விநாயகர் வள்ளியை முருகனுக்கு மணம் முடிக்க உதவினார்… ஏன்…?

Valli marraige

விநாயகர் வள்ளியை முருகனுக்கு மணம் முடிக்க உதவினார்… ஏன்…?

சேனாதிபதி…! பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன்…! என்றால் தீமைகளை வென்றவன். அந்த அருள் ஒளியைத் தனக்குள் எடுக்கும் பொழுது வலிமை பெருகுகின்றது. அது தான் வள்ளி.

நம் உடலிலிருந்து வரக்கூடிய வலிமையான சக்தி வள்ளி (வல்லி). திணைக்காட்டில் காவல் இருக்கின்றாள் வள்ளி.

தான் விளைய வைத்ததை மற்ற பட்சிகள் கொத்தித் தின்றுவிடாமல் கவண் கொண்டு கல்லை வீசிப் பாதுகாக்கின்றாள். அதாவது
1.உடலை வளர்த்த நிலையில்
2.நம் உடலுக்குள் தீமை வராதபடி அதை எதிர்த்துத் தாக்குதல் வேண்டும்.

அந்த வலுவான சக்தியை நமக்குக் காட்டுவதற்காக வேண்டி வள்ளி திருமணத்தைக் காட்டுகின்றார்கள். விநாயகர் வந்து “என் தம்பி முருகனைத் திருமணம் செய்து கொள்…!” என்று வள்ளியைப் பயமுறுத்தி முருகனிடம் கொடுத்து விடுகின்றார்.

விநாயகர் தன் தம்பிக்கு இப்படிக் கல்யாணத்தைப் பண்ணி வைக்கின்றார். ஆக விநாயகர் என்பது யார்…?
1.இந்த உடலைக் காத்திடும் வினையாகச் சேர்த்து அதை இச்சையாகி இச்சா சக்தி… கிரியா சக்தி… ஞான சக்தி…!
2.தன் உடலைக் காக்கும் உணர்வின் தன்மை இச்சைப்பட்டு
3.அந்த உணர்வுகள் உயிரிலே பட்ட பின் கிரியை ஆகி
4.அந்த ஞானப்படித்தான் இந்த உடல் இயங்கும்.

ஆகவே எதை இச்சைப்பட வேண்டும்…? அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் வலு சேர்க்க வேண்டும். நம் உடலில் அந்த ஒளியான அணுக்களைப் பெருக்கி உயிராத்மாவை ஒளியாக ஆக்க வேண்டும்.

வள்ளி… அந்த வலிமை மிக்க சக்தியை நாம் நுகரப்படும் பொழுது நம் உயிரிலே பட்ட பின் தெய்வ ஆணை அந்த உணர்வு எதுவோ அது செயல்படும். அதன் வழியே இந்த உடல் இயங்கும்.

இவ்வளவு பெரிய விஷயத்தைக் காவியமாகச் சுருக்கமாக மக்களுக்குப் புரிய வைக்கின்றார்கள் ஞானிகள். நாம் புரிந்திருக்கின்றோமா என்றால் இல்லை, (முருகனுக்கு இரண்டு மனைவி. ஆசைக்கு ஒரு மனைவி அன்புக்கு ஒரு மனைவி என்று அதைத் தான் சொல்லத் தெரியும்.)

அந்த மகரிஷிகளின் அருள் ஆற்றலை உங்களுக்குள் வலு (வள்ளி) ஏற்றுவதற்காக வேண்டித் தான் அதை உபதேசமாக
1.உங்கள் எணணங்களை வேறு பக்கம் திருப்பாதபடி
2.மெய் ஞானிகளின் உணர்வுகளை ஆழமாகப் பதிவாக்குவதற்காக
3.மூன்று மணி நேரம் ஆறு மணி நேரம் எட்டு மணி நேரம் என்று பத்து மணி நேரம் கூடப் (பாபநாசத்தில்) பேசியிருக்கின்றேன் (ஞானகுரு)

உபதேசத்தைக் கேட்பவர்களின் உணர்வை எல்லாம் ஒடுங்கச் செய்து எங்கே இருக்கின்றார்கள்…? என்றால் சொர்க்கலோகத்திலேயே இருக்கின்றார்கள். ஏனென்றால்
1.உங்களிடம் உள்ள மற்ற உணர்வுகளை மறக்கச் செய்து
2.அந்த மெய் ஞானிகளின் உணர்வுகளில் வலுவாக (வள்ளி) இருக்கச் செய்வதற்குத்தான் அப்படி மணிக்கணக்கில் பேசுவது.

அப்பொழுது எனக்குள்ளும் அந்த அருள் சக்தி வளர்கின்றது. உங்கள் உடலுக்குள் அந்த அருள் ஒளியைச் சேர்க்கப்படும் பொழுது அருள் ஆனந்தம் நிச்சயம் உங்களுக்குக் கிடைக்கும். தீமைகளிலிருந்து நீங்கள் விடுபடுவீர்கள்.

நம்முடைய தவறை நீக்குவதற்காக ஞானிகளால் வைக்கப்பட்ட ஆலயங்களில் எதை வேண்டுகிறோம்…?

Renganathan saamigal

நம்முடைய தவறை நீக்குவதற்காக ஞானிகளால் வைக்கப்பட்ட ஆலயங்களில் எதை வேண்டுகிறோம்…?

 

பல கோடிச் சரீரங்களில் தீமையை உணர்ந்து உணர்ந்து அதிலே பரிணாம வளர்ச்சி ஆகி
1.தீமையிலிருந்து விடுபட்ட உணர்வுகள்
2.தீமையிலிருந்து விடுபடும் அனைத்தையும் அறிந்திடும் அறிவாக
3.தனக்குள் தீமை வராது சேனாதிபதியாக ஆறாவது அறிவு கார்த்திகேயா என்று
4.இந்த மனித உடலில் இருக்கின்றது.

நாம் உணவாக உட்கொள்ளும் உணவில் மறைந்த நஞ்சுகளை மலமாக மாற்றும் நிலையைச் சரவணபவா… தீமைகளைச் சரணமடையச் செய்யக்கூடிய சக்தியாக கந்தா… பலவற்றையும் அறிந்து கடம்பா… உருவாக்கத் தெரிந்து கொண்டவன் கார்த்திகேயா என்று ஆறாவது அறிவின் இயல்பைக் காட்டுகின்றார்கள்.

கோபப்படுபவரை சலிப்புப்படுபவரை என்று பலவிதமான உணர்வுகளை ஒவ்வொரு நாம் நுகர்கின்றோம். வருவதை எல்லாம் அரவணைத்துக் கொள்கிறோம் அல்லவா…!

கந்தா.. கடம்பா…! நாம் எண்ணியதை எல்லாம் உருவாக்குகின்றான் கார்த்திகேயா. ஏனென்றால் நமக்குள் இதெல்லாம் எப்படி உருவாகிறது என்று தெரிந்து கொள்கின்றான்.

தீமைகளை வெல்லும் சக்தியான ஆறாவது அறிவு கார்த்திகேயா… சேனாதிபதி…! தீமை வந்தால் அதை நீக்கிடும் நிலையைக் கொண்டு வருகின்றது.

ஆனால் ஒருவன் தீமை செய்கின்றான் என்றால் அவனை அழிக்க வேண்டும் என்ற உணர்வை நுகர்ந்தோம் என்றால் ஓ…ம் நமச்சிவாய…! நம் உடலை அழிக்கும் “அணுவாக” இங்கே நுழைந்து விடுகின்றது.
1.அவனை அழிக்க வேண்டும் என்று எண்ணும் பொழுது
2.அழித்திடும் உணர்வின் தன்மை இங்கே வருகின்றது.
3.அவனைக் கொல்ல வேண்டும் என்று எண்ணினோம். நம் நல்ல எண்ணத்தை அது கொல்லும்.
4.கொல்ல வேண்டும் என்ற உணர்ச்சியைத் தூண்டும்.. அடுத்து அவனைக் கொல்லும்.
5.அவனைக் கொன்று ரசிக்கும். ரசிக்கும் உணர்வுகள் இங்கே வந்த பிற்பாடு
6.உடலுக்குள் கிருமிகளாக உருவாகி டி.பி நோயாக உருவாகும். நம்மையும் கொல்லும்…!

அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்…?

இவனிடம் இருப்பது வேதனை. இதை முதலில் அடக்க வேண்டும். வேதனை என்ற நஞ்சை அடக்க வேண்டும் என்றால் அருள் மகரிஷிகளின் உணர்வை நம் உடலுக்குள் சேர்த்தே ஆக வேண்டும்.

மகரிஷிகளின் அருள் உணர்வை நமக்குள் சேர்க்கச் சேர்க்க அந்த நஞ்சுகள் ஒடுங்கும். ஏனென்றால் இதைப் போன்ற நஞ்சினை வென்றவர்கள் அந்த மகரிஷிகள். இதை எண்ணி நமக்குள் எடுத்துக் கொண்டால் நாம் எண்ணியதை உருவாக்குவது உயிர்.

இதைத்தான் ஒவ்வொருவரையும் ஆலயங்களில் எண்ணி எடுக்கும்படி சொல்கிறார்கள் ஞானிகள். ஆலயத்திற்குச் செல்வோர்
1.அவர் அருளைப் பெற்று
2.மற்றவர்கள் எல்லாம் நலமாக வேண்டும் என்ற எண்ணம் இங்கே தோன்றுகிறதா என்றால் இல்லை…!

நான் தவறு செய்தேன்… கொலை செய்தேன்… கொள்ளை அடிக்கிறேன்…! என்பவனும் ஆடு கோழி மாடை அறுப்பவனும் கோவிலுக்குள் போகின்றான். உண்டியலில் காணிக்கையைப் போட்டு விட்டு என்னைக் காப்பாற்றுடா…! என்று வேண்டுகின்றான்.

நான் தவறு செய்கின்றேன். நான் செய்யும் தவறுக்கு அவன் உதவி செய்யவில்லை. அதனால் அவனுக்கு இடைஞ்சல் செய்தேன் எனக்கு ஒத்து வரவில்லை அதனால் அவனைக் கொன்றேன்.

இப்படி எல்லாம் சொல்லிக் கொண்டு செய்த பாவத்திற்காக வேண்டிக் கோவிலில் அபிஷேகம் செய்து ஆராதனை செய்து என்னைக் காப்பாற்றுடா..! என்று சொன்னால் யாரும் காக்க முடியாது. அவன் எப்படிக் காப்பான்…?

“கந்தக் கோட்டத்திற்குள் அமர்ந்த கந்தவேலே…! அருள் பெரும் ஜோதி நீ… தனிப் பெரும் கருணை…!” எதனையுமே நீ அருள் பெரும் ஜோதியாக இயக்குகின்றாய். தனிப் பெரும் கருணையாக எனக்குள் உருவாக்குகின்றாய் என்று இராமலிங்க அடிகள் பாடினார்.

நாம் எண்ணியதைத்தான் உயிர் இங்கே கொடுக்கின்றது. நான் யாரிடமும் யாசிக்கக் கூடாது… யாருக்கும் நான் இல்லை என்று சொல்லக் கூடாது. அந்த அருள் தாகத்துடன் வருபவருக்கு அருள் ஞானத்தைப் போதிக்க வேண்டும் என்று வேண்டினார் அடிகளார்.

யாரிடமும் யாசகம் வாங்க மாட்டேன் என்று சொன்னவுடனே சாப்பாடு போடுவதற்கு வந்து விட்டோம். சாப்பாடு போடுகிறோம் என்றால் எல்லோரும் தான் வருகின்றார்கள்.
1.ஆனால் அவர்கள் மனதைத் திருத்த முடிகின்றதா..?
2.உடல் பசியைப் போக்க முடிகின்றது. அருள் ஞானப் பசிக்கு உணவு கிடைக்கிறதா…? இல்லை…!

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் யாம் (ஞானகுரு) அந்த அருள் ஞானத்தைக் கொடுக்கின்றோம். ஏங்கி இருக்கக் கூடிய அணுக்களுக்கு அதைக் கொடுக்கின்றோம்.
1.மெய் ஞானத்தைப் பெறவேண்டும் என்பவர்கள் தான் இங்கே வருவார்கள்.
2.அந்தப் பசியைப் போக்கும் பொழுது அருள் ஒளியின் உணர்வு உங்களுக்குள் வளர்கின்றது.
3.அதற்குத்தான் மணிக்கணக்கில் பேசுகிறோம்…!

லட்சுமணா…! – சுவாசித்தது உணர்ச்சிகளாக எப்படி இயக்குகிறது என்பது பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்

Rama sita lakshmana

லட்சுமணா…! – சுவாசித்தது உணர்ச்சிகளாக எப்படி இயக்குகிறது என்பது பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்

ஒரு வேப்ப மரம் இருக்கின்றதென்றால் அது கசப்பின் உணர்வு கொண்டது. ஆனால் ரோஜாப்பூவோ துவர்ப்பு உணர்வு கொண்டு நறுமணங்களைக் கூட்டும் உணர்வு கொண்டது.ஆனால் இதைச் சூரியன் காந்தப்புலன் அறிவு கவர்ந்து அதனதன் அலைகளாகப் படரச் செய்கின்றது.

ஏனென்றால் சூரியனிலிருந்து வெப்பமும் காந்தமும் விஷம் என்ற மூன்று நிலைகள் தான் வருகிறது. காரணம் பிற மண்டலங்களில் இருந்து கவர்வதை நட்சத்திரங்கள் கவர்ந்து அந்த விஷத் தன்மையைத் தூசிகளாக மாற்றுகின்றது.

அப்படித் தூசிகளாக மாறி வருவதை இந்த சூரியன் தனக்குள் இழுக்கும் போது தன் உணர்வில் பெற்றதைப் பாய்ச்சுகிறது.

ஒரு நூலாம்படைப் பூச்சி நூலாம்படையால் தன் கூட்டினைக் கட்டித் தனக்குள் எவ்வாறு இருக்கின்றதோ இதைப் போல தான் பிற மண்டலங்களின் சக்தியை நட்சத்திரங்கள் கவர்ந்தாலும் இதனில் உருவான அந்த உணர்வின் மலம் தான் அது – பால்வெளி மண்டலம்.

பால் வெளி மண்டலமாக மாற்றினாலும் அதிலே சிக்குண்டு வருவதை நட்சத்திரங்கள் அது சுழலும் போது தூசியாக மாற்றிப் நம் பிரபஞ்சத்திலே பரவச் செய்கின்றது. தூசியாக வருவதைச் சூரியனுடைய காந்தப்புலன் அறிவு அதைக் கவர்கின்றது.

ஏனென்றால் இதிலிருந்து வெளிப்படும் உணர்வை வெப்பம் காந்தம் என்ற நிலைகள் மோதலின் தன்மை ஆகும் பொழுது அது வெப்பமாக மாறுகிறது. வெப்பமாக மாறும் போது நகர்ந்து ஓடும் சக்தியும் ஈர்க்கும் காந்தத்தின் செயல் அதிகமாகின்றது.

மோதலில் சூரியன் விஷத்தின் தன்மைகளைப் பிரிந்தாலும் பிரிந்து செல்லும் விஷத்தின் தன்மையை இந்தக் காந்தம் இழுத்து வைத்துக் கொள்கின்றது.

இதை எல்லாம் நாம் சாதாரணமாக எளிதில் புரிந்து கொள்வதற்காக
1.சூரியனை நாராயணன் என்றும்
2.மறு அவதாரமாக உயிரின் துடிப்பிற்குள் வெப்பமாக வருவதை விஷ்ணு என்றும்
3.வெப்பத்தினால் ஈர்க்கும் தன்மை வருவதை அந்தக் காந்தத்தை லெட்சுமி என்றும்
4.பிரிந்து சென்ற விஷத்தை அந்தக் காந்தம் தனக்குள் இணைத்து கொளளும் பொழுது அதை லட்சுமணா என்றும் காட்டுகிறார்கள் ஞானிகள்,

இராமயாணத்தில் பார்த்தோம் என்றால் ராமனும் லட்சுமணனும் சீதையும் இருக்கும். இதெல்லாம் நமக்கு தெளிவாகவே தெரியச் செய்கிறார்கள். இந்தக் காந்தம் ஒரு மணத்தின் தன்மையை நுகர்ந்த பின் எப்பொருளை இந்தக் காந்தம் இழுக்கின்றதோ அந்த மணத்தை…
1.உணரச் செய்யும்
2.உணர்த்தச் செய்யும்
3.உணர்வை வளர்க்கச் செய்யும் சக்தி பெற்றது இந்த விஷம்
4.அது தான் “லட்சுமி… லட்சுமணா…” (எல்லாமே காரணப் பெயர் தான்)

ஒரு செடியின் சத்தை இந்தக் காந்தம் இழுத்துத் தன்னுடன் மோதலாகும் பொழுது வெப்பமாகின்றது. இரண்டறக் கலந்து விடுகிறது. மோதலில் ஏற்படும் இதனுடன் இணைந்த விஷத்தின் தாக்குதலால் வெப்பத்தின் தன்மை கூடும் தன்மை வருகிறது.

ஆனால் இணைந்து கொண்ட பின் அதற்குள் இருக்கும் விஷம் இந்த மணத்தை வெளிப்படுத்துகின்றது. அதாவது ஒரு செடியின் சத்தை இவ்வாறு நுகர்ந்து விட்டால் சீதா… “சீதா லட்சுமி” என்று சொல்வார்கள்.

ஆனால் அதே சமயம் அதே செடியின் சத்தை மனிதனான நாம் நுகர்ந்தால் நம் உயிருக்குள் பட்ட பின் “சீதா ராமா” எண்ணங்களாகத் தோன்றுகிறது. அந்த உணர்ச்சிகள் நமக்குள் இந்த உயிர் என்ற விஷ்ணு மோதலில் ஆனபின் ஒலி அலைகளை உடலிலே பரப்புகின்றது.

அந்த உணர்வின் சக்தியை நம் உடலிலே சுழலச் செய்கிறது. அந்த உணர்ச்சியின் தன்மை ஒவ்வொன்றிலும் தாக்குகிறது. எதன் உணர்வை நுகர்ந்தோமோ அந்த உண்ரச்சியின் தன்மை நம் உடலிலே உருவாக்குகின்றது.

நமது ஞானிகள் இதை எல்லாம் இணைத்துக் காவியமாக நமக்கு எவ்வாறு கொடுத்தார்கள் என்ற நிலையைச் சற்று சிந்தித்துப் பார்த்தால் மனிதனான பின்
1.நாம் எதை நுகர வேண்டும்…?
2.நாம் எதை வளர்க்க வேண்டும்…?
3.நாம் எவ்வழி செல்ல வேண்டும்…?
4.நாம் எதனை நமக்குள் பெருக்க வேண்டும்…? என்ற சிந்தனை வந்து விடும்.

ஆகவே சுழலப்படும் போது இந்த உணர்வின் சத்து… “சீதா” என்பது உடலாகி விடுகிறது. அதில் உள்ள மணம் ஞானமாகின்றது. எந்த மணத்தின் தன்மை இதில் உணர்ச்சிகளாகின்றதோ அந்த ஞானத்தின் தன்மை கொண்டு
1.இந்த உடல் இயக்கும்.
2.அந்தச் சொல் வரும்.
3.அந்தச் செயல் இருக்கும்.

சீதா என்ற நிலையின் அந்தச் சுவையின் சொல்லாக வரப்போகும் போது அந்த உணர்வின் மணமாக அந்த உணர்ச்சிகளைத் தூண்டி நம் எண்ணம் செயல்படும்.

ஆகவே இந்த விஷம் எதனுடன் கலக்கின்றதோ அதனின் உணர்ச்சியைத் தூண்டும் செயல் பெற்றது. ஆகையினாலே உணர்ச்சி என்பது உணர்ச்சியை மனிதனுக்குள் அந்த உணர்ச்சியைத் தூண்டச் செய்வது. உணர்வு என்பது ஒன்றுடன் இணைந்து அணுவின் தன்மை பெற்றது.

ஒரு மனிதனுக்குள் விளைந்து வெளிப்பட்ட உணர்வை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொண்டால் “உணர்வு…” என்ற நிலைக்கு மாறுகிறது. உணர்வின் தன்மையை மனிதர்கள் நுகர்ந்தால் “உணர்ச்சி…” என்ற உணர்வுகளே அஹ்டு இயக்கச் சக்தியாக மாற்றுகின்றது.
1.ஒரு திடப்பொருளாகும் போது உணர்வு.
2.ஆனால் நாம் நுகரப்படும் போது உணர்ச்சி.

உதாரணமாக மிளகாயை எங்கேயோ வறுக்கிறார்கள். சூரியனின் காந்த சக்தி அந்த மணங்களை எடுத்துக் கொள்கிறது. சுவாசித்தவுடன் நாம் என்ன செய்கிறோம்..?

அந்த நெடி கலந்த உணர்வால் “நச்சு…நச்சு…” என்று தும்முகின்றோம். அப்போது அந்த உணர்ச்சிகளை அங்கே தூண்டச் செய்கின்றது. அது தும்மலாக வருகிறது.

உணர்வு இயக்கி உணர்ச்சியாக ஆன பின் அதைச் சொல்லாகச் சொல்லும் பொழுது “இந்த நேரத்திலே போய் மிளகாயை வறுக்கிறார்கள் பார்…!” என்ற சொல்லைத் தான் சொல்ல வைக்கின்றது.

சொல்வது அர்த்தமாகிறதல்லவா..!

இயற்கையின் நிலைகளில் “நாம் இயங்குகிறோமா…?” என்றால் இல்லை. நாம் நுகரும் உணர்வு எதுவோ அது தான் இந்த உடலை இயக்குகின்றது. இதைத் தெளிவாக்குகின்றார்கள் ஞானிகள்.

அப்பொழுது நாம் நுகரும் உணர்வுகள் எதுவாக இருக்க வேண்டும்…?

நம் ஆறாவது அறிவைக் கார்த்திகேயா என்று காட்டி அந்த மெய் ஞானிகள் வெளிப்படுத்தும் அருள் உணர்வுகளைச் சுவாசித்து அதனின் இயக்கமாக நாம் வளர வேண்டும்… வாழ வேண்டும்…! மகரிஷிகளின் அருள் வட்டத்திலேயே என்றும் வாழ்ந்திட வேண்டும் என்பதே நம் குருநாதர் காட்டிய அருள் வழி.

தீமையான உணர்வுகள் நமக்குள் வினையாக… ஒரு வித்தாக… உருவாகாமல் தடுப்பது தான் “சதுர்த்தி…!”

ganeshpuja

தீமையான உணர்வுகள் நமக்குள் வினையாக… ஒரு வித்தாக… உருவாகாமல் தடுப்பது தான் “சதுர்த்தி…!”

 

மனிதனுக்கு மனிதன் கொன்று புசிக்க வேண்டும் என்ற சிந்தனையை எடுத்துப் பல கருவிகளை உருவாக்குகின்றார்கள்.
1.கொல்லும் பொழுது கொல்பவனோ அதை ரசிக்கின்றான்.
2.கொல்லப்பட்டவனோ துடிக்கின்றான்… பதறுகின்றான்.

இந்த இரண்டு உணர்வும் இங்கே உருவாக்குகின்றது.

பதட்டமடைவனின் உடலில் பதட்டத்தை உருவாக்கும் அணுக்களாக உருவாகின்றது, அவன் வெளி விடும் மூச்சலைகள் பதட்டமான உணர்வலைகளாகக் காற்றிலே பரவுகிறது.

அதே சமயத்தில் கொல்லும் உணர்வுகளை நுகரப்படுவனின் உடலில் மற்றவர்களைக் கொன்று போட்டு மனதில் மகிழ்ச்சி பெறும் நிலையாகி அத்தகைய மூச்சலைகள் காற்றிலே பரவுகிறது.

1.இத்தகைய அலைகள் தான் இன்று காற்று மண்டலத்தில் அதிகமாகப் படர்ந்துள்ளது.
2.இந்த உணர்வுகளை நுகரும் மற்ற மனிதனுக்குள்ளும் அத்தகைய அணுக்கள் விளையத் தொடங்குகின்றது.

ஏனென்றால் அதே உணர்வுகள் இயக்கப்பட்டுத் தன் இரையைத் தேடி நுகரும் பொழுது அதே காரியத்தையே செய்யும். நாளடைவில் இந்தக் காற்று மண்டலமே நச்சுத் தன்மையாகி விட்டது.

1.இப்படிப்பட்ட நஞ்சின் தன்மைகள் உருவாகாதபடி தடுப்பதற்குத்தான்
2.அன்று விநாயகர் சதுர்த்தியை ஏற்படுத்தினார்கள் ஞானிகள்.
3.அதாவது “தீமையான உணர்வுகளை வளராது தடுக்கும் நாள்…!” என்று வைத்தார்கள்,

மனிதனுக்கு மனிதன் நாம் பேசுகின்றோம். பேசித் தொடர்பு கொள்ளும் பொழுது உதாரணமாக நான் வேதனைப்பட்டால் அதைக் கேட்டு நீங்களும் வேதனை உனர்வுகளை எடுத்துக் கொள்கின்றீர்கள்.

ஏனென்றால் வேதனைப்படுவோரின் உணர்வுகளை நுகரப்படும் பொழுது உயிரிலே பட்டு அதே உணர்ச்சியாக இயக்கப்பட்டு நமக்குள் வந்துவிடுகின்றது.

மனிதனுக்கு மனிதன் யாரும் பிரிவில்லாதபடி அதை வளர்த்து வைத்திருக்கின்றோம். இப்படி இரண்டு பேர் பேசிய உணர்வையும் சூரியனின் காந்த சக்தி எடுத்து வைத்துக் கொள்கிறது.

இப்பொழுது நல்ல மனிதனாக இருக்கின்றான் என்று ஒருவரைப் பற்றித் தெரிந்து கொள்கிறீர்கள். அவரிடம் நெருங்கிப் பழகுகின்றீர்கள் அடுத்து அந்த மனிதனுக்கு நோயாகிவிட்டது…! என்று சொல்கிறார்கள்… நீங்கள் அதைக் கேள்விப்படுகின்றீர்கள்.

கேள்விப்பட்ட உடனே
1.அந்த நல்ல மனிதனின் உணர்வு நமக்குள் இருந்தாலும்
2.அடடா… நல்ல மனிதனுக்கு இப்படி ஆகிவிட்டதே…! என்று நாமும் வேதனையைச் சுவாசிக்கின்றோம்.
3.அவர் மேல் உள்ள பாசத்தால் நாம் எண்ணும் பொழுது
4.அவர் உடலில் உருவான அதே நோயின் உணர்வுகளை நாமும் எண்ணி இழுத்துக் கவர்ந்து விடுகின்றோம்.
5.அதே நோயின் தன்மை இங்கே நமக்குள்ளும் உருவாகின்றது.
6.நாம் தவறு செய்யவில்லை ஆனால் நமக்கும் நோயாகின்றது.

சந்தர்ப்பவசத்தில் அவர் இறந்தால் அவரின் பற்று எவ்வளவு நமக்கு இருந்ததோ அந்த உடலை விட்டு இறந்த ஆன்மா நம் எண்னத்தின் வலு கொண்டு நம் உடலுக்குள் வந்துவிடும்.

பார்க்கலாம்… நீங்கள்…! நேற்று வரையிலும் நன்றாக இருந்தார்… திடீரென்று எபப்டியோ மனமாற்றம் ஆனார்..! என்று பார்க்கின்றோம். இது எல்லாம்
1.ஒரு மனிதனுக்கு மனிதன் தொடர்பு கொண்ட உணர்வுகள்
2.வரிசையாக இப்படித்தான் இயக்குகிறது…! நாம் தவறு செய்யவில்லை…!

இதைப் போன்ற நிலைகள் நமக்குள் உருவாவதை நாம் எப்படித் தடுக்க வேண்டும்…? தடுக்க ஒரு சக்தி வேண்டுமல்லவா…!

நண்பரோ உறவினரோ யாராக இருந்தாலும் வேதனைப்படுகின்றார்கள் அல்லது நோயால் வாடுகிறார்கள் என்று கேள்விப்பட்டால்
1.உடனே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் ஈஸ்வரா என்று
2.நாம் இந்த உணர்வைப் பல முறை எடுத்து நமக்குள் சேர்க்க வேண்டும்.

அடுத்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தியால் அவர் நல்ல நிலை பெறவேண்டும் அவர் அருள் ஒளி பெறவேண்டும் உடல் நலம் பெற வேண்டும் என்ற எண்ணங்களை எண்ணி நமக்குள் மாற்றிவிட வேண்டும்.

இது தான் சதுர்த்தி என்பது. தீமையான உணர்வுகள் நமக்குள் வினையாக… ஒரு வித்தாக உருவாகாமல் தடுப்பது தான்.. “விநாயகர் சதுர்த்தி…!”

இப்படி ஒவ்வொரு மனிதனும் எண்ணி எடுத்தால் இந்தக் காற்று மண்டலமே தூய்மையாகின்றது. தீய வினைகள் நமக்குள் சேர்வதில்லை. தீமை செய்யும் உணர்வுகள் அனைத்தும் இந்தக் காற்று மண்டலத்திலிருந்து அகற்றப்பட்டு இந்தப் பரமாத்மாவும் தூய்மையாகின்றது.

தீமை செய்யும் உணர்வுகளை இங்கே உள்ள மனிதர்கள் யாரும் நுகரவில்லை என்கிற பொழுது பிடிப்பில்லாத அந்த அலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கடலுக்குள் அமிழ்த்தச் செய்கின்றது.

அதை உணர்த்தும் விதமாகத் தான் விநாயகரைக் களிமண்ணில் செய்து அதைக் கடலிக் கரைக்கச் சொன்னது. தீய வினைகளை நமக்குள் சேர்க்காமல் எல்லோரும் சேர்ந்து அந்தக் கடலில் கரைக்க வேண்டும்.

ஞானிகள் சொன்னதில் எதுவும் தவறில்லை… அந்தக் கருத்தினை நாம் அறிந்து வழி நடக்க வேண்டும். அதற்காகத்தான் சொல்கிறோம் (ஞானகுரு)

ஞானிகள் கொடுத்துள்ள காவியங்களில் உள்ள மூலக் கருத்துக்களைப் பற்றி நாம் சிந்திக்கின்றோமா…?

va;i ugriva

ஞானிகள் கொடுத்துள்ள காவியங்களில் உள்ள மூலக் கருத்துக்களைப் பற்றி நாம் சிந்திக்கின்றோமா…?

 

இராமாயணத்தில் காட்டப்பட்ட வாலி என்ன செய்கிறான்…?

நம்முடைய சகஜ வாழ்க்கையில் நாம் நோயாளியைப் பார்க்கிறோம்… கோபப்படுகிறவர்களைப் பார்க்கிறோம்… வேதனைப்படுகிறவர்களைப் பார்க்கிறோம்…!

ஏனென்றால் அந்த உணர்வுகள் அவர்களிடமிருந்து வெளி வரப்படும் போது சூரியனுடைய காந்த சக்தி அதைக் கவர்கின்றது. அந்தந்தச் சுவைக்கொப்ப சீதா லட்சுமியாக மாறுகிறது.

1.சீதா லட்சுமியாகச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்திருக்கும்
2.அந்த வேதனைப்படுவோரின் உணர்வலைகளை நாம் நுகர்ந்தறிந்தால் சீதா ராமன்.
3.அதாவது அவர்கள் எப்படி வேதனைப்பட்டார்களோ
4.அந்த வேதனைப்படும் எண்ணங்களை நமக்குள்ளும் உருவாக்குகின்றது.

ஆனால் வேதனைப்படும் எண்ணங்கள் வரப்போகும் போது இது வாலியாகி விடுகின்றது. நம் எண்ணங்கள் சோர்வடைகின்றது. ஏனென்றால் வாலி எவரைப் பார்த்தாலும் அவன் வலிமையைச் சரி பகுதி பெற்று விடுவான்.

உயர்ந்த குணம் கொண்டு வேதனைப்படுவோர்களைப் பார்க்கின்றீர்கள். அதை நுகர்ந்தபின் சீதாராமா… அந்த எண்ணங்கள் என்ன செய்யும்…? வாலியாகி விடும். உங்கள் வலு இழக்கப்படுகின்றது.

அப்போது இதை எப்படி மாற்ற வேண்டும்…?

இதைப் போன்ற தீமைகளை எல்லாம் வென்றது அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக ஆனது. துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளைச் சூரியனின் காந்த சக்தி அலைகளாகக் கவர்ந்து வரும் பொழுது அது “சுக்ரீவன்…”

இராமன் என்ன செய்கின்றான்…? சுக்ரீவன் துணை கொண்டு வாலியை வெல்கிறான். சுக்ரீவனின் துணை என்றால்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்.
2.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும் என்கிற போது
3.விஷத்தின் தன்மையை ஒடுக்கிய அந்த சுக்ரீவன் துணை கொண்டு அடக்குகின்றான்.
4.ஆனால் வாலியின் சகோதரன் தான் சுக்ரீவன். இவன் இளையவன். அவன் மூத்தவன்.

புழுவிலிருந்து விஷத்தின் வலு கொண்டு தான் பரிணாம வளர்ச்சியில் நாம் வளர்ந்தோம். மனிதனான பின் இந்த விஷத்தின் தன்மையை ஒடுக்கும் மார்க்கங்களைத் தான் தெளிவாகக் காவியங்களாகக் கொடுத்திருக்கின்றார்கள் ஞானிகள்.

இராமயாணம் எது…? என்றாவது நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இராமன் கடவுள் என்றால் நம் எண்ணங்கள் நமக்குள் கடவுளாகின்றது.
1.எதன் உணர்வு நமக்குள் எண்ணங்களாகத் தோன்றுகிறதோ
2.அதுவே கடவுளாக வந்து இயக்குகின்றது.

ஆனால் இராமன் தனித்து ஒரு கடவுள் இல்லை. நம்முடைய எண்ணங்கள் தான் கடவுள் என்ற நிலைகளை வான்மீகி அன்று சொன்னார். உள் நின்று அது இயக்குகின்றது.

நம் எண்ணத்தின் நிலைகளை ஈசனாக இருந்து உருவாக்குவது நம் உயிரே…! அந்த உணர்வின் எண்ணங்கள் வரப்போகும் போது உள் நின்று அதனின் சக்தியாக நம்மை இயக்குகின்றது.

அதனின் குணத்தைச் “சக்தி…” என்றும் உணர்வின் தன்மை உறைவதை உடல் “சிவம்…” என்றும் சிவத்திற்குள் உள் நின்றே நம்மை இயக்குகிறான் என்றும் மீண்டும் எண்ணப்படும் போது அதன் வழி கொண்டு “குருவாக…” நம்மை இயக்குகின்றான் என்ற நிலையை இவ்வளவு தெளிவாக நம் காவியங்கள் மூலம் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

கொஞ்சமாவது நாம் அதைச் சிந்திக்கிறோமா….?

ஆகவே ஒவ்வொரு நொடியிலும் குறைகளைக் கண்டாலோ கோபப்படுவோரைக் கண்டாலோ வேதனைப்படுவோரைக் கண்டாலோ “ஈஸ்வரா…!” என்று உயிரான ஈசனிடம் முதலில் எண்ணத்தைச் செலுத்துங்கள்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும் என்று
1.நுகர்ந்த தீமைகளை வலுவாக்காதபடி
2.அருள் உணர்வுகளை வலுவாக்குங்கள்.

செய்த தவறுக்காக ரிஷி சாபம் கொடுத்தார்…! பின் அதற்குரிய சாப விமோசனமும் அவர் கொடுத்தார்…! என்று காவியங்கள் உணர்த்துகின்றது – அந்த ரிஷி யார்…?

Soul powers

செய்த தவறுக்காக ரிஷி சாபம் கொடுத்தார்…! பின் அதற்குரிய சாப விமோசனமும் அவர் கொடுத்தார்…! என்று காவியங்கள் உணர்த்துகின்றது – அந்த ரிஷி யார்…?

 

ரிஷி என்ன செய்தார்…? .செய்த பாவத்திற்காக வேண்டி நீ பாம்பாகப் போ…! என்றும்… பேயாகப் போ…!” என்றும் சாபமிடுவதாக விளக்க உரையைக் கொடுக்கிறார்கள்.

ஐயனே…! நான் அறியாது செய்த பிழைக்கு என்ன செய்வது….?

நீ நல்லவனைத் தீண்ட எண்ணுவாய். அப்பொழுது அவன் கை படும். நீ மீண்டும் மனிதன் ஆவாய். அதனின் அர்த்தம் என்ன…?

ஒரு நல்லவன் தான் நடந்து போகிற பாதையில் பாம்பைப் பார்க்கிறான். அது தன்னைக் கடித்துவிடும்…! என்று அடிக்கின்றான். “மனிதன் அடித்து விடுவான்…!” என்று அது இவனைப் பார்க்கிறது.

1.பாம்பு மனிதனைக் கடித்து விட்டால் இவன் பாம்பு உடலுக்குள் வருவான்.
2.பாம்பை இவன் அடித்தான் என்றால் பாம்பின் உயிர் அவன் உடலுக்குள் போகும்.
3,மனித உடலுக்குள் வரும் பாம்பின் உயிர் மனித உணர்வுகளைக் கவர்ந்து மனிதனாகப் பிறக்கின்றது.

அதே சமயத்தில் நீ பேயாகப் போ…! என்றால் என்ன அர்த்தம்.

என்னை இப்படிச் செய்தானே… அப்படிச் செய்தானே பாவி…! அவன் எல்லாம் பாவி உருப்படுவானா…! என்று நினைப்பார்கள். இந்த உணர்வு வரப்போகும் போது அவன் உடலுக்குள் போகின்றது. அதே உணர்வை வைத்து அங்கே ஆட்டிப் படைக்கிறது.

அப்பொழுது ஐயனே…! இதிலிருந்து தப்பும் வழி எனக்கு ஒன்றுமில்லயா,,,?

நல்லவனுடைய நிழல் உன் மீது படும். நீ உள்ளிருந்து மனிதனாக ஆவாய் என்று ரிஷி சொல்வதாகக் காட்டுவார்கள்.

ஏனென்றால் நமக்கு இப்படிக் குட்டி கதைகளையும் போட்டு விளக்கியும் காட்டுகிறார்கள். இதைப் புரிந்து கொள்ளவில்லை என்றால் நாம் என்றைக்குப் போய் எதை நாம் புரிந்து கொள்ள போகிறோம்.

காவியத் தொகுப்புகளை ஞானிகள் கொடுத்ததில் தப்பில்லை. ஆனால் அதை எல்லாம் எடுத்து அவரவர்கள் சுயநலத்திற்கு எப்படி எப்படியோ திசை திருப்பி விட்டு விட்டார்கள்.
1.அப்போது அந்த ரிஷி யார்….? நம் உயிர் தான்.
2.நாம் எண்ணியதை எல்லாம் சிருஷ்டிப்பது அவனே தான்.

நமக்கு ஆகாதவர்களைப் பற்றி என்ன நினைக்கிறோம்…! அவன் அப்படித் தான் பட வேண்டும். வேதனைப்பட்டால் தான் அவனுக்கு அறிவு வரும்..! என்று நாம் நினைக்கிறோம். ஆனால் அவன் படும் வேதனைகளை நாம் சுவாசிக்கும் போது நமக்குள் விஷத் தன்மைகள் வருகிறது.

ஒருவன் வேதனைப்பட்டுக் கொண்டு இருக்கிறான். இருந்தாலும் அந்த வேதனை என்ற உணர்வுகளை நமக்குள் துடைக்கத் தவறினால் அதே உணர்வை உயிர் நமக்குள் உருவாக்கி விடுகின்றது.

ஆகையினால் எத்தனையோ கோடி நிலைகளைக் கடந்து பல உடல்கள் மாறி
1.இன்றைக்கு மனிதனாகி விஷத்தை நீக்கும் ஆற்றல் பெற்ற நிலைகளில் இதைச் செய்யத் தவறினால்
2.அதன் படி நான் வளர்த்தேன் என்ற நிலையில்
3.நமக்குச் சாபமிடுகின்றது உயிர் என்று அதை அங்கே தெளிவாக்குகின்றார்கள் ஞானிகள்.
4.ரிஷி என்பது உயிர். அது தான் இங்கே நீ பாம்பாகப் போ…! என்று சாபமிடுகின்றது.

ஆகாதவனைப் பார்த்தால் அப்படித் தான் கஷ்டப்பட வேண்டும் என்று ரசிக்கின்றான். இப்போது இந்த உணர்வின் தன்மை எடுத்துக் கொண்டால் இறந்த பிற்பாடு என்ன செய்கிறோம்…?

பாம்பு என்ன செய்கிறது…? தன்னுடைய விஷத்தால் மற்ற உயிரினங்களைக் கொத்தி அதை ரசித்து உணவாக உட்கொள்கின்றது. ஆக பாம்பாகப் போ…!

ஒருவனைப் பழி தீர்க்கும் உணர்வுடன் உடலை விட்டுப் பிரிந்தால் பேயாகப் போ…! அவனை அடித்துக் கொல்ல வேண்டும் என்று எண்ணத்துடன் செல்லும் பொழுது பேயாக (ஆவி) அந்த உடலுக்குள் போய் ஆட்டிப் படைக்கின்றது. அதிலிருந்து மீளும் வழி இல்லை.

மந்திரத்தாலோ தந்திரத்தாலோ யந்திரத்தாலோ அந்தப் பேயை ஓட்டி விடுவேன் என்றால் அது ஒன்றும் முடியாது. ஆனால் இன்னொரு ஆவியின் வலிமையைக் கொண்டு இதை அடக்க முடியும். அப்புறம் கொஞ்ச நாள் போனது என்றால்
1.முதல் ஆவியை அடக்குவதற்காகப் புதிதாக ஏற்றிய அந்த ஆவியும்
2.நானும் வந்துட்டேன்டா அண்ணன்…! என்று சொல்லி விட்டு அதுவும் நமக்குள் ஆட்டிப் படைக்கத் தொடங்கும்.
3.மீண்டும் மீண்டும் தாயத்தை இங்கே கட்டிக் கொண்டே இருப்பார்கள். ஒரு முன்னேற்றமும் இருக்காது.
4.ஆயிரம் தாயத்தைக் கட்டி இருப்பார்கள்….! ஆனால் கை கால் குடைச்சல் இருக்கும்.

குருநாதர் காட்டிய வழியில் இப்பொழுது நீங்கள் தியானம் இருக்கின்றீர்கள். யாருடைய உடலிலாவது ஆவி இருந்தால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். எங்கள் உடலில் உள்ள ஜீவ அணுக்கள் நான் பெற வேண்டும். எங்கள் உடலில் உள்ள அந்த ஜீவ ஆன்மாக்கள் பெற வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற இந்த நிழல் பட்டால் அந்த உணர்வுகள் ஆகும்…?

அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சுவாசித்து இரத்ததத்தில் தான் நாம் கலக்கச் செய்கின்றோம். அந்த ஆன்மாக்களும் (ஆவி) இரத்தத்தில் தான் இருக்கிறது.

மகரிஷிகளின் உணர்வைச் சுவாசித்து இரத்தத்திற்குள் கலக்கும் பொழுது அதைப் பலவீனப்படுத்துகின்றோம். அந்த அருள் ஞானிகளின் உணர்வை வளர்க்கிறோம்.
1.அந்த ஆன்மாவும் அந்தச் சக்தியைச் சேர்ந்து இழுக்கத் தொடங்கினால்
2.நமக்குள் தீமையின் நிலைகள் மாற்றும். சொல்வது அர்த்தம் ஆகின்றதல்லவா…!

அப்போது நல்லவன் நிழல் படும் பொழுது மனிதனாக பிறக்கும் தகுதி பெறுகிறது. இதுகளெல்லாம் நமக்குக் காவியங்கள் மூலம் தெளிவாக வாழ வழி வகுத்துக் கொடுத்திருக்கின்றார்கள்.

ஞானிகள் சொன்ன அந்த நிலைகளைத்தான் யாம் (ஞானகுரு) உணர்த்திக் கொண்டிருக்கின்றோம்.
1.அருள் உணர்வின் தன்மைகளை எப்படிப் பெருக்க வேண்டும்..?.
2.வாழ்க்கையில் வரும் இடையூறுகளிலிருந்து எப்படித் தப்பிக்க வேண்டும்…? என்று தெளிவாக்குகின்றோம்.

நாம் சுவாசிப்பது நானாகி இயக்கத் தொடங்குகின்றது… அப்படி என்றால் நான் யார்…?

geetha charam

நாம் சுவாசிப்பது நானாகி இயக்கத் தொடங்குகின்றது… அப்படி என்றால் நான் யார்…? 

உலகத்தினுடைய நிலைகளில் எல்லாமே அந்த உணர்வுகள்தான் இயக்கமே தவிர
1.நான் அதைச் செய்தேன்… இதைச் செய்தேன்…! என்றால்
2.யாரும்… ஒன்றும் செய்யவில்லை…

எப்படி…?

நான் என்ற நிலைகளுக்கு வரப்படும் பொழுது, “தான் யார்… நான் யார்…?” என்று விநாயகனைப் போட்டு பிள்ளையார் சுழி போட்டு ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

புழுவிலிருந்து வளர்ச்சியாகி மனிதனாக வந்தோம் என்ற நிலையில் யானைத் தலையைப் போட்டு மனிதனுடைய உடலைப் போட்டு முன் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாக விநாயகனைக் காட்டினார்கள்.

இந்தப் பிள்ளை யார்…? (பிள்ளையார்) என்று விநாயகனைப் போட்டு நான் யார்…? தான் யார்..? என்று ஒவ்வொருவரும் தெரிந்து கொள்வதற்காகச் செய்தார்கள்.

1.”இப்பொழுது” நாம் எதை எண்ணுகிறோமோ… அதைச் சுவாசிக்கும் பொழுது “நான்” ஆகின்றது.
2.அது நம் உடலுக்குள் சென்றவுடன் “தான்” ஆகின்றது.
3.”இந்தத் தானாகி” நம் உடலில் அது செயல்படுகின்றது.
4.”இந்தத் தான்…” உடலுக்குள் உணர்வாக விளையப்படும் பொழுது மீண்டும் நானாகின்றது.

ஆகவே தான் யார்…? நான் யார்…?

அன்றாட வாழ்க்கையில் சந்தர்ப்பத்தில் நாம் எத்தனையோ கோபப்படுகிறோம்… ஆத்திரப்படுகிறோம்… சஞ்சலப்படுகிறோம்… சங்கடப்படுகிறோம்…! இவை அனைத்தும் தானாகின்றது. நாம் எண்ணுவது அனைத்துமே தானாகின்றது.

நான் நல்லதைச் செய்தேன்… ஆனால் எனக்கு இப்படிச் செய்கிறார்களே…! என்று சொல்லிக் கொண்டிருக்கின்றோம். இந்த உணர்வெல்லாம் உயிருடன் ஒன்றி உயிருடன் சேர்க்கும் போது நானாகின்றது.

அப்படி எடுத்துக் கொண்ட உணர்வெல்லாம் தானாகி… நானாகி விடுகின்றது. “இந்தத் தான்” என்ற உணர்வின் நிலையாக உயிருடன் சேரும் பொழுது நானாகின்றது.

அதாவது நன்றாக இருக்கும் நாம் கோபத்தையும் ஆத்திரத்தையும் சஞ்சலத்தையும் சங்கடத்தையும் எடுத்த பின்
அந்த நானாக…
கோபப்படுபவனாக..
ஆத்திரப்படுபவனாக..
சஞ்சலப்படுபவனாக…
சங்கக்டப்படுபவனாக… மாறி விடுகின்றோம்.

சொல்வது உங்களுக்கு அர்த்தமாகின்றதல்லவா…!

நல்ல மனிதனாகப் பிறந்து வந்திருக்கின்றோம் என்ற நிலையில் தான் யார்… நான் யார்…? என்ற நிலைகளை அந்த விநாயக தத்துவத்தை அகஸ்தியன் தெளிவாக்கினான்.

நாம் எண்ணக்கூடியதை எல்லாம் நம் உயிர் உடலாக தானாக நானாக ஆக்கிவிடுகின்றது. அப்பொழுது நாம் எதை எண்ண வேண்டும்…?

இதைப் போன்ற தீமைகளைக் கடந்து சென்ற அந்த மெய் ஞானிகளின் உணர்வை நமக்குள் இணைத்தல் வேண்டும். அதை நமக்குள் பெருக்க வேண்டும்.

அந்த மெய் ஞானிகளின் அருள் உணர்வை எடுத்தால் நம் உயிர் அந்தத் தானாக… நானாக… நம்மை ஆக்கும். ஞானத்தின் உணர்வாக நம்மை இயக்கும்.

இதைத்தான் கீதையிலே “நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய்…!” என்று தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. இதைவிட சாஸ்திரங்கள் நமக்குக் கூற வேண்டும் என்று நினைக்கின்றீர்களா…?

எவ்வளவு தெளிவாகக் கொடுத்திருக்கின்றார்கள்…? சாஸ்திரங்கள் எதுவும் பொய்யல்ல…! நாம் பொய்யாக்கி வைத்திருக்கின்றோம். உண்மையை நாம் உணராது மறைக்கப்பட்டது… மறைந்தே போய்விட்டது.

அது தெளிவாக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் இதை உணர்த்துகின்றோம்… உறுதிப்படுத்துகின்றோம். நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்… தெளிந்து கொள்ளுங்கள்.

அந்தத் தெளிவின் தன்மை அடைந்த பின் நீங்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கும் இதைத் தெளிவுபடுத்த வேண்டும்.
1.இந்தத் தெளிவின் தன்மையை நீங்கள் வளர்க்க வேண்டும்.
2.உங்கள் பார்வை பிறரைத் தெளிவாக்க வேண்டும்… தெளிவாக்கும் உணர்வுகள் உங்களுக்குள் விளைய வேண்டும்.
3.உங்கள் பார்வை பிறரைத் தெளிந்த நிலைகள் பெறச் செய்யும் சக்தியாக வர வேண்டும்.
4.உங்களைப் பார்த்தாலே அவர்கள் தெளிந்திடும் மனம் பெற வேண்டும்.

அந்தச் சக்தியை ஒவ்வொருவரும் பெறவேண்டும் என்பதே என்னுடைய (ஞானகுரு) தியானமும் தவமும். ஒவ்வொரு நிமிடத்திலேயும் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

 

விநாயகரை வணங்காமல் ஆலயத்திற்குள் சென்றால் பலன் ஏதும் இல்லை…! ஏன்…?

Lord vinayaga

விநாயகரை வணங்காமல் ஆலயத்திற்குள் சென்றால் பலன் ஏதும் இல்லை…! ஏன்…?

நமது வாழ்க்கையில் நம் குடும்பத்தில் பையன் சீராக இருக்க வேண்டும் என்று எண்ணுவோம். ஆனால், அவன் மற்றவருடன் பழகும் பொழுது அவனை அறியாது தீமைகள் இவனைச் சாடி அவனின் நற்குணத்தை அழித்துவிடுகின்றது.

அப்பொழுது நாம் எண்ணியபடி நடக்கவில்லை என்றால் அவனை எண்ணி வேதனைப்படுகின்றோம். இதிலிருந்து நாம் தப்பிக்க வேண்டும்.

அதற்குத்தான் இந்த விநாயகர் ஆலயத்திற்குள் சென்றபின் எப்படி வணங்க வேண்டும்…? என்று காட்டியுள்ளார்கள்.

மண்ணுலகில் நஞ்சினை வென்று விண்ணுலகம் சென்ற இன்று இருளைப் போக்கிப் பொருள் காணும் உணர்வாக விளைந்து ஒளியின் சுடராக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று ஏங்கித் தியானிக்க வேண்டும். பின்,
1.எங்களை அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும்
2.மெய்ப்பொருள் காணும் ஆற்றல் நாங்கள் பெறவேண்டும்
3.நாங்கள் பார்ப்பதெல்லாம் நலம் பெறவேண்டும்
4.எங்களைப் பார்ப்பவர்கள் எல்லோரும் நலம் பெறவேண்டும்
5.எங்கள் சொல்லைக் கேட்போர் எல்லோரும் இனிமை பெறவேண்டும்
6.எங்களைப் பார்ப்போருக்கெல்லாம் மலரைப் போல மணம் பெறவேண்டும்
7.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் குடும்பம் முழுவதும் படரவேண்டும்
8.எங்களை அறியாது சேர்ந்த தீயவினைகள் அகல வேண்டும்
9.சாப வினைகள் நீங்க வேண்டும் பாவ வினைகள் நீங்க வேண்டும்.
10.பூர்வ ஜென்ம வினைகள் நீங்க வேண்டும்
11.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் குடும்பத்தில் படர்ந்து தீமைகள் அகல வேண்டும்
12.எங்கள் குழந்தை பொருள் காணும் சக்தி பெறவேண்டும்.
13.எங்கள் குழந்தை பொறுப்புணர்ந்து செயல்படும் திறன் பெறவேண்டும்.
14.எங்கள் பார்வை குழந்தையை உயர்ந்தவனாக்க வேண்டும்.
15.எங்கள் சொல் அவனை உயர்ந்தவனாக்க வேண்டும் என்று இதைத் தனக்குள் கூட்டிக் கொள்ள வேண்டும்.

பின் இதே போல அந்தக் குழந்தையையும் விநாயகரை வணங்கச் செய்தல் வேண்டும். விநாயகர் தத்துவத்தை முறைப்படி அவன் எண்ணத்தால் எண்ணித் தியானிக்கும்படி செய்தல் வேண்டும்.
1.என் அன்னை தந்தையரின் அருளாசி பெறவேண்டும்
2.என்னை அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும்
3.மெய்ப்பொருள் காணும் அருள் சக்தி நான் பெறவேண்டும் என்று அவனும் இங்கே எண்ணுதல் வேண்டும்.

இந்தப் பொருளை மையமாக வைத்துத்தான்.., குடும்பத்தில் தன்னை அறியாது சிக்கல் ஏற்படும் பொழுது அதை இங்கே வந்து நமக்குள் நிவர்த்தி செய்யும் நிலைக்காகத்தான் விநாயகரை வைத்தார்கள் ஞானிகள்.

ஆனால் நீங்கள் எண்ணுகின்ற மாதிரி அந்தக் கடவுள் செய்வார் என்றால் அது இல்லை. சாஸ்திர விதிப்படி நமது உயிர் கடவுள். “உள் நின்று..,” இயக்குகின்றது.

நாம் எண்ணிய உணர்வின் சத்தை ‘ஓ..,’ என்று ஜீவனாக்கி ‘ம்..,’ என்று உடலாகி நம்முள் நின்று அக்குணமே கடவுளாக இயக்குகின்றது என்ற பேருண்மையை அணுவின் ஆற்றலையும் அணுவின் இயக்கத்தையும் தெளிவாக அன்று எடுத்துரைத்தார் அகஸ்தியர்.

ஆகவே எண்ணியதை இயக்கிக் காட்டுவது உயிர்.

எண்ணிய உணர்வின் தன்மையை தன் உணர்வால் அது கடவுளாக இருந்து இந்த உணர்வின் சத்தை அந்த உடலுக்குள் சென்று அதனின் உணர்வின் தன்மை கொண்டு அது உடலாக மாற்றுகின்றது.

ஆகவே இதைத்தான் கடவுள் என்பது.

“உள் நின்று..,” நாம் கேட்பது பார்ப்பது அனைத்தையும் அணுவாக உருவாக்கி உடலாக உருவாக்கிக் கொண்டிருக்கும் இந்த வினைக்கு நாயகனான (நம் உயிரையும் உடலையும்) விநாயகனை வணங்காதபடி ஆலயத்திற்குள் நீங்கள் சென்றால் பலன் ஏதும் இல்லை என்று அதனால் தான் சொல்வார்கள்.

ஆக, அந்த ஞானிகள் காட்டிய உணர்வின் தன்மையை நாம் நமக்குள் எடுத்தால் “நம் உயிர்..,” தனக்குள் கவர்ந்து கொண்ட அந்த உணர்வின் செயலாக “நம்மை இயக்கும்”.

இதைத்தான், நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய். நாம் எண்ணிய உணர்வின் தன்மை நமக்குள் ஆகி “தீமைகள் அகற்றும் உணர்வின் செயலாக..” “நாம் அதுவாக.., மாறுகின்றோம்”.

இவ்வாறு மாறவேண்டும் என்பதற்குத்தான் இதை அங்கே தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.

தீமைகளைச் சுட்டுப் பொசுக்கும் சக்தியை நம் கண்ணுக்கு முன்னாடியே காட்டுகின்றார்கள் ஞானிகள்…!

Image

akni mariyamman

தீமைகளைச் சுட்டுப் பொசுக்கும் சக்தியை நம் கண்ணுக்கு முன்னாடியே காட்டுகின்றார்கள் ஞானிகள்…!

 

ஓர் நண்பன் தனக்குத் தீங்கு செய்து விட்டால் அதை எண்ணி ஆழமாகப் பதிவு செய்து கொள்கிறோம். பாவி எனக்குத் தீங்கு செய்தானே…! அவன் உருப்படுவானா…? என்று கோபத்தின் எல்லை கடந்து வேதனையின் உணர்ச்சி பொங்க நாம் பேசுவோம்.

இவ்வாறு அந்தத் தீங்கு செய்பவனை எண்ணி அது உடலுக்குள் விளைந்து “அவன் தீங்கு செய்தான்…!” என்று நமக்குள் பதிவு செய்தாலும் யாரை எண்ணுகின்றோமோ அவனுக்குள்ளும் இந்தப் பதிவு உண்டு.

சாபம் இடும் இந்த உணர்வின் அலைகள் அங்கே சென்று அவனுக்குள் புரை ஓடி அவன் நற்குணங்களை எல்லாம் அழித்துவிடும். எப்போது எல்லாம் சாபம் இடுகின்றோமோ
1.பாவி எனக்குத் தொல்லை கொடுக்கிறானே…!” என்ற எண்ணத்தை எண்ணினால்
2.அவன் செயலாக்கங்களுக்கே தடையாகும்.

நண்பர்களுக்குள் ஒருவருக்கு ஒருவர் நன்றாகப் பழகினாலும் மிகவும் தெரிந்தவர்களாக இருந்தாலும் சந்தர்ப்பத்தால் வேதனைப்படும் நிலைகள் ஆகிவிட்டால்
1.சில நேரங்களில் புரை ஓடும்…
2.சாப்பாடு விழுங்கும் போதே விழுங்க முடியாது…!
3.எச்சில் விழுங்கும் போது கூடப் புரை ஓடும்…!
4.இவையெல்லாம் வெறுப்பின் உணர்வுகள் நமக்குள் வரும் போது நம் உறுப்பின் இயக்கங்கள் “தனி…!”

நண்பனாக இருக்கப்படும் போது நட்பின் தன்மை கொண்டு எனக்கு நன்மை செய்தான் என்றால் விக்கல் வருகின்றது. அப்போது தனக்குள் நீரின் தன்மை ஊற்றி அது தணித்து கொள்ளும் போது “மகிழ்ச்சி” என்ற நிலைகளே உருவாகின்றது.

இதெல்லாம் இயற்கையின் உணர்வின் இயக்கங்கள் மற்றோருவருடன் ஒன்றி இயக்கப்படும் இந்த நிலைகளே உருவாகும்.

நமது வாழ்க்கையில் பிறருடன் பழகிய நேரங்களில் தீமையின் உணர்வுகளை நமக்குள் பதியச் செய்யும் போது யாருடைய குணங்களைப் பதிவு செய்தோமோ அது நமக்குள் விளையத் தொடங்கி விடுகின்றது.

அந்தப் பற்றின் தன்மை வரப்படும் போது நமக்குள் தீங்கே விளைகின்றது.
1.பாசத்தாலோ பண்பாலோ அன்பாலேயோ பிறர்படும் துயரங்களைக் கேட்டு உணர்ந்தால்
2.அந்த உணர்வின் தன்மை நமக்குள் புகுந்து அந்த உணர்வின் வித்தாக விளைந்து
3.எந்த உடலில் இருந்து எது வெளிப்படுகின்றதோ அந்த அலைகளைக் கவர்ந்து
4.நமக்குள் நோயாகவே உருவாக்குகின்றது.

அதற்காக நாம் நல்லது செய்யாமல் இருக்க முடியுமா…? பிறருடைய கஷ்டங்களைக் கேட்காமல் இருக்க முடியுமா…?

சூரியன் சுழலும் போது அந்த வேக உணர்வின் தன்மை கொண்டு தன் உணர்வின் ஒளியால் பிரபஞ்சத்திலிருந்து வரும் மற்ற விஷங்களைத் தனக்குள் வருவதற்கு முன்னாடியே மோதி அதனின் நஞ்சைப் பிரித்து விடுகின்றது. பிரபஞ்சத்தையே ஒளியாக்குகின்றது.

இதேபோல மனிதன் தன் உணர்வின் செயலால் தீமை வரும் போது தன் உணர்வின் அலையால் தீங்குகளை அங்கே பிரித்து விட்டுத் தனக்குள் ஒளியின் சுடராக மாறுகின்றான்.
1.சூரியனுடைய செயலைப் போன்றே
2.மனிதன் உயிரின் தன்மை சூரியனாகின்றது.

கோளாகி நட்சத்திரமாகிப் பின் சூரியனாக ஆனது போல இந்த உயிரின் தன்மையும் பல கோடிச் சரீரங்களில் இருந்து எடுத்துக் கொண்ட உணர்வின் துணையால் மனிதனாக வளர்ந்து வந்தபின் ஒளியின் சரீரமாக மாறி அதனின் செயலாக்கங்களாக இன்று துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலங்களாகவும் இருந்து தீமைகளை வெகு தூரத்திலேயே சுட்டுப் பொசுக்குகின்றான்.

மனிதனாக வாழும் பொழுது வாழ்க்கையில் வந்த தீமையை அகற்றிடும் உணர்வுகளைத் தனக்குள் பெற்ற நிலை தான் அந்தத் துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலங்களும். அந்த மகரிஷிகள் அனைவருமே தீமையை வென்றவர்கள்.

இத்தகைய நிலையை உணர்த்துவதற்குத்தான் மாரியம்மன் கோயிலில் தீமைகளைச் சுட்டுப் பொசுக்கும் நிலைகளாக அக்னி குண்டமாக நெருப்பைக் காட்டுகின்றார்கள் ஞானிகள்.

எவ்வாறு…?

இங்கே வாழ்க்கையில் நாம் தீமைகளைக் கேட்டுணர்ந்தாலும் அது மாறி (மாரி) நமக்குள் வந்து தீமை செய்வது போல
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் பெற்று
2.அந்த மெய் ஞானிகளின் உணர்வுகள் நமக்குள் மாறி (மாரி)
3.அந்தத் தீமைகளைப் பொசுக்கும் சக்தியாக நமக்குள் வர வேண்டும்.

அதற்குத்தான் அங்கே மாரியம்மனுக்கு நெருப்பை வைத்துக் காட்டுவார்கள். சிலையை உற்றுப் பார்த்தால்… பார்க்கலாம் நீங்கள்…! நெருப்பைக் கிரீடமாக வைத்துக் காட்டியிருப்பார்கள்.

வேகமாக அடிக்கும் ஆடிக் காற்றினால் நன்மைகள் பெருகுவதை உணர்ந்து தான் அதைப் “ஆடிப் பெருக்கு…” என்றார்கள் ஞானிகள்

Image

Adipperukku

வேகமாக அடிக்கும் ஆடிக் காற்றினால் நன்மைகள் பெருகுவதை உணர்ந்து தான் அதைப் “ஆடிப் பெருக்கு…” என்றார்கள் ஞானிகள்

ஆடி மாதத்தில் கேரளா கர்நாடகா மத்திய பிரதேசம் போன்ற இடங்களில் எல்லாம் நன்றாக மழை பெய்கின்றது. நீர் வளம் பெருகுகின்றது.

அங்கே பெய்யும் அழுத்தங்கள் அதிகரிக்கும் போது அதிலிருந்து மோதும் காற்றலைகள் மழை இல்லாத இடங்களுக்கு அதைக் காற்றாகத் தள்ளி வருகின்றது. எப்படி…?

வெப்பத்தால் ஒன்றை நாம் கொதிக்க வைக்கப்படும் பொழுது அது ஆவியாக வெளி வந்து நகர்ந்து செல்கின்றது. இதைப்போல
1.சூரியனின் வெப்பத் தணல் மழை பெய்யும் இடங்களில் இருக்கும் குளிர்ச்சியின் வேகத்துடன் மோது பொழுது
2.அதனால் அழுத்தத்தின் தன்மை அதிகரிக்கப்பட்டு
3.அந்த வெப்பத்தின் சக்தியால் காற்றாகப் பெருகுகின்றது.

உதாரணமாக ஒரு பாய்லரில் (BOILER) வெப்பத்தை அதிகமாகக் கூட்டும் பொழுது உள்ளிருக்கும் ஆவிகள் (GAS) அழுத்தம் அதிகரிக்கும் போது மூடியைப் பிளந்து வெளியிலே செல்லும்.

அதைப்போல ஒரு பகுதியில் பெய்யும் மழை தனக்குள் வரும் வெப்பத்தின் தணல்களைக் கவர்ந்து அது அலைகளாக வரப்படும் போது அந்த வெப்பத்தின் தணலால் “காற்றின் வேகம் அதிகரிக்கின்றது…!”

அந்தக் காற்று தாவர இனங்களின் மீது பட்டு அதனுடைய வித்துக்களை எல்லாம் அடித்துச் சென்று மற்ற இடங்களில் அதைப் பெருக்கச் செய்கின்றது. இது எல்லாம் இயற்கையின் சில நியதிகள்.

அங்கே மழை பெய்கின்றது. அதிலிருந்து வரும் அழுத்தத்தின் தன்மை அங்கே நிலைப்பதில்லை. இங்கே வருகின்றது. நீரைக் கவர்ந்து வரும் நேரத்தில் வெப்பத்தின் தணல் தாக்கப்படும் போது காற்றின் அழுத்தம் அதிகரிக்கின்றது.

காற்றின் வேகத் தொடரினால் தாவர இனங்களில் உள்ள வித்தினை மற்ற இடங்களுக்குப் பரவச் செய்தாலும் மற்றோர் பக்கம் விளைந்திடும் தாவர இனத்தில் இணை சேரும் போது அதற்குள் உறைந்த நஞ்சின் தன்மை கொண்ட அணுக்கள் உருவாவதை இது அப்புறத்துகின்றது.

இந்த ஆடிக் காற்று இவ்வளவு சிறந்தது. எப்படி எல்லாம் நல்லதைப் பெருக்குகின்றது என்று தெரிந்து கொள்ளுங்கள். தீமை அகற்றும் சக்தியாகப் பெருகுகின்றது.

1.குடகிலே (கர்நாடகா) நீர் பெருக்காகின்றது. அதனின் பெருக்கு இங்கே பதினெட்டாம் பெருக்காகின்றது.
2.அங்கே பதினெட்டாம் பெருக்காகின்றது. நீரின் தன்மையால் இங்கே காற்றின் பெருக்கம் அதிகமாகின்றது.

காற்றின் பெருக்கம் அதிகமாகும் போது அதிலிருந்து தீமையை அகற்றும் சத்தின் வல்லமை மற்ற தாவர இனங்களுடன் மோதி அதிலுள்ள நஞ்சினை நீக்கும் சக்தி பெருகுகின்றது.

1.இது வழித் தொடர்ந்து ஒன்றின் பின் ஒன்றாக
2.அது இணைந்திடும் சக்தியாக
3.அது இயங்கும் தன்மையாக
4.இயற்கையின் நிலையாக ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்படுகின்றது.

உதாரணமாக
1.ஒரு கோபத்தை உண்டாக்கும் செயலை நாம் கான நேர்ந்தால் அந்தக் கோபமான உணர்வுகள் நமக்குள் பெருகி நம் உடலுக்குள் கோபமான அணுக்கள் பெருக ஆரம்பிக்கின்றது.
2.அதைப் போல ஒருவன் வேதனைப்படுகின்றான் என்று அதைக் கண்டுணரப்படும் போது நமக்குள் வேதனையின் சக்தி பெருகுகின்றது.
3.நோயினால் வாடுகிறான் என்று ஒருவனை உற்று பார்த்தால் அந்த உணர்வின் தன்மையை நுகரப்படும் போது நமக்குள்ளும் வேதனையாகின்றது.

இதைப் போன்றே தான் மகரிஷிகளின் அருள் உணர்வை நமக்குள் பெருக்கி நமக்குள் இருக்கும் தீமையை நீக்கும் சக்தியாகப் பெருக்கிடல் வேண்டும்.

அதே சமயத்தில் நமக்குள் விளைந்த அந்தத் தீமையை அகற்றும் சக்திகள் நாட்டு மக்கள் அனைவருக்குள்ளும் பெருக வேண்டும் என்ற “பெருக்காக…” நாம் அதைப் பெருக்கிடல் வேண்டும்.

ஒவ்வொருவரும் இந்த உணர்வின் சொல்லாகப் படரச் செய்யப்படும் பொழுது… அது மழையாகப் பொழியும் நீருக்குள் விளைந்து… அதனின் உணர்வின் தன்மை ஆவியாக மாறி… தீமைகளை அகற்றும் சக்தியாகப் பெருகி… அடுத்து நல்ல தாவர இன வித்துக்களைப் பெருக்கும் தன்மையாக வருகின்றது.

இத்தனை நல்லதையும் நினைவுபடுத்தும் நந்நாள் தான் “அடிப் பெருக்கு…!”