நாம் ஒவ்வொருவரும் தினசரி பழக்கப்படுத்த வேண்டியது

நாம் ஒவ்வொருவரும் தினசரி பழக்கப்படுத்த வேண்டியது

 

1.தினசரி காலை துருவ தியானத்தில் நேரடியாகத் துருவ நட்சத்திரத்திற்கே உங்களை அழைத்துச் சென்றது.
2.நீங்கள் நுகர்ந்தது அனைத்தும் ஓ…ம் நமச்சிவாய என்று உங்கள் இரத்த நாளங்களில் கலக்கின்றது.
3.இதை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தினால் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வினை
4.உங்கள் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் உணவாக உட்கொள்ளும் சக்தி பெறுகின்றது.

துருவ நட்சத்திரம் மற்ற நட்சத்திரங்களிலிருந்து வரக்கூடிய கதிரியக்கங்களை “ஒளியாக” மாற்றிக் கொள்கின்றது. அந்த நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் துகள்கள் ஒன்றுடன் ஒன்று உராய்ந்தால் மின்னலாக மாறி மற்றொன்றைக் கருக்கி விடுகின்றது.

ஆனால் துருவ நட்சத்திரமோ ஒளி அலைகளாக மாற்றுகின்றது
1.அதை நாம் நுகர்ந்து நம் உடலுக்குள் செலுத்தி விட்டால்
2.அத்தகைய மின்னலையும் உணவாக உட்கொண்டு
3.ஒளியின் நிலையாக உருவாக்கும் உடலாக நம்மைத் துருவ நட்சத்திரம் மாற்றிவிடும்.

நாம் எதை எண்ணுகின்றோமோ அதன் செயலாக உருவாக்குகின்றது… அதையே செயல் ஆக்குகின்றது நமது உயிர்… அதையே உடலாக்குகின்றது… அந்த உணர்வே நம்மை வாழ வைக்கிறது.

தெரிந்து கொள்ளுங்கள்… மனிதன் ஒருவன் தான் இதை உருவாக்க முடியும்…!

மற்ற உயிரினங்கள் தன்னைக் காட்டிலும் வலுக்கொண்ட உணர்வைச் சுவாசித்து அந்த வலுவான உணர்வு வரும் பொழுது இந்த உடலில் உள்ள எளிமையான அணுக்கள் மடிந்து வலுவான உணர்வுகள் விளைந்து… உடலை விட்டுச் சென்ற பின் அதைப் போன்ற கொடூர மிருகங்களாக மாற்றி விடுகின்றது.

பல கோடிச் சரீரங்களிலிருந்து விடுபட்ட பின் இதை அறிந்து உணர்ந்து வென்றவன் அகஸ்தியன் துருவனாகி… கணவனும் மனைவியும் இரு மனம் ஒன்றென இணைந்து இரு உணர்வும் ஒன்றென இணைந்து பேரருளைத் தனக்குள் உருவாக்கி (எல்லாவற்றையும் இயக்குவது தான் பேரருள் என்பது) பேரொளி என்ற உணர்வினை உருவாக்கினான். தன் உடலில் இருக்கும் அணுக்கள் அனைத்தையும் ஒளியாக உருவாக்கினான் அகஸ்தியன்.

1.துருவ நட்சத்திரமோ 27 நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் ஒளிக் கதிர்களை எடுத்து ஒளியாக மாற்றிக் கொள்கிறது
2.அதிலிருந்து வரக்கூடியதை நாமும் எடுத்தால் மின்னல்கள் பலவாறு பரவினாலும் அதனைச் சிறுகச் சிறுக நமக்குள் சேர்த்து
3.வாழ்க்கையில் இன்னொரு உடல் பெறாதபடி உணர்வை ஒளியாக மாற்றிடும் நிலை பெறுகின்றோம்.

ஒவ்வொருவரும் இதை ஒரு பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

நீங்கள் எதை எண்ணி ஏங்குகின்றீர்களோ அதை உருவாக்கும் பொறுப்பு உங்களுடைய உயிருடையதாகும். உருவாக்கிய பின் மீண்டும் அதற்கொப்ப அடுத்த உடலை உருவாக்குவதும் உயிருடைய வேலை

ஆகவே நாம் பேரருள் பேரொளி என்ற அழியா ஒளிச் சரீரத்தை உருவாக்குவோம்… பிறவியில்லா நிலையை அடைவோம்.

“அழியாத ஒளிச் சரீரம் பெற்றிடவே” வழி நடத்திச் செல்கின்றனர் மகரிஷிகள்

“அழியாத ஒளிச் சரீரம் பெற்றிடவே” வழி நடத்திச் செல்கின்றனர் மகரிஷிகள்

 

விஸ்வேஸ்வர மாமகரிஷி அன்னபூரணியின் தாய்மை அருள் நெறியில் மகிழ்ந்து… தன் நிலையில் தான் இயங்கி… வானவியல் மண்டல கோள் அமைவு சூட்சமம்
1.“முக்கண் என்றே காட்டிடும் அக்ஷி நிலை கண்டு…” அனுபவித்து… மகிழ்ச்சியுடன் அளிக்க
2.”பிடரிக் கண்” சூட்சும நிலைதனை திருமூலர் மரபு தென்னாட்டிலே உரைக்க வந்தது.

ஒன்றிலிருந்து ஒன்று வளர்ப்பாக்கும் வளர்ச்சி நிலை பெறுவதைப் போல் உபதேசிக மூலகாரண நிலை ஒன்று (ஓவ்வொன்றுக்கும்) முன்பே உண்டு.

மறைபொருள் தன்மைகளை ஈர்த்துக் கொண்டிடும் செயலில்… உன்னுள் செயலுறுகின்ற ஆக்கம் ஒன்றிலிருந்து ஒன்று உருவாக்கிடும் படைப்பின் படைப்பு என உத்வேக ஊர்த்துவம்… (மேல் நோக்கிய) உயர்வெண்ணச் செயலில் “சிருஷ்டியின் எதிர்ச்சொல்லான… முக்தி…” என்ற பேரருள் சூட்சும நிலையைப் பெற்றிடலாம்.

யானை உண்டது விளாங்கனி. விளாங்கனியை உண்ணுகின்ற யானை தீனியின் செரிமானம் பிண்டி (எச்சம்) என்னும் கழிவாக வெளிப்படுத்துதலில்… வெளிப்படும் விளாங்கனியின் ஓட்டை உடைத்துப் பார்… அங்கே ஊண் இருப்பதில்லை.

இச்செயல் எப்படி நடந்தது…?

1.ஒன்றிலிருந்து ஒன்று உருவாக்கிடும் சிருஷ்டியின் காரண மூலம்
2.ஈர்த்துக் கொண்டிடும் நல்லணுக்கள் வலுவின் வலு வீரியம் என்பைத் (எலும்பை) துளைக்கும் ஒளி என்ற காரியம் பற்றியே
3.தன்னுள் உட்கொண்ட விளாங்கனியைச் செரிமானப்படுத்தும் தன்மையில்
4.அந்தக் கனியில் ஓர் சிருஷ்டியே யானை ஈர்த்திடும் வீரியத் தொடர்பாக
5.கனிக்குள் அணுக்கள் தோன்றி அந்தக் கனியை உண்டு விளத்தின் ஓட்டுடன் ஐக்கியப்படுத்துகின்றன.

சிருஷ்டியின் ஓர் நிலை அங்கு செயலுற்று வெளிவரும் அக்கனி சூரியனின் வெப்ப சக்தி கொண்டு “உருவான உயிரணுக்கள்” மண் தன்மையினுள் கலந்து பிருத்வி (பூமிக்குள்) கண்டு அண்டத்தில் நுழைகின்றன.

ஒளிமார்க்கச் செயலில் நாம் செயல்பட வேண்டியது எப்படி…?

மகரிஷிகள் என்று அழைக்கப்படுகின்ற ஒளி மண்டல ஒளி அணுக்களாகச் செயல் கொண்டு
1.மனித வித்துக்களை வளர்ப்பின் பயிர் பலனாக்கும் சிருஷ்டியையே
2.ஊர்த்துவ நிலையால் முக்தி என்ற பெயர் நாமத்தில் அழைத்திடும்
3.அழியாத ஒளிச் சரீரம் பெற்றிடவே வழி நடத்திச் செல்கின்றனர்.

அந்த மகரிஷிகள் நடத்துகின்ற செயலில் தேகம் கண்டு கொண்ட தேகி… “தன்னுள்ளேதான் தலைமை எது…?” என்று அறிதல் வேண்டும்.

உயிர் அணுக்களின் தலைமை ஒளி தானப்பா…!

அந்த நிலையை உணர்ந்து செயல்படுகின்ற ஒவ்வொருவரும் சூட்சுமத்தில் வழி நடத்திடும் ஒளி அன்பர்களின்… குரு பரம்பரை வழி வரும் சீடர்களப்பா. அந்தச் சீடர்களே கனகம் (பொன்னான உரையை) உரைப்பவர்கள்.

கார்காலம் மிகுந்து விடுகின்றது. வீட்டின் முற்றத்தில் பாதுகாப்பு என மனிதன் இட்ட மணல் மேட்டினையே மழை நீர் கரைத்து விடுகின்றது. மணல் கரைத்த விசுப்பதன் (வேகமாக வரும்) நீர்… மனைக்குள் உள்ளே வராது இருக்க வழி காணல் வேண்டும் என்று உரைத்தவரப்பா வேதாள மாமகரிஷி.

“முறைகோலுகின்ற வழியது காண்” என்று ஆணையிட்டே உரைத்த உரை பொருள் அறிந்து கொள்வதோடு மட்டுமின்றி… அதைக் கடைபிடித்திடும் நல் பாக்கியத்தையே நாம் பெற்றிருக்கின்றோம்.

எந்த நிலையிலும் இந்த நிலையை அறுதியிட்டு
1.உறுதியாகக் கடைப்பிடிக்கின்ற ஞானச் செல்வங்கள் மனக்கோளம் உருப்பெறும் கோளமாக அமைவுற்று
2.படைப்பின் படைப்பாக்கும் செயல் திறத்தினை வலுக் கொள்ளுங்கள்.

ஒளிச் சரீரம் பெறச் செய்யும் ஆகார சக்தியான அன்னபூரணி

ஒளிச் சரீரம் பெறச் செய்யும் ஆகார சக்தியான அன்னபூரணி

 

காரண காரியமாக விளங்கும் இந்த உடல் கொண்ட ஜீவாத்மா… சிருஷ்டி எனப்படும் பிறவிக்குத் தனக்குகந்த தன்மைக்கே… கொண்ட குணங்களின் தன்மைக்கொப்ப பிறப்பினுக்கே வந்தாலும்… சகலமும் மறைக்கப்படுகின்ற சூட்சமம்… ஒளி நிலை பெற்றிட மேலெழும்பும் சக்தியின் தன்மையாக எடுத்துக் கொண்டால் ஆத்மா ஒளி பெற்றே திகழ்கின்றது.
1.”காரணம்” என்பது ஆகாய சூட்சுமமாக சகலமும் மூலத்தின் தன்மையாக விளங்கி
2.சிருஷ்டியின் செயலாக… கொண்ட எண்ணம் செயலுற்று… “காரியமாகின்ற” சரீரத்தைப் பெறுகின்றது.

காரண காரியம்… காரிய காரணமாக மனிதன் செயல்பட்டு… பெற்று… வளர்த்து (தன்னை) உயர்த்திக் கொண்டிட்டால் ஒளிமார்க்க நிலை…!

“அன்னபூரணி காட்டும் ஆகாரக் குறிப்பு” வியாபித்திருக்கின்ற மூலப்பிரகிருதி… (இயற்கையின் படைப்பு) சகலமும் ஈஸ்வர சொரூபம் தான் என்றாலும் மூலத்தின் குணத்திற்கு வண்ணங்கள் உண்டு.
1.பிருதிவி (பூமி – நிலம்) தத்துவத்தில் மண்ணாகக் காண்பதே செந்நிறம்
2.அக்கினியாகக் காண்பது கருமை நிறம்
3.நீரின் தன்மையில் அடங்குவது வெண்ணிறம்
4.காற்றின் புலப்படாத் தன்மையுள் பச்சை நிறம்
5.ஆகாய நிலையின் புகைவண்ணம் வெளிர் நீலம்.

இந்த ஐந்தும் (பஞ்ச பூதங்கள்) ஜீவன் புசித்திட ஈஸ்வர சக்தியாக… அன்னபூரணி – விஸ்வேஸ்வரர் மாமகரிஷியின்… தாய் சக்தி எனும் பஞ்ச காரண காரணியாக… ஒளிமார்க்க (ஓளிச்சரீரம் பெறுவது) நிலை உபதேசிக்கப்பட்டதப்பா.

மூல காரணியை… மனிதன் செயல் கொள்ளும் விதத்தில் “வேதாள மாமகரிஷி” உரைத்திட்ட நிலையும் உண்டு.

பெரும் நெருப்பாக இருந்தாலும் அதுவும் நீருக்குள் அடங்குகின்றது. பெரும் நீரானது இழுத்து இயங்கும் செயலாக… காரண சக்தி இயற்கையின் சீற்றம் காட்ட… காரியம் ஏற்படும் நீர் அடங்காது.

சூரியக்கதிர் அம்பு பாய்ந்து… அகநிலையால் புறமும்… காத்திடுகின்ற செயலாக
1.இப்பரு உடலைக் கொண்டு ஆத்ம சக்தியை வளர்த்துக் கொண்டாலும்…
2.இவ்வுடலையே சூழ்ந்து காத்துக் கொள்ளும் வலு வீரிய “காரண மூல சக்தி ஆத்மாவிற்கு உண்டு…”

காட்டையே பற்றி எரித்து உரத்து ஆடும் பெரும் நெருப்பானது நாணல் புல்லைப் பற்றி அதையும் தீய்ப்பினும்… கடும் மழை நீருள் அந்தக் காட்டுத் தீயானது அணைகின்றது.

அது போல் மனித மனத்தின் நிலை அகம் புறம் இரண்டு செயல் தன்மைகளில்
1.உலகோதய நிலை நாட்டத்திலும்… நாம் எடுக்கும் ஜீவ ஆதார சக்தி…
2.காட்டுத் தீயை அடக்கிய நீர் சக்தியானது
3.பூமியின் மேற்பரப்பில் காற்று நெருப்பால் ஒவ்வாத நிலைகளற்று… (கருகிய நிலைகள்)
4.பூமிக்குள் மறைந்திருக்கும் கிளைத்தெழும் ஜீவசக்திகள் அந்த நீரின் சக்தி கொண்டே (கருகியது) தழைத்து எழுவது போல்…
5.மன எண்ணக் கரு அவ்வண்ணமே ஜீவ ஆதார சுருதியாக “அகக் கனலாகக் கனன்று எழும்…”

இதிலே காட்டிட்ட தன்மைகள் பண்டு (பண்டைய – பழைய) வழியாக இருந்தாலும் அதை விண்டு அறிந்திடுதல் வேண்டும்.

உலகமும் ஜீவஜோதியும் வரைந்திடும் பொழுது அந்தப் படத்தினால் அஷ்டலட்சுமி அன்னபூரணி வாக்கு தேவி மண்டல அமைப்பு காட்டப்பட வேண்டும்.

குலதெய்வங்களை வணங்க வேண்டியது என்பது பௌர்ணமி அன்று தான்… அமாவாசை அல்ல…!

குலதெய்வங்களை வணங்க வேண்டியது என்பது பௌர்ணமி அன்று தான்… அமாவாசை அல்ல…!

 

மாதாமாதம் அமாவாசை அன்று அல்லது ஆடி மாதம் அன்றோ படையல் செய்து குலதெய்வங்களை வணங்கி வருவார்கள். உணவைக் கொடுத்துக் கூப்பிடவும் செய்வார்கள்.

அவர்கள் சமாதிக்குச் சென்று தூய்மைப்படுத்தி வணங்கி வருவார்கள். அது மட்டுமல்ல… குலதெய்வத்தைக் காவல் காக்கும் காவல் தெய்வங்களுக்கு ஆடு கோழி என்று உயிர்ப்பலி கொடுப்பார்கள்.

இப்படித்தான் நாம் வணங்கி வருகின்றோம்.

எதை எதையெல்லாம் செய்து குடும்பத்தைக் காக்க வேண்டும் என்று உணர்வின் துணை கொண்டு இதைச் செய்தோமோ குலதெய்வங்களாக இருப்பவர்கள் அவர்கள் இறந்த பின்
1.அந்த ஆன்மாக்களுக்குப் படையல் செய்து அவர்களைக் கூப்பிடும் பொழுது
2.குடும்பத்தைச் சார்ந்தவர் உடல்களிலே அந்த ஆன்மாக்கள் புகுந்துவிடும்.
3.அப்படி வரவில்லை என்றாலும் கூட வலுக்கட்டாயமாக இசைக் கருவிகளையோ மற்றதுகளையோ செயல்படுத்தி வரவழைத்து விடுவார்கள்.

இந்த உடலில் வந்து ஆடத் தொடங்கும். ஒரு சில ஆன்மாக்கள் பார்த்தால் மேடு பள்ளம் தெரியாது கூட உருளும்.

“மகனே உன்னை நான் காப்பாற்றுகின்றேன்டா…!” என்று சொல்லி ஆட வைப்பார்கள்…. பலிகளையும் இடுவார்கள். ஆனால் நம்முடைய செயல் எதுவாக இருக்கிறது…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

குலதெய்வங்களுக்கு ஆகாரம் கொடுத்து இப்படிக் கூப்பிட்டு இன்னொரு உடலில் இறக்கிய பின் அடுத்து அங்கே ஜோசியம் கேட்பார்கள்.

இந்த வருடம் எங்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும்… குழந்தைகள் நன்றாகப் படிக்க வேண்டும்… அவர்களுக்குக் காலகாலத்தில் கல்யாணமாக வேண்டும். விவசாயம் போன தடவை சரியாக வரவில்லை… அது சரியாக வேண்டும்…! என்று இதை எல்லாம் கேள்வியாகக் கேட்பார்கள்.

அந்த ஆன்மாவும் “மகனே உன்னை நான் கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றேன்…!” அந்த உடலில் இருந்து அது பேசும். இவ்வாறு அந்த ஆன்மாக்கள் மூலமாக நாம் கேட்டறிகின்றோம்.

அதே சமயத்தில் ஒரு குடும்பத்தில் உடன் பிறந்தவர்கள் நான்கு பேர் இருந்து அதிலே ஒருவர் மற்றவரிடம் சண்டையிட்டுப் பிரிந்து சென்றால் போதும்.

அவர்கள் இதே நிலையில் வணங்கிச் செயல்பட்டால் “நான் உடலுடன் இருக்கும் போதும் எனக்குத் தொல்லை கொடுத்தான்… போன பிற்பாடும் தொல்லை கொடுக்கின்றான்…!” என்று குலதெய்வங்கள் அருளாடும் இடத்திலும் கூட இந்த இரு நிலைகள் கொண்டு சண்டை வந்துவிடும்.
1.இவரைச் சார்ந்தவர் இவர்கள் உடலில் வருவதும்
2.அவரைச் சார்ந்தவர் அவர்கள் உடலில் வருவதும் அருளாடுவதிலும் இப்படிச் சண்டைகள் வரும்.

காரணம்… இவை எல்லாம் மனித உடலுக்குள் பெருக்கப்பட்ட உணர்வுகள் அதை அழைத்து மீண்டும் “இந்தக் குரோத விரோத உணர்வுகளை வளர்த்து” இப்படித்தான் கொண்டு செல்கின்றோம்.

பார்க்கலாம் சில குடும்பங்களில்… எனக்கு அவன் ஒன்றுமே செய்யவில்லை… அந்தக் குடும்பம் என்ன ஆகின்றது பார்…? என்று இவர்கள் சொல்லவார்கள். அவர்களும் பதிலுக்கு இதே போன்று சொல்வார்கள்.

இப்படி ஒருவருக்கொருவர் சொல்லி இருவர் உடல்களிலும் இது வளர்ந்து குலதெய்வங்களை வணங்கி வருபவர்கள் நற்பயன் அடைந்திருக்கின்றார்களா…? என்றால் அது இல்லை.

வழிவழியாகச் செயல்பட்டு இறந்த பின் அந்த ஆன்மாக்கள் அந்தந்தக் குடும்பத்திற்குள்ளே தான் சுழலத் தொடங்குகிறது. இதிலிருந்தெல்லாம் விடுபட வேண்டும்.

பௌர்ணமி அன்று நம்முடைய குலதெய்வங்களான அந்த ஆன்மாக்களை உந்தித் தள்ளிச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து… உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்துப் பேரின்ப பெருவாழ்வாக வாழச் செய்ய வேண்டும்.

அவர்கள் அங்கே விண் சென்று அங்கிருந்து அருள் ஒளியைப் பாய்ச்சி இந்த வாழ்க்கையில் வரும் இருளில் இருந்து நீக்கக்கூடிய சக்தி எங்களுக்கு அந்த ஆசி வழங்க வேண்டும் என்று
1.யாரெல்லாம் இந்த முறைப்படி செய்கின்றார்களோ அவர்களே உயர்ந்த நிலைகளை பெறக்கூடிய தகுதி பெற்றவர் ஆகின்றார்கள்.
2.இது எல்லாம் ஞானிகள் காட்டிய மெய் வழி… விண் செல்லும் மார்க்கமாகும் குல தெய்வங்களை வணங்கும் முறையும் ஆகும்
3.பௌர்ணமி அன்று தான் இப்படிச் செயல்படுத்த வேண்டும்… அமாவாசை அன்று அல்ல…!

வெறும் வாயிலே சொல்லி முன்னோர்களை விண் செலுத்த முடியாது

வெறும் வாயிலே சொல்லி முன்னோர்களை விண் செலுத்த முடியாது

 

குருநாதர் காட்டிய அருள் வழியை மீண்டும் மீண்டும் உங்களுக்குள் பதிவாக்குகின்றேன். அதன்படி முன்னோர்கள் குலதெய்வங்களின் உயிரான்மக்களை நீங்கள் விண் செலுத்துதல் வேண்டும்.

தற்காலத்தில்… ஒன்றிலிருந்து 48 நாட்களுக்குள் உடலை விட்டு யாராவது பிரிந்து இருந்தால் அந்த ஆன்மாக்களையும் பௌர்ணமி காலங்களில் அவர்கள் பெயரைக் குறித்துச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து உடல் பெறும் உணர்வுகளை அங்கே கரையச் செய்து பிறவியில்லா நிலை அடையச் செய்ய வேண்டும்.
1,நாம் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏகக்காலத்தில் ஒன்று சேர்ந்து
2.அந்த வலிமையை ஏற்றிக் கொண்டு முன்னோர்களை விண் செலுத்துதல் வேண்டும்… சப்தரிஷி மண்டலத்திற்கு உந்தித் தள்ள வேண்டும்.

அப்படி இல்லாது மோட்சம் அடைய மார்க்கம் வேறு இல்லை. அதை நமக்குள் வளர்த்தால் தான் அந்த வழியிலே நாம் அனுப்ப முடியும்.

ஒரு ராக்கெட் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டது என்றாலும் “உந்து விசையால் தான்” மேலே விண்ணுக்குச் செல்லுகின்றது. உந்திச் சென்ற பின் அதனுடைய எல்லையை அடைகின்றது. பின் அங்கிருக்கும் உணர்வுகளைக் கவர்ந்து தரை மார்க்கத்திற்கு அனுப்புகின்றது.

இதைப் போன்று தான் முன்னோர்களை விண்ணுக்கு அனுப்பி அங்கிருந்து அருள் ஒளியின் சக்தியை நாம் இங்கே எளிதில் பெற முடியும்.

சாதாரணமாக வெறும் வாயில் சொன்னால் அவர்கள் விண் செலுத்த முடியாது.
1.அந்த அருள் ஞானத்தின் உணர்வை உங்களுக்குள் முதலில் போதிக்க வேண்டும்.
2.உங்களுக்குள் அந்த நினைவாற்றலைப் பெருக்குதல் வேண்டும்
3.அதை ஏங்கித் தியானித்தல் வேண்டும்…
4.அந்த வலுவின் துணை கொண்டு முன்னோர்களின் உயிரான்மாக்களை விண்ணுக்கு அனுப்ப முடியும்.

இருந்தாலும் இதற்கு முன் செய்யத் தவறி இன்னொரு மனித உடலில் அவர்கள் இருந்தாலும் பரவாயில்லை. தொடர்ந்து நாம் இந்த வரிசையிலே செய்து வந்தோம் என்றால்
1.அந்த உடலை விட்டு எப்பொழுது வெளி வந்தாலும்
2.அதன் துணை கொண்ட நாம் இதைப் போன்று கூட்டமைப்பாகச் செயல்படுத்தினால் விண் செலுத்த முடியும்… ஒளிச் சரீரம் பெறச் செய்யலாம்.
3.அதன் துணை கொண்டு நாம் அந்தச் சக்திகளை எளிதில் பெறலாம்.

பெற்று… குடும்பத்தில் வரும் தீமைகளை அகற்றிவிட்டு அருள் ஞானிகள் உணர்வு துணை கொண்ட நாம் எந்த நேரம் உடலை விட்டுப் பிரிந்தாலும் நம்மை அங்கே அழைத்துச் செல்லும் உயிர்.

நம் முன்னோர்கள் முதலில் விண் சென்றால் தான் அந்த உணர்வின் வலு கொண்டு நாமும் அந்த வலுப்பெற்று விண் செல்ல முடியும். அதற்குத்தான் மகரிஷியின் உணர்வுகளை உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.

இதன் துணை கொண்டு எண்ணி ஏங்கி முன்னோர்களின் ஆன்மாக்களை விண் செலுத்துங்கள் அந்த எல்லையை அடையச் செய்யுங்கள் உடல் பெறும் உணர்வை அங்கே கரையச் செய்யுங்கள்.

இதன்படி செய்தால் பேரின்ப வாழ்க்கையாக வளரும்… அப்படி நீங்கள் வளர வேண்டும்… அதை நீங்கள் பெற வேண்டும் மூதாதையர்கள் அந்த அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்பதற்கே இதை உபதேசிப்பது.

கூட்டமைப்பாகத் தியானிக்கும் வழிகளில்
1.மெய் ஞானிகளின் உணர்வுகள் அனைத்தும் உங்கள் இரத்த நாளங்களிலே அந்த உணர்வின் அணுக்கருக்களாகப் பெருக்கச் செய்கின்றோம்.
2.அப்படி அணு கருக்களாக உருவாக்கி அந்த நினைவாற்றலை மீண்டும் வளர்த்து விட்டால்
3.அந்த அணுக்கள் விளைந்து உங்களுக்குள் பேரின்ப பெரு வாழ்வாக வாழச் செய்யும்.

மனித வாழ்க்கையில் என்றும் பிறவியில்லா நிலையை அடைய உங்களுக்கு இது உதவும்.

துருவ நட்சத்திர அணுக்களின் பெருக்கம்

துருவ நட்சத்திர அணுக்களின் பெருக்கம்

 

நமது வாழ்க்கையில் அன்புடன் பண்புடன் பரிவுடன் பாசத்துடன் பிறருடைய கஷ்டங்களையும் துயர்களையும் வேதனைகளையும் கோபங்களையும் குரோதங்களையும் கேட்டறிகின்றோம்… சந்தர்ப்பத்திலே.

அவர்கள் உடலில் விளைவதைச் சூரியனுடைய காந்தப்புலனறிவு கவர்ந்து விடுகின்றது. அவர்களை உற்றுப் பார்த்தால்
1.நம் கண்ணின் கருவிழி ருக்மணி நம் உடலிலே பதிவாகி விடுகின்றது… எலும்புக்குள்.
2.கண்ணோடு சேர்ந்த காந்தப் புலனறிவு அந்த உணர்வலைகளை நுகர்ந்து அறியச் செய்கின்றது உயிருடன் ஒன்றி.
3.நுகர்ந்தறியப்படும் பொழுது அவை அனைத்தும் இரத்தத்திலே கருக்களாக முட்டைகளாக உருப் பெறத் தொடங்குகிறது.

உயிரினங்கள் பலவும் முட்டைகளை இடுகின்றது. முட்டையை அடைகாத்துக் குஞ்சுகளாகப் பொரிக்கச் செய்கின்றது. கருமுட்டை என்றால் கருவில் இருந்து தான் குஞ்சின் தன்மை அடைகின்றது. அதே சமயத்தில் முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளி வருகின்றது.

மாடு ஆடு இவைகள் அனைத்தும் அது நுகர்ந்த உணர்வுகள் அணுக்கருக்களாக உருவாகி அதன் துணை கொண்டு கருப்பையில் உருவாகி குட்டிகளாக ஈன்று அதன் இனத்தை அது வளர்க்கின்றது.

இதைப் போன்று தான் நாமும் அதன் வழியில் வளர்ந்தவர்கள் கருமுட்டையின் தன்மை கொண்டு தன் இனத்தை வளர்க்கும் சக்தி பெற்றது.

ஆனாலும் நம் உடலுக்குள் நாம் நுகர்ந்தறிந்த உணர்வுகள் அனைத்தும்… உதாரணமாக ஆத்மா நோயுற்றவரைப் பார்த்தோம் என்றால் அவரைப் பரிவுடன் அணுகுகின்றோம்… நோயினைக் கட்டறிந்து அதை நுகர்ந்தே அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்கின்றோம்.

அப்போது அந்த உணர்வுகள் அணுக்கரு முட்டையாக நம் உடலில் இரத்தங்களில் கருவுறத் தொடங்கி விடுகின்றது… முட்டையாகி விடுகிறது. நாம் கண் கொண்டு பார்த்த கரு விழி எலும்புக்குள் பதிவாக்கி விடுகின்றது.

அதன் தொடர் வரிசையில் கவரும் தன்மை நமக்கு “அந்த வலு (நோயின் பாதிப்பு) ஏற்படுகின்றது…”

இதைப் போன்று தான்
1.துருவ நட்சத்திரத்துடனும் சப்தரிஷி மண்டலங்களுடனும் நம் நினைவாற்றலை அங்கே செலுத்தி
2.அதனைப் பார்க்க வேண்டும் என்ற உணர்வினை உந்தி அதன் உணர்வின் தன்மை நுகரச் செய்தால்
3.”அத்தகைய கருக்களை” – துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வுகளை
4.ஒளியின் சக்தியாக வளர்க்கும் கருமுட்டைகளை உங்களுக்குள் உருவாக்க முடியும்.

அதற்குத் தான் உங்களுக்குத் தியானப் பயிற்சியே கொடுக்கின்றோம். அதனை அடிக்கடி வளர்த்துப் பழகுதல் வேண்டும்.

அப்பொழுதுதான் ஒளியான உணர்வுகளாக நமக்குள் பெருகும்… ஒளியின் அணுக்களும் விளையும்… உயிரோடு ஒன்று உணர்வுகளும் ஒளியாக மாறும் நாம் ஒளியின் சரீரமும் பெற முடியும்
1.இரத்தங்களிலே அடிக்கடி துருவ நட்சத்திர உணர்வைப் பெருக்கிக் கருக்களாக்கி முட்டையாக்கி ஒளியான அணுக்களாகப் பெருக்கச் செய்யத்தான்
2.ஆத்ம சுத்தியைச் செய்யச் சொல்லி வாழ்க்கையை தியானமாக்கும்படி அடிக்கடி சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

குருநாதர் விண் சென்ற வழியில் தான் அனைவரையும் விண்ணுக்கு ஏற்றுகின்றோம்

குருநாதர் விண் சென்ற வழியில் தான் அனைவரையும் விண்ணுக்கு ஏற்றுகின்றோம்

 

நமது குருநாதர் (ஈஸ்வரபட்டர்) மனிதரோடு வாழ்ந்தவர் தான். இருந்தாலும் அருள் உணர்வின் தன்மை கொண்டு மக்கள் ஈர்ப்பு வட்டத்தில் இருக்கின்றார்.

ஆனால் சாமியைப் பார்த்தால் அது கிடைக்கும் இது கிடைக்கும் என்று சொல்லி ஏதோதோ வைத்தியத்திற்கெல்லாம் வருவார்கள்… என்னென்னெமோ கேட்பார்கள்.
1.கேட்பதற்குத் தான் என்னிடம் வந்தார்களே தவிர “நல்லதாக்குவதற்கு யாருமே இல்லையப்பா…” என்று என்னிடம் சொன்னார் குருநாதர்.
2.ஆகவே நான் சொல்லும் முறைப்படி அருள் உணர்வை எடுத்து என் ஆன்மாவை நீ விண் செலுத்து.
3.அதற்குண்டான சிஷ்யனைத் தான் (ஞானகுரு) அவர் தேர்ந்தெடுத்தார்.

மந்திரவாதிகள் என்ன செய்வார்கள்…?

சாகும் போது மந்திரத்தை எல்லாம் அதற்குண்டானவரிடம் சொல்லிவிட்டு இறக்கி வைப்பார்கள். ஆன்மா வெளி செல்வது எவன் அந்த மந்திரத்தை ஜெபிக்கின்றானோ அவன் உடலுக்குள் வரும். கற்றுணர்ந்த உணர்வை எல்லாம் இங்கே மீண்டும் செயல்படுத்தும்.

ஆனால் நம் குருநாதர் என்ன செய்தார்…?

1.அந்த அருளைப் பெருக்கிய உணர்வு கொண்டு இருளை நீக்கிடும் உணர்வுகளை வளர்த்து
2.அருளைப் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வு கொண்டு விண் சென்றார்.
3.அதே முறையில் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்து அதன் வலு கொண்டு சாதாரண மக்களையும் விண் செலுத்தினால்
4.இந்த உடலில் பெற்ற நஞ்சுகள் அங்கே கரைகின்றது… உயிருடன் ஒன்றிய உணர்வின் தன்மை ஒளிச்சரீரம் பெறுகின்றது.
5.அந்தக் குடும்பத்தாருக்கு மிகவும் நல்லது.

அந்த நிலையைச் செய்வதற்குத் தான் மாதம்தோறும் பூரண பௌர்ணமி அன்று ஆன்மாக்களை கூட்டுத் தியானத்தின் மூலம் விண் செலுத்தும் படி செய்கின்றோம்.

உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்கள் மூதாதையரின் ஆன்மாக்களை விண் செலுத்தினால் அவர்கள் வழியில் நாமும் பின்பற்றி சப்தரிஷி மண்டல எல்லை அடைய ஏதுவாக இருக்கும்.

1.ஏனென்றால்… நம்மை மனிதனாக உருவாக்கி வளர்ந்து உயர்ந்த நிலை பெற வழி வகுத்துக் கொடுத்தவர்கள் முன்னோர்கள் தான்.
2.அந்த விழுதுகள் நாம் தான்
3.ஞானிகள் காட்டிய வழியிலே விண் செலுத்தினால் அவர்கள் ஒளிச் சரீரம் பெற்றால்
4.நம்முடைய எண்ணத்தால் துரிதமாக அங்கிருந்து உயர்ந்த சக்திகளைப் பெற முடியும்
5.இந்த வாழ்க்கையில் வரக்கூடிய தீமைகளையும் அகற்ற முடியும்.

“ஒளி நிலை” பெறும் மார்க்கத்தைக் கொடுத்தவன் மெய் ஞானி

“ஒளி நிலை” பெறும் மார்க்கத்தைக் கொடுத்தவன் மெய் ஞானி

 

1.ஒளியான உணர்வை எடுத்து உடலில் செல்களை மாற்றி
2.உயிரைப் போன்றே ஒளியாக மாற்றும் மார்க்கத்தைக் கொடுத்தான் மெய் ஞானி.

ஆனால் இன்றைய விஞ்ஞான உலகில் அஞ்ஞான வாழ்க்கையாக உடல் இச்சைக்கே கொண்டு செல்கின்றார்கள்… இருளின் நிலைகளுக்குத் தான் சிக்க வைக்கின்றார்கள்.

இந்த மனிதனுக்குப் பின் எங்கே செல்ல வேண்டும் என்ற நிலையை எண்ணவில்லை.

அதே சமயத்தில் இந்த உடலின் உணர்வினைப் பெருக்குவதற்கு அதர்வண வேதம் (யாகம் வேள்வி மந்திரங்கள் சொல்தல்) என்று இந்த வாழ்க்கையே சொர்க்கம் என்ற நிலையில் அஞ்ஞான வாழ்க்கை வாழ வைத்து விட்டார்கள் பக்தி மார்க்கத்தில் அனைவரையும்.

எப்படி…?

பிறருடைய தோஷங்கள் சேர்ந்து விட்டால் பிரதோஷம் என்று பிரதோஷத்தை நீக்க சிவன் கோவிலில் அபிஷேகம் செய்து மகிழ்ச்சியான உணர்வுகளைச் செயல்படுத்தப்பட்டு அந்தப் பிரசாதத்தை எடுத்து நந்தீஸ்வரன் வாய்க்கு அருகில் கொண்டு சென்று… காதிலே போய் சிவனிடம் சிபாரிசு செய்யச் சொல்கிறார்கள்.

1.என் பையன் சொன்னபடி கேட்கவில்லை
2.கடன்காரர்கள் பணத்தைத் திரும்பத் தராது எதிர்த்துக் கொண்டிருக்கின்றார்கள்
3.எல்லோருக்கும் நான் நல்லது தான் செய்தேன். சந்தோசம் தான் படுத்தினேன்
4.ஆனால் என் வீட்டில் கஷ்டமாகவே வந்து கொண்டிருக்கின்றது.
5.நீ ஈஸ்வரனிடம் சொல் என்று இப்படி நம்மை செயல்படுத்தும்படி அஞ்ஞானிகளாக மாற்றி விட்டார்கள்.
6.மெய்ஞானியாக நம்மை வளர்க்கவில்லை… வளரவிடவில்லை…!

நன்றாக யோசனை செய்து பாருங்கள்

மற்றவருடைய கஷ்டங்களைக் கேட்டோம்… கேட்டறிந்து உதவியும் செய்தோம்.
1.ஆனால் அந்தக் கஷ்டங்கள் நமக்குள் அணுக்களாக விளைந்து விடுகின்றது.
2.அந்த உணர்ச்சிகள் இயக்கப்பட்டு நம்மையும் சங்கடப்பட வைக்கிறது… வேதனைப்படச் செய்கின்றது… உடல் நோயாகிறது மன நோயாகிறது.

இதையெல்லாம் மாற்றுவதற்குத் தான் அங்கே ஆலயத்தில் அபிஷேகத் தத்துவங்களைக் காட்டினார்கள் ஞானிகள்.

தெய்வத்திற்கு அபிஷேகம் நடக்கப்படும் பொழுது பன்னீரைப் போன்ற தெளிந்த மணம் பெற வேண்டும்… சந்தனத்தைப் போன்ற நறுமணம் பெற வேண்டும்… மலரைப் போன்ற மணம் பெற வேண்டும் மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும் என்று எண்ணினால்… “நமது உயிரிலே இது அபிஷேகம் நடக்கிறது…”

1.நாம் நுகரும் ஈந்த அருள் உணர்வுகள் உயிருக்குள் பட்ட உடனே நாதங்களாக மோதி
2.உணர்ச்சிகளாக உடல் முழுவதும் படர்ந்து இயக்கும் பொழுது நம் நல்ல குணங்களை இயக்க முடிகின்றது.
3.இந்த உணர்வு நமக்குள் சென்ற உடனே சுவையும் கிடைக்கின்றது நறுமணமும் கிடைக்கின்றது நம் ரத்தங்கள் முழுவதிலும் அது படர்கின்றது.
4.உயிர் உடலில் இருக்கக்கூடிய நல்ல அணுக்களுக்கு உயர்ந்த சக்தியைக் கொடுக்கின்றது.

ஆகவே இந்த வாழ்க்கையில் நாம் எதை வளர்க்க வேண்டும்… உயர்ந்த சக்திகளை எப்படி வளர்க்க வேண்டும்…? மெய் ஞானிகள் காட்டிய வழியில் நாம் எப்படி வாழ வேண்டும்…? என்று தான் கோவிலிலே காட்டுகின்றார்கள்.

நாம் அதன்படி இப்பொழுது வணங்குகின்றோமா…? நம்மைத் தூய்மைப்படுத்துகின்றோமா…? உயர்ந்த சக்திகளை எண்ணி எடுத்து வளர்த்துக் கொள்கின்றோமா…?

சற்று சிந்தனை செய்து பாருங்கள்.

பேரின்பப் பெருவாழ்வு என்று நீங்கள் வாழப் பிராத்திக்கின்றேன்… தவமிருக்கின்றேன்

பேரின்பப் பெருவாழ்வு என்று நீங்கள் வாழப் பிராத்திக்கின்றேன்… தவமிருக்கின்றேன்

 

பேட்டரியில் சார்ஜ் குறைந்தால் அதை மீண்டும் ஏற்றிக் கொள்வது போன்று
1.ஒவ்வொருவரும் அதிகாலை துருவ தியானத்தைச் சீராக எடுத்துக் கொண்டு
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை அதிகரித்துக் கொண்டால்
3.அன்றாட வாழ்க்கையில் வருவதையெல்லாம் நாம் சீர்படுத்திக் கொள்ள முடியும்.

காலையிலிருந்து இரவு வரை நாம் எத்தனையோ பேரைச் சந்திக்க நேர்கின்றது. சலிப்பு சஞ்சலம் சங்கடம் வெறுப்பு கோபம் குரோதம் பயம் போன்ற உணர்வுகளை நாம் சந்திக்க நேர்கின்றது.

அப்படி நாம் பார்த்து கேட்டு நுகர்ந்த உணர்வுகள் நம்மை இயக்காது தடைப்படுத்த… “துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியை உடனடியாக துரிதமாக ஏங்கி நம் உடலுக்குள் செலுத்தினால்” தீமைகள் நமக்குள் புகாது தடுக்க உதவும்.

காலையில் இந்த நினைவலைகளை நாம் அதிகமாகப் பெருக்கி அருள் உணர்வுகளை நமக்குள் சேர்க்கச் சேர்க்கச் சேர்க்க
1.துருவ நட்சத்திரத்துடன் நம்முடைய பற்று அதிகரிக்கின்றது…
2.இந்தப் புவியின் பற்றைத் தகர்த்துக் கொண்டே வருகின்றோம்.
3.எந்தத் துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியை அதிகமாக எடுத்தோமோ… உடலுக்குப் பின் நம்மை அங்கே அழைத்துச் செல்லுகின்றது நம் உயிர்.

இந்த உடலில் சேர்த்த உணர்வுகள் தீமை என்றால்…
1.துருவ நட்சத்திரத்தின் அருகிலே செல்லும் பொழுது இந்த உடலில் பெற்ற தீமைகளை அங்கே கருக்கி விட்டு…
2.இருளை ஒளியாக மாற்றும் திறன் பெறுகின்றது.
3.எத்தகைய நஞ்சு இருந்தாலும் அதை மாற்றி விடுகின்றது.

பாம்பு தன் விஷத்தைப் பாய்ச்சி மற்ற உயிரினங்களை உட்கொண்டாலும் அந்த விஷமே அதற்குள் மீண்டும் சேமித்துச் சேமித்து நாகரத்தினமாக மாறுகின்றது.

இதைப் போன்று தான் நமது வாழ்நாளில் அருள் மகரிஷிகள் உணர்வைச் சேர்க்கச் சேர்க்க நம் உணர்வுகள் அனைத்தும் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக மாறுகின்றது.

மனிதராக இருக்கும் நாம் தான் இதைச் செயல்படுத்த முடியும்.

மிருகங்கள் தான் வாழத் தன்னைக் காட்டிலும் வலுக் கொண்ட உணர்வைச் சுவாசிக்கும் பொழுது… அந்த உணர்வை வளர்த்து உடலுக்குப் பின் பரிணாம வளர்ச்சியில் அடுத்த உடலைப் பெறுகின்றது.

ஆனால் மனிதன் அன்பும் பண்பும் பரிவும் கொண்டு இருப்பினும் பிறருடைய நோய்களைக் கேட்டறியும் போது உதவி செய்தாலும் அந்த நோய் மிகவும் வலிமையானது… விஷம் கலந்தது.

அதை நுகரப்படும் பொழுது அந்த விஷத்தின் உணர்வுகள் நம் நல்ல குணங்களுடன் கலந்து விடுகின்றது. பின் நல்ல குணங்களை வீழ்த்தி விடுகின்றது.

இந்த உணர்வுகள் கலக்கக் கலக்க மனிதனை உருவாக்கிய உணர்வுகள் அனைத்தும் நலிந்து அணுக்கள் மடியத் தொடங்கும். நம் உடல் உறுப்புகளும் குறையத் தொடங்கும்.

உடல் குறைந்து விஷத்தின் தன்மை பெருகும் பொழுது உயிர் உடலை விட்டுச் சென்று மனிதரல்லாத உருவை உருவாக்கி விடும்.

அதை மாற்றியமைக்க அருள் மகரிஷிகளின் உணர்வுகளை சேர்க்கச் சேர்க்க
1.உடலை விட்டுச் செல்லும் உயிரான்மா எதன் வலுக் கொண்டதோ
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருகிலே நம்மை அழைத்துச் செல்லும்.

தீமைகளைக் கருக்கிடும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகள் பட்டப்பின் மனித வாழ்க்கையில் நாம் சேர்த்துக் கொண்ட தீமைகளை அங்கே கருக்கிவிட்டு… உயிரின் ஈர்ப்பு துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தப்பட்டு பேரருள் பேரொளி என்று ஒளியின் சரீரமாக… அழியா ஒளிச் சரீரமாக பிறவியில்லா நிலை அடைகின்றோம்.

உயிர் தோன்றி மனிதனாக வளர்ச்சி பெற்ற பின்பு தான் முழுமை அடைய முடியும்… உயிர்.

ஆகவே நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் மகரிஷிகள் பெற்ற ஒளிச் சரீரத்தை நாமும் பெறுவோம்.
1.இந்த வாழ்க்கையில் வரும் இருளை அகற்றிப் பேரருள் பெற்று
2.இல்லற வாழ்க்கையில் பேரின்பப் பெருவாழ்வு என்று நீங்கள் வாழப் பிராத்திக்கின்றேன்… தவமிருக்கின்றேன்.

பிறவிக் கடல் கடந்து அழைத்துச் செல்ல உனக்காகக் காத்திருக்கின்றேன்

பிறவிக் கடல் கடந்து அழைத்துச் செல்ல உனக்காகக் காத்திருக்கின்றேன்

 

பிறப்பு வளர்ப்பு இறப்பு (எல்லாவற்றிலும்) எனும் உண்மைகளை உணர்ந்து… தம் ஆத்ம நிலையைக் காத்துக் கொள்ள… உள்ளபூர்வமாக… இதயத்தின் ஒளியாக…
1.யாம் சுட்டிக் காட்டிய தியானத்தின் வழித் தொடராக
2.பயணம் செய்பவர்கள் குறைந்து கொண்டே வருகின்றனரப்பா…!

ஆனாலும் பிறவி என்னும் மகா சமுத்திரத்தில் வாழ்க்கை என்னும் ஓடத்தில்… இக்கலியின் மக்கள் “மாக்களாக மாறிடும் நிலையை நீக்கிட”
1.அறிவு பூர்வமான ஆக்க செயல்களை உணர்த்தி
2.மாயத் தளைகளை அகற்றி
3.”விழிப்பாக உணர்ந்திடும்” – ஞானச் செல்வங்களை (உங்களை)
4.பிறவிக் கடல் கடந்து அழைத்துச் செல்லும் “யாம் (ஈஸ்வரபட்டர்) ஓர் ஓடக்காரன்…”

கால தேச வர்த்தமானம் எண்ணிடாதபடி… என் கடமையின் வினைச் செயலாக… இரவு பகல் “எந்த நேரமும் நான் காத்திருக்கின்றேன்…”

1.இரவிலோ… இன்னும் பேரருள் பிரகாசம் என்னும் ஜோதியைக் கையில் ஏந்தி
2.உங்கள் வாழ்க்கையின் பயனைக் காட்டிடவே சூட்சுமத்தில் செயல் கொள்கின்றேன்.

பயன் கொள்ளுங்களப்பா…!