தாய் தந்தையரிடம் தினமும் ஆசீர்வாதம் (நல்ல வாக்குகள்) வாங்கும் பழக்கம் நம்மிடம் இருக்கின்றதா…?

தாய் தந்தையரிடம் தினமும் ஆசீர்வாதம் (நல்ல வாக்குகள்) வாங்கும் பழக்கம் நம்மிடம் இருக்கின்றதா…?

 

நாம் தாய் தந்தையை முதல் தெய்வமாக வணங்கச் சொல்கிறோம்…!

ஆனால் திடீரென்று கேட்பார்கள்… என் அம்மா என்னைச் சும்மா தினமும் திட்டிக் கொண்டிருக்கின்றார்கள். அம்மா எப்படி எப்படியோ செய்து என்னை என்னமோ என்னைச் சொல்கிறது…! என்று இப்படியெல்லாம் பேசுவார்கள்.

தாயைக் கடவுளாக மதிக்கச் சொல்கிறாயே… எங்கள் அம்மாவுக்காக வேண்டச் சொல்கிறாயா…? என்றெல்லாம் இப்போது சாதாரணமாகச் சொல்கின்றார்கள்.

ஆனால் நாம் தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது தாய் எத்தனை அவஸ்தைப்பட்டிருக்கும்…? அது நமக்குத் தெரிகின்றது.

இப்பொழுது நாம் பார்க்கின்றோம். கர்ப்பமாக இருக்கின்ற தாய் எத்தனை அவஸ்தைகள் படுகின்றார்கள்… எத்தனை வேதனைப்படுகின்றார்கள்… என்று.

அன்னை தந்தை நமக்காக வேண்டி நம்மை வளர்த்திட எத்தனையோ வேதனைகளையும் சிரமத்தையும் அனுபவித்தார்கள். அது அனைத்தும் அவர்கள் உடலில் தீய வினைகளாக இருக்கும்.

அது அனைத்தையும் நீக்க…
1.மகரிஷிகளின் அருள்சக்தி என் அன்னை தந்தை பெற வேண்டும்.
2.என்னால் பட்ட நஞ்சுகள் அங்கே கரைய வேண்டும்.
3.மகரிஷிகளின் அருளுணர்வு என் அன்னை தந்தை உடல் முழுவதும் படர வேண்டும்
4.என்னை வளர்த்திட்ட என் அன்னை தந்தையர் மகிழ்ந்திட… நான் பார்க்க வேண்டும்
5.அந்தப் பேரானந்த பெருநிலையான நிலைகள் என் தாய் தந்தையர் பெற வேண்டும் என்று
6,இதை வினையாக ஒவ்வொருவரும் சேர்க்க வேண்டும்.

இப்படித் தான் அம்மா அப்பாவை வணங்கச் சொல்லி சொல்கின்றார்கள். அதை யாரும் நினைக்கவில்லையே…!

தன் பிள்ளை கருவில் இருக்கப்படும்போது எந்த நிலையை அந்தத் தாய் செய்ய வேண்டும்…?

கருவில் வளரப்படும்போதே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி என் குழந்தை பெற வேண்டும் அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி என் குழந்தை பெற வேண்டும் என்று தாய் எண்ணுதல் வேண்டும்.

அதே போல் கர்ப்பமான அந்தத் தாயைப் பார்ப்பவர்களும் இதை எண்ணி அந்தக் கருவில் வளரும் சிசு
1.இருள் நீக்கிப் பொருள் கண்டுணர்ந்து செயல்படும் திறன் பெற வேண்டும்
2.உலகையே காத்திடும் உணர்வுகள் அதிலே விளைய வேண்டும் என்று
3.அந்த உயர்ந்த ஞானத்தைப் பெற வேண்டும் என்றும்
4.அந்தக் கருவில் வளரக்கூடிய குழந்தைக்கு இந்த அருள் சக்திகள் எல்லாம் வினையாகச் சேர வேண்டும் என்று பிரார்த்திக்க வேண்டும்.

அதே தாய் உலகில் உள்ள அனைவருக்கும் அந்த மகரிஷிகளின் அருளுணர்வு பெற வேண்டும் என்று அதை எண்ணும்போது இந்த உணர்வுகள் அனைத்தும் தாய் கருவிலே வளரும் சிசுவிற்குப் பூர்வ புண்ணியமாக அமைகின்றது.

பிறக்கும் குழந்தை ஞானக் குழந்தையாகப் பிறக்கும். அனைவரும் போற்றும்படியாக ஞானவானாக வளரும். இப்படித்தான் அன்று ஞானிகள் நமக்கு வழி காட்டியுள்ளார்கள்.

நாம் இதைச் செய்கின்றோமா…?

“ரெக்கார்ட்” மிகவும் முக்கியம்

“ரெக்கார்ட்” மிகவும் முக்கியம்

 

விஞ்ஞான அறிவு கொண்டு கம்ப்யூட்டரில் ரெக்கார்டு செய்து கொள்கின்றார்கள். தட்டி விட்ட பின் அதனுடைய இயல்புகளைத் தெரிந்து கொள்கின்றனர்.

மனிதர்களாக இருக்கும் நாமும் இரண்டு பேர் சண்டை போடுகிறார்கள் என்றால் உற்று நோக்கி… அதைப் பதிவு செய்து கொள்கின்றோம்.

(கம்புயூட்டரில் பதிவானதைத் தட்டுவது போல்) சண்டையிட்டவர்களை மீண்டும் எண்ணியுடன் நமக்குக் கோபம் வருகிறது. அந்த நேரத்தில் நம் நல்ல காரியங்களைக் கெடுக்கின்றது.

கோவிலுக்குச் சென்று வணங்குகின்றோம். எண்ணியபடி நடக்கவில்லை என்றால் அதைப் பதிவு செய்து கொள்கின்றோம். எப்படி…! “என்னத்தைச் சாமி கும்பிட்டோம்…? ஒன்றும் நடக்கவில்லையே…!” என்று அதை எண்ணுகின்றோம்

அந்த ரெகார்டைத் தட்டியவுடன் சோர்வடைந்து… நல்லதையே எடுக்க முடியாது போய் விடுகின்றது

ஏனென்றால் எண்ணிய உணர்வுகளைத் தான் எலும்புகளில் (கம்ப்யூட்டர் போல்) ரெக்கார்ட் செய்து வைத்துக் கொள்கிறது. இப்படி எண்ணிலடங்காத பதிவுகள் நமக்குள் உண்டு.

ஒன்று விஞ்ஞானம் அதை எல்லாம் நிரூபிக்கின்றது…!

அதே போன்று தான் சண்டை போடுவதையும் பதிவாக்குகின்றீர்கள் குடும்பத்தில் வந்த கஷ்டங்களையும் பதிவாக்குகின்றீர்கள் அந்தந்தப் பதிவை எண்ணும் பொழுது அதன் வழியே நடக்கிறது.

அதே சமயத்தில்… அத்தகைய கஷ்டத்திலிருந்து மீள வேண்டும் என்று நிலை வரும் போது… “கஷ்டங்களை மறந்து…” அந்த மகரிஷிகளை அருள் சக்தி பெற வேண்டும் என்று உணர்வை எடுத்தால் அருளைப் பெருக்குகின்றோம்… சிந்திக்கும் ஆற்றலையும் அது கொடுக்கின்றது. “சிரமங்களை மீட்டுத் தருகின்றது நம்முடைய எண்ணம்…”

நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய்.

உதாரனமாக துணி எடுக்க ஜவுளி கடைக்குச் செல்ல வேண்டும் என்று போகும் போது அந்த நேரத்தில் குழந்தை வந்து அடம்பிடித்தால் என்ன நடக்கிறது…?

ஏன்டா… இப்படி வெளியே போகும்போது அடம்பிடிக்கின்றாய்…? என்று இந்த வெறுப்படைந்தால் போதும். கடைக்குச் சென்று சரியான துணியை நீங்கள் எடுத்துக் கொண்டு வாருங்கள் பார்ப்போம்…!

இந்த சங்கடம் தான் அங்கே வேலை செய்யும்… வெறுப்பு உணர்வு தான் முன்னாடி கண்களில் வரும்.

நல்ல துணியை எடுத்துப் போட்டாலும் “இது வேண்டாம்… இது வேண்டாம்…” என்று சொல்லிக் கொண்டிருப்போம். கடைசியில் வெறுப்பு அதிகமாகி “சடைத்துக் கொண்டு… சரி இதையாவது கொடுங்கள்…” என்று எடுத்து வருவோம்.

வீட்டில் மற்றவர்களோ சந்தோஷமாக இருப்பார்கள். துணியைக் காண்பிப்போம். “என்னங்க… போயும் போயும் இந்தத் துணியைப் போய் எடுத்துக் கொண்டு வந்திருக்கிறீர்களே…!” என்பார்கள்.

இல்லைங்க… இதுதான் நல்லது என்போம் நன்றாகப் பாருங்கள் என்பார்கள். பார்த்தாலும் அன்றைக்கு அது தெரியாது.

ஆனால் மறுநாள் காலையில் பார்த்தால்… சனியன்…! போகும்போது குழந்தை குறுக்கே வந்து அடம்பிடித்தான். எத்தனையோ தொல்லை கொடுத்தான் என்று மீண்டும் “சனியன்…” என்று தான் நாம் சொல்வோம்.

இந்த உணர்வுகள் அவனைப் பார்க்கும் பொழுதெல்லாம் இந்த வெறுப்பு வரும். இந்த உணர்வோடு அன்றைக்கு மற்ற காரியங்கள்… ஒரு சமையலையே செய்தாலும் (துணி எடுத்ததை எண்ணி) சனியன் என்று எண்ணிக் கொண்டு காயை அறுத்துக் கொண்டிருந்தால் போதும். அந்த உணர்வு என்ன செய்யும்…?

கையில் எடுத்து இப்படிப் பிடித்து அப்படி அறுப்பதற்குப் பதில் அது சிறிதளவு சாய்ந்தால் போதும் கையிலே அறுபட்டு விடும். என்ன கிரகமோ…? என்று சொல்வோம். இதைப் பார்க்கலாம்.

ஆக… கீதையில் நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய். மனித வாழ்க்கையில் இயக்கப்படும் உணர்வின் இயக்கங்கள் தான்.

ஏனென்றால் இந்த உடலில் எத்தனை நாள் வாழுகின்றோம்…? இன்றைய செயல் நாளைய சரீரம்.

ஆகவே இது போன்ற தீமைகளை நீக்க அருள் ஞானிகள் உணர்வுகளை… உங்களுக்குள் பெறச் செய்வதற்கு தான் இந்த உபதேச வாயிலாக தொடர்ந்து “ரெக்கார்ட் செய்கின்றேன்…”

எந்த அளவிற்கு நீங்கள் இதைக் கூர்ந்து பதிவு செய்கிறீர்களோ அந்த அளவுக்கு… அது திரும்ப எண்ணும் பொழுது “உங்கள் எண்ணம் உங்களைக் காக்கும்”

குருநாதர் காட்டிய வழியில் மகரிஷிகளின் அருளாற்றலைப் பெற்றேன். அதை உங்களில் பதிவாக்குகின்றேன் நீங்கள் இந்தப் பதிவை எடுத்துக் கொள்ளலாம்.

பையனோ குடும்பமோ தொழிலோ சரியில்லை என்றால் அதை ரெக்கார்ட் செய்கின்றீர்கள். எப்போது பார்த்தாலும் இப்படியே நடக்கின்றது என்றும் பதிவு செய்து கொள்கிறீர்கள்.

உதாரணமாக… மனைவி மீது கொஞ்சம் வெறுப்பு இருந்தால் அதைப் பதிவு செய்து விட்டால் போதும். “தண்ணீர் கொண்டு வா…” என்போம்.

அவர்கள் வேலையில் கவனமாக இருக்கும் போது சரியாகக் காதில் விழுகாது. “எப்பொழுது பார்த்தாலும் இப்படித்தான்…! நான் சொன்னால் என் மனைவி கேட்பதே இல்லை…! என்று கோபமாகத்தான் அடுத்துப் பேச வரும்.

அதே போன்றுதான் மனைவியும் கணவனை பார்த்து… “ஏதாவது ஒன்று என்றாலும் பொறுமை இல்லாதபடி உடனே இவருக்குக் கோபம் வந்து விடுகிறது. என்னை குற்றவாளியாகவே இவர் பார்க்கின்றார். இந்த உணர்வு தான் குடும்பத்தில் வளர்கின்றது.

இது எல்லாம் சந்தர்ப்பங்கள் தான்…!

அதை மாற்றி அமைப்பதற்குத் தான் அந்த ஞானிகள் உணர்வினைப் பெறச் செய்வதற்கு உபதேசமாக ரெக்கார்ட் செய்கிறோம்.

இச்சா சக்தி கிரியா சக்தி ஞான சக்தி. நீங்கள் அதை இச்சைப்பட்டு வளர்த்துக் கொண்டால் அது கிரியையாகி அந்த ஞானமாக நல்வழியில் உங்களை வழி நடத்தும்.

ஆகவே அந்தத் தெய்வீக பண்புகளை வளர்த்துப் பழக வேண்டும். அருள் ஞானிகள் உணர்வை வளர்த்தால் நாம் தெய்வமாகின்றோம். நாம் எல்லாம் தெய்வமாக ஆவதற்குத் தான் ஞானிகள் இத்தகைய தத்துவங்களை கொடுத்தார்கள்

ஆட்சியும் நிர்வாகமும் அரச வழி தான்… ஞானிகள் வழி அல்ல…!

ஆட்சியும் நிர்வாகமும் அரச வழி தான்… ஞானிகள் வழி அல்ல…!

 

குரு வழியில் வாயை மூடி மௌனம் சாதித்து… வலுக் கொண்ட உணர்வுகளைச் சுவாசித்து வேதத்தின் தன்மை கொண்டு அவர்கள் எடுத்துக் கொண்ட சில முறைகள் “ஜைன மதத்தில்” உண்டு.

ஜைன மதங்களுக்கும் புத்த மதங்களுக்கும்
1.குரு வழியில் சுட்டிக் காட்டப்படுவது மலைப்பகுதியில் பாங்காகும் துருவ நட்சத்திரம்.
2.குளிர் பிரதேசமாக இருந்தாலும் காலையில் அந்தப் பகுதியை உற்று நோக்கும்படி செய்து
3.துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியைத் தனக்குள் பெறச் செய்தனர்.
4.அந்த அகஸ்தியன் துருவன் ஆகித் துருவ நட்சத்திரம் ஆன உணர்வின் தன்மைகளை நுகரப்படும் பொழுது அவன் வழியைப் பின்பற்றுகின்றனர்.

அகஸ்தியனைப் பின்பற்றினாலும்… மதத்தின் அடிப்படையில் குருக்களாக வருகின்றனர். அதை எடுத்துக் கொண்டாலும் உடலின் இச்சைக்கு அதைச் செயல்படுத்தி… தலை கீழாக மாற்றி அதர்வண வேதம் என்று கொண்டு சென்று விட்டார்கள்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வைத் தனக்குள் எடுத்து உயிருடன் ஒன்றி ஒளியின் உணர்வாக ஆகும் நிலை ஜைன மதத்திலும் புத்த மதத்திலும் கொண்டு வந்தாலும் அதிலே சில கட்டுப்பாடுகள் உண்டு.

அந்த மதத்தின் தன்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால் தலையை மொட்டை அடிக்க வேண்டும். மொட்டை அடிக்க வேண்டுமென்றாலும் தலை முடிகளை வேதனைப்படுத்தித் தான் நீக்குவார்கள். கையிலே தான் பிடுங்குவார்கள்… பல இம்சைகள் வரும். அவன் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

புத்த துறவிகள் “உலக பந்தம் எனக்கு வேண்டாம்…” என்று சென்றாலும் தலை முடியைப் பிடுங்குவார்கள்…. ஒன்றல்ல… பத்து இருபதைச் சேர்த்துப் பிடுங்குவார்கள். பிட்சுவாக வருவதற்கு அத்தனை வேதனையையும் பொறுத்துக் கொள்வார்கள்.

சில நேரங்களில் உடலில் ஆயுதப் பரிசோதனையும் உண்டு.

உபதேசத்தைக் கேட்டுக் கொண்ட பின் ஊசியால் நகத்தில் குத்துவார்கள். ஆ…! என்று சப்தமிட்டால் உன்னால் இதைச் செயல்படுத்த முடியாது என்று விலக்கி விடுவார்கள். ஆ…! என்று சப்தமிடாதபடி பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.

மதத்தின் அடிப்படையில் சிசுக்களில் இருந்து இவ்வாறு வளர்த்து இந்த உணர்வின் உணர்ச்சிகளை ஊட்டி வளர்க்கின்றனர். வளர்த்து அதன் வழி வந்தாலும் அவர் சொன்ன வேதங்கள் இங்கே இயக்கப்பட்டு இந்த வலு எடுத்துக் கொண்டு வளர்ச்சி அடைந்தாலும் கடைசியில் இறந்த பின் “இறப்பிற்கு ஒரு மந்திரத்தைச் சொல்வார்கள்…”

மந்திரத்தைச் சொல்லப்படும் பொழுது அதன் வழி பிரியும் அந்த ஆன்மாவை இவர்கள் பிரித்து எடுத்துக் கொள்கின்றனர். அதாவது பல வகையிலும் கட்டுப்படுத்தப்பட்டு… மந்திர ஒலிகளைக் கூறி “இறைவனை அடையக்கூடிய நிலை” என்று கொண்டு செல்கிறார்கள்.

அவர்கள் எண்ணிய உணர்வுகள் தான் இங்கே இறைவனாகிறது. எதன் உணர்வின் தன்மை உனக்குள் வலுவோ அதையே நீ அடைகின்றாய் என்று கீதையிலே கூறப்படுகிறது.

காரணம் யாராக இருந்தாலும் எப்படியும் கடைசியில் இறந்து தான் ஆக வேண்டும். உடலில் விளைந்தது எதுவோ அது சாகாக்கலையாகிறது. ஆகவே இறைவனை அடையும் தன்மை இங்கே இல்லை. மீண்டும் உடல் பெறும் நிலை தான் வருகிறது.

1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை இவர்கள் எடுத்துக் கொண்டாலும்
2.இறந்த பின் மனித உடல்களுக்குள் பகிரச் செய்து அதன் வழியில் தான் கொண்டு வந்து விட்டார்கள்.

மனிதனுக்கு மதத்தின் தன்மை முக்கியம். அந்த மதத்தின் அடிப்படையில் நாட்டை ஆட்சி புரிவது உண்மை என்று மடாதிபதிகளாக மாற்றப்பட்ட நிலையிலேயே சென்றனர்.

1.துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்தாலும்
2.ஆட்சி நிர்வாகம் என்ற நிலையில் செல்லும் போது விண் செல்லும் நிலை தடையாகின்றது.

அக்கினிக்கட்டு

அக்கினிக்கட்டு

 

மாரியம்மன் கோவிலுக்குச் சென்று வணங்குவோர் குடும்பத்தில் அதிகமான கஷ்டங்கள் வந்தால் “என்னை இப்படிச் சோதிக்கின்றாயே… உனக்காக நான் அக்கினிகுண்டம் இறங்குகின்றேன்…” என்று செல்கின்றார்கள்.

1.ஆனால் அதற்கெல்லாம் சில மந்திர ஒலிகள் உண்டு…!
2.அதாவது “மாரியம்மன்…” என்று அதர்வண வேதத்தில் காட்டிய மந்திர ஒலிகளை ஒரு மனித உடலில் சேர்த்த பின்
3.அவன் இறந்து விட்டால் அந்த அக்கினியைத் தாங்கும் உணர்வின் தன்மை வருகின்றது.
4.அதை எண்ணி எடுத்துக் கொண்டு மந்திரத்தை ஜெபித்து அக்கினியில் இறங்கினால் அந்தத் தீ ஒன்றும் செய்யாது

அதர்வண வேதத்தில் இந்த உணர்வின் தன்மை குவிக்கப்படும் பொழுது “அக்கினிக்கட்டு” என்று சொல்வார்கள்.

மனித உடலில் ஜீவ அணுக்களுக்குள் சேர்த்துப் பரம்பரையாக இந்த மந்திரத்தை எடுத்துக் கொள்வார்கள். அதைச் செயல்படுத்தும் கால கட்டத்தில் அந்தக் கோவில் பூசாரி இந்த மந்திரத்தையே ஜெபித்துக் கொண்டிருப்பார்… அவர் சாவகாசமாக அக்னியில் இறங்கி வருவார்.

ஆனால் மற்றவர்கள் வீரிய எண்ணத்தோடு போனாலும் உஷ்…தஷ்…புஷ்.. என்று இறங்கி வேகமாக ஓடி விடுவார்கள்.

பூசாரியை மாரியம்மன் காப்பாற்றுவதால் அவர் தாராளமாகப் போகின்றார். எந்த மாரியம்மன்…?

மாரியம்மனை எண்ணி மந்திரத்தை ஜெபித்து இந்த உடலை விட்டு சென்றவர்களின் ஆன்மாக்கள் அதே மந்திரத்தை ஜெபிக்கப்படும் பொழுது இங்கே வந்துவிடும்.
1.ஜெபித்தவர் உடலில் அந்த ஆன்மாக்கள் குடிகொள்ளும்
2.ஆவிகள் தான் அங்கே செயல்படுகின்றது

உதாரணமாக… தெய்வத்தையே வணங்கி வாழ்ந்து வந்தாலும் சந்தர்ப்பத்தில் (தெய்வத்தை எண்ணி வேதனைப்பட்டு) “மருந்தைக் குடித்து இறந்து விடுகிறார்…” எனறு வைத்துக் கொள்ளுங்கள்.

எந்த மந்திரத்தை இந்த ஆன்மா ஜெபித்ததோ அதே மந்திரத்தை இன்னொருவர் ஜெபிக்கப்படும் பொழுது இங்கே இவரின் ஈர்ப்புக்குள் வந்துவிடும்.

அல்லது அதே எண்ணத்தை கொண்டு இறந்தபின் ஒருவருக்கொருவர் நண்பர்களாகப் பழகி திடீரென்று எதிர்பாராத நிலைகள் இறந்து விட்டால் பழகிய அந்த நண்பர் உடலுக்குள் சென்று விடும்.

நேற்றெல்லாம் என்னிடம் பழகினாரே… இப்போது இறந்து விட்டாரே…! என்று எண்ணும் போது இந்த ஆவி இங்கு வந்துவிடும். அது வந்த உடனே அது அதனுடைய நிலைகளை எல்லாம் இங்கே காட்டும்.
1.எத்தனை வேதனை இருந்தாலும் அந்த ஆன்மா தாங்கிக் கொள்ளும்
2.எத்தனை இம்சை செய்தாலும் இவர்களுக்குத் தெரியாது.

சில பேய் பிடித்தவர்களைப் பாருங்கள். “என்ன தான் அடியுங்கள்… அது அடி வாங்கிக் கொண்டே இருக்கும்…!” அது நோகுமா என்றால் நோகாது…! அடிப்பதை எல்லாம் தாங்கிக் கொள்கின்றது. ஆவி விலகிய பிற்பாடு தசைகளில் அடிபட்டதல்லவா… இரண்டு நாளைக்கு அது எழுந்திருக்காது.

இது எல்லாம் ஆவியின் செயல்கள் தான்…!

காளியம்மன் மாரியம்மன் என்று ஜெபத்தால் எடுத்துக் கொண்ட ஆன்மாக்கள்… இன்ன மந்திரத்தைச் சொன்னால் காளி உன்னைக் காப்பாற்றுவாள் என்று சொல்லும்போது அதன் உணர்வை விளைய வைத்த வழி தான் வந்துள்ளார்களே தவிர “இறந்தபின் இன்னொரு ஆவி நிலைக்குத்தான் செல்கின்றோம்.

1.இது சாகாக்கலைக்குத் தான் கொண்டு செல்லும்… மீண்டும் பிறவிக்குத் தான் வரவேண்டும்
2.அடுத்த உடலுக்குள் சென்று அதையும் காயப்படுத்தி அந்த உடலை விட்டு வந்தபின்
3.விஷம் கொண்ட உடல்களுக்குள் தான் உயிர் அழைத்துச் சென்றுவிடும்.

தவறு செய்யாமலே இன்றைய விஞ்ஞான உலகில் “பல கடுமையான நோய்கள் வருகின்றது”

தவறு செய்யாமலே இன்றைய விஞ்ஞான உலகில் “பல கடுமையான நோய்கள் வருகின்றது”

 

இப்பொழுது மனிதர்களில் அவரின் உடல் நன்றாக இருக்கும். சந்தர்ப்பத்தில் சலிப்பு சஞ்சலம் சங்கடம் என்ற உணர்வுகளை அவர்கள் அதிகமாக எடுத்துக் கொண்டால்
1.அதனால் அவர்கள் அடிக்கடி சோர்வடைவதும் சஞ்சலமான நிலைகளிலே இருப்பதும்
2.அவர்கள் பேசும் பொழுது ஒரு விதமான வாசனையும் வரும் அவர் உடலில் இருந்து ஒருவிதமான நாற்றமும் வரும்.

காரணம் அடிக்கடி சலிப்பையும் சஞ்சலத்தையும் அவர்கள் சந்திக்கப்படும் பொழுது சலிப்பான உணர்வுகள் வரப்படும் பொழுது சிலருக்கு அந்த உடலில் “ஈர்” போன்று தோன்றி மேலெல்லாம் அரிப்பாகின்றது.

ஒரு சிலருக்கு அது தலையிலே ஈரும் பேனுமாக உருவாகிவிடுன்றது அப்படிப் பேன்கள் உருவாகிவிட்டால் அதை இவர்கள் எவ்வளவுதான் சீவி எடுத்தாலும் மறுபடியும் அது வந்து கொண்டே இருக்கும்.

1.என்னதான் மருந்தைப் போட்டு அதைப் போக்கினாலும் இரண்டு நாட்களுக்கு இருக்காது
2.மீண்டும் உடலில் வரக்கூடிய மணத்தால் கரு முட்டையாகிப் பேன்கள் வரத் தொடங்கும்.

ஆனால் யாரும் தவறு செய்யவில்லை…!

இதே மாதிரித் தான் மரங்களில் அதன் அருகில் இதைக் காட்டிலும் வீரிய மரங்களின் மணங்கள் அடித்தால்… உதாரணமாக அது வேப்ப மரமாக இருந்தால் அடுத்த மரத்தின் மணத்தினை அது எதிர்கொள்ளும் பொழுது அதனால் வாடி அதிலே பார்த்தால் “பிசின்கள்” அதிகமாக வரும் அல்லது “வாடல் நோய்” வந்து கருகிவிடும்.

பார்க்கலாம்… சில மரங்களிலே…!
1.வெயில் அதிகமாகும் பொழுது அந்த உணர்வுகளை எடுத்துக் கொண்ட பின்
2.மனிதனுக்கு நோய் வருவது போன்று சில கிளைகள் அப்படியே அது வாடி காய்ந்து மரத்திலிருந்து கீழே விழுவதை நாம் காணலாம்.

இது எல்லாம் இயற்கையின் சில நியதிகள்.

இது போன்று தான் நாம் அடிக்கடி கோபப்படுவோரைப் பார்க்க நேர்ந்தால்… இனம் புரியாத நிலைகளில் நமக்கும் கோபம் அதிகமாக வரும் சில மனிதர்களைப் பார்த்தால் நமக்குத் தீய சிந்தனைகளும் வரும்

மனித உடலில் இருந்து வரக்கூடிய மணமும் அவர் எந்தெந்த அளவிலே உடலில் குணங்களைச் சேர்த்து நல்ல குணங்களை அது செயலற்றதாக மாற்றுகின்றதோ அந்த உடலில் உறுப்புகளில் நோயாகவும் காரணமாகின்றது

அதே சமயத்தில் அவர் சொல்லாக வெளியில் சொல்லப்படும் பொழுது கேட்பவர் உணர்வுகளிலும் பட்டு அவர்களுக்கும் நோய் வரத் தொடங்கும்.

இதெல்லாம் சந்தர்ப்பத்தால் நுகரும் இந்த சக்திகள் மனிதனுக்கு மனிதன் உபகாரமும் நல்ல பண்புகளும் பரிவுடன் உதவி செய்யக்கூடிய மனிதனாக இருப்பினும்… பிறர் படும் கஷ்டங்களைக் கூர்ந்து கவனிக்கப்படும் பொழுது… அவர் சொல்வதைக் கேட்கும் பொழுது இதை எல்லாம் கேட்டு நுகர நேர்கின்றது. சுவாசித்த உணர்வுகள் இரத்தங்களிலே கலந்து உடலிலே நோயாக வந்து விடுகிறது.

எப்படி மரம் செடி கொடிகளில் எதிர் நிலையான மணங்கள் தாக்கிய உடனே கிருமிகளோ பூச்சிகளோ வண்டுகளோ வந்து விடுகிறதோ… வாடல் நோய் வந்து விடுகின்றதோ இதைப் போன்று மனிதனுக்கு வந்துவிடுகிறது

ஆனால் செடி கொடிகளுக்கு மற்றதை நுகரும் சக்தி இல்லை தன்னுடைய வலுவின் தன்மை கொண்டு மற்றது அருகில் வராதபடி தள்ளிவிடுகின்றது.

உதாரணமாக பருத்திச் செடி அடர்த்தியாக இருந்தது என்றால் அடுத்த பக்கத்தில் இருக்கும் புகையிலைச் செடியில் புழுக்களைக் கொல்ல மருந்துகளை தூவப்படும் பொழுது அங்கே என்ன நடக்கிறது…?

புகையிலைச் சத்தை எடுத்து அதில் அணுவாகிப் புழுவாகி அதை உணவாக உட்கொண்டாலும் மருந்தைத் தூவிய நிலையில் அந்த விஷங்கள் தாக்கப்படும் பொழுது புழுக்கள் இறந்து விடுகிறது… ஆவியாகக் கரைகின்றது சூரியனும் அந்த ஆவியை கவர்ந்து கொள்கின்றது.

ஆவியாக கரைந்த பின் காற்று எந்தப் பக்கமாக வீசுகின்றதோ அதற்குத் தக்கவாறு… அதனுடைய உணர்வுகள் பட்டபின் மற்ற சாதாரண தாவர இனச் சத்தைக் கவர்ந்த அலைகள் அஞ்சி ஓடும்.

அப்படி ஓடும் பொழுது
1.பருத்திச் செடிகள் இருக்கும் பக்கம் இது சென்றால் அது தன்னுடைய உணர்வை எடுக்கக்கூடிய சக்தி இழந்து விடுகிறது
2.தன் சத்தைப் பிரித்து எடுக்கக்கூடிய சக்தி குறையப்படும் பொழுது அந்தச் செடி வாடுகிறது…. அதிகமான மோதல்கள் ஏற்பட்டால்…!

ஆனால் புகையிலையில் அடித்த விஷத்தின் தன்மை அதில் இருக்கக்கூடிய விஷக் கிருமிகளைக் கொன்றாலும்… கிருமிகள் செத்த உணர்வு வெளிவரப்படும் பொழுது அது உடல்பெற்ற நிலைகள் அந்த முட்டையில் படுகின்றது.

ஆனால் முட்டை சாவதில்லை. விஷத்தின் தன்மை அதை ஏற்றுக் கொண்டு அடுத்து மருந்துகளை அடித்தாலும் அது சாவதில்லை.

முதலில் பூச்சிகள் செத்தால் ஆவியாக வருகின்றது சூரியனால் கவரப்படுகின்றது. விஷத் தன்மை பூச்சியின் உடலில் பட்டபின் ஆவியாக மாறுகின்றது அது வீரியமடைகின்றது.

பூச்சியின் விஷத் தன்மைகள் சூரியனால் கவரப்பட்டுக் காற்றலைகளில் அது போகும் பக்கத்தில் பருத்திச் செடியில் மோதப்பட்டுத் தேங்கி விடுகின்றது.
1.தேங்கிவிட்டால் அந்த இலையை உணவாக எடுக்கக்கூடிய நிலையில் எதிர் நிலையாகி
2.பருத்தி செடியின் இலையின் நுனிகள் கருகி விடுகின்றது நுனியில்
3.இவ்வாறு ஆன பின் வளர்ச்சி குறைந்து பருத்திச் செடி கருக நெரும்.
4.அதனுடைய காய்களில் பார்த்தோம் என்றால் பூச்சிகளும் விழுந்து விடுகின்றது.

இயற்கை நியதிகள் இப்படி மாறிக் கொண்டே உள்ளது.

இவை எல்லாம் எதனால் வருகிறது…?

1.மனிதன் விஞ்ஞானத்தால் எடுத்து விரிய விஷ வித்துக்களை உருவாக்கப்பட்டு
2.அந்த விஷத்தன்மைகளைப் பவுடராகவும் நீருடன் கலந்து தூவப்படும் பொழுது காற்றிலும் வருகின்றது… செடிகளிலும் சேர்ந்து விடுகின்றது.

இப்படி மனிதன் இயற்கையில் விளைவதை கடினமான விஷ உணர்வுகளை உருவாக்கப்படும் பொழுது பலவாறு மனிதன் உணவாக உட்கொள்ளும் உணவுப் பயிர்களில் சேர்ந்து விடுகிறது.

நெல் செடி என்றால் அதிலே பால் பிடித்துத் தான் அரிசி உருவாகும். சோளமானாலும் பால் பிடித்துத் தான் சோளம் உருவாகும்.
1.ஆனால் விஞ்ஞானத்தால் தூவிய விஷங்கள் காற்றலைகளில் இது கலந்த பின்
2.அந்தப் பாலுக்குள்ளும் விஷத்தின் தன்மை புகுந்து விடுகின்றது.
3.மனிதன் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் நஞ்சின் தன்மை பாய்ந்து விடுகிறது.

அதை மனிதன் உணவாக உட்கொள்ளும் போது சிந்தித்துச் செயல்படும் இரத்த நாளங்களில் விஷத்தன்மை கலந்து உடல் முழுவதும் சுழல்கிறது. காற்றில் எப்படிப் பரவிப் படர்கின்றதோ
1.மனித உடலுக்குள் இந்த விஷங்கள் சுழன்று நல்ல உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் செயலிழந்து விடுகின்றது
2.உறுப்புகள் சுருங்குகின்றது… அதனால் இருதய வலி நுரையீரல் வலி கல்லீரல் வலி சிறுநீரகம் செயலிழத்தல் போன்ற நோய் வருகிறது.

உலகெங்கிலும் உருவாகிக் கொண்டிருக்கும் சுழிக் காற்றுகள்

உலகெங்கிலும் உருவாகிக் கொண்டிருக்கும் சுழிக் காற்றுகள்

 

முந்தி எல்லாம் தியானத்தில் சூரியனைப் பார்க்கும்படி சொல்லி இருந்தேன். ஆனால் இப்பொழுது சூரியனுக்குள் விஷத்தன்மைகள் அதிகமாகப் பரவி விட்டது. அதைப் பார்த்தோம் என்றால் நம் கண்களுக்கும் மனதுக்கும் விஷத் தன்மைகள் தான் பரவும்…!

விஷத்தன்மையான நிலைகள் அதிலிருந்து நம் பூமிக்குள் அதிகமாக வந்து கொண்டிருக்கின்றது. அதனால் சிந்தனையற்ற நிலைகளும் புதிய நோய்களும்… ஒருவருக்கொருவர் கொன்று குவிக்கும் உணர்வுகளும் வளர்ந்து கொண்டுள்ளது.

1.மற்றவரைக் கொல்ல வேண்டும் என்ற உணர்வு தான் மனிதர்களுக்கு வருகின்றதே தவிர காக்க வேண்டும்… என்ற உணர்வு உலகெங்கிலும் இல்லை
2.எந்தக் கோவிலுக்கு யார் சென்றாலும் இவன் உருப்படுவானா…? என்று சாபம் விடும் நிலை தான் வளர்ந்து கொண்டிருக்கின்றது

எந்த மதமானாலும் அவர்கள் ஆலயங்களுக்குள் சென்று தெய்வத்தை வணங்கினாலும் தன் குடும்பங்களைப் பற்றிய சிந்தனைகள் வரப்படும் பொழுது ஒருவருக்கு ஒருவர் சாபம் விட்டு… அவர் கெட்டுப் போக வேண்டும் என்ற உணர்வுகளைத் தான் வளர்த்துக் கொண்டுள்ளார்கள்.

ஆனால் வெளியிலே சொல்லும் பொழுது… “நான் எல்லோருக்கும் நல்லது தான் செய்தேன்… எனக்கு இடைஞ்சல் செய்கின்றார்கள் அவர்கள் உருப்படுவார்களா…?” என்று குறைகளை வளர்த்துக் கொள்ளும் நிலை தான் வருகிறது.

அப்படி எல்லாம் இல்லாதபடி
1.எங்கள் குடும்பம் முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.எங்கள் பார்வையில் தீமைகள் அகல வேண்டும்
3.எங்கள் குழந்தைகள் அருள் ஞானம் பெற வேண்டும்… உலகைக் காத்திடும் அருள் ஞானிகளாக வளர வேண்டும்
4.எங்கள் வாடிக்கையாளர்கள் எல்லோரும் நலம் பெற வேண்டும்
5.நாங்கள் பார்க்கும் அனைவருக்கும் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று இப்படித்தான் எண்ண வேண்டும்.

இது எல்லாம் ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.

காரணம் விஞ்ஞான அறிவில் விஷத்தன்மைகள் அதிகமாகப் பரவிக் கொண்டுள்ளது. பல வகையான வெடி குண்டுகளைத் தயார் செய்து வைத்துள்ளார்கள்.

கடலிலிருந்து யுரேனியத்தைப் பிரித்து எடுத்து அணுவைப் பிளந்து மற்றொன்றுடன் அதாவது நியூட்ரான் புரோட்டான் என்ற நிலைகள் சில இதுகளைக் கலந்து வைத்துள்ளார்கள்.

சாதாரணமாக… நட்சத்திரத்தின் துகள்கள் வெளி வரப்படும் பொழுது சூரியன் இழுத்து அதைக் கவர்ந்து விட்டால் “நியூட்ரான்…” அது அழுத்தமாகச் செல்லும் பொழுது இந்த விஷத்தன்மையைக் கண்டபின் மற்ற அனைத்துமே பயந்து ஓடுகின்றது.
1.அப்போது ஒன்றோடு ஒன்று மோதி பல கலவைகளாக மாறிச் சக்தி வாய்ந்ததாக மாறுகின்றது.
2.அதை எடுத்து இராக்கெட்டில் இணைத்து விண்ணிலே செலுத்துகின்றான் விஞ்ஞானி.
3.அதை வைத்து நியுட்ரான் குண்டு என்று தயார் செய்துள்ளார்கள்.

அந்த நியூட்ரான் குண்டுகளை வெடிக்கச் செய்தால்… மனிதன் இருக்கும் பக்கம் பட்டால் சிந்தனை இழந்து பைத்தியம் பிடித்த மாதிரி மனிதர்கள் ஆகிவிடுவார்கள்.

கட்டடங்கள் மற்றும் எல்லாம் அப்படியே இருக்கும். ஆனால் இங்கு மனிதர்கள் வாழ முடியாது. அத்தகைய புத்தி பேதமாக்கும் உணர்வலைகள் காற்றிலே பரவுகின்றது.

நட்சத்திரங்களிலிருந்து வெளி வரும் கதிரியக்கச் சக்திகள் தான் பூமிக்குள் உருவான கல் மண் உலோகங்கள் அனைத்திற்குமே மூல காரணம். அனைத்திலுமே அந்தச் சக்தி உண்டு.

அதே சமயத்தில் மனிதன் செயற்கையாக உருவாக்கிய கதிரியக்கப் பொறிகள்… அணு மின் நிலையம் மற்றும் அணு ஆயுதங்களில் பயன்படுத்தும் போது அந்தக் கதிரியக்கங்களின் கசிவுகள் அனைத்தையுமே சூரியன் காந்த சக்தி கவர்ந்து வைத்துள்ளது.

இது காற்றலையில் பரவிப் போகும் போது ஆரம்ப நிலையில் “நியூட்ரான்” என்று அழுத்தம் ஆன பின் தன் அருகிலிருப்பதை எப்படி அது விரட்டிச் சென்றதோ அதே மாதிரி
1.அதுவும் இதுவும் (இயற்கையில் உருவானதும் செயற்கையின் கசிவுகளும்) மோதிய பின் பெரும் சுழிக்காற்றாக மாறுகின்றது
2.கல்லுக்குள் மண்ணுக்குள் கட்டடத்திற்குள் இது பாய்ந்து அதனுடைய அழுத்தம் வீரியமடைந்து
3.பெரிய காற்றாடி போல போகும் பாதையில் உள்ள அனைத்தையும் பிய்த்து எறிந்து கொண்டு செல்கிறது.

அமெரிக்காவில் இது அதிகமாக நடக்கிறது… பத்திரிகையில் நீங்கள் படித்திருப்பீர்கள் மற்ற நாடுகளிலும் இப்பொழுது சிறுகச் சிறுக வந்து கொண்டிருக்கின்றது.

எங்கெங்கே செயற்கையில் அணுக்கதிரியக்கங்களை உற்பத்தி செய்து பரவச் செய்துள்ளார்களோ அந்த நாடுகளில் எல்லாம் இது சுற்றிக்கொண்டு தான் இருக்கின்றது. பெரிய பெரிய கட்டிடங்களும் சுக்கு நூறாகித் தவிடுபொடியாகிக் கொண்டிருக்கின்றது.

அதே சமயத்தில் அத்தகைய சுழிக் காற்று
1.கடல் பக்கம் செல்லும் போது அங்கிருக்கும் நீரைக் கவர்ந்து பெரும் பெரும் மேகங்களாகக் குவித்து
2.நகரத்திற்குள் இழுத்துக் கொண்டு வந்து பெரும் மழை நீராக… ஒரு வருடத்திற்கு பெய்ய வேண்டிய மழை
3.சில மணி நேரங்களிலேயே கொட்டு கொட்டு என்று கொட்டி ஊர்களையே நாசம் பண்ணுகின்றது.

எதிர்பாராதபடி அழிக்கக்கூடிய சக்தியாக உலகெங்கிலும் பரவிக் கொண்டுள்ளது. நீங்கள் டிவியில் பத்திரிகைகளும் பார்த்திருப்பீர்கள்.

இன்று…
எந்த நிமிடம்…
எந்த இடத்தில்…
என்ன நடக்கும்…? என்று தெரியாத நிலையில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்

இது போன்ற சூழ்நிலையில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளை நாம் எடுத்து அந்தத் துருவ நட்சத்திரத்துடன் ஒன்றியே வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.

துருவ நட்சத்திரத்துடன் ஒன்றி இருந்தால்
1.நாம் இருக்கும் பக்கம் அத்தகைய சுழிக் காற்றுகள் வராது தடுக்கும்
2.அல்லது நம்மை ஒதுக்குப் புறமான இடத்திற்குப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லும்.

உலகில் உள்ள அனைவரையும் நாம் மதித்துப் பழக வேண்டும்

உலகில் உள்ள அனைவரையும் நாம் மதித்துப் பழக வேண்டும்

 

இது நடந்த நிகழ்ச்சி…! தியான வழியில் சாமியை (ஞானகுரு) வைத்துத் திருமணம் நடத்த வேண்டும் என்று இவர்கள் (பெண் வீட்டார்) கட்டாயப்படுத்துகின்றார்கள்.

ஆனால் அவர்கள் (ஆண் வீட்டார்)… எங்களிடம் பலர் பழகி இருக்கிறார்கள். நான்கு பக்கத்திலும் நாங்கள் பழக வேண்டும். எங்கள் முறைப்படித் தான் நாங்கள் திருமணம் நடத்த வேண்டும் என்று சொல்கின்றார்கள்.

“சரி… உங்கள் வழியில் நீங்கள் செய்து கொள்ளுங்கள்…” என்று சொல்லி விடுங்கள் என்று பெண் வீட்டாரிடம் சொன்னேன். அதே மாதிரிச் செய்தார்கள்.

பின் திருமணத்திற்கு வேண்டிய பத்திரிகை எல்லாம் அடிக்கப்படும் பொழுது என்னிடம் யோசனை கேட்க வந்தார்கள்.

அப்போது பையனின் தகப்பனாருக்கு ஒரு நெஞ்சு வலி இருந்தது. “எனக்கு நெஞ்சு வலி இருப்பதால் தான்” சீக்கிரம் திருமணத்தை முடித்து விடவேண்டும் என்று விரும்பினேன் என்றார்.

இங்கே வந்து என்னை அவர் சந்தித்தபின் நெஞ்சு வலி நின்றது. பின் அவருடைய மனம் மாறிவிட்டது. ஊருக்குச் சென்ற பின் மனது கலங்கிவிட்டது.

1.இவர்களும் விடாப்பிடியாகத் தியான முறைப்படி கல்யாணம் செய்ய வேண்டும் என்று சொன்னதால் அந்த இரண்டு மனதும் ஒன்றாகி விட்டது.
2.“குருவை வைத்தே திருமணம் செய்யலாம்…” என்று முடிவு செய்கின்றனர்.

இன்று அவர் இதை ஒத்துக் கொள்ளலாம்…! ஆனால் அவருடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள் சொல்லும் பொழுது என்ன ஆகும்…? அந்தக் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கும் நாம் உபதேசிக்கும் உணர்வுகளை இணைத்துக் கொண்டு வந்து தான் மாற்ற முடியும்.

காரணம்… சம்பந்தம் செய்வதை நம்முடைய முறைப்படி ஐயரை வைத்துச் செய்யாதபடி “ஏதோ தியானம் செய்கிறார்கள்…” என்ற உணர்வுகள் அவர்களுக்குத் தோன்றத்தான் செய்யும்.

ஆனால் யாம் உபதேசிக்கும்போது மற்றவர்கள் அதைக் கேட்கப்படும் போது தான் அவர்கள் தெரிந்து தெளிந்து வாழக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.
1.என்ன தான் தெரிந்து தெளிந்து வாழக்கூடிய நிலைகள் பெற்றாலும்
2.அந்த அனுபவம் பெற்றவர்களுக்கு அவர்கள் முறைகளைச் செயல்படுத்தவில்லை என்றால்
3.மனதிலே ஒரு அழுக்கு இருந்து கொண்டே இருக்கும்.

ஆனால் அந்த அழுத்தம் மாறி நம்முடன் ஒத்துழைத்தார்கள் என்றால் அது இப்படிச் செய்யலாம். இல்லை என்றால்…
1.அவர்கள் இஷ்டத்திற்குப் போய் நம்முடைய மனம் எப்படியோ
2.அது அவர்களுக்குத் தெரிய வேண்டும் என்று நாம் இப்படித்தான் எண்ண வேண்டும்.

எந்த இடத்திலும் இது போன்று பொதுவான திருமணம் நடக்கிறது என்றால் அவர்கள் இந்த முறைப்படி நாங்கள் செய்ய வேண்டும் என்று விரும்பினால் “சரி உங்கள் விருப்பப்படி செய்யுங்கள்…” என்று சொல்லிவிட வேண்டும்.
1.நாம் அதற்கு முன்னாடி தியானம் இருந்து அவர்களுக்கு என்னென்ன பிரார்த்தனை செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும்.
2.அவர்கள் முறைப்படி செய்யட்டும்…! என்று நாம் எண்ண வேண்டும்.

அப்படி இல்லாதபடி ஆரம்பமே பெண் வீட்டார்கள்… மாப்பிள்ளை வீட்டாரை பெண் வீட்டார்… நாங்கள் சொன்னபடி தான் கேட்க வேண்டும் என்று சொன்னால் நடக்குமா…? அதனால் விபரீதங்கள் தான் ஏற்படும்.

ஆகையினால் மனது ஒத்து வருவதற்கு…
1.தெரிந்தும் நாம் தவறு செய்யக்கூடாது
2.அவர்களுடன் ஒத்துழைத்து நம்முடைய தத்துவத்தை இணைந்து அவரிடத்திலே சொல்லும் பொழுது தான் ஏற்றுக்கொள்ளும் பக்குவமே வரும்.

இல்லை…இல்லை…! நாங்கள் இந்தத் தியான வழியில் பெரிய சக்திகள் பெற்றிருக்கின்றோம் அதனால் இப்படித்தான் செய்ய வேண்டும் அப்பொழுதுதான் நல்லது என்று சொல்லிக் கொண்டிருந்தால் “நம்முடைய காரியங்கள் அத்தனைக்குமே தடங்கல்கள் வரும்….”

அடுத்து நீங்கள் நல்லதை யாருக்கும் சொல்ல முடியாது… அதை வளர்க்கவும் முடியாது நாம் எந்த வழக்கத்தில் இருக்கின்றோமோ அந்தப் பழக்க உணர்வு தான் ஒவ்வொருவருக்குமே வரும்.

அவர்களைத் தெரிய வைக்க வேண்டியது நம்முடைய கடமைகளாக இருக்க வேண்டும்.
1.நம்முடைய பாதை தான் உயர்ந்தது என்று நாம் சொன்னால்
2.அவர்கள் அவருடைய பாதை தான் உயர்ந்தது என்று சொல்ல முற்படுவார்கள்.

ஆகவே தியானத்தைக் கடைபிடிப்பவர்கள் நம்மிடம் இந்தப் பிடிவாதம் இருக்கக் கூடாது.

நம்முடைய தத்துவங்களை அவர்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய பக்குவத்தை ஏற்படுத்தி அதை உருவாக்க வேண்டுமே தவிர “நாம் பிடிவாதமாக இருந்து… வெறுக்கும் தன்மைக்குக் கொண்டு வந்து விடக் கூடாது…”

என்ன… எப்போது பார்த்தாலும் சாமியாம்… தியானமாம்…! என்று அவர்கள் எண்ணுவதற்கு விடாதபடி நாம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இதே மாதிரிச் சில சடங்குகள் செய்யும் பொழுதும் உடலை விட்டு வீட்டில் யாராவது பிரிந்து சென்றாலும் “காக்கைக்கு சோறு வைக்கின்றோம்…” என்று சொன்னாலும் அவர் இஷ்டத்திற்கு நாம் விட்டுவிட வேண்டும்.

ஆனால் நாம் என்ன செய்ய வேண்டும்…?

உடலை விட்டுப் பிரிந்த அந்த ஆன்மாவைக் கூட்டு தியானமிருந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து அந்தச் சப்தரிஷி மண்டலத்தில் இணைய வேண்டும்… பிறவி இல்லா நிலை அடைய வேண்டுமென்று நாம் இதைச் செயல்படுத்த வேண்டும்.

அவர்களிடம் “இந்த ஆன்மா எப்படி விண்ணுக்குச் செல்கிறது என்று பாருங்கள்…!” என்று நாம் தூண்டிவிட்டு அந்த முறைப்படி செய்தோம் என்றால் அவர்கள் ஆர்வத்துடன் கேட்பார்கள்.

1.ஒரு பழக்கத்தில் இருக்கிறோம் என்றால் அதை மாற்றிப் புதுப்பித்துக் கொண்டு வர வேண்டுமென்றால்
2.”எவ்வளவு நல்லதாக இருந்தாலும்” அதை உடனடியாகக் கொண்டு வர முடியாது.

கேரளாவிலே மொக்கை அரிசி தான் சாப்பிடுகிறார்கள். அதை நம்மைச் சாப்பிடச் சொன்னால் “யாருடா இந்த அரிசியைச் சாப்பிடுவது…?” என்று நாம் நினைக்கின்றோம்.

ஆனால் நாம் இங்கே பொடியாக இருக்கும் பொன்னி அரிசியைச் சாப்பிடுகின்றோம். ஆனால் இந்த அரிசியை யார் சாப்பிடுவார்கள்…? என்று அங்கே கேரளாவில் உள்ளவர்கள் சொல்கின்றார்கள்.

காரணம்… அவரவர்கள் ருசி தான் எல்லோருக்கும் முக்கியம்…!

ஆகவே நாம் மற்றவர்களை மதித்துப் பழக வேண்டும். நமது குருநாதர் காட்டிய வழியில் மற்றவர்களை உயர்த்தினால் தான் நம்முடைய சொல்கள் அங்கே ஏற்கும் பருவம் கிடைக்கும்.

இல்லை… என்னுடையது தான் உயர்ந்தது என்று சொன்னால் நம்முடைய உணர்வை அவர்கள் தாழ்த்தித் தான் பார்ப்பார்கள்.

ஆகவே
1.நாம் நம்முடைய தத்துவங்களை அவர்களை அணுகிப் போய்த் தான் சொல்ல முடியுமே தவிர
2.கட்டாயப்படுத்தி யாருக்குமே திணிக்க முடியாது.

கட்டாயப்படுத்திச் சொல்வதோ நம்முடையது தான் நல்லது என்று வலியுறுத்தினால் நம் மீது அவர்களுக்கு வெறுப்பு தான் வரும்.

அந்த வெறுப்பு ஏற்படாதபடி பக்குவப்படுத்தி… நம்முடைய நிலைகளைப் படிப்படியாகச் சொல்லி… அவர்களை உணரும்படி செய்வது நம்முடைய கடமையாக இருத்தல் வேண்டும்.

ஏனென்றால் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக்…! அதாவது அந்த எதிர்மறையான உணர்வின் அழுத்தங்கள்… எவ்வளவு தான் உண்மைகளைச் சொன்னாலும் வெறுக்கும் நிலை தான் வரும்.

இதையெல்லாம் மாற்றி
1.நமது வழிகளை உலக மக்கள் ஏற்றுக் கொள்ளும் பருவ நிலைக்கு…
2.அந்தப் பக்குவ நிலைக்கு நாம் எல்லோரும் வளர்தல் வேண்டும்.

உடல் இச்சை என்ற “கௌரவப் பிரச்சினை”

உடல் இச்சை என்ற “கௌரவப் பிரச்சினை”

 

ஒருவர் கோபமாக இருக்கின்றார்… சங்கடமாகப் பேசுகின்றார்… சலிப்பாக இருக்கின்றார்… அந்த நேரத்தில் நல்லதைப் பற்றி நாம் உபதேசம் செய்தால் எப்படி இருக்கும்…?

ஏற்றுக் கொள்வார்களா…! நம் மீது வெறுப்பு தான் அதிகமாகும்.

தோசையைச் சுடுகின்றோம் என்றால் முதலில் நெருப்பைச் சரியான பக்குவத்தில் வைத்துத் தோசையை வார்த்தால் அது சரியாக… சீராக வரும். நானும் தோசை சுடுகின்றேன் என்று சொல்லிவிட்டு… சட்டி சூடாகாமல் மாவை வார்த்தால் என்ன ஆகும்…?

அது போலத் தான் ஒரு மனிதனுக்கு நாம் உபதேசிக்க வேண்டும் என்றால்
1.அந்தப் பக்குவமும் கேட்கும் பருவமும் அது எப்படி இருக்கின்றது…? என்று
2.அதை நாம் அனுசரித்துப் பார்த்து நல்லதைச் சொல்ல வேண்டும்
3.அப்போது தான் கேட்பார்கள்…!

இல்லை என்றால்… நல்லதைச் சொல்லிக் கொண்டிருக்கின்றோம் அவர் கேட்கவில்லை… மோசமான ஆள்…! என்று நாம் எண்ணி விடுகின்றோம்.
1.நல்லதைச் சொல்கிறோம் என்ற பேரில்.. நல்ல குணத்தை வளர்ப்பதற்கு மாறாக
2.”மோசமான ஆள்…” என்ற அந்த உணர்வை நமக்குள் கவர்ந்து விடுகிறோம்.

அவருக்கு நல்லதாக வேண்டும் என்ற ஏக்கத்தில் தான் நாம் சொல்கின்றோம். இருந்தாலும் நம் சொல்லைக் கேட்கவில்லை என்றால் நாம் என்ன செய்யப் போகின்றோம்…!

1.வேதனை என்ற உணர்வு வருகின்றது
2.வேதனை என்ற விஷம் வரப்படும் பொழுது நாம் சிந்திக்கும் தன்மையை இழந்து விடுகின்றோம்
3.சிந்திக்கும் தன்மை இழந்தால் அவர் மீது குற்றங்களைத் தான் சொல்ல வேண்டியிருக்கும்
4.அவரை எண்ணி நமக்குள் குறை என்ற உணர்வுகள் வந்து விடுகின்றது
5.அவரை நாம் குறையாக சொல்ல நேருகின்றது
6.அவரைத் தான் குறையாகச் சொல்கிறோம் என்று நாம் நினைக்கின்றோம்
7.ஆனால் நமக்குள் முதலில் குறையை வளர்த்துக் கொள்கின்றோம் என்று நமக்குத் தெரியவில்லை.

ஏனென்றால் நாம் நுகர்ந்த உணர்வுகள் அவ்வாறு தான் இயக்கிக் காட்டும்.

தீமை என்று தெரிகின்றது… அதை அகற்ற பழக வேண்டும். அதாவது ஆறாவது அறிவு கொண்டு தீமையை நீக்கும் உணர்வைச் சேர்த்தால் பிரம்மாவைச் சிறை பிடித்தான் முருகன்…! என்று தீமை உருவாகாதபடி தடுக்கப்படுகிறது.

ஆனால் தீமை என்ற உணர்வைச் சேர்த்து விட்டால்
1.இது உடல் இச்சை…! கௌரவ பிரச்சினையாக மாறிவிடுகின்றது
2.கௌரவ பிரச்சனைகள் வரும் பொழுது உடல் பற்று வருகின்றது.
3.உடல் பற்று வரும் பொழுது தீமை என்ற நிலையே வருகின்றது

ஆக இந்த உடல் பற்று வரும் பொழுது சிவம்… இந்த உடலைக் காக்கத் தான் நம் எண்ணங்கள் வருகின்றது.

ஆனால் “ஓ..ம்” என்ற பிரணவத்தைச் சிவனுக்கே ஓதினான் தகப்பன் சாமி என்று சாஸ்திரங்கள் காட்டுகிறது.
1.தீமையை நீக்கும் அருள் உணர்வை ஜீவனாக்கினால் பிரணவம்
2.அது தான் தகப்பன்சாமி…! (உடல் சிவம் – ஆறாவது அறிவு முருகன்)

தீமையை நுகர்ந்து விட்டால் உடனே சங்கடப்படுகின்றோம்… சலிப்படைகின்றோம். அப்போது ஆறாவது அறிவு கொண்டு என்ன செய்ய வேண்டும்…?

சங்கடத்தை நீக்க வேண்டும் சங்கடத்தை நீக்க வேண்டும் என்றால் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் சேர்க்க வேண்டும். இருளை நீக்கும் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்தால் கார்த்திகேயா…! (கார்த்தி என்றால் வெளிச்சம்)

பல கோடிச் சரீரங்களில் எத்தனையோ தீமைகளிலிருந்து தப்ப வேண்டும்… தப்ப வேண்டும்… என்று எண்ணி எடுத்துத் தான் மனிதனாக வளர்ச்சி பெற்று வந்திருக்கின்றோம்.

மனித உடல் பெற்ற பின் நாம் உணவாக உட்கொள்ளும் உணவில் மறைந்து வரும் நஞ்சை இந்த உடல் மலமாக மாற்றுகின்றது… உணர்வின் தன்மை அறிகிறது.

உயிர் ஈசனாகின்றது… உடல் சிவமாகின்றது… பல கோடிச் சரீரங்களில் தீமைகளை நீக்க வேண்டும் என்ற வினைகளைச் சேர்த்தது வினைக்கு நாயகனாக மனித உடலை உருவககியது (விநாயகா) மனித உடலை உருவாக்கிய பின் நஞ்சை மலமாக மாற்றுகின்றது.

அகஸ்தியனால் கொடுக்கப்பட்ட விநாயகர் தத்துவம் இதைத் தெளிவாகக் காட்டுகிறது. சொல்வது அர்த்தம் ஆகிறது அல்லவா.

இருந்தாலும்… உடல் பற்றின் தன்மை வரப்படும் போது
1.கௌரவக் குறைவாக என்னைப் பேசினான் என்ற உணர்வான பின்
2.அது “ஓ… ம்…” என்று நமக்குள் ஜீவன் பெற்று விடுகின்றது.
3.அவனுடைய தவறை நீக்குவதற்கு மாறாக அவனுடைய தவறை நமக்குள் வளர்த்துக் கொள்கின்றோம்

அந்தத் தவறு நமக்குள் பிரணவமாகி விடுகின்றது… உடலுக்குள் வரும் பொழுது வேதனை வருகின்றது. வேதனை வரும் பொழுது சிந்திக்கும் திறன் இழக்கப்படுகிறது… சிந்தனை இழந்து கார உணர்ச்சிகள் அதிகமாகி எரிச்சலாகின்றது.

உதாரணமாக…
1.ஒரு கல்லுடன் கல் மோதினால் (உராய்ந்தால்) நெருப்பாகின்றது
2.அந்த இடத்திலே தொடும் பொழுது சுடுகின்றது.

அதே போன்றுதான் இந்த உணர்ச்சிகள் மோதலாகும் பொழுது அதற்குத் தகுந்த மாதிரி வேகங்கள் வருகின்றது. அப்பொழுது அதை மாற்ற முடிகின்றதா…? இல்லை…!

அத்தகைய கார உணர்ச்சிகளை மாற்றுவதற்குத் தான்
1.நம் குருநாதர் காட்டிய வழியிலே அவர் கொடுக்கக்கூடிய அரும்பெரும் சக்திகளை
2.துருவ நட்சத்திரத்தின் சக்திகளை எடுத்து நாம் பயன்படுத்திப் பழகுதல் வேண்டும்.

கார்த்திகை நட்சத்திரத்தின் பங்கு நமக்குக் கிடைக்காததனால் “அறிவு சூனியமாகிக் கொண்டிருக்கின்றது”

கார்த்திகை நட்சத்திரத்தின் பங்கு நமக்குக் கிடைக்காததனால் “அறிவு சூனியமாகிக் கொண்டிருக்கின்றது”

 

குடும்பத்திலே குழந்தைகள் பெரியவர்கள் ஆனதும் திருமணத்தைச் செய்து வைக்கின்றார்கள். முதலில் குழந்தைகளாக இருக்கும் பொழுது குடும்பத்துடன் இருந்தாலும் திருமணம் ஆன பின் பிரிந்து செல்கின்றார்கள்.

பிரிந்து சென்றாலும் தாய் தந்தையுடன் ஒட்டி வாழ்பவர்களும் உண்டு… அவருடன் ஒட்டி வாழாதவர்களும் இருக்கிறார்கள்.

இதே போல் தான் சூரிய குடும்பத்திலும் வளர்ந்து கொண்டிருக்கும் நட்சத்திரங்களின் தன்மைகள்.

ஆரம்ப நிலையில் பல அணுக்கள் மோதி மோதி…
1.மோதலில் ஏற்படும் நிலைகளில் அணுக்கள் உருமாறி ஆவியாக மாறுகின்றது
2.எடை கூடி மேகங்களாக மாறுகிறது… மேகங்களுக்குள் அணுக்கள் மோதும் போது தான் நீராக வடிகின்றது
3.நீருக்குள் சிக்கும் அணுக்கள் எடை கூடி ஓடும் பொழுது அருகிலிருப்பதுடன் உராய்வாகி
4.மற்ற உணர்வுகளைத் தனக்குள் கவர்ந்து திடமாக ஒரு பொருளாக மாறுகின்றது.
5.அது தான் பரம்பொருள்…! – ஒரு கோளாக உருவாகிறது.

அதாவது… ஓடும் வேகத்தில் தன் அருகிலே காந்தப் புலனால் உராயப்படும் பொழுது சுழற்சி ஆகின்றது. சுழற்சியால் வெப்பம் ஆகும் பொழுது நுண்ணிய அலைகளைத் தனக்குள் கவர்கின்றது. துருவப் பகுதி வழியாகத் தன் உணவை எடுக்கிறது.

பல பொருள்களைப் போட்டு நாம் வேக வைக்கும் போது எப்படிப் புது புது சுவை கொண்ட பொருள் உருவாகின்றதோ இது போன்று கோள்… அது நுகர்ந்த உணர்வுகள் கரைந்து அமிலமாக மாறுகின்றது.

அமிலத்தின் தன்மை அடைந்த பின் ஆவியாகப் பல மாற்றங்கள் அடைகிறது. மேலிருந்து வாரியாக பல அடுக்குகளாக வரும் போது இது தான் நிலநடுக்கங்களாக ஆகிறது.

நிலநடுக்கம் ஆன பின் மேல் பகுதி டபக்… என்று உள்ளே சென்று விடுகிறது. உள்ளே சென்ற பின் நிலைநடுக்கம் நின்று விடுகிறது. வேகத்துடிப்பு குறைந்து விடுகிறது.

1.இப்படித்தான் கோளுக்குள் பல மாற்றங்கள் ஏற்பட்டு அதனின் வளர்ச்சியில் பெரும் சக்தியாக மாறி
2.சுழற்சியின் வேகம் கூட.. வெப்பத்தின் தணல் கூட… அது நடு மையத்தில் கூழ் போன்று ஆகின்றது.

முதலில் நீரானது… அடுத்து ஆவியானது மீண்டும் நீரானது. நீருக்குள் அணுக்களின் தன்மை சிக்கியது. சிக்கப்படும் பொருள்கள் உறைந்து உறைந்து எல்லை இல்லாத இடத்தில் ஒரு எல்லையாக பரம்பொருளாக உருப்பெறுகின்றது என்பதைச் சாஸ்திரங்கள் கூறுகின்றது.

சுழற்சியின் வேகம் கூடி நடு மையத்தில் வெப்பத்தின் தணல் கூடக் கூட அனைத்தும் உருகி அமிலமாகிறது… கோள் நட்சத்திரமாக மாறுகிறது.

அமிலமாக இருப்பதை உமிழ்த்தப்படும் போது பால்வெளி மண்டலங்களாக மாற்றுகின்றது. உதாரணமாக நூலாம்படை பூச்சி தன் மலத்தால் வலையை விரித்து அதிலே சிக்கக் கூடியதை உணவாக எடுத்து வளர்கிறது.

அதே சமயத்தில் ஒரு ஈ கிடைத்தால் தன் மலத்தால் அதைக் காற்று புகாது சுற்றி மூடி விடுகிறது. மூடித் தன் இனத்தை அது விருத்தி செய்கிறது. ஒரு நூலாம்படைப் பூச்சி அடுத்து பலவாகிறது.

இதைப் போல் நட்சத்திரம் பால்வெளி மண்டலமாக அமைத்த பின் அதனின் உணர்வின் தன்மை பரவுகின்றது. இருந்தாலும் தன் சுழற்சியின் தன்மை கொண்டு தூசிகளாக வருகிறது.

நூலாம்படைப் பூச்சி வலையில் சிக்குவதை எப்படி உணவாக எடுத்துக் கொள்கின்றதோ அது போன்று பால்வெளி மண்டலத்தில் சிக்கிக் கொண்ட உணர்வுகளைச் சுழலும் வேகத்தில் நட்சத்திரம் தூசிகளாக மாற்றுகின்றது.

மேல் பகுதியில் இருந்து எடுப்பதைத் தனக்குள் விளைய வைக்கின்றது. அமிலமாக இருந்த அந்த நட்சத்திரம் சிறுகச் சிறுக உறைகிறது. அமிலம் உறைந்து பாதரசமாக மாறுகிறது.
1.அதை எடுத்தால் சூடாகாது… சூடானாலும் ஆவியாக மாறிவிடும் ஆனால் பொருளாக இருக்கும் போது எடை கூடியதாக இருக்கும்.
2.ஒன்றைத் தாக்கப்படும் பொழுது வெப்பத்தின் தணல் கூடி பிரித்துவிடும்.
3.ஆனால் வெப்பத்தின் தன்மை வரும் போது இயக்கும் சக்தி வருகின்றது
4.பாதரசத்தின் தன்மை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் தன்மையாக வருகிறது.

இப்படி உருப்பெற்று வளர்ந்து வரப்படும் போது இந்த சூரிய குடும்பத்தின் எல்லையில் கடைசியில் இருப்பது… மற்றதை இழுக்கும் சக்தியாக நட்சத்திரங்களாக வளர்கின்றது.

நட்சத்திரங்கள் உமிழ்த்துவதைக் கோள்கள் இடைமறித்து உணவாக எடுத்து அதனின் வளர்ச்சியில் வளர்கின்றது. மையத்தில் சூரியன் அது செயல்படுகின்றது.

முதலில் நட்சத்திரமாக இருந்தது வளர்ச்சி பெற்றுச் சூரியனாக… ஒரு சூரியக் குடும்பமாக எப்படி மாறியதோ… அதே போல கடைசியில் இருக்கக்கூடிய நட்சத்திரங்கள் ஒவ்வொன்றுமே தான் வளர்ந்து… அதுவும் சூரியனாக மாறத் தொடங்குகிறது

நட்சத்திரங்கள் தனக்கென்று உருவாக்கப்படும் பொழுது பிற மண்டலங்களிலிருந்து (வேறு சூரியக் குடும்பத்திலிருந்து) எடுத்துக் கொடுப்பது இந்தச் சூரிய குடும்பத்திற்குக் கிடைக்காத நிலை வரும் பொழுது இந்தச் சூரியன் முதுமை அடைந்து விடுகிறது.
1.முதுமை அடைந்தால் சூரியன் நாளடைவில் செயல் இழந்துவிடும்
2.அது செயல் இழந்தால் இதனுடன் ஒட்டி இருக்கக்கூடிய கோள்கள் “எங்கே திசை மாறிச் செல்லும்…” என்று சொல்ல முடியாது.

நம்முடைய சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த கார்த்திகை நட்சத்திரம் பிரிந்து சென்று விட்டது. அதனுடன் சேர்ந்து மற்ற நட்சத்திரங்களும் விலகிச் சென்று விட்டது… முழுமையாகவே விலகி விட்டது.

கார்த்திகை நட்சத்திரத்தின் பங்கு நம் சூரியக் குடும்பத்திற்குக் கிடைக்காததனால் “இங்கே அறிவு சூனியமாகிக் கொண்டிருக்கின்றது…”

விஞ்ஞானிகள் விஷக் கதிரியக்கப் பொறிகளை இங்கே பரவச் செய்து கொண்டிருக்கின்றார்கள்… அழிவின் தன்மையாகத் தான் இங்கு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.

மனிதனால் உருவாக்கப்பட்ட விஷக்கதிரியக்கங்கள் இந்தப் பூமி முழுவதும் படர்ந்து பிரபஞ்சத்திலும் பரவி விட்டது. பூமிக்குள் இருக்கும் மற்ற பொருளுடன் அது இரண்டாவது தரம் மோதிய பின்
1.கல் மண் கட்டிடம் அனைத்தையும் ஆவியாக மாற்றி
2.தன் இனமாகப் புயல் போல மாற்றக்கூடிய நிலைகள் நடந்து கொண்டிருக்கின்றது.

வான்வீதியிலும் அது அதிகமாகப் பரவியதால் சூரியனால் கவரப்பட்டு அங்கேயும் மோதலாகி வெடிக்கும் நிலை வரும் போது
1.சூரியனுக்குள் பார்த்தால் கருகும் நிலை அடைந்து (நஞ்சைப் பிரிக்கும் தன்மை இழந்து கொண்டிருக்கிறது) கரும்புள்ளிகள் அதிகமாகப் பரவி விட்டது.
2.சூரியனும் மாசுபடும் நிலைகள் வந்து கொண்டிருக்கின்றது.
3.விஞ்ஞானிகளும் படம் பிடித்து அதை நிரூபித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

2000 சூரியக் குடும்பங்களும் இப்படி விளைந்தது தான். இதிலே
1.முதலில் உருவான மையத்தில் இருக்கக்கூடிய சூரியக் குடும்பம் அது பெரிய சுழற்சி வட்டம்… “பெரிய பாதாளம்” என்பது அது தான்.
2.அதற்குள் எந்தக் கோள் சென்றாலும் கரைத்துவிடும்… எது சென்றாலும் கரைத்து ஆவியாக மாற்றிவிடும்
3.ஆவியாக மாற்றி… மறுபடியும் மற்ற கோள்களுக்கு மற்றவைகளுக்கோ அது உணவாகக் கொடுத்து விடும்.

இது போன்று தான் நம் சூரியனும் கரையும் நிலையில் வருகின்றது கரைந்து அமிலமாக ஆவியாகப் பரவும். நம் பூமி திக்கில்லாதபடி ஓடும். மற்ற சூரியக் குடும்பத்தில் எந்தக் கோளிலாவது போய் விழுகும்.

ஏதாவது ஒரு கோளின் ஈர்ப்புகள் புகும். பூமியிலே விளைந்த உயிர் அணுக்கள் மற்ற கோள்களில் நம் பூமி போன்று ஜீவிக்கக் கூடிய நிலை இருந்தால் அங்கே மீண்டும் உயிரினங்களாக உருவாகும் வாய்ப்பு உள்ளது.

அப்படி இல்லை என்றால்
1.மனிதனாக உருப்பெற்ற “நம்முடைய உயிர்கள்” விஷத் தன்மை கொண்டு சதா வேதனைப் பட்டுக் கொண்டிருக்க வேண்டி இருக்கும்
2.கண்ணுக்குப் புலப்படாத நிலையில் (உயிர்) தான் இருக்கின்றது
3.ஆனால் சேர்த்துக் கொண்ட அந்த விஷத் தன்மையின் துடிப்பு தாங்காது வேதனையை வளர்த்துக் கொண்டுதான் இருக்கும்.

இது எல்லாம் குருநாதர் எனக்குத் தெளிவாகக் காட்டிய உண்மைகள்.

ஒவ்வொரு நொடியிலும் நாம் சுவாசிக்கும் உணர்வு உமிழ் நீராக (திரவகமாக) ஆகாரத்துடன் கலக்கிறது

ஒவ்வொரு நொடியிலும் நாம் சுவாசிக்கும் உணர்வு உமிழ் நீராக (திரவகமாக) ஆகாரத்துடன் கலக்கிறது

 

1.உணர்வுகள் நுகரப்படும் பொழுது உமிழ் நீர்கள் எப்படிச் சுரக்கிறது என்று
2.காட்டிற்குள் அழைத்துச் சென்று என்னை வைத்தே தங்கத்தைச் செய்யும்படி
3.உமிழ் நீர்களை வைத்து அதை உருவாக்கும்படி செய்து காட்டினார் குருநாதர்.

வேறு ஒன்றும் வேண்டியது இல்லை.

மாங்காயைச் சாப்பிட்டு இருக்கின்றீர்களா…? வெயில் காலங்களில்…! எப்படி இருக்கின்றது…?

இப்பொழுது உமிழ் நீர் (எச்சில்) உங்களுக்குள் எப்படிச் சுரக்கின்றது…? லேசாக அந்தப் புளிப்பு கலந்து உமிழ் நீர் ஊறுகிறதல்லவா…!.

“மாங்காய்…” என்ற சொல்லை நான் சொன்னவுடன்
1.அந்த உணர்வை நீங்கள் நுகரப்படும் பொழுது உமிழ் நீராக எப்படி மாறுகின்றதோ
2.இதே மாதிரித் தான் நம்முடைய எண்ணங்கள் நாம் நுகரக்கூடியது அனைத்தும் உமிழ் நீராக மாறும்.
3.(இது நமக்குள் ஒவ்வொரு நொடியிலும் நடந்து கொண்டிருப்பது).

உணவை உட்கொண்ட பின் சங்கடம் சலிப்பு வெறுப்பு இது போன்று எண்ணிப் பாருங்கள். சரியான ஜீரண சக்தியாக வராது அஜீரணமாகி… விஷத்தன்மைகளாக மாறும்.

ஆகையினால் தான் பேசும் பொழுது “உயர்ந்த ஞானத்துடன் பேச வேண்டும்” என்று சொல்வது. அவ்வாறு செய்து வந்தீர்கள் என்றால் நல்ல சக்தியாக உங்களுக்குள் சேரும்.

அவன் அப்படிச் செய்தான் இவன் இப்படிச் செய்தான் அதைச் செய்தான் இதைச் செய்தான் என்று வேதனையும் சோர்வையும் கலந்து
1.அந்த உணர்வோடு உணவு உட்கொண்டீர்கள் என்றால்
2.உடலுக்குள் எதிரியான அணுக்கள் உற்பத்தியாகி நோயாக உருவாக்கும்.

சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!

நாம் சாப்பிடும் ஆகாரத்துடன் சுவாசிக்கும் உணர்வின் உமிழ் நீர்கள் சேர்கின்றது. இந்த உமிழ் நீர் எதுவோ அதற்குத் தகுந்த சாப்பிட்ட ஆகாரத்தை மாற்றுகின்றது.

இது ஒரு திரவகத்தைப் போன்று தான்..

கடினமான நிலைகள்… வேதனை சலிப்பு அந்த உணர்வோடு இருந்து பாருங்கள். நீங்கள் சாப்பிட்ட ஆகாரத்தைச் சரியாக ஜீரணிக்காது

1.நாம் நுகரும் உணர்வுகள் நமக்குள் எப்படி அது உமிழ் நீராக… அந்த உணர்வின் சத்தாக…
2.அதற்குண்டான கருவின் தன்மையாக… அணுக்களாக உடலுக்குள் எப்படி உருப்பெறுகின்றது…?
3.அதனுடைய இயக்கங்கள் எப்படி எல்லாம் நம்மை மாற்றுகிறது…? என்பதை
4.நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே இதை உணர்த்துகின்றேன்.