கஷ்டம் நீங்க வேண்டும்… என்ற எண்ணத்துடன் தியானிப்பது கஷ்டமானதா…?

bhakti-and-meditation

கஷ்டம் நீங்க வேண்டும்… என்ற எண்ணத்துடன் தியானிப்பது கஷ்டமானதா…?  

எந்தக் கோயிலுக்குச் சென்றாலும்
1.அங்கே நிம்மதியாக இருந்து எங்கள் கஷ்டம் எல்லாம் நீங்க வேண்டும் என்று கேட்டிருக்கின்றீர்களா…?
2.தெய்வத்திடம் உங்கள் கஷ்டத்தைத் தான் சொல்லிக் கொண்டு இருக்கின்றீர்கள்.

அந்தக் கோயிலிலே கேட்ட அதே பழக்கத்தில் என்னிடம் (ஞானகுரு) கேட்கும் பொழுதும் குடும்பத்தில் கஷ்டம்… வியாபாரத்தில் நஷ்டம்… பிள்ளைகள் சொன்னபடி கேட்கவில்லை…! வீட்டில் ஒரே கலவரமாக இருக்கிறது என்று தான் சொல்வீர்கள்.

அது எல்லாம் நீங்க வேண்டும் என்று யாராவது கேட்கிறார்களா என்றால் இல்லை….!
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும்.
2,மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும்.
3.எங்கள் பிள்ளைகள் நன்றாகப் படிக்க வேண்டும்… தாய் தந்தையரை மதித்து அவர்கள் நடக்க வேண்டும்
4.எங்கள் தொழில் நன்றாக இருக்க வேண்டும்.
5.விவசாய நிலத்தில் விளைச்சல் நன்றாக இருக்க வேண்டும் என்று
6.இந்த ஆசை கொண்டு நீங்கள் கேட்டால் அதற்குரிய நல்ல சக்திகளை நீங்கள் பெற முடியும்.

அதைத்தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று சொல்லப்பட்டுள்ளது. நாம் எதை எண்ணுகின்றமோ அதைத்தான் காற்றில் இருந்து நம் கண்கள் கவர்கின்றது.

கண் கவர்ந்ததை இழுத்து ஆன்மாவாக்கிச் சுவாசிக்கும் பொழுது உயிரில் பட்டவுடன் எண்ணம் சொல் செயல் என்று நம் உடலை இயக்குகின்றது. ஆக நம் கண்கள் ஒரு ஆண்டெனா போல் செயல்படுகின்றது.

நல்லது நடக்க வேண்டும் என்ற அந்த எண்ணத்தில் இருந்தால் அது நமக்குள் பதிவாகின்றது நாம் எண்ணும் போது காற்றில் இருந்து அந்த நல்லதைச் சுவாசிக்கச் செய்கின்றது. நமக்குள் வரும் கெட்டதை இப்படி மாற்றப் பழக வேண்டும்.

ஒரு சிலர் கோவிலுக்குச் சென்று ஒரு காரியத்தைத் தொடங்கும் முன் அதைச் செய்யலாமா… அல்லது வேண்டாமா…! என்று ஜோசியம் கேட்பது போல் சாமியிடம் பூ வைத்துக் கேட்பார்கள்.

சங்கடமான எண்ணத்துடன் பூவைக் கண்ணில் பார்ப்பார்கள். அதற்கும் இதற்கும் அந்தத் தொடர்பு வந்தவுடனே எதிர்மறையாகி வித்தியாசமான பூ விழும்.

சிவப்புப் பூவை நினைத்து அது வந்து விட்டால் கல்யாணம் கட்டிக் கொள்ளலாம் என்று சொல்வார்கள்.
1.ஆக இவர்கள் எண்ணத்தில் எப்படி எப்படி இந்த மனம் வருகிறதோ
2.இந்தக் கல்யாணத்தை நடத்தியே ஆகவேண்டும் என்று பார்ப்பார்கள்
3.அந்த எண்ணத்தின் வலுவுக்கொப்ப அந்தச் சிவப்புப் பூ விழும். கல்யாணமும் நடந்து விடும்.

அதே சமயத்தில் கணவன் மனைவிக்குள் இரண்டு பக்கமும் வித்தியாசமாக இருக்கும். பெண்கள் அவர்களுக்குப் பெண்ணைக் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு இருப்பார்கள். ஆண்களோ வேண்டாம் என்ற நிலையில் எண்ணுவார்கள்.

தாயே நீ இந்த மாதிரிச் சோதனையாக இருக்கிறது. நீதான் வழி காட்ட வேண்டும். என்ன செய்வது…! என்று இரண்டு பேரும் கூடிப் பேசிய பிறகு அங்கே போய்ப் பார்ப்பார்கள்.

பெண்கள் சக்தி அதிகமாகி விட்டது என்றால் அவர்கள் எண்ணத்திற்குத்தக்க பூ வரும்.
1.பார்த்தீர்களா…! சாமி வந்தாச்சு…! சரியான பதில் கிடைத்துவிட்டது என்று
2.இவர்களுடைய எண்ணங்களுக்கொப்ப அதாவது கண்ணிலிருந்து வரக்கூடிய மேக்னட் பவர் அந்த வேலையைச் செய்யும்.

நம்முடைய வாழ்க்கையில் இப்படித்தான் ஜோசியம் கேட்டு நம்முடைய நல்ல குணங்களை நாமே செயலற்றதாக மாற்றிக் கொள்கின்றோம்.
1.நல்ல குணங்களை வளர்ப்பதற்காகக் கோயில் வைத்தால்
2.நல்ல குணங்களைக் குறைத்து
3.கெட்ட குணங்களை வளர்ப்பதற்குத் தான் நாம் கோயிலைப் பயன்படுத்துகின்றோம்.

ஏனென்றால் இன்றைக்கு இருக்கக்கூடிய காற்று மண்டலம் விஷத் தன்மையாகப் போய்விட்டது. அந்த உணர்வுகள் எல்லாம் நம்மிடம் பதிவாகி இருக்கிறது.

விஞ்ஞான உலகில் அடிக்கடி கோபப்படுகின்றவர்களை நாம் பார்க்கின்றோம். அவர்கள் உடலில் நல்ல குணங்களை இழந்ததால் தான் அவர்கள் அப்படிக் கோபப்படுகின்றார்கள்.

அதே உணர்வை நாம் நுகரும் பொழுது நம் உடலில் அது வந்து நம் நல்ல குணங்களை எல்லாம் சாப்பிட ஆரம்பித்து விடுகின்றது. இரத்தக் கொதிப்பு நிச்சயம் வரும்.

அப்போது இந்த மாதிரித் தீமைகளைப் பார்த்தவுடனே துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று கண்ணில் ஏங்கி நம் உடலில் உள்ள என் ஜீவான்மாக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் சேர்க்க வேண்டும்.
1.அப்போது அது வீரியம் அடைந்தவுடனே
2.அந்தக் கோபமான உணர்வு நம் உடலுக்குள் புகாதபடி தள்ளி விட்டு விடுகிறது.
3.இப்படித் தள்ளக் கற்று கொள்ள வேண்டும்.

துணியில் அழுக்கு நிறைய இருக்கிறது என்றால் சோப்பைப் போட்டு நுரையைப் போட்டு எப்படி வெளியேற்றுகிறோமோ இதை மாதிரிச் செய்து பழக வேண்டும்.

இதெல்லாம் நாம் சாதாரணமாகத் தெரியாத ஜனங்களுக்கு தனக்குள் நடக்கக்கூடிய நிகழ்ச்சி நாம் எண்ணியதனால் நமக்குள் என்ன விளைவு வருகிறது. இதிலிருந்து நாம் எப்படித் தப்பிக்க வேண்டும் என்று தான் கொடுத்திருக்கிறார்கள்.

தீமைகளை நீக்கி நஞ்சினை வென்று உணர்வை ஒளியாக மாற்றிய அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை உங்களைப் பெறச் செய்வதற்குத் தான் இந்த உபதேசத்தின் வாயிலாக ஒவ்வொரு குணங்களிலேயும் உணர்வுகளிலேயும் இணைக்கும்படி செய்கிறோம்.

கல்லூரிகளில் புரொபஸர்களோ அல்லது தொழிற்சாலைகளில் உள்ள இஞ்சினியர்களோ அவர்கள் எதை எதைச் சொல்லிக் கொடுக்கின்றார்களோ அதைப் பதிவாக்கி மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்த் அதனதன் பணிகளைச் செய்கின்றார்கள் அல்லவா…!

அதே மாதிரித்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தீமையை நீக்கும் மெய் ஞானத்தை எனக்குப் பழக்கிக் கொடுத்தார். அதை உங்களுக்குள்ளும் பழக்குகிறோம்.

இதைப் பதிவாக்கிய பின் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தால் மெய் ஞானிகளின் அருள் உணர்வுகளைச் சுவாசிக்கச் செய்து
1.அவ்வப்பொழுது உங்களுக்குச் சீரான சிந்தனை கொடுக்கும்
2.தீமையை நீக்கக் கூடிய ஞானம் உங்கள் எண்ணத்தில் வரும்.
3.உங்களை நீங்கள் காத்துக் கொள்ளவும் முடியும்.

ஒருவர் நம்மைக் கேவலமாகப் பேசினால் நம் நல்ல எண்ணங்கள் என்ன ஆகும்…?

star-light-spiral

ஒருவர் நம்மைக் கேவலமாகப் பேசினால் நம் நல்ல எண்ணங்கள் என்ன ஆகும்…?

பரிணாம வளர்ச்சியில் பல கோடிச் சரீரங்களில் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும்
1.கெட்டதை நீக்கி நீக்கி
2.நல்லது செய்யும் உணர்வின் ஆற்றலை எடுத்து எடுத்துத்தான் இன்று மனிதனாக வளர்ந்து வந்துள்ளோம்.

மனிதனான பின் இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளையும் துன்பங்களையும் எண்ணி வேதனையோ கோபமோ ஆத்திரமோ பட்டால் மீண்டும் கீழான உடல்களுக்குத் தேய்பிறையாகத்தான் செல்ல முடியும்.

உதாரணமாக நான் (ஞானகுரு) இருக்கின்றேன் என்றால் “பெரிய சாமியார் மாதிரி ஊரை ஏமாற்றுகின்றான்… அது அப்படி… இது இப்படி…!” என்று ஒருவர் அவர் உணர்விற்கொப்ப என்னைப் பற்றிச் சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.

அவர் உடலிலே விளைய வைத்த அந்த உணர்வை நான் கூர்ந்து கவனிக்கும் போது என்ன நடக்கின்றது…?

“ஆஹா… என்னைப் பற்றி இப்படி ஒரு செய்தி சொல்லி விட்டானா…? என்று அவன் மேல் எனக்கு ஆத்திரமும் வெறுப்பும் வேதனையும் தோன்றி அவனை எப்படியும் உதைக்க வேண்டும்…! என்ற எண்ணம் வந்து விடுகின்றது.

1.அவன் பேசிய அந்த உணர்வின் தன்மையை நான் நுகரும் போது
2.இந்த உணர்வின் சக்தி என் உடலுக்குள் சென்று
3.அது ஒவ்வொரு உணர்வுகளுடனும் மோதும் போது எனக்குள் எதிர் நிலையாகி
4.என் உடலுக்குள்ளே போர் செய்து அந்த உணர்வின் இயக்கமாக என்னை இயக்கி விடுகின்றது.
5.எனக்குள் இருக்கும் சக்தி வாய்ந்த நல்ல எண்ணங்களைச் செயலபடுத்தவிடாது தடைப்படுத்துகின்றது.

“என்னை அவமரியாதையாகப் பேசுகின்றான் என்ற அந்த உணர்வின் சக்தியை…” நான் மீண்டும் மீண்டும் எடுத்துக் கொள்ளும் போது என் உடலுக்குள் சென்று நல்ல குணத்துடன் இரண்டறக் கலக்கச் செய்து விடுகின்றது.

அதே போல் எம்முடைய உபதேசத்தைக் கேட்டு அதைப் படித்துணரும் நீங்கள் மற்றவர்கள் இதைப் படித்து விட்டு “என்னமோ இந்தச் சாமியார் சொல்கிறார்…!” என்று கேலியாகச் சொல்லப்போகும் போது உங்களுக்குச் சங்கடம் வருகின்றது.

அதை எம்மிடம் நீங்கள் சொல்லும் போது நான் கஷ்டப்பட்டுப் உபதேசிக்கின்றேன்… ஆனால் என்னை இப்படியா பேசுகிறார்கள்…? என்ற எண்ணத்தை எடுக்கும் போது அந்தத் துயரமான எண்ணங்களைத்தான் நான் எடுக்க முடியும்.

குருநாதர் எமக்குக் கொடுத்த சக்தியின் தன்மையை நான் செயலாக்காதபடி
1.சாதாரண மனிதருடைய உணர்வின் எண்ணங்களை எனக்குள் சேர்க்கப்படும் போது
2.நல்ல உணர்வுகளை வளர்க்கும் நிலைகள் செயலிழந்து
3.உடலிலே நோயாகி நல்ல உணர்வையே இயக்க முடியாதபடி ஆகிவிடுகின்றது.

கடைசியில் உடலை விட்டுச் செல்லும் பொழுது என்னை எப்படி எல்லாம் பேசினான்… பேசினான்…! என்று அந்த எண்ணத்திலேயே அதிகமாக இருந்தால் அவனுடைய உடலுக்குள் தான் நான் போக முடியும்.

ஆகையினாலே இதைப் போன்ற தீமையான இயக்கங்களின் விளைவுகளிலிருந்து நாம் மீள வேண்டும் என்றால்… மற்றவர்கள் நம்மைக் குறையாகப் பேசினாலும் அந்த மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா என்று நம் உயிரிடம் தான் வேண்ட வேண்டும்.

ஈஸ்வரா…! என்று புருவ மத்தியிலிருக்கும் உயிரிடம் நம் கண்ணின் நினைவைச் செலுத்தி உயிருடன் ஒன்றிய நிலையில் விண்ணை நோக்கி ஏகி குரு காட்டிய வழியில் மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானிக்க வேண்டும்.

பின் அந்த மகரிஷியின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலிலுள்ள எல்லா உறுப்புகளும் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்ற நினைவை
1.புறத்தால் நோக்கி ஏங்கி…
2.ஆனால் அகத்திற்குள் (உடலுக்குள்) அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைச் செலுத்தி
3.சிறிது நேரம் தியானிப்போம் என்றால்
4.பிறிதொருவர் நம்மை வெறுப்பாகக் கேவலமாகப் பேசிய அந்த உணர்வலைகள்
5.நாம் அறிவதற்கு அது பயன்பட்டாலும் அது நம் உடலுடன் இயங்கா வண்ணம் தடுக்க முடியும்.
6.எங்களைப் பார்க்கும் அனைவரும் எங்களை நினைக்கும் அனைவரும்
7.நாங்கள் பார்க்கும் அனைவரும் நாங்கள் நினைக்கும் அனைவரும்
8.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று அவர்கள் சொல்லும் செயலும் புனிதம் பெறவேண்டும் என்று தியானித்தால்
9.வெறுப்பை ஊட்டிய பிறரின் உணர்வலைகள் நமக்குள் வளராது அதைத் தடைபடுத்தி
10.உயர்ந்த நிலைகளாக நமக்குள் ஆக்கிக் கொடுக்கும்.

எண்ணும் எண்ணமே இறைவன்…! இறையின் செயலே தெய்வம்…!

மனம் என்பது கண்ணாடி போன்றது… பக்குவமாகக் கையாளவில்லை என்றால் நொறுங்கிவிடும்…!

Image

mirror mind

மனம் என்பது கண்ணாடி போன்றது… பக்குவமாகக் கையாளவில்லை என்றால் நொறுங்கிவிடும்…!

நம் குடும்பத்திற்குள் சில குறைகள் வந்திடலாம். குறை வந்தால் அந்த பக்குவமாகச் செயல்படும் நிலைகள் குறையும். உதாரணமாக கண்ணாடியில் எழுத வேண்டும் என்று நினைத்து அதை ஓங்கி அடித்தால் என்ன ஆகும்…? கண்ணாடி சிதறிவிடும்.

அதே போல மனிதரின் மனங்களிலும் சிறு குறைபாடுகள் வந்தால் நாம் என்ன செய்ய வேண்டும்…?
1.பக்குவமான நிலைகளில் செயல்படுத்த வேண்டும்.
2.நாம் சொல்லக்கூடிய பணிவில் தான் அந்தப் பக்குவம் இருக்கிறது.

சாதாரணமாக வீட்டில் உள்ள தூசியை மருமகள் பெருக்கிக் கூட்டுகின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம். கூட்டும் போது தூசு விழுந்து விட்டதென்றால் ஏம்மா…! இந்தப் பக்கம் சிறிது தூசி இருக்கிறதே. இதையும் கொஞ்சம் சுத்தம் செய்துவிடலாமே…! என்று சொன்னால் இது பக்குவ நிலை.

ஆனால் அதை விட்டு விட்டுத் தூசியைக் கூட்டிக் கொண்டிருக்கும் போதே
1.பார்… வீட்டைக் கூட்டுவதைப் பார்…!
2.தூசியை விட்டு விட்டுக் கூட்டுகிறாய் பார்…! என்று சொன்னால்
3.அந்தச் சொல் என்ன செய்யும்…?

நான் நன்றாகத் தான் கூட்டுகிறேன்… என்னால் இப்படித்தான் கூட்ட முடியும்…! என்ற நிலையில் அங்கே பக்குவம் தவறுகிறது. இதெல்லாம் குடும்ப வாழ்க்கையில் நம்மை அறியாமல் வரக்கூடிய செயல்.

அதோ அந்த ஓரத்தில் கொஞ்சம் தூசு இருக்கிறதம்மா அதைக் கூட்டிவிடம்மா…! என்று மாமியார் சொன்னால் அந்த நேரத்தில் பக்குவபடச் செய்கிறது.

இதே மாதிரி அண்ணன் குழந்தையோ தம்பி குழந்தையோ மற்றவர்களின் குழந்தையோ குறும்புத்தனம் செய்து கொண்டிருப்பார்கள். ஏண்டா… இப்படிக் குறும்புத்தனமே பண்ணிக் கொண்டு இருக்கிறாய்…? என்று சொன்னால் என்ன ஆகிறது…?

குழந்தையைத் திட்டியவுடன்
1.என் பிள்ளையைத் திட்டுகிறார் பார்…! என்ற உணர்வு வருகிறது.
2.குழந்தையைத் திட்டியது அவர்களைத் திட்டியது போன்ற உணர்வு வருகிறது.

ஆனால் அதே சமயம் அதைப் பக்குவமாக எப்படிச் சொல்ல வேண்டும்…? கண்ணு… கொஞ்சம் பார்த்து நடப்பா.. நீ இந்த மாதிரிச் செய்யப்பா…! என்று பக்குவமாகச் சொன்னால் அந்தக் குழந்தைக்கு ஒரு முறைக்கு இரண்டு மூன்று முறை சொன்னால் சரியாகி விடும்.

“ஏண்டா…?” என்று ஒரு தடவை அதட்டிச் சொல்லிவிட்டு அடுத்து அந்த மாதிரிச் செய்யாதே…! என்று சொன்னால் அவன் கேட்க மாட்டான். பக்குவம் தவறினால் அந்தக் குழந்தையின் உள்ளங்களில் இதுதான் பதிவாகும். நாம் சொல்லும் நல்ல சொல் அங்கே இயக்காது. அது தான் அந்த பரிபக்குவம்.

நான் நல்லது செய்கிறேன்… ஆனால் இப்படிச் செய்கிறார்கள்.. எனக்கு இப்படிக் கஷ்டமாக இருக்கிறது…! என்று பல முறை புத்திமதி சொன்ன பிற்பாடும் அவன் கேட்கவே மாட்டேன் என்கிறான் என்று இப்படிச் சொல்லக் கூடாது.

ஐந்து முறை சொன்னாலும் ஆறு முறை சொன்னாலும் குழந்தை உள்ளங்களில் ஒரு முறை இல்லையென்றால் ஒரு முறை நிச்சயம பதிவாகும்.

நாம் ஒன்றைப் பார்க்கிறோம்… படிக்கிறோம்…! படித்தவுடன் அடுத்த முறை நினைவு வருகிறதா…? திரும்ப அதே போல அந்தப் புத்தகத்தை எடுத்துப் படித்தால் தான் மீண்டும் நமக்கு நினைவு வரும்.

நினைவு வரவில்லையென்றால் நான் அன்றைக்குப் படித்தேனே எனக்கு ஞாபகம் வரவில்லையே…! என்று சொன்னால் எப்படி இருக்கும்…?

இதே போல நாம் புதிதாக ஒரு வீட்டிற்குச் செல்லும் சமயம் சில குழந்தைகள் நாம் சொல்வதைக் கேட்க மாட்டார்கள். நான் அன்பாகத் தானே கூப்பிடுகிறேன். வரமாட்டேன் என்கிறான் என்று சொன்னால் எப்படிச் சரியாகும்…!

நான் (ஞானகுரு) இருக்கிறேன். எல்லோரும் என்னிடம் தாரளமாக வருவார்கள். என் பேரப்பிள்ளை (எல்லோரிடமும் போகிறவன்) நான் கூப்பிட்டால் வருவதில்லை.

அரவணைத்துச் சொன்னால் தான் அவன் நம்மிடம் வருவான். ஒரு முறைக்கு இரு முறை சொன்னவுடன் அப்புறம் ஆசீர்வாதம் வாங்கிக் கொள்வான். ஆகவே நாம் எங்கே சென்றாலும் அந்தப் பக்குவ நிலைகளைக் கடைபிடிக்க வேண்டும்.

அந்தக் குழந்தைகளையோ மற்ற பிள்ளைகளையோ பார்த்தவுடன் கண்ணு…! இதை இந்த மாதிரிச் செய்யலாம். ஆனால் அப்படிச் செய்தால் அது தப்பு..! இதை இந்த மாதிரி நீ செய்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்று இந்த வார்த்தைகளைச் சொல்லும்போது அங்கே ஏற்றுக் கொள்ளும் நிலை வரும், ஏனென்றால்
1.நாம் சுவாசித்தது உயிரிலே பட்டவுடன் அதை நாதங்களாக ஆக்குகின்றது. அது தான் அரங்கநாதன்.
2.அப்பொழுது அந்த உணர்ச்சிகள் அதற்குரிய சொல்லாக நம்மை இயக்கும்
3.அதே சொல்லைக் குழந்தைகள் கேட்கும் போது அவன் உடலுக்குள்ளும் இந்த உணர்வின் உணர்ச்சியைத் தூண்டி நல்லதாகும்.

ஆனால் ஏண்டா சும்மா சேட்டை செய்கிறாய்…? என்று சொன்னால் என்ன ஆகும்…!
1.முதலில் நமக்குள் அந்த வெறுப்பின் தன்மை வருகிறது.
2.நம் சொல்லைக் கேட்ட பின் அவனுக்குள்ளும் அந்த வெறுப்பின் தன்மை வருகிறது.
3.அதாவது அந்த உணர்ச்சி நம்மை இது ஆள்கிறது.. அதே சமயம் அதைக் கேட்கும் அவனையும் அது ஆள்கிறது.
4.அதைத்தான் ஆண்டாள் என்று சொல்வது.

ஆகவே இந்த வாழ்க்கையில் நாம் எப்படி பக்குவப்படவேண்டும் என்ற நிலைகளைத்தான் சாஸ்திரங்கள் நமக்குத் தெளிவாகக் கூறுகின்றது.

அந்த ஞானிகள் காட்டிய வழியிலே நாம் சென்றால் இந்த வாழ்க்கையில் என்றுமே மகிழ்ந்து வாழ்ந்திட முடியும்.

கஷ்டத்தையும் வேதனையையும் நீக்க எப்படித் தியானிக்க வேண்டும்…?

Computer

கஷ்டத்தையும் வேதனையையும் நீக்க எப்படித் தியானிக்க வேண்டும்…? 

விஞ்ஞான அறிவு கொண்டு இப்போது கம்ப்யூட்டரில் (RECORD) பதிவு செய்து வைத்துக் கொள்கின்றார்கள். தட்டி விட்டவுடனே அதனுடைய இயல்பைத் தெரிந்து கொள்கின்றார்கள்.

அதே போல் தான் மனிதர்கள் நாம் ஒருவருக்கொருவர் சண்டை போடுவதைப் பதிவாக்கிக் கொள்கின்றோம். சண்டை போடுவதை எண்ணியவுடனே நமக்கும் கோபம் வந்து விடுகின்றது. நம் நல்ல காரியத்தைக் கெடுத்துக் கொள்கின்றோம்.

கோவிலுக்குப் போய் நாம் தெய்வத்தை வணங்குகின்றோம். வணங்கி வரும் பொழுது நாம் எண்ணியபடி நடக்கவில்லை என்றால்
1.“நடக்கவில்லையே… நடக்கவில்லையே…!” என்று எண்ணி
2.என்னத்தைச் சாமியைக் கும்பிட்டு என்ன பண்ணுவது…? என்று இதைப் பதிவு செய்து விடுகின்றோம்.

(இந்த ரிக்கார்டைத் தட்டியவுடன்) அதாவது சோர்வாக எண்ணியவுடன் நல்லதை எடுக்க முடியாமல் போய்விடுகின்றது. ஏனென்றால் நாம் எண்ணிய உணர்வுகள் எல்லாமே
1.நம் எலும்புக்குள் எண்ணிலடங்காத நிலைகளில்
2.ரிக்கார்டு பண்ணி வைத்துக் கொள்கின்றது.
(விஞ்ஞானி இதையெல்லாம் எலெக்ட்ரானிக் சாதனங்களின் மூலம் அந்தப் பதிவின் இயக்கங்களை (ELECTRONIC CONTROL) நிரூபித்துக் காட்டுகின்றான்.)

உதாரணமாக தன் குழந்தையை எண்ணி
1.எப்பொழுது பார்த்தாலும் குறும்புத்தனம் தான் பண்ணுகின்றான்
2.யாரிடம் சொன்னாலும் கேட்க மாட்டான்… அவன் அப்படித்தான் செய்வான்…! என்று பதிவு வைத்துக் கொள்வார்கள்.

அதே போல் மனைவி மேல் கணவனுக்கு வெறுப்பு வந்து விட்டால் அதைப் பதிவு செய்து கொள்வார்கள். கொஞ்சம் தண்ணீர் கொண்டு வாம்மா… என்று மனைவியைக் கூப்பிடுவார்கள். ஆனால் அவர்களோ வேலையில் கவனமாக இருப்பார்கள். கணவன் சொன்னது சரியாகக் காது கேட்டிருக்காது.

பாருங்கள்… எப்போது பார்த்தாலும் நான் கூப்பிட்டால் சரியாகக் கவனிப்பதே இல்லை…! என்று அடுத்துக் கோபமாகப் பேசுவார்கள். அதே மாதிரி இப்போது கணவரின் கோபத்தைப் பார்த்தவுடனே மனைவி என்ன செய்வார்கள்.
1.ஏதாவது ஒன்று என்றால் கொஞ்சம் கூடப் பொறுத்துச் சொல்லாதபடி
2.எப்பொழுது பார்த்தாலும் “என்னைக் குற்றவாளியாக்குகின்றாரே…!” என்பார்கள்
3.ஆக இத்தகைய வெறுப்பான உணர்வுகள் தான் குடும்பத்தில் வளர்கின்றது.

நீங்கள் சங்கடமாக இருக்கும் போது உங்களுடைய செயல்கள் எப்படி இருக்கிறது என்று மட்டும் பாருங்கள். உதாரணமாக ஒரு துணியை வாங்க ஜவுளிக் கடைக்குப் போகின்றீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த நேரத்தில் உங்கள் குழந்தை ஏதாவது ஒன்றைக் கேட்டு அடம் பிடிக்கிறது. அப்பொழுது என்ன சொல்வீர்கள்…?

ஏன்டா வெளியிலே போகும் போது இப்படிப் பண்ணுகின்றாய் என்ற சங்கடம் வரும். அடுத்து வெறுப்பு உணர்வு வரும். அப்புறம் கோபம் வரும். இத்தனையும் எடுத்துக் கொண்டு நீங்கள் கடைக்குள் போகின்றீர்கள். அந்த நேரத்தில் வெறுப்பு உணர்வு தான் உங்கள் கண்ணிலே வரும்.

நல்ல துணிகளாக எடுத்துக் காண்பிப்பார்கள். எதைப் பார்த்தாலும் இது வேண்டாம்… அது வேண்டாம்… என்று சொல்லிக் கடைசியில் வெறுப்பின் உணர்வு கொண்டு சடைத்துப் போய் “சரி இதையாவது கொடுங்கள்…!” என்று ஒன்றை எடுத்துக் கொண்டு வருவீர்கள்.

வீட்டுக்கு வந்தவுடன் துணியை எதிர்பார்த்துச் சந்தோஷமாக இருப்பவர்கள் இந்தத் துணியைப் பார்த்ததும்… “என்னங்க…! போயும் போயும் இந்தப் புடவையைத் தான் எடுத்து வந்தீர்களா…!” என்பார்கள்.

இல்லை…இல்லை… இந்தத் துணிக்கு என்ன குறைச்சல்…? என்பீர்கள். அவர்கள் உங்களிடம் நன்றாகப் பாருங்கள்…! என்பார்கள். ஏனென்றால் அன்றைக்குத் தெரியாது.

மறுநாள் காலையில் பார்த்தீர்கள் என்றால் நல்ல துணி இல்லை என்று தெரிய வரும். “சனியன்…! நான் போகும் போது குறுக்கே வந்துவிட்டது. அடம் பிடித்து நமக்கு இத்தனை தொல்லை கொடுத்து விட்டான் சனியன் பிடித்த பயல்…!” என்று மீண்டும் அந்தச் “சனியன்” என்று தான் சொல்வோம்.

யாரை…? இந்த உணர்வுகள் தன் குழந்தையைப் பார்க்கும் பொழுது அந்த வெறுப்பு வருகின்றது. அவனை எண்ணிக் கொண்டு நீங்கள் சமைக்கச் சென்றாலும் சரி… காயை அறுக்கும் பொழுது நேராக அறுப்பதற்குப் பதில் சாய்த்துப் பிடிக்க வைக்கும். கையில் பட்டுவிடும்.

ஆ,..! என்று சொல்லி வெறுப்பாகி இன்னும் கடுமையான வார்த்தைகளைச் சொல்லிப் பையனைத் திட்டுவீர்கள். வேதனை இன்னும் அதிகமாகும். இதையெல்லாம் நீங்கள் பார்க்கலாம். இது எதைச் செய்கின்றது…? சந்தர்ப்பங்கள் தான் செய்கின்றது.

இப்படி மற்றவர்கள் சண்டை போடுவதையும் குடும்பத்தில் வரும் கஷ்டங்களையும் பதிவாக்கிக் கொள்கின்றீர்கள். அந்தப் பதிவின் நிலைகளை எண்ணும் பொழுது அதன் வழியிலே தான் உங்களை அது வழி நடத்துகின்றது.

ஆனால் இந்தக் கஷ்டத்திலிருந்து எப்படி மீள்வது…? என்று நாம் திகைப்போம்…! இருந்தாலும்… அதை நாம் மறந்து (அந்தப் பதிவை இயக்கவிடாது)
1.அந்த அருள் மகரிஷிகளின் உணர்வைப் பெற வேண்டும் என்று
2.இந்த உணர்வை எடுத்தால் நமக்குள் அருள் சக்திகள் பெருகுகின்றது
3.சிந்திக்கும் ஆற்றலையும் நமக்குக் கொடுக்கின்றது
4.சிரமங்களிலிருந்து நம்மை மீளச் செய்கின்றது – நமது எண்ணம் தான்…!

நாம் நுகர்ந்த உணர்வுகள் நம்மை எப்படி இயக்குகின்றது…? என்று இதைத்தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்றார்கள் ஞானிகள்.

நம் ஆறாவது அறிவு என்ன செய்கின்றது…? அது இச்சா சக்தி கிரியா சக்தி ஞான சக்தி. எதன் மேல் நாம் இச்சைப்படுகின்றோமோ அது கிரியையாகி அதன் ஞானமாகத்தான் வருகின்றது.

வாழ்க்கையில் நாம் எதை ஞானமாக உருவாக்க வேண்டும் என்ற நிலையில் ஞானிகள் ஆலயங்களிலே தெய்வீகப் பண்புகளைக் காட்டி அதைப் எல்லோரும் பெறும்படி செய்தார்கள். அந்த உணர்வினை நுகர்ந்தால் நாம் தெய்வமாகின்றோம்.
1.சிலையை உருவாக்கி அந்தச் சிலை வடிவில் ஞானத்தை ஊட்டி
2.நாம் தெய்வமாக எப்படி மாற வேண்டும்…?
3.நம் சொல்லும் செயலும் எப்படித் தெய்வீக நிலையாக மாற வேண்டும்…? என்று
4.நம்மைத் தெய்வமாக்குவதற்காகத் தான் அவ்வாறு காட்டினார்கள்.

இந்த உடலில் எத்தனை காலம் நாம் வாழுகின்றோம்…? வாழும் இந்தக் குறுகிய காலத்திற்குள் உங்கள் வாழ்க்கையில் அறியாது வரும் அத்தகைய தீமைகளை நீக்குவதற்காகத்தான் அருள் மகரிஷிகளின் உணர்வினை உங்களுக்குள் திரும்பத் திரும்பப் பதிவு செய்கின்றேன்.
1.நீங்கள் எந்த அளவுக்குக் கூர்மையாகப் பதிவு செய்து கொள்கின்றீர்களோ
2.அந்த அளவிற்குத் திரும்ப எண்ணும் போது உங்கள் எண்ணம் உங்களைக் காக்கும்.
3.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய வழியில் மகரிஷிகள் உணர்வைப் பெற்றேன்.
4.அதே உணர்வின் தன்மையை இப்பொழுது உங்களுக்குள் பதிவாக்குகின்றேன்.
5.இந்தப் பதிவின் நினைவை நீங்கள் எடுத்துக் கொண்டால் போதும்.
6.நாம் தெய்வ சக்திகளைப் பெறுகின்றோம். ஞானிகள் மகரிஷிகளுடன் ஒன்றுபடுகின்றோம்.

சாபமிடுவோரிடமிருந்து விடுபடுங்கள்

curse-rays

சாபமிடுவோரிடமிருந்து விடுபடுங்கள்

மற்றவர்கள் நாசமாகப் போக வேண்டும் என்பதற்காக சிலர் சாபமிட்டு மண்ணைத் தூவி விட்டு வந்து விடுவார்கள். “இன்னார் குடும்பம் நாசமாகப் போகட்டும்…!” என்று சொல்லி மாரியம்மன் கோவிலில் எல்லாம் மண்ணைத் தூவுவார்கள். மண்ணை எடுத்து ரோட்டில் வீசுவார்கள்.

1.மண்ணைத் தூவினால் நாசமாகப் போய்விடும் என்ற பயத்தின் உணர்வை இங்கே பதிவாக்கப்படும் போது
2.அவன் சொன்ன அலைகளை மீண்டும் அவர்கள் நினைக்க அதனின் இயக்கமாக
3.அவன் சாபம் இட்டது போலவே “எனக்கு இந்த மாதிரி ஆகிவிட்டதே…!” என்பார்கள்.

தெய்வத்திடம் போய் என்ன செய்கின்றோம்…? காணிக்கைச் செலுத்தி இதை மாற்றுவதற்குப் பல உபாயங்களைக் கடைப்பிடிக்கிறோம்.

ஒரு மனிதனின் உடலில் கெடுமதியான உணர்வுகளை உருவாக்கிப் பகைமை உணர்வு கொண்டு நாசமாக வேண்டும் என்று சொல்லப்படும்போது அதைப் பார்த்துவிட்டு நம்மிடம் மற்றவர் வந்து சொல்லும் பொழுது
1.என்ன…? உங்கள் பெயரைச் சொல்லி இந்த மாதிரி மண்ணைத் தூவுகிறார்கள் என்று சொன்னால்
2.அந்த உணர்வைச் “சிக்கெனப் பிடித்துக் கொள்ளுகின்றோம்…!” அதை மீண்டும் மீண்டும் நினைவு கொள்கின்றோம்.
3.அவர் இட்ட உணர்வை எடுத்து நமக்குள் அணுவாக வளர்க்கத் தொடங்குகின்றோம்.
4.அவர் இட்ட சாபத்தை நமக்குள் வளர்த்து நமக்கு நாமே தண்டனை கொடுக்கின்றோம்.
5.மனிதனின் வாழ்க்கையில் இது இயக்கிக் கொண்டுதான் உள்ளது.

தீமை செய்வோனைப் பார்த்தால் நமக்குச் சம்பந்தம் இல்லை தான். ஆனாலும் அவர் உடலிலே விளைந்த தீமையை விளைவிக்கும் உணர்வுகள் அங்கே வெளிப்படும் போது அதை என்ன…? என்று உற்றுப் பார்த்து அந்த உணர்வினை அறிந்தால் நம் உயிர் “ஓ…” என்று ஜீவ அணுவாக மாற்றிவிடுகிறது.

அவன் செயலை மீண்டும் மீண்டும் எண்ணினால் அவன் எந்தச் செயலைச் செய்தானோ அந்த உணர்வின் உணர்ச்சியைக் கூட்டி அதுவே குருவாக வருகின்றது.

சில காலம் போய்விட்டால் அவன் தவறு செய்கிறான் என்று எண்ணுகின்றோம். ஆனால் நாம் தவறு செய்பவனாகவே மாறி விடுகின்றோம். இதில் அவன் செய்த தீமையான செயலைப் பற்றி நாம் நியாயத்தையும் தர்மத்தையும் பேசலாம். பேசினாலும்…
1.பிறருடைய குறைகளைத்தான் நாம் வளர்த்துக் கொள்கிறோமே தவிர
2.குறைகளை நீக்கும் அருள் சக்தியை நமக்குள் பெருக்கும் தன்மையை இழந்தே வாழுகின்றோம்.
3.இது போன்ற நிலைகளிலிருந்து நாம் மீளுதல் வேண்டும்.

அத்தகையை தீமைகளிலிருந்து மீண்டிடும் நிலையாக நம் குருநாதர் காட்டிய அருள் வழியை நாம் பின்பற்றுதல் வேண்டும். அவன் துணை கொண்டு அகஸ்தியன் பெற்ற அருள் ஞானத்தை நாம் நுகரப் பழகிக் கொள்ள வேண்டும்.

நமக்கு முன்னாடி அந்த அகஸ்தியனின் உணர்வுகள் உண்டு. அதைப் பெறவேண்டும் என்று எண்ணினால் அது நமக்குள் வருகின்றது.

அப்பொழுது அகஸ்தியர் பெற்ற நஞ்சிடும் உணர்வுகள் நமக்குள் குருவாக வந்து நம் வாழ்க்கையில் வரும் நஞ்சான உணர்வுகளை மாற்றிடும் அருள் சக்திகளைப் பெறுகின்றோம்.

1.அது தான் குரு காட்டிய வழியில் நாம் நடக்க வேண்டிய முறைகள்
2.குரு காட்டிய அந்த நெறியைக் கடைப்பிடித்து
3.குருவின் துணையால் அகஸ்திய மாமகரிஷிகளின் உணர்வை நாம் ஒவ்வொரு நிமிடமும் பெ\ற்று
4.நம்மை அறியாது இயக்கும் சாப வினை பாவ வினைகளிலிருந்து விடுபட வேண்டும்.

நம்மைக் கேலியாகக் கிண்டலாகப் பேசிக் கொண்டிருந்தால் தடுக்க என்ன செய்ய வேண்டும்…?

Protecting scolding and curse

நம்மைக் கேலியாகக் கிண்டலாகப் பேசிக் கொண்டிருந்தால் தடுக்க என்ன செய்ய வேண்டும்…? 

எமக்கு (ஞானகுரு) வேண்டியது என்ன…? உங்கள் சந்தோஷம் தான் எமக்குத் தேவை. அதை விட்டு விட்டு என்னைப் புகழ வேண்டும் என்று என்னை நினைத்துக் கொண்டு வந்தீர்கள் என்றால் எல்லாம் போய்விட்டது.

தொழில் செய்தேன். நல்லதாக இருந்தது. சந்தோஷமாக இருக்கின்றேன். அந்த மகிழ்ச்சியை மற்றவர்களுக்குச் சொன்னேன். அவர்களுக்கும் நல்லதாக ஆனது என்ற இந்தச் சந்தோஷத்தைத் தான் யாம் விரும்புகின்றோம்.

சாமி…! உங்களை அப்படிப் பேசிக் கொள்கிறார்கள்… இப்படிப் பேசிக் கொண்டு இருக்கின்றார்கள்… ஒரு நான்கு ஐந்து பேர் உங்களைக் குறையாகப் பேசுகிறார்கள். அதில் ஒருவன் அயோக்கியத்தனம் செய்து கொண்டே இருக்கின்றான்… நீங்களும் பாருங்களேன்…! என்பார்கள்.

அதாவது என்னைப் போற்ற வேண்டும் என்ற நிலையில் உள்ளவர்களுக்கு எம்மைப் பற்றி (ஞானகுரு) “சுருக்…!” என்று யாராவது குறையாகச் சொன்னால் போதும்.

உடனே இவர்கள் சண்டைக்குப் போய்விடுவார்கள். அவர்கள் சொல்வதற்கு ஏற்ற மாதிரி இவர்கள் திருப்பிப் பேசுவார்கள். அடுத்து பார்த்தால் அங்கிருந்து நான்கு பதில் இங்கே வரும்.

ஏனென்றால் அவன் தவறு செய்கின்றான் என்றால் அவனைத் திருத்துவதற்கு அதை அடக்கத் தெரியாது. என்னை இங்கே போற்றும் பொழுது மற்றவர் குறை சொன்னால் உடனே ஆத்திரம் தான் வரும். “என்னய்யா சொன்னாய்…? இரு நான் உன்னை நான் பார்த்துக் கொள்கிறேன்…!” என்பார்.

என்னத்தை நீ பேத்துக்கிறாய்…? உங்கள் சாமி என்ன பெரிய ஆளா…? அவரால் என்ன செய்ய முடியும்…? என்று அவர் சொல்வார்.

கடைசியில் சாமி…! உங்களை இப்படியெல்லாம் அவர் திட்டியதால் என் மனது தாங்க முடியவில்லை. அதனால் நான் அவரை “உதைத்தேன்” என்று சொல்லிக் கொண்டு வருவார்கள்.

யாம் விரும்புவது அதுவல்ல…! தெரிந்து கொள்ளுங்கள்.

ஏனென்றால் மற்றவர்கள் அறியாமல் அதைப் பேசுகிறார்கள். அந்த உணர்வு இங்கே வந்து அறியாமலே நம்மை அவர்கள் வழிக்கு இட்டுச் சென்று விடக்கூடாது. அவர்கள் வழிக்கு நாம் போகக்கூடாது. (இது முக்கியம்)

யார் எத்தகைய குறைகளைச் சொன்னாலும் யாம் உபதேச வாயிலாகச் சொன்னபடி ஓ…ம் ஈஸ்வரா… என்று உங்கள் உயிரைப் புருவ மத்தியில் எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று ஆத்ம சுத்தி செய்யுங்கள்.

மற்றவர்கள் சொல்லும் குறையான உணர்வு உங்களை ஆட்டிப் படைக்காத நிலைக்காக இதைச் செய்யுங்கள்.

ரொம்ப மோசமான ஆளாக இருந்தால் “அவன் செய்வது அவனுக்கே போகட்டும்…! நல்லது செய்யக்கூடிய எண்ணம் அவனுக்குள் வளர்ந்து நிச்சயம் நல்லதைப் பேசக் கூடிய நிலை உனககு வரும்…!” என்று சொல்லிவிடுங்கள்.

உங்களை யாராவது சதா திட்டிக்கொண்டே இருக்கின்றார்கள்… இடக்காகப் பேசுகிறார்கள்… உங்களால் தாங்க முடியவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். சுருக்கமாக ஒரு வேலையைச் செய்யுங்கள்.

அவர்கள் திட்டுவதை எல்லாம் கேட்டு கொண்டே இருங்கள். சிரித்துக் கொண்டே இருங்கள்.
1.எல்லாவற்றையும் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்.
2.எனக்கு ஒன்றும் வேண்டாம். மொத்தமாக நீயே வைத்துக் கொள்.
3.எதை எதையெல்லாம் சொன்னீர்களோ அதையெல்லாம் நீங்களே வைத்து அனுபவித்துக் கொள்ளுங்கள்.
4.அது தான் உங்களுக்கு ரொம்ப நல்லது. அதை நீங்களை வைத்துக் கொண்டு போங்கள்…! என்று சொல்லுங்கள்.

அத்தனையும் என்ன ஆகிப் போகும் தெரியுமா…? அவர்கள் உணர்வு அவர்களிடம் திருப்பினவுடனே எப்படி இருக்கும்…! உங்களுக்கு ஆத்திரம் வருமோ…? இந்த மருந்தை மட்டும் சுத்தமாக வைததுக் கொள்ளுங்கள்.

அதாவது நீங்கள் என்ன செய்கின்றீர்கள் என்றால் அவர்கள் சொல்லை அவர்கள் பக்கமே திருப்பியவுடனே அவர்களைப் பார்த்தவுடனே எக்கச்சக்கமாக வரும்.

ஆனால் அவர்கள் நம்மை இப்படிச் சொல்லி விட்டார்களே என்று இந்த எண்ணத்திற்கு வந்தால் நம்மை அது விட்டு வாங்கு வாங்கு என்று வாங்கிவிடும். இரு நான் பார்க்கிறேன் உன்னைச் சும்மா விடமாட்டேன் என்ற ஆத்திரம் தான் வரும்.

ஏனென்றால் நமக்கு எதுவுமே சொந்தமில்லை. நமக்குச் சொந்தமாக்க வேண்டியது என்ன…?
1.இது வரையிலும் எல்லாவற்றையும் தெரிந்து கொள்வதற்காகச் பல நிலைகளைச் சொந்தமாக்கி
2.அதாவது தெரியாமலேயே அவைகளைச் சொந்தமாக்கி நாம் மனிதனாக வந்து விட்டோம்.
3.ஆனால் எல்லாவற்றையுமே தெரிந்து கொள்ள வந்த பிற்பாடு
4.எல்லாவற்றையும் தெரியாமல் ஆக்கிக் கொண்டு போவதற்கு என்ற நிலைக்கு வந்து விட்டோம் என்றால் என்ன ஆவது…?

கோபம் ஆத்திரம் வேதனை வெறுப்பு பயம் இதுகளெல்லாம் அதிகமாக நமக்குள் வந்து விட்டால் அந்த விஷம் பூராத்தையும் நம்மைத் தெரியாமலே ஆக்கிவிடுகின்றது.

ஆகவே இதைப் போன்ற நிலைகள் உங்களுக்குள் வராதபடிக் கொஞ்சம் கொஞ்சமாக ஆத்ம சுத்தியைப் பயிற்சி செய்து கொள்ளுங்கள்.
1.நீங்களும் உயர்ந்த நிலைகள் பெறுவீர்கள்.
2.உங்கள் சொல் பார்வை மற்றவரையும் உயர்த்தச் செய்யும்.

அதற்குத்தான் இதைச் சொல்கிறோம்.

நாம் பார்ப்பதோ வேடிக்கை…! ஆனால் சாப அலைகள் நமக்குள் வந்து என்னென்ன வேலைகள் செய்கிறது… என்று தெரிந்து கொள்ளுங்கள்…!

curse-quarrel

நாம் பார்ப்பதோ வேடிக்கை…! ஆனால் சாப அலைகள் நமக்குள் வந்து என்னென்ன வேலைகள் செய்கிறது… என்று தெரிந்து கொள்ளுங்கள்…!

காலையில் எழுந்து நல்ல காரியங்களைச் செய்திருப்பினும் நாம் ரோட்டில் போகும் பொழுது சந்தர்ப்பம் ஒருவன் சாபமிடுவதைப் பார்க்க நேருகின்றது.

ஒருவன் இன்னொருவரை ஏசிப் பேசுகின்றான். உன் குடும்பம் நாசமாகப் போகும்… உன் வியாபாரம் எல்லாம் நஷ்டமாகும்…! என்று சாபமிடுகின்றான். அவன் பேசிய உணர்வலைகள் அனைத்தையும் சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது. அலைகளாக மாற்றிப் படரச் செய்கின்றது.

ஏசுவோனுடைய பேச்சைக் கேட்டதும் அடுத்தவனும் எதிர் பதிலைக் கொடுப்பான். ஒருவருக்கொருவர் ஏசிப் பேசும் பொழுது அதற்கு ஈடாக அடுத்தவர் பேசும் பொழுது அதனின் வலு அங்கே பெறுகின்றது.

ஆனால் சாதாரணமாக நாம் வேடிக்கை பார்த்தாலும்
1.அப்பொழுது அந்த இரண்டு பேர் ஏசுவதையும் சாபமிடுவதையும் நாம் நுகர்ந்து கொள்கின்றோம்
2.அது கடும் தீமைகளை விளைய வைக்கும் சாப அலைகளாக நமக்குள் படர்ந்து விடுகின்றது.
3.நம்மை அறியாமலே இந்தச் சாப அலைகள் நமக்குள் வந்த பின்
4.அவர்கள் சாபமிட்ட உணர்வலைகள் நம் ஆன்மாவில் (நம்மைத்) தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.
5.சாபமிட்ட உணர்வுகள் நம் உடலுக்குள் விளையத் தொடங்கும்.

விளைந்த பின் அவர்கள் எப்படிச் சாபமிட்டார்களோ அதைப் போன்று ஒரு சிறு குறையைக் கண்டாலும்… “தொலைந்து போகிறவனே…! ஏண்டா… இப்படிச் செய்து கொண்டிருக்கின்றாய்…?” என்று தான் சொல்ல வேண்டி வரும்.

சாபமிடும் உணர்வுகள் நமக்குள்ளும் வளரத் தொடங்கி நல்ல குணங்கள் நமக்குள் சீர் கெடும் நிலைகள் ஆகி அது தொலைந்து போகும் நிலைக்கே வருகின்றது. இதைப் போன்ற உணர்வுகள் நமக்குள் அழுக்காகச் சேர்கின்றது.

சாதாரண மனிதன் கேட்கும் பொழுதே இப்படி என்றால் கர்ப்பிணிப் பெண்கள் இத்தகைய சாபமிடும் உணர்வுகளைக் கேட்க நேர்ந்தால் அந்தக் கருவிலே இருக்கக்கூடிய குழந்தைக்குள் அந்த உணர்வின் தன்மை ஆழமாகப் பதிந்து விடுகின்றது.

விஞ்ஞான ரீதியாக ஒரு செடியின் வித்துக்குள் மற்ற தாவர இனச் சத்தை இணைத்து இரண்டறச் சேர்த்து வீரிய வித்தாக உருவாக்குகின்றார்கள். அது போல கருவுற்றிருக்கும் தாய் எதை உற்று நோக்குகின்றதோ அது கருவுக்குள் இணைந்து உருவாகத் தொடங்கி விடுகின்றது.

யாம் ஞானிகளைப் பற்றி உபதேசிக்கின்றோம். அந்த உயர்ந்த ஞானியின் சொல்லை ஒரு கர்ப்பிணி உற்றுக் கேட்டால் அந்தத் தத்துவத்தின் உணர்வுகள் கருவிற்குள் விளையும் பருவம் பெறுகின்றது. பின் அந்தக் குழந்தை பிறந்த பின் தத்துவ ஞானியாகவே வளரத் தொடங்கி விடுகின்றான்.

ஆனால் அதே சமயத்தில் வாழ்க்கையின் சந்தர்ப்பத்தில் மற்றவர்கள் சாபமிடும் உணர்வுகளைத் கர்ப்பிணித் தாய் உற்றுப் பார்த்தால் தாய்க்கு ஊழ்வினையாகச் சேர்கின்றது. கருவிலிருக்கும் குழந்தைக்கோ பூர்வ புண்ணியமாக அமைந்து விடுகின்றது.

கண் தெரியாது குருடாக கை கால் முடமாகிவிடும் என்று ஒருவன் சாபமிடுகின்றான் என்றால் அவனுக்குள் விளைந்த இந்த உணர்வுகளைக் கர்ப்பமாக இருக்கும் தாய் உற்றுப் பார்த்து நுகர்ந்ததென்றால் அந்தக் கருவிலிருக்கக்கூடிய குழந்தைக்குப் பதிவாகி விடுகின்றது.

விஞ்ஞான அறிவு கொண்டு ஒரு ஒலி நாடாவில் பதிவு செய்கின்றார்கள். அதைக் கம்ப்யூட்டரில் இணைத்துக் கொண்ட பின் எலெக்ட்ரானிக் முறையில் மற்ற இயந்திரங்களை இயக்கத் தொடங்கி விடுகின்றார்கள்.

எதை ஆணையிடுகின்றானோ அந்த உணர்வின் தன்மைகள் அந்த ஒலிப் பேழைக்குள் (CHIP) கொண்டு அதனதன் தருணத்தில் அந்த இயந்திரங்களை ஓட்டுகின்றது.

இதைப் போன்று தான் மனிதன் தனக்குள் விளைய வைத்த உணர்வின் சத்து கருவிலே இருக்கக்கூடிய குழந்தைக்கு இந்தச் சொல்லின் உணர்வுகள் அங்கே பதிந்துவிடுகின்றது.

கடுமையாகச் சொல்லும் உணர்வுகளைக் கேட்கும் பொழுது நம்மைக் கோப நிலைகளுக்கு ஆளாக்கி நல்ல குணங்களுக்கு எதிர்மறையாக நாம் இயங்கத் தொடங்குகின்றோம்.

இதைப் போல சாபமிடும் பொழுது உன் கை கால்கள் முடமாகிவிடும் என்று சொன்னால் “நீயும் அதுவாகத்தான் ஆகின்றாய்…! என்று அதே உணர்வின் தன்மையை நாமும் திருப்பிப் பேசுகின்றோம்.

இப்படி எதிர்மறையாகப் பேசும் பொழுது சிறுகச் சிறுக விளைந்து இது கொடூர நிலைகளாக வாத நோய்களாகக விளையும்.

அதே சமயம் இப்படிப்பட்ட சாப உணர்வுகள் கருவிலே இருக்கக்கூடிய குழந்தைக்குப் பதிவானால்
1.குழந்தையாகக் கருவுற்றுக் கண்களும் உடலும் உருவாகும் பொழுது
2.நுகர்ந்த உணர்வுக்கொப்ப உறுப்புகளை மாற்றியமைத்து விடுகின்றது.
3.கண்கள் குருடாகவும் முடமான குழந்தையாகவும் அது விளைந்து விடுகின்றது.

ஆனால் குழந்தை தவறு செய்யவில்லை. தாயும் தவறு செய்யவில்லை. உலகில் இயக்கும் உணர்வுகளை உற்றுப் பார்க்கும் பொழுது அந்த உணர்வின் சத்து உடலுக்குள் பதிவாகி விடுகின்றது.

இதைப் போல கருவிலே இருக்கப்படும் பொழுது கடுமையான நோயுற்றவரை அந்தத் தாய் உற்றுப் பார்க்குமே என்றால் அது தாய்க்கு வினையாகச் சேர்கின்றது. ஆனால்
1.கருவிலே இருக்கும் குழந்தைக்கு இது பதிவாகி
2.எந்த வயதில் நோயுற்ற நிலைகளை இங்கே உற்றுப் பார்த்ததோ
3.அதே வயதின் பருவம் குழந்தைக்கு வரும்போது அதே நோய் வந்துவிடும்.
4.குழந்தை எந்தத் தவறும் செய்யவில்லை.

ஆக இவை எல்லாம் மனிதனாக வாழும் நாம் மனிதனான பின் வந்து சேர்ந்ததுமல்ல. ஆனால் கருவிலே விளையும் பொழுது சேர்ந்த உணர்வுகள் அதன் தொடர் வரிசையிலே பூர்வ புண்ணியத்தில் அமைந்தது தான் இந்த வாழ்க்கையில் அழைத்துச் செல்லும்.

பூர்வ புண்ணியமாக அமைந்ததை அது நாம் நுகரும் அனைத்துமே வினையாகச் சேர்த்து வினைக்கு நாயகனாக உருவாக்கி இந்த உணர்வின் செயலாக உருவாக்குகிறது என்பதனை மகரிஷிகளால் விநாயகர் தத்துவத்தில் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

நல்ல மனிதனாகவும் பண்பு கொண்ட மனிதனாகவும் நாம் இருப்பினும் இந்த நிலைகள் தொடர் வரிசையிலே தான் நம்மை இயக்குகிறது.

நாம் எத்தனையோ கோடிச் சரீரங்களில் தீமைகளிலிருந்து மீட்டிடும் உணர்வைச் சேர்த்துச் சேர்த்துத் தீமையை அகற்றிடும் சக்தியாக மனிதனாக வந்தாலும் நம் வாழ்க்கையின் சந்தர்ப்ப பேதத்தால் மற்ற தீமைகளைக் கேட்டுணர்ந்து பார்த்துணர்ந்த பின் இந்த உணர்வுகளே நமக்குள் அதிகமாக விளைந்து விடுகின்றது.

ஆக நாம் காலையிலிருந்து இரவு வரையிலும் தீமைகளைத்தான் பார்க்க முடிகின்றது. நாம் உற்றுப் பார்த்த உணர்வுகள் வினையாகச் சேர்கின்றது. நம் உடலிலே அழுக்குகள் சேர்ந்து கொண்டே வருகின்றது.

இதிலிருந்து எவ்வாறு மீள்வது…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்…!

வாபஸ் நீ வாங்கிக்கோ…! என் உடலிலிருந்து வேதனை மட்டும் போகாதே…! என்று இறுக்கிப் பிடித்துக் கொள்கிறார்கள்…!

Image

hold the truth

வாபஸ் நீ வாங்கிக்கோ…! என் உடலிலிருந்து வேதனை மட்டும் போகாதே…! என்று இறுக்கிப் பிடித்துக் கொள்கிறார்கள்…! – விளக்கம்

திடீரென்று யாராவது உங்களைக் கோபித்தால் உங்கள் உடலில் என்ன செய்கின்றது…? ஜிலு…ஜிலு…ஜிலு…! என்று கோபம் அப்படியே “சுர்ர்ர்….ர்ர்…!” என்று ஏறும். ஏறுகிறதா இல்லையா…?

சண்டை போடுபவர்களையும் திட்டுபவர்களையும் பார்த்தவுடனே “சுர்ர்…ர்ர்..” என்று ஏறி உடலெல்லாம் நடுக்கமாகின்றது பதட்டம் வருகின்றது…!

உங்கள் பையன் அந்தப் பக்கம் போய்க் கொண்டிருந்தான். அவனை இரண்டு பேர் சேர்ந்து உதைத்துவிட்டார்கள் என்று கேள்விப்பட்டவுடனே “ஆ…! அப்படியா…? என்று சொல்லி உடம்பெல்லாம் கிடு…கிடு… என்று ஆடுகிறதல்லவா…!

அதைப் போல நீங்கள் துன்பம் என்று எம்மிடம் (ஞானகுரு) சொல்லும் பொழுது
1.மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெறவேண்டும் என்று
2.என்னுடைய கூர்மையான எண்ணங்கள் கொண்டு உங்களை ஆசீர்வதித்து
3.அதை உங்களைச் சுவாசிக்க வைக்கின்றோம்.

உங்கள் உடலுக்குள் மகரிஷிகள் அருள் சக்தி போனவுடனே கெட்டதெல்லாம் மாறி அந்த நரம்புகளுக்குள் இருக்கும் சிக்கல் உடலில் இருக்கும் பிடித்தங்கள் எல்லாமே விட்டு விலகுகின்றது.

அப்படி விலகும் பொழுது சில பேர் “ஐய்யய்யோ…!” எனக்கு ஏதும் அருள் வந்து விட்டதோ…! பேய் பிடித்துவிட்டதோ…! என்று இப்படி நினைப்பவர்கள் சில பேர் இருக்கின்றார்கள்.

அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகள் உங்கள் உடலுக்குள் பாய்ந்த பின் உடலிலிருக்கும் விஷமான தன்மை அது அடங்கிப் போகும்.
1.அப்பொழுது அந்த உணர்வின் தன்மையாகும் பொழுது
2.”நடுங்குவது போல” உங்கள் உணர்வுக்குள் இருக்கக்கூடிய வலி குறைந்து அது இறங்கும்.
(தியானத்தைச் சீராகக் கடைப்பிடிப்பவர்கள் உடலுக்குள் அந்த நடுக்கத்தை உணரலாம்)

அது எப்படி இறங்குகிறது..? இறங்குகிறதா இல்லையா..? என்று யாம் அவர்களிடம் கேட்டோம் என்றால் தொட்டுப் பார்ப்பார்கள்… இறங்குகிறது…. வலி இல்லை…! என்று சொல்வதற்கு மிகவும் திகைப்பாக இருக்கும்.

1.உங்கள் துன்பங்கள் அனைத்தும் அகலும்…!
2.தீமைகள் நீங்கி எல்லாம் சரியாகப் போகும்
3.மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று இந்த மாதிரிச் செய்யுங்கள் என்று தான்
4.யாம் சொல்லி வாக்காகக் (சக்தியை) கொடுக்கின்றோம்

நீங்கள் சொல்கிறீர்கள்… என்னை விட்டு இந்தத் துன்பம் எங்கெங்கே போகின்றது…! நான் நன்றாகத் தூங்கி ஒரு மாதமாகிவிட்டது என்று சொல்கிறார்கள்.

உங்கள் வலியும் வேதனையும் போய்விடும் என்று உள்ளுக்குள் சொல்லி அந்தச் சக்தியை யாம் அவர்களுக்குள் பாய்ச்சிய பிற்பாடு
1.வாபஸ் நீ வாங்கிக்கோ…!
2.என் உடலில் இருந்து வேதனை மட்டும் போகாதே…! என்று சொல்லி அதை இறுக்கிப் பிடித்துக் கொள்கின்றார்கள்.
3.திருப்பி அதையே சொல்கிறார்கள்.

அவர்கள் தான் இப்படிச் சொல்கிறார்கள் என்றால் அவர்கள் கூட வந்தவர்கள் சும்மாவா இருக்கின்றார்கள்…? உங்கள் துன்பமெல்லாம் நீங்கிவிடும் என்று யாம் சொன்னால் கேட்கிறார்களா…?

அப்படி இல்லைங்க…! இது… மூன்று மாதமாக விடாத “பெரிய சனியன்…! பெரிய தொல்லையாக இருக்கிறது…!” என்கிறார்கள்.

அதனால் தான் உங்களுக்குப் பல முறை சொல்கிறேன். மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்துகின்றேன். உங்களை அறியாது வந்த துன்பங்கள் அனைத்தும் போக வேண்டும் என்று தான் மணிக்கணக்கில் உபதேசிக்கின்றேன்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் இட்ட கட்டளைப்படி இதைச் செய்து கொண்டிருக்கின்றேன். உபதேசித்த உணர்வுகளை நீங்கள் அப்படியே பதிவாக்கி ஏற்றுக் கொண்டால் இது குருவாக நின்று உங்களைக் காக்கும்…!

குரு வாக்கு என்பது சாதாரணமானதல்ல…!

அடிக்கடி உணர்ச்சி வசப்படுகின்றோம்… (TENSION) – அதை மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்…?

tension-stress-relief

அடிக்கடி உணர்ச்சி வசப்படுகின்றோம்… (“TENSION”) – அதை மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்…?

என் பிள்ளையை எப்படியெல்லாம் வளர்த்தேன்…. எல்லாம் நல்லது செய்தேன்….! “தொலைந்து போகின்றவன்… இப்படியெல்லாம் செய்கின்றானே…! என்று நாம் திட்டுகின்றோம்.

அப்போது இந்தப் பக்குவம் கெடப்படும் போது நாமும் பக்குவம் கெட்டுவிடுகின்றோம். அவனையும் பக்குவ நிலையிலிருந்து கெட வைத்து விடுகின்றோம்.

வியாபாரம் செய்கின்றோம். ஒருவர் ஒரு தடவை கேட்டவுடனேயே கடனைக் கொடுத்து விடுகின்றோம். ஆனால் சந்தர்ப்பம் கடன் கொடுத்தவரால் திரும்பக் கொடுக்க முடியாமல் போய்விடுகின்றது.

கடன் கொடுத்தவனால் பணத்தைக் கொடுக்க முடியவில்லை என்று சொன்னால் நமக்குள் என்ன ஆகின்றது…? “நான் கொடுத்தேன்… என்னை ஏமாற்றி விட்டான்…!” என்றால் இந்தப் பக்குவம் கெட்டுப் போய்விடுகின்றது.

கொடுத்தேன் ஏமாற்றி விட்டான்… கொடுத்தேன் ஏமாற்றி விட்டான்… கொடுத்தேன் ஏமாற்றி விட்டான்…! என்று இப்படியே சொல்லிக் கொண்டிருக்கும் போது நம் நல்ல குணங்கள் எல்லாம் மாறுகின்றது. பக்குவ நிலைகள் கெடுகின்றது.

1.நான் இதைச் செய்தேன்.., அதைச் செய்தேன்…! என்று சொல்கின்றோம்
2.அந்தப் பாட்டைப் பாடுகின்றோம்
3.ஆனால் (நல்ல) பக்குவத்தைக் கெடுத்து விடுகின்றோம்.
4பல நினைவுக்குச் சென்றுவிடுகின்றோம்

தோசையைச் சுட வேண்டும் என்றால் மாவை எல்லாம் ஒன்றாகச் சேர்த்துக் கலக்கி வைத்து விடுகின்றோம். ஆனால் தீயை நிறைய எரிய விட்டுத் தோசையை ஊற்றினால் என்ன செய்யும்…? கருகிப் போய்விடும்.

குழிப் பணியாரம் சுடும் போது நெருப்பை அதிகமாக வைத்துவிட்டு மாவை ஊற்றினால் என்ன செய்யும்…? கீழே அடியில் பிடித்துவிடும். கருகிவிட்டால் சுவை இருக்காது.

ஆகவே அது அதற்கு என்ன பக்குவம் செய்ய வேண்டுமோ அந்த நிலை இல்லையென்றால் ருசி கெட்டுப் போய்விடுகின்றது.

அதைப் போன்று தான் கோபம் ஆத்திரம் வேதனை என்ற உணர்ச்சிகள் நமக்குள் அதிகமான பின் நம் பக்குவம் தவறிப் போய்விடுகின்றது. நம் சொல்லும் நயம் கெடுகின்றது.

1.பக்குவம் தவறுவதால் கார உணர்ச்சிகள் நம் உடலுக்குள் வந்து
2.நம் உடலிலுள்ள உறுப்புகளில் அதே கார உணர்ச்சியைத் தூண்டும் இரத்தமாக மாறுகின்றது.
3.இரத்தத்தில் கார உணர்ச்சிகள் வந்தவுடனே எல்லா அணுக்களும் கெடும். பக்குவம் தவறிப் போகும்.

எல்லோருக்கும் நல்லதைச் செய்கின்றோம்… பின்னாடி நான் இதைச் செய்தேன் அதைச் செய்தேன் என்று சொல்கின்றோம்.

செய்த பிற்பாடு நாம் எண்ணியபடி நடக்கவில்லை என்றால் பக்குவம் கெட்டுத்
1.திட்ட ஆரம்பித்து விடுகின்றோம்.
2.அல்லது குறை கூற ஆரம்பித்து விடுகின்றோம்
3.இந்தக் குறையைத்தான் வளர்க்கின்றோம்.

அதே சமயத்தில் நோயாளியைக் காப்பாற்ற எண்ணுகின்றோம். அந்த நோயின் தன்மையோ வேகம் அதிகமாக இருக்கின்றது.

அதைக் கேட்டுக் கொண்ட பின் தவறிப் போய் பாசத்தால் “உனக்கு இப்படி ஆகிவிட்டதே…!” என்று நமக்குள் அவரின் நோயின் உணர்வைச் சேர்த்துக் கொண்டோம் என்றால் அந்தப் பக்குவம் தவறிவிடுகின்றது. அதே நோய் நமக்குள்ளும் வந்து விடுகின்றது.

மற்றவரைக் காப்பாற்ற வேண்டும், அப்படியே நம்மையும் காப்பாற்ற வேண்டும். அப்போது நாம் என்ன செய்ய வேண்டும்…?

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் இரத்த நாளங்களில் படர வேண்டும். எங்கள் உடலிலே உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் எல்லாம் பெற வேண்டும் என்று பக்குவப்படுத்தி அந்த வலுவைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின் நோயாளியின் உடல் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர்ந்து அவர் நோயிலிருந்து நீங்கி நன்றாக வேண்டும் என்று அந்த நல்ல வாக்கினை அவரிடம் பதிவு செய்ய வேண்டும்.

ஏனென்றால் அவரால் முடியவில்லை. அப்பொழுது நமக்குள் அருள் உணர்வுகளை விளைய வைக்கின்றோம், சொல்லை உணர்வாக்குகின்றோம். அருள் ஒளியாகப் பாய்ச்சுகின்றோம். அந்த உணர்ச்சியைத் தூண்டுகின்றோம். நோயாளி அதைப் பெறுகின்றார்.

உதாரணமாக நம்முடைய நண்பன் சந்தர்ப்பத்தால் வேதனைப்படுகின்றான். என் பையன் இந்த மாதிரிச் செய்து விட்டான். அந்த மாதிரிச் செய்து விட்டான் என்று சொல்லும் போது அந்தச் சந்தர்ப்பம் நண்பருக்குள் வேதனை உருவாகின்றது.

ஆனால் அந்த நண்பனை நாம் சந்திக்கும் சந்தர்ப்பம் நமக்கு என்ன செய்கின்றது..? அவர் வேதனையைக் கேட்டவுடனே அதே சந்தர்ப்பம் நமக்குள்ளும் வேதனையை உருவாக்குகின்றது.

நாம் சந்திக்கும் சந்தர்ப்பத்தில் தான் இவ்வாறெல்லாம் நடக்கின்றது. பல பல நன்மைகளை நாம் செய்தாலும் பரிபக்குவ நிலையை நாம் பெறத் தவறினால் இந்த வாழ்க்கையில் தேய் பிறையாகி மீண்டும் கீழே தான் போவோம்.

சர்க்கஸில் வேலை செய்பவர்கள் பல விதமான விளையாட்டுகளைச் செய்வார்கள். பார் (BAR) விளையாட்டில் இத்தனாவது நூலில் வருகின்றார்கள் என்று தெரிந்து அதைத் தாவிப் பிடித்துவிடுகின்றார்கள்.

தன்னுடைய வேகத்தில் என்ன செய்கிறார்கள்..? நிற்பவர்களையும் அந்தச் சமப்படுத்தும் நிலை கொண்டு (BALANCE செய்து) தூக்கி மேலே கொண்டு போய்விடுகின்றார்கள்.
1.அதிலே சிறிது பக்குவம் தவறி விட்டால் கீழே தள்ளி விட்டு விடும்.
2.சர்க்கஸில் விளையாடுகின்ற மாதிரிதான் நம்முடைய வாழ்க்கை.

எதனுடைய உணர்வை எடுத்தாலும் இந்தப் பக்குவம் தவறினால் நம் நல்ல குணங்கள் வீழ்ந்து போகும். வீழ்ந்த பிற்பாடு நாம் நல்லது செய்வது என்பது முடியாது போய் விடுகின்றது.

அடுத்து நல்ல செயலை வளர்க்க முடிவதில்லை. எல்லாம் நல்லது செய்தேனே… எனக்கு இப்படியெல்லாம் வந்து விட்டதே…! என்று இப்படித்தான் சொல்கின்றோம்.

நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலும் பிறர்படும் துயரங்களையோ அல்லது பிறர் செய்யும் தவறுகளையோ பார்த்தால் “ஈஸ்வரா…!” என்று உயிரிடம் வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எடுக்க வேண்டும்.

எங்கள் உடல் முழுவதும் பெற வேண்டும் எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும். எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய ஜீவாத்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று எண்ணினால் அந்த வேகத்தைத் தணித்து விடுகின்றோம். நல்ல சிந்தனை வருகின்றது.

1.கோபமோ வேதனையோ எதனால் நமக்கு வருகின்றது என்று சிந்தித்து
2.அதைத் தடுத்து நிறுத்தியவுடனே
3.நல்ல உணர்வுகள் நமக்குள் வருகின்றது.
4.சாந்தம் வருகிறது, விவேகம் வருகின்றது. அது நல்லதாகின்றது.

ஆக கோபப்படுவோரின் உணர்வுகளையும் வேதனைப்படுவோரின் உணர்வுகளையும் நமக்குள் சேராது விவேகத்தின் தன்மை கொண்டு அவனுக்குள் மாற்றும் சக்தியாக வருகின்றது. அப்பொழுது மற்றவர்கள் கஷ்டம் நமக்குள் வராது.

அதற்காகத்தான் பாட்டை மட்டும் பாடிவிட்டுப் பல நினைவில் நான் இல்லாமல் “பரி பக்குவ நிலை பெற எனக்கு அருள்வாய் ஈஸ்வரா…!” என்று நம் உயிரான ஈசனிடம் வேண்டும்படிச் சொல்கிறோம்.

இந்தப் பழக்கம் வந்துவிட்டால் நம் மனதில் எப்பொழுதும் அமைதியும் சாந்தமும் குடிகொள்ளும்…!

துன்பத்தைப் போக்கும் முறை

Image

மகரிஷிகளின் அருள் ஒளி

துன்பத்தைப் போக்கும் முறை

ஒரு தேள் கொட்டினால் நாம் என்ன செய்வோம்…! நினைவை இழந்து விடுவோம். அப்பொழுது யார் எதைச் சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறோம்.

அதைப் போல ஒருவர் “சுருக்…”கென்று சொல்லி விட்டால் அந்த உணர்ச்சிகள் தூண்டி நம்மை வேதனைப்படச் செய்கின்றது.
1.அந்த வேதனையான உணர்வுகளுடன் நாம் இருக்கும் போது
2.மற்றவர்கள் என்னதான் நல்லதைச் சொன்னாலும்
3.அந்த நல்ல சொல்லை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது.

இதைப் போல சாதாரணமான மனிதர்களுடன் நாம் பேசும் போது வாழ்க்கையின் முறைகளில் விருப்பு வெறுப்பு நமக்குள் தோன்றி அதனாலே நாம் எண்ணிய எண்ணங்களுக்குத் தகுந்த மாதிரி உமிழ் நீராகி நம் இரத்தத்தில் (கருவாகி) வித்தாக மாறி உடலில் வியாதியாக மாறுகிறது.

நாம் ஒரு தடவை சஞ்சலப்படுகிறோம் என்று சொன்னால் அந்தச் சஞ்சலப்படும் எண்ணங்கள் நமக்குள் பதிவாகி இப்படிப் பலவும் சேர்த்து வந்துவிடுகின்றது.

குழம்பை ருசியாகச் செய்ய வேண்டுமென்றால் காரம் புளிப்பு இனிப்பு துவர்ப்பு இவைகளை எல்லாம் கலந்துதான் வைக்கிறோம். அப்பொழுது எல்லாம் சமமாக இருந்தால் குழம்பு ருசியாக இருக்கின்றது.

காரமோ மிளகோ சீரகமோ உப்போ கசப்போ நாம் சேர்க்கும் பொருள்களில் எது அதிகமானாலும் அது தான் முன்னணியில் நிற்கும். அப்பொழுது அது சுவையைக் கெடுத்து விடுகிறது.

வாழ்க்கையில் சலிப்பு சஞ்சலம் கோபம் குரோதம் அவசரம் ஆத்திரம் பயம் வேதனை இதைப் போன்ற உணர்வுகளை அதிகமாக எடுத்துக் கொண்டிருக்கும் போது அதிலே நீங்கள் நினைவைச் செலுத்தியவுடன் வேதனையான எண்ணங்கள் வந்துவிடுகின்றது.

குடும்பத்தில் கஷ்டப்படுகிறோம் என்றால் அந்தக் கஷ்டமான எண்ணத்தை எண்ணி எம்முடைய உபதேசங்களைப் படிக்க நினைத்தாலும், அந்த வேதனையான எண்ணங்கள் நீங்கள் எண்ணியவுடன் உங்கள் உடலைச் சுற்றி அந்த வாசனை இருக்கும்.

உங்கள் கஷ்டத்தைப் போக்குவதற்கு யாம் அந்த நல்ல வாக்குகளை அந்தச் சக்தியை உங்களைக் கேட்கச் செய்து அந்த உணர்ச்சிகளை உங்கள் உடலிலே படரச் செய்து அந்த ஞானிகளின் சக்தி உங்கள் உடலுக்குள்ளும் உமிழ் நீராகச் சேர்க்கச் செய்வதற்கு யாம் முயற்சி எடுக்கின்றோம்.

அப்படி எடுத்தாலும் கூட நீங்கள் வேதனையாக இருக்கக்கூடிய எண்ணம் யாம் சொல்லக்கூடிய வாக்கை உங்களால் ஈர்க்க முடிவதில்லை.

நீங்கள் நல்லதைப் பெற வேண்டும் என்று வந்தாலும் கூட முடிவதில்லை. சிலபேர் அந்த வேதனை கலந்து இப்படியெல்லாம் இருக்கிறதே என்று வேதனையைத்தான் முன்னாடி கொண்டு வருகிறார்கள்.

1.மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவோம்.
2.இனி நமக்குக் கஷ்டமில்லை.
3.என் துன்பத்தைப் போக்கி நான் நன்றாக இருப்பேன் என்ற நினைவுடன் நீங்கள் இருந்தீர்களானால்
யாம் கொடுக்கக்கூடிய வாக்கு உங்கள் உடலிலே நல்ல முறையில் பதிவாகி உங்கள் துன்பத்தைப் போக்க உதவும்.

இது பழக்கத்திற்கு வர வேண்டும். பெரும் பகுதியானவர்கள் அவர்கள் கஷ்ட நஷ்டங்களைத் திரும்பத் திரும்பச் சொல்வார்கள்.
1.இதையெல்லாம் செய்தேன் இந்த மாதிரி நஷ்டமாகிவிட்டது
2.நான் எதைச் செய்தாலும் எனக்கு நஷ்டமாகவே ஆகிக் கொண்டிருக்கிறது.
3.எங்கே பார்த்தாலும் தொல்லை தீரவே மாட்டேன் என்கிறது என்று
4.இந்த முடிவிலேயே நின்று கொண்டு
5.அதையே திருப்பித் திருப்பி சொல்லிக் கொண்டேயிருப்பார்கள்.

அந்த மாதிரிச் சொல்லாதபடி கஷ்ட நஷ்டங்கள் எது வந்தாலும் அதை நீங்கள் அனுபவித்து வந்தாலும் கூட இங்கே வந்தவுடன்…
1.இந்த மாதிரி ஆகிவிட்டது…!
2.இனிமேல் இதிலிருந்து மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளாலே மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற வேண்டும்
3.எங்கள் செயல் எல்லோருக்கும் நல்லதாக இருக்க வேண்டும்
4.எங்கள் உடலில் இருக்கக்கூடிய பிணி நீங்க வேண்டும்.
5.நாங்கள் வியாபாரம் செய்யும் போது என்னிடம் சரக்கு வாங்கிச் செல்பவர்கள் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்.
6.அவர்கள் அனைவரும் வளமாக இருக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

இந்த முறைப்படி செய்தால் உங்கள் துன்பங்கள் அகலும் என்று உறுதியாகச் சொல்கிறோம்…!