இந்த உலகை அறிய விரும்பி பூமிக்குள் வந்தாலும்… நீ பட்டது போதும் தாயே மகாலட்சுமி…!

இந்த உலகை அறிய விரும்பி பூமிக்குள் வந்தாலும்… நீ பட்டது போதும் தாயே மகாலட்சுமி…!

 

1.மனிதனின் உயிர் என்ற நிலை வரப்படும் பொழுது “மகாவிஷ்ணு” சர்வத்தையும் எடுத்து வருகின்றது.
2.உயிரில் உள்ள காந்தம் எத்தனையோ விதமான உணர்வுகளை நமக்குள் சேர்த்தது “மகாலட்சுமி…”
3.நம் உடலிலே எல்லா வகையான உணர்வுகளையும் வளர்த்து வைத்திருக்கின்றது.

சீதாவை ராவணன் கடத்திச் சென்று விடுகின்றான் இராமன் எத்தனையோ போர்களைச் செய்து சீதாவை மீட்டி வருகின்றான். மீட்டி வந்த பிற்பாடு மக்கள் என்ன சொல்கிறார்கள்…?

அசுரனிடத்தில் இவ்வளவு நாள் இருந்ததால் மக்கள் சீதாவினுடைய புனிதத் தன்மையை சந்தேகப்படுகிறார்கள் என்று சொல்லி அக்கினிப் பிரவேசம் செய்ய வேண்டும் என்று கூறுகின்றார்கள்.

அதன் வழி அக்கினிப் பிரவேசம் செய்து சீதா வருகின்றது. வந்தபின் சமுதாயம் ஏற்றுக் கொள்கிறது. இராமனும் சீதாவும் அரண்மனைக்குச் செல்கின்றார்கள்.

ஆனால் சிறிது காலத்திலேயே சீதா கர்ப்பம் ஆகின்றது. இதைத் தெரிந்து கொண்ட பின் மக்கள் என்ன சொல்கிறார்கள். சீதா ராவணனிடம் சிறைப்பட்டிருந்ததால் அவன் மோசமானவன்…! ஆகவே இது அவனுக்கு உருவான கரு தான் என்று மக்கள் கருதுகின்றார்கள்.

இது இராமனின் செவிகளுக்கும் செல்கின்றது. தன் சகோதரன் லட்சுமணனைக் கூப்பிட்டு “சீதாவைக் காட்டிற்குள் சென்று விட்டு விட்டு வந்துவிடு… ஒன்றும் சொல்லாதே…!” என்கிறான்.

தன் மனைவி கர்ப்பிணி என்றும் தெரிகின்றது… இருந்தாலும் அவ்வாறு சொல்கின்றான்.

அசுர உணர்வுகள் கொண்டு வாழும் மிருகத்தின் மத்தியிலே கர்ப்பிணியை விட்டுச் சென்றால் என்ன ஆகும்…? உணவுக்கோ பாதுகாப்புக்கோ ஒருவரும் இல்லை என்றால் அதனுடைய நிலை என்ன ஆகும்…?

அப்போது அங்கே அந்தக் காட்டிற்குள் வரக்கூடிய ஒரு பெண் “இது கர்ப்பிணியாக இருக்கின்றது… அனாதையாக இருக்கின்றது… இது யார்…? என்றும் தெரியவில்லை… இருப்பினும் வான்மீகி மகரிஷி அங்கே தவம் இருக்கின்றார்… இந்தப் பெண்ணை அங்கே அழைத்துச் சென்று அடைக்கலம் செய்யலாம்…? என்று கூட்டிச் செல்கின்றது.

வான்மீகி சீதாவைப் பார்த்தபின் உண்மையை உணர்கின்றார். சரி இங்கேயே இருக்கட்டும் என்று சொல்கின்றார்.

இயற்கையில் இராமனைப் பற்றிய உண்மை நிலைகளையும் தசரதச் சக்கரவர்த்தியின் நிலையையும் உலக நிலைகளையும் எப்படி இருக்கின்றது…? என்ற நிலையைக் கருவிலே உருப்பெற்ற குழந்தைக்குக் கர்ப்பிணியிடம் செவி வழி சொல்லி அதை நுகரச் செய்து அதன் வழி ரத்தத்தில் கலந்து கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கு ஞானத்தை ஊட்டுகின்றான் வான்மீகி.

1.இராமனுடைய செயல்கள் எப்படி…?
2.உலக மக்களின் செயல்கள் எப்படி…?
3.ராவணனுடைய செயல்கள் எப்படி…? என்று
4.இந்த உண்மைகள் அனைத்தையுமே சீதாவிற்குக் கதையாகச் சொல்லப்படும் பொழுது
5.கர்ப்பிணி காது வழி கேட்டு கண் வழி கவர்ந்து மூக்கு வழி நுகர்ந்து
6.அந்த உணர்வுகள் ரத்தத்துடன் கலந்து கருவிலிருக்கும் குழந்தைக்கு இந்த ஞானத்தை ஊட்டுகின்றது.

இதில் “எத்தனையோ அற்புதமான உண்மைகள்” இருக்கின்றது…!

அதற்குப் பின் குழந்தைகள் பிறக்கின்றது லவ குசா என்று இரட்டைக் குழந்தைகளாகக் காரணப் பெயராக வைக்கின்றார்கள். அதாவது…
1.கவர்ந்து கொண்ட உணர்வுகள் எதிரொலியாக எப்படிச் செல்கின்றது…?
2.எதைக் கவர்ந்து உருவானதோ அந்த உணர்வின் தன்மை வெளிப்படுத்தி அந்த உணர்வின் தன்மை எப்படிச் செயல்படுத்தும்…? என்பதற்காக
3.இரட்டைக் குழந்தைகள் பிறந்தது என்று காவியப்படி கொண்டு வருகின்றார்கள்.

ஆனால் சீதா இல்லாததால் இங்கே இராமன் ஆட்சி செய்யும் இடத்தில் பல இன்னல்கள் சூழப்பட்டு விடுகிறது. அதிலிருந்து மீட்கத் தன் தந்தை செய்த அஸ்வமேத யாகத்தை மீண்டும் செய்ய வேண்டும் என்று இராமன் சொல்கிறார்.

ஆகவே அரசைக் காக்க வேண்டும் என்று அந்த யாகத்தைச் செய்ய முற்படுகின்றார்கள். தேதியைக் குறித்து அந்த நாளிலே அதைச் செயல்படுத்த வேண்டும் என்று ஆயத்தம் செய்கின்றார்கள்.

வான்மீகி இதைத் தெரிந்து கொள்கிறார். நாளை அந்த யாகம் தொடங்க இருக்கிறது என்றால் அங்கே மற்ற எல்லோரும் கூடியிருப்பார்கள் என்ற நிலையில்
1.லவ குசாவை அழைத்து “நீங்கள் அங்கே செல்லுங்கள்…”
2.அங்கே சென்று தன் சரித்திரத்தை நான் எப்படிப் பிறந்தேன்…? எப்படி வளர்ந்தேன்…?
3.இதற்கு மூலம் யார்…? என்ற தத்துவத்தை எடுத்து ஓதும்படிச் சொல்லி அனுப்புகின்றார்.

அதன்படி யாகம் தொடங்கும் வேளையில் அந்த குழந்தைகள் இதையெல்லாம் பாடல்களாகப் பாடி வெளிப்படுத்துகின்றார்கள்.

இந்தப் பாடல்களைக் கேட்ட இராமன்… என்னுடைய சுய சரிதம் எனக்கும் சீதாவுக்கும் மட்டும் தான் தெரியும் அப்படி இருக்கும் பொழுது இந்தக் குழந்தைகள் அதைப் பாடுகிறார்கள் என்றால் “இவர்கள் யாராக இருக்கும்…?” என்ற வகையில் அவர்களை அணுகி… உங்களுடைய தாயார் யார்…? எங்கே இருக்கின்றார்கள்…? என்று இராமன் கேட்கின்றார்.

அவர்கள் ஒன்றும் சொல்லாமல் சீதா இருக்கும் வான்மீகி ஆசிரமத்திற்கு இராமனை அழைத்துச் செல்கின்றார்கள். இராமனும் உற்றுப் பார்த்து உண்மையை உணர்ந்து கொள்கின்றான். நாட்டு மக்களும் உணர்கின்றார்கள்.

ஏனென்றால் அவர்களும் யாகசாலையில் இந்த பாடல்களைக் கேட்டதால் உலக மக்கள் புரிந்து கொண்டனர். “இனி நாம் சேர்ந்து வாழலாம்” என்று இராமன் சீதாவை அரண்மனைக்கு அழைக்கின்றான்.

அப்பொழுது தான் பூமாதேவி சீதாவிடம் “நீ பட்டது போதும் தாயே…!” என்று சொல்கிறது.

உயிரின் இயக்கம் ஈசன்… அதிலே ஏற்படும் வெப்பம் விஷ்ணு… ஈர்க்கும் காந்தம் லட்சுமி.
1.இந்த உடலுக்குள் எத்தனையோ வகையான உணர்வுகளைச் சேர்த்து வைத்தது உலகை அறியும்படிச் செய்தது.
2.நாம் உலகை அறிந்து கொள்ளும் நிலைக்காக எடுத்துச் சேர்த்தது.

மகாலட்சுமி நீ உலகை அறிய விரும்பினாய். அந்தச் சுவையின் தன்மை வரும் பொழுது நீ மகாலட்சுமியாக இருந்தாலும் “இந்த உடலில் பட்டது போதும்…”

சுவை சீதா என்ற நிலையே பூமியிலிருந்து தான் அது உருவாகக் காரணமானது.
1.பூமியிலிருந்து விளையப்பட்ட சுவைதான் உடலாக விளைந்தது
2.நீ பட்டது போதும் தாயே…! என்று பூமி பிளந்து “சீதா என்ற இந்த உடல் மண்ணுடன் மண்ணாக ஐக்கியமாகின்றது…”

சீதா உயிரை நோக்கி விஷ்ணுவை நோக்கித் தவமிருந்தது விஷ்ணுவை நோக்கித் தவமிருந்ததால்
1.அதனுடன் ஐக்கியமாகி சந்தோச உணர்வுடன் இணையப்படும் பொழுது
2.உடல் பிரிந்தபின் உடலில் வரும் இருளை நீக்கிவிட்டு உயிரோடு ஒன்றி அவனுடன் அவனாக ஐக்கியமானது.

ஏனென்றால் ஒளி இருக்கும் உயிர் தான் எல்லாவற்றையும் அறிவித்தது “அந்த விஷ்ணு…” ஆகவே தான் கண்ட அந்த உணர்வின் சுவையை ஒளியின் சுடராகக் காட்டியது.

விஷ்ணுவை நோக்கித் தவமிருந்ததனால் அங்கே போய் உயிருடன் ஒன்றி ஐக்கியமாகின்றது. அப்படி என்றால் என்ன அர்த்தம்…?
1.உடலில் வந்ததை எல்லாம் நீக்கிவிட்டு
2.உயிருடன் ஒன்றி இனிப் பிறவியில்லா நிலை அடைவது.

ராவணனும் அரக்க உணர்வை எடுத்து அவனும் விஷ்ணுவை நோக்கித்தான் தவமிருக்கின்றான். (சீதாவோ) லட்சுமி விஷ்ணுவுடன் இணைந்து இயக்கி வந்தாலும் சீதா என்ற சுவையால் உடலாக ஆனாலும்
1.எத்தனையோ வேதனைகள் இருந்தாலும் விஷ்ணுவின் இயக்கத்துடன் நின்று
2.துயரத்தைத் தாங்கிக் கொண்டு அவனின் இயக்கமாகத்தான் இருந்தது.

துயரம் என்ற உணர்வுகள் மண்ணிலே தோன்றியது. ஆகையினால் மண்ணுடன் இந்தச் சடலம் போய் விடுகின்றது
1.அதிலே சேர்த்த உணர்வின் ஒளி உயிருடன் இருந்து இருளை நீக்கி ஒளி என்ற உணர்வைப் பெறுகின்றது…
2.பிறவியில்லா நிலை அடைவது தான் மனிதனின் எல்லை…! என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றது இராமாயணக் காவியம்…!

நாம் புரிந்து கொண்டோமா…?

செயற்கைக் கோளை விண்வெளிக்குச் செலுத்துவது போல் நம் முன்னோர்களை விண்ணுக்குச் செலுத்த முடியும்

செயற்கைக் கோளை விண்வெளிக்குச் செலுத்துவது போல் நம் முன்னோர்களை விண்ணுக்குச் செலுத்த முடியும்

 

நம் குலதெய்வங்களான முன்னோர்கள் மூதாதையரின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களை சப்தரிஷி மண்டல ஒலி அலைகளுடன் கலக்கச் செய்து உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்துப் பெருவீடு பெருநிலை என்ற நிலை அடையச் செய்தல் வேண்டும்.

அவ்வாறு அழியா ஒளிச் சரீரம் பெற்று அவர்கள் பிறவி இல்லா நிலை அடைந்து ஒளியின் அறிவாக ஒளியின் உடலாக வாழ்ந்து வளர்ந்து…
1.அருள் ஒளியைக் குடும்பத்தில் பாய்ச்சிக் குடும்பத்தில் இருளை அகற்றும் சக்தியை உருவாக்கி
2.விண் சென்ற எங்கள் குலதெய்வங்கள் அருள் வழியில் எங்களைக் காத்திட அருள்வாய் ஈஸ்வரா.

ஆனால் குல வழியில் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்கள் குடும்பத்தில் பற்று கொண்டால் அந்தப் பற்றின் ஈர்ப்பின் துணை கொண்டு “யார் மேல் அதிகப் பற்று கொண்டதோ” அந்த உடலுக்குள் வந்துவிடும்.

அவ்வாறு வந்து விட்டால்
1.இந்த உடலை விட்டுப் பிரியும் பொழுது எத்தகைய நோய்வாய்ப்பட்டிருந்ததோ
2.அந்த உணர்வினைப் புகுந்த உடலுக்குள்ளும் இயக்கி
3.பாசத்தால் உள்ளே வந்தாலும் இந்த உடலுக்குள் வந்து அதையே உருவாக்கிவிடும்.

முதலிலே மூதாதையர் மனிதனாகப் பிறந்தார்கள்… நம் தாய் தந்தையை உருவாக்கினார்கள்… தாய் தந்தை நம்மை மனிதனாக உருவாக்கினார்கள். இந்த உயிரின் கடைசி முடிவு அழியா ஒளிச் சரீரம் பெறுவது தான்.

உயிர் ஒளியானது உணர்வை ஒளியாக மாற்றும் திறன் பெற்ற இந்த மனித உடலில் மூதாதையர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற சூட்சும சரீரங்களை அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்வோம் என்றால் அவர்கள் பிறவியில்லா நிலை அடைகின்றார்கள்.

சப்தரிஷிகள் என்பவர்கள் உடல் பெறும் உணர்வைக் கரைத்தவர்கள்… ஒளியின் அறிவாக நிலைத்தவர்கள். அந்த அருள் ஒளியுடன் நம் குலதெய்வங்கள் ஒன்றி வாழ… அவர்களைப் பிறவில்லா நிலை அடையச் செய்ய… நம்முடைய உணர்வுகள் உறுதுணையாக இருத்தல் வேண்டும்.

உதாரணமாக சிலர் எண்ணலாம் இது எப்படி சாத்தியப்படும்…? என்று…!

இயந்திரங்களால் உருவாக்கப்பட்ட கம்ப்யூட்டர்… அதிலே நாடாக்களில் பதிவு செய்கின்றார்கள். எதெனதன் உணர்வைப் பதிவு செய்கின்றார்களோ ராக்கெட்டிலே அது பொருத்தப்பட்டு விடுகிறது.

உதாரணமாக ஒரு கோள் இருக்கிறது என்றால் நட்சத்திரம் இருக்கிறது என்றால்
1.எதன் திசைப் பக்கம் இந்த ராக்கெட் செல்ல வேண்டுமோ நாடாக்களில் அதை இங்கே பதிவு செய்து விடுகின்றார்கள்.
2.ஏனென்றால் நாடாக்களில் பதிவு செய்யப்பட்ட அந்த இயந்திரத்தின் செயல் அதை எலக்ட்ரானிக்காக மாற்றுகின்றது.
3.எத்திசையின் உணர்வை எலக்ட்ரானிக்காக மாற்றுகின்றதோ அத்திசைப் பக்கம் அந்தக் கோள்கள் உமிழ்த்தும் உணர்வலைகள் இதற்குள் பட்டபின்
4.அதன் பாதையினை அது அமைத்து அந்தக் கோளைச் சென்று அடைகின்றது.

கோளின் உணர்வுகளை நுகர்ந்து அறிகின்றது. அங்கே தனக்குள் பதிவு செய்யும் ஒலி நாடாவின் மூலம்
1.தரையில் இருப்பவர்கள் அதை ஆண்டென்னா போன்று கவர்ந்து
2.இங்கே பதிவு செய்து அதன் பாதையை அமைக்கின்றார்கள்.

இதைப் போன்று தான்
1.நம் மூதாதையர்களின் உணர்வுகள் (நமக்கு வழிகாட்டிய உணர்வுகள்) நமக்குள் இருப்பதனால் அதன் துணை கொண்டு
2.நாம் சப்தரிஷி மண்டலங்களின் உணர்வுகளை நமக்குள் வலுக் கொண்டு… அந்த அருள் ஞானிகளின் சக்தியை எடுத்து
3.உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த ஆன்மாக்களை அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய உந்தித் தள்ளினால்
4.அங்கே சென்ற பின் உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்து விடுகின்றது.

வழிகாட்டிய அறிவின் ஒளியாக நிலைத்து விடுகின்றது. உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக மாற்றிக் கொள்ளும் அமைப்பு அதற்கு வருகின்றது.

அதன் வழி கொண்டு அவர்கள் வளர… அவரின் உணர்வுகள் நமக்குள் பெருக்க… அவர்களை எண்ணும் பொழுது அருள் ஒளி கொண்டு நம் இருளைப் போக்க அவர்கள் உதவுவார்கள்.

இதற்கு முன் நாம் செய்யத் தவறியதால்… பாசத்துடன் பண்புடன் நம் உடலுக்குள் புகுந்து இருப்பினும்… அதை நாம் இவ்வழியில்
1.அருள் மகரிஷிகளின் உணர்வுகள் அவர்கள் பெற வேண்டும் என்று நாம் எண்ணும் பொழுதெல்லாம்
2.அந்த உணர்வுகள் நம் ரத்த நாளங்களில் கலக்கின்றது… நமக்குள் இருக்கும் அந்த ஜீவான்மாக்களுக்கும் அந்த உணர்வு கிடைக்கின்றது
3.இந்த உணர்வின் தன்மை வளர்ச்சி அடைய இதனின் வளர்ச்சி அருள் ஒளியின் சுடராக நம்மையும் மாற்றும்.
4.அதுவும் வளர்ந்து அதனின் உணர்வு நாம் வெளியே சென்ற பின் அந்த ஆன்மாவும் சப்தரிஷி மண்டலத்துடன் இணையும்.
5.நாமும் அதே வழியில் இணையும் தருணம் வருகின்றது.

ஞானிகள் காட்டிய இந்த அருள் வழியில் செல்வோம் என்றால் இந்த உயிர் என்றுமே அழியா ஒளிச் சரீரம் பெறுகின்றது. நமது குருநாதர் காட்டிய அருள் வழி இது…!

கணவன் மனைவி ஒன்றிணைந்த நிலையில் விண் செல்வதே வளர்ச்சி

கணவன் மனைவி ஒன்றிணைந்த நிலையில் விண் செல்வதே வளர்ச்சி

 

கணவன் மனைவி இல்லாது தனித்த மனிதனாக விண் சென்றால் அது வளர்ச்சி இல்லாதது. “முனி” என்ற நிலையையே அடைகின்றது.
1.அப்படி முனி என்ற நிலையில் வளர்ச்சி இல்லை என்றால் கடுகளவே இருக்கும். நாளடைவில் அது தேய்பிறை ஆகிவிடும்.
2.தேய்பிறையாகி அந்த ஒளிக்கற்றைக்குள் அது கலந்து “மற்றதற்கு உணவாக ஆகும் தன்மையே அங்கேயும் வருகின்றது…”

கணவன் மனைவி என்ற இரண்டற இணைந்தால் உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி என்றும் மகிழ்ந்திடும் உணர்வுகள் வருகின்றது. இங்கே எப்படி மகிழ்ந்து வாழ்கின்றோமோ… நாம் இப்போது விண் செலுத்தும் ஆத்மாக்கள் அங்கே இரண்டறக் கலந்தாலும்
1.மனைவியுடன் கலந்தால் அது வளர்ச்சிக்கு பெறும்.
2.இணைந்து வாழும் வளர்ச்சியாகி என்றும் ஜீவனுடன் இருக்கும்.

சாமியார்கள் என்று சொல்பவர்கள் திருமணம் ஆகாத நிலையில் அவருக்குப் பின் இனவிருத்தி இல்லை. எந்த உணர்வின் தன்மையைப் பெற்றார்களோ அதன் வழியில் அவன் மடிவான். அவன் வளரும் தன்மை இல்லை. அவன் வார்த்தைகளைக் கேட்ட மற்றவர்களும் மனைவி இழக்கும் நிலை தான் வரும். இவனும் அதற்குமேல் வளராத நிலையைத் தான் அடைய முடியும்.

சாதுக்களாக இருந்து திருமணம் ஆகாதபடி நான் பெரிய முனிவனாக இருக்கின்றேன். குடும்பப் பந்தம் இல்லாது செல்கின்றேன் என்று சொன்னாலும் அவர்கள் யாரும் மீள முடியாது.

மடாதிபதிகள் திருமணமாகாது இருக்கலாம். அன்று அரசன் காட்டிய வழியில் அவன் இயற்றிய சட்டத்தைக் காக்கும் காவலாளிகள் தான் மடாதிபதிகள்.

காரணம் திருமணமானால் பிள்ளைகள் சொத்துக்கு உரிமை கொண்டாடுவார்கள் என்று இப்படிப் பிரித்து உருவாக்கி விட்டார்கள். அவர் வழியில்… அமர்ந்து உணவை உட்கொள்ள வேண்டும் என்றும்
1.அருள் பெறத் தவம் இருக்கின்றேன் எனக்கு மனைவி வேண்டாம் மக்கள் இருந்தால் இந்த நிலை வராது என்று இருந்தால்
2.இவரைப் போன்று மடையர்கள் எவருமில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
3.நமது குருநாதர் அதைத் தான் சொல்வார்.

சொத்துக்காக சுகத்திற்காக வருகின்றார்கள். நாம் போற்றுகின்றோம்… ஆட்சி புரியும் நிலையில் அந்தந்த மதத்திற்குக் குருவாக வரும் பொழுது குருவின் அருளைப் பெறுவதற்காக தவறுகள் பல செய்கின்றார்கள்.

நமது குருநாதர் உலகில் நடந்து கொண்டிருப்பதை எல்லாம் தெளிவாக எனக்குக் காட்டினார். மனிதனால் தன் உடலின் இச்சையைத் தான் வளர்க்க முடிகின்றது.

மதத்தின் அடிப்படையில் அவன் ஆட்சி புரிய எண்ணினால் அந்தச் சட்டத்தை இயற்றும் காவலன் தான். மதத்தைக் காக்கும் காவலாளிகளாகத் தான் அவர்கள் செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள். மக்களை அவர்கள் வழியில் வழிப்படுத்தும் நிலைகள் தான் வருகின்றது.

ஆனால்
1.இயற்கையின் உண்மையின் இயக்கத்தின் நிலையை அறிந்து
2.மனிதனுக்குப் பின் எங்கே செல்ல வேண்டும்…? என்ற நிலையை மதங்கள் சிந்திப்பதில்லை.

மதங்கள் காட்டிய நிலையில் அவன் காட்டும் ஆண்டவன் தான் கடைசி முடிவு. ஈகையும் இரக்கம் கொண்டு பிறருக்கு நீ உதவி செய் என்று சொல்லும் பொழுது அவன் இரக்க பாவத்தை ஈகையுடன் கேட்டறிந்தால் அந்த உணர்வுகள் அவனுக்குள் வந்தால் இந்த விஷங்கள் அவனுக்குள் மாறி இவன் அழியும் நிலையாக மீண்டும் இந்த புவிக்குள் சுழலும் நிலை தான் வருகின்றது. பிறவியில்லா நிலை அடைவதில்லை.

மதத்தின் அடிப்படையில் வருபவர்களால் தன் மதத்தைக் காக்க உதவும்.

ஆனால்
1.ஞானிகள் காட்டிய நிலைகள் மகரிஷிகள் காட்டிய நிலைகள் அவன் வளர்ந்து ஒளியின் சரீரமாகப் பெற்ற
2.அவனின் உணர்வை நாம் நுகர்ந்தோம் என்றால்
3.அந்த உணர்வின் துணை கொண்டு நஞ்சை ஒளியாக மாற்றிடும் நிலை பெற முடியும்.

அந்த நிலையை அடைவது தான் மனிதனின் கடைசி நிலை.

நாரதன் எனும் ஞானக் கனியை நாம் புசிக்க வேண்டும்

நாரதன் எனும் ஞானக் கனியை நாம் புசிக்க வேண்டும்

 

கந்த புராணத்திலே அன்று சொன்னது. பேரண்டமும் பெரு உலகமும் உன் அன்னை தந்தை தான். ஆகவே
1.நீ வேறு உலகம் சுற்ற வேண்டியதில்லை.
2.அன்னை தந்தையினுடைய எண்ண உணர்வலைகளுக்குள் நீ சுழன்று வந்தால் அதனின் நிலைகள் நீ கனியாவாய் என்று
3.அந்தக் கனியைப் பெறும் தகுதியை யார் கொடுத்தது…?
4.நாரதன்…! அந்த நாரதன் யார்…?

ஏனென்றால் மனிதனாகித் தன் உயிராத்மாவை ஒளியாக மாற்றிச் சென்று சப்தரிஷி மண்டலம் ஆகி
1.அதிலிருந்து வெளிவரும் மூச்சலைகள் – நான் பேசும் அந்த உணர்வின் அலைகள் தான்
2.அந்த வளர்ந்து கொண்ட அணு தான் நாரதன்.

அந்தக் கனியான அருள் வித்தை “நாரதன் தான் இந்தக் கனி” என்று சுட்டிக் காட்டுவதற்கு அவர்கள் சென்ற வழியில் செல்ல வேண்டும் என்றால் அன்னை தந்தையின் சொல்லின் சுழற்சிக்குள் இன்று ஒருங்கிணைந்து அவர்கள் உயர வேண்டும் என்ற உணர்வை கொண்டு நாம் சுழன்று வந்தால் இந்த உணர்வின் தன்மை கனியின் தன்மையை நீ பெறுகின்றாய்.

இப்பொழுது நான் சொல்லும் நிலைகள் கொண்டு “விண்ணை ஏகும் முறையை” அன்று கந்த புராணத்தில் தெளிவாகக் காட்டப்பட்டது.

அந்த மெய் ஒளியின் உணர்வை நாம் சரியான நிலைகள் பெறுவதற்கு அந்த மெய் ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி வாரத்தில் ஒரு நாள் மூதாதையர்களான குலதெய்வங்களை விண் செலுத்த வேண்டும்.

1.அதை பழகிக் கொள்ள வேண்டும்… பழக்கிக் கொடுக்க வேண்டும்.
2.ஒவ்வொரு நாளும் அல்லது அந்த வாரத்தில் ஒரு நாள் ஆவது கூட்டுக் குடும்ப தியானங்கள் இருந்து
3.குழந்தைகளையும் பழக்கி விண்ணின் ஆற்றலைப் வெறும் தகுதியை ஏற்படுத்தும் போது ஒரே தொடர்பாகக் கூட்டமைப்பாக வருகின்றது..

ஆனால் இப்பொழுது நாம் குழந்தைகளை வளர்க்கப்படும் பொழுது அவன் சொன்னபடி கேட்கவில்லை என்றால் என்ன செய்கிறோம்…? இவனுக்கு நல்ல நேரம் இருக்கின்றதா… கெட்ட நேரம் இருக்கிறதா…? என்று ஜாதகக்காரனிடம் ஓடுகின்றோம்.

கெட்ட நேரம் இருக்கின்றது என்று சொல்லி யாகத்தை வளர்த்தால் சரியாகிப் போய்விடும் என்று காசைக் கொடுத்துச் செலவழித்து அவன் சொல்வதைச் செய்வோம்.

யாகத்தைச் செய்தால் அது எப்படி சரியாகும்…?

பையன் சொன்னபடி கேட்கவில்லை என்றால் நாம் இப்படித்தான் ஜாதகக்காரனிடம் கேட்டு “நல்ல நேரம் இருக்கிறதா…” என்று தெரிய விரும்புகின்றோம்.

ஆனால் அங்கே அவன் கெட்டதைச் சொல்வான். அதை ஏற்றுக் கொள்வோம். கெட்ட நேரம் இருக்கிறது என்று அவன் சொல்வான். அதை ஏற்றுக் கொள்வோம்.
1.பையனுக்கு நல்ல புத்தி சொல்வதற்குப் பதிலாக
2.கெட்ட நேரம் இருக்கிறது கெட்ட நேரம் இருக்கிறது என்று அவன் சொல்வதைத் தான் நாம் ஆழமாகப் பதிவு செய்கின்றோமே தவிர
3.நல்லதை நினைத்து அதை எடுத்துச் செய்வதற்கு இல்லை.

ஆனால் ஜாதகத்தைப் பார்த்துத் தான் நான் இன்று எல்லாமே செய்து கொண்டிருக்கின்றோம். ஆனால் கெட்டது என்று ஜாதகக்காரன் சொல்லிவிட்டால் அந்த உணர்வு வேகமாக பதிவாகி விடுகிறது.

நல்லதாகும் என்று சொல்லி இருந்தால் அது நடப்பதில்லை.
1.காரணம் விஷம் வேகமாக வேலை செய்யும்
2.நல்லதாக வேண்டும் என்றால் திரும்பத் திரும்ப நல்லதை எடுத்து நல்லதையே எண்ணி வளர்க்க வேண்டும். அது எங்கே இருக்கிறது…!

ஜாதகக்காரன் சொல்லும் நல்லது நடக்காது. ஆனால் “கெட்டது அனைத்துமே… ஜாதகக்காரன் சொன்னபடி நடக்கிறது…!” என்று அப்படித்தான் நாம் எடுத்துக் கொள்கின்றோம்.

குழந்தை பிறந்த நேரத்தின்படி அவன் தாய்க்கு ஆகாது என்று அவன் ஜாதகப்படி சொல்வான். அந்த ஜாதகப்படி இத்தனாவது மாதத்தில் இத்தனாவது வருடத்தில் “தாய்க்கு இந்த மாதிரி ஆகும்” என்று அவன் சொல்லி விடுவான்.

அதைக் கேட்ட உடனே ஆரம்பத்திலிருந்து அந்த வித்தை நமக்குள் பதிவு செய்து வளர்க்க ஆரம்பித்து விடுகின்றோம்.
1.கொஞ்சம் கொஞ்சமாக அதை நினைத்து நினைத்து வளர்த்து அந்த வயது வரை
2.ஜாதகக்காரன் சொன்னான் ஜாதகக்காரன் சொன்னான் என்ற அதை நினைவைக் கொண்டு வரும்பொழுது
3.காற்றிலிருந்து அதைச் சுவாசித்து அந்த நோயை நமக்குள் வரவழைத்துக் கொள்கின்றோம்.

ஜாதகக்காரன் சொன்னான்…! சொன்னது சரியாகி விட்டது. சொன்ன நேரத்தில் சரியாக நடந்து விட்டது “ஜாதகம் பொய்யா…?” என்று தான் நாம் வாதிப்போம்.
1.அது விளைந்த பிற்பாடு ஜாதகக்காரன் சொன்னது மெய்யாகி விட்டது
2.அப்பொழுது அவன் கடவுளாகி விடுகின்றான்… நன்றாக இதை கவனித்துக் கொள்ளுங்கள்.

மனிதனுக்கு ஜாதகம் இல்லை சூரியனுக்கு பூமிக்கோ செடி கொடிகள் மற்றும் அனைத்திற்குமே ஜாதகம் உண்டு… சொல்ல முடியும்
1.காரணம் அவையெல்லாம் “நினைத்து” எதையும் மாற்ற முடியாது
2.மனிதனுக்கோ… கெட்டது என்று வந்து விட்டால் அதை நீக்கிவிட்டு நல்லதைச் செய்யக்கூடிய நிலைகள் உண்டு.

நாம் உணவாக உட்கொள்ளும் ஆகாரம் எத்தகைய சுவையாக இருந்தாலும் அதற்குள் மறைந்து இருக்கக்கூடிய விஷத்தை மலமாக மாற்றிவிட்டு நல்ல உணர்வின் சத்தை உடலாக மாற்றிடும் சக்தி நம்முடைய அறிவு ஆறாவது அறிவுக்கு உண்டு.

அந்த அறிவால் தான் செடிகளில் விளைந்த காய்கறிகளில் அதில் உள்ள காரலை வேக வைத்து நீக்கிவிட்டுப் பல பொருள்களை இணைத்துச் சுவையாக மாற்றி உணவாக உட்கொள்கின்றோம்.

மனித வாழ்க்கையில் வரக்கூடிய துன்பங்களை நீக்கிவிட்டு
1.தனது ஆறாவது அறிவை ஏழாவது நிலையாக உணர்வை ஒளியாக மாற்றிக் கொண்டவர்கள் சப்தரிஷிகள்
2.சப்தரிஷி மண்டலமாக இன்றும் வாழ்கின்றார்கள்… அதிலிருந்து வெளிப்படும் ஒளியான அணு தான் நாரதன் என்பது.

அந்தச் சக்திகளை நமக்குள் வளர்த்தால் அவர்களைப் போன்று நாமும் எத்தகைய தீமைகளையும் மாற்றி அமைக்க முடியும். அவர்களைப் போன்று நாமும் கனியின் தன்மையை (முழுமை) அடைய முடியும்.

உணர்வினை ஒளியாக மாற்றும் நிலை

உணர்வினை ஒளியாக மாற்றும் நிலை

 

நமக்குள் வெறுப்போ சலிப்போ இதற்கு முன் அறியாத நுகர்ந்த உணர்வுகளோ நோயாக உருவாக்கப்பட்டு உணர்வின் தன்மை வேதனைப்பட்டாலும் அதை மாற்றி அமைக்க யாம் உபதேசிக்கும் உணர்வின்படி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணும்பொழுது அதனுடைய வளர்ச்சியைக் குறைக்கலாம்… வளராது தடுக்கலாம்.

1.நமக்குள் ஊழ்வினை என்ற வித்துகள் அதிகமாக இருக்கும் பொழுது
2.அதன் இன விருத்தியின் உணர்வுகளை நமக்குள் வளராதபடி தடுக்க
3.அருள் ஒளியை நமக்குள் சேர்த்து இருளை உருவாக்கும் உணர்வினை மாற்றி
4.நமக்குள் தெளிந்த மனதை நாம் உருவாக்கினால் நோய்களிலிருந்து விடுபடச் செய்யும்.

மனக்கவலையோ மனசோர்வோ சஞ்சலமோ நமக்குள் தோன்றும் பொழுதெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பெற வேண்டும் என்று
1.அந்த அருள் உணர்வை எடுத்து உங்களுக்குள் தீமை வளராது இந்த உணர்வினைத் தடைப்படுத்துங்கள்.
2.நம் ஈர்ப்புக்குள் வராததை நாம் கவராததை சூரியன் கவர்ந்து மேலே அழைத்துச் சென்று விடுகின்றது.
3.தீமையான உணர்வுகளுக்கு உணவு கிடைக்காது தடைப்படுத்தி விடுகின்றது.
4.இவ்வாறு நமது வாழ்க்கையில் தொடர்ந்து இந்தப் பணிகளைச் செய்தல் வேண்டும்.
5.இந்த உலகை விட்டுச் செல்லும் வரையிலும் அருள் ஒளி என்ற உணர்வினை நமக்குள் எடுத்து வளர்க்க வேண்டும்.

ஆனாலும்… இந்த உடலை விட்டு உயிர் எப்படியும் சென்றே தான் ஆகும். எதனின் உணர்வை முதிர்வாகத் தனக்குள் வளர்த்தோமோ அதற்குத்தக்க உணர்வு கொண்ட உடலை எடுக்கும்.

பேரருள் என்ற உணர்வின் தன்மை நாம் எடுக்கப்படும் பொழுது பேரொளியான உணர்வுகளை உருவாக்குகின்றது.

இருள் சூழ்ந்த ஒரு உடலுக்குள் நின்று அறிவென்ற நிலை இருந்தாலும் உடலில் இருந்து இயக்குகின்றது. அறிந்துணர்ந்து செயல்படும் தன்மை இது.
1.அங்கே அப்படி அல்ல…!
2.உணர்வினை ஒளியாக மாற்றும் நிலை பெற்றது
3.அந்த உணர்வினை நமக்குள் எடுத்தால் அறிந்த அறிவின் தன்மை இயக்குவது அல்ல.
4.உணர்வினை ஒளியாக மாற்றும்… அதை நுகர்வோருக்கு இருளை அகற்றி அறிவைத் தெளிவாக்கும் நிலை வரும்.

இதன் தொடர் வரிசையில் முழு முதல் கடவுள் என்று விநாயகர் தத்துவத்தில் கூறியது போல் மனிதனின் உயிர் மனிதனாக உருவாக்கிய பின் முழுமையினை உருவாக்கும் சக்தி பெற்றது.

பேரருள் என்ற உணர்வினை உருவாக்கினால்
1.அந்த ஒளியின் தன்மை கொண்டு நுகர்வோர் உணர்வுகளிலும் தீமைகளை அகற்றி “ஒளி” என்ற உணர்வினை உருவாக்கும் கடவுளாக நாம் ஆக முடியும்.
2.உள் நின்று தீமைகளை அகற்றி பகைமைகளை மாற்றி அருள் உணர்வைப் பெருக்கி ஒவ்வொரு மனிதனையும் நல்வழிப்படுத்தும் நிலை வரும்.

ஆகவே நம் முன்னோர்கள் சப்தரிஷி மண்டல எல்லையை அடைந்த நிலையில் துருவ தியானத்திலிருந்து தங்கள் குடும்பத்தில் அந்த அருள் சக்தியைப் பரவச் செய்தால்
1.உங்கள் குடும்பத்தில் உடலை விட்டுச் சென்ற மூதாதையர்கள் உணர்வுகள் இங்கே இருப்பினும்
2.அந்த அருள் ஒளி என்ற உணர்வுகள் இந்த இருளை அகற்றி
3.நல்வழி காட்டும் நிலையும் மெய்ப்பொருள் காணும் நிலையும் இல்லற வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தியும் பெற முடியும்.

அருள் வழி வாழுங்கள் மெய்ப்பொருளைக் காணுங்கள் பிறவி இல்லாத நிலை அடையுங்கள். விண் செல்லும் மார்க்கமாகத் துருவ தியானத்தைக் கடைப்பிடியுங்கள்.

இதன் தொடர் கொண்டு உங்கள் வாழ்க்கையே தியானம் ஆக்குங்கள். தீமை புகாது தடுக்க அருள் உணர்வுகளைப் பெறுங்கள்… அதைப் பெருக்குங்கள்.

இல்லற வாழ்க்கையில் வரும் துன்பங்களை அகற்றுங்கள். தன்னை அறியாது இயக்கும் தீமைகளை தனக்குள் புகாது தடுத்து நிறுத்துங்கள். பேரின்பப் வாழ்வு என்ற நிலையில் வாழுங்கள்.
1.இந்த வாழ்க்கையில் மகிழ்ச்சி பெறும் உணர்வினை வளர்த்துக் கொள்ளுங்கள்.
2.அருள் ஒளி என்ற உணர்வினைக் கூட்டுங்கள்… இருளை அகற்றுங்கள்.

“அன்னை தந்தையரின் அரவணைப்புடன் விண் சென்றவர்கள்” எண்ணிலடங்காதோர் சப்தரிஷி மண்டலத்தில் உண்டு

“அன்னை தந்தையரின் அரவணைப்புடன் விண் சென்றவர்கள்” எண்ணிலடங்காதோர் சப்தரிஷி மண்டலத்தில் உண்டு

 

அகஸ்தியன் சிறு குழந்தையாக இருக்கும் பொழுது பெற்ற ஆற்றல்களை எல்லாம்… அவனைச் சுற்றி இருந்த வட்டாரங்கள் அனைத்தும் இந்த அதிசயங்களைப் பார்க்கின்றது… பார்த்து ஆச்சரியப்படுகின்றார்கள்.
1.இவன் நுகர்ந்த உணர்வுகள் வெளிவரும் பொழுது “உற்றுப் பார்த்தபின்”
2.இந்த உணர்வின் தன்மை அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கும் இதைத் தெரிந்திடும் அறிவாக வருகின்றது.

இவனுக்குள் விளைந்த அலைகளைக் கூர்மையாக அதை உற்றுப் பார்க்கப்படும் பொழுது இவன் காணும் அதிசயங்களை மற்றவர்களுக்கும் அறியும் அந்த உணர்ச்சிகளைத் தூண்டும் நிலை வருகிறது. அவைகள் இன்றும் உண்டு.

அகஸ்தியன் வாழ்ந்த இடங்களுக்கெல்லாம் பெரும்பகுதி நான் சுற்றுப்பயணம் செய்யும் பொழுது… 10 வருட காலம் காடு ,மேடெல்லாம் அலைந்தது.
1.அகஸ்தியர் எந்தப் பகுதிகளுக்கு எல்லாம் சென்றாரோ அந்தப் பகுதிகளுக்கு எல்லாம் என்னை அலையச் சொன்னார் குருநாதர்.
2.குருநாதர் பதித்த உணர்வினை ஆங்காங்கு சென்று அதைப் பதிவாக்கிய பின் எது உண்மை எது பொய் என்பதை அறியும் பருவத்தைக் கொடுத்தார்..
3.இன்றும் எல்லோரும் அதை நுகர முடியும்.
4.இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்பவர்கள் நிச்சயம் அதை நுகர முடியும்.
5.நுகர்வதற்குத் தான் இந்த உபதேசமே கொடுக்கின்றேன்.

வானை நோக்கி அகத்தியன் உற்றுப் பார்க்கப்படும் பொழுது அவனுக்குள் சிறுகச் சிறுக அந்த ஆற்றல்கள் வளர்கின்றது.

மிருக இனங்களோ விஷ ஜந்துகளோ பூச்சிகளோ எல்லாமே இவனைக் கண்டு விலகி ஓடுகின்றது. கொசுக்களும் எரி பூச்சிகளும் ஓடுகின்றது… இவன் மேல் பட்டால் மடிந்து விடுகின்றது. குரு அருளால் இதையெல்லாம் என்னால் காண முடிந்தது… அறிந்து கொள்ள முடிந்தது.

நான் சொல்வதை எல்லாம் நீங்கள் கேட்டால் ஓம் நமச்சிவாய…!
1.திருப்பி இந்த உணர்வின் தன்மையை அதிகமாக நீங்கள் வளர்த்துக் கொண்டால் இந்த உண்மையின் உணர்வுகளை நீங்களும் அறியலாம்.
2.பிறருடைய தீமைகளைப் போக்கவும் உங்களால் முடியும்.

சாமி மட்டும் கெட்டிக்காரர் அல்ல. குரு கொடுத்தார்… அதை வளர்த்துக் கொண்டேன். குரு காட்டிய வழியில் உங்களுக்குள்ளும் இதை வளர்க்கச் சொல்கின்றோம்.

வளர்த்துக் கொண்டால் நீங்களும் அதைச் செயல்படுத்த முடியும் பிறருடைய தீமைகள் விடுபட வேண்டும் என்று நீங்கள் உங்களுக்குள் அந்தச் சக்திகளை வளர்த்தால் உங்களுக்குள் தீமையை நீக்கும் சக்தி வளர்கின்றது.

அகஸ்தியரும் அவர் மனைவியும் அவர்கள் இரு உணர்வும் ஒன்றாக இணைந்து… எந்தத் துருவத்தைக் கூர்மையாக உற்றுப் பார்த்து நுகந்தார்களோ… அந்த உணர்வின் வலிமை கொண்டு உடலை விட்டுச் சென்ற பின் அதே எல்லையை அடைகின்றார்கள்.. பூமிக்கு வரும் உணர்வினை ஒளிக்கதிராக மாற்றுகின்றார்கள். “இது ஓர் குடும்பம்…”

அகஸ்தியன் தாய் தந்தையர் அவன் உடலிலே இருந்தார்கள். அந்தச் சக்தி கொண்டு அதே ஒளியின் சரீரமாக இருக்கின்றார்.
1.இதைப் போன்று சென்றவர்கள் இவருடைய ஈர்ப்பு வட்டத்தில் சென்றவர்கள் இணைந்து
2.அன்னை தந்தையின் அரவணைப்பில் இருக்கும் இவனைப் போன்று சப்தரிஷி மண்டலங்களில் இருப்போர் பலரும் உண்டு.

அன்னை தந்தையை சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய வேண்டும்… உடல் பெறும் உணர்வுகள் கரைய வேண்டும் என்று சொன்னவர்கள்… அவர்கள் தனித்துச் சென்றாலும் அந்தக் கூட்டமைப்பில் அவருடைய ஈர்ப்பு வட்டத்தில் இன்றும் வளர்ந்து கொண்டும் உள்ளார்கள் அழியா ஒளிச்சரீரமாக.

சப்தரிஷி மண்டலங்களிலே பார்க்கலாம் எண்ணிலடங்காத நிலைகள்…!
1.நம் கண்ணுக்கு புலப்படாதது ஏராளம் உண்டு… டெலஸ்கோப்பை வைத்துப் பார்த்தாலும் ஒரு சில தான் தெரியும்.
2.அதைக் காட்டிலும் நுண்ணிய நிலைகள் அகஸ்தியன் வாழ்ந்த காலத்தில் சென்றவர்களும் அதன்பின் சென்றவர்களும் பலர் உண்டு.
3.அந்த எல்லையை அடைவதற்குத் தான் இதையெல்லாம் உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றோம்.

ஞானிகள்… நினைவு நாளைக் கொண்டாடச் சொன்னதன் நோக்கம்

ஞானிகள்… நினைவு நாளைக் கொண்டாடச் சொன்னதன் நோக்கம்

உடலை விட்டுப் பிரிந்து செல்லும் உயிரான்மாக்களை விண் செலுத்தி அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்து விட்டால்
1.அவர் உடலில் விளைந்த உணர்வுகள் எப்படி அங்கே கரைந்ததோ
2.உடலில் பெற்ற உணர்வு ஒளியின் உடலாகப் பெற்றதோ அவரை எண்ணி
3.அந்த உணர்வின் தன்மையை ஒளியின் உடலாக பெறச் செய்த இந்த உணர்வுகளை நினைவு கூர்ந்து
4.நாம் அந்த ஆன்மாக்களை விண் செலுத்தும் பொழுது அந்த உணர்வுகள் நமக்குள் பதிவாகின்றது.

துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வுகளை அவர் சார்புடைய நிலைகள் அங்கே இருந்தாலும் நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எளிதில் பெற்று அவர் சம்பந்தப்பட்ட உணர்வுகள்… ஏனென்றால்
1.கண் கூர்ந்து கவனிக்கும் பொழுது கருவிழியால் பதிவான உணர்வுகளை அதே நினைவு கொண்டு
2.அவர் நினைவு நாளில் இதைப் போன்று நாம் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று செயல்படுத்துவோம் என்றால்
3.அவர் குறை கூறிய உணர்வோ அல்லது குடும்பத்தின் மீது இருந்த வெறுப்புணர்வோ
4.அவர் நோயாக வேதனைப்பட்ட உணர்வோ நமக்குள் பதிவாகி இருந்தாலும் அந்தப் பதிவின் மீது இது வந்து மேலே பதிவாக்கும்.

ஒரு வித்து விளைந்த பின் மற்ற தாவர இனங்களின் வித்துக்களை இதனுடன் கலக்கச் செய்து அதிலே புது விதமான வித்துகளை உருவாக்குவார்கள்.

அதைப் போன்று உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்தபின் உடல் பெறும் உணர்வுகள் கரைந்தது போக “அவருடன் உணர்வுகள் ஒளியாக நிற்கும்…”

அந்த நிலையில்…
1.நினைவு நாளில் நாம் அதை எண்ணிக் கொண்டு வந்தோம் என்றால் உடலுக்குள் பதிந்த அவரின் உணர்வை மாற்றி விடலாம்.
2.அதே சமயத்தில் அவர் உடலில் இருந்து வந்த உணர்வுகள் காற்றலைகளில் இருப்பினும் அதை ஈர்க்கும் சக்தியை இங்கே தடுத்து விட்டால்
3.அவர் உடலில் இருந்த நோயோ அவரைப் பற்றிய பகைமை உணர்வுகளோ நம்மை இயக்காது.

அதற்குத் தான் இந்த நினைவு நாளைக் கொண்டாடச் சொல்வது.

அவரின் உணர்வுகள் நம் உடலில் பதிந்திருப்பதால்
1.அவர் உணர்வுக்கு நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உணவாகப் படைத்தால்
2.நமக்குள் தீமை என்ற உணர்வு இல்லாது மறைக்கப்படுகின்றது.
3.நினைவு நாளைக் கொண்டாடுவதற்கு அன்று ஞானிகள் இவ்வாறு வழி வகுத்தனர்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நமக்குள் பதிவானாலும் அதன் தனித்தன்மை கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணும் போது தான் வருகின்றது.

ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்றால்… இந்த வாழ்க்கையிலே வெறுப்பு வேதனை சலிப்பு கோபம் பகைமை என்ற உணர்வுடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

ஆனால் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுக்கப்படும் பொழுது சிறிது நேரமே செயல்படுத்துகின்றோம். ஒரு நாளைக்கு காலையில் எழுந்ததும் செயல்படுத்துகின்றோம்.

அதற்குப் பின்
1.ஏதாவது சிரமம் வந்தால் அந்தச் சிரமத்தை தான் எடுத்துக் கொள்கிறோம்.
2.ஆனால் அவரைப் பற்றிய நினைவு நமக்கு வருவதில்லை.
3.ஆனால் அந்த வேதனைப்படும் உணர்வுகள் தூண்டி அதை வளர்க்கின்றோம்.

இதைப் போன்ற நிலைகளில் இருந்து நாம் மாற்றி அமைக்க… உடலை விட்டுப் பிரிந்து சென்று அந்த ஆன்மாவிற்கு…
1.நம் உடலில் அந்த\த் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பதிவான (அவரைப் பற்றியது) நிலைகளுடன் சேர்த்து விட்டால்
2.அவர் உடலில் இருந்து வெளிப்பட்ட உணர்வுகள் காற்றில் இருப்பதை நாம் நுகராமல்… நமக்குள் அது வளர்ச்சி பெறாமல்… தடுத்து நிறுத்த முடியும்.

தியானத்தைக் கடைப்பிடிப்பவர்கள் சப்தரிஷி மண்டல எல்லையை அடையும் நெறி

தியானத்தைக் கடைப்பிடிப்பவர்கள் சப்தரிஷி மண்டல எல்லையை அடையும் நெறி

 

மனிதனின் வாழ்க்கையில் வேதனை வேதனை என்ற உணர்வுகள் அதிகமாகி விட்டால் நல்ல குணங்கள் அனைத்தும் செயலிழந்து விடுகின்றது
1.நல்ல குணங்கள் அடங்கிய பின் வேதனை அதிகமாகி
2.”இந்த உடலை விட்டு எப்படா செல்வோம்…” என்ற இந்த உணர்வுகள் வந்துவிடும்

ஆனால் யாம் சொல்லும் தியானத்தைக் கடைப்பிடித்த ஒரு அன்பரின் நினைவு என்ன…?

1.சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்ற உணர்வுகள் வலுவாக இருப்பதால்
2.அந்த துருவ தியான நேரத்தில் காலை நான்கு மணிக்கு அதனின் வலுக் கொண்டு
3.அந்த ஆன்மா பிரிந்து அதனுடைய ஈர்ப்பு வட்டத்திலே சென்றடைகின்றது.

ஆனால் வேதனை என்ற உணர்வு வரப்படும் பொழுது விஷத்தின் தன்மை கொண்டவர் அனைவருமே அமாவாசை நாளுக்கு அருகிலே தான் உடலை விட்டுப் பிரிவார்கள். அதாவது விஷ அலைகள் பரவும் நேரத்திலே தான் அந்த ஆன்மாக்கள் பிரியும்.

அப்படிச் சென்றால் வேதனையான உணர்வுகளை அதிகமாக எடுத்து விஷத்தின் தன்மை பெற்று அந்த உணர்வோடு வெளி வரப்படும் பொழுது பாம்பு எப்படி விஷத்தைப் பாய்ச்சி மற்ற உயிரினங்களை உணவாக எடுக்கின்றதோ இந்த விஷம் அவர்களுக்கு ஒத்துக்கொள்ளும்.
1.அதன் உணர்வு கொண்டு இந்த மனித உடலைச் சவமாக்கிவிட்டு விஷத்தின் அணுக்களாகப் பெருகி…
2.உயிர் பாம்பின் ஈர்ப்பிற்கு அழைத்துச் சென்று நம்மைப் பாம்பாக உருவாக்கிவிடும்,

ஆடு, மாடு மற்ற உயிரினங்கள் எல்லாம் ஓர் விஷத்தின் தன்மையைத் தனக்குள் உடலாக்கிக் கொள்கின்றது. அதனுடைய கழிவை (சாணத்தை) நல்லதாக வெளிப்படுத்துகின்றது.

இத்தகைய தன்மையிலே இந்த மனித உடலில் வேதனை என்று உணர்வு அதிகமாகி விட்டால் விஷத்தின் உணர்வைக் கவர்ந்து அந்த வலுவின் தன்மை கொண்ட மாடாகவோ ஆடாகவோ… அதிகமான விஷமானால் விஷத்தைப் பாய்ச்சிப் பாம்பாகும் நிலை வந்துவிடும்.

காரணம்… ஒருவர் வேதனைப்படுகின்றார் என்று… “அதைக் கண்டு சந்தோஷப்பட்டார்கள்” என்றால் நிச்சயம் பாம்பாகத்தான் அடுத்து பிறப்பார்கள்.

சந்தர்ப்பத்தால் வேதனைகளின் உணர்வை நுகர்ந்தால்…
1.அந்த வேதனையை மறக்க துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அதிகமாகச் நாம் சேர்த்துக் கொண்டு வந்தால் அந்த உணர்வு வலுவாகி
2.அந்த அடிப்படையில் உடலை விட்டுச் செல்லும் பொழுது சப்தரிஷி மண்டலத்தின் எல்லையைச் சென்றடைகின்றோம்
3.இந்தத் தியானத்தைக் கடைப்பிடிக்கும் அன்பர்கள் அனைவரும் செயல்படுத்த வேண்டிய நெறி முறை இது.

இந்த உடலில் நேரமாகி விட்டது

 

இந்த உடலில் நேரமாகி விட்டது

 

நமது உயிர் ஒவ்வொரு சரீரத்திலும் ஒன்றைப் பார்த்து, அதனிடமிருந்து மீள வேண்டும் என்ற உணர்வுகொண்டு அதற்கு இரையாகி அதனின் உணர்வைக் கவர்ந்து… கவர்ந்து கொண்ட உணர்வுக்கொப்ப சரீரம் பெற்று, இப்படி பல கோடிச் சரீரங்களைப் பெற்றுப் பல கோடி சரீரங்களைப் பெற்றதன் பின்
1.இன்று எல்லாவற்றையும் அறிந்துணர்ந்து செயல்படும் சக்தியாக
2.நம்மை மனிதனாக உருவாக்கியது… இதுதான் “கோடிக்கரை”.

நாம் எதை எண்ணுகின்றோமோ உயிர் அதை உருவாக்குகின்றது. உணர்வின் தன்மையை நமது உடலாக மாற்றுகின்றது என்பதனைத் தெளிவாக்குவதற்காக, அன்று ஞானிகள் இராமேஸ்வரம் என்று பெயரை வைத்து, ஸ்தல புராணங்களை வடித்து வைத்தார்கள்.

1.உலகில் எங்கிருந்து சுழன்று வந்தாலும் எத்தனை ஆலயங்களுக்குச் சென்று வந்தாலும் எத்தனை தெய்வங்களை வணங்கினாலும்
2.கடைசியாக மீண்டும் இராமேஸ்வரம் வரவேண்டும் என்று கூறுகின்றனர்.

ஒவ்வொரு எண்ணமும் ஒவ்வொரு குணமும் நுகரப்படும்போது, அந்த குணங்களுக்கெல்லாம் அந்தந்த உடலைக் காக்கும் நிலை வருகின்றது. காத்திடும் உணர்வுகள் அந்தந்த உடலில் வரப்படும்போது, அந்த குணங்கள் அனைத்தும் தெய்வமாகின்றது.

நுகர்ந்த உணர்வின் எண்ணங்களை உயிர் உடலாக உருவாக்குகின்றது. அதாவது, எதை நுகர்கின்றோமோ அதை “ஓம் நமச் சிவாய” என்று நமக்குள் ஜீவ அணுவாக மாற்றி, உடலாக மாற்றி விடுகின்றது நமது உயிர் என்பதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒருவரை நாம் ஏசும் பொழுது “ஏசுகின்றார்” என்ற உணர்வை எடுத்து, அந்த உணர்வுகள் அவரிடத்தில் உடலாகி விட்டால் அவருடைய உடலுக்குள் சேரும் அனைத்தும் “சிவதனுசு”.

நம் உடலுக்குள் அதே ஏசிய உணர்வின் தன்மை பதியும்போது, அதனின் எண்ணங்கள் கொண்டு நமது செயலாக்கங்கள் இருக்கும் என்பதைத்தான் நமக்குக் காவியங்கள் தெளிவுபடுத்துகின்றன.

நமது உடலில் சேர்த்த உணர்வு கொண்டு “ஒருவன் என்னைக் கோபித்தான்” என்று தன் நண்பன் ஒருவரிடம் சொல்லி,
1.“என்னை இது மாதிரியெல்லாம் பேசுகிறான் அவனை விடுவேனா பார்” என்று அங்கு சொல்லப்படும்போது,
2.நமது உடலில் விளைந்த இந்த உணர்வுகள் தனுசாக மாறி கோபமான சொல்லின் உணர்வுகள் அதனின் உணர்ச்சிகளைத் தூண்டுகிறது.
3.அதற்குத்தான் “தனுசு” என்று பெயர் சூட்டுகின்றனர்.

ஓருவர் நமக்கு தீங்கு செய்தார் எனும்போது, அதனின் உணர்வின் தன்மை “ஓம் நமச்சிவாய” என்று
1.நமது உடலாகும் பொழுது சிவம் ஆகின்றது.
2.அதனின் உணர்ச்சிகள் சொல்லாக வெளிப்படும் போது சிவதனுசு ஆக மாறுகின்றது.

ஆனால் ஒருவர் நம்மைத் திட்டியதை நமது நண்பரிடம் சொல்லுகின்றோம். நண்பரிடத்தில் சொல்லப்படும் பொழுது, இந்த உடலில் திட்டிய உணர்வுகள் வந்ததனால்“அவனை நான் விடுவேனா பார் அவனைத் தொலைத்துக் கட்டுகிறேன் பார்” என்று நாம் சொல்லுகிறோம்.

ஆனால் நம்முடைய நண்பர் அவருக்கும் (திட்டியவர்) நண்பராக இருக்கும் பட்சத்தில் நம்மைப் பற்றி அவர் (திட்டியவர்), நமது நண்பரிடத்தில் கூறியதை நண்பர் நம்மிடம் வந்து “அவர் உன்னை இந்த மாதிரிப் பேசுகிறார்…” என்று சொல்லும்போது என்ன ஆகின்றது…?

நாம் “ஆ…. அப்படி ஆகிவிட்டதா…! அவனை அடிக்கிறேன் அவனைக் கொல்கிறேன்” என்று இத்தகைய உணர்வுகளைச் சுவாசிக்கும்போது, சுவாசித்த உணர்வுகள் என்ணங்களாக மாறுகின்றது,

1.அதனின் உணர்ச்சிகளை உடலாக மாற்றுகின்றது
2.சொற்கள் தனுசாக மாறி, எவரைச் சொல்கின்றோமோ
3.அவரிடத்தில், இதனின் உணர்ச்சிகளைத் தூண்டுகிறது.
4.அதனால்தான், நமது உடலிலே விளைந்த உணர்வுகளை “சிவதனுசு” என்று காவியங்கள் தெளிவாக கூறுகின்றன.

ஆகவே நாம் உயிரால் நுகரப்படும் உணர்வுகள் உடல் பற்றுடன் இருக்கப்படும்போது, பற்றின் உணர்வுகள் இந்த உடலைக் காப்பதற்குத்தான் இந்த தனுசு உதவும்.

உடல் பற்றின் தன்மை கொண்டுதான் பல கோடிச் சரீரங்களைப் பெற்று, இன்று “கோடிக்கரையாக” மனித உடலைப் பெற்றோம் என்பதனை இராமாயணம் தெளிவாகக் கூறுகின்றது.

இராமாயணத்தில் “இராமேஸ்வரம்”, எண்ணத்தின் உணர்வின் தனமையை உயிர் இயக்குகின்றது, என்பதை உணர்த்தும் நிலையாக இராமர் தனுசுகோடிக்கு வந்தபின் பூஜைக்கு நேரமாகிவிட்டது என்று அங்கு இருக்கும் மணலைக் குவித்து சிவலிங்கமாகச் செய்து பூஜை செய்தார்.

ஏனென்றால்
1.“நேரமாகிவிட்டது” என்றால் பூஜை செய்ய நேரமாகி விட்டது என்று மற்றவர்கள் சொல்கின்றனர்.
2.ஆனால் “இந்த உடலில் காலதாமதமாகி விட்டது” என்பதுதான் அதனுடைய பொருள்.
3.நமது உணர்வுகளை ஒருங்கிணைத்துச் சேர்க்க வேண்டும் என்பதை உணர்த்துவதற்கு, இராமர் மணலைக் குவித்து (மனதைக் குவித்து)
4.சிவபூஜை செய்தார்… சிவலிங்கத்தை பூஜித்தார்… சிவலிங்கமாக மாற்றினார் என்று காண்பித்தார்கள்.
5.எண்ணங்களைக் குவித்து உருவானதுதான் இராமேஸ்வரம்.

அனைத்துத் தீமைகளையும் விஷத்தையும் வென்றது, துருவ நட்சத்திரம். துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வுகளை, காலையில் சூரியன் காந்தப் புலனறிவுகள் கவர்ந்து பிரபஞ்சத்தில் பரவச் செய்கின்றது. அதை நமது பூமி, துருவப் பகுதி வழியாகக் கவர்கின்றது.

இப்படி நம் பூமியில் படரும் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை, மனிதர்களான நாம், நமது எண்ணம் கொண்டு நம்முள் பெற முடியும். ஆகவே
1.இதிலிருந்து நாம் இராமேஸ்வரம்… நமது எண்ணத்தால்… துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வை நமக்குள் உருவாக்குதல் வேண்டும்.
2.“தனுசுகோடி”, நம் என்ணங்கள் அனைத்தையும் துருவ நட்சத்திரத்தின் பால் நிறுத்தி துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வை நாம் நுகரும்போது,
3.அதனின் உணர்வுகள் நமது உயிருடன் ஒன்றி கடைசி நிலையாகப் பிறவியில்லா நிலை அடைகின்றோம்.

நாம் சேர்த்துக் கொண்ட உணர்வின் தன்மை ஒளியாக மாறுகின்றது என்ற நிலையை அறிந்து தியானித்து, இதனின் உணர்வின் எண்ணங்களை நமக்குள் வளர்க்க வேண்டும்.

இதனை நமது எண்ணங்கள் கொண்டு, எப்படி வளர்க்க வேண்டும்…? என்பதைத்தான் இராமாயணம் தெளிவாகக் கூறுகின்றது.

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும், தன்னைக் காத்திடும் உணர்வுகளை நுகர்ந்தறிந்து நுகர்ந்தறிந்த உணர்வுகளுக்கொப்ப பரிணாம வளர்ச்சி அடைகின்றது.

ஆகவே, எல்லாவற்றையும் தெரிந்து கொண்ட உணர்வுகள் மனிதராகப் பிறக்கின்றது.
1.தீமையிலிருந்து விடுபடவேண்டும் என்ற உணர்வை நுகர்ந்து
2.தீமையிலிருந்து விடுபடும் மனிதரின் உடலை நமது உயிர் உருவாக்கியுள்ளது.
3.ஆகவே மனிதர்களான நாம் தான் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்ற நிலைகளை எண்ண முடியும்.

ஆனால் தனுசுகோடி என்பது உயிர் பல கோடித் தீமைகளை வென்று தீமைகளையும் விஷங்களையும் வெல்லக்கூடிய சக்தி பெற்று உணர்வை ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றது.

நாம் அனைவரும் உயிரோடு ஒன்றி அழியா ஒளிச் சரீரம் பெறுவோம் எமது அருளாசிகள்.

கூட்டுத் தியானத்தை யாம் அமைத்ததன் முக்கியமான நோக்கம்

கூட்டுத் தியானத்தை யாம் அமைத்ததன் முக்கியமான நோக்கம்

 

ஒவ்வொரு நொடியிலும் நமது வாழ்க்கையில் நாம் நல்லோரைச் சந்தித்தாலும் சரி… அவருடன் உறவாடினாலும் சரி… ஆனால் அவர் உடலிலே அதற்கு முன் அவர் அறியாது வந்த நோய்கள் பல உண்டு.

ஒவ்வொரு மனிதனுக்கும் எதிர்நிலைப் பட்ட அந்த உணர்வின் தன்மைகள் உண்டு. உதாரணமாக இவர்கள் தவறு செய்யவில்லை என்றாலும்
1.ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு நட்சத்திரத்தின் நிலைகள் பெற்றது.
2.மற்றொரு உணர்வின் தன்மை எதிர் நிலையாகி அது துடிப்பின் இயக்கமாக உயிராக உண்டாகி
3.அதனின் துடிப்பின் இயக்கத்திற்குள் அது எடுத்துக் கொண்ட உணர்வினை ஜீவணுக்களாக மாற்றும் நிலைகள் பெற்றது “ஒவ்வொரு உயிரும்…”

கார்த்திகை நட்சத்திரம் என்பது அறிந்திடும் அறிவாற்றல் மிக்க நிலைகளையும்… ஒளி கண்டு உணர்ந்திடும் உணர்வின் அலைகளாக அது பெருகினும்… மற்ற மற்ற 27 நட்சத்திரங்களும் ஒவ்வொருவிதமான நிலைகள் கொண்ட்து.

வைரங்களில் எத்தனை விதமான கலர்கள் இருக்கின்றதோ அவை அனைத்துமே ஒவ்வொரு நட்சத்திரத்தின் வலுவின் தன்மை பெற்றது.
1.27 விதமான வைரக் கற்கள் உண்டு.
2.இதைப் போல தான் உணர்வின் இயக்கங்களும் இருக்கும்.

இந்த நிலையில் ஒவ்வொரு உயிரின் இயக்கமும் இருப்பினும் பிறிதொரு உடலில் விளைய வைத்த கார்த்திகை நட்சத்திரம் கொண்டவர்கள் அவர் உடலில் எடுத்துக் கொண்ட எண்ணத்தின் நிலைகள் கொண்டு அவருக்கு ஒத்ததாக விளைந்த எண்ணங்கள் வெளிப்படுத்தினும் அவர்கள் நல்லவராகத் தோன்றினும் அதே சமயத்தில் அது எதிர்மறையான நட்சத்திரம் கொண்ட நான் அவருடன் நட்புடன் இருப்பினும் நாம் பேசிடும் உணர்வு கொண்டு அவர் உணவாக உட்கொண்ட மற்ற அந்த நட்சத்திரத்துடன் ஒத்துக் கொண்ட மற்ற உணர்வின் நிலைகள் கொண்டு எதிர்நிலையாக இயக்கும்.

ஏனென்றால் ஒவ்வொரு நட்சத்திரத்தின் இயக்கத்தால் தான் ஒவ்வொரு உணர்வின் எதிர் நிலையின் மறைகள் உருவாகி அதனின் நிலைகள் கொண்டு தாவர இனங்களும் விளைகின்றது.

அந்தத் தாவர இனச் சத்தை உணவாக உட்கொள்ளும் பொழுது அதனின் மணங்கள் கார்த்திகை நட்சத்திரத்திற்கு ஒத்து வரும். அங்கே மகிழ்ச்சியின் தன்மை வரும். வலுக்கொண்ட நிலைகளும் வரும். ஆனால் அதே சமயம்
1.மற்றவர்களுடைய நிலை வரும் பொழுது எண்ணத்தால் எதிர் நிலைகள் வரும்.
2.அவர் எடுத்துக் கொண்ட கார்த்திகை நட்சத்திரத்தின் நிலைகள் அவர் சொல்லால் எனக்குள் வரப்படும் பொழுது
3.என்னை அறியாமலே எனக்குள் தீமையை விளைவிக்கும் நிலையாக வரும்.

இதைப் போல உணர்வுகள் மாறுபட்ட நிலைகள் விண்ணிலே நட்சத்திரங்கள் ஒன்றுக்கொன்று ஒத்துக்கொள்ளாது அதனின் உணர்வின் தன்மை அலைகளாகப் பிரிந்து… “எப்படித் தாவர இனங்கள் இருக்கின்றதோ இதைப் போல தான் நட்சத்திரங்களின் இயக்கமும்…”

1.அதனின் உணர்வுகள் எதிர்மறையாகி ஒன்றுடன் ஒன்று எதிர் நிலையாகும் பொழுது தான் விண்ணுலகில் ஆற்றல் இயக்கச் சக்தியாக மாறுகின்றது.
2.அதைப் போல ஒன்றுடன் ஒன்று ஒன்றும் நிலைகள் வரப்படும் பொழுது எதிர்மறையான உணர்வுகள் வரும் பொழுது தான் அதனுடைய இயக்கமும் வருகின்றது.

இன்று எலக்ட்ரானிக் என்று வரப்படும் பொழுது அது இயக்க வேண்டுமென்றால் அதற்கு எதிர்மறையான நிலைகள் இருந்தால் தான் இயக்கும். அதைப் போல
1.ஒரு உணர்வின் சக்தி உடலுக்குள் ஒத்துக் கொண்ட உணர்வாக இருப்பினும்
2.எதிர்மறையான நிலைகள் இருக்கும் பொழுது தான் அது உந்தி இயக்கும் நிலைகள்.

கரண்ட் ஆக நாம் உபயோகப்படுத்தினாலும் அதனின் நிலைகள் கொண்டு நெகட்டிவ் பாசிட்டிவ் என்று எதிர்மறையான நிலைகள் வரும் பொழுது தான் மின் அணுவின் நிலைகளும்… அதனின் அழுத்தத்தைக் கொண்டு மற்ற மோட்டார்களை இயக்கச் செய்யும் நிலைகள்.

ஆனால் அந்த மின் அழுத்தத்தின் நிலைகள் கொண்டு அதனின் இயக்கத்திற்குத் தக்கவாறு மற்ற பொருள்களை இணைக்கப்படும் பொழுது அதனுடைய ஒலிப்பேழைகளை மாற்றி அமைப்பதும் அதற்குத் தக்க நிலைகளை அது உருவாக்கவும் செய்கின்றது.

இதைப் போன்ற நிலைகள் தொடர… மனிதனின் உணர்வுக்குள் நாம் நண்பர்களாகப் பழகியிருந்தாலும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் எதிர்மறைகள் உண்டு.

ஒரு குடும்பத்தில் ஒருவருக்கொருவர் கலந்து உறவாடும் பொழுது இரண்டு குழந்தைகள் ஒத்து வரலாம்… ஒரு குழந்தை ஒத்து வராத நிலை வரும். எதிர்மறையான நிலைகள் வரப்படும் பொழுது எதிர்ப்பு உணர்வுகள் வருகின்றது.

இதைப் போன்று தான் வசிஷ்டாத்வைதம்
1.27 நட்சத்திரங்களுடைய சக்திகளையும் நவக்கோள்களின் சக்திகளையும் உள்ளடக்கி
2.உணர்வின் சக்தி ஒளியாக மாற்றி விண்ணுலகம் சென்றவர்கள் சப்தரிஷிகள்… சப்தரிஷி மண்டலங்களாக உள்ளார்கள்.
3.அந்த மண்டனல்களிலிருந்து வரும் உணர்வின் சக்தியை நாம் கவரும் திறனாகத்தான் உங்களுக்குக் கூட்டுத் தியானத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

நாம் பலருடன் பழகினாலும்… எண்ணத்தால் கவர்ந்து நட்பின் நிலைகள் கொண்டு கேட்டுணர்ந்தாலும்… கேட்டுணர்ந்த உணர்வுகள் நமக்குள் எதிர்மறையை உண்டாக்கி நோயாக உருவாகும்.

சந்தேகம் இருந்தால் பார்க்கலாம்… நண்பர்கள் பலருடன் சந்தித்துப் பேசும் பொழுது இன்னொரு நண்பருடன் நாம் பேசி வரும் பொழுது தன்னை அறியாமலே ஒரு கலக்கமும்… ஒரு வியாபார ரீதியாகச் சென்றாலும் அவருடன் உறவாடி விட்டுச் சென்றால் இனம் புரியாது கலக்கங்கள் ஏற்படுவதைக் காணலாம்.

இது எல்லாம் நம்மை அறியாது நடக்கும் செயல்கள். நமது உயிர் கார்த்திகை நட்சத்திரமாக இருப்பினும் மற்றவருடைய உணர்வின் தன்மை எதிர்நிலையாக மாற்றங்கள் அமைக்கப்பட்டு நம்மை இயக்குகின்றது.

இதைப் போன்ற நிலைகள் தான் “வசிஷ்டாத்வைதம்” என்ற தத்துவம்.
1.எதையுமே தனக்குள் கவரச் செய்து – அருந்த்தி…!
1.இணைந்தே வாழும் நிலைகளும்
2.இணைத்து அறிந்திடும் நிலைகளும்
3.இணைந்தே தெரிந்திடும் நிலைகளும்
4.இந்த உடலிலே இணைத்திடும் நிலைகள் கொண்டு என்று நாம் என்று கொள்ளுகின்றோமோ
5.இதனை இணைந்திடும் நிலைகள் ஆக்கிய அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகளைப் பருக வேண்டும்.
6.அப்படிப் பருகும் நிலையை உருவாக்குவதற்குத் தான் இந்தக் கூட்டுத் தியானம்.