ஞானச் செல்வங்களுக்கு வழிகாட்டுகின்றோம்

ஞானச் செல்வங்களுக்கு வழிகாட்டுகின்றோம்

 

1.புகழ் கொண்ட ஜீவன் பல்லக்கில் செல்கின்றது…
2.அதே ஜீவன் சிவத்தின் தன்மை நீக்கம் பெற்று “சவம்” எனப்படும் நிலையில் அதுவும் ஊர்வலம் செல்கின்றது.

இரண்டும் காரண பேதங்கள் என்றாலும்… சுமந்திடும் பல்லக்கு மூங்கிலால் உருவானதே.

கலைஞன் கை பட்டு இளந்தளிர் மூங்கில் அதன் பக்குவம் கொண்ட திடம் என்ற வளர்ச்சியில் அது வளைக்கப்படும் பாங்குகளில் வளைந்து… வளர்ந்து… பல்லக்கு உருவாக்கிடும் கலைஞனின் கைவண்ணத்திற்கொப்ப வளர்ந்து நிற்கின்றது.

வெட்டிடத் தழைக்கும் தழைவுறுகின்ற தன்மை தன்னிச்சையில் மூங்கில் உயர்ந்து வளர்ந்து நின்றாலும் பக்குவத்தின் வளர்ச்சி அற்ற தட்டை எனப்படும் மூங்கிலானது அது வளர்ந்துள்ள புதரின் கண்வாசம் செய்திடும் “இசை வண்டு” வளர்ச்சியின் திடமற்ற மூங்கில்களைத் துளைத்து விட்டு அதனுள்ளும் வாசம் செய்திடும்.

காற்றில் அசைந்திடும் அந்த மூங்கில்கண்
1.அதனுள் நுழைந்திடும் காற்று உண்டாக்கிடும் ஓசை… மூங்கிலை இசை பாட வைக்கின்றது.
2.ஆனால் வண்டு துளைத்த மூங்கில்கள் “இறுதி ஊர்வல நிலைக்கே…”
3.மற்றும் மனிதனின் தேவைப்படும் காரியங்கள் ஆற்றிடக் கொண்டு செல்கின்றான்.

கலைஞன் கைபட்டு உருவாக்கிட்ட பல்லக்கு… தேவ ஆராதனை பெற்றிடும் சிறப்பாகப் பரிணமித்து விளங்குகின்றது. அது போல் ஆத்ம பலம் கூட்டிடும் செயலாக ஜீவன் பெறுகின்ற சத்தியத்தின் சக்தி எனும் வளர்ப்பு பக்குவம் காட்டிடும் உனது பண்பை.

அன்று வேதாள மகரிஷி வேதாந்த நாதனுக்கு உரைத்ததைப் போல்
1.“வண்டு துளைத்திடாப் பக்குவம்” என்றே
2.ஆத்ம பலம் நாடிடும் உயர் ஞானச் சித்தின் நலம் விரும்பும் ஞானச் செல்வங்கள் பக்குவம் கொண்டிடவே
3.”கர்ம தியாகம்” வழி காட்டப்பட்டது
4.இந்தச் சொல்லை வியாசக பகவான் உரைத்தது.

அர்ஜுனனும் கிருஷ்ண பரமாத்மாவும் “நரநாராயண ஐக்கிய நிலை” என்றிட்ட சூட்சுமத்தை அன்று அந்த மகான் உரைத்த நிலையையே இன்று இந்தக் கலியில் அதனை முழுமைப்படுத்திக் காட்டியவர் ஐயப்பன்.

ஐயப்பன் உரைத்தது என்ன…?
1.சிவத்துக்குள் நான் இருக்கின்றேன்…
2.நாராயணன் உள்ளும் நான் இருக்கின்றேன்…!

மத பேதங்கள் கடந்திட்ட தெய்வ நிலை காட்டிடும் ஓர் சிறந்த தத்துவத்தை இந்தக் கலியிலும் மனிதன் கேடுறுத்துகின்றான்.

1.அவர் பெற்று வளர்த்திட்ட ஜோதிஸ்வரூப நிலையை என்றும் காணலாம்
2.அதிலே பல சூட்சுமங்கள் உண்டு…!

அருள் வாழ்க்கை வாழ்வீர்கள்

அருள் வாழ்க்கை வாழ்வீர்கள்

 

சில உடல்களில் சில ஆன்மாக்கள் இருக்கும்… எதிர் நிலையாக அது இயங்கும். தியானத்தில் அமர்ந்தால் செய்ய விடாது. இதைப் போன்ற நிலைகளை மாற்றியமைக்க அருள் மகரிஷிகளின் உணர்வுகளை அந்த ஆன்மாக்களுக்கு இணைக்கப்படும் பொழுது நன்மை செய்யும் சக்தியாக மாறும்.

ஆனால்
1.அப்படியே விட்டுவிட்டால் குடும்பப் பற்றை இழக்கச் செய்து விடும்… பல துன்பங்களை அனுபவிக்க நேரும்.
2.குடும்பப் பற்றை இழந்த ஆன்மாக்கள் தான் இன்னொரு உடலுக்குள் வந்தால் அதே உணர்வை இயக்கும்.

எந்த உடலிலிருந்து இயக்கியதோ அவர்களைக் குற்றவாளியாக ஆக்கிடாது குற்றத்திலிருந்து மாற்றிட அருள் உணர்வுகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்திகளைத் தொடர்ந்து எடுக்க எடுக்க அந்த ஆன்மாக்களுக்கு அது கிடைக்க வேண்டும் என்று பிரார்த்திக்க… அந்தத் தீமைகளிலிருந்து நாம் விடுபடலாம்.

அந்த ஒரு பக்குவத்திற்கு வர வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.

அருள் வாழ்க்கை வாழ்வீர்கள். அனைவரையும் அருள் வாழ்க்கை வாழச் செய்யும் அந்தச் சக்தி உங்களிடம் பெருகும். உங்கள் பார்வையால் அனைவரும் நலம் பெறுவார்கள்.
1.அனைவரும் ஆனந்தப்படும் அந்த நிலையை நீங்களும் கண்டு உங்கள் உடலில் ஆனந்தம் என்ற பேரானந்த நிலையைப் பெறுங்கள்.
2.பல நிலையில் ஆனந்தப்படும் பொழுது பேரானந்தம் வருகின்றது.
3.ஒருவர் என்ற நிலையில் ஆனந்தம் வருகின்றது… அவர் சொன்னார் இவர் சொன்னார் என்றால் பேரானந்தமாகின்றது
4.உங்கள் பார்வையில் அனைவரும் நலம் பெற வேண்டும்
5.அதை கண்டு நீங்கள் பேரானந்தப்படும் நிலைக்கு வர வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

நோயாக இருக்கிறது என்று என்னிடம் கேட்காதீர்கள். என் குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் குழந்தைகளுக்கு திருமணம் ஆக வேண்டும் அந்த அருள் வேண்டும் தொழில்கள் வளம் பெற வேண்டும் எங்களுக்கு வரவேண்டிய பாக்கி வர வேண்டும்… அதற்கு அந்த அருள் வேண்டும் என்று இப்படிக் கேட்டுப் பாருங்கள்.

இந்த உயர்ந்த நிலைகள் வர வர தன்னாலே அந்தப் பணங்கள் வந்து சேரும். பார்க்கலாம். உங்கள் எண்ணம் அவர்களை உயர்த்தும்… வருவாயை உயர்த்தும். பணத்தைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் ஊட்டும்.

சிறிது கால தாமதமாகும்.

ஆனால் அவசரப்பட்டு ஆத்திரப்பட்டோம் என்றால் வருவதையும் தடுத்து நிறுத்திவிடும். சங்கடப்பட்டால் அவர்களுக்கும் அதே நிலையினை இயக்கி விடும். அவர்களுக்கும் வருமானம் வராது… நமக்கும் வராது.

ஏனென்றால் கொடுக்க முடியவில்லை என்று எண்ணும் போது அங்கே சங்கடம்

இதைப் போன்ற நிலையில் இருந்து விடுபட்டு அவர்களுக்கு வரவு வரும் நமக்கு கொடுப்பார்கள் என்ற உணர்வினை வளர்த்துக் கொள்ளுங்கள்.

ஒவ்வொரு நொடியிலும் பிறருடைய குறைகளை எண்ணாது அவர்கள் நிறைவு பெறுவர் நமக்கு வருமானம் வரும் என்று
1.நிறைவான உணர்வை எடுத்தால் நிறைவான உணர்வாக வழி அமைக்கின்றது.
2.நம் சொல்லைக் கேட்போர் நிலைகள் நிறைவான மனங்களாக வருகின்றது.
3.வாழ்க்கையில் மகிழும் உணர்வுகளே அங்கே இயக்கத் தொடங்குகிறது.

ஆகவே அருள் வாழ்க்கை வாழ்வோம். பேரானந்தம் பெற்று ஏகாந்த நிலை என்று ஏகாதசி என்ற பத்தாவது நிலைகளை நாம் அடைவோம் என்று பிரார்த்தித்துக் கொள்கின்றேன் (ஞானகுரு).

ஞான வித்து

ஞான வித்து

 

பிறரின் நோயைப் பற்றி நாம் அறிந்து உதவி செய்தாலும் அந்த நோயின் அணுக்கள் நம் நல்ல குணத்துடன் இணைந்து அதைப் பாழாக்கிடாதபடி நாம் தடுத்துப் பழகுதல் வேண்டும்.

அதைத் தான் “மூலாதாரத்தில் மூண்டெழும் கனலைக் காலமறிந்து உன் செயலை எவ்வாறு செயல்படுத்த வேண்டும்…?” என்று காட்டுகின்றது தத்துவங்கள்.

நோயின் தன்மை உயிரான மூலாதாரத்தில் மோதுகின்றது. அந்த உணர்வினை அறிகின்றோம்.
1.அப்போது நாம் எதைச் செய்ய வேண்டும்…? நாம் நுகர வேண்டியது எது…?
2.அந்த தீமையைக் கண்டு நுகர்ந்த பின் நாம் செய்ய வேண்டிய பக்குவம் எப்படி இருக்க வேண்டும்…? என்பதைத்தான் இங்கே காட்டுகின்றார்கள்.

இதை வென்றவன் அருள் மகரிஷி துருவ நட்சத்திரம் என்பதை உணர்ந்து இருக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று உயிரிடம் வேண்ட வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடலிலுள்ள இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்
1.ஏனென்றால் வேதனைப்படும் உணர்வை நுகர்ந்த பின் இரத்த நாளங்களில் தான் கலக்கின்றது
2.இந்த விஷத்தின் தன்மை உடல் முழுவதும் பரவுகின்றது இரத்தத்தின் துணை கொண்டு.
3.இந்த உடலில் வளரும் நல்ல அணுக்கள் விஷத்தைக் கண்டபின் தன் உணர்வு கிடைக்காததனால் சோர்வடைகின்றது… நல்லதாக உருப் பெறுவதில்லை.

அடுத்த கணம் என்ன செய்ய வேண்டும்…?

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் ரத்த நாளங்களிலே கலக்க வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று வேதனை உணர்வு அந்த நல்ல அணுக்களுக்குள் சேர்வதற்கு முன் அதனைத் தடுக்க வேண்டும்.

கண்ணன் கருவில் இருக்கும் குழந்தைக்கு உபதேசித்தான்.
1.தீமை என்ற உணர்வு இங்கே வருகின்றது
2.அது வருவதற்கு முன் நீ உன்னை காத்துக் கொள்ளும் நினைவினைக் கண்ணின் நினைவு கொண்டு
3.உடலில் இருக்கும் அணுக்களுக்கு துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்ற உணர்வினை வலுவாக்கினால்
4.இதன் அருகிலே வரப்படும் பொழுது அந்த உணர்வினை அகற்றிவிடும் அல்லது மாய்த்துவிடும்.

அதனால் தான் கண்ணுக்குப் பெயர் இடையன் என்று வைத்தார்கள்.

கண்ணின் கருவிழி நோயாளியை உற்று நோக்குகின்றது. அவன் வேதனைப்படுகிறான் என்று உயிரோடு உணர்த்துகின்றது. அவனைக் காக்க வேண்டும் என்று ஆறாவது அறிவு கொண்டு நாம் செயல்படுகின்றோம்.

ஆனால் அந்த உணர்வு நமக்குள் வந்தபின் நம் உடலுக்குள் தீமை புகாது அந்த அணுக்கள் உட்கொள்ளாது அருள் மகரிஷியின் உணர்வுகளை இங்கே கண் கொண்டு உயிருடன் ஒன்றி இந்த உணர்வினை உடலுக்குள் செலுத்தி கண்ணின் நினைவினை அந்த அணுக்களுக்கு உபதேசித்தல் வேண்டும்.

1.இந்த உணர்வின் தன்மை உருப் பெற்றபின் இதன் வலுகொண்ட பின் அதன் அருகிலே ரத்தங்களில் வந்தாலும் ஏற்றுக் கொள்ளாது
2.இதனின் உணர்வுகள் நம் உடல் உறுப்புகளில் வரும் பொழுது கிட்னி அந்த விஷத்தைப் பிரித்து விடுகின்றது… வெளியேற்றி விடுகின்றது
3.ஏற்றுக் கொள்ள முடியாத நிலை வரும்பொழுது இது பிரித்து விடுகின்றது.

ஆகவே நாம் எண்ணும் அருள் உணர்வுகள் உடல் உறுப்புகளில் வலுப் பெறும் போது அந்தக் கிட்னியை அந்த விஷத்தன்மை செயலற்றதாக மாற்றுவதற்கு முன்… கிட்னியை உருவாக்கிய அணுக்களுக்கும் அருள் ஒளி படர்கின்றது.

பின் அந்த விஷத்தின் தன்மையை வடிக்கும் தன்மையாக வெளியேற்றி விடுகின்றது.

ஆனால் நாம் மாற்றத் தவறினால் என்ன நடக்கிறது…?

வேதனைப்படுவோர் உணர்வை நுகர்ந்தால் அது அணுக்களாக மாறப்படும் பொழுது கிட்னிக்கு சிறுநீரகத்தின் மூலம் அதைச் சீராகப் பிரிக்காதபடி விட்டுவிடுகிறது. இரத்தத்தைச் சுத்திகரிக்கவில்லை என்றால் விஷத்தின் தன்மை மற்றொன்றுக்குச் சேர்கின்றது. வடிக்கத் தவறினால் உடலுக்குள் கடும் நோய் உருவாகி மடியும் தன்மை வருகின்றது.

ஆகவே நமது ஞானிகள் காட்டிய அருள் வழியில் இந்த வாழ்க்கை எவ்வாறு வாழ வேண்டும்…? என்ற உணர்வினைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

நான் சொல்வது உங்களுக்கு எளிதாக இருக்கலாம்.
1.இதை எல்லாம் கண்டுணர்வதற்கு எவ்வளவோ சிரமப்பட்டேன்… கடும் வேதனைகளை அனுபவித்தேன்.
2.வேதனை எப்படி வருகின்றது என்று உணரும்படி செய்தார் குருநாதர்.
3.வேதனை உன்னைத் தாக்கப்படும் பொழுது அதை நீ எவ்வாறு மாற்ற வேண்டும்…?
4.என்னென்ன உபாயங்களைக் கையாள வேண்டும்…? என்று என்னைத் தெளிவாக்கினார்.
5.அதனின் உணர்வினைத் தான் ஞான வித்தாக உருவாக்கி உங்களுக்குள் பதிவாக்குகிறேன்.

காரணம்… தீமை வரும் பொழுது உங்கள் எண்ணத்தால் அதை அகற்றிடும் வலிமை நீங்கள் பெற வேண்டும் என்று தான் தொடர்ந்து இங்கே உபதேசித்துக் கொண்டு வருகின்றேன்.

“குருநாதர் மூலம் பெற்ற சக்திகளை” நீங்கள் எல்லோரும் பெற வேண்டும்

“குருநாதர் மூலம் பெற்ற சக்திகளை” நீங்கள் எல்லோரும் பெற வேண்டும்

நஞ்சுகளை எல்லாம் முறித்தவன் “துருவ மகரிஷி…” அவனைப் பின்பற்றிச் சென்றவர்கள் சப்தரிஷிகள்… சப்தரிஷி மண்டலங்களாக பிறவியில்லா நிலை அடைந்து வாழ்கின்றார்கள்.

அதனின்று வெளிப்படும் சக்திகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாகப் பரவச் செய்கின்றது.
1.அதை நீங்கள் பருக வேண்டும்… பெற வேண்டும்… உங்களுக்குள் வளர்க்க வேண்டும்.
2.குருநாதர் அதைப் பெறும் தகுதியை எனக்கு ஏற்படுத்தினார்… உண்மையின் உணர்வுகளை உணர்த்தினார்… கேட்டறிந்தேன்…!
3.நீங்களும் பெற வேண்டும் என்று இப்பொழுது உணர்த்துகின்றேன்.

காடு மேடெல்லாம் அலைந்தேன். துன்பம் நேரும் போதெல்லாம் அதை அகற்றிடும் நிலை பெற்றேன். அதே போல்
1.துன்பப்படுபவருக்கெல்லாம் அந்தத் துன்பத்திலிருந்து அவர்கள் அகல வேண்டும்… அருள் ஒளி பெற வேண்டும் என்று
2.எனக்குள் இந்த உணர்வுகளை வளர்த்தேன்… அதைத்தான் இப்போது உங்களுக்குப் போதிக்கின்றேன்.
3.இந்த உணர்வை யார் பெற வேண்டும் என்று ஏங்குகின்றார்களோ அவர்களுக்கு அந்த நன்மைகள் ஏற்படுகின்றது.

புத்திர பாக்கியம் இல்லை… கரு உருவாகும் சிசுவாக உருவாகும் அந்த வளர்ச்சி இல்லை. என்று சிலர் சொல்லலாம்.

தற்கொலை செய்து கொண்ட ஆன்மாவோ… இடைமறித்து மடிந்ததோ… தாய் கருவிலிருக்கும் போது இத்தகைய உணர்வுகளை நுகர்ந்தால்… இரத்த நாளங்களில் தன் இனத்தை உருவாக்கும் அணுக்கருக்களை அது வளர விடாது தடுக்கும்.

அந்த மகரிஷியின் அருள் உணர்வுகள் அங்கே வளர வேண்டும். இனவிருத்தியின் உணர்வுகள் வளர வேண்டும் என்று இந்த உணர்வுகளை நுகர்ந்து…
1.உனக்குக் குழந்தை கிடைக்கும் போ இந்த உணர்வினை பாய்ச்சுகின்றேன்.
2.அதைப் பெறுவோம் என்று “ஏங்கிப் பெறுபவருக்கு” நிச்சயம் குழந்தைகள் கிடைக்கும்.
3.கேன்சர் நோயே வந்திருந்தாலும்… இல்லை…! இது கேன்சர் அல்ல சாதாரண நோய் தான்…!
4.சீக்கிரம் குணமாகிவிடும் என்ற வாக்கினைப் பதிவு செய்தால் இதை ஏற்றுக் கொண்டு
5.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கினால் இந்த உணர்வின் அணுக்கருக்கள் விளைந்து அந்தத் தீமைகளை அகற்றும்.

ஆனால் இது எல்லாம் யாம் வாக்காகக் கொடுக்கிறோம் நோய்கள் அகலும் என்று…!

“எங்க சாமி…?” நோய் எங்களை விட்டுப் போக மாட்டேன் என்கிறது…! என்று சொல்லிக் கொண்டிருந்தால் அந்த உணர்வுகள் இயக்கிக் கொண்டுதான் இருக்கும். கஷ்டம் என்னை விட்டுப் போக மாட்டேன் என்கிறது என்று சொன்னால் வேதனை வந்து கொண்டு தான் இருக்கும்.

சலிப்பு சஞ்சலம் சங்கடம் என்ற உணர்வை எடுத்துக் கொண்டால் நம்மைப் பார்ப்போருக்கும் நம் மீது வெறுப்பு வரும். கடையிலிருந்து ஒரு பொருளை எடுத்துக் காட்டினாலும் வெறுப்பு தான் வரும்.

ஆனால் அதை வாங்குவோர் நலம் பெற வேண்டும் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் எனக்குள் படர வேண்டும்… அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும் என்று இவ்வாறு எண்ணினால்… இந்த உணர்வின் மணம் அந்த அருள் உணர்வினைப் பெற்று அவர்கள் நுகரப்படும் பொழுது
1.“அவர்களுக்கும் இது நல்வழி காட்டும். நமக்குள்ளும் நல் உணர்வுகளாக விளையும்…”
2.இதையெல்லாம் உங்களுக்கு வாக்காகத்தான் பதிவு செய்கின்றேன். எடுத்து வளர்த்துக் கொள்ளுங்கள்.

யாம் கூறும் வளர்ச்சியில் வளர்ந்து காட்டிடும் “மெய் வித்துக்களே” இந்தக் கலியில் தேவையப்பா

யாம் கூறும் வளர்ச்சியில் வளர்ந்து காட்டிடும் “மெய் வித்துக்களே” இந்தக் கலியில் தேவையப்பா

 

மனிதன் என்றே பெயர் பெறும் ஜீவ பிம்ப சரீரம் பெற்ற உயிராத்மா… தான் தன் சுய வளர்ப்பால் வளர்ந்து… உயர் ஞானத்தின் தொடரில் தன்னைத்தான் உணரும் பக்குவ கதியால்… தன்னை வளர்த்துக் கொள்ளும் ஆற்றலில் உணரும் அனுபவ உயர் ஞானமாகத் தன்னுள் தெளிந்து… மனித குலச் சமுதாய நன்மைக்குத் தான் கண்ட பேரின்ப அனுபவ லயத்தை உவப்புடன் உலகினுக்கு ஈந்து… மனித மனத்தின் திறன் எண்ண வலுவால் உயர்ந்திட… உயர்வெண்ண மனித குலத்தின் நலன் நாடும் அன்பு இராஜ்ஜியமாக இக்கலியில் மனிதன் வாழ்ந்து காட்டிவிட்டால்… “சப்தரிஷிகளின் செயல்களுக்கே சக்தி அளித்திடும் மெய்ஞான விழிப்பு ஏற்பட்டு விடுமப்பா…!”

1.”உற்றுறுத்துக் கேட்டலும் அதிசயத்து நோக்கலும்…” எப்படி எல்லாம் நம் ஆத்மாவை கேடுறுத்தும்…! என்று ஏற்கனவே படிப்படியாகக் கூறி வந்துள்ளேன்
2.நாம் கூறும் வளர்ச்சியில் வளர்ந்து காட்டிடும் மெய் வித்துக்களே இந்தக் கலியில் தேவையப்பா.

இதை அறிவுரை என்றே எடுத்துக் கொள்தல் வேண்டும்.

அனுபவங்கள் கொண்டே அறிவுறுத்தும் தன்மைகளில் மெய்ப்பொருளை உணரல் வேண்டும் (இது மிகவும் முக்கியம்). குருதேவரின் விளையாட்டு…! என்ற எண்ணம் கொண்டால் அங்கே நடந்த அனுபவத்தைப் பார்த்தாய் அல்லவா.

தாய் தன் நகையைக் கழற்றி மகனிடம் கொடுக்கின்றாள். மகன் அதைத் தரையில் வைத்து விட்டுத் தியானத்தில் ஈடுபடுகின்றான். ஒரு சிறு எலி ஆனது அதைத் தன் வளைக்குள் இழுத்துச் சென்று விடுகின்றது.

திரும்பி வந்த தாய் நகை எங்கே…? என்று கேட்கிறாள். மகன் தேடுகிறான்… தாயும் தேடுகிறது…! தியானத்தின் சக்தியில் வலுக்கொண்ட குடும்பம்… தாய் தன் மகனைச் சந்தேகிப்பாளா…?

மகன் சிரித்துவிட்டு “இது குருதேவரின் விளையாட்டு…” என்று கூறுகின்றான். தியானத்தின் மூலம் காட்சியில் எலி வளையில் நகை இருப்பதை இருவரும் பார்க்கின்றார்கள்.

தேடும் பொழுது நகையை வளையில் கண்டு எடுக்க மீண்டும் “இது குரு தேவரின் விளையாட்டு…” என்றே கூறுகின்றான்.

ஆக விவேக உணர்வு கொண்டு நிதானத்தைக் கூட்ட வேண்டுமப்பா. அவனும் மெய்ப்பொருள் நாடும் நன்னிலை பெற்றவன்தான்.
1.எதையும் அலட்சியப்படுத்தி விடாமல்
2.சிறு பிராணியின் செயலை “எமது விளையாட்டு” என்று உரைத்திடாதே…! (புகழ்ந்து விடாதே)
3.”நாம் உரைக்கும் கருத்தின் வழி நிற்றல் தான்” உலகத் தேரில் பவனி வரும் ஆரம்ப அனுபவமப்பா.

மறு சமைப்பைப் பற்றி வினா எழுப்புகின்றாய்

ஒலிப்பதிவை (செயற்கைத் தன்மை) மீண்டும் அதே ஒலி நாதத்தைக் கேட்டிடும் சமைப்புத் தன்மைகள் பற்றி அறிய நினைக்கின்றாய். ஒலி நாத வேறுபாட்டில் கருப்பொருள்தான் முதன்மையப்பா (இயற்கைத் தன்மை).

கண்டத்தில் எழுப்பும் ஒலி… ஒலி அலைகளாக மாறுவதை உணர்ந்துள்ளாய். எண்ணுகின்ற அத்தனை எண்ணங்களும் ஒலி அலைகளாகச் சமைக்கப்படும் சமைப்பை… அவைகள் ஓடிக்கொண்டே இருக்கும் ஓட்ட கதியை உணர்ந்து கொண்டாயா…? உணர்ந்து கொள்…! மன எண்ணத்தின் அசைவு தெளிவுபடும்.

கண்ணாடிக் குடுவையில் காய்ச்சப்படும் நீர் வெப்ப சக்தி கொண்டு நீராவி அமில நிலை பெற்றுப் பின் குளிர்ச்சி நிலை பெறும் பொழுது… மாற்றுக் குடுவையில் சேமிக்கும் நீராக ஏற்கப்படுகின்றது.

பரிணாம தத்துவப்படி… கொள்ளப்படும் பொருளும் ஏற்றுக்கொண்டிடும் மன நிலையும் தான் முக்கியம். கருத்துக்களில் தீய உணர்வுகளை ஏற்றிடும் அமில அணுக்களின் தன்மைகள் ஜீவ ஆதாரம் அற்ற தன்மையாக சமைப்பின் சமைப்பில் உராய்வு கொண்டு… கருத்தின் தன்மையும் ஜீவனற்று ஆத்ம பயிர் வளர்ச்சி உறாத செயலுக்கே செயல் கொண்டிடும்.

1.உயிரணுக்களை மாய்த்திடும் விஷப்பொருளில் விஷத்தையே உண்டு வாழும் உயிரணுக்கள் வாழ்வதைப் போல்
2.ஒலிபெருக்கியில் ஒலி நாதத்தைக் கேட்டிடும் செயல் எல்லாம் நோய் உண்டவன் வாழ்வதைப் போல்
3.ஒலி நாத வேறுபாட்டால் தாக்குண்ட இந்தக் காலகட்டத்திலும்
4.அமுதம் கொண்டிட்ட உயர் ஞான கருத்துக்களின் தன்மைகள் எந்த ஒலி சமைப்பின் மறு சமைப்பிலும்
5.உயர்நிலை அணுக்கள் “தன் சுவாசத்தைக் கொண்டு… தன்னைத்தான் காத்துக் கொள்ளும்…”

அறிந்ததைத் தெளிவதே உயர் ஞானத்தின் வழி பெற்றே உயர்ந்திட ஆசிகள்.

ஏவல்

ஏவல்

 

உங்கள் மூதாதையர்களின் உயிரான்மாக்களை விண்ணுலகம் (சப்தரிஷி மண்டலம்) ஏற்ற சக்தி தேவை. விண் செலுத்தி விட்டால்
1.அவர்கள் விண் சென்ற பின் அந்த விண்ணினுடைய ஆற்றலை
2.அவர்கள் துணை கொண்டு அருள் ஞானிகளின் உணர்வை எளிதில் பெறலாம்.
3.நம்மை அறியாத வந்த தீமைகளைச் சுட்டுப் பொசுக்க முடியும்.

இது தான் உண்மையான தியானம்.

இதைக் கேட்டுணர்ந்தோர் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தியைக் கவரும் நிலைக்கே “உங்கள் உணர்ச்சிகளைத் தூண்டச் செய்ததும் வசியப்படுத்தியதும்…”.

நீங்கள் ஏக்கத்துடன் இருக்கப்படும் பொழுது அந்த அருள் மகரிஷிகள் போதித்த உணர்வையே உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.

1.இந்த உணர்வின் தன்மை கூடும் பொழுது அந்த ஞானிகள் உணர்வைக் கைவல்யப்படுத்த முடியும்
2.உங்களுக்குள் அந்த வசியப்படுத்தும் நிலையாக உற்று நோக்கிய உணர்வுகள்
2.அந்த ஞானிகள் உணர்வு உங்களுக்குள் பதிவான பின் வசியம்.
3.அதே சமயத்தில் நாம் எல்லோரும் ஒன்றாகச் சேர்க்கும் பொழுது அது கைவல்யம்…
4.தனக்குள் அந்தச் சக்தியைச் சேர்த்திட முடியும்… பின் இதனின் உணர்வின் தன்மை கொண்டு ஏவல்…!
5.யாரைப் பார்த்தாலும் தீமைகள் அகன்றுவிடும் என்று சொல்லால் சொல்லி ஏவல்படுத்தும் பொழுது அங்கிருக்கக்கூடிய தீமைகள் ஒடுங்கும்.

இதைப் பெற வேண்டும் என்றால் வலிமை கொண்டு ஒன்று சேர்ந்து மூதாதையர்களை விண் செலுத்த வேண்டும்.

ஒரு தேரைப் பல நூறு பேர் சேர்ந்து இழுத்து எல்லையைச் சேர்ப்பது போன்று பல ஆயிரம் பேர் சேர்ந்து ஒருக்கிணைந்து இயக்குவோம் என்றால் நமக்கு முன் பரவிக் கிடக்கும் அருள் மகரிஷிகளின் உணர்வுகளை அவரவர்கள் எண்ணி ஏங்கிய பங்கின் விகிதாச்சாரப்படி ஆன்மாவிலே கலக்கும்.

இந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் வரும் பொழுது தான் கைவல்யமாகும்.

1.முதலில் வசியப்படுத்தும் நிலைக்கே உங்களைத் தயார் செய்கின்றேன்… அதற்கு உபதேசம்.
2.பின் அதனின் உணர்வின் தன்மை ஏங்கப்படும் பொழுது கைவல்யம் உங்களுக்குள் அந்த சக்தியின் தன்மை பெருகுகின்றது.
3.பின் அந்த தீமையை அகற்றும் உணர்வின் தன்மை கொண்டு நினைவால் சொல்லால் ஏவல்…! தீமைகளை அகற்ற முடியும்…!

ஆகவே உங்களை நீங்கள் நம்புங்கள். எனது குருநாதர் அதைத்தான் கொடுத்தார்

தயவு செய்து இந்த உபதேசத்தைக் கேட்டுணர்வோர் அனைவரும் மகரிஷிகளின் அருள் ஒளி நாங்கள் பெற வேண்டும் என்னை அறியாத இருள்கள் நீங்க வேண்டும் என்னை அறியாது சேர்ந்த நோய்கள் நீங்க வேண்டும். அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நீங்கள் கேட்டு பழகுங்கள்.

எதை எண்ணி ஏங்கிக் கேட்கின்றீர்களோ கேட்டுணர்ந்த உணர்வுகள் நீங்கள் எண்ணும் பொழுது
1.நான் கொடுக்கும் வாக்கு உங்களுக்குள் ஆழமாகப் பதிவாகி
2.அந்த நினைவின் ஆற்றல் தீமைகளை அகற்றும் சக்தியாக உங்களுக்குள் விளையும்.
3.பல முறை நான் இதை உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றேன்… பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

“எனது குருவின் ஆசையை” நீங்களும் பெற வேண்டும்

“எனது குருவின் ஆசையை” நீங்களும் பெற வேண்டும்

 

மனிதன் என்ற நல்ல குணங்கள் இல்லாதபடி அரக்க உணர்வுகள் கொண்டு அழித்திடும் உணர்வுகளாக வளர்ந்து வரும் இக்காலங்களில்
1.நான் அறிவில்லாத மூடனாக இருந்தாலும் மகா ஞானிகள் உணர்வுகள் இயக்கப்பட்டு
2.இந்த தத்துவத்தை அந்த ஞானிகளின் உணர்வலைகளே பேசுகின்றது.
3.நான் பேசுகிறேன் என்று யாரும் எண்ண வேண்டாம்.

இயற்கையின் உணர்வின் அலைகளை அன்று வென்று… தனக்குள் ஒளியாக மாற்றிச் சென்ற மெய் ஞானிகள் உணர்வுகளே அது பேசுகின்றது.

எனது குருநாதர் பித்தனைப் போன்று இருந்தாலும்… சாக்கடைக்கு அருகில் எம்மை அமரச் செய்து… இவ்வளவு பெரிய தத்துவங்களையும் எனக்கு உணர்த்தினார்.
1.அதனை நான் கேட்டறிந்த பின் அவரின் உணர்வுகள் பதிவாகி
2.அவனை நினைவு கொள்ளும் போதெல்லாம் இந்த உணர்வின் நினைவாற்றல் வந்து
3.என்னை அறியாத வந்த இருளை நீக்கவும்
4.இதைக் கேட்டுணர்வோர் அவர்களை அறியாத வந்த இருளைப் போக்கும் உணர்வாகவும் அது வெளிப்படுகின்றது.

இந்த மூச்சலைகளை எடுத்து அந்த உணர்வின் ஆற்றல் நீங்கள் பெற வேண்டும் என்ற ஆசையில்
1.என் குருவின் ஆசையை நீங்களும் பெற வேண்டும் என்ற நோக்கிலே
2.அதன் வழியில் தான் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

நாம் யாரும் தவறு செய்யவில்லை… சந்தர்ப்பத்தின் நிலைகள் நாம் பரிவுடன் பண்புடன் மற்றவர்களுக்கு உதவி செய்தாலும் நமக்குள் அறியாது வரும் அத்தகைய தீமைகளை நீக்க வேண்டும் என்ற நோக்கத்திற்குத் தான் இதைச் சொல்வது.

கையிலே அழுக்குப் பட்டால் கையைக் கழுவி விடுகின்றோம் உடையில் அழுக்குப் பட்டால் துவைத்து விடுகின்றோம்.

இதைப் போன்று மனித வாழ்க்கையில் உயர்ந்த பண்பு கொண்டு பிறருக்குச் செய்த சேவையின் தன்மையை “முழுமையாக அனுபவிக்க வேண்டும்” என்றால்… நமக்குள் கேட்டறிந்த தீமைகள் உடலுக்குள் சேராத வண்ணம் அந்த ஞானிகளின் உணர்வலைகள் சேர்ப்பிக்கப்பட்டு… அந்த உணர்வால் துன்பங்கள் நீங்க வேண்டும் என்று எப்போது நாம் சொல்கின்றோமோ அப்போது மனிதன் என்ற முழுமை அடைகின்றோம்.

1.நம்மை அறியாது பட்ட அழுக்கையும் துடைக்கின்றோம்
2.ஞானிகள் அருளாற்றல் நமக்குள் பெருகுகின்றது
3.நம் எண்ணம் கூர்மையாக விண்ணை நோக்கிச் சென்றடைகின்றது.

அந்த விண்ணின் உணர்வுகள் சேரும் பொழுது கூர்மை அவதாரமாக…
1.எதைக் கூர்மையாக எண்ணி இந்த மனித வாழ்க்கையில் தன்னை இயக்கிய தீமைகளை வென்று ஞானிகள் எவ்வாறு விண் சென்றனரோ
2.அந்த உணர்வுகள் சிறுகச் சிறுக விளைந்து நமது உடலிலிருந்து உயிரான்மா பிரிந்து செல்லும் பொழுது
3.இதிலே விளைந்த உணர்வின் ஆற்றல் கொண்டு “விண்ணுலகில் அவர்கள் இருக்கும் இடத்திலே” நாம் சேர்கின்றோம்.
4.அந்த மெய் ஞானிகளுடைய அருள் வட்டத்தில் நாம் இணையும் பொழுது
5.நஞ்சினை வென்று தனக்குள் படைத்து வெளியிட்ட மூச்சலைகளை நாம் உணவாக எடுத்து
6.ஒளியின் சுடராக அவரின் ஈர்ப்பு வட்டதில் என்றும் நிலையாக இணைந்து வாழ முடியும்.

அதற்குத்தான் இந்த உபதேசம். ஒவ்வொரு நிமிடத்திலும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அந்த அருள் உணர்வை ஆழமாக உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.

திட்டியவனைப் பதிவு செய்த பின் எண்ணும் பொழுது அவருடைய நினைவாற்றல் வந்து எப்படி உங்களுக்குள் கொதிப்படையச் செய்கிறதோ அதைப் போல உங்களுடைய நினைவுகள் எத்தகைய நிலையில் இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாது உங்கள் வாழ்க்கையிலே வந்த துன்பங்களை நீக்கி நல்லதைப் பெற வேண்டும் என்று ஏங்கி வந்த உங்களுக்குள் இந்த உணர்வுகளைப் பதியச் செய்கிறேன்.

எந்த ஈர்ப்புடன் இதைப் பதிவு செய்கின்றீர்களோ அந்த உணர்வின் எண்ணம் கொண்டு நீங்கள் நினைக்கும் பொழுது
1.அந்த அருள் ஞானிகள் உணர்வு உங்களுக்குள் சென்று
2.உங்களுக்குள் இருள் சூழச் செய்யும் தீமைகளை நீக்கிவிட்டுப் பொருள் காணும் உணர்வாக விளைந்து
3.ஒவ்வொரு நிமிடமும் உங்களைக் காத்திடும் எண்ணமாக விளைந்து நீங்கள் எண்ணியதை உங்கள் உயிர் ஈசனாக இயக்கி
4.அந்த உணர்வினை உங்கள் உடலுக்குள் வினையாக ஒளி பெறும் தன்மையாக ஒளிச்சரீரமாக மாற்றும் நிலையும்
5.அதுவே ஒளி பெறும் சிவனாக “இந்த உடலை நோயற்ற உடலாக உருவாக்கும் நிலையும்”
6.நமக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் சக்தி “பேரண்டத்தின் ஆற்றலுடன் இணையச் செய்து”
7.மனிதனை முழுமை அடையச் செய்யும் “அந்த உயிரின் நிலைகள் கொண்டு நாம் இணைந்து செயல்படுவோம்” என்று வேண்டிக் கொள்கின்றேன்.

உங்களுக்கு யாம் அடிக்கடி உபதேசிப்பதன் உள் கருத்து

உங்களுக்கு யாம் அடிக்கடி உபதேசிப்பதன் உள் கருத்து

 

எமது குருநாதர் எமக்கு உபதேசித்தது போன்று
1.மெய் ஞானிகள் கண்டுணர்ந்த உணர்வை உங்களுக்குள் நினைவு கூறச் செய்து
2.நீங்கள் கேட்டுணரும் பொழுது மெய் ஞானிகள் கண்டறிந்த உணர்வுகள் உங்களுக்குள் ஊழ்வினையாகப் பதிவு செய்வதற்கே உபதேசிப்பது.
3.பதிவு செய்த எண்ணத்தை ஓங்கி வளர்த்து
4.தியானத்தின் மூலம் காற்றுக்குள் மறைந்துள்ள மாமகரிஷிகளின் அருள் சக்தியை நாம் கவரப் பழகுதல் வேண்டும்.

ஆலயத்தில் ஒரு தேரை பல ஆயிரம் பேர் சேர்ந்து வடம் பிடித்து எப்படி இழுக்கின்றோமோ இதைப் போல மகா ஞானிகளுடைய உணர்வுகளைப் பலரும் சேர்ந்து கவர்தல் வேண்டும். ஏனென்றால் அது மிக மிக சக்தி வாய்ந்தது.
1.அதனைக் கவர்ந்து ஈர்ப்பதற்கே இப்படி உபதேசித்து
2.உங்கள் நினைவினை விண்ணை நோக்கி செலுத்தும்படிச் செய்வது.

அந்த மகரிஷியின் அருள் சக்திகளை அதன் மூலம் நீங்கள் பெற்று அதை தியானிக்கும் போது அதை நுகர முடியும்

மகரிஷிகள் அனைவருமே பிறவிக் கடனை அறுத்துச் சென்றவர்கள் யாருடைய ஈர்ப்பிலும் சிக்காது விண் சென்றவர்கள்
1.அவர்கள் உடலில் விளைய வைத்த அந்த உணர்வை சாதாரண மனிதன் எண்ணத்தால் நெருங்க முடியாது.
2.அவர்கள் ஒத்த உணர்வை உங்களுக்குள் செலுத்தி
3.உங்கள் எண்ணங்களை வலு கூட்டச் செய்து
4.நினைவை விண்ணை நோக்கி ஏகும்படிச் செய்து
5.அந்த ஆற்றலைப் பருகும் நிலைக்கு உற்சாகத்தைத் தூண்டி
6.அந்த உணர்வின் நினைவாற்றலை ஏற்படுத்திய பின் தியானத்தில் நாம் இருப்போமேயானால்
7.அந்த உணர்வின் ஆற்றல் உங்களுக்குள் வலுப்பெறுகின்றது.

இதனின் துணை கொண்டு எப்பொழுது நீங்கள் எண்ணினாலும் “மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா” என்று எண்ணினால் அந்தத் திறனை நீங்கள் பெறுகின்றீர்கள்.

அந்தத் திறன் பெறச் செய்வதற்குத் தான் கூட்டுத் தியானங்களை அமைத்துக் கொடுத்துள்ளோம். ஆற்றல்மிக்க சக்தியை நீங்கள் பெருக்கி
1.அதன் வழித்தொடர் கொண்டு இந்த வலுவினைச் செருகேற்றிய பின் விண்ணுலக ஆற்றலை எளிதில் பெற முடியும்.
2.எந்த மெய் வழி பெற வேண்டும் என்று எண்ணி ஏங்கி வந்தீர்களோ அவை அனைத்தும் உங்களுக்குள் ஓங்கி வளரும்.

நோய் வராது தடுக்கவும் முடியும்.

உங்கள் நினைவுகள் எல்லாம் இப்போது கூர்மையாக விண்ணை நோக்கிச் செல்லுகின்றது. அதனின் வலுக் கொண்டு உடலை விட்டு ஆன்மா பிரிந்தால் இன்னொரு உடல் பெறாதபடி “இந்த உடலிலேயே ஒளியின் சரீரம் பெறுவது திண்ணம்…”

மகரிஷிகள் கண்ட வழியில் நீங்களும் சென்றடைந்து உங்கள் மூச்சும் பேச்சும்… கூட்டுத் தியானத்தால் வெளிப்படுத்தும் அலைகள் பிறருடைய உணர்வுகளை நல்ல உணர்வுகளாகப் படரச் செய்து… மெய் ஞானிகள் உணர்வைப் பெறும் தகுதியாக உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.

அதன் மூலம் நீங்கள் வெளிப்படுத்தும் மூச்சலைகள் எல்லோருக்கும் நன்மை பயக்கும் சக்தியாகப் பெற வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கின்றேன் (ஞானகுரு).

உங்களுக்காக நான் பிரார்த்தித்தால்… உங்கள் கஷ்டம் எனக்குள் வராது

உங்களுக்காக நான் பிரார்த்தித்தால்… உங்கள் கஷ்டம் எனக்குள் வராது

 

சிலர் எனக்காக வேண்டி நீங்கள் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் என்று சொல்வார்கள். குடும்பத்தில் கஷ்டமாக இருக்கின்றது… எனக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள் என்பார்கள்.

1.உங்களுக்காக நான் பிரார்த்தனை செய்து…
2.”நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்” என்று நான் நினைத்தால்
3.நீங்கள் சொன்ன கஷ்டத்தை எனக்குள் வளராதபடி தடுத்து
4.எனக்குள் நல்லதை வளர்த்துக் கொள்ள முடியும்

ஆனால் உங்கள் கஷ்டத்தை மாற்றுவதற்கு நீங்கள் எண்ணினால் தானே நன்றாகும். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் நாங்கள் பார்ப்போர் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணினால் இது உங்களுக்குள் நல்லதை உருவாக்கும்.

நிறையப் பேர் எனக்காக நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள் என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். ஆக நம்மை இயக்குவது யார்…? நமக்குள் உருவாக்குவது யார்… நம்மை ஆள்வது யார்…?

திருவெங்கடாஜலபதி என்றால் யார்…? “ஏழுகொண்டலவாடா” என்றும் சொல்வார்கள். ஆறாவது அறிவை ஏழாவது நிலைகள் கொண்டு நம்மை ஆள்பவன் வெங்கடாஜலபதி.

திருவெங்கடாஜலபதி – நமது உயிர் தான் நம்மை ஆளுகின்றது. அங்கே தங்க ஆபரணங்களைப் போட்டுக் காண்பித்துள்ளார்கள்
1.நல்ல மனங்களை கொண்டு இந்த உடலை ஆட்சி புரிய வேண்டும் என்பதற்காகச் சிலையைப் போட்டு வைத்துள்ளார்கள்.
2.நம்மை ஆள்வது நமது உயிர் என்ற நிலையைக் காட்டுகின்றார்கள்.

இங்கே ஸ்ரீவில்லிபுத்தூரில் அரங்கநாதனைக் காட்டுகின்றார்கள்.. மனைவி ஆண்டாள். இந்த உயிரின் தன்மை அரங்கநாதனாக இருக்கின்றது எந்த குணங்களை எண்ணுகின்றோமோ அது தான் நம்மை ஆளுகின்றது.

நான் (ஞானகுரு) இப்போது சொல்லக்கூடிய உணர்வுகளை நீங்கள் கேட்டால் இந்த உணர்வின் தன்மை உங்கள் உயிர் அரங்கநாதன் (உடலான அரங்கத்தில் நாதங்களை எழுப்பி) ஆக இயக்கி… நுகர்வதை இசையாக மாற்றுகின்றது… அந்த உணர்வின் சக்தி கொண்டு தான் உங்களை ஆளுகின்றது.

ஆண்டாள் என்று காரணப் பேர் வைத்து
1.நாம் எதை ஆள வேண்டும்…? எப்படி ஆளச் செய்ய வேண்டும்…? என்று சாதாரண நிலைகள் கொண்டு
2.ஒவ்வொன்றிலும் தெளிந்து தெரிந்து எப்படி வாழ வேண்டும்…?
3.தீமைகள் எப்படி அகற்ற வேண்டும்…?
4.வாழ்க்கையை எப்படி வழி நடத்த வேண்டும் என்று காட்டுகின்றார்கள்.

ஆண்டாள் திருப்பாவையில் என்ன சொல்கின்றார்கள்…?

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்…! இந்த உணர்வின் தன்மை நாம் எடுக்கும் பொழுது
1.அந்த மதியின் உணர்வாக நம்மை ஆளும். அதன் செயலாக நம் செயலும் இருக்கும்.
2.நமக்குள் நம் உணர்வின் தன்மை இங்கே அரங்கத்திற்குள் அமைந்திருக்கும் சக்தியாக
3.அதன் இசையாக அதனின் உணர்வின் செயலாக நம்மை இயக்குவான் என்று பொருள்படும்படி தத்துவங்களை எழுதி இருக்கின்றார்கள்.

மனிதன் புரிந்து தன் வாழ்க்கையில் எப்படி நடக்க வேண்டும்…? உயிரின் இயக்கம் எது…? நாம் நுகர்ந்த உணர்வின் சக்தி எது…? அது எப்படி நம்மை ஆளுகின்றது…? என்று தெளிவாகக் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.
1.அந்த ஞானிகள் உணர்வு மக்களைக் காக்கும்.
2.நம்மைக் காக்க உதவும் உலகைக் காக்க உதவும்
3.உலகை அருள் ஒளியாக மாற்ற உதவும்.

ஆகவே… மகரிஷிகள் காட்டிய அருள் உணர்வு வழிப்படி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்று நம் உணர்வுகளை ஒளியாக்கி… நம் சொல்லின் தன்மை பிறரின் இருளைப் போக்கி… உலக மக்கள் அருள் ஒளி பெறும் அருள் ஞானத்தைப் பெறும் தகுதியாக நாம் உருவாக்க வேண்டும்.

குரு பலம்

குரு பலம்

 

குருநாதர் காட்டிய வழியில்… காட்டுக்குள்ளும் மேட்டிற்குள்ளும் செல்லும் போது அங்கே நான் போகும் காரியங்களுக்குப் பயமில்லாதபடி குருநாதர் எத்தனையோ பாதுகாப்பு நிலைகளைச் செய்து கொடுப்பார்.

1.ஒவ்வொரு நிமிடத்திலும் ஏதாவது ஒலிகளை வைத்திருப்பார்.
2/ஏதாவது பயப்படும் நிலைகள் வந்தால் அந்த ஒலிகள் எழும்பும்… சப்தங்கள் வரும்.
3.அப்பொழுது குருநாதருடைய நினைவு வரும்… எனக்கு ஒரு பாதுகாப்பாக இருக்கும்.

இதைப் போல் உங்களுக்கும் சரி… என்னிடம் பழகி இருக்கின்றீர்கள் அல்லவா. ஏதாவது ஒரு சிரமம் இருந்தால் முன்னாடி இந்த உணர்ச்சிகள் வரும்.

பஸ்ஸில் ஏறினால் விபத்தோ வேறு நிலைகளுக்குச் செல்லும் போது ஏதாவது சிக்கல் வந்தால்
1.இந்தத் தியானத்தைச் சீராகக் கடைபிடிப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை வரும்.
2.அந்த நேரத்தில் நீங்கள் பார்த்துச் சிந்தித்துச் செயல்பட்டால் ஆபத்துக்களிலிருந்து தப்பலாம்.

ஒரு காரியத்திற்குச் செல்கிறீர்கள். அதிலே ஏதோ நஷ்டம் ஆகிறது என்றால் அந்த இடத்திலே மனதில் ஒரு விதமான படபடப்பு வரும்.
1.கொஞ்ச நேரம் அதை நிறுத்திவிட்டு ஆத்ம சுத்தி செய்து மகரிஷிகள் அருள் உணர்வை எடுத்துத் தூய்மைப்படுத்தி விட்டு
2/அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி எடுத்துக் கொண்டால் தப்பித்துக் கொள்ளலாம்.
3.சிந்தனை சீராகும் வழிகாட்டக்கூடிய நிலைகளுக்கு இது வரும்.

நான் செய்கிறேன் என்றால் நான் அல்ல…! குருநாதரின் உணர்வுகளை நான் எடுத்தேன்… அதை வளர்த்தேன்…! அதன் வழி தெரிந்து கொள்ளக்கூடிய வாய்ப்புகள் வந்தது.

1.குருநாதர் எனக்குள் பதித்த அந்த ஞான வித்தை உங்களுக்குள்ளும் பதிவு செய்கின்றேன்.
2.அதை நீங்கள் மறவாது எண்ணினீர்கள் என்றால்
3.காற்றிலிருந்து இழுத்து உங்கள் தீமைகளை போக்கக்கூடிய அரும்பெரும் சக்தியாக வரும்.

அதை நான் செய்கிறேன் என்றால் நான் எப்படிச் செய்ய முடியும்…? அருளைப் பெருக்குகின்றேன் அந்த வழியைத்தான் நான் உங்களுக்குக் காட்டுகின்றேன்.

இந்த வழியில் நீங்கள் தொடர்ந்து செய்யலாம்.