பதினெட்டாம்படிக் கருப்பு என்று ஏன் சொல்கிறோம்…!

Image

Lord Ayyappa

பதினெட்டாம்படிக் கருப்பு என்று ஏன் சொல்கிறோம்…!

வாழ்க்கையில் அவசரம் ஆத்திரம் போன்ற உணர்வுகள் கொண்டு தன்னைத் திரும்பி பார்க்காது போகும் பொழுது நம்மை அறியாமலே இருளில் மடிந்து (விழுந்து) விடுகின்றோம்…! அப்படி விழுகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்..? என்ற நிலையைக் காட்டுவதற்குத் தான் பதினெட்டாம் படியை வைத்துக் காட்டுகின்றார்கள்.

பதினெட்டுப் படியைச் சீராக வைத்து அதை வழுக்கிடும் நிலைகளாக அமைத்து அங்கே அதற்கு அருகிலே “கருப்பாயி கருப்பணன்…” என்ற தெய்வங்களையும் காட்டுகின்றார்கள்.

ஐயப்பன் மேல் பக்தி கொண்டு வந்தாலும் ஐயப்பனைப் பார்க்க வேண்டும் என்ற வேகத்தில் வரும் போது மற்றதைச் சிந்திக்காது செயல்படும் தீமைகளை எவ்வாறு அகற்ற வேண்டும் என்று காட்டுகின்றார்கள்.

நம் எண்ணம் ஒருமித்து உயர்ந்த குணங்களைப் பெற்றாலும் நாம் போகும் பாதையில் எத்தனையோ இடையூறுகள் வருகின்றது. மற்றவர்கள் செய்யும் தவறுகளையோ மற்றதுகளையோ அதை எல்லாம் நம் கண்ணில் பார்க்காமல் இருக்க முடியாது.

அதன் உணர்வுகள் வரும் போது அதை எல்லாம் நம் உயிரான விஷ்ணு வரம் கொடுத்து நம் உடலாகப் பிரம்மமாகச் சிருஷ்டித்து விடுகின்றது.

ஆகவே இதை எல்லாம் அறிந்த பின் நாம் எதைச் சுவாசிக்க வேண்டும்…? எதை நம் உடலுக்குள் சிருஷ்டிக்க வேண்டும்…?
1.நமக்குள் தீமை விளைவிக்கும் இருளைத் தணித்து விட்டு
2.நம் வேகத்தின் உணர்வை அடக்கிப் படி மீது ஏறும் போது
3.தன் அருகில் வருவோரை அழைத்து அரவணைத்துச் செல்லும் உயர்ந்த பண்புகளை உடலுக்குள் வளர்க்கும்படிச் சொல்கின்றார்கள்.

அதாவது நம் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் வரும் தீமையான நிலைகளைத் தனக்குள் புகவிடாது தடுத்து அந்தத் தீமைகளை எவ்வாறு அடக்க வேண்டும்…? என்று நாம் தெளிந்திடும் நிலையாக ஐயப்பன் ஆலயத்தில் காவியத் தொகுப்பாகக் கொடுத்து பதினெட்டாம் படியை வைத்துள்ளார்கள்.

அன்று அவன் கூறிய அறிவுப்படி அதை அமைத்தாலும் இப்போது வெறும் ஐதீகம்… சாஸ்திரம்…! என்ற நிலைகளில் போய்விட்டது.

பதினெட்டாம்படிக்குச் சென்றால் நான் முதல் வருடம் போனேன். தேங்காய் சிதறுகாய் போட்டேன். அதற்கு வேண்டிய சாஸ்திரத்தைச் செய்தேன். ஐயப்பன் எனக்கு எல்லாம் செய்வான். ஆகையினால்
1.மூன்றாவது வருஷம் நான்காவது வருஷம் என்று இப்படிப் பதினெட்டு வருஷம் சென்றேன்.
2.இப்பொழுது முழுமை அடைந்து நான் ஐயப்பனின் அருளையே பெற்று விட்டேன் என்ற நிலைக்குத்தான் செல்கின்றார்கள்.

ஆனாலும் ஐயப்பன் கோவிலில் கூட்டம் கூடக் கூடக் அங்கே சென்று பதினெட்டாம்படி ஏறுவதற்குள் போகும் பாதையிலே எத்தனையோ பேர் மரணமடைகின்றார்கள்… (ACCIDENT) என்று கேள்விப்படுகின்றோம்.

ஐயப்பன் என்ற உயர்ந்த எண்ணம் கொண்டு சென்றாலும் அருகிலே இருப்போர்களை அரவணைத்துச் செல்வதற்குப் பதில் மற்றவரை வீழ்த்துகின்றோம்.

ஏனென்றால் அந்த வேக உணர்வுகள் கொண்டு செல்லும் பொழுது அருகில் வருபவனை அறியாது இருள் சூழ்ந்து கொள்கின்றது. அந்த இருள் சூழ்ந்த நிலைகள் வருவதைக் குறைப்பதற்குத் தான் அங்கே கருப்பாயி கருப்பணன் என்று வைத்து அந்த இருளை நீக்க வேண்டும் என்று காண்பிக்கின்றார்கள்,

ஆகவே ஐயப்பனின் அருள் கொண்டு மற்றவரையும் தன்னுடன் அரவணைத்துச் சென்று அவர்களுக்கு மகிழ்ச்சி ஊட்டுதல் வேண்டும்.
1.பதினெட்டாம் படி ஏறுவதற்கு முன் தான் அருகிலே இருப்போரை அரவணைத்து
2.அவர்கள் மேலே செல்லட்டும். அவர்கள் ஐயப்பனின் அருளைப் பெறட்டும் என்ற இந்த உணர்வின் தன்மை வரும் போது
3.நமக்குள் வரும் இருள் சூழும் நிலைகள் குறைந்து அமைதி கொண்டு நாம் அங்கே செல்ல போக முடியும்.

இதைத்தான் “வாழ்க்கையில் ஒழுங்குபடுத்தும் முறையாக… அங்கே காண்பிக்கப்பட்டு…!” அந்த உண்மையினுடைய நிலைகளை வளர்த்து பிறருக்குத் தீங்கு இல்லாத நிலைகள் மேலெ செல்லும் பொழுது அந்த மெய் ஞானி காட்டிய உணர்வின் தன்மையைப் பெற முடியும் என்று உணர்த்துகின்றார்கள்.

சாதாரண மக்களுக்கும் பக்தி என்றால் எது…? என்று காட்டி
1.மற்றோர்கள் உயர வேண்டும்.
2.அவர்கள் அருள் வாழ்க்கை வாழ வேண்டும்
3.அவர்களும் மெய் ஒளி காண வேண்டும் என்ற இந்த அரவணைப்பைக் கொண்டு செல்ல வேண்டும்.
4.அருள் ஞான உணர்வுகளைச் சீராக வளர்க்க வேண்டும் என்பதை அங்கே தலையில் சுமக்கச் செய்து
5.படி மீது ஏறுவதாக… அதாவது மேலே விண் செல்லும் மார்க்கத்தில் ஏறிச் செல்ல வேண்டும்…! என்று பதினெட்டாம்படியாகக் காட்டுகிறார்கள்.

வெறுமனே ஆற்று வெள்ளத்தில் குளித்தால் அது ஆடிப் பெருக்கு அல்ல…!

Image

Bliss light soul

வெறுமனே ஆற்று வெள்ளத்தில் குளித்தால் அது ஆடிப் பெருக்கு அல்ல…!

 

நாம் ஒரு தொழில் செய்யப் போகிறோம் என்று வைத்துக் கொள்வோம். அதை ஆரம்பிக்கும் பொழுதே
1.தொழில் நஷ்டமாகி விடுமோ…!
2.சரியான லாபம் வராமல் போய்விடுமோ…! என்ற பயத்தை ஊட்டிச் செயல்படுத்துவோம் என்றால்
3.தொழிலைச் சீராகச் செய்யும் அறிவு இழக்கப்படுகின்றது.

ஆகவே அந்தக் குறையான எண்ணத்தை எடுத்துக் கொண்டு அதையே அதிகமாக வளர்த்தால்
1.குறையின் உணர்வுகள் அதிகரித்து
2.எந்தச் செயலை எடுத்தாலும் அது முன்னாடி வந்து நம்மைப் பலவீனப்படுத்திக் கொண்டேயிருக்கும்.

அதற்குப் பதிலாக அந்தக் குறைகளை எல்லாம் நீக்கும் உணர்வின் எண்ணம் கொண்டு மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்துக் கொண்டு அதை அறிய முற்படும் போது
1.குறையை அகற்றிப் பிழைகளை நீக்கிச் செயல்படும் உணர்வுகள் இணைந்து
2.உங்கள் தொழிலைச் சீராக்கச் செய்யும். சரியான பலனும் கொடுக்கும்.

அதைப் போன்று குடும்பத்தில் குறைகள் வந்தாலும் அந்தக் குறைகள் எதிலே எப்படி வந்தது என்று அதை அறியும் தன்மைக்கு அந்த மகரிஷியின் அருள் சக்தியைத் தனக்குள் பெருக்கிக் கொள்ள வேண்டும்.

அந்த அருள் ஒளி பெற வேண்டும் என்ற இதை நம்முள் பெருக்கி இருள் சூழ்ந்த நிலைகளைப் பிளந்து குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பெற வேண்டும் என்ற இந்த உணர்வை நமக்குள் பெருக்க வேண்டும்.

உதாரணமாகக் காற்று அதிகமாக வரும் போது தூசிகளை எல்லாம் எப்படி அடித்துச் செல்கின்றதோ அதைப் போன்று எத்தகைய தீமைகள் நம்மைச் சூழ்ந்து வந்தாலும் அருள் ஞானியின் உணர்வை நமக்குள் சேர்த்து நம்மை அறியாது வந்த தீமைகளை நீக்கிடல் வேண்டும்.

இந்த உணர்வினை நமக்குள் பெருக்குதல் வேண்டும். இது தான் ஆடி பதினெட்டாம் பெருக்கு என்பது.

ஆனால் ஆற்றிலே வெள்ளம் போகிறது. பதினெட்டாம் பெருக்கு என்று அதிலே போய்க் குளித்துவிட்டுப் பின் உணவாக உட்கொண்டால் அது ஐதீகம் தான்…!

ஆடிப் பெருக்கு என்று ஆற்றிலே குளித்து விட்டு ஆலயத்திற்குள் செல்லும் போது நாம் எதைப் பெருக்குகிறோம்…?
1.அங்கே ஞானிகள் காட்டிய வழியில் செய்ல்படுகின்றோமா…?
2.ஒருவருக்கொருவர் உயர்ந்த எண்ணங்களையும் உயர்ந்த பண்புகளையும் அங்கே பெருக்குகின்றோமா…?

ஆலயத்திற்குள் உள்ளே செல்லும் பொழுதே நமக்கு முன் வருவோரைத் தள்ளி விட்டு நாம் முந்திச் செல்ல வேண்டும் என்று தான் எண்ணுகின்றோம். மற்றவரைத் தள்ளி விட்டு… “நாம் பெற வேண்டும்…!” என்ற நிலையைத்தான் ஆலயங்களில் பெருக்குகிறோம்.

ஆனால் ஆற்றிலே நீர் வெள்ளமாகப் பெருகிச் செல்லும் போது அதற்குள் வரும் அழுக்குகளை எல்லாம் கரைத்துச் செல்கின்றது. குளித்தவுடன் அங்கே நிற்பதில்லை.

அதைப் போன்று தான் அந்த மெய் ஞானிகளின் உணர்வை ஒவ்வொருவரும் நமக்குள் செலுத்தி வாழ்க்கையில் வந்த தீமைகளைக் கரைத்து அருள் மகரிஷியின் உணர்வை நமக்குள் பெருக்காகப் பெருக்கிடல் வேண்டும்.

அந்த அருள் உணர்வுகள் நமக்குள் பெருகினால்தான் நம்முடைய பண்புகள் பெருகும். பண்புகள் பெருகினால் வாழ்க்கை உயரும்.
1.தெய்வீக அன்பை வளர்த்து
2.தெய்வீகப் பண்புகளை வளர்த்து
3.தெய்வீக சக்திகளைப் பெருக்குவதற்கே ஆடி பதினெட்டாம் பெருக்கு.

உயிருக்குள் இருக்கும் உலகமும் உலகுக்குள் இருக்கும் உயிரும் – பிரம்ம ரிஷி…!

brahma-emerging-from-vishnu

உயிருக்குள் இருக்கும் உலகமும் உலகுக்குள் இருக்கும் உயிரும் – பிரம்ம ரிஷி…! 

1.ஓர் உயிர் அணு தோன்றும் போது இயக்கத்தை ஈசனாகவும்
2.அதனின் இயக்கத்தின் தொடருக்குள் ஏற்படும் வெப்பத்தை விஷ்ணுவாகவும் காட்டுகின்றார்கள் ஞானிகள்.

அதே சமயத்தில் விஷ்ணு என்ற வெப்பத்தின் தணல் ஆகும் போது அதிலே ஈர்க்கப்படும் சக்தியாகக் காந்தம் உருவாகுவதை லட்சுமி என்றும் வெப்பத்துடன் இணைந்த நிலைகள் கொண்டு இயங்குவதால் விஷ்ணுவின் மனைவி லட்சுமி என்றும் பெயரை வைக்கின்றார்கள்.

இதிலே நாம் எதை எதை எல்லாம் எண்ணுகின்றோமோ நமது உயிர் அந்த உணர்வின் சத்தைக் கவர்ந்து “ஓ…!” பிரணவமாக்கி என்று உணர்வின் சத்தை ஜீவனாக்குகின்றது (அதாவது உருவாக்குகின்றது)
அது எதனின் குணமோ
1.அதனின் மணமாக
2.அதனின் உணர்வாக
3.அதனின் ஞானமாக உடலிலே இயக்கும்.
4.ஆக விஷ்ணுவின் மகன் “பிரம்மா…!” என்று பெயரை வைக்கின்றார்கள்.

உயிரின் இயக்கத்தால் ஏற்படும் காந்தத்தால் ஈர்க்கப்பட்டுத் தான் கவர்ந்த சத்தின் தன்மையைத் தன்னுடன் இரண்டறக் கலக்கச் செய்யும் போது அதிலே உருப்பெறுவது தான் “விஷ்ணுவின் மகன் பிரம்மா…!” என்பது.

இயக்கத்தை ஈசன் என்றும் இயக்கத்தால் ஏற்படும் அந்த வெப்பம் விஷ்ணு என்றும் வெப்பத்தால் கவரும் காந்தமாகும் பொழுது அது லட்சுமி ஆகின்றது.

நாம் ஒரு உயர்ந்த பொருளைப் பார்க்கின்றோம். அதைப் பெற வேண்டும் என்று நாம் எண்ணும்போது அந்தக் காந்தம் இயக்குகின்றது.
1.அந்த இயக்கத்தின் தொடர் நம் உயிரிலே இயக்ககப்படும் போது ஓ…! என்று பிரணவமாகின்றது.
2.உயர்ந்த ஒரு பொருளையோ மற்றதையோ பார்த்து அதைப் பெறவேண்டும் என்ற நினைவலைகள் கொண்டு
3.நமக்குள் நாம் சுவாசிக்கும் போது அது உயிரிலே பட்டு இயக்கப்பட்டு
4.அந்த உணர்வுகள் ஓ…! என்று பிரணவமாகின்றது.
5.பின் ம்…! என்று அது உடலாகச் சிருஷ்டிக்கின்றது.
6.ஆகவே தான் விஷ்ணுவின் மகன் பிரம்மா…!
7.ஏனென்றால் இது இயக்கத்தால் ஏற்படும் நிலை.

அதாவது நாம் நுகர்ந்த நிலைகள் விஷ்ணுவால் இயக்கப்படும் பொழுது “ஓ… ம்…!” அது பிரம்மம் “சிருஷ்டி..” உடலாகச் சிருஷ்டிக்கப்படும் நிலை பிரம்மா.

ஆனாலும் தான் நுகர்ந்து கொண்ட உணர்வின் தன்மை ஜீவனாக்கப்படும் போது பிரம்மாவின் மனைவியாக (சக்தியாக) “சரஸ்வதி…!” என்று காட்டுகிறார்கள் ஞானிகள்,

1.விஷ்ணுவின் மகனாகத் தனக்குள் இந்த உயிர் எப்படி இயக்குகின்றதோ
2.அதைப்போல நம் உடலிற்குள் எண்ணிய உணர்வின் சக்தியையும் அது இயக்குகின்றது.

அதனால் தான் விஷ்ணுவின் மகன் பிரம்மன் என்று சொல்வது. பிரம்ம ரிஷி. யார்…?
1.இந்த விஷ்ணுவைப் பிரம்ம ரிஷி என்றும்
2.அதே சமயத்தில் அவனிலே விளைந்த நிலைகள் அதுவும் சிருஷ்டிக்கும் தனமை பெற்றது.
3.பிரம்ம ரிஷியின் மகன் பிரம்ம ரிஷி. அதுவும் சிருஷ்டிக்கும் நிலைகள் பெறுகின்றது என்று தெளிவாக்குகின்றார்கள் ஞானிகள்.

நம் உயிரைப் பற்றியும் உடலைப் பற்றியும் உயிரின் இயக்க நிலைக்ளையும் உடலாக அது எப்படி உருவாக்குகிறது என்ற பேருண்மைகளைச் சாதாரண மனிதனும் அறிந்து கொள்வதற்காக உணர்ந்து கொள்வதற்காக இதை எல்லாம் ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

நாம் உணர்ந்து கொண்டால் எது நம்மை இயக்குகிறது…? எது நம்மை மாற்றுகிறது…? நாம் எதுவாக ஆக வேண்டும்…? இந்த உடலுக்குப் பின் எங்கே செல்ல வேண்டும்…? என்ற மெய் ஞானம் பெற்று ஞானிகள் சென்ற மெய் வழியில் செல்ல முடியும்.

அதற்குத்தான் இதைச் சொல்வது…!

விநாயகர் தத்துவப்படித்தான் வாழ்க்கை வாழ வேண்டும்… ஏன்…?

Vinayagar Gnanavaan

விநாயகர் தத்துவப்படித்தான் வாழ்க்கை வாழ வேண்டும்… ஏன்…? 

பட்சிகளாக இருக்கும் தூக்கணாங்குருவி அதற்குக் கை கால் அங்கங்கள் இல்லை என்றாலும் அதனின் ஞானத்தைக் கொண்டு தான் குடி இருப்பதற்காக வேண்டித் தனக்கென்று ஒரு கூட்டை அமைத்துக் கொள்கின்றது.

இனத்தைப் பெருக்கிய பின் தன் குஞ்சுகளுக்கு இரவிலே வெளிச்சம் வேண்டும் என்பதற்காக மின் மினிப் பூச்சிகளைப் பிடித்துக் கொண்டு களி மண்ணில் ஒட்ட வைத்து வெளிச்சத்தை ஏற்படுத்திக் கொடுக்கின்றது.

இதைப்போல பட்சிகளில் பெற்ற இந்த உணர்வின் ஞானம் தான் அடுத்தடுத்து ஒவ்வொன்றிலும் வளர்ச்சியாகப் பெற்றது.

உதாரணமாகக் கரடிகளை எடுத்துக் கொண்டால் குட்டி போடுகிறது என்றால் மனிதன் எவ்வாறு வீடு கட்டுகின்றானோ அதைப் போல அது பாறைகளை அடுக்கடுக்காக அடுக்கி வைத்துச் சுற்றி கற்களை வைத்துத் தனக்குப் பாதுகாப்பான நிலைகளை குகை போல அமைத்துக் கொள்கிறது.

இயற்கையில் விளைந்த தாவர இனங்களை உணவாக உட்கொண்டு ஞானத்தின் நிலைகளில் மற்ற உயிரினங்கள் வளர்ச்சி அடைந்து
1.அது தனக்கு வேண்டியதை எவ்வாறெல்லாம் அமைத்துக் கொள்கின்றது…?
2.அதனின் ஞானம் எவ்வாறு அமைந்திருக்கின்றது…? என்பதை
3.எம்மைக் (ஞானகுரு) கண்டுணரச் செய்தார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

மற்ற உயிரினங்களுக்கு உடல் அங்கங்கள் குறைந்திருப்பினும் தன் உணர்வின் ஞானத்தால் தன்னிடம் இருக்கும் உடலின் அமைப்பின் நிலைகள் கொண்டே தனக்குப் பாதுகாப்பான இருப்பிடங்களை எப்படி அமைத்துக் கொள்கின்றது…? என்பதை ஒவ்வொன்றையும் நேரடியாகக் கண்களாலேயே பார்த்து அனுபவப்பூர்வமாக அறியச் செய்து உணர்த்துகின்றார்.

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் நாம் சேர்த்துக் கொண்ட (சுவாசிக்கும்) உணர்வுகள் அனைத்தும் வினையாகச் சேர்ந்து தற்காத்துக் கொள்ளும் ஞானமாக விளைந்து… விளைந்து… அடுத்தடுத்த சரீரங்கள் பெற்றோம்…! என்பதைக் காட்டுவதற்காகத்தான் விநாயகருக்கு யானைத் தலையை மனித உடலில் பொருத்திக் காட்டினார்கள்.

அதாவது நாமெல்லாம் புரிந்து கொள்ளும்படியாக
1.“வினைக்கு நாயகன் விநாயகன்…! என்றும்
2.முன் சேர்த்துக் கொண்ட நல் வினைகளுக்கொப்ப நாயகனாக இன்று மனிதனாக உருவானோம்…! என்று
3.தன்னை அறிந்திட ஞானிகள் அவ்வாறு காட்டியுள்ளார்கள்.

ஒரு சமயம் குருநாதர் ரோட்டுப் பகுதியில் இருக்கும் விநாயகர் சிலையின் மேல் சவாரி ஏறி உட்கார்ந்து கொண்டு “நான் தான்டா விநாயகன்…!“ என்றார்.

அந்த விநாயகன் மேல் அமர்ந்து அவர் “நான் தான் விநாயகன்…!” என்று இருக்கும் போது அதைப் பார்த்து அங்கே வருவோர் போவோர் எல்லாம் என்னை ஏசுகிறார்கள்.

ஒரு பைத்தியத்தை இந்த மாதிரித் தெய்வத்தின் மேல் அமர வைத்துக் கொண்டு நீ வேடிக்கை பார்க்கின்றாயே… “அவரைக் கீழே இறங்கச் சொல்… ஐயா…!” என்று எல்லோரும் சொல்வார்கள்.

அவனுக்கு அறிவில்லை…! நீ நான் சொல்வதைக் கேள்…! என்று எம்மிடம் சொல்லிக் கொண்டே இருப்பார் குருநாதர்.

அவர்கள் “கீழே இறங்கு…!” என்பார்கள். நான் எப்படியடா இறங்குவது…?” என்று சொல்வார் குருநாதர். இப்படிப் பல நிலைகளை உணர்த்தினார்.

காரணம்… இவ்வாறு புழுவிலிருந்து மனிதனாக வரும் நிலையில் முன் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு
1.மிருக நிலையிலிருந்து நான் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு
2.இன்று என் உடலான… “நான்…” வினைக்கு நாயகனாக என் உடல் அமைந்திருக்கின்றது.
3.இதிலிருந்து… “இவன் என்னை இறங்கச் சொன்னால்… நான் எப்படி இறங்குவேன்…?” என்று இதையெல்லாம் தெளிவுற எடுத்து விளக்கமாக உரைத்தார்.

நல்வினைகளைச் சேர்த்து வளர்ச்சியின் பாதையில் மனிதனாக உருவான பின் அதிலிருந்து நாம் தீய வினைகளைச் சேர்த்து
1.மீண்டும் மனிதனல்லாத நிலையில் மிருகமாகவோ
2.மற்ற விஷம் கொண்ட உருக்களாகவோ தேய்பிறையாகக் கீழே இறங்கக் கூடாது என்பதை அவ்வாறு எமக்குத் தெளிவாக்கினார்.

மனித வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் வரும் தீமைகள் நமக்குள் தீய வினைகளாகச் சேராதபடி தடுத்துக் கொள்ள அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் சேர்க்க வேண்டும்.

இன்றைய செயலாக மெய் ஞானிகளின் அருள் உணர்வுகளை ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் நல் வினைகளாகச் சேர்த்துச் சேர்த்து நாளைய செயலாக ஒளியின் சரீரமாக நாம் ஒவ்வொருவரும் அடைய வேண்டும் என்பதே ஞானிகள் காட்டிய “விநாயகர் தத்துவம்…!”.

முதன் முதலில் கண்கள் தோன்றிய விதம் – இருளில் மற்ற உயிரினங்களுக்குக் கண் தெரிவது எப்படி…?

Eye balls

முதன் முதலில் கண்கள் தோன்றிய விதம் – இருளில் மற்ற உயிரினங்களுக்குக் கண் தெரிவது எப்படி…?

மனிதனாகத் தோன்றுவதற்கு முன் கண்ணில்லாத போது எண்ணங்கள் எவ்வாறு தோன்றுகின்றது…? கண்கள் எவ்வாறு தோன்றுகிறது…? நாம் எப்படி மனிதனாக வளர்ந்தோம்…? இந்த உயிர் நம்மை எப்படி இயக்கியது…? என்பதைப் பார்ப்போம்.

செடியிலிருந்து வெளிப்படும் உணர்வின் சத்தைச் (மணங்களை) சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது. அதற்குப் பெயர் சீதாலட்சுமி என்று காரணப் பெயரைச் சூட்டுகின்றது காவியத் தொகுப்புகள்.

அதே சமயம் ஒரு உயிரணு அந்தச் செடியிலே வீழ்ந்தால் அந்தச் செடியின் சத்தை உயிர் நுகர்ந்து அந்த உணர்வின் அணுக்களாக மாற்றி உடலாகி ஒரு புழுவாகின்றது. சீதா என்ற அந்தச் சத்து உடலாகின்றது.

அதிலே தோன்றும் உணர்ச்சிகள் எண்ணங்களாகத் தோன்றுகின்றது. இதைத் தான் நாராயணன் திரேதாயுகத்தில் சீதாராமனாகத் தோன்றுகின்றான் என்ற காரணப் பெயரைச் சூட்டினார்கள் ஞானிகள். நாராயணன் என்றால் சூரியன்.

அதாவது எந்தத் தாவர இனங்களின் சத்தை உயிரணு நுகர்ந்ததோ அந்த உணர்ச்சிகள் எவ்வாறோ அதற்குத் தக்கவாறு பல விதமான உடல் அமைப்புகள் உருவாக்கியது என்ற நிலையைக் காவியத் தொகுப்புகள் தெளிவாகக் கூறுகின்றது.

ஒரு கடலைச் செடியின் சத்தை சூரியனின் காந்த சக்தி கவர்ந்தால் சீதாலட்சுமியாக மாறுகின்றது. அந்தச் சுவையை வளர்த்திடும் சக்தியாக சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்துக் கொள்கின்றது.

ஆனால் அதை ஒரு உயிரணு நுகர்ந்தால் சீதாராமா. அந்தச் சுவையின் தன்மை கொண்டு உடலுக்குள் எண்ணங்கள் தோன்றுகின்றது.

பசியின் உந்துதல் வந்து எந்தச் செடியின் சத்து கொண்டு உடலானதோ அதே எண்ணங்கள் கொண்டு அதை உணவாக உட்கொள்ள வேண்டும் என்று அந்தச் செடி இருக்கும் பக்கம் அழைத்துச் செல்கின்றது.

1.செடியின் மணத்தைச் சுவாசிக்கும் போது ஓ…ம் நமச்சிவாய…! உடலாகின்றது.
2.அந்தச் செடியின் சத்து வினையாகின்றது விநாயகா.
3.எந்தச் சத்தை நுகர்ந்ததோ மூஷிக வாகனா.
4.சுவாசித்தபின் அந்த உணர்வுகள் வாகனமாகி அந்தச் செடி இருக்கும் பக்கமாகப் புழுவை அழைத்துச் செல்கின்றது என்று
5.காவியங்கள் தெளிவாகக் கூறுகின்றது.

இதன் வழிப்படி எண்ணங்கள் கொண்டு கண் இல்லாதபோது அது தன் உணவுக்காக நகர்ந்து செல்கிறது அல்லது ஊர்ந்து செல்கிறது.

ஆனால் செல்லும்போது சந்தர்ப்பத்தினால் எதிரிகளிடம் சிக்கும் போதெல்லாம் தன் உடலிலே வேதனை தாங்காது அது எந்த உயிரினம் தன்னைத் தாக்குகின்றதோ… “அதைப் பார்க்க வேண்டும்…!” என்ற உணர்வுகள் தோன்றுகின்றது.

இப்படிப் பல சரீரங்களில் பார்க்க வேண்டும்… பார்க்க வேண்டும்…! என்ற எண்ணங்கள் தோன்றித்…தோன்றித்…தோன்றி…! தனது வாழ்க்கையில் வேறொரு உடல் பெறும் போது பல நிலைகளைக் குவித்துக் கண்களாக உருபெறுகின்றது.

1.எண்ணங்கள் முதலில் உருவாகின்றது.
2.அந்த எண்ணத்தின் துணை கொண்டு வரும் பொழுது அடுத்து
3.தான் பார்க்க வேண்டும் என்ற உணர்வுகளின் ஏக்கம் வருகின்றது.
4.மற்ற எதிரிகள் தாக்கப்படும் போது அதைத் தான் பார்க்க வேண்டும் வேண்டும் என்ற உணர்வுகள் உந்தி உந்தி
5.இப்படிப் பல கோடிச் சரீரங்களை எடுக்கின்றது.

ஆரம்ப நிலையில் ஒரு இரண்டு நாளைக்கு இருக்கும். மூன்றாவது நாள் மடிந்து போகும். இப்படிப் பல நூறு சரீரங்களைக் கடந்து “பார்க்க வேண்டும்…!” என்ற உணர்வுகள் வளர்ந்து வளர்ந்து அந்த உடலில் கண்கள் உருபெறும் தன்மை வருகின்றது. (திரும்பச் சொல்கிறேன் என்று எண்ண வேண்டாம்).

சூரியனின் ஒளிக் கதிர்கள் இங்கே ஒளி வீசும் பொழுது மற்ற பொருள்களை அது காட்டுகின்றது. ஆனால்
1.கண்ணில்லாத அந்த உயிரின் துடிப்பிற்கோ பார்க்க வேண்டும் என்ற உணர்வின் தன்மை வரும்போது
2.மணத்தால் அறிந்தாலும்… தன் உணர்வால் அறிய வேண்டும்…! என்று
3.அதாவது (தன் பார்வையால்) பார்க்க வேண்டும் என்ற உணர்வுகள் புதிதாகத் தோன்றுகின்றது.
4.அப்படி நுகர்ந்த உணர்வுகள் உறைந்து கண்களாக உருவாகின்றது.

அதைத்தான் துவாரகா யுகத்தில் கண்ணன் தோன்றினான் என்று சொல்வது. துவாரகா என்றால் உடல். இந்த உடலுக்குள் வாசுதேவனுக்கும் தேவகிக்கும் கண்ணன் பிறந்தான் என்று காவியப் படைப்பு உண்டு.

வாசுதேவன் என்றால் உயிர். தேவகி என்றால் தன் தேவைக்கு எடுத்த சக்தி. அதாவது உயிரால் சுவாசிக்கப்பட்ட உணர்வும் தன் தேவைக்கு என்று நுகருவதால் தேவகி என்பதும்
1.தேடித் தான் பார்க்க வேண்டும் என்ற ஏக்க உணர்வுகள் இங்கே விளைந்து
2.இந்த உடலான – துவாரகா யுகத்தில் கண்ணனாகப் பிறக்கின்றான் சூரியன்.

சூரியன் உருவான பின் அதிலிருந்து பாதரசங்கள் வீசப்படும் போது மற்றொன்றோடு மோதி இந்த ஒளிர்வின் ஒளிக் கதிர்களாக வெளிப்படுகின்றது. அதைப் போன்ற ஒளி கொண்ட கண்களாக இங்கே உருவாகின்றது.

தன் உடலிலே பெற்ற உணர்வுகள் கண்களாக உருவான பின் இந்த உணர்வின் நினைவாற்றல் மற்றொன்றைப் பார்க்கப்படும் போது எதனின் உணர்வோ அந்த ரூபத்தை தன் எதிரியையோ… தன் உணவையோ தன் இருப்பிடத்தையோ அறியும் வல்லமை பெறுகின்றது.

உதாரணமாக ஒருவர் கோபமாக இருக்கின்றார் என்றால் அதை நாம் பார்த்த பின் அந்த உணர்வுகள் நம் மீது மோதுண்டு அந்த உணர்ச்சியின் வேகத்தைக் கூட்டுகின்றது.

அதே கோப உணர்வுகள் நமக்குள் வரும் போது இருள் சூழும் நிலை வருகின்றது. சிந்திக்கும் திறனும் இழக்கின்றது.

ஆனால் ஆடு மாடுகளோ மற்ற காட்டில் வாழும் மிருகங்களோ தனக்குள் இருக்கும் விஷத்தின் தன்மையைப் பாய்ச்சிக் கண்ணின் வழி அலைகளை வெளிப்படுத்துகின்றது.

அந்த அலைகள் எதிரிலே மோதும் நிலைகள் கொண்டு குறித்த தூரத்திற்கு அதாவது கண்ணின் உணர்வலைகள் அந்த விசை உந்தும் தன்மை எவ்வளவுக்கு ஏற்படுகின்றதோ அந்த அளவிற்கு ஒளியாகத் தெரியும்.

பாம்பு பூச்சி தேள் போன்ற உயிரினங்களுக்கும் இதைப் போன்ற மற்ற மிருகங்களுக்கும் தன் கண் பார்வையால் மோதுண்டு ஒளிகளாகி தன் பாதை வெளிச்சமாகத் தெரியும்.

ஆனால் மனிதரான நமக்குத் தெரியாது. காரணம் மனித உடலுக்குள் விஷத்தின் தன்மையைக் குறைத்து விட்டதனால் மோதினால் இணக்கப்படும் ஒளித் தன்மை நமக்குள் இழக்கப்படுகின்றது.

ஆனால் அதே சமயத்தில் பிறர் படும் உணர்வின் தன்மை நம்மிடம் மோதும்போது உணர்ச்சியால் உந்தி அதை அறியும் ஆற்றல் நமக்குள் பெறுகின்றது.

1.ஒரு எண்ணம் நமக்குள் மோதினால் அந்த மோதலின் உணர்வின் தன்மை கொண்டு
2.அவன் என்ன செய்கின்றான்..? குற்றம் செய்கின்றானா…? குற்றமற்ற நிலையாக இருக்கின்றதா…? என்று
3.அந்த உணர்வின் செயலாக்கங்களை நாம் உணர முடிகின்றது.
4.ஆகவே மனிதன் தீமைகளை வெல்லும் சக்தி பெற்றவன்.

அதே கண்களின் துணை கொண்டு எட்டாத தூரத்தில் இருக்கும் விண்ணின் ஆற்றலைக் கவர்ந்து தான் நம்மைப் போன்ற மனிதர்களாக இருந்தவர்கள் ஒளியாக மாறி இன்று சப்தரிஷி மண்டலமாக அழியாத நிலைகள் கொண்டு வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் அடைய வேண்டிய எல்லை அது தான்…!

தவறு செய்வது நாமா…? அல்லது நாம் நுகர்ந்த உணர்வா…? என்பதை நம்முடைய காவியங்கள் தெளிவாக்குகின்றன

Image

nose-breathing

தவறு செய்வது நாமா…? அல்லது நாம் நுகர்ந்த உணர்வா…? என்பதை நம்முடைய காவியங்கள் தெளிவாக்குகின்றன

இராமாயணத்தை நாம் எப்படிப் படித்திருக்கின்றோம்…?

இராமன் சாந்தமானவன்… நல்லவன். சின்னம்மா கைகேயி சூழ்ச்சி செய்து தன் மகனுக்குப் பட்டம் கட்ட வேண்டும் என்றும் இராமன் காட்டுக்குச் செல்ல வேண்டும் என்று தசரதனிடம் அவர் கொடுத்த வரப்படி கேட்கிறது.

தந்தையின் வார்த்தையைத் தட்டாத இராமனும் சீதாவும் காட்டுக்குள் சென்றார்கள். காட்டுக்குள் கல்லிலும் முள்ளிலும் அலைந்து மிகவும் சிரமப்பட்டார்கள்.

பின் சீதாவை இராவணன் தூக்கிச் சென்றுவிட்டான். அதனால் இராமன் வேதனைப்பட்டான். சீதா கடுமையான அவஸ்தைகள் பட்டது என்று படித்துவிட்டு
1.அட இராமா.. சீதா…! உங்களுக்கு இந்தக் கதியா…? என்று சொல்லி வேதனைப்பட்டு நாம் அழுவதற்குத்தான் பழகியிருக்கின்றோமே தவிர
2.அந்த இராமன் யார் என்று சொல்ல முடிகின்றதோ..?
3.வான்மீகி மாமகரிஷி உணர்த்திய உண்மைப் பொருளை அறியவில்லை…
4.அறிய வேண்டும் என்று முயற்சிக்கவும் இல்லை.

உதாரணமாக “தடா…புடா தடா…புடா…!” என்று ரோட்டில் சண்டை போடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். என்ன சப்தம் என்று வேடிக்கை பார்க்கப் போகின்றீர்கள்.

மிகவும் கோபமாகவும் ஆத்திரமாகவும் பேசுகின்றார்கள். பார்த்தவுடன்.. என்ன….? ரோட்டிலே.. இப்படிச் சண்டை போடுகிறார்கள் பார்…! என்று வேடிக்கையாக நீங்கள் சொல்கின்றீர்கள்.

நினைக்கின்றீர்கள்…! சொல்லக் கூட இல்லை. ரோட்டிலே இப்படிச் சண்டை போடுகிறார்கள் என்று நினைக்கும் பொழுது கொஞ்ச நேரம் அந்தக் கோபம் அங்கேயே நின்று வேடிக்கை பார்க்கச் சொல்லும்.

அடுத்து நேராக வீட்டிற்கு வந்து சமையல் வேலையைப் பார்த்தீர்கள் என்றால் என்ன நடக்கும்…? குழம்பை வைத்துக் கொண்டிருக்கின்றீர்கள் என்றால் போதும்.
1.அந்தக் கார உணர்ச்சி இயக்கி
2.இரண்டு மிளகாய் அதிகமாகப் போட்டுவிடுவீர்கள்.
3.ஆனால் நீங்கள் தவறு செய்யவில்லை.
4.அந்த உணர்வு இயக்கிக் காரத்தை அதிகமாகப் போட வைக்கும்.
5.அப்புறம் நீங்களே எடுத்து ருசி பார்க்கும் பொழுது காரமாகத் தெரிகிறது.

உங்கள் பையன் வந்து சாப்பிட்டு “உஷ்ஷ்…!” காரமாக இருக்கின்றது என்று சொல்வான். நீ எப்பொழுது பார்த்தாலும் காரமாகத்தான் இருக்கிறது என்று சொல்வாய். ஒழுங்காகச் சாப்பிடு என்று அவனை மிரட்டுவீர்கள்.

ஆனால் வீட்டுக்காரர் வந்து சாப்பிடும் பொழுது என்ன… குழம்பு காரமாக இருக்கிறது…? என்று கேட்பார்.

நீங்கள் எங்கேயாவது ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு இங்கே வந்து அதே மாதிரி நான் ருசியாகச் சமைக்க வேண்டும் என்றால் அது எப்படி…? என்று சொல்வீர்கள். சண்டை வந்துவிடும்.
1.நாம் செய்த தவறை அதை மறைக்கத்தான் சொல்லும்.
2.நேரடியாக இதைச் சொல்லவிடாது.

ஏன்…! என்ன காரணம்..!

அதனால் தான் ஆஞ்சநேயரை வலுவானவராகக் காண்பித்து இராமனுக்கும் சீதாவுக்கும்… “அவர் தான் காவல்..” என்று தெளிவாகக் காட்டியிருப்பார்கள்.

ஒரு வேப்ப மரம் என்ன செய்கின்றது…? கசப்பான சத்தைத் தனக்குள் வளர்த்துக் கொண்டுள்ளது. தன் கசப்பின் வலுவால் வேறு எந்த மணத்தையும் தன் அருகிலே விடுவதில்லை.

அதே கசப்பான குணத்தை (மனக்கசப்பு) நீங்கள் எடுத்துக் கொண்டீர்கள் என்றால் பாக்கி நல்லதை யாராவது உங்களிடம் சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா…? இல்லை.

நாம் வெறுப்பாக இருக்கும் பொழுது யார் எந்த நல்லதைச் சொன்னாலும் நம்மால் கேட்க முடியாது. அந்த வெறுப்பிலேயே தான் இருப்போம். அந்தக் குணத்தை மாற்ற மாட்டோம்…! (உணர்வின் இயக்கம் அது). அதற்குப் பெயர் தான் ஆஞ்சநேயர்.

1.அந்தக் கசப்பான சத்து சீதா
2.கசப்பான உணர்ச்சிகளைத் தூண்டுவது அந்த எண்ணங்கள் இராமன்
3.அந்தக் கசப்பான மணத்தை எண்ணும் பொழுது சீதாராமனாக “சொல்லாக மாறுகின்றது…!

ஆனால் அந்த வலுவான கசப்பான நிலைகள் இயக்கி “சொல்வதையே சொல்லிக் கொண்டு…”
1.என் கஷ்டம் என்னை விட்டுப் போகமாட்டேன் என்கிறது
2.என் கஷ்டம் என்னை விட்டுப் போகமாட்டேன் என்கிறது என்று
3.அந்தக் கஷ்டத்தையே பிடித்துக் கொண்டிருப்பீர்கள்.

சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்திருக்கும் சத்துகள் அனைத்துமே சீதாலட்சுமி. உபதேச வாயிலாக இப்பொழுது நான் பேசக்கூடிய சக்தியெல்லாம் சீதா சுவை. சொல்லாக வருவது இராமன். நான் சொல்லக்கூடியதை நீங்கள் காதிலே கேட்டால் இராமனுடைய அம்பு.

ஆனால் அதே சமயத்தில் திருப்பித் திருப்பிச் சொன்னதையே சொல்கிறேன் என்று சொன்னால் ஆஞ்சநேயன்.

இப்படியெல்லாம் நமக்கு அர்த்தம் புரிகிற மாதிரித்தான் காவியங்களைப் படைத்துள்ளார்கள் ஞானிகள். இதை யாராவது நாம் மதிக்கின்றோமா…? மதிப்பதில்லை.

நம்முடைய காவியப் படைப்புகள் சாதாரணமானவை அல்ல.
1.நம் உயிரின் இயக்கத்தையும்
2.மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதையும்
3.இந்த உடலுக்குப் பின் எங்கே செல்ல வேண்டும் என்ற பேருண்மைகளையும்
4.எல்லோரையும் அறியச் செய்வதற்குப் படைக்கப்பட்டதே நம் ஞானிகளால் உருவாக்கப்பட்ட காவியங்கள்.

கருவிலிருக்கும் குழந்தைக்குக் கண்ணன் எப்படி உபதேசிக்கின்றான்…?

krishna-upadesh

கருவிலிருக்கும் குழந்தைக்குக் கண்ணன் எப்படி உபதேசிக்கின்றான்…?

 

அன்றைய அரசர் காலங்களில் வாழ்ந்தவர் தான் திருஞான சம்பந்தர். தெய்வ நெறிகள் கொண்டு நல் ஒழுக்கத்தைக் கற்பித்து இது தான் இறை உணர்வுகள் என்ற நிலையில் அதை ஏக்கமாகக் கொண்டு அதன் வழி சீராகப் பண்படுத்திய தாயின் வயிற்றில் பிறந்தவர்.

சீர்காழி என்ற ஊரில் நீண்ட நாளாகக் குழந்தை பெறவேண்டும் என்ற ஏக்கத்தில் இருந்த அந்தத் தாய் தன் தீமையை மறந்து மெய் ஒளியைப் பெற்று அந்த உணர்வின் ஆக்கபூர்வமாகத் தாய் சுவாசித்த உணர்வின் தன்மைக்குள் தனக்குள் உரு பெற்றவர்தான் திருஞானசம்பந்தர்.

கண்ணன் கருவிலிருக்ககூடிய குழந்தைகளுக்கு உபதேசித்தான் என்று காவியங்களில் காட்டப்பட்டுள்ளது. அதாவது கண்ணன் என்றால் கண்கள்.
1.நம் கண்ணுக்குள் (கருவிழிக்குள்) மெய் உணர்வுகளைச் (நினைவினைச்) செலுத்தி
2.அதே நினைவின் ஆற்றலைத் தன் கருவுக்குள் (உடலுக்குள்) செலுத்துவது தான்.

இருள் சூழ்ந்த நிலைகள் கொண்டு வெகு நாளாகக் குழந்தைப் பாக்கியம் இல்லாதிருந்தாலும்
1.தன் கருவுக்குள் மெய் ஒளியின் தன்மையை அந்தத் தாய் ஊட்டியதனால்
2.குழந்தைப் பாக்கியமாகக் கிடைத்தது.
(பராசக்தி ஞானப் பால் ஊட்டியது என்றும் சொல்வார்கள்)

தாய் கண்களால் உற்றுப் பார்த்த மெய் உணர்வுகளே உடலிலே கருவாக உருவாகி “ஞானக் குழந்தையாக….!” திருஞான சம்பந்தராக அங்கே உருவாகியது.

மெய் ஞானிகளின் அருள் வாக்கை உங்களிடம் அடிக்கடி சொல்வது அதற்காகத்தான்…! சும்மா சும்மா சாமி (ஞானகுரு) இதையே பேசுகிறார் என்று யாரும் எண்ண வேண்டாம்.

உங்கள் உடலிலுள்ள எல்லா அணுக்களுக்குள்ளும் ஞானிகளின் உணர்வை இணைக்கும் படி செய்து மெய் ஒளியின் உணர்வைக் கருவாக… “ஒளியான அணுக்களாக உங்கள் உடலில் உருவாகச் செய்து கொண்டிருக்கின்றோம்….!”

நீங்கள் எல்லோரும் அருள் ஞானம் பெறவேண்டும் என்பதற்குத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் ஆற்றலை உங்கள் உடலுக்குள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலேயும் ஊடுருவச் செய்கின்றோம்.

அந்த மெய் ஒளியைச் சீராக நீங்கள் பெறவேண்டும் அது உங்களுக்குள் என்றுமே நிலைத்ததாக உங்களுக்குள் வளர வேண்டும் என்பதற்குத்தான் அடிக்கடி உபதேசம் கொடுப்பது.

உங்கள் உள்ளங்களில் இது பதிவாகின்றது. நீங்கள் வெளிவிடும் மூச்சலைகள் சூரியனின் காந்தப் புலனால் கவரப்பட்டு அலைகளாகப் படர்கின்றது. மெய் உணர்வுகளாக இந்தக் காற்று மண்டலம் முழுவதும் படர்கின்றது.

நம் பூமிக்குள் பல உணர்வுகள் இருந்தாலும் ஒருக்கிணைந்த நிலைகளில் நாம் ஞானிகளின் அருள் சக்திகளைப் பரப்பபடும் பொழுது
1.ஞானத்தைப் பெறவேண்டும் என்று ஏங்கித் தவிக்கும் உணர்வுகள் உள்ளோருக்கும்
2.அவர்கள் எங்கிருந்தாலும் இதை நினைவு கொள்ளும் பொழுது
3.அவர்களும் இந்த ஆற்றல்மிக்க சக்தியைப் பெற முடிகின்றது.

வராகன் தன் உடலுக்குள் அசுத்த சக்தி இருந்தாலும் இந்தப் பூமியில் அசுத்தங்கள் படர்ந்திருந்தாலும் நாற்றத்தைப் பிளந்து நல்ல உணர்வை எடுத்துக் கொள்கின்றது.

அதைப் போல இன்றிருக்கும் விஷத் தன்மையான விஞ்ஞான உலகிலிருந்து நம்மை அறியாது எத்தகைய தாக்குதல் வந்தாலும் அதிலிருந்து நம்மை மீட்டி ஒளியின் சரீரமாக நாம் அடைய முடியும்.

கிரேதா… திரேதா… துவாபரகா.. கலி… கல்கி யுகங்கள்

Kalki Aavtar 2017

கிரேதா… திரேதா… துவாபரகா.. கலி… கல்கி யுகங்கள் 

தாவர இனங்கள் அனைத்தும் கிரேதா யுகம் தான். ஒரு உயிரணு தோன்றினாலும் அது எதை எதை எல்லாம் கவர்ந்ததோ அதுவும் கிரேதா யுகம் தான். எத்தனையோ கோடி உடல்களைக் கடந்து உயிர் மனிதனாக வளர்த்தாலும் அதுவும் “கிரேதா யுகம் தான்…!” (கிரேதா என்றால் கிரகிக்கும் நிலை)

உயிரால் வளர்க்கப்பட்டு இந்த உடல் உருவான பின் தாவர இனச் சத்தின் மணங்கள் உயிரிலே பட்டு எண்ணங்களாக இயக்கப்படும் பொழுது அது “திரேதா யுகம்…!”

திரேதா யுகத்தில் எந்தக் குணத்தின் தன்மையை நாம் சுவாசிக்கின்றோமோ
1.அந்தச் சத்தின் தன்மை கொண்டு உடல் இயக்கப்படுகின்றது.
2.ஆகவே நம் உடல் திரேதா யுகம். (திரேதா என்றால் ஒரு உடலுக்குள் எண்ணங்கள் இயக்கும் நிலை)

இந்த உடல் வாழ்க்கையில் நாம் உற்றுப் பார்த்த உணர்வுகளை நுகரப்படும் போது இது நல்லது இது தீமை என்ற உணர்ச்சிகளை நமக்குள் தோற்றுவிப்பது நமது உயிரே.

தீமை என்ற உணர்வை உணர்ந்தபின்
1.நம் உடலில் உள்ள அணுக்கள் இந்தத் தீமையில் இருந்து தப்புவதற்கு
2.அதற்குண்டான உணர்ச்சிகளைத் தூண்டி இந்த உடலைக் காக்கும் உணர்ச்சிகளை ஊட்டுகின்றது.
3.அது “துவாபரகா யுகம்…!” (உடலுக்குள் தன்னைக் காக்கும் உணர்ச்சிகள் தோன்றுவது துவாபரகா)

அதைத் துவாரகா யுகம் என்றும் சொல்வார்கள். இந்த உடலைக் காக்கும் உணர்ச்சிகள் கண்களாகத் தோன்றுகின்றது. அதன் வழி இந்த உடலைக் காக்கும் சக்தி வருகின்றது.

இருப்பினும் இந்த உடலுக்குள் நாம் சுவாசிக்கும் சாந்தம் ஞானம் விவேகம் என்ற உணர்வுகள் கொண்டு நாம் இயக்கி வந்தாலும் சந்தர்ப்பத்தால் வேதனை வெறுப்பு கோபம் குரோதம் போன்ற உணர்வுகளையும் நுகர நேர்கின்றது.

அத்தகைய குணங்கள் நம் உடலுக்குள் சென்று நன்மை செய்யும் குணங்களை அந்த உணர்வுகளை அழித்து விடுகின்றது.
1.அதாவது தீமையிலிருந்து விடுபடும் உணர்வின் தன்மையை அழித்து விடுகின்றது.
2.இது தான் கலி யுகம் என்பது.

இப்படி ஒவ்வொரு உயிரும் பல உடல்களைப் பெற்று ஒன்றை ஒன்று வென்றிடும் நிலையில் எதன் வலு பெற்றதோ அதன் உணர்வின் தன்மை பெற்ற பின் கலி யுகம் தான்.

ஒரு வேதனைப்படும் மனிதனைப் பார்த்து அவன் வேதனையை நாம் நீக்க விரும்பினாலும் அந்த வேதனை என்ற விஷத் தன்மைகள் நம் இரத்தத்தில் கலக்கப்பட்டு நாம் சிந்தித்துச் செயல்படும் நல்ல அணுக்களை அது வீழ்ச்சியடையச் செய்து விடுகின்றது.

ஏனென்றால் நம் உடல் உறுப்புகளில் வேதனை என்ற விஷத்தன்மைகள் கலக்கப்படும் பொழுது
1.உடல் நலிகின்றது.
2.உணர்வுகள் நலிகின்றது.
3.சிந்திக்கும் ஆற்றலும் குறைகின்றது.
4.இதைப்போன்று ஏற்படும் போதும் கலி என்ற நிலைகள் அடைகின்றது.

இப்படி உருமாற்றமாகும் விஷத்தின் வலிமையிலிருந்து வென்று இந்தக் கலியை கடந்தவன் தான் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமானது. அது கல்கி யுகம்.

தாய் கருவில் விஷத்தை அடக்கும் நுண்ணிய அணுவின் தன்மையைப் பெற்ற இந்த அகஸ்தியன் தனது வளர்ச்சியில் வலு கொண்ட உணர்வுகள் கொண்டு தீமைகளை அகற்றினான்.

திருமணமான பின் கணவனும் மனைவியும் இருபாலரும் சேர்ந்து உணர்வினை ஒளியாக மாற்றிடும் ஆற்றல் பெற்றார்கள்.

நமது துருவத்தின் வழி வரும் உணர்வுகளை நமது பூமி கவர்ந்து தாவர இயலாக மாற்றினாலும் அதனின் வளர்ச்சியில் உயிர் இனங்களைத் தோற்றுவித்து உடலை வளர்க்க இச்சைப்பட்டு எத்தனையோ கோடி உணர்வுகளைக் கடந்து மனிதனாக உருவாக்கியது.

அப்படி மனிதனான நிலையில் அகஸ்தியன் அதே துருவத்தின் வழியாக நம் பூமிக்குள் வரும் அந்த நஞ்சினை ஒளியாக மாற்றினான்.

ஒரு பாம்பு தன் உடலில் உள்ள விஷத்தை மற்றோர் உடல் மேல் பாய்ச்சி அந்த உடலைச் செயலற்றதாக்கி அந்த உடலை உருவாக்கிய அணுக்கள் விஷத்தின் தன்மையான பின் அதை இரையாக எடுத்து விழுங்குகின்றது.

விஷம் கொண்ட பாம்பினங்கள் அனைத்தும் இவ்வாறு தான் தன் உணவினை எடுக்கின்றது. ஒவ்வொரு உயிரினத்திலும் ஒவ்வொரு விதமான விஷத் தன்மை உண்டு.

இதை எல்லாவற்றையும் கலந்து பாம்பு தனக்குள் விஷத்தின் தன்மைகளைப் பெருக்கப்படும் போது எல்லா விஷத்தையும் ஒன்றாக்கி நாகரத்தினமாக மாறுகின்றது.

இதைப் போன்று தான் மனிதனான பின் பற்பலவிதமான விஷத்தை அகற்றி அந்த ஒளியென்ற உணர்வினை ஒவ்வொரு அறிவாகத் தெளிந்து கொண்டவன் அகஸ்தியன்.

1.எந்தத் துருவத்தின் வழியாக நம் பூமிக்குள் விண்ணிலிருந்து சக்திகள் வருகின்றதோ
2.அதையே அகஸ்தியன் நேரடியாக உணவாக உட்கொண்டு
3.அதனின்று வரும் நஞ்சினை அடக்கித் தனக்குள் அந்த அகத்தின் தன்மையைச் சீர்படுத்தி
4.தன் உடலிலுள்ள மனிதனாக உருவாக்கிய அனைத்து அணுக்களையும்
5.உயிரைப் போன்றே உணர்வின் அறிவின் ஒளியாக உருவாக்கினான்.

தீயிலே குதித்தால் உயிர் வேகுவதில்லை. உடல் மட்டும் தான் கருகுகின்றது.

ஆக அழியாத நிலைகள் கொண்ட அந்த உயிரைப் போன்றே தன் உணர்வின் அணுக்கள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து ஓர் ஒளியின் தன்மையாக மாற்றி ஒளியான உடல் பெற்றவன் அகஸ்தியன்.

மனிதனாக இருக்கும் பொழுது கணவனும் மனைவியும் சேர்ந்து தன் இனக் குழந்தைகளை உருவாக்குகின்றனர்

அதைப் போல அகஸ்தியனும் அவன் மனைவியும் இரு உணர்வும் ஒன்றி இரு உயிரும் ஒன்றாக்கப்படும் போது உயிரைப் போன்றே ஒளியின் உணர்வை உருவாக்கும் திறன் பெறுகின்றனர்.

அகஸ்தியரும் அவர் மனைவியும் வசிஷ்டரும் அருந்ததியும் போன்று வாழ்ந்து நளாயினி போன்று கணவன் மனைவியை மதிப்பதும் மனைவி கணவனை மதிப்பதும் என்ற உணர்வுகள் இயக்கி இணை பிரியாத நிலைகளில் வாழ்ந்ததனால் இரு உயிரும் ஒன்றி பேரருள் பேரொளியாகத் துருவ நட்சத்திரமாக ஆனார்கள்.

காரணம் துருவத்தின் வழியாகப் பூமி நுகரும் உணர்வுகளை அதிலுள்ள நஞ்சை நீக்கிய அக்காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் அந்த விஷத்தையே ஒளியின் உணர்வாக மாற்றிக் கொண்டனர்.
1.அப்படி உருவானது தான் துருவ நட்சத்திரமும்
2.அதன் ஈர்ப்பு வட்டத்தில் வாழும் சப்தரிஷி மண்டலமும்.
3.அது தான் கல்கி யுகம்.

மனிதனாகப் பிறந்த நாம் ஒவ்வொருவருமே அவர்களைப் போன்றே ஒளியின் தன்மை பெற்று அந்தக் கல்கி யுகத்திற்குச் செல்ல வேண்டும்.

இராமாயணத்தில் இராவணன் சீதாவிற்குச் சில நாள் அவகாசம் கொடுக்கின்றான் – விளக்கம்

Ravana Sita

இராமாயணத்தில் இராவணன் சீதாவிற்குச் சில நாள் அவகாசம் கொடுக்கின்றான் – விளக்கம்

இராமாயணம் மகாபாரதம் கந்த புராணம் இவை எல்லாம் நம்மை நாம் அறிந்து நடப்பதற்குத் தான் ஞானிகள் இந்தக் காவியத்தை அமைத்தார்கள். ஆனால் அந்தக் காவியத்தை நம் சுயநலத்திற்காக மாற்றி வாழ்கின்றோம்.

ஞானிகள் மனிதர்கள் நாம் எப்படி வாழ வேண்டும் என்று நமக்குக் காட்டினார்கள். அதையே தலை கீழாக மாற்றி சீதா காட்டுக்குள் போய்க் கஷ்டப்பட்டது. இராமன் எத்தனையோ வேலைகளைச் செய்தான். இராவணன் பல கெடுதல்களைச் செய்தான் என்று நாம் சொல்கின்றோம்.

வேதனைப்படும் உணர்வுகளை நாம் நுகர்ந்து உடலுக்குள் போனால் வாலியாகி விடுகின்றது. வேதனைப்படுபவரை நாம் பார்த்தவுடனே அது வாலி. அதனுடைய வலிமை நமக்குள் அதிகமாகிவிடுகின்றது.

நம்மிடம் இருக்கும் நல்ல குணத்துடன் வேதனைப்படுபவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று விரும்புகின்றோம். அவன் உடலில் பட்ட வேதனையான உணர்வுகளை நாம் நுகர்ந்தவுடனே நம் உயிரிலே படுகின்றது.

1.அந்த வேகமான உணர்வுகள் நம் உயிரிலே பட்டுப் பிரணவமாகி
2.“ஓ…” என்று உணர்வின் ஒலி அலைகளை எழுப்புகின்றது.
3.“சங்கு..” அந்தச் சப்தம்… உடலுக்குள் பரவுகின்றது.
4.அதாவது அந்த வேதனையான உணர்ச்சிகள் நம் உடல் முழுவதற்கும் பரவுகின்றது.

உதாரணமாக மின்சாரத்தைப் பயன்படுத்தி விளக்குகளைப் பொருத்துகின்றோம். அந்த இணைப்பில் எந்த வகைப் பல்பைப் (விளக்கு) போடுகின்றமோ உடனே அதனதன் நிறமான வெளிச்சமாக மாற்றுகின்றது.

அதே மாதிரித்தான் ஒருவன் வேதனைப்படுவதைப் பார்த்தவுடனே நம் உடலிலுள்ள வேதனை அணுக்களுக்கு ஒரு உற்சாகம் வந்து விடுகின்றது. வேகமாக இழுக்கின்றது.

ஏனென்றால் நம் உயிர் எலக்ட்ரிக். மின் ஆற்றல் கொண்டது. அதில் நமக்குள் இழுத்துக் கொண்ட உணர்வுகளை எலக்ட்ரானிக்காக உணர்ச்சிகளாக மாற்றுகின்றது.

அதாவது உயிருக்குள் நாம் எந்த உணர்வை இணைக்கின்றமோ அந்தச் சப்தம் நிச்சயம் அதை இயக்கச் செய்கின்றது.

அதை எல்லாம் வலு சேர்த்து உடலுக்குள் கொண்டு போகின்றது. கொண்டு போனவுடனே இது வாலி. நம் உடலுக்குள் போனவுடனே கெட்ட அணுக்கள் எல்லாம் வலுவாகின்றது.

அதற்குப் பக்கத்தில் இருக்கின்ற நல்ல அணுக்கள் எல்லாம் என்ன செய்யும்…? ரொம்பப் பலவீனம் அடையும். அதனுடைய பலம் குறைந்து விடும்.

கெட்ட அணுக்கள் பலமானவுடனே நல்ல அணுக்களைச் சாப்பிடுகின்றது. வேதனை என்ற உணர்வுகளை எடுத்து அது உடலாகிவிட்டால் அதன் வலுவின் தன்மை கொண்டு உடலுக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களைக் கொன்று சாப்பிடும்.

1.இராவணன் என்ன சொல்கின்றான்…?
2.உடலுக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களைத் தான் சொன்னபடி கேட்கவில்லை என்றால்
3.“கொன்று தின்றுவிடுவேன்…!” என்கின்றான்.

இராவணன் – அதாவது தசப்பிரியன். நம் உடல் என்ன செய்கின்றது…? இந்த அரக்க குணம் வரப்போகும் போது இராவணனாக மாற்றுகின்றது.

ஏனென்றால் விஷத்தின் தன்மை ஆன பிற்பாடு அதையே (வேதனையையே) வளர்ப்பதற்குத் தசப்பிரியனாகின்றது. இதற்கு இராவணன் என்று காரணப் பெயர் வைக்கின்றார்கள்.

அந்த வேதனைப்படும் உணர்வை நம் உடல் முழுவதும் பரவ விட்டால் அது மற்ற குணங்களைக் கொன்று சாப்பிடும் இரண்யனாக மாறி அந்த உணர்வு உடலாக்கப்படும் போது இராவணனாக மாறுகின்றது. அதுதான் தசப்பிரியன். உடலை வளர்க்கும் தன்மை வந்து விடுகின்றது.

எதன் விஷத்தின் தன்மை வருகின்றதோ நல்ல குணங்களை எல்லாம் கொன்றுவிடும். பின் மனிதனல்லாத உருவைத்தான் பெற முடியும்.

இராமாயணத்தில் இராவணன் சீதாவிடம் சொல்வான். உனக்குக் கொஞ்ச நாள் அவகாசம் தருகின்றேன். என் ஆசைக்கு இணங்கிவிடு.

நான் சொன்னபடி கேட்கவில்லை என்றால்… அதாவது விஷத்திற்கு இணங்கவில்லை என்றால் உன்னைக் கொன்று சாப்பிட்டு விடுவேன் என்று சொல்கிறான்.

இதையெல்லாம் நமக்குப் புரிகிற மாதிரித் தான் இராமயாணக் காவியத்தில் கொடுக்கின்றார்கள்.

ஆகவே வேதனைப்படுவோர் உணர்வுகளை நமக்குள் உட்புகாதபடி தடுத்துப் பழகுதல் வேண்டும். அதற்குத் தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குத் துருவ நட்சத்திரத்தைப் பற்றி உபதேசித்து வருகின்றோம்.

அகண்ட அண்டத்தில் சிறிதளவு விஷம் வந்தாலும் அதைத் துருவ நட்சத்திரம் ஒளியின் சுடராக மாற்றும் ஆற்றல் கொண்டது.

1.வேதனைப்பட்டோருக்கு நாம் உதவி செய்தாலும்
2.அடுத்த கணம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நுகர்ந்து
3.சிறிதளவு உடலுக்குள் சென்ற வேதனை உணர்வு அணுவாக உருவாகாதபடி தடுக்க வேண்டும்.
4.அதை ஒளியாக மாற்ற வேண்டும்.

அதைப் பழக்கப்படுத்தி விட்டால் இந்த உடலுக்குப் பின் இனி பிறவி இல்லை என்ற நிலை அடையலாம்.

உருவத்தைப் பார்க்கின்றோம் ஆனால் உணர்ச்சிகளை நாம் பார்க்க முடிவதில்லை… உயிரிலே பட்டால் தான் உணர முடிகிறது…! – “வாயு புத்திரன் ஆஞ்சநேயன்… அனுமார்…”

Image

Hanuman

உருவத்தைப் பார்க்கின்றோம் ஆனால் உணர்ச்சிகளை நாம் பார்க்க முடிவதில்லை… உயிரிலே பட்டால் தான் உணர முடிகிறது…! – “வாயு புத்திரன் ஆஞ்சநேயன்… அனுமார்…”

 

நம் குழந்தை நோயால் வேதனைப்படுகிறான் என்றால் அவனைக் காக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.

அவன் நோயுடன் இருக்கும் போது “இப்படி ஆகிவிட்டதே…!” என்ற வேதனையை எடுத்தோம் என்றால் அவன் உடலில் சேர்த்த உணர்வுகள் நமக்குள் வேதனையை உருவாக்கும் அந்த அணுவாக மாறி விடுகிறது.

அப்போது அது வராமல் தடுக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்..?

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும். எங்கள் உடல் உறுப்புகள் முழுவதும் படர வேண்டும். எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா பெற வேண்டும் என்று முதலில் இதை எடுத்து அதைத் தடுத்துப் பழக வேண்டும்.

“ஈஸ்வரா…” என்று உயிரை எண்ணாது துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் வலு சேர்க்காமல்
1.பாசத்தால் அவன் உடலில் உள்ள நோயெல்லாம் போக வேண்டும் என்று வெறுமனே எண்ணி
2.அந்த வேதனையைத்தான் நமக்குள் எடுத்துத் தவறாகக் கலந்துவிடுகிறோம்.
3.அதாவது வேதனையான என்ற உணர்வு மோதும் போது இதனுடன் விஷத்தைத் தான் கலக்கிறோம்.
4.இந்தப் பழக்கத்தை மாற்ற வேண்டும்.

முதலில் சொன்ன மாதிரிச் ஆத்ம சுத்தி செய்து விட்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும்
1.அவன் உடலில் படர வேண்டும்
2.அவன் உடலில் உள்ள ஜீவான்மா பெற வேண்டும்
3.அவன் உடல் நலம் பெற வேண்டும்
4.அவன் சிந்திக்கும் ஆற்றல் பெற வேண்டும்
5.தெளிவான மனம் பெற வேண்டும் என்று
6.குழந்தை வேதனைப்படும் உணர்வு நம் உயிரிலே பட்டு உணர்ச்சியைத் தூண்டும் பொழுது
7.நாம் இதை எடுத்து இரண்டையும் இணைத்து உருவாக்க வேண்டும்.
7.அப்போது அந்த வேதனை என்ற உணர்வு நமக்குள் உருவாகாது.
8.இப்படி இணைக்கப்படும் பொழுது “அஞ்சனை…” அதாவது ஆஞ்சநேயன்…!
9.நேயன் என்றால் அது நமக்குள் பக்குவப்படுத்தும் தன்மைகள்.

அந்த உடலில் உள்ள நோயெல்லாம் நீங்க வேண்டும் என்று துருவ நட்சத்திரத்தை இணைத்துச் சொல்லாக நாம் சொல்லும் போது இந்த உணர்வு “வாயு…”

சொல் காதில் கேட்கிறது. ஆனால் கண்ணிற்குத் தெரிகின்றதோ..? உயிரால் உணர்ந்து தான் அறிகின்றோம்.

இப்போது நான் சொல்வது உங்கள் உயிரிலே பட்டு உணர்ந்து அந்த உணர்ச்சியால் தான் நீங்கள் அறிய முடிகிறது. கண்ணால் பார்த்தால் என் உடலைத் தான் பார்க்க முடிகிறது. அங்கங்கள் அசைவது.. நான் சொல்வதைத் தான் நீங்கள் பார்க்க முடியும்.

ஆனால் அந்த உணர்வு உயிரிலே பட்டால் தான் நீங்கள் அறிய முடியும். உயிரிலே பட்டதும் அதை உணர முடிகின்றது. அந்த உணர்ச்சி உங்கள் உயிரில் இயக்கப்படும் போது தான் அது இயங்குவதை… உணர்ச்சியால் உங்கள் உடலில் நீங்கள் அறிகின்றீர்கள்.
அதாவது
1.கண்ணால் பார்க்கின்றோம்
2.அந்த உணர்வால் உணர்கின்றோம்
3.உணர்ச்சியால் இயக்குகின்றோம்
4.உணர்ச்சிகள் நம்மை இயக்குகின்றது.

நமக்குக் கோபம் வந்தவுடன் அந்த ஆத்திரம் வந்து நம்மை இயக்குகிறது. கோபம் வந்தால் நம்மை எப்படி இயக்குகிறது என்று நமக்குத் தெரிகிறது, ஆனால் அதை அடக்க வேண்டுமா இல்லையா ?

குழந்தைக்கு உடம்புச் சரி இல்லை என்று எண்ணுகிறோம். அதை உணர்வால் அறிகின்றோம் வேதனையான உணர்ச்சி நமக்குள் வந்து “ஐயோ… குழந்தைக்கு இப்படி வந்து விட்டதே…!” என்று பதறுகின்றோம்.

ஆனால் இந்த உணர்வெல்லாம் நம் ரத்தத்தில் சேர்ந்து நமக்குள் தீமையாக விளைகின்றது. இதை அப்போதைக்கப்போது துடைக்க வேண்டுமா… இல்லையா..?

கண்ணிலே பார்க்கும் போது அவன் வேதனைப்படுகிறான் என்று தெரிந்து கொண்டாலும் ஈஸ்வரா என்று நம் உயிரான ஈசனிடம் வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று தடுக்க வேண்டும்.

குழந்தை வேதனைப்படுவதைக் கண்ணால் பார்த்திருக்கிறோம். நம் கண்ணின் கருவிழி ருக்மணி இங்கே விலா எலும்புகளில் பதிவாக்குகிறது. அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருளை அதற்குப் பக்கத்திலேயே அங்கே பதிவாக்க வேண்டும்.

எந்தக் கண்ணால் பார்த்து வேதனையை எடுத்தோமோ அதன் அருகிலேயே கண்ணின் நினைவு கொண்டு துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பதிவாக்கும் போது இது வலுவாகிறது.

அவனுக்கு உடம்பு நலமாக வேண்டும், அவன் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அவன் உடல் முழுவதும் படர வேண்டும், அவன் நோய் நீங்க வேண்டும் என்று நமக்குள் இதை உருவாக்கி அதைச் சொல்லாக அவனிடம் சொல்ல வேண்டும்.

1.நாம் சொல்லும் போது அது வாயுவாகப் போகின்றது.
2.காது வழியாகக் கேட்டு குழந்தையை நுகரச் செய்கின்றது.
3.நுகர்ந்த பின் உயிரிலே பட்டு இந்த உணர்ச்சிகள் அவன் உடலில் எந்த உறுப்பிலே நோய் இருந்ததோ அதற்குள் வாயுவாகச் சென்று
4.அந்த உணர்ச்சியை ஊட்டி
5.நோயைக் குறைக்கும் ஞானத்தை அவனுக்கு ஊட்டுகின்றது.

அதனால் தான் “ஆஞ்சநேயன்” அவன் வாயு புத்திரன்.. என்றும் அந்த வாயு நம் உடலுக்குள் அணுவாக (புத்திரனாக) மாறும் பொழுது “அனுமார்” என்றும் தெளிவாக்குகின்றனர் ஞானிகள்.