கணவன் மனைவி என்ற நிலை இல்லாது ரிஷித் தன்மை அடைய முடியாது

கணவன் மனைவி என்ற நிலை இல்லாது ரிஷித் தன்மை அடைய முடியாது

 

பூரண நிலவாக இருக்கும் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நாம் பெறுதல் வேண்டும்.
1.ஏனென்றால் அதிலே எதுவும் இருள் சூழாது… எதுவும் அதை அடக்கிட முடியாது.
2.எத்தகைய விஷத்தன்மை வந்தாலும் அது ஒளியின் சுடராக மாற்றிக் கொண்டே இருக்கும்.

அதன் அரவணைப்பில் வந்த ஆறாவது அறிவை ஏழாவது நிலை பெற்ற சப்தரிஷி மண்டலம்… அதைக் கவர்ந்து உணவாக எடுத்து என்றும் பதினாறாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.

மனிதன் ஆன பின் கடைசி நிலை பூரண நிலா என்ற நிலைகள் கொண்டு பூரண ஒளிச்சுடராக மாறுவது என்பது… மனிதன் எண்ணத்தால் கவர்ந்து உணர்வின் தன்மை ஒளியாக மாற்றிடும் நிலை. அந்த நிலையை நாம் பெறுதல் வேண்டும்… அனைவரும் அதைப் பெற முடியும்…!

அகண்ட அண்டத்தில் எல்லையே இல்லாத இடத்தில் விரிவடைந்த நிலையில் ஏகாந்த நிலைகள் கொண்டு எதனையும் அடக்கி உணர்வினை மகிழ்ந்து செயல்படும் நிலையாக நாம் பெற முடியும்.

அது தான் ஏகாதசி என்பது. ஏகாந்த நிலைகள் கொண்டு பத்தாவது நிலை என்ற ஒளியின் உணர்வாக நிலையான சரீரமாக நாம் இருக்க முடியும்.

அன்று வாழ்ந்த அகஸ்தியனும் அவர் மனைவியும் போன்று நாமும் வாழ முடியும். அகஸ்தியன் தான் பெற்ற சக்தி எல்லாம் தன் மனைவிக்குக் கொடுப்பதும்… மனைவி அதனை ஏற்று கணவன் வழி நடப்பதும்… கணவனால் பெற்ற சக்தி மீண்டும் தன் கணவனுக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ணுவதும்… கணவன் மேலும் உயர வேண்டும் என்று அது ஏங்குகின்றது.

1.எங்கள் இரு மனமும் ஒன்ற வேண்டும்… அந்த உணர்வின் ஒளியை உருவாக்க வேண்டும் என்று இருவருமே இணைந்த நிலையில் செயல்பட்டார்கள்.
2.ஏனென்றால் ஆண் பெண் என்ற நிலைகள் இணைந்தவன் அவன் (ஆகஸ்தியன்). அது இல்லை என்றால் எதுவும் உருப்பெறாது என்ற உண்மையை உணர்ந்தவன்.

கல்லானாலும் தாவர இனங்கள் ஆனாலும் ஆண் நட்சத்திரத்தின் இயக்கமும் பெண் நட்சத்திரத்தின் இயக்கமும் இணைந்தால் தான் உருப் பெற முடியும் என்று இதையெல்லாம் அகஸ்தியன் உணர்ந்தவன்.

1.கணவன் மனைவியும் இரண்டறக் கலக்க வேண்டும்… பேரொளியைத் தனக்குள் பெற வேண்டும் என்று
2.27 நட்சத்திரங்களின் மின்னலின் சக்தியைத் தனக்குள் கூட்டி
3.மின்னல் தாக்கப்படும் பொழுது எப்படி இருள்கள் மாய்கின்றதோ ஒளியின் மின் அணுக்களாகப் பரவுகின்றதோ இதைப் போல
4.உடலின் உணர்வுகள் அனைத்தையும் அவன் தனக்கும் தன் மனைவிக்கும் சேர்த்து
5.இந்த உணர்வினை ஒன்றாக இணைத்து “மின்னணுக்களாக உடலில் உள்ள அணுக்களை மாற்றிடும் சக்தி பெற்றான்…”
6.துருவத்தை உற்று நோக்கித் தனக்குள் அந்த உணர்வுகளை நுகர்ந்து
7.மின் அணுக்களைத் தனக்குள் மாற்றி துருவ மகரிஷி ஆனான். தனக்குள் சிருஷ்டித்துக் கொண்டான்.

ஆனால் கணவன் மனைவி ஒன்று சேராது தனித்த நிலையில் கடும் தவம் இருந்து சக்தி பெறுவேன் என்றால் முனி என்ற நிலையைத் தான் அடைய முடியும்… மனைவி என்ற நிலை இல்லாது ரிஷி என்ற நிலைக்கு வர முடியாது.

திருமணமாகாத பெண்களும் கடும் தவம் இருக்கிறேன் என்று சொன்னால் உருப் பெறும் தன்மையைக் கருவாக உருவாக்க முடியாது.

1.கணவன் மனைவி எவர் ஒருவர் ஒன்று சேர்ந்து இந்த அருள் உணர்வுகளைப் பெருக்குகிறார்களோ
2.அவர்களே ஒளித் தன்மையாக உருவாக்க முடியும்.

உயிர் எப்படி உருவானதோ… அதே போல தன் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அனைத்தையும் உயிரைப் போன்றே உணர்வின் ஒளியாக அது மடியாது… தனக்குள் ஒளியாக மாற்றிடும் தன்மை பெற முடியும்.

அந்த நிலையை நாம் ஒவ்வொருவரும் பெறுதல் வேண்டும்.

“புலன் காத்தல் கற்பு” என்பார் வேதாள மாமகரிஷி

“புலன் காத்தல் கற்பு” என்பார் வேதாள மாமகரிஷி

 

அருந்துகின்ற நன்னீர் உடைய அழகிய ஒரு பொய்கை உள்ளது. அருமருந்து போல் தித்திக்கின்ற சிறப்புடைய அந்தக் குளத்தின் நீரை… அந்நீரின் தூய்மை கெடாத வண்ணம் பாதுகாத்தலே சிறப்பாகும்.

அந்த நன்னீர் பொய்கையைக் கண்டவுடன் அந்த நீரில் நமது ஆடைகளைச் சுத்தம் செய்வதற்குச் சிறப்புடையது என்ற எண்ணம் கொண்டிட்டால்… ஆடை தூய்மை பெறும்.
1.ஆனால் குளத்தின் நீர் தன்மை மாறு கொண்டுவிடும்.
2.அதன் தூய்மை கெட்டு அருமருந்தை விருந்தாக்கிடும் செயலும் அற்றுப்போகும்.

நீண்ட நெடும் அறிவின் தர்க்கத்திற்கே… “தர்க்கம் என்பது வளர்ச்சிப்படுத்திக் கொள்கின்ற நல்ல வாய்ப்பு…” என்றால் மிகையன்று.

சிறப்புடைய ஓர் காலகட்டத்தின் மன அசைவு நிலை… பாடத்தின் தன்மை கருத்தோவியமாக விளங்குதலினால்… காட்சிப்புலன் உலகோதய நடைமுறை ஆத்ம ஞானம் கூட்டிடும் சிறப்பு என்று சுருங்கக் கூறினாலும்… விளங்கிக் கொள்கின்ற தன்மையாக அதன் தொடரை இதில் உரைப்போம்.

நன்னீர் பொய்கை என்று உரைத்திட வந்ததே…
1.உயிராத்மா வலு வேண்டி உயர் ஞான முகிழ்விப்பில்
2.தன் உயிராத்மா சக்தியின் முலாமை வளர்த்துக் கொண்டிட வேண்டும் என்ற உத்வேக உந்துதல் தான்.

அந்த முயற்சியின் வித்து… அஷ்ட பேதங்கள் கூட்டிடும் “சிருஷ்டியின் உதயத்திலும்” அதே செயல் தன்மை “உயர் ஞான வளர்ப்பிலும்” உண்டு.

நெருப்பாகவும் நீராகவும் காற்றாகவும் நிலமாகவும் ஆகாயமாகவும் அமில குணத்தன்மைகளாகப் பால்வெளியில் படர்ந்து விளங்கிட்ட சக்தியின் சக்தியையே பஞ்சபூதங்களாகக் காட்டிட்ட அத்தன்மைகள்…
1.ஒன்று கலந்த உயிரணுவாக பரிணமித்திடச் செய்வது “அகங்காரம்” என்ற பேதம்.
2.இந்நிலையின் கூட்டுச் சுழல் தன்மையால் மனம் “எண்ணம்” என்ற பேதத்தைக் காட்டுகின்றது.
3.இதனினும் சூட்சும பேதமே “அறிவேனும் புத்தி”
4.ஆக ஓர் சிருஷ்டியின் அஷ்ட பேத குணங்களின் சங்கமத்தின் மூலம் தான் ஆத்ம நிலை ஐக்கிய ஜீவன் பெறுகின்றது.

இத்தன்மைகளின் மூலத்தையே பிரகிருதி (இயற்கையின் நியதி) என்பார் வியாச பகவான்.

“எத்தனை பேதங்கள் ஒன்றுபட்டு” அற்புதமான இந்த மனிதச் சரீரம் வாய்க்கப் பெறுகின்றது…? காலத்தின் தன்மையைத் தவறவிட்டால் அது தகுமா…?

இயற்கையின் சிருஷ்டியே பேதங்களாகப் பாகுபடுத்திக் காட்டிட வீரியத் தன்மைகள் கிடைத்தற்கரிய பாக்கியம் பெற்ற இந்த மானிட ஜென்மத்தின் சக்தி பெற்றிடும் வழி அறிந்தும்…
1.பஞ்சபூதங்கள் எனும் பரந்த பேரருள் செல்வத்தை மனிதன் தேடியே அலைந்து
2.அதைக் கூவி அழைத்தாலும் அது பருப்பொருளாகக் (கண்ணுக்குப் புலப்பட்டதாகக் கையில்) கிடைக்குமா…!

பஞ்சபூதங்களை இவனில் ஐக்கியப்படுத்திவிட்டு… ஒன்றில்லாமல் ஒன்று இல்லை என்றே பின்னிப் பிணைந்திட்டு… சுவாசத்தின் தன்மையாகச் சகலத்திலும் சகலமாகக் கலந்துள்ள சக்தியைத் தன்னுள்ளே ஈர்த்துக் கொண்டு வளர்வதில்… “தான் எத்தகைய பேதமும் உரைத்திட முடிந்திடாது…”

மகா ஞானியாக இருந்தாலும் இச்சுவாச அலை ஈர்ப்பில்… தன் ஆத்ம சக்தியைப் “பிறரைப் போற்றி அடிமை கொண்டிடும் பொழுது… பஞ்சபூதங்களே பேதங்கள் காட்டும்…”

இனி உயர் ஞான வளர்ப்பில் சிந்திக்கலுறும் மனித ஜீவன்… அஷ்ட பேதங்களை ஒன்றுபடுத்திடும் உயர்வான ஜெப அலையை ஈர்த்திடும் பொழுது… சரீரம் கொண்டிட்ட உணர்வுகள் பஞ்சேந்திரியங்களாகச் செயல்படும் காலத்தில்… அதி நுட்ப உணர்வுகள் கிளைத்தெழும் தன்மையை வளர்த்துவிடும் “காந்தப்புலம்…”
1.இங்கு தான் மனத்தின் பேதம்
2.புத்தி எனும் அறிவின் பேதத்தை நாடுகின்றதா…?

அன்று பஞ்சேந்திரியங்கள் கட்டவிழ்த்து ஓடும் ஓர் பிடிப்பின் தன்மைக்கு… அறிவின் ஆற்றலையே உண்டுவிடும் ஈர்ப்பில் அது செயல் கொள்கின்றதா…? என்ற வினாவிற்குப் “புலன் காத்தல் கற்பு” என்பார் வேதாள மாமகரிஷி.

பரிவு எனும் பேதம் கொண்டது நன்னீர் பொய்கை. ஆடை என்பது உலகோதயப் பிடிப்பு எனும் அதி ஆசை நிலை.

அந்த ஜெபநீரைப் பெற்றிடவே… பேரருள் செல்வமாக விளங்கிடும் அந்தப் பேரானந்தப் பெருநிலையை… அறிவு என்னும் தீட்சண்யம் கொண்டு விளங்கிச் சுடர்ந்திடும் அத்தன்மையை… மனிதன் உலகோதயப் பிடிப்பில் செயல் கொண்டு வாழ்ந்திடும் செயலின் நிலையே – நன்னீர் பொய்கையும்… அதிலே ஆடை சுத்தி செயல் தன்மையும்…!

தனக்குள் கட்டுக்குள் அடங்கி நிற்கின்ற பேத குணத்தன்மைகள் அது கட்டவிழ்ந்து ஓடும் செயல் நிகழ்வு புலன்கள் காத்திடாத் தன்மையாக உள்ளதே மௌடீக (மூடத்தனம்) நிலை.

கற்பு என்றிட்டால் சிற்றின்ப நிலை அடக்கும் தன்மையையே இன்றைய மனித மனம் உரைத்திடும். அது அல்ல…!

பஞ்சபூதங்கள் தன்னுள் செயல் கொண்டு… பஞ்சேந்திரியங்களான…
1.மனம் புத்தி அகங்காரம் என்ற சூட்சுமத் தன்மைகளைத் தன்னுள் தெளிவுபடுத்திக் கொண்டு
2.இயற்கையுடன் ஒன்றி வாழ்பவனுக்கு பேரின்ப நாட்டமன்றோ சாஸ்வதமாக நிலை பெற்று விளங்கிடும்.

இதையே கற்பு என்பர் மகரிஷிகள்.

இந்த உபதேசம் எளிதானதல்ல…!

இந்த உபதேசம் எளிதானதல்ல…!

 

பூமிக்குள் உருவாகும் தாவர இனங்கள் அனைத்திற்கும் உணவு எங்கிருந்து எப்படிக் கிடைக்கிறது…? என்பதை அறிய முற்படுகின்றான் அகஸ்தியன். அப்பொழுதுதான் பூமி துருவத்தின் வழியாக அதைக் கவர்கிறது என்று உணர்ச்சியால் அறிகின்றான்.
1.துருவத்தினை நோக்கி உணர்வினைச் செலுத்துகின்றான்
2.அது தாவர இனங்களுக்குப் போவதற்கு முன் இவன் நேரடியாக நுகரும் தன்மை வருகிறது.
3.இவனுக்குள் இருக்கும் சக்தியின் தன்மை அதை மாற்றி அமைக்கின்றான்.

மற்ற மண்டலங்களிலிருந்து வருவதை நட்சத்திரங்கள் பால்வெளி மண்டலமாக மாற்றி அதிலிருந்து வரும் துகள்கள் ஒன்றுடன் ஒன்று உராயப்படும் பொழுது மின்னல்களாக மாறி ஒளிக்கற்றைகளாகப் பரவி மற்றதுடன் இணைந்து விடுகின்றது… பல மாற்றங்கள் ஆகின்றது.
1.அகஸ்தியன் துருவத்தை உற்று நோக்கும் பொழுது அந்த நட்சத்திரத்தின் உணர்வுகளைப் பார்க்க நேருகின்றது.
2.அதை அவன் நுகர நேர்கின்றது. அவன் உடலுக்குள் அத்தகைய அணுக்கள் பெருக நேர்கின்றது.

கார்த்திகை நட்சத்திரத்தின் சக்தியும் ரேவதி நட்சத்திரத்தின் சக்தியும் அதிலிருந்து வரக்கூடிய துகள்கள் தூசியாக வரப்படும் பொழுது… வியாழன் கோளிலிருந்து வெளிப்படக்கூடிய கதிரியக்கமும் சந்திக்கும் பொழுது… அதைக் கண்ட பின் தாக்கி ஓடும் வேகத்தில் ஒன்றுடன் ஒன்று உராய்ந்து மோதி… அதிலே சிக்குண்ட நிலைகள் கொண்டு தான் துடிப்பு என்ற நிலையில் “ஒரு உயிரணு உண்டாகிறது…”

இந்த நட்சத்திரத்தின் இயக்கத்தில் தான் உயிர் உருவாகின்றது.
1.மின்னணு போன்று அது துடித்துக் கொண்டே இருக்கும் நமது உயிர்.
2.நுகரும் உணர்வைத் தான் அதே துடிப்பின் நிலை கொண்டு உடலாக மாற்றுகின்றது.

ஏனென்றால் எல்லாவற்றிலும்… செடி கொடிகள் அனைத்திலும் நட்சத்திரங்களின் இயக்கங்கள் உண்டு நட்சத்திரங்கள் இல்லாது எதுவும் இல்லை கல்லானாலும் மண்ணானாலும் அதிலே அது உண்டு.

கார்த்திகை நட்சத்திரம் ஆண்பால்… ரேவதி நட்சத்திரம் பெண்பால். ரேவதி நட்சத்திரத்தின் சக்தி அதிகமாகப் பெற்றிருந்தால் அந்த பாறைகள் வளரும் பெண்பால் என்று அந்தப் பாறைகள் வளர்ச்சியாகும்.

கார்த்திகை நட்சத்திரம் என்ற ஆண்பால் உணர்வுகள் பெற்றிருந்தால் அதனின் வளர்ச்சி குன்றியே தான் இருக்கும். செடிகளிலும் ஆண் செடி பெண் செடி என்ற நிலையில் உருவாகின்றது.

நமது உயிருக்குள்ளும் அத்தகைய நிலை உண்டு. கார்த்திகை நட்சத்திரம் ஆண் பால் என்றால் ரேவதி நட்சத்திரம் பெண்பால் ரேவதி நட்சத்திரத்தின் துகள்கள் அதிகமாக இருந்தால் பெண்ணாக உருவாக்கி மற்றொன்றைத் தன் இனத்தை உருவாக்கும் சக்தி பெறுகின்றது.

கார்த்திகை நட்சத்திரம் என்றால் அதில் ஆண் என்ற நிலையில் தான் இருக்கும். இவ்வாறு நட்சத்திரங்களின் உணர்வு கொண்டு ஆண் பெண் என்ற உணர்வுகள் உருப்பெறுகிறது. பெண்ணாக இருந்தால் கருவாக்கி தன் இனத்தை அதன் ரூபமாக உருவாக்கும் நிலை பெறுகின்றது.

இவையெல்லாம் இயற்கையின் நியதிகள் என்று நமது குருநாதர் தெளிவாக்குகின்றார்.
1.உங்களுக்குச் சுருங்கச் சொல்கின்றேன் பார்த்த நிலையோ ஏராளம்.
2.அதையெல்லாம் வடித்து உங்களிடம் சொல்ல வேண்டும் என்றால் உங்களுக்குப் பொறுமை பத்தாது…
3.அவ்வளவு காலம் உங்களால் உட்கார்ந்து இருக்கவும் முடியாது.

கேட்க வேண்டும் என்ற ஆர்வம் உங்களிடம் இருக்கும். அதே சமயத்தில் சிலருக்கு உடல் வலியும் இருக்கும்.
1.ஆனாலும் இதையெல்லாம் கேட்டு நுகரப்படும் பொழுது அவருடைய உடல் வேதனைகள் குறையும்.
2.முதலில் உட்கார முடியவில்லை என்று நினைத்திருப்பார்கள். இதை நுகர நுகர அந்த உடலில் இருக்கக்கூடிய வலிகள் நீங்குவதைக் காண முடியும்.
3.இருதய ஓட்டத்தின் துடிப்பு அதிலே அடைப்புகள் இருந்தால் இந்த உபதேசத்தைக் கேட்கக் கேட்க
4.இருதய ஓட்டத்தின் அடைப்புகளும் நீங்கும்… இதயம் சீராக இயங்கும்.

இந்த உபதேசம் எளிதானதல்ல…!

அகஸ்தியன் கண்டதை நமது குருநாதர் காட்டிய நிலையில் அதைக் கவர்ந்து உணர்வின் ஒலியாக வெளிப்படுத்தும் போது கேட்போர் செவிகளில் பட்டு இந்த உணர்வைக் கவர வேண்டும் என்று கண்ணின் பார்வையைச் செலுத்தப்படும் பொழுது நுகர்ந்து உயிரிலே பட்டு தான் உணர்வின் தன்மையே வருகின்றது.

அந்த உணர்வுகள் உங்கள் உடலில் சேர்க்கப்படும் பொழுது உடல் முழுவதும் சுழல்கின்றது. இதைச் சுழலச் செய்து
1.ஆதியும் அண்டத்தையும் அறிந்த அகஸ்தியன் உணர்வுகளை நீங்கள் எப்படியும் பெற வேண்டும்.
2.நஞ்சினை வென்று ஒளியின் சரீரமாக அவன் எப்படிப் பெற்றானோ அந்த நிலை நீங்கள் அடைய வேண்டும் என்பதற்குத்தான்
3.இதை உங்களிடம் உபதேசித்துக் கொண்டே இருக்கின்றேன் அடிக்கடி.

ஆனால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சில வித்தியாசம் இருக்கும் முழுமையும் சொல்ல முடியாது.
1.இன்று சொன்னதை நாளை அதனுடன் சிறிதளவே இணைத்து அதைச் சேர்க்க முடியும்.
2.கண்ட உண்மையின் உணர்வினை அந்தந்தச் சந்தர்ப்பத்திற்கு தக்கவாறு தான் உபதேசிக்க முடியும்… உங்களை நுகரச் செய்ய முடியும்
3.உயிர் உங்களுக்குள் ஜீவணுவாக மாற்றும் திறன் எதுவோ அதன் அளவு அங்கே மாறும்.

அகஸ்தியன் அருளாற்றலைப் பெற செய்வதற்குத் தான் இதைச் செய்வது.

அருள் வழியில் என்றும் வாழ்ந்திட அத்திரி மாமகரிஷியின் ஆசிகள்

அருள் வழியில் என்றும் வாழ்ந்திட அத்திரி மாமகரிஷியின் ஆசிகள்

 

“காசினி” என்று அழைக்கப்படும் பூமியின் நடு மையத்தில் ஆழ் உறைகின்ற நெருப்பானது… “ஈர்ப்பின் அலைபடுகின்ற பேதத்தினால் எதிர் மோதல் நிலைபெற்றுப் பொங்கிப் பிரவாகித்து (எரிமலை)… காசினியை விட்டு ஆசினி என அழைக்கப்படும் விண்ணை நோக்கி உயர்ந்து எழ.. மலை வாயின் வழி வழிவிட்டு அலைபடுத்தும் பேதத்தை நீக்கித் தன்னுள் சமன்படுகின்றது.

“ஆழ் உறையும் நெருப்பு” மலை வாயின் வழியே சொரிந்து வெளிப்படுத்துகின்ற செயலின் காரணம் “அலைபடுபேதம்…” (எதிர் மோதல் அலைகள்).

மனித மனத்தின் மாண்பு உலகோதய நடைமுறை ஈர்ப்பின் செயல் வசத்தில் வண்ணம் கொண்டு விளங்கிடும் மனக்கடல் அலையை
1.”உலகோதய நாட்டம்” எனும் மிகைப்பட்ட குணங்கள் (TENSION) அலைபடுகின்ற பேதத்தால்… அந்த அலைபடு பேதத்தை நீக்கிடவே…
2.காசினியின் நெருப்பு ஆசினியின் வழி ஓடி மலைவாயின் வழி சொரிதல் போல்
3.தெய்வீக நெறி நின்று வண்ண நிலை கொண்ட மனத்தின் பாங்கையே கேடுறுத்தும்
4.உலகோதயம் என்னும் அலைபடுபேதத்தைப் “பிடர் வழி போக்கிவிடு…”

எப்படி…?

“உந்துவிசை குணங்கள்” (தியானத்தின் மூலம் உந்தி எடுக்கக்கூடிய நல்ல எண்ணங்கள்) எண்ணியது எண்ணி ஆங்கு நிகழ்த்தப் பெறும் செயல்திறத்தால்
1.எடுக்கப்படும் உயர் குணத்தன்மைகள்… கொடுக்கப்பெறும் நற்குணங்களின் பிடர்தல் எனும்… “உந்துவிசையின் வழி”
2.மனதினை அலைக்கழிக்கின்ற அந்தப் பேதங்களைப் போக்கும்… சமன்படுத்தும்.

போகும் என்பது செயல்வழி போக்கும் என்பதே “முயற்சி வழி…”

ஆனால் சமன்படுத்தாதபடி… அலைபடு பேதத்தின் செயல்வழியாய்ச் சென்றிடுங்கால்… அலை கடலில் துடுப்பற்ற படகு தத்தளிக்கின்ற நிலைக்கு… அந்தந்தக் குணங்களின் ஆவேச உந்துதல் தன் வழியில் பற்றி இழுத்து நல்ல குணங்களைக் கேடுறுத்தும்.

ஆகவே… படகை (வாழ்க்கையை) நீ எங்கு செலுத்திட விரும்புகின்றாயோ அந்த இடத்திற்குச் செலுத்திட
1.“முயற்சி எனும் துடுப்பிட்டு” அலையைத் தணிவாக்கி
2.விரைந்து செலுத்தப்படுகின்ற தன்மையில் நிலை பெற்று நின்று வாழ்ந்திட எமது ஆசிகள்… அத்திரி மாமகரிஷி…!

“அகஸ்தியனின் முழு ஆற்றலையும்… நீங்கள் பெறும் சந்தர்ப்பம்”

“அகஸ்தியனின் முழு ஆற்றலையும்… நீங்கள் பெறும் சந்தர்ப்பம்”

 

27 நட்சத்திரங்களும் ஒன்றுக்கொன்று எதிர் நிலையாகி தூசிகளாகக் கலந்து வரப்படும் பொழுது உராயும் நிலையில் அதிர்வுகளாகி மற்றதோடு கலந்து தூசிகளாக மாற்றி விடுகின்றது.

பல பல வர்ணங்களும் பல பல நிலைகளை உருவாக்கும் துகள்களாக மாற்றி விடுகின்றது.
1.அதைச் சூரியன் எவ்வாறு எடுத்து வைத்துக் கொள்கின்றது என்பதையும்
2.அதை அகஸ்தியன் எப்படி கண்டான் என்பதையும் “நீ உற்றுப் பார்” என்றார் குருநாதர்.

அடிக்கடி மின்னலைப் பார் என்று சொல்வார்… பார்த்தால் கண் போய்விடுமே என்று எனக்கும் அவருக்கும் சண்டை வரும். பின் அந்த மின் அதிர்வுகளை உற்றுப் பார்க்கும் பொழுது மற்றதுடன் எப்படி ஊடுருகின்றது…? என்பதனை அறிந்தேன்.

முதலிலே பயந்தேன்…
1.பின் அவர் சொன்ன முறைப்படி எடுக்கப்படும் பொழுது அது எப்படி அடங்குகின்றது
2.உன் உடலுக்குள் இருக்கும் அணுக்கள் எப்படி அதைப் பெறுகின்றது…? அதைப் பெறக்கூடிய தகுதி நாளடைவில் வரும் பொழுது
3.நீ அதை பெற முடிகின்றது என்று குருநாதர் உணர்த்துகின்றார்.

துருவ நட்சத்திரமாக இருப்பதும் இதன் வழி தான்.

பல மின்னலின் ஒளிக்கற்றைகளைத் தனக்குள் பெருக்கிப் பெருக்கி உயிரின் துடிப்பு எப்படி மின்னலால் நட்சத்திரங்களால் உருவானதோ அதைப் போன்று
1.பல நட்சத்திரங்களின் உணர்வுகளை நுகர்ந்து நுகர்ந்து உடலுக்குள் இருக்கும் அணுக்கள் ஒளிக் கதிர்களாக மாற்றிய அகஸ்தியன்
2.உயிருடன் ஒன்றி அவன் நிலை கொண்டு உள்ளான் துருவ நட்சத்திரமாக.

அந்த எல்லை அடைய வேண்டும் என்றால் அகஸ்தியன் தாய் கருவிலே சந்தர்ப்பத்தால் அவன் எவ்வாறு பெற்றான்…? அதன் வழியில் எப்படி வளர்ந்தான்…? என்ற நிலையைத் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றார்.

ஏனென்றால் தாவர இனங்கள் மாறுவதும் உடலான பிற்பாடு வளர்ச்சிகள் எப்படி வருகிறது…? என்பதையும் ஒவ்வொரு இடங்களுக்கும் அது அழைத்துச் சென்று அந்த உணர்வைக் காணும்படி செய்தார்.

விஷத்தை ஒடுக்கும் சக்தி உடல் பெற்ற பின் தாவர இனங்களுக்குக் கிடைத்து அதே தாவர இனம் மனிதனைக் காக்கும் நிலை வருகின்றது மனிதனை காக்கும் நிலையானாலும் அந்த உணர்வுக்குள் நுகர்ந்தது அனைத்தும் கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்குக் (அகஸ்தியனுக்கு) கிடைக்கின்றது.

1.உங்களிடம் இப்பொழுது சொல்கிறேன் என்றால் எனக்கு குருநாதர் இதையெல்லாம் காட்சியாகக் காட்டினார்.
2.நாம் இப்போது சொன்னதை நீங்கள் எடுத்துக் கொண்டால் அந்த அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்கும் பொழுது
3.அகஸ்தியன் கண்ட பேருண்மைகளை நீங்களும் காண முடியும். அது விளையும் போது பிறவி இல்லா நிலையும் அடையலாம்.

அதற்கே உங்களுக்குள் இதைப் பதிவாக்குகின்றேன்

நீங்கள் நினைவு கொண்டு அதனை வளர்த்துக் கொள்ளுதல் வேண்டும். அதைப் பெற்று மனிதனுக்கு பின் பிறவியில்லா நிலை அடைந்த அருள் மகரிஷியின் உணர்வை நுகர்ந்து அதை உருவாக்குதல் வேண்டும்.

அகஸ்தியன் சிறு குழந்தையாக இருக்கும் பொழுது இவன் உற்றுப் பார்த்த நிலையில் அந்த நட்சத்திரங்களில் வெளிப்படும் மின்னல்கள் ஒன்றுடன் ஒன்று தாக்கும் பொழுது
1.அந்த ஒளிக் கதிர்களை இந்தக் குழந்தையும் பார்க்கின்றது நுகர்கின்றது
2.உடல்களிலே சேர்த்துச் சேர்த்து அந்த அணுக்களின் தன்மை விஷத்தை ஒடுக்கிடும் அணுக்களாக மாறுகின்றது.

அந்த வழியில் வளர்ந்தவன் தான் மூன்று வயதாகும் பொழுது காட்டிற்குள் நடந்து சென்றாலே இவன் பின் ஒரு கூட்டமே செல்கின்றது. அவன் எண்ணத்தால் செல்லும் பொழுது இளமைப் பருவத்தில் பாம்போ தேளோ மற்ற விஷ ஜந்துகளோ யானைகளோ, புலிகளோ மற்ற கொடூர மிருகங்களோ இவனைக் கண்ட பின் அப்படியே நின்று விடுகின்றது.

ஏனென்றால் அதில் உள்ள விஷத்தின் இயக்கம் தடைப்படுவதனால் செயலற்ற நிலையாகின்றது.

1.அகஸ்தியன் உடலிலிருந்து வரக்கூடிய விஷத்தை ஒடுக்கிடும் மணங்களை நுகர்ந்தால் அந்த மிருகங்களின் அணுக்கள் ஒடுங்கி
2.இவனைத் தாக்குவதிலிருந்து தன்னைப் பாதுகாக்கும் நிலைகளிலேயே அமிழ்ந்து விடுகின்றது.
3.இவன் அங்கிருந்து சென்ற பின் சிறிது நேரம் கழித்துத் தான் மூச்சுகளை எடுத்து… பின் செல்கின்றது என்பதனை
4.அகஸ்தியன் வாழ்ந்த காலத்தில் எப்படி நடந்து கொண்டான் என்ற நிலையைத் தெளிவாகக் காட்டுகின்றார் குருநாதர்.

நமது குரு இந்த உண்மையின் இயக்கங்களை உணர்ந்தார். பின் எனக்குள் அதைப் பாய்ச்சி நீ எதைச் செய்ய வேண்டும் என்று எம்மைத் தெளிவாக்கிக் கொண்டே வருகின்றார்.

அகஸ்தியன் சென்ற பாதைகளில் அவன் பாத நிலைகள் கீழே படிந்துள்ளது…
1.அந்த உணர்வுகளைப் பூமியில் இழுத்து வைத்துள்ளது.
2.அவன் எந்தெந்தப் பாதையில் எப்பொழுது சென்றானோ
3.அந்தப் பாதையில் செல்வோருடைய நிலைகளிலும் சிலருக்கு அந்த அற்புத சக்திகளும் கிடைத்துள்ளது.
4.அதன் உணர்வை நீ நுகர்ந்து காட்டுக்குள் செல்லும் பொழுது
5.அகஸ்தியன் பாதம் பட்ட இடங்கள் எல்லாம் எந்த நிலையில் இருக்கின்றதோ
6.அதே உணர்வுடன் நீ செல்லப்படும் பொழுது அந்த அருளை நீ பெறலாம்.

இப்படி அகஸ்தியன் சென்ற காட்டுப் பகுதிகளுக்கு எல்லாம் என்னை அலையும்படி செய்தார் குருநாதர்.

ஒரு கம்ப்யூட்டருக்குள் இயக்கத்தை ஊட்டியபின் அதனுடைய அலை வரிசையில் சென்ற பின் அதனுடன் தொடர்பு கொண்ட இயந்திரங்களை எப்படி எல்லாம் இயக்குகின்றதோ இதைப் போல குரு காட்டிய அருள் வழியில் என் உடலுக்குள் பதிவான பின் அகஸ்தியன் சென்ற பாதையில் என்னை அதே பாதையில் இந்த உணர்ச்சிகளைத் தூண்டி என்னை அங்கே போகும்படி செயல்படுத்துகின்றார்.

அந்த பகுதிகளுக்குச் செல்லும் பொழுதெல்லாம் அகஸ்தியன் எதை எதையெல்லாம் செய்தான் என்று காட்டுகின்றார் குருநாதர்

“பால் கடல் அமுது” எனும் ஆத்ம பொக்கிஷத்தை எடுக்கும் வழி

“பால் கடல் அமுது” எனும் ஆத்ம பொக்கிஷத்தை எடுக்கும் வழி

 

உஜ்ஜயினி மாகாளியம்மன் கும்பேஸ்வரி பிரதிஷ்டைக்குப் பின் பிருகு மகரிஷி “கதிரி” (மங்களூர்) சென்று செயல் கொள்ளும் முன்…
1.தன்னுடைய படைப்பின் வித்து செயல் கொள்ளப் போகும் காலத்தின் நியதியை ஞான நோக்கால் அறிந்து கொண்டு…
2.தீர்க்கதரிசன வாக்குகள் என்றே மூன்று குறிப்புகள் பதிப்பித்து அவற்றை ஓரிடத்தில் இட்டு… வாய்ப்பாகம் சிலை செய்து
3.உஜ்ஜயினி மாகாளிப்பட்டினம் உருக் கொள்ளும் எல்லைக்குள் அந்தப் பெட்டகத்தின் காப்பென பூமியினுள் புதைத்து வைத்து
4.நல் ஆக்கத்தின் வளர்ச்சிக்கு அது பிற்காலத்தில் பயன்பட வேண்டும் மானசீக ஆசி அருளி
5.தெற்கு திசை நோக்கி நிர்விகல்ப சமாதி எனும் செயல் கொண்டிடும் கதிரி எனும் இடத்தில்
6.செவ்வேள் எனும் சூட்சும ஆன்ம நேய வளர்ப்பு என்றே பக்குவம் கொண்டு
7.மண்டல சூட்சும செயலுக்குத் தன்னைத்தான் தெளிவுபடப் பொருந்திக் கொண்ட இடம் மூடுபத்திரி (கர்நாடகா).

பிருகு மகரிஷியின் அருள் சக்தி பெறுவோம்… பெற்று அவர் பதித்த வாக்குகளை அனைவரையும் பெறச் செய்வோம்.

மூவிரண்டு நிலை (ஆறு குணங்கள்) என்னும் நற்குண செயல்பாட்டையே மனமெனும் ஆழ்கிணறு – அதனுள் சுவை நீர் – தண்ணமாய் (ஒரு பக்கம் உள்ள பறை) ஒலிக்கும் அகப்பொருள் தின்மையாகக் (வலிமை) கொண்டிடும் உறுதி என்பார் வேதாள மாமகரிஷி.

மனக்கிணற்றின் நீர்… “எண்ணத்திற்கொப்ப” சுவை மாறு கொண்டிடும் இயல்பு கொண்டிட்டது. ஆழம் கண்டிட முடியாத அந்த மனக்கிணற்றினுள் “வண்ணமாய்… அழகிய ஒரு பொருளும் உண்டு.
1.அதுவே “பால் கடல் அமுது” எனும் நிலையாம் “ஆத்ம பொக்கிஷம்..”
2.அதனைப் பெற்றிடும் உறுதி… மூவிரண்டு முனை கொண்டிட்ட பொருள் பற்றிக் கொண்டிடல் வேண்டும்… அதுவே நற்குணங்கள்.

அதாவது… நற்குணங்கள் கொண்டு தான் ஆத்ம பொக்கிஷத்தை எடுக்க முடியும். கிணற்றில் விழுந்துவிட்ட வாளியைப் “பாதாள குறடு (கரண்டி)” கொண்டு எடுக்கின்றோம் அல்லவா.
1.அதுவே தன்மையாக ஒலிக்கின்ற அகப்பொருள்
2.அகப்பொருளைப் பற்றினால் ஒளி நிலை பெறுவது தன்னுள் சாஸ்வதம்.
3.“தனது உடலின் வால் தனைக் கண்டு மிரண்டு ஓடி” இடம் தேடி அலைகின்ற பூனை போல்
4.நம் மனதின் நிலை செயல் கொள்ளல் தகாது
5.அறிந்துணர்தல் என்ற “ஞானத்தைக் கொண்டு” நிலை நிற்றலே விவேகம்…!

இரத்தத்தை உறிஞ்சும் கொடிகள்

இரத்தத்தை உறிஞ்சும் கொடிகள்

 

காடுகளுக்குள் குருநாதர் எம்மை அழைத்துச் சென்று பல உண்மை நிலைகளை அறியும்படி செய்தார்.

புலி கொடூரமாக பல மான்களை அடித்து உட்கொள்கின்றது ஆனால் மானையே அதிகமாக அந்தப் புலி உட்கொண்டிருந்தால் அதனுடைய முதுமைப் பருவத்திலே உடலை விட்டுப் பிரியும் சமயம் அந்த உயிரான்மா மானினுடைய ஈர்ப்புக்குள் செல்வதையும் காட்டுகின்றார்.

அதே சமயத்தில்… புலி இறந்த பின்
1.புலியின் உடலை வளர்த்த அணுக்கள் அந்த உடலையே உட்கொள்கின்றது.
2.எதை எதையெல்லாம் இந்தப் புலி கொன்று விழுங்கியதோ அதனதன் அணுக்களின் தன்மையாக
3.உடல் உறுப்புகளில் உள்ள நிலைகள் அந்தப் புழுக்கள் அந்த உடலைச் சாப்பிடுகின்றது.

பின் இதிலிருந்து வரக்கூடிய உணர்வின் தன்மை நாற்றம் ஆகின்றது. அது ஆவியாக மாறுகின்றது… சூரியனுடைய காந்தப் புலனறிவு கவர்கின்றது… அலைகளாகச் செல்கின்றது.

பல தாவர இனங்களை புசித்த உயிரினங்களின் உடல்களை இது உட்கொண்டதால் அத்தகைய உணர்வின் தன்மை கொண்ட
1.அந்தப் புலியின் உடலிலிருந்து வெளிவரும் வாசனைகளைச் சூரியன் கவர்ந்து கொண்ட பின்
2.இதே போல இன்னொரு பாம்பு மடிந்திருந்து அதனுடைய உணர்வின் அலைகள் வெளி வருவதைக் (அந்த மணத்தை) கண்டபின்
3.அது வலுவான நிலையாக இருப்பதால் புலியின் உணர்வலைகள் அஞ்சி ஓடுகின்றது.
4.அது ஓடும் பாதையிலே ஒரு விஷச் செடியிலிருந்து வெளிப்படும் மணத்துடன் இது மோதினால்
5.கிறு…கிறு… என்று சுழற்சியின் தன்மை அடைகின்றது.

சுழற்சியின் தன்மை அடைந்தபின் மூன்றும் இரண்டறக் கலந்து அது ஒரு ஒரு தாவர இன வித்தாக… கொடியாக மாறுகின்றது. பூமியின் ஈர்ப்பிலே பட்டப்பின் கொடியின் தன்மை அடைகின்றது.

அந்தக் கொடி மூன்று உணர்வும் (புலி+பாம்பு+விஷச்செடி) கலந்து உருவானது. அந்தந்த உடலில் இருந்து வெளிப்படக்கூடிய அழுகிய மணங்களைச் சூரியன் எடுத்துக் கொண்ட எந்த உணர்வின் தன்மை பெற்றதோ “அந்த மணத்தின் தன்மை கொண்டு கொடியின் தன்மை அடைகின்றது…”

உடல்கள் இறந்த பின் பெற்ற உடலில் இருந்து வெளிப்பட்ட உணர்வலைகளைச் சூரியன் எப்படிக் கவர்ந்து வைத்துள்ளது…? நீ தெளிவாகத் தெரிந்து கொள்…! என்று குருநாதர் காட்டுகின்றார்.
1.அதைப் பார்ப்பதற்குண்டான சக்தியை கொடுத்தார். அனுபவரீதியிலே தெரிந்து கொண்டது.
2.இதை எல்லாம் புத்தகங்களிலே பார்ப்பது மிகவும் கடினம்.

அப்படிக் கொடியாக வளர்ந்த நிலையில் ஜீவனுள்ள உயிரினங்கள் இதன் அருகில் வந்தால் அலுங்காமல் அது நகர்ந்து வரும்.
1.பாம்பு விழுங்குவது போன்று அந்தக் கொடி சுற்றிவிடும்…
2.உடலில் இருக்கும் சத்தை எல்லாம் உறிஞ்சி விடும்… பின் மரணம் தான்.

சந்தன மகாலிங்கம் என்ற குகைப் பகுதிகளில்… அங்கே புலியினங்களும் பாம்பினங்களும் ஜாஸ்தி உண்டு. அத்தகைய கொடிகள் உண்டு பெரிய விலங்குகள் இறந்த பின் பச்சிலை மூலிகைகளும் பல நிலைகள் உண்டு அஸ்ஸாம் காடுகளிலும் இதைப் போன்று உண்டு.

மிருகங்களும் மற்ற உயிரினங்களும் இதைப் போன்று மடிந்த நிலைகள் கொண்டு சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்ப உயிர் வெளியே செல்லும் பொழுது அதற்கு ஒத்த மற்ற உடலுக்குள் செல்கின்றது… உடல் பெறுகின்றது.

ஆனால் இறந்த உடலில் இருந்து கெட்ட மணம் வெளி வந்த பின் சூரியன் எடுத்துக் கொண்டால் அவைகள் கலந்து கொடியின் தன்மைகளாக செடியின் தன்மைகள் எப்படி மாறுகிறது…? அந்தச் செடி கொடிகள் இரத்தத்தை உறிஞ்சும் தன்மை எப்படிப் பெறுகின்றது…? என்பதை அங்கே காட்டுகின்றார்.

தீமை வருகின்றதே…! என்று சங்கடப்படக் கூடாது

தீமை வருகின்றதே…! என்று சங்கடப்படக் கூடாது

 

1.உன்னைக் கண்டு திகைப்பின் வசம் ஆழ்த்திடக்கூடாது
2.இது வலைபடு பாசமாக உட்கிடந்த நிலை…! அந்நிலை நீக்கிடவே தவத்தின் கடுமை காட்டினோம் (அத்திரி மாமகரிஷி சொன்னது)

அஞ்சற்க…! யாரும் காண முடிந்திடாத நிலையே உமக்குக் காணும் வாய்ப்பு கிடைத்தது. “அதிபாசம்” கொண்டு செயல்படுகின்ற உலகோதய வாழ்க்கை முறை வலையினைப் போன்றது. அவ்வலை பாசமாக உட்கிடந்த நிலை.

உலகப் பிடிப்பினில் அகப்பட்டே விடுபடாத் தன்மையாக இருந்திட்டாலும்
1.பாசத்தின் வலையையே பாதுகாவல் எனப் போர்த்திக் கொண்டிட்டவன்
2.அவனுள் கிளர்ந்து எழுகின்ற அதி ஆவேச உணர்வுகள் நச்சு அரவம் (நஞ்சு கொண்ட பாம்பு) போல் தோற்றம் காட்டி…
3.தான் எங்கு வளர்ந்து… அந்த வளர்ச்சியின் முதிர்வை அடைந்ததோ…
4.சுவரில் எறிந்த பந்து திரும்பி வருவதைப் போல் அந்தக் குண நிலைகள் அவனையே தீண்டிட வருகின்றது.

ஆகவே…
1.வலைக்குள் விழிப்புடன் இருப்பது வேறு…
2.அதுவே (வலை) சாஸ்வதம்…! என எண்ணிப் பாதுகாவல் எனக்கொண்டு கிடந்து உறங்குகின்ற செயல் வேறு.

உலக வாழ்க்கையின் சுழற்சியில் சிக்கி அகப்பட்ட தன்மையையே உறங்குகின்ற செயல் என்று உரைக்கின்றோம்.

உலகோதய நிலையாக… அதன் பிடிப்பில் அகப்பட்டுவிட்ட மனது என்ன செய்யும்…?
1.தீதெண்ண குணங்கள் என்னும் நச்சரவம் தீண்டிட வருகின்றதே என்று
2.சங்கட உணர்வுகளை மேன்மேலும் வளர்க்கும் நிலை… அந்த நச்சரவத்திற்கே பால் வார்த்திடும் செயலினை ஒத்தது.

அந்தத் தீதெண்ண நச்சரவத்தை வளர்த்த செயலில்… அது மீண்டும் தீண்டிட வருங்கால்… பாசமெனும் பிடிப்பின் நிலையை மனிதன் “உலகோதய நாட்டம்” என்று எங்ஙனம் பலப்படுத்துகின்றான் தெரியுமா…?

அதிபாசம் எனும் உணர்வுகளின் தன்மையை…
1.ஒளியும் காற்றும் உள் சென்றிடாத் தன்மைக்குப் பலப்படுத்திடும் சுவர் எடுத்து…
2.அதையே சுகம் என அதனுள் கடந்து உறங்கிட்டாலும்…
3.நச்சரவம் வாழ்ந்திடும் புற்று… “எது தனக்குப் பாதுகாவல்” என எண்ணி மனிதன் உலகோதய நாட்டத்தில் செயல் கொண்டிட்டானோ…
4.அந்த இடமே புற்றாகக் கிளைத்து… “நச்சுப்புற்றாக வளர்ந்து விடுகிறது…!”

ஆகவே… அதனுள் எழுகின்ற நச்சரவம் உன்னைத் தீண்டிடும் முன் உறக்கத்திலிருந்து விழித்துக் கொள்.
1.அந்த நிலையை விட்டு வெளிவந்து பார்
2.தெய்வத்தன்மை பெற்றிடும் சிறப்பு ஒன்று கிட்டிடும்.

நல்ல சந்தர்ப்பத்தை இழந்து விட்டால் மண்ணினுள் வாசம் செய்யும் பிராணியான எலி போன்று (காம விகார குணங்கள்) அதி பாசம் உட் சென்றிடவே வழி அமைக்கும்….!

இதனை உணர்ந்து நீ நட…!

உயிரே கடவுள்

உயிரே கடவுள்

 

காலயிலிருந்து இரவு வரை
1.நாம் எதையெல்லாம் பார்க்கின்றோமோ எதையெல்லாம் கேட்கின்றோமா எதையெல்லாம் நுகர்கின்றோமோ
2.இவை அனைத்தையும் நமது உயிர் ஓ…ம் நமச்சிவாய ஓ…ம் நமச்சிவாய என்று
3.நாம் எண்ணிய உணர்வுகளை அணுவாக மாற்றி ம்… என்று உடலாக மாற்றி விடுகின்றது.

ஏனென்றால் நமது உயிர் நம் உடலில் இயக்கச் சக்தியாக இருக்கின்றது நாம் நுகரும் உணர்வுகள் அனைத்தையும் அணுத்தன்மை பெறும் இயக்கமாக மாற்றி ம்… என்று உடலாக மாற்றி விடுகின்றது.

நாம் எண்ணும் எண்ணங்கள் எதுவோ அது ஈசனாக இருந்து உருவாக்குவதும் நாம் எண்ணும் குணங்களை இரையாக்குவதும் இறையின் உணர்வுகள் செயலாக்குவதும் என்ற நிலையில் நமது உயிரின் இயக்கங்கள் உண்டு.

நம்மை ஆள்வது யார்…?
1.நமது உயிரே ஆண்டவனாக இருந்து ஆளுகின்றது.
2.ஈசனாக இருந்து எண்ணியதை உருவாக்குகின்றது.
3.எண்ணியதை இயக்குவதும் உருவாக்குவதும் அதை ஆள்வதும் ஆண்டவனாக இருப்பதும் நமது உயிரே.
4.ஈசன் என்பதும் உயிரே
5.ஆண்டவன் என்பதும் உயிரே
6.இறைவன் என்பது நாம் எண்ணும் உணர்வுகளை இறையாக்குவதும் உயிரே.

இறை என்றால் எதன் குணத்தை எடுக்கின்றோமோ அதை இறையாக்கி உணர்வின் செயல் ஆகும் பொழுது அக்குணமே தெய்வமாகின்றது என்பதனை ஞானிகள் தெளிவாகக் கூறியுள்ளார்கள்.

உயிரின் இயக்கம் ஈசன் என்றாலும் இயக்கத்திற்குள் ஏற்படும் வெப்பம் விஷ்ணு… இயக்கத்தால் ஈர்க்கும் காந்தம் லட்சுமி என்று காரணப் பெயர் வைத்து நாமெல்லாம் அறிந்து கொள்வதற்கு இவ்வாறு செயல்படுத்துகின்றார்கள் ஞானிகள்.

இருந்தாலும் இன்று விஞ்ஞான உலகில் வாழுகின்றோம் ஆனாலும் அஞ்ஞான வாழ்க்கையே வாழ்கின்றோம் பக்தி என்ற நல்ல ஒழுக்கத்தில் வாழுகின்றோம் ஆனால் பக்தி என்றால் எதுவென்று அறியாத நிலையில் அஞ்ஞான வாழ்க்கை வாழ்கின்றோம்.

இயற்கை நியதிகள் எதுவோ அதன் வழி தான் என்று நாம் வாழுகின்றோம். இயற்கையின் சீற்றத்தில் இருந்து காக்கும் உணர்வுகள் பெற்ற மனிதன் ஆறாவது அறிவை நாம் சீராகச் செயல்படுத்தாது மீண்டும் தேய்பிறை என்ற நிலையில் வாழ்கின்றோம்.

அதை எல்லாம் மாற்றிடும் நிலையாக
1.நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அருள் ஞானிகளின் உணர்வுகளைச் சுவாசித்து
2.அருள் ஞானம் பெற்று அருள் வாழ்க்கை வாழ்ந்து உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியாக மாற்றி அழியாத நிலை பெற வேண்டும்.

வரும் வினைக்காக அஞ்சினால் அதிலே தான் சிக்குவோம்… மீளுவோம் என்ற நம்பிக்கை தான் வேண்டும்

வரும் வினைக்காக அஞ்சினால் அதிலே தான் சிக்குவோம்… மீளுவோம் என்ற நம்பிக்கை தான் வேண்டும்

 

வினைக்கு அஞ்சிடுவோர் வலைக்குள் உட்படுவோர் (சிக்கப்படுவோர்) ஆயினர். ஓர் சாதனையின் நிகழ்வே சகாப்தம் காட்டியது எனில்
1.ஆத்ம வலு கூட்டிடும் செயலில்… பெற்றுக் கொண்ட வலு
2.உலகினையே ஆட்டிடும் சித்தனாகச் செயல்படும் காரிய நிகழ்வுக்கு
3.அடிப்படையே “நம்பிக்கை தான்…”

எப்படி என்றால்
1.வெளியில் நிகழ்வுறும் சம்பவங்களால்… “எண்ணத்தின் நிலை கருத்தின் தெளிவை மாறுபடுத்திடும் என்பது” மக்களின் கணிப்பு
2.எண்ணத்தில் விளைந்திடும் செயல்களே… “நம்மைச் சுற்றி நிகழ்ந்திடும் சம்பவங்களாய் நடைபெறுதல் என்பது” மகரிஷிகளின் கணிப்பு.

அரைத்த நெல் மாவை வெளி வாசலில் உலர்த்திடும் பொழுது அந்த மாவைக் கரைக்க மழை வந்துவிட்டால் நம்மை அழைத்து உரைப்பது எது…?

மழை கரைத்திடும் மாவினை எடுப்பாயா…? அன்றே மழை பெய்யும் முன் அதை விரட்டி விடுவாயா…?

வேதாள மகரிஷி அன்று உரைத்த சொல்லில் இன்றைய உலகின் நடைமுறையில் தெளிந்து ஆட்கொண்டவர்கள்… ஆத்ம வலுவின் நம்பிக்கை கொள்பவர்கள்… கொள்ளப்படும் எண்ணங்கள் அரிதாகி வருகின்றது.

சூரசம்ஹார நிலை என்று காட்டியது மனத்தில் எழும் துஷ்ட குண சம்ஹாரம் தானே…!

உடலின் தாவு என்றிடும் செருக்கு மிகுந்து விட்ட கால நிகழ்வு… இடருகின்ற சிறு கல் அடலேறு போன்ற நடையை பிரளச் செய்திடில்
1.இடருகின்ற அந்தக் கல்லை நோவதில் பயன் என்ன…?
2.வலிமையான ஆத்ம வலுப்பெற்றவர் முன் மற்ற குணத்தின் செயல்கள் அனைத்தும் காற்றினிலே சருகு.
3.இடர் வராது இருக்கின்ற வழியைக் காண்பதே உயர்வாம்… “குணம் வளர்க்கும் ஞானத்தின் வலுவில் அன்றோ…!”

முள்முனை முள் எடுப்பதற்கே காப்பான் ஜெபம் வேண்டும் என்கிறோம். பட்ட நிலை சிறிது தான் என்றாலும்… அதனால் உண்டான “வேதனையின் வலிமை பெரிது என எண்ண வேண்டியதில்லை…”

“அகப்பேழையைத் திறந்து பார்…” என்று உரைத்த வேதாள மகரிஷி கூற்று கூற்றுபவன் எனக் கால வெள்ளத்தைத் தேக்கிக் காட்டிய முறையே சித்துக்களின் வளர்ப்பின் பலன்.