ஒளியின் சக்தியைப் பெற்று உயர்ந்திடுவேன்

ஒளியின் சக்தியைப் பெற்று உயர்ந்திடுவேன்

 

இராமன் குகன் மீது நட்பு கொண்டான்… குகனின் துணை கொண்டு கங்கையில் ஓடத்தில் இராமன் சென்றான் என்றாலும்…
1.இராமன் கொண்ட பாசம் சகோதர நயமாக…
2.தன் மனத் தேரில் குகன் பவனி வரும் பாங்காக வந்தது என்பது… அது அன்பில் சிறந்தது

ஒரு தேரை (தவளை) ஆற்றின் கரையில் வாழும் பொழுது ஆகாரம் புசிப்பதற்காக சிறு சிறு பூச்சிகளை விழுங்குகின்றது. அந்தப் பூச்சிகளின் உயிர் தேரைக்குள் சென்று தேரையாகப் பிறக்கும் நிலை பெறுகின்றது.

ஆனால் இராமன் தன் பாணத்தால் “அறிந்திடாத் தன்மையால்” அதன் மீது எய்த பொழுது அவ் உயிர் சக்திகளின் பிறப்பின் நிலை மனித உடலுக்குள் வந்து உயிரணுக்களாக… மனிதனாகப் பிறக்கும் (உயர்ந்த நிலையாக) விமோசனம் பெறுகிறது.

ஆனாலும்…
1.சந்தர்ப்பத்தின் வசம் வினைப் பயன் காரியார்த்த நடைமுறைகள் அதை உணர்ந்து கொண்டிடும் உயர் ஞானம் போல
2.அதிவேக உணர்வுகள் கூட்டிக் கொண்டிடும் உணர்வுகளால்
3.எண்ணத்தால் ஏற்படுத்தப்படும் சந்தர்ப்பத்தின் வசம் “இராமன் கொண்ட அனுபவமாக”
4.தெய்வீக புருஷன்… அரக்க குணம் கொண்ட (இராவண) பிறப்பின் நிலை எண்ணத்தால் வரு(ந்)த்திட்டான் என்று காட்டி
5.”இராமபாணம் துளைத்தது” என்று கொண்டிட்ட உயர்வான எண்ணம் எடுத்துத் தன்னைத்தான் காத்துக் கொண்டு
6.சாப நிலையை மாற்றி விமோசனத் தன்மையாகத் தன்னை உயர்த்தியது என்பதுதான் இராம காவியத்தின் சூட்சுமம்.

அன்பின் வசம் தான் அனைத்துமே (அகண்ட அண்டத்தில்) அடங்கும்…!

உலக நிலையில் ஒன்றை அறிந்து கொள்தல் என்பது இன்றைய அனுபவ நடைமுறையாக இருக்கலாம். ஆனால் இயற்கை என்ற “வசுக்கள் சக்தியை…”
1.மனிதன் இருந்த இடத்தில் இருந்து கொண்டே தன்னில் தெளிந்து
2.ஆத்ம பலம் பெற்றிடும் வழியாகத் தன்னைத்தான் வளர்த்து
3.ஈர்ப்பின் செயல் (எங்கே செல்ல வேண்டும் என்ற) சூட்சுமம் அறிந்து கொள்ள வேண்டும்

புயலால் கடல் மிகவும் கொந்தளிக்கும்… அது போல் கோப குணத்தால் மனிதனின் மனம் தத்தளிக்கும்….! ஞானச் செல்வங்கள் அத்தகைய உணர்வுகளில் சிக்கிடாத நிலைக்கு வானவியல் தத்துவ செயல் குணம் கொள்ள வேண்டும்,

மேகத்தின் ஊடே சூரிய ஒளியைக் கவர்ந்து பல வண்ணம் காட்டும் “ஸ்படிக நீர்…” வான்வெளியில் செயலுருவாக கருப்பொருள் காட்டுவதைப் போன்று
1.ஒளியின் சக்தியைப் பெற்றுப் பெற்று உயர்ந்திடுவேன் என்ற எண்ணம் வளர வளர
2.அந்த மேன்மையான நிலையில் வழி நிற்றலே சம்பூரணம்

ஆக…
1.தானாக வளர்வது இயல்பு நிலை…
2.பலனாய் வளர்ப்பது “நம் நிலை…!” (ஞானிகள் வழி)

இதிலே பொருள் உண்டு… உணர்ந்து கொள்…!

அருள் ஒளியினைப் பெருக்கிப் பேரருளாக மாற்றி பேரொளியாக நாம் வாழ வேண்டும்

அருள் ஒளியினைப் பெருக்கிப் பேரருளாக மாற்றி பேரொளியாக நாம் வாழ வேண்டும்

 

ஒரு வேதனைப்படும் மனிதனை உற்று நோக்கினால் அப்போது நமது எண்ணங்கள் பலவீனம் அடைந்து விடுகின்றது. அதை மாற்றி அமைக்க அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று நாம் உடனடியாக எண்ணி எடுத்தல் வேண்டும்.

ஏனென்றால் துருவ நட்சத்திரம் தீமைகளைக் கருக்கியது… தீமையை வென்றது… நஞ்சினை வென்றது. ஆகவே அந்த உணர்வின் சக்தியை நாம் நுகர்ந்து வேதனையான உணர்வுகள் நமக்குள் செயலாகாதபடி அதைச் சேர்த்து வேதனையைக் குறைத்துப் பழகுதல் வேண்டும்.

வேதனைப்படுவோரைப் பார்த்தால்…
1.அவர் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.வேதனையிலிருந்து அவர் விடுபட வேண்டும்
3.அவர் உடல் நலம் பெற வேண்டும்
4.மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும் என்ற உணர்வினை நாம் எடுத்து அங்கே பாய்ச்சுதல் வேண்டும்.

இந்த உணர்வை நுகர்ந்தோம் என்றால் நமது உயிர் ஓ… என்று ஜீவ அணுவாக மாற்றும் அணுவின் கருவாக உருவாக்குகின்றது.

பின் நம் இரத்த நாளங்களில் கலந்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் அணுவாக மாறும் பொழுது
1.நாம் எத்தகைய நிலை பெற்றோமோ அந்த உணர்வின் தன்மை நுகர்ந்து அது தன் இனத்தைப் பெருக்கும் சக்தி பெறுகின்றது.
2.அப்பொழுது நம் உடலுக்குள் தீமை அகற்றிடும் அணுக்கள் பெருகுகின்றது
3.தீமையை மாற்றி அமைக்கும் சக்தியும் நாம் பெறுகின்றோம்.

நமது வாழ்க்கையில் தீமை என்ற நிலைகளோ அல்லது வேதனைப்படும் உணர்வுகளோ கோபமோ வெறுப்போ… சந்தர்ப்பத்தால் பயமோ ஆத்திரமா இத்தகைய உணர்வுகள் தோன்றும் போதெல்லாம்… அவைகள் நமக்குள் அணுக்களாக உருவாகாதபடி துருவ நட்சத்திரத்தின் உணர்வு உண்டு அவைகளைத் தணித்துப் பழகுதல் வேண்டும்.

ஆனால் தீய உணர்வையே நுகர்ந்து தீய அணுக்களே நம் உடலுக்குள் பெருகி விட்டால் நம் உடல் சீர்குலைகின்றது… கடும் நோய் ஆகிறது.

ஆகவே அத்தகைய நோய்கள் வளராது தடுப்பதற்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று அவ்வப்போது நமது ஆன்மாவைத் தூய்மைப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும்.

இப்படி ஒவ்வொரு நிமிடத்திலும் எந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பற்றுடன் பற்றுகின்றோமோ அதனால் நமக்குள் இந்த பூமியின் பற்று அற்றுப் போய் விடுகின்றது.

ஆனால் நோயின் தன்மையை அதிகமாக நேசிக்கும் போது புவியின் பற்றுக்கே வருகின்றோம். நோயினைப் பற்றி விட்டால் மனிதனல்லாத உருவையே பெறுகின்றோம்.

இதிலிருந்து நாம் விடுபடுதல் வேண்டும்.

ஆகவே துருவ தியானத்தில் பெற்ற துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஒவ்வொரு நொடிப்பொழுதும் பெற்றுத் தீமைகள் விளைந்திடாது தடுக்க வேண்டும்.

1.நாம் பார்ப்பதெல்லாம் நலம் பெற வேண்டும் என்று உணர்வினைக் கூட்டி வளர்த்தால் நமக்குள் தீங்கு விளையாது.
2.அருள் ஒளியினைப் பெருக்கிப் பேரருளாக மாற்றி வாழ வேண்டும்
3.பேரருள் என்றால் நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அனைத்தையும் தீமைகளை அகற்றிடும் அணுக்களாக மாற்றி
4.பேரொளி என்ற நிலையை நம் உடலுக்குள் உருவாக்க வேண்டும்.

“உயிரோடு ஒன்றி ஜொலித்திடும் நிலையாக” ஒளி நிலை பெற வேண்டும்

“உயிரோடு ஒன்றி ஜொலித்திடும் நிலையாக” ஒளி நிலை பெற வேண்டும்

 

நமது உயிரில் (புருவ மத்தியில்)
1.அது கூர்மையாக ஈர்க்கும் இடங்களில் அது சேமித்து சேமித்து வைரத்தைப் போன்று கற்கள் உருவாக்கும் நிலை வருகின்றது.
2.நரிக்குக் கொம்பு என்று சொல்வது போன்று நமக்குள்ளும் இது உறைகின்றது
3.அந்த உணர்வுகள் விளைந்து விட்டால் அதுவே வைரமாக மாறுகின்றது.

கடந்த காலங்களில் 200 வருடம் 300 வருடம் ஆகியும் மனிதர்கள் இறக்கவில்லை என்றால் அவர் உடலில் சேமிக்கப்பட்ட உணர்வுகள் மண்டை ஓட்டிலே எடுத்துக் கொண்டால் “வைரங்கள்” அங்கே விளைந்திருக்கும்.

எந்த நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெற்றார்களோ அந்த உணர்வின் தன்மை தனக்குள் நுகர்ந்து அவருக்குள் உறையப்பட்டு வைரமாக ஜொலிக்கின்றது.

கடந்த கால நிலைகள் இப்படி உண்டு.

குருநாதர் இமயமலைச் சாரலுக்கு எம்மை அழைத்துச் சென்று
1.அங்கே புதையுண்டு உடல் அழியாது இருந்த பல நூறு வருடங்கள் வாழ்ந்த
2.அக்கால மனிதர்கள் உடலில் பிளந்து காட்டுகின்றார் இந்த வைரங்களை.

காடு மேடெல்லாம் அலையச் செய்து தான் இந்த பேருண்மைகளைக் காட்டுகின்றார். மனிதனான பின் இத்தகைய உணர்வுகளை நுகர்ந்து உயிரோடு ஒன்றி வளர்ச்சி பெற்று அது வைரமாக விளைவதையும் காட்டுகின்றார்.

நட்சத்திரங்கள் ஜொலிப்பின் தன்மை பெற்றாலும் கார்த்திகை நட்சத்திரம் ஜொலிப்பான நிலைகள் நீலம் கலந்த வெளுப்பு நிறமாக இருக்கும். ரேவதி நட்சத்திரம் மஞ்சள் கலந்த நிறமாக இருக்கும்… கோமதேகம் போன்ற உணர்வுகள் உருவாகும்.

இப்படி 27 நட்சத்திரங்களில் இருந்தும் வைரக்கற்கள் உருவாகின்றது. சில நட்சத்திர கலவைகள் அணுக்களாக மாற்றப்படும் பொழுது வைரங்களின் ரூபங்களும் மாறும்.

இதைத் தெளிவாக்குகின்றார் குருநாதர்.

மனித உடலுக்குள் ஒவ்வொரு தாவர இனங்களும் ஒவ்வொரு நட்சத்திரத்தின் உணர்வைக் கலந்தே உள்ளது. அந்தக் குணத்தை அது சிறப்பிக்கின்றது.

இருந்தாலும்… அந்த விஷம் தோய்ந்த அணுக்களின் தன்மை… “எந்த நட்சத்திரத்தின் தன்மை கொண்டு உயிரின் தன்மை இயக்குகிறதோ” அதனின் தன்மை கொண்டு வைரமாகவே பின் நாட்களில் மாற்றுகின்றது.

இமயமலைச் சாரலுக்கு அழைத்துச் சென்று தொடர் வரிசையாக குருநாதர் எடுத்துக் காட்டுகின்றார்.

ஆனால் மறைந்திருக்கும் வைரத்தைக் காட்டினால் ஆஹா…! என்று பெருமைப்படுவதும்… அதனால் பயனில்லை என்றாலும் அதை எடுத்து வந்து கிரீடங்களிலே வைத்து வீட்டில் பெட்டிக்குள் வைத்து பூட்டிக் கொள்வதும்…
1.“நான் வைரத்தை வைத்துள்ளேன்” என்று பெருமை பேசும் நிலைகளுக்குத் தான் அதைக் கொண்டு செல்கின்றோம்.
2.உணர்வின் தன்மை உயிரின் ஒளியின் ஜொலிப்பாக மாற்ற வேண்டும் என்ற எண்ணங்கள் நமக்கு வருவதில்லை.

இந்த உடலின் இச்சையும் நம்மை மற்றவர் போற்றும் நிலைக்காகப் பல ஆடம்பரப் பொருள்களைச் சேர்த்து… பிறர் மெச்ச வேண்டும் போற்ற வேண்டும் என்ற இந்த ஆசைகள் தான் தூண்டுகின்றது.

அவர்கள் போற்றத் தவறினால் பகைமைகளை உருவாக்கி விடுகின்றது… அதற்குப் பின் நல்ல குணங்களையும் அழித்து விடுகின்றது. சற்று சிந்தித்துப் பாருங்கள்.

இயற்கையின் இயல்புகள் நம் உயிர் எவ்வாறு மாற்றுகின்றது…? என்ற நிலைகளைத் தெளிவாகத் தெரிந்து கொண்டால் இந்த உடல் நமக்குச் சொந்தமில்லை என்பதை உணரலாம்.

நாம் அணிந்திருக்கும் அணிகலன்களும் ஆடைகளோ நமக்குச் சொந்தம் ஆகின்றதா…? ஆடம்பர அலங்கார வீடுகள் நமக்குச் சொந்தமாகின்றதா…? அழகாக வளர்த்த இந்த உடல் சொந்தமாகின்றதா…?

வேதனைகள் அதிகமாக உருவாகிவிட்டால் அதற்குள் மடிகின்றது… உடல் குறுகுகின்றது… வேதனைகள் வளர்கின்றது… நல்ல ஆடைகளை அணியும் திறனும் இழந்து விடுகின்றோம். நல்ல ஆடைகளைக் கண்டால் சீ…! வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளுகின்றோம்.

எப்போது…?

அதை உடல் ஏற்றுக் கொள்ளாத நிலை வரும் பொழுது இப்படி ஆகி விடுகின்றது. கடைசியில் பணம் இல்லாத நிலை ஆகிவிடுகின்றோம் இதைப் போன்ற உணர்வு எவ்வாறு வளர்கிறது என்று குரு காட்டுகின்றார்.

ஆகவே நாம் இச்சைப்படுவது எதுவாக இருக்க வேண்டும்…?
1.உயிரின் மீது இசைப்பட வேண்டும்
2.உயிரோடு ஒன்றி ஜொலித்திடும் நிலையாக ஒளி நிலை பெறுவது மனிதனின் முதிர்வு நிலை.

இருபத்தியேழு நட்சத்திரங்களும் நவக்கோள்களும்

இருபத்தியேழு நட்சத்திரங்களும் நவக்கோள்களும்

 

27 நட்சத்திரங்களும் ஆற்றலை நீங்கள் பெற வேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு நட்சத்திரத்தின் இயக்கத்தின் தன்மை கொண்டது.

அந்த நட்சத்திரத்தின் இயக்கம் கொண்ட எந்தெந்தத் தாவர இனமோ அதனின் உணர்வின் தன்மை விளைந்த பின் தன் இனத்தின் தன்மை இங்கே ஒளியின் சுடராக மாற்றிக் கொண்டுள்ளது.
1.ஒவ்வொரு உயிரும் 27 நட்சத்திரத்தால் இயக்கும் உணர்வின் துணை கொண்டு
2.அந்த நட்சத்திரங்களின் சக்திகள் நமக்குள் ஐக்கியமாகிடல் வேண்டும்.

எப்படி 27 நட்சத்திரங்களுடைய சக்தி ஒருங்கிணைந்து ஒரு பிரபஞ்சத்தை உருவாக்கி சூரியன் ஒளியின் சுடராக வாழுகின்றதோ இதைப் போல
1.உயிரின் இயக்கத்தால் உணர்வின் எண்ணங்களை வளர்க்கப்பட்டு வாழ்ந்திடும் உணர்வின் தன்மையும்
2.தன் இனத்தின் பெருக்கம் வரும் பொழுது ஒளியின் சிகரமாக ஒளியின் நிலையாக நமக்குள் அந்த இனத்தைப் பெருக்கும் நிலை தான்
3.27 நட்சத்திரத்தின் சக்தியை நாம் பெற வேண்டும் என்று நமக்குள் ஒருங்கிணைந்த நிலையில் கூட்டச் செய்வதற்கே “இது…”

இப்பொழுது நான் பேசும் நிலையோ நவக்கோள்கள். உயிரணு தோன்றும் பொழுது எந்த கோளின் தன்மையை அதிகரித்துச் சேர்த்திருந்ததோ அதனின் பங்கு விகிதமே மனிதனுக்குள் வரும் பொழுது அந்தக் கோள் முன்னணியில் இருக்கும்.

நவக்கிரகம் என்பதும் இதே தான்…! எந்தக் கோளின் தன்மை நமக்குள் அதிகரித்தோமோ மற்ற கோளின் தன்மை வரும் பொழுது எதிர்மறையான நிலைகள் இயக்கச் சக்திக்கே இது உதவும்.

நம் உடலின் தன்மை உடல் ஒரு கோள்தான்.
1.சகோதர உணர்வு கொண்டு எடுக்கப்படும் பொழுது இது ஓ என்று இயக்கப்பட்டு ஒன்றிட்ட நிலை வரும் போது
2.நவக் கோளின் சக்தியை ஒருக்கினைந்த நிலைகள் கொண்டு நமக்குள் உருவாகும் நிலையே வருகின்றது.

“நான் ஏதோ சாதாரணமாகச் சொல்கிறேன்” என்று எண்ண வேண்டாம்
1.குருநாதர் பித்தரைப் போன்று இருந்து உயர்ந்த நிலைகளை எனக்குள் அனுபவபூர்வமாகக் கொடுத்த நிலைகளை
2.நீங்கள் எல்லோரும் பெற வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்கின்றேன்.

ஏனென்றால் விஞ்ஞான அறிவு ஒரு பக்கம் அழிவின் தன்மை சென்று கொண்டிருக்கும் இந்த நேரத்தில் மனிதனின் சிந்தனை அழியும் நிலை வருகின்றது.

மனிதனின் சிந்தனையே அழியும் பொழுது இழிநிலையான நிலைகளுக்குச் செல்வதற்கு முன் “நீங்கள் அனைவரும் தயாராகி விட வேண்டும்…”

தயாரானால்…
1.இருண்ட உலகை அப்புறப்படுத்தி விட்டு ஒளி காணும் உணர்வாக
2.உங்கள் பேச்சும் மூச்சும் உலகைக் காத்திடும் நிலையாகப் பெற வேண்டும் என்பதற்குத்தான்
3.என் குரு இட்ட ஆணைப்படி உங்களில் பதிவு செய்து கொண்டிருக்கின்றேன்.
4.அந்த நவக் கோள்களின் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்று உபதேசிக்கின்றேன்.

இதனின் தொடர் கொண்டு சூரியன் எப்படி ஒளிச் சுடராக இருக்கின்றதோ உயிருடன் நீங்கள் தொடர் கொண்டு… காந்தப் புலனாக உருவாக்கிக் கொண்டிருக்கும் அந்த உயிரின் நிலைகள் கொண்டு… மகரிஷிகள் உணர்வைத் தனக்குள் அறிவாக எடுத்து…
1.நாம் அனைவரும்… அனைவருக்கும் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று
2.ஒளியின் சுடராக இணைக்கச் செய்வது தான் உயிரின் நிலைகள்.

சூரியன் எவ்வாறு மற்ற கோள்களின் தன்மையை தனக்குள் எடுத்துச் சமமாக ஒளியாக மாற்றுகின்றதோ இதைப் போல நமக்குள் ஒளியின் சிகரமாக “அந்த மாமகரிஷிகளுடன் நாம் ஒன்றி” உணர்வினை ஒளியாக மாற்ற முடியும்.

இதற்குத் தான் 27 நட்சத்திரங்களின் சக்தியும்… நவக்கோள்களின் சக்தியும்… சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும்… சப்தரிஷிகளின் அருள் சக்தியும்… மனிதனாக உருவாக்கிய நிலைகளில் ஆறாவது அறிவை ஏழாவது நிலைகள் கொண்டு… “ஒளியின் சரீரமாக இருக்கும் அதனை நாம் அனைவரும் பெரும் பாக்கியமாக இணைத்திடும் நிலை தான்… தியானத்திலே இந்த உணர்வினை ஐக்கியப்படுத்துகின்றோம்…”

நவக்கோளின் சக்தி என்றால் வேறு எதுவும் இல்லை…!

இந்த உடலை விட்டு எப்பொழுது வேண்டுமென்றாலும் உயிர் வெளியில் செல்லும் என்பதை மனதில் வைத்து…. அதற்கு முன் அருள் ஒளியைச் சேர்க்க வேண்டும்.

காரணம்… இந்த உடலுக்குள் எதை எல்லாம் இணைத்தோமோ அந்த உணர்வின் துணை கொண்டே அடுத்த உருவை உயிர் உருவாக்கும். இன்று மனிதன் என்ற வெறுப்பு கொண்டால் மனித ஈர்ப்பிற்குள்ளே மீண்டும் இழுத்துச் சென்று விடும்

1.அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும்
2.அது மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று எண்ணினால் அந்த உணர்வின் தன்மை கொண்டு
3.நம்மை மகரிஷிகள் இருக்கும் இடத்திற்கு உயிர் அழைத்துச் செல்லும்.
4.உயிர் நமக்குள் இருந்து அதைச் செயல்படுத்திக் காட்டும்.

உலக மக்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும் அவர் அறியாத இருள்கள் நீங்க வேண்டும் மெய்ப்பொருள் கண்டுணர்ந்து செயல்படும் திறன் பெற வேண்டும் என்று எமது குருநாதர் காட்டிய அருள் வழி… உங்களுக்கெல்லாம் அது பெற வேண்டும்… இந்த உணர்வின் தன்மை உங்களில் விளைய வேண்டும் என்று எண்ணும் பொழுது நான் அதுவாகின்றேன்.

1.நீங்களும் இதைப் போன்று உலக மக்கள் ஒளி நிலை பெற வேண்டும் என்று எண்ணத்தைக் கூட்டி
2.அந்த ஒளியின் சரீரமாகும் உணர்வைப் பற்றுடன் பற்றி அதன் வழி சென்றால் உங்கள் உயிர் உங்களை அங்கே அழைத்துச் செல்லும்.

விண்ணிலிருந்து ஒளி அலைகளை எடுத்து “ஜோதி நிலை பெறுவது எப்படி…?”

விண்ணிலிருந்து ஒளி அலைகளை எடுத்து “ஜோதி நிலை பெறுவது எப்படி…?”

 

உந்து விசையின் வேகத்தைக் கொண்டு அதில் செலுத்தும் எரிபொருளின் தன்மைக்கொப்ப அவ்விசையின் எரிபொருள் மோதலிலிருந்து வெளிப்படும் துடிப்பு நிலையைக் கொண்டு வாகனங்களின் ஓட்டத்தை விஞ்ஞானத்தால் வழிப்படுத்துகின்றனர்.

அதைப் போன்றே…
1.உயிரணுவின் ஆத்ம அலையின் வார்ப்புக் கூடான இச்சரீரக் கூட்டு இயந்திரம்
2.சுவாசம் என்ற உந்து விசையைக் கொண்டு உடல் சமைக்கும் ஆத்ம எரிபொருளின் ஜீவத்துடிப்பு நிலை
3.ஒலி ஈர்த்து ஒளி பெற்றுச் சொல்லாற்றி சுவை கண்டு உணருகின்ற எண்ண ஓட்டக்கோளத்தின் வளர்ப்பு நிலையில் அடுத்த நிலை யாது…?

உயிராத்மாவின் வளர்ப்பிற்கு ஜீவ சரீர உணர்வின் எண்ணத்தால் சமைக்கப்படும் வலுவைக் கொண்டுதான்… ஆத்மாவின் வலு நிலை சரீர ஓட்டத்தில் செயல்படும் தன்மை நிலை ஏற்படுகின்றன.

சரீரமற்ற ஆவி ஆத்மாவிற்குச் “சுவாச நிலை இல்லாததனால்” அதனுடைய உண்மைத் துடிப்பு நிலை காற்றின் அலைத் தொடர்புடன் உயிர் ஆத்மாவானது இருக்கின்றது.

அதாவது நாம் எப்படி நட்சத்திரங்களைக் காணும் பொழுது மின்னும் நிலையைக் காணுகின்றோமோ அதைப் போன்றே
1.ஆத்ம அலையின் துடிப்பு நிலையின் செயல் கொண்ட சுழற்சியில் தான்
2.உடலை விட்டுப் பிரிந்த ஆத்மா செயல் கொள்கின்றது.

பூமியின் பிடிப்பலை எண்ண உணர்வுடன்… வாழ்க்கையுடன் ஒன்றிய வாழ் நாளில் எண்ணத்தின் சுவாசத்தை எடுத்து… அச்சுவாசம் சமைக்கும் தொடர்பு வாழ்க்கையின் வழி முறைப்படி… ஆத்மாவின் உயர் சக்தியை அறியாமல்… வாழ்க்கைப் பிடிப்பில் சிக்கி வாழ்ந்து மடியும் உயிராத்மா… அதன் உயர்வு நிலை பெறாமல்… வளர்ச்சியற்றுப் போய் மீண்டும் மீண்டும் பிறப்பு இறப்பு என்ற சுழற்சியிலேயேதான் இருக்க முடியும். உயிராத்மா வளர்ச்சி கொள்ள முடியாது…!

ஆகவே…
1.பல கோடி ஆண்டுகளாக வார்ப்புப்படுத்தி வார்ப்புப்படுத்தி வளர்ச்சி கொண்டு வந்த
2.ஆத்ம வளர்ச்சியின் மனிதச் சரீரத்தின் வலுப் பெற்ற வளர்ச்சி நிலையிலிருந்து
3.உயர் நிலை பெற – சுவாசத்தைக் கீழ் நோக்கிய பூமி ஈர்ப்பு எண்ணமுடன் செலுத்தாமல்
4.சூரியனின் சமைப்பின் வழித் தொடர் பல நிலையில் மாறு கொண்டு வளரும் தன்மையில்
5.பூமி சமைத்து வெளிப்படுத்தும் அலையை எடுக்காமல்
6.பூமி சமைப்பினால் சரீரம் பெற்று எண்ணத்தின் உணர்வு நல்ல நினைவு உள்ள காலங்களிலேயே
7.மேல் நோக்கிய சுவாசத்தால் நாம் எடுக்கும் நேரடி காந்த நுண் அலைகளைப் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

அதாவது ஏழு வகை வண்ணத்தில் சமைக்கப்பட்ட ஆறு நிலை கொண்ட வண்ண ஒளி அலைகளை… காந்த ஈர்ப்பு நுண் அலையின் தொடர் வளர்ச்சி நிலை எண்ணத்தின் மோதலினால் நேரடியாகப் பெற வேண்டும்.

இப்படிப் பெற்ற வளர்ச்சியைக் கொண்டு பூமியின் பிடிப்பற்ற நிலைக்கு வர முடியும். அதன் மூலம் மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கும் வழி முறையிலிருந்து மனிதனுக்கு அடுத்த நிலையான வளர்க்கும் நிலையான “வண்ண ஒளி ஜோதியாகலாம்…!”

மனிதனின் எண்ணத்தால் எடுக்கும் நிலை கொண்ட வார்ப்பு நிலை தான் ஆத்மாவின் வளர்ச்சி நிலை. ஆகவே இவ்வாத்மாவில் சேமிக்கும் வண்ண ஒளியின் வளர்ச்சி நிலையில் தான் மனித நிலையிலிருந்து வளர்ச்சி பெறும் அடுத்த நிலை உருவாகின்றது.

சீப்பை எடுத்து நாம் தலையை வாரும் பொழுது கீழ் நோக்கி வாரும் பொழுது
1.பூமியின் ஈர்ப்புடன் ஒன்றியதாக ரோமக்கால்களின் அணு வளர்ச்சியும்
2.கீழ் நோக்கி வளரும் வளர் நிலைக்கொப்ப ஈர்ப்பில் சீவப்படும் நிலையில் எந்நிலையான பாதிப்பும் தெரிவதில்லை.
3.அதே சீப்பைக் கொண்டு மேல் நோக்கி நம் கூந்தலைச் சீவினோம் என்றால்
4.உடல் நிலையே சிலிர்ப்புத் தன்மை இவ்வுணர்வு பெறுகின்றது.

இதை எப்படி அனுபவத்தில் காணுகின்றோமோ அதைப் போன்ற உண்மை நிலையை சுவாச நிலையால் எண்ணத்தை மேல் நோக்கிச் செலுத்தும் பொழுதும்… நேரடி சுவாசத்தை மேல் நோக்கி எடுக்கும் அலையை இந்த உடல் உடனே பெறுகின்றது…!

இத்தொடர் வளர வளர… மனிதச் சக்தியின் வலுச் சக்தியை இந்த ஆத்மா பெற்று… இவ்வாத்மாவின் ஒளி அலைகளைத் தனித்து இயக்கவல்ல வளர்ச்சி வழி கொள்ள முடியும்…!

நமது எல்லை

நமது எல்லை

 

தேர் என்பது மிகவும் வலிமையானது… பல நூறு பேர் ஒன்று சேர்ந்து இழுத்தால் தான் அது நகர்ந்து ஓடும். ஆளுக்கு ஒரு பக்கமாக இழுத்தால் தேர் எல்லை வந்து சேராது.

இது போன்றுதான் நமக்குள் இருக்கும் ஆயிரக்கணக்கான குணங்கள்
1.ஒன்று தீமையின் நிலைகள் இழுத்தால் ஒன்று நன்மையின் நிலைகள் இழுக்கப்படும்போது
2.நம் உணர்வின் தன்மை ஒளியாகும் அறிவின் தன்மைகள்… உயிருடன் ஒன்றி எல்லையைச் சென்றடையாது.

அந்த எல்லையை அடைய… எவ்வாறு செயல்படுத்த வேண்டும்…? என்பதுதான் குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் தெளிவாகப் பதிவு செய்து
1.இந்த உணர்ச்சிகளை உந்தும்படி செய்து அந்த உணர்வின் ஏக்கத்தால்
2.மகரிஷியின் அருள் சக்தியைப் பெறும் தகுதியை ஏற்படுத்துவதே கூட்டுத் தியானம்.

அதன் வழி கொண்டு நீங்கள் தியானித்த பின் நம் மூதாதையரான குலதெய்வங்களின் உயிரான்மாக்களை நினைவுக்குக் கொண்டு வந்து அந்த சப்தரிஷி மண்டலங்களுடன் அவர்களை இணையச் செய்து
1.அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று உந்து விசையால் உந்தித் தள்ளினால்
2.சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலந்து ஒளியின் சரீரம் பெறுகின்றனர்.

காரணம் சப்தரிஷிகள் என்பவர்கள் நஞ்சினை வென்றவர்கள் உணர்வை ஒளியாக மாற்றியவர்கள் இருளை மாய்த்தவர்கள். அந்த ஒளிக்குள் இந்த உயிரான்மாக்கள் பட்ட பின் இருள் சூழும் உணர்வுகள் கருகி விடுகின்றது.
1.உயிருடன் ஒன்றிய நிலைகள் அறிவால் தெளிந்த உணர்வுகள் நிலைக்கின்றது… அதனின் ஈர்ப்பு வட்டத்தில் சுழல்கின்றது
2.இவ்வாறு நாம் செய்தோம் என்றால் சப்தரிஷி மண்டலங்களில் அவரும் ஒன்றாகி விடுகின்றார்கள்… “சப்தரிஷிகளாகின்றார்கள்…”
3.சப்தரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று நாம் எப்போது எண்ணினாலும்
4.அதைப் பெறக்கூடிய தகுதி நமக்கு அங்கே கிடைக்கின்றது.

அவர்கள் முன் செல்ல வேண்டும்…! காரணம் அவருடைய உணர்வுகள் தான் நமது உடல் அந்த உணர்வினை நினைவு கொண்டு வந்து உந்தித் தள்ளி அந்த உணர்வினை நாம் பெறச் செய்தால்… அவர்கள் முன் சென்றால் நாமும் எளிதில் பின் செல்ல முடியும்.

இந்த மார்க்கத்தைத் தான் விநாயகர் தத்துவத்தில் தெளிந்த நிலைகள் கொண்டு காட்டியுள்ளார்கள். உடலை விட்டுச் சென்றால் ஆறாவது அறிவின் துணை கொண்டு நமது எல்லை சப்தரிஷி மண்டலம் தான்.

அப்படி இல்லை என்றால் என் பிள்ளை இப்படிச் சொன்னானே… இந்தச் சொத்தெல்லாம் வைத்திருக்கிறேன்… நாளை அவன் அதை என்ன செய்வானோ…? என்று இப்படி எண்ணினால்
1.நம் எல்லை பையன் உடலுக்குள் தான் செல்ல வேண்டி வரும்
2.நாம் பட்ட கஷ்டம் எல்லாம் அவனுக்குள் விளையத் தொடங்கும்.

ஒருவன் என்னைச் சாபமிட்டான்…! இப்படி செய்தானே அவன் குடும்பம் உருப்படுமா…? என்று நினைத்தால் அவனைப் பழி தீர்க்கும் உணர்வாகச் சேர்ந்தால் “நம்முடைய எல்லை சாபமிட்டவன் இடத்திற்குச் சென்றுவிடும்…”

சாகப் போகும் பொழுது நினைவு எங்கெல்லாம் போகின்றது…? என்று தெரிந்து கொள்ளுங்கள்.

எல்லோருக்கும் நான் சுவையான உணவை ஆக்கிப் போட்டேன் எனக்கு நல்ல கறித் துண்டு (மட்டன்) உண்டா…? என்று நினைத்தால் ஆடாகத்தான் போக வேண்டி வரும்… இது நிச்சயம்.. எல்லை அது தான்…!

ஏனென்றால் அன்று நன்றாக இருக்கும் பொழுது எல்லோருக்கும் சுவையாக ருசியாகச் சமைத்து போட்டேன் ஆனால் இப்பொழுது எனக்கு என் ருசிக்காக ஒரு துண்டு கூட கொடுக்கவில்லை பாருங்கள்… எல்லாவற்றையும் அவர்களே சாப்பிடுகின்றார்கள்.

1.இப்படி எண்ணினால்… எல்லை அந்தக் கறித்துண்டின் மேல் ஞாபகம் வந்தால்… அந்த உயிரினத்திடம் தான் இந்த உயிர் செல்லும்.
2.ஆகவே எதனை கடைசி முடிவாக நினைவின் ஆற்றலைக் கொண்டு வருகின்றமோ… எல்லை அதுவாகவே நிர்ணயிக்கப்படுகிறது.

இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

“ஆண்டவனுடன் ஐக்கியப்படும் நிலை வழி பெற” உம் சக்திகளைச் செயல் ஆக்கிடுங்கள்

“ஆண்டவனுடன் ஐக்கியப்படும் நிலை வழி பெற” உம் சக்திகளைச் செயல் ஆக்கிடுங்கள்

 

வாழ்க்கை என்ற நிலை… அமைதியுடன் செல்லல் வேண்டும். அதுதான் வாழ்க்கையின் முழுமை. ஒருநிலை கொண்ட ஆண்டவனின் ஜெபத்தை மட்டும் ஜெபித்தே ஆண்டவன்பால் செல்வதல்ல வாழ்க்கை. ஒரு நிலை கொள்ள வேண்டும். ஆண்டவனிடம் சென்று ஐக்கியப்பட வேண்டும்.

எங்குள்ளானப்பா நீங்கள் சொல்லும் ஆண்டவன்…?

1.ஒன்றுடன் ஒன்று இணைத்ததுதான் ஆதிசக்தியின் நிலையே
2.காற்றும் நீரும் மோதுண்டால் ஒளி பிறக்கின்றது
3.ஒலியும் ஒளியும் மோதுண்டால் ஜீவன் பிறக்கின்றது
4.ஜீவன் பிறக்கவே இவ் ஒலி நீர் ஒளி ஏறிய பிறகுதான் அஜ்ஜீவனுக்கு சுவாசத் துடிப்பு கொள்ளுகின்றது.
5.சுவாசத் துடிப்பு பெற்றவுடன் அமில குணத்தை அஜ்ஜீவ அணு
6.தன்னுள் மோதுண்டு மோதுண்டு ஈர்க்கும் பக்குவம் பெற்றுச் சுழலுகின்றது.

இப்படியே அதன் ஈர்ப்பின் நிலைக்கொப்ப அது சேமித்த அமில குணத்தின் நிலைக்கொப்பை இப்பூமியில் மோதுண்டு அதன் வளர்ச்சி நிலைக்கு அதன் ஈர்ப்பிற்கொப்ப அதன் சுவாசத்திற்கேற்ற வழித்தொடர் பெறுகின்றது.

எவ்வுயிர் அணு தோன்றி அதன் குண நிலை பெறுவதும் ஒன்றுடன் ஒன்று மோதாத நிலையில் ஜீவனே பெறாது. இரண்டு நிலைகள் கொண்ட நிலையின் மோதலில் மூன்றாகி நான்காகி பலவாகிச் சுழலுவதுதான் ஒவ்வொரு மண்டலமும் மண்டலத்தில் சிக்கியுள்ள எல்லா ஜீவன்களும்.

1.தனித்த ஆண்டவன் எங்குள்ளான்…?
2.அமைதி கொண்ட ஒருநிலை கொண்ட ஆண்டவன் ஜெபம் பெற்று செல்லும் நிலை எதுவப்பா…?
3.முடிவே இல்லாத உண்மையின் ஒளிர் தத்துவ அடக்கமே. இச்சுழலில் தான் உள்ளது.

மோதுண்ட சுழற்சியில் ஜீவன் கொண்ட வளர்ச்சியில் வடிவுகளாகி வழங்கும் மண்டல வளர்ச்சி… “ஜீவ ஆத்மாக்களே…”
1.தனித்த ஆண்டவன் இல்லையப்பா
2.எல்லாமில் எல்லாமாய் ஒளிரும் ஆண்டவன்தான்.

ஞானவழி பெற்றவர்களுக்கு:-
காட்சி:-
ஆட்டுக்கல்லில் அரிசியைப் போட்டு ஆட்டுவதைப் போலவும் ஆட்டும் நிலையில் ஒரே மாதிரி ஆட்டி வந்த நிலையில் ஒரு கல் சிக்குண்டவுடன் ஒலி கிளம்பி “நர நரத்த நிலையுடன்” மீண்டும் முதல் நிலையிலேயே அம்மாவு அரைபடும் பக்குவத்தைக் காட்டுகின்றார்.

விளக்கம்:-
1.ஞானத்தின் வழி பெற்று நாம் சென்றாலும் நம்மை அறியாமல் சில ஊடுருவல்கள் வந்து மோதும்
2.மோதலின் நிலைக்காக நாம் நம் ஞானத்தைச் சஞ்சலப்படுத்தாமல்
3.சுழலும் பொழுது மோதிய நிலையும் நம் ஞானத்துடனே கலந்து தனித்து நிற்காமல்
4.நம் ஞானவழி மீண்டும் செயல் கொள்ளும்.

காட்சி:-
பெரிய ஆலமரம்… அதற்கு அருகில் அடுப்பெரித்து உலை வைத்துச் சமையல் செய்கிறார்கள். அதே சமயத்தில் மற்றோர் இடத்தில் சிறிய ஒரு செடி பகலின் சூரியனின் நேர் உஷ்ணத்தைத் தாங்காமல் வாடி வதங்கி நிற்கின்றது.

விளக்கம்:-
ஆரம்ப ஞானவழிக்குச் சூரியனின் வெப்ப நிலையையே தாக்குப் பெறாத சிறிய செடியின் நிலையில் நாம் இருந்தாலும் ஆலமரத்தின் நிலைக்கொப்ப நம் ஞானத்தின் விழுதுகளை வளர்த்துக் கொண்டால் ஆலமரத்தைச் சுற்றியுள்ள இடங்களில் எல்லாம் சூரியனின் இயற்கை ஒளியைக் காட்டிலும் செயற்கையாய் எரிக்கப்படும் இவ் ஏரிகள் ஆலமரத்தை எந்த நிலையிலும் தாக்குவதில்லை.

ஆலமரம் மட்டுமல்ல வளர்ந்த எம்மரமும் தான். அதைப் போல்
1.தன் நிலையில் உயர்ந்த ஞான வழி பெற்ற ஞானிகளை எந்நிலை கொண்ட சஞ்சலங்களோ மற்ற எதிர்படும் எல்லா நிலைகளும்
2.நன்மை தீமை கொண்ட இரண்டு நிலைகளும் அந்த ஞானியின் நிலையில் ஒட்டாமல் அவர் ஞானம் வளர்ந்து கொண்டே இருக்கும்.

காட்சி:-
நிலத்திலிருந்து ஓர் ஆத்மலிங்கம் வளர்ந்து வருகிறது. அவ்விலிங்கமே ஓர் மரமாக சப்தரிஷியைப் போல் காட்சியளித்து மேடான நிலையில் நின்று கொண்டு அவர் கையிலிருந்து ஓர் ஒளியான லிங்கத்தைக் காட்டி நிற்கின்றனர்.

மேடான இடத்திற்கு கீழ் பலர் நின்று கொண்டு அவரால் யாருக்கு அவ் ஒளி லிங்கம் அளிக்கப்படும் என்று பலரும் கையேந்தி வேண்டி நிற்கின்றனர்.

இவரோ அவ்வொளி லிங்கத்தை மேலும் கீழும் ஆட்டி ஆட்டி அவ்வொளியைப் பாய்ச்சிக் கொண்டே தான் உள்ளாரேயன்றி “யாருக்கும் தனித்து அவ்வொளி லிங்கம் அளிக்கப்படவில்லை…!”

ஆனால்
1.அவர் உருட்டிய ஒளி அலைகள் பாயப் பெற்ற அவ்வொளியை ஈர்த்து
2.தன் ஒளியை அவ் ஒளியுடன் கலக்கும் நிலைப்படுத்திய ஒளி ஆத்மாக்கள் எல்லாம் அவ் லிங்க ஆத்மாவிடம் சென்று ஐக்கியப்படுகின்றன.
3.மீண்டும் அவர் கையிலிருந்த அவ்வொளியான லிங்கம் முதலில் வீசிய ஒளியைக் காட்டிலும் அதிக ஒளி பரப்பிக் கொண்டே உள்ளது.

அவ்விலிங்கமே கிடைக்கும் என்று கையேந்தி நிற்பவர்கள் நின்று கொண்டே தான் இருக்கிறார்கள். அச்சப்த மகரிஷியும் தான் பெற்ற அவ்வொளி லிங்கத்தைச் சிரித்துக் கொண்டே வளர்த்துக் கொண்டே தான் இருக்கிறார்.

விளக்கம்:
ஆண்டவன் அருள் என்பது ஆண்டவனாய் நமக்களிப்பதல்ல. ஆண்டவன் ஒளி வடிவில் எல்லாமில் எல்லாமாய் ஒன்றுபோல் தான் ஒளி வீசுகின்றான்.

1.அவ்வொளி அருளை நாம் பெற்று அவ்வொளியுடன் ஒன்றும் ஒளியாய்த் தான் நம் செயல் இருக்க வேண்டுமே அன்றி
2.ஆண்டவனே வந்து நமக்கு அளிக்கட்டும் என்றால்… ஏங்கி நிற்கும் நாள் வரை காத்துத்தான் இருக்க வேண்டும்.
3.ஏனென்றால் எவ்வளவு காலங்கள் காத்திருந்தாலும் “அவ்வொளியை ஆண்டவனே வந்து நமக்கு அருளப் போவதில்லை”

“அவன் தந்த ஒளியை அவனதாக்கி அவனுடன் ஐக்கியப்படுவது தான்” ஞான ஒளி பெறும் ஆண்டவனின் அருள் சக்தி. அவன் ஒளியுடன் நம் ஒளி கலக்கப் பெற்றால் நம் ஒளியைக் கொண்டு பலருக்கு ஒளி பரப்பலாம்.

இதன் நிலையைப் புரிந்து
1.ஆண்டவன் அருளை வேண்டி நிற்காமல்
2.ஆண்டவனுடன் ஐக்கியப்படும் நிலை வழி பெற உம் சக்திகளைச் செயல் ஆக்கிடுங்கள்.

இப்பிறப்பில் நாம் வந்ததுவே “முன் ஜென்மத்தில் விட்ட குறையினால் தான்…”

இப்பிறப்பில் நாம் வந்ததுவே “முன் ஜென்மத்தில் விட்ட குறையினால் தான்…”

 

வீடு கட்ட அதற்கு அஸ்திவாரம் பலம் பெறல் வேண்டும். அதைப்போல் சுவர் எழுப்பவும் அதற்குகந்த கலவைகள் அதற்குகந்த அளவை வைத்துக் கூட்டிச் சுவர் எழுப்பினால்தான் அச்சுவர் உறுதியாய் இருக்கும். அதைப்போல்
1.நம் உடலில் உள்ள அமில நிலைகள் அததற்குகந்த தன்மையில் இருந்தால்தான் உடல் ஆரோக்கியம் கொள்ளும்
2.இவ்வுடல் ஆரோக்கியம் பெற்றால் “அதுவே எண்ணத்தின் மையக் கோலாகி” ஆத்மீகத்தின் ஆத்ம சக்தியைப் பெற முடியும்.

நாம் சலிப்பு, சங்கடம், கோபம், பேராசை, அதி உல்லாசம் இப்படி உள்ள நிலையில் வாழும் பொழுது “நாம் எடுக்கும் சுவாசமானது கனமாகி”
1.நம் உடலில் சேரும் அமிலத்தன்மைகள் கூடியும் குறைந்தும் அவ்வமில சக்தி சுரப்பி அமிலம் சுரக்கும் பொழுது உடல் நிலையும் பாதிக்கப்பட்டு
2.எண்ண நிலையும் சோர்வு பூண்டு நம் உடல் என்னும் இக் கூடே பல பிணிகளுக்கு ஆளாகின்றது.

சுவர் எழுப்ப அதன் கொள்ளவில் எந்தச் சாமான் அளவு நிலையிலிருந்து மாறுபட்டாலும் அச்சுவருக்குப் பலமில்லை. மணல் அதிகப்பட்டால் உதிரும் நிலையும்… சிமெண்ட் அதிகப்பட்டால் வெடிக்கும் தன்மையும்… நீர் அதிகம் சேர்ந்தால் அதன் பக்குவ முறைக்குச் செயல்படா வண்ணமும்… மனிதனால் எழுப்பப்படும் சுவருக்கே அதன் கலவை குணம் மாறுபடும் பொழுது உரு நிலை கொள்வதில்லை.

இம்மனித உடலுக்கும்… இம் மனிதனின் உடலில் உள்ள “அமில சக்திகள் கூடிக் குறையும் நிலை ஏற்பட்டால்” சக்தி நிலை எப்படி வலுப்பெறும்…? வலுப் பெறாது…!

காட்சி:-
ஆற்றின் கரையும் ஓடமும் துடுப்பும் இருப்பதைப் போலவும் நாங்கள் இக்கரையில் இருந்து அக்கரைக்குச் செல்ல அவ் ஓடத்தில் ஏறி அவ் ஓடக்காரனால் நீரின் போக்குக்குச் செல்லாமல் நீரை எதிர்த்துத் துடுப்புப் போட்டு ஓடத்தை ஓட்டி அக்கரைக்குச் சென்று இறங்குகின்றோம்.

விளக்கம்:-
அதைப் போல் இவ்வுலக பந்தத்தில் பிறந்த நம் ஆத்மாவைக் கரை சேர்க்க இவ்வாழ்க்கை என்ற ஆற்றினைக் கடக்க எதிர்த்து துடுப்புப் போட்டுத் தான் நாம் செல்லும் மார்க்கத்தை இவ்வுலக வாழ்க்கையில் இருந்து மெய் உலக வாழ்க்கைக்குச் செல்ல வேண்டும்.

1.நாம் செல்லும் ஓடமும்… நாம் நம்பி ஏறிய ஓடக்காரனின் திறமையும் நன்றாக அமைந்தால் நாம் செல்லும் வழி எளிதாகின்றது
2.இவ்வுடல் என்ற இக்கூடு ஆரோக்கியமுடன் நல்லெண்ணம் பெற்ற நிலை கொண்ட ஆத்மாவாய் இவ் ஓடம் போல் இருந்தால்
3.அதை ஓட்டுபவனின் திறமையை ஒத்த வாழ்க்கையில் ஒன்றப்பெறும்
4.அவரவர்களுடன் இணையும்… ஆணுக்குப் பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் அமைதல் வேண்டும்.

நல்ல ஓடமும் திறமை மிக்க ஓடக்காரனும் இருந்தால் செல்லும் வழி எளிதாகின்றது. எதிர்த் துடுப்புச் செலுத்தி நம் வாழ்க்கையில் ஏற்படும் பல நிலைகள் கொண்ட எதிர் நிலைகளை இத்துடுப்புப் போல் “எதிர்த் துடுப்புப் போட்டுத்தான்” அக்கரைக்குச் செல்ல வேண்டும்.

ஓடம் செல்லும் வழியிலும் நாம் செல்ல முடியாது. நீர் தானாக அவ் ஓடத்தை இழுத்துதான் செல்லும்.
1.நடக்கும்படி நடக்கட்டும்… நமக்கு வரும் வினைகள் எல்லாம் ஆண்டவன் அளித்தது அவனே பார்த்துக் கொள்வான் என்ற நிலையில்
2.நீர் போகும் போக்கில் ஓடும் போவதைப் போல் அல்ல.

எந்த ஒரு இன்னலான நிலை ஏற்பட்டாலும் அதன் போக்கில் செல்லாமல்
1.இன்னலிலிருந்து மீளும் வலுவான எதிரான துடுப்பைப் போன்ற வலுக்கொண்ட செயல் செய்தால்தான் இன்னலிலிருந்து மீளவும் முடியும்…
2.நம் வாழ்க்கைப் பாதையும் நன்றாக அமையும்… என்பதனை உணர்ந்து கொள்ள வேண்டும்.

நாம் இஜ் ஜென்மப் பிறப்பில் வந்த பயனை… வாழ்க்கை என்ற வடிவில் முழுமை எய்தி நாம் அடைய வேண்டிய அக்கரையின்… அக்கரையில் என்பதற்குப் பொருள்
1.இப்பிறப்பில் நாம் வந்ததுவே முன் ஜென்மத்தில் விட்ட குறையினால் தான்
2.அதற்காகத்தான் அக்கரை என்னும் ஞான ஒளி மார்க்கத்திற்குச் செல்லும் வழி அறிந்து நாம் செயல்பட வேண்டும்.

உடல் நலம் பெறுவதற்குத் தான் இந்தத் தியானம் செய்கின்றோமா…? என்றால் இல்லை…!

உடல் நலம் பெறுவதற்குத் தான் இந்தத் தியானம் செய்கின்றோமா…? என்றால் இல்லை…!

 

அன்றாட வாழ்க்கையில் வரும் தீமைகளை மாற்றுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்…?

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷி ஆகித் துருவ நட்சத்திரமாக ஆனான்… ஒளியின் சரீரமாக இருக்கின்றான் உடலை ஒளியாக மாற்றிச் சென்றான். அப்படி ஒளியாக மாறியது தான் துருவ நட்சத்திரம்.

அதிலிருந்து வருவதைத் தான் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றிக் கொண்டு வருகின்றது… நம் பூமியிலேயே பரவச் செய்து கொண்டிருக்கின்றது.
1.காலையில் நான்கிலிருந்து ஆறரை மணிக்குள் மொத்தமாகக் குவித்து கொண்டு வருகின்றது.
2.வெயில் வருவதற்கு முன் நாம் அதை எடுத்துப் பழகுதல் வேண்டும்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் இதை நீங்கள் செவிகளில் கேட்கப்படும் பொழுது ஏங்குகிறீர்கள். அந்த உணர்வுகள் உங்களுக்கு எளிதில் கிடைக்கின்றது.

ஒரு இடத்திற்குச் செல்லும் பொழுது திடீரென்று விபத்து ஆகிவிட்டது என்று கேள்விப்பட்டால் அல்லது பேப்பரிலே அதைப் படித்தால் நம் மனது எப்படி ஆகின்றது…? கொஞ்ச நேரமாவது நம் மனது சோர்வடைகிறது.

இதைப் போல உங்களுக்குள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைச் சொல்லப்படும் பொழுது
1.என்னைக் கண்களால் பார்க்கின்றீர்கள். கரு விழி உங்களுக்குள் பதிவாக்குகின்றது
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் பதிவாக்குகின்றது.
3.இப்படிப் பதிவாக்கி துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிவரும் உணர்வை நுகரச் செய்தால்
4.தங்கத்தில் திரவத்தை ஊற்றினால் அதற்குள் மறைந்துள்ள செம்பை பித்தளையும் ஆவியாக மாற்றுவது போல் தீமைகளைக் கரைத்துவிடும்.

ஏனென்றால் தீமைகளை வென்றது துருவ நட்சத்திரம். அதிலிருந்து வரக்கூடியதைத் தான் காலை துருவ தியானத்தில் நீங்கள் பெற்றால் உங்களுக்குள் வலுவாக்கி வளர்த்துக் கொள்ள ஏதுவாகும்.

எப்படி வேதனை என்ற விஷமான உணர்வுகள் உங்களுக்குள் ஊடுருவி நல்ல குணங்களை அது கெடுக்கின்றதோ… நல்ல அணுக்களை மாற்றுகின்றதோ இதைப்போல
1.தீமைகளை வென்றிடும் உணர்வுகள் உங்களுக்குள் வளர்க்க அதை நீங்கள் விடாப்பிடியாகச் செய்து வர வேண்டும்,.
2.ஒரு நாளைக்கு செய்துவிட்டு என் கஷ்டம் எல்லாம் போகவில்லையே என் உடலில் உள்ள நோய் போகவில்லையே என்று
3.அப்படி எண்ண வேண்டியதில்லை… நோய்க்கும் இதற்கும் சம்பந்தமில்லை.

நாம் அந்த அருள் உணர்வைப் பெருக்கிக் கொண்டே வந்தால் இந்த உணர்வின் வளர்ச்சி பெருகும் பொழுது… இந்த உடலை விட்டுச் சென்றால் நாம் பிறவி இல்லா நிலை அடைகின்றோம்.

இல்லாமல் போனால் கீழே தான் மீண்டும் பிறவிக்கு வருகின்றோம்.
1.பிறவி இல்லா நிலை அடைய வேண்டும் என்றால்
2.நான் மேலே சொன்ன முறைப்படி செய்யுங்கள்.

நீங்கள் தேடிய சொத்தும் செல்வமும் கையில் வைத்திருக்கிறீர்களா…? வருகின்றது… வளர்கின்றது… பின் தேய்கின்றது… தேய்ந்த பின் வேதனைப்படுகின்றோம்.

சரி சொத்து தான் போகட்டும் இந்த உடலை நல்ல முறையில் அழகாக வளர்த்து வைத்திருக்கிறீர்கள் ஆனால் கடைசியில் இந்த உடல் எவ்வளவு சுருங்குகின்றது… எவ்வளவு வேதனைப்படுகிறது…?
1.உடலைக் கட்டுக்கோப்பாக ஆரோக்கியமாக அழகாக வைத்திருக்க முடிகின்றதா…?
2.அல்லது இந்த உடல் நிரந்தரமாக நம்முடன் இருக்கின்றதா…?

யோசிக்கின்றோம் சொத்துக்காக எத்தனையோ சண்டைகளையும் போடுகின்றோம்… ஆசையும்படுகின்றோம்.

ஆனால் ஒருவன் வந்து பணத்தை எல்லாம் கொள்ளையடிக்கும் பொழுது “பாவிப் பயல்…! இப்படி எடுத்துச் செல்கின்றானே…” என்று அவன் சாபம் இடுகின்றான்.

இவன் சொத்தை அவன் அபகரித்துச் செல்லும் பொழுது இவன் அவன் உடலுக்குள் சென்று சிறிது நாள் அதை அவன் அனுபவித்தாலும்
1.இவனுடைய சாப அலைகள் அவனுக்குள் ஊடுருவி அவனை நாஸ்தியாக்குகின்றது.
2.இப்படித்தான் தொடர்ந்து நடக்கின்றது.

இதைப் போன்ற நிலைகளில் இருந்து எல்லாம் விடுபடுவதற்குத் தான் காலையில் துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கின்றோம்.
தியானத்தில் துருவ நட்சத்திரத்தின் வலுவைக் கூட்டி “நம் எல்லையை அதுவாக்கி… நாம் அனைவரும் பிறவியில்லா நிலை அடைவோம்…”

நம் சுவாசம் உயர்ந்த நிலை பெற வேண்டும்… நம் சுவாசத்திற்குத்தான் மோட்சம் வேண்டும்

நம் சுவாசம் உயர்ந்த நிலை பெற வேண்டும்… நம் சுவாசத்திற்குத்தான் மோட்சம் வேண்டும்

 

இந்த உடலில் சிறிது காலம் தான் வாழ்கின்றோம். அதற்குள் மனதை எப்படி ஒன்றாக்க வேண்டும்…? என்ற நிலையை ஞானிகள் காட்டுகின்றார்கள். நம்முடைய எண்ணங்களை ஒன்றாக்க வேண்டும்… கல்யாணராமா…!

ஆனால்… மனிதனின் உணர்வுகள்
1.அவன் அப்படிச் செய்கின்றான் இவன் இப்படிச் செய்கின்றான் என்ற நிலைகளை…
2.“தான்… நான்…” என்று நான் செய்வேன்… நான் செய்து கொண்டிருக்கின்றேன்… என்னால்தான் முடியும்…!
3.”நான் இதை அனைத்தும் செய்தேன்” என்று பலருக்குப் பல உபகாரங்கள் செய்வார்கள்.

பல உபகாரம் செய்தவருடைய உணர்வுகள் “நான்” என்ற இந்த உணர்வு வரும் பொழுது கௌரவராகின்றது. கௌரவர் என்று செய்த நிலைகள்… நான் அன்றைக்குச் செய்தேன்… பார் இன்று என்னை மதிக்கின்றானா…? என்று இந்த கௌரவப் போர் வருகின்றது.

தான் எண்ணியபடி செய்யவில்லை என்றால் உணர்வின் தன்மை நுகரப்படும் பொழுது…
1.அவனைப் பார்த்தவுடன் குருக்ஷேத்திரப் போர்
2.அதை மீறி நம் உடலுக்குள் சென்றால் கௌரவர்களுக்கும் பஞ்ச பாண்டவர்களுக்கும் போர்.

புலனறிவு ஐந்து உள்ளுக்குள் சென்ற பின் போராகின்றது போர் என்று உடலில் வரப்படும் பொழுது நமக்குள் இருக்கும் பல அணுக்கள் மகாபாரதப் போராக மாறுகின்றது. உடலுக்குள் கலக்கமும் பல நிலைகளும் மற்றதும் இரத்தத்தில் நடக்கப்படும் போது மகா போராக நடக்கின்றது

ஏனென்றால் உலகில் உள்ள அனைத்து மக்களுடைய உணர்வுகளும் நாம் எடுத்துக் கொண்டுள்ளோம். ஒவ்வொரு விதமான வெறுப்பு உணர்வுகளையும் எடுத்துக் கொண்டுள்ளோம்.

1.நல்லது என்று எண்ணப்படும் பொழுது கௌரவர்கள் அதை உள்ளே விடுவதில்லை.
2.இதைப் போன்ற கௌரவப் போர்கள் எப்படி நடந்து கொண்டுள்ளது…?
3.வீட்டில் பையன் சொல்கிறான் என்றால் பையன் சொல்வதை நான் கேட்பதா…?
4.மனைவி நல்லது சொன்னால் போதும் மனைவி சொல்வதை எல்லாம் கேட்பதா.

அதே போல மனைவி தவறு செய்தாலும் “தப்பு” என்று அதை ஏற்றுக் கொண்டால் “திருப்பி நம்மைக் கணவர் பேசுவார்… திட்டுவார்” என்ற கௌரவத்தில் மறைக்கவும் செய்வார்கள்.

குழந்தைகள் தவறு செய்தால்… நான் நல்லவன் என்று பெயர் எடுப்பதற்காக “நான் தவறு செய்யவே இல்லை” என்பார்கள்.
1.ஆக… தவறை மறுக்கப்படும் போது என்ன நடக்கின்றது…? கௌரவப் பிரச்சினை வருகிறது.
2.குற்றவாளி என்று ஏற்றுக்கொள்ள மாட்டோம். அதை மூடி மறைப்பதற்கு என்ன வேலையோ அதைத்தான் செய்வோம்.

இந்த உணர்வின் தன்மை நமக்குள் வரும் போது கடைசி முடிவு வேதனை என்ற உணர்வு வந்து மனிதனால் உருவாக்கி இருளை நீக்கிய அந்த உணர்வுகள் அனைத்தும் மறைகின்றது… வேதனை என்ற போர் முறை வருகிறது.

நம்முடைய எண்ணங்கள் அடிக்கடி வேதனை என்று வரும் பொழுது கண்ணும் பார்வை இழக்கின்றது.
1.வலுவான உணர்வு என்ற பீமனும் அழிகின்றது.
2.அர்ஜுனன் என்ற நிலைகள் குறி வைத்துத் தாக்கும் உணர்வுகளும் சோர்வடைகின்றது… தாக்க முடிவதில்லை.

மகாபாரதப் போரின் கடைசியில்… கண்கள் (கண்ணன்) இழந்தபின் அர்ஜுனனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவனுக்கு முன்னாடியே மாடுகளைத் திருடிக் கொண்டு போகின்றார்கள்.

முதலிலே “நான்” என்ற நிலை இருந்தது. ஆனால் இப்பொழுது ஒன்றும் செய்ய முடியவில்லை என்று காவியத்தில் தெளிவாகக் காட்டுகின்றார்கள்

அதாவது அர்ஜுனன் ஆரம்பத்தில் எல்லாவற்றையும் செய்கின்றான் கண்ணின் உணர்வு கொண்டு தான் செயல்படுத்துகின்றான். கண்கள் இழந்த பின் அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

இப்படி எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டாலும்
1.மோப்பத்தால் (சுவாசம்) அறிந்து கொண்ட உணர்வு தான் எனக்கு வழிகாட்டியது.
2.தீமை நன்மை என்று என்னால் அறிய முடிந்தது…
3.தீமையிலிருந்து விடுபடும் உணர்வுகளை நான் எடுத்தேன் என்று தர்மனைச் சொல்கின்றார்கள்.

அவன் யாருக்கு மோட்சம் கேட்கின்றான்…?

தன் நாய்க்கு மோட்சத்தைக் கொடு…! என்று கேட்கின்றான்.

1.நாம் சுவாசித்த உணர்வின் தன்மை தான் நமக்கு வழிகாட்டியாக இருந்தது.
2.தீமையை நீக்கும் அந்த உணர்வு தான் வழிகாட்டியாக வந்தது
3.நான் நுகர்ந்த உணர்வின் தன்மை… அதன் வழியே நான் ஒளியாகும் தன்மை வேண்டும் என்று
4.மகாபாரதத்தில் இவ்வளவு தெளிவாக கொடுத்துள்ளார் வியாசர்.
5.நம் சுவாசத்திற்குத் தான் உயர்ந்த நிலை பெற வேண்டும்… அதற்குத்தான் மோட்சம் வேண்டும்.

இது பற்றி நாம் யாராவது சிந்திக்கின்றோமா…? நன்றாக யோசனை செய்து பாருங்கள். எவ்வளவு பெரிய பேருண்மையை நமக்குக் காட்டியுள்ளார்கள் ஞானிகள்…!