விண்ணுக்குப் போகும் உந்து விசை

விண்ணுக்குப் போகும் உந்து விசை

 

விண் வெளியில் உள்ள கதிரியக்கப் பொறிகள் மற்ற மண்ணுடன் கலந்திருப்பதைப் பிரித்து அணுக்கதிரியக்கமாக மாற்றி அதன் உணர்வின் வலிமை கொண்டு அதன் சேர்க்கையில் பல கலவை கொண்டு “உந்து விசையாக மாற்றி” விண்ணிலே ராக்கெட்டை ஏவுகின்றார்கள்.

அதனின் தொடர் கொண்டு… பூமியின் ஈர்ப்பின் அழுத்தத்தைப் பிளந்து பூமியைக் கடந்து சென்று… ஈர்ப்பற்ற நிலைகளில் சுழன்று கொண்டிருக்கின்றது ராக்கெட்டின் செயலாக்கங்கள் விஞ்ஞான அறிவால்.

இதைப் போன்று தான்
1.விண்ணுலகில் எவ்வாறு உயிரின் தன்மை உருப்பெற்றதோ மண்ணுலகில் அது ஈர்க்கப்பட்டு
2.பல நட்சத்திரங்களில் இயக்கப்படும் பொறிகள் கோள்களாக மாறி அந்த உணர்வின் அலைகள் படர்ந்து வருவதைத் துருவத்தின் வழி பூமி நுகர்ந்து
3.அதன் வழி தாவர இனங்களாக வளர்ச்சி பெற்று அதன் உந்து விசையாக அதனின் உணர்வு இயக்கப்பட்டு
4.அதன் தொடர் வரிசையில் அதனதன் எடுத்துக் கொண்ட உணர்வுக்கொப்ப ரூபங்கள் மாறி மனிதனான பின் மனிதன் தன்னிலை அடைகின்றான்.
5.துருவத்தை நுகர்கின்றான்… நுகர்ந்ததைத் தனக்குள் ஒளிசுடராக மாற்றுகின்றான்.

அகஸ்தியன் இதையெல்லாம் பெற்ற பின் தன் மனைவிக்கும் இதை ஓதுகின்றான்… மனைவி பெற வேண்டும் என்று விரும்புகின்றான்.

மனைவியோ தன் கணவனுக்குப் பெற வேண்டும் என்று அவர்கள் இரு உணர்வும் ஒன்றாகி… அது கருவாகி ஒளியாக மாற்றும் திறன் பெறுகின்றார்கள் அகஸ்தியனும் அவன் மனைவியும்.

அதன் வழி விண் சென்ற அவர்கள் துருவ நட்சத்திரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள். ஆகவே கடவுள் எப்படி இருக்கின்றான் என்பதை நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

அதனை நாம் நுகர்ந்தால் அதன் வழியில் நாமும் அங்கே செல்ல முடியும்.

அகஸ்தியன் கண்ட பேருண்மைகளை எல்லாம் உங்களுக்குள்ளும் இப்பொழுது பதிவாக்கும் நிலை வருகின்றது.
1.பேரண்டத்தைக் கண்டுணர்ந்த அகஸ்தியன் உணர்வை நமது குரு தனக்குள் கவர்ந்தார்.
2.ஒளியின் சுடராக விண்ணின் ஆற்றலை அவன் கண்டான்… பூவுலகின் நிலையையும் அறிந்தான்… உயிரியலின் தத்துவத்தை அறிந்தான்.
3.பேரண்டத்திலிருந்து எவ்வாறு நுகர்ந்தது என்று மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் அகஸ்தியன் தொடர்வரிசையை அறிந்தான்.
4.அதைத் தனக்குள் உருவாக்கினான்… கருவின் வித்தாக உருவாக்கினான்.
5.அந்த வித்தினைத் தான் எனக்குள்ளும் பதிவு செய்தான்
6.அவன் உணர்வின் துணை கொண்டு அந்த எண்ணங்களை எடுக்கப்படும் பொழுது விண்ணின் ஆற்றலை நான் நுகர முடிகின்றது.

அதில் விளைந்த உணர்வின் எண்ணங்களை வித்தாக ஊழ்வினையாகப் பதிவு செய்ய முடிகின்றது.

இதை நீங்கள் நினைவு கொள்வீர்கள் என்றால் அந்த உணர்வின் துணை கொண்டு மண்ணுலகை வென்று வானுலகின் உணர்வை நீங்கள் நுகர்ந்து கணவன் மனைவியாக இதை வளர்த்துக் கொண்டால்
1.உடலை விட்டுச் சென்ற பின் அதே விண்ணுக்கு உங்களை அழைத்துச் செல்லும்.
2.இது நிச்சயம்…!

அகண்ட பேரண்டத்தின் உண்மை நிலைகள்

அகண்ட பேரண்டத்தின் உண்மை நிலைகள்

 

மற்ற சூரியக் குடும்பத்திலும் நம்மைப் போன்ற மனிதர்கள் வாழ்கின்றார்கள்.
1.நம்மைக் காட்டிலும் வளர்ச்சி இல்லாத மனிதர்களும் உண்டு… வளர்ச்சி அடைந்தவர்களும் உண்டு.
2.இங்கே நமக்கு முடி உண்டு… முடி இல்லாது மொட்டைத் தலையாக உள்ளவர்களும் சூரியக் குடும்பங்களில் உண்டு.

நம் சூரியக் குடும்பத்தில் ஒரு பூமி இருக்கிறது என்றால் இரண்டு பூமி இருக்கக்கூடிய குடும்பங்களும் உண்டு. ஒன்று வளர்ச்சி உள்ளதாகவும் உண்டு… சிலது வளர்ச்சி இல்லாததும் உண்டு. இரட்டைக் குழந்தை என்று சொல்கிறோம் அல்லவா அது போல…!

இதையெல்லாம் விரிவாக்கமாக குருநாதர் ஒரு நாள் காட்டுகின்றார்.

சூரியக் குடும்பத்திற்குள் எல்லா இடத்திற்கும் பயணம் செய்வது வருடக் கணக்காகும் என்று சொல்கின்றார்கள். அகண்ட நிலையில் 2000 சூரியக் குடும்பத்திற்கும் போக வேண்டுமென்றால் எப்படி இருக்கும்…?

2000 சூரியக் குடும்பம் என்பது அகண்ட அண்டமாக இருக்கிறது, இதைக் காட்டிலும் எத்தனையோ அண்டங்கள் இருக்கின்றது.

அதனுடைய விரிவடைந்த நிலைகளை நீங்கள் பார்க்கப் போனால் மனிதனுக்கு ஆயுள் பத்தாது. ஆயுள் பத்தாது என்று மட்டுமல்ல… போகவும் முடியாது.
1.ஆனால் போக வேண்டும் என்றால் நம் குருநாதர் காட்டிய வழியில்
2.இந்த அருள் உணர்வுகளைப் பெற்றால் அதுபாட்டுக்குப் போய்க் கொண்டே இருக்கும்.

வான்வெளியில் நட்சத்திரங்களாக நம் கண்ணுக்குத் தெரிவதெல்லாம் 2000 சூரியக் குடும்பத்தின் ஈர்ப்பில் உள்ளது தான்.

நம் சூரியனைக் காட்டிலும் வலுவடைந்த பெரிய அளவில் உள்ள சூரியனும் சில பிரபஞ்சத்தில் இருக்கின்றது. ஒரே அளவாக இல்லை.

நீங்கள் ஒரு சமயம் இதையெல்லாம் பார்க்க நேர்ந்தால்
1.இரவிலே படுத்திருக்கும் பொழுது உங்களை மேலே அழைத்துச் செல்லும்.
2.எந்த உணர்வு பதிவானதோ ஆன்மாவிலே கலக்கும். பறப்பது போல் இருக்கும்.

ஒரு சிலர் பயந்து போய் எங்கேயோ போய் விடுவோமோ என்று எண்ணிப் பிடித்துக் கொண்டவர்களும் உண்டு. இதெல்லாம் வரும்.

ஏனென்றால் இந்த உணர்வுகள் இயக்கப்படும் போது
1.உங்கள் ஆன்மா அதனுடன் தொடர்பு கொண்டு வட்டமிடும்.
2.அதனுடைய உணர்வுகள் அறிவாக இங்கே உங்களுக்குள் வளரும்.
3.ஒரு விழுது பாய்ந்து தான் தாவர இனங்களுக்குள் வளர்ச்சி அடைகிறது…
4.அது போல் அகண்ட அண்ட்த்துடன் நீங்கள் தொடர்பு கொள்ள முடியும்

நீங்கள் இரவிலே கனவு காண்கிறீர்கள் என்றாலும் மற்ற மனிதர்கள் உடலிலிருந்து வரக்கூடியது… மற்றவர் சொல்லும் பொழுது அதைக் கேட்டிருந்தால் இரவில் உயிரிலே படும்.

இந்த உணர்வு அங்கே அழைத்துச் செல்லும். எங்கேயோ இருக்கின்ற மாதிரி இருக்கும்… பள்ளத்திலேயோ மேட்டிலேயோ மலை மீதோ எங்கெங்கோ செல்வதாகத் தெரியும்.

அந்தந்த பகுதியில் எந்தெந்த மனிதனுடைய உணர்வு விளைந்து அந்த நினைவாற்றல் இருந்ததோ அப்படி இயக்கப்பட்டு கனவுகளாக வருவதும் உண்டு.

இது எப்படியோ அப்படித்தான்…
1.அந்த அருள் ஞானிகள் உணர்வுகள் உங்களுக்குள் விளையப்படும் போது
2.அது உங்களை அங்கே அவர்கள் வாழும் எல்லைகளுக்கு அழைத்துச் செல்லும்…!

சப்தரிஷி மண்டலத்திற்குச் செல்ல வேண்டும் என்றால் அதற்குண்டான முகப்பு வேண்டும்

சப்தரிஷி மண்டலத்திற்குச் செல்ல வேண்டும் என்றால் அதற்குண்டான முகப்பு வேண்டும்

 

குருநாதரை விண் செலுத்துவதற்கு அவருக்கு ஒரு துணை தேவைப்படுகின்றது.
1.நேரடியாக எங்கும் போக முடியாது… உந்து விசை வேண்டும்.
2.முகப்பை எடுத்து எண்ணத்தைத் திசை மாறாது கொண்டு போக வேண்டும்.

திசை மாறிவிட்டது என்றால் வான வெளியில் மிதந்து விடும். அணுவின் தன்மை அடைந்தால் மற்ற கோள்களின் ஈர்ப்பிற்குள் சென்று விடும். சப்தரிஷி மண்டலத்துடன் இணையாது.

சந்திரன் இருக்கிறது என்றால் அங்கே செல்லும். அங்கே வளர்ச்சியற்ற அணுவாக இருக்கும். மீண்டும் அங்கிருந்து கடந்து செல்லும் திறன் இருக்காது. அங்கே அடைபட்டுப் போகும்.

இவ்வாறு எத்தனையோ வகைகளை குருநாதர் சொல்லித்தான் இப்பொழுது அதைச் செயல்படுத்துகின்றோம்.
1.குரு இல்லாதபடி எந்த நிலையும் இருக்க முடியாது.
2.குரு காட்டிய வழியினைப் பதிவு செய்தால் தான் விண்ணுக்குச் செலுத்த முடியும்.

கிணற்றுத் தவளை போன்று சுற்றிக் கொண்டு எடுப்பதென்றால் முடியாது.

20 வருட அனுபவத்தைக் கொடுத்துத் தான் அதைப் பெறச் செய்கின்றார். ஆகையினால் தான் உங்களுக்குள் அடிக்கடி இதைப் பதிவு செய்து நினைவுகளை ஒவ்வொன்றாகக் கொண்டு வருகின்றோம்.

அதற்குக் கணவன் மனைவி நீங்கள் இந்த முறைப்படி தியானம் எடுக்க வேண்டும். ஆன்மா வெளியே சென்று விட்டால் ஒளியின் கருவை உருவாக்க வேண்டும்.

காலை துருவ தியானத்தில் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். தன் கணவனுக்கு அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் மனைவிக்கு அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று இரு உணர்வையும் ஒன்றாக்க வேண்டும்.
1.அதை உருவாக்கித் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வைப் பெற்றுச் சப்தரிஷி மண்டல ஈர்ப்புக்குச் செல்ல வேண்டும்.
2.துருவ நட்சத்திரத்திற்குச் செல்ல முடியாது. அங்கே இருக்க முடியாது
3.அந்த வட்டப்பாதையான சப்தரிஷி மண்டலத்தில் தான் சேர முடியும்.
4.அதற்குண்டான முகப்பை எடுத்து இணைத்துச் செலுத்திய பிற்பாடு தான் அங்கே சேரும்.

இராக்கெட்டைச் செய்கின்றார்கள் கம்ப்யூட்டரில் படங்களை எடுக்கின்றார்கள். அதைச் சேர்த்துக் கொண்டு முகப்பில் வைக்கின்றார்கள்.

விண்ணிலே செலுத்தப்படும் பொழுது அந்த முகப்பைப் பார்த்து அதனின் ஈர்ப்புக்குத் தான் கொண்டு போகும். கொஞ்சம் திசை மாறியது என்றால் வேறு எங்கே போகும்…! என்று சொல்ல முடியாது.

எந்த எந்தக் கோள்களைப் படமாக எடுத்துப் பதிவு செய்தார்களோ அதை இந்த முகப்பில் இணைக்க வேண்டும். அந்த உணர்வின் துனை கொண்டு அங்கே செல்லும்.

இதைப் போன்று தான்
1.உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஒவ்வொரு ஆன்மாக்களுக்கும் சப்தரிஷி மண்டல உணர்வை முகப்பாக இணைக்கின்றோம்.
2.அப்படி இணைக்காதபடி அந்த இடம் போய்ச் சேர முடியாது.

விலகிப் போய்விட்டால் வேறு பக்கங்களுக்குச் சென்று விடும். கரணம் தப்பினால் மரணம் என்பது போல பல வித்தியாசமான நிலைகள் இருக்கின்றது.

குரு செல்கிறார் என்றால் அது சரியான எல்லையை வைத்து அனுப்புவதற்கு எனக்குப் பயிற்சி கொடுத்தார். அங்கே செலுத்தும்படிச் செய்தார்.

1.அதை எப்படிச் செயல்படுத்த வேண்டும் என்று வரிசைப்படுத்தி எனக்குச் சொன்னார்.
2.அது எல்லாம் சரியாக இருக்கிறது என்று தெரிந்து கொண்ட பிற்பாடு தான் உடலை விட்டுப் பிரிகின்றார்.
3.சப்தரிஷி மண்டல உணர்வை முகப்பில் எப்படி இணைக்க வேண்டும்…?
4.எவ்வாறு விண் செலுத்த வேண்டும்…? என்று எல்லாம் தெரிந்த பிற்பாடு தான் அவர் உடலை விட்டுப் பிரிந்து அங்கே சேர்கின்றார்.

குருவை விண் செலுத்திய பிற்பாடு தான் அங்கிருந்து அதிக அளவில் நான் சக்தியைப் பெற முடிந்தது. உங்களுக்கும் இப்பொழுது வழிகாட்ட முடிகின்றது.

உயிருடன் ஒன்றிடும் உணர்வை ஒளியாக மாற்றுவது தான் நமக்கு நல்லது

உயிருடன் ஒன்றிடும் உணர்வை ஒளியாக மாற்றுவது தான் நமக்கு நல்லது

 

ஒரு ஆடு புலியைப் பார்க்கின்றது… புலியோ அதைக் கொன்று தின்னும் நிலை பெற்றது. அதனிடமிருந்து தப்பிக்கும் சிந்தனை ஆட்டிற்கு வருகிறது.

புலியின் உணர்வே நினைவாகின்றது. நினைவின் உணர்வே உடலாகின்றது… ஆட்டின் உடலில் அது வலுப்பெறுகின்றது. அந்தச் சிந்தனை கொண்டு அதனிடமிருந்து தப்பிக்க அதனின் வலுப்பெறுகின்றது… அதுவாகின்றது.

மனிதர்களான நாம் இந்த உடலிலிருக்கும் போது
1.எனக்கு இப்படிச் செய்தானே… துன்பம் கொடுத்தானே என்ற இந்த சிந்தனை இந்த உணர்வின் தன்மை வருகிறது.
2.இந்த இடத்தை நாம் வலுவாக்குகின்றோம்… அந்த உடலுக்குள் சென்று விடுகின்றோம்.

ஆனால் உடலிலே வந்த தீமைகளை அகற்ற “மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்…” என்று
1.அந்த உணர்வின் தன்மை… நம் சிந்தனையை அதற்குள் செலுத்தினோம் என்றால்
2.அதனின் உணர்வாகி அதனின் நிலைகள் கொண்டு மனித உடலில் ஒளியாக மாற்றிக் கொள்ள முடியும்.

இந்த உடலிலிருந்து தான் ஒளியாக மாற்றி அமைக்க முடியும். இன்னொரு உடலுக்குள் இழுக்கப்பட்டு விட்டால் மீண்டும் வேறு ஒரு உருவாக உயிர் நம்மை மாற்றிவிடும்.

ஆனால் மகரிஷிகளின் அருள் சக்தியை எடுக்கப்படும் பொழுது ஒளியின் தன்மை பெறுகின்றோம்.
1.அங்கே… உடல்கள் உருவங்கள் மாறுகின்றது.
2.இங்கே… ஒளியின் தன்மை பெறுகின்றோம்.

உயிர் ஒளியானது… மனிதனான பின் அறிவாக அறிந்து கொள்கிறோம். அறிந்திடும் ஒளியின் உணர்வாக விளைகின்றோம். மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று உடலில் “சிந்தனை வந்த பின்பு தான்…” இதிலே உறைந்த உணர்வுகள் அதனின் இயக்கத்திற்கு வருகின்றது.

நான் கோபமாக இருக்கின்றேன் என்று வைத்துக் கொண்டால் எனக்கு அது சாதகமாக இருந்தால் நல்லது. நான் தவறு செய்கின்றேன்… நண்பன் என்னுடைய தவறுக்கு ஒத்துழைத்தால் இது நல்லதாகின்றது.

ஆனால் மாறாக… என் தவறைச் சுட்டிக் காட்டும் நிலை வந்தால் எனக்கு எதிரியாகின்றது. ஆக நல்லது நல்லதாக எண்ண முடியாது… கெட்டது கெட்டதாக எண்ண முடியாது.
1.தனக்கு ஒத்து வந்தால் நல்லது என்று எண்ணுகின்றோம்…
2.ஒத்து வரவில்லை என்றால் எதிரியாக்குகிறோம்.

மிளகாய் காரமானது தான். அதை அளவுடன் இணைத்தால் நல்லதாகிறது அதிகமாகப் போட்டுவிட்டால் ஏற்றுக் கொள்வதில்லை… குறைத்துப் போட்டு விட்டால் சப்… என்று ஆகிவிடுகிறது.

நல்லது நல்லதும் அல்ல… கெட்டது கெட்டதும் அல்ல.

1.ஒளியின் சரீரம் பெற்ற… என்றுமே நிலையாக இருக்கும் அந்த மகரிஷிகள் அருள் சக்திகளை எடுத்தால் அதுவே நமக்கு நல்லது.
2.உயிர் ஒளியாக நின்று எதையெல்லாம் தனக்குள் அறிவிக்கின்றதோ “உயிருடன் ஒன்றிடும் உணர்வை ஒளியாக மாற்றுவது தான் நமக்கு நல்லது…”

புறநிலைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்பாதீர்கள்… விண் செல்லும் மார்க்கத்தை அறிய முற்படுங்கள்

புறநிலைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்பாதீர்கள்… விண் செல்லும் மார்க்கத்தை அறிய முற்படுங்கள்

 

அன்று… ஆதிசங்கரரும் கோலமாமகரிஷியும் அவர்கள் உணர்வின் தன்மை கொண்டு தங்களுக்குள் விளைய வைத்ததைத் தன் சீடர்களுக்குள் பதிவு செய்தார்கள்.

அவர் மீது பற்று கொண்ட சீடர்கள்…
1.அவர்கள் எதை உணர்த்தினார்களோ அதைக் கொண்டு அந்த ஆன்மாவை உந்தித் தள்ளுகின்றார்கள்…
2.இருவரும் சப்தரிஷி மண்டலம் அடைந்தார்கள்.

நமது குருநாதர் எத்தனையோ கோடி நிலைகள் பெற்றிருந்தாலும்… “எனக்கு அந்தக் குருவின் ஆசி இருந்தால்…” மாட மாளிகைகளை… கூட கோபுரங்களைக் கட்டி விடுவேன்
1.”அவருடைய நாமத்தை உலகமெல்லாம் பரப்புவேன்…!” என்ற பக்தர்கள் தான் சிஷ்யர்கள் தான் இன்று பெரும்பகுதி உண்டு.
2.அதனால் பலன் இல்லை…!

அறிந்து கொள்ளும் ஆற்றல்கள்…. இந்த வாழ்க்கையில் அவர் எப்படி மந்திரம் செய்கிறார்…? இவர் என்ன செய்கிறார்…? அவர் என்ன செய்கிறார்…? என்ற நிலைகளை அறிய உங்கள் நாட்டத்தைச் செலுத்த வேண்டாம்.

காரணம்… எம்மை நாடி வருவோரின் ஏக்கம் எதுவோ அதன் வழி தான் அவருக்குள் உணர்வுகள் பதிவாகின்றது.

மந்திரத்தின் உணர்வைப் பதிவு செய்து கொண்டால் அதிலே தான் நோக்கம் இருக்கும்… மந்திரத்தின் செயலைக் கேட்க வேண்டும் என்றால் அது ஆழமாகப் பதிந்திருக்கிறது என்று தான் பொருள்.

அதன் மேல் எண்ணம் கொண்டு விவரங்களைத் தெரிந்து கொண்டால் அது தான் வளரும். இதிலிருந்து விடுபடும் வழிமுறைகள் எப்படி…? என்று கேட்டால் விடுபடும் உணர்வுகள் வளரும்.

அதாவது…
1.என்னிடம் கேட்ட உணர்வு கொண்டு தான் உங்களுக்குள் அது பதிவாகும்.
2.“கஷ்டமாக இருக்கிறது…” என்று சொல்லிக் கேட்டால் அந்தக் கஷ்டத்தையே வளர்க்க உதவும்.
3.கஷ்டத்தை நீக்க வேண்டும் என்று கேட்டறிந்தால் “கஷ்டத்தை நீக்கும் உணர்வுகள் விளையும்…”

கேட்டறிவோர் உணர்வின் தன்மை அது எதுவோ அதுதான் வளரும். அதனால் தான் கீதையில் நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகிறாய் என்று சொன்னது.

என் கஷ்டம் என்ன விட்டுப் போகவே மாட்டேன் என்கிறது…! என்றால்… அது வந்து விடும்.
1.இந்த மனித வாழ்க்கையில் இருந்து “நான் நல்ல நிலை பெற முடியுமா… மீள முடியுமா…? சந்தேகம்…!
2.மீள முடியாது என்ற நிலைகளில் “வலு இழந்து விட்டால்…” மீள முடியும் என்ற நிலை வராது.

ஆனால் மீள வேண்டும் என்ற எண்ணத்தை வலுப்பெற்றுக் கொண்டால் அந்த எண்ணம்… கொடுக்கும் வாக்கின் தன்மையைப் பதிவு செய்தால் அதன் வளர்ச்சிக்கு நிச்சயம் வரும்.

பெரும்பகுதியானவர்கள் இன்று கஷ்டத்தைப் பற்றித் தான் என்னிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள். இது எப்படி ஆனது…? என்ன ஆனது…? என்று கேட்கிறார்கள்.

உணர்வின் தன்மை இயக்கம் எப்படி ஆகிறது…! என்பதைப் பற்றி பல விளக்கவுரைகளை… பல முறைகளில் கொடுத்துள்ளேன். இது அவர்களுக்குள் பதிவாகவில்லை என்று தான் பொருள்.

1.இதிலிருந்து விடுபட்டு… நாம் மேற்கொண்டு விண் செல்லும் மார்க்கங்களை எண்ணி ஏங்கி… அதைப் பெற்று
2.அது எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று ஏங்கினால் அது பதிவாகும்.
3.அதன் உணர்வின் துணை கொண்டு தான் உடலுக்குள் அந்த நற்சக்திகள் விளையும் தன்மை வரும்.

பெண்கள் துணை இல்லையென்றால் சப்தரிஷி மண்டலம் செல்வது மிகவும் கடினம்

பெண்கள் துணை இல்லையென்றால் சப்தரிஷி மண்டலம் செல்வது மிகவும் கடினம்

 

தான் கவர்ந்து கொண்ட சக்தி எதுவோ அதைப்போல உயிருடன் ஒன்றி இணைந்து வாழ்வதே வசிஷ்டரும் அருந்ததியும் என்பது.

உடலில் இருக்கும் பொழுது தான் ஆண்பால் பெண்பால். உடலை விட்டுச் சென்று விட்டால் உறைந்தது ஆண்பால் தான்.

1.பெண்பால் என்பது உணர்வின் உணர்வுகள் இங்கே வருவது தான்.
2.அது இரண்டற இணைந்து விட்டால் ஆண்பால் பெண்பால் சேர்ந்து கலந்தே செயல்படும்… “சிவசக்தி…” என்பார்கள்.

ஆகவே பெண்கள் தான் ஆண்களைக் காட்டிலும் பெரும்பகுதி தனக்குள் சக்தி வாய்ந்த நிலையை உருவாக்கி ஏழாவது நிலை பெற்றுச் சப்தரிஷி மண்டலங்களாக உள்ளார்கள்.

ஆண்களைப் பற்றித் தான் பெரும்பகுதி சொல்கின்றார்கள்… பெண்கள் ரிஷித் தன்மை பெற்றது பற்றிச் சொல்லவில்லையே…! என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

காரணம்… சாஸ்திர விதிகள் அனைத்துமே பெண்களைப் பற்றி இழுக்குப்படுத்தித் தான் வெளிப்படுத்தி இருப்பார்களே தவிர உயர்ந்த நிலைகளைச் சொல்வதில்லை.

பதிவிரதையாக இருக்க வேண்டும் உத்தமியாக இருக்க வேண்டும் என்று பெண்களுக்குத் தான் கட்டுப்பாடு… ஆண்களுக்கு அப்படி இல்லை. எல்லா மதத்திலும் அப்படித்தான்… பெண்களைத்தான் பழித்து பேசியிருப்பார்கள்.

இன்று ஆணாக இருக்கலாம்…
1.ஆனால் உருவம் ஆகப்படும் போது பெண்கள் மீது மோகம் கொண்டால் அடுத்து இவர் பெண்ணாகத்தான் பிறப்பார்.
2.இன்று ஆண் பெண்ணாகப் பிறக்கின்றான்.

இதைப் போல சக்தி என்பது பெண்பால் தான். எது கவர்ந்து கொண்ட சக்தியோ வசிஷ்டரும் அருந்ததி போல கவர்ந்து கொண்ட சக்தியாகத்தான் இந்த உணர்வுகள் ஈர்க்கும்.
1.பெண்கள் தான் ஏராளமானோர் சப்தரிஷி மண்டலத்தில் (ஆண்பால் பெண்பால்) சிவசக்தியாக உணர்வின் இயக்கமாக இயக்கி வருகின்றனர்.
2.தன் கணவனின் எண்ணம் கொண்டு இணைந்திட்ட உணர்வுகள் சிவ சக்தியாக இயங்கிக் கொண்டுள்ளார்கள்.
3.தான் எடுத்துக் கொண்ட உணர்வுகள் எதுவோ உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக சிவசக்தியாக இன்றும் இருக்கின்றார்கள்.

ஆண்கள் அங்கே குறைவுதான்… பெண்கள் தான் அங்கே அதிகமாக இணைந்துள்ளார்கள். ஆண்கள் ஒளி நட்சத்திரமாக ஆன நிலைகள் குறைவுதான். பெண்களுடைய சக்தி உறுதி கொண்டு தான் அவர்கள் வளர்ச்சி பெற்றுள்ளார்கள்.

தங்கள் உடலிலே ஒரு கஷ்டம் வந்தாலும் பெண்கள் அதை எண்ணுவதில்லை. விட்டுக் கஷ்டத்தைப் போக்க மில்லில் வேலை செய்கிறார்கள் என்று வைத்துக் கொண்டாலும் காலையில் எழுந்து குடும்பத்திற்கு வேண்டிய அனைத்தையும் சமைத்து எல்லோருக்கும் சாப்பாடு போட்டு அவர்களும் சாப்பிட்டுவிட்டு வேலைக்கு முதலிலே வந்து உற்பத்தியையும் அதிகமாக எடுத்து விடுகின்றனர்.

பெண்களுக்கு வலிமை அதிகம் ஆண்களுக்குக் குறைவுதான். நான் தவறாகச் சொல்கிறேன் என்று யாரும் எண்ண வேண்டியதில்லை…! இயற்கையின் உணர்வின் சக்தி அதுதான்.

அவர்கள் உடலில் முடியவில்லை என்றாலும் வலுவான எண்ணங்கள் கொண்டு சப்தரிஷிகளின் அருள் சக்தி பெறக்கூடிய தகுதி அவர்களுக்குத் தான் உண்டு.
1.எந்த அளவுக்குப் பெண்கள் தனக்குள் அதை வளர்க்கின்றார்களோ இந்த எண்ணம் உலகைக் காக்கும் நிலைக்கே வரும்.
2.சக்தி இல்லை என்றால் சிவம் இல்லை.

மற்றதை வளர்த்திடும் நிலையாக தன் இனத்தை வளர்த்திடும் காத்திடும் நிலைகள் பெற்றவர்கள் தான் பெண்கள். எதனின் உணர்வு கொண்டு கருத்தன்மையாகிக் குழந்தையை உருவாக்குகின்றார்களோ அந்த மெய் உணர்வை வளர்க்கும் ஆற்றல் அவர்களுக்குத்தான் அதிகமாக உண்டு.

எதனின் பற்று அதிகமாகின்றதோ அதனின் தன்மை கொண்டு வளர்த்திடும் சக்தியும் சக்தி அதிகமாகின்றது. பெண்கள் தான் அதிக அளவில் சப்தரிஷி மண்டலத்தில் இணைந்துள்ளார்கள்.

வசிஷ்டரும் அருந்ததியும் போன்று இந்த உடல் தனக்குள் கவர்ந்து கொண்ட சக்தி எதுவோ அதுதான் விசிஷ்டாத்வைதம் என்று சொல்வது. எந்த உணர்வின் தன்மையை உடலாக ஆக்கியிருக்கின்றதோ… சக்தியாக எடுக்கின்றோமா… இது இணைந்தே அங்கே செயல்படும்.

ஆக பெண்களுக்கு தான் அதிகச் சக்தி உண்டு…! ஆனால் இதனின் விளக்கம் மதங்களிலே காண முடியாது… தரம் குறைத்துத் தான் காட்டி இருப்பார்கள் மற்றவர்களுக்கு அடிமையாக்கித் தான் காட்டியிருப்பார்கள். ஆனால்
1.அவர்கள் துணை இல்லை என்றால்
2.சப்தரிஷி மண்டலம் செல்வது மிகவும் கடினம்…!

உங்களுக்குத் தன்னம்பிக்கை கொடுக்கத்தான் மீண்டும் மீண்டும் உபதேசிக்கின்றேன்

உங்களுக்குத் தன்னம்பிக்கை கொடுக்கத்தான் மீண்டும் மீண்டும் உபதேசிக்கின்றேன்

 

நாம் செய்ய வேண்டிய அற்புதம் எதுவாக இருக்க வேண்டும்…?
1.நமது பார்வை பிறருடைய தீமைகளை நீக்க வேண்டும்
2.நமது பார்வை அவர்களுக்குள் ஞானத்தைத் தோற்றுவிக்க வேண்டும்.

இதை நாம் வளர்த்தோம் என்றால் என்றும் அழியா ஒளிச்சரீரம் பெற முடியும்.

அந்த மகரிஷிகள் அருள் ஒளி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். என்னைப் பார்ப்பவருக்கு மன மகிழ்ச்சி கிடைக்க வேண்டும் என்று நாம் செயல்படுத்த வேண்டும்.

“மன மகிழ்ச்சி” கிடைக்க வேண்டும் என்றால் வேதனைப்படுவதைக் கண்டு மகிழ்ச்சி பெறுவதல்ல.
1.என் (நம்முடைய) சொல்லால் பேச்சால் செயலால் பார்வையால்…
2.நான் நல்லதானேன்… எங்களுக்கு நல்லதானது…! என்று அந்த மகிழ்ச்சி அவர்களுக்கு வர வேண்டும்.
3.உங்கள் பார்வை பிறரைப் புனிதப்படுத்தும் நிலையாக வர வேண்டும்.
4.உங்கள் உணர்வின் தன்மை தூய்மைப்படுத்தும் உணர்வின் ஆன்மாவாக மாற்ற வேண்டும்.

சப்தரிஷி மண்டலம் என்பது தீமை தனக்குள் வராதபடி ஒளியாக மாற்றிக் கொண்டது தான்.

நமது பிரபஞ்சத்தில் உள்ள நட்சத்திரங்கள் மற்ற பிற மண்டலங்களில் வருவதை ஒடுக்கி துகள்களாக பால்வெளி மண்டலங்களாக மாற்றுகின்றது.

அது தூசிகளாக மாறுவதைக் கோள்கள் எடுக்கின்றது. அதைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து துகள்களாக மாற்றுகின்றது… பின் அதனின் ஓட்டத்தில் தூசிகளாக மாறுகின்றது. அதனைச் சூரியன் ஒளிச் சுடராக மாற்றுகின்றது.

இதைப் போன்று தான்
1.மகரிஷிகளின் அருள் உணர்வை உங்களுக்குள் வலுக் கொண்டதாக மாற்றி…
2.பால்வெளி மண்டலங்களாக உங்களிடம் இருக்கும் எண்ணிலடங்காத குணங்களில் இணைத்து இணைத்து
3.எத்தகைய நிலையிலும் அது உங்களுக்குள் தூய்மைப்படுத்திடும் சக்தியாக நீங்கள் பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்குடன் தான்
4.எமது குருநாதர் காட்டிய அருள் வழியினை உங்களுக்குக் காட்டுகின்றேன்.

ஆகவே… தீமையை அகற்றித் தூய்மை பெறும் உணர்வின் தன்மையை நீங்கள் விளைய வைத்து இந்த உடலை விட்டு அகன்றால் அழியாச் செல்வமான பேரருள் பேரொளியாக நீங்கள் நிச்சயம் வருவீர்கள் என்ற “தன்னம்பிக்கையைக் கொடுக்கத்தான் இதைச் செய்கின்றேன்…”

அருள் செல்வம் நீங்கள் பெறுவீர்கள்… அருள் ஞானம் பெறுவீர்கள்… இந்த அருள் உணர்வு உலகம் முழுவதும் பரவட்டும்.

பல கோடிச் சரீரங்களில் தீமைகளை வென்றிடும் சக்தி பெற்று… வளர்த்துத் தான் இன்று மனிதனாக வந்துள்ளோம்

பல கோடிச் சரீரங்களில் தீமைகளை வென்றிடும் சக்தி பெற்று… வளர்த்துத் தான் இன்று மனிதனாக வந்துள்ளோம்

 

இயற்கையின் நிலைகள் மாறுபட்டுக் கொண்டிருக்கும் இந்த வேளையில்… மனிதனாக உருப்பெற்ற பின் உணர்வின் தன்மை ஒளியாக மாற்றிய துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வினை நாம் நுகர்ந்து நமக்குள் அந்த உணர்வை வளர்த்துக் கொண்டால்… நாம் பிறவி இல்லா நிலை அடைய இது உதவும்.

1.மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ நாம் பழகிக் கொள்ள வேண்டும்.
2.அந்த உணர்வினை நுகர்ந்து நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
3.துருவ மகரிஷியின் அருள் சக்தியை நாம் பெறுவதற்கு துருவ தியானம் இருந்து பழகுதல் வேண்டும்.

கஷ்டங்களையும் நஷ்டங்களையும் எப்போது பார்த்துணர்ந்தாலும் அடுத்த கணம் துருவ நட்சத்திரத்தை எண்ணி அந்தச் சக்தி எங்கள் ரத்த நாளங்களிலே கலக்க வேண்டும் என்று இதைக் கலந்து… கேட்டறிந்த தீமை வலுப் பெறாதபடி தடுத்துப் பழகுதல் வேண்டும்.

அதற்குத்தான் ஆத்ம சக்தி என்ற ஆயுதத்தைக் கொடுத்துள்ளோம். அதை வைத்துத் தீமைகள் வளராது தடுத்தல் வேண்டும்.

ஏனென்றால்
1.பல கோடிச் சரீரங்களில் தீமைகளிலிருந்து விடுபடும் உணர்வை நாம் நுகர்ந்து நுகர்ந்து நுகர்ந்து
2.அதன் வழியில் தான் மனிதனாக வளர்ச்சி பெற்று வந்திருக்கின்றோம்.

மனித உடலிலிருந்து வெளிப்படும் மணம் கார்த்திகேயா என்றும்… தீமை என்று தெரிந்த பின் அந்தத் தீமை புகாது தடுக்கும் நிலை தான் சேனாதிபதி ஆறாவது அறிவு என்றும்… முருகன் பிரம்மாவைச் சிறை பிடித்தான் என்றும் ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

துருவ நட்சத்திரத்திலிருந்து வருவது “நஞ்சினை வென்றிடும் சக்தி…? என்று அதை அறிகின்றோம் கார்த்திகேயா. அதை நமக்குள் நுகர்ந்து உருவாக்கினால் தீமை புகாது அதனை அடக்கி… “ஒளியின் சிகரமாக மாற்றும் சக்தி வரும்…”

மனிதனான பின் பல கோடிச் சரீரங்களில் தீமைகளை வென்றிடும் உணர்வைச் சேர்த்துச் சேர்த்து அதன் அறிவாக அறிந்திடும் அறிவைச் சேர்த்துச் சேர்த்து இன்று நாம் அனைத்தையும் அறிந்திடும் ஆற்றலைப் பெற்றிருக்கிறோம்.
1.அந்த ஆறாவது அறிவைத் தான் கார்த்திகேயா என்றும்
2.சேனாதிபதி என்றும் தீமைகள் புகாது பாதுகாக்கும் நிலை என்றும்
3.பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் என்றும் காட்டியுள்ளார்கள்.

இத்தகைய நிலைகள் வளர்ச்சி பெற்று அதிலே முழுமை அடைந்தவன் தான் துருவ மகரிஷி… துருவ நட்சத்திரமாக உள்ளார். அதனின்றி வெளிப்படும் உணர்வைச் சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது.

அதை உங்களுக்குள் பதிவாக்கி நீங்கள் அதை எடுக்கும் நிலைக்குத் தான் உபதேசித்து வருகிறோம்.
1.அதன் உணர்வை நீங்கள் ஏங்கிப் பெற்று ஊழ்வினை என்ற வித்தாக வைத்து
2.அதை மீண்டும் நினைவு கொண்டு அருள் ஒளி என்ற உணர்வினைத் தனக்குள் வளர்த்துப் பிறவியில்லா நிலை அடைய முடியும்.

அது உங்கள் எண்ணத்தில் தான் இருக்கின்றதே தவிர… யாரோ வந்து அந்தப் பிறவி இல்லாத நிலை நம்மை அடையச் செய்வார் என்று எண்ணுதல் வேண்டாம்.

நாம் விண்ணிலே செலுத்திய உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்தில் இணந்ததை எப்படி உறுதிப்படுத்துவது…?

நாம் விண்ணிலே செலுத்திய உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்தில் இணந்ததை எப்படி உறுதிப்படுத்துவது…?

 

துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் முதலில் வலு ஏற்றிக் கொள்ள வேண்டும். வலு ஏற்றிக் கொண்ட பின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற எங்கள் முன்னோர்களின் உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று நாம் விண்ணிலே உந்திச் செலுத்த வேண்டும். அவருடைய உணர்வு தான் நம் உடல்.

அங்கே சப்தரிஷி மண்டலத்தில் இணைந்த பின் நஞ்சைக் கரைத்த உணர்வுகளில் இந்த ஆன்மாக்கள் பட்டபின் உடல் பெறும் உணர்வுகள் கரைகின்றது.
1.உயிரும் உணர்வும்… நாம் எடுத்துப் பாய்ச்சிய உணர்வின் தன்மை கொண்டு
2.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் ஒளிச் சரீரம் பெறுகின்றார்கள்.

இருந்தாலும்… இதற்கு முன் நாம் செய்யத் தவறி விட்டோம். இன்னொரு உடலுக்குள் அவர்கள் புகுந்திருக்கலாம்.

காலை துருவ தியானத்தில் அடிக்கடி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும். உடலை விட்டுப் பிரிந்து சென்ற குலங்களின் தெய்வங்களான முன்னோர்களின் உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று இந்த உணர்வுகளைக் கூட்ட கூட்ட
1.அவர்கள் எந்த உடலில் இருந்தாலும் நாம் செலுத்தும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் அவருக்குள் சேர்க்கப்பட்டு
2.துரித நிலைகள் கொண்டு அவர்களுக்கு நலம் பெறும்.

ஏனென்றால்… இவர் உடலை விட்டுப் பிரியும் போது எந்த நோயின் தன்மை பெற்றாரோ இந்த உணர்வின் இயக்கமாகத் தான் புகுந்த உடலிலே செயல்படுத்தும்.

சார்புடையவர்கள் அந்த ஆன்மா விண் செல்ல வேண்டும் என்று எண்ணப்படும் பொழுது அவர் உணர்வு இங்கே இருப்பதால் வேறு உடலில் இருந்தாலும் இந்த உணர்வுகள் கலக்கப்பட்டுக் கொண்டே வரும்.

நாளடைவில் வெளிவந்த பின்… துருவ தியானத்தில் நாம் எண்ணி உந்திச் செலுத்தப்படும் பொழுது “எளிதில் அங்கே சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்யும்…”

இதிலே அந்த ஆன்மாக்களை நாம் விண் செலுத்தியது… அதற்குண்டான உணர்வுகள் வரும்.
1.அங்கே சொர்க்கம் அடைந்த உணர்வினை உங்களுக்குத் தெளிவாக உணர்த்துவார்கள்.
2.”நான் சொர்க்கத்தில் இருக்கின்றேன்…” என்ற உணர்வினை கனாக்களில் வந்து சொல்வார்கள்… சிலருக்கு அது தெரியும்.

சொர்க்கம் அடையவில்லை என்றால் உடலை விட்டு வந்தபின் என்னை ஏன் நீ அனுப்பவில்லை…? என்று உங்களுக்குள் அந்த உணர்வினை ஊட்டி நினைவுபடுத்தும்.

ஏனென்றால் உடலின் உணர்வுக்குள் ஆசை என்ற உணர்வின் உணர்ச்சியால் நமக்குள் அறியச் செய்யும் உணர்வின் தன்மையும் உண்டு.

அதே போல்… உங்கள் முன்னோர்கள் யாராவது சப்தரிஷி மண்டலம் சென்று விட்டால் அவர் உணர்வு உங்களுக்குள் இருந்தால்
1.இன்னொரு உடலை விட்டு ஆன்மா வெளி வந்தபின்
2.என்னை ஏன் நீ அனுப்பவில்லை…? என்ற உணர்ச்சி உங்களுக்குள் இயக்கப்பட்டு
3.நினைவு கூர்ந்து அவர்களையும் விண்ணுக்குச் செலுத்த முடியும்

ஆனால் இதற்கு முன்னாடி நாம் அவர்களை எல்லாம் பேயாகத்தான் மாற்றி வைத்திருக்கின்றோமே தவிர நல்ல வழியில் செயல்படுத்தவில்லை.

இப்போது நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்த மறைந்த நிலைகளைக் காட்டி… விண் செலுத்தும் மார்க்கத்தினைத் தான் உங்களைச் செயல்படுத்தச் சொல்கிறோம்.

முன்னோர்களைக் கனியாக்கி… நாமும் கனியாகி… சந்ததியினரையும் கனியாக்கும் (ஒளியாக்கும்) முறை

முன்னோர்களைக் கனியாக்கி… நாமும் கனியாகி… சந்ததியினரையும் கனியாக்கும் (ஒளியாக்கும்) முறை

 

உங்கள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்…!

சொந்த பந்தமாக இருந்தாலும்… தன் குடும்பத்தாராக இருந்தாலும்… அவர்கள் உடலை விட்டு ஆன்மா பிரிகிறது என்றால்… அடுத்த நிமிடமே “ஈஸ்வரா…” என்று உங்கள் உயிரை எண்ணி
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று ஏங்கி
2.அந்த உணர்வுகளை உடலுக்குள் செலுத்துங்கள்.

பின்…
1.உடலை விட்டுப் பிரிந்து சென்ற எங்கள் குலதெய்வமான அந்த உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து
2.உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைந்து… பெரு வீடு பெருநிலை என்ற நிலை அடைதல் வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

ஏனென்றால்… அவர்கள் உணர்வுகள் நமக்குள் இருப்பதால் இதை வலுப்படுத்தி இந்த வலுவின் துணை கொண்டு அந்த ஆன்மாவை… சூட்சம சரீரத்தை விண் செலுத்துதல் வேண்டும்.

அவ்வாறு விண் செலுத்தினால்…
1.நாம் மேல் நோக்கி விண் செலுத்திய அந்த உணர்வின் தன்மையை… நாம் மீண்டும் நுகரப்படும் பொழுது
2.இங்கே அந்த (முன்னோர்ளைப் பற்றிய) ஈர்ப்பின் சக்தியை… அந்த உணர்வுகளைச் சூரியன் கவர்ந்து கொள்கின்றது
3.அவ்வாறு அது கவர்வதனால்… உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மா நமக்குள் உட்புகாது தடுத்து நிறுத்துகின்றது.

ஏனென்றால்… அவர்கள் உணர்வுகள் நமக்குள் இருக்கும் நிலையில்
1.நாம் விண் செலுத்தத் தவறினால்… நம் ஆன்மாவில் வந்து விட்டால் “நம் சுவாசத்தின் வழி…” உடலுக்குள் நிச்சயம் சென்றுவிடும்.
2.ஆகவே இதன் வழி அடைத்துவிட்டு உணர்வினை ஒளியாக்குதல் வேண்டும்.

மாறாக… மேலே சொன்னபடி விண்ணுக்கு அனுப்பினால் அந்த உணர்வுகளைச் சூரியனுடைய காந்தப் புலனறிவு… அதை அங்கே தனக்குள் கவர்ந்து சென்றுவிடும்.

இந்த உடலிலே பெற்ற நோயின் உணர்வை… அந்த உணர்ச்சிகளை அங்கே கரைத்து விடும்.

ஆகவே உயிருடன் ஒன்றிய நிலைகளில்
1.”தான் வாழ வேண்டும்…” என்ற உணர்வின் தன்மை அங்கே ஒளியாகின்றது.
2.துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வினை “அது உணவாக எடுத்து…” அதனின் ஈர்ப்பு வட்டத்தில் சுழலும்.

சூரியனின் ஈர்ப்பு வட்டத்தில் வளர்ந்த கோள்கள் எப்படி அதனைச் சுழன்று வாழ்கின்றதோ இதைப் போல துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் வலுவாக்கி விட்டால்… அதனுடைய ஈர்ப்பு வட்டத்தில் அடுத்து நம் மூதாதையரின் உயிரான்மாக்கள் அங்கே செல்கின்றது.

அதே போல… நண்பன் என்று நாம் பழகிய நிலைகள் அவர் சந்தர்ப்பத்தால் உடலை விட்டுப் பிரிந்து சென்றால் (இறந்தவர் யாராக இருந்தாலும்… நாம் கேள்விப்பட்டால்) அந்த உயிரான்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து பெருவீடு பெருநிலை என்ற நிலை அடைய வேண்டும்… அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

இப்படி…
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் பெருக்கி வலு சேர்த்துக் கொண்டு
2.”இத்தகைய அடைப்பாக நாம் அமைத்துக் கொண்டு…” அந்த ஆன்மாக்கள் நமக்குள் புகாதபடி இங்கே தடுக்க வேண்டும்.

இதைத்தான் இராமாயணத்தில் வாலியை… இராமன் மறைந்திருந்து தாக்கினான்…! என்று சொல்வது. அதாவது… துருவ நட்சத்திரத்தின் சக்தியை வைத்து நமக்குள் அடைத்து விட்டால் “எந்த ஆன்மாவும் உள்ளே செல்லாது…”

இவ்வாறு நம் முன்னோர்களை விண் செலுத்தி விட்டால் துருவ நட்சத்திரத்தின் சக்தியையும் சப்தரிஷி மண்டலத்தின் சக்தியையும் நாம் எளிதில் பெற அது உதவுகின்றது.

அவர்கள் முதலிலே மனிதனாளர்கள்… அடுத்து நம்மை அவர்கள் தான் மனிதனாக உருவாக்கினார்கள்.

உதாரணமாக…
1.ஒரு விழுதின் தன்மை மரமாக வளரப்படும்போது… விழுது எப்படி அதைக் கனியாக்குகின்றதோ
2.இதைப் போன்று நாம் முன்னோர்களைக் கனியாக்க வேண்டும்
3.ஏனென்றால் கனியாக உருவாக்குவது அதன் விழுதுகளே…!
4.(மரம் – முன்னோர்கள்… விழுது – நாம்)
5.ஆகவே… நாம் இதை முறைப்படுத்திச் செய்தால் அவர்கள் கனியாகின்றார்கள்.

கனி என்பது… உயிர் ஒளி. குருநாதர் காட்டிய அருள் வழிப்படி அந்த உயிருடன் ஒன்றும் “அனைத்தும் ஒளியாக்கப்படும் பொழுது…” கனியாகின்றது…!

கனியின் தன்மை அடைந்த பின்… அதாவது விழுதுகளான நாம் அதை உருவாக்கப்படும் பொழுது
1.அந்தக் கனியின் தன்மையை நாம் விழுங்கும் பொழுது…
2.அது எப்படிக் கனியானதோ… அதை (அதே) முறைப்படுத்தி நாமும்…
3.நம் உணர்வுகள் (உயிருடன் ஒன்றுவது) கனியாகி… பிறவி இல்லா என்ற நிலை அடைகின்றது.