என்னுடைய சேவை

என்னுடைய சேவை

 

அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ கெட்டதைப் பார்க்கிறோம் சங்கடப்பபடுவோரைப் பார்க்கின்றோம்… அது பற்றிச் சொல்வதையும் கேட்கிறோம்.
1.இது எல்லாம் கண்ணில் உள்ள கருமணியில் பட்டுத் தான் உடலுக்குள் போகும்.
2.வேதனைப்பட்ட உணர்வுகள் கருமணிகளிலே பட்டு இழுத்து அதில் உள்ள வயர் (WIRE) எல்லாவற்றுக்கும் அனுப்புகிறது
3.கருமணிகளில் பட்டுத் தான் அந்த வீரியத் தன்மை போகிறது.

வேதனை வெறுப்பு கோபம் குரோதம் இது போன்ற உணர்வைக் கேட்டோம் என்றால் கூடக் கொஞ்ச நேரம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்… அது எங்கள் கருமணிகளிலே படர வேண்டும் என்று தியானிக்க வேண்டும்.

இப்படி எண்ணியவுடன் அங்கேயும் ரெக்கார்ட் ஆகின்றது கருமணிகளும் சுத்தம் ஆகின்றது கண்ணிலே ஒரு ஒளி அலைகள் வந்து அது தூய்மைப்படுத்துவதைக் காணலாம்.

ஆனால் தூய்மைப்படுத்தாதபடி வேதனை அதிகமாகச் சேரப்படும் போது சிறுநீர் கழிக்கும் போது எப்படி உறைகின்றதோ (உப்பு) இது போன்று அந்த மேக நீர்கள் கூடப்பட்டுக் கருமணியின் மேல் தோலில் படர்ந்து விடுகின்றது.

மேல் தோலில் இருந்தாலும் பரவாயில்லை…
1.அதற்குள் கருமணிக்குள் ஒரு சிறிய நிலை இருக்கின்றது
2.அதற்குள் அழுக்கு படிந்து விட்டது என்றால் அதை நோண்டிக் கழுவித்தான் இப்பொழுது வைக்கின்றார்கள்.
3.மேல் படலம் வேறு… கருமணி உள்ளே இருப்பது வேறு…! அதை எடுத்துத் தூய்மைப்படுத்திவிட்டு தான் இப்பொழுது வைக்கின்றார்கள்.

அதாவது கண்களை இரவல் கொடுக்கின்றார்கள் என்றால் ஐஸ் பெட்டியில் வைத்து… கருமணி பழுது இல்லாமல் இருந்தால் அதைத்தான் எடுத்து அடுத்தவர்களுக்கு வைக்கின்றார்கள்.

கண்ணை எடுத்து அப்படியே பொருத்துவதில்லை. சரியாக இருந்தால் கருமணியைத் தான் எடுத்துப் பொருத்துகின்றார்கள் (பேங்கில் இருந்து).

காரணம்… கண்ணின் கருமணியில் விஷத்தின் தன்மை அதிகமாக அங்கே தோய்ந்து விட்டால் அது எதுவும் இழுக்க முடியாதபடி… கிரகிக்க முடியாதபடி… மக்காகி விடுகின்றது…! பார்வை குறைந்து விடுகின்றது… திருத்த முடியவில்லை என்று சொல்வார்கள்.

அப்பேர்ப்பட்ட கண்களுக்கு இந்த கருமணிகளைப் பொருத்தி பார்வை உண்டாக்குகின்றனர்… “அது தனித்தன்மை வாய்ந்தது…”

காரணம் புழுவாக இருக்கும் போது தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்ற உணர்வைக் கவர்ந்து கண்கள் உருவாகி
1.அதற்குப் பின் ஒவ்வொன்றாகக் கவர்ந்து கவர்ந்து வந்து
2.மனிதனாகும்போது இந்தக் கண்ணின் கருமணிகளிலே வலுவான நிலை வருகிறது.

மனிதர்களால் இருட்டிலே மற்ற பொருளைக் காண முடிவதில்லை. ஆனால் மிருகங்களுக்கோ விஷம் அதிகம்… அதிலே எக்கோ உருவாகி இருளிலே பார்க்கும் சக்தி பெற்றது. காரணம்…
1.ஆதியிலே விஷத்தின் தன்மை ஒன்றுடன் ஒன்று மோதித் ஒளியாக மாறியது
2.அதே மாதிரி இதில் உள்ள விஷமும் எதிரிலே மற்றதுடன் மோதிய பின் வெளிச்சம் ஆகின்றது.
3.மிருகங்களுக்கு இரவிலே கண் பார்வை தெளிகாகத் தெரிகிறது.

ஆனால் இன்று விஞ்ஞான அறிவு கொண்டு இரவிலே படம் எடுப்பதற்காக “கேமராக்களில் மெர்க்குரியை வைத்த பின் இதற்குள் வெளிச்சமாகி அந்தப் படத்தை எடுக்கின்றது…”

விஞ்ஞானிகள் செய்வது எனக்கென்ன தெரியும்…? குருநாதர் அதையெல்லாம் காண்பிக்கின்றார். இருந்தாலும் விஞ்ஞான அறிவிலே மிகவும் வளர்ச்சியானதை நான் (ஞானகுரு) அதிகமாகத் தெரிந்து கொள்ள விரும்புவதில்லை.

ஏனென்றால் விஷக் கதிரியக்கங்கள் அது மிகவும் கடினமானது..! அதிலே ஆபத்துகள் வருவதை “எப்படி…?” என்கிற வகையில் கேட்டுத் தெரிந்து ஆபத்தை நீக்குவதற்ண்டான வழியை மட்டும் செய்கிறேன்.

குருநாதர் இட்ட கட்டளைப்படி ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதித்து; ஒவ்வொரு உடலையும் கோயிலாக மதித்து; மனிதனை உருவாக்கிய நல்ல குணங்களைத் தெய்வங்களாக மதித்து
1.எத்தனை கோடி மக்கள் இதிலே தெளிந்து திருந்தி வாழ்கின்றார்களோ
2.அவர்களுக்கெல்லாம் அந்த உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும் என்று ஈசனுக்குச் சேவை செய்கிறேன்.

இராமலிங்க அடிகள் சொன்னது போன்று “அருட்பெருஞ்ஜோதி நீ தனிப்பெரும் கருணை…” எதையெல்லாம் எண்ணுகின்றோமோ அதையெல்லாம் உயிர் நமக்கு அறிவிக்கின்றது.

கோபப்படுவனை உற்றுப் பார்த்தால் நம்மையும் கோபப்படச் செய்கின்றது. தவறு செய்கின்றான் என்று உற்றுப் பார்த்தால் அந்தத் தவறை நமக்குள் தெரியப்படுத்துகிறது.
1.நான் தீயதைப் பார்க்கக் கூடாது… தீயதை நுகரக்கூடாது
2.தீய செயல்களுக்குப் போகக்கூடாது… அதைச் சந்திக்கக்கூடிய வாய்ப்பே வரக்கூடாது
3.கந்தக் கோட்டத்திற்குள் அமர்ந்துள்ள கந்தவேலே…! என்று இராமலிங்க அடிகள் பாடுகிறார்.

அதாவது கூர்மையாக உணர்வின் தன்மை பிளந்து… எனக்குள் அறிவென்ற உணர்வை ஊட்டுகின்றாய்…! என்று அவருடைய பாடலுக்குள் மூலக்கூறுகள் எத்தனையோ உண்டு. சொல்லுக்குள் எத்தனையோ அர்த்தங்கள் உண்டு.

குருநாதர் ஒவ்வொன்றுக்கும் விளக்கம் கொடுத்து என்னைத் தெளிவாக்கினார். ஒரு பைத்தியக்காரன் போலத் தான் இருந்தார் ஆனால் பேருண்மைகளை எமக்குத் தெளிவாக்கினார்

அதைத்தான் உங்களிடம் இப்பொழுது யாம் சொல்லிக் கொண்டு வருவது…!

குரு இல்லாத வித்தை வித்தையாகாது… ஏன்…?

குரு இல்லாத வித்தை வித்தையாகாது… ஏன்…?

 

குருநாதர் அன்று சூரியனைப் பார்க்கும்படி சொல்லியிருந்தார். அதைத் தான் நானும் சொல்லியிருந்தேன். காரணம் அன்று கதிரியக்கங்கள் ஜாஸ்தியாக வெளிப்படவில்லை.

ஆனால் மனிதன் செயற்கைக்காக வேண்டி அதை அதிகமாகப் பயன்படுத்தி அதனின் கசிவுகள் வெளிப்பட்ட பின்
1.அது எல்லாமே சூரியன் ஈர்ப்புக்குள் சென்றுவிட்டது… அதனால் அது கரும்புகைகளைக் கக்க (SUN SPOTS – SUN FLARES) ஆரம்பித்தது.
2.அப்படிக் கக்கும் நேரத்தில் அதைப் பார்த்தோம் என்றால் நம் உடலில் அதனின் விஷத் தன்மைகள் புகுந்துவிடும்
3.அதனால் தான் யாரும் சூரியனைப் பார்க்கக்கூடாது என்று யாம் பின்னாடி சொன்னது.

அதே சமயத்தில் அன்று ஆரம்பத்தில் 27 நட்சத்திரங்களையும் பார்க்கும்படி சொல்லி இருந்தேன்.
1.முதலில் நான் (ஞானகுரு) நேரடியாக அதை எடுத்துக் கொள்வது… அதற்குப் பின் உங்களுக்குள் அதைப் பாய்ச்சுவது
2.நான் எடுத்து அலைகளாக அனுப்பியதை… நீங்கள் எண்ணி எடுக்கப்படும் பொழுது உங்களுக்கு ஒரு தொந்தரவும் செய்யாது.

ஆனால் விட்டுவிட்டு… நேரடியாக நட்சத்திரங்களின் சக்தியை நாங்கள் எடுக்கிறோம் என்றால் உடம்பெல்லாம் அரிப்பு ஆகிவிடும்… எதிர் நிலையாகிவிடும்.

ஆரம்பத்தில் நட்சத்திரங்களைப் பார்க்க வேண்டுமென்று சொன்னவுடனே “எம்மை விட்டுவிட்டு…” பவானியில் சில பேர் அதை எடுக்கப்படும் பொழுது அவர்களுக்கு உடல் எல்லாம் அரிப்பு ஆகிவிட்டது.

பவானியிலிருந்து நான் வெளியே சென்றவுடன் நிறையப் பேருக்கு அது உண்டானது. ஏனென்றால் “நாம் சொன்னோம்” என்று சொல்லிக்கொண்டு எடுக்க ஆரம்பிக்கின்றார்கள்.

1.ஆனால் நட்சத்திரங்களின் சக்தியை நான் எடுத்து அதனுடைய வீரியத்தைத் தணித்து
2.உங்களிடம் அதை வாக்காகச் சொல்லிப் பதிவு செய்து… அந்த உணர்வை எடுக்கும்படிதான் சொல்லிக் கொடுக்கின்றோம்.
3.அதாவது என்னிடம் விளைந்ததை நீங்கள் எடுத்தால் அது உங்களைப் பாதிக்காது
4.அந்தச் சக்தியைப் பெருக்க ஏதுவாக இருக்கும்… தொல்லை கொடுக்காது.

இப்படி எல்லா வகைகளிலும் உங்களுக்கு ஒத்தாசையாக அந்த உயர்ந்த சக்திகளைப் பெறுவதற்குத் தொடர்ந்து இந்த வேலைகளைச் செய்து கொண்டிருக்கின்றோம்.

நோயினால் அவதிப்பபடுபவர்களைப் பற்றி அடிக்கடி கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த சமயத்தில் நோய்களை மாற்றிடும் மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து… முறைப்படி சொல்லுங்கள்… உங்கள் நோய் நீங்கிவிடும்..! என்று இதன் வழி செயல்படுத்தினால் உங்களை அந்த நோய் பாதிக்காது.

சாமி தான் சொல்லிவிட்டார் அல்லவா…! ஈஸ்வரா குருதேவா என்று எண்ணிவிட்டு
1.அடுத்தவர் உடலில் இருக்கக்கூடிய நோயெல்லாம் போக வேண்டும் என்று சொன்னால் அல்லது பிரார்த்தனை செய்தால்
2.அவர்களின் நோய் உங்களுக்கு வந்துவிடும்… தெரியாமல் அதிலே போய் நாம் மாட்டிக் கொள்ளக் கூடாது
3.அதற்குத்தான் ஆயிரம் தடவை உங்களுக்கு ஞாபகப்படுத்துவது.

எதைக் கேட்டாலும் அடுத்த கணம் “அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்…” என்று யாம் சொன்ன முறைப்படி ஆத்ம சக்தி செய்து தூய்மையாக்க வேண்டும்.

அதற்குப் பின் நோயாளியைப் பார்த்து துருவ நட்சத்திரத்தினுடைய சக்தி நீ பெறுவாய்…! அந்தச் சக்தியால் உனக்குள் இருக்கக்கூடிய நோயை உன்னால் நீக்க முடியும்…! என்று இப்படித்தான் அவர்களுக்குத் தெளிவாக்க வேண்டும்.

ஆனால்
1.வேதனைப்படுகின்றார் மிகவும் சிரமப்படுகின்றார் ஈஸ்வரா…! என்று நீங்கள் எண்ணி
2.அவர் நோயெல்லாம் குறைய வேண்டும் என்று “ஏங்கினால்” அவர் நோய் உடனடியாக உங்களைத் தாக்கும்.

இப்படிச் செய்யக்கூடாது…!

சில பேர் இது போன்று தெரியாமல் உள்ளே சென்று சிக்கிக் கொள்கின்றார்… அவசரத்தில் இப்படிச் செய்து விடுகின்றனர். இப்படி வரக்கூடாது என்பதற்குத் தான் இதைச் சொல்கிறேன்.

பாசமாக இருக்கும் நண்பரோ உறவினரோ குழந்தைகளோ திடீரென்று அவர்களுக்கு எதிர்பாராது ஒரு விபத்தாகி விட்டது என்றால் உடனே
1.“நேற்றெல்லாம் நன்றாக இருந்தாரே… நல்ல மனிதருக்கு இப்படி ஆகிவிட்டதே…” என்று தான் எண்ணுகிறார்கள்.
2.ஆத்ம சுத்தி செய்வதை மறந்து விடுகின்றார்கள்;
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணுவதை மறந்து விடுகின்றார்கள்.
4.அவர் அடிபட்டு விட்டாரே என்று எண்ணி அந்த உணர்வைத் தான் “நேரடியாக” எடுத்துக் கொள்கின்றார்கள்.

ஆனால் அது நமக்குள் வராதபடி முதலில் தடுத்து நிறுத்திப் பழக வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் எங்கள் ரத்த நாளங்களில் அது கலக்க வேண்டும் எங்கள் உடல் உறுப்புகள் முழுவதும் அது படர வேண்டும் என்று சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

விபத்தில் அடிபட்டவரின் உணர்வு முதலில் நம்மை இயக்கி விடாதபடி இப்படித் தடைப்படுத்தியே ஆக வேண்டும்.

பின் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அடிபட்டவர் உடல் முழுவதும் படர வேண்டும். வேதனையிலிருந்து அவர் மீண்டு நல்ல உணர்வு பெறக்கூடிய தகுதி பெற வேண்டும். அவருக்குப் பூரண குணம் கிடைக்க வேண்டும் என்று நம்மைத் தூய்மைப்படுத்திய பின் இப்படிச் சொல்ல வேண்டும்.

1.இது சாதாரணமானது இல்லை…
2.உயர்ந்த சக்தியாக அவர் நுகர ஆரம்பிக்கும் பொழுது இது அவருக்குள் இயக்கச் சக்தியாக மாறும்.
3.அடிபட்டதிலிருந்து சீக்கிரமே விடுபடக்கூடிய சக்தியும் அந்த நம்பிக்கையும் அவருக்கு வரும்.

இதை நீங்கள் செய்து பார்க்க வேண்டும்.

கடினமானதாக இருந்தால்… கூட இரண்டு தடவை செய்தால் அவருடைய நோய்களையோ குறைகளையோ வேதனைகளையோ நீக்குவதற்கு நிச்சயம் இது உதவும்.

“உங்களுக்கு இந்தச் சக்தி உண்டு” என்று சொல்கின்றோம்…!

ஆனால் தவறிப் போய் அவருடைய வேதனையையும் துன்பத்தையும் நீங்கள் எண்ணி எடுத்து விடக்கூடாது ஆத்ம சக்தி செய்து துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்; இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்; இந்தச் சக்தி அவருக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ணி விட்டு
1.இதே மாதிரி நீங்கள் செய்யுங்கள்
2.உங்களுக்கு அந்தச் சக்தி கிடைக்கும்… உடல் நலமாகும் என்று
3.இப்படித்தான் நாம் நோயுற்றவருக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

இது போன்ற ஒரு பழக்கத்திற்குக் கட்டாயம் நாம் வந்தே ஆக வேண்டும்.

ஏனென்றால் இந்த மனித வாழ்க்கையுல் பிறரின் கஷ்டங்களை எல்லாம் நாம் கேட்டுத்தான் ஆக வேண்டி இருக்கின்றது. அப்போது உடனே சோர்வடைந்து விடுகின்றோம்.

ஆனால் இதை மாற்றி உங்களுக்குள் திருத்தி அந்தச் சோர்வை நீக்க வேண்டும். “அந்தச் சக்தியைத் தான் யாம் இப்போது கொடுக்கின்றோம்…”

நல்லதாகக் கூடிய சக்தியை நீங்கள் செயல்படுத்த வேண்டும் என்பதற்குத் தான் இவ்வளவு பெரிய சக்தியை உங்களுக்கு மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்தி அதைப் பெறக்கூடிய தகுதியாக ஏற்படுத்துகின்றோம்.

இந்தப் பழக்கத்தை நீங்கள் சீர்படுத்திக் கொண்டு வருதல் வேண்டும்..

துருவ நட்சத்திரத்தின் சக்தி பெறுவதை உறுதிப்படுத்துவதற்காக “யாம் கொடுக்கும் நினைவுச் சின்னம்”

துருவ நட்சத்திரத்தின் சக்தி பெறுவதை உறுதிப்படுத்துவதற்காக “யாம் கொடுக்கும் நினைவுச் சின்னம்”

 

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் பிறவி இல்லாத நிலை அடைந்தார்… ஒளியின் சரீரமாக இருக்கின்றார். அதிலிருந்து வரக்கூடிய உணர்வை நாம் நமக்குள் சேர்த்து இந்த வாழ்க்கையில் வரும் இருளைப் போக்கிக் கொள்ளலாம். இது நம் பழக்கத்திற்கு வர வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் ஆயுள் மெம்பராக உள்ளவர்களுக்கு அருள் ஞானச் சக்கரம் கொடுத்திருக்கின்றோம். அதை வைத்திருப்பவர்கள் ஒவ்வொரு நிமிடத்திலும் துருவ நட்சத்திரத்தை எண்ணி… அந்தச் சக்கரத்தை உற்றுப் பாருங்கள்.
1.துருவ நட்சத்திரத்தின் ஒளிகள் அந்தச் சக்கரத்திலிருந்து வரும்
2.நாளுக்கு நாள்… நாளுக்கு நாள்… அது வளர ஆரம்பிக்கும்… உங்களுக்கு ஒரு தெளிவான மனது கிடைக்கும்.
3.இதனுடைய வரிசையில்… வளர்ச்சியாகி வரும் பொழுது நம் பிரபஞ்சமும் தெரியலாம்…
4.நமக்கு வழிகாட்டக்கூடிய மகரிஷிகள் யார்… யார்…? என்றும் நிச்சயமாகத் தெரிய வரும்.

தெரிய வரும் என்று இப்போது சொன்ன பின்… “எனக்குத் தெரியவில்லையே…!” என்று எண்ணத்திற்கு நீங்கள் போகக்கூடாது.

யாம் (ஞானகுரு) சொன்ன முறைப்படி “துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற வேண்டும்…” என்ற உணர்வை மட்டும் நீங்கள் செலுத்தி அதை நுகர்ந்து கொண்டு வந்தாலே போதுமானது.
1.இது உங்களுக்குள் வளர்ச்சியாக…
2.தன்னாலே அந்த உண்மைகளை… நீங்களே அறிய முடியும்

ஒரு விதையை மண்ணிலே ஊன்றி.. அது முளைத்து வளர்ச்சியாகி வருவதற்கு முன்னாடியே அதிலே பூவைக் காணோம்… காயைக் காணோம்… கனியைக் காணோம்… வித்தைக் காணோம்…! என்று சொல்லிக் கொண்டிருந்தால் சரியாக வருமா…!

காரணம்… எத்தனையோ கோடி ஆண்டுகள் பரிணாம வளர்ச்சி அடைந்த பின் தான் மனிதனாக இப்போது வந்திருக்கின்றோம். மனிதனாக வாழும் சந்தர்ப்பத்தில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஒவ்வொரு உணர்வுகளுக்குள்ளும் இணை சேர்க்க வேண்டும்.

1.எல்லா உணர்வுகளிலும் துருவ நட்சத்திரத்தின் சக்தியைச் சேர்க்க வேண்டும் என்பதற்குத்தான்
2.அதை ஈர்க்கும் ஆற்றலும்… அந்த நினைவின் ஈர்ப்பும் வருவதற்காக
3.ஒரு மூன்று வருட காலம் அருள் உணர்வுகளைப் பாய்ச்சி அருள் ஞானச் சக்கரமாக உங்களுக்குக் கொடுக்கின்றோம்.

அதை உங்கள் பூஜை அறையிலோ அல்லது உங்களுக்கு வசதியாகப் பார்க்கக்கூடிய இடங்களிலே அதை அமைத்துக் கொண்டு எங்கே வெளியே சென்றாலும் சரி… அதற்கு முன் நின்று பிரார்த்தனை செய்து.. அடுத்து உங்கள் காரியங்களைச் செயல்படுத்திப் பாருங்கள்.

குழந்தைகளுக்கு கல்வியாக இருந்தாலும் சரி… வியாபாரமோ தொழிலாக இருந்தாலும் சரி… அல்லது குடும்ப சம்பந்தமாக இருந்தாலும் சரி… எல்லாமே நலமும் வளமும் பெற வேண்டும்… எல்லோருக்கும் அந்த உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும் என்று செயல்படுத்துங்கள்.

எந்தக் காரியமாக (நல்லது) இருந்தாலும் சரி… “அது ஜெயமாக வேண்டும்” என்ற உணர்வை மீண்டும் மீண்டும் வலுப்பெறச் செய்யுங்கள்… மன உறுதி கிடைக்கும். உங்கள் சொல் கேட்பவர்களுக்கு ஓரளவுக்கு மகிழ்ச்சியூட்டும்.

1.எப்படியும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்குத்தான்
2.அருள் ஞானச் சக்கரம் (நினைவுச் சின்னமாக) கொடுக்கின்றோம்.

நாங்கள் பார்க்கும் குடும்பங்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்… குரு அருள் அவர்கள் பெற வேண்டும்… அவர்கள் உடல் நலம் பெற வேண்டும் என்று
1.அவரவர்கள் தனித்து நீங்கள் எண்ணினாலும் எல்லோருமே இப்படி எண்ணும் பொழுது
2.இது ஒரு பெரும் கூட்டமைப்பாக… ஏகமாக அமைகின்றது.

நண்பனுக்கு நண்பன் உதவி செய்தான் என்று எண்ணினால் விக்கல் ஆகிறது… துரோகம் செய்கின்றான் தொல்லை கொடுக்கின்றான் பாவி என்றால் புரையேறுகின்றது.

இதைப் போன்று இந்த அருள் உணர்வுகள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று சக்கரத்தைப் பார்த்து இந்த நினைவை இந்த உணர்வைச் செலுத்தினால் அனைவருக்கும் துருவ நட்சத்திரத்தின் சக்தி கிடைக்கக்கூடிய தகுதி உருவாகின்றது.

குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் அது கிடைக்கின்றது குடும்பத்தில் ஒன்று சேர்ந்து வாழவும் மகிழ்ச்சியான உணர்வுகளை வளர்க்கவும் எதுவாகிறது.

நாம் குடியிருக்கும் தெரு மக்கள் நன்றாக இருக்க வேண்டும்… நாங்கள் தொழில் செய்யும் இடங்களில் வேலை செய்வோர்… எங்கள் வாடிக்கையாளர்கள் எல்லோரும் நலம் பெற வேண்டும்… அவர் குடும்பம் நலம் பெற வேண்டும்.

அதே போன்று இந்த ஊரும்… உலக மக்களும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற்று மகிழ்ந்து வாழும் அருள் சக்தி பெற வேண்டும் என்று இப்படி வரிசைப்படுத்தி எண்ண வேண்டும்.

ஏனென்றால் எல்லோருடைய உணர்வுகளும் ஏதோ ஒரு வகையில் நமக்குள் பதிவாகி விடுகின்றது.
1.அவர்களுக்கெல்லாம் கிடைக்க வேண்டும்… அவர் குடும்பம் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும் என்று
2.இந்த உணர்வைச் சேர்க்கச் சேர்க்க… நம் உடலுக்குள் இருக்கும் ஒவ்வொன்றையும் அரவணைக்கும் சக்தியாக வளர்கின்றது
3.வெறுப்பின் தன்மை மாறுகின்றது… பேரானந்த நிலை கிடைக்கிறது.

கூட்டாகத் தியானம் செய்யும் போது இதை எல்லாம் எண்ணி எடுத்துப் பழக வேண்டும்.

அதே சமயத்தில் நம் வீட்டிலும் சரி அல்லது வேறு எங்கு தியானம் செய்தாலும் அந்த ஒளி அலைகள் அங்கிருக்கக்கூடிய வீட்டின் சுவரிலே பதிகின்றது. நம் வீட்டிற்குள் மகிழ்ச்சி பெருகுகின்றது.

உதாரணமாக வேலை நிமித்தம் நாம் வெளியிலே சென்றாலும் சந்தர்ப்பவசத்தில் சண்டையிடுவோரையோ வேதனைப்படுவோரையோ பார்த்துவிட்டுத் தான் வீட்டுக்குள் வருகின்றோம்.
1.களைப்பாக வந்தவுடனே “உஸ்ஸ்… அப்பா…” என்று சோர்வடையப்படும் போது
2.அடுத்து அந்த சண்டையிட்ட வேதனைப்பட்ட உணர்வுகள் பிறிதொரு மூச்சலைகள் இங்கே நமக்குள் இயக்கமாகின்றது.

ஏனென்றால்…
1.திறந்த வெளியில் இருப்பது வேறு… அந்த சொல் வேறு விதமாக இருக்கும்
2.ஒரு வீட்டிற்குள் அடைப்பட்ட இடத்திலே வெளிப்படுத்தும் போது… இந்த சொல் அதனுடைய ஒலி (ECHO) வித்தியாசமாக வரும்.

அதாவது வீட்டின் சுவர்களில் கட்டிடங்களிலே பாய்ந்து தான் இந்த உணர்வு (சொல்லின் ஒலி) வெளி வருகின்றது. சோர்வடைந்தது… வேதனைப்பட்டது… அது போன்ற தீமை செய்யும் உணர்வுகள் வீட்டின் சுவரில் இருந்தால் அது நம்மை அதன் வழிக்கே இழுத்துச் சென்றுவிடும்.

அதை மாற்ற வேண்டுமல்லவா…!

ஆகவே ஏற்கனவே பதிவான அந்தத் தீமையோ வேதனையோ கோபமோ அதை மாற்றி அமைக்க
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி இந்த வீடு முழுவதும் படர வேண்டும் என்று நாம் பரப்பியே ஆக வேண்டும்
2.இவ்வாறு செய்யச் செய்ய பேரானந்தப் பெரு நிலையாக வாழக்கூடிய
3.அந்த உன்னதமான நிலையை உணர முடியும்…!

செய்து பாருங்கள்.

எம்முடைய ஒரு உபதேசத்தை மட்டும் கேட்டால் போதாது… எல்லாவற்றையும் கேட்டால் தான் முழுமை வரும்

எம்முடைய ஒரு உபதேசத்தை மட்டும் கேட்டால் போதாது… எல்லாவற்றையும் கேட்டால் தான் முழுமை வரும்

 

ஞானிகள் கண்ட பேருண்மைகளை உங்களுக்கு எத்தனையோ உபதேசங்கள் வாயிலாகக் கொடுத்து (சுமார் 30 வருடங்கள்) அதைத் தெளிவாகவே உணர்த்திக் கொண்டு வருகின்றேன் (ஞானகுரு).

துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் கால மெம்பராக இருக்கக்கூடியவர்களுக்கு… ஒவ்வொரு இடத்திலிருந்தும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எம்மைச் சந்திக்க வருபவர்களுக்கு… உபதேசங்களைக் கொடுத்துள்ளோம்.

இதையெல்லாம் ஒலிப் பதிவு செய்து வைத்துள்ளார்கள்
1.அது எல்லாவற்றையும் நீங்கள் சேகரித்து ஒவ்வொன்றாகக் கேட்டு…
2.உங்களுக்குள் பதிவாக்கிக் கொண்டால் அந்த முழுமை கிடைக்கும்.

எல்லோருக்கும் ஒரே நேரத்தில் மொத்தமாகச் சொல்ல முடியுமோ…?

ஆகையினால் அந்தந்தப் பகுதிகளிலே உபதேசமாக யாம் கொடுத்ததை நீங்கள் எடுத்து… ஒவ்வொருத்தருக்கும் யாம் சொன்னதை நீங்கள் திரும்பக் கேட்டால் முழுமை கிடைக்கும்.

ஏனென்றால் எம்மைச் சந்திக்க வருபவர்களுக்கு
1.அந்தச் சந்தர்ப்பத்தில் வெளிப்படுத்திய உணர்வுகள் சிறு சிறு மாற்றங்கள் இருக்கும்
2.இப்பொழுது உங்களுக்கு கொடுக்கும் பொழுது சில வித்தியாசங்கள் இருக்கும்.

ஏனென்றால் இந்த உணர்வுகள் இணைந்து அங்கே மாறும். எதெனதன் தொடரில் எது எது மாறுகின்றது…? என்பதைத் தான் நினைவுபடுத்தி அந்த ஞானிகள் உணர்வை எப்படி அதிலே இணை சேர்த்துக் கொண்டு வர வேண்டும் என்று இப்போது தெளிவாகவே சொல்லி வருகின்றோம்.

இதையெல்லாம் கேட்டு…
1.சாமி அவருக்கு ஒரு விதமாகச் சொல்லி இருக்கின்றார்…
2.நமக்கு வேறு விதமாகச் சொல்லி இருக்கின்றாரே…! என்று நீங்கள் எண்ண வேண்டியது இல்லை.

ஆனால் அதற்காக வேண்டி எல்லோரையும் கூப்பிட்டு ஒரே இடத்தில் எத்தனை பேரை… எவ்வளவு நேரம் உட்கார வைத்து… எத்தனை நாள் இதைச் சொல்வது…?

அது சாத்தியமல்ல…!

அந்தந்தச் சந்தர்ப்பத்தில் ஞானிகள் உணர்வை உங்களுக்குள் பதிவு செய்து உணர்வுகள் ஒலி அலைகளாக மாற்றி அலைகளாகப் பரவச் செய்கிறோம்.

உங்களுக்குள் பதிவானதன் மூலமாக மெய் ஞானிகள் உணர்வுகளைப் பருக வேண்டிய பக்குவ முறைகளையும் தெளிவாகக் கொடுக்கின்றோம்
1.அப்பொழுதுதான் அதை உங்களுக்குள் ஏற்கும் பருவமும்
2.அதனை வழி நடத்திச் செல்லும் பக்குவ முறைகளும் வளரும்.

எனக்கு குருநாதர் இப்படித்தான் ஒவ்வொன்றாக இணைத்துக் கொண்டு வந்தார். காட்டிற்குள் என்னை அழைத்துச் சென்று செடியைக் காண்பித்து “இந்தப் பச்சிலை பேசுமாடா…?’ என்று கேட்பார்…!

“பேசும்…” என்று நான் சொன்னால் அது எப்படிடா பேசும்…? என்று என்னை திரும்பப் பிடிப்பார். வினாக்களை எழுப்பி எழுப்பி… எல்லாவற்றிலும் எல்லா வகைகளிலும் உண்மையை நான் அறியும்படி செய்வார்.

ஒரு இடத்தில் புலி செத்து கிடக்கின்றது. அதைப் பார்த்து “இது என்னடா செய்யும்…?” என்று கேட்பார்.

இந்தப் புலி எதைக் கொன்று தின்றதோ அங்கே போய்ப் பிறக்கும் என்று சொல்வேன்.

அது எப்படி…? நீ சொல்…! என்பார். புலி செத்து விட்டது… இந்த உடலில் சேர்த்த சத்தெல்லாம் எங்கே போனது…? என்பார்.

காற்றிலே சென்று விட்டது என்று சொல்வேன்.

காற்றிலே போன பிற்பாடு என்ன ஆகின்றது…? என்று விளக்கம் கேட்பார்.

இரண்டு பேருக்குமே இந்தப் பேச்சு வார்த்தை இப்படியே வளர்ந்து கொண்டே போகும். முழுமையாக அறியும் வரை விடமாட்டார்.

குருநாதர் எம்மைக் காட்டிற்குள் அழைத்துச் சென்றாலும் அங்கே சரியான உணவு இல்லை… குடிப்பதற்கு நீர் இல்லை… சில நேரம் நடந்து செல்லக் கூட முடியாது.

இப்படி…
1.எத்தனையோ எதிர்மறையான சிக்கல்களில் குருநாதர் என்னைக் கொண்டு மாட்ட வைத்து
2.அதிலிருந்து மீண்டு வருவதற்கு உண்டான உபாயங்களைக் காட்டி
3.அவர் சொன்ன வழியில் நான் அதைப் பின்பற்றி நடந்து
4.அதிலே அனுபவ வாயிலாகப் பெற்ற பேருண்மைகளைத் தான்
5.அந்தந்தச் சந்தர்ப்பத்தில் எம்மைச் சந்திக்க வருபவர்களுக்கு உபதேசமாக வெளிப்படுத்தியது.

ஆகையினால் அவ்வப்பொழுது வெளிப்பட்ட அந்த உபதேசக் கருத்துக்களை – எல்லாவற்றையும் நீங்கள் முழுமையாகக் கேட்க வேண்டும். குருநாதர் எனக்குள் முழுமையாகக் கொடுத்தது போன்று நீங்களும் அந்த முழுமை பெற வேண்டும்.

எல்லா உபதேசங்களையும் நீங்கள் கேட்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கின்றேன்.

தியானத்தின் மூலம் நாம் பெறும் சக்தி “எல்லோருக்கும் பொதுவானது”

தியானத்தின் மூலம் நாம் பெறும் சக்தி “எல்லோருக்கும் பொதுவானது”

 

குருநாதர் என்னைக் காட்டிற்குள் அழைத்துச் சென்று பல அற்புதங்களையும் காட்டினார்.
1.என் கையை நீட்டியவுடன் ஒரு மரம் சட…சட… என்று முறிந்து விழுகிறது
2.கையை நீட்டியவுடன் மேலே பறந்து போகும் காகம் இறக்கை தன்னாலே ஒடிந்து விழுகிறது
3.ஒருவன் கெடுதல் செய்கிறான் என்றால்… இப்படி என்று ஒன்றைச் சொன்னால் போதும்… அவனை உருட்டிக் இங்கே கொண்டு வந்துவிடும்.
4.பெரிய பெரிய கல்களையும் பறக்கச் செய்து காட்டுகின்றார்.

இந்தச் சக்திகளைக் காட்டி விட்டு “இது எல்லாம் எதற்காக ஆகும்…?” என்று விளக்கத்தைக் கொடுக்கின்றனர்.

இப்படி எல்லாம் செய்தாய் என்றால் நீ அதுவாகத்தான் ஆவாய்…! மந்திர சக்திகளை எடுத்தால் இந்த நிலைக்குத்தான் ஆகும் என்றார்.

மிலிட்டரியில் இறந்தவர்கள் பழி தீர்க்கும் உணர்வோடுதான் இறக்கின்றார்கள். “அந்தக் கூலிப்படைகள் எவ்வாறு இருக்கின்றார்கள்…? என்பதை நீ பார்…!” என்று அதையும் காட்டுகின்றார்.

லெப்ட்…ரைட்… லெப்ட்…ரைட்… மார்ச்… அபௌட்…டர்ன்…! என்று என்னென்னமோ சொல்கின்றார். பார்த்தால் பூட்ஸ் அடி சத்தம் பயங்கரமாகக் கேட்கின்றது.

ஏனென்றால் “இந்த உணர்வின் ஒலி அலைகள்” அவர்கள் எடுத்துக் கொண்டது இங்கே அலைகளாகப் பரவி உள்ளது. குவித்து எடுத்து அந்த உணர்வின் ஒலியைப் பாய்ச்சினால் பெரிய கல்லையும் தூக்கி எறிகின்றது

என்றோ இறந்தவர்கள் என்று இருந்தாலும் அது மறைந்து விடவில்லை அவர்கள் உடலில் விளைந்தது யாருக்குள் சென்றாலும் இந்த உணர்வின் (பழி தீர்க்கும்) தன்மை தான் இயக்கும்.

ஆக அதை அதிகமாக நுகர்ந்தால் அடுத்தவர்களைக் கொலை செய்வதற்குக் கூலிப்படையாகப் போகலாம். இது எல்லாம் இயற்கை நிலைகள்.

ஆனால் மனிதனாக ஆனபின் நீ முழு முதல் கடவுளாக ஆகின்றாய் நான் சொன்ன முறைப்படி அருள் ஞானத்தை உனக்குள் (ஞானகுரு) உருவாக்குகின்றாய். அனைவருக்குள்ளும் அதை உருவாக்கு…!

1.இந்த உலகம் உனக்குச் சொந்தமில்லை
2.இந்த உடலான உலகமும் உனக்குச் சொந்தமில்லை
3.நீ எடுக்கும் அருள் ஞான உணர்வே உனக்குச் சொந்தமாகின்றது
4.அந்த அருள் ஒளியின் உணர்வையே சொந்தமாக்க முற்பட வேண்டும்

அனைவரும் அருள் ஞானம் பெற வேண்டும்… மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணினால் தான் நீ அதைப் பெறுகின்றாய்
1.”நான் பெற்றுவிட்டேன்” என்று நீ அகம் கொண்டால் அந்த விஷம் தான் உனக்குள் கூடும்
2.பெற்ற சக்திகளையும் உயர்ந்த உணர்வையும் அது அழித்துவிடும்… நீ போவது எங்கே…?
3.இருளுக்குள் தான் செல்ல வேண்டி இருக்குமே தவிர ஒளிக்குள் வர முடியாது என்று
4.இத்தனை உண்மைகளையும் காட்டிய பிற்பாடு நான் என்ன செய்ய முடியும்…!

பல பேர் எனக்குத் தொல்லை கொடுக்கின்றார்கள்… நான் அதைப்பற்றி எண்ணுவதில்லை “எனக்குத் தொல்லை கொடுக்கின்றார்கள்… என்று நான் (ஞானகுரு) எண்ணினால் தானே…!”

ஏனென்றால் இன்று இருக்கக்கூடிய பல பெரியவர்களும் சாமியார்களும் நூற்றுக்கு 90% அறியாமல் தவறுகள் செய்தே வாழ்கின்றார்கள். ஆண்டவனையே நாங்கள் கைக்குள் வைத்திருக்கிறோம் என்று மக்களை ஏமாற்றப் பழகி வைத்திருக்கிறார்கள்.

அது அவர்களுடைய உணர்வு…! இருந்தாலும் எங்கே செல்கிறோம் என்று அவர்களுக்கே தெரியாது

அந்த உணர்வை வைத்து எம்மை உற்றுப் பார்க்கப்படும் பொழுது அதே எண்ணம் என்னையும் திருடனாகத்தான் அவர்களுக்குத் தெரிய வரும் அவர்கள் அப்படித்தான் எண்ணுவார்கள்.

ஆனால்
1.என்னைப் பார்ப்போர் அனைவருக்கும் ஞானிகளின் அருள் கிடைக்க வேண்டும் என்று
2.நான் பிரார்த்தனை செய்கிறேனே தவிர யாரையும் குற்றவாளியாக எண்ணுவதில்லை.

காரணம் குற்றம் என்று பார்க்கப்படும் பொழுது அந்தக் குற்றத்தின் உணர்வுகள் தான் விளையும்… குற்றவாளியாக நம்மையும் மாற்றிவிடும்.

நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று கீதையிலே சொன்னது போன்று
1.அனைவரும் அருள் ஒளி பெற வேண்டும் என்று எண்ணினால் நான் அதுவாகின்றேன்
2.தவறு செய்கின்றார்கள் என்று எண்ணினால் நான் எதைச் செய்தாலும் அது தவறாகத்தான் வந்து சேரும்.
3.ஏமாற்றுகின்றான்… ஏமாற்றுகின்றான்… என்று தான் வரும்… அது அவருடைய குற்றம் அல்ல.

ஆனால் அதே சமயத்தில் தவறு செய்கின்றார்கள் என்று கோபப்பட்டுக் கடுமையான ஆயுதத்தை வைத்து அவர்களை நான் வீழ்த்த எண்ணினால் அவர்கள் உடலைத் தான் வீழ்த்த முடியும். இந்த உணர்வின் தன்மை விஷத்தன்மையாக எனக்குள் விளைந்து விடும்.

அதனால் தான் யார் எதைச் சொன்னாலும் எதைச் செய்தாலும்
1.“என்னிடம் சக்தி இருக்கிறது…” என்று அந்த வகையிலே அடக்கியாளும் உணர்வைச் செயல்படுத்துவதில்லை.
2.“ரோசப்பட்டு நான் அவ்வாறு செய்ய முடியாது…!”

அவர்களை உருட்ட வேண்டும் என்றால் உருட்டி விட்டுப் போகலாம்…! அத்தகைய அகம் வந்தால் நான் போகும் பாதையை அது தடையாக்கி விடும்.

இந்த உடலில் எத்தனை நாள் நாம் இருக்கப் போகின்றோம்…? இந்தப் புகழ் எவ்வளவு நாள் இருக்கும்…?

மற்றொருவரைக் கொன்று வீழ்த்தி… என்னைப் பார்த்தாலே அனைவரையும் அஞ்சும்படி செய்யலாம். ஆனால் எனக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்கள் எல்லாம் அழிந்து விடுமே…! நல்ல குணங்கள் வீழ்த்த பின் நான் எங்கே செல்வது…?

ஆகையினால் மற்றவரின் போற்றுதலுக்காக யாம் எதையும் செயல்படுத்துவதில்லை

அந்த அருள் ஒளி நீங்கள் எல்லோரும் பெற வேண்டும்… ஒவ்வொரு உயிரும் ஒளியாக வேண்டும் என்று எண்ணுவது தான் என்னுடைய வேலை…!

நீங்களும் அதே வழிகளில் செயல்படும் பொழுது இருளை அகற்றலாம் உயிருடன் ஒன்றி ஒளியாகவும் முடியும். ஆகவே…
1.எல்லோரும் அருள் ஞானம் பெற வேண்டும் என்ற அந்தப் பக்குவத்திற்கு நீங்கள் வரவேண்டும்
2.இதை எல்லாம் நீங்கள் பழகிக் கொள்ள வேண்டும்.

உங்களுடைய ஏக்கம் தான் என்னைப் பேச வைக்கிறது – ஞானகுரு

உங்களுடைய ஏக்கம் தான் என்னைப் பேச வைக்கிறது – ஞானகுரு

 

எம்முடைய உபதேசங்களை எல்லோரும் கேட்கின்றீர்கள் ஆனால் அடுத்தாற்போல் குறைகளைத் தான் வளர்த்துக் கொள்கின்றீர்கள். அதை எல்லாம் முதலிலே நீக்கிப் பழக வேண்டும்… மாற்றி அமைக்க வேண்டும்

மணிக்கணக்காக யாம் (ஞானகுரு) உபதேசிப்பதன் நோக்கமே அந்த ஞானிகள் உணர்வை நீங்கள் பெற்று நன்மை பெறும் சக்தியாக உங்களுக்குள் மாற்றுவதற்குத் தான்.
1.யாம் பதிவு செய்ததை மீண்டும் நீங்கள் எண்ணினால் அது உங்களைக் காக்கும் சக்தியாக வருகின்றது
2.தீமையிலிருந்து விடுபடவும் செய்கின்றது… தீமை அகற்றும் சக்தி பெறுகின்றீர்கள்

அதற்குத்தான் மணிக்கணக்கில் பேசுவது.

ஆனால் மணிக்கணக்கில் வேதனைப்படும் உணர்வுகளை நீங்கள் எடுத்து விடுகின்றீர்கள். குருநாதர் எம்மைக் காட்டிற்குள் அழைத்துச் செல்லும் பொழுது பல வேதனையான நிலைகளைச் சந்திக்கும்படி செய்கின்றார்.
1.அதை எப்படி மாற்றுவது…? என்ற நிலையில் மாற்றுவதற்குண்டான உபாயத்தைக் காட்டினார்
2.அவர் சொன்ன முறைப்படி செய்து எனக்குள் வந்த வேதனைகளை மாற்றி அதிலிருந்து மீண்டேன்
3.அதைத்தான் உங்களுக்கும் இப்பொழுது வாக்காகக் கொடுக்கின்றேன்

இதற்கு முன் இதை எல்லாம் அதிகமாக வெளிப்படுத்தியதில்லை இங்கே தான் வெளிப்படுத்துகின்றேன். ஏனென்றால்
1.எங்கெங்கு… யார் யார்… ஏங்கி இதைப் பெற வேண்டும் என்று விரும்புகிறார்களோ அங்கெல்லாம் இந்த உணர்வுகள்
2.உங்களுடைய ஏக்கம் தான் அருள் உணர்வுகளை என்னை வெளிப்படுத்தும்படி செய்கின்றது
3.நானாக இப்படிப் பேச (உபதேசம்) முடியாது.

ஏக்கத்தின் உணர்வு கொண்டு அந்தத் தொடர் வரப்படும் பொழுது… அந்த உணர்வுக்கொப்பத்தான் நான் பேச முடியும். அப்படி அல்லாதபடி… நானாக எடுத்துச் சொல்வது என்றால் அது வராது.

உணர்வின் தன்மை மோதலாகும் பொழுது.. மின்னல் ஒரு நட்சத்திரத்திற்கு ஒரு நட்சத்திரம் மோதும் பொழுது அந்த உணர்வுகள் பிளந்து அதனுடைய அலைகள் படர்கின்றது.

இதைப் போன்று தான்
1.நீங்கள் ஏங்கும் பொழுது அந்த உணர்வை நுகர்ந்துதான் நான் பேசுகின்றேன்
2.தீமைகள் எப்படி இயக்குகின்றது… அதிலிருந்து எப்படி விடுபட வேண்டும் என்று
3.அந்த அருள் ஞானி உணர்வுகளை உங்களுக்குள் பாய்ச்சித் தீமையைப் பிளக்கும் உணர்வுகளை நுகரச் செய்து
4.அந்த அருள் உணர்வை உங்களுக்குள் உருவாக்கும்படி செய்கின்றேன்.

அந்த உணர்வின் எண்ணங்களை உங்களுக்குள் உருவாக்கி தீமைகளையும் பகைமைகளையும் உங்களுக்குள் வராதபடி தடுக்கும் சக்தியாக “கல்யாணராமனாக” நீங்கள் மாற வேண்டும் என்பதுதான் என்னுடைய உபதேசத்தின் நோக்கம்.

இதனைப் பின்பற்றி நீங்கள் வளர்ந்து வந்தீர்கள் என்றால் எனக்கு மிகுந்த சந்தோஷம். ஆனால் என்னிடம் கேட்டுவிட்டு அந்தப் பக்கம் காற்றிலே விட்டு விட்டுச் செல்வதாக இருந்தால்
1.சாமி சொன்னார் என்று சாதாரணமாகத் தான் தெரியும்
2.சாமி எனக்கு என்ன செய்தார்…? என்று தான் பேசுவீர்கள்.

குருநாதர் எனக்குக் காட்டிய பேருண்மைகளை அவர் எனக்கு கொடுத்ததைக் காட்டிலும் பன்மடங்கு உங்களுக்குக் கொடுத்திருக்கின்றேன் இதற்கு மேல் நான் என்ன உதவி செய்ய வேண்டும்…?

1.நீங்கள் எல்லாம் அருள் ஞானத்தைப் பெற வேண்டும்
2.என்னைச் சந்தித்தவர்கள் நலமும் வளமும் பெற வேண்டும் என்று
3.சதா உங்கள் உயிரை எண்ணி நான் தியானம் இருக்கின்றேன்

அந்த உணர்வினை நீங்கள் தான் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். ஞானிகள் உணர்வை யாம் கொடுத்தால் அதை நுகரும் பருவத்தை நீங்கள் இழந்து விடக்கூடாது. நல்ல சாப்பாடு போட்டால் அதை நீங்கள் உட்கொள்ள வேண்டும் அல்லவா…!

ஒரு விவசாயம் செய்யும் இடத்தில் உயர்ந்த வித்தினைக் கொடுக்கின்றார்கள். அதைச் சீராக விதைத்தால் நல்ல பலன் கிடைக்கும் ஆனால் அப்படி விதைக்காதபடி மண்ணிலே வீசிவிட்டுச் சென்றால் எது எப்படி முளைக்கும்…?

எறும்போ பூச்சியோ மற்ற பறவைகளோ அந்த விதைகளைத் தின்றுவிடும்… அது எப்படி முளைக்கும்…?

அதே சமயத்தில் விதைத்தது சீராக முளைத்து வந்தாலும் அந்தந்தக் கால பருவத்திற்கு அதைப் பண்படுத்தும் நிலைகளையும் நீங்கள் செயல்படுத்த வேண்டும்.

அது போன்று தான்
1.நாம் கொடுத்த உபதேச வாயிலாகக் கொடுக்கும் பதிவை நீங்கள் மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து
2.அருள் ஞானத்தை பெருக்க வேண்டும் என்று அந்த அருள் உணர்வுகளைக் கூட்டினால்
3.அறியாது வந்த இருளைப் போக்கும்… அருள் வழி வாழவும் முடியும்
4.பிறவி இல்லா நிலையும் நீங்கள் அடைய முடியும்.

இது உங்கள் கையில் தான் இருக்கின்றது…!

மறைமுகமாகச் செய்ய வேண்டியது

மறைமுகமாகச் செய்ய வேண்டியது

 

மனிதனாக உருவாக்கப் பங்கு கொண்டது 1008 குணங்கள். அந்த 1008 குணங்களைத் தான் ஞானிகள் ஆலயத்தில் தெய்வங்களாகக் காட்டுகின்றார்கள். சிலையாக உருவாக்கி வைத்தது ஞானிகள்… அது துவைதம்.

அந்தச் சிலைக்கு வைர கிரீடத்தை வைக்கின்றான்.. தங்க ஆபரணத்தைப் போடுகின்றான்… மலர் மாலைகளை அணிகின்றான். ஔஷதங்கள் சுவையாக உருவாக்கப்பட்டு தெய்வத்திற்கு உணவாகப் படைக்கின்றான்.

இயற்கையில் விளைந்த கனியும் அங்கே வைக்கின்றான். இயற்கையில் விளைந்ததும் செயற்கையில் விளைந்ததும் என்ற உணர்வைக் காட்டுவதற்காக…!

நமக்குள் நல்ல குணங்கள் எப்படி வளர்ந்தது…? ஒன்றுடன் ஒன்று இணைந்து உணர்வின் தன்மை பெற்ற நிலையை ஒன்றுடன் இணைத்து நாம் எதைச் செய்ய வேண்டும்…? என்பதற்காகச் சிலையை உருவாக்கினான்…!

பதார்த்தங்களையும் வைத்தான் திரையிட்டு மறைத்தான்.
1.தீப ஆராதனையைக் காட்டித் தன்னை அறியும்படி செய்தான் தனக்குள்
2.மறைந்திருக்கும் இந்த உணர்வைத் திறந்து பார்க்கப்படும் பொழுது உணர்வுகள் எப்படி…? என்பதை அறியம்படி செய்தான்

இது தான் ஆலயம்.

திரையைத் திறந்தபின் அங்கிருக்கக்கூடிய பொருள்கள் அனைத்தும் தெரிகிறது. எதனால்…? வெளிச்சத்தால்…!

கார்த்திகேயா என்ற நிலையில் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு உணர்வை நுகர்ந்தறியும் தன்மை பெற்றவன் மனிதன். எதனெதன் குணங்களைத் தனக்குள் எடுத்து… உருவாக்கும் தன்மை எப்படிப் பெற வேண்டும் என்பது ஆறாவது அறிவு… ஆக படைக்கத் தெரிந்து கொண்டவன்.

விண்ணின் உணர்வுகளை நுகரப்படும் பொழுது இனிமையின் உணர்வை வளர்க்கின்றது. தீமையின் நிலைகளை அகற்றிடும் சக்தி பெறுகின்றது என்பதற்காகச் சிலையை உருவாக்கி வைத்தனர்.

தீபத்தை அங்கே காட்டப்படும் பொழுது பொருளறிந்து செயல்படும் இச்சக்தி நான் பெற வேண்டும் ஈஸ்வரா என்று உயிரிடம் நாம் வேண்ட வேண்டும்.

இந்த ஆலயம் வருவார் அனைவரும் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா. நாங்கள் பார்ப்போர் குடும்பமெல்லாம் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும். அருள் ஒளியின் சுடராக அந்தக் குடும்பங்களில் வளர வேண்டும் என்று நாம் எண்ணுதல் வேண்டும்.
1.ஏனென்றால் நமக்குள் பல குடும்பங்கள் உண்டு
2.பலருடைய எண்ணங்கள் நமக்குள் குடும்பமாக வாழ்கிறது
3.கோபப்படுவோர் உணர்வை நுகர்ந்தால் நமக்குள் கோபத்தின் அணுக்கள் வளர்கின்றது
4.நமக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களுடன் அது போர் செய்கின்றது
5.ஆகவே அதை மாற்றி நட்பின் தன்மை அடைவதற்கு இந்த ஞானிகள் உணர்வை நாம் இப்படி எடுத்தல் வேண்டும்.

ஏனென்றால் நுகரும் உணர்வுகள் அணுவாக மாறுகின்றது… அணுவின் இயக்கமாக நம்மை மாற்றுகின்றது. எதனின் வலு அங்கு வருகின்றதோ அதனின் இயக்கமாக நம்மை இயக்குகின்றது. இதை நாம் அறிந்து கொள்வதற்குத் தான் கோவிலிலே இப்படிக் காட்டியுள்ளார்கள்

அந்த ஆலயம் வருவோர்… நாம் பார்ப்போர் குடும்பங்கள்… நாம் தொழில் செய்யும் இடங்களில் பணிபுரிவோர்… எல்லோருமே பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.

உதாரணமாக நாம் தொழில் செய்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம். நம்மிடம் வேலை செய்யும் ஒருவனுக்கு வீட்டிலே சங்கடமாக இருக்கின்றது.
1.சங்கட உணர்வுடன் இங்கே வந்து வேலையைச் செய்யும் பொழுது…
2.தவறாகச் செய்து விடுகின்றான்… உற்பத்தி ஆகும் பொருள் நஷ்டமாகி விடுகின்றது

அல்லது அவன் வேலைக்கு வரும் பொழுது ஒருவன் ரோட்டிலே எதிர்பாராது கீழே விழுந்து விடுகின்றான். அவனை உற்று நோக்கி இருந்தால் அந்த இரக்க மனம் கொண்டு அந்த வேதனையை எடுத்துக் கொள்கின்றான்.

அவன் நல்ல குணத்துடன் இந்த விஷம் கலந்து விடுகின்றது. அப்போது இருளடைந்து விடுகின்றது. இருளான உணர்வுகள் கலந்து இங்கே வேலையில் அமர்ந்து வேலை செய்யப்படும் பொழுது பொருளறிந்து செயல்படும் திறன் இழக்கப்படுகிறது… உற்பத்தி குறைந்து விடுகிறது.

அப்போது நாம் என்ன செய்ய வேண்டும்…?

நம்மிடம் வேலை செய்யும் அந்த தொழிலாளி மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… பொருளறிந்து செயல்படும் திறன் அவன் பெற வேண்டும் என்ற உணர்வை நாம் பாய்ச்சினால் “அடுத்து அவன் தவறில்லாதபடி வேலையை நிதானித்துச் செய்வான்…”

மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும் என்ற உணர்வினை அனைவருக்கும் நாம் வேண்டிடல் வேண்டும்… அதை வளர்த்திடல் வேண்டும். அதற்குத் தான் ஆலயத்தில் இந்த மார்க்கத்தைக் காட்டினார்கள்.

சிலையைப் பார்க்கும் பொழுது துவைதம். ஸ்தல புராணமாக வடித்து நற்குணங்களை அங்கே விவரித்துக் காட்டியுள்ளார்கள்.
1.அந்தத் தெய்வ குணத்தையும் தெய்வீக நிலைகளையும் நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கிப் பெறுதல் வேண்டும்
2.இந்த ஆலயம் வருபவர் எல்லோரும் தெய்வகுணம் பெற வேண்டும் தெய்வ நிலைகளும் பெற வேண்டும்
3.நாங்கள் பார்ப்போர் குடும்பம் எல்லாம் தெய்வ குணமும் தெய்வீகப் பண்புகளும் பெற வேண்டும்
4.நாங்கள் தொழில் செய்யும் இடங்களில் எல்லாம் தெய்வ குணங்கள் பெற வேண்டும்…
5.தெய்வ சக்தி அங்கு வளர வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
6.நமக்குள் இல்லாதவர்கள் யாரும் இல்லை… “எல்லோருமே நமக்குள் இருக்கின்றார்கள். “
7.எல்லோருக்கும் அந்த உயர்ந்த சக்தி கிடைக்கும்படி செய்ய வேண்டும் “மறைமுகமாக…”

ஏனென்றால் ஒரு வேதனைப்படுவனுடைய உணர்வுகள் “மறைமுகமாக” நமக்குள் வந்து தான் விஷத்தின் தன்மையாக மாறி… நம்மை அறியாமலே வேதனைப்படும் செயலாக அமைத்து விடுகின்றது. மற்றவரிடம் அதைச் சொல்லப்படும் போது அது எல்லோரையும் வேதனைக்குள்ளாக்குகிறது.

இதை மாற்ற வேண்டும் என்பதற்குத் தான் கல்யாணராமா…! பகைமைகளையும் வேதனைகளையும் அகற்றும்படி ஆலயத்தில் நமக்குச் சுட்டிக் காட்டுகின்றார்கள் ஞானிகள்.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

குருநாதர் என்னை உதைத்தார்… உங்களை நான் அடித்தால் என்ன செய்வீர்கள்…!

குருநாதர் என்னை உதைத்தார்… உங்களை நான் அடித்தால் என்ன செய்வீர்கள்…!

 

என் குருநாதர் சொன்னதை நான் (ஞானகுரு) செய்யவில்லை என்றால் உதை கொடுத்தார். உங்களை நான் அடித்தால் என்ன செய்வீர்கள்…! வாங்கிக் கொள்வீர்களா…?

எனக்குத் திருப்பிக் கொடுப்பீர்கள்…!

என்னடா… சாமி என்னென்னமோ சொல்ல்லிவிட்டுக் கடைசியில் உதைக்கின்றார் என்பீர்கள்…! உங்களை நான் உதைக்க முடியுமா…?

ஒருவர் என்ன செய்தார்…? ஐயோ… என் கஷ்டம் என்னை விட்டுப் போகவே மாட்டேன் என்கிறது என்று அலறுகின்றார். நான் என்ன சொன்னாலும் அவர் கேட்க மாட்டேன் என்கிறார்.

போய்யா…… உனக்குக் கஷ்டமும் இல்லை ஒன்றுமில்லை போ…! என்று சொன்னேன்.

என்ன… சாமி இப்படிக் கோபிக்கின்றார்…? என்கிறார். உங்களிடம் நான் இப்படிச் சொன்னால் நீங்கள் என்ன செய்வீர்கள்…?

1.இந்த அழுத்தத்தைக் கொடுத்த பின் என்ன செய்யும்…?
2.சரி.. இதனுடன் அந்தத் துன்பம் போனது என்று நீங்கள் நினைத்தால் பரவாயில்லை. துன்பம் போய்விடும்.

இது நடந்த நிகழ்ச்சி.. ஒரு அம்மாவிற்கு ரொம்பக் கஷ்டம்… சொத்துக்களை இழந்துவிட்டது. வீட்டையும் கூட எடுத்துக் கொண்டு தொல்லை கொடுக்கின்றார்கள்.

எப்படியாவது இந்தச் சொத்துகள் கிடைத்து விட்டால் நான் பிழைத்துக் கொள்வேன் என்று என்னிடம் கேட்டது.

சரி.. நீ நான் சொல்வது போன்று செய் என்றேன். அவருடைய கஷ்டத்தையும் மற்ற நிலைகளையும் பார்த்துவிட்டு இது போன்ற நிலைகளைச் செய்து வந்தால் உங்களுக்கு அது கிடைக்கும் என்று தெளிவுபடுத்தினேன்.

ஆனால் சொத்தை வைத்துக் கொண்டு கொடுக்க மாட்டேன் என்கிறார்கள்.
1.கொடுக்கவே மாட்டேன் என்கிறார்கள் என்று நீ சொல்லாதே… அதை விட்டுவிடு…
2.”கிடைக்க வேண்டும்…” என்று சொல்லித் திருப்பி எண்ணிப் பாருங்கள்… உங்களுக்குக் கிடைக்கும்…! என்று நான் சொன்னேன்.

எங்கெங்கே… எங்கெங்கே…! என்று அப்படியே கேட்கின்றது.

பின் நான் கோபமாகச் சொல்லி “உங்களுக்குக் கிடைக்கும்மா…” இந்த மாதிரிச் செய்யுங்கள் என்று அழுத்தமாகச் சொல்லி அடுத்து நீங்கள் அடுத்து நல்ல செய்தி கொண்டு வருவீர்கள்…! என்று சொன்னேன்.

அப்படிங்களா… சரி…! என்று அதன்படி செய்தது. முதலில் கேஸ் நடத்துவதற்கே பணம் இல்லை என்று சொல்லி இருந்தார்கள். எப்படியோ எல்லாம் கிடைத்து… கேசும் ஜெயித்து விட்டது… வீடும் கிடைத்தது அந்த அம்மாவிற்குச் சந்தோஷமானது.

அதோடு விட்டார்களா என்றால் இல்லை… “விடவில்லை…!” அன்றாடப் பிழைப்புக்குத் தொழில் செய்யலாம் என்றால் அதற்குப் பணம் இல்லையே என்று அடுத்து இதைச் சொல்கின்றது.

அதற்கு நான் என்ன செய்வது…?

திரும்பத் திரும்ப… திரும்ப திரும்ப… பணம் இல்லை… பணம் இல்லை என்று கஷ்டத்தைச் சொல்லி அழுகின்றது. எல்லாம் வந்ததுங்க… இருந்தாலும் இப்பொழுது தொழில் செய்யாமல் எப்படி வாழ்வது…? என்று தெரியவில்லை. வீட்டை வைத்துத் தான் ஏதாவது வாங்க வேண்டும் என்று சொல்கிறது.

முதலிலே கடன் வாங்கி எல்லாம் போனது அல்லவா..! ஆனால் அதிலிருந்து மீண்டு வந்தது அல்லவா…! அதே போன்று
1.இப்போது ஒரு தொழிலைச் செய்ய வேண்டும் என்று விரும்பி அதைச் செயல்படுத்துங்கள்
2.“அதற்குண்டான வாய்ப்புகள் வரும்…” என்று சொன்னேன்.

எங்கெங்கே நடக்கப் போகின்றது…? என்று இப்படியே என்னிடம் பேசுகின்றது. இதற்கு நான் என்ன சொல்வது…!

சொத்து இல்லை என்று முதலில் வந்தாய்… அது எப்படி அம்மா உனக்குக் கிடைத்தது…? அதன் வழியில் இதுவும் வரும் அல்லவா…! என்று சொன்னேன்

வரும்…! ஆனால் இன்றைக்குப் பிழைப்புக்குச் சொல்லுங்கள்… நான் என்ன பண்ண வேண்டும்.

ஏனென்றால்
1.நான் சொன்னதை விடுத்து விட்டு
2.அந்தக் கஷ்டத்தை எடுத்துக் கொள்கின்றது அதையே பேசிக் கொண்டிருக்கின்றது.

நடந்த நிகழ்ச்சி.

எனக்குக் கோபம் வந்துவிட்டது ஏனம்மா…! நான் சொன்னபடி செய்யாதபடி மீண்டும் மீண்டும் இந்தத் தரித்திரத்தையே எண்ணிக் கொண்டிருக்கின்றாய்… “இந்தத் தரித்திரத்தை விட்டு விடம்மா… நன்றாக இருப்பாய்…!” என்று சொன்னேன்.

எங்கெங்கே என் தரித்திரம் என்ன விட்டுப் போகின்றது…? என்று மீண்டும் அழுகின்றது.

சீ… போ…! என்று அந்தத் தரித்திரத்தைச் சீ… போ…! என்று நான் சொன்னேன்.

அந்த அம்மா உடனே என்ன சொல்கிறது…!

சாமி என்னைப் போகச் சொல்லிவிட்டார். சாமியைத் தேடி நான் வந்தாலும் கூட அவர் என்னிடம் கோபித்துப் பேசுகின்றார் பாருங்கள்… என்று அதனுடைய உணர்வையே பேசுகிறது.

1.தரித்திரமே – சீ… போ…! நல்ல காலம் வரட்டும்… என்று யாம் கொடுக்கக்கூடிய வாக்கு
2.தீமை என்ற உணர்வை மாற்றுவதற்கு இப்படிச் சொன்னாலும் கூட ஏற்றுக்கொள்ள மனமில்லை.

கோ… என்று அழுக ஆரம்பித்து விட்டது. என் கஷ்ட காலம் பாருங்கள் சாமி கூட என்னைக் கோபமாகப் பேசுகின்றார்கள்.

ஏனென்றால் நான் எதைச் சொல்கின்றேன் என்ற அர்த்தம் கூடப் புரியாதபடி அதனுடைய உணர்வுகளிலேயே தான் நிற்கின்றது.

சாமி போகச் சொல்லிவிட்டார் என்று அழுது கொண்டே செல்கின்றது. அதனுடைய அழுத்தங்கள் அப்படி இருந்தாலும் நான் கொடுத்த வாக்கு எப்படியோ அங்கே நிறைவேறுகின்றது.

வட்டி இல்லாமல் ஒருவர் பணம் கொடுக்கின்றார் கடை வைத்து வியாபாரம் நடந்தது பணம் வந்தது. எல்லாம் நடந்த பின் இரண்டாவது தடவை என்னிடம் வந்து “என்னை நீங்கள் காப்பாற்றுங்கள்…” என்று சொல்கிறது.

அன்று தான் நான் விளக்கத்தைச் சொல்கின்றேன்.
1.உன்னுடைய தரித்திரத்தைத் தான் நான் போகச் சொன்னேன்
2.நீ கோபித்துக் கொண்டு சென்று விட்டாய் அம்மா…! என்று சொல்கின்றேன்.

என்ன பண்ணுவது…! அந்தத் தரித்திர நேரத்தில் என்னால் நல்லதைக் கேட்க முடியவில்லை. ஆனால் இப்பொழுது தரித்திரம் போய்விட்டது கடையில் வியாபாரம் நன்றாக நடக்கின்றது. கஷ்டமெல்லாம் நிவர்த்தியாகி விட்டது என்று சொல்கிறது.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால்
1.சந்தர்ப்பத்தில் வரும் அந்த தரித்திரத்தைத் தான் உங்களுக்குள் இழுத்துக் கொள்கின்றீர்களே தவிர
2.அதை நான் “போ…!” என்று சொன்னவுடன் உங்களுக்கு எவ்வளவு கோபம் வருகிறது…?

ஏனென்றால் முதலில் அந்த அம்மாவிடம் நான் இதைச் சொன்ன பின் கோபித்து என்னிடம் ஒன்றும் சொல்லாமலே சென்று விட்டது. போய்… எல்லாம் நன்றாக ஆன பின்பு தான் இங்கு வருகின்றது.

ஆக “நான் மறைமுகமாகச் சொன்னாலும் கூட” ஏற்றுக் கொள்ளும் பண்புகள் இல்லை. சொல்வது அர்த்தமாகின்றது அல்லவா…!

அருள் வழியில் அன்றாடம் நினைக்க வேண்டியது

அருள் வழியில் அன்றாடம் நினைக்க வேண்டியது

 

எப்பொழுதெல்லாம் துன்பம் வருகின்றதோ… அப்போது உடலில் இருந்து வரக்கூடிய மணமே உங்களுக்கு எதிரியாக மாறி விடுகின்றது அதை அடிபணியச் செய்யும் நிலைக்கே “என்னுடைய (ஞானகுரு) ஆசீர்வாதம்…”

துன்பத்தை விளைவிக்கும் நோயோ… துன்பத்தை விளைவிக்கும் சொல்லோ… அதெல்லாம் நீங்க வேண்டும் என்ற எண்ணத்தில் நான் அருளாசி கொடுப்பதை நீங்களும் அப்படியே எண்ணிப் பெற்றால் அந்த ஞானிகளுடைய அருள் உணர்வுகள் உங்களுக்குள் படர்ந்து துன்பங்கள் அகலும்.

உதாரணமாக மாம்பழம் வாங்க வேண்டும் என்று விரும்பினால் நுகர்ந்த உணர்வு உங்களை அந்தக் கடைக்கு அழைத்துச் செல்கிறது. அதே போல்
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.என் உடல் நோய் நீங்க வேண்டும்… துன்பம் நீங்க வேண்டும்
3.என் சொல்லுக்குள் இனிமை பெற வேண்டும்… செயல் புனிதம் பெற வேண்டும் என்று ஏங்கினால்
4.அது உங்களுக்குள் கிடைக்கப் பெறும்.

அதற்குப் பதிலாக சாமி…! என் துன்பம் என்னை விட்டு போக மாட்டேன் என்கிறது… “நீங்கள் தான் கடவுளாக இருக்கின்றீர்கள்…” என்று என்னை வணங்கினீர்கள் என்றால் “உங்களை நீங்கள் ஏமாற்றிக் கொள்கின்றீர்கள்” என்று தான் அர்த்தம். நான் கொடுத்த உபதேசம் அனைத்தும் வீணாகிவிடும்.

இவ்வளவு தூரம் பெரியவர் உயர்ந்த கருத்துக்களைச் சொல்லுகின்றார் என்று என்னை உயர்த்தி விட்டு… உங்களைத் தாழ்த்தி விடாதீர்கள்
1.உணர்வின் எண்ணத்தை உயர்த்துங்கள்… உணர்வின் ஆற்றலை உங்களுக்குள் செலுத்துங்கள்.
2.உங்களை அறியாது ஆட்டிப் படைக்கும் அந்த சக்தியைத் தாள் பணியச் செய்யுங்கள்.

எனக்கு குருநாதர் காட்டிய நிலைகள் அதுதான்…!

ஒருவர் துன்பப்படுகிறார் என்றால் “நம் சொல்” அவரைத் தீமையிலிருந்து மீட்டி உயர்வான நிலைகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

எல்லோரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… எல்லோரும் நலமாக இருக்க வேண்டும்… என்று எண்ணும் பொழுது நாம் முதலில் நலமாகின்றோம் நம் சொல்லும் செயலும் நல்லதாகிறது. நம் சொல் மற்றவர்கள் உள்ளங்களை மகிழச் செய்கின்றது.

அந்த மகிழ்ச்சியால்
1.மற்றவர்கள் நம்முடன் இணைந்து செயல்படும் நிலையாக
2.நாம் போகும் நிலைகளுக்குத் தடையின்றி வழிபடுத்துவதும்
3.தடையின்றி தொழில் நடப்பதும் தடையற்ற நிலையாக நமக்குள் எல்லாமே உருவாகின்றது.

இந்த அடிப்படையில் நீங்கள் எம்மிடம் ஆசி வாங்கினால் அது உங்களைப் பின் தொடர்ந்து எப்போதுமே உறுதுணையாக அமையும்.
1.உங்களைக் காக்கும்… உங்களுக்குள் உயர்வை ஊட்டும்
2.மெய் ஒளியின் தன்மையைப் பெறச் செய்யும்… நீங்கள் அருள் ஒளி பெறுவீர்கள்.

ஆக… மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்; அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்; நலமும் வளமும் நாங்கள் பெற வேண்டும்; எங்கள் சொல்லுக்குள் இனிமை பெற வேண்டும்; எங்கள் செயல் அனைத்தும் புனிதம் பெற வேண்டும்; நாங்கள் பார்ப்பது அனைத்தும் நலம் பெற வேண்டும்; நாங்கள் பார்ப்போர் அனைவரும் நலம் பெற வேண்டும்; எங்களைப் பார்ப்போர் அனைவருக்கும் நல்ல உள்ளங்கள் வளர வேண்டும் என்ற இந்த உணர்வை எண்ணினால் இதுவே உங்களுக்கு எம்முடைய ஆசியாகக் கிடைக்கின்றது அருள் ஞான வித்துக்களாக…!

“நான் பார்த்த ஒவ்வொருவருக்கும்…” உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும் என்று தியானிக்கின்றேன்

“நான் பார்த்த ஒவ்வொருவருக்கும்…” உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும் என்று தியானிக்கின்றேன்

 

யாம் (ஞானகுரு) உபதேசித்ததைக் கேட்டுணர்ந்த நீங்கள் அடுத்து என்னைப் பார்க்கும் பொழுது
1.நான் நன்றாக இருக்கின்றேன்
2.நீங்கள் சொன்னபடி நான் எடுத்தேன்… என் உடலில் இருக்கும் நோய்கள் அகன்றது நன்றாக இருந்தது என்று
3.இந்தச் சொல்லை கேட்பதில் தான் எனக்கு மகிழ்ச்சி.

உங்களைத்தான் சதா நான் பிரார்த்தனை செய்கிறேன்…! நீங்கள் எத்தனையோ கோவிலுக்குப் போவீர்கள். ஆனால் உங்கள் உயிரைக் கடவுளாக எண்ணி… உங்கள் உடலைக் கோவிலாக எண்ணி… உங்கள் உடலில் இருக்கும் நல்ல குணங்களைத் தெய்வங்களாக எண்ணி…
1.அந்தக் கோவிலில் அனைத்தும் மகிழ்ச்சியாகச் செயல்பட வேண்டும்.
2.அந்தக் கோவிலிலிருந்து வரக்கூடிய மூச்சு எல்லோருக்கும் நல்லது செய்ய வேண்டும் என்று உங்களைத் தான்
3.நான் பார்த்த கோவில் அத்தனையும் “ஒவ்வொருத்தராக…” நான் தியானம் செய்து கொண்டிருக்கின்றேன்.

அதிகாலை 4 மணிக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று உங்களைப் பிரார்த்தனை செய்கிறேன். இதைக் கேட்டு பதிவு செய்தவர்களுக்கெல்லாம் அந்த நேரத்தில் உங்களைத் தட்டி எழுப்புவது போல் இருக்கும்.

அந்த நேரத்தில் மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்கும்.

உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் நாம் தவறு செய்யாமலே நமக்குள் தீங்கு விளைவிக்கும் அந்த உணர்வுகள் நமக்கு நல்லது செய்யும் ஆற்றலாகப் பெற முடியும். அதைப் பெறச் செய்யும் தகுதியை ஏற்படுத்துகின்றோம்.

ஆகையினால் முழு நம்பிக்கையாக உங்களை நம்புங்கள்…!

ஏனென்றால்
1.உங்களிடம் அவ்வளவு சக்தி இருக்கின்றது… உங்களுக்கு முன்னாடி உயர்ந்த சக்திகள் இருக்கின்றது
2.அதை நினைத்தீர்கள் என்றால் உங்களுக்குள் கூடும்… நல்லதைப் பெற முடியும்… மெய் ஒளி காண முடியும்
3.மனிதன் ஒருவனுக்கு மட்டும் தான் இந்த நிலை… ஆகவே உங்களை நீங்கள் நம்புங்கள்.

சாமி சொன்னார் என்று சொல்லி சாமி சொன்ன சக்திகளைப் பெற வேண்டும் என்று எண்ணுங்கள். “சாமி செய்து கொடுப்பார்…” என்று எண்ண வேண்டாம்.

நான் உங்களை எல்லாம் பிராத்தனை செய்கின்றேன். அந்தச் சக்திகள் கிடைக்க வேண்டும் என்று உங்களுடன் உறுதுணையாக இருக்கின்றேன்.

சூரியனின் காந்த அலைகள் படுகின்றது… பூமி அதைத் தனக்குள் எடுத்துக் கொண்டால் தான் முடியும் பிரபஞ்சத்தில் காற்றிலே பல சக்திகள் படர்கின்றது போகும் பாதையில் தான் ஈர்த்துக் கொண்டால் தான் பூமி வளர முடியும்

இதைப் போன்று தான் நீங்கள் எல்லோரும் ஞானிகள் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று யாம் எண்ணுகின்றோம். அந்த அருள் ஒளியை “நீங்கள் ஈர்த்துக் கொண்டால் தான்…” செயல்படுத்த முடியும்.

அதன் வழி நீங்கள் செயல்பட்டு நான் நன்றாக இருக்கின்றேன்; எல்லாம் நன்றாக இருக்கின்றது; என் உடல் நன்றாக இருக்கின்றது; காற்றிலிருந்து நல்ல சக்திகளை என்னால் பெற முடிகின்றது…! என்று
1.ஒவ்வொருவரும் அந்தச் சந்தோஷமான செய்திகளை நீங்கள் சொல்ல வேண்டும்
2.அதை நான் கேட்க விரும்புகின்றேன்…!