பக்தி கொண்டு வாழ்ந்து உடலை விட்டுப் பிரிவோரின் கடைசி நிலை

பக்தி கொண்டு வாழ்ந்து உடலை விட்டுப் பிரிவோரின் கடைசி நிலை

 

யாம் (ஞானகுரு) சுற்றுப்பயணம் செய்த காலங்களில்
1.இறந்த பக்தி கொண்ட ஆன்மாக்கள் அதே போல் பக்தி கொண்டவர்கள் உடலுக்குள் புகுந்த பின்
2.எப்படி எல்லாம் அவர்கள் அவஸ்தைப் படுகின்றார்கள்…? அவருடைய எண்ணங்கள் எப்படி ஆகின்றது…? என்பதையெல்லாம்
3.குருநாதர் காட்டிய வழியில் அறிந்து கொண்டோம்.

கிராமத்தில் ஒரு அம்மா இருந்தது. அது ஒரு முருக பக்தர். அந்த அம்மாவிற்குச் சொத்து அதிகம் இருந்தது, எல்லாவற்றையும் எழுதிக் கொடுத்து விட்டது.

என்னை அந்த அம்மா இருந்த வீட்டில் திண்ணையில் உட்காரச் சொன்னார் குருநாதர். அந்த அம்மாவால் எழுந்து நடக்க முடியாது.

அந்த அம்மாவிற்கு வயது எழுபது இருக்கும். அது புலம்பிக் கொண்டே இருந்தது.

என்னிடம் இருந்த சொத்து எல்லாவற்றையும் பறித்துக் கொண்டு, என்னை அநாதையாக்கி விட்டார்கள். செல்வமும் செருக்கும் உள்ள பொழுது என் மடி மேல் உட்கார்ந்து விளையாடுவையே, “முருகா…!”

இப்பொழுது எங்கடா போனாய்…? செல்வம் இருப்பவர்களைத் தான் பார்ப்பாயா…? நான் இப்பொழுது அநாதையாக இருக்கின்றேன் என்னைக் காக்கவில்லையா…? நான் அநாதைதானா…? என்று புலம்பிக் கொண்டு உள்ளது.

ஆனால் உடலெல்லாம் மலத்தால் சூழ்ந்து அசிங்கமாக வைத்திருந்தது.

அந்த அம்மா வீடு பெரியது… சொத்துக்களும் அதிகம். ஆனால் நோய்வாய்ப்பட்ட பின் சாலையில் தூக்கிப் போட்டு விட்டுப் போய்விட்டார்கள்.

“முருகா…!” நான் நினைக்கும் பொழுதெல்லாம் வரம் கொடுத்தாய். நான் சொல்கின்றவருக்கு எல்லாம் நல்லது செய்தாய். எனக்கு நல்ல வழியும் காட்டினாய்.. என்னிடம் செல்வம் இல்லையென்று நீ கூட இப்போது வராமல் போய் விட்டாயேடா…! என்று சொல்லிக் கொண்டு இருந்தது.

நான் அவர்களுக்கு எல்லாம் செய்தேனே… எனக்கு இப்படிச் செய்கின்றார்களே…! எனக்குச் சொத்து வேண்டாம்.. நீ இருந்தால் போதும் முருகா…!

என்னை இந்த நிலைக்கு விட்டு விட்டார்கள்… நான் அசிங்கமான நிலையில் இருக்கின்றேன்… என்னைக் கவனிப்பதற்கு நீ கூட வரவில்லையே. இந்த அசிங்கத்தைப் பார்த்து நீ கூட விலகி விட்டாயா…?” என்று கேட்டுக் கொண்டிருந்தது.

இரண்டு மணி நேரம் அந்த அம்மா சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

அந்த அம்மா புலம்பிக் கொண்டிருப்பதைப் பார்த்து நான் கதவைத் திறந்து உள்ளே போனேன். அந்த அம்மவைப் பக்கத்தில் இருந்த கிணற்றில் குளிக்க வைத்துத் துணிகளை துவைத்துக் கொடுக்கச் சொன்னார் குருநாதர், செய்தேன்.

பின்பு ஆசீர்வாதம் கொடுத்தேன். மனது தெளிவடைந்து அந்த அம்மா அமர்ந்தது,

“முருகா…! நீ வந்துவிட்டாயா…?” “நீ இந்த ரூபத்தில் வருவாய் என்று எனக்குத் தெரியவில்லையே…” என்று அப்போதும் முருகனைத் தான் நினைக்கின்றது.

என் பிள்ளை மாதிரி என் மடியில் அமர்ந்து விளையாடுவாய். இப்பொழுது பெரிய ஆளாக வந்து இருக்கின்றாய்… “நீ திருடனப்பா…!” என்று சொல்கின்றது.
1.நான் முருகன் இல்லை… சாதாரண மனிதன் தான்…! என்று சொன்னேன்.
2.முதலில் முருகன் வந்தான் என்றால் இப்போது ஏன் வரவில்லை…? என்று கேட்டேன்.

இது எல்லாம் மந்திர வழியால் (மந்திர ஒலிகள்) எடுத்துக் கொண்ட உணவுகள் தனக்குள் சிக்கப்பட்டு இதே உணர்வு கொண்டு முருகன் மேல் பக்தியாகச் சென்ற ஆன்மாக்கள் இறந்த பின்
1.உடலுடன் உள்ளவர்கள் அதே பக்தியை யார் கொள்கின்றார்களோ அந்த உடலுக்குள் புகுந்து
2.அவர்கள் வாழ்ந்த காலத்திலே (இறந்தவர்) கடைசியிலே நோய்வாய்ப்படும் பொழுது அவர்களை எப்படிக் கவனிக்காமல் விட்டார்களோ
3.அதே ஆன்மா இங்கே “முருகனைப் போன்று காட்சி தருவதும்…” பல நிலைகளைச் செய்வதும்
4.ஆனால் நாளடைவில் அந்தக் காட்சியின் உணர்வுகள் விளைந்து இப்படிக் கடும் நோயாக மாறுகின்றது.

சமுதாயத்தில் அவர்கள் குடும்பத்திலே இந்த வயதான அம்மா மீது எப்படி வெறுப்படைந்தனாரோ அந்த வெறுப்பினால்… சேர்த்து வைத்த சொத்தைப் பறிக்கத்தான் முடிந்தது… முருகன் காக்கவில்லை…!

செல்வத்தைப் பெற்றோம்… சந்தோஷமாக இருப்போம் என்ற நிலை இல்லை. எப்பொழுது மடிவார்…! என்று தான் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்… தொலைந்து விட்டால் தன் இஷ்டத்திற்குச் செய்துவிடலாம் அல்லவா…!

காரணம் என்ன என்றால்
1.உயிரோடு இருக்கும் பொழுது சொத்தை எல்லாம்
2.மற்றவர்களுக்கு உயிலாக எழுதி வைத்துவிட்டால் என்ன செய்வது…?

ஏனென்றால் ஒரு சிலர் உயில் எழுதி வைத்ததைத் தெரிந்து கொண்டால்
1.சொத்து தன் கைக்கு வராது… மற்றவர்களுக்குச் சேர்ந்து விடும் என்றால்
2.இப்படி எல்லாம் சில குடும்பங்களில் நடக்கிறது.

செல்வம் இருந்தாலும்… அதைக் கொடுத்துச் சந்தோசமாக வாழ வேண்டும் என்ற நிலையில் இருந்தாலும்… அவர்களைக் காக்கும் நிலை கூட மாறி விடுகின்றது.

இந்த அம்மா “யாருக்கோ உயிலை எழுதி வைத்துவிட்டார்…” என்று சொன்னதற்காகறகக வேண்டி இவரைத் தொல்லைப்படுத்திச் சொத்தைப் பறித்து அனாதையாக இப்படி விட்டு விட்டார்கள்.

குடும்பத்தில் இன்றும் சில இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

சொத்து என்று வந்து விட்டால் அம்மா அப்பா என்று கூடப் பார்ப்பதில்லை… சகோதரர்களுக்குள்ளும் பகைமை வருகின்றது…!

1.முருகனை பக்தி கொள்கின்றோம் சிவனை வணங்குகின்றோம் என்று எல்லாம் தான் சொல்கிறோம்.
2.அதே சமயத்தில் அம்மாவோ அப்பாவோ சகோதரர்களோ அவர்கள் எனக்குத் துரோகம் செய்கிறார்கள் என்ற எண்ணத்துடன்தான் தெய்வத்தை வணங்குகின்றோம்
3.மந்திரத்தைச் சொல்லி சகோதரன் சாக வேண்டும்.. அல்லது தந்தை சாக வேண்டும் என்ற எண்ணத்துடன் முருகனை வணங்குகின்றார்கள்
4.ஆக பக்தி எந்த அளவிலே இருக்கின்றது…? என்று தெரிந்து கொள்ளலாம்.
5.உடலின் மேல் இச்சை கொண்டு தெய்வத்தைச் சாட்சியாக வைத்துச் செய்யக்கூடிய செயல்கள் தான் இது.

ஆனால் நல்ல உணர்வுகளை எடுத்துத் தீமைகளை அகற்றும் அந்த உணர்வின் தன்மை பெற்றால் நமக்குள் “நாம் தெய்வமாகலாம்…”
1.எல்லோரும் இன்புற்று இருக்க வேண்டும்
2.தெய்வீக குணத்தைப் பெற வேண்டும்
3.தெய்வீகப் பண்புடன் இருக்க வேண்டும்
4.தெய்வீக வாழ்க்கை வாழ வேண்டும்
5.பார்க்கும் குடும்பங்கள் எல்லாம் நலமாக இருக்க வேண்டும் என்றும்
6.நாம் ஒவ்வொருவரும் எண்ணினால் பகைமை மாறிவிடும் என்பதற்காக
7.ஆலயங்களில் இதைச் சொல்லி இருந்தாலும் இதை யாரும் செயல்படுத்துவதில்லை.

பக்தி என்ற பேரில் ஆலயத்திற்குச் சென்றாலும் தன் ஆசையின் நிலைகள் கொண்டு சந்தர்ப்பவசத்தால் சாமி சிலையையோ அல்லது படத்தையோ திரும்பத் திரும்பப் பார்த்துப் பதிவாக்கி எடுத்துக் கொண்ட உணர்வுகள் தான் “தெய்வமாகக் காட்சி தருவதும்… மற்ற நிலைகளும்…”

இப்படி மனிதனுடன் பழகிய நிலைகள் இந்த மனித வாழ்க்கைக்குத் தான் அது பயன்படுகிறது. தான் எண்ணியது கிடைக்கவில்லை அல்லது நடக்கவில்லை என்றால் உடனே வேதனை வருகின்றது.

வேதனைகள் அதிகமான பின் அடுத்து மற்ற தெய்வங்களை
1.காளிக்கோ அங்களேஸ்வரிக்கோ மாடசாமிக்கோ முனுசாமிக்கோ ஆடுகளையும் மற்றதையும் பலியிட்டு
2.அந்த இரத்தத்தை அபிஷேகித்து மகிழும் நிலையில் தான் இருக்கின்றது.

இப்படி எல்லாம் செய்தால் அந்தத் தெய்வம் நம் கஷ்டத்தை நீக்கும் என்று தவறான வழிகளைத் தான் நாம் பின்பற்றிக் கொண்டிருக்கிறோம்.

அந்த தவறின் நிலைகளில் வாழ்ந்து உடலை விட்டுப் பிரிந்தால் அசுர உணர்வு உண்டு மாடனாகவும் முனியனாகவும் இன்னொரு உடலுக்குள் ஆவியாகச் சென்று ஆட்டிப்படைக்கும்.

ஆகவே நாம் வணங்கும் முறைகள் எதுவோ உடலுக்குப் பின் உயிருடன் ஒன்றி வெளியே செல்லப்படும் பொழுது நாம் எந்தத் தெய்வத்தை வணங்கினோமோ அந்த உணர்வு தான் அங்கே காட்சியாக… நோயாக மாறுகின்றது.

இது எல்லாம் மனிதனால் மனிதனுக்குள் உருவாக்கப்பட்ட நிலைகள்…!

நாம் இயற்கையான அழகைப் பெற வேண்டும்

நாம் இயற்கையான அழகைப் பெற வேண்டும்

 

இன்று நாம் அணியும் ஆடைகளில் விஞ்ஞான அறிவால் எடுத்துக் கொண்ட நிலைகளில் கடும் விஷம் கொண்ட கெமிக்கல் தான் சாயங்களாகப் பூசப்படுகிறது அதிலிருந்து.

அதிலிருந்து வெளிப்படும் விஷமான ஆவியைச் சூரியன் கவர்ந்து வைத்துக் கொள்கின்றது. அதே சமயத்தில் நாம் அந்த ஆடைகளை அணிந்திருக்கும் போது
1.எந்த விஷத்தின் தன்மை அதிலே சாயமாக உருவாக்கப்பட்டதோ
2.நமக்குள் இருக்கும் காந்தப்புலன் அதன் மணத்தை நுகர்ந்து சுவாசிக்கும்படி செய்து
3.உடலுக்குள் அந்த விஷத்தை ஊட்டி விடுகின்றது.

ஆனால் அன்று அகஸ்தியன் காலத்தில் விஷத்தை முறித்திடும் தாவர இனங்களை எடுத்து மற்ற மற்ற தாவரங்களுடன் அது கலக்கப்பட்டு அதைத் தான் சாயங்களாக பல நிறங்களில் உருவாக்கினார்கள்.

அத்தகைய சாயங்களை ஆடைகளிலே பூசி பின் அதை அணிந்து கொண்டால் விஷத் தன்மை புகாதபடி பாதுகாக்கும் சக்தியாக வந்தது… அக்காலங்களில்…!

பல தாவர இனங்களின் தன்மையை ஆடைகளாக உருவாக்கப்பட்டு தீமை உடலுக்குள் புகாதபடி அகஸ்தியன் வாழ்ந்த காலங்களில் பெரும்பகுதி அப்படித் தான் தடுத்துக் கொண்டனர்.

1.தாவரங்களின் பட்டைகளைத் தட்டி ஆடைகளாக நெய்து பல பச்சிலை மூலிகைகளை இந்த நாருடன் கலக்கப்பட்டு
2.பிற விஷங்கள் தங்களைத் தாக்காதபடி பாதுகாப்பாக உருவாக்கிக் கொண்டனர்
3.அன்று அகஸ்தியன் காலத்தில் வாழ்ந்த புலஸ்தியர்கள் என்று சொல்லும் மக்கள் அனைவரும்.

ஆனால் இன்று நாம் அழகுபடுத்த என்ன செய்கின்றோம்…?

முகத்தில் பூசுவதற்கு என்றே எத்தனையோ பவுடர்களை இன்று கெமிக்கல் கலந்து உருவாக்கி வைத்துள்ளார்கள். கெமிக்கல் கலந்த பவுடர்களை நாம் பூசிக் கொண்ட பின் என்ன நடக்கிறது…?

முதலிலே முகம் மிக அழகாகத் தோன்றுகின்றது. ஆனால் பின்னாடி முகத்தில் உள்ள தோல்கள் எல்லாம் சுருங்கி விடுகின்றது நாளடைவில் பார்க்கப்படும் பொழுது “வயதானவர்…” போன்றே தோற்றம் அளிக்கின்றது.

ஆனால் மீண்டும் அந்தச் சாயங்களைப் பூசினால் தான் அழகுபடுத்த முடிகின்றது அதே சமயத்தில் அந்த விஷத்தின் தன்மை சுவாசிக்கப்படும் பொழுது இயற்கையின் அழகையும் கெடுத்து விடுகின்றது…!

குறிப்பாக பெண்களுக்கு என்று எத்தனையோ அழகு சாதன பொருட்களை கெமிக்கல் கலந்த நிலையில் உருவாக்கிக் கொண்டே உள்ளார்கள்.

சினிமாவில் நடிக்கக் கூடியவர்கள் அதைப் பூசிக் கொள்கின்றார்கள். அப்படிப்பட்ட அலங்காரம் செய்வதற்கு என்று தனி நபர்களும் இருக்கின்றார்கள் காசைக் கொடுத்துச் செலவழித்துக் கொண்டும் இருக்கின்றார்கள்.

ஆக உள் அழகைப் போக்கிவிட்டு விஷத்தின் தன்மை நாளடைவில் கவரப்படுகின்றது. இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் நாம் விடுபடுதல் வேண்டும்.

இயற்கையான அழகை நாம் பெற வேண்டும் என்றால்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைப் பெற வேண்டும் என்று அதை நுகர்ந்து பாருங்கள்… முகங்களில் எவ்வளவு அழகு வருகின்றது என்று…!
2.அருள் உணர்வுகளைப் பெருக்கினால் இயற்கை அழகை நாம் பெருக்கிக் கொள்ள முடியும்.

வேறு ஒன்றுமே வேண்டியதில்லை…! ஒரு தாய் கருவுற்று இருக்கிறது என்று தெரிந்து கொண்டால் மகாலட்சுமி படமோ சரஸ்வதி படமோ எத்தனையோ அழகான தெய்வப் படங்கள் இருக்கின்றது. அழகாக உருவாக்கி வைத்துள்ளார்கள்.

அதை உற்றுப் பார்த்து அந்த அழாகன வடிவில் என் குழந்தை உருவாக வேண்டும்… வளர வேண்டும்… அழகாக வர வேண்டும்… என்று எண்ணினால் அந்தக் குழந்தை நிச்சயம் அழகாக வரும்.

அதே போன்று தான் உயர்ந்த உணர்வுகளை நுகர்ந்து என் முகம் அழகாக வேண்டும் என்று எண்ணினால் முகம் செழிப்பாக வரும்.

சங்கடமாக இருக்கும் போது முகம் சுருங்கி விடுகின்றது… இருளாகின்றது…! ஆனால்
1.அருளைப் பெற வேண்டும் இருளை அகற்ற வேண்டும் என்ற உணர்வைச் சேர்த்துப் பாருங்கள்.
2.முகத்தில் நல்ல மறுமலர்ச்சி ஏற்படும். மகிழ்ச்சி தோன்றும்… நம்மைப் பார்ப்பவர்களுக்கும் அந்த மகிழ்ச்சி தோன்றும்.

ஆகவே அன்றைய மெய் ஞானிகள் காட்டிய வழியிலே உயிருடன் ஒன்றி உணர்வை ஒளியாக மாற்றும் தகுதியை நாம் பெற வேண்டும்.

இன்று எல்லாவற்றையும் காசைக் கொடுத்து விலைக்கு வாங்கும் நிலைக்குக் கொண்டு சென்று விட்டோம். இது போன்ற நிலையிலிருந்து விடுபட வேண்டும்

நமக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டே இருப்பவர்களுக்கு “நாம் செய்ய வேண்டியது…”

நமக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டே இருப்பவர்களுக்கு “நாம் செய்ய வேண்டியது…”

 

நமது குருநாதர் காட்டிய வழியில் உங்கள் வாழ்க்கையில் எத்தகைய தீமைகள் வந்தாலும் அந்தத் தீமை உங்களுக்குள் புகாதபடி செயல்படுத்திக் கொள்ளுங்கள்.

நமக்கு ஒருவர் தீமைகளை அதிகமாகச் செய்து கொண்டே இருக்கின்றார்… நம் மனம் தாங்கவில்லை…! என்றால் வேறு ஒன்றுமே செய்ய வேண்டியதில்லை…!

1.சும்மா கேட்டுக் கொண்டே இருங்கள்…
2.அவர்கள் எதையெல்லாம் கெட வேண்டும் என்று எப்படி எல்லாம் சொல்லுகின்றனரோ
3.அதைத் திருப்பி – நீங்களே அனுபவித்து அதன் வழியில் தெரிந்து கொள்ளுங்கள்…! என்று அவரிடம் சொன்னால் போதும்
4.அவர் சொன்ன கெடுதல் நமக்குள் வராது

ஆனால் அந்தத் தீங்கு செய்வோர் உணர்வுகளை நாம் நுகர்ந்தால் அந்தத் தீமையின் உணர்வுகள் இரத்ததில் இந்திரீகமாக மாறிவிடும்.

பின் அது அணுவாக மாறும் பொழுது அதே தீங்கான உணர்ச்சிகளை உணவாக எடுத்து வளரத் தொடங்கும். அப்பொழுது அதே பேச்சு அதே சொல் அதே நிலை நமக்குள்ளும் வந்து அந்தத் தீங்கின் அணுக்கள் விளைந்து நம் உடலையும் பாழ்படுத்திவிடும்.

இதைப் போன்ற நிலையில் இருந்து நாம் விடுபட வேண்டும்.

ஆகவே… யார் எத்தகைய தீமைகளைப் பேசினாலும்
1.நீ பேசுவது… நீ சொன்னது… நீ கேட்டது… எதையெல்லாம் கெட வேண்டும் என்று நீ எண்ணினாயோ…
2.அதையெல்லாம் உனக்குள்ளே நீயே அனுபவித்துத் தெரிந்து கொள்…
3.அதுவே உனக்குச் சிறந்ததாக இருக்கும்…! என்ற சொல்லிவிடுங்கள்.

அதற்கு அடுத்து
1.அறியாமையிலிருந்து அவர்கள் விடுபட வேண்டும்
2.பொருள் காணும் நிலைகள் பெற வேண்டும் என்று இதை நமக்குள் படைத்தல் வேண்டும்.

ஏனென்றால் அவர்கள் பேசிய உணர்வுகளை நாம் எடுக்காது… அவர் அறியாமையில் இருந்து விடுபட வேண்டும் என்ற உணர்வும் நல் ஒழுக்கத்தின் தன்மை அங்கே வர வேண்டும் என்றும் பண்பின் உயர்வு அங்கே வளர வேண்டும்… பண்பின் நிலைகள் கொண்டு அவர்கள் வளர வேண்டும் என்ற உணர்வுகளையும் நாம் எண்ணத்தால் எண்ணிவிட்டால்
1.இந்த நினைவின் ஆற்றல் நமக்குள் பண்பு கொண்ட உணர்வின் அணுக்களை வளர்க்கவும்
2.நம் சொல்லும் செயலும் நமக்கு நன்மை பயக்கும் நிலைகளாக வரும்.

ஏனென்றால்.. குரு காட்டிய அருள் வழியில் யாம் (ஞானகுரு) பல காலம் மலை காடு மேடெல்லாம் அலைந்து துயரப்பட்டுத் தான் இத்தகைய உணர்வுகள் எவ்வாறு இயக்குகின்றது என்பதை அறிந்து கொண்டோம்.

அறிந்து கொண்ட நிலையில் நாம் நுகர்ந்ததை உயிர் இரத்தத்தில் இந்திரீகமாக மாற்றுகின்றது. நம் உடல் இந்திரலோகமாக மாறுகின்றது அதிலே அந்த அணுவின் தன்மை உருவாகிவிட்டால் அது பிரம்மனாக உருவாகி அது தன் இனத்தின் தன்மை பெருக்குகின்றது… உடலாக… சிவமாக உருவாகின்றது.

விஷ்ணு வரம் கொடுக்கின்றான்… இந்திரனோ மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்கின்றான்… பிரம்மனோ அதன் வழிப்படி உருவாக்குகின்றான்.
1.நாம் எதையெல்லாம் எண்ணுகின்றோமோ இது தான் ஜெபம் என்றும்
2.பல காலம் பிரம்மனை நோக்கித் தவம் இருந்தான்…! என்று இதைத் தான் (காவியங்களில்) சொல்வார்கள்
3.அதாவது இந்த வாழ்க்கையில் நாம் எதனை எண்ணி ஏங்குகின்றோமோ அதுவே பிரம்மமாக மாறுகின்றது… அதன் வலுவே ஒன்றாகக் கூடுகின்றது.

ஒரு குழம்பு வைக்கிறோம் என்றால் அதிலே காரத்தைப் போட வேண்டும் என்றாலும்… அதிகமாகப் போட்டுவிட்டால் சுவை கெட்டு விடுகின்றது.. இரசித்துச் சாப்பிடும் தன்மை இழந்து விடுகின்றது. அதே போல் உப்பை அதிகரித்து விட்டாலும் சுவைத்துச் சாப்பிட முடியாத நிலை வருகின்றது.

இது போன்றுதான் தீமை செய்யும் உணர்வுகள் நமக்குள் அதிகரித்து விட்டால் நமக்குள் மகிழ்ச்சி பெறும் உணர்வினை அது தடைப்படுத்துகின்றது.

அதை மாற்றி அமைக்க அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நுகர்ந்து சமப்படுத்துதல் வேண்டும். அருள் உணர்வுகளை அதிகமாகப் பெருக்கி சிறுமையும் தீமையும் விளைவிக்கும் அணுத் தன்மைகளைக் குறைத்திடல் வேண்டும்.

தீமைகளை வென்று உணர்வை ஒளியாக மாற்றி ஒளியின் சரீரமாக வாழ்ந்து கொண்டிருப்பது துருவ நட்சத்திரம். அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைக் கவர்ந்தவர்கள் அதனுடைய ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

நம் குரு காட்டிய வழிகள் கொண்டு அந்த அருள் சக்திகளை எடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் உங்களுக்குள் பதிவாக்குகின்றோம். யாம் பதிவாக்கியதை நினைவு கொண்டு உங்களுக்குள் எடுத்து வளர்த்துக் கொள்ளுங்கள்.

1.பகைமையான உணர்வுகள் வந்தால் அல்லது தீமை செய்வோர் உணர்வுகளை நுகர்ந்தால்
2.அது நமக்குள் புகாது அவர்களும் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெற்று
3.நல் வழி பெற வேண்டும் என்று நாம் பிரார்த்திப்போம்… தியானிப்போம்… தவமிருப்போம்.

நாடி சாஸ்திரம்

நாடி சாஸ்திரம்

 

அக்கால ஞானிகள் எல்லாவற்றிற்கும் “காரணப் பெயர்களை வைத்து” நம் வாழ்க்கையில் வரும் தீமை என்ற உணர்வுகளை அறிந்து அதிலிருந்து விடுபட்டு நாம் எவ்வாறு தெளிந்து வாழ வேண்டும் என்பதற்காக சாஸ்திரங்களையும் காவியங்களையும் படைத்துக் கொடுத்தார்கள்..

வியாசகர் பாரதம் என்று சொல்வார்கள்.
1.அதிலே வியாசகர் அவ்வப்போது வருவார்…
2.அதே போன்று அகஸ்தியரும் அவ்வப்போது வருவார்… போவார்…!

வாதாபி என்ற ஒரு அரக்கனையும் அவனுடைய சகோதரனையும் காட்டியிருப்பார்கள். மற்றவர்களைக் கொன்று உணவாக உட்கொள்கிறார்கள் என்றும் காட்டியிருப்பார்கள்.

ஆனால் அகஸ்தியனை ஒன்றும் செய்ய முடியாது என்றும் சொல்லியிருப்பார்கள்.

வாதாபி ஆடாக மாறுவதும் அதை அடுத்தவன் அறுத்துச் சமைத்து அங்கு வருபவருக்கு உணவாகக் கொடுப்பதும் அவர்களுடைய வழக்கம். சாப்பிட்டு முடிந்த பின் வாடா வாதாபி…! என்று கூப்பிட்டால் வயிற்றைப் பிளந்து அவன் வெளியிலே வருவான்.

இப்படிக் கொன்று விட்டு அவனை இருவரும் சேர்ந்து சாப்பிடுவது அவர்களுடைய வழக்கம். சுருக்கமாக வேட்டையாடும் நிலையாக மீனைப் பிடிக்கத் தூண்டிலில் இரை வைத்துப் போடுவது போன்று அவர்கள் செயல்படும் நிலைகளைக் காட்டியிருப்பார்கள்.

அகஸ்தியன் அங்கே செல்லப்படும் பொழுது அதே போன்று வாதாபி ஆடாக மாறுவதும் சமைத்து இவன் உணவாக உட்கொண்ட பின் “வாடா வாதாபி…!” என்று இவன் கூப்பிடுகின்றான்.

அவன் வரமாட்டான்… அவன் அப்பொழுதே ஜீரணம் ஆகிவிட்டான்…! என்று அப்போது அகஸ்தியன் சொல்கின்றான். வாதாபியைக் கொன்று விட்டான்…! என்று சொன்னதும் இவனுக்குக் கோபம் வருகிறது.

அகஸ்தியனைக் கொல்வதற்கு முயற்சிக்கின்றான். அகஸ்தியனோ அவனை உற்றுப் பார்க்கின்றான்… எரித்து விடுகின்றான்.
1.அகஸ்தியனுடைய சக்தியை அங்கே காட்டுகின்றார்கள்.
2.ஆனால் அவன் கண்டுணர்ந்த வானவியல் புவிஇயல் உயிரியல் தத்துவங்கள் எங்கும் வரவில்லை.
3.ஏதோ வருவார் போவார்… எங்கேயோ காட்டிலே வருவார் போவார்… என்று காட்டிவிட்டார்கள்.

அதே போன்றுதான் வேத வியாசர் என்று பெயரை வைத்திருப்பார்கள். ஆனால் வேதங்களைக் கற்றுணர்ந்தவன் அவன் அல்ல. கண்டுணர்ந்த உணர்வுகளை வேதங்களாக மாற்றிக் கொண்டது பின் வந்தோர்.

அவனை நீசன் என்று வைத்து அவனை ஒதுக்கப்பட்டு அவனின்று வந்த உண்மை உணர்வுகளை மாற்றிவிட்டனர்.

வியாசகர் கண்டதை பிருகு எடுத்தான். அவன் அரசாட்சி நிலையில் வந்தவன். நட்சத்திரங்களின் இயக்கங்கள் எப்படி…? என்று உணர்ந்தான். நட்சத்திரங்களின் சக்திகளைத் தனக்குள் எடுத்து மக்களின் மீது பாய்ச்சி இந்த உலகையே ஆள விரும்பியவன்.

இதே போன்றுதான் அத்திரியும்…! ஒரு அத்தி மரத்தில் இடை இடையிலே கனிகள் எப்படி முளைக்கின்றதோ அதைப் போல் அவன் எடுத்துக் கொண்ட எண்ணங்கள் மக்களை அடிமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் கொண்டு போர் முறை செய்தவன்.

போர் முறைக்குச் சென்று தன் உணர்வுகளை நிறைவேற்றத் தவத்தை அங்கங்கே மேற்கொண்டு அரச சாம்ராஜ்யமாக மாற்றிக் கொள்ள முயற்சி செய்தான்…! இந்த உடலுக்குத் தான்… விண் செல்லும் முறையே இல்லை.

1.இது போன்ற ஏழு ரிஷிகளைக் காட்டியிருப்பார்கள்
2.ஏழு குணங்களின் உணர்வைத் தனித்துத் தனித்துப் பிரித்து
3.வியாசகன் சொன்னதை எழுத்து வடிவில் கொண்டு வந்து
4.மகாபாரதப் போர் என்று காட்டி அதை அரசனுக்கு உகந்த நிலையாக
5.தன்னுடைய போர் முறைகளுக்காக பல நிலைகளைக் கையாண்டு கொண்டார்கள்.

அதன் வழி தான் இன்றும் நாம் நடந்து கொண்டு வருகின்றோம்…!

உலக ரீதியிலே “சத்திரியன்…” என்று அரசனைக் காட்டி எவனுக்கும் அவன் அடிமை ஆவதில்லை என்றும் மற்றவர்களை அடிமையாக்கி அவன் வாழ்வான் என்றும் அரசன் செய்வதில் தவறில்லை என்று உருவாக்கி இருப்பார்கள்.

அதே போல் “குரு…” என்று உருவாக்கி அந்தக் குருவிற்குத் தவறு செய்யாத நிலையில் அடிபணிதல் வேண்டும் என்றும் சட்டம் இயற்றி இருப்பார்கள்.

“வணிகன்…” அவன் எத்தனை பொய்கள் வேண்டும் என்றாலும் சொல்லிக் கொள்ளலாம் அவன் வியாபாரத்தைக் காக்கப் பொய் சொல்லித்தான் ஆக வேண்டும் ஏனென்றால் உண்மையைச் சொன்னால் வியாபாரம் ஆகாது.

சத்திரிய தர்மத்திலும் வணிகர் தர்மத்திலும் இப்படியெல்லாம் உருவாக்கி உள்ளார்கள். ஆனால் வர்ணாசிரம தர்மத்தில் நாமெல்லாம் (மக்கள்) கீழ் மட்டத்தில் தான் வருகின்றோம்.
1.மக்களை அடிமைப்படுத்தினான் அரசன்
2.அவன் சொன்ன நிலைகளில் அடிமைகளாகத்தான் இன்றும் வாழ்கின்றோம்.

அடிமை என்ற நிலைகள் கொண்டு அரசன் பல உயிர்களைப் பலியிட்ட பின்… பலியிட்ட உணர்வின் தன்மை (ஆவிகளை) கைவல்யப்படுத்தி அவன் சுகபோகமாக வாழும் நிலை தான் அன்று வந்தது.

அதன் வழி எழுதுகின்றான் அந்த அரசன் ஆட்சி புரிந்த நிலையை விஸ்வாமித்திரர் நாடி… அகஸ்தியர் நாடி… போகர் நாடி… அந்த நாடி இந்த நாடி…! என்று அப்படி எழுதி உருவாக்கிய மந்திர ஒலிகளை மனிதனுக்குள் பாய்ச்சி அவன் இறந்த பின் அதைக் கவர்ந்து அவன் சுழற்சி வட்டத்தில் வந்தது தான் (ஆவியின் தன்மை கொண்டு) நாடி சாஸ்திரங்கள்…!

அதிலே அந்தந்தக் காலத்திற்கு ஒப்ப எழுத்துக்கள் மாறும். அதே சமயத்தில் “யட்சிணி…” என்று மாற்றப்பட்டு என்றோ எழுதிய நாடியை இன்றும் அதை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

1.போன ஜென்மத்தில் நீ இப்படி இருந்தாய்… இங்கெங்கெல்லாம் வந்தாய்
2.இதனுடைய நிலைகள் இப்படி ஆனாய்… இன்று நீ மனிதனாக இருக்கின்றாய்
3.இன்னார் மகனுக்கு இந்த திசையில் இருக்கின்றது என்றெல்லாம் சொல்லும்.

இப்படி யட்சிணி என்று இந்த உணர்வின் அலைகளைக் கவர்ந்து சொல்லும் பொழுது
1.“தான் என்னமோ மோட்சத்திற்குப் போகின்றோம்…”
2.வாழ்க்கையில் அதைச் செயல்படுத்த வேண்டும் என்று நாடிகளைத் தேடிச் செல்வார்கள்.
3.காசைக் கொடுத்துவிட்டுத் தேடி அலைவார்கள்

ஞானிகள் சொன்னது அனைத்தையும் இப்படித் தான் தலைகீழாக மாற்றி… காசைக் கொடுத்து விலைக்கு வாங்கும் பொருளாக மாற்றி விட்டார்கள்.

ஒரு சீராக இயங்கிக் கொண்டிருந்த சூரியன் “எரிமலையாக இன்று உமிழ்த்திக் கொண்டிருக்கின்றது”

ஒரு சீராக இயங்கிக் கொண்டிருந்த சூரியன் “எரிமலையாக இன்று உமிழ்த்திக் கொண்டிருக்கின்றது”

 

கடும் விஷத்தன்மை பரவிக் கொண்டிருக்கும் இன்றைய கால கட்டத்தில் உலகம் முழுவதுமே நஞ்சு பரவும் நிலை இருக்கின்றது.

அணுகுண்டுகளும் மற்றும் அதைப் போன்ற எத்தனையோ கெமிக்கல் கலந்த குண்டுகளையும் வெடித்துப் பரிசீலித்துப் பார்த்த
1.அந்த விஷமான கதிரியக்கங்கள் அனைத்தும் நம் சூரியக் குடும்பத்தில் உள்ள எல்லாக் கோள்களும் கவர்ந்து விட்டது.
2.சூரியனும் அதைக் கவர்ந்து தனக்குள் கடும் எரிமலைகளாகக் காந்தப் புயல்களாகக் கக்கிக் கொண்டே உள்ளது
3.அதிலிருந்து வரக்கூடிய எதிர்மறையான உணர்வுகள் நம் பூமிக்குள் அடிக்கடி அடிக்கடி பாய்ந்து கொண்டிருக்கின்றது.

தினமும் பத்திரிகை படிப்பவர்களுக்கு இது தெரிந்திருக்கும்.

மின்னல்கள் பாயும் பொழுது அது கடலிலே அடங்கி யுரேனியமாக மாறுவதும் 27 நட்சத்திரங்களுடைய உணர்வு பல கலவைகள் கொண்டு வித்தியாசமான வெடி பொருள்களுக்கு உகந்த மணல்களாகவும் வருகின்றது.

இது எல்லாம் பூமியில் தாக்கப்படும் பொழுது அது நடு மையம் அடைந்து கொதிககலனாக மாறி நிலநடுக்கங்கள் போன்று ஆகி கீழே இருப்பது மேலே வருவதும் மேலே இருக்கும் நிலம் கீழே இறங்குவதும் பூமிக்குள் பல பல மாற்றங்கள் அதுவும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

இதையும் பத்திரிகையில் நீங்கள் பார்த்திருக்கலாம்.

ஒரு சீராக இயங்கிக் கொண்டிருந்த சூரியனின் நிலைகள் மாறி மனிதனால் உருவாக்கப்பட்ட விஷத்தன்மைகள் அங்கே பெருகி விட்டது. “எரிமலைகளாக அது உமிழ்த்திக் கொண்டிருக்கின்றது…!”

சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பு யாம் (ஞானகுரு) சொன்னது இப்பொழுது நடந்து கொண்டிருக்கின்றது. அந்த எரிமலைகள் இங்கே பரவி
1.ஒன்றுடன் ஒன்று உராயப்படும் பொழுது எலக்ட்ரிக் என்ற நிலைகள் அதிகரிக்கும்… அது இரு மடங்காகப் பரவும்.
2.அப்படி உருவான உணர்வுகளை மனிதன் எடுத்துக் (மின்சாரம் தயாரிக்க) காந்த புலன்களில் மோதப்படும் பொழுது
3.இது எலக்ட்ரிக் பவரை அதிகரிக்கும்… மோதலில் வெப்பத்தின் தன்மையும் கூட்டும்.

இப்பொழுது நீங்கள் பார்க்கலாம். சூரியனுக்குள் எரிமலையாகப்படும் பொழுது பூமிக்குள் எந்தெந்தப் பகுதியிலே பரவுகின்றதோ அங்கே வெயிலின் கொடுமைகள் அதிகமாகிறது (CLIMATE CHANGE).

எலக்ட்ரிக் என்ற நிலை மனிதனுக்குள் வரப்படும் போது
1.உயிரின் துடிப்புகள் அதிகரித்து வேகம் அதிகமாகும்
2.உடலுக்குள் சீராக இயங்கிக் கொண்டிருக்கும் அணுக்களின் தன்மையும் துடிப்பு அதிகமான பின்
3.இந்த உணர்வின் இயக்கம் மனிதனின் சிறுமூளையில் உள்ள நுண்ணிய நரம்புகளைத் தெறிக்கச் செய்யும்
4.அதனால் சிந்திக்கும் தன்மை இழக்கப்பட்டு மனிதனைச் செயலிழக்க வைத்துவிடும்.

உதாரணமாக ஒரு மோட்டார் அதனுடைய பளு (LOAD) அதிகமாக எடுக்கிறது என்றால் மின் இணைப்பில் உள்ள ஃப்யூஸ் வயரில் மின் அழுத்தம் அதிகமாகி அது கருகி விடுகின்றது… இருண்டு விடுகின்றது… மோட்டார் நின்று விடுகின்றது.

அது போன்று தான் மனிதனுக்குள் பாய்ச்சப்பட்டு சிறு மூளையில் உள்ள நுண்ணிய நரம்புகள் தெறித்து விட்டால் சிந்திக்கும் தன்மை இழந்து விடுகின்றது.

இதையெல்லாம் மாற்ற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

கடும் நஞ்சுகளையும் வென்ற அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அந்த உணர்வுகளை நாம் அதிகமாக நமக்குள் சேர்க்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

1.நம் உணர்வுகள் ஷாக் அடிக்காது ஃப்யூஸ் ஆகிவிடாது நம் சிந்தனைகள் செயலற்றதாக ஆகாதபடி தடுக்க
2.துருவ நட்சத்திரத்தின் சக்தியைத் தியானத்தின் மூலம் ஒவ்வொரு நிமிடமும் எடுத்து வளர்த்துக் கொள்ளுங்கள்.

குடும்பத்தில் கணவன் மனைவிக்கும் மனைவி கணவனுக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஒருவருக்கொருவர் பாய்ச்சி… இரு உயிரும் ஒன்றாகி… உணர்வை எல்லாம் ஒளியாக மாற்றுங்கள்.

இதன் வழி சீராகச் செயல்பட்டால் உங்கள் வாழ்க்கையில் அருள் மகரிஷிகள் உணர்வின் துணை கொண்டு சிந்தனைகள் சிதையாது… உடலை விட்டுச் சென்றால் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சென்று நிச்சயம் பிறவியில்லா நிலை அடைய முடியும்.

இந்தச் சந்தர்ப்பத்தை இழந்து விட்டால் உயிரான்மாவில் விஷம் அதிகரித்து விஷப் பூச்சிகளாக ஒன்றை ஒன்று கொன்று விழுங்கும் உயிரினங்களாக உயிர் மாற்றிவிடும்.
1.அடுத்து மனிதனாக உருவாகும் காலம் எப்பொழுது…? என்று சொல்ல முடியாது.
2.இன்று நல்ல நினைவு இருக்கும் போதே குருநாதர் காட்டிய வழியில் நாம் அருள் உணர்வுகளைப் பெருக்கிடல் வேண்டும்.

பல வருட காலமாக யாம் சொன்ன உண்மைகளை “இனிமேல் தெரிந்து கொள்வீர்கள்…”

பல வருட காலமாக யாம் சொன்ன உண்மைகளை “இனிமேல் தெரிந்து கொள்வீர்கள்…”

 

விஞ்ஞான முன்னேற்றத்தின் அணு விசைகளால் வெளிப்படுத்தப்பட்ட கதிரியக்கங்கள் சூரியனுக்குள் சென்று விட்டது. அதன் விளைவாக எத்தனையோ கடும் புயல்கள் அங்கே அடிக்கடி உருவாகி விஷமான அலைகளைக் கக்கிக் கொண்டுள்ளது. பூமிக்குள்ளும் அது பரவி வருகிறது.

அதனின் விளைவுகள்… உதாரணமாக மின்சாரம் செல்லும் இரண்டு வயர்கள் இரண்டும் சேர்ந்து விட்டால் எப்படி ஒரு எர்த் ஆகி… இரு மடங்கு மின் அழுத்தம் கூடி அனைத்தையும் கருக்கிவிடுகிறதோ இதைப் போல
1.உலகெங்கிலும் உயிரணுக்களிலும் மற்ற அணுக்களிலும் இது படரப்படும் போது
2.வயர்கள் கருகி பல்புகள் ஃப்யூஸ் ஆவது போன்று மனிதனின் சிந்தனைகள் சிதறும் தன்மை
3.இனி எப்பொழுது வேண்டுமென்றாலும் வரலாம்.

அதற்கு முன் நீங்கள் எதைச் சேமிக்க வேண்டும்…? என்று முடிவு செய்து கொள்ளுங்கள்…!

அருள் ஞானிகள் உணர்வைச் சேமித்துக் கொண்டால் அது உங்களைக் காக்கும். கடுமையான நஞ்சுகளையும் வென்றவன் அகஸ்தியன். அவன் துருவனாகி துருவ மகரிஷியாகி… துருவ நட்சத்திரமாக ஆனது.

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளியினை நீங்கள் நுகர்ந்து இத்தகைய கொடுமையிலிருந்து மீள நீங்கள் முற்படுங்கள்.

இல்லையென்றால் இந்த விஷத்தின் தன்மை… அன்று அணுகுண்டினால் (கதிரியக்கங்கள்) ஜப்பானில் அழிந்தது போன்று… மனிதர்கள் முழுமையாக வளராதபடி இன்றும் எப்படி இயக்கிக் கொண்டுள்ளதோ…
1.அதிலே தாக்கப்பட்டு இறந்தவர்கள் விஷப் பூச்சிகளாக உருவாகி
2.பல கோடிச் சரீரங்களைக் கடந்து தான்… அந்த விஷங்களை வடிகட்டிய பின்பு தான் மீண்டும் மனிதனாக வர முடியும்.

இனி வரக்கூடிய உலக யுத்தமும் அது போன்றது தான். ஒருவரை ஒருவர் அழிக்க வேண்டும் என்ற நிலையில் அந்த அணு விசைகள் வெளிப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

அதே போன்று மின்சாரத்தை அதிகமாகத் தயாரிப்பதற்காக வேண்டி பல அணு உலைகளை உருவாக்கி வைத்துள்ளார்கள். அதனுடைய கசிவுகளும் பரவப்பட்டு சூரியனுடைய காந்த சக்தி அலைகளாக மாற்றிக் கொண்டே உள்ளது.

ஆகவே விஷத்தன்மை கொண்ட அணுக்கதிரியக்கங்கள் இந்தக் காற்று மண்டலம் முழுவதும் படர்ந்து மனிதனுக்குள் அதிகரித்து அதிகரித்து மனிதனல்லாது உருப்பெறும் சக்திகளாக வளரப் போகின்றது.
1.இதிலிருந்து மீள வேண்டும் என்று நீங்கள் எண்ணினால்
2.துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் சக்திகளை எடுத்து உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் சக்தி மனைவிக்குக் கிடைக்க வேண்டும் என்று கணவனும் கணவனுக்குக் கிடைக்க வேண்டும் என்று மனைவியும்
1.இருவருமே நினைவை விண்ணிலே செலுத்தி
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளை வளர்த்துக் கொண்டால் இரு உயிரும் ஒன்றாகின்றது.

துருவ நட்சத்திரத்தின் உணர்வின் கருவாக உருவாக்கி உங்களுக்குள் சக்தி வாய்ந்ததாக அதைத் தயார் செய்து கொள்ளுங்கள்.

தன் உடலையே சொந்தமாக்க முடியாத நிலைகள் வரும் போது இப்போது சம்பாரிக்கும் எந்தச் செல்வமும் நம்முடன் வரப்போவதில்லை.
1.ஆனால் அந்த அழியாச் செல்வமான அருள் ஒளியைச் சேர்த்துக் கொண்டால்
2.விஞ்ஞானத்தின் மூலம் எதிர்பாராதபடி விபரீதமான நிலைகள் ஏற்பட்டாலும்
3,நாம் எடுத்துக் கொண்ட துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நம்மைப் பாதுகாக்கும் சக்தியாக வருகின்றது.

அன்று தான் தெரியும் இப்பொழுது யாம் (ஞானகுரு) சொன்னதை ஏன் செய்யவில்லை என்று…! – செய்யத் தவறியவர்களுக்கு…!

மனிதனின் கடைசி நாள்களில் செல்வத்தால் நிம்மதி கிடைப்பதில்லை… இருந்தாலும் ஆசை அவனை விடுகிறதா…?

மனிதனின் கடைசி நாள்களில் செல்வத்தால் நிம்மதி கிடைப்பதில்லை… இருந்தாலும் ஆசை அவனை விடுகிறதா…?

 

கோடிச் செல்வம் சம்பாதித்து வைத்திருப்போருக்கும்
1.இன்று அவர்களுக்கு நிம்மதி இருக்கின்றதா…? என்றால் இல்லை..!
2.தேடி வைத்த செல்வத்தைச் சீராக அனுபவிக்கின்றார்களா…? என்றால் அதுவும் இல்லை.

செல்வத்தைக் கண்டு அதனால் வெறுப்பும் வேதனையும் அதிகமாக வளர்த்துக் கொள்ள முடிகின்றதே தவிர இந்த உடலில் அமைதி பெரும் உணர்வைப் பெறும் சக்தியினை இழந்து விடுகின்றார்கள்.

இந்த உடலே நமக்குச் சொந்தமில்லை என்கிற பொழுது நாம் தேடும் செல்வம் நமக்கு எப்படிச் சொந்தமாகும்…?

ஏனென்றால் கோடிக்கணக்கில் செல்வத்தைத் தேடி வைத்திருப்பினும்
1.நமக்குப் பின் குழந்தைகள் அதைச் சீராகப் பயன்படுத்த முடியாதபடி
2.வேறு யார் யாருக்கோ சென்று விடுகின்றது.

சேலத்தில் இது நடந்த நிகழ்ச்சி…! கணவன் மனைவி ஒரு குடும்பத்தில் அவர்களுக்கு வயது 80 க்கு மேல் இருக்கும்… செல்வங்கள் இருக்கின்றது… அவர்களுக்குக் குழந்தை இல்லை கடைசி நேரம்… ஆனால் மன நிம்மதி இல்லை.

கையில் 10 லட்சம் பணம் இருக்கின்றது. யாரிடமாவது கொடுத்தால் அதைக் கொண்டு சென்று விடுவார்களோ…? அல்லது ஏமாற்றிவிடுவார்களோ…? என்று இதே சந்தேக நிலையில் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்.

என்னைப் பற்றி விசாரித்து இதற்குண்டான வழி வேண்டும் என்று எம்மிடம் கேட்டார்கள்.

அதே சமயத்தில் ஒரு சொந்த வீடும் அவர்களுக்கு இருந்தது. 25 லட்ச ரூபாய் பெருமானம் உள்ளது. முக்கியமான ரோட்டிலே அந்த வீடு இருக்கின்றது.

அதை விற்கச் செல்லும் பொழுது ஒருவர் அந்த வீட்டை வாங்க மூன்று லட்சம் ரூபாய் முன் பணம் கொடுக்கிறார். ஆனால் மொத்தத்தையும் கொடுத்து வீட்டை உடனே வாங்கவில்லை… நாளாகிவிட்டது…!

இதையும் என்னிடம் சொல்லிக் கேட்டார்கள்… ஆசீர்வாதம் கொடுங்கள்…! என்று கேட்டார்கள். பின் வீட்டை விற்று அந்தப் பணம் எப்படியோ அது வந்து சேர்ந்தது.

குழந்தை இல்லை என்று சொல்கிறீர்கள். ஒரு சிறு ஆசிரமத்தைச் சேர்த்துக் கொள்ளுங்கள். ஏழைக் குழந்தைகளை அதில் வளர்ப்பதற்குக் கூடுமானவரை முயற்சி செய்யுங்கள். பண வசதி இல்லாத குழந்தைகளுக்குக் கல்வியும் ஞானமும் கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள்… என்று சொன்னேன்.

சரி… சரி…! என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

ஒரு டிரஸ்ட் போன்று அமைத்து ஆசிரமத்தை ஏற்பாடு செய்து அதற்கென்று ஒரு ஆசிரியரை வைத்துக் குழந்தைகளைப் பராமரித்துக் கொள்ளுங்கள். நீங்களும் அங்கே ஒரு இடத்தில் அமர்ந்து சமையல் செய்து சாப்பிட்டுக் கொண்டு இருங்கள் என்று சொன்னேன்.

சரிங்க சாமி… சரிங்க சாமி…! என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

மொத்தம் 35 லட்சம் ரூபாய் கையிலே வந்த பின் அவர்களாகவே ஆலோசனை செய்து நான் சொன்னபடி செய்வதற்குப் பதிலாக ஒரு “கல்யாண மண்டபத்தைக் கட்டலாம்…” என்ற முடிவுக்கு வந்தார்கள்.

தன் பெயரைப் போட்டு மண்டபத்தைத் தொடங்கலாம் அதில் நிறையத் திருமணங்கள் நடக்கும் என்று அப்படிச் செய்து விட்டார்கள்.

அதற்குண்டான முயற்சிகளை மற்றவர்களிடம் சொல்லி எடுக்கும் போது உங்கள் பேரை வைத்து டிரஸ்ட் என்று அமைத்தால் சரியாக இருக்காது என்று சொல்லி விட்டார்கள்.

பணத்தைக் கையில் வாங்கும் வரை இவர்களைச் சமாதானப்படுத்தி வைத்துவிட்டு அவர்கள் கைக்குப் பணம் வந்தபின்
1.நீங்கள் இங்கே வேலை செய்து சாப்பிட்டு கொள்ள வேண்டியது தான்.
2.பொதுவாகத்தானே இதைச் செய்திருக்கின்றீர்கள்
3.நாங்கள் டிரஸ்ட் அமைத்து எத்தனையோ பேரைச் சேர்த்து இருக்கின்றோம்
4.பணத்தை வசூல் செய்திருக்கின்றோம் என்று சொல்லி இவர்களை “அம்போ…” என்று ஆக்கிவிட்டார்கள்.

நான் ஏற்கனவே சொல்லி இருந்தேன். உன் மனைவி பேரில் ஒரு லட்சம் ரூபாயாவது பத்திரப்படுத்தி வை…! என்று சொல்லி இருந்தேன்… ஒரு பாதுகாப்புக் கிடைக்கும் என்று சொல்லியிருந்தேன்.

அது எல்லாம் வேண்டியதில்லை… சாப்பாடு போடுவார்கள்… நாங்கள் பிழைத்துக் கொள்வோம்…! என்று நான் சொன்னதைக் கேட்காமல் செய்தார்கள்.

கடைசியில் மண்டபம் முடிந்தபின் சோற்றுக்கு வழியில்லாமல் போய்விட்டது இரண்டு மூன்று நாட்கள் சென்ற பின் “இப்படி ஆகிவிட்டதே…!” என்று மனது விரக்தி ஆகி இறந்து விட்டார்கள்.

சம்பாதித்த பணம் யாருக்குச் சென்றது…? இத்தனையும் இறுக்கிப் பிடித்து வேதனையைத் தான் வளர்க்க முடிந்தது. கோடிக்கணக்கில் இவ்வாறு செல்வத்தைச் சேர்த்தாலும் இந்த நிலை தான் ஆகின்றது.

உடலே நம்முடன் வருவதில்லை… செல்வம் நம்முடன் வருமா…? ஆனாலும் பணத்தின் மீது நமக்கு ஆசை விட்டபாடில்லை…!

இப்படி… செல்வத்தைத் தேடும் எண்ணத்திலேயே தான் நாம் மனித வாழ்க்கையை வாழ்கின்றோமே தவிர வேறும் ஒன்றும் இல்லை. இருந்தாலும்
1.செல்வத்தைக் காக்கும் நிலைக்கு நமக்கு ஞானம் தேவை
2.ஞானம் இல்லை என்றால் செல்வத்தைக் காக்க முடியாது.

செல்வத்தை வைத்து ஞானத்தைப் பெற வேண்டும் என்றால்
1.செல்வம் இருக்கும் பொழுது செருக்கின் தன்மை தான் வரும்.
2.ஞானத்தின் நிலைகள் வருவது கொஞ்சம் சிரமம் தான்.

இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் நம்மை ஆட்டிப் படைக்கும் சில உணர்வுகளில் இருந்து நம்மை நாம் காக்க அந்த மகரிஷியின் அருள் சக்திகளை நுகர்ந்து அவைகளைத் தணித்துப் பழக வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தியை நுகர்ந்தால் தான் எத்தகைய நிலையையும் சீராக்க முடியும். நம்மைக் காக்கும் சக்தி அது தான்…!

கடுமையான நஞ்சுகளையும் முறிக்கும் சக்தி

கடுமையான நஞ்சுகளையும் முறிக்கும் சக்தி

 

கருடன் என்ற பறவையை எடுத்துக் கொண்டால் அதனுடைய கூட்டிலே நாம் ஒரு இரும்புச் சங்கிலியை “விலங்கு போடுவது போல்” முடிந்து வைத்து விட்டால் அது என்ன செய்யும்…?

கூட்டிலிருக்கும் தன் குஞ்சுகளை மீட்டுவதற்காக அலைந்து திரிந்து
1.சில செடிகளின் விழுதுகளை அல்லது அந்தக் காம்புகளை எடுத்து அந்தச் சங்கிலி மீது வைத்து அதைத் தெறிக்கச் செய்துவிடும்.
2.இது கருடன் கண்ட உபாயம்… இரும்பு உலோகங்களைக் கத்திரிக்கும் திறன் பெற்றது.

ஆனால் கருடனுக்கு இந்தச் சக்தி எப்படிக் கிடைத்தது…?

புழுவிலிருந்து மனிதனாக வளர்ச்சி பெற்று மனிதனாக ஆன பின் மீண்டும் மடிந்து மடிந்த நிலைகளிலிருந்து “அவன் பட்சிகளாக உருவானால்…” இவனுக்குள் உருவாகிய இந்த உணர்வின் அணுக்கள் அது உணவாக உட்கொள்ளும் பொழுது “அந்த உணர்வின் ஞானங்கள்…” அங்கே கிடைக்கின்றது.

மனிதனாகிப் திருப்பிப் பட்சியாக வந்த பின்…! மனிதனுக்குண்டான சிந்தனைகள் எல்லாம் அந்தப் பட்சிக்கு உண்டு.

எப்படி…?

காடுகளில் மனிதன் ஒரு விஷத்தால் தாக்கப்பட்டுத் தேய்பிறையாகி அவன் மடிந்து கிடந்தால் அந்த உடலிலிருந்து வந்த விஷத்தின் தன்மை மற்ற தாவர இனங்களில் இது கலந்துவிடும்.

விஷம் தீண்டி மடிந்த இவன் உடலில் இருந்து வெளிவரக்கூடிய உணர்வின் அலைகள் படர்ந்து வருவதைச் சூரியனுடைய காந்த சக்தி எடுத்து கவர்ந்து வைத்துக் கொள்கிறது.

அதே சமயத்தில்
1.மற்ற சாந்தமான தாவர இனங்களின் சத்து சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டுப் பரவி வருவது இதைக் கண்டு அஞ்சி ஓடுவதும்
2.இன்னொரு விஷமான செடியின் மீது அது மோதும் சந்தர்ப்பத்தில் சுழற்சி ஆகுவதும்
3.சுழற்சியான பின் தனக்குள் கவர்ந்து கொண்டு புது விதமான தாவர இனச் சத்தாக செடியாக விளைகின்றது.

ஏனென்றால்… பல கோடிச் சரீரங்களைக் கடந்து மனிதனாக ஆனபின் ஒரு விஷம் தீண்டி மனிதன் மடிந்தால் இவன் உடலில் இருந்து வரக்கூடிய மணம் மற்ற தாவர இனச் சத்துக்களுடன் கலக்கப்பட்டு… இரண்டறக் கலந்து ஒரு வித்தாக உருவாகி நிலத்தில் பட்டு விட்டால்… கடும் விஷத்தையே முறிக்கும் சக்தி பெறுகின்றது.

இதைத் தான்… அந்த விஷத்தை முறிக்கக் கூடிய சக்தியைக் கருடன் கண்டுள்ளது. அதாவது.. உலோகங்களில் இந்த்த் தாவர இனத்தின் சத்து பட்டபின் அது பலவீனமாகி… அந்த உலோகம் தெறிப்பதையும் அது கண்டுள்ளது.

ஏனென்றால் மனிதனாக ஆன பின் இவனுக்குள் விளைய வைத்த சத்துக்கள் தாவர இனத்துடன் கலக்கப்பட்டு இது பட்சியானாலும் கூட…
1.அதற்குள் இருக்கக்கூடிய உணர்வு (ஞானம்) சிக்கலில் இருந்து தீர்க்கும் நிலையாக வருகின்றது
2.இது பட்சி இனமாகத்தான் இருக்கின்றது… ஆனால் இதற்கு எப்படி இந்த அறிவு வந்தது…? என்று குருநாதர் காட்டுகின்றார்.

இதே போல் தான் கீரிப்பிள்ளை மீது பாம்பின் விஷம் தீண்டப்பட்ட பின் அது ஓடிச் சென்று அதை முறிக்கும் அந்தத் தாவர இனத்தில் பிரள்கிறது. அந்த மணங்களை நுகர்கிறது. நுகர்ந்து அந்த விஷத்தை நீக்கிய பின் அந்தப் பாம்பினை மீண்டும் அது தாக்குகிறது.

இது போன்று தான்
1.”ஒரு உயிரணு” தனக்குள் கவர்ந்து கொண்ட உணர்வின் அணுக்கள்
2.மாறி மாறிப் பல விதமான ஒரு சக்திகள் பெற்று வளர்ச்சிக்கு வருகின்றது.

இப்படி எல்லாவற்றையும் கடந்து மனிதனாக உருப்பெற்ற பின் இத்தகைய தாவர இனங்களுடைய சக்திகளைப் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் காடுகளில் வாழ்ந்த அகஸ்தியனின் தாய் தந்தையர்கள் கண்டறிய நேர்கிறது.

அந்த வழியில் தான் அகஸ்தியன் சர்வ நஞ்சுகளையும் ஒடுக்கிடும் சக்திகளைப் பெற்றான்… ஒளியாக மாற்றிக் கொண்டான்.

மந்திர ஒலிகள் உருவாக்கப்பட்டதன் நோக்கம்

மந்திர ஒலிகள் உருவாக்கப்பட்டதன் நோக்கம்

 

அன்றைய அரசர்கள்… ஞானிகள் கொடுத்த வேதங்களைத் திரிபு செய்து விட்டார்கள். எப்படி…?

மழைக்காகக் குடை பிடிப்பது போன்று… “கடவுளுக்கு உரியவன்…” என்றும் உருவாக்கக் கூடியவன் “அவன் பிரம்மன்” என்றும் காரணப் பெயரைச் சூட்டி விட்டனர்.
1.அவன் மந்திரங்களை ஓதி ஒரு மனித உடலில் உருவாக்கத் தெரிந்து கொண்டவன்
2.அப்படி உருவாக்கிய பின் அவனே பிரம்மம் ஆகின்றான்
3.அவன் சொல்லை… அந்த மந்திரத்தை யாரொருவர் கேட்கின்றனரோ அதை அங்கே உருவாக்குகின்றான்.

அது உருவாக்கிய பின் அதே மந்திர ஒலி கொண்டு பல பல வேலைகளைச் செய்கிறான்.

நாம் எப்படி வெயிலுக்கும் மழைக்கும் ஒரு குடையைப் பிடித்து அந்த நேரத்தில் அதைத் தடுக்கின்றோமோ
1.இந்த வாழ்க்கையில் மந்திரத்தின் துணை கொண்டு
2.மற்ற மனித உடலிலிருந்து கட்டாயப்படுத்தி அந்த உணர்வுகளைத் தனக்குள் எடுத்து அதை இன்னொரு உடலில் பாய்ச்சி
3.அவன் உடலில் இருக்கக்கூடிய தீமைகளைச் “சிறிது காலம் அடக்க முடியும்…”
4.மீண்டும் மழை வந்தால்… குடையைப் பிடிப்பது போன்று தீமைகளை நீக்க அதே மந்திரங்களைச் சொல்ல வேண்டும்.

மந்திர ஒலிகள் கொண்டு அரசனால் உருவாக்கப்பட்ட நிலைகள் தான் அது. வாமன அவதாரம்… பிரம்மம் சிருஷ்டிக்க வல்லவன்…! என்று காரணப் பேரைச் சூட்டினார்கள் அரசர்கள்.

வேதங்கள் ஓதப்படும் பொழுது அதன் உணர்வின் ஒலிகளை நமக்குள் பதிவாக்கி விட்டால் “அவர்கள் சொன்னது…” நமக்குள் உருப்பெற்று விடுகின்றது.

அது நமக்குள் பதிவான பின் இறந்து விட்டால் அதே மந்திரத்தைச் சொன்னால் கட்டாயப்படுத்தித் தனக்குள் ஆன்மாவைக் கைவல்யப்படுத்திக் கொள்வார்கள். அவனுக்குத் தேவைப்படும் பொழுது… அரசன் தன் எதிரிகளை அழிக்க ஏவல் செய்கின்றான்.

பகைமை உணர்வு கொண்ட நிலையில் “குண்டர்களைத் தயார் செய்கின்றார்கள்…” இந்த நாடு உனக்குச் சொந்தம்…! என்றும் இந்த உணர்வின் ஒலிகள் உனக்குச் சொந்தம்…! என்று அமரச் செய்து மந்திர ஒலிகளைப் பாய்ச்சுகின்றான்.

இந்த நாட்டை நீ காவல் காக்கக்கூடியவன்… கருத்துக்களை நீ மேற்கொள்ளக் கூடியவன்… உன்னால் முடியும்…! என்ற உணர்வுகளை அவனுக்குள் ஓதி… “விஷத்தைக் கலந்து கொடுத்து…” அவன் வளர்ந்து வரும் போது தன் நாட்டின் பண்புகள் இது தான்…! என்று ஊட்டுகின்றார்கள்.

1.அவன் மரணம் அடையப்படும் பொழுது
2.இவனுக்குள் ஒலித்த மந்திரத்தைக் கொண்டு மீண்டும் அந்த மந்திரத்தால் ஜெபிக்கப்படும் பொழுது…
3.அவன் உடலில் விளைந்த உணர்வின் ஆற்றலை எடுத்து எதிரிகள் வரப்படும் பொழுது இந்த உணர்வுகளை ஏவல் செய்து
4.எப்படி இந்த உடலில் விஷத்தன்மை பாய்ந்ததோ இதைப் போன்று
5.உணர்வின் அலைகளை மற்ற மனிதர்கள் மேல் இந்த ஒலிகளை பாய்ச்சி அவர்களைச் செயலிழக்கச் செய்கின்றனர்.

இந்த வழிப்படி தான் ஆலயங்களில் யாகங்களைச் செய்வதும் மந்திரங்களைப் பதியச் செய்து அந்தப் பதிவின் தன்மையை எடுத்த பின் “தெய்வம் செய்யும்…” என்ற நம்பிக்கையை நமக்குள் ஊட்டும் பொழுது இது வசியம்…!

அவர்கள் சொன்னபடி நமக்குள் பிரம்மமாக உருவாகிறது. அப்படி உருவாக்கிய உணர்வுகள் எதுவோ அதன் செயலாகவே நம் எண்ணங்கள் உருவாகும்.

நாம் எதை எண்ணுகின்றோமோ… அதை நமது உயிர் அந்த உணர்வின் அணுவாக உருவாக்கப்படும் பொழுது… அந்த அணு மீண்டும் தன் இனத்தை உருவாக்கும்.

எதைப் பெருக்கியதோ அந்த உணர்வின் ஆற்றலை நமக்குள் பெருக்கப்படும் பொழுது அதனின் செயலாக பிரம்மமாக உருவாக்குகின்றது.
1.தெய்வத்தின் பெயரால்தான் இதை எல்லாம் செயல்படுத்துகின்றார்கள் நமக்குள் பதிவாகின்றது
2.யாகம் நடக்கும் இடத்தில் உட்காரப்படும் போது நமக்குள் அது பதிந்து விட்டால் அது நமக்குள் உருவாகி விடுகிறது.

அதே எண்ணத்தில் ஏங்கும் பொழுது “தெய்வம் செய்யும்…!” என்று அபிஷேகங்களும் ஆராதனைகளும் செய்யப்படும் பொழுது…
1.நாம் எதைப் பெற வேண்டும்…?
2.நாம் எதை நீக்க வேண்டும்…? என்ற நிலைகளை மறந்து
3.அந்தச் சிலைக்கு நாம் இதை உணவாகக் கொடுத்தால் நமக்கு நன்மை செய்யும் என்ற எண்ணத்தைத் தான் கருத்தில் கொண்டு வந்திருக்கின்றோம்.

சாங்கிய சாஸ்திரங்களாக அரசன் வகுத்த நிலைகளில் குலதெய்வம் என்று அந்த வழிப்படித் தான் நாம் இயங்கிக் கொண்டுள்ளோம்.

ஞானிகள் காட்டிய வழியில் நாம் செல்லவில்லை…!

மனிதனின் நல்ல சிந்தனைகள் “சிறுகச் சிறுக அழிந்ததன் சரித்திரம்…!”

மனிதனின் நல்ல சிந்தனைகள் “சிறுகச் சிறுக அழிந்ததன் சரித்திரம்…!”

 

கடவுள் எப்படி இருக்கின்றான்…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள் கடவுள் ஒருவனே…! தேவன் ஒருவனே…! என்பதெல்லாம் மதங்களால் உருவாக்கப்பட்ட நிலைகள்.

ஒவ்வொருவரும் தனக்குகந்த உணர்வுகளை அது உருவாக்கி மந்திரங்களை உருவாக்கி… அதனை மனிதனுக்குள் பதிவாக்கி… இன்னென்ன மந்திரங்களைச் சொன்னால் கடவுள் அதற்காக அடிபணிந்து நமக்கு எல்லாம் செய்து தருவான்…! என்று சட்டங்களை இயற்றப்பட்டு… அதற்கென்று வேதங்களை உருவாக்கப்பட்டு… மந்திரங்களை ஒலிக்கச் செய்து கேட்டுணரும்படி செய்து… மனிதனை உருமாற்றிக் கொண்டு வருகின்றார்கள்.

மதங்களால் இயற்றப்பட்ட சட்டத்தை நமக்குள் பதிவாக்கி விட்டால் “அது தான் கடவுளாக இயக்குகின்றது நம்முள் நின்று…!”

ஒருவன் ஒருவன் தீமை செய்கிறான் என்று பார்த்து… தீமை எனக்குச் செய்தான் என்று உணர்வை நுகர்ந்து விட்டால் அந்த உணர்வின் தன்மை ஜீவ அணுவாக மாற்றி அது பிரம்மமாக்கி நம் உடலுடன் சேர்ந்து இயக்கப்படும் பொழுது தீமை செய்யும் கடவுளாக அது உருவாகின்றது.
1.தீமை செய்யும் எண்ணங்கள் அதிகமாகச் சேர்த்து விட்டால்
2.அந்த அணுவின் தன்மை தீமையை உருவாக்கும் கடவுளாக உருவாகின்றது.
3.ஆனால் நன்மை செய்யும் உணர்வுகளை உருவாக்கி விட்டால் நல்ல உணர்வை நுகரும் ஆற்றல் பெறுகின்றோம் நமக்குள் கடவுளாக…!

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் விஞ்ஞானம் இன்று இதைத் தெளிவாக நிரூபிக்கின்றது.

உதாரணமாக ஒரு கம்ப்யூட்டரில் எலக்ட்ரானிக்கை வைத்து அதை இயக்கச் செய்கின்றார்கள்.
1.அதிலே பொருத்தப்பட்டுள்ள நாடாக்களில்
2.காந்தப் புலனறிவை ஈர்த்து ஒலி அலைகளைப் பரப்புவதைக் கவர்ந்து
3.மீண்டும் எதிர் நிலைகளில் உருவாக்கும் ஆற்றலை அதிலே மூலமாகப் பூசி உள்ளார்கள்.

அதில் நாம் தட்டெழுத்தால் (KEY BOARD) எப்படி அடிக்கின்றோமோ… அடித்துக் காந்தப் புலனால் ஒலி அலைகளை எழுப்பப்படும் பொழுது
1.எலக்ட்ரானிக்காக மாற்றுகின்றது
2.ஒலி அலைகளைப் படமாக்குகின்றது… அதற்குத்தக்க உருவத்தையும் காட்டுகின்றது
3.ஒரு மனிதனையே உருவாக்கிக் காட்டுகின்றது.

அதைப் போன்று தான் நம் உயிர் எலக்ட்ரிக்கை உருவாக்குகின்றது. நாம் எண்ணும் எண்ணங்களை எல்லாம் எலக்ட்ரானிக்காக மாற்றுகின்றது. அந்த உணர்வுக்கொப்ப உடலில் உறுப்புகளை இயக்குகின்றது.

மனிதனால் உருவாக்கப்பட்ட கம்ப்யூட்டர் இயக்கினாலும் அதில் இருக்கக்கூடிய காந்தப்புலன்… “தட்டெழுத்தால் அடிக்கும் அந்த உணர்வு கொண்டு…” காந்தப்புலனால் ஈர்க்கப்பட்டு அது செயல்படுத்தப்பட்ட நிலைகள்

அதைச் செயல்படுத்தும் பொழுது “இவன் உணர்வும் அதிலே கலந்து…” அந்த உணர்வின் இயக்கச் சக்தியாக அந்தக் கம்ப்யூட்டர் இயக்குகின்றது.

இதைப் போன்று அது உருவாக்கும் நிலைகள் வரப்படும் பொழுது…
1.அந்தக் கம்ப்யூட்டரை இயக்கப்படுபவனுக்கு குடும்பத்தில் எதிர்மறையான உணர்வுகள் வந்து விட்டால்
2.அது… இவன் தட்டெழுத்தால் அடிக்கும் உணர்வுக்குள் கலந்து “வைரஸ்” என்ற நிலையாக… இது பிழைகள் கொண்டதாக மாற்றி விடுகின்றது.

(இதே நாடாவை மற்றவர்கள் பார்த்து இந்த உணர்வை எடுக்கப்படும் பொழுது தட்டெழுத்துக்களில் இந்த உணர்வின் மாற்றங்கள் அங்கேயும் வைரஸாக வரும்).

பிழைகளை இவன் அழித்து மீண்டும் செயல்படுவான் என்றால்
1.அங்கே திரையில் காட்டும் உணர்வுகளை இவன் நுகர்ந்து உணர்வுக்குத்தக்க மாற்றப்படும் பொழுது
2.இவனுக்குள் தீமையின் உணர்வுகள் விளைந்து… தன் சிந்தனை இழந்து பிரமை பிடித்தவன் போன்று ஆகிவிடுவான்.

இந்த கம்ப்யூட்டரில் தொடர்ந்து வேலை செய்பவர்கள் யார் அதிகமாக அதை இயக்குகின்றார்களோ… அவர்கள் வேறு சிந்தனையே இல்லாது… இதன் உணர்வுளிலேயே இருப்பார்கள்.

எந்திரத்தின் துணை கொண்டு இந்த உணர்வின் தன்மை இயக்குவது போன்று “மனித உணர்வுக்குள் எலக்ட்ரானிக் என்ற நிலைகள் கொண்டு…” மனிதனுக்குள் இயக்கும் இந்த உணர்வுகளுடன் கலந்தே எலக்ட்ரானிக்கின் தன்மை அடைகின்றது.

இவை எல்லாம் விஞ்ஞான அறிவால் உருவானாலும் இயற்கையின் உணர்வுகள் மனிதனான பின் இதனுடன் கலந்தே அது இயக்குகின்றது.

விஞ்ஞான அறிவால் கண்டுபிடிப்புகள் வளர்ச்சி பெற்றிருந்தாலும்
1.எலக்ட்ரானிக் என்ற நிலையில் வருவதை மனிதன் தனக்குள் நுகரப்படும் பொழுது
3.இயற்கையின் நிலைகளை அது மாற்றி விடுகிறது.

ஏனென்றால் நம் உயிர் எலக்ட்ரிக்காக இயங்கி நுகருவதை எலக்ட்ரானிக்காக… உடலையே இயக்குகின்றது. (ஏற்கனவே சொன்னோம்)

விஞ்ஞான அறிவின் தன்மைகள் கொண்டு இயந்திரத்தின் துணையால் எலக்ட்ரானிக் என்ற நிலையில் இந்த உணர்வின் எண்ணங்கள் பரவுகின்றது
1.மெய் (தன் நிலை – இயல்பு) உணர்வுகள் மறைகின்றது…
2.மெய் உணர்வுகளை வளர்க்கும் தன்மை அது இழக்கப்படுகின்றது.

இது மட்டுமல்ல…! வானுலக ஆற்றலை… நஞ்சு கலந்த உணர்வுகளை அளவுகோலிட்டு அதைக் கம்ப்யூட்டரில் இயக்கிப் பார்க்கின்றான்
1.நஞ்சின் தன்மை பூமிக்குள் வருகின்றது… மனிதனைக் காக்கும் உணர்வுகள் அதிலே இல்லை.
2.மனிதனை அழித்திடும் உணர்வுகள்… கண்டுபிடிப்புகள் இங்கே அதிகமாகின்றது
3.இதை இயக்குவனுக்குள் அந்த அழித்திடும் உணர்வுகள் வளர்ந்து எல்லா இடங்களுக்கும் (காற்று மண்டலம்) பரவுகின்றது.

மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்த உணர்வுகள் காற்று மண்டலம் முழுவதும் பரவி
1.மனித இனத்தையே பூண்டோடு அழித்திடும் நிலைகளுக்கு மாற்றிக் கொண்டு வருகின்றது.
2.இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் மீள வேண்டும்.

ஆக கடவுள் யார்…? நமது உயிர் தான்…!