அருள் ஞான வளைய(ம்)ல்

அருள் ஞான வளைய(ம்)ல்

 

குடும்பத்திலே தாய் கர்ப்பமாக இருக்கிறது என்று தெரிந்து விட்டால் தயவு செய்து வீட்டிலே யாரும் சண்டை போட்டுக் கொள்ளாதீர்கள்.

ஒருவருக்கொருவர் மாறுபட்ட எண்ணங்கள் உணர்வுகள் வரும் பொழுது ஆத்ம சுத்தி செய்துவிட்டு
1.எங்கள் குடும்பத்தில் ஒற்றுமை வர வேண்டும்… ஒழுக்க நிலைகள் பெற வேண்டும்
2.கருவில் வளரும் சிசு ஞானக் குழந்தையாக வளர வேண்டும் என்ற எண்ணத்தை நீங்கள் வளர்த்துக் கொண்டே வாருங்கள்.

அக்கம்பக்கத்தில் புறநிலைகளில் வரக்கூடிய குறைகளையும் துன்பங்களையும் உற்று நோக்கி அதை மனதில் எண்ணி வளர்த்துக் கொள்ளாதீர்கள்.

ஆகவே அது போன்ற சந்தர்ப்பங்கள் வந்தால் அந்தப் பத்து மாதங்களிலும் ஒரு கடுமையான விரதமாக எடுத்துக் கொள்ளுங்கள்.

எங்கள் குடும்பம் முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் கருவில் வளரும் சிசு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணிப் பாருங்கள் கருவுற்றிருக்கும் அந்த தாய்க்கு அந்த உணர்வுகளை செலுத்துங்கள்.

இது தான் “வளைகாப்பு…” என்பது.

ஏழு எட்டு வகையான உணவு வகைகளைப் போட்டு… போட்ட பின் அதைச் சரியாகச் செய்யவில்லை. தங்கத்திலே வளையல் செய்து போட்டார்களா…? என்கிற வகையில்
1.கர்ப்பத்தில் இருக்கக்கூடிய தாய்க்கும் சரி… அந்தக் குடும்பத்தாருக்கும் சரி… வேதனையை உருவாக்கி
2.இது போன்ற சாங்கியத்தால் கருவில் வளரும் குழந்தை ஞானக் குழந்தையாக வளர்வதற்கு மாறாக நஞ்சை வளர்த்து விடுகின்றார்கள்.

இதையெல்லாம் நீங்கள் விடுபட்டு “உதறித் தள்ளுங்கள்…” நமக்கு வேண்டியது என்ன…?

தாய் கருவிலே வளரும் குழந்தை அருள் ஞானக் குழந்தையாக வளர வேண்டும் என்று இப்படி எல்லோரும் எண்ணினால்
1.அந்தக் குழந்தை நோயற்ற குழந்தையாக உருவாகும்… உலக ஞானம் பெறும்
2.பிறந்து வாழ்க்கையில் அது வளரும் பொழுதே அந்தக் குடும்பத்தார் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும்
3.மெய்ப்பொருளைக் காணக்கூடிய சக்தியும் பெறும்.

ஆகவே குழந்தைகளை அரும் பெரும் ஞானிகளாக ஆக்குங்கள். கருவிலே வளரும் குழந்தைகள் ஞானக் குழந்தைகளாக வளர வேண்டும் என்று கூட்டுத் தியானத்தில் எண்ணினால்
1.நீங்களும் ஞானியாகின்றீர்கள்
2.உங்கள் குழந்தைகளும் ஞானியாகின்றார்கள்.

பத்து மாதங்கள் இவ்வாறு எண்ணிக் கருவிலேயே குழந்தையை ஞானியாக உருவாக்கி விட்டால்
1.குடும்பத்தில் எத்தகைய சிக்கல்கள் இருந்தாலும் அது ஓடிப் போய்விடும்…
2.எந்தத் தொல்லையும் அங்கே நிற்காது.

ஆகவே வாழ்க்கையில் வரும் இருளைப் போக்க ஒவ்வொருவரும் வாரத்தில் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை அன்றாவது ஒன்று சேர்ந்து கூட்டாகத் தியானம் செய்ய வேண்டும்.

டிவி பார்ப்பதற்கோ சினிமாவிற்குச் செல்வதற்கோ குடும்பத்தில் அனைவரும் ஒன்றாகச் சேர்கின்றோம். டிவியை எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும் போது… வீட்டின் பின் கதவைத் திறந்து திருடன் பொருளை அபகரித்துச் சென்றாலும் உள்ளே இருப்பவருக்கு ஒன்றும் தெரிவதில்லை.

இப்படித்தான் நாம் இருக்கின்றோம்…!

டிவி பார்க்க வேண்டாம்… பார்க்கக் கூடாது…! என்று சொன்னாலும் நீங்கள் பார்க்காமல் இருக்கப் போவதில்லை. அப்படியே பார்த்தாலும் ஒரு பத்து நிமிடமாவது எல்லோரும் அமர்ந்து கூட்டுத் தியானமிருந்து
1.எங்கள் குடும்பம் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும்
2.எங்கள் குழந்தைகளுக்கு அருள் ஞானம் கிடைக்க வேண்டும்
3.மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று உலக ஞானம் பெற வேண்டும் என்று எண்ணிப் பாருங்கள்
4.அந்தக் குழந்தைகளுக்கு இதையே ஆசிர்வாதமாகக் கொடுத்துப் பாருங்கள்.

கர்ப்பமாக இருக்கும் தாய்க்கு “வளைகாப்பு” என்று பல வகை உணவுகளைப் போட்டு எல்லோரும் வளையலைப் போடுவது போல்
1.அருள் ஞான உணர்வுகளை காப்பாக வளையலாக இதைப் போட்டுக் கொள்ளுங்கள்
2.இது அருள் ஞான வளையல்…!

புறத்தில் வளையலைப் போடுவதைக் காட்டிலும்… அருள் ஞானக் காப்பாக “மகரிஷிகளின் அருள் சக்தியை வளையலாகக் கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கும்… அந்தத் தாய்க்கும்… வீட்டில் உள்ள அனைவரும் போட்டுப் பாருங்கள்…”

பிறக்கக்கூடிய குழந்தை “ஞானக் குழந்தையாகப் பிறக்க வேண்டும்… ஞானக் குழந்தையாகப் பிறக்க வேண்டும்…!” என்று எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கள்.

உங்கள் அனைவருக்கும் எவ்வளவு பெரிய சக்தி இருக்கிறது என்று நீங்கள் பார்க்க முடியும். பிறந்த பின் அந்தக் குழந்தை
1.ஞானத்தை எவ்வாறு வெளிப்படுத்துகிறது என்றும்
2.குடும்பத்தில் எவ்வளவு செழிப்பு வருகிறது என்றும்
3.அப்பொழுதாவது நீங்கள் தெரிந்து கொள்ளலாம்… இது உங்கள் அனுபவத்தில் காண முடியும்.

எங்கெங்கோ சென்று எது எதற்கோ நேரத்தைச் செலவிடுகிறோம். மணிக்கணக்காக டி.வி பார்க்கிறோம். ஒரு பத்து நிமிடமாவது இந்தத் தியானத்தை தினமும் எடுத்துப் பாருங்கள்..

1.தொடர்ந்து அதைச் செய்ய செய்ய டிவி பார்க்கும் அந்த மோகம் போய்விடும்
2.டிவியைப் பார்த்து நுகர்ந்த தீய அலைகளும் ஒடுங்கிவிடும்.
3.அந்த அருள் ஞானிகள் உணர்வுகளைச் சேர்க்கச் சேர்க்க டிவியில் பார்த்த (படமாக) மாதிரி
4.உலக ஞானத்தையும் உங்கள் மனக்கண்ணால் பார்க்க முடியும்.

தீமையிலிருந்து விடுபடும் உணர்வுகள் உங்களுக்குள் விளைவதையும் பார்க்கலாம். உங்கள் நினைவுகள் அனைத்தும் அந்தச் சப்தரிஷி மண்டலத்தின் இணைந்து… உடலுக்குப் பின் பிறவி இல்லா நிலையை அடையச் செய்யும்.

எமனையே வதம் செய்த இடம்

எமனையே வதம் செய்த இடம்

 

நாம் தொழில் செய்கின்றோம் சந்தர்ப்பவசத்தால் நஷ்டமாகி விடுகின்றது. அதனால் வேதனை வருகின்றது. ஆனால் அதிலிருந்து மீள நமக்குச் சரியான சிந்தனை இல்லை என்றால் இருள் சூழ்ந்து விடுகின்றது.

வேதனை வந்தால் நமக்கு நல்ல சிந்தனை வருகின்றதா…? இல்லை…!

பொருளை வாங்கியவன் பணத்தைத் திரும்பக் கொடுக்கவில்லை என்றால் “இப்படிச் செய்கின்றானே…” என்று அவனை எண்ணி வேதனைப்படுகின்றோம்.

அபிராமி ஆலயத்தில் எதைக் கொண்டு வருகின்றார்கள்…?

நஷ்டமாகும் போது…
1.அப்போதே அது ஏன்…? என்ற அந்தத் தெளிவான உணர்வைச் சுவாசிக்கப்படும் பொழுது
2.தன் எண்ணத்தால் தீமையை அகற்றிடும் உணர்ச்சியை ஊட்ட முடியும்
3.அப்பொழுது இருளை நீக்கும் சக்தியாக அது வளருகின்றது.

ஏனென்றால் அந்த அபிராமி ஆலயத்தில்
1.“என்றும் பதினாறு” என்ற நிலையை அங்கே உருவாக்கிக் காட்டி உள்ளார்கள்
2.எமனையே வதம் செய்த இடம் என்று…!

வேதனை என்ற உணர்வு வந்தால் அது வராது தடுக்கும் சக்தியாக (எமனாக வரும்) அந்தச் சங்கட உணர்வுகளை… இருள் சூழ்ந்த நிலைகளை “நம்மால் நீக்க முடியும்…” என்று அங்கே காட்டுகின்றார்கள்.

ஞானிகளால் உருவாக்கப்பட்ட ஆலயங்கள் எல்லாம் மனிதர்களை தெய்வமாக வாழச் செய்யும் நிலைகள். ஆனால்
1.”ஆயுள் ஹோமத்தைச் செய்தால் ஆயுளை நீட்டிக்கலாம்…” என்று காட்டி விட்டு
2.ஞானிகள் சொன்ன உண்மையான உணர்வை எடுக்க முடியாதபடி நம்மை முட்டாளாக்கி விட்டார்கள்.

பணம் உள்ளவர்கள் அங்கே ஹோமத்தைச் செயல்படுத்துகின்றார்கள். அதே சமயத்தில் 60-வது கல்யாணத்தைச் செய்து முடித்தோம் என்ற எண்ணம் இருக்கும்.
1.அந்த அறுபதாம் கல்யாணத்தை முடித்துவிட்டு வந்த பின் இறந்தவர்கள் இருக்கின்றார்கள்
2.அல்லது 70… 80… என்று கல்யாணம் நடத்தியவர்களும் இறக்கத்தான் செய்கின்றார்கள்
3.இறக்காமல் யாரும் இருப்பதில்லை.

ஞானிகள் அந்த ஆலயத்தில் காட்டிய தத்துவம் என்ன…? நமக்குள் எப்பொழுது இருள் சூழ்கின்றதோ… அதை நீக்கும் வலிமையான நிலைகளை நாம் எடுத்துப் பழக வேண்டும்.

ஆனால் வேதனையான உணர்வுகளை எடுக்கப்படும் பொழுது “அந்த எண்ணம்” எமனாக மாறுகின்றது… எனக்கு இப்படி ஆகிவிட்டது என்று…!

சித்திர புத்திரன் கணக்கின் பிரகாரம் எமன் தண்டனை கொடுக்கின்றான்…! எப்படி…?

தொழிலில் நஷ்டமாகி விட்டது… நஷ்டமாகி விட்டது…! என்று எண்ணி எண்ணி அந்த உணர்வை வளர்த்துக் கொண்டால் அது தொடர்ந்து தனக்குள் வளர்ச்சியாகும் பொழுது
1.அந்த எண்ணமே நமக்கு எமனாக மாறுகின்றது
2.நாம் எதை எடுத்தோமோ வரிசைப்படுத்தி அது முழுமை பெறுகின்றது.

எமன் எதன் மீது வருகின்றான்…? எருமை மீது தான் வருகின்றான். சிந்தனையற்ற நிலை கொண்டது எருமை…! அதற்காக வேண்டி பரிணாம வளர்ச்சியில் வந்ததைத் தெளிவாக்குகின்றார்கள்.

ஆகவே மனிதனாக இருக்கக்கூடிய நாம் சிந்திக்கும் திறனை இழந்தால்… அந்த முரட்டுத்தனம் எதுவோ அதன்படி வளர்த்துக் கொண்ட பின்… இந்த உடலை விட்டுச் செல்லும் பொழுது எண்ணம் எதுவோ… விஷம் கொண்ட பாம்பின் உடலுக்குள் நரக வேதனைப்படும்படி உயிர் அழைத்துச் சென்று விடுகின்றது.

என் பையன் இப்படி இருக்கின்றானே…! என்று வேதனைப்பட்டுக் கொண்டே இருந்தால் வேதனையான எண்ணங்களையே வளர்த்தால்… உடலை விட்டுச் சென்ற பின் தன் பையன் உடலுக்குள் சென்று அவனையும் வீழ்த்தத்தான் அது உதவும். பையனையும் காக்க முடியாது…!

நமது எண்ணமே இப்படி எமனாக மாறுகிறது… சிந்தனையற்ற நிலைகளில் நாம் வாழுகின்றோம்…! என்ற நிலையை அந்த ஆலயத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

சற்று சிந்தித்து மக்களிடத்தில் இந்த உண்மைகளை எப்படி வெளிப்படுத்த வேண்டும்…? ஆலயத்திலே நாம் எப்படி வழிபடுத்த வேண்டும்…? என்ற ஒழுங்கு கூட இல்லாது போய்விட்டது.

ஆகவே கோவிலுக்குச் செல்லும் பொழுது நாம் எப்படி வழிப்பட வேண்டும்…?
1.தெளிந்த மனம் கொண்டு தெளிவான வாழ்க்கை வாழ வேண்டும்
2.பொருளறிந்து செயல்படும் அந்த அருள் சக்தி பெற வேண்டும்.
3.இந்த ஆலயம் வருவோரெல்லாம் அந்தச் சக்தி பெற வேண்டும்
4.மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும்
5.வருவோருக்கெல்லாம் அது கிடைக்க வேண்டும் என்று எண்ணினால் நாம் அதைப் பெறுகின்றோம்.

நீங்கள் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நான் எண்ணினால் என் உயிருக்கு அது அபிஷேகமாக ஆகின்றது. அந்த உணர்ச்சிகள் இரத்தத்தில் கலந்து உடலில் உள்ள நல்ல அணுக்களுக்கு அது ஆகாரமாகக் கிடைக்கின்றது.

ஒவ்வொரு கோவிலிலும் சிலைக்குப் பாலாபிஷேகம் தேனாபிஷேகம் சந்தன அபிஷேகம் எல்லாம் செய்கின்றோம். ஆனால் அங்கே அபிஷேகம் செய்யும் போது நாம் என்ன எண்ணுகிறோம்…?

1.கஷ்டத்தை எல்லாம் அங்கே முறையிட்டு…
2.என்னை ஏன் இப்படித் தொல்லைப்படுத்துகிறாய்…?
3.எனக்கு ஏன் இப்படிக் கஷ்டமாக வருகின்றது…? என்று இதைத்தான் சொல்லி
4.நல்லது எடுப்பதற்கு மாறாக தப்பான வழிகளில் அங்கே வழிபடுகின்றோம்.

கனிகளை வைத்து அபிஷேகம் செய்யும் பொழுது இங்கே வேதனை தான் வருகின்றது. சந்தன அபிஷேகம் செய்யும் பொழுது அந்த நறுமணத்தையாவது நுகர்கின்றோமா…?

சந்தனத்தைப் போன்று நறுமணம் நாங்கள் பெற வேண்டும். இந்தக் கோயிலுக்கு வருவோர் அனைவரும் அந்த நறுமணம் பெற வேண்டும். என் குடும்பத்தில் உள்ள அனைவரும் அந்த நறுமணம் பெற வேண்டும் என்று தான் எண்ண வேண்டும்.

பையன் மீது ஆசையாக இருப்போம்… ஆனால் சரியாகப் படிக்கவில்லை என்று வரும் பொழுது அவன் மீது வெறுப்பாகி விடுகின்றது.

அப்போது என்ன செய்ய வேண்டும்…?

என் பையனுக்கு சந்தனத்தைப் போன்ற நறுமணம் கிடைக்க வேண்டும் அவனுக்கு அந்த நல்ல ஞானங்கள் வர வேண்டும் என்று நாம் எண்ணுதல் வேண்டும்.

1.இப்படி நாம் சுவாசிக்கும் பொழுது நம் உயிருக்கு உயர்ந்த அபிஷேகம் நடக்கிறது.
2.இந்த உணர்ச்சிகள் இரத்தத்தில் கலந்து மனிதனாக உருவாக்கிய நல்ல அணுக்களுக்கு ஆகாரமாக அமுதாகப் போய்ச் சேருகின்றது.

இறந்தார்கள் என்றால் சுட்ட சாம்பலை ஆற்றிலே கரைக்கின்றோம்… சதுர்த்திக்குப் பின் விநாயகர் சிலையை ஆற்றிலே கரைக்கின்றோம்… ஏன்…?

இறந்தார்கள் என்றால் சுட்ட சாம்பலை ஆற்றிலே கரைக்கின்றோம்… சதுர்த்திக்குப் பின் விநாயகர் சிலையை ஆற்றிலே கரைக்கின்றோம்… ஏன்…?

 

களிமண்ணால் விநாயகர் சிலையைச் செய்து… பின் அதைப் பூஜித்து ஒன்பது நாட்கள் கழித்து ஆற்றிலே கொண்டு போய்க் கரைத்து விடுவார்கள்.

ஏனென்றால் களிமண்ணால் விநாயகர் சிலையைச் செய்து… அதை வைத்துப் பூஜித்து விட்டுக் கடைசியில் நீரிலே கரைக்க வேண்டும். இது தான் விநாயகர் சதுர்த்தி என்று நாம் எண்ணிக் கொண்டிருக்கின்றோம்.

ஆக… சதுர்த்தி என்றாலே “என்ன…?” என்று புரியாத நிலையில் தான் நாம் இன்று இருக்கின்றோம்.
1.மனித வாழ்க்கையில் இனி பிறவியில்லா நிலை அடையும் கடைசி நிலை தான் விநாயகர் சதுர்த்தி என்பது
2.தீமைகள் நமக்குள் எவை இருப்பினும் அவைகளை நீக்கி நாம் நமது ஆன்மாவைப் பரிசுத்தப்படுத்துவது தான் இந்த நிலை.

ஒரு பருப்பை (மண்ணிலே விளைந்ததை) வேக வைத்தால் அது மீண்டும் முளைக்குமா…? வேக வைத்த பொருள் ஒரு போதும் முளைக்காது.

மனிதனாக நாம் வளர்ந்து வந்த நிலைகளிலில் நம் உடலிலே எத்தனையோ விதமான தீய வினைகள் உண்டு.
1.அந்தத் தீயவினைகளை நமக்குள் வளர்க்காது தடுப்பது எப்படி…?
2.தீமைகள் விளையாது தடுக்க வேண்டும் என்றால் விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்…?
3.என்ன செய்தால் நம் உடலில் இருக்கும் தீவினைகள் வளராது தடுக்க முடியும்…? என்று
4.அதை எல்லாம் நமக்கு நினைவுபடுத்தும் நாள் தான் விநாயகர் சதுர்த்தி.

நம் ஆன்மாவை எப்படித் தூய்மைப்படுத்த வேண்டும்…? துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து நம் உடல் முழுவதும் அதைப் பரவச் செய்து நம் ஆன்மாவைத் தூய்மை செய்ய வேண்டும்.

அதிகாலையில் நான்கு மணிக்கு எல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து நாங்கள் பார்த்த குடும்பங்கள் அனைத்தும் நலம் பெற வேண்டும் வளம் பெற வேண்டும் அவர்கள் நோயிலிருந்து விடுபட வேண்டும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் தொழில் வளம் பெருக வேண்டும் மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும் என்று இப்படி எல்லோரும் சொன்னால் என்ன ஆகும்…?

1.சூரியன் இந்த தீய வினைகளை எல்லாம் இழுத்துக் கொண்டு ஓடியே போய்விடும்
2.பரமாத்மா (காற்று மண்டலம்) தூய்மை அடைந்து விடும்… நம் ஆன்மா சுத்தமாகும்… நம் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் சுத்தமாகும்.

ஒரு வருடம் முழுவதும் நாம் பிறருடைய குறைகளைக் கேட்டுணர்ந்தாலும் அந்த உணர்வுகள் நமக்குள் வளர்ந்த பின் அதை நம் உடலிலிருந்து கரைத்திடல் வேண்டும்.

அதற்காகத்தான் விநாயகர் சதுர்த்தி அன்று களிமண்ணால் உருவத்தை உருவாக்கி… தான் வளர்ந்த நிலையை நினைவில் கொண்டு… அறியாது சேர்ந்த தீமைகளைக் கரைத்துவிடும் பழக்கத்தை ஏற்படுத்தினார்கள்.

சாஸ்திரங்களில் இது உண்மை…!

எப்படிக் களிமண்ணில் செய்து நாம் கடலில் கொண்டு கரைக்கின்றோமோ இதே போல மனிதனின் உடலில் விளைந்த இந்தத் தீமைகளைக் கரைத்திடல் வேண்டும்.
1.அதாவது சிலையை அங்கே கரைப்பது போல்
2.மீண்டும் மீண்டும் நாம் இந்தப் பூமியில் இன்னொரு உடல் பெறாதபடி
3.உடல் பெறும் உணர்வுகளைக் (உடலை) கரைக்க வேண்டும்.

விநாயகர் சிலையைக் கரைக்கின்றோம். இறந்தார்கள் என்றால் சுட்ட சாம்பலை ஆற்றிலே கரைக்கின்றோம்.
1.ஆனால் உடல் பெறும் உணர்வுகளைக் கரைக்கின்றோமா…?
2.வேகா நிலை அடைய முற்படுகின்றோமா…?

சாதாரண மக்களும் தீமையிலிருந்து விடுபடுவதற்கு… உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை அடைவதற்கு இவ்வளவு அழகான நிலைகளில் ஞானிகள் நமக்கு வடித்துக் கொடுத்திருக்கிறார்கள். “நாம் யாராவது அந்த ஞானிகளை மதிக்கின்றோமா…?”

ஆலயங்களில் சிலைகளுக்கு அபிஷேகம் செய்யச் சொன்னதன் உள்கருத்து என்ன…?

ஆலயங்களில் சிலைகளுக்கு அபிஷேகம் செய்யச் சொன்னதன் உள்கருத்து என்ன…?

 

அன்றாட வாழ்க்கையில் நம்மை அறியாது வரக்கூடிய பகைமைகள் மகாபாரதப் போராக நம் உடலுக்குள் எத்தனையோ நடந்து கொண்டுள்ளது.

புறத்திலே நாம் பார்த்ததெல்லாம்… நம்மைச் சந்தோஷப்பட விடாதபடி மனக்கலக்கங்களும் வேதனைகளும் துயரங்களும் உடலுக்குள்ளேயே வருகின்றது

இடுப்பு வலிக்கின்றது தலை வலிக்கின்றது நெஞ்சு வலிக்கின்றது கண் வலிக்கின்றது கை வலிக்கின்றது மூட்டு வலிக்கின்றது என்று சொல்வது… இது எல்லாம் மகாபாரதப் போர் தான்.

ஒவ்வொருவருமே நாம் தெரிந்து கொள்ளலாம்…! வீட்டில் கஷ்டம்… கஷ்டம்… என்று சொல்லி வேதனைப்பட்டுப் பாருங்கள்
1.பையன் வெளியே சென்றால் கீழே விழுந்து விடுவான்
2.கணவர் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது… என்ன என்று தெரியாதபடி திடீரென்று வேலையிலிருந்து வெளியேற்றி விடுவார்கள்
3.பக்கத்து வீட்டுக்காரர்கள் இனம் புரியாதபடி சண்டையிடுவார்கள்
4.தொழில் செய்யும் இடத்தில் உற்பத்தி செய்யும் இயந்திரங்கள் ஓடிக்கொண்டிருக்கும் பொழுது உடைந்து நொறுங்கி விட்டது என்று
5.இதை எல்லாம் சில குடும்பங்களில் பார்க்கலாம்.

நமது எண்ணமே… நமக்குள் மட்டுமல்ல நமது உணர்வுகள் நம்மிடம் வேலை செய்பவருக்குள்ளும் அவ்வாறு இயக்கச் செய்கிறது. நம்மைக் காட்டிலும் மேலதிகாரியாக இருந்தாலும் அவரை அறியாமலே மறைமுகமாக அவரையும் இயக்கி விடுகின்றது.

இதையெல்லாம் நமக்கு உணர்த்துவதற்கு ஞானிகள் என்ன செய்தார்கள்…?
1.நல்ல குணங்கள் நமக்குள் எப்படி இருக்கின்றது…?
2.அது எப்படி காக்கப்பட வேண்டும் என்பதற்காகச் சாதாரண ஒரு கல்லைச் சிலையாக வடிக்கின்றார்கள்
3.வீட்டு வாசல் படிக்கும் அந்தக் கல் தான்… அதே கல்லைத் தான் சிலையாகவும் வடிக்கின்றார்கள்
4.அதற்குக் காரணப்பெயர் வைத்து… “தெய்வம் நல்லதைக் காக்கும்…” என்று சொல்கின்றனர்.

கல் சிலைக்கு அபிஷேகம் செய்கின்றோம். ஏன் அபிஷேகம் செய்கிறோம்…? என்று நாம் புரிந்து கொள்வதில்லை.

நாம் தெய்வம் என்று மட்டும் தான் நினைக்கின்றோம் இந்த உருவத்திலே தெய்வம் இருந்தது என்றும் எண்ணுகின்றோம். ஆனால்…
1.நல்ல குணங்களைச் சித்தரித்துக் காட்டுவதற்குத் தான்
2.அது இன்னது செய்யும்..! என்று உருவத்தை அமைத்துக் கொடுத்தார்கள்.

சிலையில் பாலை அபிஷேகம் செய்யும் பொழுது என்ன செய்ய வேண்டும்…?

இந்தப் பாலை போன்ற மனம் நான் பெற வேண்டும் எங்கள் வீட்டில் இருக்கும் அனைவரும் அந்த நிலை பெற வேண்டும் இந்த ஆலயத்திற்கு வருவோர் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும். சந்தனத்தைப் போன்ற நறுமணம் பெற வேண்டும். எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் அந்தச் சந்தனத்தை போன்ற நறுமணம் பெற வேண்டும் என்று இப்படி அந்த ஞானிகள் காட்டிய வழியில் எண்ண வேண்டும்.

அது உருவம் தான்… பொருள் தான். கண்களால் நாம் காண முடிகின்றது

சந்தனத்தைப் பார்த்தவுடனே அது நன்றாக மணக்கும் என்றும் தெரிகின்றோம்… உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது. பாலைப் பார்த்த உடனே அதிலே சர்க்கரை போட்டுக் காபித் தூளைப் போட்டுச் சுவையாக்க் குடிக்கின்றோம். பால்கோவாவும் நாம் கிண்டிச் சாப்பிடுகின்றோம்.

நம்முடைய மனதை நல்லதாக்க ஆலயத்தில் அப்படிச் செயல்படுத்துகின்றார்கள்.

ஆனால் அந்தப் பாலிலே சிறிது விஷம் போட்டால் நாம் சாப்பிடுவோமா…!

ஏனென்றால்… நாம் பாலைப் போன்று நல்ல மனதாக இருக்கின்றோம் எதிர்பாராது சந்தர்ப்பவசத்தில் ஒரு தீமையைப் பார்க்க நேர்கின்றது. அல்லது நமக்கு நண்பனாக இருக்கின்றான்… அவன் எல்லோருக்கும் நல்ல உதவிகளைச் செய்கின்றான். இப்பொழுது அவன் வேதனைப்படுகின்றான். அதைப் பார்த்தவுடனே… வேதனை என்ற விஷத்தை நுகர்ந்த பின் நம் உயிரிலே அந்த வேதனை தான் அபிஷேகமாகிறது.

எதன் வழி அபிஷேகம் நடக்கிறது…?

1.நாம் மூக்கு வழி சுவாசித்தது… உயிர் வழி தான் அபிஷேகம் நடக்கிறது
2.உயிரிலே பட்டு அபிஷேகம் ஆகும் போது அந்த வேதனையால் உடலெல்லாம் பலவீனம் அடைகிறது.

ரொம்ப நெருங்கிய நண்பனாக இருந்தால் அவன் வேதனைப்படும் உணர்வுகள் நமக்குள் வந்தால் நமக்கு அங்கேயே தலை சுற்றிவிடும். அடுத்து யாராவது ஏதாவது சொன்னால் நம்மால் அதைப் புரிந்து கொள்ள முடியாது ஒரு பொருளை வைத்து விட்டு அங்கே இங்கே என்று தேட ஆரம்பிப்போம் குழந்தைகளோ மற்ற யாரோ ஏதாவது ஒரு பொருளைக் கீழே போட்டால் நமக்குக் கோபம் பயங்கரமாக வரும்… அடிக்கச் சொல்லும். சிந்தனையற்ற செயலைச் செய்யும்.

யார் அங்கே தவறு செய்தது…? நாம் நுகர்ந்த உணர்வு தான் நம்மை இவ்வாறு தவறு செய்ய வைக்கின்றது… அல்லது மயங்க வைக்கிறது.

அதை மாற்றுவதற்குத் தான் ஞானிகள் ஆலயங்களில் சிலைகளை உருவங்களாக வைத்துக் காட்டினார்கள்.

அந்தப் பாலைப் போன்ற மனம் பெற வேண்டும் என்று அப்பொழுது நாம் எண்ண வேண்டும். நாங்கள் பார்க்கும் அனைவரும் பாலைப் போன்ற மனம் பெற வேண்டும்… குடும்பத்தில் அனைவரும் அதைப் பெற வேண்டும்… என்று எண்ணினால் அதே உணர்ச்சிகள் உயிரிலே படுகின்றது.

இப்படி…
1.நாம் எதை நுகர வேண்டும்…? என்று
2.அந்தச் சிலைக்கு அபிஷேகம் செய்யும் போது நாம் நம் உயிர் வழி உயர்ந்த உணர்வுகளைச் சுவாசிக்கும்படி
3.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நமக்குள் வளர்த்துக் கொள்ளும்படி செய்து
4.அதை வைத்து நமக்குள் வரக்கூடிய தீமைகளை நன்மை செய்யக்கூடிய சக்தியாக மாற்றும்படி செய்கின்றனர்.

எவ்வளவு அழகாக ஞானிகள் நமக்கு இதைக் கொடுத்திருக்கின்றார்கள்…!

எண்ணங்கள் (சுவாசிக்கும் உணர்வுகள்) நம்மை எவ்வாறெல்லாம் இயக்கும்…? என்பதைத் தான் இராமாயணம் காட்டுகிறது

எண்ணங்கள் (சுவாசிக்கும் உணர்வுகள்) நம்மை எவ்வாறெல்லாம் இயக்கும்…? என்பதைத் தான் இராமாயணம் காட்டுகிறது

 

தீமையை நீக்கும் எண்ணங்கள் வரும் பொழுது தான் இராமன் சீதாவை அரவணைத்துக் கொள்கின்றான் என்று காவியம் காட்டுகிறது.

1.தாக்கும் உணர்வு வந்தால்… எதிர்த்துத் தாக்கும் உணர்வே வருகின்றது
2.ஆனால் அரவணைக்கும் உணர்வின் தன்மை இருந்தால்… தன்னுடன் இணைந்து வாழும் நிலை வருகின்றது.

அது தான் “கல்யாணராமா…”

அரவணைக்கும் தன்மை கொண்டு நாம் நண்பனை இணைத்தால்… இந்த உடலுக்குள் தன்னுடன் இணைந்து வாழும் சக்தியாக அது எவ்வாறு கொடுக்கிறது என்று இராமாயணக் காவியம் தெளிவாகக் கூறுகின்றது.

அதை நாம் சிந்தித்தோமா…? என்றால் இல்லை.

மூலக்கூறுகளை விடுத்து விட்டு அவரவர்கள் உணர்வுக்கொப்ப காரியங்களைத் தீட்டிக் கருத்தினை மாற்றி மனிதன் வாழ்க்கைக்குண்டான போர் முறைகளைக் கையாண்டு “ஏமாற்றுவதும்… ஏமாற்றி வாழ்வதே சரி…” என்ற நிலைகளுக்குக் கொண்டு சென்று விட்டனர்.

இராமன் மிகவும் வலிமை கொண்டவன் என்று காட்டுகின்றனர். அன்று விசுவாமித்திரர் தான் யாகம் செய்யும் போது அசுரர்களிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்வதற்காக இளம் பிராயத்தவர்களான இராமனையும் இலட்சுமணனையும் தன்னுடன் அழைத்துச் செல்கின்றார்.

பல வித்தைகளையும் கற்றுக் கொடுத்து எனக்குப் பாதுகாப்பாக இருங்கள் என்று சொல்கிறார். அதன்படி அசுரர்கள் தாக்குதலில் இருந்து இராமன் விசுவாமித்திரனைக் காக்கின்றான்.

ஆனால் விசுவாமித்திரனோ மிகவும் கொடூரமானவன்… கோபக்காரன்… பல அரசாட்சிகளைப் பிடித்தவன்… யாகத்தை வளர்த்தவன்… வலிமை பெற்றவன் தான்.

இவ்வளவும் இருந்தும் மீண்டும் வலிமை பெற வேண்டும் என்ற ஆசையின் உணர்வு உண்டு உலகை அடக்க வேண்டும்… உலகை அடிமையாக்க வேண்டும் என்று உணர்வின் வேகம் கொண்டு யாக வேள்விகளை நடத்த விரும்புகின்றான்.

யாக வேள்விகள் நடத்தப்படும் பொழுது எதிர்கொண்டு தாக்கும் உணர்வுகளிலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காக இராம இலட்சுமணர்களை அழைத்துச் செல்கின்றான். அந்த யாக வேள்வியும் நிறைவடைகின்றது.

ஆனால் அப்பேர்ப்பட்ட நிலையில்…
1.மற்றவர்களைக் காக்கும் நிலையாக அசுரர்களைக் கொல்லும் திறன் பெற்றவன்…
2.அசுரர்களின் செயலாக்கங்களை அறிந்து அவர்களை வீழ்த்தக்கூடிய திறன் பெற்றவன்…
3.மிக வல்லமை பெற்றவன் இராமன் என்று இருந்தாலும் தன் மனைவியுடன் காட்டிற்குள் செல்லும் போது என்ன நடக்கிறது…?

காட்டிற்குள் செல்லப்படும் பொழுது சூட்சம நிலைகள் கொண்டு அசுரனான இராவணன் சீதாவைக் கடத்திச் செல்கின்றான்.

ஆனால் வலுக் கொண்ட இராமன் அதைக் கேள்விப்படும் போது “தன் மனைவி போய் விட்டதே என்று மயங்கி விழுகிறான்…!” என்றால்
1.அப்பொழுது இராமனின் செயல் என்ன…?
2.இதை ஏன் காவியத்தில் இவ்வாறு சித்தரித்துக் காட்டுகின்றார்கள்…? என்று சற்று சிந்தித்தல் வேண்டும்.

வலிமை கொண்டவன் “தன் மனைவி போய் விட்டதே” என்று எண்ணும் பொழுது இதைப் போல் பிறிதொரு மனிதன் வெளிப்படுத்திய வேதனையைத் தனக்குள் நுகரப்படும் பொழுது… அந்த வாலியின் தன்மையே (நல்ல உணர்வின் வலிமை குறையும்) இங்கே வரும்.

கோதண்டத்தை முறித்து வேதனைகளை நீக்கிச் சீதாவை திருமணம் செய்து கொண்டவன்… கல்யாணராமன் என்று சுயம்வரத்தில் வென்றவன்… சீதாவைக் காணவில்லை என்று
1.“அந்த வேதனையான உணர்வை… விஷத்தின் தன்மையைக் கொடுத்தால்…”
2.இவனுடைய எண்ணத்தின் தன்மை எவ்வாறு இருக்கும்…? என்பதைத்தான் இராமாயணக் காவியம் தெளிவாகக் காட்டுகிறது.

இதையெல்லாம் அவர்கள் உணர்வுகளுக்கொப்ப காவியங்களைத் தீட்டி உண்மையின் உணர்வை அறியாதபடி தீமையின் விளைவுகளுக்கே பயன்படும்படி செய்து விட்டார்கள்.

நீங்கள் அந்த மூலக்கூறுகளை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே இதை உணர்த்துகின்றேன் (ஞானகுரு).

அமாவாசை அன்று செய்யக் கூடாதது…

அமாவாசை அன்று செய்யக் கூடாதது…

 

பிறந்ததிலிருந்து இறக்கும் வரை மந்திரம் சொல்லும் பழக்கம் இன்றுள்ள பெரும் பகுதியான மக்களிடம் உள்ளது.
1.இறந்த பின் அந்த உடலைக் கருக்கி விட்டாலும்
2.உடலில் இருந்து வெளியேறிய உயிரான்மா இந்தக் காற்று மண்டலத்தில் தான் இருக்கும்.

“ஐந்தாம் படை…” என்று சொல்வார்கள். நாட்டுக்கு நாடு ஒவ்வொரு அரசனுக்கும் அது இருக்கும். எங்கெங்கே என்ன இருக்கின்றது…? என்று இறந்தவர்களைப் பற்றிய முழு விவரங்களை அரசனுக்குச் சொல்வார்கள்.

அதனின் செயல்கள் இன்றும் குடுகுடுப்புக்காரன் என்ற பெயரில் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. நாம் நடந்து செல்லும் போது பாதம் பட்ட நிலைகளில் வீட்டு வாசல்படியில் இருக்கக்கூடிய மணலை எடுத்துக் கொள்வார்கள்.

நல்லது செய்வதாக… ஜோதிடம் சொல்வது மாதிரி நம் வீட்டிற்கே வந்து தலை முடியையும் பழைய துணியையும் கேட்டு வாங்கிச் செல்வார்கள்.

குடுகுடுப்புக்காரர்கள் என்று சொல்வதெல்லாம் அரசர்களுக்கு ஐந்தாம் படை வேலை செய்தவர்கள் தான். அன்றைய அரசன் காட்டிய உணர்வின் தன்மை கொண்டு மக்கள் மத்தியில் வந்து இந்த மூன்று பொருள்களை எடுத்துக் கொள்வார்கள்.

இறந்த முன்னோர்களுக்கு நாம் இங்கே என்ன செய்கின்றோம்…?

சுட்ட சாம்பலை எடுத்துக் கரைத்து விடுகின்றோம். அமாவாசை அன்று அவர்களுக்கு உணவு படைத்து அவர்கள் அணிந்த துணிகளை எல்லாம் வைத்து அழைப்போம்.

அதே சமயத்தில் அமாவாசை அன்று பித்ருக்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும் என்று சாஸ்திரங்களை எழுதி வைத்துள்ளார்கள். அதனின் உட்பொருள் என்ன…?

அமாவாசை அன்று சூரியனுடைய ஒளிக்கதிர்கள் அதிகமாக நமக்குக் கிடைப்பதில்லை. ஏன்…?

பூமியைச் சேர்த்துச் சுழன்று கொண்டிருக்கும் சந்திரன் சூரியனுடைய ஒளிக் கதிர்களைக் கவர்ந்து ரசம் பூசிய கண்ணாடி போல் எல்லா நாளும் நமக்குப் பரப்பிக் கொண்டு இருக்கின்றது. அதாவது பூமியின் இயக்க உணர்வுக்கு உதவி செய்கிறது சந்திரன்.

ஆனால் சந்திரனை பூமி முழுமையாக மறைக்கப்படும் போது
1.சூரியனுடைய ஒளிக்கதிர்கள் வராதபடி அது பூரண அமாவாசை ஆகின்றது.
2.அதனால் சந்திரன் மூலம் சூரியனின் ஒளிக்கதிர்கள் நமக்குச் சரியாகக் கிடைப்பதில்லை (பூமியிலிருக்கும் எல்லாவற்றுக்கும் இதே நிலை தான்)
3.அன்று கனமான சுவாசமாக நமக்கு இருப்பதன் காரணமே இது தான்

ஆகையினால் உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்கள் இங்கே சுழன்று கொண்டிருக்கப்படும் போது அமாவாசை அன்று வழக்கமாகக் கிடைக்கும் அலைகள் அவர்களுக்கும் கிடைப்பதில்லை.

அமாவாசை அன்று நாம் சாப்பாடு போட்டுத் துணிமணிகளை எல்லாம் வைத்து முன்னோர்களைக் கூப்பிடுவோம்.

ஆனால் அரசன் என்ன செய்வான்…?

அதற்கென்று ஒரு ஆளை நியமித்திருப்பான்.
1.வாழும் போது நாம் எந்தெந்த மந்திரங்களை எல்லாம் பதிவு செய்தோமோ
2.அந்த விவரங்களை எல்லாம் அவன் அரசனிடம் சொல்வான்.

அதன் பிரகாரம் கோவில்களோ மற்ற இடங்களிலோ “மந்திரங்களைச் சொல்லி” யாகங்களை வளர்ப்பார்கள். மந்திர ஒலிகளை வைத்து அந்த உணர்வின் தன்மை கொண்டு நம் முன்னோர்களின் ஆன்மாக்களைக் இழுத்து கைவல்யப்படுத்திக் கொள்வார்கள்.

அதாவது
1.நாம் இங்கே உணவையும் அவர்களின் துணியையும் வைத்துக் கூப்பிடும் போது
2.அவர்கள் அங்கே இழுத்துக் கவர்ந்து கொள்வார்கள்.

ஆக மொத்தம் உடலுடன் இருக்கப்படும் பொழுது அரசனுக்கு அடிமை. இறந்த பின்னும் ஆன்மாவை அவன் கைவல்யப்படுத்தி விடுவான்… நம் ஆன்மாவும் அவனுக்கு அடிமை தான். கைவல்யப்படுத்திய ஆன்மாக்களை எதிரி நாட்டின் மீது ஏவிப் பில்லி சூனியங்களுக்குப் பயன்படுத்துவான்.

அரசர்களுக்குள் போர் முறை வரப்படும் பொழுது பக்தியின் தன்மை கொண்டு இறந்தார்கள் என்றால் எதிரிகளை வீழ்த்தும் உணர்வுடனே மடிகின்றனர்.
1.அந்த ஆன்மாக்களையும் கவர்ந்து கொண்டு எதிரிகளை வீழ்த்த ஏவல் செய்வான்.
2.இதைப் போன்று தான் மாற்று அரசனும் செய்வான்.
3.மனித உடலிலிருந்து எடுத்துத் தான் அன்று இந்த வேலைகளைச் செய்வார்கள்.
4.அன்றைய அரசர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் இது தான்.

தனுர் வேதம் கற்றுக் கொண்டவர் தான் போர்முறை நடத்த முடியும் என்று இதைத் தான் மகாபாரதத்தில் சொல்லியிருப்பார்கள்.

தனுர் வேதம் என்றால் ஒரு மனிதனுக்குள் மந்திரங்களைச் சொல்லிப் பதிவு செய்து அதன் பின் அதே பதிவை வைத்து மீண்டும் இறந்த பின் அந்த ஆன்மாவைக் கவர்ந்து ஏவத் தெரிய வேண்டும்.

அப்படி ஏவத் தெரிந்தவன் எவனோ அவன் தான் அந்த நாட்டையும் மற்றதையும் பாதுகாக்க முடியும் என்று அரசு நியதிகள் அன்று உண்டு.

ஒரு மனிதனுக்குள் மந்திர ஒலியினைப் பதிவாகி அந்தப் பதிவை மீண்டும் எடுத்துக் கொள்ளத் தெரிய வேண்டும். அதை வைத்துத் தான் அன்று பல நிலைகளைச் செயல்படுத்தினார்கள்.

எளிதில் ஆன்மாக்களைக் கவர்வதற்குத் தான் அமாவாசை என்று அந்த இருண்ட நாளை அன்று அரசன் தேர்ந்தெடுத்தான்
1.அன்று அரசன் எதைக் காட்டினோ அதே வழியில் தான் நாமும் செயல்படுகிறோம்.
2.அரசனால் காட்டப்பட்ட சாஸ்திர விதிகளில் இப்படிச் சிக்கி
3.உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களை உயர்ந்த நிலை பெறச் செய்யாதபடி
4.ஐதீகம் என்ற முறைகளில் மாதத்தில் ஒரு நாளும் வருடத்தில் ஒரு நாளும் ஒரு சாங்கியத்தைச் செய்து விட்டு
5.அதனுடன் திருப்தி அடைந்து கொள்கிறோம்

அதைப் போன்ற நிலைகளிலிருந்து மீண்டு நாம் முன்னோர்களை விண் செலுத்தப் பழக வேண்டும். சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று சப்தரிஷி மண்டல ஒளி அலைகளை முதலில் நமக்குள் வலு கூட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

எங்கள் குலங்களின் தெய்வங்களான முன்னோர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்கள் அனைத்தும் சப்தரிஷி மண்டல ஒளி அலையுடன் கலந்து
1.உடல் பெறும் உணர்வுகள் அனைத்தும் அங்கே கரைந்து
2.என்றென்றும் மகிழ்ந்திடும் நிலையாக அழியா பருவம் பெற்ற ஒளியின் சுடராகி
3.பேரானந்தப் பெரு நிலை அடைய வேண்டும் என்று வீட்டிலுள்ளோர் அனைவரும் உந்தித் தள்ளுதல் வேண்டும்.

அந்த ஆன்மாக்கள் எடை இல்லாமல் இருப்பதால் நாம் உடலுடன் ஒரு இயந்திரம் போன்று இருப்பதால் நாம் பாய்ச்சும் அந்த சப்தரிஷி மண்டல உணர்வுகள் அவர்கள் உயிராத்மாவில் இணையப்பட்டு
1.சப்தரிஷி மண்டல ஒளி அலையும் இந்த உயிராத்மாவும் சந்திக்கும் நிலையில்
2.புவி ஈர்ப்பின் பிடிப்பைக் கடக்கச் செய்து “நேரே…” அங்கே சப்தரிஷி மண்டலத்திற்கே அழைத்துச் சென்றுவிடும்…!

இவ்வாறு “தினசரி” நாம் எண்ணுதல் வேண்டும்.

ஐந்து தலை நாகன் மீது நாராயணன் பள்ளி கொண்டு உலகையே இயக்குகின்றான்… எப்படி…?

ஐந்து தலை நாகன் மீது நாராயணன் பள்ளி கொண்டு உலகையே இயக்குகின்றான்… எப்படி…?

 

27 நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் துகள்களைச் சூரியன் தன் உணவாக எடுத்துக் கொண்டாலும் தனக்குள் இருக்கும் பாதரசத்தால் மோதி அதில் உள்ள விஷத்தைப் பிரித்து விட்டு… வெப்பம் காந்தம் என்று உருவாக்குகிறது.

இருந்தாலும் பலவீனமடைந்த விஷத்தைக் காந்தம் மீண்டும் கவர்ந்து கொள்கிறது.
1.வெப்பம் உருவாக்கும் சக்தி
2.காந்தம் கவரும் சக்தி (அரவணைக்கும் சக்தி)
3.விஷம் இயக்கும் சக்தி.

இப்படி மூன்று நிலைகளில் அது இயக்க அணுவாக உருவாகிறது.

ரேடியோ டி.வி. எந்தெந்த அலைவரிசைகளில் ஒலி/ஒளி பரப்பு செய்கின்றோமோ அதை இந்தக் காந்தம் கவர்ந்து வைத்துக் கொண்டால் அந்தச் சத்தினை வெளிப்படுத்தும் சக்தி விஷத்திற்கு உண்டு.

இதே போல் அந்த இயக்க அணு ஒரு மனிதனின் உணர்வைக் கவர்ந்து கொண்டால்…
1.உதாரணமாக கோபத்தை அந்தக் காந்தம் கவர்ந்து தனக்குள் இணைத்துக் கொண்டால்…
2.மற்ற மனிதர்கள் அதை நுகர்ந்தபின் “கோபத்தை இயக்கும் அணுவாக” ஒரு இயக்கச் சக்தியாக மாறுகின்றது.

அதை நாம் நுகர்ந்து உயிரிலே பட்டால் கோப உணர்ச்சிகளைத் தூண்டி அந்தக் கோபமான உணர்வின் சத்து உடல் முழுவதற்கும் பரவி எண்ணம் சொல் செயல் என்று இயக்குகிறது.

இதுவும் சூரியனிலிருந்து வந்தது தான்.

உயிரின் இயக்கம் ஈசன்… அதனின் துடிப்பில் ஏற்படும் வெப்பம் விஷ்ணு… ஈர்க்கும் காந்தம் இலட்சுமி…!

கோபமான உணர்வை அந்த மனிதன் வெளிப்படுத்தும் போது இந்த இயக்க அணு அந்தக் கார உணர்ச்சிகளை நுகர்ந்து எடுத்துக் கொண்ட பின் அதை நாம் நுகர்ந்தால் உயிரிலே பட்டு அதே கோபத்தை இயக்கும்… அந்த உணர்ச்சிகளை ஊட்டும் நிலை அடைகிறது.

உயிரிலே பட்டு அந்த உணர்ச்சிகள் நம் உடலையே இயக்கும் அந்தச் சக்தி பெறுகிறது. ஆகவே நம் உயிரின் இயக்கத்தை நாம் புரிந்து கொள்வதற்குச் “சங்கு சக்கரதாரி…” என்று காட்டுகிறார்கள்.

கோபமான உணர்வுகள் உயிரிலே பட்ட பின்
1.அந்தக் கோபத்திற்குண்டான சப்தங்களும்… அந்த உணர்ச்சிகள் வேகமாக இயக்குவதும்…
2.ஒரு மிளகாயை வாயிலே போட்டால் ஆ… என்று அலறுவது போல
3.அந்த உணர்ச்சியின் தன்மை கொண்டு உடலில் இப்படிச் செயலாக்குகிறது.

உயிரின் இயக்கமும் இந்த மூன்று நிலையில் இயக்கச் சக்தியாக மாறுகின்றது.

ஆனால் சூரியன் விஷத்தைப் பிரித்துவிட்டு இயக்க அணுவாக மாறி அந்தக் கோபமாக வெளிப்படும் உணர்வின் சத்தைக் கவர்ந்து கொண்டால் பரப்பிரம்மம் என்றும்… அதனுடன் இணைந்து கொண்டால் பிரம்மாவின் மனைவி சரஸ்வதி என்றும்… இந்த விஷம் அந்தக் கோபமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் போது புலனறிவு ஐந்தாக மாறுகின்றது.

இதைத் தான் சூரியன்… “ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டு இந்த உலகையே இயக்கிக் கொண்டுள்ளான்…!” என்று தெளிவாகக் காட்டுகின்றார்கள்.
1.எல்லா உணர்வுகளையும் இயக்க இந்த விஷமே மூலமாக இருக்கின்றது என்பதனை நாம் அறிந்து கொள்ள ரூப வடிவினைக் காட்டி
2.சூரியனின் இயக்கத்தையும் உயிரின் இயக்கத்தையும் காரணப் பெயரை வைத்து உணர்த்துகின்றனர்.

ஆகவே கோபமான உணர்வை நுகரும் போது அந்த உணர்ச்சிகள் உடல் முழுவதும் எப்படிப் பாய்கிறது…? என்பதனை குருநாதர் உணர்த்துகின்றார்.

அந்தக் கோபமான உணர்வுகள் உயிரிலே பட்ட பின் சங்கு சக்கரதாரி “சப்தமாகி…” அந்த உணர்ச்சிகள் எண்ணம் சொல் செயல் என்று இந்த உடலை இயக்குகிறது என்பதைச் சாஸ்திரங்கள் தெளிவாக்குகிறது.

இந்த உடல் ஒரு அரங்கம். கோபமான உணர்ச்சிகள் உயிரிலே பட்ட பின் அரங்கநாதன்…! கோபமான நாதத்தை உண்டாக்குகிறது. அந்தக் காரமான உணர்ச்சிகள் நம்மை இயக்குகிறது… ஆள்கிறது… “ஆண்டாள்” நம்மை ஆள்கிறது.

அதாவது நாம் எண்ணி எடுத்த அந்தக் கோபமான உணர்ச்சிகள் நம்மை ஆளத் தொடங்குகிறது.

அந்தக் கோபப்படும் மனிதனை உற்றுப் பார்க்கப்படும் போது அந்த இயக்க அணு நமக்குள் வந்து அது இயங்குகிறது. ஆனால் அது ஆள்கிறது.

அதே உணர்ச்சிகள் உயிரிலே பட்டு உமிழ் நீராக மாறுகின்றது. உமிழ் நீராக மாறும் போது அந்தக் காரமான உணர்ச்சிகள் நம் சிறு குடல் பெரும் குடலில் இருக்கக்கூடிய அணுக்களுடன் இணைகின்றது.

அப்போது என்ன நடக்கிறது…?

ஒரு மிளகாயை வாயிலே போட்டால் எப்படி நாம் அலறுகின்றோமோ… அதே போல் நாம் சாப்பிடும் ஆகாரத்தை ஜீரணிக்க முடியாதபடி எரிச்சலூட்டும் உணர்வுகளாக அங்கே உருவாகின்றது.
1.வயிற்றிலே எரிச்சல்…
2.இதன் உணர்வு உடல் முழுமைக்கும் படரும் போது மற்ற உறுப்புகளில் எரிச்சல்.

இப்படி நாளடைவில் இயங்கத் தொடங்கினால் இரத்தக் கொதிப்பாக வந்து விடுகின்றது. எதை எடுத்தாலும் எரிச்சலாகின்றது. ஆனால் நாம் தவறு செய்யவில்லை.

சூரியனிலிருந்து வந்த இயக்க அணு அந்தக் கோபக்காரன் உணர்வை எடுத்துக் கொண்ட பின் அதை நுகரப்படும் போது அந்தக் கோபத்தை நமக்குள் இயக்கினாலும் அந்த உணர்ச்சிகள் உமிழ் நீராக மாறும்.

உமிழ் நீர் ஆகாரத்துடன் கலந்த பின் ஆகாரம் ஆவியாக மாறி அதனின் இயக்கமாக மாறி இரத்தமாக மாறப்படும் போது அந்த இயக்க அணு ஜீவ அணுவாக மாறுகின்றது.

ஜீவ அணுவாக மாறிய பின்
1.அந்தக் கோபத்தால் உருவான அணுவின் மலம் எங்கெல்லாம் படுகின்றதோ அங்கெல்லாம் எரிச்சல் வருகிறது…
2.குருநாதர் இதை எல்லாம் எம்மை நேரடியாக அறியும்படி செய்தார்.

சாதாரண மனிதனின் வாழ்க்கையில் நாம் யாரும் தவறு செய்யவில்லை. இருந்தாலும் ஒரு கோபப்படுவோரையோ வெறுப்படைவோரையோ பார்த்து… கோபத்தையும் வெறுப்பையும் நுகர்ந்து விட்டால் நம் உடலில் எப்படித் தீமைகள் விளைகின்றது…? என்பதைக் காட்டிற்குள் அழைத்துச் சென்று உணர்த்துகின்றார்.

இதை எல்லாம் நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டும்.

சூரியனிலிருந்து வெளி வரும் இயக்க அணுவும்… பிரகலாதனும்

சூரியனிலிருந்து வெளி வரும் இயக்க அணுவும்… பிரகலாதனும்

 

அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ பேரை நாம் தினசரி சந்திக்கின்றோம். வேதனைப்படுபவரையோ கோபப்படுவோரையோ வெறுப்படைவரையோ பார்க்காமல் நாம் இருக்க முடியாது.

ஆனால் அந்த வேதனை கோபம் வெறுப்பு உள்ளுக்கே போகாதபடி தடுப்பதற்கு ஒரு சக்தி வேண்டும் அல்லவா. அதற்குத் தான் இதை உபதேசிக்கிறோம்.

தீமை நீக்கும் அருள் ஞானிகளின் உணர்வுகளைப் பதிவாக்கி விட்டீர்கள் என்றால் உங்களுக்குள் வரும் தீமைகளை நீங்களே போக்கிக் கொள்ள முடியும்.

பிள்ளை மேலே பாசமாக இருக்கின்றோம்… ஒரு மார்க் குறைந்து விட்டால் போதும் எவ்வளவு வேதனைப்படுகின்றீர்கள்…? பிள்ளைக்கு உடல் நிலை சரி இல்லை என்றால் எவ்வளவு வேதனைப்படுகின்றீர்கள்…?

நீங்கள் சமப்படுத்த வேண்டும் அல்லவா.
1.ஆனால் வேதனையை எடுத்துச் சமப்படுத்த விரும்புகின்றீர்கள்
2.இந்த உணர்வுகள் நமக்குள் வந்து மீண்டும் சிவ தனுசாக மாறுகின்றது… வேதனைக்கொப்ப உடலாக (வேதனைப்படும் உடலாக) மாறுகின்றது.

அதனால் தான் பிரகலாதன் கதையிலே நாராயணனுக்கும் இரணியனுக்கும் இரண்டு பேருக்கும் அங்கே கேட்கின்றார்கள்.

பிரகலாதன் என்றால் இதிலே பிறக்காதவன். அதாவது
1.எதிலுமே பிறக்காதவன் தான் பிரகலாதன் என்று காட்டுகின்றார்கள்.
2.சூரியனிலிருந்து ஒவ்வொரு இயக்க அணுக்களும் வருகிறது அல்லவா…!

என்னால் தான் பிறந்தது என்கிறான். சூரியனால் தான் இயக்கப்படுகின்றான் என்கிறான். என்னால் தான் பிறந்தது என்னால் தான் உருவானது என்று இயக்க அணுவைப் பற்றிப் பிரகாலதன் கதையிலே காட்டுகின்றார்கள்.

ஹரி ஓம் நமோ நாராயணா…! சூரியனின் இயக்கமாகத்தான் நம் உடல் எல்லாம் இருக்கின்றது என்று பிரகலாதன் சொல்கிறான்.

அவன் எங்கே இருக்கின்றான் என்று இரண்யன் கேட்கின்றான்…?

உன்னிலும் இருக்கின்றான்… என்னிலும் இருக்கின்றான்… எல்லாவற்றிலும் இருக்கின்றான்.

அவனைக் காட்டு…! என்கிறான்.

தூணிலும் இருக்கின்றான் துரும்பிலும் இருக்கின்றான் என்று காட்டுகின்றான்.

அவனை அழித்து (தூணை உடைத்து) அந்த உணர்வின் வேகத்தைப் பார்க்கப்படும் பொழுது அதிலிருந்து அந்த உண்மையை உணர்த்திக் காட்டுகின்றது

1.தன் உடலுக்குள் இருக்கும் தன்னையே அழித்துக் கொள்ளும் தன்மை தான் வருகின்றதே தவிர
2.உன்னால் அழிக்க முடியும்… உணர முடியாது
3.அதை ஈர்க்க முடியும்… ஆனால் வளர்க்க முடியாது.
4.தீமையைத்தான் வளர்க்க முடியும்…! என்று பிரகலாதன் கதையில் அதைக் காட்டுகின்றார்கள்

எவ்வளவு பெரிய உண்மையைக் காட்டுகின்றார்கள்.

வெறும் கதையாக நினைக்கின்றோம். மக்கள் நாம் புரிந்து கொள்வதற்கு இவ்வளவு தெளிவாகக் கொடுக்கின்றார்கள்.

சொல்வது உங்களுக்கு அர்த்தமாகின்றது அல்லவா.

ஆகவே… அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று இப்படி நல்ல குணத்தில் அதை வலுவாக்க வேண்டும்.

அந்தச் சக்தி வலுவான பின் வேதனையான உணர்வுகள் இங்கே வருகிறது அல்லவா… அதை உள்ளிருந்து பிளந்து விடுகின்றது.

இது தான் மடி மீது இரணியனை (நஞ்சான உணர்வுகள்) வைத்து நமக்குள் வரும் தீமைகளை வாசல்படி மீது அமர்ந்து நரநாராயணன்… இந்த ஆறாவது அறிவால் இதைப் பிளந்து பழகுதல் வேண்டும்.

இப்பொழுது நாம் ஒன்பதாவது நிலையிலிருக்கின்றோம். அதைப் பிளந்தால் “பத்தாவது” நாம் பிறவியில்லா நிலை அடைகின்றோம்

காயத்ரி ஜெபத்தின் வலு

காயத்ரி ஜெபத்தின் வலு

 

1.விஷத்தின் இயக்கத்தால் தான் உலகமே இயங்குகிறது… என்ற நிலையும்
2.விஷத்தின் தாக்குதலால் தான் வெப்பங்கள் உருவாகிறது… என்றும்
3.விஷத்தின் உணர்வால்தான் மற்றதை இயக்குகிறது…! என்றும்
4.இதைத் தெளிவாக்குவதற்காக பிரகலாதன் கதையைக் காட்டினார்கள் ஞானிகள்.

அதாவது…
1.ஒரு கருவிலிருந்து பிறக்காதபடி…
2.உணர்வின் மோதலில் உருவானது தான் உணர்வின் இயக்கச் சக்தியே என்று
3.அதைப் பிரகலாதன் என்று காட்டி நமக்கு விளக்க உரையையும் கொடுக்கின்றார்கள்

இரண்யன்… என்னால்தான் நீ உருவானாய்…! என்று சொல்கிறான்.

ஒரு அணுவாக ஆனாலும் சரி… மற்ற எதனின் நிலைகள் ஆனாலும் சரி…
1.விஷத்தின் தன்மை இயக்கத்தால் தான்
2.சூரியனே சூழலும் சக்தி கொண்டு ஒளியின் தன்மை பெற்றது.
3.“என்னுடைய இயக்கம்தான் சூரியன்…” என்று இரண்யன் சொல்கின்றான்.

இதைப் போன்று விளக்கவுரைகளைக் கொடுத்து இதிலே பிரித்து மனிதர்கள் நாம் எப்படி வாழ வேண்டும்…? என்று காவியக் கதைகளாகக் கொடுத்துள்ளார்கள்.

பிரகலாதன் கருவுற்றுப் பிறந்தவன் அல்ல… உணர்வின் மோதலில் உரு பெற்றது என்று அதைத் தெளிவாக சொல்கின்றார்கள்.

இரண்யாய நம என்று “என்னை நீ வணங்கு…” என்று இரண்யன் சொல்கின்றான். இல்லை… ஹரி ஓம் நமோ நாராயணா…! என்று தான் நான் சொல்வேன் என்று அவன் சொல்கிறான்.

ஹரி என்பது சூரியன். அவன் உலகைச் சிருஷ்டிக்கும் வல்லமை பெற்றவன். அவன் தான் எனக்குக் கடவுள் என்ற நிலையில் ஹரி ஓம் நமோ நாராயணா…! என்று பிரகலாதன் சொல்கின்றான்.

இல்லை என்னால்தான் நீ உருவானாய்… இல்லை அவனால்தான் உருவானேன்… ஜீவ அணுவாக உருமாற்றும் தன்மை அங்கிருந்துதான் உரு பெற்றது என்று இப்படி விரிவுரைகளைக் காட்டப்படும் போது அவன் (ஹரி) எங்கே இருக்கிறான்…? என்று இரண்யன் கேட்கின்றான்.

உன்னிலும் இருக்கின்றான்… தூணிலும் இருக்கின்றான்… துரும்பிலும் இருக்கின்றான்… என்று தெளிவாக்குகின்றான்.

அப்போது அதைத் தாக்க முயற்சிக்கிறான்.

அந்தத் தாக்குதலில் உள் நின்று இருக்கும் இந்த உயிர்… விஷ்ணு அவனிடம் வரம் கேட்கின்றான். எனக்கு நீரிலும் இறப்பில்லை நெருப்பிலும் இறப்பில்லை காற்றிலும் இறப்பில்லை எதிலுமே எனக்கு இறப்பு இல்லை என்று வரம் கேட்கின்றான்.

அவன் விஷ்ணுவிடம் வரம் கேட்டதனால் அந்த வரம் கொடுத்த நிலைப்படி அவனை ஒன்றும் செய்ய முடியாதபடி ஆகிறது.

கொடுத்த வரப்படி எல்லாம் ஆனாலும் வாசல்படி மீது அமர்ந்து மனித உடலுக்குள் தீமைகள் (விஷத் தன்மை) உட்புகாதபடி தடைப்படுத்தும் தத்துவமாக விஷ்ணு – நரசிம்ம அவதாரத்தைக் காட்டுகின்றார்கள்.

ஏனென்றால்
1.நாம் நுகரும் உணர்வை எல்லாம் உடலுக்குள் அவனே (விஷ்ணு) சுழலச் செய்கின்றான்.
2.ஆனால் அருள் ஒளியின் தன்மை கொண்டு உள்ளே வராதபடி இந்த உணர்வின் சக்கரத்தை உள்ளே சுழலச் செய்யப்படும் பொழுது
3.அங்கே வலுப்பெறும் தன்மை வரும்போது இங்கே உள்ளே வராதபடி தீமைகளைப் பிளந்து விடுகின்றான்.

இந்த உண்மையைக் காட்டுவதற்காகக் காவியங்களைச் சீராகப் படைத்து மனிதன் அதை உணர்ந்து தீமை தன் உடலுக்குள் புகாதபடி எப்படித் தடுக்க வேண்டுமென்று தெளிவாக்கப்பட்டுள்ளது

ஆக… தீமைகளை எல்லாம் வென்றவன் யார்…? துருவ மகரிஷி. அந்தத் துருவ மகரிஷியின் உணர்வைத் தனக்குள் பதிவாக்கி எப்போது தீமை என்று வருகிறதோ அப்போது தடுக்க வேண்டும் என்று காட்டுகிறார்கள்.

உதாரணமாக ஒரு வேதனையால் வாடுவோரைப் பார்த்து அவரின் உணர்வை நுகரப்படும் பொழுது அந்தத் தீமை உள்ளே புகுந்து விடுகிறது. ஆனால் உட்புகாதபடி அங்கேயே அந்தத் தீமையை அழித்து விடவேண்டும்.

ஒரு நோயாளியைக் காணும் பொழுது அவரின் உணர்வை நுகர்ந்தறிந்தால் உடனே அது நமக்குள் அணுவாக மாறி விடுகின்றது. அது அணுவாக உருவாதபடி இங்கே தடைப்படுத்துதல் வேண்டும்.

அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் உயிருடன் ஒன்றச் செய்யும் பொழுது அந்த உணர்வின் வலிமை கூடி “தீமை வராதபடி தடுக்கப்படுகின்றது…”

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று உடலுக்குள் செலுத்தும் போது அது வலிமை பெற்றபின் “தீமைகளை ஈர்க்கும் சக்தியே குறைந்து விடுகின்றது… தீமைகளைப் பிளந்து விடுகிறது…”

நம் ஆன்மாவை எப்படித் தூய்மைப்படுத்த வேண்டும்…? என்பதைத் தான் கடவுளின் அவதாரம் நரசிம்மா…! என்று காட்டுகின்றனர். மனிதனான பின்…
1.ஆறாவது அறிவின் துணை கொண்டு அருள் ஒளியின் சுடரைத் தனக்குள் எடுத்து
2.அதை உயிருடன் ஒன்றச் செய்து ஒளியான அணுக்களாக மாற்றி
3.பிறவி இல்லா நிலைகள் அடையும் பண்பினை அங்கே தெளிவாக்கப்பட்டுள்ளது

ஆக நாராயணன் யார்…? நர நாராயணன் யார்…?

சூரியன் இந்த உலகம் முழுமையும் உருவாக்குகின்றது. நம் உயிர் உடலுக்குள் இருக்கும் அனைத்திற்கும் நரநாராயணன் ஆக இருந்து இயக்குகிறது என்று சாஸ்திரங்கள் தெளிவாகக் காட்டுகின்றது.

பல கோடிச் சரீரங்களில் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு எல்லாம் நாயகனாக கணங்களுக்கு அதிபதியாகக் கார்த்திகேயா என்று பெற்ற நம் ஆறாவது அறிவை முருகன் என்றும் அந்த ஆறாவது அறிவின் துணை கொண்டு அருள் மகரிஷிகளின் அருள் உணர்வை நுகர்ந்து தனக்குள் உருவாக்குதல் வேண்டும் என்றும் காட்டுகின்றார்கள்.

கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி நினைவை விண்ணை நோக்கிப் பாய்ச்சி அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வைக் கவர்ந்து நம் உடலுக்குள் சேர்ப்பித்தல் வேண்டும்.

இதைத்தான் காயத்ரி ஜெபம் என்று சொல்வார்கள்

1.வலுவான உணர்வினை நாம் நுகர்ந்து அந்த உணர்வினைத் தன் உடலுக்குள் சேர்த்து வலிமையைக் கூட்ட வேண்டும்
2.இதுதான் உண்மையான காயத்ரி ஜெபம்.
3.சூரியனைப் பார்த்து காயத்ரி மந்திரத்தைச் சொல்வதனால் பலனில்லை…!

ஆடல் கலைகளை ஞானிகள் நமக்கு வகுத்துக் கொடுத்ததன் உண்மையான நோக்கம் என்ன…?

ஆடல் கலைகளை ஞானிகள் நமக்கு வகுத்துக் கொடுத்ததன் உண்மையான நோக்கம் என்ன…?

 

பண்புகளை இழந்து நாகரீகம் என்ற நிலைகள் கொண்டு ஆட்டங்கள் ஆடிக் கொண்டிருக்கும் போது தையா…தக்கா… என்று ஆடுவதும் ஆணும் பெண்ணும் மோதுவது போல் செயல்படுத்துவதும்… இது தான் இன்றைக்கு இருக்கும் ஆடல் பாடல் கொண்டாட்டம் எல்லாமே.

கழுதை கத்துகிற மாதிரியும்… குதிரை கத்துகிற மாதிரி ஊளையிடுவதும்… அதாவது மிருகங்களுக்குச் சமமான நிலைகள் கொண்டு ஆடுவது தான் இன்றைய டான்ஸ் (DANCE).

ஆடுவதைப் பார்த்தால் ஏய்….ஊய்… என்று அவனையே பைத்தியக்காரனாக ஆக்கும் நிலையில் இது தான் கலாச்சாரமாகப் போய்விட்டது.

ஆனால் ஞானிகள் காட்டிய நிலைகள் என்ன…?

மனித வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் எதிர்படும் உணர்வுகளால் மனது சோர்வடைகிறது. அதனால் உள் உறுப்புகள் சோர்வடைந்து பல நோய்களுக்குக் காரணமாகின்றது. அதைச் சீராக்குவதற்காக வேண்டி…
1.இனிமையான இசை கொண்டு அங்கங்களை அசைத்து அதற்குத் தக்க அபிநயங்களைக் காட்டப்படும் போது
2.உள் உறுப்புகள் இயக்கமாகி உடலில்… சிக்கல் உள்ள நீர்களை மாற்றுவதும்
3.தும்மல் வரும் போது ஒரு பக்கம் சிக்கலானால்… இங்கே அபிநயமாகும் போது அந்தச் சிக்கலை மாற்றி
4.உடல் நலம் பெறுவதற்கும் மகிழ்ந்து வாழும் உணர்வுகளை நுகரச் செய்வதற்கும் நாட்டியங்களாக (ஆடல் கலைகள்) உருவாக்கினார்கள்.

ஏனென்றால் மனிதன் வேகமாக இருக்கும் போது உள் உறுப்புகளில் குறிப்பாக நுரையீரலில் சிக்கலாகி விட்டால் அதனால் இருமல்கள் வரும்.
1.அடிக்கடி விரிவடையவில்லை என்றால் அழுத்தங்கள் அதிகமாகும்
2.அப்போது நுரையீரலில் எதிர்ப்பாகிவிடும்.
3.நாளடைவில் அந்த உறுப்பே பாழடைந்து விடுகிறது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபடுவதற்குத் தான் கலை அபிநயம் கொண்டு உணர்வின் தன்மை கொண்டு அங்கங்களை அசைத்து மகிழ்ச்சியின் உணர்வுகளைத் தனக்குள் தோற்றுவிக்கும்படி செய்தார்கள்.

1.தன்னை அறியாது உடலில் உண்டாகும் நரம்புப் பிடித்தங்களையோ
2.உறுப்புகளில் ஏற்படும் சிக்கல்கலையோ நீக்குவதற்கு அதைச் செயல்படுத்தினார்கள்.

ஆனால் இன்று நாகரீகம் என்ற பெயரில் தையா… தக்கா… என்று குதித்து தவறான உணர்வுகளைத் தூண்டி… கருத்தை இழக்கச் செய்து அநாகரீக நிலைகளை வளர்க்கச் செய்து… மாடுகளைப் போல் நம்மை ஆடும்படி வைத்துவிட்டார்கள்.

குழந்தைக்குப் பிறந்த நாள் கொண்டாடுகிறோம் என்றால் ஞானிகள் காட்டிய நிலைகள் என்ன…?

விளக்கை (ஜோதியை) ஏற்றி வைத்துச் சொந்தமோ பந்தமோ நண்பர்களோ எல்லோரும் சேர்ந்து அந்தக் குழந்தையைப் பார்த்து…
1. அவன் உலக ஞானம் பெற வேண்டும்
2.உலகைக் காக்கும் அருள் ஞானம் பெற வேண்டும்
3.குடும்பத்தைக் காக்கும் அருள் ஞானியாக வேண்டும்
4.இருளை அகற்றும் அருள் ஞானம் பெற வேண்டும்
5.பண்புள்ளவனாக வளர வேண்டும் பரிவுள்ளவனாக வளர வேண்டும் என்று வாழ்த்துக்களைச் சொல்லி
6.பாடலைப் பாடி அவனை மகிழச் செய்து… உன்னுடைய வழி எப்படி இருக்க வேண்டும்…?
7.அன்னை தந்தையரால் நீ வளர்க்கப்பட்ட நிலைகள் என்ன…? கல்வியின் தரங்கள் என்ன…? கருத்தின் தன்மை என்ன…? என்ற
8.இந்த உணர்வுகளின் தன்மை எடுத்துப் பாடலின் ரூபமாக அவனுக்கு எடுத்துக் கூறியது தான் அக்கால வழக்கங்கள் – ஆடல் பாடல்கள்.

அதை யாராவது நாம் இப்போது செய்கிறோமா என்றால் இல்லை. இதைச் சொன்னால் அநாகரீகம் என்ற நிலையில் விட்டுவிடுகிறார்கள்.

எரியும் வெளிச்சத்தை ஊதி அணைத்து இருள் சூழச் செய்து… எல்லோரும் சப்தமிட்டு… அதன் பின் கேக்கைக் கத்தியால் அறுத்துக் கொடுப்பது தான் நம்முடைய கலாச்சாரமா…? சற்று சிந்தித்துப் பாருங்கள்.