைப் பார்த்து இப்படி நடக்கின்றதே…! என்று உற்றுப் பார்த்த உணர்வுகள் தனக்குள் வலுவாகி… அதுவாக இங்கேயும் மாறி விடுகின்றது.

1.அந்தக் குடும்பத்தில் சந்தர்ப்பத்தால் தான் குறைகள் ஏற்பட்டத
2.அதே சந்தர்ப்பம் இங்கேயும் வந்து இயக்கி விடுகின்றது.

இப்படி இது வரிசையில்… மகிழ்ச்சியாக வாழக்கூடிய குடும்பத்தில் ஒருவருக்கொருவர் பகைமைகள் வந்து விடுகின்றது.

சிறிது காலம் எல்லாம் சந்தோஷமாக இருந்தோம்.. வர…வர… எங்கள் குடும்பத்திலே மகிழ்ச்சியே இல்லை…! என்ன ஆனதோ…? எந்தத் தோஷமானதோ…? யார் சாபமிட்டாரோ…? யார் செய்வினை செய்தார்களோ…? என்ற உணர்வுகள் வந்துவிடுகிறது.

இப்படி ஆன பின் அடுத்து ஒரு ஜோசியரிடம் சென்றால்… இவருடைய நினைவாற்றலை வைத்து “உங்களுக்கு ஆகாதவர்கள் செய்வினை செய்துள்ளார்கள்…! அதனால் தான் இப்படி நடக்கிறது…!” என்று நம் உணர்வைக் கவர்ந்து அவர்கள் அப்படிச் சொல்வார்கள்.

பின் நாம் அதை உறுதிப்படுத்துவதற்காக அவருக்குக் காசையும் கொடுப்போம். அதற்குப் பின் நமக்குக் கெடுதல் செய்தவருக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று இந்த உணர்வுகளைத் தூண்டி விடுகின்றது.

1.அவர்களைத் திருத்த வேண்டும் என்பதற்கு மாறாக
2.அந்தக் குடும்பத்திற்கு நாம் ஏதாவது தொல்லைகள் ஏற்படுத்த வேண்டும் என்ற உணர்வு அங்கே வந்து விடுகிறது.

ஆனால் நாம் அவர்களுக்குத் தொல்லை கொடுக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டாலும் நம் உடலுக்குள் “இங்கே ஒரு குடும்பம் இருக்கின்றதே….”

நம் உடலில் நல்ல உணர்வுகளால் உருவான அந்த நல்ல அணுக்களுக்கு நாம் தொல்லைப்படுத்த எண்ணும் உணர்வுகள் பாய்ந்து “உடலுக்குள்… இந்தக் குடும்பத்திற்குள் பெரும் போராகிவிடும்…!”

இப்படிப் பெரும் போராகி நமக்குள் வேதனை உருவாகி விடுகிறது.

இதையெல்லாம் என்றைக்கு நாம் நிவர்த்தி செய்வது…? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

1.துருவத்தின் ஆற்றலை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்து
2.துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை நீங்கள் கவர்ந்து உங்களுக்குள் அதைப் பெருக்கிக் கொள்வதற்காகத் தான்
3.அடிக்கடி யாம் இதைப் உபதேசிப்பதும்… உங்களுக்குள் பதிவாக்குவதும்…
4.உங்களைக் கூர்ந்து கவனிக்க வைப்பதும்… உபதேசத்தில் கவனம் செலுத்தும் படி செய்து
5.உங்கள் உடலில்… முன் இருக்கும் விலா எலும்புகளில் இதைப் பதிவாக்குகின்றோம்.

இதை உங்கள் கண்களால் உற்று நோக்கிக் கவரப்படும் போது அது உங்களுக்குள் ஊனாகப் பதிவாகி விடுகின்றது. இந்தப் பதிவை மீண்டும் நீங்கள் எண்ணினால்
1.துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வுகளை நுகர்வதும்
2.அதற்குத் தக்க உயர்ந்த சிந்தனைகள் கொண்டு… தெளிவான நிலையில் தெளிவான வாழ்க்கை நடத்தவும் இது உதவும்.

அதற்குத்தான் உபதேசங்களைக் கொடுத்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறும்படி செய்து கொண்டே வருகின்றேன் (ஞானகுரு).

“அடுத்தவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்…?” என்ற எண்ணத்திலேயே தான் வாழ்கிறோம்

“அடுத்தவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்…?” என்ற எண்ணத்திலேயே தான் வாழ்கிறோம்

 

உங்களை நீங்கள் அறிந்து கொள்வதற்குத்தான் இதைச் சொல்கிறோம். ஏனென்றால் என்னை அறிந்து கொள்ள குருநாதர் பல அனுபவங்களைக் கொடுத்தார்.

1.இந்த வாழ்க்கையில் நீங்கள் யாரையும் குறை காண வேண்டாம்.
2.சந்தர்ப்ப பேதங்கள் நம்மை எப்படி உருமாற்றுகின்றது…? என்ற நிலையை நீங்கள் உங்களை அறிந்து கொள்ள முடியும்.

இன்றிருக்கும் விஷமான விஞ்ஞான உலகில் அருள் ஞானிகளின் அருள் உணர்வை நாம் எடுத்து “அந்த மூச்சலைகளை இங்கே நிரப்ப வேண்டும்…” என்று தான் சொல்லி வருகின்றோம்.

நமது குருநாதர் வைகுண்ட ஏகாதசி அன்று தன் உடலின் தன்மை உணர்வை ஒளியாக மாற்றிச் சென்றார். அவர் ஒளியான உணர்வை நமக்குள் சேர்த்து “இனி பிறவியே இல்லை…” என்ற நிலையை நாம் அடைய வேண்டும்.

என்றுமே அந்த ஒளியின் உணர்வாக மகிழ்ந்த நிலையில் வளர வேண்டும் என்ற அந்த நிலைக்குத்தான் இதை உபதேசிக்கின்றோம் (ஞானகுரு).

1.நீங்கள் எல்லாம் அந்த ஆற்றல்களைப் பெற வேண்டும் என்று நான் எண்ணும் பொழுது நானும் அதைப் பெறுகின்றேன்.
2.நான் மட்டும் பெற வேண்டும் என்றும்… நான் சொல்வதை எல்லாம் நீங்கள் கேட்க வேண்டும் என்று எண்ணினால் நான் நிச்சயம் பெற முடியாது.

சிறு துளி பெரு வெள்ளம்…! விண்ணிளே சூரியனின் அணைப்பிலே கோள்கள் சென்றாலும் பல பல உணர்வுகள் இருந்தாலும் அது அனைத்தும் அதனுடன் சேர்த்து இணைக்கப்படும் பொழுது தான் ஒளியின் சுடராக மாறுகின்றது.

நமது உயிரும் அவ்வாறே…!

ஆகவே எல்லோருடைய உணர்வுகள் நமக்குள்ளும் உண்டு. அதைப் போல எல்லோரிடத்திலும் பல பல உணர்வுகள் உண்டு.

அதே சமயத்தில் ஒருவரிடத்தில் கார உணர்வு அதிகமாக இருக்கலாம்… ஒருவரிடத்தில் சலிப்பு உணர்வு அதிகமாக இருக்கலாம்… ஒருவரிடத்தில் சஞ்சல உணர்வு அதிகமாக இருக்கலாம்.

இதைப் போல ஒவ்வொரு உடலிலும் பல நிலைகள் முன்னனியில் உண்டு…! அதன் கீழ் இயங்கும் நிலைகள் கொண்டு அவர்கள் எண்ணங்களும் அவர்களுடைய செயல்களும் அவர்களுடைய உடலின் நிலைகளும் அவரின் நோய்களும் அதுவாகத்தான் இருக்கும்.

1.இதைப் போன்ற பல பேரிடம் நாம் தொடர்பு கொண்டாலும்
2.அவர்கள் அனைவரும் நலம் பெற வேண்டும்
3.மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும் என்ற ஏக்கத்துடன் நாம் இருப்போம் என்றால்
4.”சமத்துவம்” பெறும் நிலை வருகின்றது.

இதைப் போன்ற உணர்வின் நிலையை குருநாதர் சாக்கடைக்கு முன் அமர்ந்து என்னையும் அமரச் செய்து எனக்குள் வியாசகரின் தத்துவங்களை உபதேசித்தார்.

சாக்கடையில் அமர்ந்து தான் அதையெல்லாம் சொன்னார்.

காரணம்… சாக்கடையின் நாற்றத்திலிருக்கும் பொழுது மற்றவர்கள் என்னைப் பார்க்கின்றனர்…! பார்த்தாலும் “சாக்கடை நாற்றமாகின்றதே..,” என்ற எண்ணம் தான் எனக்குள் வருகின்றது.

ஆனால் அதே சமயம்… அவர் சாக்கடைக்குள் அமர்ந்து அவர் சொல்லும் பொழுதெல்லாம் எனக்கும் அருவருப்பாக இருக்கும்.

வியாசகருடைய தன்மைகளை அங்கே எடுத்துக் கூறி அந்த உணர்வின் ஆற்றல் கொண்டு எவ்வாறு விண்ணுலகம் சென்றார்…? என்று சொல்லும் பொழுது இந்த நிலைகள் மாறி அந்த உணர்வுகள் வருகின்றது.

இந்த நாற்றம் அப்பொழுது வரவில்லை.

1.பிறர் என்ன பேசுகின்றார்…? என்று புற நிலைகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டியதில்லை.
2.நமக்குள் இருக்கும் உணர்வின் தன்மையை மெய்ப் பொருளின் உணர்வின் தன்மையை நாம் பெற வேண்டும்.

யார் என்ன சொல்வார்கள்…? இவர்கள் என்ன சொல்வார்கள்…? என்னை அசிங்கமாகப் பேசுவார்களோ…?
1.என்னைக் கேவலமாக நினைப்பார்கள்
2.என்னைக் குறையாக நினைப்பார்கள், என்று
3.இதன் அடிப்படையில் தான் பெரும் பகுதியானவர்கள் இன்று நாம் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

நாம் எதை மையமாக வைக்கின்றோமோ அதனின் உணர்வின் துணை கொண்டுதான் மற்றவைகள் அனைத்தும் அது இயங்கும்.

ஆனால் மெய்ப்பொருளின் உணர்வை நாம் பெற வேண்டும் என்று “குரு காட்டிய வழிகளில்… அதை முன்னிலைப்படுத்தி எடுக்கப் பழக வேண்டும்…”

அந்த மெய்பொருளால் நம்மைப் பார்ப்பவர்கள் இருள்கள் நீங்க வேண்டும். அவர்கள் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் என்று இதை ஏற்றுக் கொண்டு இந்த வாழ்க்கையில் நாம் தொடர வேண்டும்.

இதை நீங்கள் தொடர்வீர்கள் என்றால்…
1.தீமையை அகற்றிடும் நிலையாகவும்
2.தீமையை அகற்றிடும் அந்தச் சக்தியாகவும்
3.உங்கள் சொல்லைக் கேட்போரும் தீமைகள் அகற்றிடும் நிலையாகவும் நீங்கள் உருவாக முடியும்.

நல்ல நேரத்தைத் தான் நாம் உருவாக்க வேண்டும்…!

நல்ல நேரத்தைத் தான் நாம் உருவாக்க வேண்டும்…!

 

சாங்கிய சாஸ்திரத்தைச் செய்து நல்ல நேரம் வருகின்றதா… கெட்ட நேரம் வருகிறதா…? என்று தான் இன்று பார்த்துக் கொண்டு வாழ்கிறோம்.

உதாரணமாக ஒரு மனிதன் திடீரென்று கடுமையான நெஞ்சு வலியால் அவதிப்படுகின்றான்… அவனுக்கு மூச்சுத் திணறலாக இருக்கின்றது என்று வைத்துக் கொள்வோம்.

மருத்துவரிடம் உடனடியாக அழைத்துப் போனால் தான் அவனுக்குச் சரியாகும். நல்ல நேரம் பார்த்து அவனை மருத்துவரிடம் கொண்டு போக முடியுமா…?

நல்ல நேரம் பார்த்துக் கொண்டிருந்தால் “அந்த நல்ல நேரம் அவரைக் காப்பாற்றுமா…?”

இப்படி… நம்மை அறியாமலேயே நல்ல நேரம் கெட்ட நேரம் என்று தான் சாங்கியப்படி எண்ணிக் கொண்டிருக்கின்றோம். அதிலே உண்மை இல்லை.

ஆக அவரைக் காக்க வேண்டும் என்று எண்ணத்தில் உடனே சென்றால் அவருக்கு நல்ல நேரம் வருகிறது… அவரை நிச்சயம் பிழைக்க வைக்க முடியும்.

நல்ல நேரம் எங்கே உருவாகின்றது…?
1.நமக்குள் தான் உருவாகின்றது
2.நல்ல நேரத்தைத் தான் நாம் உருவாக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

நல்ல நேரத்தை உருவாக்க வேண்டும் என்றால்…
1.இப்போது ஒரு கஷ்டம் வருகின்றது என்றால்
2.அந்த நேரத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்
3.அந்தச் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
4.எனக்கு நல்லது நடக்க வேண்டும்…! என்ற இந்தச் சந்தர்ப்பத்தை அங்கே உருவாக்க வேண்டும்
5.அப்பொழுது அந்த நல்லது நடக்கும்… இது நல்ல நேரம் ஆகின்றது

ஆனால் ஒருவர் வருகிறார். “ஜாதகப்படி இந்த நேரம் மோசமான நேரம்… இந்த நேரத்திலே நீங்கள் நல்ல காரியத்தை ஆரம்பிக்கின்றீர்கள்…!” என்று நம்மிடம் சொல்கிறார்.

அவர் சொல்வதைப் பதிவு செய்தால் போதும்.
1.அவர்கள் சொல்லும் அந்தக் கெட்ட நேரம் நமக்குள் வந்து
2.அது கெட்ட நேரமாகவே ஆகிவிடுகிறது.

ஆக கெட்ட நேரமும் நல்ல நேரமும் எங்கே எப்படி உருவாகின்றது…? என்பதை நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

வீட்டில் இந்தக் கஷ்டம் அந்தக் கஷ்டம் என்று சொல்வார்கள். பின் என்னுடைய நேரம் கெட்ட நேரம்… அதனால்தான் இப்படியானது…! என்று சொல்லிவிடுவார்கள்.

இதை எல்லாம் எடுத்துவிட்டு
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் நாம் எண்ணி உயிரிலே உருவாக்கப்பட்டால்…
1.அந்த உணர்வின் வழி அந்த உணர்ச்சி… அது நம்மை ஆளத் தொடங்கும்
2.நாம் எதை எண்ணுகின்றோமோ அந்த உணர்வைக் கண்களால் நினைக்கப்படும் போது
3.அந்த உணர்வு வலுவாகி உயிரிலே மோதும் போது அதை நல்ல நேரமாக உயிர் சமைக்கும்.

ஆக… நல்ல நேரமும் கெட்ட நேரமும் மனிதனுக்கு இல்லை.

எந்தச் சூழ்நிலையிலும் இனிமேல் பதட்டமடையாது… “மன உறுதி கொண்டு குரு காட்டிய அருள் வழியில் நடந்து வாருங்கள்…”

எந்தச் சூழ்நிலையிலும் இனிமேல் பதட்டமடையாது… “மன உறுதி கொண்டு குரு காட்டிய அருள் வழியில் நடந்து வாருங்கள்…”

 

நான் சம்பாதிக்கின்றேன்… நீயும் சம்பாதிக்கின்றாயா…? என்று ஆசைப்பட்டாலும் இனி உலகப் போர் நடந்தால் அணு குண்டு யுத்தம் தான் நடக்கும்.
1.எந்த நிமிடம் அணுகுண்டோ மற்ற நிலைகளோ எங்கே… எப்படி விழுகப் போகிறது…! என்று சொல்ல முடியாது
2.அடுத்தவன் நம் மேல் போடப் போகின்றான்… நாம் அவன் மீது போடப் போகின்றோம்…
3.இது தான் நடக்கப் போகிறது…

அந்த நிலை ஆவதற்கு முன் இந்த உடலை விட்டுச் செல்லும் முன் “நாம் எதைச் சேமிக்க வேண்டும்…?” என்பதைத்தான் இங்கே உணர்த்திக் கொண்டு வருகின்றோம்.

துருவ நட்சத்திரம் வேகா நிலை பெற்றது. நம் உயிரும் எந்த நெருப்பிலும் வேகுவது இல்லை.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளை நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களில் சேர்த்துக் கொண்டு வந்தோம் என்றால் உயிரைப் போன்று வேகா நிலை பெற்றுத் துருவ நட்சத்திரத்துடன் இணைந்து நாம் பிறவியில்லா நிலை அடைய முடியும்.

என் சொத்து உன் சொத்து…! என் காசு உன் காசு…! கௌரவம்…! அனைத்தும் போய்விடும். காரணம் உலக யுத்தம் மிக அருகில் இருக்கின்றது;. ஆரம்பித்தால்…
1.ஒரு பத்து நிமிடம் அல்லது குறைந்தது ஒரு பதினைந்து நாட்களுக்குள் உலகம் முழுவதற்குமே விஷத்தன்மை பரவப் போகின்றது.
2.நாம் என்ன செய்யப் போகின்றோம்…?

உடலை விட்டு எப்பொழுது நாம் பிரிந்தாலும் மீண்டும் அடுத்த உடலுக்குள் சென்று விடக்கூடாது இன்னொரு பிறவிக்கு வந்து விடக்கூடாது

ஆனால் இப்பொழுது இருக்கக்கூடிய சூழ்நிலையில் சாதாரணமாக யார் உடலை விட்டுப் பிரிந்தாலும் நஞ்சின் தன்மையைத் தான் அடைகின்றார்கள்.

ஆக… இந்தக் காற்று மண்டலமே நஞ்சின் தன்மையாக இருந்தாலும் அதை நீக்கக்கூடிய சக்தியை நாம் இப்போதே சேர்த்துக் கொண்டு வரவேண்டும்.

எது எப்படி இருந்தாலும்
1.உயிர் உடலை விட்டுச் சென்றால் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குள் தான் நாம் செல்ல வேண்டும்.
2.தோக்கி உள்ள விஷங்களை அங்கே கரைத்துப் பழகுதல் வேண்டும்

அதற்குத் தான் இப்பொழுது பயிற்சியாக உங்களுக்கு மீண்டும் மீண்டும் கொடுத்துக் கொண்டே வருகின்றோம்.

எத்தனை பேர் இதை நீங்கள் எடுக்கிறீர்கள்…! என்று தெரியவில்லை. ஏனென்றால் நீங்கள் தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
1.எந்தச் சாமியும்… எந்தச் சாமியாரும்… “உங்களை யாரும் காக்கப் போவதில்லை…”
2.உங்கள் உயிர் தான் உங்களைக் காக்க முடியும்.

உயிரின் துணை கொண்டு எந்த உயர்ந்த சக்தியை நீங்கள் எடுக்கின்றீர்களோ… அந்த உணர்வை வைத்து அருள் வாழ்க்கை வாழ்ந்திடவும்… இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை அடைவதற்கும்… இந்த ஒன்றைத் தவிர வேறு வழி இல்லை.

ஏற்கனவே பல முறை உங்களுக்கு இதை எல்லாம் ஞாபகப்படுத்திக் கொண்டே தான் வருகின்றோம். இனி எந்த நேரம்… எது நடக்கும்…? என்று சொல்ல முடியாது அந்த அளவுக்குத் தான் இந்த உலகம் இருக்கின்றது. ஆகவே
1.நம் குருநாதர் காட்டிய வழியில் தியானத்தைக் கூட்டுங்கள்
2.ஆத்ம சுத்தியை ஒவ்வொரு நொடிப் பொழுதும் செய்து கொண்டே வாருங்கள்
3.மன அமைதியைக் கொண்டு வாருங்கள்
4.எத்தகைய சூழ்நிலையிலும் பதட்டமடையாதபடி மன உறுதி கொண்டு அதை மாற்றிக் கொள்ளுங்கள்.

இந்த உலகம் எங்கோ போய்க் கொண்டிருக்கின்றது…!

இதிலிருந்து நீங்கள் தப்ப வேண்டும் என்றால் தியானத்தைச் சரியான முறையில் கடைப்பிடித்து துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்கள் உடலில் இருக்கக்கூடிய ஒவ்வொரு அணுக்களுக்கும் சேர்த்துப் பழகுங்கள்.

இதைச் செய்தால் தான் தப்ப முடியும்.

“வேதனைகள் வரும் போது தான்…” நம்மைப் பாதுகாக்கும் சக்தியைக் கூட்ட முடியும்

“வேதனைகள் வரும் போது தான்…” நம்மைப் பாதுகாக்கும் சக்தியைக் கூட்ட முடியும்

 

நமது வாழ்க்கையில் நல்லதைத் தான் எண்ணுகின்றோம். அதன் படி நடக்கவில்லை என்றால் ஒவ்வொரு செயல்களிலும் வேதனை கலந்தே வருகின்றது. ஆனாலும்…
1.”வேதனைப்படுகிறோம்… கஷ்டப்படுகிறோம்…” என்ற எண்ணங்கள் இப்படி வரும் பொழுதுதான்
2.நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய சக்தியும் உண்டு.

இருப்பினும் வேதனை வெறுப்பு சோர்வு என்ற உணர்வு அதிகரித்து விட்டால்… எத்தகைய நல்ல செயல்களாக நாம் செயல்படுத்திக் கொண்டிருந்தாலும் அதைச் செயல்படுத்த முடியாதபடி ஒரு சோர்வு வந்து விடுகிறது.

சோர்வடைய… சோர்வடைய… நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களும் சோர்வடையத் தொடங்குகிறது. சோர்வால் மீண்டும் வேதனை வருகிறது.
1.இப்படி வேதனைகளை நாம் அடுக்கடுக்காக இந்த உடலிலே
2.இப்போது சேர்த்துக் கொண்டே தான் இருக்கின்றோம் – எந்த நிலையில் யாராக இருந்தாலும் சரி… அப்படித்தான்.

புழுவில் இருந்து மனிதனாக வரும் வரையிலும் வேதனையிலிருந்து விடுபட வேண்டும் என்ற வலுவான எண்ணத்தில் தான் வளர்ச்சியாக வந்தது.

இப்படி எல்லா வகைகளிலும் பரிணாம வளர்ச்சி அடைந்து மனிதனாக வந்த நாம்… வீட்டிலே ஒரு காரியத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று நினைக்கின்றோம். அந்த நேரத்தில் ஒரு கண்ணாடி டம்ளர் கீழே விழுந்து உடைந்து விடுகிறது.

நேற்றுத் தான் வாங்கி வந்தேன்… அதற்குள் இப்படி உடைந்து விட்டதே…! என்று மன திருப்தி இல்லாதபடி வேதனைப்படுகின்றோம். அன்றாட வாழ்க்கையில் இப்படி நாம் எண்ணியபடி நடக்கவில்லை என்றால் வேதனை அல்லது சோர்வு அல்லது சஞ்சலம் என்ற இந்த உணர்வுகளைத் தான் கவர நேர்கின்றது… அதைத்தான் சுவாசிக்கின்றோம்.

இப்படி நுகர நுகர… நம் உடலுக்குள் அத்தகைய அணுக்கள் உருவாகத் தொடங்கி விடுகின்றது. இதைப் போன்ற நிலைகளிலிந்து நாம் விடுபட வேண்டும்.
1.இருந்தாலும் இது எல்லாமே உடலின் இச்சைகள் கொண்டு வருவது தான்.
2.ஆனாலும் இந்த உடல் வேண்டும்
3.இந்த உடல் அமைதியாக இருக்க வேண்டும் என்றால் நம்மை அறியாது வரும் தீமைகளைத் துடைத்துப் பழக வேண்டும்.

ஈஸ்வரா…! என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று சிறிது நேரம் ஏங்கித் தியானிக்க வேண்டும்.

அதாவது
1.பிற உணர்வுகள் நம் உயிரிலே பட்டு அது இயக்காதபடி
2.உடலுக்குள் அது அணுவாக உருவாகாதபடி தடைப்படுத்திப் பழகுதல் வேண்டும்.

ஏனென்றால் நாம் மூக்கு வழி நுகர்ந்தது (சுவாசித்தது) உயிரிலே பட்டுத்தான் அந்தந்த அறிவின் இயக்கமாக இருக்கின்றது. ஆகவே புருவ மத்தியில் (உயிரில்) அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்து இந்த வலுவைக் கூட்டி தீமையான உணர்வுகள் புகாதபடி தடுத்தல் வேண்டும்.

பின் கண்களை மூடி உடலில் இருக்கக்கூடிய எல்லா அணுக்களுக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும் என்று “ஒரு நொடிக்குள் கண்ணின் நினைவை உள்ளே செலுத்தி விட வேண்டும்…”

இப்படி ஒரு பழக்கம் வந்து விட்டால் உடலுக்குள் தீமை செய்யும் அணுக்கள் உருவாகாதபடி தடுத்துவிடலாம். இதற்கு முன்னாடி பதிவான உணர்வுகள் விளைந்தது… உடலிலிருந்து மீண்டும் அந்த நினைவுகள் வந்தாலும்… அதையும் மாற்றிக் கொள்ளலாம்.

ஆக… இந்த உடலுக்குப் பின் நாம் கொண்டு செல்வது எது…?

செல்வமோ சொத்தோ எல்லாம் இருந்தாலும் கடைசியில் நோயாகி விட்டால் அதை அனுபவிக்க முடியாத நிலை தான் வருகின்றது. முதலிலே சொன்னபடி வேதனைகள் அதிகரிக்கும் சந்தர்ப்பமாகத் தான் ஆகிவிடுகின்றது.

அதைப் போன்ற நிலையிலிருந்து தப்புவதற்கு ஒவ்வொரு நொடிகளிலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இந்த ஆத்ம சுத்தியைக் கையாளுங்கள்.
1.தீமைகளை நீக்குங்கள்
2.அருளைப் பெருக்குங்கள்
3.இருளை அகற்றலாம்
4.அமைதியான வாழ்க்கை வாழலாம்
5.சிந்தித்துச் செயல்பட முடியும்
6.சிந்தனையுடன் வாழ்க்கை நடத்த முடியும்.

இதை எல்லாம் மீண்டும் மீண்டும் உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றோம் (ஞானகுரு).

கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கும் உலக மாற்றங்கள்…

கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கும் உலக மாற்றங்கள்…

 

உதாரணமாக 27 நட்சத்திரங்களிலிருந்து வரக்கூடிய உணர்வலைகள் சூரியனுக்குச் செல்லும் பாதையில் துருவத்தின் வழி நம் பூமிக்குள் கவரப்பட்டால் நம் பூமியின் காற்றழுத்த மண்டலத்தில் மோதிய பின் அந்த உணர்வுகள் எரிக்கப்பட்டு அது பரவப்பட்டு மின்னலாக மாறுகிறது.

1.கடலிலே பட்டால் மணலாக மாறுகின்றது…
2.மரத்தில் பட்டால் மரம் கருகி விடுகின்றது.
3.அந்த மின்கதிர்களின் உணர்வுகள் பூமிக்கு அடியிலே சென்றால் நடு மையத்தில் கொதிகலனாக மாறுகின்றது.
4.இதிலே வந்த துகள்கள் அனைத்தும் பூமியிலே படர்ந்து விடுகின்றது.

ஆனால் இதற்கு எதிர்நிலையான நட்சத்திரங்களின் துகள்கள் நம் பூமியின் ஈர்ப்பிற்குள் வந்தால் அதனுடைய அழுத்தம் அதிகமானால் இந்த உணர்வலைகள் படர்ந்து இருக்கும் பொழுது இது இரண்டும் ஒன்றுக்கொன்று மோதும் போது சூறாவளியும் சுழிக்காற்றுகளும் உருவாகின்றது. இது இயற்கை…!

ஆனால் மின்னல்கள் கடலில் பட்டு மணலாக மாறியதை விஞ்ஞான அறிவு கொண்டு பிரித்து எடுத்து அதை யுரேனியமாக உருவாக்கி வைத்துள்ளார்கள். அதை வைத்து அணு உலைகளையும் விஷமான ஆயுதங்களையும் செய்து வைத்துள்ளார்கள்.
1.அதிலிருந்து வெளிப்பட்ட கசிவுகளை எல்லாம் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்துள்ளது.
2.எங்கெங்கு இது அதிகமாகச் செயல்படுத்தினார்களோ அந்த நாட்டில் உள்ள காற்று மண்டலத்தில் இது அதிகமாகப் படர்ந்து கிடக்கின்றது.

ஆனால் இயற்கையாக நட்சத்திரங்களுடைய உணர்வலைகள் அழுத்தங்கள் வரும் சமயம்… அதனுடன் மனிதன் செயற்கையாக உருவாக்கி வெளிப்படுத்திய அணுக்கதிரியக்கங்கள் மோதும் பொழுது
1.மிக மிகக் கடுமையான சூறாவளியாக
2.எல்லாவற்றையும் துரித கதியில் அழிக்கும் நிலையாக வந்து விடுகிறது
3.(வெயிலோ மழையோ காற்றோ பனியோ எதுவாக இருந்தாலும் அது வருடத்திற்கு வருடம் அதிகமாகிக் கொண்டே போகும்)
4.விஞ்ஞான அறிவால் செயல்படுத்தப்பட்ட இடங்களில் எல்லாம் இத்தகைய தீமைகள் படர்ந்து கொண்டே உள்ளது (TORNADO, CLOUDBURST, BOMB CYCLONE…)

இதை எல்லாம் மாற்றி அமைக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் இங்கே தென்னாட்டிலே தோன்றிய அகஸ்தியன்… அவன் உடலில் விளைந்த உணர்வுகள் பூமியிலே படர்ந்து கொண்டு தான் உள்ளது.

1.தென்னாட்டின் எல்லையில் அவனுடைய உணர்வுகள் அதிகமாக இருப்பதால்
2.அதை நாம் எளிதில் பெற்று அகஸ்தியனைப் போன்ற அருள் ஞானிகளாக உருவாகி
3.விஷத்தன்மையாக மாறிக் கொண்டிருக்கும் இந்த உலகை
4.அந்த விஷத்தை நீக்கிடும் ஆற்றலை நாம் பெற வேண்டும்.

எத்தகைய விஷத்தையும் அடக்கி ஒளியாக மாற்றிக் கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நமக்குள் செலுத்தி அதை வலுவாக்கி அதன் உணர்வைப் பூமியில் பரப்ப வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளை அடர்த்தியாக பூமியில் நாம் படரச் செய்யும் போது விஞ்ஞான அறிவால் உருவான விஷத்தன்மைகளை அகற்றி… இங்கே வாழும் மக்களை நாம் தெளிவாக்க முடியும்.

இதைப் படிப்போர் “அந்தத் தன்னம்பிக்கையுடன் செயல்படுத்துங்கள்…” அதே சமயத்தில் “அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் வளர்த்துக் கொண்டால்… உடலுக்குப் பின் நாம் பிறவியில்லா நிலை அடைகின்றோம்…!”

ஊழ் வினை என்ற மூல வித்தை மாற்ற வேண்டியதன் அவசியம்

ஊழ் வினை என்ற மூல வித்தை மாற்ற வேண்டியதன் அவசியம்

 

சந்தர்ப்பத்தால் எந்தத் தீய உணர்வுகள் நம் உடலில் உள்ள எலும்புகளில் வித்தாகப் பதிவானதோ
1.அந்த வித்தைச் சுற்றிலும்
2.அடுத்த நிலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெறச் செய்யப்படும் போது
3.அதைச் சுற்றி செல்கள் உருவாகும்.

இதனுடைய வலிமை அதிகமானால் அந்த வேதனை என்ற நிலைகள் தணிந்துவிடும். நாம் எப்படி ஆத்ம சுத்தி செய்து மற்ற உணர்வுகளை மாற்றுகின்றோமோ அதைப் போன்று தான்
1.உங்கள் உடலுக்குள் எலும்பில் உள்ள ஊனுக்குள் விளைந்த தீமையான உணர்வுகளை மாற்றி அமைத்தல் வேண்டும்.
2.ஞானிகள் கண்ட உண்மைகள் இது…!

அவர்கள் காட்டிய வழியில் நாம் ஊனுக்குள் மாற்றி அமைத்தால் அந்தத் தீமையை நுகரும் உணர்வுகள் அழிக்கப்படுகின்றது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் நுகர நுகர தீமையை நீக்கும் அந்த உணர்வுகள் உமிழ் நீராக மாறி… ஆகாரத்துடன் கலந்து இரத்தமாக மாறும் பொழுது நல்ல அணுக்களாக மாறி… நமக்குள் சிந்திக்கும் ஆற்றலும்… உடலுக்குள் இருக்கும் உறுப்புகளைத் தெளிவாக்கும் நிலையும் ஏற்படுகின்றது.

நம் வாழ்நாளில் இதற்கு முன்னாடி நாம் அறியாது சேர்த்த நோய்களை மருந்துகளைக் கொடுத்து நீக்கினாலும் மீண்டும் ஊனுக்குள் பதிவான வித்து (முந்தைய பதிவுகள்) முளைத்துக் கொண்டே இருக்கும்.

அதே சமயத்தில் கடுமையான நோய்கள் வந்திருந்தால் அதைக் கட்டுப்படுத்த அதற்கு வேண்டிய பத்தியங்களையும் டாக்டர்கள் (கட்டுப்பாடுகள்) சொல்வார்கள்.

இந்த பத்தியங்களை நாம் கடைப்பிடிக்க முற்படும் போது என்ன நடக்கிறது…?

உதாரணமாக… சர்க்கரைச் சத்து வந்து விட்டால் அது (இனிப்பு) இல்லாதபடி உணவையோ மற்றவைகளையோ உட்கொள்ளும் பொழுது அந்தக் கசப்பு வருகிறது… அதனால் வேதனை வருகிறது.
அடிக்கடி வேதனைகளைச் சேர்க்கப்படும் பொழுது
1.கட்டுப்பாடாக இருந்து சர்க்கரைச் சத்தை மறைத்து விடலாம்
2.ஆனால் இரத்தத்தில் கசப்பின் உணர்வு புது விதமாக மாறும்.

இருந்தாலும் ருசியாகச் சாப்பிட வேண்டும் என்று ஆசைகள் தூண்டும். ஒரு ஜிலேபியைப் பார்த்தால் “என்னால் சாப்பிட முடியவில்லையே…!” என்று வேதனை வருகின்றது. மற்றொருவர் இனிப்பைச் சாப்பிடுவதைப் பார்த்தால் நம்மால் சாப்பிட முடியவில்லையே என்ற வேதனை வருகிறது.

உடலில் உள்ள சர்க்கரைச் சத்தை நீக்கிவிடலாம். ஆனால் “ருசியாகச் சாப்பிட முடியவில்லையே..” என்ற வேதனையான உணர்வின் தன்மை உமிழ் நீராக மாறி விஷத்தின் தன்மையாக நம் உடலுக்குள் கலக்கின்றது.

இதைப் போன்ற நிலைகள் நம்முடைய வாழ்க்கையில் சந்தர்ப்பங்கள் மாறிக் கொண்டே இருக்கின்றது. இன்றைய செயல் நாளைய சரீரம்…!

ஆக… பகைமை கொண்ட உணர்வுகளையோ தீமையான உணர்வுகளையோ சந்திக்க நேரும் பொழுது நாம் அவைகளை மாற்றத் தவறினால்
1.எத்தனையோ சரீரங்களைக் கடந்து இன்று மனிதனாக வந்திருந்தாலும்
2.நான் நுகர்ந்த தீமைகள் இரத்தத்தில் இந்திரலோகமாகி
3.அணுவின் தன்மையாக பிரம்மலோகமாக மாறும் பொழுது
4.நம் உடலுக்குள் இருக்கும் நல்ல குணங்களைத் தின்று விடுகின்றது
5.நல்ல அணுக்களுக்குச் செல்லும் ஆகாரத்தைத் தடைப்படுத்தி விடுகின்றது.

நம் உடலில் இருக்கக்கூடிய இரத்தத்தில் இப்படி எத்தனையோ நிகழ்ச்சிகள் நடக்கின்றது.

விஞ்ஞான முறைப்படி இரத்தத்தைப் பரிசீலித்துப் பார்த்தால் சோகையாக இருக்கின்றது (ஹீமோகுளோபின் குறைவு)… சர்க்கரை சத்து இருக்கின்றது… உப்புச் சத்து இருக்கின்றது என்றெல்லாம் கண்டறிந்து சொல்வார்கள்.

ஏனென்றால் நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் இரத்த்த்தில் கலந்த பின் அந்தக் கலவையில் இப்படிப் பிரித்துவிடுகின்றது.

உதாரணமாக… உப்புச்சத்து அதிகமாகி அந்த இரத்தம் நுரையீரலுக்குள் சென்றால்
1.வேர்வையாகி… உப்பு கசிவது போன்று போகும் பக்கமெல்லாம் கசிவாகிறது
2அதனால் உடலில் நீர் அதிகமாகி உடலெல்லாம் “உப்ப ஆரம்பிக்கின்றது…”
3.நல்ல அணுக்களும் உப்புச் சத்தினால் கெட்டுப் போகின்றது
4.கிட்னியும் பலவீனம் அடைந்து விடுகின்றது.

இது எல்லாம் யார் தவறு செய்தது…?

சந்தர்ப்பத்தால் நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் இரத்தத்தில் கலந்த பின் நல்ல அணுக்கள் இவ்வாறு மடியத் தொடங்கி விடுகின்றது. இரத்தத்தைப் பரிசீலனை செய்து அதற்குத் தக்க டாக்டர்கள் மருந்துகளைக் கொடுத்தாலும் ஊனுக்குள் இருக்கும் மூல வித்தை அவர்களால் மாற்ற முடிவதில்லை.

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நம் ஊனுக்குள் பாய்ச்சி ஒளியான வித்துகளாக மாற்றுவோம்.

எனக்கு (ஞானகுரு) எப்படி அந்த அருளைப் பெறும் தகுதியை குருநாதர் ஏற்படுத்தினாரோ… அந்தச் சக்திகளைப் பெறும்படி செய்தாரோ… அதே வழியில் தான் உங்களுக்குள்ளும் பதிவாக்குகின்றேன்.

உயர்ந்த சக்திகளைப் பெற உங்களுக்கு “அந்த நினைவு தான் வேண்டும்…”

தீமை என்று தெரிந்து கொண்டாலே…
1.அடுத்த கணம் ஈஸ்வரா…! என்று துருவ நட்சத்திரத்தை எண்ணி
2.அதைப் பெற வேண்டும் என்று ஏங்கி கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வை உயிரிலே வலுவாக்கினால்
4.எத்தகைய வேதனையும் உள் புகாது தடுத்து விடுகின்றது.