
அருள் ஞானிகள் வாழும் இடத்தை அடையுங்கள்
அருள் ஞானிகள் காட்டியதை… உங்களுக்குள் உணர்ச்சியைத் தூண்டச் செய்வதற்குத் தான் மீண்டும் மீண்டும் உபதேசிக்கின்றோம். அந்த உணர்வின் துணை கொண்டு உங்கள் எண்ணத்தால் பதிவு செய்த நிலைகளை
1.அந்த மகா ஞானியின் உணர்வலைகள்
2.நீங்கள் எண்ணிய உடனே அது கிடைக்கும்.
அந்த உணர்வின் சத்து கொண்டு உங்களை அறியாது வந்து தீமைகளை அகற்றுவதற்கும் கூர்மை அவதாரம் போன்று மனித வாழ்க்கையில் வரும் நிலையை அகற்றுவதற்கும் விண்ணை நோக்கி ஏங்குங்கள். அந்த அருள் ஞானிகள் உணர்வுகளைப் பற்றுடன் பற்றுங்கள்..
மனித வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் கண்டுணர்ந்த இரக்கத்தால் ஈகையால் பரிவால் பண்பால் நாம் கேட்டுணர்ந்த உணர்வின் தன்மை நமக்குள் ஆழப் பதிந்து அதைப் பற்றிடாதபடி… பற்றற்தாக ஆக்கிட அந்த மெய் ஞானி உணர்வுகளைப் பற்றிக் கொள்ளுங்கள்.
தீமைகளைக் கண்டாலும் அந்த அருள் ஞானி அதைச் சுட்டுப் பொசுக்கியது போல நம்முடைய உணர்வுகள் தீமைகளை அகற்றிடல் வேண்டும்.
மெய் உணர்வின் தன்மை வளர்ப்பதற்காக அவன் சுட்டிக்காட்டிய அந்த நிலைகள் நீங்கள் பெற வேண்டும் என்ற நிலையில் தான் உங்களுக்குள் ஆழப் பதிவு செய்வது.
1.இதை ஊழ் வினையாக்கி வினைக்கு நாயகனாக உங்கள் எண்ணத்தின் வலு கொண்டு எடுப்பீர்கள் என்றால்
2.அந்த அருள் ஞானிகள் வாழும் இடத்தை அடையலாம்.
அவனின் உணர்வை நீங்கள் பற்றி அவனுடன் இணைந்த நிலைகள் கொண்டு ஒளியின் சுடராக நாமும் வாழ முடியும் என்பதற்குத் தான் இதை உபதேசிப்பது.
1.இந்த மனித வாழ்க்கையில் எந்த ஈகை கொண்டு இருந்தாலும் அந்தப் பற்று உனக்குள் ஊழ்வினையாக விளைந்திடாது
2.அருள் ஞானிகள் உணர்வுகள் கூர்மையாக உனக்குள் விளைந்து
3.அவன் தீமையை அகற்றியது போல உன்னுடைய உணர்வின் எண்ணங்கள் ஒவ்வொரு நொடியும் உன்னைக் காத்திடும் நிலையாக
4.அந்த மகரிஷிகளை எண்ணும் பொழுது என்ன செய்ய வேண்டும்…?
5.அருள் உணர்வினை எவ்வாறு பற்ற வேண்டும் என்று குருநாதர் எனக்குக் காட்டினார்
ஆகவே குருநாதர் என்னை எதைப் பற்றும் படி செய்தாரோ அதை நீங்களும் பற்ற முடியும்.
உங்கள் வாழ்க்கையில் நன்மை செய்யும் நிலையாக பிறருடைய தீமைகளைக் கூர்மையாக எண்ணி அதன் உண்மைகளை அறிந்து தீமைகளை நீக்கினாலும்
1.உங்களுக்குள் அந்தத் தீமை விளையாதபடி காத்திட
2.அந்த அருள் ஞானிகள் உணர்வை உங்களுக்குள் பற்றிடவும் அந்த பற்றுடனே வாழ்ந்திடஅ செய்திடவும்
3.எமது குருநாதர் காட்டிய நிலையினை நீங்களும் பெற வேண்டும் என்று இதைச் செய்கின்றேன்
மகரிஷிகளின் அருள் ஒளி எங்களுக்குள் படர வேண்டும் அறியாது சேர்ந்த தீமைகள் நோய்கள் அனைத்தும் அகன்று மகரிஷியின் அருள் வட்டத்தில் என்றென்றும் நாங்கள் மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தி பெற வேண்டும்.
இவ்வாறு அடிக்கடி கூர்மையாக எண்ணினால் அந்த உணர்வின் சத்து நமக்குள் வந்து வேதனைப்பட்ட உணர்வுகளைப் பற்றற்றதாக ஆக்கச் செய்யும். அருள் ஞானி உணர்வைப் பற்றிக் கொண்டால் நமது வாழ்க்கையும் அடுத்து பிறவா நிலை அடைகின்றது.
1.இங்கே பற்றிக் கொண்டால் புவிக்குள் தான் செல்கிறோம்…
2.அங்கே அருள் ஞானிகளைப் பற்றிக் கொண்டால் அங்கே செல்கிறோம்.
அது தான் பிள்ளையாருக்கு முன் கேள்விக்குறி போட்டுக் காட்டி இந்த வாழ்க்கையில் கண்டுணர்ந்த
1.நஞ்சின் நிலைகளில் சிக்குன்டு இதைப் பற்றி மீண்டும் உடலுக்குச் செல்கின்றாயா…?
2.அல்லது இதைப் பற்றற்றதாக ஆக்கி அருள் ஞானிகள் உணர்வைப் பற்றுடன் பற்றி அங்கே செல்கின்றாயா…? என்று காட்டினார்கள்.
காரணம் நாம் எதை எண்ணுகின்றோமோ நமக்குள் ஆண்டு கொண்டிருப்பது உயிரே. எண்ணியதை ஓ… என்று ஜீவனாக்கி அந்த உணர்வின் சத்தினை உடலாக்குவது உயிரே.
எந்த ஞானியின் உணர்வை நமக்குள் சேர்த்து விளைய வைத்தோமோ உடலை விட்டு அகன்ற பின்
1.உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு அவன் உருவாக்கிய பிள்ளையாக
2.ஒளியின் சுடராக நாம் மகரிஷியுடன் இணைந்து வாழ முடியும்… வேகாநிலை அடைய முடியும்
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.