திருமண வாழ்த்து

திருமண வாழ்த்து

 

யாகங்கள் செய்த வீடுகள் எல்லாம் நன்றாகத் தானே இருக்க வேண்டும். நன்றாக இருக்க வேண்டும் என்று தானே அதைச் செய்கின்றோம். அந்த உணர்வின் தன்மை கலவை எதுவாகின்றது..?

ஜாதகம் பார்த்துத் தானே எல்லாத் திருமணங்களும் செய்கின்றோம். நன்றாகத் தானே இருக்க வேண்டும். ஜாதகத்தைக் குறி வைத்துப் பார்த்துச் செய்யப்படும் பொழுது அவர்கள் நன்றாகத் தானே இருக்க வேண்டும்.

ஆனால் இவ்வளவும் செய்து எத்தனையோ குடும்பங்கள் ஏன் பிரிந்து வாழுகின்றது…?

முழுமையாகச் சேர்ந்து மகிழ்ச்சியாக வாழ்வார்கள் என்பதற்குத் தானே ஜாதகம் பார்க்கின்றோம். இடைவெளியில் ஏன் மடிந்து விடுகின்றார்கள்…? அல்லது பிரிந்து விடுகின்றார்கள்…?

1.ஜாதகம் மனச்சாந்திக்க வேண்டுமென்றால் அவன் சொன்ன உணர்வை எடுத்துக் கொள்ளலாம்.
2. ஏனென்றால் “ஜாதகம் பார்க்காமல் திருமணம் செய்தால் தப்பு வந்து விடுமே” என்று தான் செயல்படுத்துகின்றோம்.

அப்படி எண்ணவில்லை என்றாலும் கூட ஜாதகம் பார்ப்பவர்கள் என்ன செய்கின்றார்கள்…? எதிர்ப்பு நிலை ஒன்றாகும்.
1.ஒருவருக்கொருவர் கோபக்காரராக இருப்பார்கள். இது ஒத்து வரும் என்று சொல்லிவிடுவார்கள்.
2.அதே சமயத்தில் ஒருவர் கோபமாக இருப்பார் ஒருவர் சாந்தமாக இருப்பார் ஆனால் ஜாதகப்படி ஒத்து வராது என்று சொல்லிவிடுவார்கள்.
3.அடிக்கடி வேதனைப்படுபவராக இருப்பார்கள். ஆண் பெண் இரண்டு பேருமே அப்படித்தான் இருப்பார்கள்.
4.இது இரண்டும் பொருத்தம் சரியாக இருக்கிறது என்பார்கள்.
5.ஆனால் திருமணமான பின் வேதனையைத் தான் வளர்த்துக் கொண்டிருப்பார்கள்.

ஆக பொருத்தம் எங்கே இருக்கின்றது…? இந்த உணர்வின் நினைவுகள் வரப்படும் பொழுது இரண்டு விஷமும் அதற்குள் ஒடுங்குகின்றது. இப்படித்தான் பொருத்தம் பார்க்கின்றார்கள்.

இது எல்லாவற்றிக்கும் மேலாக… தாலி இத்தனை மணிக்குள் இந்த நேரத்திலே கட்ட வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் அலங்காரம் செய்து முடித்து ஒரு நிமிடம் தாமதமாகிவிட்டது என்றால் என்ன ஆகிறது…?

தாமதம் ஆகிவிட்டால் என்ன செய்கிறது…! என்ற இந்த உணர்வோடு தான் தாலி கட்டும் நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். அதைச் சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.

அந்தக் குறித்த நேரம் வரும் பொழுது எதைப் பார்க்கின்றார்கள்…? ஏன் இன்னும் காலதாமதம் செய்கின்றீர்கள்…? “மேளத்தைக் கொட்டையா… கொட்டையா…” என்பார்கள். அங்கே மந்திரம் சொல்வது முழுமை பெறுகின்றதா…? இல்லை…! பரபரப்பு தான் அங்கே வருகின்றது.

தாலி கட்டப்படும் பொழுது எவ்வளவு பணம் கொடுப்பார்கள் என்று மந்திரம் சொல்பவர் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார் ஏழ்மையான வீட்டில். பணக்காரர்கள் வீட்டிலே மொத்தமாக வாங்கிக் கொள்ளலாம் என்று அமைதியாக இருப்பார்.

1.தாலி அவரிடம் கொடுத்துத்தான் வாங்கி கட்ட வேண்டும் என்று முறை வைத்திருப்பார்கள்.
2.இப்படிப்பட்ட எண்ணங்களோடு தாலியைக் கொடுத்துக் கட்டச் சொன்னால் என்ன ஆகிறது…?

மந்திர ஒலிகளைப் பதிவு பண்ணி இறந்தால் அதே மந்திரத்தை ஜெபித்தால் அதன் வழியில் ஆன்மாக்களைக் கைவல்யப்படுத்த இது உதவும்.

நல்லவை ஆனாலும் கெட்டவை ஆனாலும் உணர்வுகளைப் பதிவு செய்து பதிவு செய்து கவர்ந்து கொள்கிறார்கள். “அதைத்தான் நாம் நம்புகின்றோம்…”

(ஏனென்றால் உணர்வின் இயக்கங்கள்… எண்ணங்களைப் பற்றி உங்களுக்குச் சொல்லிக் கொண்டு வருகின்றோம். சீதாராமா…! நம் எண்ணங்கள் எப்படி உருப்பெறுகிறது…? அந்த எண்ணத்தின் உணர்வுகள் அதன் சக்தி கொண்டு எப்படி இயக்குகின்றது…?)

ஆஅகவே… கல்யாணராமனைப் பற்றிச் சொல்லிப் புதிதாகத் திருமணமாகும் அந்தக் கணவன் மனைவி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று எங்கே பார்ப்பது…?

ஏனென்றால் தாலி கட்டும் நேரத்தில் பரபரப்பாகப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். நேரம் ஆகிவிட்டது நேரம் ஆகிவிட்டது என்று தாமதமாகும் போது இந்த இடத்திலும் “பகைமை” வந்து விடுகின்றது.

நல்ல உணர்வைஸ் சேர்க்கும் நேரங்களில் இப்படி இதைச் சேர்க்கின்றார்கள். பகைமை கலந்தபின் “இந்த மாதிரிச் செய்துவிட்டார்களே…!” என்று அந்தப் பற்றுள்ளவர்கள் மன நிலையினைப் பார்த்தால் “கசகச கசகச…” என்று இருப்பார்கள். அப்பொழுது எதை ஊட்டுகின்றோம்…?

ஆனால் திருப்பூட்டும் போது எப்படி இருக்க வேண்டும்…?

1.எல்லோருடைய உணர்வுகளிலும் அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகள் படர வேண்டும்
2.வசிஷ்டரும் அருந்ததியும் போன்று நாங்கள் வாழ வேண்டும்
3.நளாயினியைப் போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடக்க வேண்டும்
4.சாவித்திரி போன்று எங்கள் இரு மனமும் ஒன்றிட வேண்டும்
5.அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நாங்கள் வாழ வேண்டும் என்று எண்ணி
6.அந்த இரு மனமும் ஒரு மனமாகும் அந்தத் தம்பதியர்கள் மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பெற வேண்டும்
7/மலரைப் போன்ற மணம் பெற வேண்டும் மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும்
8.அவர்கள் அன்னை தந்தையின் அரவணைப்புடன் என்றுமே வாழ வேண்டும்
9.அருள் ஒளி அவர்கள் பெற வேண்டும் மெய்ப் பொருள் காணும் சக்தி பெற வேண்டும்
10.அருள் மகரிஷிகளின் உணர்வுகள் அவர்களுக்குள் விளைய வேண்டும்.
11.அவர்கள் எண்ணங்கள் ஒன்றி இரு மனமும் ஒரு மனமாகி கருவிலே வளரும் குழந்தை அருள் ஞானக் குழந்தையாக வளர வேண்டும்
12.உலகைக் காத்திடும் உத்தமஞானியாக வளர வேண்டும் பண்பினை வளர்க்கும் அத்தகைய அருள் ஞானக் குழந்தை உருவாக வேண்டும் என்று
13.எல்லோரும் இந்த எண்ணத்தோடு இப்படி வாழ்த்த வேண்டும்.

கணவன் மனைவி இருவரும் அந்தத் திருமண நாளை எண்ணினாலே “இந்த முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்களின் வாழ்த்தை எண்ண வேண்டும்” நமக்குள் இருக்கும் நல்ல குணம் கெட்ட குணம் அத்தனையும் இதற்குள் ஒடுங்கி விடுகின்றது.

இப்படி அந்த எல்லோருடைய வாழ்த்துக்களும் அங்கே ஒன்று சேர்க்கப்படும் பொழுது இந்த வாழ்த்து இருவருக்குள்ளும் பதிவாகி அங்கே மகிழ்ச்சியின் தன்மை உருவாகின்றது.
1.இந்த உணர்வு பதிவான பின்
2.அவர்களுக்குக் “குழந்தை இல்லை” என்ற சொல்லே வராது.

ஆகவே திருமணம் நடைபெறும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும்…? என்று “வழியறிந்து நாம் செயல்பட வேண்டும்…”

இனி நமக்கு நாமே பாதுகாப்புத் தேவை

இனி நமக்கு நாமே பாதுகாப்புத் தேவை

 

இன்று கோடிச் செல்வம் தேடினாலும் இந்த உடலை விட்டு உயிர் போகத்தான் செய்யும். இதிலே எந்த உணர்வை அதிகமாகச் சேர்க்கின்றோமோ அந்த உணர்வுடன் தான் வெளியே செல்லும். விஷத்தன்மைகள் நாட்டிலே பரவப்படும் பொழுது பல மாற்றங்கள் ஆகும்.

ஏற்கனவே பல வருடங்களுக்கு முன்பே சொல்லி உள்ளேன். அணுகுண்டு ஹைட்ரஜன் குண்டு இதையெல்லாம் செய்கிறார்கள்.
1.அதில் வெளிப்பட்ட கசிவுகளை எல்லாம் சூரியன் காந்த சக்தி கவர்ந்து வைத்துக் கொள்கின்றது. இந்த அலைகள் பரவிக்கொண்டே இருக்கும்.
2.எதிர்நிலையான அலைகள் வரப்படும் பொழுது அது சூறாவளியாக மாறும்.

சனிக்கோள் என்ன செய்கின்றது…? ஆவியின் தன்மையைத் தனக்குள் கவர்ந்து நீர் என்ற நிலையில் வருகிறது. நீர் வரும் பக்கம் எல்லாம் சுழற்சியால் அதைக் கவர்ந்து மேலே கொண்டு செல்கின்றது… மேகங்களாக மாற்றுகின்றது. அதிலே சிக்கிய கரு முட்டைகள் நிலத்திற்கு வருகின்றது. இது சனிக்கோளின் வேலை.

அதே சமயத்தில் நம் பூமியில் வேப்ப மரத்திலிருந்து வரக்கூடிய கசப்பான மணத்தைக் கண்டபின் ரோஜாப் பூவின் நறுமணம் ஏற்றுக் கொள்வதில்லை. அந்த அலைகள் இதைக் கண்டு அஞ்சி ஓடுகின்றது.
1.அது ஓடும் பாதையிலே விஷச் செடியினுடைய மணத்திலே மோதினால் அழுத்தம் தாங்காது உடனே சுழற்சியாகின்றது.
2.சிறு சிறு சுழல் காற்றுகளை பார்க்கலாம்.

இந்த விஷத்தன்மையினால் சுழிவாக ஏற்படக்கூடிய அந்த இடத்திலே ஒரு கர்ப்பிணி நின்றிருந்தால் அந்த உணர்வைச் சுவாசித்து கருவிலிருக்கக்கூடிய குழந்தைக்கு இணைந்தால் “மூளை வளர்ச்சி அற்று சிந்தனையில்லாது போகும்… சிந்தனை இருக்காது…” செவிகள் கேட்காது… ஊமையாகவும் மாறும்.

குடும்பத்தில் எல்லோரும் நன்றாக இருப்பார்கள்… ஆனால் எனக்கு ஏன் ஊமைக் குழந்தை பிறந்தது…? என்று கேட்கலாம்.

ஒரு பொருளுடன் ஒரு பொருள் இணையப்படும் பொழுது விஷத்தன்மையான உணர்வின் சுழற்சி நம் வட்டத்திலே கண்டால் அந்தக் கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கு ஒன்றிலிருந்து 90 நாட்களுக்குள் மூளை வளர்ச்சி குறைகின்றது.

குருநாதர் இதையெல்லாம் எமக்குத் தெளிவாகக் காட்டினார்.

நாம் தவறு செய்தோமா இல்லை…! இதைப்போல இது எப்படி சுழற்சி ஆகின்றதோ அதைப் போல் தான் விஞ்ஞானத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்ட நிலைகளும் சுழன்று வரும்.

ஹைட்ரஜன் குண்டோ அணுகுண்டோ அதனுடைய கழிவுகளோ அதையெல்லாம் சூரியன் எடுத்து அலைகளாகப் பரப்பி வைத்திருக்கின்றது.
1.அதிலே இந்த அழுத்தங்கள் வரப்படும் பொழுது விஷத்தன்மைகள் அதிகமாக இருக்கப்படும் பொழுது
2.ஒன்றோடு ஒன்று மோதும் சந்தர்ப்பம் ஏற்பட்டால் அந்த இடத்திலே “சூறாவளி” ஏற்படும்.

எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலைகளில் கம்ப்யூட்டர்களை வைத்து இதை எல்லாம் கண்டுபிடிக்கின்றார்கள். எதிலிருந்து வந்தது என்று அவர்களுக்குத் தெரியாது.

அழுத்தங்கள் ஏற்பட்டு மோதலால் ஏற்படும் சந்தர்ப்பங்களினால் காற்றின் சுழற்சி (TORNADO) வேகம் இவ்வாறு இருக்கும் என்று கம்ப்யூட்டரில் எலக்ட்ரானிக் மூலமாக அறிவிப்பு கொடுக்கின்றார்கள்.

அமெரிக்காவில் இந்த நகரத்தின் பக்கம் இது போன்று வரும் என்று அனுமானம் செய்து எச்சரிக்கை செய்து மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு வெளியேற்றுகின்றார்கள்.

சேட்டிலைட் மூலமாக இந்த ஒளிக் கதிர்களின் உணர்வுகளை ஈர்த்து “எதிலே மோதுகின்றது…?” என்பதைக் கண்டுணர்கின்றார்கள். புயல் எதிலே வருகிறது என்றும் பார்க்கின்றார்கள்.
1.ஆனால் கடலில் உருவாகும் புயல் வேறு
2.இங்கே நகரத்திற்குள் ஏற்படும் சூறாவளி வேறு.

விஷத்தின் தன்மைகள் ஒன்றுடன் ஒன்று மோதப்படும் பொழுது அப்படியே மோதி அலேக்காகக் கட்டிடங்களைத் தூக்கிச் செல்கின்றது. மூன்று மாடிக் கட்டிடமாக இருந்தாலும் தூக்கி எறிகின்றது.

இதை எத்தனையோ வருடங்களுக்கு முன்பே யாம் சொன்னோம். ஆனால் யாம் சொன்னால் யார் ஏற்பார்கள்…? சொன்னாலும் எதையோ ஒட்ட வைத்து இணைத்துச் சொல்கிறார் என்று புதிதாகத் தான் பார்ப்பார்கள்.

ஆனால் என்னுடைய உபதேசங்களை முன்னாடி கேட்டவர்களுக்கு இது புரியும். இது இப்படித்தான் வரும்… அது எந்தப் பக்கம் மோதுகின்றதோ அதனுடைய செயலாக்கங்கள் இப்படித்தான் இருக்கும்…! என்று பல முறை எடுத்துக் கூறியுள்ளோம்.

ஒரு சமயம் டெல்லியிலிருந்து பத்ரிநாத்துக்குச் செல்வதற்காக ரோட்டிலே நடந்து சென்று கொண்டிருக்கின்றேன். அங்கே ஒரு சூறாவளி வருகின்றது. எனக்கு முன்னாடி கார் பஸ் லாரி எல்லாம் சென்று கொண்டிருக்கின்றது.

வந்த வேகத்தில் “டப்…” என்று திசை திரும்பி பஸ் லாரி கார் அவைகளைத் தூக்கி எறிந்தது. பஸ்சைப் பக்கத்தில் இருந்த காம்பவுண்டுக்குள் மாடியில் தூக்கி எறிந்தது… அது தலைகீழாக நிற்கின்றது. உள்ளே இருப்பவர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

லாரியிலிருந்து மூட்டைகள் சரிந்து உள்ளே இருந்தவர்கள் இறந்து விட்டார்கள். இரண்டு வினாடிகளுக்குள் நடந்த நிகழ்ச்சி இது. சித்தான பிற்பாடு நான் பார்த்தது இது.

ஆனால் சித்தாவதற்கு முன்னாடி அகமதாபாத்தில் நான் இருக்கும் பொழுது இது போன்று ஒரு நிகழ்ச்சி நடந்தது. இந்தச் சூறாவளி எப்படி உருவாகிறது…? என்று சொன்னால் விஷத்தன்மை கொண்ட கெமிக்கல்களை தொழிற்சாலைகளில் இருந்து வடிகட்டுகின்றார்கள்.
1.மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் அறிவுறுத்தலின்படி விஷத்தை வடிகட்ட வேண்டும் என்று இவர்கள் செய்கின்றார்கள்.
2.இப்படி இதையெல்லாம் வடிகட்டினாலும் தண்ணீரில் கலக்கின்றது.
3.நீரெல்லாம் காய்ந்த பின் அதில் இருக்கக்கூடிய மணங்களைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்துக் கொள்கின்றது.
4.மீதிக் கழிவுகள் களிமண் போன்று படித்திருக்கின்றது… அதிலிருக்கக்கூடிய விஷத்தின் ஆற்றலையும் சூரியனுடைய காந்த சக்தி எடுக்கின்றது.

ஏனென்றால் இது எல்லாம் குருநாதர் எமக்குக் காட்டிய நிலைகள்.

1.இது போன்ற தொழிற்சாலைகள் எங்கெல்லாம் வைத்திருக்கிறார்களோ அது பரவலாகப் பரவிச் செல்லும் பொழுது
2.சந்தர்ப்பத்தில் இந்த அலைகள் ஒன்றுக்கொன்று எதிர்மறையாக மோதப்படும் பொழுது சூறாவளியாக மாறுகின்றது.

மணி சாயங்காலம் 4 மணி இருக்கும். அந்த நேரத்தில் நான் ஒரு தையல் கடையிலே உட்கார்ந்து இருந்தேன். தற்செயலாக நான் பார்க்கின்றேன்… துணிமணிகள்… எத்தனையோ பொருள்கள்… தகரம்… எல்லாம் மேலே போய்க் கொண்டிருக்கின்றது. நூறு ரூபாய் நோட்டுகள் கூட பறந்து வந்து கொண்டிருந்தது.

பக்கத்திலேயே சூறாவளி வந்துவிட்டது.

அங்கே கட்டிலிலே ஒருவர் படுத்திருந்தார். அந்தச் சூறாவளி கட்டிலுடன் சேர்த்து அலேக்காக பனை மர உயரத்திற்குத் தூக்கிப் பறந்து செல்கின்றது அவர் அலறிக் கொண்டிருக்கின்றார். ஆனால் கட்டிலை இறுக்கிப் பிடித்துக் கொண்டார். இதை மற்றவர்கள் கவனிக்கவில்லை ரூபாய் நோட்டை எடுக்க வேண்டும் என்று அலைந்து கொண்டிருக்கின்றார்கள்.

நானும் ஒரு 200 ரூபாய் பணம் எடுத்தேன். அந்த நேரத்தில் என்னிடம் காசு இல்லை… இது நடந்த நிகழ்ச்சி. ஒரு நாயை அப்படியே தூக்கிச் சுழற்றுகின்றது அது வள் வள் என்று கத்திக் கொண்டிருக்கின்றது.

வீடுகளில் சில இடங்களில் மேலே ஒட்டுத் தகரங்களைப் போட்டு வைத்திருந்தார்கள். அதை எல்லாம் பிய்த்துத் தூக்கிக் கொண்டு மேலே செல்கின்றது. பார்த்தால் அடுத்து இங்கே வீட்டிற்கு மேல் ஒன்றையும் காணோம். உள்ளே இருக்கக்கூடிய சாமான்களை எல்லாம் தூக்கிக் கொண்டு செல்கின்றது.

இதை எல்லாம் கண்ட பின் ஒவ்வொருவரும் அரண்டு வீட்டிற்குள் சென்று ஒடுங்கத் தொடங்கினார்கள். தகரம் பறந்து வருகின்றது அல்லவா… வெட்டிவிடும் என்று சொல்லி வீட்டிற்குள் சென்றார்கள். நானும் வீட்டிற்குள் வந்து விட்டேன்.

இது எல்லாம் எதிர்நிலையான உணர்வின் இயக்கங்கள். நடந்த இந்த நிகழ்ச்சியைப் பற்றிக் குருநாதர் என்னிடம் பின்னாடி சொல்கின்றார். கண்ட அனுபவங்களைத் தான் உங்களிடம் சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

காற்றிலே இருக்கக்கூடிய நிலைகள் ஒரு செடியில் இருக்கக்கூடிய மணம் மற்ற மணங்களோடு கலந்து புது விதமாகத் தாவரங்கள் மாறுகின்றது அல்லவா. இது இயற்கை.

ஆனால் விஞ்ஞான அறிவு கொண்டு தாவர இனங்களின் வித்தின் அணு செல்களை மாற்றிப் புது விதமான செடிகளைக் கொண்டு வருகின்றார்கள். உயிரினங்களிலும் அதனுடைய அணுக்கருக்களை எடுத்துக் கருப்பைக்கு வெளியிலே வைத்துப் புது உயிரினங்களாக உருவாக்கிக் கொண்டு வருகின்றார்கள். விஞ்ஞானம் இன்று இவ்வளவு முன்னேறி இருக்கின்றது.

ஆக இத்தனை இருந்தாலும்
1.நாம் எங்கே செல்ல வேண்டும்…?
2.எங்கே போகின்றோம்…? எங்கே போக வேண்டும்…? என்று சிந்தனை செய்யுங்கள்.

இன்னும் தலைவலி போகவில்லை மேல் வலி போகவில்லை என்று தான் என்னிடம் கேட்டுக் கொண்டு வருகின்றார்கள். “என்னுடைய வலி… வேதனை… போக வேண்டும் அதற்கு அருள் சக்தி வேண்டும்…” என்று கேளுங்கள் என்று சொன்னால் அதைக் கேட்பதற்கு யாரும் இல்லை.

காரணம்…
1.உங்களுக்கெல்லாம் முழு சக்தி கொடுத்திருக்கின்றேன் அல்லவா.
2.நமக்கு நாமே பாதுகாப்புத் தேவை…! துருவ நட்சத்திரத்தின் சக்தியைத் தான் எடுக்கப் பழக வேண்டும்.
3.சாமி காப்பாற்றுவார் சாமியார் காப்பாற்றுவார் என்பதை எல்லாம் முதலில் விடுத்துப் பழகுதல் வேண்டும்.

நன்மை செய்ய வேண்டும் என்றால் “மன உறுதி” வேண்டும்

நன்மை செய்ய வேண்டும் என்றால் “மன உறுதி” வேண்டும்

 

இன்றைய உலகத்தில் நாம் செய்யக்கூடிய நன்மைகளுக்கு எவ்வளவு தூரம் அதனுடைய பலன் நமக்குக் கிடைக்கும்…? என்று பார்த்துக் கொள்ளலாம்.

நீங்கள் நன்மை செய்தீர்கள் என்றால்
1.அதற்காக வேண்டித் தவறுகளை எல்லாம் ஒத்துக் கொள்ள வேண்டும்…
2.இந்தக் காலத்தில் சாட்சியங்கள் எல்லாம் அப்படித்தான் வரும்.

ஏனென்றால் “நன்மைகள் பல செய்யத் துணிவு வேண்டும்…!” இது குருநாதர் நமக்கு உணர்த்தியது.
1.நன்மை செய்ய வேண்டும் என்றால் மன உறுதி வேண்டும்.
2.பின் விளைவுகள் வராதபடி பாதுகாக்கக்கூடிய அந்தத் திறனும் ஞானமும் வேண்டும்.
3.நன்மை செய்பவர்களுக்குக் கெடுதல்கள் நிறைய வரும்
4.அதையெல்லாம் சமாளிக்கக் கூடிய வலிமை வேண்டும்.

இது எல்லாம் சாதாரண அனுபவத்தில் நான் (ஞானகுரு) தெரிந்து கொண்டது.

ஆகவே இந்த வாழ்க்கையில் மிகவும் ஜாக்கிரதையாகவும் சிந்தனையுடனும் இருத்தல் வேண்டும். எதையுமே பரிசீலனை செய்து “வழி நடத்துதல் வேண்டும்”
1.அன்பை மட்டும் செலுத்தினால்… அந்த அன்பைக் காக்கக்கூடிய சக்தி வேண்டும்.
2.ஆகவே பண்பை நமக்குள் எப்படி உயர்த்த வேண்டும் என்ற நிலையைச் சிந்திக்க வேண்டும்.
3.அவசரப்பட்டோ ஆத்திரப்பட்டோ உணர்வுகள் வெளிப்பட்டால் அது பகைமை உணர்வுகளையே தூண்டும்.
4.பகைமை என்ற உணர்வு தோன்றி விட்டால் வெறுப்பு என்ற உணர்வுகள் தோன்றும்.
5.வெறுப்பு என்ற உணர்வுகள் தோன்றி விட்டால் நமக்குள் வெறுக்கும் உணர்வே வளரும்.

ஓம் நமச்சிவாய என்று இந்த உணர்வுகள் வேலை செய்யும். பகைமை என்ற உணர்வுகள் வரும் பொழுது ஓம் நமச்சிவாய என்று உடலுக்குள் உருவாகும். அந்த அணுக்கள் நமக்குள் பெருக எந்த வகையில் அந்த அணுக்கள் உருவானதோ அதுவாகவே நம்மை இயக்கும்.

உதாரணமாக ஒரு விஷச் செடியின் அணுக்கள் உருவாகிவிட்டால் நல்ல செடிக்கு வரக்கூடிய சத்தினை அது கெடுத்து விடுகின்றது. அது போல் நாம் நுகரும் வேதனை உணர்வுகள் அணுக்களாக உருப்பெற்று விட்டால் அந்த உணர்ச்சிகள் அதிகமாகும் பொழுது அதனுடைய வலிமை ஜாஸ்தி.
1.நம்மிடம் இருக்கும் நல்ல குணங்களுக்கு அதற்குண்டான சத்து கிடைக்காதபடி தடைப்படுத்தும்.
2.நல்ல குணங்கள் வாடும். நல்ல குணத்தை உருவாக்கிய அணுக்கள் அது சுருங்கத் தொடங்கும்… நோயாக மாறும்.
3.இந்த விஷத்தன்மை அதிகமாக மாறி நம்மை அறியாமலே நல்ல பண்புள்ளவர்களை மாற்றி அமைத்துவிடும்.

பக்தியில் உள்ளவர்கள் கோயிலுக்குச் சென்று எல்லோருக்கும் நன்மை தானே செய்தேன்… என்னைச் சோதிக்கின்றாயே…? என்று இந்த வேதனையைத் தான் நுகர முடிகின்றது. வேதனையிலிருந்து மீளும் நிலை இல்லாது போய் விடுகின்றது.

இயற்கையிலே ஒன்றை ஒன்று பார்த்து… உணர்வின் தன்மை நுகர்ந்து நம்மை மனிதனாக உருவாக்கியது இந்த உயிர் தான். மனிதனாக ஆன பின் நல்ல உணர்வுகளை… அருள் உணர்வுகளை… சீராக நுகரவில்லை என்றால்
1.நுகர்ந்த உணர்வுகள் இந்த உடலுக்குள் மாற்றத்தை ஏற்படுத்தி நோயாகி
2.மனிதனல்லாத உருவையும் அடுத்து உருவாக்கி விடுகின்றது.

இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

மனிதனுக்குள் விளைந்த உணர்வின் தன்மை

மனிதனுக்குள் விளைந்த உணர்வின் தன்மை

 

உதாரணமாக…
1.யாகம் நடக்கும் இடங்களில் மந்திரத்தை ஓதுகிறார்கள்… நாம் அதை உற்றுக் கேட்டோம் என்றால் அந்த மந்திரங்கள் நமக்குள் பதிவாகி விடுகின்றது.
2.சோமபானம் என்ற நிலையை இணைத்தால் நம் சிந்திக்கும் தன்மை இழக்கப்படுகின்றது.

எதனை எண்ணினோமோ அதன் வழி செல்கின்றது இதன் வழி நாம் செல்லும் இந்த உடலின் உணர்வுகள் பதிந்த பின் கேட்டறிந்த நிலைகள் பிறிதொரு உணர்வின் இயக்கமாகவே வருகிறது.

ஆலயங்களில் இந்தத் தெய்வம் தான் எல்லாவற்றையும் காக்கும் என்று சொல்லும் பொழுது யாகத் தீயிலே பல பொருள்களைப் போட்டு மணத்துடன் அந்த எண்ணத்தைப் பரப்புகின்றனர்.

நாம் நுகர்ந்தறிந்த நிலையில் தெய்வம் நல்லது செய்யும் நம்பிக்கையில் அதை நுகர்கின்றோம். நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் பட்டபின் இதன் வழி அந்தத் தெய்வத்தைக் கண் கொண்டு உற்றுப் பார்க்கின்றோம்.

அங்கே வைத்திருக்கும் சிலையின் உருவமும் அங்கே அலங்கரித்த நிலைகளும் பதிவாகி நமக்குள் வருகின்றது அதிலிருந்து வரக்கூடிய மணத்தையும் மற்றதையும் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்தது அலைகளாக வருகின்றது.

அந்த அலையை நுகரப்படும் பொழுது உருவத்தைக் காண முடிகின்றது… அங்கே இருக்கக்கூடிய நிறங்களையும் காண முடிகின்றது. அதனின் மணத்தையும் உணர முடிகின்றது.

இப்படி நாம் உணர்ந்த உணர்வின் தன்மை நம் உடலுக்குள் வந்தபின் மடிந்தோம் என்றால் என்ன நடக்கிறது…?

இந்த மந்திரத்தை ஜெபித்தால் நீ முருகனைக் காணலாம் என்று சொல்லியிருப்பார்கள். எந்தெந்த குணங்களின் தன்மையோ அதற்குண்டான பதார்த்தங்களை வைத்து அவர்கள் ஜெபிக்கின்றனரோ
1.மனித உடலுக்குள் இந்த உணர்வுகள் கலந்த பின் இறந்தான் என்றால்
2.சூட்சும சரீரத்தில் முருகனைப் போன்று காட்சி தரும்… காளியைப் போன்று காட்சி தரும்.
3.காளியைப் போன்று அசுர உணர்வு கொண்டு செயல்பட்டால் இவன் குணமும் அதே நிலைகள் மாறும்… அசுர செயல்களையே செயல்படுத்துவான்.
4.கருப்பண்ணசாமியோ மாடசாமியோ போன்ற கொடூர உணர்வுகளை நுகர்ந்தால் அதனுடைய செயல்களே நமக்குள் வரும்… பார்க்கலாம்.
5.அருளாடும் போது அசுரத்தனமாக உணர்வுகள் பாய்ச்சப்பட்டு இயக்கும்.

ஆனால் அந்த உணர்வுகள் அவனுக்குத் தெரியாது. அது வேதனை என்ற நிலையாகி பல துன்புறுத்தும் நிலைகளையும் பார்க்கலாம். அவன் அறிய முடியாது. அவன் உடலுக்குள் இருக்கும் உணர்வுகள் அதைத் தாங்கிக் கொள்ளும்.

1.தீமிதி என்ற நிலை வரும் பொழுது அந்த அக்கினியைத் தனக்குள் நுகர்ந்தால்
2.யாகத் தீயைப் போட்டு அதன் வழி இன்னொரு மனிதன் மடிந்திருந்தால் அந்த உணர்வை நுகர்ந்தால்
3.தீயைப் போட்டு மிதித்து இருப்பான் (இறந்தவன்) என்றால்… இவன் அந்தத் தீமிதியைத் தாங்கும் நிலை வருகின்றது.

தீமிதி விழா என்று நாம் கொண்டாடும் பொழுது இதன் வழி விளைந்து அந்தத் தாய் மீது பற்று கொண்டோர் உணர்வுகளும் அதன் வழி மடிந்தால் இந்த உணர்வை மற்றவர்கள் நுகர்ந்தால்
1.தீமிதி விழா என்று வரும் பொழுது அந்த உணர்வின் தன்மை கொண்டு அவனுக்குத் தீயைத் தாங்கும் வல்லமை உண்டு.
2.இது எல்லாம் மனிதனுக்குள் விளைந்த உணர்வின் தன்மை இங்கே வருகின்றது.

ஒரு ஆவியின் தன்மை உடலில் இணைந்து இயக்கப்பட்டால் நெருப்பிலே மிளகாயைப் போட்டோம் என்றால் அந்த நெடியைச் சுவாசித்து நாம் தான் எழுந்து வர வேண்டுமே தவிர “ஆவி பிடித்த அந்த உடலுக்குத் தும்மலும் வராது எதுவும் செய்யாது…”

இதைப் போன்ற இயற்கையின் நிலைகள் மாறி வரும் இந்நிலையில் நாம் இதையெல்லாம் உணர்ந்தால் நாம் எதனைப் பெற வேண்டும்…? எந்த வழியில் வாழ வேண்டும்…? இந்த உடலுக்குப் பின் என்ன…? என்ற நிலையை நாம் சிந்தித்துச் செயல்படுவது மிகவும் நலம்.

குரு காட்டிய அருள் நெறி கொண்டு அவரிடம் 20 வருடம் பெற்ற அனுபவத்த
1.ஒரு உயிர் தோன்றி மனிதன் வரை எவ்வாறு வளர்ச்சி பெற்று வந்தது…?
2.சூரியன் தோன்றிய பின் உயிரணுக்கள் எவ்வாறு உருவானது…? என்று குரு காட்டிய அருள் வழியில்
3.அவர் கண்ட நிலையில் உயிரணுக்களின் தோற்றங்களும் மாற்றங்களும் என்ற நிலையைத் தெளிவாகக் கூறியதைக் கண்டுணர்ந்த பின்பு தான்
4.நீங்களும் இதைப் பெற முடியும்… அறிய முடியும் என்று உணர்த்துகின்றேன்.

இந்த வாழ்க்கையில் இனி எது வேண்டும்…? பிறவி இல்லா நிலை வேண்டும் பிறவா நிலை வேண்டும். அந்த அருள் பெறுவதற்குத் தான் துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஒவ்வொரு நொடிப் பொழுதும் எடுத்துப் பழக வேண்டும் என்று சொல்வது.

அந்தச் சக்திகளை நாம் ஏங்கிப் பெறுவோம். அதை நமக்குள் கூட்டுவோம். வாழ்க்கையில் தன்னை அறியாது வரும் நஞ்சுகளை மாற்றுவோம்.
1.தீமை வரும் பொழுதெல்லாம் துருவ நட்சத்திரத்தின் உணர்வு கொண்டு அதை இடைமறித்து
2.இருள் சூழச் செய்யும் உணர்வினை மாற்றி நமது வாழ்க்கையில் பேரருளை உருவாக்கும் அழியா ஒளிச் சரீரம் பெறுவோம்.

மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட கதிரியக்கப் பொறிகளின் பின் விளைவுகள்

மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட கதிரியக்கப் பொறிகளின் பின் விளைவுகள்

 

சூரியன் எலக்ட்ரிக்கை உருவாக்குகின்றது. மற்ற நட்சத்திரத்தின் அளவுகோல் வரும் பொழுது அதன் வழி மோதி எலக்ட்ரிக் என்ற நிலையும் மோதலின் உணர்வுகளை நமது பிரபஞ்சம் முழுவதும் பரவுகின்றது… மற்ற கோள்களையும் இயக்கும் தன்மை பெறுகின்றது.

பிரபஞ்சத்தில் இந்தக் காந்தப்புலனறிவு தான் உருவாகின்றது. பிரபஞ்சமே அதன் வழி தான் இயங்குகின்றது.

இருப்பினும் மனிதனால் உருவாக்கப்பட்ட கதிரியக்கப் பொறிகள் வானிலே வீசப்படும் பொழுது அது சூரியனில் மோதும் பொழுது என்ன நடக்கிறது…?

ஒரு மேக்னட் (டைனமோ) அதிகமாகச் சுழன்றால் காந்த சக்தி அதிகமாக உருவாக்கப்பட்டு அந்தக் காந்தத்தின் பவர் அதிகமாகி அதில் இணைக்கப்பட்ட சிறு பல்பின் தன்மை ஃபியூஸ் ஆகி விடுகிறது.

இதைப் போல தான் நமது உயிர் எலக்ட்ரிக் என்று இயக்கிக் கொண்டிருக்கும் பொழுது சூரியன் எலக்ட்ரிக்கை உருவாக்கிக் கொண்டிருக்கும் பொழுது
1.அதிலே வரக்கூடிய உணர்வினை அணுகுண்டின் கதிரியக்கப் பொறிகள் சூரியனில் தாக்கப்படும் பொழுது
2.ஒரு நொடிக்குள் இரு மடங்கு எலெக்ட்ரிக் அதிகமாகிவிடும்.
3.அதனுடன் தொடர்பு கொண்ட அனைத்திலும் அந்த இயக்கச் சக்தி பாய்கின்றது.

ஒரு அணுவின் தன்மை ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது எப்படி மின்னலாக மாறுகின்றதோ… இதைப் போல சூரியனில் மனிதனால் செயற்கையால் உருவாக்கப்பட்ட கதிரியக்கப் பொறிகள் அதிகமாக மோதும் காலம் வந்து கொண்டே இருக்கின்றது.
1.அதனால் நம் உயிரில் உருவாக்கப்படும் எலக்ட்ரிக் வேகமாகச் சுழன்று
2.அந்த உணர்வு வரும் பொழுது நம் உடலில் உருவாக்கப்பட்ட அணுக்களின் தன்மை அனைத்தும் ஃப்யூசாகிவிடும்… நினைவுகள் இழந்து விடும்.
3.அசுர குணங்களே வரும்… உயிர் மடியாது… உணர்வுகள் மடிகின்றது… உணர்வுகள் மாறுகின்றது.
4.மனிதனாக உடலில் இருப்பினும் உணர்வுகள் சிதைந்து விட்டால் சிந்தனையற்ற நிலை ஆகிவிடும்.

இன்றும் சிலரை நாம் பார்க்கின்றோம். பித்துப் பிடித்தது போல் இருக்கின்றார்கள். மற்றவர் தாக்கினால் அவனுக்குத் தெரிவதில்லை. உடலில் பல காயங்கள் இருப்பினும் ஈ எறும்பு அதைக் கடித்தாலும் அதை அவன் உணர்வதில்லை.

இதைப் போன்ற நிலைகளில் உடல்கள் சிதைந்து மடிந்து மனிதனல்லாத உருவைப் பெரும் தகுதி தான் உருவாகும். உணர்வின் இயக்கத்திற்கொப்ப உணர்வினை உடலாக மாற்றும் தன்மையே வருகின்றது.

இதைப் போன்ற கொடுமையிலிருந்து நாம் மீள நமது குருநாதர் காட்டிய அருள் வழிப்படி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நுகர்தல் வேண்டும்.

நாம் நுகர்ந்த உணர்வுகள் எந்த ஞானத்தின் தன்மை பெற்றோமோ அந்த அருள் ஒளியாகப் பெருகுகின்றது.
1.“எண்ணத்தால் தான்” இதை எடுக்கின்றோம்.
2.சூரியன் தனக்குள் துருவ நட்சத்திரத்தின் சக்திகளைக் கவர்ந்து வரும் பொழுது நாம் நுகர்ந்தால்
3.அந்த உணர்வின் எண்ணங்கள் நமக்குள் வருகின்றது.

எண்ணத்தின் தன்மை வரப்படும் பொழுது எதை எண்ணி ஏங்குகின்றோமோ அந்த உணர்வின் தன்மை அது நமக்குள் கருவாகிறது. துருவ நட்சத்திரத்திலிருந்து வருவதைப் பெற வேண்டும் என்று ஏங்கும்போது அதன் உணர்வின் தன்மை நமக்குள் கருவாகி அது உருவாகின்றது. “அது எப்படித் தீமைகளை வென்றதோ அந்த ஞானம் நமக்குள் வருகின்றது…”

அந்த உணர்வின் தன்மை உடலாகும் பொழுது சிவமாகின்றது.
1.அகஸ்தியன் எப்படி ஒளியாக மாறினானோ… அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் எடுத்தால்
2.மின் கதிர்கள் பாய்ந்தாலும் அதனை எளிதில் பாய்ச்சி நம் உடலுக்குள் அந்தச் சக்தியைப் பெருக்குகின்றது… “மின் அணுக்களாக” மாற்றுகின்றது.

எப்படி மின்னட்டாம் பூச்சி தனக்குள் எடுத்துக் கொண்ட நிலைகள் அதனுடைய துடிப்பில் மோதும் பொழுது “அதன் உடலின் பின் பகுதியில் வெளிச்சம் வருகின்றதோ” இதைப் போல
1.நம் உயிரின் துடிப்பின் தன்மை மின் கதிர்களாக மாற்றுகின்றது.
2.இந்த நிலையில் மனிதனான நாம் அருள் ஒளியின் உணர்வை நுகர்ந்து நமக்குள் உருவாக்கினால்
3.இந்த உடலுக்குப் பின் இனி உடல் இல்லை… மனித உடலின் ரூபம் மாறி ஒளியின் நிலையைப் பெறுகின்றோம்.

கணவன் மனைவி இருவருமே இதை ஏங்கிப் பெற்று இந்த உணர்வின் தன்மை அறிவாக மாற்றி அருள் ஒளியாக மாற்றிப் பேரொளியாக மாறும் நிலை வருகின்றது.

அந்த வழியினைப் பெற்றவர்கள் தான் சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்தும் வளர்ந்தும் கொண்டுள்ளார்கள். “நாமும் அவர்களுடன் இணைய முடியும்…”

நல்லதைக் காப்பதற்காக “அடுத்தவர்களிடம் நாம் வாதம் செய்ய வேண்டியதில்லை”

நல்லதைக் காப்பதற்காக “அடுத்தவர்களிடம் நாம் வாதம் செய்ய வேண்டியதில்லை”

 

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கஷ்டங்கள் இருக்கிறது. அதை எல்லாம் மறந்து விட்டு
1.நாம் இப்படித் தான் நல்லதாக வர வேண்டும் என்ற நிலையில் அந்த மெய் ஞானிகளின் உணர்வைப் பாய்ச்சி
2.எல்லோரையும் மகிழ்ந்து வாழச் செய்வதற்குத்தான் கூட்டுத் தியானங்களை அமைத்திருக்கின்றோம் (ஞானகுரு)
3.ஆகவே தியானத்தை கடைப்பிடிப்போர் அனைவருமே வாரத்தில் ஒரு நாளாவது கண்டிப்பாகக் கூட்டுத் தியானம் இருக்க வேண்டும்.

கூட்டுத் தியானத்தில் எடுக்கின்ற சக்தியை வைத்துத் தான் அதிகாலை விழித்ததும் வீட்டிலே நீங்கள் தனித்து எடுத்தாலும் துருவ தியானத்தின் மூலமாக அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றல்மிக்க சக்திகளைப் பெற ஏதுவாக இருக்கும்.

அதற்கடுத்து உங்கள் குலதெய்வங்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து அவர்களைப் பிறவியில்லா நிலைகள் அடையச் செய்யத் தியானிக்க வேண்டும்.

இதை எல்லாம் உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் பக்குவப்படுத்தி வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு மட்டும் செய்துவிட்டு அப்படியே விட்டு விடக் கூடாது… அனுதினமும் செய்ய வேண்டும்.

வாழ்க்கையில் எப்போது குறையைக் காணுகின்றோமோ உடனே அது நமக்குள் வராதபடி தடுத்துப் பழக வேண்டும். “ஈஸ்வரா…!” என்று புருவ மத்தியில் எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்.

சந்தர்ப்பவசத்தால் பிறருடைய நிலைகளை நாம குறையாக எடுத்துக் கொண்டோம் என்றாலும் கூட மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து நமக்குள் துடைத்துக் கொண்டு
1.“நீங்கள் உண்மையை உணர்வீர்கள்…!” என்று மட்டும் சொன்னாலே போதும்.
2.வேறு ஒன்றும் சொல்ல வேண்டாம்… அந்தக் குறை நமக்குள் வராது.
3.அவர்கள் மீது அதிகமான வெறுப்பு உணர்வு கொண்டு ஜாஸ்தி பேச வேண்டியதில்லை.
4.சரி… எனக்கு வேண்டாம்… நீங்கள் சொன்னதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்…
5.நன்றாக இருப்பீர்கள்…! என்ற சொல்லிவிட்டு விலகிக் கொள்ள வேண்டும்.

நல்லதுக்காக நாம் அவர்களுடன் வாதம் செய்து கொண்டிருந்தால் நம்மை அறியாமலே பகைமை உணர்வுகளைத் தோற்றுவிக்கும்.
1.அவர்களை நினைக்கும் பொழுதெல்லாம் “என்ன சொன்னாலும் கேட்க மாட்டார்கள்…! என்ற சோர்வும் வேதனையும் நிச்சயம் வரும்.
2.அப்பொழுது அந்த வேதனையை எடுத்தால் சிந்திக்கும் தன்மை குறைகிறது.
3.இத்தகைய உணர்வுகளை எல்லாம் நம் உயிர் உருவாக்கிவிடும்.
4.அவர்களை நினைத்து வெறுப்பையும் வேதனையையும் நம்மை அறியாதபடியே நாம் வளர்த்துக் கொள்கிறோம்.

அந்த மாதிரி ஆகாதபடி அவர்கள் அறியாத இன்னல்களிலிருந்து விடுபட வேண்டும். மகரிஷிகளின் அருள் உணர்வுகள் அவர்கள் பெற வேண்டும். அவர்கள் அருள் ஞானம் பெற வேண்டும் என்று இந்த நினைவை எடுத்துக் கொள்ள வேண்டும். நமக்குள் வெறுப்பு வராது.

இது நமக்குள் ஒரு பழக்கத்திற்கு வந்தாக வேண்டும். குருநாதர் காட்டிய வழியில் இந்தத் தியானத்தைக் கடைப்பிடிக்கின்றோம் என்றால் மற்றவர்கள் மரியாதை கொடுக்கக்கூடிய அளவுக்கு நாம் வளர்ந்து காட்ட வேண்டும்.

“ஒரு தெய்வீகப் பண்புள்ளவர்கள்…!” என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்க வேண்டும். அப்படித் தோற்றுவிக்கும் நிலைகளுக்கு நாம் வளர வேண்டும். சேவை மனப்பான்மை வர வேண்டும்.

பிறருடைய தீமைகளை எண்ணாது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும். அவர்கள் தெளிந்த வாழ்க்கை வாழ வேண்டும் என்று அருள் உணர்வை அவர்களுக்குப் பாய்ச்சிட வேண்டும்.
1.நம் சொல் பிறருடைய தீமைகளைப் போக்கக்கூடியதாக வர வேண்டும்.
2.அந்தளவுக்கு நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு நிமிடமும் ஆத்ம சுத்தி செய்து விட்டு ஒரு மருந்தையோ மற்றதையோ நோய்வாய்ப்பட்டவர்களுக்கு எடுத்துக் கொடுத்தாலும் கூட அவர்களுக்கும் உதவியாக இருக்கும். கூடுமான வரையிலும் அவர்கள் நோய் நீங்கும்.

ஆனால் அதற்காக வேண்டி மருந்து குடிக்காமலே நல்லதாக வேண்டும் என்பதில்லை. உடனடி நிவாரணத்திற்கு அந்த மருந்து உதவும்.
1.ஆனால் அந்த மருந்திற்கு வீரியம் ஊட்ட
2.உங்கள் வாக்கு நிச்சயம் பயன்படும்.

ஏனென்றால் ஒரு கடுமையான வேதனைப்படுவோர் உடலில் நல்ல மருந்தினைக் கொடுத்தாலும் அவரின் வேதனை உச்சகட்டம் ஆகி விட்டால் மருந்து கொடுத்தாலும் அது ஏற்றுக் கொள்ளாது

அதற்காக வேண்டி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் உடல் முழுவதும் படர வேண்டும் அவர்கள் உடல் நலம் பெற வேண்டும் என்ற இந்த உணர்வை நமக்குள் எடுத்து விட்டு அந்த உணர்வுடன் மருந்தை அவரை உட்கொள்ளும்படி செய்தால் உடனடியாக அது நல்லாகும்.

என்ன இருந்தாலும்
1.தூசியைத் துடைக்கின்ற மாதிரி அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை எடுத்து எடுத்து
2.உடனுக்குடன் நாம் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
3.அதே சமயத்தில் நமது நினைவாற்றல் முழுவதும் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடனே இருக்க வேண்டும்.
4.தீமை செய்யும் எண்ணங்களை முறித்திட வேண்டும். நீக்கிட வேண்டும். அந்த உணர்வுகள் நமக்குள் வளரக் கூடாது.

கல்யாணராமா…! அதாவது எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு பிறருடைய தீமைகளை அகற்றிவிட்டு தம்முடன் இணைந்து வாழும் உணர்வை ஒவ்வொரு நிமிடமும் செயல்படுத்த வேண்டும்.

“ஆயுள் கால மெம்பர்கள் கடைப்பிடிக்க வேண்டிய முறை இது…”

சந்தேக உணர்வின் விளைவுகள்

சந்தேக உணர்வின் விளைவுகள்

 

தன் கணவன் ஒருவரோடு பழகுகின்றார் என்று வைத்துக் கொள்வோம். அவரிடம் சிரித்துப் பேசிக் கொண்டிருந்த உடனே.. நேரடியாகப் பார்க்கும் மனைவி அதைச் சந்தேகப்படுகின்றார்.

அந்தச் சந்தேகப்படும் உணர்வுடன் கலந்து மனைவி நுகர்ந்து விட்டால் அதன் உணர்வின் தன்மை திருப்பிப் பாய்ச்சப்படும் போது அந்த உணர்வின் அணுக்கள் இங்கே வருவதும் இதனால் தன் மனதில் “மனக் கலக்கம்” ஆகும் உணர்ச்சிகள் தோன்றுகின்றது.

அதே போல் கணவன் மனைவி மேல் வெறுப்படைந்து இதே போல் சந்தேக உணர்வு ஏற்பட்டால் இந்த உணர்வுகள் இதனுடன் கலக்கப்பட்டு இங்கே மனதில் கலக்கத்தின் தன்மை ஏற்படுகின்றது.

இப்படி வெறுப்படையும் உணர்வுகள் இருவருக்குள்ளும் வரும்போது
1.உடலுக்குள் எதிர்நிலைகள் உருவாக்கப்பட்டு
2.நல்ல குணங்களை உருவாக்குவதற்கு மாறாகத் தீமையின் உணர்வுகளைத் தான் அந்த அணுக்கள் மாற்றும்.

இப்படி மாற்றி வரப்படும் போது பகைமை உணர்வுகள் சேரத் தன் உடலுக்குள் மீண்டும் தீமையின் உணர்வுகளை விளைவிக்கும் தன்மையாக வந்துவிடும்.

ஆனால் அதே சமயத்தில் தொழில் சம்பாதிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அந்த விருப்பத்தை என்ன செய்யும்…! இப்போது எதற்கடா…? என்று தோன்றும்.

ஆனால் அதே சமயத்தில் எப்படியும் சம்பாரிக்க வேண்டும் நம் குடும்பத்தைப் பெரிதாக்க வேண்டுமென்று நினைப்பார்கள்.

பிறகு அந்த நிலைகளில் பலவீனமான நிலைகள் அடையும் பொழுது வளர்த்து வந்த தன்மையும் இழந்து மற்ற உணர்வின் தன்மை தன் உள்ளடக்கும் தன்மை வருகிறது… பகைமை உணர்ச்சிகளே வரும்.

1.அப்போது நம்மை எது இயக்குகின்றது…?
2.நாம் தவறு செய்கின்றோமா…? என்றால் இல்லை…!
3.சந்தர்ப்பம்… இவ்வாறு நுகரப்படும்போது நம் உணர்ச்சிகளை மாற்றி சந்தேகப்படுபவர்களாக இரண்டு பேரையும் மாற்றி விடுகின்றது.

இதனின் விஷத்தன்மை மனித உடலையே அழிக்கச் செய்யும். தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குச் செல்லும். இல்லையென்றால் ஏன் எதற்கு என்று வாழ்க்கையையே விரயமாக்கச் செய்யும். கணவன் மனைவியைப் பிரித்து வாழச் செய்யும்.

ஆகவே பிரித்து வாழும் போது வேதனையின் தன்மை உருவாகும். இதைப் போல இந்த உணர்வுகள் அதிகமாக விளைந்தால் என்ன ஆகும்…?

மனிதனாகப் பிறந்தும்
1.விஷத்தின் தன்மை கொண்டு தனக்குத் தானே எமனாகவும் மனித உருவுக்கு எமனாகவும்
2.இரண்டு பேருமே பெற்றுக் கொள்ளும் தன்மை வருகின்றது.

இப்படி விளையும் உணர்வுகள் எதிர் நிலையாகப்படும் பொழுது நரகலோகத்தையே சந்திக்க நேர்கின்றது…! ஏன் வாழ்கின்றோம்…? எதற்காக வாழ்கின்றோம்…? என்று இந்த உணர்வுகள் இரண்டு பாலருக்கும் இருக்கும்.

இரண்டு பேருக்குள்ளும் இப்படி மனப் போராட்டங்கள் ஏற்படும் பொழுது இந்த உணர்வுகள் பித்த சுரப்பிகளில் வேதனை உணர்வுகள் (விஷம்) அதிகரித்து கடும் நோயாக மாறிவிடுகிறது. அதை மாற்ற வேண்டுமல்லவா…!

அகஸ்தியனும் மனைவியும் நஞ்சினை வென்று ஒன்றாக இணைந்தனர். துருவத்தின் எல்லையில் இருந்து வரக்கூடிய உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றினர். இன்றும் ஒளியின் சரீரமாகத் துருவ நட்சத்திரமாக இருக்கின்றனர்.

என்னை குருநாதர் அந்தத் துருவ நட்சத்திரத்தில் ஆயுட்கால மெம்பராக ஆக்கினார். அதே போல்
1.மனித வாழ்க்கையில் இருளை நீக்கித் துருவ நட்சத்திரம் எப்படி ஒளியாக இருக்கின்றதோ
2.அதிலே நீங்களும் ஆயுட்கால மெம்பராக இணைந்து என்றும் ஒளியாக நிலை பெற வேண்டும்.
3.இருள் சூழ்ந்த நிலைகள் உங்கள் மனதை மாற்றக்கூடிய நிலைகள் வரக்கூடாது.

தங்க நகை செய்யப் பித்தளை செம்பு போன்ற சில பொருட்களை அதனுடன் இணைக்கின்றோம். அடுத்த நகை செய்யும் பொழுது திரவகத்தால் இதைப் பிரித்து தங்கத்தைச் சுத்தப்படுத்திக் கொள்கின்றோம்.

இதைப் போல் நமக்குள் மனப் போராட்டங்கள் பல சந்தர்ப்பத்தில் இணைந்தாலும் திரவகத்தை ஊற்றித் தங்கத்தைத் தெளிவாக்குவது போல
1.மனிதனின் வாழ்க்கையில் வரும் இப்படி சந்தேக உணர்வுகளும் மற்ற நிலைகளும் கடும் விஷத்தின் தன்மையை உருவாக்குவதற்கு மாறாக
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் கவர்ந்து தனக்குள் இணைத்தோம் என்றால்
3.கணவனும் மனைவியும் ஒன்றி வாழும் நிலை ஏற்படும். மகிழ்ந்து வாழச் செய்யும்.

நல்லது எது…? கெட்டது எது…?

நல்லது எது…? கெட்டது எது…?

 

குருநாதர் என்னைக் காடு மேடெல்லாம் அலையச் செய்து ஒவ்வொரு உணர்வுகளும் நீ நுகரப்படும் போது என்ன செய்கின்றது…? என்று பச்சிலையின் ரூபமாகக் காட்டினார்.

1.ஒரு பச்சிலையை நுகர்ந்த பின் அது உனக்குள் எப்படிப் பேசுகின்றது…? என்று பார் என்கின்றார்.
2.அதை நுகர்ந்த உடனே அந்தப் பச்சிலை பேசுமா…? என்று கேட்கின்றார்.

எப்படி சாமி பேசும்…! என்றேன்.

இப்பொழுது பேச வைக்கின்றேன் பார்…! என்று பச்சிலையை நசுக்கி என்னை நுகரச் செய்தார். நுகர்ந்தவுடனே “ஓ…ய்” என்று பேச ஆரம்பிக்கின்றது… ஐய்யய்ய… என்று ஒரு மாதிரியாக உமட்டலாக வருகின்றது.

1.இப்பொழுது எது பேசுகின்றது…? நீ பேசுகின்றாயா…? இல்லை… அந்தப் பச்சிலையா…?
2.இப்படி ஒவ்வொரு இலைகளையும் நுகரப்படும் பொழுது உணர்த்துகின்றார்.

திடீரென்று என்னை ஓங்கி அடிக்க வருகிறார். அப்பொழுது அடிக்க வந்தவுடன் நுகர்ந்தவுடன் என்ன செய்தது…? யார் அடிக்க வந்தது…? நுகர்ந்த உணர்வு உனக்குள் வந்து உன்னைப் பயப்பட வைக்கிறது.

அப்பொழுது நீ பயந்தாயா…? நான் செய்த செய்கையை நீ நுகர்ந்த பின் உன்னைப் பயமுறுத்தச் செய்கின்றது. அப்பொழுது நீயா…? இல்லை நானா…?

1.இதில் இரண்டையும் சொல்லி இப்படி எல்லாம் வினாக்களைக் கேட்பார்.
2.ஏனென்றால் இதை அனுபவ ரீதியில் ஒவ்வொன்றையும் உணர வைக்கின்றார்.

சில நேரங்களை எடுத்துக் கொண்டோம் என்றால் இதை ஏதாவது ஒன்று சொல்வார். இது நல்லதா… கெட்டதா…? என்பார். நல்லது என்று சொன்னால் எப்படி நல்லது…? என்பார் கெட்டது என்று சொன்னால் எப்படிக் கெட்டது…? என்பார்.

இந்த வினா கொடுப்பதற்கு முன்பே கெட்டது என்று சொன்னாலும் கூட எப்படி கெட்டது என்று…! நல்லது நல்லதும் அல்ல கெட்டது கெட்டதும் அல்ல என்பார்.

இப்பொழுது நீங்கள் நல்ல தேனும் பாலும் சுவையாகச் சாப்பிடுகிறீர்கள்… அது நல்லது தானே…!
1.ஆனால் உடம்புக்கு முடியாத நேரத்தில் இதைச் சாப்பிட்டால் என்ன செய்கின்றது…? எதிர்நிலையாகின்றது.
2.அப்பொழுது இது நல்லதா… கெட்டதா…? என்பார்.

இதைச் சொல்லிவிட்டு இது எல்லாம் நல்லது தானே..! எப்படி நீ நல்லது என்று சொல் பார்ப்போம்…? என்று கேட்பார். உடம்பு முடியாமல் போனால் நல்லதை நீ சாப்பிட்டவுடன் அது நல்லது செய்கின்றதா இல்லை கெட்டது செய்கின்றதா…? என்பார்.

1.எவ்வளவு நாசூக்காக அவருடைய உணர்வுகளை உணர்த்துவதற்காக வேண்டி அனுபவரீதியாகக் கொடுக்கின்றார்.
2.ஆனால் மனிதன் வாழ்க்கையில் இந்த மாதிரி சந்தர்ப்பங்கள் நல்லது நல்லதும் அல்ல கெட்டது கெட்டதும் அல்ல.

இப்பொழுது நாம் மருந்து சாப்பிடுகின்றோம்… அது கசப்பாக இருக்கின்றது. ஆனால் நோயை நீக்கக்கூடிய தன்மை இருக்கின்றது. மருந்தைச் சாப்பிட்டவுடன் என்ன செய்கின்றது…?
1.நமக்குள் இருக்கக்கூடிய கெட்டதை நீக்கிவிட்டு நல்லது ய்கின்றது.
2.அப்பொழுது அந்த மருந்துக்குள் இருக்கக்கூடிய கசப்பின் உணர்ச்சி என்ன செய்கின்றது…? நமக்கு நல்லது செய்கின்றது அல்லவா…!

ருசியின் தன்மை இருக்கும் போது நீ ருசியாகச் சாப்பிடுகின்றாய். சாப்பிடும் போது உனக்கு ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் என்ன செய்கின்றது…? வயிற்று வலி வருகின்றது தலைவலி வந்து விடுகின்றது வாந்தி வந்து விடுகின்றது எல்லாம் வந்து விடுகின்றது. அப்பொழுது இது எப்படி நல்லதாகும்…? என்று கேட்கின்றார்.

ஆக நாம் நுகரும் உணர்வுகளை இயக்குவது யார்…? நமது உயிர். அப்பொழுது நமக்குக் கடவுள் யார்…? நமது உயிர். அந்த உணர்வின் தன்மையை நாம் இயக்கி உடலில் உணர்வின் தன்மை அணுவாகி விட்டால் நம் உள் நின்று குணத்தின் தன்மை உயிரைப் போலவே உள் நின்று கடவுளாக இயக்கும்.

1.அது தான் ஓமுக்குள் ஓம் ஓமுக்குள் ஓம் ஓமுக்குள் ஓம் பிரணவத்திற்குள் பிரணவம்.
2.இயக்கத்தின் தன்மை எப்படி இருக்கின்றது…? என்று காட்டுகின்றார்.

ஆகையினாலே நாம் இந்த ஆயுட்கால மெம்பராக இருப்பதெல்லாம் எப்போது நமக்குத் தீமை என்று தெரிகின்றோமோ அப்போதே அதைக் கொன்று பழக வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று அது நமக்குள் வளராது ஆத்ம சுத்தி செய்து அதை நாம் அடக்கிப் பழக வேண்டும். அதை வளரவிடக் கூடாது.

நாம் மிளகாயை அள்வாகக் குழம்பில் போடும்போது அது ருசியாக வருகின்றது. அதே மிளகாய் அதிகமாகி விட்டால் ருசி கெடச் செய்கிறது. ஆகவே நாம் தீமை என்ற கார உணர்ச்சிகளை நுகரும் போதெல்லாம் கொன்று பழக வேண்டும்.

குழம்பில் அதிகமாக காரம் இருந்தால் இரண்டாவது முறை சாப்பிடத் தோன்றுமா? உஷ்…உஷ்… என்று தள்ளி விட்டுவிடுகிறோம். அப்போது அதைச் சாப்பிடுகின்றோமா…? இல்லை.

இதை போல தான் ஒவ்வொரு நிமிடத்திலும் ஒருவர் தீங்கு செய்தான் என்று தெரிகிறது. இப்படித் தீங்கு செய்தானே இப்படிச் செய்தானே இப்படிச் செய்தானே என்று நாம் உள்ளுக்குள் போட்டவுடன் என்ன செய்கின்றது…? நமக்குள் இருக்கக் கூடிய நல்ல குணங்களை எல்லாம் கொல்கின்றது. ஆக நல்ல குணங்களைச் செயலற்றதாக மாற்றும்.

அப்பொழுது நாம் எதைக் கொல்ல வேண்டும்…?
1.அவனை எண்ணி அவன் வழியில் நமக்குள் இருக்கும் நல்ல குணங்களைக் கொல்வதா…?
2.ஆனால் நமக்குள் இருக்கும் நல்ல குணங்களைக் காக்க… தீமை என்று உணர்வு நமக்குள் வருவதை அதைக் கொல்வதா…?

நன்றாக யோசனை செய்து பாருங்கள்.

அந்த உயர்ந்த சக்திகளை அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெறுவதற்காக குருநாதர் எப்படி ஆயுட்கால மெம்பராக என்னை இணைத்தாரோ அதே போல் ஆயுட்கால மெம்பராக உங்களையும் இணைக்கின்றேன்.

அகஸ்தியன் எப்படித் தன் வாழ்நாளில் நஞ்சினை வென்றானோ கணவன் மனைவி ஒன்றாக இணைந்தனரோ இரு உயிரும் ஒன்றென இணைந்து ஒளியின் சரீரமாகப் பெற்றனரோ… அதன் வழிப்படி இந்த ஆயுட்கால மெம்பர்கள் உங்கள் குடும்பத்தில் அன்புடனும் பற்றுடனும் பரிவுடனும் வாழ்தல் வேண்டும்.

தன்னை அறியாது வரும் தீயவினைகளை…
1.இராமாயணத்தில் பரதன் சொன்னது போல அந்தத் தீமை என்ற உணர்வுகளை
2.அப்போதே அதைக் கொன்று அருள் உணர்வினைத் தனக்குள் பெருக்கிப் பழகுதல் வேண்டும்.

ஆயுட்கால மெம்பராக வந்தவர்கள் நீங்கள் இதனை வழிப்படுத்தி நடத்தி இந்த உடல் தான் கடைசி உடல் என்ற நிலையில் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரம் பெறுங்கள்.

நம்மைப் பலவீனப்படச் செய்வது எது…?

நம்மைப் பலவீனப்படச் செய்வது எது…?

 

நான் என்னுடைய அனுபவத்தில் சொல்கின்றேன். 20 வருட காலம் குருநாதர் காட்டிய அருள் வழியில் எதை எதை எப்படி எல்லாம் நுகர்கின்றோமோ…? அது எல்லாம் எப்படி என்னை இயக்குகிறது…? என்று அதைக் காட்டுகின்றார்.

உதாரணமாக காட்டுக்குள் செல்லப்படும் பொழுது ஒரு மோசமான இலை இருக்கின்றது. அதை நசுக்கியவுடன் ரொம்ப நாற்றம் அடிக்கின்றது.
1.நாற்றம் அடிக்கின்றது என்று முகத்தைச் சுளித்தால்
2.இந்த உணர்வின் தன்மை முகத்தைச் சுளிக்க வைப்பது எது…? நீயா… இல்லை அந்தப் பச்சிலையா…? என்று கேட்பார்.

அந்த பச்சிலையின் உணர்வு உயிரிலே பட்ட பின் அந்த உணர்ச்சியின் தன்மை உடலாக்கப்பட்டு
1.அந்த உணர்ச்சிகள் உன்னை எப்படி முகத்தைச் சுளிக்க வைக்கின்றது…?
2.வாந்தி உமட்டல் எப்படி வருகின்றது…?
3.இது எதனுடைய காரணம்…?

நீ நுகர்ந்த உணர்வு தான் அதை இயக்குகின்றது. இயக்குவது யார்…? உயிரே…! ஆக அந்த உயிர் இயக்கும் உணர்வுகளில் இருந்து இது எப்படிச் செயல்படுகின்றது…? என்பதனை இப்படித் தெளிவாக்குகின்றார்.

இதைப்போல் எத்தனையோ வகையான பச்சிலைகளை நுகரும்படி செய்கிறார். சந்தர்ப்பங்களில் என்னை இடக்கு முடக்கான இடங்களில் கொண்டுபோய் ஏற்றி வைத்துவிட்டு நீ இங்கே இரு… நான் வருகின்றேன்…! என்று போய்விடுவார்.

அப்பொழுது அவர் போனவுடனே என்ன நடக்கிறது…? அவர் இருக்கும் பொழுது முதலில் தைரியமாக இருந்தது. ஆனால் அதற்குப் பின் அந்த இடத்திலிருந்து கீழே இறங்க முடியாத நிலையும் பயம் கொள்ளும் உணர்ச்சிகளை எனக்குள் ஊட்டுகிறது.

இந்த உணர்வுகள் தோன்றிய பின் அதன் பின் நம் உடலில் நுகர்ந்த உணர்வுகள் என்னென்ன செயல்கள் செயல்படுகின்றது…? அதிலிருந்து நீ எப்படி விடுபட வேண்டும்…? என்று இவ்வளவும் ஞாபகப்படுத்தினாலும்
1.அந்தப் பயம் என்ற உணர்வு வரப்படும் பொழுது இதை மறந்து விடுகின்றோம்.
2.மறந்தவுடன் நடுக்கம் ஆகின்றது… மன உறுதியே இருக்காது. நாக்கு கூட சில நேரங்களில் வறண்டு போகும்.

ஒரு ஆபத்தான இடத்தில் விட்டவுடன் அந்த உணர்ச்சியின் வேகம் வரும்போது இதை உற்றுப் பார்க்கும்போது நாக்கு வறட்சியாகி விட்ட்து. தண்ணீருக்கு எங்கே செல்வது…? அப்பொழுது வறட்சி ஆகும்போது பலவீனமடைகின்றது.

இதையெல்லாம் எது இயக்குகின்றது…?

1.நீ உன்னுடைய எண்ணத்தால் நுகர்ந்த நிலை உன்னைப் பலவீனப்படுத்தச் செய்து
2.அப்பொழுது நீ எடுக்கும் மன பலம் குறைகின்றது.
3.இங்கே வறட்சி ஆகின்றது. உன் உடலில் வேர்வையாகின்றது.

ஆக இதன் உணர்வுகள் உள் நின்று வெப்பமாகி இதன் உணர்வுகள் ஆவி ஆக்கப்படும் போது நீ எந்தப் பொருளைத் தொட்டாலும் அது வழுக்கும் தன்மை வருகிறது. மீண்டும் இங்கே உன் பலவீனம் தான் காட்டப்படுகின்றது.
1.பலவீனம் காட்டுவது எது…?
2.உன்னுடைய எண்ணம் தான்.

உயிரிலே பட்டு இயக்குவது யார்…? அந்த உயிரே தான். அந்த உணர்ச்சியின் தன்மை உன் உடலில் இயக்குவது யார்…? இந்த உயிரே தான் என்ற நிலையில் இப்படி ஒவ்வொரு நிலைகளையும் தெளிவாகக் காட்டுகின்றார்.

நீங்கள் சற்று சிந்தித்துப் பாருங்கள். இதைத்தான் ஞானியர்கள் அரங்கநாதன் என்றும் இந்த அரங்கத்திற்குள் உணர்வின் தன்மை மோதும் போது அந்த உணர்ச்சிகள் (ஆண்டாள்) நம்மை ஆளுகின்றது… அது சொல்லைக் கேட்பவரையும் ஆளுகின்றது என்று தெளிவாக்கினார்கள்

இப்பொழுது வேறு ஒன்றும் தேவையில்லை. நாம் கொஞ்சம் தைரியமாக இருப்போம், ஒருத்தர் முடியாத நிலையில் அவர் பலவீனமான உணர்வை நுகர்ந்த பின் அந்த நாதத்திற்கொப்ப அந்த உணர்ச்சிகள் இயக்கப்பட்டு அவருடைய செயலைப் பார்க்கும்போது நாம் வலுவாக இருப்பவர்கள் என்ன செய்வோம்…?

என்னப்பா…? இதற்கெல்லாம் போய் நடுங்கிக் கொண்டிருக்கின்றாய்…! என்று நாம் கேலி செய்வோம். ஆனால் அவருக்கு அங்கே முடியாத நிலை. ஆனால் நாம் கேலி செய்வோம்.

அந்தக் கேலியின் தன்மை சிரிக்கச் சிரிக்க மீண்டும் அவருடைய பலவீனத்தைத் தான் ஊட்ட முடியும். ஆனால் அவருக்குத் தெளிவூட்டுகின்றோமோ…?

ஆனால் அதே சமயத்தில்
1.அவன் முடியாத நிலைகளை நாம் நுகர்ந்து விட்டால் அடுத்து இந்த மாதிரிச் சந்தர்ப்பம் வரும்போது நமக்கும் இதே மாதிரி நடுக்கம் வரும்.
2.நடுக்கம் வரும்போது யாராவது சிரித்தால் நமக்கு உடனே கோபம் வரும்.
3.என்னைப் பார்த்து அவன் கிண்டல் செய்கின்றான் பார் என்று கோபம் வரும்… அல்லது பதட்டம் வரும்.

ஆக
1.அந்தந்தச் சந்தர்ப்பத்திற்குத் தக்கவாறு நுகர்ந்த உணர்வுகள் உணர்ச்சிகளாக பரவப்பட்டு
2.நம்மை ஆளுவது நாம் எண்ணிய எண்ணங்கள் தான் என்பதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே நமது வாழ்க்கையில் நாம் இதைப் போன்ற நிலைகளில் இருந்து நாம் ஒவ்வொரு நிமிஷமும் எத்தனையோ வகையான ஆயிரக்கணக்கான நிலைகள் வருகின்றது. அதிலிருந்தெல்லாம் நாம் விடுபட வேண்டும்.

மந்திரம் தந்திரம் தெரிந்தவர்களிடம் பழக்கம் வைப்பது நல்லதல்ல

மந்திரம் தந்திரம் தெரிந்தவர்களிடம் பழக்கம் வைப்பது நல்லதல்ல

 

இன்றும் நமது நாட்டில் பல நிலைகள் இருக்கின்றது. உதாரணமாக எடுத்துக் கொண்டால் திருநெல்வேலியில் டாக்டர் இருக்கின்றார் அவர் பல நிலைகளில் சென்று வந்தவர். இருந்தாலும் குட்டிச் சாத்தான் என்ற நிலைகளை வைத்து மந்திரவாதிகளிடம் பழக்கம் உள்ளவர்.

ஆனால் அந்தக் குட்டிச் சாத்தான் இவர் வீட்டில் இருக்கும் நகைகளை எடுத்துக் கொண்டு போகிறது. இங்கே தபோவனத்திற்கு வந்து ஒரு வாரம் தங்கி இருந்தார்கள்.

இங்கே தங்கி இருக்கும் பொழுது நகைகள் போகவில்லை. மறுபடியும் அங்கே வீட்டிற்குப் போனவுடன் நகைகள் போகின்றது.

நான்கு பவுன் செயின் கழுத்தில் இருந்தால் எடுக்க முடியாது. இவர் கழுத்தில் உள்ளதைக் கழட்டி என்ன செய்கின்றார்…? தலையணைக்கு அடியில் வைத்தார். எடுத்துக் கொண்டு போய் விட்டது. இரவு எனக்குப் ஃபோன் செய்கின்றார்.

இது வரை பத்தாயிரம் நோட்டு… கட்டாக அப்படியே எடுத்துக் கொண்டு போய்விட்டது. குட்டிச்சாத்தான் ஏவல் தான் அது.

இந்த மந்திரவாதிகள் ஜீ…பூம்பா… வரும் என்று சொல்கிறார்கள் அல்லவா.
1.நமக்குச் சொத்து கிடைக்கும் சுகம் கிடைக்கும் என்று அவர்களிடம் ஜாஸ்தி பழகியவர்.
2.இப்பொழுது பழகியவுடன் என்ன ஆகிவிட்டது…? இங்கே இருக்கும் காசு எல்லாம் எடுத்துக் கொண்டு போய் விடுகின்றது.

சிலருக்கெல்லாம் இந்த நோட்டைக் காட்டுகிறார்கள் அல்லவா. சில தாயத்துகளை எடுத்துக் காட்டுவார்கள். வீட்டில் வைத்துவிட்டு அதை அப்படியே எடுத்து வரும்.

அதே மாதிரி நீங்கள் வீட்டில் நோட்டை வைத்திருந்தால் எடுத்துக் கொண்டு வந்து கொடுக்கும். இன்னொரு வீட்டில் லட்டு வைத்திருந்தால் அதை எடுத்துக் கொடுக்கும். ஆனால் அந்த மந்திரவாதியை லட்டைச் சாப்பிடச் சொன்னால் சாப்பிட மாட்டான்.

இந்த மாதிரி ஒரு குட்டிச்சாத்தான் ஒரு மனித உணர்வின் தன்மையை இப்படி முச்சந்தி மண்ணை எடுத்துக் கொண்டு போய் அதுவும் அமாவாசை காலம் கூப்பிட்டோம் என்றால் அது குட்டிச்சாத்தான் என்றால்… கரு கலைந்த சிதைந்த அதற்கு மேல் இதை வைத்து… அதற்காக வேண்டி சில மந்திரங்களைச் செய்து இந்த உணர்வை எடுத்து அந்த ஆவியை அழைத்துக் குட்டிச்சாத்தான் ஆக வைத்துக் கொள்வார்கள்.

அதை மற்ற பக்கம் ஏவல் செய்யும் பொழுது அது இவன் சொல்லும் வேலையை எல்லாம் செய்யும்.
1.நகையை எடுத்துக் கொண்டு வரச் சொன்னால் எடுத்து வரும்.
2.ஒரு பொருளைத் தொட்டுக் கரைத்து விடு என்றால் கரைத்து விடும்… ஆவியாக மாறும் அவன் கைக்கு வந்துவிடும்.

இந்த மாதிரி எல்லாம் இன்றைக்கு மனிதனைப் பயன்படுத்துகிறார்கள். அரசர் காலங்களில் செய்த கொடுமை. ஆனால் இனி விஞ்ஞான உலகம் வந்த பின் நாம் அறிந்து கொண்டோம். இனி நாம் என்ன செய்ய வேண்டும்…?

1.இந்த உடலுக்குப் பின் நாம் பிறவியில்லா நிலை அடைதல் வேண்டும்.
2.ஆக நாம் அதைத்தான் அதிகமாக விரும்ப வேண்டும்.

எத்தகைய நிலைகள் இருந்தாலும் ஆயுள் கால மெம்பராகச் சேர்ந்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நுகர்ந்து என்றும் பிறவியில்லா நிலையை அடைவது தான் நம்முடைய முழு நோக்கம்.

ஆக அந்த அருளைப் பெற்றால் இருளை நீக்க முடியும். கையில் விளக்கை எடுத்துக் கொண்டால் என்ன செய்யும்…? அங்கிருக்கும் பொருள் தெரியும்.
1.அவ்வப்போது ஆத்மசுத்தி செய்து கொண்டால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுக்கும் பொழுது
2.நாம் எப்படிச் செயல்படுவது…? என்கிற சிந்தனை வரும்.
3.அதற்குத் தக்க உபாயமும் கிடைக்கும். ஆக நாம் நல்வழிப்படுத்தி நம்மை வழி நடத்திக் கொள்ள அந்தச் சக்தி கிடைக்கும்.

இல்லை என்றால் நாம் கோயிலுக்குப் போய் எல்லாம் செய்து மந்திரம் செய்து யாகத்தைச் செய்து பாவத்தைப் போக்கி விடுவோம் என்றால் அது நடவாது.

இடைஞ்சல் வந்தது என்றால் வாஸ்து சாஸ்திரத்தைப் பார்த்து… “இந்த வீட்டு வாசல்படியை இப்படி இடித்துப் போடு… அப்படி இடித்துப் போடு… இதை மாற்று…!” என்றால் சம்பாதித்த காசைஸ் செலவழித்துக் கொண்டே இருக்க வேண்டியது தான்.

ஆசையின் நிமித்தம் இன்னொருத்தர் செய்தால் இதை இப்படிச் செய்தால் நன்றாக இருக்கும் என்பான் இன்னொரு வாஸ்து சாஸ்திரக்காரன். அப்பொழுது எந்த வாஸ்து சாஸ்திரத்தைப் பார்ப்பது…?

ஜாதகத்தை பார்த்தாலே இன்றைக்கு எடுத்துக் கொண்டால் இன்றைக்கு ஒரு பஞ்சாங்கத்தை எடுத்துக் கொண்டால் ஒன்று போல எல்லாம் இருக்கின்றதா…? என்றால் இல்லை.

கௌரி பஞ்சாங்கத்தில் ஒரு விதமாக ஆற்காடு பஞ்சாங்கத்தில் ஒரு விதமாய் இருக்கின்றது இந்த மாதிரி பஞ்சாங்கத்தை எடுத்துக் கொண்டால் மூன்றையும் பார்த்தால் மூன்றும் மூன்று விதமாக இருக்கின்றது.

நீங்கள் எதை நம்புவீர்கள்…?

அவரவர்கள் எடுத்துக் கொண்ட்து இதுதான் சரி என்கின்றார்கள். அவர்கள் அதைத் தான் சரி என்கின்றார்கள் ஆனால் அவன் சொன்னது ஒரு பஞ்சாங்கத்தை எடுத்து இது தான் பதிவாகி இருக்கின்றது இதுதான் எனக்குச் சரியாக இருக்கும் என்பான்.

அந்த உணர்வை எடுத்து வழிபடும் பொழுது இப்படி ஆகின்றது. அடுத்தவன் சொன்னால் இதை மோசம் என்போம்

ஆக இதன் வழி தான் உலகம் முழுவதற்கும் பஞ்சாங்கங்களைப் பார்த்து நடப்பதும்… நல்ல நேரம் வருகின்றதா…? கெட்ட நேரம் பார்ப்பதா…? என்று ஆகிவிடும்.

நல்ல நேரத்தையும் கெட்ட நேரத்தையும் உருவாக்கியவன் மனிதன் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான்.

1.மனிதனால் நல்ல நேரங்களை நல்ல காலங்களை உருவாக்க முடியும்.
2.நல்ல காலங்களை உருவாக்கக்கூடிய திறனை உங்களுக்கு கொடுத்து
3.ஆயுட் கால மெம்பராக இருப்பவர் எல்லாம் அடுத்தர்களுக்கு ஞானத்தைப் போதிக்க வேண்டும்.