
வேலி முள் செடியின் விளைவுகளும் நாட்டைத் தரித்திரமாக்கும் சில விஞ்ஞான அறிவின் செயல்களையும் அறிந்து கொள்ளுங்கள்…!
மேகங்கள் கூடி வருவதை அதை நீராக வடித்து எடுத்து வளர்த்துக் கொள்ளும் சக்தி சில மரங்களுக்கு இருக்கின்றது.
வேலி முள் செடியை எடுத்துக் கொள்வோம். அதனுடைய விஷத்தின் தன்மை ஆற்றல் அதிகமானது. தரையில் உள்ள நீர் சத்தையும் அது கவர்ந்து கொள்கின்றது.
இத்தகைய முள் செடிகள் அதிகமாக இருக்கப்படும் போது அதற்குப் பக்கத்தில் வேறு நல்ல தாவர இனங்கள் வளர்ந்தால் அதற்குப் போகும் நீரை முள் செடி தனக்குள் கவர்ந்து இழுத்து விடும். நல்ல தாவர இனங்கள் சரியாக வளராது.
ஆனால் அந்த முள் செடி நமக்கு அதிகமாக விறகைக் கொடுக்கும். விறகை எரித்தால் வரும் புகைகள் விஷத்தின் தன்மையாகி காற்று மண்டலத்தில் பரவலாகப் படரும்.
அந்த வேலி முள் செடியின் விதைகளை யார் விதைக்கின்றார்களோ அவர்களுக்கு கை கால் குடைச்சல் நிச்சயமாக வரும்.
அந்த முள் ஒரு தரம் குத்தி விட்டது என்றால் கடுகடுப்பு ஆகி உடலுக்குள் விஷத்தின் தன்மை ஊடுருவி விடுகின்றது.
சமையலுக்கு விறகிற்கு உதவும் என்று உபயோகப்படுத்தினாலும் விஷத்தின் புகை காற்று மண்டலத்தில் கலக்கப்படும் போது மனிதருக்கு எந்த நிலை செய்கின்றது…? என்பதைக் குருநாதர் தெளிவாகக் காட்டுகின்றார்.
பஞ்ச காலங்களில் அடுப்பு எரிப்பதற்காகவாவது உதவும் என்று வெளி நாட்டில் உருவானதை விமானம் மூலம் கொண்டு இங்கே தெளித்து அதை உருவாக்கினார்கள்.
ஏனென்றால் மலைகளிலும் மற்ற காடுகளிலும் உள்ல மற்ற மரங்களை வெட்டி விட்டால் மழையே இல்லாமல் போகும் என்ற நிலையி மேலை நாடுகளில் செய்ததை இங்கேயும் செய்தார்கள்.
ஆனால் இங்கேயும் மாசுபடும் நிலை வந்து விட்டது.
இதைப்போல சில வளர்ச்சி அடைந்த நாடுகள் நம் நாட்டைத் தாழ்த்துவதற்காக விஞ்ஞான அறிவுப்படி கொத்தமல்லி போல வெள்ளைப்பூ போல பூத்துக் கொண்டு இருக்கும் பாலை செடி போன்ற நிலைகளையும் மற்றதுகளுடன் கலந்து இங்கே விதைத்து விட்டார்கள்.
அது காற்றில் கலந்து வரப்படும் போது
1.மனிதன் மேலே பட்டால் அரிப்புத் தன்மை வருகின்றது
2.சொறி சிரங்கு போல ஆவதும் விஷத் தன்மைகள் வளர்வதும்
3.நம் நாட்டில் வளரும் தாவர இனங்களைச் சீராக வளர விடாமல் தடுப்பதும்
4.இதைப்போல பல விஷக் கிருமிகளை உருவாக்கும் சக்திகள் வளர்ந்து விட்டது.
விஞ்ஞானத்தின் அறிவால் நாட்டில் தரித்திர நிலைகள் உருவாக்கும் நிலைக்கு இன்று வந்து விட்டது. வளர்ச்சி அடைந்த நாடுகள் “இராஜ தந்திரம்…” என்ற நிலைகளில் மற்ற நாடுகளை அடிமைப்படுத்த இதைப் போன்ற நிலைகளில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
இன்றும் சில நிலைகளில் இது தொடர்ந்து கொண்டு தான் இருகின்றது.
1.”நீர் வளத்தையும் குறைத்து…”
2.காற்றையும் விஷத் தன்மையாக ஆக்கிக் கொண்டுள்ளார்கள்
மெய் ஞானிகள் கொடுத்த மெய் உணர்வுகளை யாரும் எடுப்பதில்லை.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.