விஷம் முக்கியத்துவம் வாய்ந்தது…!

விஷம் முக்கியத்துவம் வாய்ந்தது…!

 

அன்றாட வாழ்க்கையில் நாம் எப்படித்தான் இருந்தாலும் பிறருடைய துன்பங்களைப் பார்க்கவோ கேட்கவோ நேர்கின்றது. சுவாசத்தின் வழி அந்த உணர்வுகள் நமக்குள் வந்து விடுகிறது. அதை நீக்குவது யார்…?

1.எதிலே எடுத்துக் கொண்டாலும் “விஷம்…” எல்லாவற்றிலுமே ஊடுருவி இயக்கும்.
2.நல்ல குணங்களாக இருந்தாலும் ராமா லட்சுமணா என்று தான் ஞானிகள் காட்டியுள்ளார்கள்.
3.லட்சுமணா…! என்றால் விஷத்தின் இயக்கச் சக்தி.

மனித உடலுக்குள் விஷத்தை நீக்கி விட்டு இந்த உணர்வின் சத்தான நிலைகள் சீதா ராமனாக நல்ல குணங்கள் இங்கே படைத்திருந்தாலும் அதே குணத்தைச் சுவாசிக்கும் பொழுது காற்றிற்குள் இருக்கக்கூடிய
1.அதாவது இந்த விஷம் கலந்திருந்தால்தான்
2.நாம் சுவாசித்து அந்த உணர்ச்சிகளைத் தூண்டும் நிலையாக வருகின்றது.

வேதனை என்ற உணர்வு லட்சுமணா என்ற இயக்கமாக வருகின்றது. இதைப் போல நமக்குள் அது இருக்கின்றது.

பேரண்டம் பெரும் நிலைகள் கொண்டு உருவானாலும்
1.இந்த அசுர சக்திகளால் தான் மற்றொன்றை இயக்க முடிகிறது.
2.பூமிக்குள் இருக்கக்கூடிய விஷத்தினுடைய ஆற்றல் தான் இந்தப் பூமியையே சுழலச் செய்கின்றது.

அதே போல சூரியன் இவ்வளவு பிரகாசமாக ஆக வேண்டுமென்றால்
1.விஷத்தின் தாக்குதல் கொண்டு தான் சூரியன் வேகமாக இயங்கி
2.ஒளிப் பிளம்பாக மற்றொன்றை “ஊடுருவிச் செல்லும்…” அதாவது அந்த வேகம் துடித்து எழுகின்றது.
3.ஆகவே இந்த விஷம் முக்கியத்துவம் வாய்ந்தது…!

அதற்குத்தான் அன்று ஒரு சிறு கதையை எழுதிக் காட்டினார்கள் அசுரன் என்பவன் ஈரேழு பதினாலு லோகத்திலும் “எனக்கு யாரிடத்திலும் இறப்பு வரக்கூடாது…” என்று வரம் கேட்கின்றார்.

ஈரேழு பதினாலு லோகம் என்றால் சூரியனிலிருந்து வரக்கூடிய ஆற்றல் ஏழு… மனித உடலுக்குள் ஏற்படும் உணர்வின் நிலைகள் ஏழு.

ஈரேழு பதினாலு லோகம் சூரியனால் உற்பத்தியாகும் எந்த நிலைகளிலிருந்தும் எனக்கு எந்த இடைஞ்சலும் வரக்கூடாது. மனிதனுக்குள் வரக்கூடிய விஷத்தின் தன்மை எதுவும் என்னை அழித்துவிடக் கூடாது என்று வரத்தைக் கேட்டு வாங்கிக் கொள்கின்றான்.

விஷ்ணுவும் சரி என்று கொடுத்து விடுகின்றார்.

மிருகத்தாலும் மனிதனாலும் பரந்த வெளியிலும் பேரண்டத்தில் எது இருந்தாலும் இந்த ஈரேழு பதினாலு லோகத்தில் எங்கேயுமே எனக்கு இறப்பு வரக்கூடாது என்ற வரத்தை வாங்குகிறான்.

1.நாம் சுவாசிக்கும் சுவாசத்திற்குள்ளும் இந்த அரக்க குணம் உண்டு.
2.அந்த உணர்வின் வேகம் இல்லை என்றால் துடிப்பு இல்லை.
3.எந்த இடத்திலும் விஷத்தின் தன்மை படரவில்லை என்றால் இயக்க முடியாது.
4.அப்படிப்பட்ட ஆட்சி புரியக்கூடிய நிலைகள் தான் அது.

நரசிம்ம அவதாரம்… என்று வாசல்படியில் வைத்து அசுரனைக் கொல்வதாகக் காட்டுகின்றார்கள். சிங்க முகத்தையும் மனித உடலையும் வைத்து நரசிம்ம அவதாரம் என்று காட்டுகின்றார்கள்.

உதாரணமாக ஒருவர் கெடுதல் செய்கின்றனர்… என்னைத் திட்டுகின்றார். அதை நாம் சுவாசித்தால் என்ன செய்கிறது…?

என் உடலுக்குள் அந்த அசுர சக்திகள் சேர்ந்து… அந்த வேகத்தைக் கூட்டி… அவருடைய கெட்ட குணத்தை எனக்குள் உண்டாக்கி.. என்னை அதன் வழிக்கு இழுத்துச் செல்கிறது.

இதைத் தடுப்பதற்கு…
1.ஈஸ்வரா என்று உயிர் வழியாக மெய் உணர்வுகளைச் சேர்க்கப்படும் பொழுது அது வாசல்படி ஆகிறது.
2.முன்னாடி இருக்கும் அந்தக் கெட்ட சக்தி உள்ளே புகாதபடி தடுக்கும் ஆற்றல் வருகிறது.

இதைத்தான் நரசிம்ம அவதாரம் என்பது.

வராகன் கெட்டதை எண்ணாது நல்லதை எப்படி எடுத்துக் கொண்டதோ அதைப் போல் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கொண்டு கெட்டதை நீக்கிவிட்டு நல்லதை உருவாக்க வேண்டும்.

கெட்டது தனக்குள் வராதபடி எவர் ஒருவர் இப்படித் தடுக்கின்றார்களோ அது நரசிம்ம அவதாரம். கேட்டது அழிக்கப்பட வேண்டும் என்று வாசல்படியில் வைத்து அழித்து விடுகின்றார்கள்.

பிறர் யார் எப்படித் திட்டினாலும் கேவலமாகப் பேசினாலும் அந்த உணர்வு அப்படியே இயக்கினால் “இனி என்ன வாழ்க்கை…!” என்று நம்மை அது அழித்து விடுகிறது. அந்த அசுரனிடம் சிக்கிவிடுகின்றோம்.

அதே சமயத்தில் திட்டுகிறார் என்று கோபம் நமக்கு வந்தால் “இரு நான் உன்னைப் பார்க்கிறேன்…!” என்று அவரை அங்கே அழிக்கச் செல்வோம். ஆனால் அழிக்க வேண்டும் என்ற உணர்வை எடுத்தால் நல்ல குணங்களை அழித்து உடலில் நோயாக மாற்றுகின்றது.

ஆகவே…
1.அந்த அசுர சக்தி இப்படித் தான் எல்லா வகைகளிலும் ஊடுருவும் என்று
2.அவன் எங்கேயும் எனக்கு சாவு வரக்கூடாது என்ற வரத்தை வாங்கி அந்த அசுர சக்தி மற்றதைக் கொல்வதாகச் சாஸ்திரம் காட்டுகின்றது.

ஆனால்
1.நம் கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து
2.அந்தத் துருவ நட்சத்திரத்தினை எண்ணி அந்தச் சுவாசத்தை எடுக்கப்படும் பொழுது அசுர சக்திகள் செயலிழக்கப்படுகின்றது.

நமக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களைக் காப்பதற்குத் தான் நரசிம்ம அவதாரத்தை அன்று காட்டினார்கள் ஞானிகள்.

பிரம்மா – உருப்பெறச் செய்யும் சக்தி

பிரம்மா – உருப்பெறச் செய்யும் சக்தி

 

சூரியனிலிருந்து தோன்றிய அதீத வெப்பத்தை உண்டாக்கும் ஒரு அணுவும் நட்சத்திரத்திலிருந்து வரக்கூடிய கதிரியக்கமும் இரண்டும் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது
1.இயற்கையின் நிலைகள் ஒன்றாக இணைந்து உயிரின் துடிப்பாகும் பொழுது ஈஸ்வரா.
2.அந்த இயக்கத்திற்குள் இருக்கக்கூடிய வெப்பம் விஷ்ணு.
3.நாராயணன் விண்ணிலே சர்வேஸ்வரனாக உருப்பெறும் பொழுது ஒற்றைப்படையில் இங்கே ஈஸ்வரா என்று உருவாகின்றார்.

அதாவது நாராயணன் மறு அவதாரமாக விஷ்ணுவாகத் தோன்றுகின்றது.

பிரபஞ்சத்திற்குள் தோன்றிய இந்த உயிரணு தான் பூமிக்குள் வந்தபின் தாவர இனச் சத்தை இது சுவாசிக்கின்றது.

உயிரான ஒளி இதுவும் சக்தி தான்… ஆனால் உற்பத்தி செய்யக்கூடிய சக்தி…! தாவர இனச் சத்தை இழுத்த உடனே அது உறைந்து சிவமாகிறது… “சிவசக்தி” ஆகிறது.

இந்த உயிர் தாவர இனச்சத்தைச் சேர்த்து புழுவாகும் பொழுது அந்தப் புழுவிற்குள் அந்த உணர்வின் சக்தியாக வினையாகச் சேருகிறது. வினையாகச் சேர்த்த நிலையில் தான் எடுத்துக் கொண்ட வினைக்கு நாயகனாகப் புழுவாகத் தோன்றுகின்றது… “விநாயகா…”

தாவர இனத்தைத் தனக்குள் சேர்க்கும் பொழுது சக்தி சிவம் ஆகின்றது… சிவத்திற்குள் சக்தி இயங்குகின்றது.

உதாரணமாக வேப்ப மரத்தின் சத்து இதற்குள் இணைந்து புழுவாகும் பொழுது சேர்த்துக் கொண்ட வினைக்கு நாயகனாக இந்த உடல் பெறுகிறது.

வினைக்கு நாயகனாக உடல் பெற்றாலும் வேப்ப மரத்தின் தன்மை கசப்பு. இந்த உயிரின் தன்மை தான் ஈர்த்து எடுத்துக் கொண்ட இந்தச் சக்தியோ லட்சுமி.

காந்தம்… “லட்சுமி நாராயணா” என்று அங்கே சூரியனை வளர்த்தது. உயிருக்குள் இருக்கக்கூடிய இந்த இயக்கம் ஈஸ்வரன். இயக்கத்துக்குள் ஏற்படும் வெப்பம் விஷ்ணு. ஈர்ப்பு சக்தி லட்சுமி.

ஒரு பொருளின் தன்மை இதனுடன் இணைந்து உருப்பெறப்படும் பொழுது “பராசக்தி…” எந்த மணத்தை அதனுடன் இணைக்கின்றதோ அந்த மணத்தை வெளிப்படுத்தும் போது ஞானம் “சரஸ்வதி…”

இணையக்கூடிய சந்தர்ப்பம் “பிரம்மா…” ஆனால் அந்த மணம் பிரணவம் ஜீவன்…! அந்தக் குணத்திற்குத் தக்கவாறு இயக்கம். இந்த உணர்வின் தன்மை ஊட்டுவதற்கு அந்த உயிர் தனக்குள் சேர்த்து உருப் பெறும் சக்தியாக மாறுகின்றது.

உயிரில் இருக்கக்கூடிய காந்தம் தாவர இனச் சத்தை இழுக்கின்றது. லட்சுமி. இந்த வெப்பத்திற்குள் ஆனபின் உடலாக உருப் பெறச் செய்கின்றது பராசக்தி.

ஆனால் வேப்ப மரத்தின் கசப்பான சத்து வரப்படும் பொழுது மணம் ஞானம். இது பிரணவம். அந்த மணத்தின் நிலை கொண்டு இது ஜீவன் பெறுகின்றது.

1.தனக்குள் எடுத்துக் கொண்ட இந்த உணர்வின் நிலைகள் பிரணவம் என்கிற பொழுது ஓ…
2.அந்த வாசனையை எடுத்து ம்… என்று தனக்குள் சேர்க்கப்படும் பொழுது “சிவம்… ஓம் நமச்சிவாய…!”

அந்த உயிர் தனக்குள் அதனுடைய சக்தியாச் சேர்க்கின்றது. ஆனாலும் இதில் இருக்கக்கூடிய இந்த காந்தம் வேப்ப மரத்தின் சத்தை இழுத்து தனக்குள் இணைந்து வளர செய்யக்கூடிய சக்திக்குப் பெயர் “சீதா ராமா…”

சீதா என்பது சுவை. லட்சுமிதான் தனக்குள் எடுத்துக் கொண்ட அந்த சுவையின் சத்தைத் தனக்குள் சேர்த்த வினையாக அந்த உடலுக்குள் விளைந்து உயிருடன் சேர்க்கப்படும் பொழுது சீதா ராமன் ஆகின்றது.

நாராயணன் மறு அவதாரம் விஷ்ணுவாகத் தோன்றி நான் ராமனாகப் பிறக்கப் போகின்றேன் என்ற நிலை வரப்படும் பொழுது இந்த ராமன் யார்…? சீதா ராமா.

தான் கவர்ந்து கொண்ட இந்தச் சக்தி… தன் உடலாகி உடலுக்குள் விளைந்து அந்த உணர்வின் சத்து உயிருடன் சேர்க்கப்படும் பொழுது சீதா ராமா. அந்தச் சுவையால் எடுத்துக் கொண்டு விளைந்த அந்த வித்து.

அத்வைதம் துவைதம் காயத்ரி என்று சொல்வார்கள். காயத்ரி என்றால் என்ன…?

இந்த பூமியான பரத்திற்குள் சகல சக்திகளும் இருக்கின்றது. ஒரு வேப்ப மரத்திலிருந்து வரக்கூடிய கசப்பான மணத்தைச் சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்ப காந்த அலைகள் தனக்குள் கவர்ந்து கொள்கின்றது.

கவர்ந்து கொண்ட இந்த சக்தியை இதே வேப்ப மரத்திலிருந்து எடுத்துக் கொண்ட அந்தப் புழு இதைச் சுவாசித்து இந்த உணர்வின் தன்மை மோதி.. தான் அறியும் சக்தியாகப் பெறுகின்றது. புழுவிற்கு அது ஞானம்.

1.வேப்ப மரத்தின் கசப்பு சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டுப் பூமியின் பரத்திலே பரவச் செய்கிறது… இது “பரமாத்மா…”
2.அதை இந்தப் புழு இழுத்துத் தன் உடலுக்கு அருகில் வரும் பொழுது அதனின் “ஆத்மா…”
3.பரமாத்மாவிலிருந்து சுவாசித்து அதனின் ஆன்மாவாக்கி உடலுக்குள் சென்ற உடனே “ஜீவாத்மா…”
4.உடலுடன் சேர்த்து விளைந்தது உயிருடன் இணையும் போது “உயிரான்மா…!”
5.பிரம்மாவிற்கு நான்கு தலையைப் போட்டிருப்பார்கள்… நான்காக உருப்பெறச் செய்வது.
6.எடுத்துக் கொண்ட சக்தி அது முழுமையாகின்றது – காயத்ரி.

ஞான வித்தை உங்களுக்குள் ஊன்றுகின்றேன்… அதை நீங்கள் வளர்க்க வேண்டும்

ஞான வித்தை உங்களுக்குள் ஊன்றுகின்றேன்… அதை நீங்கள் வளர்க்க வேண்டும்

 

சாப்பாடு போடுகிறார்கள்… நன்றாகத் தான் இருக்கிறது என்று மட்டும் சொல்லி விட்டால் போதுமா…?
1.அந்தச் சுவையான உணவை உட்கொண்டால் தானே நல்லது.
2.ஆகவே போடக்கூடிய உணவை நல்ல முறையில் சாப்பிட வேண்டும்.
3.அப்பொழுது அந்த ருசியின் தன்மை தெரியும்.

இன்னொருவர் சாப்பிட்டுவிட்டு “நன்றாகத் தான் இருக்கின்றது…!” என்று சொல்கிறார். எப்படி இருந்தது…? நன்றாக இருந்தது…!

நன்றாக இருந்தது என்றே சொல்லிக் கொண்டிருந்தால் எப்படி நன்றாக இருக்கிறது…? என்று சொல்லத் தெரியாமல் இருக்கின்றோம்.

ஏனென்றால் யாம் அடிக்கடி உபதேசித்த உணர்வுகளில் உள்ள உட்பொருளை உணர்ந்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக உடலிலே ஒரு புண் வந்துவிட்டது என்று வைத்துக் கொள்வோம். வேதனையாக இருந்தாலும் மருந்தைப் போடுகின்றோம். முதலில் மருந்தைப் போட்டாலும் சிறிது வேதனையாகத் தான் இருக்கும்.

புண் ஆற வேண்டும் என்று ஆசையுடன் அந்த மருந்தைப் போடுகின்றோம்.
1.ஆனால் மருந்தைப் போட்ட பின் கடுகடுப்பாகிவிட்டால் என்ன இப்படி வேதனை வருகின்றது…? என்று
2.மருந்தைத் தூக்கி எறிந்து விட்டால் புண் ஆறுமோ…?

அது போல் தான் இந்த மனிதனின் வாழ்க்கையில் எத்தனையோ விதமான வேதனைகள் தோற்றுவிக்கின்றது. அது எத்தனை தோன்றினாலும் அதை மாற்றி அமைத்த அருள் ஞானிகள் உணர்வுகளை அடிக்கடி எடுத்து நுகர்தல் வேண்டும். அப்பொழுது அந்த வேதனையைப் போக்கும் சக்தி கிடைக்கின்றது.

நான் “என்ன தான் இப்பொழுது உங்களுக்குச் சக்தியை கொடுத்தாலும்…”
1.அதை நீங்கள் “எடுத்துக் கொள்ளக்கூடிய முறைகளில் தான் இருக்கிறதே தவிர…”
2.நான் கொடுத்தவுடனே நீங்கள் அதைப் பெறுவது என்பது அல்ல.
3.ஆனால் எவ்வளவு பெரிய சக்தியை உங்களுக்குக் கொடுக்கின்றேன் என்பது உங்களுக்குத் தெரியாது. அவ்வளவு பெரிய சக்தியைக் கொடுக்கின்றேன்.

ஆனால் அந்தச் சக்தியைப் பற்றி… அதன் வலிமையைப் பற்றி நான் சொல்ல ஆரம்பித்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்…? ஜீபூம்பா வேலை எல்லாம் செய்ய ஆரம்பித்து விடுவீர்கள்.

ஏனென்றால் ஆரம்பத்தில் நான் கொடுத்த நிலைகள் இப்படித்தான் ஆகிவிட்டது.
1.எனக்கே சக்தி இருக்கின்றது… சாமியினுடைய தயவு என்ன வேண்டி இருக்கின்றது…? என்று
2.பெரும்பகுதியானவர்கள் பிய்த்துக் கொண்டு சென்று விட்டார்கள்.

எல்லோருக்கும் இதைத் தெரிய வைக்க வேண்டும் என்பதற்காக இந்த அற்புதங்களை எல்லாம் அவர்களைச் செய்யும்படி செயல்படுத்தினேன்… அது உலகுக்கு எவ்வளவோ நன்மை பயக்கும்…! என்று நினைத்தேன்.

கடைசியில் எல்லோரும் ஆசையை வளர்க்கும் நிலையாகவே சென்று விட்டது. ஆக மொத்தம்…
1.ஒருவருக்குப் புரியக்கூடிய சக்தியைக் கொடுத்தாலும்
2.அதை அடுத்தவர்கள் புரிந்துவிடக் கூடாது என்று மடக்கிக் கொண்டு வந்து விட்டார்கள்.

ஆரம்பத்தில் பவானியில் இப்படித்தான் ஒரு அம்மாவிற்குக் காட்சிகளை எல்லாம் காண்பித்தேன். பெற வேண்டும் என்ற ஆசை அந்த அம்மாவிடம் இருந்தது.

அந்த அம்மா மூலமாகவே மற்றொருவருக்கு நோய்களைப் போக்கும்படிச் செயல்படுத்தியது. அங்கு ஆசையை ஏற்படுத்தியது. ஆசை ஏற்பட்ட பின் அதன் வழி தியானத்திற்கு வருகின்றது.

தோஷங்களை எப்படி நீக்குவது…? என்று தான் ஆரம்பத்தில் சொல்லிக் கொடுத்தது. அடுத்து என்னைக் கேட்காமலே பல வேலைகளைச் செய்யத் தொடங்குகிறது.
ஆனால் கடைசியில் தன்னிச்சையாக அதைச் செயல்படுத்திய பின் அணிந்திருக்கும் சேலை எல்லாம் ஓட்டை ஓட்டையாக விழுந்து விட்டது… உடலில் காயமாகவில்லை.

அதற்குப் பின் அந்த அம்மாவிடம் சொன்னேன். ஆரம்பத்தில் உனக்கு எல்லாம் தெரிய வைத்தேன். அதை வைத்துத் தோஷங்களை நீக்க வேண்டும் என்று எண்ணுகின்றாய்.
1.ஆனால் அது எப்படி உன் வழியில் திரும்ப வருகின்றது பார்…
2.அதிலிருந்தெல்லாம் காக்கக்கூடிய குருவினுடைய சக்தி உனக்கு வேண்டும் அல்லவா என்று தெளிவாக்கினேன்.

உதாரணமாக… ஒருவருடைய நோயைப் பற்றிக் கேட்டு விசாரிக்கின்றோம். நமக்குள் பதிவாகி விட்டால் நம்மையும் அந்த நோயின் உணர்வு இயக்குகின்றது.

அதே போன்று
1.யாம் உபதேசிக்கும் அருள் உணர்வுகளைக் கூர்மையாக நீங்கள் கேட்டுப் பதிவாக்கிய பின் அதைப் பெறும் தகுதி உங்களுக்கு தகுதி வருகிறது.
2.அந்த தகுதி உங்களுக்கு வரவேண்டும் என்பதற்குத் தான் உபதேசிப்பது.

எல்லோருக்கும் அந்த மகிழ்ச்சி கிடைக்க வேண்டும் என்று எண்ணும் பொழுது அது எனக்குள் மகிழ்ச்சி வளர்கின்றது. அதே போன்று நீங்களும் செய்தீர்கள் என்றால் அந்த மகிழ்ச்சி உங்களுக்கும் தோன்றும்.

கடும் தவமிருந்த அந்த மகா ஞானிகளுடைய ஆற்றல்மிக்க சக்திகளைப் பெற வேண்டும்… பேரின்பத்தைப் பெற வேண்டும்…! என்பதற்குத்தான் இதைச் செய்கின்றேன். அதை நீங்கள் எளிதில் பெற முடியும்.

1.ஒன்று பதிவு
2.மீண்டும் நினைவு…!
3.அந்த நினைவு கொண்டு நீங்கள் அதை வளர்க்க முடியும்.
4.ஞான வித்தை உங்களுக்குள் ஊன்றுகின்றேன்… அதை நீங்கள் வளர்க்க வேண்டும்.

ஆக வாழ்க்கையில் எது வந்தாலும் அதை நான் சீர்படுத்துவேன் என்று வலுப் பெறுங்கள்… அதைச் செம்மைப்படுத்த முடியும். ஆசை ஒரு பக்கம் எண்ணம் ஒரு பக்கமாக சென்று கொண்டிருந்தால் முழுமை பெறுவது கஷ்டம்.

ஆகவே கொடுத்த ஞான வித்தை வளர்க்கும் நிலைக்கு… அந்த வளர்ச்சிக்கு நீங்கள் கொண்டு வர வேண்டும். இருளைப் போக்கும் அருள் சக்தியைப் பெருக்க வேண்டும்.
1.அந்த அருள் வழியிலேயே வாழ வேண்டும் என்று
2.நாம் என்றைக்குச் செயல்படுத்துகின்றோமோ… அதை நிச்சயம் பெற முடியும்.

வியாழன் கோளுக்குண்டான சிறப்பு

வியாழன் கோளுக்குண்டான சிறப்பு

 

27 நட்சத்திரங்கள் பிற மண்டலங்களிலிருந்து கவரக்கூடிய சக்திகள் ஒன்றுடன் ஒன்று மோதி மின்னலாகி ஒளிக் கற்றைகளாக வரும் பொழுது வியாழன் கோள் அதைக் கவர்கின்றது.

சூரியன் எப்படி 27 நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துக் கொண்டதோ அதே போல…
1.வியாழன் கோளும் தனக்குள் அந்த உணர்வின் தன்மையை எடுத்து எடுத்து எடுத்து வளர்ச்சி அதிகமாகி
2.தன் சுழற்சியின் ஈர்ப்பு வட்டத்தில் உபகோள்களை வளர்த்துக் கொள்கின்றது. வியாழன் கோளுக்கு 27 உபகோள்கள் உண்டு.
3.அதை வைத்து 27 நட்சத்திரங்களின் சக்திகளை ஒன்றாகச் சமைத்து ஆவியாக மாற்றி உறைபனியாக தனக்குள் மாற்றுகின்றது.

அது கவர்ந்து கொண்ட உணர்வுகள் வெளிவரப்படும் பொழுது…
1.வியாழனின் சுழற்சி வேகம் அதிகமாக இருப்பதால் எல்லாவற்றையும் தனக்குள் இணைத்து
2.புது விதமான அணுக்களாக… “இணைத்துக் கொள்ளும் பாலமாக…” அமைகின்றது.

நமது உயிர் உடலுக்குள் இயங்கிக் கொண்டிருந்தாலும் எந்த உணர்வின் தன்மை நுகர்கின்றோமோ… (உதாரணமாக) வேதனை என்று வந்தால் அந்த உணர்வுகள் உயிருடன் சேர்க்கப்படும் பொழுது… அது வலுவானால் அதன் வழி இங்கே வேதனையின் இயக்கமாக மாற்றுகின்றது.

ஆகவே… இந்த உடலான கோளுக்கு… “உயிர்” குருவாக இருக்கின்றது.

ஆனால் அதே சமயத்தில் பிரபஞ்சத்திற்குச் சூரியன் இயக்கச் சக்தியாக ஆனாலும் வியாழன் கோள் இந்தப் பிரபஞ்சத்திற்கு குருவாக இருக்கின்றது. அதனால் தான் வியாழனை “குரு…” என்று அழைப்பார்கள்.

வரும் சக்திகளைத் தனக்குள் இணைக்கப்பட்டு மோதப்படும் பொழுது இரண்டும் இணைந்து புது விதமான அணுக்களாக மாறுகின்றது. இதற்குள் ஊடுருவும் மின்னலின் கதிர்கள் ஆண் பெண் என்ற நிலையில் உருவாக்கப்படும் பொழுது அத்தகைய அணுக்கள் வளர்ச்சி அடைகின்றது.

வளர்ச்சியடைந்து செல்வதைத் தான் சூரியன் கவரும் தன்மை வருகின்றது. கவரும் பாதையில் மற்ற கோள்கள் கவர்ந்து தனக்குள் அதை எடுத்துக் கொள்கிறது.

27 நட்சத்திரத்தின் சக்தியை வியாழன் தனக்குள் எடுத்துத் தனது சுழற்சி வேகத்தில் வெப்பத்தின் தணல் கூடி ஆவியாக மாற்றி மேல் பகுதியில் பாறையாக உறையும் தன்மை வருகின்றது.

மின்சாரத்தை உபயோகித்து ஐஸ் பெட்டியாகவும் (FRIDGE) உருவாக்குகின்றோம் அதே மின்சாரத்தை உபயோகித்து சூடாகவும் (HEATER) உருவாக்கிக் கொள்கின்றோம் அல்லவா…!

இதைப் போன்று தான் வியாழன் கோள்…
1.பல விதமான உணர்வின் தன்மை கொண்டு அமைதிப்படுத்தி
2.போர்முறை இல்லாதபடி அந்த உணர்வின் தன்மை வேக வைத்து
3.அமைதித் தன்மையாக எதிர்ப்பு இல்லாத நிலையாக உருவாக்குகின்றது.

27 நட்சத்திரத்தின் சக்தியைத் தனக்குள் சேர்த்துக் கொள்கின்றது இது ஜாதகங்களில் எல்லாம் வரும் ஆனால் இந்த உண்மை எதிலிருந்து வருகிறது…? என்று தெரியாது.

கோள்களைப் பிரித்து எழுதிக் கொள்ள முடியும். சூரியனுக்கு நேராக வரும் பொழுது ஒரு கோளின் தன்மை இணைந்து சுழல் வட்டத்தில் வரும் பொழுது அதைத் தான் தனித்தனியாகப் பிரித்துக் காட்ட முடியும்.

இயற்கையின் உண்மையின் உணர்வுகளைச் சொல்ல முடியாது…!

இவர்களுக்குகந்த நிலையில் மனிதனுக்கு ஜாதகக் குறிப்புகளை… “மதத்திற்குத் தக்கவாறு குறித்து…” இந்த நேரத்தில் இதைச் செய்தால் ஆண்டவனுக்கு ஆகாது என்று சொல்லி… ஆண்டவன் தான் இதை மாற்றி அமைக்கும் சக்தி பெற்றவன் என்பார்கள்.

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு இடத்திலும் அவரவர்களுக்குத் தக்கவாறு ஜாதகத்தை எடுத்துச் சொல்லப்படும் போது
1.எது ஆழமாகப் பதிவாகிறதோ அந்தப் பதிவு தான் மனிதனை இயக்குகிறது.
2.ஆக… கோள்களின் இயக்கத்தில் மனிதன் இல்லை.

கோள்கள் இயக்கத்தால் காற்றலைகள் வரப்படும் பொழுது அது தாவர இனங்களுக்கு அந்தச் சக்திகள் தேவை.

சூனிய மண்டலம் – சூனியக் காலம்

சூனிய மண்டலம் – சூனியக் காலம்

 

அண்ட சராசரங்களைக் கடவுள் எப்படி உருவாக்கினார்…? கடவுள் யார்…? என்ற இந்த உண்மைகளை எல்லாம் பல முறை சொல்லி உள்ளேன். எதன் வழி உலகம் உருவாகின்றது…? என்று வேத நூல்களில் இது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

அதனை அறிந்து கொள்ளும் பொழுது
1.நாம் யார்…? எப்படி மனிதனானோம்…?
2.மனிதரான பின் உயிரின் உணர்வுகள் எப்படி ஒளியாகின்றது…? என்ற உண்மையையும் நாம் தெரிந்து கொள்ளலாம்.

ஒளியாகும் தன்மை பெற்றது தான் ஆறாவது அறிவு கார்த்திகேயா. நம் ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்தினோம் என்றால்… நாம் அறிந்து கொள்ளும் உணர்வுகளில் அடுத்து இந்த உடலுக்குப் பின் உயிரைப் போன்றே உணர்வின் அணுக்கள் ஒன்றாகின்றது.

இவை அனைத்தும்… அகஸ்தியனால் கூறப்பட்டு அவனுக்குப் பின் வந்த வரிசைத் தொடரில் ஞானிகளால் வெளியிடப்பட்ட பல உண்மைகள் இந்த உலகெங்கிலும் பரவி உள்ளது.

அகண்ட அண்டம் என்பது சூனியம் நிலைகள் கொண்டது. இது சூனியக்காலம் என்று சொல்வார்கள். குண்டலினி யோகா ராஜ யோகம் செய்பவர்கள்
1.சூனியக் காலத்திற்குப் போகிறோம் என்பார்கள்.
2.சூனியக்காலம் என்பது இருண்ட உலகம்.
3.இருண்ட உலகில் தான் சிவன் இருக்கின்றார் என்று அவர்கள் உணர்வைச் செலுத்துகின்றார்கள்.

சூனியக் காலம் என்றால் என்ன…? என்பதைப் பற்றி அகஸ்தியன் தெளிவாகக் கூறியுள்ளார்.

இப்பொழுது நாம் காணும் அனைத்து நிலைகளும் “சூனியத்திலிருந்து உருவானது…” அது இருண்ட நிலைகள் பெற்றது.
1.நாளடைவில் அது ஆவித்தன்மை அடைந்து அந்த ஆவித் தன்மை அடைவதற்கே முதலில் வெப்பம் என்ற நிலை வருகின்றது.
2.வெப்பம் என்ற நிலை வரும் பொழுது அசையும் நிலை அதாவது இயக்கும் தன்மை வருகின்றது.
3.வெப்பத்தன்மை வருவதற்கே சூனியம் தான் காரணம்… சூனியம் உருவாவதற்கு விஷம் தான் காரணம்.

அகண்ட அண்டம் இருண்ட உலகமாக இருந்ததால் அதைச் சூனிய உலகம் என்று சொல்வார்கள். வேதங்களில் இதைத்தான் சூனிய உலகம் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

நாளுக்கு நாள்… நாளுக்கு நாள்… அது விஷமாக மாறி
1.விஷம் அடர்த்தி அடையப் படும்பொழுது விஷமற்றதைத் தாக்கி மோதலாகி வெப்பம் உருவாகின்றது.
2.வெப்பம் என்ற நிலை வரும் போது… வெப்பமான பின் விரிந்து ஓடும் சக்தி பெறுகின்றது.
3.விரிந்து ஓடும் சக்தி வரும் பொழுது அதிலே ஈர்க்கும் காந்தமே வருகின்றது.

இதை உங்களிடம் பதிவு செய்கிறேன். பதிவு செய்ததை அடுத்து எண்ணி நீங்கள் தியானிக்கும் பொழுது
1.அந்த நேரத்தில் உங்கள் உணர்வுகள் எல்லாம் வான்வீதியில் அகண்ட காலத்திற்கு சூனியக் காலத்திற்குச் சென்று
2.சூனியம் எப்படி உருவானது…? என்பதை நீங்கள் அறிதல் வேண்டும்.

சூனியத்திலிருந்து எப்படி வெப்பமானது…? வெப்பத்திலிருந்து அணுக்கள் எப்படி சுக்கு நூறாகச் சிதறி ஓடுவதும் அதிலே ஈர்க்கும் காந்தம் எப்படி உருவானது என்ற நிலையை நீங்கள் அறியலாம்.

குருநாதர் எமக்குக் கொடுத்த உண்மையின் உணர்வினை உங்களுக்குள் பதிவாக்கி அந்த நினைவினை நீங்கள் கூட்டிச் செல்லும் பொழுது இந்த முயற்சி உங்களுக்கு வெற்றியைத் தரும்.

ஏனென்றால்
1.ஆதி… அந்த ஆரம்ப நிலையை நீங்கள் அறிந்து கொள்கிறீர்கள்.
2.உலக இயக்கத்தின் உண்மைகளை நீங்கள் அறியும் சந்தர்ப்பம் வருகின்றது.
3.அதே சமயத்தில் அந்தச் சூனியம் எப்படி ஒளிமயமாகின்றது…? என்பதையெல்லாம் நீங்கள் அறிய வேண்டும்.

இயற்கையின் உண்மை நிலைகளை நீங்கள் அறிய வேண்டும் என்பதற்கே இதைப் பதிவு செய்கின்றேன்.

காரணம் வாழ்க்கையின் நிலைகளை மட்டும் தான் அடிக்கடி பேசுகின்றோம்.

சூனியத்தைப் பற்றிப் பேசினாலும் அவ்வளவாக எடுத்துக் கொள்வதில்லை…! என்னமோ சாமி சொல்கின்றார்…! என்று சிலர் எண்ணத்தால் இதை மறுக்கின்றார்கள். மனத்தால் மறுத்து… சீக்கிரம் எதாவது சொன்னால் நாம் தெரிந்து கொள்ளலாம் அந்தச் சக்தியைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம் அந்தச் சக்தியைப் பெறலாம் என்று தான் மனதை ஓட்டுகின்றார்கள்.

ஆகவே… சூனியத்திலிருந்து தோன்றப்பட்டது தான் “இயற்கையின் சக்திகள் அனைத்துமே…” என்பதை நாம் முதலில் உணர வேண்டும்.

கருவுற்ற காலத்தில்… சந்தர்ப்பத்தில் நுகர்ந்த உணர்வால் நடக்கும் சில விசித்திர நிகழ்வுகள்

கருவுற்ற காலத்தில்… சந்தர்ப்பத்தில் நுகர்ந்த உணர்வால் நடக்கும் சில விசித்திர நிகழ்வுகள்

 

உயிரினங்களில் மாற்றங்கள் எவ்வாறு ஆகின்றது…? என்ற நிலையும் கர்ப்பமாக இருக்கும் உயிரினங்களில் மற்ற உயிரினம் துரத்தி வரப்படும் பொழுது அந்த உணர்வினை நுகரும் பொழுது
1.கருவுக்குள் இருக்கும் அந்தச் சிசுவுக்குள் இந்த உயிரினத்தின் உணர்வுகள் ஒட்டிய பின்
2.கருவிலேயே எப்படி எல்லாம் மாற்றமாகிறது…? என்பதையும் குருநாதர் காட்டுகின்றார்.

குரங்கை எடுத்துக் கொண்டால் அதில் எத்தனையோ மாற்றங்கள் உண்டு, மற்ற மிருக இனங்கள் இதைத் துரத்தி வரும் நிலையில் உற்றுப் பார்க்கும் பொழுது கர்ப்ப நிலைகளில் அந்த உணர்வுகள் படப்பட்டுப் பரிணாம வளர்ச்சியிலும் அதனுடைய வளர்ச்சி தொடர்கள் எவ்வாறு வருகிறது…? என்று உருமாற்றங்கள் எப்படி ஆகிறது…? என்று காட்டுகின்றார் குருநாதர்.

மனிதர்களாக நாம் வாழுகின்றோம். கர்ப்பமாக இருக்கும் தாய் ஒரு ஊனமுற்ற குழந்தையை உற்றுக் கூர்மையாகப் பார்த்து அதனுடைய க்ஷேமத்தை விசாரித்து…
1.பரிவு கொண்டு அந்த குழந்தையைப் பற்றி அறியும் நிலையில் ஊனமுற்ற உணர்வினை நுகர்ந்து விட்டால்
2.தன் கருவில் இருக்கும் குழந்தையும் ஊனமான குழந்தையாக மாறும்.

இதைப் போலக் கருவிலே வளரும் உயிரினம் தன் தாய் கவரும் உணர்வுகள் கொண்டு எவ்வாறு விளைகிறது…? என்று கீதையிலே தெளிவாகக் காட்டியுள்ளார்கள்.

அதாவது கண்ணன் கருவிலிருக்கும் குழந்தைக்கு உபதேசித்தான்…!

கண்கள் மற்ற உணர்வினை நுகர்ந்து அந்தத் தாய்க்கு இந்த உணர்வைக் கொண்டு இயக்கினாலும் கருவில் வளரக்கூடிய சிசுவிற்கும் இந்த உணர்வுகள் பதிவாகி அந்த உணர்வு பதிவான பின்
1.கண்ணால் பதிந்த நிலைகள்… அந்த உணர்வின் இயக்கமாகத் தொடரப்படும் பொழுது
2.அந்த அறிவின் தன்மை அங்கே வருகிறது என்பதைத் தெரியப்படுத்துவதற்கு
3.வியாசகர் கண்ணின் இயக்க நிலைகளை அப்படித் தெளிவாகக் காட்டியுள்ளார்.

பல கோடிச் சரீரங்களில் உயிர் பரிணாம வளர்ச்சியில் வளர்ந்து வந்த நிலைகளையும்… அதிலே வளர்ச்சி பெற்று வந்த மனித நிலைகளையும்… ஊனமுற்ற குழந்தைகள் அது எவ்வாறு உருவாகிறது…? என்ற நிலையையும் குருநாதர் காட்டுகின்றார்.

உதாரணமாக காட்டில் ஒரு புலி கர்ப்பமாக இருக்கின்றது. ஆனால் அடிபட்டு நோய்வாய்ப்பட்டு இருக்கின்றது. அதே சமயத்தில் தன் இரைக்காக ஒரு மானை அந்தப் புலி உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கின்றது.

ஏனென்றால் அடிபட்டு நகர முடியாத நிலையில் இருக்கிறது. ஆனால் கர்ப்பமாக இருக்கின்றது. தன் இரைக்காக எண்ணிப் பார்க்கின்றது.

அந்த மானையே எண்ணி எண்ணிக் கண்களால் பார்க்கப்படும் பொழுது அந்த உணர்வுகள் அந்தப் புலியின் கருவிலே விளையத் தொடங்குகிறது.

அந்தப் புலிக்கும் மானுக்கும் உண்டான வித்தியாசங்கள் இருந்தாலும்…. அந்தப் புலி ஏக்கத்தால் மானையே எண்ணி ஏங்குகின்றது.
1.இந்த உணர்வின் சத்து கருவில் இருக்கக்கூடிய உயிரணுக்களில் இது இணைக்கப்பட்டு
2.அதற்குள் எவ்வாறு விளைகிறது…? என்பதை குருநாதர் காட்டுகின்றார்.

இதை உங்களிடம் லேசாகச் சொல்கிறேன். ஆனால் என்னைக் குருநாதர் பட்டினியாக இருந்து அதைக் காணும்படி செய்தார். எந்தப் பக்கமும் நகர விடவில்லை.

உயிரினங்களில் தான் நுகர்ந்தறிந்த உணர்வுகள்… கண்ணால் பார்த்து உணர்வை நுகர்ந்த உயிர் தனக்குள் உணர்வாக அமையப் பெற்று அந்த உணர்வின் அறிவாக இயக்கப்பட்டு உடலுக்குள் உணர்வுகள் பதிந்த பின் “கருவில் வளரும் சிசுக்களுக்கு எவ்வாறு அது ஒட்டுண்ணி போன்று உணர்வுகள் இயக்கப்படுகிறது…?” என்ற நிலைகளைத் தெளிவாகக் காட்டுகின்றார்.

இரைக்காகத் தேடினாலும் புலியின் உணர்வுக்குள் மானையே எண்ணி ஏங்குகிறது. ஏனென்றால் உடலில் அடிபட்டிருப்பதால் தன் இரையைப் பிடிக்க முடியவில்லை.

கண் கொண்டு மானையே பார்த்து ஏக்கத்தின் உணர்வுகள் கருவில் இருக்கக்கூடிய புலிக் குட்டிக்குள் இது படப்பட்டு இந்த உணர்வுகள் அதனுடைய ரூபம் எப்படி மாறுகின்றது…? என்பதை குருநாதர் காட்டுகின்றார்.

அந்தப் புலி குட்டி போடும் வரையிலும் இந்த இடத்தை விட்டு நகர விடவில்லை. அதனின் உணர்வும் வளர்ச்சியும் அறிவதற்காக அங்கேயே அமர்ந்து தியானிக்கும்படி செய்தார்.

ஜோசியம் பார்ப்பவர்கள் மற்றொருவர் உணர்வினை நுகர்ந்து “அவர்கள் என்னென்ன நினைத்தார்கள்…?” என்று சொல்கின்றார்கள் அல்லவா…!

இதைப் போலத் தான் அந்த உணர்வின் இயக்கமும் அதனின் அலைகள் எவ்வாறு தொடர்ந்திருக்கின்றது…? என்ற நிலையைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளும்படி இந்த உணர்வின் அறிவை எனக்கு ஊட்டினார்.

அந்தக் கருவிலிருக்கக்கூடிய குட்டிக்கு மானின் உணர்வுகள் அதிகமாகப் பட்டபின்… மானின் உடலில் இருந்து வெளிப்படும் உணர்வலைகள் இந்த புலி உடலுக்குள் எப்படி அடைகின்றது…?

அதைப் புலி சுவாசித்த பின் இரத்தத்தில் கலந்து வரும் பொழுது
1.கருவிலே விளையக்கூடிய சிசு புலியின் ரூபம் மாறி மானின் நிலைகள் எவ்வாறு இணைகின்றது…?
2.இரண்டும் கெட்டானாக அது விளைகின்றது… இதை நேரடியாகவே தெரியப்படுத்துகின்றார் குருநாதர்.

நீங்கள் பத்திரிகையில் பார்த்திருக்கலாம். உலகத்தில் சில இடங்களில் ஆட்டுத் தலையுடன் குழந்தை பிறந்தது. ஆனால் மனித உடல் இருந்தது… மனிதனின் தலையும் மிருக உடலும் இருந்தது என்றால்லாம் பார்த்திருப்பீர்கள்.

காரணம்… ஏக்க உணர்வு கொண்டு பிறிதொன்றை உற்றுப் பார்த்து நுகரப்படும் பொழுது கருவுக்குள் அப்படி எல்லாம் மாறி விளைகின்றது.

ஆகவே… விஞ்ஞான அறிவால் இன்று எத்தனையோ உண்மைகளை நாம் அறிகின்றோம். ஆனால் மெய் ஞானிகள் ஆரம்பத்திலேயே எல்லாவற்றையும் கண்டுணர்ந்து புலனறிவாலேயே தனக்குள் விண்ணின் ஆற்றலைப் பருகி அவர்கள் ஆற்றல்மிக்க சக்திகளைப் பெற்றுக் கொண்டார்கள் என்பதை குருநாதர் காட்டினார்.
1.என் கண் புலனறிவிற்கு அந்த ஊட்டச்சத்தை ஊட்டி அந்தப் புலனின் நிலையைக் கொண்டு உற்றுப் பார்த்து
2.அதனின் செயலாக்கங்கள் எவ்வாறு…? என்று அறியம்படிச் செய்தார்.

அந்த அனுபவத்தைத் தான் இப்பொழுது சொல்கின்றேன்.

நான் கல்வியறிவு அற்றவன். குருநாதர் உணர்வின் வலுப் பெற்று அந்த உணர்வின் துணையால் கண்டுணர்ந்த உணர்வின் தன்மையை
1.நீங்கள் அனைவரும் இதை அறிந்து கொண்டால்
2.நமது சாஸ்திரம் எத்தகைய நிலைகள் மெய் உணர்வை நமக்கு உணர்த்தி உள்ளது…? என்று அறியலாம்.

மகாபாரதமோ இராமாயணமோ கந்த புராணமோ சிவபுராணமோ இவை அனைத்திலும்… அதிலே கொடுக்கப்பட்ட உண்மைகள் சாஸ்திரப்படி மெய்.

இந்த உண்மைகளை மனிதன் உணர்ந்தால் அந்த ஞானிகள் சென்ற பாதையில் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நிலை பெறுவது திண்ணம். நாம் பிறவியில்லா நிலையை அடைய முடியும் என்பதை குருநாதர் தெளிவாக்கினார்.

லேசர் இயக்கம்

லேசர் இயக்கம்

 

கண்ணின் நினைவுகளை நாம் எப்படிப் பயன்படுத்துகின்றோம்…? வெகு தொலைவில் இருப்பான் எதிரி. அவனைக் கோபமாக நினைத்தவுடன் என்ன நடக்கின்றது…?

இந்தத் தீமையின் உணர்வுகள் அங்கே பாய்ச்சப்பட்டு அவன் செயலற்றவனாக ஆகின்றான், அவன் உணர்வு நமக்குள் இருப்பதால் கண் வழி நம் உணர்வைச் செலுத்தும் பொழுது இந்த லேசர் இயக்க ஒளிகள் அங்கே தாக்குகின்றது.

அன்று ஈராக்கில் யுத்த நேரத்தில் பாதாளத்தில் அவர்கள் மறைந்திருந்து பல வேலைகளைச் செய்தார்கள். ஆனாலும் அதைக் கண்டு கொள்வதற்காக லேசரைச் செயல்படுத்தினார்கள்.

மின் கதிர்களால் இயக்கப்பட்டது தான் சில நிலைகள். கதிரியக்கப் பொறிகளை அந்த இடத்திலே பாய்ச்சப்படும் பொழுது அங்கே உள்ளே இருக்கக்கூடிய நிலைகளைப் படங்களாக எடுத்துக் காட்டுகின்றது.
1.எக்ஸ்ரே எப்படி உடலுக்குள் ஊடுருவி படமாகக் காட்டுகின்றதோ இதே போன்று
2.லேசர் இயக்கங்களை பயன்படுத்தி அங்கே ஈராக்கில் மறைந்திருந்த நிலைகளைக் காணுகின்றார்கள்.

குண்டுகளைப் போட்டாலும் எதிர்த்துத் தாக்கும் தன்மையும் அதைத் தாங்கக்கூடிய கான்கிரீட்டுகளாகவும் அவர்கள் போட்டு வைத்திருந்தார்கள்.

எதிர்நிலை எக்கோ… பதிவு செய்யக்கூடிய நிலை இருந்தாலும் அதையும் அறிந்து லேசர் மூலம் வலுவாக இயக்குகின்றார்கள். அந்த லேசரைப் பாய்ச்சி அதன் துணை கொண்டு ஊடுருவி… கதிரியக்கங்களை உள்ளே பாய்ச்சி… அந்த கம்பிகளை உருவாக்கும் சக்தி கொண்டு வருகின்றான்.
1.பின்பு தான் குண்டுகளைப் போட்டு பாதாளத்தில் இருக்கும் அந்தச் சுரங்கங்களைக் கண்டறிகின்றார்கள்
2.ஏனென்றால் இப்படித்தான் அன்று யுத்தம் செய்தார்கள்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் இதையெல்லாம் யாம் கண்டது தான், தெரிந்து கொண்டோம் என்றால் உங்களைப் பாதுகாப்பதற்கு வேண்டுமல்லவா…!

எத்தனையோ அடுக்குகளை வைத்துத் தான் எதிலும் நொறுங்கிவிடாதபடி அவர்கள் பாதுகாப்பாக இருந்தார்கள். அதற்காக வேண்டி ஒவ்வொரு அடுக்கிலும் எதிர்ப்புணர்வை வைத்திருந்தார்கள்.

லேசர்… எதிர் நிலையை மாற்றி அந்த தாக்குதலை நிறுத்தக்கூடிய நிலைகளையும் கண்டுபிடித்துச் செயல்படுத்தினார்கள். ஆனால் லேசர் மூலம் ஒளி அலைகளைப் பாய்ச்சி அங்கிருக்கும் படத்தைப் பதிவாக்குகின்றார்கள்.

பூமிக்கு அடியில் இருப்பதை எப்படிக் காணுகின்றார்கள்…?

1.மேலே விமானத்தில் பறந்து கொண்டே உணர்வலைகளைப் பாய்ச்சி மோதப்படும் பொழுது
2.அது அப்படியே கோடு போட்டுக் கொண்டே செல்கின்றது.

அதை வைத்து இந்த இடத்தில் நீர் இருக்கின்றது இன்ன இடத்தில் எண்ணெய் இருக்கின்றது இன்ன இடத்தில் பழைய காலத்து உலோகங்கள் இருக்கின்றது இங்கே பல மிருகங்கள் இருக்கின்றது என்பதை விமானத்தில் பறந்து செல்லும் பொழுதே எதிர் நிலைகளை வைத்து லேசர் இயக்கத்தின் மூலம் தான் கண்டுபிடிக்கின்றார்கள்.

விஞ்ஞானி இப்படித்தான் கண்டு கொள்கிறான். ஆனால் மெய்ஞானி “தன் எண்ணத்தால்… அகண்ட அண்டத்தையும் அளந்தறிந்தான்…”

நாம் இந்தச் சூரிய குடும்பத்தில் தான் வாழ்கின்றோம் என்று நினைக்கின்றோம் ஆனால் இதைத் தாண்டி வெளியே செல்ல வேண்டும் என்றால் ராக்கெட்டில் எவ்வளவு காலம் பிடிக்கிறது…?

நம் குருநாதர் என்ன செய்தார்…?
1.எண்ணத்தின் மனோநிலை ஆனாலும் நாம் எண்ணும்போது உடனடியாக அங்கே டச் ஆகின்றது (இணைக்கின்றது).
2.2000 சூரியக் குடும்பத்திற்கும் மனதைப் பாய்ச்சும்படிச் செய்கின்றார்.
3.ஒவ்வொரு சூரியக் குடும்பமும் என்ன செய்கிறது…? அதிலே ஒதுங்கிய தூசிகள் என்ன செய்கின்றது…?
4.ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு ஒன்றுடன் ஒன்று ஒத்துழைத்து எப்படி வாழ்கின்றது…? என்பதை எல்லாம் குருநாதர் காட்டுகின்றார்.

மரம் செடி கொடியாக இருந்தாலும் தனித்து வாழ முடியாது. ஒரு செடி உருவானாலும் “அதைத் தொடர்ந்த தாவர இனங்கள் மடிந்தால்…” இதற்குச் சத்து குறையும் இதுவும் வீழ்ச்சி அடையும்.

சில தாவர இனங்கள் கலந்து புதுப் புதுச் செடிகளாக உருவாகி இருக்கும். ஆனால் கலந்த செடிகள் மடிந்து விட்டால் சிறிது நாளைக்குத் தான் இந்தப் புதியதாக உருவான செடிகள் வளரும். கடைசியில் அதுவும் மடிந்துவிடும்.

இது எல்லாம் குருநாதர் தெளிவாக எமக்குக் காட்டிய நிலைகள்.
1.காடுகளுக்கு மேடுகளுக்கும் எம்மை அனுப்பி இந்த உண்மைகளை உணரும்படிச் செய்து
2.ஞானிகள் காட்டிய வழியில் மனிதன் எப்படி வாழ வேண்டும்…? என்ற வழியைக் காட்டுகின்றார்.

வசிஷ்டர் – கவர்ந்து கொண்ட சக்தி

வசிஷ்டர் – கவர்ந்து கொண்ட சக்தி

 

மனித வாழ்க்கையில் அதிகமாக சண்டையிடுவரையோ கலவரம் நடக்கும் சில செயல்களையோ நாம் உற்றுப் பார்க்கப்படும் பொழுது அதே உணர்வுகள் நமக்குள் பதிவாகி நம் ஆன்மாவில் பால்வெளி மண்டலமாக ஆகிவிடுகிறது.

நாம் நுகர்ந்த உணர்வுகள் பதிவானாலும்
1.பதிவான உணர்வுகளை அப்போதே நாம் சுவாசித்து உயிரிலே பட்ட பின்
2.ஓ…! என்று ஜீவ அணுவாக மாற்றும் கருத்தன்மையாக ஒரு இயக்கச் சக்தியின் அணுவாக மாற்றும் தன்மை பெறுகின்றது.
3.அப்படிப் பெற்ற அந்த உணர்வுகள் நம் ரத்தத்தில் கலந்தவுடனே அது கருத்தன்மை அடையும் தன்மை வருகின்றது

செடியில் இருந்து வரும் சத்தினைச் சூரியன் கவர்ந்து பரமாத்மாவிலே பரவச் செய்தால் அது மற்ற தாவர இனத்தை ஜீவன் ஊட்டும் சக்தியாக மாறுகின்றது.

இதே போலத் தான் நம் உடலில் பதிவான உணர்வுகள் பதிவான நிலைகளில் அதைக் கவர்ந்து கொண்ட பின் நம் ஆன்மாவாக மாற்றி… எதன் பசி அதிகமோ அதன் வலு அதிகமாக இயக்கப்படும் பொழுது… அதன் குணத்தின் தன்மை கொண்டு தான் நாம் இயக்குகின்றோம்.

நாம் நினைக்கின்றோம்…! இவன் கோபக்காரன்… அவர்கள் இப்படி… இவர்கள் இப்படி என்று…! ஆனால் சந்தர்ப்பத்தில் பதிவான இந்த உணர்வு தான்… அது எதன் வலுவோ அதைக் கொண்டு இயக்குகின்றது.

எதன் உணர்வு நம் உடலுக்குள் அதிகமாகின்றதோ உள் நின்று இயக்குவது அதன் தன்மை. அதனால் தான் இராமாயணத்திலே தசரதச் சக்கரவர்த்திக்கு “வசிஷ்டர் பிரம்மகுரு…” என்று காட்டுகின்றார்கள்.

ஒருவன் சண்டை இடுகிறான் என்றால் “என்ன…?” என்று வேடிக்கை பார்க்க மனதினைச் செலுத்தினால் அதைக் கவர்கிறோம் என்று பொருள். அது தான் வசிஷ்டர் என்பது.
1.நாம் எதை உற்றுப் பார்த்து உணர்வின் தன்மை கவர்கின்றோமோ
2.அப்படிக் கவர்ந்த உணர்வுகள் நம் உயிரிலே பட்டு உணர்ச்சிகள் இயக்கப்பட்டாலும்
3.அந்த உணர்வுகள் நமக்குள் பிரம்மம் ஆகி விடுகிறது… அதனால் தான் வசிஷ்டர்.

நாம் கவர்ந்து கொண்ட உணர்வுகள் ரத்தத்தில் கலந்து அது பிரம்மமாக்கும் தன்மை பெறுகின்றது என்பதைத்தான் பத்தாவது நிலை அடையக்கூடிய தசரதச் சக்கரவர்த்திக்கு வசிஷ்டர் பிரம்மகுரு என்று காட்டுகின்றார்கள்.

நாம் தீமைகளைச் சந்தர்ப்பத்தில் பார்க்க நேர்ந்தால்…
1.என்ன செய்கின்றான்…? ஏது செய்கின்றான்…? தவறு செய்கின்ரானா…?
2.குற்றங்கள் செய்கின்றானா…? ரொம்பவும் பிழை செய்கின்றானா…?
3.வேதனைப்படுத்துகின்றானா…? என்ற எண்ணங்கள் கொண்டு அந்த மனிதனை உற்று நோக்கினால்
4.அந்த உணர்வின் சக்தி நமக்குள் பதிவாகி உயிரிலே பட்டு இயங்கத் தொடங்குகிறது
5.ஆகவே கவர்ந்து கொண்ட அந்த சக்தி வசிஷ்டர்…!

சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்பம் காந்தம் விஷம்… காந்தம் விஷத்தைக் கவர்ந்து கொண்ட பின் வசிஷ்டர். கவர்ந்து கொண்ட அதே காந்தம் ஒரு சத்தினைக் கவர்ந்து கொண்டால் வசிஷ்டர். ஆண்பாலாக மாறுகின்றது ஆண்பாலுக்குப் பிரம்மம் என்று பெயர்.

பிரம்மாவின் மனைவி அங்கே சரஸ்வதி. எந்தச் சத்தின் தன்மை கொண்டு இயக்குகின்றதோ அந்த ஞானத்தின் வழி அந்த அணுக்கள் இயக்கும்…! என்று பொருள்.

இன்று உலகம் எப்படி இருக்கிறது…? என்பதை நாம் தெரிந்து கொண்டோம். ஆனால்
1.இயற்கை நம்மை எப்படி இயக்குகின்றது…? எதன் வழி நாம் செல்கின்றோம்…?
2.நாம் குற்றவாளியா… அல்லது குற்றமற்றவர்களா…?
3.குற்றமற்றவராக இருப்பது குற்றமான செயல்களைச் செய்வது எப்படி…?
4.குற்றத்தை முன்னிலைப்படுத்தி இயக்குவது எது…? என்று
5.நம்மை நாம் அறிந்து கொள்வதற்குத் தான் இதை எல்லாம் உங்களுக்குத் தெளிவாக்குகின்றேன்.

கார்த்திகை மாதத்தின் சிறப்பு

கார்த்திகை மாதத்தின் சிறப்பு

 

ஞானிகள் காண்பித்த கார்த்திகைத் தீபத் திருநாளில் நாம் நமது வீட்டு வாசல்படியில் தீபங்களை வைக்கின்றோம். வீட்டிற்குள் இருந்தாலும் புற நிலைகளில் தீபங்களை வைக்கும் பொழுது அங்கே இருள் விலகிப் “பொருள் தெரிகின்றது…”

1.வாழ்க்கையில் நாம் எப்பொழுதுமே பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் என்ற உண்மையை உணர்த்துவதற்குத்தான்
2.“கார்த்திகை தீபங்களை” வீட்டு வாசல்படியில் ஏற்றச் செய்தனர், ஞானிகள்.

கார்த்திகைத் தீபம் என்கிறோம். ஏனென்றால் நமது பிரபஞ்சத்தில் கார்த்திகை நட்சத்திரத்திலிருந்து வெளிப்படக்கூடிய உணர்வுகள் அது எந்தப் பொருளில் எல்லாம் கலக்கின்றதோ அந்தப் பொருளின் தன்மையைப் “பிரகாசிக்கச் செய்யும்” தன்மை கொண்டது.

உதாரணமாக கசப்பான பொருள் ஒன்று இருக்கிறதென்றால் கசப்பின் தன்மையை “உணர்ச்சியின் மூலம் வெளிப்படுத்தும் அறிவாக” அங்கு இருக்கும்.

ஆகவே கார்த்திகை நட்சத்திரம், நமது பிரபஞ்சத்திற்கு ஒரு முக்கியமான நட்சத்திரம்.

நாம் வெளிச்சத்தை வைத்துப் பொருளைக் காண்பதைப் போன்று
1.கார்த்திகை நட்சத்திரத்தின் உணர்வுகள் அதிகமாக எந்தெந்தக் குணங்களில் கலந்துள்ளதோ
2.அந்தக் குணத்தின் சிறப்பு மிக்க நிலையை வெளிப்படுத்தும்,
3.அறியச் செய்யும் ஆற்றல் மிக்கவராக அந்த எண்ணங்களைப் பிரதிபலிக்கச் செய்யும்.

கார்த்திகை மாதத்தில் நமது வீட்டு வாசல்படிகளில் விளக்குகளை ஏற்றி வைக்கிறோமென்றால்… அறிவின் ஒளியின் சுடராக நாம் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் என்பதை நமக்கு நினைவுபடுத்துவதற்காக ஞானிகளால் உருவாக்கப்பட்ட நிலைதான் அது.

அவசரப்பட்டு ஒரு தொழில் செய்ய வேண்டும் பொருள் சேர்க்க வேண்டும் என்று நாம் விரும்புகின்றோம். அந்த ஆசை நமக்குள் வளர்ந்து விட்டால் “அதையே முழுமூச்சாகச் செயல்படுத்தத் தொடங்குகின்றோம்…”

ஆனால் அந்தச் சந்தர்ப்பத்தில்…
1.நாம் அறிவின் தெளிவாகத் தெரிந்து கொள்ளும் ஆற்றலை இழந்து விடுகின்றோம்.
2.ஏனெனில், அவசரம் எனும் உணர்வால் நாம் சீராகச் சிந்திக்காது எடுத்த முடிவால் விளைந்த நிலையிது.

உதாரணமாக நாம் ஒருவரைச் சந்தித்து வியாபாரத்தைப் பற்றிப் பேசப் போகிறோம் அல்லது அவர் மூலம் வியாபாரம் சம்பந்தமான விஷயங்களைத் தெரிந்து கொள்ளப் போகிறோம் என்று செல்லும் பொழுது “அவருடைய சூழ்நிலை எவ்வாறு…?” என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அவரிடம் பேசும் பொழுது அவருடைய முகத்தை உற்றுப் பார்த்தால், அவருடைய நிலை தெரியும். அப்பொழுது நமக்குள் இருக்கும் அறிவு என்பது அவரின் உணர்வின் தன்மைகளை நமக்குள் தெளிவாக்கும்.

தீபத்தைப் பொருத்தியபின் அதனின் வெளிச்சத்தில் நாம் எப்படிப் பொருள்களைக் காண்கின்றோமோ அதைப் போன்று
1.நாம் சிந்திக்கும் அறிவினைப் பயன்படுத்தி சிறிது நேரம் சிந்தித்து அவருடைய செயலாக்கங்களை அறிந்து கொண்டபின்
2.நாம் சொற்களைச் சொல்ல வேண்டும்… அப்பொழுது, அது நமக்கு துணையாக இருக்கும்.

ஆனால் நாம் நம்முடைய காரியத்திற்காக அவரைப் பார்க்கப் போய் அவருடைய சூழ்நிலை தெரியாது அவசரத்தில் அவரிடம் போய்ப் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தால்… அவர் தன் சலிப்பால் சஞ்சலத்தால் நமக்குச் சீரான பதிலைக் கொடுக்க மாட்டார்.

நாம் விரும்பிப் போய் சந்திக்கும் பொழுது அவர் சரியான பதிலைக் கொடுக்கவில்லை என்றால் அவரைக் குற்றவாளியாகக் கருதுவோம்.
1.அவர் கர்வம் உள்ளவராக இருக்கிறார்
2.நாம் கேட்டால் பதில் சொல்லமாட்டேன் என்கிறார் என்ற உணர்வுகள் வந்து
3.நம்முடைய அவசரத்திற்கு அவரைக் குற்றவாளியாக்கும் நினைவினை ஊட்டுகின்றது.

இதற்கு மாறாக அவர் சந்தோஷமாக இருக்கும் பொழுது அவரைச் சந்தித்தோம் என்றால் அவர் நம்மை வரவேற்று அதற்குண்டான சொல்களைச் சொல்லுவார்.

எப்படி நாம் தீபத்தை ஏற்றி அதனின் வெளிச்சத்தைக் கொண்டு மற்ற பொருள்களைத் தெரிந்து கொள்கின்றோமோ அதைப் போன்றுதான்
1.கார்த்திகை நட்சத்திரத்தின் ஒளியலைகள் ஒன்றோடொன்று மோதும் பொழுது
2.அதன் அறிவின் தன்மை அறிவிக்கும் சக்தி பெற்றது.

ஆகவே நாம் ஒரு காரியத்தைச் சாதிக்க வேண்டும் என்று எண்ணினால் சூழ்நிலைகளுக்கொப்பச் சொற்களைச் சொல்ல வேண்டும். அது நமக்கு நல்ல பலனைக் கொடுக்கும்.

நாம் எப்படியும் இன்றைக்கு இந்தக் காரியத்தை முடித்து விடவேண்டும் என்ற அவசர உணர்வுடன் ஒருவரிடம் தொடர்பு கொள்ளப்படும் பொழுது அவருடைய சூழ்நிலைக்கொப்பதான் நமக்கு பதில் வரும். நமது காரியமும் சித்தியாகாது.

அதே சமயம் நாம் அவரைச் சந்தித்ததால் அவர் மேல் வெறுப்படையும் தன்மையும், அதற்குண்டான சூழ்நிலையும் உருவாகும். அவரைக் குறை கூறும் உணர்வுக்கே நமது உணர்வு வலு பெறும்.

1.குறையான உணர்வுகளை நாம் நம்முள் பதிவாக்கி விட்டால்
2.அதன்பின் அவரைச் சந்திக்கும் பொழுது சூழ்நிலை சமமாக இருந்தாலும்
3.அவரை உற்றுப் பார்த்தாலே பழைய நினைவுகள் தோன்றி வெறுப்பின் உணர்வைத் தோற்றுவிக்கும்.
4.அப்படிப்பட்ட நிலையில் நம்முடைய சொல் அவரிடம் சீராகப் பேசும் தன்மையை இழந்து விடுகின்றது.

ஒருவர் மேல் உங்களுக்கு வெறுப்போ அல்லது பயமோ ஏற்பட்டு விட்டால் நீங்கள் அவரிடம் ஏதாவது ஒன்றைச் சொல்ல வேண்டுமென்றால் கூட உங்களிடத்தில் ஒருவிதமான பதட்ட நிலைகள் ஏற்படும்.

இதைப் போன்று நமது வாழ்க்கையில் நம்மையறியாமலே சில சந்தர்ப்பங்கள் நமது நல்ல குணங்களைப் பாழ்படுத்தும்.

ஆகவே தீபத்தின் வெளிச்சத்தில் நாம் எப்படிப் பொருள்களைக் காண்கின்றோமோ இதைப் போன்று
1.நாம் எந்த ஒரு காரியத்திற்குச் சென்றாலும் முதலில் நமக்குள் “அறிவின் ஒளியைப்” பொருத்திக் கொள்ள வேண்டும்.
2.அந்தச் சுடரின் உணர்வின் அலைகளைப் பரப்ப வேண்டும்.

அவ்வாறு நாம் பரப்பினோம் என்றால் நாம் செல்லக்கூடிய காரியமும் பயன் பெறும். நம்முடைய சொற்களும் கேட்போரின் உணர்வுகளில் தெளிவை ஏற்படுத்தும்.

இவைகளெல்லாம் நாம் அறிந்து கொள்வதற்குத்தான் “கார்த்திகை தீபத்தை” ஏற்றி வைப்பது.

நமது உணர்வுகள் எப்படி மாறுபடுகிறதென்றால்… நாம் ஒருவரைச் சந்தித்துவிட்டுத் திரும்பி வரப்படும் பொழுது நம்முடைய உணர்வுக்குத் தக்க அவருடைய செயலாக்கங்கள் இல்லையென்றால் “அவரைக் குறை கூறும் தன்மைக்கு…” வந்துவிடுகின்றோம்.

நாம் ஒருவருடன் பிரியமாக பேசிக் கொண்டிருப்போம். இருந்தாலும், நமக்குள் நம் உணர்வின் துணை கொண்டே அவரிடம் பேசப்படும் பொழுது அவருக்குள் பதில் இருக்கலாம். ஆனால் நாம் நம் மனதிற்குள் “ஒரு குற்றவாளி…” என்ற உணர்வைக் கலந்தே நாம் சுவாசிப்போம்.
1.ஆனால் இந்த எண்ணத்தை அவரிடம் வெளிப்படையாக தெரிவிக்காத நிலைகள் இருப்பினும்
2.இந்த உணர்வுகளை நமது முகமும் கண்களும் காட்டிக் கொடுத்துவிடும்.

ஒருவரை நாம் சந்திக்கும் பொழுது இத்தகைய உணர்வுகள் இரண்டையும் சுவாசிக்கும் பொழுது அந்த உணர்வுகள் கண்களின் ஒளி அலைகளாக… “பார்க்கும் பார்வையும் அந்தப் பார்வைக்கொப்ப உணர்வும் இணைந்து சொற்களாக வெளிவரும்…”

ஆகவே நம்மையறியாமலேயே நம்முடைய நினைவாற்றலை வெளிப்படுத்தும். அவர் அன்புடன் பேசினாலும் அதை நாம் நமக்குள் நம்முடைய எண்ணங்களுக்கொப்ப மாற்றி நாம் அவரைக் குறை கூற வேண்டிவரும்.

1.இதைப் போன்று குறை கூறும் உணர்வுகளை வெளிப்படுத்தும் முகத்தையும் சொல்லையும் பார்த்தபின்
2.அவரிடத்திலும் குறையான உணர்வுகள் ஏற்பட்டு அவர் சொல்லும் சீராக இல்லாமல் தடுமாற்றமான நிலைகளில் பதில் வரும்.

இது தான், கீதையில் “நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்…!” என்ற நிலைகளில் உணர்த்தப்படுகின்றது.

நாம் என்ணும் உணர்வுகள் நமது கண் வழி பாய்வதும் உடலிலிருந்து வெளிப்படும் மணமும் இவை இரண்டும் கலந்து, நாம் சொல்லும் உணர்வின் தொனிகளும் ஒலிகளும் “வித்தியாசமான நிலைகளில் வெளி வரும்…”

இதுவெல்லாம் நம் அன்றாட வாழ்க்கையில் நடக்கக்கூடிய சம்பவங்கள்.

எனவே நமக்குள் வரும் தீமைகளில் இருந்து விடுபடும் நிலையாக வெளிச்சத்தில் பொருள் எப்படித் தெரிகின்றதோ அதைப் போன்று, நமது வாழ்க்கையில் தெரிந்து தெளிந்து தெளிவான வாழ்க்கை வாழ்ந்திடுவோம்.

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் ஆறாவது அறிவைச் சீராக்கும் நிலையாக…
1.ஒளியின் சுடராக இருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் அனைவரும் நமக்குள் பெருக்கி
2.நம் உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றுவோம்.

மகரிஷிகள் உபதேசித்து உணர்த்திய அருள் நெறிகளை வாழ்க்கையில் கடைப்பிடிப்போம். மகரிஷிகளின் அருள் சக்தியை, நாம் நமக்குள் ஒளியின் சுடராக ஏற்றி, மகிழ்ந்து வாழ்வோம்.
1.பொருளறிந்து செயல்படுவோம்
2.சிந்தித்துச் செயல்படுவோம்
3.பேரருளைப் பெறுவோம் பேரொளியாக மாற்றுவோம்.
4.நாம் அனைவரும், மகரிஷிகள் சென்ற பாதையில் செல்வோம்.
5.இந்த உலகை “மகரிஷிகளின் உலகமாக” மாற்றுவோம்.

வராகன்

வராகன்

 

வராகன்… தான் எவ்வாறு கெட்டதை நீக்கி நீக்கி… நாற்றத்தை நீக்கி, நல்ல உணர்வினைத் தனக்குள் எடுத்தது…? என்று ஞானியர்கள் சொன்னார்களோ அதைப் போல
1.இப்பொழுது உங்கள் எண்ணங்கள் மகரிஷிகள் காட்டிய மெய் உணர்வுகளைக் கூர்மையாகக் கவர
2.உங்களின் நினைவின் ஆற்றலை விண்ணை நோக்கிச் செலுத்துவதற்கே இந்த உபதேசம்.

வராக அவதாரம் என்றால் என்ன…?

நாற்றத்தைப் பிளந்துவிட்டுச் சாக்கடைக்குள் இருக்கும் நல்ல பொருளைப் பன்றி நுகர்ந்து எடுக்கின்றது. மண்ணைப் பிளந்துவிட்டுத் தன் உணவின் தன்மையைத் தன் நுகரும் ஆற்றலால் அது எடுத்து உணவாக உட்கொள்கின்றது.

தீமையை (நாற்றத்தை) நீக்கி நல்லதை உட்கொண்ட உணர்வின் சத்து அதே ஞானமாக அதை எண்ணிய நிலைகள் கொண்டு எதை எண்ணியதோ காந்தம் லட்சுமி இதைக் கவருகின்றது.

அதாவது… தன் உடலிலிருந்து கெட்டதை நீக்கிவிட்டு நல்லதைப் பெற வேண்டுமென்ற ஞானத்தின் எண்ணங்களை அங்கே அது கவருகின்றது.

எடுத்துக் கொண்ட இவையனைத்தையும் வெப்ப காந்தங்கள் படைக்கின்றது என்ற இந்த உண்மையின் நிலைகளைத் தெரிந்து கொள்வதற்குத்தான்
1.மூன்று உணர்வின் நிலைகள் ஆயுதங்களாக ஒவ்வொரு உடலிலும் இயங்கியதை (வெப்பம் காந்தம் விஷம்)
2.அதை உணர்த்த ஆயுத பூஜை என்று வைத்தது.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எம்மைச் சாக்கடையில் உட்கார வைத்துத் தான் உபதேசித்தார். இப்பொழுது, நீங்கள் சாக்கடையில் உட்காரவில்லை. நல்ல இடத்தில் மகிழ்ச்சியான இடத்தில் உட்கார்ந்து இருக்கின்றீர்கள்.

அன்று… பைத்தியத்துடன் சேர்ந்து நான் சாக்கடையில் உட்கார்ந்து இருக்கின்றேன் என்று எம்மைக் கிண்டல் கேலி செய்தார்கள்

ஏனென்றால் அங்கே உட்கார்ந்திருந்த நிலையில்… எம்மை டீ காபி வாங்கி வரச் சொல்லி, சாக்கடையில் இருந்த கழிவைப் போட்டு “நீ குடி…!” என்கிறார் குருநாதர்.

“அய்யய்ய…” என்று யாம் மறுக்கின்றோம்.

கூர்மை அவதாரம் வராக அவதாரம் எவ்வாறு இருக்கும்…?

கூர்மையாக அந்த நாற்றத்தை எண்ணுகின்றாய். அந்த உணர்வின் சத்து, உனக்குள் நாற்றமாகின்றது. இதைப் பார்க்கும் அடுத்தவர்கள் என்ன செய்வார்கள்…? என்று எண்ணுகின்றாய், அந்த உணர்வின் சத்து உனக்குள் வருகின்றது.

ஆனால் இந்தப் பன்றி என்ன செய்கின்றது…? நாற்றத்தைப் பிளந்து நல்ல உணர்வை எடுத்தது.
1.அது நாற்றத்தை எண்ணவில்லை… நீ நாற்றத்தை எண்ணுகின்றாய்.
2.அடுத்தவன் என்ன சொல்கின்றான்…? என்று எண்ணுகின்றாய்.

இப்போது இதைச் சேர்த்துக் கொள்கிறாயா…? அல்லது அதைச் சேர்த்துக் கொள்கிறாயா…?
1.நீ உயர்ந்த நிலையைச் சேர்த்துக் கொள்கின்றாயா…? அல்லது
2.நாற்றத்தை நீக்க வேண்டும் என்று எண்ணுகின்றாயா…?

நாற்றத்தை எண்ணியவுடனே… நீ எதை எண்ணுகின்றாயோ அதை உன் உயிர் படைக்கின்றது… அதுவாகின்றாய். கீதையிலே… “நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்…” என்று உணர்த்தப்பட்டுள்ளது.

“அய்யய்ய…” என்று கண்ணில் பார்க்கின்றேன். நாற்றம் என்று எண்ணுகின்றேன். அப்பொழுது இந்த எண்ணம் வரப்படும் பொழுது, கண்ணன் (கண்கள்) என்ன சொல்கிறான்…?

நாற்றம் என்கிற பொழுது நாற்றத்தை ஈர்த்துப் பார்க்கச் செய்கின்றது. அதை (என் கண்கள்) இழுத்தவுடனே… நாற்றம் என்றவுடனே அதிகமாகி விடுகின்றது. அந்த நாற்றம் உடலினுள்ளே சென்றவுடன் விளைந்து விடுகின்றது.

“நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்…!” நாற்றத்தை நீக்கி நல்ல பொருளை எடுக்க வேண்டும் என்று எண்ணினால் நீ அதுவாகிறாய். இதைத்தான் கண்ணன் கீதையிலே சொன்னது.

அதைப் போல, என்னைக் கேவலமாகப் பேசுவார்களோ…? என்று மற்றவர்களைப் பார்க்கின்றேன், நாற்றத்தில் எவ்வாறு இருக்கும்…? என்று எம்மைச் சாக்கடையில் வைத்துத்தான் நமது குருநாதர் உபதேசம் கொடுக்கின்றார்.

சாக்கடை அருகில் உட்கார்ந்தால் நீங்கள் என்ன சொல்வீர்கள்…? “பாரு… எல்லாம் காசு ஆசை பிடித்துப் போய், சாமியாரிடம் வித்தையைக் கற்றுக் கொள்வதற்காக வேண்டி உட்கார்ந்துள்ளார் என்பீர்கள்.

ஏனென்றால் அந்தச் சித்து இந்தச் சித்து தங்கம் செய்வது… வெள்ளி செய்வது, என்று தான் சாமியார் பின்னால் போகின்றார்கள்.

இப்பொழுது என் கூர்மை என்ன செய்கின்றது…? அவர்கள் என்ன நினைப்பார்கள்…? இவர்கள் என்ன நினைப்பார்கள்…? என்று அதை வலுவாக எடுக்கும் பொழுது… இந்த நாற்றத்தை எனக்குள் சேர்த்து விடுகின்றது.

வராகன் என்ன செய்கின்றது…? என்று காட்ட இவ்வாறு, பல நிலைகளில் என்னைச் சாக்கடைக்கு அருகில் அல்லல்பட வைத்தார் குருநாதர்.

1.எண்ணங்கள் உருவாகி உன் உடலுக்குள் உணர்வுகள் எதைக் காட்டுகின்றது…?
2.அந்த உணர்வை எடுத்தவுடன் உனது ஆன்மாவாக எவ்வாறு மாறுகின்றது…?
3.ஆன்மாவிலிருந்து சுவாசித்தவுடன் உயிரில் (புருவ மத்தியில்) எவ்வாறு படுகின்றது…?
4.அப்பொழுது உயிர் நீ சுவாசித்ததை இயக்கி “அய்யய்ய நாற்றம்” என்று இந்த உடலை அழைத்துச் செல்கின்றது.

இது கூர்ம அவதாரம்.

கூர்மையாக நாற்றத்தைப் பார்க்கின்றாய்.. அதனின் உணர்வு வலுவாகச் சுவாசித்தால் வராக அவதாரம். அதனுடைய வலிமை கொண்டு “நாற்றம்… நாற்றம்…” என்று நீ போகின்றாய்.

அவ்வாறு சென்று கூர்மை அவதாரத்திற்கும் வராக அவதாரத்திற்கும் இரண்டுக்கும் இணை சேர்த்து அதிலே நீ எதைக் கூர்மையாக எண்ணுகின்றாயோ அதனின் உணர்வு உனக்குள் சென்றவுடன்
1.உன் ஈசனான உயிர் அதை வலுவாக்கி அதனின் நிலைகள் கொண்டு
2.அதே எண்ணத்தை எண்ணும் பொழுது இந்தக் கண் என்ன செய்கின்றது…?
3.இதையே எடுத்து நுகர்ந்து “அய்யய்ய” என்று சொல்லி உன்னை விலகச் செல்லும்.

நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய். இந்தச் சாக்கடையை விட்டு விலகிச் செல்ல வேண்டும் என்று எண்ணுகின்றாய். ஆனால் எடுத்துக் கொண்ட உணர்வே சாக்கடையாக சுவாசத்தின் வழி உள்ளே வருகின்றது.

இந்த நிலையை உணர்த்தி என்னை அங்கே பக்குவப்படுத்துவதற்காக… சாக்கடைப் பக்கம் இவ்வளவு உபதேசம் கொடுக்கின்றார் குருதேவர்.

எனக்குக் காபி அவருக்கு டீ இரண்டையும் சாக்கடைக்குப் பக்கத்தில் வைத்து அதிலே சாக்கடையிலிருந்து அள்ளிப் போட்ட குப்பை இரண்டைப் போட்டு என்னைக் “குடி” என்கின்றார் குருதேவர்.

அப்பொழுது என்னுடைய பார்வை என்ன செய்கின்றது…? இந்தச் சாக்கடையையும் பார்க்கின்றேன்… ஆள்களையும் நினைக்கின்றேன். இவரிடம் வசமாகச் சிக்கிக் கொண்டேன் என்று நினைக்கின்றேன். இந்தக் காபியை எவ்வாறு குடிப்பது…?? என்றும் என்ணுகின்றேன்.

கீதையிலே, நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று சொல்லப்பட்டது. அவர் சாக்கடையைக் குடி என்கிறார். அதை எண்ணியவுடனே எவ்வாறு குடிப்பது…? என்று விலக்கிச் செல்கின்றது.

இந்த எண்ணத்தால் அவ்வாறே திகைத்துக் கொண்டு இருக்கின்றேன். காபியில் இதை அள்ளிப் போட்டார். குடிக்க முடியவில்லை. எல்லோரும் நைனாவிற்குப் (சாமிகளுக்கு) பைத்தியம் பிடித்து விட்டது என்று சொல்கின்றார்கள். ரோட்டில் போகின்றவர்கள் பேசிக் கொண்டு இருக்கின்றார்கள். இதையும் கேட்கின்றேன்.

அப்பொழுது நான் நகர்ந்து செல்கின்றேன். போகப் போக, இந்தப் பக்கம் போகலாமா…? அந்தப் பக்கம் போகலாமா…? என்று இந்த மனம் அல்லல்பட்டுக் கொண்டு இருக்கின்றது.

நாம் எதை எண்ணுகின்றோமோ அதை உயிர் இயக்கி உடல் முழுவதும் பரவச் செய்து… அதே இயக்கமாக எவ்வாறு இயங்குகின்றது…? என்ற நிலையைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றார் குருதேவர்.

“சரி… நீ போய் டபாரா செட்டைக் கொடுத்துவிட்டு வா…” என்றார் குருதேவர்.

கடையில் கொண்டு போய்க் கொடுத்தால்… வாங்கவா செய்வார்கள்…? நீ உன் வீட்டிலேயே வைத்துக் கொள் என்றார்கள். டபரா செட்டிற்குக் காசு கொடுத்தேன். வாங்க மாட்டேன் என்றார்கள். இவ்வாறாகி விட்டது.

நீ வரும் பொழுது, கொஞ்சம் முறுக்கு, கடலைப் பருப்பு, பொட்டுக் கடலை வாங்கிவா என்றார் குருநாதர். மூன்றையும் வாங்கிக் கொண்டு வந்தேன்.

சாக்கடை அருகில் ஏழெட்டுக் கோடு போடச் சொன்னார். முதலில் பொட்டுக் கடலையைச் சாக்கடையில் போடச் சொன்னார். இரண்டாவதாக முறுக்கைச் சாக்கடையில் போடச் சொன்னார். மூன்றாவதாக, நிலக்கடலையைச் சாக்கடையில் போடச் சொன்னார்.

அங்கிருந்து பன்றி வருகின்றது வந்தவுடனே ஒவ்வொன்றாக மோந்து பார்க்கின்றது. பொட்டுக் கடலை முன்னால் இருக்கின்றது. அதை விட்டுவிடுகின்றது.

அடுத்து… முருக்கு வேகமாக எணணெய் வாசனை வருகின்றது. நாற்றத்திற்குள் இதைக் கண்டுபிடித்து அந்த முறுக்கை எடுக்கின்றது.

அடுத்து, எண்ணெய் வாசனை உள்ள கடலைப் பருப்பைச் சாப்பிடுகின்றது. அடுத்துப் பொட்டுக்கடலை இருக்கின்றது. அதை விட்டுவிட்டது. மாற்றி அந்த வாசனையைத்தான் நுகர்ந்து எடுக்கின்றது.

சாக்கடைக்குள் பார்த்தாயா…? என்றார் குருநாதர். அது நாற்றத்தை எடுக்கவில்லை… நீ எதை எடுக்கின்றாய்…! என்றார்.

காபி இருக்கின்றது… நீ பிரித்துப் பார்க்க முடியவில்லை. நீ ஆகாரம் சாப்பிட்டவுடனே சாப்பிடும் ஆகாரத்தில் உள்ள நாற்றத்தை உன் உடல் பிரித்து மலமாக மாற்றி விடுகின்றது.

உன் உடலிலிருந்து, வரக்கூடிய ஆறாவது அறிவு, இதைப் பிரிக்கக் கூடிய சக்தியாக இருக்கின்றது நீ ஏன் இதைப் பிரிக்க முடியவில்லை…? என்று கேட்கின்றார் குருநாதர்.

நான் என்ன பதில் சொல்வது…?

சாக்கடைக்குள் இருக்கும் நல்ல பொருள்களைப் பன்றி எப்படி நுகர்ந்து எடுத்து நல்ல உணர்வைத் தனக்குள் எடுத்து
1.நாற்றமான உடலில் கலந்து, நாற்றத்தை நீக்கிடும் உணர்வுகளை வளர்த்ததோ
2.அதே போல பல சரீரங்களைத் தனக்குள் எடுத்து இதே உயிர்தான், நம்மை மனிதனாக ஆக்கியிருக்கின்றது.

மனிதனாக ஆனபின்… சந்தர்ப்பத்தால் ஏற்படும் நஞ்சு கொண்ட நிலைகளும்… உணர்வின் எண்ணத்தால் ஈர்க்கும் தீமைகளையும் நீ எவ்வாறு மாற்றுவது…? என்றும் அதை எப்படி மாற்றிக் கொள்ள முடியும்…? என்ற நிலைகளையும் அங்கே தெளிவாக எடுத்துக் கூறினார், குருநாதர்.

பன்றி சாக்கடையில் உள்ள நாற்றத்தைப் பிளந்து நல்ல உணர்வை நுகர்ந்த மாதிரி…
1.நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் சாக்கடையான காற்று மண்டலத்திலிருந்து,
2.நல்லவற்றை எடுக்கக் கற்றுக் கொடுத்தார் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

இன்று கழிவுப் பொருள்களை எடுப்பவர்கள் (தூய்மைப் பணியாளர்கள்) அந்தக் கழிவுப் பொருளை எண்ணத்தால் நுகர்வது இல்லை.
1.அதை நீக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் பொழுது
2.கழிவுப் பொருளின் மணம் அவர்களுக்கு வருவதில்லை.

ஆனால் நாம் என்ன எண்ணுகிறோம்…? கழிவுப் பொருள் எடுப்பதைப் பார்த்தவுடன், “ஐய்யய்யோ நாற்றமாகின்றது…” என்று சொல்லி நாற்றத்தை உடலுக்குள் கலக்கவிட்டு கழிவுப் பொருளின் சத்தையெல்லாம் நமக்குள் சேர்த்துக் கொள்கிறோம்.

1.இப்படி… எதனின் உணர்வை நாம் சேர்க்கின்றோமோ அந்த உணர்வின் தன்மை நமக்குள் சென்று நமக்குள் நாற்றமாகும் நிலையும்,
2.நாற்றத்தைக் கண்டு வெறுப்பின் நிலையில் எண்ணங்கள் உருவாகும் பொழுது யாரைப் பார்த்தாலும், அசிங்கமாகத் தெரியும்.

“இது சுத்தம் இல்லை… அது சுத்தம் இல்லை…” என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் உடலில் பாருங்கள். நாற்றம் வந்து கொண்டே இருக்கும். சட்டைத் துணியினை நுகர்ந்து பாருங்கள், நாற்றம் இருக்கும்.
1.நாற்றத்தைப் பிடிக்கவில்லை என்று நாற்றத்தைத்தான் நுகருகின்றார்கள்.
2.இதுவெல்லாம் நாம் எடுத்துக்கொண்ட உணர்வின் இயக்கங்கள்,

ஆகவே… எதைக் கூர்மையாக எண்ணுகின்றோமோ அதனின் வலுக் கொண்டு அதனின் வலிமையாக அடுத்த உருவை நம் உயிர் உருவாக்குகின்றது என்ற நிலையை அங்கே காட்டுகின்றார் குருதேவர்.