நான் (ஞானகுரு) சொன்ன தியானத்தைச் செய்து என்ன வந்தது…? என்கிறார்கள்

நான் (ஞானகுரு) சொன்ன தியானத்தைச் செய்து என்ன வந்தது…? என்கிறார்கள்

 

மூன்று லட்சம் பேரைச் சந்தித்து குருநாதர் காட்டிய வழியில் பல வருட காலமாக அனுபவபூர்வமாகப் பெற்ற உண்மைகளைத் தான் உங்களிடம் தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகின்றேன் (ஞானகுரு).

இப்பொழுது நல்ல உணவை உட்கொள்கின்றேன்… ஆனால் அன்று அப்படி அல்ல. என் இரண்டு காலிலேயும் 28 ஆணி இருந்தது. ஆனால் நீ செருப்பு போடக்கூடாது என்று குருநாதர் சொல்லி விட்டார்.

ஒரு சின்னக் கல் மீது காலை வைத்தால் போதும்… அ…ஆ…! என்று தலை உச்சி மயிர் நட்டமாக நிற்கும் பாத்ரூமில் சிறிது நேரம் அதிகமாக உட்கார்ந்திருக்க முடியாது… எரிச்சலாகும்.

கால் ஆணி உள்ளவரிடம் கேட்டால் தெரியும் என்ன வலி வேதனை எப்படி இருக்கிறது என்று…!

இத்தனையும் பொறுத்துக் கொண்டு
1.உலகம் எப்படி இருக்கின்றது…? என்பதை நீ தெரிந்து கொள்ள வேண்டும் என்று குருநாதர் சொல்லி விட்டார்
2.ஒவ்வொரு குடும்பமும் எத்தனை பாடு படுகின்றது
3.குடும்பத்தில் உள்ளவர் யாராவது இறந்தால் அங்கே என்ன நிகழ்கின்றது…?
4.இறந்தவரின் ஆன்மாக்கள் எங்கே… எப்படி… என்ன செய்கின்றது…? என்று அனுபவ ரீதியிலே தெரியும்படி செய்தார்.

கஷ்டப்பட்டுத் தான் nhaan எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு வந்தேன். ஆனால்
1.உங்களுக்குக் கஷ்டம் வரும் பொழுது நான் சொல்லும் முறைப்படி செய்து அதை நீக்கிக் கொள்ளுங்கள்
2.உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று உயர்ந்த சக்தியைக் கொடுக்கின்றேன்
3.அதற்குண்டான முறைகளையும் சொல்லி… வழிகளையும் காட்டி சக்திகளைப் பெறும்படி செய்தாலும் “ஏற்பதற்கு ஆள் இல்லை…!”

“தியானத்தைக் கடைபிடிக்கிறோம்… என்று தியான வழியில் வருகின்றார்கள்…! சக்திகளைக் கொடுத்து… உங்களுக்கு வரக்கூடிய தீமைகளை இப்படி மாற்றிக் கொள்ளுங்கள் என்று சொல்கிறோம்… யாரும் எடுப்பதில்லை.

1.”சாமி (ஞானகுரு) எனக்குச் செய்து தர மாட்டேன் என்கிறார்…” என்ற இந்த உணர்வுடன் தான் இருக்கிறார்கள்
2.சாமி சொன்ன தியானத்தைச் செய்து என்ன வந்தது…? என்று (சாதாரணமாக) கேட்கின்றார்கள்.

ஆக மொத்தம் நான் சொல்வதை… “நீங்கள் எடுத்தால் தானே” அது நடக்கும். உணவைக் கொடுத்த பின் அதைச் சாப்பிடவில்லை என்றால் பசி எப்படித் தீரும்…?

பாதாமைச் சாப்பிட்டால் உடலுக்குச் சத்துதான். ஆனால்
1.சாப்பிட வேண்டும் என்று ஆசையை மட்டும் பட்டுக் கொண்டு
2.சாப்பிட முடியாதபடி (சாப்பிடாதபடி) வேதனைப்பட்டுக் கொண்டிருந்தால் என்ன நடக்கும்…?
3.அந்தச் சத்து உங்களுக்குக் கிடைக்காது… விஷம் தான் வளரும்…!

ஒவ்வொரு நொடிப்பொழுதும் இந்த உயர்ந்த சக்தி நீங்கள் பெறுவதற்கு எத்தனையோ வேலைகளைச் செய்கின்றேன்.

யாம் சொன்ன முறைப்படி செய்து ஒரு சமயம் நல்லதாக ஆன பின் மீண்டும் (இன்னொரு) சிக்கல் வந்தால் அதே முறைப்படி செய்து அதிலிருந்து மீண்டு கரையேறுவதற்கு ஆள் இல்லை.

காரணம் அந்தப் பழக்கம் வரவேண்டும் என்பதற்குத் தான் இதை ஞாபகப்படுத்துகின்றோம்.

எத்தனையோ பேருக்குத் துயரங்களும் துன்பங்களும் வரும் பொழுது… அதிலிருந்து மீட்டி விடுகின்றோம்… அவர்கள் எப்படியும் தெளிந்து வருவார்கள் என்று…! அந்த எண்ணத்தில் தான் இதைச் செயல்படுத்துகின்றோம்

ஆனால் அதற்காக வேண்டி
1.என்னுடைய சக்தியை நான் எல்லா நேரத்திலும் விரயம் செய்ய முடியாது
2.உங்களுக்கு வழி அமைத்துக் கொடுத்தாலும் கரை ஏறி வருவதற்குண்டான தன்னுடைய சுய பலம் வேண்டும் அல்லவா
3.”எல்லாம் சாமி பார்த்துக் கொள்வார்” என்றால் சாமி எதைப் பாப்பார்…?

நீங்கள் கஷ்டப்படுவது துன்பப்படுவது இதையெல்லாம் நான் கேட்டுக் கொண்டிருந்தால்… அந்தத் தீமையிலிருந்து தப்புவதற்குத்தான் நான் பார்க்க முடியும். உங்களை எப்படிக் காப்பது…?

யாம் இப்பொழுது கொடுக்கக்கூடிய வாக்கின் பிரகாரம் ஒவ்வொரு நொடிப்பொழுதும் மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து ஆத்ம சுத்தி செய்து வாழ்க்கையில் அதைக் கடைப்பிடித்து… அந்தந்த நேரத்தில் சரியாகப் பயன்படுத்தித் தீமையிலிருந்து விடுபடும் சக்தியை வளர்த்துக் கொள்ளுங்கள்.
1.துருவ நட்சத்திரத்தைப் பற்றுடன் பற்றி இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லாத நிலை அடையுங்கள்
2.இதிலே ஒன்றும் கஷ்டம் இல்லை
3.சிறிது காலம் செய்து பழகிக் கொண்டாலே போதுமானது.

தொழிலிலே ஆசை மற்றதில் ஆசை என்று அதை எண்ணி ஏங்கி… கடைசியில் அது நிராசையாகி விட்டால் வேதனை தான் வருகிறது வேதனை வளர்ந்தால் சிந்தனை இழக்கப்படுகின்றது.

அந்த மாதிரி நேரங்களில் எல்லாம் கண்டிப்பாக யாம் சொன்ன முறைப்படி நீங்கள் ஆத்ம சக்தி செய்ய வேண்டும். ஆன்மாவைத் தூய்மைப்படுத்திவிட்டு அடுத்து நாம் செய்ய வேண்டியது என்ன…? என்று சிந்தனை செய்ய வேண்டும்.

அதற்குண்டான உபாயங்கள் நிச்சயம் வரும். அந்த உயர்ந்த சிந்தனைகள் வருவதற்குத் தான் மணிக்கணக்காக உங்களுக்கு உபதேசிக்கிறோம்.
1.குருநாதர் எனக்குக் காட்டிய வழி முறைகளை எல்லாம்
2.உங்களுக்குப் பல வகைகளிலும் எடுத்துக் காட்டிக் கொண்டே வருகின்றேன்… பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

நாம் மேலே செல்வதற்குப் பதில்… கீழே இந்த உடலுக்குள் இழுத்து விடக்கூடாது

நாம் மேலே செல்வதற்குப் பதில்… கீழே இந்த உடலுக்குள் இழுத்து விடக்கூடாது

 

நாம் செய்யும் தியானம் இந்த உடலுக்காக அல்ல… உடலைப் பார்ப்பதற்காக அல்ல.
1.நிலையாக இருக்கும் இந்த உயிர் இருக்கின்றதே…
2.அதைத்தான் நாம் தியானிக்க வேண்டும்.

தியானம் இருந்தேன் நல்லதானது… காப்பாற்றினார் (ஞானகுரு) கடவுளாக இருக்கின்றார் என்று இத்தகைய உணர்வுக்கு நாம் சென்றால் மீண்டும் புவியின் ஈர்ப்புக்குத் தான் வருவோம்.

ஆகவே நாம் பார்க்கும் அனைவரும் மகரிஷிகளின் அருள் உணர்வு பெற வேண்டும் என்ற ஏகாந்த உணர்வுகளைக் கொண்டு வந்தோம் என்றால் அது அருள் வழியாக இருக்கும்.

ஆனால் அதை விடுத்து விட்டு
1.இந்த வாழ்க்கைக்காக நாம் எண்ணினால் என்ன ஆகும்…?
2.தான் எண்ணியபடி நடக்கவில்லை என்றால் வருத்தம் வரும்… அப்போது வேதனை வருகிறது.
3.அப்பொழுது எந்தப் பற்று…? வேதனை என்ற பற்று தான் வருகின்றது அது தான் அதிகமாகின்றது

இதைப் போன்ற நிலையில் இருந்து விடுபட்டு அருள் ஞானத்தை வளர்ப்பதற்கு உண்டான அந்த முயற்சியை நாம் எடுக்க வேண்டும்.

எப்பொழுதுமே எதிலுமே இந்த உடல் பற்று என்று இல்லாதபடி உயிர் எப்படி உணர்வை ஒளியாக மாற்றுகின்றதோ அதைப் போன்று எல்லோருக்கும் அந்த அருள் கிடைக்க வேண்டும் என்ற இந்தப் பற்றை நாம் வளர்த்துக் கொண்டால் அதைப் பற்றுடன் பற்றி வாழ்க்கையில் வந்த இருள் என்ற நிலையை பற்றற்றதாக மாற்ற முடியும்.

இது தான் தியானம்.

நான் தியானமிருந்தேன் கல்யாணம் நடந்தது… நான் தியானமிருந்தேன் உடல் நலமானது… நான் தியானமிருந்தேன் தொழில் நன்றாக நடந்தது… என்று வெறுமனே சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆனால் இதற்காக நம்முடைய ஆசையைக் கூட்டக் கூடாது…!

நாம் பார்ப்பவர் நலமாக வேண்டும் என்ற ஆசைப்படலாம். அப்போது அந்த அருள் உணர்வு பெற வேண்டும் என்ற இச்சை நமக்குள் விளைகின்றது.

இச்சா சக்தி கிரியா சக்தி…!
1.நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அந்த இச்சையைக் கூட்டும் பொழுது
2.நம் உயிரிலே அந்த உணர்வு பட்டு கிரியை ஆகி அந்த ஞானத்தின் வழி நம்மை அந்த எல்லைக்கு அழைத்துச் செல்லும்.

உடல் இச்சைக்காக நாம் ஆசைப்பட்டு அதை நமக்குள் கிரியை ஆக்கினால் அது இந்த வாழ்க்கையினுடைய நிலைகளுக்குத் தான் வரும்
1,சிறிது தடைப்பட்டால் என்ன செய்யும்…?
2.ஞானம் இழக்கப்பட வேண்டியிருக்கும்.

இதைப் போன்ற நிலையிலிருந்து எல்லாம் நாம் விடுபட வேண்டும்… அருளைப் பெருக்க வழியைத் தேட வேண்டும். இந்த உடலுக்குப் பின் நாம் எங்கே…? என்ற நிலையில் சப்தரிஷி மண்டல எல்லையை நாம் உறுதிப்படுத்த வேண்டும்.

அது தான் ஏகாதசி…!

1.இந்த வாழ்க்கையில் வரக்கூடிய பற்றை எல்லாம் நீக்கிவிட்டு
2.எல்லோரும் பேரின்பம் பெற வேண்டும் என்று எண்ணுவது தான் ஏகாதசி விரதம்.

அன்றைய நாள் முழுவதும்… ஒவ்வொரு மாதத்திலும்… அவ்வப்பொழுது வரக்கூடிய குறைகளை நீக்குவதற்கும் பிறருடைய பகைமைகளைக் குறைப்பதற்கும்… “அவர்களுக்கெல்லாம் அருள் பெற வேண்டும்… என்று அந்த ஏகாந்த உணர்வை வளர்த்துக் கொள்ளும் பொழுது “ஏகாதசி…”

யாருடைய பகைமையையும் நாம் நமக்குள் வளர்ப்பதில்லை. அந்தப் பகைமை இல்லாது செல்லப்படும் பொழுது “பத்தாவது நிலையான பிறவி இல்லா நிலையை அடைய முடியும்…”

12 மாதங்களிலும் 12 ராசிகளிலும் மாறி வரப்படும் பொழுது
1.ஒவ்வொரு ராசியிலும் ஒவ்வொரு மனிதனுடைய உணர்வுகள் ராசிகள் அங்கே மாறப்படும் பொழுது
2.அந்த ராசியை எப்படி மாற்ற வேண்டும் என்று தான் தத்துவ ஞானிகள் கூறியுள்ளார்கள்.

வைகுண்ட ஏகாதசி…! எல்லோரும் ஏகமாகச் சேர்ந்து துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அனைவரும் பெற வேண்டும் என்று ஏங்கி… ஒருவருக்கொருவர் பகைமை ஆகாதபடி… வெறுப்பு வேதனை சலிப்பு சஞ்சலம் சங்கடம் கோபம் குரோதம் இவையெல்லாம் உடலுக்குள் வளராதபடி தடுத்து அனாதையாக்குதல் வேண்டும்.

அனாதையாக்கினால் காலையில் 6:00 மணிக்கு சூரியன் அதைக் கவர்ந்து சென்று விடுகிறது. அதைச் சூரியன் கவர்ந்து செல்லப்படும் பொழுது இந்த உடலை விட்டுச் செல்லும் நாம் துருவ நட்சத்திரத்திந் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலத்தில் இணைகின்றோம்.

ஒளி என்ற உடலும்… ஒளியான அறிவும்… இருளை நீக்கும் ஞானமும்… மெய்ப்பொருள் காணும் சக்தியும் கிடைக்கும்.

ஆகவே…
1.நாம் மேலே செல்வதற்குப் பதில் கீழே இந்த உடலுக்குள் இழுத்து விடக்கூடாது
2.இந்த உடலில் வாழ்வதற்காக யாம் (ஞானகுரு) கூட்டத்தைக் கூட்டவில்லை
3.இதிலிருந்து பிரிந்து பிறவியில்லா நிலை அடைய வேண்டும்.

அதுதான் நமக்கு முக்கியம்…!

சிறிது நாட்கள் தான் நாம் வாழ்கின்றோம். அப்படி இந்த உடலில் வாழும் நாள்களுக்குள் நம் மனம் ஐக்கியமாக வேண்டும்… எல்லாவற்றையும் ஒன்று சேர்க்க வேண்டும்
1.ஒளியாக மாறுதல் வேண்டும்
2.சப்தரிஷி மண்டலத்துடன் இணைதல் வேண்டும்.

முந்தைய தீயவினைகளையும் இப்போது வரும் தீயவினைகளையும் தடுக்க வேண்டும்… “இல்லையென்றால் தியானம் அர்த்தமற்றது தான்”

முந்தைய தீயவினைகளையும் இப்போது வரும் தீயவினைகளையும் தடுக்க வேண்டும்… “இல்லையென்றால் தியானம் அர்த்தமற்றது தான்”

 

உங்கள் வாழ்க்கையில் தியானம் செய்வதற்கு முன்னாடி இருந்த அனுபவமும்… தியானத்திற்கு வந்த பிற்பாடு சில அனுபவங்களும் உங்களுக்குத் தெரியும்.

இதை நீங்கள் கூர்ந்து பார்த்து இதனுடைய இயக்கம்
1.நாம் இயங்குகின்றோமா…
2.நாம் நுகர்ந்த உணர்வு நம்மை இயக்கியதா…?
3.அந்த இயக்கிய உணர்வுக்குத் தக்க நாம் செல்கின்றோமா…? என்பதை யோசனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டும்.

நாம் உணவாக உட்கொண்ட அந்த உணவுக்குள் மறைந்து வரும் நஞ்சை நம் உடல் மலமாக மாற்றுகின்றது. ஆகவே தீமை என்ற உணர்வுகளை மாற்றி அமைக்கக்கூடிய சக்தி மனிதனுக்கு உண்டு.

அதை நாம் எப்படி மாற்றி அமைக்க வேண்டும்…? அதை மாற்றுவதற்கு உண்டான சக்தி நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத் தான் இந்த உபதேசம்.

எனக்கு (ஞானகுரு) எப்படித் தீமைகளிலிருந்து தப்புவதற்கு குருநாதர் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெறச் செய்தாரோ அதைத் தான் உங்களுக்குள்ளும் நான் பெறச் செய்து கொண்டிருக்கின்றேன்.

அதை நீங்கள் வளர்த்துக் கொண்டால்
1.முந்தைய தீயவினைகள் இருந்தாலும் குறையும்
2.புதிதாகத் தீயவினைகள் நமக்குள் உருவாகாதபடி தடுக்கவும் முடியும்.
3.இரண்டும் இல்லை என்றால் நான் தியானம் செய்தேன்… அதைச் செய்தேன்… என்று சொன்னால் “அது அர்த்தமற்றது…”

ஆகவே இதைப் பின்பற்றி ஒவ்வொன்றுக்கும் அதைச் சீராகச் செயல்படுத்த வேண்டும்.

ஒரு வித்தினை ஊன்றி செடி உருவாகி விட்டால் அது வளர்வதற்குண்டான நீரை ஊற்றிக் கொண்டே இருந்தால் தான் வளர்க்க முடியும்… அதிலே மீண்டும் வித்துக்களும் உருவாகும்.

ஆனால் செடியை வைத்து விட்டேன்… தண்ணீரையும் ஊற்றி விட்டேன்.. அது வளர்ந்து விடும் என்று சொன்னால் எப்படி விளையும்…?

இது போன்று அனுபவத்திலே வாழ்க்கையில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வரக்கூடிய அழுக்குகளை நீக்கிடும் ஒரு பழக்கம் வர வேண்டும்,

1.எத்தனையோ கோடி உடல்கள் பெற்று
2.அதிலிருந்து மீளும் சக்திகளை நாம் சந்தர்ப்பத்தால் எடுத்துக் கொண்டது தான்
3.உயிர் இந்த மனித ரூபத்தைக் கொடுத்தது.

அகஸ்தியன் பல விஷத்தன்மைகளை அடக்கி அதை எல்லாம் மாற்றி அமைத்ததனால் ஒளியின் சரீரமாகத் துருவ நட்சத்திரமாக இருக்கின்றான்.

அதிலிருந்து வரக்கூடிய உணர்வினை நம் உடலில் இருக்கக்கூடிய ஒவ்வொரு அணுக்களுக்கும் பெறச் செய்யக்கூடிய தகுதி பெற்றால்… அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக ஆனது போன்று நாமும் நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களைச் சிறுகச் சிறுக ஒளியாக மாற்றி முந்தைய தீய வினைகளைத் தணித்துப் புதிய வினைகள் நமக்குள் சேராதபடி தடுத்து நம் உணர்வுகளை வலுவாக்க முடியும்.

வலு பெறச் செய்வதற்குத் தான் இதைச் சொல்கிறோம்.

எம்முடைய உபதேசக் கருத்துக்களைப் பதிவாக்கிக் கொண்டு அதன் வழி நடந்த பின்
1.வாழ்க்கையில் உங்களை எது இயக்கியது…?
2.குடும்பங்களில் வெறுப்பு எப்படி வந்தது…?
3.பகைமைகள் எப்படி வந்தது…?
4.தொழில் எப்படி நஷ்டமானது…?
5.அதை எல்லாம் தியானத்தின் மூலம் எப்படி மாற்றினோம்…? என்பதை அனுபவத்திற்குக் கொண்டு வர வேண்டும்.

உங்களிடம் இப்போது கேட்கிறோம்…! அடுத்து அதற்குண்டான விடைகளையும் யாம் (ஞானகுரு) கொடுக்க முடியும்.

எம்மிடம் பழகிக் கொண்ட பிற்பாடு… தியானத்தில் இருந்தீர்கள். தியானத்தின் மூலம் தீமை நீக்கிடும் அனுபவங்களைப் பெற்று அதை வலுப்படுத்தித் தான் ஆக வேண்டும்.

அதை மற்றவரிடமும் சொல்லித் தான் ஆக வேண்டும். நீங்கள் அதை வெளிப்படுத்தினால்
1.அடுத்து மற்றவரும் தங்களுடைய அனுபவங்களைச் சொல்ல
2.எல்லோரும் அந்த ஞானிகள் காட்டி வழியினைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியும்.

அதற்குத் தான் இதைச் சொல்வது.

ஆரம்பத்திலே எத்தனையோ உணர்வுகளை வெளிப்படுத்திக் காட்டினோம். உடலுக்குள் ஆன்மாக்கள் எப்படி இயங்குகின்றது…? அது உடலுக்குள் நுகரப்பட்டால் என்ன செய்யும்…? எல்லாவற்றையும் காட்சியாகக் கொடுத்துக் கொண்டுதான் இருந்தோம்.

ஆனால் காட்சியைக் கொடுக்கப்படும் போது அவரவர் ஆசை எதுவோ அதற்குத்தக்க
1.அந்த ஆசை உணர்வு கொண்டு இறந்த பிற ஆவிகள் அவர்கள் உடலில் புகுந்து…
2.போகும் மார்க்கங்களை இடைமறித்து… மீண்டும் தீய வினைகளுக்கே அழைத்துச் சென்று விட்டது.

ஆரம்ப நிலையில் எம்மிடம் பழகியவர்கள் எல்லாம் பெரும்பகுதி அந்த நிலைக்குத் தான் சென்று விட்டார்கள்.

ஒவ்வொருவரும் உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகப் பல நிலைகளைக் காண்பித்தேன். அதைத் தப்பான வழியில் கொண்டு சென்று விட்டார்கள்.

ஆகவே… அந்த இயற்கையின் உண்மைகளை நாம் நுகர்ந்து கொண்ட பின் நம் உணர்வுகள் என்ன செய்கின்றது…?

நம் உடலில் அது வளர்ந்த பின் நண்பர்கள் நம்மைப் பார்க்கும் போது எப்படி மதிக்கின்றனர்…? ஒரு பொருளைப் பார்த்த பின் நமக்கு வெறுப்போ அல்லது அதன் மீது பாசமோ எப்படி வருகிறது…? என்பதை நாம் அனுபவபூர்வமாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஏனென்றால் நம் உடலுக்குள் இருக்கும் உணர்வுக்கொப்பத் தான் அது வரும்.
1.எம்மிடம் அதை வெளிப்படுத்தினால் அதற்குண்டான விளக்கமும் உங்களுக்குக் கிடைக்கும்.
2.அருள் வழியில் உங்கள் எதிர்கால வளர்ச்சிக்கு இது உதவும்.

சக்கரம் சுழல்வது போல் துருவ நட்சத்திரத்தின் சக்தியை “ஒரு ரவுண்டு” உடலுக்குள் பாய்ச்ச வேண்டும்

சக்கரம் சுழல்வது போல் துருவ நட்சத்திரத்தின் சக்தியை “ஒரு ரவுண்டு” உடலுக்குள் பாய்ச்ச வேண்டும்

 

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.

உங்களுக்குள் யாம் (ஞானகுரு) பதிவு செய்ததை நினைவுக்குக் கொண்டு வந்து உங்கள் நினைவனைத்தையும் துருவ நட்சத்திரத்துடனும் சப்தரிஷி மண்டலத்துடனும் செலுத்தினால் அதிலிருந்து வெளிப்படும் பேரருள் பேரொளியை நீங்கள் நுகர்ந்தறிய நேரும்.
1.உங்கள் நினைவுகள் எல்லாம் வான மண்டலத்தில் சென்றிருக்கும்
2.ஒரு மத்தாப்பைக் கொளுத்தும் போது பொறிகள் எப்படிக் கிளம்புகின்றதோ அது போன்று
3.வான மண்டலத்தில் பல நிறங்கள் கொண்ட உணர்வலைகள் பரவிக் கொண்டிருப்பது உங்களுக்குத் தோற்றம் அளித்திருக்கும்.

உங்கள் உடலுக்குள் அதைப் பெற்றிருப்பீர்கள்…!

1.துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்பட்ட உணர்வலைகள் அனைத்தும் வைரத்தைப் போன்று இளம் நீல நிறமாக இருக்கும்.
2.சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வந்தது அனைத்தும் பலவித வர்ணங்களில் இருந்திருக்கும்

ஏனெனில் ஒவ்வொரு மகரிஷியும் அவர்கள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் கலந்தது பல வர்ணங்களில் இருக்கும். சப்தரிஷி மண்டலங்களில் இருந்து வருவது மத்தாப்பு போன்று உங்களுக்கு அந்த உணர்வுகள் தெரிந்திருக்கும்.

தெரியவில்லை என்றாலும்
1.இந்த உணர்வலைகள் சுழன்று கொண்டு வந்தது உங்கள் உடலுக்குள் பாய்ந்து… சக்கரம் போன்று சுழன்று வருவதை உணர்ந்து இருக்கலாம்.
2.ஏனென்றால் சுவாசித்து… உடல் முழுவதற்கும் ஒரு ரவுண்ட் வரும்.
3.இந்த உணர்வுகள் அனைத்தும் உங்கள் உடலில் உள்ள அணுக்களில் இணையும்.

செடிகளுக்கு எப்படி உரம் போடுகின்றோமோ அதைப் போன்று அந்த அணுக்களின் முகப்புகளில் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் போய்ச் சேரும்.

இந்த வாழ்க்கையில் எத்தனை வகையான குணங்கள் கொண்டோமோ அத்தனை வகையான அணுக்கள் உடலில் உண்டு.

நாம் நல்ல குணங்கள் கொண்டிருப்பினும் பிறருடைய தீமைகளை உற்றுப் பார்த்து கேள்வியுற்றிருந்தால் அந்த உணர்வுகள் நுகரப்பட்டு
1.நல்ல குணங்களின் முகப்புகளில் இது அடைப்பட்டிருக்கும்
2.அந்த நல்ல குணங்கள் செயல்படாத நிலையில் தடைப்பட்டு அது நலிந்து கொண்டிருக்கும்.
3.நல்ல குணங்கள் வளர்வதற்கு ஈர்ப்பு சக்தி குறைந்திருக்கும்.
4.வளர்ச்சி குன்றும் பொழுது நல்ல குணங்களால் வளர்க்கப்பட்ட உடலில் சோர்வு உண்டாகும்.

நல்லது செய்ய வேண்டும் என்று எண்ணித் தான் பிறருடைய தீமைகளைக் கேட்டு உணர்கின்றோம்.

ஏனென்றால் உயிரிலே பட்ட பின் தீமை என்று உணர்ந்தாலும் அந்த உணர்வுகள் உடலில் பரவி நாம் எந்த நல்ல குணங்கள் கொண்டோமோ அதனுடன் சேர்ந்து விடுகின்றது. தீமை என்று அறிவித்தாலும் நல்ல குணத்தை அப்போது இயங்கவிடாது அடைத்து விடுகிறது.

ஒரு மாவை எடுத்து நாம் பிசைந்தாலும் மாவு சுவை உள்ளது தான். இருந்தாலும் அதிலே வேறு ஒரு பொருளைப் போட்டுக் கலக்கினால் அது மேலோட்டமாக இருந்தால் அதனின் சுவை தான் முன்னணியில் இருக்கும்.

இதைப் போன்று தான் நாம் நல்ல குணங்களில் மற்ற தீமையான உணர்வு சேர்ந்த பின் அது செயலற்றதாக ஆகிவிடுகிறது.
1.இதை அகற்றிய அந்த அருள் ஞானிகள் உணர்வுகளை உங்கள் உடலுக்குள் சுழலச் செய்ய வேண்டும்
2.ஏனென்றால் அது வலு கொண்டு ஊடுருவிச் செல்லும் ஆற்றல் பெற்றது
3.அது சுழன்று வரும் பொழுது செடிகளுக்கு உரம் போட்டது போன்று நல்ல அணுக்களில் ஊடுருவிப் பாய்ந்து
4.கேட்டறிந்த தீமைகள் நல்ல அணுக்களில் கலந்ததைச் செயலிழக்கச் செய்கிறது.

இவ்வாறு நல்ல அணுக்களைத் தூய்மைப்படுத்தி துருவ நட்சத்திரத்தின் உணர்வை உடலில் உள்ள எல்லா அணுக்களின் முகப்புகளிலும் கொண்டு வர வேண்டும் என்பதற்குத் தான் உபதேச வாயிலாக உங்களுக்குள் அதைப் பதிவு செய்கிறோம்.

மகரிஷிகளின் அருள் சக்தி எல்லோரும் பெற வேண்டும் என்று அடிக்கடி எண்ணினால் யாருடைய தீமையும் நமக்குள் வராது

மகரிஷிகளின் அருள் சக்தி எல்லோரும் பெற வேண்டும் என்று அடிக்கடி எண்ணினால் யாருடைய தீமையும் நமக்குள் வராது

 

நாம் பரிவு பண்பு அன்பு கொண்டவர்களாக இருக்கின்றோம். ரோட்டிலே நாம் செல்லும் போது ஒருவர் “ஐயா பசிக்கிறது…” என்று சொல்கின்றார். அந்த வேதனையை நாம் நுகர்கின்றோம். இரக்க உணர்வு கொண்டு அவருக்கு உதவியும் செய்கின்றோம்.

எந்த வேதனை கொண்டு அந்த சோக குரலிலே அவர் வெளிப்படுத்தினாரோ சோக உணர்ச்சியை தூண்டும் அணுவாக நம் உடலில் விளையத் தொடங்குகிறது… இது சிவமாகின்றது.

இன்னொரு பக்கம் கோபமாக ஒருவர் உதைக்க வேண்டும் என்று எண்ணுகின்றார் அதை நாம் கண்களில் பார்க்கின்றோம்.. “ஓம் நமச்சிவாய…” நம் உடலில் இது இணைகின்றது. அடுத்தாற்போல்
1.வீட்டில் நம் குழந்தை ஏதாவது சொன்னபடி கேட்கவில்லை என்றால்
2.இந்த உணர்ச்சிகள் தூண்டி அவனை உதைக்கும்படி செய்கிறது.

இப்படி நம் வாழ்க்கையில் ஒவ்வொன்றும் சேர்த்துச் சேர்த்து சிவமாகின்றது (உடலாக்கப்படுகிறது). ஆனால் மனிதனாக ஆன நிலைகள் பரசுராம்…!

ரோட்டிலே வேதனைப்படுகின்றார் என்று தான் உதவி செய்தோம் ஆனால் அதைத் தூய்மைப்படுத்த வேண்டும் அல்லவா.

ஈஸ்வரா என்று புருவ மத்தியில் உயிரிடம் வேண்ட வேண்டும்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று
2.அந்த வேதனைப்பட்ட உணர்வுடன் இதைச் சேர்த்து அதைத் தணித்தல் வேண்டும்
3.துருவ நட்சத்திரத்தின் அணுவாக மாற்றுதல் வேண்டும்.. இதை உடலாக மாற்ற வேண்டும்.

சொல்து அர்த்தமாகிறதல்லவா….!

ஆக அது போன்ற சந்தர்ப்பங்களில் நம் நினைவுகள் எப்படி இருக்க வேண்டும்…?

மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும் அவர்கள் வேதனையில் இருந்து விடுபட வேண்டும் என்று “இந்த உணர்வின் ஒலியைப் பரப்புதல் வேண்டும்…” (இது முக்கியம்)

வேதனைப்படுகிறார் என்று உணவு கொடுத்தாலும் அது எவ்வளவு நேரத்திற்கு உதவியாக இருக்கும். அன்று ஒரு நேரம் தான் அது பசி அடங்கும் அடுத்து அவனுக்கு நாம் நிவர்த்தி செய்ய முடியுமா…? முடியாது.

ஆகவே அவருக்கு அந்த உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும் என்று
1.அவருடைய வேதனை உங்களுக்குள் வராதபடி தடுத்துக் கொள்ள வேண்டும் (இது முக்கியம்)
2.மகரிஷிகளின் அருள் சக்தி பெறுவாய் உன் எதிர்காலம் சிறந்து இருக்கும்… நீ நன்றாக வாழ்வாய் என்ற
3.இந்த ஞான வித்தை அங்கே போட்டு விட வேண்டும்.

அவனுக்கு அந்த எண்ணம் வந்து அதை எண்ணினால் அவனுக்கு அது கிடைக்கும். எண்ணவில்லை என்றால் அவனுக்கு அது கிடைக்காது. ஆனால் இந்த வித்தை நாம் அங்கே ஊன்ற வேண்டும்.

இதே போன்றுதான் நண்பர்களுக்குள் ஒருவருக்கொருவர் பழகி வரும் பொழுது நண்பர் நோய்வாய்ப்பட்டு விடுகின்றார் என்று வைத்துக் கொள்வோம். உடனே நாம் என்ன செய்கின்றோம்…? என்ன ஏது என்று விசாரிக்கின்றோம்…?

உயிரிலே பட்டபின் நாம் சோர்வடைந்து விடுகின்றோம். அப்போது சோர்வடைச் செய்யும் அணுவாக உடலில் விளைந்து விடுகின்றது. மனித உடலில் விளைந்தது அவர்கள் எத்தனை வேதனைப்பட்டார்களோ அதை எடுத்து நமக்குள் மீண்டும் விளையத் தொடங்குகிறது.

விளையாதபடி தடுக்க வேண்டும் என்றால் அவருடைய நோயைப் பற்றி விசாரித்த அடுத்த கணமே ஈஸ்வரா என்று உயிரிடம் வேண்ட வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று இதை இணைத்துக் கொண்டு வர வேண்டும்.

ஒரு இரண்டு நிமிடமாவது இவ்வாறு எண்ணிப் பழகுதல் வேண்டும் செய்து முடிந்த பின் நண்பனுக்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும்… அவர் உடல் நலம் பெற வேண்டும்… என்று எண்ணிவிட்டு “நீ நலம் பெறுவாய்…” என்று வாக்கினை ஆங்கே பதிவு செய்ய வேண்டும்.

இப்படிச் செய்யப்படும் பொழுது அருள் உணர்வு கலந்து வலிமை பெற்றதாக நமக்குள் சேர்கின்றது. அதை நீங்கள் எடுப்பதற்கு இந்த உபதேசத்தின் வாயிலாக உயர்ந்த சக்தியைக் கொடுக்கின்றோம்.

திட்டியவனைத் திருப்பி எண்ணும் பொழுது பதட்டமும் கோபமும் வருகிறது. அதே போன்று அந்த அருள் ஞானிகள் சக்தியைப் பெறுவதற்கு உங்களுக்குள் இப்போது பதிவாக்குகின்றேன் (ஞானகுரு).
1.திருப்பி நீங்கள் அதை நினைவாக்கும் பொழுது கண்ணுக்கு வருகின்றது
2.அந்த ஞானிகள் உணர்வின் தன்மையை நீங்கள் எடுக்கின்றீர்கள்.
3.எடுத்து உங்கள் குணங்களுக்குள் இதனைக் கலந்து பழகுதல் வேண்டும்
4.அப்படிக் கலந்து பழகினால் தான் வரும் தீமைகளை அடக்க முடியும்.
5.இதை உங்கள் உடலாக… சிவமாக ஆக்க வேண்டும்.

நோயைப் பற்றி விசாரித்து தனித்த நிலையில் எடுத்துக் கொண்ட பின் அதற்கப்புறம் வீட்டிற்குச் சென்று நண்பர் நன்றாக வேண்டும் என்று நினைத்தோம் என்றால் அது சரியாக வராது.

ஏனென்றால்
1.முதலில் கேட்டுப் பதிவானது உடலில் அணுவாக விளையத் தொடங்கும்
2.இரண்டாவது அதை சரி பண்ணிக் கொண்டு வர முடியாது.

ஒரு செடி விளையப்படும் பொழுது அந்தச் செடியுடன் உரத்தை இணைத்து விட்டால் நன்றாக இருக்கும். அது போல் தீமை நமக்குள் வளராதபடி தடுக்க வேண்டும் என்றால் அவ்வப்போது ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.

அது தான் வாழ்க்கையே தியானம் என்று சொல்வது…!

துருவ நட்சத்திரத்தினைப் பற்றுடன் பற்றும் பொழுது தீமைகள் நமக்குள் உருவாகாதபடி உடனுக்குடன் தடுக்கப்படுகிறது.

எத்தகைய சந்தர்ப்பமாக இருந்தாலும் அதிலே முதலில் நாம் கேட்டது அல்லது பார்த்தது தவறிப் போய் உடலுக்குள் அணுவாக உருவாகும் சந்தர்ப்பம் ஏற்படுகின்றது.
1.ஆனால் அது விளைவதற்கு முன் ஒரு இரண்டு நிமிடமாவது
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வினைச் சேர்த்து அதை மாற்றிக் கொண்டு வர வேண்டும்.

இது ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.

மகரிஷிகளை நாம் எண்ண வேண்டிய வரிசைக்கிரமம்

மகரிஷிகளை நாம் எண்ண வேண்டிய வரிசைக்கிரமம்

 

யாம் உபதேசிக்கும் உணர்வுகள் அனைத்தும் அகஸ்தியரும்… அவரைப் பின்பற்றிய நமது குருவும்… சப்தரிஷிகளின் அருளும் அதன் பின் 4000 ஆண்டுகளுக்குள் வியாசகர் பெற்ற நிலையும் தான்.

1.அகஸ்தியன் உணர்வைத் தனக்குள் எடுத்து உணர்வின் ஒளியாகப் பெற்றவர் வியாசகர்
2.அவரிடமிருந்து வெளிப்பட்டதை பிருகு அத்திரி இதைப் போன்ற மகரிஷிகள் அந்த உணர்வை தனக்குள் வளர்த்து
3.அதை எல்லோரும் பெற வேண்டும் என்ற உணர்வு கொண்டு எழுத்து வடிவில் பதிவு செய்தனர்
4.எழுத்து வடிவில் இல்லை என்றாலும் கூட சுருதி வடிவிலே தனக்குள் வளர்த்துக் கொண்டவர்கள்
5.அதன் வழியில் அவர்களுக்குள் விளைந்ததும் பின் அவர்கள் பிறர் பெற வேண்டும் என்று எண்ணியதும்
6.மற்றவர்கள் அந்த உயர்ந்த நிலை பெற வேண்டும் நன்மை பெற வேண்டும் என்று அவர்கள் செயல்படுத்தினார்கள்.

ஆனால் பின் வந்தோர் அதை மாற்றி விட்டார்கள் இது எல்லாமே உங்களுக்குத் தெரிய வரும். உபதேசத்தின் மூலக்கூறுகளை அந்தந்தக் காலகட்டத்தில் உங்களுக்குள் எல்லாவற்றையும் தெளிவாக்கிக் கொண்டு வரும்.

நீங்கள் வளர… பிறரைத் தெளிவாக்க தெளிந்த பூமியாக தெளியச் செய்யும் உணர்வாக நமக்குள் வளர்க்க… என்றும் பேரானந்தப் பெருநிலை என்று நிலை அடைய இது உதவும். நாம் எல்லோரும் அதைப் பெறுவோம்.

உதாரணமாக பலசரக்குக் கடையிலே பொருள்களை வாங்குகின்றார்கள். பொருள்களை எல்லாம் விற்றால் வியாபாரம் நன்றாக இருக்கும்… குடும்பம் நன்றாக இருக்கும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்.

அதே மாதிரித் தான்
1.அந்த அருள் ஞானிகளின் சக்திகளை எல்லோருக்கும் கிடைக்கச் செய்தால்
2.அவர்கள் அதைப் பெறும்பொழுது மகிழ்ச்சி நிலைகள் உங்களுக்குள் வளரும்.

புறப்பொருளை விற்றுப் பணத்தை வாங்குகின்றீர்கள் ஆனால்
1.அருள் ஞானிகளின் உணர்வை உங்களுக்குள் எடுத்து எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று செலுத்தும் போது
2.அதை அவர்கள் பெற்று மகிழ்ந்திடும் உணர்வுகள் வரும் போது பேரானந்தச் செல்வமாக நீங்கள் பெறுகின்றீர்கள்.

ஆகையினால் “எல்லோருக்கும் அந்த அருள் சக்திகளைக் கிடைக்கச் செய்யுங்கள். அந்த மகிழ்ச்சியான அரும்பெரும் செல்வத்தை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள் ஏனென்றால் இது பேரானந்தப் பெரும் செல்வம்.

ஆகையினால் அதைப் பெறுவதற்கு முயற்சிப்போம் குரு அருளை நாம் என்றுமே பெறுவோம். அவருடைய அருளால் எல்லா நிலைகளையும் நாம் பெறுவோம் எல்லோரையும் நாம் மகிழ்வடையச் செய்ய முடியும்.

நம்மை மனிதனாக உருவாக்கிய நம் அன்னை தந்தை உயிரைக் கடவுளாக மதித்து… நம்மைத் தெய்வமாகக் காத்தருளிய நிலையும் மனிதன் நல் ஒழுக்கத்தையும் நல் நிலைகள் பெறுவதற்குக் குருவாக வழிகாட்டிய முதல் குருவின் ஆசியை நாம் பெறுவோம். அவர்கள் துணை கொண்டு
1.மெய் உலகின் உணர்வின் தன்மையை வழிகாட்டும் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவருடைய அருளும்
2.அவரின் அருள் துணை கொண்டு மெய் ஞானிகள் அருளும்
3.அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான உணர்வையும்
4.அதிலிருந்து வளர்ச்சி பெற்ற சப்தரிஷிகளின் அருள் உணர்வுகளையும் நாம் பெறுவோம்.

உலக இருளை மாய்ப்போம்… மெய்ப்பொருள் காணும் அந்தப் பாக்கியத்தைப் பெறுவோம்.

மகரிஷிகளுடன் நாம் ஒன்றும் வழி

மகரிஷிகளுடன் நாம் ஒன்றும் வழி

 

1.எத்தனை வகையான உணர்வுகளுடன் இயங்குகின்றோமோ அத்தனை உணர்வுகளையும் தட்டி எழுப்பி
2.அந்தந்த உணர்வுகளுடன் மகரிஷிகளின் உணர்வுகளை இணைக்கச் செய்வதற்கும்
3.நமக்குள் இயங்கிக் கொண்டிருக்கும் உணர்வுக்குள் மகரிஷிகள் உணர்வைச் சேர்க்கச் செய்வதற்கும்
4.நடைமுறையில் இயக்கும் உணர்வுகளையும் உங்களுக்குள் தூண்டச் செய்து மகரிஷிகளின் உணர்வை இணைக்கச் செய்வதும் தான்
5.”இயக்கமும்… உணர்வின் சேர்க்கையும்…” என்ற நிலையில் இப்பொழுது உங்களுக்குள் எம்மால் (ஞானகுரு) உருவாக்கப்பட்டுக் கொண்டுள்ளது.

அதன் வழியில் வளர்க்கப்படும் பொழுது அது உங்களுக்குள் வளர்ச்சி பெறும். எத்தனையோ விதமான குணங்கள் நமக்குள் இயங்கிக் கொண்டுள்ளது “அத்தனை குணங்களிலும்” நாம் அந்த மகரிஷிகளின் உணர்வுகளை இணைத்தல் வேண்டும்.

அது மட்டுல்ல…
1.வாழ்க்கையில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு விதமான உணர்வுகள் நம்மை மோதும்
2.அக்காலங்களில் மகரிஷிகள் உணர்வுகளை அதனுடன் இணைத்தல் வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று இந்த உணர்வினை நாம் சேர்த்து மாற்றிக் கொண்டே வர வேண்டும்.

ஒவ்வொரு நொடிப்பொழுதும் வாழ்க்கையில் இவ்வாறு நாம் மாற்றிக் கொள்ள முடியும்.

ஏனென்றால் சிறு பிள்ளையாக நாம் வளர்ந்ததிலிருந்து எத்தனையோ உணர்வுகள் நமக்குள் வித்தாக ஊன்றப்பட்டு இருக்கிறது.

“ஊழ்வினை” என்று அவைகள் இருப்பினும் வினைக்கு அந்த உணர்வின் அணுவாக வளரப்பட்டு அதனின் மலமாக நம் உடலுக்குள் அணுக்களாக உருவாகிக் கொண்டு தான் இருக்கின்றது.

1.அப்படி வளர்த்துக் கொண்ட அணுக்கள் அது முதுமை அடைந்து விட்டால் அதனுடைய மலம் குறையும்
2.அந்த உணர்வின் தன்மை தனக்குள் இணையும்.
3.இணைந்து கொண்ட உணர்வுகள் உடலை விட்டுச் சென்ற பின் உயிருடன் ஒன்றும்
4.எது உயிருடன் ஒன்றுகிறதோ அது தான் நம்முடைய அடுத்த நிலைக்குக் காரணமாகிறது.

அதாவது பரமாத்மாவிலிருந்து நம் ஆத்மாவாகி உடலில் ஜீவாத்மாவாக விளைந்து அதிலே வடித்தது உயிராத்மாவாக மாறுகிறது.

ஏனென்றால் இந்த உடல் பெறும் உணர்வுக்கு அந்த மலம் இல்லை என்றால் அணுவின் தன்மை உடல் குறையும். ஆனால் அந்த உடலின் உணர்வின் தன்மை அணுவின் மலம் (தசைகள் உறுப்புகள்) அது முதுமை அடையப்படும் போது உயிருடன் ஒன்றி நிலைகொள்ளும். அந்த உணர்வின் அணுவே உயிருடன் ஒன்றி வெளி வரும்.
1.மீண்டும் தன் இனத்தைப் பெருக்க அதனின் செயலாக்கத்தை உருவாக்கிவிடும்
2.ஆகையினால் தான் அந்த மகரிஷிகளின் அருள் ஒளியினை எல்லாவற்றிலும் இணைத்தல் வேண்டும் என்று யாம் சொல்வது

வாழ்க்கையில் எத்தனையோ விதமான சந்தர்ப்பங்கள் வரும். அத்தனை சந்தர்ப்பத்திலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நாம் இணைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

அப்போது
1.அந்த மகரிஷிகளுடன் ஒன்றி நாம் ஒளியின் உணர்வாகவே நாம் வளர்கின்றோம்.
2.ஆகவே எல்லோரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று பேராசை கொள்ளுங்கள்.

நினைத்தவுடன் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவதற்கு “அதற்குண்டான கரண்ட் (காந்த சக்தி) வேண்டும்”

நினைத்தவுடன் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவதற்கு “அதற்குண்டான கரண்ட் (காந்த சக்தி) வேண்டும்”

 

ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை மிகப் பெரிய சக்தியாக உங்களுக்குக் கொடுத்துள்ளோம். நினைத்தவுடன் அந்தச் சக்தியைப் பெறுவதற்கு
1.நீங்கள் காந்த சக்தியைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.
2.ஒரு விதையை நாம் நிலத்தில் ஊன்றினால் அதற்கு நீர் ஊற்றுவது போன்று காந்தத்தின் சக்தியை நாம் பெறுதல் வேண்டும்.

ஏனென்றால் அந்த மெய் ஞானிகளுடைய அருள் வித்துக்களை உங்களுக்குள் பதியச் செய்யப்படும் பொழுது காந்த சக்தி பெற வேண்டும்… இயக்கச் சக்தி வேண்டும்.

காரணம்… கரண்ட் குறைவானால் வீட்டில் பல்புகள் டிம்மாக (DIM) எரியும்.
1.ஞானிகள் மிகவும் ஆற்றல் மிகுந்த சக்தி பெற்றவர்கள்
2.அவர்கள் பேசி வெளிப்படுத்திய… அவர்கள் உடலில் விளைந்த சக்தி வாய்ந்த உணர்வுகள் இந்தக் காற்று மண்டலத்தில் கலந்து இருக்கின்றது.
3.எதையுமே அடக்கி விஷத்தை முறியடிக்கும் சக்தி வாய்ந்த ஆற்றல் தான் அது.
4.நாம் சாதாரண நிலையில் எண்ணினால் நம்முடைய எண்ணங்களை அது முறியடித்து விடும்
5.அந்தச் சக்தியை நாம் எடுக்க முடியாது.

அதை எடுப்பதற்குண்டான தகுதி நீங்கள் பெற வேண்டும் என்பதற்காகத் தான் 27 நட்சத்திரங்களுடைய சக்தியும் நவக்கோள்களுடைய சக்தியையும் சப்தரிஷி மண்டலங்களையும் சப்த ரிஷிகளின் அருள் ஒளியையும் பெற வேண்டும் என்று
1.முதலில் அதை உங்களுக்குள் பழக்கப்படுத்தி அந்த உணர்ச்சிகளைத் தூண்டி
2.அந்த உணர்வின் வித்தாகக் கருவாக… கருவின் உணர்வின் நிலைகள் பெறச் செய்கிறோம்.
3.குருநாதர் எனக்கு எப்படிப் பழக்கிக் கொடுத்தாரோ அதே வழியைத் தான் உங்களுக்கும் காட்டுகின்றோம்.

நீங்கள் எண்ணிய உடனே அந்த மெய் ஞானிகளின் சக்தியைப் பெறுவதற்கு கரண்ட் (காந்த சக்தி) தேவை.

நம் பூமியைச் சுழன்று வரும் சந்திரனுக்கோ
1.அதனுடைய காந்த சக்தி (கரண்ட்) கம்மி
2.நிலத்தின் தன்மையும் கம்மி.
3.அதனால் வெளியிலிருந்து புறப் பொருளை அதிகமாக இழுத்துக் கவர்ந்து தனக்குள் சேர்த்துக் கொள்ள முடியாது.

அதே சமயத்தில் நீர் இல்லை என்றால் அங்கே ஜீவிதமே இல்லை. இருந்தாலும் அதைப் பெறுவதற்காக… சூரியனிலிருந்து வரக்கூடிய காந்தப் புலன்கள் மற்ற மேகக் கூட்டத்திற்குள் ஊடுருவி வரும் உணர்வின் தன்மையைச் சந்திரன் தனக்குள் கவரப்படும் பொழுது அந்த நீர் சக்தி துணை கொண்டு தான் சந்திரன் வளர்கின்றது.

அந்தச் சந்திரன் காந்தச் சக்தியை எப்படிக் கூட்டிக் கொள்கிறதோ அதே போன்று
1.காந்தப் புலனின் சக்தியை உயிரின் ஓட்டத்திற்குள் கொடுத்து
2.”தனித்து எதிலுமே கலக்காதபடி” காந்தத்தை அதிலே கலக்க வேண்டும்.

சூரியனிலிருந்து வெளிப்படக்கூடிய ஒவ்வொரு காந்த அலையும் மற்றொன்றுக்குள் பட்டபின் அதைக் கவர்ந்து கொள்கிறது. கவர்ந்த பின் அதனதன் உணர்வை ஏற்றுக் கொண்டதாக வருகின்றது.

அந்தக் குணத்தின் தன்மை எடுத்தால் அதற்குள் இருக்கக்கூடிய காந்தம் அந்த உணர்வின் குணத்தை எனக்குள் இயக்கிவிடும். அதை நுகரக் கூடாது.

ஆகவே…
1.சூரியனைப் பார்க்க வேண்டும் என்று யாம் ஆரம்பத்திலே சொன்னது
2.காந்த சக்தியைக் கூட்டிக் கொள்வதற்குத் தான்.

ஆனால் ஒரு சிலர் மணிக்கணக்காகப் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். சிறிது நேரம் பார்த்தாலே போதுமானது என்று நான் சொன்னதைக் கேட்காமல் கண் கேட்டுவிட்டது என்று வந்து விட்டார்கள். குரு சொன்னதைக் கொஞ்சமாவது கேட்கின்றார்களா என்றால் இல்லை…!

1.ஞானிகள் காட்டிய நிலைகளை மதித்து
2.யாம் (ஞானகுரு) சொன்ன முறைப்படி இந்த உயர்ந்த சக்தியை நீங்கள் பெற்றீர்கள் என்றால்
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை உங்களுக்குள் வலுகொண்டதாக
5.நினைத்த மாத்திரத்தில் எண்ணிய உடனே பெற முடியும்.

அதற்குத் தான் இதையெல்லாம் உங்களுக்கு மீண்டும் மீண்டும் தெளிவாக்கிக் கொண்டே வருவது.

வெப்பத்தைக் கூட்டிக் காந்த சக்தியைக் கூட்டினால் “மகரிஷிகள் உணர்வினைக் கவரும் தகுதி பெறலாம்”

வெப்பத்தைக் கூட்டிக் காந்த சக்தியைக் கூட்டினால் “மகரிஷிகள் உணர்வினைக் கவரும் தகுதி பெறலாம்”

 

காற்றிலே மகரிஷிகளின் அருள் சக்திகள் இருக்கின்றது. அந்த அருள் ஞான வித்துக்களை நீங்கள் பெறுவதற்குத் தான் இந்த உபதேசத்தின் வாயிலாக இப்பொழுது பதிவு செய்கின்றோம்.

உதாரணமாக பலகாரம் சுட வேண்டும்… அச்சு முறுக்கு செய்ய வேண்டும் என்றால் அது கரண்டியை எடுத்துக் காய வைத்துக் கொள்கின்றார்கள் அதற்குப்பின் அதிலே மாவை ஒட்ட வைத்துச் சுடுகின்றார்கள்.

ஆனால் அந்த கரண்டியை காய வைக்காதபடி அதைச் செயல்படுத்த முடியுமா…?

அச்சு முறுக்கு செய்ய வேண்டும் என்றால் அந்த இரும்பு கரண்டியை முதலிலேயே அது சூடாக்கிக் கொள்ள வேண்டும்.
1.அது சூடான பிற்பாடு மாவிலே முக்கினால் சொய்ங்… என்று ஓட்டிக் கொள்கிறது
2.அதற்குப் பின் எண்ணைய்ச் சட்டியிலே அதைச் சுட்டால் முறுக்கு சீராக வரும்… கரண்டியிலிருந்து அச்சு முருக்கு அழகாக விழுகும்.

பக்குவம் தெரிந்தவர்கள் இப்படிச் செய்கிறார்கள்…!.

அச்சு முறுக்கு அவர்கள் சுடுகிறார்கள் என்று நாம் கரண்டியைக் “காய வைக்காதபடி… பச்சையாக வைத்தால்” என்ன ஆகும்…? மாவு ஒட்ட மாட்டேன் என்கிறது கரண்டி சரியில்லை என்று சொன்னால் சரியாக இருக்குமா…?
1.அந்தக் கரண்டி சூடாகி
2.மாவை இழுக்கக்கூடிய அந்தப் பவர் (சக்தி) வேண்டும்.

அதே போன்றுதான் நம்மிடம் எத்தனையோ குணங்கள் இருக்கின்றது சொன்ன முறைப்படி தான் நான் தியானம் செய்கின்றேன் என்று “காந்த சக்தியை எடுக்காதபடி…” தியானம் செய்தால் எப்படிச் சரியாக வரும்…?

1.காந்த சக்தியை எடுத்து நமக்குள் சூட்டை ஏற்றி வைத்துக் கொள்ள வேண்டும்
2.ஓ…ம் ஈஸ்வரா…! என்று உயிரைப் பரிபூரணமாக
2.அந்த உணர்வோடு புருவ மத்தியில் எண்ண வேண்டும்… இது முக்கியம்…!

(“ஓம் ஈஸ்வரா… ஓம் ஈஸ்வரா…” என்று சும்மா வெறுமனே சொல்வதனால் பயன் இல்லை)

1.ஓ…ம் ஈஸ்வரா என்கிற போது நாம் எண்ணியது பிரணவமாகின்றது
2.உணர்வுடன் நினைவை அங்கே செலுத்தப்படும் பொழுது காந்த சக்தி ஓடுகின்றது… இழுக்கக்கூடிய திறனும் கூடுகின்றது.

ஏனென்றால் நாம் எண்ணியது பிரணவமாகின்றது. எந்தக் குணத்தை நாம் எண்ணுகின்றோமோ அது உயிரிலே பட்டு ஜீவன் பெறும் போது பிரணவம். அதற்குப் பெயர் தான் ஓ…!

ஓ…! என்று சப்தமாகி ம்… உடலுக்குள் சென்று அந்த உணர்வின் சத்து அடங்குகின்றது. ஓம் நமச்சிவாய… சிவாய நம ஓம் எந்தக் குணத்தை எண்ணுகின்றோமோ அது நம் உடலாக மாறுகின்றது ஆகையினால் ஈஸ்வரா என்று எண்ணும் போது அந்தச் சக்தி கிடைக்கின்றது.

ஆனால் “அயோக்கியப் பயல்…!” என்று ஒருவனை எண்ணும் பொழுது அவனை நினைத்தாலே எரிச்சல் ஆகின்றது.

அதை மாற்றி அமைக்க… “ஈஸ்வரா…!” என் சொல் பேச்சு அனைத்தும் நல்லதாக இருக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

யாராவது நம்மைக் கெடுதலாக நினைத்தார்கள் என்றால் என் பேச்சு அவர்களுக்கு நல்லதாக இருக்க வேண்டும் என்னைப் பார்க்கும் பொழுதெல்லாம் அவர்களுக்கு நல்ல எண்ணங்கள் வர வேண்டும் என்று இந்த எண்ணத்தை நாம் எண்ணினாலே போதுமானது.
1.காந்தப் புலன்கள் ஈர்க்கின்றது
2.இந்த நல்ல உணர்வின் சக்தி நமக்குள் கூடுகின்றது.

யாருடனாவது சண்டை போட்ட பின்பு பாருங்கள் உங்கள் நெஞ்சுப் பகுதியில் படபட… படபட… என்று துடிப்பலைகள் வரும்.

அப்பொழுது அந்த நேரத்தில் யாராவது வந்து ஒரு நல்ல செய்தியைச் சொல்லட்டும். இந்த நேரத்திற்கு வந்து சொல்கின்றான் பார்…! என்று வெறுப்பு தான் வரும். நல்லதைச் சொன்னாலும் கூட சனியன் எப்படியோ போகுது போ…! என்ற எண்ணம் தான் வரும்.

வீட்டிலே பையன் நம்மிடம் சண்டை போட்டு விட்டான் என்று வைத்துக் கொள்வோம். அந்த நேரத்தில் தொழிலில் வேலை செய்வோர் நம்மிடம் வந்து பத்தாயிரம் ரூபாய் லாபம் வருகிறது என்று சொன்னால் நாம் என்ன சொல்வோம்…?

சந்தோஷமான செய்தியாக அவர் சொன்னாலும் கூட என்னத்தைச் சம்பாரித்து வைத்து என்னத்தைப் பண்ணப் போகின்றோம்…? போய்யா நீ…! என்ற சொல் தான் வரும்.

பத்தாயிரம் ரூபாய் பணம் லாபம் வருகிறது என்று அந்த நேரத்தில் சந்தோஷப்பட முடியுமா…? முடியாது.

ஏனென்றால் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்தாலும் கூட பையன் மீது வெறுப்பாக இருக்கின்றோம் காரணம் நாம் சொன்னபடி அவன் கேட்கவில்லை… நம்மை எதிர்க்கின்றான்… முறைக்கின்றான்…! என்றால் உடனே வெறுப்பாகி விடுகிறது.

அப்போது இங்கே வியாபாரத்தில்
1.லாபம் அதிகமாக வருகிறது சரக்கு எல்லாம் நன்றாக விற்பனையாகிறது என்று சொன்னாலும் கூட
2.இந்த அளவுக்குப் பணம் கிடைக்கும் என்று கணக்குப் போட்டுச் சொன்னாலும் கூட
3.எனக்கு இந்த அளவுக்கு நீங்கள் கமிஷன் கொடுத்தால் கூட போதும் என்று அவர் நம்மிடம் விவரங்களை எல்லாம் சொன்னாலும் கூட
4.எனக்கு எல்லாம் தெரியும்… நீ உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போய்யா…! என்று
5.பணம் அதிகமாகக் கிடைக்கிறது என்று சந்தோஷப்பட முடியாதபடி உதறித் தள்ளும் உணர்வு தான் வரும்.

ஏனென்றால் பையன் மீது இருக்கும் வெறுப்பு நம்மை இவ்வாறு இயக்கி விடுகின்றது. பணம் சம்பாதிக்கும் எண்ணத்தையும் அடுத்து மாற்றுகிறது.

இது எல்லாம் நடைமுறையில் ஒவ்வொருவரும் செய்வதைத் தான் சொல்கின்றேன்.. நான் புதிதாக ஒன்றும் சொல்ல வரவில்லை. இதைத் தான் அனுபவம் என்று சொல்வது.

உங்களுக்கும் இப்போது தெரிகின்றது இதை மற்றவர்களுக்கும் சொல்லத் தெரிய வேண்டும்.

இதிலிருக்கும் உண்மைகள் இன்னென்ன மாதிரி இருக்கின்றது என்று பிறருக்குச் சொல்லிச் சொல்லி… ஞானிகள் காட்டிய வழியில் திரும்பத் திரும்ப நாம் செயல்படுத்தினோம் என்றால் “அந்த ஞானம் நமக்குள் தன்னிச்சையாக வரும்…”

ஈஸ்வரா என்று உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஒவ்வொரு நொடிப் பொழுதும் எடுத்துக் கொண்டே வந்தால்
1.அந்த ஞானிகள் உணர்வுகள் உயிரிலே பட்டு
2.அந்த உணர்ச்சியில் தூண்டப்பட்டு அந்த ஞானத்தின் தொடராக அது வரும்
3.மற்றவர்களுக்கு தெளிவாகவும் அமைதியாகவும் எடுத்துச் சொல்லக்கூடிய நிலையாக வரும்.

தொடர்ந்து இதைச் செய்தால் உயர்ந்த சத்தாகவும் உங்களுக்குக் கிடைக்கின்றது உங்கள் சொல் அனைவரையும் காக்கக் கூடிய சக்தியாகவும் வரும்…!

எங்கள் சாமி (ஞானகுரு) பிரமாதமாகப் பேசுகிறார் என்று சொல்வதை விடுத்து விட்டு சாந்தமான நிலைகள் கொண்டு அருள் உணர்வுகளை எடுத்து வளர்த்து… எல்லோரையும் பெறச் செய்யும் அந்தப் பக்குவத்தினை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இரவு தூங்கும் முன்னும்… காலையில் கண் விழித்தவுடனும் “நாம் கட்டாயப்படுத்தி எண்ண வேண்டியது”

இரவு தூங்கும் முன்னும்… காலையில் கண் விழித்தவுடனும் “நாம் கட்டாயப்படுத்தி எண்ண வேண்டியது”

 

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளால் அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியையும் அகஸ்தியன் துருவ நட்சத்திரமான அந்தச் சக்தியையும் அனைவரும் பெறும் பாக்கியத்தை ஏற்படுத்தியது. ஆகவே…
1.அந்த அகஸ்திய மாமகரிஷியின் அருள் உணர்வின் துணை கொண்டு
2.நம் வாழ்க்கையில் எவ்வாறு வாழ வேண்டும் என்ற நிலையில்
3.எத்தகைய இருளானாலும் எத்தகைய வேதனையானாலும்
4.அதை வென்றிடும் அருள் சக்தியை நாம் பெற வேண்டும்.

இரவு தூங்கச் செல்லும் போதெல்லாம் ஆத்ம சுத்தி செய்துவிட்டு என்னைப் பார்ப்போருக்கெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும்… மகிழ்ந்து வாழும் சக்தி கிடைக்க வேண்டும்… அவர்கள் தொழில் சிறந்து விளங்க வேண்டும் என்றுப் படுக்கும் பொழுதெல்லாம் இந்த முறைப்படி எண்ண வேண்டும்.

அடுத்து…
1.எங்கள் குடும்பம் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்
2.நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வாழ்ந்திடும் அந்த அருள் சக்தி பெற வேண்டும்
3.எங்கள் குடும்பத்தில் அறியாது சேர்ந்து நோய்கள் நீங்க வேண்டும்
4.உலக மக்கள் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
5.அவர்கள் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும்
6.அவர்கள் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்
7.உலக மக்கள் இன பேதம் இன்றி மன பேதம் இன்றி மொழி பேதம் இன்றி வாழ்ந்திடும் திறன் பெற வேண்டும் என்று அவசியம் படுக்கையில் எண்ண வேண்டும்.

இவ்வாறு எண்ணினால் அதுவாக நீங்கள் மாறுகின்றீர்கள்…!

காரணம்… ஒருவருக்கொருவர் வரும் பேதங்களை எல்லாம் தவிர்த்தால் தான் “மனிதன்… மனிதனாக இன்று நாம் வாழ முடியும்…!” இந்தக் காற்று மண்டலத்தில் படர்ந்திருக்கும் பகைமை உணர்வுகள் அகல வேண்டும் என்றால் மேசே சொன்ன தியானத்தை அவசியம் செய்ய வேண்டும்.

இதை இப்போது பதிவு செய்து கொண்ட நீங்கள்
1.ஆங்காங்கு எந்த ஊர்களில் எந்த இடங்களில் இருந்தாலும்
2.இரவிலே இது போன்று அவரவர்கள் வீட்டில் இதைச் செய்து
3.அந்த அலைகளைப் பரப்பபடும் போது இந்தக் காற்று மண்டலத்தில் இது பரவுகின்றது

காலையில் எழுந்திருக்கும் பொழுது… அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று தியானித்து விட்டு எங்கள் குடும்பம் முழுவதும் அந்த அருள் சக்தி பெற வேண்டும்… நாங்கள் தொழில் செய்யும் இடங்களில் துருவ நட்சத்திரத்தின் சக்தி படர வேண்டும்… நாங்கள் பார்ப்போர் எல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரொளி பெற வேண்டும்… எங்களைப் பார்ப்போருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும்… அவர்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் எல்லா வளமும் பெற்று செல்வச் செழிப்புடன் வாழும் அருள் சக்தி பெற வேண்டும் என்றும் எண்ணுங்கள்.

1.இவ்வாறு செயல்பட்டால் அந்தச் சக்தியை முதலில் நீங்கள் பெறுகின்றீர்கள்
2.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தியும் எமது அருளும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

உங்கள் வாழ்க்கையில் எந்த நேரத்தில் எந்த நிலை வந்தாலும்… அதில் உள்ள இருளை நீக்கிப் பொருள் காணும் திறன் பெற்று… மகிழ்ந்து வாழ்ந்திடப் பிரார்த்திக்கின்றேன் (ஞானகுரு).