குரு நாடி

குரு நாடி

 

மனிதனின் அன்றாட சமுதாய வாழ்க்கையில் காட்சிப் புலனறிவு… செவிப் புலனறிவு… உணர்வுப் புலனறிவு… நுகர்தல் புலனறிவு… சுவைத்தல் புலனறிவு… என்று ஜீவ சரீரம் கொண்டு அறிந்து தெளிந்து கொண்டே உள்ளோம்.

இருந்தாலும்… புலனறிவால் கவரப்பட்ட அந்த நிலைகள் ஏற்கனவே நமக்குள் பதிவான நிலைகளுடன் கலக்கப்படும் பொழுது தோன்றும் எண்ணங்களும் உணர்வுகளும் இரு வினைச் செயல்களாகச் செல்கிறது.

ஐம்புலனறிவு என்ற அந்தக் கருவிகளின் செயலில்
1.சரீரத்தில் உணர்வுகளின் வழியாக மோதிடும் இரு வகைச் செயல்பாட்டின் முறைகளை
2.அறிவின் ஆற்றல் தொடர் கொண்டு தெள்ளத் தெளிந்த மகரிஷிகளும் ஞானிகளும்
3.இந்த மனித சமுதாயம் உயர் நிலை பெறுவதற்காக உணர்த்திய மருத்துவம் மனோத்துவம் என்ற வகைகளில்
4.அவர்களால் புகட்டப்பட்ட அந்த நல்லாக்கப் பணிகளை இன்றைய சமுதாய அமைப்பு முழுமையாக ஏற்றுக் கொண்டு நற்பயன் பெற்றதா…?

சக்தி சிவன் என்ற மூச்சையே வகைப்படுத்தி அதிலுள்ள உண்மைகளைக் கூறினாலும் நடைமுறை வேறாகி விடுகிறதப்பா. உட்பொருளைக் கூறுவதிலும் தயக்கம் தான்.

எண்ணம் கொண்டு நல் சுவாசத்தினால்
1.ஆத்ம பரிசுத்தமும் ஆத்ம பலமும் பேரின்பப் பெரு வாழ்வும் பெற்றிட
2.இங்கே உணர்த்தப்பட்டுக் கொண்டு வரும் தியான வழி மூலம்
3.உடல் என்ற கூட்டில் “சிவனின் சித்திரம் தீட்டிட…!” சரீரம் காக்கப்பட வேண்டுமப்பா…!

“ஈஸ்வரா…!” என்று ஒலி நாதம் கூட்டுகின்ற சுவாச ஓட்டம் கண்டத்தில் (தொண்டை) செயல்படும் பொழுது அங்குள்ள நாடிகளின் சுவாசமே கதியாகும் விதம் உணர்வின் உந்துதல் கூட்டிச் செயல்படும் நிலைக்கு ஒலிக் காற்று என்று பெயர். அது சாப்பிடும் ஆகாரத்தை உள்ளிழுத்து விழுங்கவும் செயல்படுகின்றது.

விழி (கண்கள்) படம் எடுத்துச் செயல்படும் நிகழ்வுக்குச் சுவாச ஓட்ட நாடிகள் அங்கு செயல்படுவதை விழிக் காற்று என்று பெயர். இரு விழிகளையும் செயல்படுத்தும் அந்த நாடியானது மூலாதாரம் வரை செல்கிறது.

விழிப் பார்வையின் செயலில் காட்சிகள் மட்டுமா காண்கின்றாய்…?

சோம்பல் ஏற்படுத்துவதும் வேதனையின் பால் முக்கல் முனகல் முதலிய சரீரம் கொண்டு உணர்ந்திடும் அனைத்துச் செயல்களும்
1.சுவாசத்தில் சுதியும்… விழிக் காற்றும்…
2.எண்ணம் கொண்டே செயல்படுத்தும் நாடிகளும் செயல்படுகின்றன.

விழிகளைக் காத்திடும் ரப்பைகள் (இமைகள்) செயலுக்கும் ஓர் நாடி செயல்படுகிறது. காற்றின் செயலாக ரப்பைகள் இமைத்தலும் மற்றும் உணர்வுகளின் வழியாக மனிதன் சிரிக்கின்ற சிரிப்பும் அந்தச் சிரிப்புக்கும் அழகு உணர்வுகளுக்கும் செயல்பட்டே மூலாதாரத்துடன் இணைந்து செயல்படுகிறது,

1.கண்ணில் நீர் பெருக்கமும்
2.உடலையே கலகலத்துக் குறு குறுக்கும் உணர்வால் “தும்முதல்…!” என்று செயல்படுத்தும் காற்றும்
3.நாசி வழிப் பாதையில் ஓரிட அமைவு பெற்ற நாடியாகச் செயல்படுகின்றது.

எண்ணம் கொண்டு தான் அனைத்துமே…! என்றாலும் பிணிகள் இந்தச் சரீரத்தில் தோற்றம் காட்டுவதெல்லாம்
1.ஆங்காங்கு அமையப் பெற்ற சுவாச நாடிகளின் வழியும்
2.ஆங்காங்கு சுதியுறும் காற்றின் செயல் கொண்டே உபாதைகளை (வலிகளை) உணர்த்தும்.

நாம் எடுக்கும் எண்ணத்தின் வழியாக உணர்வுகளின் சம நிலை மாற்றப்படும் பொழுது சுவாசம் கனமாகின்றது. கனமான சுவாசத்தால் ஓட்ட நிகழ்வாக அகக்கருவிகளில் (ஐம்புலன்களில்) செயல்படுத்தும் நாடிகளின் இயக்கம் மாறுகின்றது.

எண்ணத்தின் உணர்வுக்கொப்ப ஆங்காங்கு ஓடிடும் காற்றின் சுதியே நாடிகளாகச் செயலுக்கு வரும் பொழுது துடிப்பின் நிலைகள் மாறுகின்றது.

உதாரணமாக நாம் எடுக்கும் எண்ணம் “பயம்..” கொண்ட செயலாக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது விழி படம் எடுத்து நாசி சுவாசம் எடுத்து செயல்படும் பொழுது
1.விழிகளைக் காத்திடும் ரப்பைகள் (இமைகள்) படபடத்து
2.சரீரம் முழுவதையும் சிலிர்க்கச் செய்திடும் செயலாகச் செயல்பட்டு
3.நாடியின் இயக்கம் மூலாதாரம் தொடங்கி விழிப் பார்வையில் அமையப் பெற்று
4.எண்ணம் கொண்டு எடுக்கும் சுவாசத்தின் வழி விழிக் காற்றாகச் செயல்படுகின்றது.

மார்பு தொடங்கி நாபியின் வழியோடி மூலாதாரத்தில் இணையும் ஓர் நாடி இதே தொடரில் எண்ண உணர்வுகளுக்கொப்ப விக்கலையும் சலிப்பு சோர்வு கொண்ட கொட்டாவியையும் சரீரத்தில் உருவாக்கிக் காட்டுகின்றது.

1.“குரு…!” என்று அழைக்கப்படுகின்ற ஓர் நாடி சரீரத்திலும் உண்டு.
2.அது செயல்படும் விதங்களின் உண்மையை உணர்ந்து கொண்டால்
3.விந்துவே நாத விந்து எனும் “பிந்து” (உருவாக்கும் சக்தி – CREATOR) என்ற செயல்பாட்டைத் தெளிந்து கொள்ளலாம்.

அந்த நாடி மூலக்காற்றுடன் செயல்படும்முன் மேலும் இரு நாடிகளை இணைத்துக் கொண்டு
1.உணவுகளின் கழிவுகளையும் சிறு நீரையும் வெளியேற்றுவதோடு
2.ஆண்களின் குறி ஸ்தானத்தில் விந்துவையும் உணர்வுக்கொப்ப வெளியேற்றிச் செயல் புரிகின்றது.

சரீரத்தில் கால் எலும்புப் பகுதிகளும் இடுப்பு எலும்புப் பகுதிகளும் சேரும் இடத்தில் “ஓர் மறைமுக நாடி” இயங்குகிறது.

அது சீதம் கபம் என்ற நிலைகளை உருவாக்கி நோயின் அறிகுறியைக் காட்டுகின்றது. அதாவது இருதய நாடிகளின் தொடர்பு கொண்டு காற்றின் செயலாகச் செயல்பட்டு அந்த உபாதைகளை வெளியே காட்டிடும் காற்றாகச் செயல்படுத்துகின்றது.

அதே காற்று உயிராத்மா பிரிந்த பிறகு உடலை மாற்றம் கொள்ளச் செய்து சரீரம் முழுவதும் (நீராக) வியாபித்தே
1.சரீர பிம்பத்தையே பெருக்கச் செய்து
2.வெடிக்கும் விதமாகச் செயலாக்குகின்றது.

பெண்களின் தாய்மைப் பேறு காலத்தில் சிசுவை வெளியேற்றத் தாய் தன் உணர்வு கொண்டு உந்தித் தள்ளும் நிலைக்கும் இந்த மறைமுகக் காற்றே உதவுகிறது.

இதே போல் சுவாசத்தின் ஓட்ட கதியில் சரீரத்தையே வழி நடத்திடும் செயல்களில் செவிகளில் செயல்படும் நிலைகளும் மற்றும் பல நிலைகளும் உண்டு.

மனித உடலுக்குள் நுண்ணிய நிலைகளில் செயல்படும் நாடிகளையும் அதற்குக் காரணமான காற்றின் இயக்கங்களையும் சிறுகச் சிறுகக் கோடிட்டுக் காட்டியுள்ளோம்.

புருவ மத்தியில் “ஈஸ்வரா…” என்று எண்ணி ஏங்கித் தியானித்தால் புருவத்தின் (ஈசன்) வழியாகச் சுவாசித்தால் முழுமையும் உங்களால் அறிய முடியும்… உணரவும் முடியும்.

தொழில் வளம்

தொழில் வளம்

 

தொழிலுக்காக ரோட்டிலே செல்லும் பொழுது நாம் பார்க்கக்கூடிய நிகழ்ச்சிகள் எத்தனையோ உண்டு.

ஒருவன் நடந்து போகும் போது கீழே விழுவான்… சைக்கிளில் இருந்து விழுவான்… ஒருவன் பராக் பார்த்துக் கொண்டு செல்வான்… ஒருவன் பஸ்ஸை வேகமாக ஓட்டிக் கொண்டு வருவான்… அதற்குள் ஒருவன் குறுக்கே நடப்பான்… வண்டிக்காரன் தொந்தரவு கொடுப்பான்… வேண்டுமென்றே பஸ்ஸுக்கு பஸ் இடைஞ்சல் செய்து கொண்டிருப்பார்கள்.

இதையெல்லாம் பார்க்கக்கூடிய நம் மனம் என்ன செய்கின்றது…?

1.அந்த உணர்வுகளை எல்லாம் சுவாசித்து வெறுப்பும் ஆத்திரமும் கோபமும் விரக்தியும் பயம் இது போன்ற எல்லா உணர்வுகளுமே உருவாகின்றது
2.இப்படி நமது வாழ்க்கையில் காலையிலிருந்து இரவு வரை நாம் எண்ணுவது அனைத்தையும் சதாசிவமாகிக் (உடலாக) கொண்டே உள்ளது.
3.நாம் எண்ணிய இந்த உணர்வின் சக்திகள் உமிழ் நீராகச் சேர்ந்து… உடலுக்குள் கெட்ட சக்தியாக உருவாகின்றது (சதா சிவமாக)
4.அதாவது நல்ல குணங்களுக்குள் இவைகள் ஊடுருவி அசுத்தங்களாகச் சேர்ந்து விடுகிறது.

வராக மூர்த்தியாக (பன்றியாக) இருக்கும் பொழுது கெட்டதை நினைக்காதபடி இருந்தது.

ஆனால் மனிதனாகும் பொழுது இப்பொழுது என்ன செய்கின்றோம்…? கெட்டதை எல்லாம் அதிகமாக நினைக்க வேண்டி வந்துவிடுகிறது.

மனிதனின் உடல் விஷத்தை நீக்கக்கூடிய சக்தி பெற்றதுதான். நல்ல வாசனையான உணவுப் பொருளைச் சாப்பிட்டாலும் அதில் இருக்கக்கூடிய மறைந்துள்ள நஞ்சை நம் உடல் நீக்குகின்றது.

இதைப் போன்று அதிலிருந்து தோன்றிய உணர்வின் எண்ணங்கள் கொண்டு நாம் இருந்தாலும்… நாம் கடைக்குச் செல்லும் பொழுது மேலே சொன்ன அத்தனை சம்பவங்களையும் பார்க்க நேர்ந்தது.

இத்தனை எண்ணங்களுடன் கடையைத் திறந்தால் வியாபாரம் சரியாக இருக்குமா…! ஆகவே… கடையில் சேர்ந்து அமர்ந்த உடனே ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்.

வியாபாரத்திற்காக வாங்கி வைத்த சரக்குகளை எல்லாம் “உற்றுப் பார்த்து”
1.மகரிஷிகளின் அருள் சக்தி இந்தப் பொருள்கள் அனைத்திலும் படர வேண்டும்
2.இதை உபயோகப்படுத்துவோர் அனைவரும் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும்
3.அவர் வாழ்க்கையில் நலமும் வளமும் பெற வேண்டும்
4.என் சொல் அவர்களுக்கு இனிமையாக வேண்டும்
5.என் பார்வை அவர்களுக்கு உயர்ந்த நிலை பெறச் செய்ய வேண்டும்
6.நாங்கள் பார்ப்பதெல்லாம் நலம் பெற வேண்டும்
7.என்னுடைய வாடிக்கையாளர் அனைவருமே வாழ்வில் நலமும் வளமும் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்

இந்த எண்ணங்களுடன் தான் கடையில் இருக்கும் சரக்குகளை நாம் உற்றுப் பார்க்க வேண்டும். எனக்கு வியாபாரமாகவில்லை நஷ்டம் ஆகின்றது என்று எண்ணக் கூடாது.

செய்யும் தொழிலே தெய்வம்…!

அங்கே நீங்கள் தெய்வமாக இருந்து வருவோரின் பசிக்கோ மற்ற நிலைகளுக்கோ பொருளைக் கொடுத்தாலும்… அவர்கள் அதற்காகக் காசு கொடுத்தாலும்… நம் பார்வையால் சொல்லால் உயர்ந்த உள்ளத்தை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். நம்மிடம் வாங்கிச் சென்ற பொருளைப் பயன்படுத்தும் போது அவர்களுக்குள் அது மகிழ்ச்சியூட்டும் நிலையாக வரும்.

ஆனால் சங்கட உணர்வுகளை எண்ணிக் கொண்டு கடையில் அமர்ந்து… வரும் வாடிக்கையாளர் இரண்டு தரம் கேட்டால்… பதிலுக்கு நாம் அழுத்தமாகச் சொல்லிவிட்டால் அந்தச் சங்கடத்தால் வெறுப்பாகி வியாபாரம் குறைவாகிவிடும்… நம் நல்ல சரக்கையே மட்டமாக்கி விடும்.
1.நம்முடைய சொல்லே நம்மிடம் அணுக விடாதபடி
2.மற்றவர்களை விலகிச் செல்ல செய்துவிடும்.

அது போன்ற நிலை உருவாகாதபடி தொழிலிலும் நம் சொல்லுக்குள் நல்லதை உருவாக்கும் நற்சக்திகளாக… நல்ல தெய்வங்களாகச் செயல்படுத்த வேண்டும்.

நமக்குள் இருக்கக்கூடிய 1008 சக்திகள் கொண்டு நாம் இடும் மூச்சலைகள் பிறருக்கு நன்மையாகும் பொழுது… தொழிலில் நாம் எடுத்துக் கொண்டது நல் உணர்வை ஊட்டும் சக்தியாக நமக்குள் வளர்கின்றது.

இதைத்தான் “ஓம் நமச்சிவாய…” என்று சொல்வது.

நாம் எடுத்துக் கொண்ட சக்தி சிவமாக சக்தியாகி… சிவாய நம ஓம்… நம் உணர்வுகள் உடலுக்குள் நல் சக்திகளாக விளைந்து அந்தச் சக்தியின் சொல்லின் உணர்வின் நிலையை தான் மற்றவர்களை இயக்கச் செய்கின்றது.

இது தான் “சிவாய நம ஓம்” நமச்சிவாய என்ற தத்துவத்திற்குள் இருக்கக்கூடிய உள் பொருள் இதுதான்.

ஆகவே எங்கே சென்றாலும் அங்கே அமர்ந்து இது போன்று செய்து பழகுங்கள்.

கடைக்குச் சென்று வீட்டுக்கு வந்தாலும்… வீட்டிற்குள் வந்தவுடன் ஆத்ம சுத்தி செய்து…
1.நம் வீடு முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்
2.என் சொல் என் வீட்டில் உள்ள அனைவருக்கும் இனிமை ஊட்ட வேண்டும்
3.என் பார்வை என் வீட்டில் உள்ளவரை நலம் பெற உதவ வேண்டும்
4.குடும்பத்தில் ஒற்றுமை வர வேண்டும் வீட்டிற்கு வருவோர் அனைவரும் நலமும் வளமும் பெற வேண்டும் என்று
5.இது போன்று சிறிது நேரம் எடுக்க வேண்டும்.

ஏனென்றால் வராகனாக இருக்கும் பொழுது அந்தச் சரீரத்திலே இதைத்தான் செய்தது. அப்படிச் செய்து தான் மனிதனாக இன்று வந்திருக்கின்றோம் கெட்டதை நீக்கும் ஆற்றலைப் பெற்று வந்துள்ளோம்.

அந்த ஆற்றலை நாம் செம்மையாகப் பயன்படுத்த யாம் (ஞானகுரு) சொல்லும் இந்த முறையைத்தான் கையாள வேண்டும்.

சப்தரிஷிகளுடன் ஒன்றிணைந்து நீங்கள் வாழுங்கள்

சப்தரிஷிகளுடன் ஒன்றிணைந்து நீங்கள் வாழுங்கள்

 

விஞ்ஞானிகளால் பரீட்சித்துப் பார்க்கப்பட்ட அணுகுண்டுகளும் விஷக்கதிரியக்கங்களும் நம் பூமிக்குள் தான் சுழன்று கொண்டுள்ளது. அவர்கள் பூமிக்குள் வெடித்ததும் சரி… பிரபஞ்சத்திற்குள் வெடித்ததும் சரி… சூரியனுடைய ஈர்ப்பு வட்டத்திற்குள் தான் “நஞ்சின் தன்மையாகப் படர்கின்றது…”

வான மண்டலமும் மற்றதும் மாறுபடப்படும் பொழுது…
1.மனிதனுடைய சிந்தனைகள் பூண்டோடு அழிக்கப்பட்டு
2.ஆரம்ப காலங்களில் எப்படி மனிதர்கள் வாழ்ந்தார்களோ… அதாவது மிருகங்களைப் போன்று வாழும் நிலை உலகம் பூராம் மாறப் போகின்றது.

ஆனால் இந்த பூமி மீண்டும் பரிசுத்தமாக வேண்டும் என்றால் பல நூறு ஆண்டுகள் ஆகலாம். அப்படி ஆநாலும்… காட்டு மனிதர்கள் அவர்களுக்குள் சிறுகச் சிறுக சிந்தனைகள் உருவாகி… மீண்டும் மனிதனுடைய நிலைகள் இப்போது எப்படி வளர்ச்சி ஆகி வந்ததோ… அதைப் போல் பல சுற்றுகளில் நாம் வந்து… இந்தப் பூமி பல முறைகள் மாறி… மனிதனாக வரும் நிலை பின்னாடி தான் உருவாகும்.

ஆகையினால் நம் பூமி கூடிய சீக்கிரம் வியாழன் கோள் போன்று பரிமணம் பெறும் தகுதி பெறுகின்றது

விஞ்ஞான அறிவால் ஏற்படுத்தப்பட்ட நச்சுத்தன்மைகள் அனைத்தும் பிரபஞ்சத்தில் சேர்க்கப்பட்டு… சூரியனுடைய ஒளிக்கதிர்கள் கிடைக்காது தடைப்படுத்தும் நிலை வரப்போகின்றது. அப்படித் தடைப்படுத்தும் நிலை வரும் பொழுது…
1.நீர் நிலைகள் பூமியிலே அதிகமாகப் பெருகி எடை கூடி… அதனால் சுழற்சியின் வேகம் அதிமாகி
2.சூரியனுடைய ஈர்ப்பை விட்டு விலகிச் செல்லும் நிலை வருகின்றது.
3.அப்படி இறங்கும் நிலை வந்து விட்டால் ஐஸ் பாறைகளாகக் குளிர்ந்து விடும்
4.எந்த நேரத்தில் இது ஏற்படும்…! என்று சொல்ல முடியாது.
5.ஒரு நொடிக்குள் இந்த பூமியினுடைய சுழற்சி வட்டத்தில் இருக்கும் நீர்கள் அனைத்தும் உறைந்து பனிப் பாறைகளாகிவிடும்.

நன்றாகத்தான் இப்பொழுது பேசிக் கொண்டிருந்தார்… திடீரென்று மயக்கம் ஆனார். பரிசோதித்துப் பார்க்கும் பொழுது இரத்தமே இல்லை என்பார்கள். ஏனென்றால் சில் விஷத்தின் தன்மை பாய்ந்த உடனே இரத்தத்தில் இருக்கும் செவ்வணுக்கள் பூராம் மாறி… வெள்ளை அணுக்களின் இயக்கம் அதிகமாகி… அதனுடைய சத்துக்களை இது உறிஞ்சிவிடும்.

இதைப் போன்று தான் பூமியின் தன்மையும் ஒரு நொடியில் பெரும் கோளாக மாறி வியாழன் கோளைப் போன்று வெகு வேகமாகத் தானே பிரிந்து செல்லும் நிலை வரும்.

இதனுடன் வந்த சந்திரனும் இதன் அருகில் இருக்கக்கூடிய செவ்வாய் மற்ற கோள்களும் பிரிக்கப்படுகின்றது ஏனென்றால் சூரியனுடைய ஆற்றலைக் காட்டிலும் தடைப்படுத்தும் நிலை வரும் பொழுது இடைப்பட்ட நிலைகள் கொண்ட சில நிலைகள் சூரியனை விட்டு விலகிச் செல்லும்.

விஞ்ஞானிகள் இதைக் கண்டு கொள்ள வேண்டும் என்றால் வெகு காலமாகும். குருநாதர் காட்டிய உணர்வின் தன்மை கொண்டு இந்த உண்மையை இயக்கங்களை அது எவ்வாறு…? என்பதை அவர் காட்டினார். அவர் சொன்ன வழிப்படி தான் இதை வெளிப்படுத்துகின்றோம்… ஆகவே
1.இனி கூடுமானவரையிலும் நம் நினைவலைகளை
2.ஞானிகள் காட்டிய வழியில் மாற்றிக் கொள்வது மிகவும் நல்லது.

இல்லை என்றால் கூடிய விரைவில் மனிதனுடைய சிந்தனைகள் அது மாறப் போகின்றது. நாம் அதிலே சிக்கக் கூடாது.

மனிதனாகப் பிறப்பது மிகவும் அபூர்வம். இப்போது யாம் உபதேசிக்கும் இதைப் போன்ற ஞானத்தின் வழித் தொடர்பைப் பெறும் சந்தர்ப்பமும் அபூர்வம்…!

என் (ஞானகுரு) மனைவி உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும் பொழுது குருநாதரைச் சந்திக்க நேர்ந்த்து. மனைவியை அவர் குணப்படுத்திணார். அதன் மூலம் எனக்குக் கிடைத்த சந்தர்ப்பம் தான் இந்த ௷ய் ஞானத்தைப் பெறும் வாய்ப்பு கிடைத்தது.

எனக்குக் கல்வியறிவு இல்லா விட்டாலும்…
1.குருநாதர் காட்டிய வழியில் அவர் பதிவு செய்த ஞான வித்துக்களைக் கூட்டி வளர்த்துக் கொண்டேன்.
2.அப்படி வளரத்ததிலிருந்து பல வித்துக்களை உருவாக்கும் தன்மையை குருநாதர் உருப்பெறச் செய்தார்.

அதைக் கேட்டறியச் செய்து ஆற்றல் மிக்க நிலைகளை உங்கள் உடலில் உள்ள 1008 நல்ல குணங்களுக்குள் பதிவு செய்து… உரமாக… ஊட்டம் கொடுத்துக் கொண்டு வருகின்றேன்.

அதனின் துணை கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை வளர்த்து எதிர்காலத்தில் வரும் தீமைகளிலிருந்து உங்களை நீங்கள் மீட்டிக் கொள்ள இது உதவும்.

அதற்குத்தான் இதை உணர்த்துகின்றேன்.

யாம் உபதேசிப்பதை அடிக்கடி அடிக்கடி நீங்கள் கேட்கப்படும் பொழுது
1.சூரியனின் காந்தப்புலனால் அது கவரப்பட்டு இங்கே நாம் வாழும் இடங்களில் சுழன்று கொண்டே இருக்கும்.
2.யாரெல்லாம் உயர்ந்த சக்திகளைப் பெற வேண்டும் என்று ஏங்குகின்றார்களோ
3.அவர்கள் எல்லோருக்கும் இது கிடைக்கக்கூடிய வாய்ப்பாக அமையும்.

தன்னை அறியாமல் ஆட்டிப் படைக்கும் தீமையிலிருந்தும் நோய்களிலிருந்தும் நீங்கள் விடுபட முடியும். மனிதன் என்ற முழுமை அடைய முடியும்.
1.சப்தரிஷிகள் அவர்கள் குடி கொண்டிருக்கும் இடங்களுக்கு
2.அவர் உணர்வுடன் கலந்து… அவர்களுடன் ஒன்றிணைந்து வாழ முடியும்.

அந்தத் தகுதியை நீங்கள் எல்லோரும் பெற வேண்டும் என்பதற்குத்தான் இந்த உபதேசத்தை உங்களுக்குக் கொடுப்பது.

சுவாச நாடிகளைக் காட்டுவதே நாகர் உருவம்

சுவாச நாடிகளைக் காட்டுவதே நாகர் உருவம்

 

சரீரத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நாடிகள் எழுபத்தி இரண்டாயிரத்திலும் சகலத்தையும் ஆட்டுவிக்கும் நாடிகளான
1.பொன் போல் நிறம் காட்டிய சூரியன் என்ற வலது நாசித் துவாரமும்
2.சந்திரகலை என்ற இடது நாசித் துவாரமும்
3.அக்கினி என்ற மறைமுக நாடியையும் அறிந்து கொண்ட ஞானிகள்
4.அண்ட சராசரங்களின் செயலை அதாவது அந்த ஆதிசக்தியின் சூட்சமத்தையே
5.மனித உடலான ஜீவ பிரம்ம சரீரத்திலேயே கண்டனர் ஞானிகள்.

உயிராத்மா பிறவி எடுத்து எடுத்துத் தான் எடுத்துக் கொண்ட சரீரம் கடைசியில் மரணத்தின் பிடியில் ஆட்படுவதையே அன்றைய சித்தன் “காளியின் உருவமாக…!” அமைத்துக் காட்டினான்.

1.ஆத்ம சக்தியை வலுக்கூட்டிக் கொள்ளாத ஜீவன்கள்
2.சரீரத்தில் மறைந்துள்ள சக்தியைத் தன் உயிராத்ம வலுவிற்கு ஈர்த்துச் செயல் கொள்ளாத ஜீவன்கள்
3.உலகோதயப் பிடிப்பில் நாத விந்துச் சக்தியின் வலுவை இழந்து
4.எண்ணிறந்த பிறவிகள் எடுத்து மீண்டும் மீண்டும் அவஸ்தைப்படுவதையே
5.காளி என்ற உருவில் பயமுறுத்தும் தன்மைக்குச் சித்தர்களால் காட்டப்பட்டது.

அதே சமயத்தில் வினைக்கு நாயகன் விநாயகா என்று உயிரை முதன்மைப்படுத்தி உருவகமாகவும் காட்டியுள்ளார்கள். பின்னிப் பிணைந்த நிலையில்
1.இரு நாகர்கள் எழுந்து நின்று ஒன்றை ஒன்று பார்ப்பது போல் உருவமும்
2.இரண்டிற்கும் நடு மையத்தில் சிவலிங்கமும்
3.விநாயக உருவத்திற்கு எதிர்புறம் மூஷிகமும் காட்டினார்கள்.

மனித உடல் பெற்ற பின் தன்னைத் தான் உணர்ந்து மேலான நிலை பெற வேண்டி கீழான நிலையை விலக்கித் தன் உயிராத்மாவை ஜோதி நிலை பெறச் செய்ய ஜோதித் தத்துவமாக உயிரும் ஆத்மாவும் ஒன்றாகக் கலந்து உயர் நிலை பெறவே அனைத்துமே போதனை ஆக்கப்பட்டன.

இந்த மனித சமுதாயம் நல் நிலை பெற வேண்டும் என்று புகட்டப்பட்ட பாட நிலைகளில் எத்தனை உயிராத்மாக்கள் உண்மையின் பொருளை உணர்ந்து கொண்டனர்…?
1.எண்ணத்தைத் தெளிந்து ஒவ்வொரு உயிராத்மாவும்
2.சுயப்பிரகாசமாகச் (ஒளிச் சரீரம்) சக்தி பெற்றிடவே இந்தப் பாடங்கள்…!

மூவுலகம் என்ற சுவாசத்தின் தன்மைகளை அறிந்து வான இயலாகக் காலத்தைக் கணித்த ஞானி சரீர பிம்பத்தைக் கொண்டே உயர் ஞானம் சித்திக்கும் வழியையும் காட்டினான்.

1.வலது சுவாச நாடி வலது கால் பெருவிரல் தொடங்கி மேல் எழுவதைப் போல்
2.இடது சுவாச நாடி இடது கால் பெருவிரலிலிருந்து மேல் கிளம்பி
3.கபாலத்தை நோக்கிச் சிரசின் உச்சிக்குச் செல்லும் பொழுது
4.அந்த இரண்டு நாடிகளும் உடலின் குதம் என்ற மூலத்தில் எழும் அக்கினி மண்டலத்தில் பின்னிப் பிணைந்து பிரிந்து
5.மேலெழுந்து அதற்கும் மேல் உள்ள மர்ம ஸ்தானத்தில் சந்தித்து இரண்டு நாடிகளும் பின்னிப் பிணைந்து
6.மேலெழுந்து இரண்டாகப் பிரிந்து இடுப்பின் பகுதியை வட்டமிட்டு சரீரத்தின் வயிற்றுப் பகுதியில் நாபி என்ற இடத்தில் மீண்டும் பின்னிப் பிணைந்து
7.மேல் எழுந்து பிரிந்து மார்புப் பகுதியை வட்டமிட்டு
8.மீண்டும் சிரசின் உச்சிப் பகுதிக்கும் உள் நாக்கின் மேல் பகுதிக்கும் நடு மையத்தில் நெற்றிப் பொட்டின் உள்ளிடத்தில் பின்னிப் பிணைந்து
9.சிரசின் உச்சியில் அந்த இரண்டு நாடிகளும் எதிர் எதிராகச் சந்தித்துக் கொள்வதைக் காட்டுவதற்கே
10.விநாயகர் அருகே நாகர்களைக் காட்டியது…!

ஒவ்வொருவரும் ஆத்ம லிங்க ஜோதித் தத்துவத்தை உணர்ந்து வலுப் பெற்றிடுங்கள்…!

ஆத்மாவைச் சுகமாக்க வேண்டும்

ஆத்மாவைச் சுகமாக்க வேண்டும்

 

கண்டெடுத்த இரசாயணத்தைக் கண்ணாடியில் பூசித் தன் பிம்பத்தைத் தானே காணும் நிலையை அறிந்துள்ளீர்கள்.

மாயக் கலியில் அவதரித்த செயற்கை யுகம் கொண்ட மனிதர்கள் எல்லாம்
1.தன் எதிரில் உள்ள பிம்பத்தைத்தான் அந்தக் கண்ணாடியில் காண்கின்றார்கள்.
2.ஆனால் எல்லாவற்றையும் அன்றே கண்ணால் (எந்தக் கருவியும் இல்லாது) கண்டான் சித்தன்.

உலக நிலையையும்… மற்ற மண்டலங்களின் நிலையையும் அறிந்து வாழ்க்கைக்கு என்ன பயன்..? என்றும் சிலர் எண்ணிடலாம்.
1.ஆத்ம நிலையைத் தன் வழிக்கு ஏற்க வந்தவர்களுக்கு அறிந்திடத் தான்
2.இந்தப் பாட நிலையையே கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.
3.மனிதச் சக்தியில் எந்த நிலையில் சக்தி நிலை கலந்துள்ளது…? என்று அறிந்து கொள்ளுங்கள்.

இந்தப் பூமி எப்படிச் சூரியனிலிருந்து வரும் அணுக் கதிர்களைத் தன் சக்தியில் ஈர்த்துப் பல நிலைகளை நமக்களிக்கின்றாளோ… பூமித் தாயின் அந்த நிலையான சக்தி எல்லாமுமே இந்தப் பூமியில் வாழ்ந்திடும் நமக்கும் “அந்த ஈர்க்கும் தன்மை எல்லாமே உள்ளன…!”

1.சூரியனிலிருந்து வெளிப்படும் தன்மை எல்லாவற்றையுமே நாம் நேராகவே நம் நிலைக்கு ஈர்த்திடலாம்.
2.நம் உடலில் வரும் நோய்களை நீக்கவும் அந்தச் சூரியனிலிருந்தே
3.பல வகை மூலிகைகள் கொண்ட மருந்தின் நிலையை நம் உடலுக்கு நாம் ஈர்த்திடலாம்.
4.நம்மைச் சுற்றியுள்ள ஒலிகள் நம் செவியில் பட்டுக் கேட்பதைப் போல் நாம் காணாத இடத்திலுள்ள ஒலிகளையும் ஈர்த்திடலாம்.

நாம் எடுக்கும் சுவாசத்தில் அந்த ஒலியுடன் கலந்துள்ள ஒளியை நாம் ஈர்க்கும் பொழுது எங்கெங்கும் நடக்கும் நிலையையும் நாம் ஈர்க்கும் தன்மை கொண்டு
1.அந்த ஒளியின் பிம்பம் படும் நிலையில் உள்ள எல்லாவற்றையுமே
2.இருந்த இடத்திலிருந்தே நாம் கண்டிடலாம்.

இந்த மனித சக்திக்குக் கால நிலை… பூகம்பம் வரும் நிலை… பெரும் மழை வரக்கூடிய நிலை…! இது எலலாவற்றையுமே உணரும் தன்மை நம் உடலில் இருக்கின்றது. நம் நினைவை மாற்றி விடுவதால் இதை எல்லாம் அறிந்திடாமல் தவற விடுகின்றோம்.

பூமிக்கு எப்படி ஈர்ப்பு நிலை என்னும் காந்த சக்தி உள்ளதுவோ அதைப் போல் இந்தப் பூமியில் உதித்த உயிர் அணுக்கள் எல்லாவற்றுக்குமே உள்ளன என்றாலும்
1.மனித உடல் பெற்ற ஆத்மாக்களுக்கு அனைத்தையுமே அறிந்திடும் சக்தி உள்ளது.
2.செயல்படுத்தும் தன்மை வாய்ந்த உறுப்புகளும் உள்ளன.

இந்த மனிதன் உண்டு… உடுத்தி… உறங்குவது தான் வாழ்க்கை…! என்ற சுகத்தை எண்ணுகின்றான்.

இந்தச் சுகம் எத்தனை நாளைக்கு…?
1.தன் எண்ண சுகத்தைக் கொண்டே ஆத்மாவைச் சுகமாக்கிடாமல்
2.இந்த உடல் சுகத்தைத்தான் பெரிதாக எண்ணி வாழ்கின்றான்.

ஆகவே இந்த உடல் என்னும் கூட்டிற்கு அனைத்துச் சக்திகளையும் அறிந்து வாழும் சக்தி உள்ளது என்பதை உணர்ந்து நமக்கு முன் வாழ்ந்த பெரியவர்கள் சித்தர்கள் ஞானிகள் மகரிஷிகள் அடைந்த பேரானந்த நிலையை அடைய முற்படுங்கள்…!

குனிந்து (விலகிச்) செல்ல வேண்டிய பக்குவம்

குனிந்து (விலகிச்) செல்ல வேண்டிய பக்குவம்

 

“வாலியின் வீரிய குணத்தின் தன்மையின் ஆணவம்” எந்த எதிர் மோதல்களையும் தன் வசமாக்கித் தன் சக்தியுடன் ஒன்றச் செய்யும் சூட்சமம் பெற்றது.

அதிலே நல்வினைப் பயனை எண்ணியிருந்தால் ஆச்சா மரம் வெட்டப்படத் தேவை இருந்திடாது. அது தான் மனித குல மனத்தின் வீரிய சக்தி…!

வாலி வதம் என்ற சம்பவம் சபரிமலைத் தொடர் அருகே ஒதுக்குப்புற வட பகுதியில் வாழ்ந்த ஓர் இன மக்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவம்.

தவத்தின் சக்தி பெற்றவன் பிற ஆன்மத் தொடருக்கு அனைவரும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்டு ஜடாக்கினியின் செயல் இருந்திருந்தால் அவன் நிலை உயர்ந்திருக்கும். வான்மீகி பதம் பார்த்தான். அந்த ஆச்சா மரம் வீழ்ந்தது.

ஜடாக்கினி மனதிறத்தால் மற்றவர்கள் பெறும் சக்தித் தொடருக்கு எண்ணத் தடை ஏற்படுத்தித் தீவினையால் விளையாடி விட்டான். அதன் பயன் இராமபாணம் வான்மீகியால் பாய்ச்சப்பட்டது.

ஜடாக்கினி உயர் எண்ண வீரிய சக்தி தீவினைப் பயனை விளைவிக்கும் மந்திர சக்தியுடன் மோதுண்ட பொழுது எந்தப் பிரம்மாஸ்திரம் வென்றிருக்கும் என்பதனை விளக்கிடவும் வேண்டுமோ…?

இராமன் மறைந்திருந்து அம்பெய்தான் என்பதன் சூட்சமம் என்ன…? அதிலே நீங்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய காரியம் ஒன்றுண்டு.

தியானத்தின் மூலம் ஞானச் செல்வங்கள் (மனிதர்கள்) இன்று பெற்றுக் கொண்டிருக்கும் உன்னத நிலைகளும் மற்ற செயல்களும் எதைக் காட்டும்…?

நீங்கள் பெற்றுக் கொண்டிருக்கும் ஞான சக்திகளைப் பலர் பல எண்ணம் கொண்டு நோக்கிடும் செயலுக்கு
1.உங்களை உற்றுப் பார்க்க ஆரம்பித்தால் – அவர்களின் பார்வை அலையை
2.உங்களின் பார்வை அலையை நேர் கொண்டு மோதிடாமல் தவிர்த்திடவும் வேண்டும்.

மற்றவர்கள் மத்தியிலே உலகோதய வாழ்க்கையைப் பற்றிப் பேச வேண்டிய நிலையில்
1.பிறரின் பார்வையைக் கூடுதலான நேரம் நம் பார்வையோடு சந்திக்காமல்
2.சிறிது தவிர்த்திடவும் வேண்டும்.

தன் தவ சக்தியைக் குறைத்துக் கொண்டு வாலியின் தொடர் மீண்டும் பிறருக்குத் தீங்கிழைக்காதவண்ணம் தடுத்து ஆட்கொண்ட செயல் தான் வான்மீகியார் பெற்ற அனுபவ நிலை என்பது

அந்தக் காப்பிய ரிஷி மீண்டும் தன் ஈர்ப்பின் தொடரில் வெகு வேகமாகச் சக்தியைக் கூட்டிக் கொள்ளும் செயலில் பற்பல ரிஷிகளுடன் தொடர்பு கொண்டார். அதில் பரசுராமர் தொடரும் உண்டு.

ஜடாக்கினி அனுபவம் ஞானம் என்பதே உயர் சக்தி வலுக்கூடும் வலுவின் வலுவாகும்,
1.தன்னுடைய அனுபவமே போதனையாகி
2.உயர் சக்தியை ஆட்கொள்ளும் நாத வித்தின் மூலம் பரிமளிக்கும் செயல் நிலைக்கு
3.மீண்டும் எண்ண வலுவின் திட வைராக்கிய சிந்தனையால்
4.எந்த மண்டலமோ அந்த மண்டலத்தின் சூட்சமும்
5.எந்தெந்த நட்சத்திரங்களோ அவைகளின் அமில குண ஈர்ப்பின் சேமிப்புமாக
6.இந்தச் சரீரத்தை வைத்து ஈர்க்கும் காந்த அமிலத் தொடர்பும்
7.பேரொளியாகச் சுடர்விட்டுப் பிரகாசித்திடும் நிலையாக
8.தன் உயிர் அமில மூல முலாமைத் தெளிந்து
9.அந்தச் சக்தியின் தொடரில் எண்ண வலுவை உயர்வாக்கிப் பெறும் ஜடாக்கினி ஒளி சக்தி கொண்டு
10.குறைவுபடா சேமிப்பாக்கிச் செயல் கொள்வதே பக்குவமான செயல் ஆகும்.

காப்பிய ரிஷி வான்மீகி ஆச்சா மரத்தை வாலியின் தொடர்பில் பதம் பார்த்து… ஆத்ம சக்தி பெறும் சக்தி அலைத் தொடர்பில் குறைவுபடும் காரண மூலம்… ஜடாக்கினி மந்திர விழி பிதுங்கும் செயல்படுத்தி எண்ணத் தடையாகும் இராமபாணத்தை எய்ததின் தொடர் ஜடாக்கினி அனுபவ ஞானம்,

எடையிடும் பொருள் எடை காட்டும் கல் ஆனதில் எடையிடும் எண்ண அளவீட்டில் தராசின் முனை முள் அளவீடு ஆவதைப் போல் அந்த அனுபவ ஞானம் தன் நிறை காண சபரியிடம் பதம் பார்த்தான்.

மனைவியைப் பிரிந்த இராமன் சபரிக்கு மோட்சத்தை அளித்திட இயலவில்லை என்ற கதையின் தொடர்பிற்குச் சூட்சம விளக்கம் உள்ளது. இராம ஜெப ஏக்கமாக ஜெபத்தில் ஏங்கினாள் சபரி.

இந்த ஏக்கத்தில் பூர்த்தி செய்ய எப்படிச் சங்கடத்தின் அலைகளை ஈர்த்துக் கொண்டிட்ட வழி காட்டும் குரு பூரணத்துவம் நிறைவு பெறாத் தொடர் நிலையில் தன்னை உணர்ந்து மீண்டும் வழியமைத்தான்.

தெளிவின் தொடர்பில் மகரிஷிகளின் தொடர்புபடுத்திப் பெறும் ஜடாக்கினி சக்தி ஈர்ப்பிற்குச் செயல் கொண்டிட மனித மனங்களின் ஜீவ ஏக்கம் சிஷ்யர்கள் என்ற தொடர்பில் சங்கடமற்று சமமான பாவனையில் நிலை கொண்டிட்டுச் செயலுறும் பொழுது அந்த உண்மைச் சீடர்களின் ஏக்கம் குருவிற்கே எற்பட்டு உண்மையை உணர்ந்து தெளிந்து சூரிய குலம் என்று குறிப்பிடும் வீரிய அமில முலாம் ஈர்ப்பில் தொடர்புகளில் தொடர்பு கொண்டு ஈர்த்து வலுக் கொண்டிட்டால் இராமபாணம் பாயும்… இலட்சியத்தை எய்தும்…!

இராமபாணம் திரும்புவதைப் போல்… செயல் கொண்டிட்ட சக்தியும் எண்ண ஈர்ப்பின் வலுவால் வலுத்துத் தன் சக்தியை மீண்டும் வலுக் கூட்டிக் கொள்ள முடியும்.

சபரி மோட்சம் என்று சொல்கின்ற சூட்சமத்தில் சபரி பெற்ற சக்தியின் வலு ஐயப்ப மாமுனியின் தொடர்பால் தன் எண்ண இலட்சியத்தை அடைந்தது.

இந்தச் சக்தியின் தொடர்பால் அந்த ஐயப்ப மகான் எப்படித் தன் சக்தியின் குறைவுபடாத் தன்மையில் அந்தச் சபரியின் மூலத்தையே தாய் சக்தியாக ஆக்கிக் கொண்டு தன் அனுபவத்தில் பெற்றுக் கொண்ட எத்தனையோ சக்தித் தொடரில் சபரி சக்தியும் ஒன்று.

ஊசி முனைத் துவாரத்தில் நீர் குறைந்துவிடும்

ஊசி முனைத் துவாரத்தில் நீர் குறைந்துவிடும்

 

“ஜடாக்கினி மன திறன்…!” என்னும் மூலச் சக்தி நாத விந்துவாக… இரசமணியாகச் செயல்படும் அந்த வீரிய குண அமிலம் “இராமபாணம்…” என்று காட்டப்பட்டது.

எந்த இலட்சியம் தன் கருத்தோ அந்த இலட்சியத்தை எய்தும் பாக்கிய நிலை பெறுவது அதுவே தான்…! ஆனால் அந்தப் பாக்கிய நிலை பெற்றுவிட்டால் மட்டும் போதாது. அதை வளர்க்கவும் வேண்டும்.

இராமபாணத்தை எய்தினால் அது அப்படியே திரும்பி வரும்…! என்கின்ற பொருள் எல்லாம் என்ன…?
1.எண்ணம் கொண்டு செலுத்தப்படும் ஜடாக்கினி மூல சக்தியை
2.வான இயலை இலக்காகக் கொண்டு செலுத்தப்பட்டால்
3.அதை நம் வாழ்வின் இலட்சியமாகக் கொண்டால்
4.அந்தச் சக்தி குறைவுபடாது மேன்மேலும் வளரும் என்பதே இராமபாணம் திரும்பும் தொடர்.

ஜடாக்கினி அனுபவத்தில் வான்மீகிமாமகரிஷி மாத்திரம் தப்பித்துக் கொண்டாரா… என்ன…? அவர் பெற்ற அனுபவப் பாட நிலை என்ன…?
1.ஜடாக்கினி செயல் சக்தியைச் செலுத்திக் கண்ட “ஓர் அனுபவமாக..”
2.“வாலி வதம்…! என்ற பாங்கில் இராமன் தலை குனிந்தான்…! என்கின்ற பொருள் என்ன…?

ஆச்சா மரத்தை வெட்டுபவன் அந்த வலுவான மரத்தை முறித்திட வலுவான சக்தி மாத்திரம் போதாது. அந்த ஆயுதம் கூர்படத் தீட்டப்பட்டிருக்க வேண்டும்.

“தான் பெற்ற தவ சக்தியை” வான்மீகி கூர்பார்த்த விதம் ஆச்சா மரத்தை வெட்டும் செயல் போல் அவர் செயல் நிலை இருந்தாலும் சபரி அன்று அவரைக் கேட்டாள் “என்னையும் வானத்தில் இருத்த முடியுமா…? என்று…!”

அங்கே அந்த உபதேசத் தத்துவம் மழுங்கி விட்ட ஆயுதத்தால் ஆச்சா மரத்தை வெட்ட முடியுமா…?

உலகோதயம் என்னும் பிடிப்பில் “ஆச்சா மரம்…” என்பதெல்லாம் சொல் நாமம் பெயர் விளக்கத்திற்காகச் சூட்சமமாகக் கொடுக்கப்பட்டது தான். ஏனென்றால் நம் கவனம் ஞானத்தை வளர்த்திடும் எண்ணத்தில் நிலை பெற்றிருக்க வேண்டும்.

இது சொல் ஈர்க்கும் செயல் மாத்திரமல்ல…! இதிலே வலியுறுத்தும் காரியார்த்தம் (நுட்பம்) எது என்றால் “ஊசி முனைத் துவாரத்தில் நீர் குறைந்துவிடும்…” என்கின்ற பொருளின் விளக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அதைப் புரிந்து கொண்டால் ஞானத்தை வளர்க்க உதவாத… நம் ஆத்ம பலத்தை வீரியப்படுத்த உதவாத எந்தச் செயலையும்
1.உற்றுறுந்து கேட்கவும் வேண்டாம்…
2.அதிசயித்து நோக்கவும் வேண்டாம்….
3.”பெருமாள் படியளந்தான்…” என்பது போல் இருக்க வேண்டுமே தவிர
4.எடுக்கும் வீரிய ஜடாக்கினி முல சக்தி நம்முடைய முக்கியமான சேமிப்பாக இருக்க வேண்டும்.

“மாயமான்” என்னும் உலக மாயை – ஆசை வழி இழுக்கும் உணர்வுகளின் உந்துதல்

“மாயமான்” என்னும் உலக மாயை – ஆசை வழி இழுக்கும் உணர்வுகளின் உந்துதல்

 

இராமன் என்றும் லட்சுமணன் என்றும் சீதை என்றும் அவர்களைச் சரீரமாக உருவமாகக் காட்டி வெளியிட்ட நிலையில் எல்லாம்
1.குணங்களாக நம் எண்ணங்கள் செயல்படும் விதத்தையும்
2.தன் ஆன்மாவின் செயலுக்குச் சக்தியூட்ட வேண்டிய காரியத்தை வலியுறுத்தியும்
3.போதனைகளாகக் (உபதேசம்) கொடுத்துள்ளார் வான்மீகி மாமகரிஷி.

ஆனால் ஆசை என்ற உணர்வுகள் செயல்பாட்டிற்கு வந்ததும் எந்த உணர்வுகள் அதைத் தூண்டியதோ அதே உணர்வுகளுக்கு வலுவூட்டிவிடும் ஆசை நிலையைச் சித்தரிப்பதே “மாயமான்…!”

அந்த மாயமான் மேல் சென்ற எண்ணமே வேரூன்றி உயிர்ச் சக்தியான இராமனை அந்த மானைப் பிடித்துக் கொடுக்கச் செய்தது சீதையின் நிலை. “ஆசை வழி உணர்வுகளின் உந்துதலின் செயல்” தான் அது.

உயிர் சக்தி (இராமன்) தடுத்தும் கேட்காமல் ஆன்மாவில் பதிவு செய்யப்பட்ட நிலை போல் திரும்பத் திரும்ப அதே எண்ண ஓட்டம் செயல் கொண்டு தனக்குகந்த வீரியத்தையே வலுக் கூட்டிக் கொள்வது போல் அந்த மானைப் பிடித்துத் தர வேண்டிக் கேட்டுக் கொண்டது. (சீதை)

ஆன்ம சக்தியின் மீதுள்ள பற்றுதலாலும் தடுக்கப்பட வேண்டிய நிலை மாறி ஆசை உணர்வுகளின் வேகம் அந்த மாயமானின் பால் ஈர்க்கப்படும் நிலைகளை “அந்த ஆன்ம விளக்கங்களை… சூட்சமமாகப் பொருள்படுத்தியது…!”
1.எல்லாம் ஆன்மாக்களும் உணர்ந்து பெறுதலுக்கு ஒரு காரணமும்
2.வெளியிடக் கூடாத இரகசியமாக மற்றுமொரு காரணமும் ஆகும்…!.
3.ஆசை உணர்வுகளின் வழி ஏகிய உயிர்ச் சக்தி
4.அந்த உலகோதய ஆசை என்ற மாயமானை இனம் கண்டு கொண்டதும்
5.எண்ணமாகிய இராமபாணத்தைச் செலுத்தி அதன் ஓட்ட வீரியத்தை வலுவிழக்கச் செய்தது.

ஆன்ம சக்திக்குத் துணையாக நிற்கும் தைரிய குணச் சக்தியையும் ஆன்மா இழந்து… பலம் குன்றுவதைக் காட்டவே… இலட்சுமணனை இராமர் பால் அனுப்பிய சீதையின் நிலையாகக் காட்டப்படுகிறது.

அதாவது மனக் குழப்பங்கள் ஏற்படுவதைக் காட்டித் தெளிவற்ற நிலையில் உண்டாக்கப்படும் உணர்வுகள்
1.தன்னுடைய வீர குணத்தை அப்புறப்படுத்தி… ஆன்மாவைச் சக்தி இழக்கச் செய்கின்றன.
2.உயிர்ச் சக்தியையும் ஆன்ம சக்தியையும் பிரித்து விடுகின்றன.
3.பிரிப்பதன் மூல காரணம் உலகோதய “அதி ஆசை நிலை…!”
4.இதற்கு மானைச் சுட்டிக் காட்டியது “சூட்சம நிலை…”

மீண்டும் உயிர்ச் சக்தி தன் சக்தியாக ஆன்ம சக்தியை அடைய வேண்டி மாயமானாகிய அதி ஆசை நிலையைத் தான் தகர்க்கின்றது. ஆன்மாவாகிய சக்தி நிலை ஏக்க உரு கொள்கிறது. அப்பொழுது தைரிய குண இலட்சுமணன் சாந்த குண இராமனை அணுகிச் சக்தியூட்டியதாகச் சொல்லப்படுகிறது.

எப்படி…?

உயர்ந்த சக்திகளை தைரிய குணத்தின் ஈர்ப்பில் சமைத்து வீரமான அந்தக் குணத்தையே சாந்த குணத்திற்கு வலுவூட்டி ஆன்மாவைச் சூழ்ந்துள்ள மாய இருளை அகற்றச் செய்கிறது.

ஆக இராவணன் என்ற அசுர குணத் தன்மைகளை சக்தி இழக்கச் செய்ய தன் எண்ணங்களான இராமபாணத்தைச் சக்தியாகச் செயல் கொண்டு போர் என்ற நிலையில்
1.எண்ணங்களின் எதிர் மோதல் போராட்டங்களாகவும்
2.குணச்சுவைகளுக்கொப்ப நிகழ்ந்த நிகழ்வுகளின் முடிவின் ஆக்கமே உயிராத்மாவுடன் கலந்த அல்லது கலக்கும் நிலை பெறுகின்றது.

அதாவது
1.உயிர் சக்தியினைப் பிரிந்தால் ஆன்மா தாக்கப் பெறும்..
2.அதுவே உயிருடன் கலக்கும் சிந்தனையாகக் காக்கப் பெறும்..! என்று வான்மீகியார் தெளிவாக்குகின்றார்.

அசுர குண எண்ணப் பிடிக்குள் சிக்கிக் கொள்ளும் ஆத்ம ஞானியையும் உலகோதய ஆசை நிலையாகிய மாய மான் வடிவம் கொள்ளத் தூண்டுகின்றன…! ஏன்…?

காரணம் சரீரமும் அதற்குள் இருக்கும் சரீரத்தின் தனித்துவம் என்ற குணங்களும் தான்…!

அது மட்டுமல்ல…! பிற ஆன்மாக்களையும் அந்த ஆசை அலைக்குள் அகப்படுத்த போக்குக் காட்டி மயக்குகின்றன. அந்த மாய அலைக்குள் படும் உயிர்ச் சக்திகளையும் தன் வழிக்கே இழுக்க முயல்கிறது. (இது உலகில் ஒவ்வொருவருடைய அன்றாட வாழ்க்கையிலும் தினசரி நடந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சி…!)

உண்மைதனை உணர்ந்து கொண்ட உயிர்ச் சக்தியாகக் காவியத்தில் இராமனைக் காட்டுகின்றார். தன் ஆன்மாவைத் தன்னிடத்திலிருந்து (உயிர் சக்தியிடமிருந்து) பிரித்துவிட நடக்கும் நாடகத்தை வான்மீகியார் அங்கே சுட்டிக் காட்டுகிறார்.
1.மாரீசன் என்ற ஞானி (மாயமான்) அந்த ஆசைக்குத் துணை போக
2.தானே அந்த ஆசை வலையில் பட்டு விட்டதையும்
3.எண்ணமாகிய இராமபாணம் பட்ட பின் மாரீசன் மீண்டதாகவும் காட்டி
4.உயிரான்மாக்கள் பெறும் ஞான நிலைக்கு உயரிய வழி வகுத்து
5.மதி வழி முன் சென்றால்… வீரிய ஏற்றமான விதி வழி பின் செல்லும்…! என்று அருளியுள்ளார் அந்த வான்மீகி மாமகரிஷி…!

விஞ்ஞான உலகில் “நரகலோகத்தைச் சந்திக்கிறோம்” என்று கண்கூடாகவே பார்க்கின்றோம்

விஞ்ஞான உலகில் “நரகலோகத்தைச் சந்திக்கிறோம்” என்று கண்கூடாகவே பார்க்கின்றோம்

 

விஞ்ஞான உலகில் வாழ்கிறோம். உடல் பற்றுடன் இருப்போம் என்றால் மருத்துவமனைகளில் இன்று பார்க்கலாம்… ஒரு மனிதனுக்குக் கேன்சர் வந்து விட்டால் எத்தனை அறுவை சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர்…?

நோயைக் கண்டுபிடிப்பதற்காக மனம் உவந்து
1.மூக்கிலும் வாயிலும் மற்ற இடங்களிலும் டியூபுகளைச் சொருகுவதும்
2.தலையோ மற்ற இடங்களில் உள்ள உறுப்புகளை அறுத்துப் பரீட்சிப்பதும்
3.சில நேரங்களில் அந்த உறுப்புகளை அகற்றி மாற்று உறுப்புகளையும் வைத்துச் செயல்படுத்துகின்றார்கள்.
4.எத்தகைய நரகலோகத்தைச் சந்திக்கிறோம் என்று பாருங்கள்.

இதை எல்லாம் நாம் கண்கூடாகப் பார்க்கின்றோம். ஆனால் ஞானிகள் அன்றே இதைக் காட்டினார்கள். சித்திரபுத்திரன் கணக்கின் பிரகாரம் எமன் தண்டனை கொடுக்கின்றான் என்று…!

கண்களால் பிறரை உற்றுப் பார்த்து பரிவுடன் அவர்கள் வேதனைகளைக் கேட்டறிந்தாலும்… கண்களால் பார்த்து நுகர்ந்த அவருக்குள் விளைந்த (வேதனை) உணர்வுகளை நமக்குள் கவரப்படும் பொழுது அது புத்திரனாக… அணுக்களாக இங்கே வந்துவிடுகிறது.

அவன் கஷ்டப்படுகிறான்… கஷ்டப்படுகிறான்… என்று
1.பாசத்தால் நாம் சொன்னால் பாசக் கயிறாக வழி தொடர்ந்து சிந்திக்கும் திறன் அனைத்தும் இழக்கப்பட்டு
2.எமன் எருமை மீது வாகனமாக வருவது போன்று சிந்தனையற்ற நிலைகள் ஆகி
3.தீய வினைகளாக நம் உடலில் அது விளைந்து உறுப்புகள் கெடுகிறது.

அந்த உறுப்புகளைச் சீர்படுத்த நாம் அறுவை சிகிச்சைகள் செய்வது போன்று அந்த எமலோகத்தைக் காட்டியிருப்பார்கள்.

அதாவது… நம் எண்ணமே தீமைகளை விளைய வைக்கும் உறைவிடமாக எமலோகமாக மாறி… நல்ல உணர்வுகளை அது எப்படி அழிக்கின்றது…? என்ற நிலையைக் காட்டுவதற்காகக் காவியமாக எடுத்துரைத்துள்ளார்கள். நாம் எளிதாகப் புரிந்து கொள்வதற்குப் படங்களாகவும் வரைந்து காட்டி உள்ளார்கள்.

எமலோகத்தின் செயல்கள்…
1.எமன் அழைத்துச் சென்ற பின் எண்ணெய்க் கொப்பரையில் போட்டு ஆட்டுவதும்
2.மண்டையை ரம்பத்தை வைத்து அறுப்பதும் கை கால்களைத் துண்டிப்பதும்
3.தலைகீழாகத் தொங்க விடுவதும் நெருப்பிலே வைத்து எரிப்பதும் போன்ற எத்தனையோ நிலைகளைக் காட்டியிருப்பார்கள்.

குழந்தைப் பருவத்திலிருந்து எத்தனையோ நிலை நமக்குள் விளைந்தது… இந்த உடல் என்ற சொர்க்கலோகத்தில்… எண்ணத்தால் எமலோகத்திற்குள் சிக்கி அறியாமலே நம் உடலுக்குள் எத்தனை அறுவை சிகிச்சைகள் (ண்ஹரக வேதனைப்படும்படியாக) நடக்கிறது…? அன்று மெய் ஞானிகள் காட்டினார்கள்.

விஞ்ஞான அறிவால் கண்கூடாக நம் உடலுக்குள் அனுபவிக்கின்றோம்.

உடல் இந்த சொர்க்கலோகத்தை நாம் மறந்திடலாகாது. அதிலே நாம் எண்ணியது அனைத்தும் இந்திரலோகமாக மாறி உடலாக மாறிக் கொண்டுள்ளது என்பதை உணர்தல் வேண்டும்.

1.மெய் உலகான அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுடன் நீங்கள் ஒன்றி வேகா நிலை என்ற முழுமை அடைந்திட
2.என் குருநாதர் காட்டிய நிலைகளை உங்களுக்குள் உபதேசிக்கின்றேன்.
3.இந்த உபதேசத்தின் வாயிலாக அந்த மகரிஷிகளின் ஆற்றல்மிக்க சக்தியை
4.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் பதிவு செய்கின்றேன் (ஞானகுரு).

எல்லோரும் அந்த உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று நான் (ஈஸ்வரபட்டர்) கொடுத்த சக்தியை அவர்களுக்குள் விளைய வைத்து என்று நீ செயல்படுகின்றாயோ
1.அந்த உணர்வுகளால் நீயும் உயர்ந்த நிலை பெறுகின்றாய்
2.அவர்களும் உன்னுடன் ஒன்றி வருகின்றார்கள்.
3.அனைவரும் ஒருங்கிணைந்த நிலையில் மகிழ்ந்து வாழும் நிலை பெற வேண்டும்.

இதைத்தான் குருநாதர் எனக்குக் காட்டினார். அவர் காட்டிய நெறிகளைக் கடைப்பிடித்து… பத்தாவது நிலையான கல்கி என்ற “உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரம் பெறுவோம்.

மனதை ஒன்றாக்க வேண்டிய அவசியம்

மனதை ஒன்றாக்க வேண்டிய அவசியம்

 

இந்த உலகம் விஷத்தன்மை வாய்ந்ததாகப் போய்க் கொண்டிருப்பதால்… எத்தகைய துயரமோ சங்கடமோ சலிப்போ பயமோ போன்ற நிலைகளைப் பார்க்க நேர்ந்தால்… அதை நுகர நேர்ந்தால்… அடுத்த கணம்
1.யாம் (ஞானகுரு) உபதேசித்த உணர்வின்படி ஈஸ்வரா என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ணுங்கள்.
2.அம்மா அப்பா அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஏங்குங்கள்.
3.உங்கள் உடல் முழுவதும் அதைப் பரவச் செய்யுங்கள்
4.உங்கள் உடலில் இருக்கக்கூடிய எல்லா அணுக்களும் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும் என்று ஏங்குங்கள்.
4.கவலையோ மற்ற எதுவாக இருந்தாலும் அதை மாற்றிப் பழகுங்கள்.

அங்குசபாசவா…! மனிதனான பின் இந்த உடல் நாம் உணவாக உட்கொள்ளும் அதற்குள் மறைந்திருக்கும் நஞ்சை மலமாக மாற்றுகிறது. நஞ்சைக் கழிக்கும் சக்தியான கார்த்திகேயா என்ற ஆறாவது அறிவின் துணை கொண்டு தீமைகளை நாம் அடக்கிப் பழகுதல் வேண்டும்.

ஏனென்றால் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள் நம் உடலுக்குள் வலுப்பெற்றால் நம் எண்ணங்கள் அனைத்தும் பழுதாகிவிடும்… நம் உடலும் பழுதாகிவிடும்… நம் செயலும் பழுதாகிவிடும். அவ்வாறு பழுதாகாதபடி அருள் ஞானத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.

காரணம் சிறிது காலம் தான் இந்த உடலில் நாம் வாழுகின்றோம். அதற்குள் நல் உணர்வுகளை நமக்குள் வலுவாக்கிடல் வேண்டும். அதற்காகத் தான் இராமேஸ்வரத்தில் “இராமன் மனதைக் குவித்து ஒன்றாக்கினான்…” என்று ஞானிகளால் உணர்த்தப்பட்டது.

வாழும் காலத்தில்…
1.எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்…
2.நாம் பார்க்கும் குடும்பங்கள் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும்
3.தெளிந்த மனம் பெற வேண்டும் தெளிவான வாழ்க்கை வாழ வேண்டும் என்று
4.பிறர் மேல் இருக்கும் பகைமைகளை மறந்து ஒன்றாக்கினால் நம் உணர்வுகள் அனைத்தும் உயிருடன் ஒன்றுகின்றது.

ஆனால் எனக்கு இப்படித் தொல்லை கொடுத்தார்களே… சும்மா விடுவதா…? என்று எண்ணினால் மனம் இருண்டு விடுகின்றது. மீண்டும் புவியின் பற்றுக்குத் தான் வந்து விடுகின்றோம்.

ஆகவே வாழக்கூடிய குறுகிய காலத்தில் பகைமைகளை மறந்து அருள் ஞானத்தைப் பெருக்கி எல்லோரும் ஒன்று சேர்ந்து மகிழ்ந்து வாழ வேண்டும் என்ற உணர்வினைக் கொண்டு வர வேண்டும்.

இதற்குத்தான் இராமேஸ்வரத்தில் இராமன் மனதைக் குவித்தான் என்று காட்டினார்கள். ஆனால் அந்த உண்மையின் இயக்கங்களை அறிய முடியாதபடி போய்விட்டது.

ஆகவே ஞானிகள் காட்டிய அருள் வழியைப் பின்பற்றுவோம். குருநாதர் காட்டிய அருள் வழியில் அகஸ்தியன் பெற்ற பேரருளும் அவன் துருவனாகித் துருவ மகரிஷியாகி… துருவ நட்சத்திரமான அந்தப் பேரருளைப் பெற்றுப் பழகுதல் வேண்டும்.
1.ஒவ்வொருவரும் அருள் ஞானிகளாக நீங்கள் மாற வேண்டும்
2.அந்த மகரிஷிகள் வாழும் எல்லையை உங்கள் இருப்பிடமாக்க வேண்டும்..