இராவணனை “தசைப்பிரியன்…!” என்று ஏன் சொல்கிறோம்…?

ravana-sita.jpg

இராவணனை “தசைப்பிரியன்…!” என்று ஏன் சொல்கிறோம்…?

பிறரைக் காக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அந்த வேதனைப்படுவோரின் உணர்வுகளை நுகர்கின்றோம். அந்த உணர்வுகள் நம்மையும் வேதனைப் படச்செய்கிறது.

1.இருந்தாலும் நாம் எல்லோரையும் காப்பாற்றிவிடுகிறோம்.
2.காப்பாற்றிய பின் அவர்களுக்கு வந்த நோய் நமக்கு வந்தவுடனே என்ன நடக்கின்றது…?
3.ஐயோ… அவர்களை எல்லாம் காப்பாற்றினோமே…! எனக்கு இப்படி நோய் வந்து விட்டதே…! என்று புலம்புகிறோம்.

அப்படி வேதனைப்படும் சமயங்களில் யாராவது சந்தோசமாச் சிரித்து பேசினால் நீங்க பொறுத்து இருப்பீர்களா…? நான் இருக்கும் நிலையைப் பார்த்து உனக்குக் கிண்டலாக இருக்கிறதா என்போம்…! இதே நிலைமை உங்களுக்கும் வந்தால் தான் தெரியும்…! என்று சொல்வோம்.

அதே மாதிரி ஒருவர் திட்டினார்… வேண்டாத பேச்சுகளைப் பேசினார் என்று சொன்ன பிற்பாடு “அட… திட்டி விட்டுப் போகிறார்… விடுங்கள்…!” என்று சொன்னால் நமக்குக் கோபம் வருகிறதா இல்லையா…?

அப்பொழுது என்ன செய்கிறீர்கள்…? உங்களிடம் சந்தோஷத்தை ஊட்டக் கூடிய நிலையை எதையாவது பாரக்க முடிகிறதா…? ஆக மொத்தம் அந்த உணர்வின் தன்மை உடலுக்குள் ஆகும்போது என்ன நடக்கிறது…?

நம் உயிர் பத்தாவது நிலையை அடையக்கூடியது. இந்த மனித உடல் தசப்பிரியன். சீதா என்பது உடலுக்குள் சந்தோஷத்தை ஊட்டக் கூடிய நிலைகள்.

நீங்கள் கோபமாக இருக்கும் போது மற்றவர்கள் சிரித்துப் பேசினால் சந்தோஷம் வருமா…? கிண்டல் செய்கிறீர்களா…? என்று சொல்லி அவர்களை உதைக்கத் தான் செல்வீர்கள்.

அதே மாதிரி நீங்கள் வேதனைப்படும்போது யாராவது சிரித்தால் என்ன ஆகும்…? நாம் படுவதைப் பார்த்தால் அவர்களுக்குச் சிரிப்பு வருகிறது…! என்று பொறுமுவோம்.

உங்கள் பையனே குறும்புத்தனம் செய்தாலும் அவன் நல்லவனாக வரவேண்டும் என்று சொல்லி மற்றவர்கள் சிரித்துக் கொண்டு இருந்தால் “அங்கே பார்…! அவன் சேட்டை செய்வதைப் பார்த்துச் சிரிக்கிறார்கள்… அறிவு இருக்கிறதா… என்று கேட்போம்…!
1.அந்த நேரத்தில் சந்தோஷம் என்பதே வரவில்லை.
2.அதைக் காட்டுவதற்காகத்தான் பத்துத் தலை இராவணனைத் தசைப்பிரியன் என்று காட்டுகின்றார்கள்.

நாம் எத்தனையோ கோடி உடல்களில் வந்த தீமைகளை எல்லாவற்றையும் நீக்கி மனிதனாக வந்திருக்கின்றோம். ஆனால் இப்பொழுது நம்முடைய சந்தர்ப்பம்
1.நம் பார்வையில் படும் உணர்வுகள் உடலுக்குள் வந்தவுடன்
2.அந்த அரக்க உணர்வுகள் இந்த மனித உடலையே அழித்துக் கொன்று தின்கிறது என்று காட்டுகிறார்கள்

மற்ற உயிரினங்கள் எப்படி ஒன்றை ஒன்று கொன்று தின்றதோ அதே மாதிரி நம் உடலுக்குள்ளும் பல பல குணங்களின் உணர்வுகள் வந்து மனித உடலை உருவாக்கிய அணுக்களைக் கொன்று தின்கிறது.

உதாரணமாக கோபம் என்ற அந்தக் காரமான உணர்ச்சி வந்தால் நமக்குள் உள்ள நல்ல சாந்தமான அணுக்களைக் கொன்று திங்க ஆரம்பிக்கிறது. அப்பொழுது சரியானதைக் கேட்க வேண்டும் என்றால் கேட்க முடியாது.

அதே சமயத்தில் வேதனைப்படும் உணர்வுகளை நீங்கள் எண்ணினால் அந்த விஷத் தன்மை உடலுக்குள் பரவும் பரவிய பின் கை கால் வலிக்கும். அந்த நேரத்தில் உங்களிடம் சந்தோஷம் வருமா…?

ஆக சந்தோஷப்படும் அந்தச் சீதாவை (மகிழ்ச்சியை) இராவணன் இலங்கையில் (உடலுக்குள்) சிறைப்பிடித்து வைத்து விடுகிறான்…! என்று எவ்வளவு அழகாக இராமாயணத்தில் காட்டுகின்றார்கள்.

உயிரணு தோன்றிய பின் பல உணர்வின் தன்மைகளை எடுத்துக் கடவுள் அவதாரம் “வராகன்” என்று வந்த பின் தீமையை நீக்கி தீமையை நீக்கக்கூடிய உடலாகப் பெறுவது “பரசுராம்…” (மனித உடல்)

மனிதனான பின் வரும் தீமைகளைச் சமப்படுத்தவேண்டும் என்று எண்ணினாலும் அதைச் சீராகப் பயன்படுத்தாதபடி பலருடைய உணர்வுகளைத் தெரிய வேண்டும் என்று விரும்பி நுகர்கிறோம் “பலராம்” (பல எண்ணங்கள் – பலராமன்).

பல எண்ணங்களை எடுத்துத் தீமை என்ற உணர்வு ஆனபின் அதைத் தடுக்க வேண்டுமல்லவா…! அது தான் நரசிம்மா…!
1.அந்தத் தீமைகளை உடலுக்குள் உருவாக விடாதபடி
2.மடி மீது இரண்யனை வைத்து வாசல்படி மீது அமர்ந்து நரநாராயணன் அந்த இரண்யனைப் பிளந்தான்
3.ஆகவே அந்த ஒன்பதாவது நிலைகளில் தீமை புகாது தடுத்தால் தான் நாம் இங்கிருந்து தப்ப முடியும்
4.பத்தாவது கல்கி என்ற அழியாத ஒளிச் சரீரம் பெற்று விண்ணுலகத்தை அடைய முடியும்.

ஞானிகளால் படைக்கப்பட்ட காவியங்களில் உள்ள உட்பொருளை அறிந்து கொண்டால் நாம் விண் செல்வது சுலபம்.

இக்ஷ்வாகு வம்சம் என்றால் என்ன…?

Ikshvaku

இக்ஷ்வாகு வம்சம் என்றால் என்ன…?

உயிரணு தோன்றி இப்பொழுது நாம் பரசுராமனிலிருந்து நவமி… ஒன்பதாவது நிலைகளில் இருக்கிறோம். எது…? அதாவது பத்தாவது நிலையை அடையக்கூடிய மனித உடலில் நாம் இருக்கிறோம். அதுதான் தசரதச் சக்கரவர்த்தி என்பது.

மனித வாழ்க்கையின் சந்தர்ப்பத்தில் ஒரு நோயாளியைப் பார்க்கிறோம். அல்லது ஒரு கோபப்படுபவனைப் பார்க்கிறோம். பார்த்தவுடனே என்ன… ஏது…? என்று கேட்டுத் தெரிந்து கொள்கிறோம்.

அதுதான் வசிஷ்டர்… (வசிஷ்டர் என்றால் கவர்ந்து கொண்ட சக்தி)
1.தசரத சக்கரவர்த்திக்குத் தான் தெரிந்து கொள்ள விரும்பிய உணர்வுகள்
2.அது கவர்ந்து கொண்ட சக்தியாக – வசிஷ்டர்
3.உயிரிலே பட்டு உணரும் தன்மை ஆகும்போது தசரதச் சக்கரவர்த்திக்கு வசிஷ்டர் பிரம்ம குரு.

கவர்ந்து கொண்ட உணர்வுகள் நம் உடலிலே பிரம்மமாகி அவன் எதைப் பேசினானோ
1.அவன் கோபமாப் பேசினால் நாமும் கோபமாகப் பேசும் சக்தி வருகிறது
2.அவன் வேதனைப்பட்டால் அந்த வேதனை உணர்வைத் திருப்பிச் சொல்வோம்.
(அது தான் வசிஷ்டர் பிரம்மகுரு)

பிரம்மகுருவின் மனைவி யார்…?
1.வசிஷ்டர் – கவர்ந்து கொண்ட உணர்வுகள் அணுவாக உருவானால் அதன் சக்தியாக அருந்ததி…!
2.கோபமாப் பேசிய உணர்வு இருந்தால் அதனுடன் இணைந்து
3.அந்தக் கார உணர்வுகளை நம் உடலிலே உருவாக்கும் என்பதைத் தான் இங்கே தெளிவாக்குகின்றார்கள்.

அதனால் தான் தசரதச் சக்கரவர்த்தி என்கிற போது ஒவ்வொரு தீமையிலிருந்தும் நாம் இச்சைப்பட்டுத் தப்பவேண்டும்… அதாவது
1.இச்சைப்பட்டு அந்த உணர்வைச் சேர்த்து இயங்கும் நிலைகள் என்பதை
2.”இக்ஷ்வாகு வம்சத்தைச் சேர்ந்தவன் தசரதச் சக்கரவர்த்தி…” என்று உணர்த்தியுள்ளார்கள் ஞானிகள்.

நம் சாஸ்திரங்களில் எவ்வளவு தெளிவாகக் கொடுத்திருக்கின்றார்கள் என்று புரிந்து கொண்டால் போதும். மனிதன் உயர்ந்த நிலை பெற இராமாயணத்தில் எவ்வளவு பெரிய உண்மைகள் உள்ளது என்பதையும் உணரலாம்.

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வரும் தீமைகளிலிருந்து தப்ப வேண்டும் என்று இச்சைப்பட்டு அப்படித் தப்பி வந்தது தான் இந்த உயிர்… “பத்தாவது நிலை அடையக்கூடியது…!”

இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே கடவுள் யார்…? நம் உயிர் தான் கடவுள்…! நாம் நுகர்ந்த உணர்வுகள் எதுவோ உள் நின்று அதை இயக்குகின்றது.

வீட்டு வாசல்படிக்குப் போடுவதும் கல் தான்.. தெய்வச் சிலையைச் செய்து வைத்திருப்பதும் கல் தான்…!

paal abishekam murugan

வீட்டு வாசல்படிக்குப் போடுவதும் கல் தான்.. தெய்வச் சிலையைச் செய்து வைத்திருப்பதும் கல் தான்…!

 

ஞானிகள் நமக்குள் நல்ல குணங்கள் எப்படி இருக்கின்றன.. அதை எப்படிக் காக்கப்பட வேண்டும்…? என்பதைக் காட்டுவதற்காகக் கோவிலை வைத்துக் காட்டினார்கள்.

சாதாரணமாக நம் வீட்டு வாசல்படிக்கும் அந்தக் கல்லை வைத்துக் கொள்கிறோம். அதே கல்லைச் சிலையாக உருவாக்கி வைத்து அதற்கு காரணப் பெயர் வைத்து “இந்தத் தெய்வம் நல்லதைக் காக்கும்…” என்று சொல்கிறோம்.

ஆனால் காலில் போட்டு மிதித்துத் தான் அவன் அந்தச் சிலையை உருவாக்குகிறான். அதைக் குளிப்பாட்டி வைத்து அபிஷேகம் செய்தால் அதைத் தெய்வம் என்று நாம் வணங்குகிறோம் நம் கண் முன்னாடி நடக்கின்றது.

அப்பொழுது என்ன செய்கிறார்கள்..? கல் சிலையை வைத்து இந்தத் தெய்வம் நல்லது செய்யும்…! என்று பேர் வைத்து அதற்கு அபிஷேகங்களைச் செய்கின்றனர்

ஏன் கல்லுக்கு அபிஷேகம் செய்கிறார்கள்…? என்று நாம் புரிந்து கொள்வது இல்லை.
1.நாம் “தெய்வம்…” என்று நினைக்கிறோம்
2.தெய்வம் என்று சொன்னது… தெய்வம் இப்படித் தான் இருந்தது…! என்று நாம் நினைக்கின்றோம்

ஆக நல்ல குணங்களைச் சித்தரிப்பதற்கும் அது இன்னது செய்யும் என்பதைக் காட்டுவதற்காகவும் உருவத்தை அமைத்துக் கொடுக்கிறார்கள். ஆகவே பால் அபிஷேகம் செய்யும் போது நாம் என்ன செய்ய வேண்டும்…?

அந்தப் பாலை போல மனது நான் பெற வேண்டும். எங்கள் வீட்டில் எல்லோரும் அந்தப் பாலைப் போன்ற மனம் பெறவேண்டும். இந்தக் கோவிலுக்கு வருகிறவர்கள் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்.

அந்தச் சந்தனத்தைப் போல நறுமணம் பெறவேண்டும். இந்தக் கோவிலுக்கு வருகிறவர்கள் எல்லோரும் அந்தச் சந்தனத்தைப் போன்ற நறுமணம் பெறவேண்டும். எங்கள் குடும்பத்தில் எல்லோரும் அந்த நறுமணம் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

1.இதுவும் உருவம்தான். இன்ன பொருள் தான்…! என்று தெரிகின்றது
2.கண்ணால்… அந்தச் சந்தனத்தை பார்த்தவுடன் அது நன்றாக மணக்கும் என்று நமக்குள் அந்த உணர்ச்சிகளைத் தூண்டுகிறது அல்லவா…!
3.பாலை பார்க்கும்போது அதில் சீனியைப் போட்டு காபிதூளைப் போட்டு காபி சாப்பிடுறோம்
4.அதே பாலை வைத்துப் பால்கோவாவும் கிண்டிச் சாப்பிடுகிறோம்
5.நம்முடைய மனம் எதுவோ அந்தப் பாலை வைத்து நல்லதைச் செய்கிறோம் அல்லவா…!

அதனால் தான் அங்கே அந்தச் சிலைக்குப் பால் அபிஷேகம் செய்யச் சொல்லிப் “பாலைப் போன்ற மனம் நாம் பெற வேண்டும்… என்றும் அந்த உணர்ச்சிகளைத் தூண்டி… அதை எண்ணி அந்த நல்ல உணர்வுகளை எடுக்கும்படிக் காட்டுகின்றார்கள்…!”

ஆனால் பாலில் கொஞ்சம் விஷம் பட்டால் என்ன பண்ணும்…? நாம் சாப்பிடுவோமா…? சாப்பிட்டால் என்ன ஆகும்..? ஆளை மாய்க்கின்றது அல்லவா…!

நம்முடைய நண்பன் இருக்கிறான். அவன் நல்லவனாக இருப்பதால் எல்லோருக்கும் உதவி செய்கிறான் எதிர்பாராமல் ஒருவன் அவனுக்குத் தீங்கிழைக்கின்றான். அதனால் நம் நண்பன் வேதனைப்படுகிறான்.

நண்பனைப் பார்த்தவுடனே அவனுடைய வேதனையான உணர்வை அந்த விஷத்தை (வேதனை என்றாலே விஷம்) நுகர்ந்தபின் என்ன நடக்கிறது..?
1.நம் உயிரில் தான் அபிஷேகம் நடக்குது
2.எதன் வழி அபிஷேகம் நடக்கின்றது…?
3.நாம் சுவாசித்தது உயிர் வழி தான் அபிஷேகம் நடக்கின்றது மூக்கு வழியாக…!
4.உயிரிலே பட்டு அபிஷேகம் நடக்கும்போது அவன் பட்ட வேதனை எல்லாம் நம் உடல் முழுவதும் பரவுகிறது.

அந்த நண்பன் வேதனைப்படும் உணர்ச்சிகள் நமக்குள் வந்தவுடன் என்ன செய்கிறது..? ரொம்பப் பழகி இருந்தோம் என்றால் தலையைச் சுற்றி மயக்கமே வந்துவிடுகின்றது. அடுத்தபடியாக யாராவது ஏதாவது சொன்னால் தெரியுமா…? தெரியாது…!

வைத்த இடத்திலிருக்கும் ஒரு நல்ல சாமானை இங்கே வைத்தேனா..! அங்கே வைத்தேனா…? என்று தேடுவோம். அல்லது கையில் இருக்கும் பொருளை எங்கேயாவது வைத்துவிடுவோம். பிறகு காணோம்..! என்று சொல்வோம்.

அந்த நேரத்தில் யாராவது சிரித்தால் கோபம் வரும். குழந்தைகள் ஏதாவது செய்தால் அவர்களை அடிக்கச் சொல்லும். இப்படிச் சிந்தனையற்ற செயல் எல்லாம் வரும்.

அப்பொழுது அந்த நேரத்தில் யார் தவறு செய்தது…? நாம் நுகர்ந்த உணர்வு நம்மை தப்புப் பண்ண வைக்கிறது அல்லது நம்மை மயங்கச் செய்கிறது.

அதை மாற்றி நல்ல உணர்வுகளை நாம் நுகரவேண்டும் என்பதற்காகத்தான் அங்கே தெய்வச் சிலைக்குப் பால் அபிஷேகம் செய்து அந்த நல்ல மனதைக் கொண்டு வர வேண்டும் என்று காட்டுகின்றார்கள்.

1.அந்தப் பாலைப் போல மனம் நாங்கள் பெறவேண்டும்…
2.எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் நன்றாக இருக்க வேண்டும்..
3.என் நண்பன் பாலைப் போன்ற மனம் பெறவேண்டும்…
4.அவன் தெளிந்த நிலை பெறவேண்டும் என்று அந்த நேரத்தில் எண்ணினால்
5.நம் உயிரிலே அது படுகிறது… அப்பொழுது அந்த நல்ல உணர்ச்சிகள் நம்மை இயக்கத் தொடங்குகிறது.
6.நாம் நுகர்ந்தது உயிரிலே அபிஷேகமாக இப்படி நடக்கிறது…! என்பதை
7.இவ்வளவு அழகாக நம் ஞானிகள் கொடுத்திருக்கின்றார்கள்.

ஆலயங்களில் பல விளக்குகளைப் போட்டுக் காண்பிப்பதன் உட்பொருள் என்ன…?

Lamp pooja and aradhana.jpg

ஆலயங்களில் பல விளக்குகளைப் போட்டுக் காண்பிப்பதன் உட்பொருள் என்ன…?

நாம் எந்தக் கோவிலுக்குச் சென்றாலும் அங்கே தீபாராதனை காட்டும் பொழுது அங்கிருக்கும் பொருள்கள் அனைத்தும் தெளிவாகத் தெரிகின்றது.

ஆகவே ஒரு விளக்கைக் காட்டினால் அங்கு பல பொருள்கள் தெரிகின்றது. அப்பொழுது நாம் எதை எண்ண வேண்டும்..?
1.பொருளறிந்து செயல்படும் இச்சக்தி நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா…! என்று
2.புருவ மத்தியில் உயிரை எண்ணிச் சுவாசிக்க வேண்டும்.

இந்த ஆலயம் வருவோர் அனைவரும் பொருளறிந்து செயல்படும் இச்சக்தி பெறவேண்டும். நாங்கள் பாரப்போர் குடும்பம் எல்லாம் பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும், வியாபார நிமித்தம் எங்களிடம் தொழில் செய்வோரும் அவர்களது குடும்பமும் பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.

குடும்பத்தில் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருந்தாலும் ஒருவருக்கொருவர் ஒரு அவசரம் நிமித்தமாகக் கொஞ்ச நேரம் கால தாமதமாகி விட்டது என்றால் நாம் என்ன செய்கிறோம்..?

உடனே கோபிக்கின்றோம். ஏன்டா இவ்வளவு நேரம்…? என்று குழந்தைகளை அதட்டுகின்றோம்… மிரட்டுகின்றோம்..!

அடுத்தாற்போல் ஏதாவது ஒரு காரியத்திற்காக உட்கார்ந்து இருக்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம். உட்கார்ந்து வெகு நேரம் ஆனால் உடனே நம்மையறியாமல் வேதனைப்படுகின்றோம்… கோபப்படுகின்றோம்…!

யாரை நினைத்து இந்த வேதனை உணர்வை நுகர்கின்றோமோ அவரை எண்ணும் போதெல்லாம் வெறுப்பும் குறைபாடுகளும் வந்து விடுகின்றது. நம்மை அறியாமலே இப்படி வந்து விடுகின்றது

அப்படி வராமல் தடுப்பதற்குத் தான் ஆலயங்களில் விளக்கைப் போட்டுக் காண்பிக்கின்றார்கள்.. தீப ஆராதனையும் காட்டுகின்றார்கள்.

அதாவது
1.“என்ன நிமித்தமோ…! அதனால் நேரம் ஆகிவிட்டது…
2.சரி பரவாயில்லை… அவர்கள் சீக்கிரம் வரவேண்டும்…! என்ற இந்த உணர்வை நாம் எடுத்துக் கொண்டால்
3.நமக்கு யார் மீதும் வேதனையும் வராது… வெறுப்பான உணர்வுகளும் வராது.
4.ஒன்றுபட்டு வாழும் தன்மையும் சங்கடங்கள் வளராத நிலைகளும் நமக்குள் வரும்.

இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால் குடும்பத்தில் கணவன் மனைவியாக வாழும் நீங்கள் வாழ்க்கையில் சில குறைபாடுகள் வந்தாலும் அந்தப் பொருளறிந்து செயல்படும் சக்தியைப் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

குழந்தைகளினாலோ உறவினர்களினாலோ அல்லது நண்பர்களினாலோ சிறு குறைகள் வந்தாலும் அது எது சந்தர்ப்பமோ..
1.அவர்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.வாழ்க்கையில் தெளிந்து நடக்க வேண்டும்
3.நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்ற இந்த உணர்வினை எடுக்க வேண்டும்.

இப்படி இருந்தால் இல்லற வாழ்க்கையில் என்றுமே தெளிந்த மனம் கொண்டு வாழலாம்… மகிழ்ந்து வாழ்ந்திடவும் இது உதவும்.

ஒரு தெய்வத்தை வணங்குபவர் அடுத்த தெய்வத்தை எப்படி ஏற்றுக் கொள்கிறார்…?

Realization of God-1

ஒரு தெய்வத்தை வணங்குபவர் அடுத்த தெய்வத்தை எப்படி ஏற்றுக் கொள்கிறார்…?

இராமனைக் கும்பிட்டால் நமக்கு ஒன்றும் கொடுக்க மாட்டான்…. விஷ்ணுவைக் கும்பிட்டால் நமக்கு ஒன்றும் கொடுக்க மாட்டான்…! என்று சிவ தத்துவத்தில் சொல்வதும் சிவனைக் கும்பிட்டால் உனக்குச் சோறு கிடைக்காது..! என்று பதிலுக்கு விஷ்ணு தத்துவத்தைச் சார்ந்தவர்கள் சொல்வதும் இப்படி நமக்குள் இயற்கையின் நிலைகளைத் திருத்தித் தான் வாழ்கின்றோமே தவிர உண்மையின் தன்மையை அறிந்து வாழவில்லை.

ஏனென்றால் காசுக்காக வேண்டிப் பக்தி என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு
1.இந்தத் தெய்வத்தை வணங்கினால்தான் உனக்கு எல்லாம் கிடைக்கும் என்று சொல்லிக் கொண்டு
2.தூதுவனாக இருந்து காசு வாங்கி அவன் அவன் பிழைப்பதற்குத்தான் ஆகின்றது.
3.ஆண்டவனிடமிருந்து இவன் வரம் வாங்கித் தரப் போகின்றான்…! என்று தவறான பாதையில் சென்று
4.உண்மையின் இயற்கையின் உணர்வுகளை நாம் அறியவிடாது தடைபடுத்தி விட்டனர்… இன்றும் தடைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

மதங்கள் என்ற போர்வையில் மதத்தின் நிலைகளில் அரசன் என்றும் அரசனுக்குக் கீழ் பக்தி என்றும் பக்தி என்ற நிலைகளில் அவன் உருவாக்கியதை நாம் உடலுக்குள் சேர்த்து விட்டால் “அதுவே தெய்வம்” என்றும் உருவாக்கப்பட்டு விட்டது.

அப்படி உருவாக்கிய நிலைகள் கொண்டு அந்த உணர்வின் தன்மையை நாம் மீண்டும் எண்ணும் போது “தெய்வம் காக்கின்றது” என்றும் ஆனால் அவர்கள் காட்டிய உணர்வுக்கு மாறாக எடுத்தால் “தெய்வ தண்டனை கிடைக்கும்….!” என்று இப்படி மக்களை அச்சுறுத்திவிட்டனர்.

மக்களுக்கு உண்மை தெரியாது… அறியவிடாது… அன்றைய அரசர்கள் செய்த பிழை இது. இப்படி மதம் என்ற நிலையில் போர் என்ற நிலைகள் வரப்பட்டு உலகம் முழுவதற்குமே மனிதனுக்கு மனிதன் கொன்று குவிக்கும் நிலை தான் வந்தது.

என் மதத்தை காக்க… என் மதத்தைக் காக்க…! என்று போர் முறைகள் தான் வருகிறது. இன்றும் பார்க்கிறோம்.
1.மதத்தின் அடிப்படையில் மக்களை அழிக்கும் உணர்வுகள் தான் விளைகின்றதே தவிர
2.மக்களைக் காக்கும் மதம் எதுவும் இல்லை

விஷ்ணு மதம் சிவ மதம் இராமன் மதம் முருகன் மதம் ஜயப்பன் என்று பக்தியின் நிலைகள் வரப்படும் போது ஜயப்பன் கோவிலுக்குப் போகிறவர்களும் முருகன் கோவிலுக்குப் போகிறவர்களும் இரண்டு பேரும் சண்டை போட்டுக் கொள்கிறார்கள்.
1.பக்தி என்ற நிலையில் நாம் அஞ்ஞான வாழ்கை வாழ்கின்றோம்.
2.மெய் ஞான உலகை நாம் பெறவில்லை.

இதைப் போல ஒரு சாமியைக் கும்பிடுகிறவர்களும் இது என் சாமி.. இது உன் சாமி…! என்று இனங்களை வைத்து கோயிலில் இருக்கக்கூடிய மாரியம்மனைக் கும்பிட்டாலும் என்னுடைய இடத்தின் பக்கம் அந்தச் சாமி வந்துவிடுமா… பார்க்கலாம்…! என்ற நிலையில் ஒருவருக்கொருவர் தாக்குவதும்
1.அந்த நல்ல உணர்வுகளை எடுக்க முடியாது தடைப்பட்டு
2.மனிதனுக்கு மனிதன் மடியும் நிலையே வருகின்றது.
3.தெய்வம் நம்மைக் காக்கின்றதா… தெய்வத்தை நாம் காக்கின்றோமோ…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

நாம் நுகர்ந்தறிந்த உணர்வின் தன்மை அது உணர்ச்சியாகச் செயலாக்கப்படும் போது தெய்வம். அந்த உணர்வின் சக்தி நமக்குள் எடுக்கும் போது அது வித்து… “வினை…”

அந்த உணர்வின் சக்தி நமக்குள் வரும் போது உணர்ச்சிகளாக எண்ணமாகத் தோன்றுகிறது. எந்தச் சுவையின் தன்மை வருகிறதோ – சீதா ராமா…!

1.அந்தந்தச் சுவைக்கு ஒப்ப நம் எண்ணத்தின் உணர்ச்சிகள் இயக்குகிறது என்றும்…
2.இயற்கை நம்மை எப்படி இயக்குகிறது…? என்ற நிலையையும்…
3.தன்னை அறிந்து கொள்வதற்குத் தான் அத்தனை தத்துவங்களையும் ஞானிகள் நமக்குக் கொடுத்தார்கள்.

இன்று மனிதன் கண்டுபிடிக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் பெயர் வைக்கிறார்கள் அல்லவா…! மோட்டாருக்கு ஒரு பெயர்.. T.V.க்கு ஒரு பெயர்.. கம்ப்யூட்டருக்கு ஒரு பெயர்.. பின் அதனுடைய உப பொருட்களுக்கு என்று ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயரை வைத்து அதை எல்லாம் இணைத்தால் அது இணங்கி இயக்கும்…! என்று தெளிவாக்குகின்றார்கள் அல்லவா…!

இதைப் போன்று மனிதனின் வாழ்கையில் எதை எப்படி இணைக்க வேண்டும் என்ற நிலைகளுக்கு ஒவ்வொன்றுக்கும் காரணப் பெயர்களை வைத்து மனித உடலுக்குப் பின்… விண் செல்லும் மார்க்கங்களைக் காட்டினார்கள்…! அன்றைய மகரிஷிகள்.

கடவுள் ஒருவனே…! என்றால் அது எப்படிச் சரியாகும்…?

Realization of God

கடவுள் ஒருவனே…! என்றால் அது எப்படிச் சரியாகும்…?

அடிக்கடி ஒருவரைக் குறை கூறிக் கொண்டே இருந்தோம் என்றால் அதே குறையான செயல்களைச் செயல்படும் நிலையாக (குறையானவர்களாக) நாமும் மாறுகின்றோம்.

ஒருவர் மற்றொருவரை அடிக்கடி வேதனைப்படும்படி சொல்லிக் கொண்டு இருந்தார் என்றால் அவரின் வேதனைப்படும் உணர்வுகள் வேதனைப்படுத்தியவரின் உடலுக்குள் விளைந்து “ஜயோ எனக்கு மேல் வலிக்கிறதே…! கால் வலிக்கிறதே…!” என்பார்

ஆனால் அவர் என்ன நினைப்பார்…? எல்லோருக்கும் நான் நல்லது செய்தேன். அவன் தப்பு செய்தான்… அதைத் தானே நான் சொன்னேன்…! என்பார்.

அதாவது தன்னை நியாயப்படுத்தி வேதனைப்படும்படியாகப் புண்படும்படியாக ஒரு சொல்லைச் சொல்வார். அந்த உணர்வின் தன்மை இவர் உடலுக்குள் விளைந்த பின்
1.ஐயோ… மேல் வலிக்கிறதே கை வலிக்கிறதே…!
2.நான் எல்லோருக்கும் நல்லது தான் செய்தேன்… ஆண்டவன் என்னை ஏன் இப்படிச் சோதிக்கின்றான் என்று தெரியவில்லையே…! என்பார்.

ஆனால் தெய்வத்திற்குப் பூ மாலைகளைச் சூட்டுவதும் அபிஷேகம் செய்வதும் ஆராதனை செய்வதும் இப்படி எல்லாமே செய்தாலும் பெரும் பகுதி இப்படிப் பிறரைக் குறை கூறிப் பேசும் உணர்வுகள் கொண்டு
1.(முதலிலே) தன்னைத் தான் எண்ணாது
2.அவர் தவறுகளைச் செய்து கொண்டே இருப்பார்.

ஏனென்றால் நுகர்ந்தது எதுவோ அதை உயிர் அணுவாக மாற்றி… அதை உடலாக மாற்றி.. அந்த உணர்வின் சக்தியாகத்தான் “நமக்குள் இயக்கும்….!’ என்பதை மறந்து விட்டனர்.

ஆகவே இதை எதற்குச் சொல்கிறோம் என்றால்
1.இயற்கை எப்படி விளைந்தது…?
2.கடவுள் எப்படி இருக்கின்றான்…? என்பதைத் தெரிந்து கொள்ளத்தான்..!

தனித்து ஒருவன் கடவுள் இல்லை. ஐந்து நிலைகள் சேர்த்துத் தான் கடவுள் ஆகின்றது. வெப்பம்.. காந்தம்.. விஷம்… மணம்… அந்த சத்து… என்ற இந்த ஐந்தும் சேர்ந்த இயக்கத்தின் நிலைகளில் உருவாக்குகின்றது.

கடவுள் ஒருவன் (ஒன்று தான்) என்றால் அது எப்படி நியாயமாகும்…? ஒரு செடியானாலும் கல்லானாலும் உயிரினங்களாக ஆனாலும் அதே தான்.

ஐந்து புலனறிவு கொண்டு தான் எதைக் கவர்ந்து கொண்டதோ அதன் நிலைகளில்
1.ஒன்றுக்குள் சென்று உள் நின்று இயக்குவது தான் கடவுள் என்றும்
2.ஒரு உயிரணு இதை நுகர்ந்த பின் அதை உருவாக்குவது ஈசன் என்றும்
3.உருவான பிறகு பிரம்மம் என்றும் விஷ்ணுவின் மகன் பிரம்மா உருவாக்குகிறான் என்றும் ஞானிகள் தெளிவாக்குகின்றனர்.

உயிரின் துடிப்பு ஈசன் என்றாலும்… இயக்கத்திற்குள் இயக்கும் வெப்பம் விஷணு என்றும்… இதற்குள் இணைந்து நுகர்ந்ததை அணுவாக மாற்றுவதை விஷ்ணுவின் மகன் பிரம்மா என்றும் பிரம்மாவின் மனைவி சரஸ்வதி என்றும் காரணப் பெயர் வைத்து இயற்கையின் உண்மையின் இயக்கங்களை உணர்த்துகின்றனர்.

நாம் எந்த குணத்தை நுகர்கின்றோமோ அந்த குணத்தின் சக்தியாக உருபெறும் நிலை ஆகி அதே குணத்தின் சக்தியாக அது இயக்கும். அது தன் உடலாக மாறும் போது பார்வதி…!
1.நம் பார்வையில் எதைப் பார்த்தோமோ அதன் உணர்வுகள் எல்லாம் உடலாக இணைந்து கொள்கின்றது.
2.சிவனின் மனைவி பார்வதி – நம் பார்வையில் பார்த்து நுகர்ந்த உணர்வுகளை எல்லாம் ஓ… என்று ஜீவ அணுவாக மாற்றி
3.தன்னுடன் (உடலுடன்) இணைத்துக் கொள்ளும் என்பதற்கு “பார்வதி” என்று காரணப் பெயர் வைத்து
4.நம்மை அறிந்து செயல்படும் சக்தியாக நாம் செயல்பட வேண்டும் என்று நமது காவியங்கள் தெளிவாக்குகின்றது.

நல்லதைக் காக்க வேண்டும் என்றால் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமானது…!

Valmiki - ramayana

நல்லதைக் காக்க வேண்டும் என்றால் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமானது…!

தசரதச் சக்கரவர்த்தி தினமும் ஒரு கல்யாணம் செய்து கொள்கிறார் என்றும் கங்கணமே கழட்டவில்லை என்றும் காவியத்தில் சொல்வார்கள். அதாவது
1.விண்ணிலிருந்து வந்த ஒரு உயிரணு
2.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சக்தியைத் தனக்குள் கவர்ந்து
3.தன்னுடன் சேர்த்துக் கொண்டே உள்ளது என்பதை அவ்வாறு காட்டுகின்றார்கள்.

தசரதச் சக்கரவர்த்தி என்றால் நாம் புழுவிலிருந்து மனிதனாகத் தோன்றி மனிதன் ஆனபின் “பத்தாவது நிலை (கல்கி – ஒளி நிலை) அடையக்கூடிய பருவம் பெற்றவர்…” என்று பொருள்.

நாம் எண்ணக்கூடியது அனைத்தையும் நம் உயிர் ஜீவ அணுவாக மாற்றி அந்தச் சக்தியைத் தன்னுடன் இணைத்து தன்னுடன் இயங்கச் செய்கின்றது.

அதனால் தான் பத்தாவது நிலை அடையக்கூடிய தருணத்தில் அவர் என்ன ஆனார் என்ற நிலைகளைக் காட்டுகின்றார்கள்.
1.ஏனென்றால் அவருக்குள் எத்தனையோ விதமான குணங்கள் இருக்கின்றது
2.அது எல்லாம் அவருடன் சேர்ந்து இயக்கும் சக்தி (மனைவி) என்று பொருள்.

இராமனின் தாயோ எல்லாவற்றையும் அது பரிவுடன் பண்புடன் அரவணைக்கும் சக்தி கொண்டது. அதனால் அந்தச் சக்தியின் துணை கொண்டு அதனின்று உருவாகும் இந்த உணர்வின் அணுக்கள் மற்றவர்களை அரவணைக்கும் சக்தி கொண்டது என்று உணர்த்துவதற்காக
1.இராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்து
2.அவனிடம் இந்தச் சாம்ராஜ்யத்தை ஒப்படைக்கலாம்…! என்பது தசரதச் சக்கரவர்த்தியின் எண்ணம்.

தனக்குள் எடுக்கும் நல்ல குணம் கொண்டு அந்த நல்ல குணத்தைக் கொண்டே இந்த உடலை ஆட்சி புரிய வேண்டும் என்ற எண்ணங்கள் கொள்கின்றார் தசரதன்.

அந்த நல்ல குணங்கள் கொண்டு வாழ்க்கையை நடத்த வேண்டும் என்று எண்ணுகின்றார். இருப்பினும்
1.பரதனின் தாயாரோ தனக்குள் ஆசை கொண்டது.
2.தன் பையனுக்கே பட்டத்தைச் சூட்ட வேண்டும் என்று அது பிடிவாதம் பிடிக்கின்றது.

(உயிர் – தசரதன்; உயிரால் நுகரப்பட்ட உணர்வுகள் – மனைவியாக இணைகிறது; அதனால் தான் தசரதனுக்கு எண்ணிலடங்காத மனைவிகள் என்று சொல்வது.)

அப்படிப்பட்ட அந்த உயிரின் இயக்கத்தில்
1.எந்த உணர்வின் தன்மை வலிமை பெறுகின்றதோ
2.அந்தக் குணத்தின் தன்மை – தன் மகனுக்கே பட்டம் சூட்ட வேண்டும் என்று விரும்புகின்றது.
3.அதனால் உடலுக்குள் உருவான மற்ற நல்ல அணுக்களுக்கெல்லாம் கலக்கங்கள் ஏற்படுகின்றது என்பதைக் காட்டுகின்றனர்.

இருந்தாலும் உடலுக்குள் சகோதரத்துவமாக வளர்ந்த பரதனோ அண்ணனே (இராமனே) ஆட்சி புரிய வேண்டும் என்று விரும்பினாலும் “தன் குழந்தைக்கே பட்டம் சூட்ட வேண்டும்…” என்ற இந்தப் பிடிவாத குணங்கள் அங்கே கைகேயிக்கு எப்படி உருவாகின்றது என்பதைக் காட்டுகின்றார்கள்.

நல்லதைக் காக்க வேண்டும் என்ற நிலையில் சந்தர்ப்பத்தால் நாம் நுகரும் தீமையான உணர்வுகள் நம் உடலுக்குள் வந்த பின் அது விளைந்து
1.அதனுடைய பருவ காலம் வந்த பின்
2.நல்லதையே இயக்கவிடாது எப்படித் தடுக்கிறது…? என்பதையே அங்கே தெளிவாக்குகின்றார் வான்மீகி.

தீமை என்று அறிந்த கணமே அதை நமக்குள் சேராது அது நம் உடலுக்குள் விளையாது தடுக்க வேண்டும். அதற்குத்தான் அடிக்கடி ஆத்ம சுத்தி செய்யச் சொல்கிறோம்.

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடலிலுள்ள உறுப்புகள் முழுவதும் படர்ந்து அந்த உடல் உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களும் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று உடலுக்குள் இப்படிச் செலுத்தினால் இதற்குப் பெயர் ஆத்ம சுத்தி.

நஞ்சை வென்ற மகரிஷிகளின் அருள் சக்திகள் நம் உடலுக்குள் சென்று அது அணுவாக விளைந்து அதிலிருந்து வெளிப்படும் மணம் தீமைகளை வேக வைத்து அதை ஒளியாக மாற்றிவிடும். தீமைகள் அனைத்தும் செயலற்றதாகின்றது.

சிவ தனுசு விஷ்ணு தனுசு – விளக்கம்

dhanush

சிவ தனுசு விஷ்ணு தனுசு – விளக்கம்

 

நமது வாழ்கையில் இந்த உடலின் இச்சையின் வாழ்கையில் நுகர்ந்த உணர்வெல்லாம் அந்தந்த உணர்வின் எண்ணங்களாக நமக்குள் பாய்கின்றது.

ஒருவனைக் கெடுக்க வேண்டும் என்றால் இது உடலில் இருந்து ஏற்பட்ட அந்த எண்ணத்தின் உணர்வுகள் நினைவாக்கப்படும் போது அந்த உணர்ச்சிகள் நம்மை இயக்குகின்றது. இதற்குப் பெயர் சிவ தனுசு. அந்த உணர்ச்சியின் இயக்கமாக மற்ற ஒருவனைத் தாக்கும் நிலை வருகின்றது.

ஆக சிவ தனுசு என்றால்… இந்த உடலைப் பாதுகாக்கும் நிலைகள் பரசுராம். எந்தக் குணத்தின் உணர்வைப் பெருக்கினோமோ இந்த உடலின் வாழ்க்கைக்கு வேண்டிய செல்வத்தைத் தேடவும் அதே சமயத்தில் தீமைகளில் இருந்து தன்னைப் பாதுகாத்து கொள்ளும் உணர்வுகள் வருகின்றது.

அத்தகைய உணர்வுகள் வரப்படும் போது அது நமக்குள் செயலாக்கி அந்தச் சொல்லையும் அந்தச் செயலையும் செயல்படுத்தச் செய்து சிவ தனுசாக மாறுகின்றது.

1.சிவம் என்றால் நமது உடல் என்றும்
2.எதை எண்ணுகின்றோமோ அந்த உணர்ச்சிகள் நமக்குள் பாய்ந்தும்
3.அது இயக்கச் செய்யும் பொழுது தனுசு என்றும் காட்டினார்கள் ஞானிகள்.

தன்னைக் காத்துக் கொள்ள மற்றவர்களுக்குத் தொல்லை கொடுப்பதும் அவர்களை நம்மிடம் அணுகாத நிலைகள் செயல்படுத்துவது தான் சிவ தனுசு என்றும் இராமாயணத்தில் தெளிவாகக் கொடுக்கபட்டுள்ளது.

இதைப்போல அன்று அரசர்கள் தனுர் வேதத்தைப் பயன்படுத்தினார்கள். தனுர் வேதம் என்றால் இன்னொரு மனித உடலில் இருந்து அந்த உணர்வுகளைப் பிரித்து அந்த உணர்வின் தன்மையைத் தான் நுகர்ந்து மற்றவர்கள் மீது பாய்ச்சுவது தான்.

1.யாக வேள்விகளை நடத்தி அதர்வண வேத அடிப்படையில் மந்திரங்களைச் சொல்லி ஏவுவதும்
2.மந்திர ஏவலால் மற்றவர்களைச் செயல் இழக்கச் செய்வதும்
3.மற்றவர்களைச் செயலற்றவராக மாற்றுவதும் போன்ற நிலைகளைச் செயல்படுத்தி வந்தார்கள் அரசர்கள்.

அந்தத் தனுர் வேதம் இல்லாதவர்கள் எந்தப் போர் முறைகளையும் வெற்றி பெற முடியாது என்ற நிலை தான் அக்காலங்களில்.

கொடூர நிலைகளும் கொதித்து எழும் உணர்வுகளும் பிறரை இரக்கமற்றுத் தாக்கும் உணர்வுகளை மனிதனின் வாழ்க்கையில் இந்த உணர்வுகளை வளர்க்கப்படும் போது இது சிவ தனுசாக மாறுகின்றது.

உடலில் இருந்து எழும் உணர்ச்சிகள் அந்த உடலை வீரியமாக இயக்கச் செய்து அந்த வீரிய உணர்வு கொண்டு ஒரு மனிதரைத் தாக்குவதும் அவனை மடியச் செய்வதும் அல்லது அவனைக் காணாமல் போகச் செய்வதும் அவர் சொத்துக்களை விரயமாக்குவதும் அவர்களுக்குத் தொல்லை கொடுப்பதும் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலையில் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் நிலை தான் அது…!

உலக நாடுகளை எடுத்துக் கொண்டால் அமெரிக்கா தன் ஆயுத நிலைகள் கொண்டு மற்ற நாடுகளை அடக்கி ஆட்சி புரிய வேண்டும் என்றும் அவர்களைப் பலவீனப்படுத்தினால் தான் “தன் நாடு காக்கப்பட முடியும்…!” என்று இன்று செயல்படுகிறது.

இதைப் போன்று சீனாவும் அதனைக் காட்டிலும் வல்லமை கொண்டது என்றும் அதே போன்று ரஷ்யாவும் அடுத்து மற்ற உலக நாடுகள் அனைத்தும் ஒன்றைப் பார்த்து ஒன்று
1.தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் வலிமை கொண்டு
2.பிறரை வலிமை இழக்கச் செய்ய வேண்டும்..! என்றும் செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள்.

இத்தகைய உணர்வுடன் மனிதன் இயங்கி கொண்டு இருக்கும் நிலையில் விஞ்ஞான அறிவு கொண்டு கடும் விஷத் தன்மைகளை எப்படிப் பரப்புவது…? ஒவ்வொரு நாட்டையும் எப்படி அழிப்பது…? மக்களை எப்படிச் செயலற்றவர்களாக மாற்றுவது…? என்று இன்று வந்து விட்டார்கள்.

ஒரு மனித உடலுக்குள் இருக்கும் உணர்வினை எடுத்து அதை மந்திரங்களாகச் சொல்லிப் பாய்ச்சி ஏவுதல் அழித்தல் கொலை செய்தல் என்று இத்தகைய நிலைகளை வைத்துத் தான் அன்றைய அரசுகள் செய்து வந்தனர்.

இன்று அந்த அரசுகள் எல்லாம் மடிந்து விட்டது. ஜனநாயகம் என்ற மக்கள் ஆட்சி வந்து விட்டது.

அரசர்கள் வீழ்ந்து மக்கள் ஆட்சி என்று வரப்படும் போது ஆட்சி பீடத்திற்குத் தான் வந்த பின்
1.அந்த ஆட்சியில் தனக்கு அடிமை கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
2.தான் தான் எப்போதும் உயர்ந்து இருக்க வேண்டும்
3.உலக நிலைகளிலேயே நாம் புகழ் பெற வேண்டும் என்று போற்றித் துதிக்கும் உணர்ச்சிகள் அங்கே தூண்டப்பட்டு
4.நாட்டு மக்களைச் சீர்படுத்தும் நிலைகள் அற்று அவர்களைச் சீர் கெடச் செய்து அதற்குக் கீழ் அவர்களை வலு இழக்க செய்து
5.அதன் வழியில் அவர்கள் ஆட்சிகள் புரியும் காலமாக வந்து விட்டது… இது சிவ தனுசாக உருவாகும் இந்த நிலை.

இதிலிருந்து விடுபட வேண்டும் என்றால் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் விஷ்ணு தனுசைப் பயன்படுத்த வேண்டும். நமது உயிர் விஷ்ணு.

விஷ்ணு என்ற நிலையில் இந்த உயிரின் தன்மை கொண்டு உயிரைப் போன்று உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றித் துருவ நட்சத்திரத்திரமாக இருக்கும் அதனின்று வரும் உணர்வுகள் சூரியனின் காந்தச் சக்தியால் கவரப்பட்டு அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் பிரபஞ்சத்தில் பரவுகிறது.

அப்படிப் பரவி வரும் அந்த அலைகளை நான்கு மணியில் இருந்து நமது பூமி துருவப் பகுதியின் வழியாகக் கவர்ந்து நமது பூமிக்குள் பரவச் செய்கின்றது. அந்த நேரத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று நாம் எண்ணத்தால் ஏங்கும் போது அந்த உணர்வுகள் நம் உயிரிலே படுகின்றது. இதற்குப் பெயர் தான் விஷ்ணு தனுசு.

1.துருவ நட்சத்திரத்தின் வீரிய உணர்வுகள் தீமைகளை அழிக்கும் சக்தி கொண்டது. நஞ்சினை வென்றிடும் சக்தி பெற்றது.
2.இந்த உணர்வினை நாம் நுகர்ந்து அறியப்படும் போது அதன் வீரிய உணர்வுகள்
3.நம் உடலுக்குள் தீமை செய்யும் உணர்ச்சிகளை அடக்கவும் தீமையான செயல்களைத் தடைபடுத்தவும்
4.அருள் ஒளியைப் பெருக்கச் செய்யவும் என்று அந்த அருள் வழியில் அது வருகின்றது.

பரசுராமன் சீதாராமன் இருவருக்கும் போர் நடந்தது என்றும் பரசுராமன் உடலைச் சமப்படுத்தும் சிவ தனுசை எடுத்தான் என்றும் இராமன் உயிருடன் ஒன்றி ஒளியாக்கும் விஷ்ணு தனுசை எடுத்ததால் இராமன் வென்றான் என்றும் காட்டினார்கள்.

வாழ்க்கையில் வரும் தீமையான உணர்வுகளை மாற்றி ஒளி என்ற ஒரே நிலையில் மாற்றுவது தான் விஷ்ணு தனுசு. ஒளியாக மாற்றிடும் சக்தி பெற்றது தான் நமது உயிர்.

நமது ஆறாவது அறிவின் தன்மை கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் உருவாக்கி உடலுக்குள் அதைப் பெருக்கினால் இது விஷ்ணு தனுசு.

பூமிக்குள் பரவி வரும் விஷத் தன்மைகளை நமக்குள் வராது தடுத்து நமது உடலில் உள்ள ஜீவ அணுக்கள் அனைத்தையும் உயிரைப் போல ஒளியின் தன்மையைப் பெறச் செய்து
1.ஒரு கூட்டமைப்பாகத் துருவ நட்சத்திரத்திம் ஒளிர்வது போல
2.நாமும் இந்த உடலுக்கு பின் ஒளிரும் நிலை பெறுதல் வேண்டும்.

இராமாயணத்தில் உணர்த்தப்பட்ட இராவணன் யார்…?

Ramayanam

இராமாயணத்தில் உணர்த்தப்பட்ட இராவணன் யார்…?

ஒரு வீட்டில் கொடூர குணம் கொண்ட ஒருவன் வாழ்ந்து இறந்த பிறகு என்னவாகின்றதென்றால் அவன் உடலுக்குள் விளைந்த உணர்வுகள் ஒவ்வொரு உடலிலும் புகுந்து நரக வேதனையை உருவாக்கின்றது.

சில குடும்பகளில்…
1.தீய குணங்கள் மிகுந்த ஒருவனைப் பார்த்து
2.“இவன் எல்லாம் செத்துத் தொலைந்தால் என்ன…!” என்று எண்ணுவார்கள்.
3.ஆனால் அவன் இறந்த பிற்பாடு அவன் விளைய வைத்த தீய உணர்வுகள் எல்லோருடைய உடல்களிலும் பெருகத் தொடங்கி விடும்.

அரக்க உணர்வு கொண்ட ஒருவன் வீட்டில் குடும்பத்துடன் வசிக்கும் பொழுது அவன் பேசிய பேச்சுக்கள் வெளியிட்ட உணர்வுகள் அனைத்தும், குடும்பத்திலுள்ள அனைவரிடமும் பதிந்திருக்கும்.

வெளி நபர் ஒருவர் அவரிடம் பேசியிருந்தாலும் அவரிடமும் பதிந்து அவரும் இவரின் உணர்வை அடிக்கடி தன்னுள் வளர்த்திருக்கும் நிலையில் அரக்கக் குணம் கொண்ட மனிதன் இறந்து விட்டால் என்னாகும்…?

இதைத்தான் இராமாயணத்தில் பத்தாவது நிலையை அடையக் கூடிய இராவணன் தன் உடலில் வளர்த்துக் கொண்ட குரோத உணர்வின் அணுக்கள் அனைத்தும் மீண்டும் எப்படி அகர குணங்களை வளர்க்கின்றது என்பதைத் தெளிவாக கூறினார்கள்.

இராவணின் மகன் இந்திரஜித் அவன் “மாயமாக மறைந்திருந்து செயல்படுவான்…!” என்று கூறினார்கள். அதாவது அரக்கக் குணம் கொண்ட ஒருவன் கொடூரமாகச் சாகிறான் என்றால்
1.அவனுடைய உயிரான்மா மற்றொருவருடைய உடலுக்குள் புகுந்து கொண்டு
2.”அவருக்குத் தெரியாமலேயே…!” அவரை ஆட்டிப் படைக்கின்றது.

இதைத்தான்… “இவனுடைய உடலுக்குள் ஆவி இறங்கி விட்டது… பேய் ஆட்டுகின்றது…!” என்பது போன்று இப்பொழுது சமூகத்தில் சொல்கிறார்கள்.

எத்தனை ஆசைகளைத் தனக்குள் எடுத்துக் கொண்டு அந்த உயிரான்மா உடலை விட்டு வெளியே வந்ததோ அதே ஆசை கொண்டு, மற்றொரு உடலுக்குள் புகுந்து கொண்டு அங்கே பேயாக ஆட்டும்.

“கொல்ல வேண்டும்…!” என்ற உணர்வுகளை எடுத்துக் கொண்ட உயிரான்மா இத்தனை வேலைகளைச் செய்யும். அவனுக்குப் பிறந்த குழந்தையும் இவன் வழியில் வளரப்படும் பொழுது இப்படித்தான் வருகின்றான்.

அன்றாட வாழ்க்கையில், இதனை நாம் சாதாரணமாகக் காணமுடியும்.

உதாரணமாக பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் மிகவும் நட்பாக, நன்றாகப் பழகுவார்கள். ஆனால், பரீட்சையில் தோல்வி அடைந்து விட்டால் சிலர் மிகவும் வேதனையடைந்து தற்கொலை செய்து கொள்வதும் உண்டு.

தற்கொலை செய்து கொண்ட ஒரு மாணவியின் உயிரான்மா யாரை மிகவும் நட்பாக நேசித்து நட்பாகப் பழகியதோ அந்த உடலுக்குள் வந்துவிடும்.
1.இப்படி வந்த பின்
2.இந்த மாணவி பரீட்சை எழுதச் செல்ல வேண்டும் என்றாலே தன்னையறியாது பயப்படும்…!

ஏனென்றால் இந்த மாணவியின் உடலிலுள்ள உயிரான்மா போகவிடாது. தான் எடுத்துக் கொண்ட உணர்வு கொண்டு இந்த உடலில் பல வித செயல்களைச் செயல்படுத்தும். இதை நாம் அனுபவத்தில் பார்க்கலாம்.

மருத்துவப் படிப்பு படிப்பவருக்குக் கூட இதுபோன்ற நிலைகள் ஏற்படுகின்றன.

நண்பர்களாகப் பழகியிருப்பார்கள். ஆனால் நண்பர்களில் ஒருவர் எதிர்ப்பாராத விதமாக ஹார்ட் அட்டாக்கில் இறந்து விட்டார் என்றால் பற்றின் உணர்வுகள் இங்கே வந்தவுடனே அந்த உயிரான்மா நண்பரின் உடலுக்குள் வந்துவிடும்.

இவைகளெல்லாம் எதனால் வருகின்றது என்பதனை, ஞானிகள் இராமாயாணக் காவியம் மூலம் நமக்குத் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

1.உயிரின் இயக்கங்களையும்
2.உணர்வின் எண்ணங்களின் இயக்கத்தையும்
3.உணர்வுக்கொப்ப நமது உடல் எப்படொ உருவானது என்பதையும்
4.மனித சரீர வாழ்க்கைக்குப்பின் நமது நிலை என்ன..? என்பதையும்,
5.ஞானிகள் இராமாயணக் காவியத்தில் தெளிவாகக் கொடுத்துள்ளார்கள்.

சிருஷ்டியை மாற்றும் ஆறாவது அறிவு “கார்த்திகேயா…!”

Brahma creator.jpg

சிருஷ்டியை மாற்றும் ஆறாவது அறிவு “கார்த்திகேயா…!”

நமது வாழ்கையில் காலையில் இருந்து இரவு வரையிலும் சலிப்பு சஞ்சலம் சங்கடம் கோபம் குரோதம் என்ற என்ற எத்தனையோ நிகழ்வுகளைப் பார்க்கின்றோம்
1.வெறுப்படைவோரைப் பார்க்கின்றோம்
2.வேதனைப்படுவோரைப் பார்க்கின்றோம்
3.வேதனைபடுத்துவோரைப் பார்க்கின்றோம்
4.கோபப்படுவோரைப் பார்க்கின்றோம்.

இவை அனைத்தும் நாம் கண்களால் பார்த்து நுகர்ந்து அறிகின்றோம். நாம் பார்த்து நுகர்ந்து அறிந்தாலும் அதை எல்லாம் நமது உயிர் “ஓ…” என்று ஜீவ அணுவாக மாற்றி நம் உடலிலே அது பெருகச் செய்து விடுகின்றது.

ஆகவே பல கோடி உடல்களில் இருந்து நஞ்சினை வென்று நம் வாழ்கையில் நஞ்சினை வென்றிடும் அருள் சக்தி பெற்று இன்று மனித உரு கொடுத்த நமது உயிரை நாம் மதித்தல் வேண்டும்.

நம் உயிரை மதிப்பதற்கு என்ன வழி…?

நமது வாழ்கையில் பிறருடைய தீமைகளைக் கேட்டறிந்தாலோ பார்த்து நுகர்ந்தாலோ அதை நம் உடலுக்குள் புகாதபடி தடுத்தல் வேண்டும். உயிரால் வளர்க்கப்பட்ட இந்த உடலான சிவத்தை நாம் பாதுகாத்தல் வேண்டும்.

ஏனென்றால் சிவத்திற்குள் (உடலுக்குள்) நல்ல சக்திகள் இருந்தால் தான் உடலில் நோய் இல்லாத நிலைகள் ஏற்படும்.

நம் உடலைச் சிவமாக மதித்து நம் உயிரை ஈசனாக மதித்து நாம் ஒவ்வொரு நொடிகளில் இந்த வாழ்கையில் சலிப்போ சஞ்சலமோ சங்கடமோ வெறுப்போ வேதனையோ இதைப் போல நிகழ்சிகளை நாம் பார்த்துக் கேட்டுணர்ந்தால் அவை நம் உடலுக்குள் புகாது பாதுகாத்தல் வேண்டும்.

ஞானிகள் காட்டிய அருள் வழியில் நமது உடலில் இருக்கும்
1.ஆறாவது அறிவைக் கார்த்திகேயா என்றும்
2.அது அறிந்திடும் ஆற்றல் பெற்றது என்றும்
3.அது தீமைகளை நமக்குள் புகாதபடி “பாதுகாக்கும் சக்தி…!” என்றும் தெளிவாக எடுத்துக் கூறி உள்ளார்கள்.

எத்தகைய தீமைகள் வந்தாலும் நம் உடலுக்குள் அது போகாதபடி அதை நாம் தடுத்து நம் உடலுக்குள் அந்தத் தீமையின் நிலைகள் (அணுக்களாக) உருவாகாது அதைத் தடைப்படுத்தல் வேண்டும்.

அதைத் தடைப்படுத்த வேண்டும் என்றால்… முதலில் சொன்ன மாதிரி நாம் கண்களால் பார்த்துக் கேட்டறிந்த உணர்வுகள் (சலிப்பு கோபம் சங்கடம் ஆத்திரம் வேதனை) அனைத்தும் நமக்குள் தீமையின் அணுக்களாக எப்படி உடலுக்குள் அணுக்களாக உருவாகின்றதோ அதே போன்று
1.அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும்
2.அது எங்கள் இரத்த நாளங்களிலே கலந்து உடல் முழுவதும் படர வேண்டும்
3.எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் என்று
3.நாம் தீமைகளைக் கேட்டறிந்த அடுத்த நிமிடத்திலேயே இதை இணைத்திடல் வேண்டும்.

நாம் எப்படி ஒரு குழம்பை வைக்கும் போது பதம் பார்த்து அதாவது காரம் புளிப்பு உப்பு போன்ற மற்ற நிலைகளை அறுசுவைகளை ஒரு சுவையாக மாற்றி சுவைமிக்க குழம்பாக வைக்கின்றோமோ அதைப் போன்று
1.தனித்தனியாக வரும் இந்த வெறுப்பு கோபம் வேதனை என்ற உணர்வுகளுக்குள்
2.அருள் ஞானியின் உணர்வுகளைச் சேர்த்து
3.அந்த நஞ்சினை வென்றிடும் உணர்வுகளை நமக்குள் உருவாக்குதல் வேண்டும்.

தீமைகள் வரும் பொழுதெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இதை நுகரப்படும் போது நம் உடலுக்குள் ஒளியான அணுக்கள் பெருகுகின்றது. ஆகவே
1.நமது வாழ்கையில் ஒவ்வொரு நிமிடமும்
2.நாம் அந்த நஞ்சினை வென்றிடும் உணர்வுகளை அணுக்களாக உருவாக்குதல் வேண்டும்.

அதனால் தான் நம் ஆறாவது அறிவை முருகா என்று காட்டி “பிரம்மாவைச் சிறைப் பிடித்தான் முருகன்…!” என்று நம் சாஸ்திரங்களில் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

இப்படி சந்தர்ப்பத்தால் நாம் சந்திக்க நேரும் எந்தத் தீமைகளும் நமக்குள் உருவாகாதபடி
1.அருள் உணர்வை நமக்குள் உருவாக்கும் சக்தியாக
2.அந்தச் சிருஷ்டியையே நாம் மாற்றுகின்றோம்.