இந்தப் பிரபஞ்சம் அழிவதற்கு முன் ஒளியின் சரீரமாக நாம் மாற வேண்டும்

இந்தப் பிரபஞ்சம் அழிவதற்கு முன் ஒளியின் சரீரமாக நாம் மாற வேண்டும்

 

நாராயணன் என்று சூரியனைச் சொன்னாலும் லட்சுமி நாராயணா…! அதாவது
1.காந்தத்தால் ஈர்க்கப்பட்டு மோதலில் ஏற்படுவது வெப்பமும்
2.தான் நுகர்ந்து கொண்ட உணர்வின் தன்மை அணுத்தன்மையாக மாறி அது இயற்கையில் இணைந்து வாழும் சூரியனாக வாழ்கின்றது.

ஆதிசேஷன் மேல் பள்ளிகொண்டான் நாராயணன் என்றும் இங்கே கூறப்படுகின்றது. ஆதிசேஷன் என்பது விஷம். ஆதியிலே நாளடைவில் விஷம் ஆகும் பொழுது விஷமற்றதை அது தாக்கி அதிலே வெப்பத்தை உருவாக்குகின்றது.

1.வெப்பம் உருவானால் தான் இரண்டறக் கலக்கும் தன்மை வரும்
2.விஷம் எதிலேயும் ஊடுருவிச் செல்லும் தன்மை பெற்றது.
3.விஷம் விஷமற்றதைத் தாக்கி ஊடுருவும் பொழுது வெப்பத்தின் தணல் கூடுகின்றது
4.ஊடுருவும் தன்மை வரும் பொழுது ஈர்க்கும் சக்தியும் அங்கே வருகின்றது.
5.ஈர்க்கும் சக்தியும் வெப்பத்தை உருவாக்கும் சக்தியும் இந்த விஷத்திற்குத் தான் உண்டு.

வெப்பத்தால் உருவான நிலைகள் விஷத்தின் தன்மை அடைந்தாலும் அதே அணுவின் தன்மை மோதப்படும் பொழுது… இயக்கச் சக்திக்கு உறுதுணையாக இருக்கின்றது.

ஏனென்றால் பௌதீக முறைப்படி விளக்கம் கொடுத்துக் கொண்டு வருகின்றேன்.

நான் படிக்காதவன் தான்… நமது குருவும் படித்தவரல்ல. உணர்ந்தறிந்து நுகரும் ஆற்றலைப் பெற்றவர். அகஸ்தியன் படித்தவன் அல்ல…! அகண்ட அண்டத்தினுடைய சக்தியும் தனக்குள் வளர்த்து விளைய வைத்து ஒளியின் சரீரமாக நிலை கொண்டவன்.

1.அவனின்று வரும் உணர்வுகளை உங்களுக்குள் பாய்ச்சப்படும் பொழுது
2.இருண்ட உலகமாக மாறும் இந்தப் பிரபஞ்சத்திலிருந்து ஒளியின் சுடராக என்றும் நிலை கொண்டு வாழ முடியும்
3.நம்பிக்கை உள்ளோர்கள் இந்தச் சக்தியைப் பெறலாம்.

அல்லது இந்த உடலின் வாழ்க்கை தான் சதம் என்று நிலையில் சென்றால் இந்த உணர்வின் தன்மை கொண்டு இருள் சூழும் நிலைக்கே அழைத்துச் சென்று மனிதனல்லாத உருவை உருவாக்கிவிடும் உயிர்.

அதைப் போன்ற நிலையிலிருந்து எல்லாம் விடுபட வேண்டும்.

இதற்கு முன் நீங்கள் கற்றுக் கொள்ளவில்லை என்றாலும்… அருள் ஒளியின் உணர்வுகளை இப்பொழுது பதிவாக்கப்படும் பொழுது அதனுடைய நினைவாற்றல் வந்தால்… இந்த உணர்வின் இயக்கமாக மாற்றி உங்களில் உள்ள தீமைகளை மாற்றிடும் வல்லமை பெறுகின்றீர்கள்…! அத்தகைய வல்லமை பெற வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்கின்றேன்.

ஏனென்றால் கற்காதவன் (என்னுடைய) உணர்வுக்குள் குருநாதர் அதைப் பதியச் செய்யும் போது அதை நுகர்ந்து… உணர்வின் அறிவாக எனக்குள் அதனின் இயக்கச் சக்தி வந்தது.

அதே உணர்வை உங்களுக்குள் பதிவாக்கி அதனுடைய செயலாக்கங்களாக உங்களுக்குள்ளும் உருவாக்க வேண்டும் என்பதற்குத் தான் இதைச் சொல்வது.

நான் வெறும் வார்த்தையாகப் பேசவில்லை குரு அருளின் உணர்வுகள் உங்களுக்குள் அதைப் பதிவு செய்கிறது. அதன் துணை கொண்டு உங்கள் வாழ்க்கையில் வரும் இருளை மாற்றி ஒளி பெறும் ஆற்றலை நீங்கள் பெற வேண்டும்.
1.அருள் ஒளியைப் பற்றுடன் பற்றி பிறவி இல்லாத நிலை அடைந்து
2.ஒளியின் சரீரமாக நாம் மாற வேண்டும் – இந்தப் பிரபஞ்சம் அழிவதற்கு முன்.

வேதனை உணர்வு கொண்டால் மனிதனல்லாத ரூபத்தை மாற்றி நரக வேதனைப்படும் உயிரினங்களாக உயிர் மாற்றிவிடும்… மனித உடலை இழந்து விடுவோம்.

அப்படிப் பிறந்தாலும் அசுர செயல்களை செயல்படும் உணர்வாகத் தான் மாற்றும். ஆகவே இன்றைய விஞ்ஞான உலகின் பேரழிவிலிருந்து நாம் மீள்தல் வேண்டும்… “எமது குரு அருளால் நஞ்சிலிருந்து நீங்கள் மீட்கப்பட வேண்டும்…”

ஒவ்வொரு உணர்வுகளிலும் பல கோடி விஷத்தன்மை கொண்டு கவர்ந்து வந்தாலும் விஷத்தை ஒடுக்கிய அருள் ஞானியின் உணர்வை உங்களுக்குள் செலுத்தப்படும் பொழுது ஒவ்வொரு நினைவாற்றலும் நீங்கள் நுகரும் பொழுதே அதை ஜீவ அணுவாக “ஒளியாக” மாற்றும் தன்மை வருகின்றது.

அருள் ஒளி பாய்ச்சி உணர்வின் தன்மையை இணைக்கப்படும் பொழுது அது வலு இழக்கும் தன்மை வருகின்றது
1.அதனால் தான் இணைத்தே உங்களுக்குள் அருள் உணர்வை நுகரச் செய்கின்றேன்.
2.ஒளியான வீரிய அணுவாக உங்களுக்குள் விளைய வேண்டும்
3.தீமைகளை அடக்கும் வல்லமை நீங்கள் பெற வேண்டும்
4.தீமையற்ற உடலை உருவாக்க வேண்டும்
5.பிறவி இல்லா நிலை அடைந்த அருள் ஒளியை உங்களுக்குள் பெருக்க வேண்டும்
6.அருள் வழியில் நீங்கள் இதைக் கடந்து செல்ல வேண்டும்
7.விண்ணிலே ஒளியின் சரீரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளின் அரவணைப்பில் நீங்கள் செல்ல வேண்டும்.

அப்போது நச்சுத் தன்மைகள் அங்கே கரைக்கப்படுகின்றது. உங்களுக்குள் மோதும் உணர்வுகளை ஒளியாக மாற்றும் திறன் நீங்கள் பெறுவீர்கள். அந்த நிலை உருவாக்கத்தான் இதைத் தெளிவாகக் கூறுகின்றேன் (ஞானகுரு).

நாம் பறக்கும் நிலை பெற வேண்டும்… அதற்குண்டான வளர்ச்சியைக் கூட்டுங்கள்

நாம் பறக்கும் நிலை பெற வேண்டும்… அதற்குண்டான வளர்ச்சியைக் கூட்டுங்கள்

 

பிறந்தோம்… வளர்ந்தோம்… வாழ்ந்தோம்… மடிந்தோம்…! என்ற சாதாரண நிலையில் மிருகங்களின் வாழ்க்கை நிலை போலத் தான் “நம் எண்ணத்தின் சக்தியை…” நாம் எண்ணிப் பார்க்காமல் வாழ்கின்றோம்.

1.இந்த எண்ணம்…
2.இந்தச் சக்தி…
3.உடல் என்னும் கூட்டில் ஆத்மா உள்ள வரை “செயல்படும் தன்மை…!”
4.உடலை விட்டுப் பிரிந்த பின்னாடி ஆவி உலகத்தில் அறிந்திட முடியாது.
5.தன் அறிவைப் பெருக்கிக் கொள்ள ஆவி உலகில் உள்ள ஆத்மாவினால் முடிந்திடாது. (இது மிகவும் முக்கியம்)

பல ஜென்மங்களில் நாம் எடுத்த எண்ணங்களும் செயல்களும்தான் இந்த உடலை விட்டுச் சென்ற அந்த ஆவிகளால் அறிந்து கொள்ள முடியும்.

உடலில் உள்ள பொழுது எந்தெந்த நிலையை அந்த ஆத்மா பெற்றதோ… எந்த நிலை கொண்ட அறிவாற்றல் அந்த ஆன்மாவிலே இருந்ததோ… அதே நிலையில் தான் அந்த ஆத்மா சுற்றிக் கொண்டேயிருக்கும்.

1.இந்த உலகையும்…
2.தான் எந்தெந்த நிலையில் வாழ்ந்ததோ அந்த நிலை கொண்ட மனிதர்களையும்…
3.அதே நிலை கொண்ட இடத்திலும்தான்.. அந்த ஆன்மா மறு ஜென்மம் பெற்று
4.“தன் தேவையை எப்படிப் பூர்த்தி செய்து கொள்ளலாம்…!” என்ற ஆவலுடன்
5.பல ஆண்டுகள் சுற்றிக் கொண்டே இருக்க முடியும்.

ஆனால் மறு ஜென்மம் பெற்று இன்று இந்த உலகில் வாழ்ந்திடும் உடலுடன் கூடிய ஆத்மாக்கள் எல்லாம் “தன் நிலை உணர்ந்து வாழும் நிலையும் ஈர்க்கும் நிலையும் இல்லாமல்” பிறரின் நிலை கொண்டே தன் எண்ண சக்தியை விரயமாக்கிக் கொண்டுள்ளார்கள்.

ஏனென்றால் நாம் வாழும் இந்த உலகம்.. மற்ற மண்டலங்கள்… அண்டசராசரங்கள்… எல்லாவற்றையுமே அறிந்து கொள்ள மனிதர்களால் மட்டும் தான் முடிந்திடும்.
1.இன்று ஆத்ம உடலுடன் உள்ள மனிதனால் மட்டும் தான்
2.எல்லா நிலையையும் ஈர்த்து
3.எல்லா உண்மைகளையும் கண்டுணர முடியும்.

அத்தகைய சக்தியைப் பெறும் தகுதி என்பது ஆண்… பெண்… குழந்தைகள்… முதியவர்கள்… என்ற நிலை கொண்டு வயது வரம்பில்லாமல் எல்லோருக்குமே அந்தச் சக்தியுள்ளது. நாம் ஈர்த்து எடுக்கும் நிலை கொண்டு தான் அந்தச் சக்தி நமக்கு உதவுகின்றது.

மின்சாரத்தை உபயோகித்து ஒரு கடுகளவு வெளிச்சத்தையும் அதிதீவிர வெளிச்சத்தையும் உண்டாக்குகின்றோம். அந்தந்தச் சாதனத்திற்குள் எந்த அளவிற்கு மின்சாரத்தைப் பாய்ச்சுகின்றோமோ அந்த நிலையில் நாம் அதனின் ஒளியைப் பெறுகின்றோம். அதைப் போல
1.மனிதனின் சக்தி என்பது
2.அந்த மின்சாரத்தின் சக்தியைவிட அதிவிரைவு கொண்ட சக்தியாக உள்ளது.
3.ஆனால் இன்றைய மனிதர்கள் தன் சக்தியைத் தானே உணர்ந்து எடுக்கும் நிலை இல்லை.

படிப்பு என்ற நிலையில் பல நூல்களையும் பல கல்வி ஸ்தாபனங்களுக்குச் சென்று படிப்பதுவும் தன் அறிவை மென்மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

இருந்தாலும் அறிவு வளர வேண்டும்…
1.தன் எண்ணத்தில் வீரிய சக்தி பெற வேண்டும்
2.தன் நிலையில் பல உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டும் என்ற
3.இப்படிப்பட்ட எண்ணத்தில் படிப்பை வளர்த்துக் கொள்பவர்கள் மிகவும் குறைவு.

படிப்பதனால் தன் வாழ்க்கை நிலைக்குகந்த செல்வம் பெற்றுச் செல்வச் செழிப்புடன் வாழலாம்.
1.உயர்ந்த உத்தியோகம் கிடைக்கும்
2.உன்னத நிலை பெற்று புகழ்ந்த நிலையில் வாழலாம் என்ற
3.இந்த ஆசாபாசத்துடன் தான் இன்றைய பாட நிலையும் படிக்கும் நிலையும்
4.கல்வி கற்பவருக்கும்… கல்வி புகட்டுபவருக்குமே… உள்ளது.

அப்படி வாழ்ந்திடாமல் அச்சக்தியின் அருளை ஏற்று வாழும் வாழ்க்கையைப் பெற்று வாழ்ந்திடுங்கள்.

இந்த உடல் என்னும் கூட்டை… ஆத்மாவின் நிலை கொண்டு… நம் எண்ணம் என்ற செயலினால்…! இந்த உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களை ஆற்றல் மிக்கதாக ஆக்கி
1.இந்த உலகம் அனைத்திலும் உள்ள சக்தியைக் கண்டறியும் ஆற்றலும்
2.இந்த உடலையே நாம் பறக்கும் நிலைப்படுத்திடவும்
3.எந்த நிலைக்கும் இந்த உடலை நாம் ஈர்த்து அச்சக்தியின் அருளைப் பெற்று
4.இந்த உலகில் உள்ள மக்களுக்குப் பல உண்மைகளை உணர்த்திட முடியும்.

உங்களை நீங்கள் நம்புங்கள்…!

மனிதன் தன் நிலை உணர்ந்து வாழ்ந்திட வேண்டும்

மனிதன் தன் நிலை உணர்ந்து வாழ்ந்திட வேண்டும்

 

தெய்வப் பிறவி மனிதப் பிறவி என்ற பாகுபாடு பிறவியில் இல்லை
1.தேவனுக்கு அடுத்தது மனிதப் பிறவி என்கிறார்கள். தேவப் பிறவியாக யாரும் பிறப்பதில்லை.
2.வம்சவழி ராஜயோகம் என்ற நிலை கொண்டெல்லாம் பிறப்பது அடுத்த நிலை தான்.

உயிர் அணுக்கள் தோன்றிய நாள் முதலே சமமான நிலையில் தான் எல்லா உயிரணுக்களுமே ஜீவன் பெற்றன.

ஆண்டவனாகவும் மனிதனாகவும் பேயாகவும் மிருகமாகவும் மற்ற எல்லா ஜீவ ஜந்துக்களாகவும் ஆனதெல்லாமே
1.அச்சக்தியின் அருளில் சமமான நிலையில் வந்த உயிரணுக்கள் எல்லாம்
2.அதனதன் சுவாச நிலை கொண்டு தான் பல நிலை கொண்ட ரூபமெடுத்து ஜீவன் பெற்று வாழ்கின்றது.

சக்தியின் அருளில் சமமான நிலை கொண்டு உலக ஆரம்பத்தில் உயிர் பெற்ற நாம் எல்லோருமே… இன்று ஆண்டவனாகவும் மனிதனாகவும் மற்ற ஜீவராசிகளாகவும் இன்றைய உலகில் ஜீவன் பெற்று வாழ்வதெல்லாம்…
1.“நாம் அன்று எடுத்த… இன்று எடுக்கும் சுவாச நிலை கொண்டு
2.நமக்கு நாமே தேடிக் கொண்ட நிலை தான் இன்றுள்ள எல்லா நிலைகளுமே.
3.நாம் இன்றுள்ள நிலையையாவது நிலை நிறுத்தி வாழ்வதற்கே இப்பாட நிலைகள் எல்லாம்.

ஆக… ஆண்டவன் பிறப்பு வேறு மனிதன் பிறப்பு வேறு என்ற மாறுபட்ட நிலை அச்சக்தியின் அருளிலிருந்து நாம் பெறவில்லை.

நாம் இன்று இந்நிலை பெற்று வாழ்வதுவே உண்மையை ஊன்றிப் பார்த்தால்
1.தெய்வ நிலையில் இருந்து மனித நிலைக்கு வந்தது தான்.
2.மனிதனின் நிலை கொண்டு நம் நிலையை நாம் உணர்ந்து “நாம் விட்டு வந்த தெய்வப் பிறவியை நாம் ஏற்கும் நிலை நமக்குள்ளது…”
3.தெய்வத்தின் தெய்வமாகக் கலந்துறவாடும் நிலையை ஏற்ற நாம் இந்த மனிதப் பிறவியிலேயே அப்பாக்கியத்தைப் பெற்று வாழ்ந்திட வேண்டும்.

மனிதனின் நிலை அறிந்து வாழ்ந்திட வேண்டும்.

காலமும் நேரமும் பார்த்து வருவது அல்ல. தன் நிலை உணர்ந்துதான் வாழ்ந்திட வேண்டும் வாழ்க்கையை.

மனிதன் தன் நிலையில் தன் சுவாசத்தையும் எண்ணத்தையும் கெடுத்துக் கொள்வதால் தான்… ஆண்டவனாகும் நிலையை மாற்றி ஆவி உலகில் அல்லல் பட்டு… பல ஜென்மங்கள்… பல ஜீவராசிகளின் ஜென்மங்களைப் பெற்றுச் சுற்றிக் கொண்டே உள்ள நிலை வருகிறது.

அந்நிலையை நாம் ஏன் பெற வேண்டும்…?

சகல தேவர்களுடனும் ஐக்கியப்படுங்களப்பா…!

சகல தேவர்களுடனும் ஐக்கியப்படுங்களப்பா…!

 

சமமான நிலை நிலைக்க வாழும் வாழ்க்கையை வாழ்ந்திடுங்கள். சமமான நிலையின் வாழ்க்கை ஏன் நமக்கு ஆண்டவன் அருளவில்லை…? என்று எண்ணி வாழ்ந்திடாமல்
1.நாம் இப்புவியில் இப்புண்ணிய பூமியில் அச்சக்தியின் அருள் பெற்று
2.நமக்குத் தந்த இச்சந்தர்ப்பங்கள் எல்லாம் நம் நிலையை நாம் சமமாக்கி வாழ்ந்திடலாம்
3.சகல தேவரையும் கண்டிடலாம் என்ற பேராவலுடன் நாம் செயல்பட வேண்டும்.

ஒவ்வொரு பிறவியிலும் அடுத்த பிறவியிலாவது நம் வாழ்க்கையைச் சமமாக்கி நல் நிலை பெறலாம் என்று இருந்தாலும்… பிறவி எடுத்து நிறைவு பெற்ற சமமான வாழ்க்கையை எடுத்திட முடியாமல் தான் “இன்று இவ்வுலகில் உள்ள பாமரர்களின் வாழ்க்கை உள்ளது…”

பிறவி எடுத்த நாளிலேயே ஏழு பிறவிக்கு நம் ஆத்மாவை அலைய விட்டிடாமல்
1.“ஒரே பிறவியிலேயே தன் நிலை உணர்ந்து… சமமான நிலை எய்தி”
2.சகல தேவனாக சூட்சும உலகத்திற்குச் சென்று கற்றுணர்ந்த ஞானிகளும்
3.தன் நிலையைத் தெய்வமாக்கி வாழ்ந்தவர்களும் இன்றும் தெய்வமாக உள்ளார்கள்.

நாம் எடுத்துள்ளோம் இப்படிப் பல பிறவிகளை. இந்தப் பிறவிலும் நிறைவு இல்லாமலே வாழ்கின்றோம்.

சமமான நிலை நிலைக்க அவ்ஆண்டவனின் அருள் கிட்ட நம்முள் இருக்கும் ஆண்டவனைப் புரிந்து கொண்டால் தான் “நான்” என்ற நிலையை “நம்மை ஈசன் இயக்குகின்றான்…!” என்ற உண்மையை உணர்ந்து
1.இவ்வுலக வாழ்க்கையிலே சலிப்பும் சங்கடமும் மேற்கொள்ளாமல்
2.நம்மை நாம் சமமாக நிலைப்படுத்தி வாழ்ந்திடும் வாழ்க்கை தான்
3.அச்சகல தேவர்களுடன் நாமும் ஒருவராக வாழப் போகிறோம் எனும் நிலையை எய்திட முடியும்.

சகல தேவர்கள் யார்…? என்ற கேள்விக்குறி எழுந்திட முடியும்…!

ஈசன் ஒருவன் தான் சகலத்திலும் கலந்துள்ளவன். அவ்ஈசன் தான் என்னும் பொழுது சகல தேவர்கள் என்று பிரித்துக் கூறும் நிலையில் உள்ளவர்கள் யார்…? என்று நம் மனதிற்கு விடை காண எண்ணிடலாம்.

சகல ரூபங்கள் கொண்டு ஒவ்வொரு ரூபத்தின் வடிவினிலும் எண்ணி ஏங்குபவர்களுக்கு ஆண்டவனாக வந்து அருள் புரியும் அந்த ஞான நிலை பெற்ற “சித்தர்களும் ரிஷிகளும் தானப்பா அச்சகல தேவர்கள்…”

அன்று ஆண்ட அரசர்களின் பலர் அன்றே “நான்” என்ற மமதையை… அரசை ஆண்டு கொண்டு இருந்தாலும் நான் என்றால் யார்…? என்பதைப் புரிந்து கொண்டு அன்றே அவ்வரசர்கள் தன் நிலையைச் சமமான நிலை நிலைக்கக் கடும் தவம் இருந்து சகல வித்தைகளையும் பெற்று… அச்சூட்சம நிலை கொண்டு வாழும் நிலையை அறிந்து வாழ்ந்தார்கள்.

நாம் இன்று நம் குழந்தைகளுக்கும் நாமே கேட்பதற்கும் பல நூல்களின் வாயிலாக அன்று ஆண்ட விக்கிரமாதித்த மகாராஜாவின் கதைகளைப் பல கோணங்களில் பல ரூபத்தில் அறிவுக்கு உகந்த வழியில் கேட்டும் படித்தும் வருகின்றோம்.

அன்று ஆண்ட அந்த விக்கிரமாதித்தன் எந்த அரச சபையில் ஆண்டானோ அதே நிலையில் தான் இன்றும் அவ்வுடலுடனே பல மாயாஜாலங்களை இன்று வாழும் மனிதர்களின் மமதையைப் போக்க பல ரூபங்கள் எடுத்து உணர்த்திக் கொண்டும்… பல நன்மைகளைச் செய்து கொண்டும்… இன்றும் அவ்வுடலுடனே சித்தி பெற்ற நிலையில் சூட்சம உலகத்தில் வாழ்ந்து கொண்டு தான் உள்ளான்.

அன்று அரசாளும் நிலையிலேயே தன் நிலையைச் சமமான நிலை நிறுத்திச் சகல நிலையையும் தானே உணர்ந்து ஏற்கும் சக்தி பெற்ற நிலையைத் தான் ஏற்றுக் கொண்டான் கடும் தவமிருந்து.

அவன் தவத்தைக் கலைக்கத்தான் அவ் வேதாளம் என்னும் பேய் இவனைத் தூங்கவிடாமல் இவனுக்குப் பல கதைகள் சொன்னதாக ஆயிரத்து ஒரு கதைகள் ஆயிரத்து ஒரு இரவு சொன்னதாகச் சொல்வதெல்லாம் என்னப்பா…?

வேதாளமா வந்து கதை சொன்னது…? வேதாளம் என்னும் உருவத்தில் வந்து கதை புகட்டியவர் வேதாள முனிவரப்பா. வேதத்தையே ஆளும் அம்முனிவர் விக்கிரமாதித்த ராஜாவின் நிலை அறிந்து அவரின் நிலை எத்தன்மையில் அச்சக்தியின் அருளை ஈர்க்கிறது என்று சகல நிலையை அறிந்து தான் விக்கிரமாதித்த ராஜாவுக்கு வேதாள முனிவர் பல கதைகளைச் சொல்லி அவர் மனதில் இருந்து விடை காண ஒவ்வொரு இரவும் அவரைத் தூங்க விடாமல் அக்கதை என்ற ரூபத்தில் பல உண்மை உள்ள கதைகளை எல்லாமே உணர்த்தி அவரின் நிலையை வேதாள மாமுனிவரின் ஆசியால் சகல நிலையையும் அறிந்து சமமான நிலை நிலைத்திடும் பக்குவத்தைப் பெற்றாரப்பா அந்த விக்கிரமாதித்த மகாராஜா.

அன்று அரசாண்ட அந்த ராஜாவிற்கு இந்த நிலைகளை எல்லாம் பெற்றுத்தான் தன் நிலையைச் சமமாக்கி வாழ்ந்திடும் நிலையைப் பெற்று வாழ்ந்திட முடிந்ததப்பா.

இவ்வுலகில் நாம் மனிதர்கள் மிருகங்கள் மட்டும் வாழவில்லை.
1.நம்மைச் சுற்றிப் பல கோடி ஆன்மாக்கள் உடலில்லாமல் ஆத்மாவுடன் இவ்வுலகில் நடக்கும் நிலைகளை எல்லாம் தெரிந்து கொண்டு
2.தன் நிலைகளுக்கு ஏற்ப உடல்களையும்… தான் தன் ஆன்மா வந்து பிறந்து வாழ்ந்திடும் நிலைக்காகவும்…
3.எவ்உடலில் ஏறினால் அவ் உடலின் மூலமாகத் தான் விட்டுச் சென்ற தன் எண்ணத்தை
4.நன்மையையோ துவேஷத்தையோ பூர்த்தி செய்து கொண்டிட முடியும் என்ற நிலை கொண்டும்
5.இப்படித் தன் நிலையை ஈடேற்றிக் கொள்ள இன்று ஆத்மாவுடன் வாழும் மனிதர்கள் நிலையுடனே
6.உடலில்லா ஆத்மாக்கள் பல கோடி கோடியாகத் தன் எண்ணத்தை ஈடேற்றிக் கொள்ளச் சுற்றிக் கொண்டே உள்ளன.

நாம் நினைக்கின்றோம் நம் எண்ணம் நம் உடல் நம் ஆத்மா என்று. நம் உடலில் நாம் மட்டும் வாழவில்லையப்பா…!
1.நம் மன நிலை எந்தெந்த நிலை கொண்டு மாறுகிறதோ அந்தந்த நிலை கொண்ட ஆவி அணுக்கள்
2.நம் உடலில் எந்தத் திசையிலும் ஏறிக்கொண்டு நம்மையே ஆட்டிப் படைத்து நம்மை ஆண்டு வாழ்ந்து
3.தன் எண்ணத்தை ஈடேற்றிக் கொள்ள நம் உடலை ஒரு கூண்டாக தான் குடியிருக்கும் கூண்டாக வைத்து ஆண்டு வாழ்கிறது.

நாம் எண்ணுவதைப் போல் நாம் மட்டும் வாழவில்லை. நம் நிலையை மாற்றிக் கொண்டால்… நம் நிலையில் இருந்து வாழ்ந்திடப் “பல அணுக்கள் நம்மைச் சுற்றிக்கொண்டு தான் உள்ளன…” என்று உணர்ந்து
1.நம்முள் அவ் ஆண்டவன் சக்தி ஒன்றைத்தான் ஈர்த்து வாழ்ந்திட முடியும் என்ற உண்மையை உணர்ந்து
2.பல ஆவி உலக அணுக்களுக்கு நாம் அடிமையாகாமல் இவ்வுலக வாழ்க்கையில் பெற்ற சந்தர்ப்பங்கள் எல்லாவற்றையுமே நழுவ விட்டு
3.இக்கடைசி நிலை கொண்ட உடலுக்கு நாம் நம் உயிரணுவைச் சமமாக நிலை நிறுத்தி
4.”அச்சகல தேவர்களுடன் ஐக்கியப்படுத்துவது ஒன்றுதான்… இப்பாட நிலையில் உணர்த்திடும் உத்தம நிலையப்பா…”

அருள் ஞானிகள் வாழும் இடத்தை அடையுங்கள்

அருள் ஞானிகள் வாழும் இடத்தை அடையுங்கள்

 

அருள் ஞானிகள் காட்டியதை… உங்களுக்குள் உணர்ச்சியைத் தூண்டச் செய்வதற்குத் தான் மீண்டும் மீண்டும் உபதேசிக்கின்றோம். அந்த உணர்வின் துணை கொண்டு உங்கள் எண்ணத்தால் பதிவு செய்த நிலைகளை
1.அந்த மகா ஞானியின் உணர்வலைகள்
2.நீங்கள் எண்ணிய உடனே அது கிடைக்கும்.

அந்த உணர்வின் சத்து கொண்டு உங்களை அறியாது வந்து தீமைகளை அகற்றுவதற்கும் கூர்மை அவதாரம் போன்று மனித வாழ்க்கையில் வரும் நிலையை அகற்றுவதற்கும் விண்ணை நோக்கி ஏங்குங்கள். அந்த அருள் ஞானிகள் உணர்வுகளைப் பற்றுடன் பற்றுங்கள்..

மனித வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் கண்டுணர்ந்த இரக்கத்தால் ஈகையால் பரிவால் பண்பால் நாம் கேட்டுணர்ந்த உணர்வின் தன்மை நமக்குள் ஆழப் பதிந்து அதைப் பற்றிடாதபடி… பற்றற்தாக ஆக்கிட அந்த மெய் ஞானி உணர்வுகளைப் பற்றிக் கொள்ளுங்கள்.

தீமைகளைக் கண்டாலும் அந்த அருள் ஞானி அதைச் சுட்டுப் பொசுக்கியது போல நம்முடைய உணர்வுகள் தீமைகளை அகற்றிடல் வேண்டும்.

மெய் உணர்வின் தன்மை வளர்ப்பதற்காக அவன் சுட்டிக்காட்டிய அந்த நிலைகள் நீங்கள் பெற வேண்டும் என்ற நிலையில் தான் உங்களுக்குள் ஆழப் பதிவு செய்வது.
1.இதை ஊழ் வினையாக்கி வினைக்கு நாயகனாக உங்கள் எண்ணத்தின் வலு கொண்டு எடுப்பீர்கள் என்றால்
2.அந்த அருள் ஞானிகள் வாழும் இடத்தை அடையலாம்.

அவனின் உணர்வை நீங்கள் பற்றி அவனுடன் இணைந்த நிலைகள் கொண்டு ஒளியின் சுடராக நாமும் வாழ முடியும் என்பதற்குத் தான் இதை உபதேசிப்பது.

1.இந்த மனித வாழ்க்கையில் எந்த ஈகை கொண்டு இருந்தாலும் அந்தப் பற்று உனக்குள் ஊழ்வினையாக விளைந்திடாது
2.அருள் ஞானிகள் உணர்வுகள் கூர்மையாக உனக்குள் விளைந்து
3.அவன் தீமையை அகற்றியது போல உன்னுடைய உணர்வின் எண்ணங்கள் ஒவ்வொரு நொடியும் உன்னைக் காத்திடும் நிலையாக
4.அந்த மகரிஷிகளை எண்ணும் பொழுது என்ன செய்ய வேண்டும்…?
5.அருள் உணர்வினை எவ்வாறு பற்ற வேண்டும் என்று குருநாதர் எனக்குக் காட்டினார்

ஆகவே குருநாதர் என்னை எதைப் பற்றும் படி செய்தாரோ அதை நீங்களும் பற்ற முடியும்.

உங்கள் வாழ்க்கையில் நன்மை செய்யும் நிலையாக பிறருடைய தீமைகளைக் கூர்மையாக எண்ணி அதன் உண்மைகளை அறிந்து தீமைகளை நீக்கினாலும்
1.உங்களுக்குள் அந்தத் தீமை விளையாதபடி காத்திட
2.அந்த அருள் ஞானிகள் உணர்வை உங்களுக்குள் பற்றிடவும் அந்த பற்றுடனே வாழ்ந்திடஅ செய்திடவும்
3.எமது குருநாதர் காட்டிய நிலையினை நீங்களும் பெற வேண்டும் என்று இதைச் செய்கின்றேன்

மகரிஷிகளின் அருள் ஒளி எங்களுக்குள் படர வேண்டும் அறியாது சேர்ந்த தீமைகள் நோய்கள் அனைத்தும் அகன்று மகரிஷியின் அருள் வட்டத்தில் என்றென்றும் நாங்கள் மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தி பெற வேண்டும்.

இவ்வாறு அடிக்கடி கூர்மையாக எண்ணினால் அந்த உணர்வின் சத்து நமக்குள் வந்து வேதனைப்பட்ட உணர்வுகளைப் பற்றற்றதாக ஆக்கச் செய்யும். அருள் ஞானி உணர்வைப் பற்றிக் கொண்டால் நமது வாழ்க்கையும் அடுத்து பிறவா நிலை அடைகின்றது.

1.இங்கே பற்றிக் கொண்டால் புவிக்குள் தான் செல்கிறோம்…
2.அங்கே அருள் ஞானிகளைப் பற்றிக் கொண்டால் அங்கே செல்கிறோம்.

அது தான் பிள்ளையாருக்கு முன் கேள்விக்குறி போட்டுக் காட்டி இந்த வாழ்க்கையில் கண்டுணர்ந்த
1.நஞ்சின் நிலைகளில் சிக்குன்டு இதைப் பற்றி மீண்டும் உடலுக்குச் செல்கின்றாயா…?
2.அல்லது இதைப் பற்றற்றதாக ஆக்கி அருள் ஞானிகள் உணர்வைப் பற்றுடன் பற்றி அங்கே செல்கின்றாயா…? என்று காட்டினார்கள்.

காரணம் நாம் எதை எண்ணுகின்றோமோ நமக்குள் ஆண்டு கொண்டிருப்பது உயிரே. எண்ணியதை ஓ… என்று ஜீவனாக்கி அந்த உணர்வின் சத்தினை உடலாக்குவது உயிரே.

எந்த ஞானியின் உணர்வை நமக்குள் சேர்த்து விளைய வைத்தோமோ உடலை விட்டு அகன்ற பின்
1.உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு அவன் உருவாக்கிய பிள்ளையாக
2.ஒளியின் சுடராக நாம் மகரிஷியுடன் இணைந்து வாழ முடியும்… வேகாநிலை அடைய முடியும்

இன்றைய கலியுகத்தை “நாம் தான் கல்கியாக்க வேண்டும்…” ஆண்டவன் வந்து ஆக்குவதல்ல…!

இன்றைய கலியுகத்தை “நாம் தான் கல்கியாக்க வேண்டும்…” ஆண்டவன் வந்து ஆக்குவதல்ல…!

 

இயேசுபிரான் மக்களுக்கு உணர்த்திய மகத்துவமான உண்மைகளை எண்ணிப் பார்ப்பதற்கே இன்று யாரும் இல்லை.
1.அன்பே கடவுள்
2.அன்பே ஒற்றுமை
3.அன்பே எல்லாம் என்ற நிலையில்
4.எல்லா உயிரினங்களிடத்திலும் அன்பு காட்ட வேண்டும் என்று பேரானந்த நிலையை ஏற்படுத்தி
5.அன்று வாழ்ந்த எல்லா மக்களுக்குமே அன்பையே தெய்வமாக எண்ணி வணங்கிட நல் உபதேசங்களை உபதேசித்து
6.அன்று வாழ்ந்த மக்களின் மனதை எல்லாம் அன்புடனே நடத்திச் சென்றார் இயேசுபிரான்.

அந்நிலையை மாற்றியவர்கள் அவரின் உடலை அழித்துவிட்டு அவர்கள் தம் புகழுக்காக இயேசுபிரான் என்ற போர்வையைத் தான் எடுத்துப் போர்த்திக் கொண்டு பலர் பல நிலையில் அவ் ஏசுபிரான் பெயரிலேயே வாழுகின்றார்கள்.

அகிம்சா மூர்த்தியான இயேசுபிரானின் போதனை மொழியையே இம்சைப்படுத்தி விட்டார்கள். ஆண்டவனின் அருளையே தன் தன் நிலைக்கு ஏற்ப சாதகமாக்கிக் கொண்டு வாழ்பவர்கள் தான் இயேசுபிரான் காலத்திலிருந்து இன்று வரை உள்ளார்கள்.

இந்நிலை போல் தான் சில நாடுகளில் முகமது நபியின் நிலையும் அவர் எடுத்துச் சொன்ன உண்மை நிலையையும் மாற்றி அவரவர்கள் நிலைக்குச் சாதகமாக்கிக் கொண்டு விட்டனர்.

முகமது நபி வாழ்ந்த காலத்தில் அவர் அருளிய அருள் செல்வம் மக்கள் மனதில் பதியும் தருவாயில்… பலர் பல நிலை கொண்டு அவரின் மேல் பல துவேஷச் சொற்களையும் கற்களையும் வீசி… அவரையே துவேஷப்படுத்தி துவேஷித்து
1.அவர் நற்போதனைகளை உடலுடன் இருந்த பொழுது ஏற்று நடந்திடாமல்
2.இன்று அவர் நாமத்தை வைத்துப் பலர் ஓதுகின்றார்கள்.

பல உன்னத மனிதர்களின் பல மகான்களின் நிலைகள் எல்லாம் அவர்கள் போதித்த காலத்தில் மனிதர்கள் ஏற்று நடக்கவில்லை. அன்றும் இன்றும் மனிதர்களின் நிலை எல்லாம் ஒருவர் மேல் ஒருவர் துவேஷமும் நயவஞ்சகமும் கொண்டு வாழ்வதுவும்… நல் உபதேசத்தை ஏற்கும் மனநிலையையும் மாற்றித்தான் வாழ்ந்து வருகின்றனர்.

பல நாளேடுகளிலும் உணர்ச்சியைத் தூண்டும் வகைகளில் ஆவேசம் கொண்டு வாழ்ந்திடும் கதைகளையும் இப்படிப் பல நிலைகள் கொண்டு மக்களின் மனதையே பெரும் உந்தலுக்குண்டான நிலைக்குக் கொண்டு செல்கின்றார்கள்.

அரசியல் என்னும் நிலையிலும் பல ஆவேச நிலை கொண்ட தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் நிலையில் தான் இன்று ஆளுபவர்களும் உள்ளார்கள்.

காலத்தினால் பல கோடி நன்மைகள் நமக்கு காத்திருப்பதையே மறந்து நாம் பயத்துடன் தான் வாழ்கின்றோம்.

இப்பூமியிலே தோன்றி வாழ்ந்து…
1.உடலுடனும் உயிருடனும் இன்றும் சூட்சம நிலை கொண்டு வாழ்ந்திடும்
2.பல மகரிஷிகளின் ஆசியுடன் நாம் வாழ்கின்றோம் என்ற பேருண்மையே
3.ஜாதி மதம் பாவம் நயவஞ்சகம் இந்த நிலையெல்லாம் மறந்து
4.ஒவ்வொரு மனிதரும் தாம் மனிதனாகப் பிறந்த பாக்கியத்தை எண்ணி வாழ்ந்திடுங்கள்.

இனி வாழும் காலங்கள் கல்கியுடன் வாழ்ந்திடலாம் கல்கி என்ற பேரானந்தக் காலத்தில் கலந்து வாழ்ந்திடலாம்.

செய்த பாவத்தை மறந்து விட்டு… நடந்தவைகளை நடந்தவையாக விட்டுவிட்டு… நடக்கப் போகும் காலங்களை நல்ல சுவாச நிலையுடன் நம் உயிரான்மாவிற்கு உன்னத பொக்கிஷத்தைத் தேடித் தந்து…
1.நமக்காக மட்டும் வாழாமல்
2.நம்முடன் தோன்றிய எல்லா உயிராத்மாக்களுமே நம்மில் ஒன்றாக எண்ணி உயர்ந்து வாழ்ந்திடுங்கள்.

அன்றிலிருந்து இன்று வரை தோன்றிய எல்லோருமே அன்பைத்தான் ஆண்டவனாகக் காட்டினார்கள். எல்லா உயிரினங்களிலுமே கலந்துள்ள அச்சக்தியின் அன்பைச் சகலரும் போற்றி வணங்கி வாழ்ந்திடுங்கள்.

கலியை ஆண்டவன் வந்து கல்கி ஆக்குவது இல்லை இக்கலியில் வாழ்ந்திடும் ஆண்டவன் எல்லோருமே… ஆண்டவர்கள் என்பது யார் என்று புரிந்ததா…?
1.இக்கலியில் உள்ள உயிராத்மாக்கள் நாம் எல்லோருமே தான்
2.கலியைக் கல்கி ஆக்கி வாழ்ந்திட வேண்டுமப்பா.

ஒவ்வொரு காலங்களும் தானாக மாறுவதில்லை மனிதர்கள் மனநிலையை வைத்துத்தான் காலநிலையும் மாறுகின்றது. ஒவ்வொரு அவதாரமும் அன்றன்று வாழ்ந்த மனிதரின் மனநிலையை வைத்துத்தான் மாறுபடுகிறது.

இன்று மக்கள் மனதில் தோன்றியுள்ள பெரும் பீதிக்கு மூல காரணமே இம் மனநிலை மாறுவதற்காகத் தான்.
1.நம் மகரிஷிகள் நிலை கொண்டே நடத்திடும் பெரும் நாடகம்.
2.நாடகத்தின் தொடரினை இனி கண்டு வாழ்ந்திடலாம்
3.இந்நிலையில் இருந்து மக்களின் மனநிலையில் பெரும் மாறுதல் வந்திடுமப்பா.

அந்நிலை நடப்பதற்காகத்தான்… சூட்சும நிலையில் உள்ளவர்கள் “மனிதன் தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் காலத்தை உண்டு பண்ணி” மனிதர்களின் மனதிற்குப் போதனைக்கு விட்டுள்ளார்கள்.

இன்றைய செயற்கையின் கோளத்தை அந்நிலையின் உண்மைகளை நாமும் பார்த்திடலாம்.

வடக்கில் தான் சொர்க்கமடைகின்றோம்

வடக்கில் தான் சொர்க்கமடைகின்றோம்

 

பள்ளியில் பாடம் படித்துக் கொண்டிருக்கும் பொழுது பாசம் கொண்டு சினேகித சினேகிதிகளாகப் பழகி இருப்பார்கள்.

இருந்தாலும்… கல்வியில் சீர்பட வில்லை என்றால் இந்த உணர்வின் தன்மை தனக்குள் பெற்ற பின் அவர்கள் ஒருவருக்கொருவர் பழகிய உணர்வு கொண்டு
1.காசைச் செலவழிக்கின்றேன் மற்றவர்களைப் போன்று படிக்காதபடி நீ மக்காக இருக்கின்றாயே என்ற நிலை வருவதும்
2.சிந்திக்கும் திறன் இல்லை என்றால் மற்றவர்கள் இணைத்துப் பார்த்து தன்னையே தான் வெறுக்கும் நிலையும் வருகின்றது.

காரணம் குடும்பத்தில் ஒரு சில நேரங்களில் பணத்திற்காக அவஸ்தைப்படுவார்கள். அந்த மாணவி அல்லது மாணவன் இந்த உணர்வைத் தன் மனதில் எடுத்துக் கொண்டால்
1.அந்த வேதனை உணர்வு கலந்த பின்
2.பள்ளியில் சென்று பாடத்தைப் படித்தாலும்
3.அங்கே சொல்லிக் கொடுப்பதைப் பதிவாக்கிச் சிந்தித்து “மீண்டும் நினைவாக்குவது என்பது” கடினமாகி விடுகின்றது.

அதே சமயத்தில் பள்ளியிலே பிறர் குறும்புத்தனம் செய்வோரையோ தவறு செய்வதையோ உற்றுப் பார்த்தால் அந்த வலிமையான உணர்வுகள் இங்கே அணுவாகி விடுகிறது.

அந்த அணு தன் இரைக்காக உணர்ச்சிகளைத் தூண்டும் போது அதையே நுகரப்படும் பொழுது இந்த உணர்வின் வலிமை பெற்ற பின் பாட நிலைகளில் சரியானபடி படித்தாலும்… குறும்புத்தனம் செய்யும் உணர்வு கலந்து அது திரை மறைவாக்கிவிடும். இதுதான் சித்திரை (சிறு திரை) என்பது.

சந்தர்ப்பத்தினால் ஒரு தீமையான உணர்வைத் தனக்குள் எடுத்துக் கொண்ட பின்
1.நல்ல ஒழுக்கத்தின் தன்மையை அந்த உணர்வுகள் மறைத்து விடுகின்றது
2.படிப்பைப் பற்றிய நினைவாற்றல்கள் வருவதில்லை.

ஏனென்றால் பாலிலே ஜீனியை போட்டு காஃபியைப் போடும் பொழுது ருசியாக இருக்கின்றது. ஆனால் சிறிது காரத்தை இணைத்து விட்டால் சுவை வருகின்றதோ…? இல்லை.

இதைப் போன்று தான் குழந்தைகள் விளையாடும் பொழுது ஒருவருக்கொருவர் குறும்புத்தனமான செயல்களைச் செய்யும் பொழுது அந்த உணர்வுகள் கலந்து விட்டால் நினைவுகள் அதிலே வலிமையாகச் சென்று விடுகின்றது.

பின் அவர் படிக்கும் பாடங்களை உற்றுப் பார்த்தால் அவருடைய நினைவாற்றல் இங்கே வருவதில்லை ஆகவே அறியாது இவ்வாறு பார்த்துணர்ந்த கேட்டுணர்ந்த தீமைகள் இவன் அறிவின் தன்மையை சித்திரையாக “சிறு திரையாக” மறைத்து விடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளை மாற்றுவதற்கு யாம் சொல்லிக் கொடுக்கும் தியானத்தின் மூலம்
1.அருள் ஞானிகள் உணர்வு கொண்டு இருளைப் போக்கிப் பொருளைக் காண முடியும்
2.இந்தத் தியானம் அதற்கு உதவும்.

ஏனென்றால் மனிதனின் வாழ்க்கையில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கோபப்படுவோரையோ வேதனைப்படுவோரையோ நாம் பார்த்தால் அடுத்த கணமே… அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று எண்ணி நம் நல்ல குணத்தை மறைத்திருக்கும் அந்தச் சிறு திரைகளை நீக்க வேண்டும்.

ஒவ்வொருவரும் வாழ்க்கையில் இதைப் போல் நீக்கி வந்தால் நம் உடலுக்குள் இருக்கும் அறிவுகள் அனைத்தும் மெய் ஒளியைப் பெறும் தன்மையாக நமக்குள் வளர்ச்சி பெறும்… பூரண நிலவாக மாறுகின்றது.

என்றும் ஒளியின் சரீரமாக பெற்று பேரின்ப பெருவாழ்வு வாழும் தன்மை பெறுகின்றது. மனித வாழ்க்கையில் நாம் இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் எத்தனையோ உடல்களில்
1.தீமைகளிலிருந்து தப்ப வேண்டும் என்ற உணர்வைப் பெற்றோம்
2.உயிரின் துணை கொண்டு தான் இன்று மனிதனாக வந்திருக்கின்றோம்
3.இதிலிருந்து நாம் அடுத்து எந்த நிலையை பெற வேண்டும் என்பதைத்தான் நமது சாஸ்திரங்கள் காட்டுகின்றது

அதனைக் காட்டுவதற்குத் தான் ஆலயங்களில் சொர்க்க வாசலைக் காட்டுகின்றார்கள். உடலை விட்டுப் பிரிந்த பின் பிறவியில்லா நிலை அடைவது தான் கடைசி எல்லை

மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்னாள் “வைகுண்ட ஏகாதசி…!” அன்றைய தினம் சொர்க்கவாசலைத் திறப்பதாகக் காட்டுவார்கள்… அதிகாலையில் திறப்பார்கள்.

வழக்கமாக நேர் வாசலில் சென்றால் அன்றைய தினம் வடக்கு வாசலைத்தான் திறப்பார்கள்.
1.காரணம் நாம் வடக்கில் தான் சொர்க்கமடைகின்றோம் என்பதனை அவ்வாறு காட்டுகின்றார்கள்
2.வடக்கில் தான் துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலமும் சுழன்று கொண்டுள்ளது
3.அந்த ஈர்ப்பு வட்டத்தில் இணைய வேண்டும் என்று தெளிவாகக் காட்டுகின்றார்கள் ஞானிகள்.

“மனித மகசூலான ஞான ஒளியைத்தான்…” நம் சப்தரிஷிகள் காணத் துடிக்கின்றனர்

“மனித மகசூலான ஞான ஒளியைத்தான்…” நம் சப்தரிஷிகள் காணத் துடிக்கின்றனர்

 

ஞானத்தின் வழி செல்லும் போதனை முறையையும்… தியான வழிபாட்டின் முறையையும்… மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொல்வதின் நிலை என்ன…?

இந்தப் பூமி தோன்ற இந்தப் பூமியின் ஜீவன் பெற அஜ்ஜீவனின் வளர்ச்சியினால் மனித ஆன்மாக்கள் தோன்ற…
1.இவர்கள் சொல்லும் “இயற்கைச் சக்தி…” என்றாலும்
2.இதற்கு மூல சக்தி வளர ஒரு சக்தி தேவை.

அச்சக்தி அமிலக்கூட்டு நிலை பெற்றோர்கள் நம் சப்தரிஷிகளின் செயல் வடிவம்தான் நம் பூமியும்… பூமியில் வளர்ச்சியான எல்லாமுமே…!

பல கோடி ஆண்டுகளாக எண்ணிலும் கருத்திலும் எடுத்துச் சொல்ல முடியாத மாற்றங்களின் செயல் திறனில் வழி வந்த நிலையில்
1.மனித இனம் தோன்றி மனித இன குண அமில வளர்ச்சியிலிருந்து தான்
2.மீண்டும் மீண்டும் சகல சக்திகளையும் சக்தி வழி பெறச் செயலாக்க முடியும் என்ற உண்மையின் தத்துவத்தில்…
3.தான் வடித்த வடிவான “மனித மகசூலான ஞான ஒளியைத்தான்…” நம் சப்தரிஷிகள் காணத் துடிக்கின்றனர்.

தன் செயலின் பலன் தான் மனித இனம். இந்த மனித இனம் தோன்றி வளர சப்தரிஷிகளின் செயல் காலத்தில் பல கோடி ஆண்டுகள் ஆகிவிடுகின்றன.

இவ்வினம் தோன்றி அவ்வினத்தின் ஒளியை எடுத்தால் தான் மீண்டும் மீண்டும் இவ்வின வளர்ச்சிக்கு அவர்கள் பயிர் செய்ய முடியும். செய்த மகசூலில் வரும் பயிரை எல்லாம் உணவாக உண்டு கழித்து விட்டால்
1.மீண்டும் பயிர் செய்ய விதை நெல் தேவைப்படுகின்றது.
2.அவர்கள் செய்த பயிருக்கு மகசூல் பெற்று அந்த மகசூலில் மீதமான விதை நெல் இருந்தால் தான் மீண்டும் மகசூல் காண முடியும்.
3.இதன் அடிப்படையின் நிலையை ஒத்துத்தான் நம் சப்தரிஷிகளின் நிலையும் மகசூலைக் கண்டு
4.அதிலுள்ள பலனால் மீண்டும் மீண்டும் பயிர் செய்யச் செயல் புரியும் நிலை தான் “இங்கே உணர்த்தும் நிலை…!”

இதனை ஒத்துப் பல நிலைகளில் செயல் புரிந்து வருகின்றனர் சப்தரிஷிகள்.

இந்த மனிதக் கரு தோன்றி இது நாள் வரை அவர்களின் ஒளி வட்டத்தில் கலக்கும் நிலை கொண்ட ஆன்மாக்களின் வளர்ச்சியைக் காண பல காலமாகப் பல செயல்களைப் புரிந்து வருகின்றனர். ஆனால்
1.இம்மனித ஆன்மாக்களின் எண்ண வாழ்க்கையில்
2.அவ்வொளி ஞானத்தின் சித்து நிலை பெறப்படுவது மிகவும் குறைந்தே வருகின்றது.

தன் ஞான வளர்ச்சியை உலகுக்கு உணர்த்தத்தான் அந்தந்தக் கால கட்டத்தில் அச்சப்தரிஷிகளே தோன்றி அக்கால மாற்றத்தின் சில நிலைகளைச் செயல் புரிந்து அவர்கள் நல் ஒளியின் ஆத்மாக்களை எடுத்ததின் நிலை தான் நாம் இன்று கேள்விப்படும் “பல மகான்கள்” தோன்றிய நிலை எல்லாம்.

அந்த மகான்கள் தோன்றியதன் நிலை எல்லாம் தான் வளர்த்த பூமியின் சக்தியிலிருந்து தன் சக்தியின் பலனைப் பெற்றால் தான்… மீண்டும் சப்தரிஷிகளுக்கு அவர்களின் செயலின் மண்டலம் தோன்றி வளர்ந்து “ஜீவனை வளர்க்க முடியும்…”

சூரியனைச் சுற்றியுள்ள நாற்பத்தியேழு மண்டலங்களில் நம் பூமியில் மட்டும் இன்று மனித ஆன்மாக்கள் வாழ முடிகின்றது. இன்று வாழும் இதே நிலை இக்கலியின் மாற்றத்தில் அழியப் பெறுவதனால் “மீண்டும் மனித ஜனனம் தேவை…”

காற்று மண்டலமே விஷக் கோளமாகச் சுழலும் இந்தக் கலியில் இதன் வளர்ச்சி நிலையின் மாற்றத்தின் பொழுது மனிதன் தன்னைத் தானே அறிந்து கொள்ளச் செயலாக்கியுள்ள இந்த விஷக் குண்டுகள் வெடிப்பதற்கு முதலிலேயே இம்மனிதனின் ஞானம் ஒளி பெற்றால் அச்சப்தரிஷிகளின் ஒளிக் கூட்டு அதிகப்படும்.

உலகமே விஷமாகி ஜீவராசிகள் அனைத்துமே மடியப் போகின்றன என்றால் ஞானம் பெறுபவன் மட்டும் எப்படித் தப்புவான்…?

ஒரு பானை சாதம் வடிக்கின்றோம்.
1.அப்பானையில் இட்ட அரிசி எல்லாம் வெந்து சாதமாக ஆனாலும்
2.அதில் உள்ள கல் வேகுவதில்லை அல்லவா…!

பூமியில் உற்பத்தி செய்தது தான் அந்தப் பானையும் அக்கல்லும் விறகும் கரியும் அடுப்பும் எல்லாமே…! அதனதன் வளர்ச்சி கொண்டு விறகு எரிந்து உஷ்ணத்தைக் கக்கிச் சாம்பலாகின்றது.

சுட்ட சட்டி எந்த உஷ்ணத்தை ஏற்றி அடுப்பு எரிந்தாலும் அது தாங்கி நீரை அவியாக்கி அரிசி எல்லாவற்றையும் வேக வைத்தாலும் அந்தக் கல் மட்டும் எந்த உஷ்ணமாக ஏறினாலும் அப்படியே உள்ளது.

அதைப் போன்று ஒளியின் சக்தியால் பிம்பம் கொண்ட “நாம்” அச்சக்தி பிம்பத்தின் பிம்ப ஞானம் பெற்றால் இந்தப் பூமியின் மாற்றத்தினால்
1.நீரும் நெருப்பும் விஷ வாயும் நம் ஒளியை எந்தப் பின்னமும் படுத்தாது
2.சாதத்தில் கொதித்து வந்த கல்லைப் போன்று…!

முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்களின் அருளைப் பெற வேண்டும் என்று ஏங்குங்கள்

முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்களின் அருளைப் பெற வேண்டும் என்று ஏங்குங்கள்

 

உங்கள் நினைவினைச் சப்தரிஷி மண்டலங்களின் பால் செலுத்துங்கள்… சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்குங்கள்.
1.முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்று சொல்லும் அக்காலத்தில் சென்ற
2.அனைவரது அருள் உணர்வுகள் வெளிப்படுவதை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வருகின்றது.
3.உங்களுக்குள் இருக்கும் முப்பத்து முக்கோடி அணுக்கள்… அதன் முழுமைகளை… அதனதன் இயக்கமாக இருக்கும் நிலையை
4.அவர்கள் அருள் ஒளிச் சுடராக மாற்றிய அருள் ஒளியின் தன்மையை
5.முப்பத்து முக்கோடி அணுக்களின் திறன்களையும் “ஒளியின் உணர்வாக மாற்றிட்ட அந்த அருள் ஒளியை”
6.உங்களுக்குள் அருள் ஒளி பெறும் அணுக்களாக மாற்றும் நிலையாக சப்தரிஷி மண்டலத்துடன் உங்கள் உணர்வினை ஒன்றிடச் செய்யுங்கள்.
7.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் வாழ்ந்திட ஓர் இருப்பிடமாக இதனை நாம் செயல்படுத்துவோம்.

சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து
1.எங்கள் உடலில் உள்ள சர்வ அணுக்களும் அருள் ஒளியைச் சிருஷ்டிக்கும் அருள் ஞானம் பெற்று
2.ஒளியின் உணர்வாக உருவாக்கும் அணுக்களாக மாற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்துடன் இணைந்து வாழும் அருள் ஒளிச் சுடராக… எங்கள் உடலில் உள்ள அணுக்கள் அனைத்தும் ஒளியின் உணர்வாக உருப் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

1.உயிர் உடலில் இருக்கும் பொழுது நான்
2.அதுவே ஒளியின் உணர்வாக நமக்குள் நானாக மாற்றுதல் வேண்டும்.
3.உயிர் நானாகின்றது… இப்போது உணர்வை நானாக… “இரண்டையும் கலந்து நானாவதே நான்…”

நான் என்ற நிலைகள் வரும் போது “உயிருடன் ஒன்றினால்” உணர்வை ஒளியாக மாற்றிடும் பிரம்மத்தை அடைகின்றோம் எதனையுமே மாற்றி அமைக்கும் நிலையை நமது உயிரின் தன்மை பிரம்மத்தின் நிலையை அடைவதே அது.

எதை உற்று நோக்கி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற வேண்டும் என்று ஏங்கினோமோ… இந்த உணர்வை நம் உயிர் உருவாக்கி ஒளியின் அணுவாக மாற்றிவிடும். ஆகவே
1.உடலை விட்டுச் சென்றால் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில்
2.பிறவியில்லா நிலை என்னும் ஒளிச் சரீரமாக உயிர் உருவாக்கிவிடும்.

இந்தச் சூரியன் அழிந்தாலும் நமது உயிர் அழிவதில்லை… ஒளியின் உணர்வாக வானுலகில் அகண்ட அண்டத்தில் வரும் நஞ்சினை ஒளியாக மாற்றிடும் திறன் பெறுகின்றது.

பல சூரியக் குடும்பங்கள் அழிந்தாலும் உயிர் மனிதனான பின் ஒளியின் உணர்வாக மாற்றி விட்டால் எதனின்றும் அழிவதில்லை. எதற்கும் அடிமையாவதில்லை.

அனைத்தையும் ஒளியாக மாற்றிடும் அத்தகைய உயிரின் நிலை அடைகின்றது (நாம் ஆகின்றோம்).

“தன்னுள்ளேயே” ஈசனின் சொரூபத்தைக் கண்டவர் எல்லோருமே வருகின்றார்கள் கல்கிக்கு

“தன்னுள்ளேயே” ஈசனின் சொரூபத்தைக் கண்டவர் எல்லோருமே வருகின்றார்கள் கல்கிக்கு

 

விட்ட குறையினால் வந்து பிறந்தவர்கள் தானப்பா எல்லோரும். இன்று உள்ள கலியுகத்தில் விட்ட குறைகள் உள்ள மக்கள் எல்லோருமே ஜீவித்துள்ளார்கள்.

ஜனப்பெருக்கம் ஜனப்பெருக்கம் என்கிறார்கள் ஜனப்பெருக்கத்தைக் குறைக்கின்றார்களாம்… அவர்கள் ஆயுளை வளர்க்கின்றார்களாம்
1.இருப்பவன் இருந்து கொண்டே இருக்க வேண்டுமாம்…
2.ஜனப்பெருக்கத்தைக் குறைக்கின்றானாம்… ஆளுகின்றானாம் நாட்டை
3.அவன் ஜனப்பெருக்கத்தைக் காக்கின்றானாம் உளவறிந்து.

எப்படி இருக்கிறதப்பா இக்கதை எல்லாம்…?

கலியில் வந்து விட்டார்கள் விட்ட குறை உள்ளவர்கள் எல்லோருமே மனிதர்களாகவும் மற்ற ஜீவராசிகளாகவும் இனி பிறப்பவர்களும் இப்பொழுது கலியில் மடிபவர்கள் தான் பிறக்கிறார்கள்.

கலியின் கடைசி நிலையில் எல்லோருமே எல்லா ஜீவ ஜெந்துகளும் அவரவர்கள் செய்த பாவ புண்ணிய நிலையில் வந்து விடுகின்றார்கள். விட்ட குறை என்றதும் இதனால் தான்.

மனிதன் ஆடு மாடு பூச்சி புழு எல்லாமே வந்து விடுகின்றன இக்கலியின் கடைசியில். இக்கலியிலிருந்து தப்பி வடிகட்டி எடுப்பவன் தான் கல்கிக்கு வருகின்றான்.

கல்கியில் வருபவன் எல்லாம் யாரப்பா…?

1.இக்கலியில் விட்ட குறை உள்ளவர்கள் அல்ல.
2.இவ்வுலகம் தோன்றிய நாள் முதற்கொண்டு எடுத்த பிறப்பில் இருந்தெல்லாம்
3.எவன் ஒருவன் இக்கலியின் கடைசியில் தன் நிலை உணர்ந்து தன் மனத்தை மனம் என்னும் கோவிலாக்கி
4.மற்ற எல்லா நிலையையும் கடந்து முக்தி எனும் நிலை எய்தி
5.தன் நிலையை உயர்த்தி… தான் என்ற அகந்தையை விட்டுத்
6.தன்னுள்ளேயே ஈசனின் சொரூபத்தைக் கண்டவர் எல்லோருமே வருகின்றார்கள் கல்கிக்கு.
7.கல்கியில் வருகின்றார்கள் ஞான நிலை பெற்ற தீபங்கள் எல்லோருமே.

நீ நினைக்கின்றாய் ஆயிரம் ஜெபங்கள் இருந்து அடுக்கடுக்காக மந்திரங்கள் ஓதித் தான் பிறந்த நிலையை மறந்து விட்டு ஈசனுக்கு பூஜை செய்து… பல மந்திரங்கள் சொல்பவன் எல்லாம் வந்திடுவான் கல்கிக்கு என்று.

வருபவன் யாரெல்லாம் என்று ஜெப நிலையில் உணர்ந்திடலாம். தான் செய்த பாவ புண்ணியங்களைப் பொறுத்துத் தான் “வடிகட்டப்பட்டு வருகின்றான்” கல்கிக்கே.
1.கலியின் பாதையில் பகர்கின்றேன் தோட்டியும் வருவான் தொண்டனும் வருவான் என்று
2.கல்கிக்கு வருபவன் எல்லாம் கால வெள்ளத்தில் சிக்குண்டு பல கஷ்ட நஷ்டங்களையும் தன்னுள்ளே எண்ணிடாமல் பிறந்த பயனை எண்ணி
3.அந்நிலையின் உயர்வை ஊன்றி பிறந்த பயனை எல்லாம் எடுத்தவனே வருகின்றான் கல்கிக்கு.

என்னப்பா…? சொல்லும் பாடம் உனக்குத்தான்…!

கலியின் கடைசியில் வந்துள்ளோம் பிறந்த பயனை… விட்ட குறையை இக்கலியின் கடைசிக்குள் உன் ஜெபநிலையின் உதயத்தில் முடித்திடப்பா.

முதல் பாடத்தில் பகர்ந்த நீ விட்ட குறை என்ன…? என்று உனக்குள்ளே உணர்த்தி உள்ளேன். ஊன்றிப் பார்த்தால் இன்று உனக்குள்ள நிலை எல்லாம் சிறு தூசிதானப்பா… தூசியை ஊதிவிடு…!

உன் நிலையை… நீ விட்ட குறையை இக்கலியின் கடைசியில் நிலைக்கச் செய்வாய். பெரும் செயற்கை யுகத்தைக் கண்ட இம்மாமனிதர்கள் எல்லோருமே மூச்சிருக்கும் நிலையில் உன் சுவாச நிலையால் விட்ட குறையை முடித்திடப்பா.

உன் ஜெப நிலையின் தன்மையில் தான் ஐவர் மலையின் அந்தரங்கம் வந்துவிடுமப்பா. அந்நிலையில் வந்த பயனை எடுத்துத்தான் அங்கு நீ பதித்திடப்பா.

1.அவ்வார்வ எண்ணத்திலே உன் ஜெப நிலையை மாற்றிடாமல்
2.”ஒன்றே செய்வேன்… நன்றே செய்வேன்…” என்றுள்ள செய்யுளின்படி செய்திடப்பா நற்காரியத்தை.

இக்கலியின் கடைசியில் நிலைப்பவன் யார் என்பதெல்லாம் புரிந்திருக்கும் ஜெப நிலையும் புரிந்திருக்கும்

பல பாடங்களைப் பதித்துள்ளார் உன் மனதினிலே என் சிஷ்யன் (ஞானகுரு). படித்த பாடத்தை விட்டிடாமல் பாடம் மட்டும் கேட்டு விட்டால் உன் நிலைக்கு என்றப்பா வருவது…?

பள்ளிக்குச் சென்று படிப்பதெல்லாம் அறிவை வளர்க்கத் தான்.
1.வளர்ந்த பின் அறிவின் பயனைப் பெற வேண்டாமா…?
2.என்றப்பா அந்நிலைக்கு உன் நிலையை உயர்த்திடுவாய்…?

கால நிலையில் விஷத்தன்மை கலக்கின்றதப்பா மிகத் துரிதமாக… விஷத்தன்மையையும் வான மண்டலத்தையும் வென்றிடவே உன் ஜெப நிலையைக் கூட்டிக் கொள்ளப் பார்.

விட்ட குறையை முடித்திடப்பா வீண் விஷமிகளை எண்ணிவிடாதே, பாடத்தின் நிலை புரிந்ததா…?

48 நாள் என்ற பாடம் அன்றொரு நாள் உன் ஜெப நிலைக்கு முடிவு வைத்தேன். அந்த 48 நாளில் நடந்ததெல்லாம் என்னப்பா…? பார்த்திட்டாயா அவன் நிலையும் உன் நிலையும்.

48 நாளில் தேவனின் நினைப்பால் ஊன்றி வைத்தாய் கலசத்தை உன் நினைவில். அந்த 48 நாளில் உன் எண்ணமெல்லாம் அவன் தருவான் என்ற நிலையும் மறக்கச் செய்தேன். தந்தாலும்… உன் நிலைக்கு வேண்டாம் என்று நீயே உன் எண்ணத்தில் ஊன்றிக் கொண்டாய்.

பகைவன் என்பவனின் கஷ்டத்தையும் பார்த்திட்டாய் பாலகரின் நிலையையும் உயர்த்திட்டாய். உன் மனத்தையே ஒரு நிலை ஆக்கியுள்ளாய். இந்நிலையில் உனக்கு இந்த 48 நாட்களில் பகர்ந்துள்ள பல பாடங்களை மனநிலையில் ஒருநிலைப்படுத்தி உணர்ந்துள்ளாய்.

வாழ்க்கையில் வாழ்வு என்ன…? என்ற அர்த்தங்களும் அறிந்திருப்பாய், தியான முறையின் வழிகளையும் புரிந்திருப்பாய். சொல்வாக்கை அருளி இருப்பேன்.

இந்த 48 நாளில் சிறு குறையும் உள்ளதப்பா.
1.உன் நிலையை உயர்த்திக் கொள்… மனச் சஞ்சலத்திற்கு அடிமையாகாதே
2.ஆசை மனதினை அடக்கிடப்பா அந்நிலையில் வருவது தான் சுவையும் மற்ற எல்லாமே.

கலசத்தின் பயனைப் பெற்றவர் இங்கு உள்ளவரில் ஒருவன் தானப்பா. பகர்ந்தவரும் கலசத்தின் பயனைப் பெறவில்லை… கலசம் வைத்தவனும் நிலை நிறுத்த முடியவில்லை மனநிலையை.

அருளெல்லாம் அளித்துள்ளேன் இக்கலசத்தில். நாளை தியானத்தில் நல்ல அமுதை விட்டிடுவேன்… கலசத்தின் மகிமையைக் கண்டிடுவாய். இனி எல்லாமே உன் வழியில் நல்லாசிகள் தான் நடந்திடுமப்பா.

தேங்காயின் பலனைத் தெரு பூராம் தெரிவது வேண்டாம். மஞ்சள் துணியில் முடிந்து வைத்து… மாற்றான் பார்த்திடாமல் வைத்திடப்பா சில நாட்கள்.

உன் இல்லத்தினிலே உன் ஜெப நிலைக்கு அமரும் இடம் அமைத்தவுடன் நிலையில் (கதவு நிலை) கட்டிடலாம் “என் அங்கத்தின் அங்கத்தை…” அந்நாள் வரையில் உன் இல்லத்தில் பூஜிக்க முடிந்திட்டால் வைத்துக்கொள்.

பூஜை அறை வரும் வரையில் இங்கு இருக்கட்டும் என்ற எண்ணம் இருந்திட்டால் இங்கேயே விட்டுவிடு.

பூஜை அறையில் தேங்காய் உடைக்க வேண்டாம். தேங்காய் பழம் உடைத்து என்ற சொல் வருவது வேண்டாம். அவ்வோட்டில் “என்ன வாசனை வருகிறது….?” பழம் புஷ்பம் மட்டும் போதும்.

தேங்காய் உடைப்பதனால் தேவர்கள் அருளைப் பெறுகின்றார்களாம்… உடைக்கும் சத்தத்தில் தான் தேவர்கள் வருகின்றார்களாம் அத்தேங்காயின் தீர்த்தத்தைப் புசிக்கின்றார்களாம்

இவன் புசிக்க எடுத்து வருகின்றான்…! தேங்காயைச் சமைத்துச் சாப்பிட வேண்டும் என்பதில்லை. வந்த இடத்தில் தன் பசியை ஆற்றிக் கொள்ளத்தான் அதைக் கொண்டு வருகின்றான்.

வழி முறையில் வந்த சில மாற்றங்கள் இவைகள். சில வழியில் ஊருடன் ஒத்துச் செல்லுங்கள். “நமக்கு வேண்டாம் தேங்காய் உடைக்கும் தன்மை…” உடைத்த தேங்காயை எடுத்து வந்து விடாதீர்கள் இல்லத்திற்கு. பிறருக்கு அளித்து விடுங்கள் அல்லது பூசாரிக்கே அளித்து விடுங்கள்.