சப்தரிஷி மண்டலத்துடன் ஐக்கியமாகும் “கூட்டமைப்பு…”

சப்தரிஷி மண்டலத்துடன் ஐக்கியமாகும் “கூட்டமைப்பு…”

 

காலை துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை அடிக்கடி நாம் எடுத்து வளர்க்கின்றோம். அதே சமயத்தில் குல வழிகளில் தான் (முன்னோர்கள்) நாம் இன்று மனிதனாக வந்திருக்கின்றோம்.

கூட்டுத் தியானங்களின் மூலமாக எல்லோருடைய எண்ணங்களும் பதிந்து இருப்பதால் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும் என்று முதலில் வலுவைக் கூட்டிக் கொள்கின்றோம்.

1.இந்த வலுவைச் சேர்த்துக் கொண்ட பின் முன்னோர்கள் ஆன்மாக்களின் முகப்பில் இந்தச் சக்தியை இணைக்கின்றோம்.
2.காரணம் அவருடைய உணர்வு நம் உடலில் இருக்கின்றது… அவரின் எண்ணங்கள் கலந்தே உறவாடுகின்றோம்.
3.அதன் துணை கொண்டு அவர்களை அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்கின்றோம்.

விஞ்ஞான அறிவு கொண்டு கம்ப்யூட்டர் அலைவரிசையை வைத்து ஒவ்வொரு கோளின் செயலாக்கங்களையும் இன்று கண்டுணர்கின்றார்கள்… அதைக் கவர்கின்றார்கள்.

வெறும் ராக்கெட்டை முதலிலே விண்ணுக்கு அனுப்பி ஒவ்வொரு கோளுடைய சுழற்சிகளையும் அதனுடைய திசைகளையும் எடுத்துக் கம்ப்யூட்டரில் பதிவு செய்கின்றார்கள்.

அப்படிப் பதிவு செய்து கொண்ட பின் அதை வைத்துக் கொண்டு அடுத்து அந்தக் கோளுக்கு ராக்கெட்டை அனுப்புகின்றார்கள். கோளின் உணர்வை எலெக்ட்ரானிக்காக மாற்றுகின்றார்கள்.
1.ராக்கெட்டை விண்ணிலே செலுத்திய பின்… கம்ப்யூட்டர் பதிவு செய்த உணர்வின் மோதலில் திசை திருப்பி அந்தக் கோளுக்கே அழைத்துச் செல்கிறது.

அங்கே சென்றாலும் உள்ளே விழுந்து விடாதபடி அந்தக் கோளின் வட்டப்பாதையை நிர்ணயிக்கின்றார்கள். அந்த ஈர்ப்பின் தன்மை கொண்டு வட்டப் பாதையில் சுழலும்படிச் செய்கின்றார்கள்… தரையில் இருந்து கொண்டே…!

அதே போல்…
1.மெய் ஞானிகள் உணர்வை எடுத்து நமக்குள் அதைப் பெருக்கி
2.நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த ஆன்மாக்களில் அதை இணைத்து
3.அங்கே செல்ல வேண்டும் என்று உந்தித் தள்ளும் பொழுது அந்த இடம் போய்ச் சேருகின்றது.

உடல் பெறும் உணர்வுகளை அங்கே கரைத்து விடுகின்றது… சுட்டுப் பொசுக்குகின்றது. ஏனென்றால் அவர்கள் உடல் பெறும் உணர்வுகளை மாற்றி அமைத்தவர்கள்.

உயிருடன் ஒன்றியிருக்கும் உடல் பெறும் உணர்வுகள் கறுக்கப்படுகிறது. நமக்குள் அறிவு என்ற ஒளி இருக்கின்றது. அப்பொழுது அந்தச் சப்தரிஷி மண்டல ஒளி வட்டத்தில் சுழலத் தொடங்குகின்றனர்.

கணவனோ மனைவியோ முதலிலே யார் பிரிந்தாலும் அங்கே அனுப்புகின்றோம். உதாரணமாக மனைவி அங்கே செல்கிறது. உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த ஆன்மா அங்கே அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று கணவன் அடிக்கடி எண்ணுதல் வேண்டும்.

அங்கே மனைவி இணைந்து கொண்ட நிலையில்
1.இவர் அடிக்கடி இதை எண்ண எண்ண உடலை விட்டுப் பிரிந்தால் அங்கே தான் சென்றடைவார்கள்.
2.இந்த உணர்வை எண்ணினாலே ஆட்டோமேட்டிக்காக அங்கே இழுத்துச் செல்லும்.

அதைப் பெருக்குவதற்காகத் தான் எல்லோரும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று நாம் எண்ணுகின்றோம். அந்தப் பதிவு இல்லை என்றால் யாரையும் அங்கே அனுப்ப முடியாது… விண் செல்ல முடியாது.

மனைவி முன் சென்ற நிலையில் கணவன் அதை எண்ண எண்ண எப்பொழுது பிரிந்தாலும் அங்கே சென்று இணைந்து விடுகின்றார்கள்.

முதலில் அவர்களை அனுப்பி விடுகின்றோம்… உடல் பெறும் உணர்வுகளைக் கரைக்கின்றது. அங்கே இணைந்த பின் அவர் உணர்வு இங்கே இருக்கின்றது…
1.அந்த ஒளியின் உணர்வை இங்கே பெருக்குகின்றோம்.
2.அடுத்து வேறு ஒன்றும் தேவையில்லை…. உடலை விட்டுப் பிரிந்தால் அங்கே தான் கணவன் ஆன்மா சென்றடையும்.

நண்பன் மீது பாசமாக இருக்கின்றோம். நன்மை செய்தேன்… இப்பொழுது விட்டு விட்டுச் செல்கின்றேனே…! என்று எண்ணினால் உடலுடன் இருக்கும் நண்பர் உடலுக்குள் தான் ஈந்த ஆன்மா புகும்.

முந்தி நாம் யாரையும் விண் செலுத்தப் பழகவில்லை. இப்பொழுது அந்த ஞானிகள் காட்டிய வழியிலே உடலை விட்டுப் பிரிந்தவர்களை அங்கே இணைக்கச் சொல்கிறோம்.

சப்தரிஷிகள் என்பவர்கள் பிறவா நிலை அடைந்தவர்கள். ஆக அந்தக் காலத்தில் விண் சென்றவர்கள் தான் முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்பது.
1.சப்தரிஷி மண்டலத்தில் கண்ணுக்குப் புலப்படாது கோடிக்கணக்கானோர் அங்கே மின்னிக் கொண்டுள்ளார்கள்.
2.அவர்கள் எத்தனையோ பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அங்கே சென்று அடைந்தவர்கள்… என்றும் பதினாறு என்ற நிலையில் வாழ்கின்றார்கள்.

இந்தச் சூரிய குடும்பம் அழிந்தாலும் பிற மண்டலங்களிலிருந்து அவர்கள் சக்தி பெற்றதால்… எத்தகைய நஞ்சையும் ஒளியாக மாற்றிடும் திறன் பெற்ற நிலையில்… என்றும் பதினாறு என்று அகண்ட அண்டத்தில் எங்கு வேண்டுமென்றாலும் செல்லக்கூடியவர்கள்.

இந்த எல்லையில் இருந்து அந்த ஆற்றலை வளர்த்தவர்கள். இப்பொழுது எப்படி இங்கே இந்தச் சூரிய குடும்பத்தில் அவர்கள் வட திசையில் சுழன்று கொண்டு வருகின்றார்களோ அந்த வட்டத்தில் இருந்தே அதையெல்லாம் வளர்த்துக் கொள்கின்றார்கள்.

ஆக மனிதனாக பிறந்து தனித்தன்மை வாய்ந்ததாக அந்த நிலை அடைகின்றார்கள்.

அகண்ட பேரண்டம் எத்தனையோ நிலைகள் கொண்டது தான். பல கோடி ஆண்டுகளாகச் சுழல்வது தான். முதலில் அணுவாகிக் கோளாகி நட்சத்திரமாகி சூரியன் ஆகின்றது. பின் நட்சத்திரமாகி கோளாக வளர்ந்த நிலைகள் பல.

1.இந்தச் சூரியக் குடும்பம் அழிந்தாலும்…
2.அந்தச் சப்தரிஷிகள் வேறு சூரியக் குடும்பங்களுக்குச் சென்று அழியாத நிலைகள் வாழ்ந்து கொண்டே இருப்பார்கள்.

ஒரு சூரியக் குடும்பமே எத்தனையோ கோடி மையில் பரப்பளவு கொண்டது. இது போல 2000 சூரியக் குடும்பங்கள் உண்டு. ஒன்றுடன் ஒன்று இணைந்தே துணை கொண்டே அவை வாழ்கின்றது.

இந்த 2000 சூரியக் குடும்பங்களும் வேறு 2000 சூரியக் குடும்பங்களுடன் தொடர்பு கொண்டு வாழ்கின்றது. இப்படி ஒவ்வொன்றிலும் மனிதனாக உருவானவன் ஒளியாக மாற்றிய பின் தனித்தன்மையாகப் பிரிகின்றது. இதற்கும் அதற்கும் சம்பந்தமில்லாமல் போகின்றது.

ஆனால் இந்த எல்லையில் இருக்கின்றார்கள். என்றும் 16 என்ற அந்த நிலையை நாம் அனைவரும் அடைய வேண்டும். அப்படி அடையவில்லை என்றால் மீண்டும் தேய்பிறை தான்.

1.நம் முன்னோர்கள் பலரை இப்பொழுது அங்கே அனுப்பியிருக்கின்றோம்.
2.அந்த நிலையில் நாம் உடலை விட்டு பிரிந்து சென்றால் யாருடைய தயவும் நமக்குத் தேவையில்லை… நாமும் அங்கே சென்றடைய முடியும்.

அடிக்கடி காலை துருவ தியானத்தில் அந்தச் சக்தியை ஏற்றிக் கொண்டு மூதாதையரின் ஆன்மாக்கள் அங்கே அழியா ஒளிச்சரீரரம் பெற வேண்டும் என்று உந்தித் தள்ள வேண்டும்.

அந்த உணர்வுகள் நமக்குள் பெருகப் பெருக அங்கே தான் நம்மையும் அழைத்துச் செல்லுமே தவிர இங்கே இருக்க விடாது.

இதை ஒரு பழக்கத்திற்குக் கொண்டு வர வேண்டும்…! ஆக முதலில் அந்தத் தொடர்பு வேண்டும். அதற்குத்தான் கூட்டுத் தியானங்களில் ஒன்று சேர்ந்து அந்த ஆன்மாக்களை அங்கே விண்ணுக்குச் செலுத்தச் சொல்கின்றோம்.
1.இங்கே எப்படி ஐக்கியமாகச் செயல்படுகின்றோமோ
2.அதே போல் அங்கே சப்தரிஷி மண்டலத்திலும் ஐக்கியமாகின்றது.

நகையைத் திருட வந்தவனுக்கு ஏற்பட்ட கதி

நகையைத் திருட வந்தவனுக்கு ஏற்பட்ட கதி

 

பெண்கள் நகையைப் போட்டுக் கொண்டு செல்கின்றார்கள். திருடன் உற்றுப் பார்க்கப்படும் பொழுது அபகரிக்கும் நோக்கத்தில் அங்கே வரும் சந்தர்ப்பமாக உருவாகிறது.

இது நடந்த நிகழ்ச்சி…! என் காலோ ஆணிக்கால். ஆனால் திருச்சியில் கால்நடையாக நான் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்தேன்.

ரோட்டிலே ஒருவன் ஒரு பெண்ணை “அடி…அடி…” என்று அடித்துக் கொண்டிருக்கின்றான்… போக்கிரி அவன்…!

என்ன…? ஏன் இந்தப் பெண்ணை அடிக்கிறாய்…? என்று கேட்டேன்.

அந்தப் பெண் சப்தம் போடுகிறது.
1.நான் பித்தளை நகையைப் போட்டிருக்கின்றேன்.
2.ஏன் தங்க நகையை போட்டுக் கொண்டு வரவில்லை…? என்று இவன் அடிக்கின்றான் என்று சொல்கிறது.

தங்க நகையைப் போடாது நீ எப்படி ரோட்டில் வரலாம் என்று சொல்லி அவன் உதைக்கின்றான்.

நான் என்ன நினைத்தேன்…? என்றால் வீட்டிலே நகைகளப் போட்டு இருக்கின்றார்கள். செலவுக்காக அடகு வைத்து விட்டது… அதனால் உதைக்கின்றான் என்று.

அப்போது திருடன் சொல்கின்றான் நாங்கள் திருட வந்தால் பித்தளை நகையைப் போட்டு ஏமாற்றுகிறாயா…? என்று சொல்லி உதைக்கின்றான்.

நான் போய் அவன் கையைப் பிடித்தேன். ஆளைப் பார்…! உன்னைக் கத்தியால் குத்தி விடுவேன்…! என்றான். ஆமாம் குத்தி விடுவாய் என்றேன் நான்.

பின்… இழுத்து சொத்… என்று கீழே விழுந்தான். கத்தியை எடுக்க முயற்சி செய்தான். கையும் வரவில்லை… காலும் வரவில்லை… கீழே விழுந்து கிடக்கின்றான்.

அங்கிருப்பவர்கள் எல்லாம் அவன் பெரிய ரவுடி. ரோட்டில் போய்க் கொண்டிருக்கும் நீ அவனை என்ன செய்ய முடியும்…? அவன் உன்னைத் தீர்த்து விடுவான் என்று சொல்கின்றார்கள்.

1.அவன் தீர்க்கட்டும்…! அவன் எண்ணம் தீர்ந்து போகும் என்று சொன்னேன்.
2.தவறான எண்ணம் கொண்டால் அவனுக்கு இது தான் கதி.
3.அவன் என்றைக்குத் திருந்துகின்றானோ அன்று அவன் கை வரும் என்று சொன்னேன்.

அந்தப் பெண் சொல்கிறது. ஐயா நீங்கள் இன்று இவனை அடித்து விட்டீர்கள்…! நாளைக்கு என் வீட்டிற்கே வந்து அவன் உதைப்பான் போல் தெரிகிறது. எழுந்து வந்து அடிப்பான்.

ஐயா அந்தக் கூட்டமே பெரிய கூட்டம் பல தடவை இப்படி வந்து திருடுகின்றார்கள். ஒன்றும் கொடுக்கவில்லை என்றால் உதைக்கின்றார்கள் என்று அந்தப் பெண் சொன்னது.

அவன் உன்னை அடிக்க மாட்டான்… கையும் வராது காலும் வராது கெட்டது இத்துடன் போய் விட்டது. நல்லதை நினைத்தால் தான் எழுந்து வருவான். உன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பான்… உன்னை உதைக்க மாட்டான் என்று சொன்னேன்.

காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று “இந்த மாதிரி இருக்கின்றதே… நீங்கள் என்ன செய்கிறீர்கள்…? என்று கேட்டேன். நாங்கள் என்ன செய்வது…? புகார் அளித்தால் தானே நாங்கள் நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்கள்.

ஆக மொத்தம்
1.நகையைப் போட்டுக் கொண்டு ரோட்டிலே சென்றால் திருடனுக்கு வழி காட்டியது போல் ஆகிவிடுகிறது
2.உலக நடப்பு இவ்வாறு இருக்கின்றது.

நடந்த நிகழ்ச்சி இது.

உடலை மதிக்க வேண்டும்… ஆனால் அதன் மீது பற்று வைக்கக் கூடாது

உடலை மதிக்க வேண்டும்… ஆனால் அதன் மீது பற்று வைக்கக் கூடாது

 

நான் ஏதோ சொல்கின்றேன் என்றும் நான் கல்வி அறிவு இல்லாதவன் என்றும் எண்ண வேண்டாம். விண்ணுலக ஆற்றல் அனைத்தும் மனிதனின் உடலுக்குள் உண்டு என்று குருநாதர் காட்டினார்.

அதன் வழி வழி கொண்டு
1.அந்த (உணர்வின்) புலனறிவின் ஆற்றலை விண்ணிலே வீசி உணர்வின் ஆற்றலை நீ நுகர்ந்து அறி
2.அந்த உணர்வின் தன்மையை உனக்குள் வளர்த்துக்கொள்,
3.இதுவே தீமையற்ற நிலைகளாக ஆக்கு
4.அது தீமைகள் இருக்கும் மனிதனுக்குத் “தீமைகளை நீக்க உதவட்டும்…!” என்று குருநாதர் எமக்குக் கட்டளையிட்டார்.

அவர் இட்ட கட்டளைப்படிதான் இதைச் செய்கிறேன். உங்களிடத்தில் புகழ் தேவைக்கோ பொருள் தேவைக்கோ அல்ல. எனக்குப் பொருள் ஒன்றும் தேவையில்லை… புகழும் தேவையில்லை.

நீங்கள் மகிழ்ந்திருக்க வேண்டும், உங்களையறியாது சேர்ந்த இருள் நீங்க வேண்டும், உங்களின் மகிழ்ச்சியான உணர்வு மற்றவர்களை மகிழ்ச்சி பெறச் செய்யும் சக்தியாக மலர வேண்டும்.

அதைக் கண்டு எனக்குள் மகிழ்ச்சி தோன்ற வேண்டும். இது எமது குரு இட்ட கட்டளை.

இந்த உடல் சதமற்றது. நிலையாக இருப்பது உயிர்.
1.“சாமி…” என்று என்னைப் பல பேர் கூப்பிட்டாலும் உயிர் சென்று விட்டால் என்னவென்று அழைப்பார்கள்…?
2.சவத்தை எப்பொழுது அடக்கம் செய்வார்கள்…? என்று தான் கேட்பார்கள்.
3.எனக்குள் இருக்கும் உயிரைத்தான் மதிக்கின்றார்கள்.
4.எல்லோருடைய நிலையும்… உயிரைத்தான் மதிக்கின்றார்கள்.

இப்பொழுது உங்கள் உடலில் இருக்கும் உயிரை மதித்து நடந்து பாருங்கள். அந்த ஞானியின் உணர்வைச் சேர்த்துப் பாருங்கள். இந்த உடலின் தன்மை தூசியாகும்.

இந்த உடலுக்குள் நின்று தான் மெய் ஞானியின் உணர்வை வளர்க்க முடியும். இதில் வளர்த்துத் தான் உயிருடன் ஒன்றச் செய்ய முடியும்.
1.உடலை மதிக்க வேண்டும்
2.ஆனால் உடல் மீது பற்று வைக்கக் கூடாது.

உடலுக்கு முக்கியத்துவம் கொடுத்து “என்னைக் கேவலமாகப் பேசிவிட்டானே… இரு உன்னைப் பார்க்கின்றேன்…!” என்று சொன்னால் போதும். உடலுக்கு முக்கியத்துவம் வந்து விடுகின்றது.

அவனின் உணர்வை உங்களுக்குள் வளர்த்துக் கொள்கின்றீர்கள், அவர்கள் சொன்ன வழியில் சென்று இந்தச் சரீரத்தைக் காக்கும் திறன் இழந்து விடுகின்றீர்கள்.

இதிலிருந்து விடுபட அந்த மெய் ஞானிகளின் அருளைப் பெறத் தியானித்து அந்தத் தீய வினைகளை நீக்கி மெய் ஒளி பெறும் தகுதி நீங்கள் பெற வேண்டும் என்பதற்கே இதை உபதேசிக்கின்றேன்.

நீங்கள் அனைவரும் மெய்யொளி பெறும் தகுதி பெற வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன்… தியானிக்கின்றேன்… வேண்டுகின்றேன், பிரார்த்திக்கின்றேன்.
1.உங்களை அறியாது சேர்ந்த இருள் நிலையைப் போக்கிடுவீர்.
2.அருள் ஞானியின் அருள் ஒளியைப் பெற்றிடுவீர்,
3.ஒன்று சேர்ந்து வாழ்ந்திடும் வாழ்க்கையினைப் பெற்றிடுவீர்,
4.மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்திடுவீர்
5.உயிருடன் ஒன்றிய உணர்வின் ஒளியாகிடுவீர்
6.என்றும் அழியா ஒளிச்சரீரம் பெற்றிடுவீர்.

“முருகு…” மாற்றி அமைக்கும் சக்தி

“முருகு…” மாற்றி அமைக்கும் சக்தி

 

மனிதனான பின் அன்பால் பரிவால் பிறருடைய கஷ்டங்களைக் கேட்டறிகின்றோம். வெளியில் நடக்கும் பல தவறான உணர்வுகளை நுகருகின்றோம். இவையனைத்தும் உடலுக்குள் வலிமையாகின்றது. நம் உடலில் உள்ள நல்ல குணத்திற்கும் இதற்கும் போர் நடக்கின்றது.

இதைத்தான் சாஸ்திரங்களில் பரசுராமனுக்கும் சீதாராமனுக்கும் போர் நடக்கின்றது என்று காட்டினார்கள். சீதாராமனோ விஷ்ணு தனுசை எடுத்துப் பரசுராமனை வீழ்த்துகின்றான்.

பரசுராமனோ சிவ தனுசை எடுக்கின்றான். ஆனாலும் தோல்வி அடைகின்றான். நமது சாஸ்திரங்களில் தெளிவாகக் காட்டி இருக்கின்றார்கள்.

வராகனுக்குப்பின் (பன்றி) பரசுராமன் மனிதன் என்ற நிலைகள் ஆன பிறகு
1.எல்லோரும் பேரன்போடு வாழ வேண்டும் என்ற ஆசை வருகின்றது.
2.ஆனால் நமக்குள் இருக்கும் தீமையை நீக்கத் தெரியவில்லை.
3.நமது சந்தர்ப்பம் எது வலிமையாகின்றதோ அதன் வழிதான் செல்கின்றோம்.

ஒரு குழம்பு வைக்க வேண்டுமென்றால் மிளகாய் உப்பு புளி அனைத்தையும் சமமாகச் சேர்த்துச் சுவைமிக்கதாகச் சமைக்கின்றோம்.

இதைப் போல வேதனை என்ற உணர்வை நமக்குள் எடுத்துத் தெரிந்து கொண்டாலும் அதை மாற்றி அமைக்கும் சக்தி நமக்குள் வேண்டும். அந்தச் சக்தி பெறச் செய்யும் சந்தர்ப்பத்தை உங்களுக்கு ஏற்படுத்துவதற்குத்தான் இதை உபதேசிப்பது.
1.இதன் மூலம் உங்களை நீங்கள் அறிகின்றீர்கள்.
2.இந்த உயிரின் இயக்கத்தையும் மனிதனான நிலையையும் உங்களால் அறிய முடிகின்றது.

கோபிப்பது நாமல்ல; வேதனைப்படுவதும் நாமல்ல; வெறுப்படைவதும் நாமல்ல; தற்கொலை செய்யச் சொல்வதும் நாமல்ல, தவறு செய்யச் சொல்வதும் நாமல்ல.

நெருப்பிலே ஒரு பொருளைப் போட்டால் அந்தப் பொருளின் மணம் தான் நுகர்ந்தவரை இயக்குகின்றது. இதைப் போல நம்முடைய எண்ணம் தான் நம்மை இயக்குகின்றது.

வேதனைப்படுவோரையோ கோபப்படுவோரையோ எண்ணினால் அது வாலி. நமது நல்ல குணங்களை அது அடக்கி நமக்குள் வலிமையானதாக மாறி நம்மை அதன் வழிகளில் இயக்குகின்றது.

இவைகளை நமக்குள் மாற்றி அமைக்க வேண்டுமென்றால் நமது ஆறாவது அறிவு கொண்டு தீமைகளை வென்று ஒளியின் உடல் பெற்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று இந்த உணர்வைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.

இது வலுவானபின்
1.நாங்கள் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்
2.கனியைப் போன்ற இனிமையான சொல்லும் செயலும் பெற வேண்டும்
3.தெய்வீக குணத்தைப் பெற வேண்டும் தெய்வீக அன்பைப் பெற வேண்டும் தெய்வீக அருளைப் பெற வேண்டும்
4.தங்கத்தைப் போல மனம் மங்காத நிலை பெற வேண்டும்
5.மலரைப் போல மணம் பெற வேண்டும் மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

கடவுளின் அவதாரத்தில் ஒன்பதாவது அவதாரம் நரசிம்ம அவதாரம்… நாராயணன் வாசற்படியில் அமர்ந்து மடி மீது இரண்யனை வைத்துப் பிளந்தான் என்று காட்டப்பட்டுள்ளது.

சூரியனான நாராயணன் 27 நட்சத்திரங்கள் வெளிப்படுத்துவதை… பால்வெளி மண்டலங்களிலிருந்து… தான் கவர்வதைத் தனது உடலில் உள்ள பாதரசத்தால் மோதிப் பிளக்கின்றது. இது அதன் சந்தர்ப்பம்.

ஆனால் மனிதனோ வேதனைப்படும் மனிதனைச் சந்திக்கும்போது வேதனைப்பட வைக்கின்றது. நமது அந்தச் சந்தர்ப்பம் உடல்களில் உள்ள உணர்வுகளைப் பலவீனமடையச் செய்கின்றது.

ஆனால்…
1,பல கோடி உடல்களில் தீமையை நீக்கிய துருவ நட்சத்திரத்தின் பெரருளைப் பெறும் சந்தர்ப்பத்தை நாம் ஏற்படுத்த வேண்டும்.
2.அந்தச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி நமது கண்களின் நினைவிற்குக் கொண்டு வரவேண்டும்.

பின் புருவ மத்திக்குக் கண்களின் நினைவைக் கொண்டு வரவேண்டும். நம் மூக்கின் வழி சுவாசிப்பதற்கு மாறாக கண் வழி கவர்ந்து இதை இணைக்க வேண்டும்.

1.இது வலிமையானபின் உணர்வின் பிராணயாமம்.
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் இயக்கமாக மாற்றுகின்றோம்.
3.இது தான் “முருகு…!” மாற்றி அமைக்கும் சக்தி.

தீமைகளை நீக்கிய அருள் உணர்வை உயிரிலே இணைத்தபின் தீமைகள் நம் உடலுக்குள் செல்லாது உடலைச் சுற்றியே நிற்கும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களிலே கலந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று வலுவெற்ற வேண்டும்.

அந்தச் சக்தி உடலுக்குள் வலுவாக்கப்படும் போது உடலைச் சுற்றி இருக்கும் தீமைகள் நம்மை விட்டு அகலும்.

துணியில் அழுக்குப்பட்டால் எப்படிச் சோப்பைப் போட்டு நுரையை ஏற்றி அழுக்கை அப்புறப்படுத்துகின்றோமோ அதைப் போல
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளை நம் உடலுக்குள் செலுத்தி அதை வலுவாக்கித்
2.தீமைகளை நம் ஈர்ப்பு வட்டத்தை விட்டு அகன்று செல்லச் செய்கின்றோம்.

அதற்குப்பின் ஒரு நோயாளியைப் பார்த்தால் துருவ நட்சத்திரத்தின் பேரொளியை நீங்கள் பெற்று உடல் நலம் பெறுவீர்கள் என்று வாக்கினை அங்கு பதிவு செய்தால் அவரும் நலம் பெறுவார்.

சுவைக்கொப்ப எண்ணங்கள் சீதாராமன். தீமைகளை நீக்கியது துருவ நட்சத்திரம்… அது சீதாராம். இராமனின் பக்தன் ஆஞ்சனேயன். அவன் வாயு புத்திரன் சுக்கிரீவனின் மந்திரி.

சுக்கிரீவன் என்பது துருவ நட்சத்திரம். அதை எண்ணத்தால் எண்ணி (சீதாராம்) நமக்குள் வலுப் பெற்று எல்லோரும் பெற வேண்டும் என்று சொல்லும் போது அந்த வலுவான எண்ணம் (ஆஞ்சனேயன்) வாயுவாகச் சென்று மற்றவர்களையும் பெறச் செய்யும்.

சப்தரிஷி மண்டலத்திற்குச் செல்ல வேண்டும் என்றால் அதற்குண்டான முகப்பு வேண்டும்

சப்தரிஷி மண்டலத்திற்குச் செல்ல வேண்டும் என்றால் அதற்குண்டான முகப்பு வேண்டும்

 

குருநாதரை விண் செலுத்துவதற்கு அவருக்கு ஒரு துணை தேவைப்படுகின்றது.
1.நேரடியாக எங்கும் போக முடியாது… உந்து விசை வேண்டும்.
2.முகப்பை எடுத்து எண்ணத்தைத் திசை மாறாது கொண்டு போக வேண்டும்.

திசை மாறிவிட்டது என்றால் வான வெளியில் மிதந்து விடும். அணுவின் தன்மை அடைந்தால் மற்ற கோள்களின் ஈர்ப்பிற்குள் சென்று விடும். சப்தரிஷி மண்டலத்துடன் இணையாது.

சந்திரன் இருக்கிறது என்றால் அங்கே செல்லும். அங்கே வளர்ச்சியற்ற அணுவாக இருக்கும். மீண்டும் அங்கிருந்து கடந்து செல்லும் திறன் இருக்காது. அங்கே அடைபட்டுப் போகும்.

இவ்வாறு எத்தனையோ வகைகளை குருநாதர் சொல்லித்தான் இப்பொழுது அதைச் செயல்படுத்துகின்றோம்.
1.குரு இல்லாதபடி எந்த நிலையும் இருக்க முடியாது.
2.குரு காட்டிய வழியினைப் பதிவு செய்தால் தான் விண்ணுக்குச் செலுத்த முடியும்.

கிணற்றுத் தவளை போன்று சுற்றிக் கொண்டு எடுப்பதென்றால் முடியாது.

20 வருட அனுபவத்தைக் கொடுத்துத் தான் அதைப் பெறச் செய்கின்றார். ஆகையினால் தான் உங்களுக்குள் அடிக்கடி இதைப் பதிவு செய்து நினைவுகளை ஒவ்வொன்றாகக் கொண்டு வருகின்றோம்.

அதற்குக் கணவன் மனைவி நீங்கள் இந்த முறைப்படி தியானம் எடுக்க வேண்டும். ஆன்மா வெளியே சென்று விட்டால் ஒளியின் கருவை உருவாக்க வேண்டும்.

காலை துருவ தியானத்தில் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். தன் கணவனுக்கு அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் மனைவிக்கு அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று இரு உணர்வையும் ஒன்றாக்க வேண்டும்.
1.அதை உருவாக்கித் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வைப் பெற்றுச் சப்தரிஷி மண்டல ஈர்ப்புக்குச் செல்ல வேண்டும்.
2.துருவ நட்சத்திரத்திற்குச் செல்ல முடியாது. அங்கே இருக்க முடியாது
3.அந்த வட்டப்பாதையான சப்தரிஷி மண்டலத்தில் தான் சேர முடியும்.
4.அதற்குண்டான முகப்பை எடுத்து இணைத்துச் செலுத்திய பிற்பாடு தான் அங்கே சேரும்.

இராக்கெட்டைச் செய்கின்றார்கள் கம்ப்யூட்டரில் படங்களை எடுக்கின்றார்கள். அதைச் சேர்த்துக் கொண்டு முகப்பில் வைக்கின்றார்கள்.

விண்ணிலே செலுத்தப்படும் பொழுது அந்த முகப்பைப் பார்த்து அதனின் ஈர்ப்புக்குத் தான் கொண்டு போகும். கொஞ்சம் திசை மாறியது என்றால் வேறு எங்கே போகும்…! என்று சொல்ல முடியாது.

எந்த எந்தக் கோள்களைப் படமாக எடுத்துப் பதிவு செய்தார்களோ அதை இந்த முகப்பில் இணைக்க வேண்டும். அந்த உணர்வின் துனை கொண்டு அங்கே செல்லும்.

இதைப் போன்று தான்
1.உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஒவ்வொரு ஆன்மாக்களுக்கும் சப்தரிஷி மண்டல உணர்வை முகப்பாக இணைக்கின்றோம்.
2.அப்படி இணைக்காதபடி அந்த இடம் போய்ச் சேர முடியாது.

விலகிப் போய்விட்டால் வேறு பக்கங்களுக்குச் சென்று விடும். கரணம் தப்பினால் மரணம் என்பது போல பல வித்தியாசமான நிலைகள் இருக்கின்றது.

குரு செல்கிறார் என்றால் அது சரியான எல்லையை வைத்து அனுப்புவதற்கு எனக்குப் பயிற்சி கொடுத்தார். அங்கே செலுத்தும்படிச் செய்தார்.

1.அதை எப்படிச் செயல்படுத்த வேண்டும் என்று வரிசைப்படுத்தி எனக்குச் சொன்னார்.
2.அது எல்லாம் சரியாக இருக்கிறது என்று தெரிந்து கொண்ட பிற்பாடு தான் உடலை விட்டுப் பிரிகின்றார்.
3.சப்தரிஷி மண்டல உணர்வை முகப்பில் எப்படி இணைக்க வேண்டும்…?
4.எவ்வாறு விண் செலுத்த வேண்டும்…? என்று எல்லாம் தெரிந்த பிற்பாடு தான் அவர் உடலை விட்டுப் பிரிந்து அங்கே சேர்கின்றார்.

குருவை விண் செலுத்திய பிற்பாடு தான் அங்கிருந்து அதிக அளவில் நான் சக்தியைப் பெற முடிந்தது. உங்களுக்கும் இப்பொழுது வழிகாட்ட முடிகின்றது.

தீமைகளைத் தடைப்படுத்தும் வழி

தீமைகளைத் தடைப்படுத்தும் வழி

 

தீய உணர்வுகளைத் தடைப்படுத்தும் பொழுது நம்மிடத்தில் சிந்தித்துச் செயல்படும் தன்மை வருகின்றது. அப்படிச் சிந்திக்கும் தன்மை இல்லையென்றால் பிழை என்ற நிலை உருவாகும்.

பிழை என்ற நிலையில் நண்பர்களுக்குள் சிறிது குறையாகி விட்டதென்றால் பிறகு நீங்கள் குறையத்தான் வளர்க்க முடியுமே தவிர அங்கே நல் உணர்வை எடுக்க முடியாது.

நண்பர்களுக்குள் தவறு என்று யார் செய்திருந்தாலும் சந்தர்ப்பங்கள் நம்மை எப்படி இயக்குகின்றது…? என்ற நிலையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
1.சந்தர்ப்பங்களால் நம்மை பிறிதொரு தீமை இயக்கி விடாதபடி
2.நாம் நம்மை முதலில் பாதுகாக்கும் நிலை பெற வேண்டும்.

எப்படிப் பாதுகாக்க வேண்டுமென்றால் “ஈஸ்வரா…” என்று உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வினை எண்ணி நுகர்ந்து தீமைகளைத் தடைப்படுத்துதல் வேண்டும்.

யாம் நிறைய அருள் உபதேசங்களை உங்களுக்குக் கொடுத்திருக்கிறோம். அருள் உணர்வுகளை எப்படி உங்களிடத்தில் இயக்கமாக்க வேண்டும்…? எப்படித் தீமைகளைத் தடுக்க வேண்டும்…? என்று யாம் அடிக்கடி உங்களுக்கு உபதேசித்திருக்கின்றோம்.

1.“சாமி சொன்னார்கள்… மறந்து விட்டது” என்று இருக்கக்கூடாது.
2.அருள் உணர்வுகளை உங்களுக்குள் “ஆழமாகப் பதிவு” செய்து கொள்ள வேண்டும்.
3.இந்த விளக்கங்களை நாம் தெரிந்து கொண்டால் ஒவ்வொரு நிமிடமும் தீமைகள் வராதபடி தடுக்கலாம்.

நாம் எதை எண்ணுகின்றோமோ அவைகளை நம்முள் சேர்க்கின்றோம். நம்மிடம் ஒருவர் கஷ்டத்தைக் கூறும் பொழுது அதை நாம் உற்றுக் கேட்கும் பொழுது அவ்வுணர்வுகள் நம்மில் பதிவாகின்றது.

ஆனால் பிறர் தான் சொல்லும் கஷ்டத்தைக் கேட்கவில்லை என்றால்
1.“என்னவோ பெரிய பிகு பண்ணுகின்றான் பார்…!
2.நாம் சொல்கிறோம்… காது கூடக் கேட்க மாட்டேன் என்கிறது” என்று நம்மைப் பற்றிக் குறை கூற ஆரம்பித்து விடுவார்கள்.

ஆகையினால் வேதனையின் உணர்வுகளைக் கேட்டால் ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி அதனைச் செவியுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்… உள்ளே கவரும் தன்மையாக எடுக்கக் கூடாது.

நம்முடைய எண்ணங்கள் துருவ நட்சத்திரத்தின்பால் சேர்க்கப்படும் பொழுது பிறர் சொல்லும் வேதனை உணர்வுகளைத் தன்னுள்ளே கவராது.

இப்பொழுது யாம் உங்களுக்கு மத்தியில் பேசிக் கொண்டு இருக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அது சமயம் நீங்கள்
1.“நம்முடைய வீட்டில் செய்ய வேண்டிய வேலை என்ன…?
2.வீட்டில் மகன் என்ன செய்து கொண்டிருக்கின்றானோ…?
3.ஏதாவது செய்து விட்டால் என்னவாகும்…?” என்று எண்ணிக் கொண்டிருப்பீர்கள் என்றால்
4.யாம் சொல்லும் உணர்வுகள் உங்களிடத்தில் பதிவாகாது.

ஆகையால் ஒருவர் நம்மிடம் தீமை தரும் உணர்வுகளையோ வேதனை தரும் உணர்வுகளையோ சொல்வாரே என்றால் அது சமயம் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நம்முள் இணைப்போம் என்றால் அத்தீய உணர்வுகளை நம்முள் புகாது தடுக்கலாம்.

அவர்கள் சொல்லும் உணர்வுகள் செவிகளில் கேட்கும்… ஆனால் ஈர்க்காது. இதனை ஒரு பயிற்சிக்குக் கொண்டு வரவேண்டும்.

எத்தனையோ பேர் எம்மிடம் கஷ்டங்களை நிவர்த்திக்க வருகின்றார்கள். அவர்களுடைய வேதனைகளைச் சொல்கின்றார்கள். யாம் அதை ஈர்ப்பதில்லை.
1.யாம் எம்மைத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளுக்குள் இணைத்துக் கொள்வதால்
2.அவர்கள் என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்வோம்.
3.அதன் பிறகு யாம் கோபமாக “போங்கள்… உங்களுக்கு ஒன்றுமில்லை போங்கள்…” என்று சொல்வோம்.

அப்படி யாம் சொன்னால் “சாமி திடீரென்று நம்மைக் கோபிக்கின்றாரே…!” என்று எண்ணினால் என்னவாகும். ஏனென்றால் அவர்கள் சொல்லும் வேதனையின் உணர்ச்சிகளை உடனே தாங்கி மடக்கி அனுப்புகின்றோம்.

சாமி நம்மைக் கோபித்துக் கொண்டார் என்று நீங்கள் சொன்னால், யாம் என்ன பண்ணுவது…? அப்படியானால் அவர்கள் சொல்லும் கஷ்டத்தை யாம் ஈர்க்க வெண்டுமா…?

யாம் உங்கள் கஷ்டத்தை நீக்குவதற்குத்தான் அப்படிச் சொல்கின்றோம்.

அதைப் போல் மற்றவர்கள் அனுபவிக்கும் கஷ்டத்தையெல்லாம் நீங்கள் உற்றுக் கேட்பீர்கள் என்றால் என்னவாகும்…? அந்த உணர்வுகள் உங்களுக்குள் இந்திரீகமாக… இரத்தத்தில் அணுவின் கருவாக மாறும்.

ஆகையால் இந்தத் தீய உணர்வுகளை நீங்கள் உங்களிடத்தில் வராது தடைப்படுத்தக் கற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு தீமைகள் தமக்குள் வராது தடைப்படுத்தத் தியானத்தைச் சீராகக் கடைப்பிடிக்கும் அன்பர்கள் அனைவருக்கும் எமது அருளாசிகள்.

தீமைகள் வராது தடுக்க ஞானகுரு நமக்குக் கொடுக்கும் பாதுகாப்புக் கவசம்

தீமைகள் வராது தடுக்க ஞானகுரு நமக்குக் கொடுக்கும் பாதுகாப்புக் கவசம்

 

மெய் ஞானிகள் காண்பித்த அருள் வழியில் மக்கள் அனைவரும் ஏகோபித்த நிலையில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளைத் தம்முள் கவர்ந்து வலுவாக்கும் பொழுது நம்மிடத்தில் தீமை என்ற நிலைகள் அணுகுவதைத் தடுத்து விலக்கிவிடும்.

1.நாம் கவராது விட்டுவிட்ட தீமையின் உணர்வுகள் அனைத்தையும்
2.காலையில் ஆறு மணிக்கெல்லாம் சூரியன் கவர்ந்து மேலே கொண்டு சென்றுவிடும்.
3.இதனால் நமது பூமியில் பரமாத்மாவாக இருப்பது சுத்தமாகின்றது… நமது ஆன்மாவும் சுத்தமாகின்றது.
4.நமது ஆன்மா சுத்தமாகும் பொழுது நமது உடலில் உள்ள ஜீவான்மாவும் சுத்தமாகின்றது.
5.நமது உயிரான்மா அது ஒளியின் தன்மை பெறுகின்றது.

மெய் ஞானிகளின் அருள் உணர்வைப் பெறுகின்ற பொழுது அது நமக்கு சொர்க்கவாசலாக அமைகின்றது. இதை விடுத்துக் கோவிலுக்குச் சென்று தெய்வத்தைத் தரிசிக்கின்றேன் என்று சொல்லி ஒருவர் மீது ஒருவர் விழுந்து ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டு செல்லும் பொழுது நமக்கு வெறுப்பு தான் வரும்.

ஆகவே இது மனிதருக்குகந்த நிலையல்ல… அசுர உணர்வுதான் வரும்.

அதே போன்று கோவிலில் பிரசாதம் கொடுக்கும் பொழுது பாருங்கள். நான் முதலில் பெற வேண்டும் என்று தான் எண்ணுவார்களே தவிர அனைவரும் ஒன்றுபட்ட உணர்வு கொண்டு மனதைக் கட்டுப்படுத்தி அங்கே நிற்கிறார்களா என்றால் இல்லை.

மற்றவர்கள் முதலில் பெறட்டும் என்று நாம் எண்ணும் பொழுது நமது மனம் கொண்டு நாம் இருந்த இடத்திலிருந்தே பெற முடியும்.

அவர்கள் அருகிலே சென்று பெறுகின்றனர். ஆனால்
1.அவர்கள் அருகில் செல்வதற்கு முன்னால் நாம் இருந்த இடத்திலிருந்து உடனடியாகப் பெறுகின்றோம்.
2.இந்த உண்மையை அறிந்து கொள்தல் வேண்டும்.

ஆகவே நமது மனம் பண்பட்டால்தான் நமது குணங்கள் பண்படும். நமது குணங்கள் பண்பட்டால்தான் நமது வாழ்க்கையினைப் பண்படுத்தும் நிலை வரும்.

இவைகளை எல்லாம் யாம் பெற வேண்டும் என்றுதான் எமது குருநாதர் மலை காடு என்று பல இடங்களுக்கு எம்மை அழைத்துச் சென்றார்.

அப்படி அழைத்துச் செல்லும் காலத்தில் ஒரு முறை எமக்கு ஒரு பச்சிலையைக் காண்பித்துக் கொடுத்தார். அந்தப் பச்சிலையைக் கையில் கொடுத்து
1.“அதில் உன் உணர்வின் மணத்தை ஓது…
2.எண்ணத்தால் எண்ணி அங்கே போட்டு விட்டு வா…!” என்றார் குருநாதர்.

குருநாதர் சொன்ன முறைப்படி உணர்வின் மணத்தை ஓதிப் போட்டு விட்டு வந்த பின் அந்த பக்கம் புலி ஒன்று வருகின்றது. யாம் அங்கு போட்டிருந்த பச்சிலையை அந்தப் புலி நுகர்ந்த பின் அப்படியே அசையாமல் நிற்கின்றது.

அதே சமயத்தில் மலைக் காட்டுக்குள் “மறதிப் பூடு” என்பதை குருநாதர் எமக்கு காண்பித்தார்.

இந்த மறதிப் பூட்டினை இலேசாகக் கிள்ளி யாராவது ஒருவரது வீட்டில் போட்டு விட்டு வந்து விட்டால் அல்லது அவர்களது வீட்டின் கதவிடுக்குகளில் வைத்து விட்டாலோ போதும்.

அவர்கள் வீட்டிற்கு வெளியே என்னென்ன செயல்கள் வேலைகள் செய்து விட்டு வீட்டிற்கு வந்தாலும் அவைகளெல்லாம் ஞாபகத்தில் இருக்காது.

இந்நிலையை நாம் ஒருவருக்குச் செய்தால் என்னவாகும்…? நாம் பெரிய மனிதர் ஆகிவிடலாம். இது போன்ற நிலைகள் நாட்டில் நிறைய உண்டு.

குருநாதர் இன்னும் சில வேர்களைக் காண்பித்தார். அந்த வேர்களைக் கையில் வைத்துக் கொண்டால் விஷப் பூச்சிகள் மட்டுமல்ல… புலியும் கூட ஒடுங்கி நிற்கின்றது.

ஏனென்றால் மனித உடலுக்குள் அந்த மணத்தின் தன்மை கொண்டபின் விஷம் கொண்டவைகள் பயப்படுகின்றன. அவைகளுடைய விஷம் ஒடுங்குவதினால் அவைகள் தங்களுடைய வலுவையும் இழந்து விடுகின்றன.

குருநாதர் ஒவ்வொன்றாகக் காண்பித்து இயற்கையின் உண்மையின் நிலைகளை உணர்த்தி எமக்குச் சில ஆசைகளை ஊட்டுகின்றார்.

இவைகளைக் காணும் பொழுது எமக்குள் உடனே அகந்தை வருகின்றது. எவராவது வம்புக்கு வரட்டும்… அவர்களை ஒரு கை பார்ப்போம்…! என்ற எண்ணம்தான் வருகின்றது.

ஆனால் தீமைகள் நமக்குள் வராது தடுக்கும் பாதுகாப்புக் கவசமாக வைத்துக் கொள்வோம் என்ற எண்ணம் இல்லை.

அப்பொழுது குருநாதர் தீமைகள் உடலுக்குள் புகாது தடுக்கும் நிலைகள் கொண்டு நல்லுணர்வின் தன்மையை உனக்குள் வலுவாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
1.பிறரை வீழ்த்துவது எளிது.
2.வீழ்த்தும் உணர்வு, திருட்டுத்தனமாக உனக்குள் சென்று விடுகின்றது.
3.வீழ்த்தும் உணர்வை உனக்குள் எடுக்கும் பொழுது இந்த உணர்வுகள் உள் நின்று என்ன செய்யும்…?
4.அதே தவறைத்தான் செய்ய வைக்கும்.
5.ஆகவே “நான் கொடுத்த சக்தியை நீ இழக்கத்தான் நேருமே தவிர அதை வளர்க்க முடியாது.

ஒருவர் தீமை செய்கிறார் என்றால் அவரைத் தீமையின் உணர்வுகளிலிருந்து மீள வைக்க வேண்டும். அவருக்குத் தெளிந்த உணர்வை ஊட்ட வேண்டும்

“நீ ஏன் அவர்களுக்கு தெளிந்த உணர்வை ஊட்ட வேண்டும்…?” என்று குருநாதர் கேட்டார்.

1.“ஓ…ம் நமச்சிவாய” என்று அவருக்குள் தவறின் உணர்வுகள் இயங்குகின்றது.
2.அவர் செய்யும் தவறின் உணர்வுகளை நீ நுகர்ந்தால் “சிவாய நம ஓ…ம்” என்று அவருடைய தவறின் உணர்வுகள் உனக்குள் வந்து
3.அவர் செய்த தவறையே உன்னையும் செய்யத் தூண்டும் என்று தெளிவாக்கினார்.

ஒவ்வொரு மனிதருடைய உயிரையும் கடவுளாக மதித்தால் அவர்களுடைய உடலைக் கோவிலாக மதித்தால் அவர்கள் செய்யும் தவறின் உணர்வுகள் உனக்குள் வராது என்று எனக்கு உபதேசித்தார்.

இதன் வழி கொண்டு
1.உலக மக்கள் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று நாம் தவம் இருப்போம்.
2.அனைவரும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ வேண்டும் என்று பிரார்த்திப்போம்.

இந்த உடலுக்குப்பின் “பிறவி இல்லா நிலை என்ற அழியா ஒளிச் சரீரம்” நாம் அனைவரும் பெறுவோம்.

நாம் தெரிய வேண்டியதும்… தெரிந்து கொண்ட நிலையில் “நடந்து கொள்ள வேண்டிய முறையும்…”

நாம் தெரிய வேண்டியதும்… தெரிந்து கொண்ட நிலையில் “நடந்து கொள்ள வேண்டிய முறையும்…”

 

நம் குருநாதர் பித்தரைப் போன்று இருந்து தான் எல்லா உலகத்தையும் அறிந்தார். அதே போல அவர் காட்டிய அருள் வழியில் “ஒன்றும் தெரியாதவனைப் போன்று…” எல்லாவற்றையும் நான் தெரிந்து கொள்கின்றேன்.

ஆனால் உங்கள் உணர்வைத் தெரிந்து அதற்குத் தக்க
1.இங்கே வந்தோருக்கு குரு காட்டிய அருள் வழியினை உபதேசிக்கும் பொழுது
2.நீங்கள் எந்த நிலையில் வந்தாலும் உங்களுக்கு நல்ல சிந்தனையைத் தூண்டி
3.தன் தன் தவறுகளை உணர்ந்து… தீமைகளை நீக்கும் அருள் உணர்வுகளைப் பெறச் செய்கின்றேன்.

குருநாதர் பித்தரைப் போல் இருந்துதான் எனக்கு வழி காட்டினார். ஆக நானும் தெரியாதவனைப் போல் தான் இருக்கின்றேன்… தெரிந்து கொண்டவனாக நான் நடப்பதில்லை.

ஆனால் நான் தெரிந்து கொண்ட அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நீங்கள் பெற வேண்டும். பொருளறியும் சக்தி பெற வேண்டும்… அருள் உணர்வுகள் நீங்கள் பெற வேண்டும்…! என்ற உணர்வைத் தான் எடுத்துக் கொள்கின்றேன்.

ஆனால் நீங்கள் சொல்வதை எல்லாம் நான் உம்… கொடுத்துக் கேட்டால்… வீட்டில் இப்படி இருக்கின்றது தொழில் இப்படி இருக்கின்றது பையன் இப்படி இருக்கின்றான் என்ற குறைகளை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தால் என்ன ஆகும்…?

1.ஆக நான் அதைத் தெரிந்து கொள்ள விரும்புவதில்லை.
2.துருவ நட்சத்திரத்தின் சக்தியை நீங்கள் பெற வேண்டும் என்று எனக்குள் நான் மாற்றிக் கொள்கின்றேன்.
3.அதன் வழி உங்களுக்குள் அந்த அருள் சக்திகளைப் பாய்ச்சுகிறேன்.
4.அதே போல் நீங்கள் ஒவ்வொருவரும் தீமை புகாது தடுக்கும் நிலையைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

உலகில் விஷத்தன்மைகள் உருவாகிக் கொண்டுள்ளது. எங்கே பார்த்தாலும் இனம் மதம் என்ற நிலையில் வெறி கொண்டு தாக்கிடும் நிலையாக தன் இனத்தையே அழித்திடும் நிலையாகச் செயல்படுகின்றார்கள்.

தன் உயிர் போனாலும் பரவாயில்லை என்று அப்படிப்பட்ட வீரிய உணர்வு தான் வருகின்றதே தவிர இருளை நீக்கி ஒளியான நிலை பெற வேண்டும் என்ற எண்ணம் எவருக்கும் வருவதில்லை.

அசுர உணர்வுகள் பாயும் போது நல்ல உணர்வுகள் செயல்பட முடியாது போகின்றது. இதைப் போன்ற நிலைகளை நாம் மாற்ற வேண்டும்.

1.இந்தத் தியானத்தைத் கடைப்பிடிக்கும் ஒவ்வொருவரும் அருள் உணர்வைப் பெற்று அதையே வளர்த்து
2.மற்றவர்களுக்கும் அருள் ஞானத்தைப் போதியுங்கள்… அதை எடுத்துச் சொல்லப் பழகிக் கொள்ளுங்கள்.

கேட்டுணர்ந்தோர் எல்லோருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று ஏங்கினால் உங்களுக்குள் இந்த வளர்ச்சி வருகின்றது. அவரும் அதைப் பெருக்கத் தொடங்கினால் அவரும் நல் வழி பெறுகின்றார். அவருக்கும் வாழ்வதற்கு நல்ல வழி கிடைக்கின்றது.

இதைப் போன்று தொடர்ந்து நம் வாழ்க்கையையே தியானமாக்குதல் வேண்டும். தீமைகள் புகாது தடுத்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

“யாம் மறைத்துச் சொன்ன உண்மைகளை…” நீங்கள் அறிய முற்பட வேண்டும்

“யாம் மறைத்துச் சொன்ன உண்மைகளை…” நீங்கள் அறிய முற்பட வேண்டும்

 

திருமூலருக்குப் பிற்பாடு சப்தரிஷி மண்டலத்தில் அதிகமாக யாரும் இணைந்ததில்லை.
1.வெகு காலம் இடைவெளி ஆகிவிட்டது.
2.இப்போது யாம் குருவைச் சந்தித்த பிற்பாடு தான் தொடர்வரிசையாக “ஒவ்வொருவராக நாம் விண்ணுக்குச் செலுத்துகின்றோம்…”

இனம் இனத்தைச் சேர்க்கும். எதை எடுத்தாலும் அந்தக் கூட்டமைப்பிலே சேர்த்து வளர்த்துத் தான் வளர்ச்சியைப் பெற முடியும். ஒன்று தனித்து எந்த மண்டலமும் வளராது.

ஒரு பிரபஞ்சம் இருக்கும் போது பிற மண்டலங்களிலிருந்து வருவதை எடுத்து அனைத்திற்கும் இரையாகக் கொடுக்கின்றது. இதே போன்றுதான் மனிதன் தன் உணர்வின் தன்மை எடுத்து வளர்க்கப்படும் போது அடர்த்தி… மற்றதை இழுத்துத் தனக்குள் உணவாகப் பெருக்கும் நிலை வருகின்றது.

1.தனித்து ஒன்று எங்கும் எதுவும் வேலை செய்யாது.
2.இந்த உண்மையை நாம் தெரிந்து கொண்டால் விலகி நிற்க மாட்டோம்.
3.நீயா… நானா…? என்று போர் செய்து கொண்டிருந்தால் என்ன ஆகும்…?

இயற்கையின் உண்மை நிலை இதுதான்.

1.ஏனென்றால் இதில் ஆயிரம் மறைத்திருக்கின்றேன்
2.இந்த உணர்வுகளை ஒவ்வொன்றாக நீங்கள் இணைத்து… உங்களுக்குள் கொண்டு வர முயற்சி எடுத்தால்
3.குருநாதர் கண்ட அனைத்தையுமே நீங்கள் பார்க்க முடியும்.

சொல்வதை… “வெறுமனே கேட்டுக் கொண்டு மட்டும் இருந்தால்…” பலன் இல்லை.
1.அதைப் பெறக்கூடிய தகுதியைத்தான் உங்களிடம் உருவாக்குகின்றேன்.
2.தொடர்ந்து நீங்கள் செயல்பட்டு வந்தால் அது கிடைக்கும்… அது வளர்ச்சி அடையும்.

செடியில் உரத்தைச் சேர்க்கிறோம் என்றால் ஆவியாகச் சேருகின்றது. செடியில் இணைத்துக் கொண்டபின் அந்த ஆவி அதனுடன் இணைந்து உறையப்படும் பொழுது தன் இனமான சக்தியை எடுத்து நல்ல முறையில் வளர்க்க வழி செய்கின்றது.

செடியில் இந்த உரத்தின் சக்தி இணைந்தால் தான் வீரிய சக்தி வரும். இல்லை என்றால் பெற முடியாது. இது போன்று தான்
1.சில உண்மைகளைத் தெரியப்படுத்துவதற்கு என்னென்ன செய்ய வேண்டும்…? என்பதற்காக
2.அந்த உரமான உணர்வுகளை இணைத்து உங்களுக்குள் பெறச் செய்கின்றோம்.

ஒவ்வொரு அணுக்களிலும் அதை இணையச் செய்யப் பழக்க வேண்டும். வெறும் வாயிலேயே சொல்லிக் கொண்டு போவது அல்ல…!
1.விண்ணுலக ஆற்றலை நீங்கள் பெற வேண்டும் என்றால் குரு அருளைப் பெற்றிருக்க வேண்டும்.
2.அதை உங்களிடம் கொடுத்துப் பழக வேண்டும்… அந்தப் பாதை தெரியாதது நாம் போக முடியாது.
3.குரு வகுத்துக் கொடுத்த அந்தப் பாதையைத்தான் உங்களிடம் இணைத்துக் கொண்டு வருகின்றோம்.

தீமைகள் நமக்குள் புகாமல் தடுக்கும் வழி

தீமைகள் நமக்குள் புகாமல் தடுக்கும் வழி

 

எவ்வளவு செல்வம் தேடினாலும் எவ்வளவு செல்வம் சேமித்து வைத்தாலும்
1.கடுமையான நோய்கள் வந்து விட்டால் வாழ்க்கையில் வெறுப்பு தான் வருகின்றது.
2.வெறுப்பான உணர்வுகள் வரப்படும் பொழுது உடலை வெறுக்கின்றோம்… வேதனையை வளர்க்கின்றோம்.
3.இதனால் நிம்மதியற்ற நிலைகளில் தான் நாம் வாழ வேண்டி வரும்.

ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியில் அழுக்குப்பட்டு விட்டால் கண்ணாடியின் அழுக்கைத் துடைத்தால்தான் நம்முடைய உருவத்தைக் காண முடியும்.

இது போன்று பிறருடைய தீமையின் உணர்வுகள் நமது ஆன்மாவில் பெருகி விட்டால் நம்மை எது இயக்குகிறது…? என்று அறிய முடியாதபடி நாம் பார்த்த உணர்வுகள் நமது உடலை இயக்கி நம்மை நாம் அறிய முடியாத நிலைகளாக ஆகி விடுகின்றது.

ஆகவே நம்மை நாம் எப்படி அறிய வேண்டும்…?

கண்ணாடியில் அழுக்குப் படிந்திருந்தால் நாம் எப்படிப் பார்த்தாலும் நமது முகம் தெரியாது. இது போன்றுதான் நமது ஆன்மாவில் அழுக்குப் படிந்து விட்டால் சிந்திக்கும் தன்மை இழக்கும் நிலை வருகின்றது.

1.கண்ணாடியில் படிந்த அழுக்கை நீக்கினால் நமது உருவம் தெளிவாகத் தெரிவது போன்று
2.நமது ஆன்மாவில் கலந்த அழுக்கை நீக்கித் தூய்மைப்படுத்த வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா. துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலிலுள்ள ஜீவான்மாக்கள் ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று நம் உடலுக்குள் இந்த உணர்வின் தன்மையைச் செலுத்த வேண்டும்.

அவ்வாறு நாம் செலுத்தப்படும் போது வேதனைப்பட்ட உணர்வின் தன்மை நமது ஆன்மாவிலிருந்து நீங்கி நமது ஆன்மா தூய்மை பெறுகின்றது.

ஆகவே நமக்குள் தெளிவான நிலைகள் வரும். சிந்திக்கும் தன்மை நமக்குள் வருகின்றது. தீமை அகற்றும் வல்லமை பெறுகின்றது. தீமைகள் புகாது தடுக்கவும் முடிகின்றது.

நீங்களும் ஒரு டாக்டர் தான். உங்களுடைய உயிர் தான் டாக்டராக இருக்கின்றது.
1.உயிரான டாக்டரிடம் உங்களுடைய உணர்வுகளைச் சொன்னீர்களென்றால்
2.அதற்குத் தகுந்த மாதிரி உயிரான டாக்டர் உங்களை இயக்கி உங்களை நல் வழிப்படுத்துவார்.

ஆனால் நாம் வேதனை வெறுப்பு என்ற உணர்வுகள் நம்மிடம் வரும் பொழுது உயிரான டாக்டரை மதிக்காதபடி இருந்து விடுகின்றோம்.

உயிர் நமக்கு நல்லது கெட்டது போன்றவைகளைக் காண்பிக்கின்றது. கெட்டது என்று தெரிந்து அதை உள்ளே விடாதபடித் தடுக்கவில்லை என்றால் என்னவாகும்…?

டாக்டர்கள் “ஒன்றைச் சாப்பிடாதீர்கள்” என்று சொல்லியிருந்தும் அதைச் சாப்பிட்டோம் என்றால் உடல் நோயாகும்.

இது போன்றுதான் நாம் ஒருவர் வேதனைப்படுவதைப் பார்த்து நல்ல மனிதர் இப்படி ஆகிவிட்டாரே…! என்று வேதனைப்படுகின்றோம். அப்பொழுது என்ன செய்கின்றோம்…?
1.வேதனையின் உணர்வுகள் நம்முள் நுழைவதற்கு ஏதுவாகத் திறந்து வைத்து விடுகின்றோம்.
2.இதனால் வேதனை உணர்வுகள் நம்முள் புகுந்து விடுகின்றது.
3.ஆகவே நாம் எப்பொழுதும் தீய உணர்வுகள் நம்முள் நுழையாத வண்ணம் கதவுகளை மூடி வைக்க வேண்டும்.

உதாரணமாக… காற்று பலமாக உள்ள பொழுது என்னவாகும்…? தூசி, நாற்றம் அனைத்தையும் அடித்துக் கொண்டு வரும். அப்படி வரும் பொழுது அவை அனைத்தும் நம்முள் நுழைந்துவிடும். ஆகவே நாம் கதவை மூடி வைத்திருக்கப் பழக வேண்டும்.

நாம் ஒரு உணர்வை மூக்கு வழி நுகரும் பொழுது அது நம் உயிரில் மோதுகின்றது. நமது கண் ஒன்றைப் பார்க்கும் பொழுது கருவிழி ருக்மணி என்ன செய்கின்றது? கவர்ந்த உணர்வை நமது உடலில் உள்ள விலா எலும்புகளில் உள்ள ஊனில் பதிவாக்கி விடுகின்றது. வேதனைப்பட்ட உணர்வை நுகர்ந்து நமது எலும்புக்குள் “ஊழ்வினை” என்ற வித்தாகப் பதிவாக்குகின்றது.
1.இவைகளெல்லாம் சுவாசித்தல் மூலம் நம்முள் செல்வதில்லை.
2.சுவாசத்தில் இல்லாமலே கருவிழி ஒன்றைப் பார்த்துப் படமாக்கி நம்முள் பதிவாக்கி விடுகின்றது.

எக்ஸ்ரே படம் எடுத்தால் உடனே படமாகக் காட்டுவதைப் போன்று கருவிழி பார்த்தவுடனே நமது உடலில் உள்ள விலா எலும்புகள் கடிகாரம் மாதிரி “பட…படவெனத் துடித்து” இழுக்கும். இழுத்து உடனே தன்னுள் பதிவாக்கிக் கொள்கின்றது.

இவ்வாறு பதிவான பின்னே கண்ணோடு சேர்ந்த காந்தப்புலன் அதனின்று வெளிப்படும் வேதனை உணர்வைக் கவர்ந்து அவ்வுணர்வை இயக்கக்கூடிய அணுக்களாக மாற்றுகின்றது.

வேதனையின் உணர்வுகள் நமது உடலுக்குள் வலுவானபின் அதன் அருகில் இருக்கக்கூடிய நல்ல அணுக்களைப் பலவீனப்படுத்தும். மேலும் அந்த நல்ல அணுக்களை உணவாக எடுத்துச் சாப்பிடத் தொடங்கும். பின் நாம் நலிவடைய வேண்டியது தான்.

எனவே இதை போன்ற நிலைகளைத் தடுக்க நாம் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வுகளை உயிர் வழி கவர்ந்து
2.நம் உடலை உருவாக்கிய நல்ல அணுக்களுக்கு உணவாகக் கொடுக்க வேண்டும்.
3.இவ்வாறு நாம் செய்துவர நாம் அனைத்துத் தீமைகளிலிருந்தும் விடுபட முடியும்
4.மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து வாழ முடியும்.