சகுனியின் சூதாட்ட சூழ்ச்சி

சகுனியின் சூதாட்ட சூழ்ச்சி

 

உதாரணமாக (பிறரிடம்) நம் காரியத்தைச் சாதிக்க வேண்டும்… பணம் வாங்க வேண்டும் என்றால்… நண்பன் (அல்லது அதற்குண்டானவர்கள்) எதைச் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளும் தன்மை வரும். அப்படி ஏற்றுக் கொள்ளும் தன்மை வரப்படும் பொழுது சாந்தமாகும்.

சாந்தமான நிலைகள் வரப்படும் பொழுது “தர்மன்” என்ற நிலை அடைகிறது.

சாந்தமான நிலை வருவதற்கு முன் நமக்குள் இருக்கக்கூடிய உணர்வுகளின் தன்மை எது இருந்தாலும்
1.காரியத்தைச் சாதிக்க வேண்டும் என்று அவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டு…
2.நம் மனதை அடக்கிச் செயல்படுத்தும் பொழுது
3.நம் எண்ண வலுவில் தன்மைக்குள் நண்பனின் உணர்வு நமக்குள் திணிக்க்கப்படுகிறது… அப்பொழுது அதன் வலு தான் “அர்ஜுனன்…”

நமக்குப் பணம் தேவைப்படுகின்றது (நண்பனின் தயவு) என்று கண் கொண்டு நண்பனை உற்றுப் பார்க்கின்றோம். ஆறாவது அறிவால் மனதை அடக்கி… அவர் சொல்வதை எப்படியும் நாம் கேட்டாக வேண்டும். ஏனென்றால் கேட்டால் தான் நமக்குச் சலுகை கிடைக்கும். அவன் சொல்லும் உணர்வுகள் அர்ஜுனன் வலிமையானது.

ஏனென்றால் அந்த நண்பன் உடலில் இருந்து வெளிப்படும் உணர்வுகளைச் சூரியனிலிருந்து வெளிப்படக்கூடிய வெப்பம் காந்தம் என்ற நிலையில் சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது. அதை நுகர்ந்தால் அர்ஜுனன்.

நண்பன் பேசும் உணர்வுகளைக் காந்தப் புலனறிவு கவர்ந்து கொண்டால் பரப்பிரம்மம் என்ற அணுத்தன்மை அடைகின்றது. அந்த உணர்வின் சத்தி அதை இயக்கக்கூடிய பரப்பிரம்மம் ஆகின்றது அதன் உணர்வின் தன்மை அதனுடன் இணைந்து சரஸ்வதி ஆகின்றது… பிரம்மாவின் மனைவி சரஸ்வதி.

அந்த அணு இப்படிக் கவர்ந்து கொண்டால் அந்த ஞானத்தின் வழியே அதனின் வித்தாகிறது.

இருந்தாலும் நாம் அதை ஏற்றுக் கொள்ளாத மனமாக இருக்கப்படும் பொழுது
1.பணம் வாங்கும் காரியத்திற்காக ஏற்றுக் கொள்கின்றோம்.
2.ஆனாலும் அதை இந்த மனது ரொம்பக் கஷ்டப்பட்டுத் தான் ஏற்றுக் கொள்கின்றது.

இதைப் பார்த்து மற்றவர்கள்… என்ன…? அவருடன் இப்படிக் கூடிக் குழாவுகின்றாய் என்று கேட்பார்கள். என்ன செய்வது…! அவரிடம் காசு வாங்க வேண்டி இருக்கின்றது அல்லவா. இல்லை என்றால் எப்படிக் கிடைக்கும்…? என்ற நிலையில் இருக்கின்றோம்.

அந்த உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது
1.அதைத்தான் சூழ்ச்சி என்பதாக… சூதாட்டம் ஆடுவதாக
2.சூட்சும நிலைகள் கொண்ட “சகுனி” என்று மகாபாரதத்தில் காட்டுகின்றார்கள்.

சகுனி தாயக் கட்டைய உருட்டுவது போல் நம் காரியத்தை எண்ணி அதை நாம் உருட்டி எடுக்கின்றோம். அதாவது நாம் என்ன செய்கின்றோம் என்றால்
1.நம் காரியத்தைச் சாதிப்பதற்காக அவருடைய எண்ணத்தை “உருட்டி” எடுக்கின்றோம் “சூதின் மூலமாக…!”
2.அப்போது நாம் ஜெயித்து விடுகின்றோம் (பணத்தை வாங்கிவிடுகின்றோம்)

முந்தி அவர்கள் நல்லதைச் சொல்லிக் கொண்டு வந்தார்கள்… அப்பொழுதெல்லாம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. பணம் வாங்குவதற்கு மட்டும் உள்மனதாக வைத்து இதைக் கலந்து ஏற்றுக்கொள்ளும் அந்த உணர்வு ஆகிறது.

பணம் வாங்கி ஓரளவுக்கு வசதியாக ஆன பிற்பாடு என்ன செய்கின்றோம்…? சமயம் வரும்பொழுது அவருக்கு என்னவெல்லாம் தீங்கு செய்ய வேண்டுமோ அதெல்லாம் செய்வோம்…! (எல்லோருமே இதை அனுபவத்தில் பார்த்திருப்போம்)

சகுனி தாயம் போட்டு சூதாட்ட விளையாட்டிலே தோற்கடித்து விட்டேன் என்ற நிலை வருகிற மாதிரி நமக்குள் சூதின் உணர்வுகள் வந்து விடுகிறது.

முதலிலே அந்த நண்பனின் உணர்வுகள் அர்ஜுனன் ஆகின்றது. அவன் எதையுமே குறிவைத்துத் தாக்கும் தன்மை பெற்றவன். இருந்தாலும் நுகர்ந்த உணர்வுகள் “நகுலன்” உடலுக்குள் அது இணைந்து செயல்படும் தன்மை வருகின்றது.

நாம் எண்ணும் ஆந்த உணர்வை உயிரிலே சேர்த்து… சேர்த்துக் கொள்ளும் உணர்வாக எண்ணும் போது அதற்கு இடம் கொடுக்கின்றோம். அந்த உணர்வின் தன்மை உடலுக்குள் வரப்படும் பொழுது “சகாதேவன்…” ஆகின்றது.

ஆனால் அதே சமயத்தில் அந்த உணர்வின் தன்மை நம் உடலுக்குள் இருக்கும் அணுக்கள் ஏற்றுக்கொண்டால் “பீமன்” ஆகின்றது. அவர் சொன்ன உணர்வு அந்த வலுவும் நமக்குள் வருகின்றது. பீமன் என்ற அந்த வலுவான உணர்வுகள் ஆனால் அதன் வழி தர்மன் ஆகின்றது

நம் உடலுக்குள் இத்தனை போர் நடந்து கொண்டிருக்கின்றது

இருந்தாலும்… நம் எண்ணங்கள் அவரை ஏமாற்றும் விதமாகச் செயல்படும் பொழுது
1.”சகுனி…” நமக்குள் இருந்து அதன் உணர்வாகக் கலந்து தான் நமக்குள் ஏற்றுக்கொள்கிறதே தவிர
2.நண்பன் நமக்கு நல்லதைச் சொன்னார் என்ற நிலையில் ஏற்கும் பருவமில்லை.

இப்போது இங்கே தியானம் செய்கின்றோம் என்றால்… பல வகைகளிலும் பலவிதங்களை எடுத்துக் கொண்டு வந்திருக்கின்றோம்.

எப்படியோ தொழிலில் முன்னேற்றம் அடைய வேண்டும்… தியானம் செய்தால் நமக்கு நல்லதாகும் என்ற இந்த உணர்வின் தன்மை கொண்டு தான் வருகிறோம்.

அவ்வாறு ஆசைப்பட்டு சுவாசித்து உயிரிலே பட்ட பின் அந்த உணர்வுகள் தான் .வரும். நாம் எண்ணிய அந்த உணர்வுகள் பதிவாகிறது. பதிவின் உணர்வு மீண்டும் நினைவாகும் பொழுது நம்மை இயக்குகின்றது.

நாம் எந்தத் தொழிலின் நிமித்தம் இணைத்து “இந்தத் தியானத்தைச் செய்தால் நாம் நன்றாக இருப்போம் என்று எண்ணினோமோ…” அதன் எல்லை வரை இது வளரும்.

தான் எதிர்பார்த்த நிலைகள் இல்லை என்றால் உடனே குருக்ஷேத்திரப் போராகிறது. எங்கே…? இந்த உயிருக்குள்…!
1.இவ்வளவு நாளும் என்னத்தைத் தியானத்தைச் செய்து என்ன பலன் கிடைத்தது…? என்ற உணர்வை எடுக்கப்படும் பொழுது
2.எண்ணியபடி நடக்கவில்லை என்றால் இந்தப் போர் நடக்கின்றது.
3.தியானத்திற்குப் போவோமா வேண்டாமா…!
4.தியானத்தைச் செய்வோமா வேண்டாமா…? என்ற இந்த உணர்வு வந்து கொண்டே இருக்கும்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடிக்கும் நமக்குள் உயிரிலே இந்த குருக்ஷேத்திரப் போர் நடந்து கொண்டே உள்ளது. ஏனென்றால் நம் உணர்விற்கும் புறத்திலிருந்து வரக்கூடிய நிலைகளுக்கும் இந்த வித்தியாசம் ஆகிறது.

அதனால் தான்… நாம் நம் மனதைக் குவிக்க வேண்டும்… அனைத்து உணர்வுக்குள்ளும் பகைமைகளை அகற்றிய ஞானிகளின் உணர்வுகளைச் சேர்த்து உயிருடன் ஒன்றச் செய்ய வேண்டும்… ஒளியாக மாற்ற வேண்டும் என்று சொல்லிக் கொண்டே வருகிறோம்.

நீ எதை நினைக்கின்றாயோ… அதுவாகின்றாய்…!

நீ எதை நினைக்கின்றாயோ… அதுவாகின்றாய்…!

 

நம் உடல் ஒரு கோவில்… எதன் உணர்வை நாம் எண்ணுகின்றோமோ அது இறையாகின்றது. உணர்வின் தன்மை இறையான பின் மீண்டும் அதை எண்ணும் பொழுது இறையின் உணர்வு செயலாகும் பொழுது அதுவே தெய்வமாகின்றது.

1.வேதனை என்ற உணர்வாகும் பொழுது வேதனைப்படுத்தும் செயல்களையே சேர்த்து…
2.வேதனைப்படுத்தும் தெய்வமாக நமக்குள் குடிகொள்கின்றது.

அதை மாற்ற வேண்டும் அல்லவா. இதற்காகத்தான் ஞானிகள் கோவிலை அமைத்தது.

நமக்குள் இருக்கக்கூடிய நூறு உணர்வுகளை ஆலயமாக மாற்றுகின்றனர். கோவிலுக்குச் சென்ற பின் இந்தத் தெய்வம் நல்லதைச் செய்யும் என்று சொல்கின்றனர்.

நமக்குள் வேதனை என்ற உணர்வு வரப்படும் பொழுது இங்கே அசுரனாக மாறி விடுகின்றது. பத்துத் தலை இராவணன் என்ன செய்கின்றான்…? சீதாவைச் சிறைப் பிடித்து விடுகின்றான்.

இப்பொழுது கோவிலுக்கு சென்று நீங்கள் சந்தோஷமாக இருங்கள் பார்க்கலாம். என்னிடம் (ஞானகுரு) வருவோர்களை இங்கே நல்லதை எண்ணிக் கேட்கச் சொல்லுங்கள் பார்க்கலாம்…!

என் பிள்ளை சொன்னபடி கேட்க மாட்டேன் என்கிறான்… என் தொழில் நஷ்டமாகிக் கொண்டே போகின்றது… எல்லாம் கஷ்டமாக இருக்கின்றது என்று இதைத்தான் சொல்கின்றார்களே தவிர…
1.சீதா என்ற அந்தச் சந்தோஷத்தை ஏதாவது நீங்கள் இயக்குகிறீர்களா…?
2.கஷ்டத்தை நன்றாக இறுக்கிப் பிடித்துக் கொள்கின்றீர்கள்.

எவ்வளவுதான் நான் சொல்லிப் பார்த்தாலும்… இங்கே பிரசாதம் கொடுக்கும் போது பாருங்கள். என் பையன் இப்படி இருக்கின்றான். எல்லாம் நான் நல்லதைத் தான் செய்தேன் ஆனால் என் குடும்பத்தில் கஷ்டமாக இருக்கின்றது என்று தான் சொல்கிறார்கள்.
1.கஷ்டத்தை நீக்குவதற்குச் சக்தி கொடுங்கள்…
2.கஷ்டத்தை நீக்கக்கூடிய வழியைக் கொடுங்கள்… என்று யாருமே கேட்க மாட்டேன் என்கிறார்கள்.

கீதையிலே சொன்னது… நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்

கஷ்டம் என்ற உணர்வு வரும் பொழுது கண்ணின் நினைவு பையனிடத்தில் செல்கின்றது. நான் சொல்லும் நல்ல எண்ணத்திற்கு இங்கே வருவதில்லை… விலக்கி விட்டு விடுகிறது. அப்பொழுது வேதனையைத்தான் வளர்த்துக் கொள்கின்றீர்கள்

கோவிலிலே சிலையைக் கண்ணுற்றுப் பார்க்கின்றோம்… “இந்தத் தெய்வம் நல்லதைச் செய்யும்…” என்ற எண்ணத்தை எண்ணும் பொழுது…
1.நல்லதைச் செய்யக்கூடிய அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.இந்தக் கோவிலுக்கு வருபவர்கள் எல்லாம் அந்த நன்மை பெற வேண்டும்
3.இந்தக் கோவிலுக்கு வரும் குடும்பம் எல்லாம் அந்த நல்ல நிலை பெற வேண்டும் என்று எண்ணினால்
4.நம் குடும்பத்தில் உள்ள அத்தனை பேரும் அதுவாக (நல்லதாக) ஆகின்றோம்.

எதை எண்ணுகின்றோமோ அதைத்தான் கண்ணிலே காட்டுகின்றது பையனுடைய எண்ணங்களை வைத்துக் கண்ணை அங்கே கொண்டு போய் வைத்துவிட்டுச் சிலையை பார்த்தால் என்ன நடக்கும்…?

அழுகை தான் வரும்

அப்பொழுது நாம் அதுவாக ஆகின்றோம்… மீண்டும் நாம் வேதனையைத் தான் சேர்க்க முடிகிறதே தவிர நல்லதை நாம் பெற முடிகிறதா…? கோவிலை நாம் யாராவது மதிக்கின்றோமா…?

நமக்குள் சூட்சமாக இருப்பதை அறிந்து… அதை எவ்வாறு சீராகச் செயல்படுத்த வேண்டும்…? என்று ஞானிகள் காரணப் பெயரை வைத்து ஸ்தல புராணங்களைக் காட்டி “இந்தக் குணத்தைச் சுவாசித்தால் உனக்கு அது நன்மை செய்யும்…! என்று சொல்கிறார்கள்.

நன்மை பெறுவதற்காகச் சிலையை வடித்துக் காட்டியுள்ளார்கள். பக்தி என்றால் இந்த ஆலயம் வருவோர் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும்… அந்தக் குடும்பம் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

நாம் கடன் கொடுத்திருப்போம். அவருக்கு நல்ல வருமானம் வேண்டும்… திருப்பிக் கொடுக்கக்கூடிய சக்தி பெற வேண்டும் என்று எண்ணினால் பணம் வந்து சேரும்.

ஆனால் மாறாக நாம் எப்படி எண்ணுவோம்…?

கடன் கொடுத்தேன்…! பாவிப்பயல் என்னை ஏமாற்றுகின்றானே… மோசம் செய்கின்றானே…! என்று கோவிலில் வந்து இப்படிச் சொன்னால் என்ன ஆகும்…?

யாருக்கு நாம் கடன் கொடுத்தோமோ… அவனை மேலே எழுந்திருக்க விடாதபடி… சம்பாதிக்க விடாதபடி… கடனைத் திருப்பிக் கட்ட முடியாதபடி… நம்முடைய எண்ணமே அங்கே தடையாகிறது.

அதுதான் நடக்கின்றது… நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றது அவனால் பணத்தைத் திரும்பக் கொடுக்க முடியாது. உங்களால் வாங்க முடிகிறதா…?

இது எல்லாம் கண்ணின் இயக்கங்களைப் பற்றி…
1.நாம் நுகரும் உணர்வுகள் ஆதன் வழி வாழ்க்கை எப்படி நடக்கின்றது…? என்பதை
2.நமது சாஸ்திரங்கள் தெளிவாகக் காட்டுகின்றது.

சரியான நேரத்தில் நல்லதைச் செயல்படுத்த முடியாதபடி போவதன் காரணம் என்ன…?

சரியான நேரத்தில் நல்லதைச் செயல்படுத்த முடியாதபடி போவதன் காரணம் என்ன…?

 

அன்றைக்கு எனக்கு வரம் கொடுத்தீர்கள் அல்லவா… அந்த வரத்தை இப்பொழுது கேட்கின்றேன். என்று கைகேயி தசரதனிடம் கேட்கின்றது அந்த வரத்தை நீங்கள் கொடுக்கவில்லை என்றால் உலகம் உங்களைத்தான் தூற்றும். சத்தியத்துக்கு விரோதமானவர் என்று உங்களைத் தான் சொல்லும் என்று சத்தியம் பேசுகிறது.

தசரதன் பல வகைகளிலும் யோசிக்கின்றான் என்ன செய்வது என்று…!

வரத்தைக் கொடுத்த பின் இப்படிக் கேட்கின்றாளே…! இராமனுக்குப் பட்டம் சூட்ட முடியாது போகின்றதே…! என்ற வேதனை அதிகரிக்கிறது.
1.ஆனால் அன்று வெற்றி பெற உதவியாக இருந்தது.. அப்போது மிகவும் சந்தோஷப்பட்டான்.
2.தன் உடலிலே இருந்து அது என்ன செய்கின்றது…?
3.தன் மகனுக்கே (பரதனுக்கு) பட்டம் சூட்ட வேண்டும் என்று அதன்படி அங்கே வேதனையைத் தான் உருவாக்குகின்றது.

தசரதன் பல வகைகளிலும் சிந்திக்கின்றான். அவனால் ஒன்றும் பேச முடியவில்லை… மௌனியாகின்றான்.

இதைப் போன்று தான் உங்கள் உடலில் வெறுப்பும் வேதனையும் அதிகமாகி விட்டால்
1.உங்களால் ஏதாவது பேச முடிகின்றதா…? நல்லதை ஏதாவது செயல்படுத்த முடிகின்றதா…?
2.வேதனை உணர்வுகள் எடுக்கப்படும் பொழுது நல்லதைச் செயல்படுத்த முடிகின்றதா..?
3.வேதனை என்ற உணர்வு வந்து விட்டாலே நல்ல பட்டாடைகளை… புதுத் துணிகளைக் கொடுத்து அணியச் சொன்னால் முடியுமா…?
4.அதை ஏற்றுக் கொள்ள முடிகின்றதா…? இல்லை.

உடலுக்குள் வேதனை அதிகமான பின் நல்லதைச் செயல்படுத்த முடியவில்லை. பல உணர்வுகள் நமக்குள் வந்து புலஸ்தியர்… புலனறிவைக் கொண்டு வரப்படும் பொழுது சந்தோசம் என்ற நிலையை உருவாக்க முடியவில்லை.

தன்னால் செயல்படுத்த முடியவில்லையே…! என்ற அந்த வேதனை உணர்வு தான் முன்னணியில் வருகின்றது.
1.அங்கே வேதனைப்படுத்தினான் முதலிலே
2.அந்த உணர்வைத் தனக்குள் வளர்த்தான்… ஏனென்றால் அதை இச்சைப் பட்டான்
3.மற்ற நாடுகளை அடிமைப்படுத்த வேண்டும் என்று பல கொலைகளைச் செய்தான்… அதை ரசித்தான்
4.அந்த உணர்வின் தன்மை பிரம்மகுருவாக ஆகி அதன் உணர்வே இங்கே செயல்படுத்துகின்றது.
5.தன் உடலுக்குள் இருந்து நல்லதைச் செயல்படுத்த முடியவில்லை…!

அவன் எண்ணியதை அங்கே செயல்படுத்த முடிகின்றதா…? அதற்கு மாறாகக் கைகேயி என்ன செய்கின்றாள்…?

இராமனைக் கூப்பிட்டு… “உன் தந்தை சொல்கின்றார்… நீ காட்டிற்குச் செல்… துறவறம் பூண்டு செல்…” என்று சொல்கிறது.

அதன்படி “தந்தை சொல்லிவிட்டார்” என்று தாய் என்ற நிலையில் தட்டாது அவன் சென்று விடுகின்றான்.

அவன் காட்டிற்குச் சென்ற பின் கைகேயி தன் மகன் பரதனைக் கூப்பிட்டு அனுப்புகின்றாள். அவனை வரும்படி செய்தபின் அங்கிருந்து வருகின்றான்.

நகருக்குள் வந்தபின் நாடே சூனியமாக இருக்கின்றது. ஒருவரும் பேசவில்லை… ஊமையாக மௌனமாக இருக்கின்றார்கள் சோர்வாக இருக்கின்றார்கள்…? ஏன்…? என்று வினாக்களை எழுப்புகின்றான்.

ஒருவரும் வாய் திறக்கவில்லை ஏனென்றால் நடந்த நிகழ்ச்சிகளைச் சொன்னால்… யார் செய்தது…? என்று சொல்லும் போது அதனால் பெரும் வெறுப்பாக வளர்ந்து விடும்…! என்று குற்றத்தைத் தான் ஏற்றுக் கொள்ளவில்லை.

எல்லோரும் அதனால் மௌனமாக இருக்கின்றார்கள்.

இராமனின் தாயாரிடம் கேட்டால் அதுவும் மௌனமாக இருக்கின்றது. மற்ற உறவினர்களைக் கேட்டாலும் அவர்களும் மௌனமாக இருந்து விட்டார்கள். யாரும் பதில் சொல்லவில்லை. மக்களிடத்திலோ சேனாதிபதிகளிடமோ யாரிடம் கேட்டாலும் எல்லாருமே மௌனமாக இருக்கின்றார்கள்.

கடைசியில் தன் தாயிடமே கேட்கலாம் என்று வருகின்றான்.

அப்பொழுதுதான் தாய் சொல்கின்றது. அன்று போர் செய்யப்படும் பொழுது எனக்கு வாக்குகளைக் கொடுத்தார். அந்த வாக்கின்படி தான் கேட்டேன் அவர் கொடுத்தார் கொடுத்த பின் வேதனையால் அவர் மடிந்து விட்டார்.

நான் தவறு செய்யவில்லை..!

இராமனுக்குப் பட்டாபிஷேகம் சூட்ட முடியவில்லை என்று ஏக்கத்திலே இறந்து விட்டார். உனக்குப் பட்டம் சூட்ட வேண்டும் என்ற நிலை வந்து விட்டது ஆகவே நீ இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்…! என்று தாய் சொல்கின்றது.

அப்போதுதான் பரதன் சொல்லுகின்றான் உன் தாயார் வீட்டிலும் இது தான் நடந்தது…!

யாரிடத்தில் அந்த வேதனை (முதலில்) உருவாகின்றதோ அது தாயாகின்றது. அதன் உணர்வுகள் எப்படி இயங்குகின்றது…? என்று உணர்வின் எண்ணங்கள் எதன் வலுவோ அதன் வழி எப்படி இயக்குகின்றது…? என்பதை இராமாயணத்தில் தெளிவாக காட்டுகின்றது.

1.உன் தாயார் வீட்டில் இதே தான் நடந்தது.
2.அதனின் மகளாக இருந்து நீ இங்கே வந்ததனால் எங்கள் சாம்ராஜ்யத்தையும் நீ சூனியம் ஆகிவிட்டாய்
3.அன்றே உன்னைக் கொன்றிருந்தால் இந்த நிகழ்ச்சிகள் இங்கே நடந்திருக்காது.

அதாவது எந்தத் தீமை என்ற நிலையை இச்சைப்படுகின்றோமோ அன்றே நாம் அதை அழித்திருத்தல் வேண்டும் என்று இங்கே தெளிவாகக் காட்டுகின்றார்கள்.

பத்தாவது நிலை அடையக்கூடிய தகுதி பெற்ற நாம்
1.அந்த உண்மையின் உணர்வை எடுக்காதபடி உடலுக்குள் தீமை புகுந்து விட்டால்
2.அது விஷம் என்ற நிலையில் அதனுடைய கடுமைகள் எப்படிச் செயல்படுகின்றது…? என்ற
3.உணர்வின் இயக்கத்தின் வலிமையை இராமாயணம் தெளிவாகக் காட்டுகின்றது

அசுர குணங்களிலிருந்து நாம் மீளக்கூடிய நன்னாள் தான் தீப ஒளித் திருநாள்

அசுர குணங்களிலிருந்து நாம் மீளக்கூடிய நன்னாள் தான் தீப ஒளித் திருநாள்

 

தீப ஒளி என்றால் ஒரு தீபத்தைப் பொருத்தினால் அந்த வெளிச்சம் மற்ற தன் அருகில் இருக்கக்கூடிய பொருள்களை எல்லாம் காணச் செய்கின்றது.

இதே போன்று நமது உயிர் நமக்குள் ஒளியாக இருந்து… நாம் எதை எண்ணுகின்றோமோ அந்தக் குணத்தை இந்த ஒளி கொண்டு அந்த உணர்வின் குணத்தையும் மணத்தையும்… “உணரும் வழியில் – மணத்தின் வழியில்” நமக்கு உணர்த்துகின்றது… அறியச் செய்கின்றது.

அதாவது
1.உணர்வின் வழியில் உணர்த்துகின்றது
2.மணத்தின் நிலையில் அறியச் செய்கின்றது.

நமது உயிர் நமக்குள் தீபமாக இருந்து… சுடராக இருந்து… நாம் எதை எண்ணுகின்றோமோ அப்பொருளை நுகர்ந்த உணர்வு கொண்டு உணர்வின் துணை கொண்டு அந்த உணர்ச்சியை ஊட்டி
1.உணர்வால் நம்மை அறியச் செய்கின்றது
2.மணத்தால் தன் அறிவைக் காக்கச் செய்கின்றது.

இந்தப் பேருண்மையை நாம் அனைவரும் அறிதல் வேண்டும் அதை நினைவுபடுத்தும் நன்னாள்தான் தீப ஒளி நன்னாள்

அதே சமயத்தில் மகரிஷிகள் காட்டிய அருள் வழியில்… கூட்டுத் தியானங்களிலிருந்து மீண்டும் மீண்டும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியைப் பெறக்கூடிய நன்னாளாக நாம் அமைத்திடல் வேண்டும்.

இன்றைய நாள்… எப்படி நாம் புத்தாடையைப் போர்த்தி அணிந்து மகிழ்கின்றோமோ… இதே போன்று தீமைகளை அகற்றிட்ட அருள் ஞானிகளின் உணர்வுகளை நம் நல்ல குணத்துடன் இணைத்து… இந்த வாழ்க்கையில் அந்த தூய்மைப்படுத்தும் உணர்வினை…
1.அந்த மகரிஷிகளின் உணர்வுகளைத் தெளிந்த மனதுடன் தெளிந்திடும் சக்தியாகப் போர்த்தச் செய்வது தான்
2.இந்த உபதேசமும் அதன் வழியில் தியானத்தின் மூலம் பெறக் கூடிய சக்தியும்.

பகைமை உணர்வுகள்… பாசத்தால் கேட்டறிந்த பார்த்துணர்ந்த வேதனை உணர்வுகள்… சந்தர்ப்ப பேதத்தால் எடுத்துக் கொண்ட கொதித்தெழும் கோப உணர்வுகள்… இவையெல்லாம் அசுர குணங்கள் கொண்டது.

அந்த மகரிஷிகள் காட்டிய அருள் வழிகளை நாம் அனைவரும் ஒருக்கச் சேர்ந்து… ஏகோபித்து அந்தச் சக்தியைப் பெற்று… நம்மை அறியாது இயக்கும் அத்தகைய அசுர குணங்களிலிருந்து மீட்டிடும் நன்னாளாக நாம் நினைவு கொண்டு… அதனின் வலு துணை கொண்டு… அசுர குணங்கள் தாக்காது நம்மைப் பாதுகாத்து வரவேண்டும்.

செல்வம் இருக்கும் எல்லோருக்கும் நிம்மதி இருக்கின்றதா…?

செல்வம் இருக்கும் எல்லோருக்கும் நிம்மதி இருக்கின்றதா…?

 

நாம் எடுக்கும் எண்ணங்கள் கொண்டு அவை உணர்வாக ஆனாலும் உடலுக்குள் சென்று அணுவின் தன்மையாக ஆன பின்
1.சுவாசித்த உணர்வுக்குள் மோதல்கள் எப்படி…?
2.இந்த உடலில் மனக்கலக்கங்கள் சஞ்சலங்கள் வெறுப்புகள் வேதனைகள் எப்படி எல்லாம் வருகின்றது…?

வீட்டில் செல்வம் இருக்கும் எல்லோருக்கும் நிம்மதி இருக்கின்றதா…?

தசரதன் (கைகேயியின் துணையால்) மற்றவர்களை அடக்கித் தன் சாம்ராஜ்யத்தை வெற்றி பெறச் செய்தான். இருந்தாலும் அதே உணர்ச்சிகள் இங்கே “கூனி” கைகேயியிடம் என்ன சொல்கிறது…?

1.இராமனுக்குப் பட்டம் சூட்டி விட்டால்… நீ வேலைக்காரியாக ஆகிவிடுவாய் என்று “உள் மனது… உணர்த்துகிறது…!” என்பதை
2.அதாவது அப்படித் தோன்றும் உணர்வுகளை உருவமாக்கிக் காவியங்களைப் படைத்து
3.கருத்தினை மக்களைத் தெளிவாக்குவதற்காகக் கூறப்பட்ட இந்த உபாயத்தை
4.அவரவர்கள் இஷ்டத்திற்கு எடுத்துத் தெளித்து விட்டனர்
5.அந்த உண்மையின் மூலக்கூறை அறிந்தோர் இந்த உடல் இச்சைக்குத் தான் பெற முடிந்தது.

தான் சாம்ராஜ்யத்தை ஆள வேண்டும்… மற்றவர்களை அடக்க வேண்டும்… என்ற உணர்வை இவரகள் எப்படிப் பெற்றானோ அதே உணர்ச்சி தான் தசரதச் சக்கரவர்த்திக்கும் வருகின்றது.

தன் மகனை நல்லவனை வளர்க்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றான். ஆனால் தன் உடலுக்குள் மற்றவர்களை துன்புறுத்திய உணர்வுகள் இந்த உயிரோடு வளர்ந்து… பத்தாவது நிலை அடையும் மனிதனாகத் தான் இருக்கின்றது.

ஆனால் எல்லாம் இணைந்து வரப்படும் போது என்னாகின்றது…?

இரண்டு மனைவி இருக்கக்கூடிய வீட்டிலே சக்களத்திப் போராட்டம் வருகின்றது. ஆனால் உயிரோடு (உயிர் தான் தசரதச் சக்கரவர்த்தி) சேர்த்துப் பலவிதமான உணர்வுகள் வரும் பொழுது போராட்டம் எத்தனை வரும் எப்படி இருக்கும்…?

ஒரு கணவனுக்கு இரண்டு மனைவி இருந்தால் எப்படி இருக்கும்…? மூன்று மனைவி வைத்திருந்தால் எப்படி இருக்கும்…?

அது போல் தான்
1.உயிர் என்று நிலைகள் வரும் பொழுது இதனோடு சேர்த்து
2.அத்தனை சக்திகளும் (மனைவியாக) சேர்த்து….இந்த உடலையே இயக்குகின்றது
3.அதனதன் உணர்வுகள்… அது அது பெறுகின்றது… அதிலே எதன் உணர்வு வலு ஓங்குகிறதோ அதன் வழி தான் நடக்கின்றது.

இராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கின்றான் தசரதன்.

ஏனென்றால் இராமன் அன்பு கலந்தவன் அரவணைக்கக்கூடியவன் பண்பு கொண்டவன் பரிவானவன் அறவழியில் அனைவரையும் அரவணைத்துச் செல்லக்கூடிய பொறுப்புடையவன் பொறுமையுடையவன் சிந்தித்து செயல்படுபவன் என்ற நிலையில் இருப்பினும் இராமனுக்குப் பட்டம் சூட்டுவதைக் கைகேயி விரும்பவில்லை.

அவனுக்குப் பட்டம் கிடைத்தால் என் மகன் பரதன் வேலைக்காரன் ஆகிவிடுவான். அவன் வேலைக்காரன் ஆனால் நானும் வேலைக்காரியாக ஆகிவிடுவேன் என்ற உணர்வுகள் அங்கே தோன்றுகின்றது

தசரதனுடைய எண்ணம் என்ன…? அடுத்த இராஜ்யம் வளர்ந்து விட்டால் அது தன்னை அடக்கிவிடும். அதற்குப் பதில் அவனை வலு இழக்கச் செய்து விட்டால் தனக்கே அந்த சாம்ராஜ்யம் சொந்தமாகின்றது.
1.அவன் எண்ணிய இந்த உணர்வின் சக்தி மனைவியாக இப்படி வருகின்றது
2.சாம்ராஜ்யத்தை ஆள்வதற்காக தசரதன் அதைச் செய்தாலும்
3.இவனுக்குள் இருக்கும் சாம்ராஜ்யத்தை இதுவே வந்து ஆளத் தொடங்குகிறது.

மற்றவர்களைத் துன்புறுத்தும் உணர்வு கொண்டு அதை ரசித்தான். ஆனால் இவன் உடலுக்குள் இவனைத் துன்புறுத்தும் தனமையாக அந்த “மனப்போராட்டம்” வருகின்றது.

ஓவ்வொரு நாளும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாம் எடுத்துக் கொண்ட எண்ணங்கள் உணர்வுகளால் உடலுக்குள் எத்தனை போர் முறைகள் வருகின்றது என்பதை இராமாயணம் தெளிவாகக் காட்டுகின்றது

அந்தக் காவியத்தின் கருத்தின்படி
1.ஒரு அணுவின் தன்மை எவ்வாறு செயல்படுகிறது…? என்பதை
2.பல உபதேசங்கள் வாயிலாக ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இணை சேர்த்து உங்களுக்கு விளக்கங்களைக் கொடுத்துக் கொண்டு வருகின்றேன்.

இது உங்களுக்குள் வளர்ந்தால் அதற்குண்டான ஞானம் கிடைக்கும். நீங்கள் அதைப் பெறக்கூடிய தகுதியாக உருவாக்குகிறேன்.

பிறவி இல்லாத நிலை அடைய வேண்டும் என்றால் இந்த உடலுக்குள் எத்தனை போர் முறைகள் வருகின்றது…? அதைச் சமாளிக்கக்கூடிய சக்தியும் அதற்குண்டான அருள் ஞானமும் உங்களுக்குத் தேவை.

அதற்குத் தான் இந்த உபதேசம்..!

பிரம்மமுகூர்த்த வழிபாடு மந்திரத்துடன் சென்று விட்டது…

பிரம்மமுகூர்த்த வழிபாடு மந்திரத்துடன் சென்று விட்டது…

 

உதாரணமாக வீட்டில் கணவன் மனைவிக்குள் சிறு சண்டை ஆகிவிட்டது என்றால் என்ன நடக்கிறது…?

நான் ஒன்றுமே செய்யவில்லை… “எதைச் செய்தாலும் கணவர் கோபப்படுகிறாரே…” நான் சும்மா தான் இருக்கின்றேன் என்று மனைவி சொல்கிறது

எதற்கெடுத்தாலும் நான் கோபப்படுகிறேன் என்று இப்படியே சொல்லிக் கொண்டிருந்தால் நான் என்ன தான் செய்வது என்று கணவர் சொல்வார். இப்படிச் சுவாசிப்பார்

ஆலயத்தில் காளிக்கு முன்னாடி புலியை போட்டுக் காண்பித்து இருக்கின்றார்கள். எதற்காக…?

கோபமான உணர்வை மனைவி முதலில் சுவாசிக்கப்படும் பொழுது கோபம் வந்துவிடுகிறது. அப்போது சும்மா இப்படியே சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே…! என்று திருப்பிச் சொன்னவுடன் கோபம் வருகிறது… கணவருக்கு…!

அப்போது என்ன நடக்கிறது…?

1.நமக்கு முன் எது இருக்கின்றதோ அது தான் இயக்குகின்றது… காளியாகி விடுகின்றோம்.
2.உடலான சிவம் ருத்ர தாண்டவம் ஆகிறது
3.இரு நான் உன்னை என்ன செய்கிறேன் பார்… உன்னை அடித்தால் தான் சரியாக இருக்கும் என்று வருகின்றது.

அவரவர்கள் உணர்வுக்குத் தகுந்த மாதிரி இப்பபடிப்பட்ட இயக்கங்கள் வருகின்றது. அதற்குத்தான் காளிக்கு முன்னாடி புலியைப் போட்டுக் காண்பிக்கின்றார்கள்.

ஆனால் ஒரு போக்கிரியைப் பார்த்தால் நமக்கு உடனே பயம் வருகின்றது அவன் எத்தனை திட்டினாலும் என்ன செய்தாலும் பேசினாலும் நம்மை ஏதாவது செய்து விடுவான் என்று பயப்படுகின்றோம்.

போக்கிரி அவன் அடித்து விடுவான் என்று தெரிந்த பின் நாம் அவனிடம் திருப்பி ஏதாவது சொல்கிறோமா… இல்லை. பயந்து ஒடுங்கி விடுகின்றோம்… கூடுமான வரை விலகிச் சென்று விடுகின்றோம்…! அவன் போக்கிரிப்பயல் நம்மை அடித்து விடுவான் என்று.

இங்கே வீட்டில்
1.நாம் கோபமாகப் பேசுகின்றோமே… வீட்டுக்காரர் பதிலுக்கு நம்மைத் திட்டுவார் என்ற எண்ணம் மனைவிக்கு இல்லை.
2.கோபித்துப் பேசுகின்றோமே… மனைவி பயந்து எதையாவது செய்து விடுமோ… எங்கேயாவது போய்விட்டால் என்ன செய்வது…? என்று
3அதற்கு உண்டான வழியைக் கணவனும் சொல்வதில்லை.

இது எல்லாம் நம் வாழ்க்கையில் நாம் எடுக்கும் குணங்கள் உடலுக்குள் மறைந்து எப்படிச் செயல்படுகிறது…? என்று இதையெல்லாம் காட்டுவதற்குத் தான் காளிக்கு முன்னாடி புலியைப் போட்டுக் காண்பிக்கின்றார்கள்.

ஆனால் கோபம் அதிகமாக ஆன பின் கணவனுக்கு இரத்தக் கொதிப்பாகி விடுகின்றது. வீட்டிலே கணவன் மனைவி சண்டையாகி இரத்தக் கொதிப்பான பின் அதைப் போக்குவதற்காகக் காளிக்கு நான் பூக்குழி இறங்கி “நேர்த்திக் கடன் செலுத்தப் போகிறேன்…” என்று வேண்டிக் கொள்கின்றார்கள்.

ஆனால் அக்கினி குண்டம் இறங்கினாலும் அது நிவர்த்தி ஆகின்றதா… அதுவும் இல்லை. பற்றாக்குறைக்கு சாந்தமாக இருக்கக்கூடிய ஒரு ஆட்டையும் அதற்குப் பலி கொடுத்து… அதைச் சமைத்துப் படையல் செய்து நாமும் சாப்பிடுகின்றோம்.

இது எல்லாம் என்ன செய்கிறது…? கோபம் என்ற உணர்வுகள் வளர்ந்த பின்பு அது நம் நல்ல குணங்களை எல்லாம் கொல்கின்றது.

கோபமான உணர்வைச் சுவாசித்தவுடனே உயிரிலே அபிஷேகம் ஆகி இந்த உணர்ச்சிகள் உடலுக்குள் சென்று இரத்தக் கொதிப்பாகிறது… கை கால் அங்கங்களை எல்லாம் சுருக்கி விடுகின்றது.

சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருக்கும். “அப்பாவுக்கு உணவு கொடுத்து வா…” என்று குழந்தையிடம் கொடுத்து அனுப்பும் போது சிறிது நேரம் ஆகி விட்டால் போதும்.

நான் இப்படி அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றேன்… எனக்குச் சாப்பாட்டை நேரத்தில் கொண்டு வருவதற்கு முடியவில்லையா…? என்று கோபம் அதிகமாக வரும். உணவை உட்கொள்வதற்கு முன் பயங்கரமான கோபம் வரும்.

புலி ஆட்டை அடித்து உட்கொண்டாலும் உர்ர்ர்…உர்ர்ர்… என்று உறுமிக் கொண்டு தான் சாப்பிடும். அதைப் போல் புலிக்கு உண்டான குணங்கள் எல்லாம் இங்கே வந்துவிடும்.
1.கோபத்தின் உணர்வு உச்சகட்டம் அடைந்த பின் இப்படித்தான் இயக்கம் ஆகின்றது
2.இதை மாற்ற வேண்டுமா இல்லையா…?

கோபப்படுவோரையோ வேதனைப்படுவோரையோ அவருடைய உணர்வை நுகர்ந்தால் உயிரான ஈசனிடம் பட்டு இங்கே அது அபிஷேகமாகி அந்த உணர்ச்சிகள் இயக்கப்படும் பொழுது நமக்கும் கோபம் வருகிறது.

நம் உடல் ஒரு அரங்கம்… சுவாசித்தது உயிரிலே பட்டபின் அரங்கநாதன்… அந்த நாதம் வருகின்றது அந்த உணர்ச்சிகள் உடலை ஆளுகின்றது ஆண்டாள்.
அத்தகைய கோப உணர்ச்சி அடுத்தவரை உதைக்கத் தான் சொல்லும்
2.அது தான் ஆட்சி புரியும்.

சூட்சமத்தில் நடக்கும் இயக்கங்களை உருவமாக்கி… மனித வாழ்க்கையில் “நாம் எப்படித் தெளிந்து நடக்க வேண்டும்…?” என்பதைக் காட்டுவதற்குத் தான் ஆலயத்தில் பல உருவ அமைப்புகளைக் காட்டுகின்றார்கள் ஞானிகள்.

அடிக்கடி நாம் கோபித்தால் நம்முடைய நல்ல குணங்களை அது கொன்றுவிடும் என்பதற்காகக் கோபம் வரும் பொழுதெல்லாம் அதை மாற்றி அமைக்க… அக்கினி குண்டம் இறங்கச் சொல்கின்றார்கள்.

ஏன்…? அக்கினி குண்டம் எது…?

இதையெல்லாம் வென்ற அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக ஆனான்.
1.அதிகாலையில் 4:00 மணிக்கு எழுந்து குளித்த பின்
2.அந்தப் பிரம்ம முகூர்த்த வேளையில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கும்படி சொல்கின்றார்கள்.
3.துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து எல்லோருக்கும் அது கிடைக்க வேண்டும் என்று எண்ணச் செய்து பகைமைகளை அகற்றும்படி செய்கிறார்கள்

ஆனால் காலத்தால் அது எல்லாம் மாறிவிட்டது யாரும் அதை எடுப்பதில்லை.

1.காலையில் குளித்த பின் உன் இஷ்ட தெய்வத்தைக் கும்பிட்டுப் பூஜை செய்து கொள்… போ…
2.நெய்வேத்தியங்கள் வைத்து மந்திரத்தைச் சொல் போ…!
3.காலையில் இப்படிச் செய்தால் உனக்கு அந்தத் தெய்வம் சக்தி கொடுக்கும் என்று இப்படித்தான் சொல்லி மாற்றிவிட்டார்கள்.

பூஜையில் மந்திரத்தைச் சொல்லும் பழக்கம் தான் வளர்ந்திருக்கிறது. அந்த நேரத்தில் யாராவது தொல்லைப்படுத்துபவனோ தவறு செய்தவனோ வந்தால்
1.நான் உனக்காக வேண்டி இவ்வளவு செய்கின்றேன் தாயே
2.நீ இதைப் பார்க்கின்றாயா… இல்லையா…! உனக்குக் கண் தெரிகிறதா…? என்று அந்த நேரத்தில் இதைத்தான் வளர்க்கின்றோம்
3.தவறைத் தான் வளர்த்துக் கொண்டிருக்கின்றோம்… ஆலயத்தின் பண்புகளை நாம் மதிக்கின்றோமா…?

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நல்லதை உருவாக்க வேண்டும் என்பதற்குத்தான் “அஷ்டமி நவமி…”

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நல்லதை உருவாக்க வேண்டும் என்பதற்குத்தான் “அஷ்டமி நவமி…”

 

1.கண் வழி தான் நாம் பெரும் பகுதி அனைத்தையும் கவருகின்றோம்… அது பதிவாக்குகின்றது
2.கண்ணின் காந்தப் புலனறிவு எதைக் கவர்கின்றதோ அதையே நம் ஆன்மாவாக மாற்றுகின்றது
3.இந்த உடலுடன் இணைந்தது எதுவோ அது பதிவானபின் உயிர் அந்த உணர்வின் தன்மை இழுக்கின்றது.

இப்படி நமக்குள் எத்தனை விதமான அணுக்கள் இருப்பினும் கண் கொண்டு பதிவாகி உணர்வின் தன்மை நாம் எதை எண்ணுகின்றோமோ காற்றிலிருந்து அதைப் பிரித்து நம் ஆன்மாவாக மாற்றுகின்றது.

மாற்றிய பின் “இந்த உயிர் தான் அதை இயக்குகின்றது… இது நவமி. அதாவது (உயிர் நுகர்ந்த உணர்வுகள்) எதன் உணர்ச்சிகளை எண்ணுகின்றோமோ “எண்ணம் நவமி…”

1.அஷ்டமி…! கண்கள் வழியாக நாம் ஒன்றை நுகரப்படும் பொழுது அது ஆன்மாவாக மாறினாலும் அது இயக்கச் சக்தி இல்லை…!
2.உணர்வின் தன்மை நுகர்ந்து உயிரிலே பட்டபின் இயக்கமாகிறது… எண்ணங்கள் தோன்றுகிறது நவமி.
3.ஆக… அஷ்டமி என்றாலும் “உயிருடன் ஒன்றி” அந்த உணர்வின் அறிவாக நாம் தெரிந்து கொள்வது தான்.

ஆகையினால் அஷ்டமி என்றால் இருள் சூழ்ந்த நிலைகள். இருளில் எதையும் செய்யாதீர்கள் என்பார்கள்.

ஆனால் இப்போது நாம் என்ன செய்கின்றோம்…? நவமியில் எதுவும் நல்லதைச் செய்யக்கூடாது அஷ்டமியிலும் எதையும் செய்யக்கூடாது… என்று இருக்கின்றோம்.

எதன் உணர்வின் தன்மை சேர்த்து உண்மையின் உணர்வை அறிகின்றோமோ அந்த அறிந்து கொண்ட உணர்வாக… அறியச் செய்வது யார்…? இந்தக் கண்கள் தான்.

ஆகவே
1.அறிந்து கொள்ளும் அறிவின் தன்மை கொண்டு எந்த நல்லதை எண்ணுகின்றோமோ அதன் அறிவாக நம் உயிர் இயக்கும்..
2.”அஷ்டமி… நவமி…” என்கிற பொழுது எதன் தெளிவின் தன்மை வருகின்றதோ அவ்வாறு இருக்கும்.

ஒருவர் வேதனைப்படுகின்றார்… அதை நாம் உற்றுப் பார்க்கும் போது அஷ்டமி என்றாலும் அதன் உணர்வுகள் இருள் சூழ்ந்த நிலைகள் பெற்றது. ஆகவே இருள் சூழச் செய்யும் “அந்தத் தீயதை எண்ணாதே…” என்று தான் சாஸ்திரங்கள் கூறுகின்றதே தவிர இவர்கள் சொன்னது போன்று அல்ல.

வேதனை அந்த இருள் சூழ்ந்த நிலையானால் உயிரில் படும் போது இருள் சூழச் செய்கின்றது. உயிரிலே பட்ட பின் நவமி ஒன்பதாவது நிலைகள் என்றாலும் வேதனை உணர்வுகள் நமக்குள் வருகின்றது. அந்த வேதனையை நவமி காலங்களில் எண்ணக்கூடாது

1.அஷ்டமி… இருள் சூழும் உணர்வுகளை கண் கொண்டு அதைத் தெரிந்து கொண்ட பின்
2.தீமையை நீக்கும் உணர்வுகளை நாம் நுகர்ந்து அறிவதற்குத் தான் இந்தக் கண்கள் பற்றி இங்கே உணர்த்தப்படுகிறது.

ஆனால் அந்தக் காலங்களில் நாம் நல்லது செய்ய வேண்டும் நல்லவராக ஆக வேண்டும் நல்ல பலன்களைப் பெற வேண்டும் என்று இந்த அடிப்படையில் எண்ணினால் அதன் உணர்வின் தன்மை நமக்குள் அதனின் அறிவாக அது இயக்குகின்றது

இதனால் தான் வேத நூல்களில் மூலங்களை இப்படிக் கொடுத்தது…

ஆனால் மூலத்தை மற்றவர்கள் யாரும் அறிந்து கொள்ளாதபடி அந்த இரண்டு நாளும் நல்லதை எண்ணாதே… நல்ல காரியத்தைச் செயல்படுத்தாதே…! என்று மாற்றி விட்டார்கள்.

நல்ல காரியத்தை நாம் முழுமையாகச் செய்தால் அது சந்தோஷப்படஸ் செய்யக்கூடியது. காரணம் நம் உயிர் அதன் உணர்வின் உணர்ச்சியாக அதை இயக்குகிறது.

அதே போன்று
1.ஒருவர் வேதனைப்படுகிறார் என்று கண் கொண்டு உற்று நோக்கினாலும்
2.அந்த உணர்வை நுகராதபடி அவன் நல்லவனாக வேண்டும் என்று அந்த உயர்ந்த உணர்வை எடுக்க வேண்டும்.

அஷ்டமி நவமி காலங்களிலே நல்ல காரியங்களைச் செய்து அந்த உணர்வின் தன்மை தெளிவாக்க வேண்டும் என்று தான் வேத நூல்களில் தெளிவாகக் கூறப்படுகின்றது.

சொல்வது உங்களுக்கு அர்த்தமாகின்றது அல்லவா…!

இருண்ட நிலைகளிலிருந்து நம் கண்தான் அங்கே சரியான வழியைக் காட்டுகின்றது உடலுக்குள் இருக்கும் உணர்வின் தன்மையை நாம் ஒரு தீமை என்ற நிலைகளைப் பார்க்கப்படும் பொழுது உயிர் அகக்கண்ணாக இருந்து அதை வெளிப்படுத்துகிறது.

அதனால் தான் நம் கண்களுக்கு கண்ணன் என்று தெளிவாக சாஸ்திரங்கள் கூறுகின்றது

ஆகவே கண் கொண்டு நாம் அந்த்த் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைக் கவர்தல் பெறுதல் வேண்டும். அந்தச் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்த வேண்டும்.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நமக்குள் நல்லதை இப்படி உருவாக்க வேண்டும் என்பதற்குத் தான் அஷ்டமி நவமி…!

இராமாயணம் சாதாரணமானது அல்ல

இராமாயணம் சாதாரணமானது அல்ல

 

சந்தர்ப்பத்தால் நமக்குள் பதிவான உணர்வுகள்… அது எதன் வலுவோ அதனைக் கொண்டு நம்மை இயக்குகின்றது. எதன் உணர்வு நம் உடலுக்குள் அதிகமாகின்றதோ “உள் நின்று இயக்குவது தான்…” அதன் தன்மை.

அதனைத் தான் தசரதச் சக்கரவர்த்திக்கு வசிஷ்டர் பிரம்மகுரு என்று இராமாயணத்தில் தெளிவாகக் கூறுகின்றனர்.

ஒருவன் சண்டை இடுகிறான் என்றால்
1.அது என்ன…? என்று வேடிக்கை பார்க்க மனதினைச் செலுத்துகின்றோம்…
2.அதனை நாம் கவர்கின்றோம்… அது தான் வசிஷ்டர்.

எதை உற்றுப் பார்த்து அந்த உணர்வின் தன்மை கவருகின்றோமோ… கவர்ந்த உணர்வுகள்
1.நம் உயிரிலே பட்டு அந்த உணர்ச்சிகள் இயக்கப்பட்டாலும்…
2.இந்த உணர்வுகள் நமக்குள் பிரம்மமாகி (சிருஷ்டியாகி) விடுகின்றது

கவர்ந்து கொண்ட உணர்வுகள் நம் இரத்தத்தில் கலந்து அது பிரம்மமாக்கும் தன்மை பெறுகின்றது என்பது தான் வசிஷ்டர் பிரம்மகுரு. பத்தாவது நிலை அடையக்கூடிய தசரதச் சக்கரவர்த்திக்கு வசிஷ்டர் பிரம்மகுரு.

ஒருவனின் செயலை நாம் பார்க்கும் போது
1.அவன் என்ன செய்கின்றான்… ஏது செய்கின்றான்…?
2.தவறு செய்கின்றானா…? குற்றங்கள் செய்கின்றானா…?
3.ரொம்பவும் பிழைகள் செய்கின்றானா…? பிறரை வேதனைப்படுத்துகின்றானா…? என்று உற்று நோக்கினால்
4.அந்த உணர்வின் சக்தி நமக்குள் பதிவாகி உயிரிலே பட்டபின் வசிஷ்டர் பிரம்மமாகின்றது.

சூரியனிலிருந்து வெளிப்படக்கூடியது வெப்பம் காந்தம் விஷம். அதிலே காந்தம் ஒரு சத்தினைக் கவர்ந்து கொண்டால் வசிஷ்டர்… ஆண்பாலாக மாறுகின்றது.

ஆண்பாலாக மாறும் பொழுது பிரம்மம் என்று பெயர். பிரம்மாவின் மனைவி சரஸ்வதி… எந்தச் சத்தின் தன்மை அது இயக்குகின்றதோ “அந்த ஞானத்தின் வழி அந்த அணுக்கள் இயக்கும்…” என்று பொருள்.

1.இந்த உலகம் எப்படி இயக்குகின்றது…? இயற்கை நம்மை எப்படி இயக்குகின்றது…?
2.எதன் வழி நாம் செல்கின்றோம்…?
3.நாம் குற்றவாளியா… குற்றமற்றவர்களா…? குற்றங்கள் செய்வதன் காரணம் என்ன…?
4.குற்றத்தின் இயல்பை உண்டாக்குவது எது…? என்ற நிலையில்
5.நம்மை நாம் அறிந்து கொள்வதற்குத் தான் இதை முதலிலே உங்களுக்குத் தெளிவாக்குகின்றோம்.

இந்த உண்மையின் இயக்கங்களை நாம் அறிய வேண்டியது மிகவும் அவசியம்.

உடலில் தூசி பட்டால் பிசு…பிசு… என்று ஆகிறது. ஒரு பக்கம் மிளகாய் தூற்றுகின்றனர் என்றால் அது நம் மீது பட்டால் எரிகின்றது விஷத்தன்மையான பொருள்கள் நம் மீது பட்டு விட்டால் அரிக்கின்றது.
1.நாம் தவறு செய்கின்றோமா…? இல்லை.
2.ஆனால் காற்றுடன் காற்று கலந்து வந்து நம் மீது மோதும் பொழுது இத்தகைய உணர்ச்சிகளைத் தருகிறது.

இதே போல் தான் நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் செல்லப்படும் போது “தீமை என்ற உணர்வுகளும்” நமக்குள் வருகிறது. இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒருவரைக் குற்றவாளியாக ஆக்குவதற்கு முன்
1.அந்தக் குற்றங்கள் எப்படி எதனால் செயல்படுத்தப்படுகிறது…?
2.அவரா…? சந்தர்ப்பமா… சூழ்நிலையா…? என்று இந்த உணர்வுகளைத் தெரிந்து
3.அந்தக் குற்றத்திலிருந்து அவர்கள் விடுபட வேண்டும்…
4.தெளிந்த மனம் பெற வேண்டும்… தெளிவான நிலை பெற வேண்டும் என்று உணர்வினை நுகர்ந்து பழக வேண்டும்.

அப்படி அல்லாதபடி அவர் குற்ற இயல்புகள் நமக்குள் வந்துவிட்டால் அதன் உணர்வு நம்மை இயக்கி… அதன் உணர்வினை நாம் அறிந்து… அதன் உணர்ச்சியின் தன்மை நம் இரத்த நாளங்களில் கலக்கப்படும் பொழுது நாம் கவர்ந்தது அனைத்தும் வசிஷ்டர்.

இரத்தத்தில் கலந்து கொண்ட பின் இந்திரலோகம் என்றாலும்… அதைத் திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது பிரம்மமாகி உடலுடன் ஐக்கியமாகி விடுகிறது.

பிரம்மகுருவின் மனைவி அருந்ததி…! இராமாயணத்தில் இது தெளிவாக கூறப்பட்டுள்ளது. காரணம் இராமாயணம் சாதாரணமானது அல்ல.

1.நாம் நுகர்ந்த உணர்வின் உணர்ச்சிகளுக்கொப்ப எண்ணங்கள் எப்படி வருகின்றது…?
2.எண்ணத்தின் உணர்ச்சிகள் உடலை எப்படி இயக்குகின்றது…?
3.அந்த உணர்ச்சியின் உணர்வுகள் நம் உடலில் எப்படி விளைகின்றது…? என்பதை
4.இராமாயணக் காவியத்தில் வான்மீகி உணர்த்தியுள்ளார்.

விண்ணில் கோள்கள் கரைவது போல் மண்ணுலகில் வரும் தீமைகளை நாம் கரைக்கப் பழக வேண்டும்

விண்ணில் கோள்கள் கரைவது போல் மண்ணுலகில் வரும் தீமைகளை நாம் கரைக்கப் பழக வேண்டும்

 

நாங்கள் பார்ப்பவர்களுக்கெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் அவர்கள் பிணிகளில் இருந்து விடுபட வேண்டும் மெய்ப்பொருளுடன் ஒன்ற வேண்டும் அவர் வாழ்க்கையில் மகிழ்ந்திடும் நிலை பெற வேண்டும் என்று எண்ணி எடுத்து அவர்களுக்கு அங்கே பாய்ச்ச வேண்டும்.

அதே சமயத்தில் சந்தர்ப்பவசத்தால் ஒருவருக்கொருவர் பகைமைகள் யார் யாரிடமெல்லாம் உண்டானதோ
1.அவர்களுக்கெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும்
2.அவர்கள் குடும்பத்தில் எல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்
3.அவர்கள் நலமாக வாழ வேண்டும்
4.அவர்கள் தொழில் நன்றாக இருக்க வேண்டும்
5.அவர்கள் ஒன்று சேர்ந்து வாழும் நிலைகள் பெற வேண்டும் என்று நாம் அவர்களை நினைக்க வேண்டும்.

இப்படி ஒருவருக்கொருவர் நம்மை அறியாது புகுந்த தீய வினைகளுக்கு உணவு கொடுக்காதபடி இப்படி எண்ணி ஒதுக்கிவிட வேண்டும். இதே போன்று அவர்களும் எண்ண வேண்டும்.

இப்படி இருவருமே பகைமை ஊட்டும் உணர்வுகளை இழுக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் இல்லை என்றால் அது விலகி அப்பால் சென்று விடும்.

நம் பிரபஞ்சத்தை எடுத்துக் கொண்டால்
1.சூரியனின் ஈர்ப்பு வட்டத்தில் தான் கோள்கள் சுழன்று கொண்டிருக்கிறது…
2.காந்த ஈர்ப்பு வட்டத்திலே தான் அது சுற்றி வருகின்றது
3.ஆனால் சூரியனின் ஈர்ப்பின் (காந்தம்) நிலைகள் இழந்து விட்டால் கோள்கள் எங்கோ ஓடிச் சென்று விடும்.
4.ஆரம்பத்தில் எந்த சூரியனை மையம் கொண்டு சுழற்சி நிலைகள் பெற்றதோ அதன் ஈர்ப்புக்குள் சென்று கரைந்து விடும்

ஒரு பிரபஞ்சத்தில் 2000 சூரியக் குடும்பங்கள் இருக்கின்றது
1.அதனுடைய அடிப்படை வரிசையிலே “சுழல் போன்று” ஒன்று (BLACK HOLE) உண்டு.
2.சூரியனின் சக்தி முடிந்தபின் (முதுமை அடைந்த பின்) அந்தச் சுழலுக்குள் ஈர்க்கப்பட்டு
3.தனது இனத்தைக் கவர்ந்து மீண்டும் கலக்கி பிரபஞ்சத்தில் பறக்கச் செய்யும்.
4.மற்ற இனத்திற்கு இதை உணவாகக் கொடுத்து அதை வளரச் செய்யும்.

இது இயற்கையின் சில நியதிகள்.

இது எல்லாம் குருநாதர் எனக்குத் தெளிவாக காட்டிய நிலைகள். நீ கோள் என்றும் நினைக்கின்றாய் சூரியன் என்றும் நினைக்கின்றாய் அதுவும் கோள்தான் அதனின் கடைசி நிலைன் இப்படி ஆகும் என்றார்.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால் விண்ணிலே கரைவது போல் மண்ணுலகில் வரும் தீமைகளை நாம் கரைக்க வேண்டும்.

அதைத் தான் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்துத் தீமைகளை அகன்று செல்லச் செய்யும் நிலையாக அதைக் கரைக்கும் (கடலில்) நிலையாக “விநாயகர் சதுர்த்தி” என்று காட்டியுள்ளார்கள் ஞானிகள்.

நம் எண்ணத்தால் எடுத்தது அணுக்களாக விளைந்திருக்கின்றது. அதனின் ஈர்ப்பாக… அந்த இழுக்கும் சக்தி இல்லாதபடி நாம் தடைப்படுத்தி பட்டால் அது இந்த பூமியின் சுழற்சியின் தன்மையில் விலகிப் போய்க்கொண்டே இருக்கும்.

உதாரணமாக கடல் அருகிலே சென்றால் அது அப்படியே இழுக்கும். அலைகள் மோதி மறுபடியும் தனக்குள் இழுக்கும். உள்ளே இழுக்கும் பொழுது எல்லாவற்றையும் இழுத்து உள்ளே கொண்டு செல்லும்.

இதைப் போன்று எந்தெந்த மனிதன் பால் நாம் உணர்வின் தன்மை எடுத்து வைத்திருக்கின்றோமோ அந்த உணர்வின் தன்மை படர்ந்த பின் எதற்கும் சிக்கவில்லை என்றால் செடி கொடி மரங்கள் இருக்கிற பக்கம் செல்ல முடியாது. அது செவிட்டில் அறைந்தது போன்று அடித்துத் தள்ளிவிடும்.

மரம் செடி கொடிகளுடைய சத்து தான் மனிதனுக்குள் எண்ணங்களாக வந்தது இருந்தாலும் பிற தீமையின் உணர்வுகள் கலந்து அது வேறு சுவை கொண்ட நிலையாக மாற்றியது

ஆகையினால் மனிதனால் உருவாக்கப்பட்ட தீய வினைகள் அதாவது அந்தத் தீமையின் அலைகள் இங்கே போகாது.

விண்ணின் நிலைகளில் சூரியனின் பிடிப்பில்லை என்றால் அதன் ஈர்ப்பில் உள்ள கோள்கள் எங்கே போய் மடிகிறதோ சொல்ல முடியாது அதைப் போன்று
1.சுழற்சியின் ஈர்ப்பு வட்டம் தான் பெரும் கடல்… அது முதலில் உருவானது
2.கடல் அதைத் தனக்குள் எடுத்துக் கரைத்து மீண்டும் அது வெளிப்படும்.
3.அதாவது மனிதர்கள் ஒதுக்கித் தள்ளிய தீய வினைகள் கடலின் ஈர்ப்புக்குள் சென்று அது மூழ்கிவிடும்.

இதை உணர்த்துவதற்குத் தான் காவியத்தில் கருத்தினைச் சொல்லி விநாயகர் சதுர்த்தி…! களிமண்ணில் சிலையாகச் செய்து தீமைகளைக் கரைத்திடும் நிலையாகக் கடலில் கரைப்பதாகக் காட்டினார்கள் அன்றைய ஞானிகள்.

தனக்குள் உறைந்த தீய வினைகளை பிறர் மேல் கொண்ட பகைமைகளைக் கரைக்கச் சொன்னார்கள்.

1.நாம் பார்க்கும் எல்லோரையும் நலமாக்க வேண்டும் என்று
2.அந்தப் பகைமைகளுக்கு இங்கே இடம் இல்லாதபடி செயல்படுத்த வேண்டும்
3.உலக மக்கள் அனைவரும் இப்படிச் செயல்படுத்தும் பொழுது தீமைகள் இங்கே இருக்காது… தீமைகள் கரைக்கப்படுகின்றது.

ஞானிகள் காட்டிய வழியிலே… சாஸ்திரப்படி இது பேருண்மை.

உடலுக்குள் மாறிக் கொண்டே இருக்கும் செயல்கள் – இந்திரஜித்

உடலுக்குள் மாறிக் கொண்டே இருக்கும் செயல்கள் – இந்திரஜித்

 

பல கோடிச் சரீரங்களில் தீமைகளை நீக்கித் தீமைகளிலிருந்து விடுபடும் உணர்வுகளைப் பெற்று வளர்ச்சியாகி வந்த நிலைகள் தான் மனிதனுக்குள் இருக்கும் நல்ல குணங்கள்… “தேவாதி தேவர்கள்…”

சித்திரபுத்திரன் கணக்குப் பிள்ளை (கணக்கு எழுதுகிறான்) என்று காட்டியுள்ளார்கள். நம் கண் கொண்டு எதை எல்லாம் உற்றுப் பார்க்கின்றோமோ அந்த உணர்வின் தன்மைகள் தனக்குள் (உடலுக்குள்) அமைக்கின்றது… அது தான் சித்திரபுத்திரன்.

அதாவது…
1.நாம் கண் கொண்டு பார்த்த உணர்வுகள் உயிரின் துணை கொண்டு புத்திரனாக (அணுக்களாக) விளைகின்றது
2.அதனின் (சித்திரபுத்திரன்) கணக்கின் பிரகாரம் நமக்குள் எண்ணங்கள் தோன்றுகின்றது.

உதாரணமாக சந்தர்ப்பத்தில் நாம் ஒரு கடும் விஷம் கொண்ட பாம்பைப் பார்த்து விடுகிறோம். பார்த்த பின் பாம்பின் நினைவு அதிகமாகிறது. காரணம் அதைக் கூர்மையாக உற்றுப் பார்க்கின்றோம்… பதிவாகி விடுகின்றது.

பாம்பின் நினைவு நமக்குள் ஆழமாகப் பதிவான பின்… அச்சத்தின் உணர்வுகள் அடிக்கடி வரப்படும் போது நஞ்சின் தன்மையாக உடலுக்குள் வளர்கின்றது.

இந்த நஞ்சின் தன்மை வளரப்படும்போது நமக்குள் இருக்கக்கூடிய தேவாதி தேவர்கள் அதாவது மனிதனை உருவாக்கிய நல்ல குணங்கள் அஞ்சுகின்றது… இனி என்ன நடக்குமோ…? என்று…!

1.பாம்பைப் பார்த்த நிலைகளில் நாம் எண்ணும் உணர்வுகள் இந்திரலோகமாக (இந்திரீகம்) மாறுகின்றது.
2.இந்திரீகம் என்றால் உணர்வின் கருக்களாகி அணுக்களாக உருவாவது
3.இந்திரலோகத்தில் இப்படி அணுவாகும் பொழுது இந்திரஜித்…!
4.அது எதுவாக உருவாக்குகின்றதோ அதன் செயலாக்கமாக அது உருவாக்கும்
5.இந்திரஜித் என்றால் மற்ற தீமைகளை விளைய வைக்கும் அதனின் செயலாக்கங்களாக “மாறிக் கொண்டே இருக்கும்…”

அது அதற்கு உண்டான… காரணப் பெயர்களை இப்படி வைத்து நம் உடலுக்குள் இயங்குவதைத் தெளிவாகக் காட்டுகின்றது நம் சாஸ்திரங்கள்.

நம் கண்களால் பார்த்தது சித்திரபுத்திரன் ஆகிறது. எந்த உருவை நாம் பார்க்கின்றோமோ அந்தச் சித்திரம் தனக்குள் அது இயக்கக்கூடிய “புத்திரனாக மாறியது” (இந்திரஜித்).
1.அந்தப் பாம்பை பார்த்த பின் அச்சத்தால் எவ்வளவு தீமைகளை நுகர்ந்தோமோ அந்த உணர்வின் தன்மை இங்கே விளையச் செய்கிறது.
2.அந்த விஷத்தின் தன்மை ஐயோ பாம்பு…! வீட்டிற்குள் வந்து விடுமே… கடித்துவிடுமே…! என்ற உணர்வு வருகிறது
3.இந்த எண்ணங்கள் வரப்படும் பொழுது இந்த எண்ணமே நமக்குள் எமனாகின்றது.
4.சித்திரபுத்திரனின் கணக்கின் பிரகாரம் எமன் தண்டனை கொடுக்கின்றான் .

கண்ணிலே பார்த்த அந்தப் பாம்பின் உணர்வுகள் அச்சப்படும் நிலையில் எதை அதிகமாக வளர்க்கின்றோமோ அந்த உணர்வே நமக்குள் எமனாகின்றது.

சிந்தனையற்ற நிலையில் அவ்வாறு இயக்குவதை “எமன் எருமை மீது வாகனமாக வருவதாகக் காட்டுகின்றார்கள்…” சிந்தனை இல்லாதபடி
1.ஐயோ பாம்பு வருகிறது… என்ற உணர்வை… அந்த விஷத்தைத் தான்
2.வேதனையை எண்ணுகின்றோமே தவிர… “வேதனையை நீக்கும் வலுவை” நாம் எடுக்கவில்லை.

இதனையும் நம் சாஸ்திரங்கள் தெளிவாகக் காட்டுகிறது. சிவனைக் காட்டி “சிவனுக்கு முன் நந்தீஸ்வரனை…” வைத்துக் காட்டுகிறார்கள்.

நம் உயிர் ஈசன் ஆகின்றது… நான் எண்ணிய உணர்வுகள் உயிரால் உருவாக்கப்படும் பொழுது அதுவும் ஈசனாக இருந்து நம்மை இயக்குகின்றது. நந்தீஸ்வரா…! எனக்குள் சென்று அது எனக்குள்ளே உருவாக்கும் நிலைகள் பெறுகின்றது..

எந்தக் குணத்தை எண்ணுகின்றோமோ அது அணுக்களாக உருவாகப்படும் பொழுது அதுவே உடலாகின்றது… சிவம் ஆகின்றது. சிவனுக்கு நந்தீஸ்வரன் கணக்குப்பிள்ளை…!

சாஸ்திரங்கள் இதை எல்லாம் நமக்குத் தெளிவாக காட்டுகின்றது அதில் தவறு இல்லை. அதன் வழி வளர்ந்தவர்கள் நாம் இதை எல்லாம் புரிந்து கொண்டால் போதும்.

ஆலயத்தில் காட்டப்படுவது அனைத்தும் துவைதம்…!
1.கண்களால் அந்தத் தெய்வ உருவங்களைப் பார்த்து… நினைவுகள் அந்த ஞானிகளுடன் ஒன்றும்போது
2அவர்கள் காட்டிய நல் வழியினை நுகர்ந்து வாழ்க்கையில் வரும் தீமையை அகற்றிடும் சக்தியாக நமக்குள் விளையும்.

தீமை அகற்றிடும் சக்தி உங்களுக்குள் வளர வேண்டும் என்பதற்குத்தான் இந்த விளக்கங்களைக் கொடுக்கின்றோம்.

குருநாதர் எனக்குச் சக்தி கொடுத்தார்…! என்று நீங்கள் எண்ணலாம் ஆனால் இந்த அருள் வழியில் தான் அந்தச் சக்தியினைப் பெறக்கூடிய தகுதியை உங்களுக்கு ஏற்படுத்துகின்றோம்.