தீய உணர்வுகளைக் கடலுக்குள் கரைக்கும் நிலை

தீய உணர்வுகளைக் கடலுக்குள் கரைக்கும் நிலை

 

விநாயகர் சதுர்த்தி நன்னாளில் விநாயகர் உருவத்தைக் களிமண்ணால் செய்து பூஜித்துப் பின் கடலில் கரைக்கின்றோம்.

இதைப் போன்றுதான் சந்தர்ப்பத்தால், நமக்குள் சேர்ந்த தீய உணர்வுகளை வளராது தடுத்து
1.“அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும்
2.எல்லாக் குடும்பங்களும் நலம் பெற வேண்டும்
`3.எங்கள் பகைமைகள் அழிய வேண்டும்”என்று ஏகோபித்த நிலையில் பிரார்த்திக்கும் பொழுது
4.நம் உடலிலும் நம் பகைவர்களின் உடலிலும் பதிந்த தீய உணர்வுகள் அனைத்தும் கரைந்து விடுகின்றன.

ஒரு மரம் எந்த நறுமணத்தின் உணர்வுகளைக் கொண்டிருக்கின்றதோ அதனின் உணர்வின் சக்தியைக் காற்றில் இருந்து ஈர்க்கின்றது.

ஆனால் “அதனுடைய வேரை அறுத்து விட்டால்…” அது நீரைக் கவரும் திறனை இழந்து தன் ஜீவ சக்தியை இழந்து தன் இனத்தைக் கவரும் தன்மையையும் அது இழந்து விடுகின்றது.

இதைப் போன்றுதான் நமக்குள் மற்றவரின் உணர்வின் தன்மையைப் பதிவு செய்து
1.அதனின் நினைவாற்றல் வராதபடி தடுத்து நிறுத்தும் நிலையாக
2.மகரிஷிகளின் அருள் சக்தியை இணைக்கப்படும் பொழுது தீய உணர்வுகளின் விழுதுகள் தடைப்படுகின்றன.

இவ்வாறு தடைப்பட்டபின் நாம் அனைவரும் ஏகோபித்த நிலையில் எல்லோரும் நம் நண்பர்கள் என்று வளரப்படும்போது நம் அனைவரிடமும் இருந்து வெளிப்பட்டிருந்த காற்றில் கலந்துள்ள தீய உணர்வுகள் நகர்ந்து கடலின் ஈர்ப்புக்குள் சென்று மறைந்து விடுகின்றன.

அப்பொழுதுதான் இந்தப் பூமியில் பரிசுத்த நிலைகள் பெருகி அதே சிந்தனை மக்களின் மத்தியிலும் தோன்றுகின்றது.

1.ஏனென்றால் உலக மக்கள் அனைவரும் ஓரினம்.
2.நாம் அனைவரும் கடவுளின் பிள்ளைகள்.
3.நாம் ஈசனின் இயக்கத்தால்தான் இயங்குகின்றோம்.
4.நம்மை இயக்கும் உயிரான ஈசனுக்கு மதத்தின் பெயராலோ இனத்தின் பெயராலோ
5.வெறுப்பையோ குரோதத்தையோ கொடுத்துவிடக் கூடாது.

ஆக… நமது உயிரான ஈசனுக்கு செய்யக் கூடிய கடமைகள் எதுவென்று உணர்ந்து நமது வாழ்க்கையில் நல்ல குணங்களைச் சுதந்திரமாக்க அருள் ஞானிகளின் உணர்வைக் கவசமாக மாற்றிட வேண்டும்.

அரசியல் மத இன மொழி பேதங்களால் விளைந்த தீய உணர்வுகள் இந்தப் பூமியில் படர்ந்து இருக்கின்றது. இவைகளில் இருந்து நாம் விடுபட்டு நமது நல்ல உணர்வுகளைச் சுதந்திரமாகச் செயல்படச் செய்ய வேண்டும்.

அவ்வாறு செயல்பட்டுத் தீமையற்ற உலகைப் படைப்போம். தீமையற்ற உலகத்தை முதலில் நம்மிடத்தில் உருவாக்க வேண்டும். இதைச் செய்தோமானால் பேருலகத்தையும் படைக்க முடியும்.

1.நாம் எதை எண்ணுகின்றோமோ அதைப் படைக்கும் திறன் பெற்றது நமது உயிர்.
2.ஆகவே உயிரை ஈசனாக மதித்து உணர்வுகள் அனைத்தையும் ஒளியின் சிகரமாக்குவோம்.

நம் முன் படர்ந்து கொண்டிருக்கும் தீய உணர்வுகள் நமக்குள் ஊடுருவ இடம் கொடுக்காது துருவ நட்சத்திரத்தின் துணை கொண்டு அதனைக் கடலுக்குத் துரத்தியடிக்க வேண்டும்.

ஏனென்றால் தீய உணர்வுகளை ஈர்ப்பதற்கு இடமில்லையென்றால் அது வேறு வழி இல்லாது இறுதியில் கடலின் ஈர்ப்பிற்குச் சென்று மறைந்துவிடும்.

1.இவ்வாறு இனி தீய உணர்வுகளுக்கு இங்கு இடமில்லை என்று செய்வோம்.
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை இவ்வுலகமெங்கும் படரச் செய்வோம்.
3.அனைவரிடத்திலும் பகைமையை நீக்குவோம்… மத இன மொழி அரசியல் பேதங்களை அகற்றுவோம்.
4.அனைவரும் ஒன்றுபட்டு வாழ எல்லா மகரிஷிகளின் அருளை வேண்டிப் பிரார்த்திப்போம்.
5.இவ்வுலகில் அமைதி படர்ந்து அனைவரும் “பிறவா நிலை எனும் நிலை”எய்த வேண்டும் என்று எண்ணி நாம் தவமிருப்போம்.

இதன் வழியில் மகரிஷிகளின் அருள் வழியைப் பின்பற்றிச் செயலாக்கி வரும் அனைவருக்கும் எமது ஆசீர்வாதங்கள்.

தண்டாயுதபாணி – கோவணாண்டியாகக் காட்டியதன் உண்மைத் தத்துவம்

தண்டாயுதபாணி – கோவணாண்டியாகக் காட்டியதன் உண்மைத் தத்துவம்

 

தண்டபாணி என்கிற போது இந்த உடலின் வாழ்க்கையின் நிலைகளை தண்டாயுதபாணி என்று சிலையில் “கோவணாண்டியாகக் காட்டினார்கள்…”

அதாவது மனித வாழ்க்கையில் வரும் ஆசை கோபம் வெறுப்பு இத்தகைய உணர்வின் தன்மை தனக்குள் எடுத்து இந்த உடலுக்குள் கொடுக்கப்படும் பொழுது “இரு… நான் உன்னைப் பார்க்கிறேன்…!” என்ற நிலை ஏற்படுகின்றது.

இந்த மாதிரி இன்னொரு உடலுக்குள் முற்றிடும் உணர்வை நம் உடலுக்குள் சுவாசிக்கக் கூடாது.
1.அதாவது, நமக்குள் எடுக்க வேண்டிய ஆயுதம் – “நிராயுதம்…”
2.இந்த “உடலுக்குள் உண்டான எண்ணங்களை…” (உடல் பெறும் உணர்வுகள்) எடுக்கக் கூடாது என்பதற்குத்தான்
3.தண்டாயுதபாணியாக… நிராயுதபாணியாக வைத்துள்ளார்கள்.
4.துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளியை எடுத்துச் சுவாசித்து நமக்குள் “ஊன்றுகோலாக…” வைக்க வேண்டும்.
5.அதன் வழியில் நமக்குள் வரும் தீமைகளைத் தடுத்துக் கொள்ள வேண்டும்
6.அதற்காகத் தான் இப்படி உருவகப்படுத்திக் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.

குறிப்பு:-
ஞானிகள் இப்படித் தெளிவாகக் காட்டியிருந்தாலும்…
1.”அவன் ஆண்டி..! நீ பார்க்காதே..” கோவணத்தோடு பார்த்தால் உனக்குச் சோறு கிடைக்காது…!
2.ஆண்டி வேஷம் போட்டிருக்கும் பொழுது பார்த்தால் தொழில் போய்விடும் என்று திசை திருப்பி விட்டார்கள்.

அதற்காக வேண்டி “இராஜவேஷம் எப்பொழுதோ…” அப்பொழுது மலைக்குப் போவார்கள். இது மாதிரியெல்லாம் நம்மை அறியாமலே “நமக்குள் ஆசையை வளர்த்துள்ளார்கள்…”

நாம் இன்று கடைப்பிடிக்கும் சாஸ்திர விதிகள் எப்படி வந்தது…?

நாம் இன்று கடைப்பிடிக்கும் சாஸ்திர விதிகள் எப்படி வந்தது…?

 

மதங்களின் அடிப்படையில் எடுத்துக் கொண்டால்… ஒவ்வொருவரும் எதை அடிப்படையாக வைத்து
1.இதுதான் கடவுள் என்ற நிலைகளில் சட்டங்களை வகுத்துப் பதிவு செய்து கொள்ளும் பொழுது
2.அந்த எண்ணத்திற்கு மாறி நடந்தால் “அது தெய்வ நிந்தனை…” என்ற நிலைகளில் கொண்டு போய் விடுகின்றார்கள்.

மதங்கள் தனக்குள் ஒழுக்கத்தை ஏற்படுத்துவதற்குத் தான் இந்த நிலைகளைச் செய்தார்கள். அன்றைய அரசர்கள் தான் வாழ்வதற்காகச் செய்து கொண்ட முறைகள் தான் இவை.

அரச காலங்களிலே ஒவ்வொரு கூட்டமும் பிரிவாக அது வளரும். இன்று போக்குவரத்து வசதிகள் மிகவும் சுலபமாக இருக்கின்றது. ஆனால் அன்று இந்த வசதிகள் கிடையாது.

அரசன் “ஒரு குலதெய்வத்தை ஏற்படுத்தி” அதன்படி சட்ட நியதிகளை ஏற்படுத்தி இருந்தால் அரசனுக்குக் கீழ் மக்கள் கட்டுப்பட்டு அதை ஏற்றுக் கொள்கின்றோம்.

சந்தர்ப்பத்தால் அரசர்களுக்குள் போர் முறை வரும் பொழுது அங்கே போர்களுக்கு நம்மை அழைத்துச் செல்கின்றார்கள்.

போர் வெகு தொலைவில் நடக்கின்றது என்று வைத்துக் கொள்வோம். அங்கே சென்ற பின் அதிலே “நமது இனம் நமது குலம்…” என்று காட்டிக் கொள்வதற்காக உள் பிரிவுகளில் சிலதுகளை ஏற்படுத்திக் கொள்வார்கள்… ஒரு சாஸ்திர விதி…!

முதலில் போருக்குச் செல்லும் போது குடும்பத்தில் தன் குழந்தை சிறிதாக இருக்கின்றது. ஆனால் வெகு நாட்கள் ஆனபின் தனது பையன் தானா என்று நமக்கே அடையாளம் தெரியாமல் போய்விடும். அப்பொழுது அதற்கு வேண்டிய நிலைகளைச் சொல்ல வேண்டி வரும்.

போர் நடக்கும் இடங்களில் அதைத் தெரிந்து கொள்ள முடியாது.
1.நம் இனம் நம் குலம் என்று அதைத் தெரிந்து கொள்வதற்காக வேண்டி உணவாக உட்கொள்ளும் உணவுகளில்
2.காய்கறிகளில் ஏதாவது ஒன்றை… மறைமுகமாக இது நமக்கு ஆகாது என்று ஒதுக்கி வைத்து விடுவார்கள்.
3.அந்தக் காயைச் சாப்பிட்டால் வயிற்றுக்கு அஜீரணமாகும்… வயிற்றால் போய்விடும் என்று சொல்லிவிடுவார்கள்.
4.அதனால் அதைச் சாப்பிட மாட்டார்கள்…. ஒதுக்கி விடுவார்கள்.

இது மாதிரிப் பழக்கங்களை ஏற்படுத்திவிடுகின்றார்கள்.

வெகு தூரத்துக்குச் சென்று போரில் ஈடுபடும் போது அது முடிந்து தன் நாடு திரும்புவதற்குக் காலமாகின்றது. தன் குழந்தைகள் வளர்ச்சி ஆகிவிடுகின்றது.

நாடு திரும்பும் பொழுது தன் இனத்தைக் கண்டு கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் அத்தகைய சாஸ்திர விதியை உருவாக்கினார்கள்.

உதாரணமாக வெண்டைக்காயை ஒதுக்கி வைக்கின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம். எங்கேயாவது விருந்து வைக்கப்படும் பொழுது அந்த விருந்திலே இந்தக் காயை அவர்கள் ஒதுக்குவார்கள்.

அந்தக் காயை ஒதுக்கும் போது தான்… ஓஹோ…! நம் இனம் என்று தெரிந்து துப்பு விசாரிப்பார்கள். அவர்களுக்குள் சாஸ்திர விதிப்படி என்னென்ன செய்வீர்கள்…? என்று கேட்பார்கள்.

நாங்கள் இன்னென்ன முறைப்படி செய்வோம் என்று சொன்ன பின் அதைக் கேட்டுத் தெரிந்து கொண்ட பின் “இது நம் ஆள்…” என்று கண்டு கொள்வார்கள்.

இதற்காக வேண்டித்தான் சாஸ்திர விதிகளை அன்றைய அரசர்கள் உருவாக்கினார்கள்.

அதாவது அரசனுடைய ஆணைப்படி குலதெய்வம் என்று ஒன்றை அடிப்படையாக வைத்து… அந்த வழிகளில் சென்று ஒருவருக்கொருவர் இனம் கொண்டுள்ளக் கூடிய நிலைக்கு வைத்தார்கள்.
1.என் குலத்திற்கு இன்ன காய்… கத்திரிக்காயோ வெண்டைக்காயோ ஆகாது
2.எங்கள் குலதெய்வத்திற்கு இது ஆகாது என்றும் சொல்லிவிடுவார்கள்.

ஏனென்றால் அப்படி இந்தக் காய்கள் ஆகாது என்று தெரியப்படும் பொழுது தன் இனம் என்பதைக் கண்டு கொள்வதற்காகச் சில வித்தியாசமான நிலைகளை செய்து உருவாக்கி வைத்துக் கொள்கின்றார்கள்.

1.அன்றைய அரசர்கள் வகுத்த வழிப்படித் தான் இன்றும் நாம் சாஸ்திர விதிகளைக் கடைப்பிடித்துக் கொண்டுள்ளோம்.
2.ஞானிகள் காட்டிய வழியில் நாம் செல்லவில்லை.

ஆனால் இந்த உண்மைகளை எல்லாம் குருநாதர் உணர்த்தியதால் உங்களுக்கும் இதை இப்பொழுது தெரியப்படுத்துகின்றோம்.

தூப ஸ்தூபி

தூப ஸ்தூபி

 

மாரியம்மன் கோயிலைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் திரும்பும் பக்கமெல்லாம் ஊருக்குள் வைத்திருப்பார்கள்.

நாம் நல்லதைத்தான் ஒவ்வொரு நிலையிலும் நினைக்கின்றோம். ஆனால் நம்மை அறியாமலே வேதனைகள் புகுந்து விடுகின்றது. அந்த விஷமான உணர்வுகள் வந்து நோயாகி விடுகின்றது.

அதை நீக்குவதற்காக வேண்டி… மெய் ஞானிகள் அருள் ஒளியைப் பெற வேண்டும் என்று மாரியம்மனைப் பார்த்து அதை எடுக்கும்படி சொல்கின்றார்கள். அதாவது…
1.பேரண்டத்தின் பேருண்மையைக் காட்டிய…
2.தீயதைச் சுட்டெரித்து ஒளியின் சுடராகச் சுழன்று கொண்டிருக்கும்
3.அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் நாம் பெற வேண்டும் என்று நினைவுபடுத்தினார்கள்.

நமக்கு யாரும் இதைச் சொல்லிக் கொடுக்கவில்லை. ஆனால் இப்பொழுது யாம் சொன்னாலும் கேட்பதற்கு ஆள் இல்லை

மாரியம்மனுக்கு ஆட்டைக் கொடுத்து கோழியைக் கொடுத்து கருவாட்டுக் கறியை வைத்து வணங்குபவர் உண்டு. எந்தெந்த அசிங்கமான பொருளைச் சாப்பிடக் கூடாதோ ஒரு சில இடங்களில் இதையும் செய்கின்றார்கள்

கெட்டுப் போன பொருளை உபயோகப்படுத்தினால் என்ன செய்யும்…?

அது நம்மைக் கருவாடாக வாட்டிவிடும்… கெட்ட நாற்றங்களை நமக்குள் உருவாக்குகின்றது. கெட்ட பேச்சுகளைப் பேச வைக்கிறது… கெட்ட உணர்வுகளை நமக்குள் தூண்டுகின்றது. நம்மை அறியாமலே அந்த தீமைகள் நம் நல்லவைகளை அழித்து விடுகின்றது.

அதைச் சுட்டுப் பொசுக்க… மெய் ஞானிகள் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்று
1.அங்கே தூப ஸ்தூபியை வைத்துக் கவட்டையை வைத்து அக்கினிச் சட்டியைக் காண்பித்து
2.திறந்த வெளியிலே விண்ணை நோக்கி ஏங்கி அந்த அருள் சக்தியைப் பெற வேண்டும் என்று காட்டுகின்றார்கள்.

யாராவது அப்படிச் செய்கின்றார்களா…?

காரணம்… அந்த நல்ல வினையை நாம் சேர்க்க வேண்டும். அதாவது தனக்குள் வரும் தீமையான வினைகளைச் சுட்டுப் பொசுக்கும் அந்த நல்ல வினைகளை நமக்குள் சேர்ப்பிக்க வேண்டும் என்று காட்டுகின்றார்கள்.

இனி எதிர்காலத்திற்காக வேண்டி இதை நீங்கள் செயல்படுத்துங்கள். ஆலயம் என்பது நம்மைப் பண்படுத்தும் இடம் அது.

அங்கே அர்ச்சனை செய்து நல்ல பலகாரங்களை வைத்து யாகத் தீயில் பல பொருள்களைப் போட்டு புகையைப் போட்டு வாழ்க்கையில் வரும் துன்பங்களையும் குறைகளையும் சொல்வதற்குண்டான இடம் அது அல்ல.

1.நமது உயிர் ஒரு நெருப்பு நமது உடல் ஒரு குண்டம்.
2.இந்தக் குண்டத்திற்குள்… மெய்ப் பொருளைத் தனக்குள் போட்டு
3.அதன் வழி இந்த உடலுக்குள் வரக்கூடிய மணத்தைப் பார்வையாலும் சொல்லாலும் செயலாலும்
4.உலகம் முழுவதற்கும் தன் உணர்வின் சக்தி கொண்டு மக்களை மகிழ்விக்கும் செயலை உருவாக்குவது தான் இந்த யாகக் குண்டம்.

ஆகவே… அந்த ஞானி காட்டிய வழியில் அக்கினியை மூட்டுங்கள். அந்த அக்கினியை மூட்டிக் கொண்டிருப்பது “ஓங்காரம்…”

கண்ணின் நினைவைப் புருவ மத்தியிலே உயிரிலே செருகப்பட்டு “ஓ…..ம் என்ற உணர்வின் தன்மை கொண்டு தீமையான உணர்வுகளைத் தடுத்து விட்டு…” மெய் ஒளியான அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று உடலுக்குள் செலுத்த வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறச் செய்வதற்கும் வாழ்க்கையில் அறியாது தத்தளித்துக் கொண்டிருக்கக் கூடிய நிலையில் “நல்ல உணர்வுகளை மீண்டும் செம்மையான நிலைகள் செயல்படுத்துவதற்கே…” இந்த உபதேசம்.

உங்களை நீங்கள் நம்புங்கள்…!

1.இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கமும்…
2.பிரபஞ்சத்திற்குள் உருபெற்ற சப்தரிஷி மண்டலங்களின் உணர்வின் எண்ண அலைகளையும் உங்களுக்குள் கலவையாகச் சேர்த்து
3.சப்தரிஷிகள் அருள் ஒளி இங்கே படர்ந்து கொண்டிருப்பதை
4/நீங்கள் நினைத்தவுடன் எடுக்கும் நிலைகளுக்குத் தான் உபதேசிக்கின்றோம்.

சாதாரண மனிதருடன் நாம் கலந்து உறவாடும் போது… பத்து வருடத்திற்கு முன் ஒருவன் துன்பம் செய்தான் என்று இருந்தாலும் திடீரென்று அதை இப்பொழுது நாம் எண்ணினால் நம் மனதை அது துடிக்கச் செய்கின்றது.

அன்றைய தினம் நாம் செய்யக்கூடிய காரியங்களைத் தடைப்படுத்துகின்றது. உணவையும் அஜீரணமாக்கி நஞ்சாக ஆக்குகின்றது.

அதைப் போல ஒவ்வொரு நிமிடமும் துன்பங்கள் நேரும் பொழுதெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் அந்த அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணுங்கள்.

1.துன்பத்தை விளைய வைக்கும் தீமைகளை அது கருக்கிவிட்டு
2.நல்ல உணர்வின் தன்மையை ஊட்டுவதற்குத் தான் மீண்டும் மீண்டும் இதை ஞாபகப்படுத்துகின்றோம்.
3.உங்கள் நல்ல குணங்களுக்குள் அந்த மகரிஷிகளின் உணர்வுகளைத் திரும்பத் திரும்ப இணையச் செய்கின்றோம்.

வள்ளி திருமணத்தில் உள்ள முக்கியமான தத்துவம்

வள்ளி திருமணத்தில் உள்ள முக்கியமான தத்துவம்

 

சாதாரண மக்களும் புரிந்து கொள்வதற்காகச் சாஸ்திரங்களிலே “வள்ளி திருமணத்தைக் காட்டுகிறார்கள்…”

வள்ளி திணைக் காட்டினைக் காவல் காத்துக் கொண்டிருக்கிறாள். தான் விளைய வைத்த பொருளை பறவைகள் கொத்தித் திங்காதபடி பாதுகாப்புக்காகக் காவல் புரிகின்றாள்.

அவள் யார்…? வேடுவனின் மகள்.
1.நாம் பல கோடிச் சரீரங்களில் வேட்டையாடி… அதில் விளைந்த சக்தி தான் மனித உடலிலிருந்து வெளிப்படக்கூடிய சக்தி வள்ளி
2.வல்லவன்… வல்லவி – வல்லி என்று பெண்பாலைக் காட்டுகின்றார்கள் வள்ளி என்று.

அதைத் தனித்துப் பிரித்துக் காட்டி வள்ளி திருமணம் என்ற காவியமாகப் படைத்து “எது தன்னுடன் இணைந்து செயல்பட வேண்டும்…?” என்ற நிலையைத் தெளிவாகக் காட்டுகின்றார்கள்.

நாம் நினைப்பது அது காவியம் என்று…! ஆனால் சாதாரண மக்களுக்கும் புரியும் தன்மைக்குத் தான் அதைக் காட்டுகின்றார்கள்.

வேடுவன் என்றால் பல கோடிச் சரீரங்களில் நாம் வேட்டையாடி அதிலே விளைந்த சக்தி தான் உடலில் உருப் பெற்ற ஆறாவது அறிவு. அது தான் வள்ளி.

திணைக்காட்டிலே காவல் இருக்கின்றது. தான் விளைய வைத்த பொருளை மற்ற உயிரினங்கள் எடுத்துச் செல்லாது பாதுகாக்கின்றது. வெகு தூரத்திலிருந்து கவண் கொண்டு வீசுகின்றது.

நமக்குள் இருக்கும் இந்தப் பாதுகாக்கும் நிலை வள்ளி.
1.அந்த வள்ளியை முருகன் காதலிக்கின்றான்…
2.அதாவது ஆறாவது அறிவின் தன்மை கொண்டு வலிமைமிக்க சக்தியைத் தனக்குள் நேசிக்க வேண்டும்.

ஆறாவது அறிவு கொண்டு உடல் பெற்றவன் முருகு. நாம் மாற்றியமைக்கும் உடல் பெற்றவர்கள். அதைத் தான் முருகன் என்றும்
1.தன்னைப் பாதுகாக்கும் அந்தச் சக்தியை நீ நேசிக்க வேண்டும் என்று காவியப் படைப்பு வருகின்றது.
2.தன்னைப் பாதுகாக்கும் உணர்வை நேசித்தோம் என்றால் வாழ்க்கையில் வரும் தீமைகளிலிருந்து நாம் விடுபட முடியும்.

திணைக்காட்டில் குருவியை விட்டு விட்டோம் என்றால் அதிலே விளைவதைத் தின்றுவிடும். அது போல் நம்மை ஏசுவோரையோ மற்றவர்களையோ நாம் எண்ணுகிறோம் என்றால் அந்த உணர்வுகள் நம்முடைய நல்ல உணர்வைத் தின்றுவிடும்.

நாம் வேதனைப்படும்படியான சொல்லை ஒருவன் சொல்லிவிட்டால் அந்த உணர்வின் சத்து நமக்குள் வந்து… நம்மிடம் இருக்கும் நல்ல குணங்களை நல்ல அணுக்களை அது தின்றுவிடும்.

வேதனை என்று எடுத்துக் கொண்டால் உடலில் டி.பி.நோய் வருகின்றது நல்ல அணுக்களை அது தின்று விடுகிறது.

அதனால் தான் வள்ளி…!
1.நம்மைப் பாதுகாக்கும் உணர்வினை நாம் நேசித்தால் உடலுக்குள் சென்ற பின்… உயிர் அதைத் தெய்வ ஆணையாக
2.நமக்குள் அந்தக் காத்திடும் உணர்வின் செயலாக இந்த உடலை இயக்குகின்றது… அது தான் தெய்வானை.

இச்சா சக்தி…! தன்னைப் பாதுகாக்கும் நிலைகளை இச்சைப்படும் பொழுது இந்த உணர்வு நம் உடலுக்குள் சென்று கிரியை. எதன் எண்ணத்தால் நாம் இச்சைப்படுகின்றோமோ அதன் ஞானமாக இந்த உடலை இயக்கும்.

இச்சா சக்தி கிரியா சக்தி ஞான சக்தி என்று தெளிவாக நமக்குச் சாஸ்திரங்கள் காட்டுகின்றது.

என்னை இப்படிப் பேசி விட்டானே என்னைக் கேவலப்படுத்துகின்றானே என்ற நிலையில் அதை நாம் இச்சை பட்டால் அவனை விடுவேனா என்ற நிலைகள் அதைக் கூட்டும் பொழுது உடலுக்குள் இது தெய்வ ஆணையாகச் சென்று விடுகின்றது.

அவன் எந்தெந்தக் கெடுதல் செய்தானோ அது நமக்குள் புகுந்து அதன் வழி நம்மை இயக்குகின்றது அதன் ஞானமாக நம் செயலும் உணர்வும் அணுக்களும் உடல் உறுப்புகளும் விளைகின்றது.

நாம் வள்ளி திருமணத்தைச் சாதாரணமாகப் பார்த்துச் சிரிப்பதிலும் கைதட்டுவதிலும் தான் இருக்கின்றோமே தவிர சாதாரண மக்களும் உள்பொருளைப் புரிந்து வாழ்க்கையில் நீ எவ்வாறு வாழ வேண்டும்…? என்ற உண்மையைக் காட்டக்கூடிய காவியத் தொகுப்பு தான் அது.

ஆகவே நாம் எதை இச்சைப்பட வேண்டும்…?

1.ஆறாவது அறிவின் வலிமையால் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று இச்சை அது மேலே பட வேண்டும்.
2.அந்த உணர்வின் சக்தி நமக்குள் இருக்கும் பொழுது தெய்வ ஆணையாக நமக்குள் செயல்படும் சக்தியாக வரும்
3.அதன் ஞானமாக அந்த உணர்வுகள் இந்த உடலில் இயக்கப்பட்டு அந்தப் பண்பு கொண்ட நம்மை அந்த வழியிலே அது அழைத்துச் செல்லும்.

இச்சா சக்தி கிரியா சக்தி ஞான சக்தி…! சொல் அது மூன்று தான் ஆனால் எதன் மேல் இச்சைப்படுகின்றோமோ அதன் செயலாகக் கிரியை ஆகி அதன் ஞானமாக நம்மை வளர்க்கும் என்ற பொதுச் சொல்லாகக் காட்டினார்கள்.

ஆகவே… எதிலேயும்… நாம் எதை இச்சைப்பட வேண்டும்…? என்ற தத்துவம் அங்கே கொடுக்கப்பட்டுள்ளது. தன்னைக் காக்கும் வழிமுறை எது…? என்று அன்று ஞானிகள் சொன்னார்கள்.

ஆலயத்திற்கு சென்று நம் குறைகளையும் துன்பங்களையும் வேதனைகளையும் அங்கே சொல்லி அதை வளர்க்கக்கூடாது.

ஆறாவது அறிவின் துணை கொண்டு… இந்த ஆலயத்திற்கு வருவோர் அனைவரும் மகரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும்… அந்த அருள் ஞானம் பெற வேண்டும் என்று தான் நாம் எண்ண வேண்டும்.

யாகத்தைச் செய்… கண ஹோமம் செய்…! என்று சொல்கின்றார்கள்… கண ஹோமம் என்றால் என்ன…?

யாகத்தைச் செய்… கண ஹோமம் செய்…! என்று சொல்கின்றார்கள்… கண ஹோமம் என்றால் என்ன…?

 

நாம் எண்ணக்கூடிய எண்ணங்கள் எல்லாம் உயிரிலே படுகின்றது. இதற்குப் பெயர் அபிஷேகம். பொருள்களை நெருப்பிலே போட்டு எரிக்கின்றோம் இது யாகம்.

கனிகள் மற்றவைகளை எல்லாம் ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்து சந்தனத்தையும் பன்னீரையும் ஊற்றுவார்கள்.
1.சந்தனத்தைப் போல் மணம் நாங்கள் பெற வேண்டும்
2.கனியைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் நாங்கள் பெற வேண்டும்
3.பன்னீரைப் போன்று எனக்குள் நறுமணங்கள் பெற வேண்டும்
4.என் சொல்லுக்குள் இனிமை பெற வேண்டும் என்று இப்படி எண்ணினால் இது அபிஷேகம்.

ஆனால் அந்தப் பொருள்களை எல்லாம் எடுத்து யாகக் குண்டத்திலே நெருப்பிலே போட்டால் “கண ஹோமம்…!” அப்படி என்றால் அதற்கு என்ன அர்த்தம்…? என்று வேண்டுமல்லவா…!

யாரையும் நான் தவறாகச் சொல்ல வரவில்லை. காலத்தால் மாற்றப்பட்ட நிலைகள் தான் இவையெல்லாம். நம்மை அறியாமலே நம்மை அழித்துக் கொண்டிருக்கும் இதைப் போன்ற நிலையிலிருந்து விடுபட வேண்டும்.

காரணம்
1.யாகக் குண்டம் என்றால் நம் உயிர் ஒரு நெருப்பு… இது ஒரு குண்டம்.
2.நாம் எந்த மெய்ஞானியின் உணர்வை உயிரிலே போடுகின்றோமோ அது அபிஷேகம் ஆகின்றது.
3.அதில் இருக்கக்கூடிய வெப்பத் தணல்கள் ஆவியாக அலையாக உடலுக்குள் மாறி
4.ஒவ்வொரு அணுவிலும் இணைந்து நறுமணமாக வீசச் செய்கின்றது. இதுதான் கண ஹோமம் என்பது… கணபதி ஹோமம்..!

எத்தனையோ பொருள்கள் பால் தயிர் மற்ற கனிவர்க்கங்கள் அதை எல்லாம் தீயிலே போட்டு எரித்து… கடைசியில் நெய்யை ஊற்றி இப்படித்தான் காசைக் கொடுத்து யாகம் நடத்துகின்றோம்.

அப்போது நல்லதை எண்ணுகின்றோமா…? நல்லதை எண்ணி எடுத்து நமக்குள் சேர்க்கின்றோமா…?

அந்த உயர்ந்த சக்தியை உயிரான யாகக் குண்டத்திலே போட்டு அந்தச் சத்தின் தன்மை உயர்ந்த உணர்வின் தன்மையை உனக்குள் உருவாக்கு… இது தான் ஹோமம் என்பது. இப்படி யாரும் செய்வதில்லை.

1.கனியைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் நாங்கள் பெற வேண்டும் என்று யாராவது எண்ணி எடுக்கின்றார்களா…?
2.யாகத்தில் அமர்ந்து சொல்பவரும் நினைப்பதில்லை…! மற்றவர்களை அப்படி நினைக்க விடுவதுமில்லை.

ஜாதகக்காரன் சொன்ன குறிப்பை ஏற்றுக் கொண்டு அதற்குப் பரிகாரம் செய்வதற்காக இப்படிக் கண ஹோமம் செய்து விட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று காசுக்காகத் தான் செய்து கொண்டிருக்கின்றோம்.

கோயிலுக்குள் செல்லும் பொழுது விநாயகரை உற்றுப் பார்த்து அருள் ஞானிகள் உணர்வை நமக்குள் எடுத்துச் சுத்தப்படுத்திவிட்டு ஆலயத்திற்குள் சென்று
1.அங்கே சாத்தியிருக்கும் மலரை பார்த்து மலரைப் போன்ற மணம் பெற வேண்டும் மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும்
2.கனியைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் பெற வேண்டும்
3.அந்தச் சந்தனத்தைப் போல மணம் பெற வேண்டும் என்று நம் உயிரான நெருப்பிலே போட்டால்
4.அது கண ஹோமமாக மாறுகிறதா இல்லையா…? என்று நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்… மகிழ்ச்சியான உணர்வுகள் உங்களுக்குள் தோன்றும்.

கோவில் என்றால் அதன் தத்துவம் என்ன…? என்று சுருக்கமாகவும் காட்டுகின்றார்கள். சிறிய சிலையை வைத்து நமக்குள் உள் நின்று இயக்கும் உயிரைப் பற்றிய இயக்கத்தையும் காட்டியுள்ளார்கள்.
1.பெரிய தேரை வைத்திருக்கின்றார்கள்
2.அதிலே இந்தச் சிறிய சிலையை வைத்து… எல்லோரும் சேர்த்து வடம் பிடித்து இழுக்கும்படிக் காட்டுகின்றார்கள்.

ஆனால் அந்தத் தேரை ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசைக்கு இழுத்தால் என்ன ஆகும்…? தேர் எல்லை வந்து சேருமா…?

கோவிலில் இத்தகைய சிலையை வைத்து அங்கே செல்பவர்கள் எல்லாம் அந்தத் தெய்வ குணத்தைப் பெற வேண்டும் மலரைப் போன்ற மணம் பெற வேண்டும் கனியைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் பெற வேண்டும்
1.இந்தக் கோவிலுக்கு வருவோர் அனைவரும் நலமும் வளமும் பெற வேண்டும்
2.என் பேச்சும் மூச்சும் அனைவரையும் நலமாக்க வேண்டும்
3.நான் தொழில் செய்யும் இடங்களில் வாடிக்கையாளர்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்று
4.எல்லோரும் இப்படி போற்றக்கூடிய நிலையாக ஒன்று போல் இந்த ஆலயத்திற்கு வந்து சொல்லப்படும் பொழுது
5.இந்த உணர்வின் சக்தி அந்தக் கோவிலில் அலை அலையாக நல்ல குணங்களாகப் படர்கின்றது.

ஆனால் அதே சமயத்தில் என்னிடம் வெறுப்போ வேதனையோ இருக்கின்றது என்றால் இங்கே ஆலயத்திற்குள் வரப்படும் போது
1.எல்லோருக்கும் அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும்
2.எல்லோரும் நலமும் வளமும் பெற வேண்டும் என்று எண்ணப்படும் பொழுது
3.அந்த எல்லோருடைய வலுவான சக்தியால் அந்தத் தீமைகள் அகற்றப்படுகின்றது.

நாம் எல்லோரும் ஒன்று சேர்க்கப்படும் போது தான் தேரை எல்லை சேர்க்க முடிகின்றது. அதைப் போன்று நல்ல குணங்கள் கொண்டு எல்லோரும் ஒன்று சேர்ந்து… “அனைவருக்கும் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும்…” என்று எல்லோருடைய ஆசியும் பெற்று… ஒன்று சேர்ப்பதற்குக் கோயிலை வைத்தார்கள் ஞானிகள்.

அவ்வளவு பெரிய தேரை இழுப்பதையும் சுட்டிக் காட்டுகின்றார்கள். ஆனால் தேரை இழுக்கின்றோம். ஞானிகள் நமக்கு உணர்த்திய இந்த உண்மைகளை யாராவது நினைக்கின்றோமா…? அனைவரும் ஒன்று சேர்ந்து வாழ்வதற்காக உருவாக்கப்பட்ட நிலைகளைச் செயல்படுத்துகின்றோமா…?

காரணம்… ஒரு சிறிய சிலையைத் தான் அவ்வளவு பெரிய தேரில் வைத்து எல்லோரும் ஒன்று சேர்ந்து ஒரே எண்ணத்தில் இழுக்கும்படிக் காட்டுகின்றார்கள். அந்தத் தேரை வைத்து இழுப்பதன் தத்துவத்தைப் புரிந்து கொண்டோமா…?

அந்தக் கடினமான தேரை அனைவரும் ஒன்று சேர்ந்து எப்படி இழுக்கின்றோமோ அதைப் போன்று அந்த அருள் ஞானிகளின் வாய்ந்த உணர்வுகளை எல்லோரும் சேர்த்து எண்ணி எடுக்க வேண்டும்.

1.எல்லோருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும்
2.எல்லோருடைய உடல்களிலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்
3.இந்தத் தெய்வ நிலைகள் அனைவரும் பெற வேண்டும்.
4.இந்த ஆலயம் வருவோர் அனைவரும் நலமும் வளமும் பெற வேண்டும் என்று அனைவரையும் எண்ணும்படி
5.இதையெல்லாம் ஆலயத்திலே புறத்திலே துவைதமாகக் காட்டி
6.அகத்திற்குள்… ஒவ்வொருவருக்குள்ளும் சேர்க்கப்பட வேண்டிய உயர்ந்த உணர்வுகளை ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

மாரி

மாரி

 

நமது சகஜ வாழ்க்கையில் பண்பும் பரிவும் அன்பும் பாசமும் கொண்டு நாம் வாழ்ந்து வந்தாலும் ஒருவர் நோயுடன் வேதனைப்படுகிறார் என்றால் அதைக் கண்ணுற்றுப் பார்த்து அதை நுகர்ந்து உணர்ந்து அவருக்கு நாம் உதவி செய்கின்றோம்.

அவ்வாறு உதவி செய்யப்படும் பொழுது…
1.அவர் உடலில் இருந்து விளைந்த நோயை நாமும் நுகர்ந்தறிவதனால் அதே உணர்வின் சக்தி நமக்குள் அது பெருகத் தொடங்கி விடுகின்றது.
2.அது மாறி (மாரி) நமக்குள் தாயாக வந்து விடுகின்றது.

நாம் அடிக்கடி அந்த நண்பனை (நோயாளியை) எண்ணும் பொழுது நமக்குள் அந்த உணர்வின் வளர்ச்சி ஏற்பட்டு நமக்குள்ளும் அதே நோய் உருவாகும் சக்தியாக வந்து விடுகின்றது.

அது தான் மாரியம்மாள்…!
1.ஏனென்றால் அவர் கசந்த வாழ்க்கை வாழ்ந்தார்
2.அவருடைய உணர்வை நுகரப்படும் பொழுது நம் வாழ்க்கையையும் கசந்த வாழ்க்கையாக உருவாக்கி விடுகின்றது.
3.ஆகையினால் தான் மாரியம்மன் கோவிலில் “வேப்ப மரத்தை” ஸ்தல விருட்சமாக வைத்திருப்பார்கள்.

கசந்த வாழ்க்கையில் இருந்து நாம் மீள வேண்டுமென்றால் நோயாளியைப் பார்த்தபின் அடுத்த கணமே துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று அந்த அருள் ஒளியின் உணர்வை உடலுக்குள் செலுத்தி அந்தத் தீமையான உணர்வுகளைக் கருக்கிடல் வேண்டும்.

அந்த நோயாளிக்கும் மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும். அந்த உடல் முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படர்ந்து நோயிலிருந்து அவர் விடுபட வேண்டும் என்ற உணர்வை நாம் பாய்ச்சுதல் வேண்டும்.

இது போன்று
1.நமக்குள் எத்தனையோ வகையான உணர்வுகளை கேட்டறிகின்றோம்.
2.அதை நுகர்ந்த பின் அந்த உணர்வுகள் மாறி (மாரி) தீமைகள் நமக்குள் விளையாயாது தடுப்பதற்குத் தான்
3.மாரியம்மன் ஆலயத்தில் அக்னி குண்டத்தை வைத்திருப்பார்கள்.

பகைமையான உணர்வை நுகர்ந்தால் நமக்குள் அது தீமையாக விளைந்துவிடும். அதிலிருந்து நம்மை மீட்டுக் கொள்ள என்ன செய்ய வேண்டும்…? என்பதனை உணர்த்துவதற்குத் தான்
1.இந்த வாழ்க்கையில் தீமையோ துன்பங்களோ நோயோ அதையெல்லாம் கேட்டறியும் பொழுது
2.அந்த உணர்வுகள் நமக்குள் விளையாது தடுப்பதற்கு அன்றைய ஞானிகள் “துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாம் பெறும்படி செய்கின்றனர்…”

இதன் வழிப்படி ஒவ்வொரு நிமிடமும் வாழ்க்கையில் நாம் எவரைப் பார்த்தாலும் அந்தத் தீமையின் உணர்வு தனக்குள் வளராது தடுக்க அந்தப் பேரருள் பேரொளி என்ற உணர்வை உருவாக்குதல் வேண்டும்.

இல்லை என்றால் பிறருடைய தீய உணர்வுகள் அது மாறி(ரி) நமக்குள் நோயாக வருவதைத் தடுக்க முடியாது. ஆனால் தடுக்க வேண்டும் என்றால் மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் அந்த அருள் உணர்வுகளைப் பெருக்கினோம் என்றால் தீமைகளிலிருந்து விடுபடலாம்… நம்மையும் காத்திடலாம் என்று இந்தப் பொது விதிகளை அமைத்தனர்.

நம் சகஜ வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்ட நிலையில் நோய்களைப் பற்றியோ பகைமைகளைப் பற்றியோ கேட்டறியும் பொழுது நுகரப்படும் பொழுது அது வளர்ந்து விடுகின்றது.

பகைமை கொண்டால் அவரை அழிக்க வேண்டும் என்றும்… கொடூர நிலை கொண்டு கொலை செய்வதும் போன்ற கொடுமைகள் செய்யும் உணர்வுகளாக உருவாகி விடுகின்றது.

இத்தகைய தவறான நிலையில் இருந்து நாம் தப்ப வேண்டுமென்றால் மாரியம்மன் ஆலயத்திற்குள் வரப்படும் பொழுது அனைவரும் ஏகோபித்த நிலைகள் கொண்டு
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் சந்திப்போர் அனைவரது உடல்களிலும் படர வேண்டும்
2.எங்களை அறியாது சேர்ந்த பகைமை உணர்வுகள் மாற வேண்டும்
3.அருள் ஒளி எங்களுக்குள் பெருக வேண்டும்
4.நாங்கள் பார்ப்போர் அனைவரும் நலம் பெற வேண்டும் பேரின்பம் பெற வேண்டும் என்று அனைவரும் ஏகோபித்த நிலைகளில் செய்தால்
5.நாம் எடுத்துக் கொண்ட அருள் மகரிஷிகள் உணர்வுகள் நமக்குள் பெருகுகின்றது… நமக்குள் வந்த தீமைகளைப் பொசுக்குகின்றது.

அதற்குப் பின் இந்த ஊரும் உலகமும் உலக மக்களுக்கும் இந்த அருள் உணர்வுகள் கிடைக்க வேண்டும் என்று எண்ணி நாம் பரவச் செய்தல் வேண்டும்.

எங்கள் தெரு முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் எங்கள் ஊரில் படர்ந்துள்ள பகைமை உணர்வுகள் மாற வேண்டும்… சகோதர உணர்வுகள் வளர வேண்டும்… மெய்ப் பொருள் காணும் திறன் பெற வேண்டும்.

எங்கள் தெரு மக்கள் ஒற்றுமை உணர்வுடன் வாழ வேண்டும். மத பேதம் இல்லாது இன பேதம் இல்லாது மொழி பேதம் இல்லாது அரசியல் பேதம் இல்லாது வாழும் அந்தச் சகோதர உணர்வுகள் எங்கள் ஊர் முழுவதும் உலகம் முழுவதற்கும் படர வேண்டும் என்று அந்த அருள் மகரிஷிகள் உணர்வுகளை நமக்குள் சேர்த்து இந்த உணர்வின் எண்ண அலைகளைப் பரப்புவோம் என்றால்
1.நமக்குள்ளும் அந்த வளர்ச்சி பெறுகின்றது
2.பகைமை உணர்வை நீக்கிடும் ஞானமும் கிடைக்கின்றது
3.தன்னைக் காத்துக் கொள்ளும் வலிமையும் பெருகுகின்றது.
4.தன்னை அறியாது இயக்கும் தீமைகளிலிருந்து விடுபடுகின்றோம்.

பாலிலே பாதாமைப் போட்டால் அது நல்ல சத்தாக மாறுகின்றது. ஆனால் அதிலே ஒரு துளி விஷம் பட்டால் பாதாமினுடைய சக்தியை இழக்கச் செய்து விடுகின்றது.

இது போன்று… நல்ல குணங்கள் கொண்டு நாம் வாழ்ந்தாலும் பகைமை உணர்வுகள் உள்ளே புகுந்து விட்டால் அது தீமையான உணர்வின் அணுக்களாக விளைந்து விடுகின்றது.

அதை மாற்றுவதற்காக… ஏகோபித்த நிலைகள் கொண்டு சமுதாயத்தில் மக்கள் அனைவரும் அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கி அதைத் தனக்குள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதைக் கடைப்பிடிப்போர் அனைவரும்
1.அவர்தம் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த தீமைகளை அகற்றி
2.வாழ்க்கையில் பேரின்பம் பெரு வாழ்வு பெற எமது அருளாசி உங்களுக்கு எப்பொழுதும் உறுதுணையாக இருக்கும்.

குரு விஷ்ணு குரு பிரம்மா குரு சாட்சாத் மகேஸ்வரா

குரு விஷ்ணு குரு பிரம்மா குரு சாட்சாத் மகேஸ்வரா

 

ஒரு மனிதன் வேதனைப்படுகின்றான் என்று வைத்துக் கொள்வோம் அந்த வேதனையான உணர்வை நுகர்ந்தோம் என்றால் “உயிரான விஷ்ணு உள்ளே புக வரம் கொடுக்கின்றான்…”

ஆனால் உள்ளே சென்ற பின் வேதனைப்படுத்தும் அணுவாக உருவாகி விடுகின்றது. அந்த வேதனைப்படும் உணர்வின் உணர்ச்சிகள் உடல் முழுவதும் பரவப்படும் பொழுது
1.மனிதனை உருவாக்கிய அணுக்களுக்குள் அது கலந்து விடுகின்றது.
2.மனிதனை உருவாக்கிய அணுக்கள் தான் தேவாதி தேவர்கள் என்பது.

மனித உடலை உருவாக்கிய தேவர்கள் வேதனை என்ற உணர்வைக் கண்ட பின் “எங்களால் எதையும் செயல்படுத்த முடியவில்லை…” என்ற வேதனையுடன் சிவனிடம் வருகின்றனர்.

இந்திரலோகத்திற்குள் இரண்யன் புகுந்து எங்களுக்குத் தொல்லைகள் கொடுக்கின்றான் “எங்களைக் காப்பாற்றுங்கள்… காப்பாற்றுங்கள்…!” என்ற உணர்வின் ஒலிகளை எழுப்புகின்றார்கள்.
1.வேதனையான உணர்வுகளை நுகர்ந்தால்
2.முதலில் உடலிலே தான் அந்த வேதனை தெரிய வரும்.

மனித உடலை உருவாக்கிய அனைத்து நல்ல குணங்களும் தேவாதி தேவர்கள் என்று நாம் அறியும்படி காரணப்பெயர் வைத்து அழைக்கின்றார்கள்.

சிவனிடம் எல்லோரும் வந்து முறையிடும் பொழுது “நான் என்ன செய்வேன்…? வருவோர் அனைவரையும் வரவேற்பது தான் என்னுடைய செயல்…”

இவை அனைத்தும் விஷ்ணு வரம் கொடுத்து விட்டான். நாம் விஷ்ணுவிடம் கேட்போம் என்று எல்லா உணர்வுகளும் சேர்த்து உயிரான விஷ்ணுவிடம் வேண்டும்படி வருகின்றார்கள்.

விஷ்ணுவிடம் கேட்டாலோ “எனக்கு வரம் கொடுக்கத் தான் தெரியும்… பிரம்மன் அல்லவா உருவாக்குகின்றான்… அவனிடம் கேட்போம்…!” என்று அங்கே வருகின்றார்கள்.

பிரம்மாவோ என் தந்தை சொல்படி நான் உருவாக்கித் தான் ஆக வேண்டும்.
1.அப்படி உருவாக்கவில்லை என்றால் “உலகம் எப்படி உருவாகும்…?” என்று
2.நாம் எல்லாம் தெரிந்து கொள்வதற்கு காரணப்பெயர் வைத்து இவ்வாறு செயல்படுத்துகின்றார்கள்.

இருப்பினும் இதிலிருந்து விடுபட யாரிடம் கேட்பது…?

விஷ்ணுவும் பிரம்மாவும் சிவனும் மூன்று பேரும் சேர்ந்து இந்த உடலுக்குள் இருக்கும் தேவாதி தேவர்கள் மனித உடலை உருவாக்கிய அனைத்து உணர்வும் ஒன்று சேர்த்து யாரிடம் கேட்பது…? என்ற நிலைகளில் எண்ணி ஏங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

கண்கள் தோன்றிய பின்பு… அந்தக் கண்களால் தான் உற்றுப் பார்த்துப் பல தீமைகளை அகற்றி உணர்வினை ஒளியாக மாற்றி ஒளியின் சரீரமாக இன்றும் துருவ நட்சத்திரமாக இருப்பவன் துருவ மகரிஷி.

தீமைகளை எல்லாம் அகற்றி ஒளியாக மாற்றிக் கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வினைச் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து கொண்டால்
1.அது “ரிஷியின் மகன் நாரதன்… நாராயணனின் அபிமான புத்திரன் நாரதன்…!”
2.அவனிடம் கேட்டால் வழி கிடைக்கும் என்று நம் கண்கள் (கண்ணன்) உணர்த்துவதாகக் காட்டுகின்றார்கள்

வேதனையான உணர்வுகளை நுகர்கின்றோம்… நமக்குள் அந்த வேதனை வருகின்றது. இதை நீக்கிய அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளான்.

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வினை நுகர்ந்தால் வேதனை என்ற அந்த விஷத்தை நீக்க முடியும் என்று உணர்த்துகின்றார்கள்.

அதாவது…
1.கண்ணின் நினைவு கொண்டு துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்து நம் உடலுக்குள் அதைச் செலுத்தப்படும் பொழுது
2.வேதனையான உணர்வு வராது தடுக்கும்… நம்மைச் சிந்திக்கும்படி செய்யும்.

உடலுக்குள் வரும் வேதனையை அடக்கி எந்த வேதனையான உணர்வுகளை உற்று நோக்கிக் கவர்ந்தோமோ அவர்களுக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும் அவர்கள் உடல் நலம் பெற வேண்டும் என்று எண்ணினால் நமக்குள் அந்த வேதனைப்படும் அணுக்களை நல்ல அணுக்களாக மாற்றுகின்றது.

ஆகவே… வேதனையை அடக்கிடும் அருள் ஞானிகள் உணர்வை நாம் நுகர்ந்தால்
1.உயிரான விஷ்ணு வரம் கொடுக்கின்றான்.
2.உடலுக்குள் அது சென்று தீமையை வென்றிடும் பிரம்மனாகி விடுகின்றது.
3.தீமையை அகற்றிடும் உணர்வின் வலுவாகும் பொழுது சிவனான உடலுக்குள் மகிழ்ச்சி என்ற உணர்வுகளைத் தோற்றுவிக்கின்றது.

இதனைத் தெளிவாக்குவதற்குத் தான் குரு விஷ்ணு குரு பிரம்மா குரு சாட்சாத் மகேஸ்வரா என்று காட்டினார்கள்.

குரு விஷ்ணு நம் உயிர் எல்லாவற்றிற்கும் குருவாக இருக்கின்றது. குரு பிரம்மா நாம் எதையெல்லாம் எண்ணி எடுக்கின்றோமோ அந்த குணத்தின் தன்மைகள் குருவாக இயக்கும். குரு சாட்சாத் மகேஸ்வரா எல்லாவற்றையும் உருவாக்கும் அந்தச் சக்தி மனித உடலுக்குள் உண்டு என்பதை
1.மனிதனானவன் அவன் தன்னைத்தானே தான் வணங்கி தனக்குள் எவ்வாறு உயர்ந்த சக்திகளைப் பெற வேண்டும்…? என்று
2.குரு விஷ்ணு குரு பிரம்மா குரு சாட்சாத் மகேஸ்வரா என்று இதைத் தெளிவாக்கி நாம் தெரிந்து கொள்ளும் சக்தியாக வெளிப்படுத்தி உள்ளார்கள்.

இதன் வழி உங்கள் வாழ்க்கையில் “உங்களை நீங்கள் அறிந்து” மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வளர்ந்து… தீமைகளை அகற்றி மெய்ப்பொருள் காணும் திறன் பெற எமது அருளாசிகள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

“அபிஷேகத்தின் தத்துவம்” சாதாரணமானதல்ல

“அபிஷேகத்தின் தத்துவம்” சாதாரணமானதல்ல

 

கோவிலில் தெய்வச் சிலையை அலங்காரம் செய்வதற்கு முன்னாடி அபிஷேகம் செய்கின்றார்கள். சிலை மீது பாலை ஊற்றுகின்றார்கள் சந்தனத்தை ஊற்றுகின்றார்கள் கனி வர்க்கங்களைக் கரைத்து ஊற்றுகின்றார்கள் கடைசியில் நன்னீரை விட்டுக் கழுவுகின்றார்… அப்புறம் பன்னீரை ஊற்றுகின்றார்கள்.

சிலைக்கு எதற்காக இதைச் செய்கின்றார்கள்…? ஆனால் அப்போது நாம் என்ன செய்கின்றோம்…?

இங்கே வீட்டிலே கோரிக்கை வைக்கின்றோம். எப்படி…?

என் பிள்ளை சொன்னபடி கேட்கவில்லை என்று பாலாபிஷேகம் செய்யப் போகிறோம். விவசாயம் சரியாக வரவில்லை… என்னிடம் வாங்கிச் சென்றவன் பணத்தைத் திரும்பத் தரவில்லை என்று அதற்காக வேண்டி ஆண்டவனுக்குப் பஞ்சாமிர்தத்தை ஊற்றி அபிஷேகம் செய்து… குறைகளை எல்லாம் அங்கே சொன்னால் “அவன் பார்த்துக் கொள்வான்” என்று அவனை (தெய்வத்தை) திருப்திப்படுத்துவதற்காகச் செயல்படுத்துகின்றோம்

இருந்தாலும்… இந்தத் தெய்வம் நல்லதைச் செய்யும் என்று தான் சிலையாக அங்கே வடிக்கப்பட்டுள்ளது. அந்தச் சிலை மீது தான் இத்தனையும் ஊற்றுகின்றார்கள்… பார்க்கின்றோம். ஏன்…?
1.ஊற்றுவது பால் என்று தெரிகிறது… பாலைப் போன்ற மனம் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா.
2.மகிழ்ந்து வாழும் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
3.என் பையனுக்குத் தீமையை நீக்கிடும் பாலைப் போன்ற அந்தத் தெளிந்த மனம் பெற வேண்டும்.
4.கணவன் மனைவிக்குள் சில குறைபாடுகள் இருக்கும். என் கணவருக்குப் பாலை போன்ற தெளிந்த மனம் பெற வேண்டும்.
5.அவர் சொல்லிலே இனிமை வர வேண்டும். சந்தனத்தைப் போன்ற நல்ல நறுமணம் பெற வேண்டும் என் கணவருக்கு.
6.இந்த ஆலயம் வருவோர் குடும்பங்கள் அனைவருக்கும் அந்தப் பாலை போன்ற மனம் பெற வேண்டும் என்று
7.பாலாபிஷேகம் செய்யும் பொழுது யாராவது இப்படி நினைக்கின்றீர்களா…?

ஏனென்றால் அப்படிச் சுவாசித்தால் நம் உயிருக்கு அந்த அபிஷேகம் நடக்கின்றது. இந்த உணர்வுகள் இரத்தத்திலே கலந்து அமுதாக… உடலை உருவாக்கிய அணுக்களுக்கு ஆகாரமாக அது கிடைக்கின்றது. நல்ல வீரிய சக்தியாகக் கிடைக்கின்றது.

1.கண்களிலே பார்ப்பது துவைதம்.
2.அதிலிருந்து வரக்கூடிய மணத்தை நுகர்ந்தால் அத்வைதம்.
3.நுகர்ந்து உயிரிலே பட்டால் விசிஷ்டாத்வைதம்.

நாம் எந்த மகிழ்ச்சி பெற வேண்டும் என்று எண்ணினோமோ அந்த உணர்வுகள் இயக்கப்பட்டு ஆகாரத்துடன் சேர்த்து உடலாக மாறுகின்றது. உயர்ந்த குணங்களை உனக்குள் உருவாக்கு… “துவைதம் உடல்…”

தெரியாத மக்களுக்குத் தெரிய வைக்க… “சூட்சுமத்தில் நடக்கும் உண்மைகளை” உருவம் அமைத்து அந்த உணர்வின் சக்தியை நாம் பெறுவதற்கு ஞானிகள் அதை உருவாக்கிக் கொடுத்துள்ளார்கள்.

யாராவது கொஞ்ச நேரம் இவ்வாறு எண்ணி எடுக்கின்றோமா…? நன்றாக யோசனை செய்து பாருங்கள்.

என் கணவருக்குப் பாலை போலச் சந்தனத்தைப் போல பன்னீரைப் போன்ற தெளிந்த மணம் பெற வேண்டும். எனக்கும் அந்த தெளிந்த மணம் பெற வேண்டும். கணவன் மனைவிக்கும் மனைவி கணவனுக்கும் இப்படி எண்ணி எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இந்த மணம் கிடைக்க வேண்டும் என்று இப்படித்தான் எண்ணி எடுக்கும்படி… ஆபிஷேகிக்கும்படிச் சொல்லி உள்ளார்கள்.

யாருக்கு…? “நம் உயிருக்கு…!”

அதற்குத்தான் இந்தத் தெய்வம் நல்லது செய்யும் என்று காட்டியுள்ளார்கள். காரணப் பெயரை வைத்துச் சிலையை வைத்து ஊற்றும் பொழுது அந்தச் சக்தி நாங்கள் பெற வேண்டும் எண்ணி ஏங்குவதற்குத் தான் நறுமணமானதை அங்கே ஊற்றினார்களே தவிர… ஊற்றி முடித்த பின் அந்தத் தீர்த்தத்தைப் பிடித்துச் சென்று குடிப்பதற்கு அல்ல… அதை பிடித்து நம் வீட்டிற்குக் கொண்டு வருவதற்கு அல்ல…!

இதை நமக்குள் எடுத்து இந்த உணர்வின் தன்மையை நமக்குள் செலுத்துவதற்குச் செய்தான் ஞானி.

இன்று டாக்டர்கள் என்ன செய்கின்றார்கள்…? நோய் என்று தெரிந்தால் இன்ஜெக்க்ஷனைப் போட்டு இரத்தத்தில் தான் அந்த மருந்தைக் கலக்கும்படி செய்கின்றார்கள்.

அது ஜிர்ர்… என்று போய் நல்ல அணுக்களுக்கு வீரியத்தை ஊட்டுகின்றது. அதற்குண்டான உணவைக் கொடுத்து ஆகாரத்துடன் கலக்கப்படும் பொழுது அதனுடன் இணைத்து நோய்க்குக் காரணமான அணுக்களை வலு இழக்கும்படி செய்கின்றார்கள்.

ஆனால் ஞானிகள் என்ன செய்தார்கள்…? அங்கே தெய்வத்திற்கு அபிஷேகம் செய்யும் பொழுது
1.உற்றுப் பார்த்து அந்த உயர்ந்த மணத்தை நாம் சுவாசித்து
2.உயர்ந்த சக்திகளை நம் இரத்தத்திலே எப்படிக் கலக்க வேண்டும்…? என்று அபிஷேகம் செய்து காட்டுகின்றார்கள்.

அவ்வாறு அதை நுகர்ந்து எடுத்தால் நம் உயிரான ஈசனுக்கு அபிஷேகம் ஆகின்றது. மகிழ்ச்சியூட்டும் உணர்வின் உணர்ச்சிகளாக அதன் வழி நம்மை இயக்குகின்றான்.

நாம் இப்படி எண்ணும் உணர்வுகள் நினைவாக்கப்படும் பொழுது உயிரிலே படும் பொழுது அரங்கநாதன். எந்த உணர்ச்சியின் உணர்வோ ஆண்டாள். “அந்த உயர்ந்த உணர்வுகள் நம்மை ஆளத் தொடங்குகிறது…”

“நம்முடைய எண்ணமே நம்மை ஆளுகின்றது” என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றார்கள்.

1.நமது சாஸ்திரங்களில் பொய்யில்லை.
2.ஆனால் நாம் மெய்யைப் பொய்யாக்கி விட்டு… பொய்யைத் தான் இன்று மெய்யாகச் செய்து வாழ்ந்து கொண்டுள்ளோம்.

ஞானக்கனியாக நமக்குள் விளைய வைக்க வேண்டும்

ஞானக்கனியாக நமக்குள் விளைய வைக்க வேண்டும்

 

நாம் பல விதமான குணங்கள் உடையவரைச் சந்திக்கின்றோம். அடிக்கடி கோபமாகப் பேசுவோரைப் பார்க்கின்றோம். அவர் உடலில் அந்தக் கோப உணர்ச்சிகள் கனியாகி முழுமை அடையப்படும்போது வித்தாகி விடுகின்றது. (வினை – வித்து)

ஆனாலும் நமக்குள் நன்மைகள் செய்யும் உணர்வுகள் இருப்பினும் அன்றாட வாழ்க்கையில் மற்றவர்களுடைய கஷ்டங்களையும் நஷ்டங்களையும் வேதனையையும் இவையெல்லாம் நாம் நுகர்ந்து அறிந்து கொண்டேயிருக்கின்றோம்.

1.நுகர்ந்த உணர்வோ நம் உடலில் வித்தாகி
2.அந்த உணர்வின் உணர்ச்சிகள் வளர்ச்சியாகி
3.அதன் உணர்வுகள் நம் உடலில் அணுவாகி
4அணுவான பின் தன் இனத்தைப் பெருக்கத் தொடங்கி விடுகின்றது.

இதற்கு முன்னாடி நன்மை செய்ய வேண்டுமென்ற எண்ணங்கள் இருப்பதால் நாம் நன்மையைச் செய்கின்றோம். ஆனாலும் நன்மை செய்வதற்கு முன் அவர்களுடைய கஷ்டங்களைக் கேட்டறிகின்றோம்.

அவர்கள் சொல்லும் கஷ்டத்தை நாம் கேட்டறிந்தால் நாம் நுகரப்படும் போது அந்த உணர்ச்சிகளே நமக்குள் இயக்கி நம் உயிரிலே மோதி இந்த உணர்ச்சிகள் நம் உடல் முழுவதற்கும் பரவுகின்றது.

1.பரவப்படும்போது நம் உடல் ஒரு அரங்கம்.
2.சுவாசித்த உணர்வுகள் (உயிரிலே மோதினால் நாதம்) நம் உடலிலே படரும் போது “அரங்கநாதன்…”
3.அதே சமயத்தில் அந்த உணர்ச்சிகளே நம்மை ஆளுகின்றது “ஆண்டாள்…”

இப்படி நாம் நுகர்ந்த உணர்வுகளை உயிர் அதை அந்த உணர்ச்சிகளை அறிந்து உடலில் மீண்டும் அந்த அணுத்தன்மை வித்தாகி நமக்குள் விளையத் தொடங்கிவிடுகின்றது.

ஏனென்றால் மற்றவர்கள் கஷ்டம் என்ற உணர்வுடன் வரப்படும்போது அது அங்கே கனியாகி வித்தாகி விடுகின்றது. கனியாகாமல் எதுவுமே வித்தாவதில்லை. விளைந்த வித்தை நிலத்தில் ஊன்றினால் அது மீண்டும் முளைக்கின்றது.

இதைப் போன்று ஒவ்வொரு மனித உடலிலும் பிறர் உடலில் இருக்கக்கூடிய கஷ்டங்களை உற்றுக் கேட்டால் அவையெல்லாம் வித்தாக நமக்குள் முளைக்கின்றது.

மற்றவர்கள் படும் கஷ்டங்களைப் பற்றி நாம் அடிக்கடி எண்ணும்போது அதை நாம் வளர்த்து நம் உடலில் வளர்த்து விடுகின்றோம். அப்பொழுது அதே வித்து நம்மிடத்திலும் விளையத் தொடங்குகின்றது.

1.ஒரு வித்தை ஊன்றியபின் அதே செடியாக வளர்ந்து
2.பல வித்துகளை உருவாக்குவது போல
3.நம் உடலில் அதீதமான வித்துக்கள் உருவாகி விடுகின்றது.

ஒரு வித்து செடியாகி வளரும் வளர்ச்சியில் மலர்கள் உருவாகின்றது. மலரானபின் மணத்தைப் பரப்புகின்றது. அதே போல பிறர் உடலில் விளைந்த (உணர்வுகளை) வித்துக்களை நாம் கேட்டறிந்து நம் உடலில் நாம் பதிவாக்கிக் கொள்கின்றோம்.

பதிவான பின் மீண்டும் அதை எண்ணி அவர் உடலில் விளைந்த அதே நோயை நமக்குள் வளர்த்துக் கொள்கின்றோம். அல்லது அவர்களின் வேதனை என்ற உணர்வை நமக்குள் வளர்த்துக் கொள்கின்றோம்.

அவர்கள்படும் வேதனைகளைச் சொன்னால் நாம் அதைக் கேட்டறிகின்றோம். அதன் பின் தான் உதவி செய்கின்றோம்.

“கடைசியில்…” நம் உடலிலும் வேதனையாகிவிடும்.

நாம் அடுத்தவர்களிடம் போய்
1.இந்த மாதிரி… எல்லாருக்கும் உதவி செய்தேன்… எல்லாம் செய்தேன்…
2.“ஆண்டவன் என்னைச் சோதிக்கின்றான்…” என்று
3.நமக்குள்ளே அதே வித்தை நாம் உருவாக்குகின்றோம்.

உருவானதை நம் நண்பர்களிடம் சொல்வோம். “நான் இத்தனையும் செய்தேன்…” என்று சொல்லும் போது அவர்களும் காதில் கேட்கிறார்கள். அவர்கள் உடலிலும் பதிவாகி விடுகின்றது.

1.ஒரு நல்ல வித்தை நமக்குள் உருவாக்கி நல்லதை எதாவது சொல்கின்றோமோ என்றால் இல்லை.
2.அந்த “நல்லது சொல்வது” என்பது சிறிது காலம் இருந்தாலும்
3.அடுத்தவர்கள் கஷ்டங்களைக் கேட்டு நமக்குள் எடுத்து
4.அவருடைய அந்த வேதனையைத்தான் நமக்குள் வளர்க்க முடிகின்றதே தவிர
5.நமக்குள் இருக்கும் நல்ல குணத்தை வளர்த்துக் கொள்ளக்கூடிய நிலையே அற்றுப் போய்விட்டது.

ஆக முதலில் நாம் நன்மை செய்பவர்களாக இருப்போம்.

பிறருடைய கஷ்டங்களும் குறைகளும் அவர்களின் கஷ்டத்தினால் ஏற்பட்ட வேதனைகளும் நமக்குள் வித்தாகி வளர்ந்த பின் கனியாகி நம்மையும் கஷ்டப்படும் நிலைக்கு ஆளாக்கிவிடும்.

நாம் யாரும் தவறு செய்யவில்லை. நாம் நுகர்ந்த உணர்வுக்குள் வரும் இத்தகைய தீமைகளை நமக்குள் வளராது தடுக்க வேண்டும். அதைத் தான் “விநாயகர் சதுர்த்தி” என்று ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

சதுர்த்தி என்றால் “நிறுத்தி” என்று பொருள்.

1.தீமையான வினைகள் (வித்துக்கள்) நமக்குள் விளையாமல் “நிறுத்தி”
2.அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சேர்த்து “அதை வினையாக்கி”
3.”ஞானக்கனியாக” நமக்குள் விளைய வைக்க வேண்டும் என்பதே ஞானிகள் உணர்த்திய விநாயகர் தத்துவம்.