“சாமி சொன்னார்… சாமி சொன்ன வழியில் தியானிப்போம்…” என்ற நிலைக்கு நீங்கள் வர வேண்டும்

“சாமி சொன்னார்… சாமி சொன்ன வழியில் தியானிப்போம்…” என்ற நிலைக்கு நீங்கள் வர வேண்டும்

 

உங்கள் முந்தைய வாழ்க்கையில் உங்களை அறியாமல் தீமையான உணர்வுகள் பதிவாகியிருந்தால் அதை மாற்றிட… தியானப் பயிற்சியாகவும் ஆத்ம சுத்தி பயிற்சியாகவும் உங்களுக்குக் கொடுக்கின்றேன் (ஞானகுரு).

துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுக்கப் பழகிக் கொண்டீர்கள். பழகாதவர்களும் அதிகாலையில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுக்கப் பழகிக் கொள்ளுங்கள்.

பழகிக் கொண்ட உணர்வுகளுக்கு அதை இயக்கப் பயிற்சியாக உங்களுக்குக் கொடுக்கின்றோம்.

1.ஆத்ம சுத்தியை நாம் எப்படிச் செயல்படுத்த வேண்டும்…?
2.அதை வைத்து நம் உடலில் நல்ல அணுக்களை எப்படி வளர்க்க வேண்டும்…?
3.அதே சமயத்தில் தீய அணுக்கள் நம் உடலுக்குள் வராது தடுக்கும் சக்தியாக ஆறாவது அறிவின் துணை கொண்டு… உடலிலுள்ள ஜீவ அணுக்களை ஒளியாக எப்படிப் பெருக்க வேண்டும்…? என்று தான்
4.உங்களுக்குப் பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கின்றேன்.

இந்தப் பயிற்சியைக் கொடுத்தும்… உங்களுக்கு உடல் ஆசை வந்தால் இராவணனாக மாறி விடுகின்றது. இராவணனாக மாறி விட்டது என்றால் உங்கள் நல்ல குணங்களை எல்லாம் அது எடுத்துச் சாப்பிட்டுவிடும்.

அப்படிச் சாப்பிட்டு விட்டால் அசுர குணம் கொண்ட உடலைத்தான் இந்த உயிர் உருவாக்கிவிடும். அடுத்து மனித உரு இல்லை.

ஆகவே… அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து உயிரைப் போல ஜீவ அணுக்களை ஒளியாக மாற்றி இந்த உடலுக்குப் பின் ஒளி உடல் பெறலாம்.

1.இனி வரும் யுத்த நிலைகளில் கடுமையான விஷத்தன்மையாகி… இந்த உலகமே அழிந்தாலும்
2.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நீங்கள் இணைந்து வாழலாம்.

இந்த உயிர் என்றுமே அழிவதில்லை. நெருப்பிலே பட்டாலும் இந்த உயிர் அழிவதில்லை. ஆனால் உடல்கள் கருகுகின்றது. உடலிலிருந்து வெளி வந்த கருகிய உணர்வுகள் பரவுகின்றது. எவர் உடலில் படர்கின்றதோ அங்கே அந்த உணர்வின் இயக்கமாக இயக்குகின்றது.

அடுத்து இந்த உயிர் இதே வேதனைப்படுத்தும் உடலில் ஈர்த்து அதற்குள் வந்து உடலைப் பெறுகின்றது. உடல் பெறும் சந்தர்ப்பம் பெரும் பகுதி புழுவாகவும் பாம்பாகவும் பூச்சியாகவும் தான் பிறக்க நேருகின்றது.

இந்த விஷ அணுக்களே இங்கே இப்படிப் பரவப்படும் பொழுது மனித உடலில் இது பிறந்து விட்டால் உடலுக்குப் பின் இந்தக் கிருமிகளின் நிலை அதிகமாகும். பின்… பூச்சிகளை உருவாக்கும் நிலை அதிகமாகும்.

இனிமேல் மனித உடல் பெறுவது என்பது மிகவும் கடினமாகிவிடும்.

ஆகவே இன்றைய நிலைகளில் கவலையும் சஞ்சலத்தையும் சங்கடத்தையும் துரத்துங்கள். ஏனென்றால் கவலையும் சஞ்சலமும் சோர்வும் உங்களை அது பெரும் பிசாசாக மாற்றி உங்கள் நல்ல குணங்களை அழித்து உங்களை அழிவிற்கே கொண்டு செல்கின்றது.

கவலையும் சஞ்சலமும் சோர்வும் கொண்டு வரப்படும் பொழுது
1.“தாங்க முடியவில்லை..,” என்ற கோபமும் பழி தீர்க்கும் உணர்வையும் இது இரண்டையும் கூட்டி வெறுப்பின் உணர்வாகி
2.இந்த உடலையே வெறுக்கும் நிலையாகி வெறுத்து “மற்றவர்களைத் தாக்கும் உணர்ச்சிகள்” கொண்டு வருகின்றது.
3.இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபட வேண்டும்.
4.எமது குரு அருள் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று தான்
5.திரும்பத் திரும்ப அவர் உணர்த்திய நிலைகளை ஆழமாக உங்களுக்குள் பதிவாக்கிக் கொண்டுள்ளோம்.

நீங்கள் எல்லாம் எந்த அளவிற்குத் தெளிந்து வருகின்றீர்களோ அது உங்களுக்கு நல்ல பயனைத் தரும்.

ஆனால்… வீட்டுக் கவலைகளையோ சஞ்சலங்களையும் சலிப்பையும் எண்ணிக் கொண்டிருந்தால் யாம் சொல்லும் நிலைகள் பதிவாகாது.

சாமி (ஞானகுரு) சொன்னார்…! நாம் அவர் சொன்ன வழியில் தியானிப்போம். எல்லோருக்கும் என் மேல் அந்தப் பேரன்பு வர வேண்டும். எங்கள் குடும்பத்திலுள்ளோர் அனைவரும் நல்லராக வரவேண்டும். எல்லோருக்கும் நல்ல உணர்வுகள் கிடைக்க வேண்டும். ஒன்றுபட்டு வாழும் தன்மை வளர வேண்டும் என்ற எண்ணங்களை எண்ணித் தியானியுங்கள்.

1.சாமியைப் பார்க்க வேண்டும்… சாமியைப் பார்த்தால் தான் நல்லது…! என்ற நிலை வேண்டியதில்லை
2.“சாமி சொன்ன வழியில்” நீங்கள் எண்ணித் தியானித்தாலே போதுமானது.
3.சாமி சொன்ன சக்தி இங்கே இருக்கின்றது
4.சாமி உபதேசித்த உணர்வுகள் உங்களுக்குள் பதிவு இருக்கின்றது.
5.யாம் சுமார் 30 வருட காலமாக உபதேசித்த உணர்வுகள் அனைத்தும் இங்கே இருக்கின்றது… உலகம் முழுவதும் பரவியிருக்கின்றது.
6.அதை எடுத்து உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் எல்லோரும் அந்த அருள் வழியில் உயர்ந்தீர்கள் என்றால் அதைக் கண்டு நான் சந்தோஷப்படுவேன். அந்தச் சந்தோஷமான உணர்வை எடுத்துச் சந்தோஷமான உலகிற்குச் செல்கின்றேன்.

“அதே சந்தோஷத்தை” உங்களுக்குள் உருவாக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன்.

மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுக்கும் திறனை நாம் கூட்ட வேண்டும்

மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுக்கும் திறனை நாம் கூட்ட வேண்டும்

 

இன்று இருக்கக்கூடிய உலகில் மீண்டும் மனித உடல் பெறுவோமா..? என்ற சந்தேகம் கூட வந்துவிட்டது.

ஒரு உயிரணுவின் தன்மையை எடுத்துக் கொண்டபின் அந்த கருமுட்டைக்குள் இருக்கக்கூடிய உயிரணு என்ன செய்கின்றது…? என்று எலெக்ட்ரானிக் முறைப்படுத்தி அந்த அதிர்வுகளைக் கொடுத்து அது என்ன செய்கின்றது…? என்று பார்க்கின்றார்கள்.

கருவில் இருக்கும் குழந்தைக்கு அதைச் செய்து பார்க்கின்றனர்.

இதே மாதிரி உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிராத்மாக்களை அதை எடுத்துக் கொண்டு அந்த உயிராத்மா தனியாக என்ன செய்கின்றது…? என்ற வகையில் ஒரு உடலுக்குள் இல்லாத நிலையில் தனித்திருப்பதைப் பிரித்துப் பார்த்து விஞ்ஞான அறிவு கொண்டு செயல்படுத்துகின்றார்கள்.

இந்த நிலைகளை நம் பூமியில் வாழ்ந்த மெய் ஞானிகள் ஏற்கனவே சொல்லியுள்ளார்கள். அதை யாரும் சிந்திக்கவில்லை. இராமாயணம்.. மகாபாரதம்… கந்த புராணம் இவைகளில் அதைத்தான் சொல்லியுள்ளார்கள்.
1.ஆனால்… அதையெல்லாம் சாமியாக (கடவுளாக) நினைத்து விட்டார்களே தவிர
2.அதில் அனைத்து நிலைகளும் தெளிவாக்கப்பட்டுள்ளது.

கோவிலில் காசைக் கொடுத்து அர்ச்சனை அபிஷேகம் ஆராதனை செய்தால் அவன் பார்த்துக் கொள்வான்…! என்று தான் இன்று எண்ணிச் செய்து கொண்டிருக்கின்றோம்.

ஆனால்…
1.தீமையை நீக்கிடும் உணர்வை வளர்த்தால் நம் உயிரான “இவன் பார்த்துக் கொள்வான்” என்ற நிலைக்கு வர வேண்டும்
2.இதை எடுத்து உங்களுக்குள் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இந்த எதிர்காலம் மிகக் கடினமான காலமாக வந்து கொண்டிருக்கின்றது. அதிலே விஷத்தின் தன்மையை நாம் எண்ணத்தால் எடுத்தால் உடனே நமக்குள் வந்துவிடும்.

அதை மாற்ற உடனுக்குடன் ஆத்ம சுத்தி செய்து “உலகம் நலமாக இருக்க வேண்டும்…” என்று எண்ணிப் பழகுதல் வேண்டும். அப்போது இந்த உலக உணர்வுகள் அனைத்தும் நமக்குள் நலமாகும் உணர்வாகப் பெறுவோம். நமக்குள் தீமைகள் பெருகாது. தீமைகள் நமக்குள் புகாத நிலை ஆகிவிடும்.

இதைப் போன்று செய்து பழகிக் கொள்ளுங்கள்.

சப்தரிஷி மண்டல அலைகளை நீங்கள் எடுத்து உங்களுக்குள் வலுவாக்கி
1.உங்கள் குடும்பத்தில் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களின் முகப்பிலே அதை இணைத்து
3.விண்ணிலே உந்தித் தள்ளினால் அவர்கள் எல்லோரும் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து சப்தரிஷிகளாக ஆகிவிடுகின்றார்கள்.

அவர்களை விண் செலுத்திய பிஜ்ன் அந்த உணர்வுகளை எடுத்தால் எளிதில் நீங்கள் அதைப் பெற முடியும். குடும்பத்தில் எத்தனை பெரிய சிக்கல் வந்தாலும் மாற்றிக் கொள்ளும் சக்தியாக அது வருகின்றது.

1.ஆகவே யாம் சொன்ன முறைப்படி ஆத்ம சுத்தியை எடுத்து வந்தால் தன்னாலே அந்த “ஞானம்” வரும்
2.எதைச் செய்வது…? எப்படிச் செய்வது…? என்ற மன வலிமை கிடைக்கும்…. சிந்தித்துச் செயல்படும் தன்மை கிடைக்கும்.

சிறிது நாள் பழகிக் கொண்டால் போதும். தன்னாலே அந்த உணர்வுகள் அந்த வேலையைச் செய்யத் தொடங்கும். இதில் ஒன்றும் சிரமமில்லை…!

ஒரு தையல் வேலையைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று போனால் முதலில் கோணலாகப் போகும். பிறகு கற்றுக் கொண்டபின் என்ன செய்கின்றது…? ஒழுங்காக வந்துவிடுகின்றது…!

இதே மாதிரி நீங்கள் எண்ணும்போது உங்கள் உடலில் இருக்கக்கூடிய உணர்வுகள் இந்த ஆன்மாவிற்குள் வரும் பொழுது பல திசைகளில் திருப்பும்.

ஆனால் நீங்கள் இதை மாற்றிச் செய்து பாருங்கள். இதைச் செய்யக் “காசா… பணமா…?”
1.இடைஞ்சல் வரும் பொழுது இடைஞ்சலை நீக்குவதற்கு ஒரு சக்தியும் கொடுத்து
2.உங்களுக்கு நான் ஒரு பிரார்த்தனையும் செய்து
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எப்பொழுதும் நீங்கள் பெற வேண்டும் என்று எண்ணி இதை இயக்கிக் கொண்டே இருக்கின்றேன் (ஞானகுரு)
4.நீங்கள் அந்த நேரத்தில் எடுத்தால் தானே அந்தச் சக்தி உங்களுக்குள் இணையும்.

இதற்கு நேரமில்லை… இது ஒரு சிரமம்…! என்று சொல்லிக் கொண்டு “சாமியிடம் கேட்டோம்… சாமி சரியாகும்…! என்று சொன்னார். ஆனால் எங்கே நடந்தது…?”

“நடக்கவில்லை…! சாமியாவது… பூதமாவது…?” என்று எம்மையும் பேசுகின்றார்கள்.

சாமியிடம் போய் என்ன ஆனது…? என்று கேட்கின்றார்கள். அவர்கள் ஆசையைத்தான் பெருக்கப் பார்க்கின்றார்கள். ஆக நடக்கவில்லை… என்று எம்மைத் திட்டுவதோடு மட்டுமல்லாமல் மற்றவர்களிடமும் இதைச் சொல்கின்றார்கள்.

ஏனென்றால் முதலில் எல்லோருக்கும் ஆசீர்வாதம் கொடுத்து நலமாக்கிக் கொண்டு தான் வந்தேன். இப்பொழுது “உங்களாலேயே உங்களை நலமாக்க முடியும்…” என்ற உணர்வைக் கொண்டு வருகின்றேன்.

அதன் வழியில் உங்கள் தீமைகளையும் நோய்களையும் நீங்கள் நீக்கிக் கொள்ள முடியும். இப்பொழுது யாம் கொடுக்கும் இந்த வாக்கினை ஆசீர்வாதமாக ஏற்று… மன உறுதி கொண்டு உங்கள் வாழ்க்கையை வழி நடத்த இது உதவும்.

1.எந்த அளவிற்குத் தீமையை நீக்க வேண்டும் என்ற ஆசையில்
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுக்கும் திறன் கொண்டு வருகின்றீர்களோ
3.அந்த அளவிற்கு நீங்கள் அதைப் பெறுகின்றீர்கள்… தீமைகளிலிருந்து விடுபடுகின்றீர்கள்.

நீங்கள் ஒவ்வொருவரும் அருள் வழியில் வாழ இதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஆத்ம சுத்தி செய்யுங்கள்… உங்களால் நிச்சயம் முடியும்.

தாய் கருவிலே பூர்வ புண்ணியம் பெற்றவர்கள் தான் “எம்முடைய உபதேசங்களைக் கூர்ந்து பதிவாக்குவார்கள்…”

தாய் கருவிலே பூர்வ புண்ணியம் பெற்றவர்கள் தான் “எம்முடைய உபதேசங்களைக் கூர்ந்து பதிவாக்குவார்கள்…”

 

1.மனிதனாக உருப்பெறக் காரணமாக இருந்த நம் தாய் தந்தையரை முதலில் கடவுளாக மதித்துப் பழகுதல் வேண்டும்.
2.ஏனென்றால் எத்தனையோ தொல்லைகள் பட்டுத்தான் அவர்கள் மனிதனாக ஆனார்கள்.

நாம் ஈயாக எறும்பாக பாம்பாக தேளாக இருந்திருப்போம். அதை அடித்திருப்பார்கள். நம் உயிர் அவர் உடலின் ஈர்ப்பிற்குள் சென்றிருக்கும். அவர் உடலில் சேர்த்த உணர்வைக் கவர்ந்தது நம் உயிர். நம் உயிர் அவர் உடலுக்குள் சென்று அவர் வளர்த்துக் கொண்ட உணர்வின் தன்மை கவர்ந்தது.

கவர்ந்து வளர்ந்து அவருடைய கருவாக நாம் உருவானாலும் அவர் கருவில் இருக்கக்கூடிய காலத்தில்
1.அவர்கள் நல்லதைப் பற்றி ஏங்கி இருந்தால்
2.நல்ல உணர்வுகள் சேர்த்து நல்ல உடலை உருவாக்கும்.

ஆனால் நாம் கருவிலே இருக்கப்படும்போது வேதனையும் துயரமும் அதிகமாக அந்த உணர்வின் தன்மைகளைத் தாய் எடுத்திருந்தால் நம் உடலில் பல நோய்களும் ஊனமான உடலும் உருவாக்கும் தன்மை வருகின்றது.

ஆக நம்முடைய சந்தர்ப்பம் கருவில் இருக்கும்போது தாய் எடுத்துக் கொண்ட உணர்வுக்குத்தக்கத்தான் நம்மை நல்ல மனிதனாக உருவாக்கியது… சிந்தித்துச் செயல்படும் சந்தர்ப்பத்தையும் உருவாக்கிக் கொடுத்தது.

நாம் கருவில் இருக்கும்போது தாய் எடுத்த உணர்வால்தான் நாம் நல்லவராகவும் சிந்திக்கும் தன்மையும் இப்பொழுது இதைப் போன்ற நல்ல உபதேசங்களைக் கேட்கும் அருளும் நமக்குள் வலுக்கொடுத்தது.

எந்தத் தாய் அவ்வாறு எடுத்ததோ…
1.அப்படிப்பட்ட தாய் உடலில் வளர்ந்த உணர்வு கொண்டவர்கள் இருப்பின்
2.அவர்கள் தான் இந்த உபதேசத்தைக் கேட்பார்கள்… கூர்ந்து கவனித்து எடுத்துக் கொள்வார்கள்.

அந்த உணர்வின் தன்மை இருந்தால் தான் இதைக் கவர முடியும்.

அப்படிப்பட்ட உணர்வுகள் (தாய் கருவில் பெற்ற நிலைகள்) இல்லை என்றால்
1.கேட்பார்கள்… படிப்பார்கள்…
2.தனக்கு வேண்டியதை எதிர்ப்பார்ப்பார்கள்
3.அது இல்லை என்றால் போய்க்கொண்டே இருப்பார்கள்.

அந்த நல்ல உணர்வுகள் பெற வேண்டுமென்று உணர்வின் தன்மை அன்று தாய்க் கருவில் பெற்ற நிலை தான் இன்று உங்களை இங்கு அமர்ந்து கேட்கும்படி… கூர்ந்து கவனிக்கும்படிச் செய்கின்றது.

ஆகவே எத்தனையோ தொல்லைகள் இருப்பினும் எத்தனையோ துயரங்கள் இருப்பினும் மெய் உணர்வை நீங்கள் பெறும் தகுதியை ஏற்படுத்தியது உங்கள் தாயே. அதனால் அந்தத் தாயை நீங்கள் கடவுளாகவும் தெய்வமாகவும் மதித்துப் பழகுதல் வேண்டும்.

எத்தனை இன்னல் வந்தாலும் ஒவ்வொரு நொடியிலேயும்
1.நம்மை எத்தனையோ வகையில் காத்தருளிய தெய்வம் நம் தாய் தான்.
2.நமக்கு நல்ல வழி காட்டிய குருவும் தாயே.

நாம் ஒவ்வொருவரும் நம்முடைய தாயை மதித்து நடந்து பழக வேண்டும்.

ஏனென்றால் தாய் கருவில் இருக்கும்போது எடுத்துக் கொண்ட உணர்வே நம்மை நல்லவனாக்குவதும்… கெட்டவனாக்குவதும்…!

ஆகையினால் உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து… தந்தையரின் உயிரைக் கடவுளாக மதித்து… அவர்களைத் தெய்வமாக மதித்து… இந்த வாழ்க்கைப் பயணத்தை நீங்கள் செயல்படுத்துங்கள்.

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில்
1.உங்களுக்குள் யாம் ஆழப் பதிவு செய்ததை நினைவுக்குக் கொண்டு வந்தால்
2.உங்கள் வாழ்க்கையில் அந்த அருள் சக்திகளைப் பெறலாம்.
3.உங்களுக்குள் அறியாது வரும் இருளைப் போக்கலாம்
4.தெளிந்த மனம் பெறலாம்… தெளிவான வாழ்க்கை வாழலாம்.

“யாம் கொடுக்கும் சக்தியை…” நீங்கள் பெற வேண்டும்… அதை வளர்க்க வேண்டும்… மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்

“யாம் கொடுக்கும் சக்தியை…” நீங்கள் பெற வேண்டும்… அதை வளர்க்க வேண்டும்… மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்

 

காட்டிற்குள் சென்று தவம் இருப்பது என்பது… நம் உடலுக்குள் அதுவே பெரும் காடாகத்தான் இருக்கின்றது. வெறுப்பு வேதனை கோபம் ஆத்திரம் என்று எத்தனையோ கொதித்தெழும் உணர்வுகள் உள்ளது.

துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாம் தவமாக்கி நம் உடலில் இருக்கும் எல்லா அணுக்களிலும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று உடலுக்குள் சேர்ப்பிப்பபதுதான் உண்மையான தவம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானித்து உடலில் இருக்கக்கூடிய உறுப்புகளுக்கு அதைச் செலுத்திப் பழகுதல் வேண்டும்.

1.சொந்தமில்லாத இந்த உடலுக்குச் சொந்தம் கொண்டாடி
2.வெறுப்பு வேதனை சலிப்பு சங்கடம் சஞ்சலம் கோபம் என்ற உணர்வுகளை உங்களுக்குள் வளர்த்து விடாதீர்கள்…
3.அதை வளராது தடுத்து விடுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளை வளர்த்து பிறவி இல்லை என்ற நிலையை அடையுங்கள். உயிரணு தோன்றி மனிதனான பின் கடைசி நிலை அது தான்.

பெண்கள் இந்த உண்மையின் இயக்கங்களை நீங்கள் உணர்ந்து வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றிப் பழகுங்கள்.
1.தன் கணவருக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்றும்
2.அதே போன்று கணவன் தன் மனைவிக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று
3.இரண்டு பேருமே ஒருவருக்கொருவர் தியானிக்க வேண்டும்.

அகஸ்தியன் தன் மனைவியோடு எப்படி ஒன்றி வாழ்ந்தானோ அதைப் போன்று கணவன் மனைவி நீங்கள் வழி தொடர்ந்து செயல்படுத்தி வாருங்கள்.

இந்த உடலுக்கு பின் பிறவி இல்லை என்ற நிலை அடைய “எமது குரு அருளும்… மகரிஷிகளின் அருள் சக்தியும் உறுதுணையாக இருக்கும்…”

1.குரு அருளை நீங்கள் அனைவரும் பெற்று
2.குரு துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று இருளை அகற்றி
3.உங்கள் வாழ்க்கையில் தெளிந்து தெரிந்து தெளிவான வாழ்க்கை வாழ்ந்திடும் அருள் சக்தி பெற்று
4.அமைதியும் சாந்தமும் ஞானமும் விவேகமும் பெற்று
5.உங்கள் வாழ்க்கையில் தீமைகள் புகாது அருளைப் பெருக்கி
6.அருள் வாழ்க்கை வாழ்ந்திடும் அருள் சக்தி நீங்கள் பெற எமது ஆசியும் அதுவாகி
7.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெருகி பேரின்பம் பெற எமது ஆசிகள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கட்டும்.

உங்கள் உடலில் எத்தகைய வலியோ வேதனையோ வந்தாலும் உயிரான ஈசனை வேண்டி துருவ நட்சத்திரத்தின் பேரருளை அங்கே செலுத்திப் பழகுங்கள்.

“உங்களை உங்கள் எண்ணமே காக்கும்…”

எண்ணியதை உயிர் இயக்குகின்றது… எண்ணியதை உடலாக்குவதும் உயிர் தான். இதைப் போன்று உங்கள் வாழ்க்கையில் பேரின்பம் பெற எமது ஆசிகள்.

நான் சொன்ன முறைப்படி தியானப் பயிற்சியைச் சீராக மேற்கொள்ளுங்கள் யாம் (ஞானகுரு) கொடுக்கக்கூடிய உயர்ந்த சக்தியைப் பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணுங்கள்.

1.யாம் சொன்ன அருள் வழியைக் கடைப்பிடிக்கும் போது அது எப்படி உங்களுக்கு நல்லதாகின்றதோ இதைப் போன்று
2.குரு காட்டிய வழியில் பெற்ற சக்திகளை… நீங்கள் மற்றவருக்குள் பாய்ச்சப்படும் பொழுது
3.அவருடைய நோய் போக வேண்டும்… அவருடைய தீமைகள் அகல வேண்டும்.
4.உங்கள் சொல்லைக் கேட்டாலே மற்றவருடைய கஷ்டங்கள் போக வேண்டும்
5.”அத்தகைய சக்தி நாங்கள் பெற வேண்டும்” என்று நீங்கள் எண்ணிப்பாருங்கள்.

நான் சொல்லும் பொழுது உங்களுக்கு நல்லது ஆகிறது அல்லவா…! ஏன் இதைப் போன்று நீங்கள் சொல்லி அவர்களுக்கு நல்லதாகும் பொழுது அந்தக் கெட்டது வராமல் தடுக்கலாம் அல்லவா.

உங்களால் ஏன் இதைச் செயல்படுத்த முடியாது…? நிச்சயம் முடியும்.

1.தீமைகள் புகாது தடுக்கும் அந்தச் சக்தியை நீங்கள் பெற வேண்டும்
2.இந்தப் பழக்கத்திற்கு வந்தால் சாமியார் பேரைச் சொல்லியோ தெய்வத்தின் பேரைச் சொல்லியோ யாரும் ஏமாற்ற முடியாது.

பெற்ற உண்மைகளை யாருக்குச் சொல்ல வேண்டும் என்று தெரியுமா…?

பெற்ற உண்மைகளை யாருக்குச் சொல்ல வேண்டும் என்று தெரியுமா…?

 

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எம்மைப் பல இடங்களுக்கு நேரடியாகவும் சூட்சமமாகவும் அழைத்துச் சென்று பல உண்மைகளை உணர்த்தினார்… காட்டினார்.

அதைப் போல
1.ஒவ்வொரு மெய் ஞானியும் எதன் வழி கொண்டு மெய் ஞானத்தின் மூலக்கூறுகளை அறிந்தார்கள்…? என்று
2.”அக்காலங்களுக்கே அழைத்துச் சென்று…” அந்த உணர்வுகள் பரவியிருப்பதையும் நுகரச் செய்து அறியும்படி செய்தார்.

அவர்கள் மனிதனாக வாழும்போது வரும் இன்னல்களிலிருந்து விடுபடும் ஆற்றல்களைப் பெற்று இன்று விண்ணிலே ஒளியின் சுழன்று கொண்டிருப்பதையும் உணர்த்தினார்.

இதை எல்லாம் அவர் காட்சியாகவும்… உணர்வுப் பூர்வமாகவும் அனுபவமாகவும் எனக்குக் காட்டினார். இயக்கத்தின் உண்மையை அறிந்து கொண்டேன்.

குருநாதர் கொடுத்தார்…!
1.என்னாலும் அதைப் பார்க்க முடிந்தது.. அறிய முடிந்தது… உணரவும் முடிந்தது
2.அந்த மெய் ஞானிகள் பெற்ற ஆற்றலையும் பெற முடிந்தது… பெற்றேன்.

அவ்வாறு யாம் பெற்ற இந்த நிலைகளை யாருக்குச் சொல்ல வேண்டும் என்று தெரியுமா…?

1.என்னுடன் சீடர்களாக வந்து நான் சொல்கிறபடியெல்லாம் கேட்கின்றவர்களுக்குச் சொல்ல வேண்டும்
2.அவர்கள் ஒழுக்கமாக வருகின்றார்களா…? இல்லையா…! என்று பார்த்து அதற்கப்புறம் அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
3.சீரான நிலைகளில் வழி நடப்பதற்கு வரம்புகளை விதித்து, கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்து அந்தக் கட்டுப்பாட்டின்படி வருகின்றார்களா..? இல்லையா..! என்று பார்க்க வேண்டும்.
4.உண்மைகளை எல்லாம் சொல்லிப் பதிவாக்கி அதன்படி நடப்பார்களா இல்லையா என்று தெரிந்து கொண்டு பல தடவை இழுத்தடித்த பின்பு மெம்பராக்க வேண்டும்.
5.கடைசியாக நான் இதிலிருந்து மாறவே மாட்டேன் என்று சொல்லி “சத்தியம் செய்து கொடுக்க வேண்டும்…”

இப்படிச் சத்தியம் செய்து கொடுத்தவர்களுக்குத் தான் மற்ற ஸ்தாபனங்களில் அவர்கள் கற்றுக் கொண்ட நிலைகளைக் கொடுப்பார்கள். ஒரு ஸ்தாபனத்திற்குள் (உள்ளுக்குள்) போனால் மாற மாட்டேன் என்ற வாக்கினை முதலில் வாங்கிக் கொள்வார்கள்.

உங்களிடம் இதையெல்லாம் நான் வாங்கவில்லை. குருநாதர் அப்படிச் செய்யச் சொல்லவில்லை.
1.உங்கள் உயிரைக் கடவுளாக மதிக்கச் சொன்னார்
2.உங்கள் உடலைக் கோவிலாக மதிக்கச் சொன்னார்
3.ஈசன் வீற்றிருக்கும் அந்த ஆலயங்கள் பரிசுத்தம் ஆகவேண்டும் என்று “நீ தூய்மைப்படுத்து” என்றார்.
4.அவ்வாறு நீ தூய்மைப்படுத்தினால் உன் உயிரான ஈசன் உனக்குக் கூலி கொடுப்பான் என்றார்.

“அவர் காட்டிய வழியில்… அவர் சொன்ன முறைப்படித்தான்… அவர் இட்ட கட்டளைப்படித்தான்… இதைச் செய்து கொண்டிருக்கின்றோம்…!”

“சாதாரணமாக எண்ணினாலே…” அருள் சக்தியைப் பெறக்கூடிய தகுதியைத்தான் உங்களுக்கு ஏற்படுத்துகின்றேன்

“சாதாரணமாக எண்ணினாலே…” அருள் சக்தியைப் பெறக்கூடிய தகுதியைத்தான் உங்களுக்கு ஏற்படுத்துகின்றேன்

 

பல கோடிச் சரீரங்களில் வளர்ச்சி அடைந்து… மனிதனாக உருவாக்கிய நம் உயிரை மதித்துப் பழகுதல் வேண்டும். இது அவனுடைய உடல்…!

1.நாம் புறத்திலிருந்து நுகர்ந்த உணர்வுகள் அனைத்தும்…
2.பிறிதொரு அணுக்களின் மலமே இந்த உடல்
3.உயிரான ஈசனின் உணர்வின் இயக்கத்தில் இந்த அணுக்களின் இயக்கமாக இருக்கின்றது.

உயிரான ஈசன் வெளியே சென்று விட்டால் உங்களுக்கு ஏது மலம்…? உயிர் வெளியே சென்றால் இந்த உடலான சிவம் சவமாகி விடுகின்றது. சிறிது நேரம் இயக்கச் சக்தி இல்லை என்றால் உடல் நாற்றம் ஆகி விடுகின்றது.

நாற்றமாகும் பொழுது இந்த உடலை உருவாக்கிய அணுக்கள் எல்லாம் புழுக்களாக மாறுகின்றது. முதலில் ஜீவான்மாக்களாக இருக்கின்றது… உயிரான்மாவாக மாறுகின்றது.

எதன் எதன் உணர்வை எடுத்து இந்த உறுப்புகளில் எதை எதைச் சாப்பிட்டதோ அதற்குத்தக்க உறுப்பின் தன்மை கொண்டு “காற்றிலே சூட்சும இயக்க அணுக்களாக மாறுகின்றது…!

மற்றொரு உடலுக்குள் சென்றவுடன் அங்கே உறுப்புகளைச் சாப்பிடும் தன்மை வருகின்றது. நுரையீரல் கல்லீரல் என்று இப்படி மனித உடலுக்குள் சுவாசத்தின் வழி கூடி உள் சென்று அதை உணவாக உட்கொள்ளும் நிலை வருகின்றது.

அதே சமயத்தில் உடல் அழுகும் நிலை வரும் பொழுது தோலை உருவாக்கிய அணுக்களுக்குள் சென்றால் தோல் வியாதியாக தோல் உறியும் தன்மை வருகிறது.

1.உடலை விட்டு உயிர் வெளியே சென்ற பின்
2.இந்த உடலை வளர்த்த அந்த அதனை அணுக்களும்
3.எத்தனை ரூபங்களாக மாறுகிறது…? என்ற நிலையை உணர்ந்தால் போதும்.

எனது உடல்… எனது சொத்து… எனது நிலை…! என்று வரப்படும் பொழுது
1.தான் எண்ணியது நடைபெறவில்லை என்றால் வேதனையை வளர்த்து விஷத்தின் தன்மையாக மாறி
2.அதற்குத் தக்க அடுத்த உடலாகப் பெறும் தகுதியையே இந்த உயிர் உருவாக்கி விடுகின்றது.

ஆக… கீதையில் நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்… உயிர் அவ்வாறு மாற்றி விடுகின்றது. இதிலிருந்தெல்லாம் விடுபட வேண்டும்.

இருபது வருடம் காடு மேடெல்லாம் அலையச் செய்து இயற்கையினுடைய இயக்கங்கள் எவ்வாறு…? என்ற உண்மைகளை குருநாதர் எனக்கு (ஞானகுரு) உணர்த்தினார்.

சாதாரண பாமர மக்களுக்கும் இந்த உண்மையின் உணர்வை ஊட்டித் தீமைகளை அகற்றிடும் வலிமை பெறச் செய்ய வேண்டும் என்பதற்குத் தான் உபதேச வாயிலாக உங்களுக்குள் பதிவு செய்கிறோம்.

உதாரணமாக… இங்கே திருடன் வந்தான்… பொருள்களைத் திருடினான்…! என்று பதிவு செய்தால் அதை “உம்…” கொடுத்துக் கேட்டுக் கொண்டே இருப்பீர்கள்… பதிவாகும்.

சமயத்தில் ஒரு கஷ்டம் வந்தால்… “நாம் ஏன் திருடக்கூடாது…!” என்ற எண்ணம் தூண்டி நம்மையும் திருட வைத்துவிடும்.

அதே சமயத்தில் ஒருவன் அதைச் செய்தான்… இதைச் செய்தான்… ஆகையினால் பதிலுக்கு நான் அவனை உதைத்தேன்..! என்ற உணர்வை நுகர்ந்தால்… இந்த உணர்வுகள் திருத்தி வாழும் நிலைகளைச் செய்வதற்குப் பதிலாக உதைக்கும் நிலையே வருகின்றது.

ஆகவே அதைப் போன்ற நிலைகள் வராதபடி தடுப்பதற்காக… அருள் ஞான உணர்வுகளை உங்களுக்குள் ஊட்டி அதை ஆழமாகப் பதிவு செய்கின்றோம். அதை நீங்கள் பெற முடியும்… எளிதானது தான்…!

1.சாதாரணமாக நீங்கள் எண்ணினாலே அந்த அருள் சக்தியைப் பெறக்கூடிய தகுதியைத்தான் இப்பொழுது ஏற்படுத்துகின்றேன்.
2.இந்தத் தகுதியை நீங்கள் இழந்தால்… “உங்களுக்குத் தான் நஷ்டம் எனக்கு அல்ல…!”

நீங்கள் அந்த அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று ஆசை எனக்குள் வலுவாக இருக்கிறது. உங்கள் உயிரை மதிக்க வேண்டும்… அவனால் உருவாக்கப்பட்ட ஆலயத்தை… உடலைப் பரிசுத்தப்படுத்த வேண்டும்…! என்ற நோக்கத்தில் தான் இதைச் சொல்கிறேன்.

ஒரு சிலர் ஆலயத்திற்குச் சென்று தெய்வத்திற்கு தங்கத்தில் காசு அபிஷேகம்… செய்வார்கள். இது அது போன்று அல்ல.

1.மனதைத் தங்கமாக்க வேண்டும்
2.மனதைத் தெளிவாக்க வேண்டும்
3.மனதைத் தெளிந்த நிலையாகப் பெறச் செய்ய வேண்டும்
4.தங்கத்தைப் போன்று மன உறுதி கொள்ள வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்கின்றேன்.

உங்கள் வழிக்குத் தான் என்னை அழைக்கின்றீர்கள்… குரு அருளைப் பாய்ச்சினாலும் எவரும் மதிப்பதாகத் தெரியவில்லை…!

உங்கள் வழிக்குத் தான் என்னை அழைக்கின்றீர்கள்… குரு அருளைப் பாய்ச்சினாலும் எவரும் மதிப்பதாகத் தெரியவில்லை…!

 

விஷக் கிருமிகள் பரவிக் கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில் அந்த விஷத்தன்மைகள் நமக்குள் வராது தடுத்துப் பழகுதல் வேண்டும் காரணம்… இனி வரும் காலம் மிகக் கடினமாக இருக்கின்றது.

இன்று நாம் வாழக்கூடிய இந்தக் கால கட்டத்தில்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை இந்தப் பூமி முழுவதும் பரவச் செய்து
2.நம் உடலுக்குள் அதிகமாகப் பெருக்கி… அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை
3.நமக்குள் “பெரும் வட்டமாக…” மாற்றிக் கொள்ள வேண்டும்.

எலக்ட்ரிக்… எலக்ட்ரானிக்…! தீமையான உணர்வுகளை மாற்றி அமைக்கும் சக்தியினைப் பெறச் செய்வதற்குத் தான் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.

பதிவானதை நினைவாக்கி உங்கள் உடலை உருவாக்கிய அணுக்களுக்கு… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை பெறச் செய்வதற்குத் தான் இந்தப் பயிற்சியைக் கொடுக்கின்றோம்

மற்ற மார்க்கங்களில் எல்லாம் இப்படிச் செய்ய மாட்டார்கள். காசைக் கொடுத்துத் தான் அதிலே மெம்பராக வேண்டும். அவர்கள் சொல்கிறபடி எல்லாம் கட்டுப்பட வேண்டும்… கட்டுப்பட்டவர்களுக்குத் தான் சொல்லிக் கொடுப்பார்கள்.

ஆனால் யாம் உங்களுக்கு நேரடியாக பப்ளிக்காக (PUBLIC) சொன்னால்…
1.நீங்கள் என்ன செய்கின்றீர்கள்…? அலட்சியப்படுத்தி விடுகின்றீர்கள்…!
2.இங்கே இந்தப் பக்கம் கேட்டு விட்டு அந்தப் பக்கம் காது வழியாக வெளியில் விட்டு விட்டுச் செல்கின்றீர்கள்.

என் குடும்பத்தில் ஒரே தொல்லையாக இருக்கின்றது. என் பிள்ளைகள் இப்படி இருந்து கொண்டிருக்கின்றது. நான் எதைச் செய்தாலும் அது நஷ்டம் ஆகின்றது…! என்று இதைத்தான் இராகமாகப் பாட ஆரம்பிக்கிறீர்கள்.

“நான் (ஞானகுரு) கொடுத்த சக்தியைப் பயன்படுத்துவோம்…!” என்ற நிலை இல்லாது இருக்கின்றது. எவ்வளவோ சிரமப்பட்டுப் பெற்ற… எனக்குள் விளைய வைத்த… அந்த உயர்ந்த ஞானத்தைத் தான் உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.
1.ஆனால் கொடுத்த வித்தை உதறித் தள்ளிவிட்டு உங்களுக்குள் வேதனையைக் கூட்டிக் கொண்டு
2.என்னையும் வேதனைக்கு உள்ளாக்கும் நிலைக்குத்தான் நீங்கள் வருகின்றீர்கள்
3.உங்கள் வழிக்குத் தான் என்னை அழைக்கின்றீர்கள்
4.இருளை நீக்கும் குரு அருளைப் பாய்ச்சினாலும் எவரும் மதிப்பதாகத் தெரியவில்லை
5.இருக்கலாம்… மதிப்பதாக நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கலாம்…
6.ஆர்வம் இருக்கும்…! ஆனால் அப்புறம் என்ன செய்வீர்கள்…?
7.அவன் அப்படிப் பேசினான்… இவன் இப்படிச் செய்கின்றான்…! சும்மா விடுவதா…?
8.கடன் வாங்கிச் சென்றவன் பணத்தைத் திரும்ப கொடுக்கவில்லையே… என்னை ஏமாற்றுகின்றானே…! என்ற
9.இந்த நினைவுகள் தான் வருகின்றதே தவிர நான் சொல்லும் நிலைகளை எடுக்கும் நிலை இல்லை…!

இந்த வாழ்க்கையில் நம்மை அறியாமல் எத்தனையோ தீமைகள் ஆட்டிப்படைக்கின்றது. அதை எல்லாம் மாற்றி அமைக்க அருள் உணர்வுகளைப் பெருக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் முடிவு மிகவும் நெருங்கி விட்டது…!

இன்று இளம் குழந்தையாக இருந்தாலும் சரி… வயது முதிர்ந்தவர்களாக இருந்தாலும் சரி… நம் பூமி கொதிகலனாக மாறிக் கொண்டிருக்கின்றது… விஷத்தன்மைகள் அதிகமாகப் பரவுகின்றது.

இந்தப் பூமிக்குள் மட்டுமல்ல…! இந்தப் பிரபஞ்சத்திற்குள்ளேயே கடும் தீய விளைவுகள் ஆகி அல்லோகலப்படக்கூடிய சந்தர்ப்பங்கள் வந்து கொண்டிருக்கின்றது. யார்… எதைத் தேடி… எதைக் காக்கப் போகின்றோம்…!
1.இது போன்ற நிலைகளை எல்லாம் கடந்து
2.என்றுமே அந்தத் துருவ நட்சத்திரத்துடன் ஒன்றி வாழ நாம் பழகிக் கொள்ள வேண்டும்.

இந்தச் சூரியனே அழிந்தாலும் பிரபஞ்சமே அழிந்தாலும் இந்தப் பிரபஞ்சத்திலே தோன்றிய உயிரணு மனிதனாக வளர்ச்சி அடைந்து.. தன் ஆறாவது அறிவை ஏழாவது… ஒளியாக மாற்றி விண்ணிலே சப்தரிஷி மண்டலமாக வாழ்வது போல் நாமும் அங்கே வாழ முடியும்…! ஏகாந்த நிலையை அடைய முடியும்… எதிர்ப்பே இல்லாத நிலையம் நஞ்சை ஒளியாக மாற்றிடும் திறனும் பெற முடியும்.

அதைப் பெறக்கூடிய தகுதியைத்தான் திரும்பத் திரும்ப உங்களுக்கு இங்கே ஏற்படுத்துகின்றோம்.

“நாம் செய்யும் தொழில்…” எப்போது தெய்வமாகிறது…?

“நாம் செய்யும் தொழில்…” எப்போது தெய்வமாகிறது…?

 

“நாம் உயர்வான எண்ணங்களை எண்ணும் பொழுதெல்லாம்…” அந்த நேரம் நல்ல நேரமாகின்றது. அப்போது உயர்வான சிந்தனைகளும் உயர்வான நிலைகளும் நமக்குக் கிடைக்கின்றது.

நாம் தொழில் செய்கிறோம்… கடையிலே பொருள்களைப் பொட்டலமாக வைத்து வியாபாரத்திற்காக வைக்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம்.

கடைக்கு வருபவர்கள் பொருள் வேண்டும் என்று கேட்கின்றார்கள். பொருளைக் கையில் எடுத்துக் கொடுக்கும் பொழுது நாம் எந்தெந்த எண்ணத்துடன் கொடுக்கின்றோம்…?

பொருள்களுக்குண்டான பணத்தை
1.அவர் சரியானபடி கொடுப்பாரா…? தர மாட்டாரா…?
2.அல்லது போன தடவை போன்று பணத்தைக் கொடுக்காது இழுத்தடிப்பாரா…? என்ற
3.இந்த எண்ணத்தோடு நாம் கொடுத்தால் என்ன ஆகின்றது.

ஏனென்றால்… நம்மிடம் பொருளை வாங்கிச் செல்வோர் அதை நல்ல முறையில் உபயோகித்து (அல்லது மற்றவருக்கு விற்று) அந்தப் பணத்தை உடனே நமக்குக் கொடுக்க வேண்டும். அவருக்கும் அந்த வருமானம் வர வேண்டும் என்று எண்ணினால்
1.நாம் நல்லதாக எண்ணுகின்றோம் என்று அர்த்தம்… அந்த நேரமும் நல்ல நேரமாக அமைகின்றது.
2.அதே சமயத்தில் பொருளை வாங்கிச் செல்வோருக்கும் அங்கே நல்ல வியாபாரம் ஆகிறது.

ஏனென்றால் நாம் எதை எண்ணி… தொட்டு… அந்தப் பொருளை எடுத்துக் கொடுக்கின்றோமோ… அதிலே நம் உணர்வுகள் பதிவாகி விடுகின்றது எலக்ட்ரிக் எலக்ட்ரானிக்.. பொருள்களிலும் அந்தக் காந்தப் புலன் உண்டு.

நாம் தொட்டு எடுத்துக் கொடுக்கும் ஒவ்வொரு பொருளிலும் எத்தகைய எண்ணங்கள் உணர்வுகளைப் பதிவு செய்கிறோமோ “அது கலந்து தான்…” அங்கே செல்கின்றது.

நாம் சந்தேகப்பட்டு…
1.பணத்தைக் கொடுக்க மாட்டான்… இழுத்தடிப்பான்…! என்று
2.இந்தக் கலக்கமான உணர்வுடன் அதைத் தொட்டு எடுத்துக் கொடுக்கும் பொழுது
3.அவர்களும் இதை வைத்து வியாபாரம் செய்தார்கள் என்றால் அங்கேயும் வியாபாரம் மந்தமாகி விடுகிறது
4.அவர்களுக்கும் அந்த நேரத்திற்கு பணம் வராது… நமக்கும் சரியான நேரத்திற்குப் பணம் வராது.
5.அப்போது இந்த நேரம் என்ன ஆகிறது…? நாம் முதலிலே சந்தேகத்துடன் எண்ணித் தொட்டுக் கொடுத்த நேரம் கெட்ட நேரமாகி விடுகிறது.

இதை எல்லாம் மாற்ற வேண்டும் என்றால்… ஒவ்வொரு நாளும் உயர்ந்த குணங்களைத் தான் நாம் வளர்த்துக் கொண்டு வர வேண்டும். அப்போது உயர்ந்த உணர்வுகள் நம் கைகளிலும் பதிவாகின்றது. நாம் எதையெல்லாம் தொட்டுக் கொடுக்கின்றோமோ அந்த உணர்வுடனே பொருள்கள் வெளியே செல்கின்றது.

நல்ல நேரத்தை இப்படித் தான் நாம் உருவாக்குதல் வேண்டும்.

உதாரணத்திற்கு ஒரு பொருளை எடுத்துக் கொடுக்கப்படும் போது…
1.அந்தப் பொருளை வாங்கிச் செல்வோர் அவர் வாழ்க்கையில் நலமும் வளமும் பெற வேண்டும்
2.மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும்
3.பொருள் அவர்களுக்கு நல்ல முறையில் பயன்பட வேண்டும் என்ற எண்ணத்துடன் கொடுத்துப் பாருங்கள்.

அவர்கள் வியாபாரம் நல்லதாகும்… இதை உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

அதே சமயத்தில் இரண்டு பேர் காசு கொடுக்க வேண்டும். ஆனால் கொடுக்காதபடி எதையோ பொய்யாகச் சொல்கின்றார்கள். அப்போது அந்த நேரத்தில்… பொய் சொல்கின்றான்… ஏமாற்றுகின்றான்… இப்படிச் செய்கிறானே…! என்று நாம் வேதனைப்பட்டால் என்ன ஆகிறது…?

அதே எண்ணத்துடன் அடுத்து இன்னொருவருக்குச் சரக்கை எடுத்துக் கொடுப்போம். கொடுத்தால் அந்தப் பொருளிலும் அந்த வேதனை பதிவாகி விடுகின்றது.
1.அவர்களுக்கும் இதே உணர்வு இயக்கப்பட்டு அங்கிருந்தும் பணம் அடுத்து வராது
2.இது போன்று எத்தனையோ நிலைகள் நம்மைத் தொடர்ந்து வருகிறது – நாம் அறியாமலே.

அந்த மாதிரி நேரங்களில் என்ன செய்ய வேண்டும்…?

சரி… அவர்களுக்கு அந்த வருமானம் வரட்டும்… கொடுக்க வேண்டும் என்ற அந்த எண்ணம் அவர்களுக்கு வரட்டும்… என்று நாம் எண்ணிக் கொடுத்தால் நம் உடலில் பதிவாகும் இந்த உணர்வுகள் தொட்டுக் கொடுக்கும் பொருளிலும் படுகின்றது. அவர்களுக்கு அது நல்ல நேரமாக அமைந்து விடுகிறது.

சங்கடப்பட்டு நாம் பொருளைக் கொடுத்தோம் என்றால் அது நமக்கும் கெட்ட நேரமாகிறது… நம் பணம் வருவதில்லை. சங்கட உணர்வு அங்கே இயக்கி அவர்களுக்கும் கெட்ட நேரத்தை உண்டாக்குகிறோம்.
1.ஏனென்றால் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக்… (உணர்வின் அழுத்தம்)
2.எல்லாமே எதன் உணர்வின் இயக்கமாக அமைகின்றதோ அதன் நிலையாக அது மாறி விடுகிறது.

நம் குழந்தை மீது பாசமாக இருக்கின்றோம். அவனிடமிருந்து தகவல் வரவில்லை என்ன ஆனதோ…? என்று வேதனைப்பட்டால் இதே உணர்வுகள் குழந்தையை இயக்கப்பட்டு அவன் சிந்தனையைச் சிதறும்படி செய்து விடுகின்றது… அவன் மேடு பள்ளம் தெரியாதபடி கீழே விழுந்து விடுவான்.

நாம் சுவாசித்துக் கவர்ந்து வெளிப்படுத்தும் எல்லா உணர்வுகளும் சூரியனுடைய ஈர்ப்புக்குள் தான் வளர்கின்றது… அதே சமயத்தில்
1.நம் உடலுக்குள் எதன் எதன் நிலைகளைப் பதிவாக்குகின்றோமோ
2.பதிவானது நம் ஈர்ப்புக்கு வருகின்றது… உணர்வின் இயக்கமாக நம்மைச் செயல்படுத்துகிறது.

ஒரு செடி எந்தச் சத்தைக் கவர்ந்து கொண்டதோ அதைத்தான் காற்றில் இருந்து கவந்து வளர்கின்றது. அதைப் போன்று தான் நம் உடலுக்குள் எத்தனை வகையான குணங்கள் இருக்கின்றதோ எதை எதை நாம் எண்ணி இயக்குகின்றோமோ அதை இழுத்து வளரத் தொடங்கும்.

இப்படி நம் உடலுக்குள் எண்ணிலடங்காத உணர்வுகள் உண்டு. அதிலே தீமையின் உணர்வுகள் அதிகமாகும் பொழுது நல்ல உணர்வுகளைச் செயலற்றதாக மாறுகிறது.

இதற்கு நாம் என்ன செய்வது…?

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை அடிக்கடி பதிவாக்கி… அதைக் கூட்டி நமக்குள் பெருக்கி பழகுதல் வேண்டும். இது கூடினால் அதைத் தணிக்கின்றது.

எந்தக் காரியத்தைச் செய்ய தொடங்கும் முன்பும்…
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து
2.எல்லாவற்றிலும் அதைக் கலக்கும் ஒரு பழக்கம் வருதல் வேண்டும்.
3.அதற்குத் தான் இந்தப் பயிற்சி.

ஆகவே அருளைப் பெருக்குங்கள்… இருளை அகற்றுங்கள்… மெய்ப் பொருள் காணும் அருள் சக்தி பெறுங்கள்.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மகரிஷிகள் வெளிப்படுத்திய ஞானப் பொக்கிஷங்களை எல்லோருக்கும் பங்கிடுவோம்

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மகரிஷிகள் வெளிப்படுத்திய ஞானப் பொக்கிஷங்களை எல்லோருக்கும் பங்கிடுவோம்

 

உதாரணமாக ஒரு மனிதன் கடுமையான நோய்வாய்ப்பட்டிருக்கின்றான் என்று வைத்துக் கொள்வோம்.

அதை மற்றவர்கள் வந்து நம்மிடம் சொல்லப்படும் பொழுது பாசத்துடன் அதனைக் கேட்டறிவோம். அந்த மனிதருடன் நாம் பாசத்துடன் பழகினோம். நல்ல மனிதர்… இப்பொழுது நோய் வந்து அவஸ்தைப்படுகின்றார்…! என்று எண்ணுவோம்.

பார்த்து அந்த விவரங்களைக் கேட்டறிந்தபின் நாம் என்ன செய்வோம்…?.

அடுத்தடுத்து அடுத்தடுத்து மற்ற நண்பர்களிடத்திலும் இதைச் சொல்வோம். அப்படிச் சொல்லப்படும் பொழுது அவர்களும் அந்த வேதனைப்பட்டு வருத்தப்படும் நிலைகள் வருகின்றது.

இது எப்படி ஒருவருக்கொருவர் இயக்குகிறதோ… அதைப் போலத் தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் தொடர்ந்து இங்கே கொடுக்கும் இந்த உபதேசத்தின் வாயிலாக
1.இதை நீங்கள் கேட்கக்கூடிய சந்தர்ப்பத்தை எடுத்து
2.“மறைந்த ஞானப் பொக்கிஷத்தை” மீண்டும் யாம் (ஞானகுரு) நினைவுபடுத்தி
3.அந்த அலைகள இங்கே பெருக்கிக் கொண்டே வருகின்றோம்.
4.உயர்ந்த ஞானத்தின் உணர்வலைகளை “நீ ஒலி பரப்பு…” என்று குருநாதர் சொன்னதால் தான் இதைச் செய்து கொண்டிருக்கின்றோம்

அது இங்கே பரவியிருப்பதனால் இதை நீங்கள் படிக்கும்போது ஒவ்வொரு அர்த்தமாக உங்களுக்குள் விளங்கத் தொடங்கும்.

அதை மற்ற நண்பரிடத்தில்
1.“சாமி இப்படிச் சொன்னார்…” என்று சொன்னால் இலேசாகப் பதிவாகும்…
2.இந்த உணர்வுகளை அவர்களும் நுகர நேரும்.
3.இப்படிச் சிறுகச் சிறுக இந்த மெய் உணர்வுகள் பரவும்.

ஆன்மீகத்தின் நிலைகளில் அந்த ஞானத்தைப் பெற வேண்டும் என்ற ஏக்கத்தில் இருந்தால் அவர்களுக்கு இந்த உபதேசத்தின் உணர்வுகள் இது படும்.

நீங்கள் என்னுடைய உபதேசத்தைப் படிக்கின்றீர்கள். இதை நீங்கள் மற்றவர்களிடம் சொல்லப்படும் பொழுது இந்த உணர்வுகள் பதிந்த பின் யாம் எதையெல்லாம் வெளியிட்டோமோ அதை அவர்கள் நுகர நேருகின்றது.

ஏனென்றால்… இந்தப் பதிவு (RECORD) உங்களிடம் பண்ணியிருக்கின்றேன்.

ஒரு டேப்பில் பதிவு செய்த பின்…
1.அடுத்தடுத்து அடுத்த டேப்பில் பதிவு செய்யப்படும் பொழுது எப்படி நாம் மாற்றிக் கொண்டே போகின்றோமோ
2.இதைப் போலத் தான் உங்களுக்குள் பதிவான நிலை மற்றவர்களுக்குச் சொல்லப்படும் பொழுது அது பதிவாகின்றது.

அப்படிப் பதிவான பின் அந்த அலைகளை மீண்டும் அவர்கள் நுகர்ந்து அதைப் பெற முடியும்.

டேப்பில் பதிவு செய்வது ஜீவனற்றது. ஆனால்…
1.யாம் உபதேசம் செய்த நிலைகளை எடுத்துச் சொல்லப்படும் பொழுது
2.“ஓ” என்று ஜீவ அணுவாகி மீண்டும் அதனை வளர்க்கும்… வளர்த்துக் கொண்டிருக்கும் நிலைகளாகச் செயல்படும்.

இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக இந்தக் காற்று மண்டலத்தில் மெய் ஞானிகள் உணர்வுகள் பரவும்.

1.பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அந்த மகரிஷிகளால் வெளிப்பட்ட அந்த மெய் ஞானப் பொக்கிஷங்களை
2.எல்லோருக்கும் பங்கிடலாம்… எல்லோரையும் பெறச் செய்ய முடியும்.

இது என் ஒருவனால் முடியாது. நாம் அனைவரும் சேர்ந்து ஒருங்கிணைந்தால் தான் சாத்தியமாகும்.

உங்களால் நிச்சயம் முடியும்.

அகஸ்தியனைப் போன்ற மெய் ஞானியாக நீங்கள் ஆக வேண்டும் என்று தவமிருப்பதே “எனது வேலை”

அகஸ்தியனைப் போன்ற மெய் ஞானியாக நீங்கள் ஆக வேண்டும் என்று தவமிருப்பதே “எனது வேலை”

 

1.பேரண்டத்தில் பிற மண்டலங்களிலிருந்து வருவதை எப்படி நட்சத்திரங்கள் தன் கதிரியக்கப் பொறிகளால் மற்றதை அடக்கித் தன் பால்வெளி மண்டலங்களாக மாற்றி அது தனக்குள் எப்படிக் கவர்ந்து கொள்கின்றது…?
2.நட்சத்திரங்கள் அவ்வாறு வெளிப்படுத்தும் உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாகப் படர்ந்து வரப்படும் பொழுது இரண்டு நட்சத்திரங்கள் எதிர்மறையாகத் தாக்கப்படும் பொழுது பூமிக்குள் மின்னல்கள் எவ்வாறு மின்னுகின்றது…?
3.இந்த மின்னல் மற்ற தாவர இனங்களில் இது கலந்திருந்தால் அந்தச் செடியை எப்படித் தாக்குகின்றது…?
4.அதே மின்னலின் உணர்வுகள் பூமிக்குள் ஊடுருவி நடு மையம் எவ்வாறு அடைகின்றது…?
5.இதையெல்லாம் கண்டுணர்ந்தவன் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நம் பூமியில் வாழ்ந்த அகஸ்தியன்.

இப்பொழுது மனிதன் தன் கண்டுபிடிப்பால் இத்தகைய மின்னலின் ஒளிக் கதிர்கள் இந்த மண்ணில் மறைந்திருப்பதை விஞ்ஞான அறிவு கொண்டு அதிலுள்ள கதிரியக்கப் பொறிகளை… அணுவைப் பிளந்து அணுவைக் கூட்டி அணுகுண்டாக அதை உருவாக்கி அதை வெடிக்கச் செய்கின்றான்.

வெடிக்கச் செய்யப்படும் போது சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அந்த அலைகள் மற்றொன்றோடு மோதப்படும் பொழுது இந்தக் கல்லுக்குள் இருக்கும் அதே கதிரியக்கப்பொறியுடன் இணையும் போது அந்தக் கல்லையே ஆவியாக மாற்றிவிடுகின்றது.

உலோகங்கள் எதுவானாலும் அதற்குள் இருக்கும் கதிரியக்கப் பொறியுடன் மோதப்படும் பொழுது தங்கமோ இரும்போ மற்ற உலோகங்கள் அனைத்தும் ஆவியாக மாறுகின்றது.

மாறி ஒரு புயலைப் போலச் சுழன்று கொண்டு அதனின் உணர்வுகள் எதிலே சேர்கின்றதோ தன் இனத்தின் தன்மையைப் பெருக்கி அது தன் வளர்ச்சியிலே கொண்டு போகின்றது.

அதைப் போன்று
1.அன்று அகஸ்தியன் விஷத்தின் தன்மையை… அணுவின் தன்மையைத் தனக்குள் அடக்கி
2.இருளைப் பிளந்து அதிலே நஞ்சின் தன்மையை நீக்கிவிட்டு நச்சுத் தன்மை அற்றதைத் தனக்குள் சேர்க்கின்றான்.

விஞ்ஞானியோ கதிரியக்கப்பொறிகள் தனக்குள் வந்தாலும் அதை வேகமாகச் செலுத்தச் செய்து இயந்திரங்களைத் துரித வேகத்தில் இயக்கும்படிச் செய்கின்றான்.
1.அதிலே வரும் கதிரியக்கப் பொறிகளை அடக்க ஹைட்ரஜனைக் கலந்து (D2)
2.அதனுடைய வீரியத் தன்மையைக் குறைக்கும்படிச் செய்து இயந்திரங்களை இயக்குகின்றான் விஞ்ஞானி.

மெய் ஞானியான அகஸ்தியனோ தன் (தாய் கருவில்) சந்தர்ப்பத்தால் கிடைத்த இந்த உணர்வினை
1.27 நட்சத்திரங்கள் ஒளிக் கதிர்களாக வீசிய அந்த இயக்கச் சக்திகளை
2.தன் பார்வையால் அதனின் செயலாக்கத்தை மாற்றித் தன் உடலுக்குள் கதிரியக்கங்களாக மாற்றினான்.

அதனின் துணை கொண்டுதான் இந்தப் பூமியின் ஈர்ப்பின் நிலையும் அதனின் வளர்ச்சியின் தன்மையையும் தெளிவாக்கினான்.

மனிதன் இந்த உடலைவிட்டு அகன்றபின்
1.இதிலே உள்ள நஞ்சின் தன்மையை ஒளிக் கதிராக மாற்றும் நிலை எது…? என்று
2.தன்னில் தான் முதன் முதலில் கண்டுணர்ந்தவன்தான் அகஸ்தியன்.

துருவத்திலிருந்து நம் பூமி கவர்வதை நேரடியாகவே அதனின் விஷத்தை ஒடுக்கினான். ஒளியின் கதிராக மாற்றும் உணர்வின் உடலாக மாற்றினான். அகஸ்தியன் இந்த உடலை விட்டுச் சென்றபின் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாகத் துருவ நட்சத்திரமாக ஆனான்.

அகஸ்தியன் தன் வலிமையான எண்ணத்தால் கூர்மையான நிலைகள் கொண்டு விண்ணிலே பார்க்கப்படும் பொழுது தன் உடலில் உள்ள அணுக்கள் அனைத்தையும் ஒளிக் கதிராக மாற்றினான்.

அகஸ்தியன் பெற்ற நிலைகளை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குக் காட்டினார்.
1.நான் எனது வலிமை கொண்டு உனக்கு இந்தச் சக்தியைக் கொடுத்து இதைப் பெறச் செய்கிறேன்
2.பல ஆயிரம் மடங்கு வலிமை கொண்டு எனக்குள் பெற்ற சக்தியை உனக்குள் கொடுத்து அதை எடுக்கச் செய்கின்றேன்.
3.நீ இதன் வழியில் இதைப் பெற்றால் உனக்குள் இதனின் நிலைகள் வரும்
4.ஆனாலும் நீ ஒருவனே இந்தப் பலனைப் பெற முடிகின்றது.

ஆகவே பலரும் இந்தப் பலனைப் பெற வேண்டும் என்றால் நீ இதை எவ்வாறு செய்ய வேண்டும்…? என்று உபதேசித்தருளினார்.

ஒவ்வொரு உடல்களிலேயும் நீ கண்ட உணர்வின் அந்த ஞான வித்தை ஊன்று. மெய் உணர்வுகள் அங்கே பெருகி “விண்ணுலக ஆற்றலை அவர்கள் பெறும்படி நீ செய்.

மக்கள் மத்தியிலே பதியச் செய்யப்படும் பொழுது அவர்கள் எண்ணங்களிலும் இதைப் பெற ஏதுவாகும்.

அவர்களுக்குள் பதிந்த நிலைகள் வளர்ச்சி பெற வேண்டும் என்ற நிலையில்…
1.நீ எடுத்துக் கொண்ட சக்திகள் அனைத்தும்
2.அவர்கள் பெற வேண்டும் என்று “நீ தவம் இருக்க வேண்டும்”

நீ துருவ நட்சத்திரத்தை எண்ணித் தியானிக்கின்றாய்… உன்னிலே விளைய வைத்தாய். ஒவ்வொரு உடலிலும் அது இணைந்து கொண்ட பின்… அவர்கள் அந்த வழியில் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று நீ தவம் இரு…! என்றார் குருநாதர்.

ஆகவே
1.குருநாதர் இட்ட கட்டளைப்படி… அகஸ்தியனைப் போன்ற மெய் ஞானியாக
2.நீங்கள் ஒவ்வொருவரும் ஆக வேண்டும் என்று தவமிருப்பதே எனது வேலை (ஞானகுரு).