புலனறிவின் இயக்கங்கள் சாதாரணமானதல்ல…!

புலனறிவின் இயக்கங்கள் சாதாரணமானதல்ல…!

 

உதாரணமாக… “இந்த இடத்திற்குச் சென்றால் ஆபத்து” என்று சொன்னார்கள் என்றால் அதை எப்படியாவது “கொஞ்சம் பார்ப்போமே…” என்று நம்மைப் பார்க்கும்படி செய்கிறது.

சிறுவர்கள் அங்கே சண்டையிட்டுக் கொண்டிருந்தாலும் பெரியவர்களாக இருக்கக்கூடிய நாம் “அது என்ன…? ஏது…?” என்று வேடிக்கை பார்த்து நுகர்ந்து அதற்குப் பின் தான் ஐய்யய்யோ…! என்று விலகிச் செல்கிறோம்.

சண்டையிடுகின்றார்கள் என்று கேள்விப்பட்டவுடன் அதைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் தான் வருகின்றது.
1.சரி அது நடக்கிறது…
2.நாம் ஏன் அங்கே செல்ல வேண்டும்…? என்று யாரும் நினைப்பதில்லை.

ரோட்டிலே செல்கின்றோம் ஒரு விபத்து நடக்கின்றது அடிபட்டுக் கீழே விழுகின்றார்கள் உடல்கள் நசுங்கிக் கிடக்கின்றது…! அங்கே என்ன ஒரே கூட்டமாக இருக்கின்றது…? என்று கேட்கின்றோம்.

விபத்தாகி விட்டது அடிபட்டுக் கிடக்கின்றார்கள் என்று சொன்னால்… “அது என்ன…?” என்று தான் பார்த்துவிட்டு வந்து விடுவோமே என்று செல்வோம்.

பய உணர்வுடன் உற்றுப் பார்ப்பார்கள்.
1.அந்த உடல் எப்படி நசுங்கியதோ அந்த உணர்வு இங்கே வந்து விடுகின்றது
2.இரவு தூக்கத்தில் பார்த்தால் எங்கேயோ வண்டியில் போகிற மாதிரி இருக்கிறது… என்னை நசுக்கி அமுக்குகின்ற மாதிரி இருக்கின்றது.
3.அன்றைக்குப் பின் என்னால் சரியாகச் சாப்பிட முடியவில்லை என்றெல்லாம் புலம்புவார்கள்

நான்கு நாளைக்கு இப்படி இருக்கின்றது இது எல்லாம் தெரிகிறது என்றாலும் இப்படித்தான் நம்மை இயக்குகின்றது.

அதே உணர்வு அதிகமான பின் அந்த பயத்தினால் மனிதன் சிந்தனை இழந்தவர்களாக ஆகிவிடுகின்றார்கள் ஏனென்றால் “புலனறிவால் அறிந்தும் கூட… பலவீனமான நிலைகள் இங்கே இயக்கப்படுகிறது….”

அடிபட்டான் என்ற உணர்வை நுகர்ந்தால்
1.அது நமக்குத் தீங்கு என்று நினைத்தாலும் அதை விடுவதில்லை
2.அதை நுகர்ந்து பார்க்கும்படித் தான் செய்கின்றது.

“நம்மை அறியாமலே” இந்த உணர்வுகள் அதை நுகர்ந்து பார்க்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளக்கூடிய விருப்பம் தான் வருகின்றது. தெரிந்தாலும் அந்த உணர்வுகள் உடலுக்குள் சென்ற பின் தான் தெரிய முடிகின்றது.

அவன் பயத்தால் எப்படித் துடித்தானோ நுகர்ந்த உணர்வுகள் பய உணர்ச்சிகளை நம் இரத்தத்தில் கலந்து மற்ற உடல் அணுக்களுக்குள் சேர்த்த பின் அந்த மனிதன் எப்படிப் பதட்டம் அடைந்தானோ அதுவும் நம் நல்ல அணுக்களில் கலந்து கண்ட பின் பய உணர்ச்சிகள் ஆகிவிடுகின்றது

மீண்டும் அந்தப் பய அலைகள் வந்தால்
1.யாராவது ஒருவர் சும்மா படுத்து இருந்தாலும் கூட
2.அதைப் பார்த்தால் ஒரு பிரேதமோ என்று பயம் வரும் செத்துப் போய் விட்டானா…? என்ற பயம் வரும்.

வீட்டிற்குள்ளே இருந்தாலும் கூட பார்த்தால் அந்த நினைவுகள் வந்து கொண்டே இருக்கும் படுத்திருந்தாலும் இந்த நினைவுகள் வரும்.

ஆக நாம் எதை அறிந்து கொண்டோம்…?

1.இந்த உடலில் நாம் எதைப் பதிவு செய்தோமோ
2.இந்தப் புலனறிவு தான் நம்மை இப்படிச் செயல்படுத்துகின்றது.

இதையெல்லாம் நாம் உடனுக்குடன் தூய்மைப்படுத்திப் பழகுதல் வேண்டும் மகரிஷிகள் உணர்வை எடுத்து வலுவாக்கி ஆத்ம சுத்தி செய்து தடுத்துப் பழகுதல் வேண்டும்.

உலக நடப்புகளைத் தெரிய வேண்டும் என்று விரும்பினாலும் அதை நாம் உடனுக்குடன் அருள் மகரிஷிகளின் உணர்வு கொண்டு தூய்மைப்படுத்தினால் தான்
1.நம்முடைய நல்ல குணங்களும் காக்கப்படும்
2.நம்முடைய உடல் உறுப்புகளும் காக்கப்படும்
3.நம்முடைய மனதும் அமைதிப்படும்.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொண்டு… தெளிந்த நிலைகள் கொண்டு இனி வழி நடப்பதே நல்லது.

“மனித மகசூலான ஞான ஒளியைத்தான்…” நம் சப்தரிஷிகள் காணத் துடிக்கின்றனர்

“மனித மகசூலான ஞான ஒளியைத்தான்…” நம் சப்தரிஷிகள் காணத் துடிக்கின்றனர்

 

ஞானத்தின் வழி செல்லும் போதனை முறையையும்… தியான வழிபாட்டின் முறையையும்… மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொல்வதின் நிலை என்ன…?

இந்தப் பூமி தோன்ற இந்தப் பூமியின் ஜீவன் பெற அஜ்ஜீவனின் வளர்ச்சியினால் மனித ஆன்மாக்கள் தோன்ற…
1.இவர்கள் சொல்லும் “இயற்கைச் சக்தி…” என்றாலும்
2.இதற்கு மூல சக்தி வளர ஒரு சக்தி தேவை.

அச்சக்தி அமிலக்கூட்டு நிலை பெற்றோர்கள் நம் சப்தரிஷிகளின் செயல் வடிவம்தான் நம் பூமியும்… பூமியில் வளர்ச்சியான எல்லாமுமே…!

பல கோடி ஆண்டுகளாக எண்ணிலும் கருத்திலும் எடுத்துச் சொல்ல முடியாத மாற்றங்களின் செயல் திறனில் வழி வந்த நிலையில்
1.மனித இனம் தோன்றி மனித இன குண அமில வளர்ச்சியிலிருந்து தான்
2.மீண்டும் மீண்டும் சகல சக்திகளையும் சக்தி வழி பெறச் செயலாக்க முடியும் என்ற உண்மையின் தத்துவத்தில்…
3.தான் வடித்த வடிவான “மனித மகசூலான ஞான ஒளியைத்தான்…” நம் சப்தரிஷிகள் காணத் துடிக்கின்றனர்.

தன் செயலின் பலன் தான் மனித இனம். இந்த மனித இனம் தோன்றி வளர சப்தரிஷிகளின் செயல் காலத்தில் பல கோடி ஆண்டுகள் ஆகிவிடுகின்றன.

இவ்வினம் தோன்றி அவ்வினத்தின் ஒளியை எடுத்தால் தான் மீண்டும் மீண்டும் இவ்வின வளர்ச்சிக்கு அவர்கள் பயிர் செய்ய முடியும். செய்த மகசூலில் வரும் பயிரை எல்லாம் உணவாக உண்டு கழித்து விட்டால்
1.மீண்டும் பயிர் செய்ய விதை நெல் தேவைப்படுகின்றது.
2.அவர்கள் செய்த பயிருக்கு மகசூல் பெற்று அந்த மகசூலில் மீதமான விதை நெல் இருந்தால் தான் மீண்டும் மகசூல் காண முடியும்.
3.இதன் அடிப்படையின் நிலையை ஒத்துத்தான் நம் சப்தரிஷிகளின் நிலையும் மகசூலைக் கண்டு
4.அதிலுள்ள பலனால் மீண்டும் மீண்டும் பயிர் செய்யச் செயல் புரியும் நிலை தான் “இங்கே உணர்த்தும் நிலை…!”

இதனை ஒத்துப் பல நிலைகளில் செயல் புரிந்து வருகின்றனர் சப்தரிஷிகள்.

இந்த மனிதக் கரு தோன்றி இது நாள் வரை அவர்களின் ஒளி வட்டத்தில் கலக்கும் நிலை கொண்ட ஆன்மாக்களின் வளர்ச்சியைக் காண பல காலமாகப் பல செயல்களைப் புரிந்து வருகின்றனர். ஆனால்
1.இம்மனித ஆன்மாக்களின் எண்ண வாழ்க்கையில்
2.அவ்வொளி ஞானத்தின் சித்து நிலை பெறப்படுவது மிகவும் குறைந்தே வருகின்றது.

தன் ஞான வளர்ச்சியை உலகுக்கு உணர்த்தத்தான் அந்தந்தக் கால கட்டத்தில் அச்சப்தரிஷிகளே தோன்றி அக்கால மாற்றத்தின் சில நிலைகளைச் செயல் புரிந்து அவர்கள் நல் ஒளியின் ஆத்மாக்களை எடுத்ததின் நிலை தான் நாம் இன்று கேள்விப்படும் “பல மகான்கள்” தோன்றிய நிலை எல்லாம்.

அந்த மகான்கள் தோன்றியதன் நிலை எல்லாம் தான் வளர்த்த பூமியின் சக்தியிலிருந்து தன் சக்தியின் பலனைப் பெற்றால் தான்… மீண்டும் சப்தரிஷிகளுக்கு அவர்களின் செயலின் மண்டலம் தோன்றி வளர்ந்து “ஜீவனை வளர்க்க முடியும்…”

சூரியனைச் சுற்றியுள்ள நாற்பத்தியேழு மண்டலங்களில் நம் பூமியில் மட்டும் இன்று மனித ஆன்மாக்கள் வாழ முடிகின்றது. இன்று வாழும் இதே நிலை இக்கலியின் மாற்றத்தில் அழியப் பெறுவதனால் “மீண்டும் மனித ஜனனம் தேவை…”

காற்று மண்டலமே விஷக் கோளமாகச் சுழலும் இந்தக் கலியில் இதன் வளர்ச்சி நிலையின் மாற்றத்தின் பொழுது மனிதன் தன்னைத் தானே அறிந்து கொள்ளச் செயலாக்கியுள்ள இந்த விஷக் குண்டுகள் வெடிப்பதற்கு முதலிலேயே இம்மனிதனின் ஞானம் ஒளி பெற்றால் அச்சப்தரிஷிகளின் ஒளிக் கூட்டு அதிகப்படும்.

உலகமே விஷமாகி ஜீவராசிகள் அனைத்துமே மடியப் போகின்றன என்றால் ஞானம் பெறுபவன் மட்டும் எப்படித் தப்புவான்…?

ஒரு பானை சாதம் வடிக்கின்றோம்.
1.அப்பானையில் இட்ட அரிசி எல்லாம் வெந்து சாதமாக ஆனாலும்
2.அதில் உள்ள கல் வேகுவதில்லை அல்லவா…!

பூமியில் உற்பத்தி செய்தது தான் அந்தப் பானையும் அக்கல்லும் விறகும் கரியும் அடுப்பும் எல்லாமே…! அதனதன் வளர்ச்சி கொண்டு விறகு எரிந்து உஷ்ணத்தைக் கக்கிச் சாம்பலாகின்றது.

சுட்ட சட்டி எந்த உஷ்ணத்தை ஏற்றி அடுப்பு எரிந்தாலும் அது தாங்கி நீரை அவியாக்கி அரிசி எல்லாவற்றையும் வேக வைத்தாலும் அந்தக் கல் மட்டும் எந்த உஷ்ணமாக ஏறினாலும் அப்படியே உள்ளது.

அதைப் போன்று ஒளியின் சக்தியால் பிம்பம் கொண்ட “நாம்” அச்சக்தி பிம்பத்தின் பிம்ப ஞானம் பெற்றால் இந்தப் பூமியின் மாற்றத்தினால்
1.நீரும் நெருப்பும் விஷ வாயும் நம் ஒளியை எந்தப் பின்னமும் படுத்தாது
2.சாதத்தில் கொதித்து வந்த கல்லைப் போன்று…!

மறைக்கப்பட்ட உண்மைகளை மக்களுக்கு எடுத்துக் காட்டு…! என்றார் குருநாதர்

மறைக்கப்பட்ட உண்மைகளை மக்களுக்கு எடுத்துக் காட்டு…! என்றார் குருநாதர்

 

விஞ்ஞான அறிவு வளர்ந்து விட்ட நிலையில் இன்று நம் சூரியனே பாழடையும் தன்மையில் இருக்கின்றது அதனுடைய ஈர்ப்பு வட்டத்தில் தான் வாழுகின்றோம். இதிலே வளர்ந்த மனிதன் அணுகுண்டுகளை நான்கு திசையிலும் செலுத்தினான் என்றால் இந்த சூரியனே அழிந்துவிடலாம்.

மற்ற பிரபஞ்சம் சிதைந்து அதிலிருந்து விலகி வரும் கோள் நம் பிரபஞ்சத்திற்குள் வந்தால்… பூமிக்குள் வந்து தாக்கி விடாதபடி இராக்கெட்டுகளைத் தயார் நிலையில் வைத்து… அணுகுண்டுகளையும் வைத்து… அதன் வீரிய உணர்வு சுக்கு நூறாகத் தெறிக்கச் செய்வதற்காக விஞ்ஞானிகள் வைத்திருந்தார்கள்.

ஆனால் அப்படி வந்த அந்தச் சிதைந்த கோள் வியாழன் கோள் ஈர்ப்பு வட்டத்திற்குள் இணைந்ததால் அங்கே விழுந்து… அதனின் சுழற்சியில் கவரப்பட்டு… வெப்பத்தால் கரைந்து ஆவிகளாக மாறி… அந்த ஆவியின் தன்மை உறைபனியாக மாற்றி வைத்துக் கொண்டது.

பூமியை விடப் பெரிதான கோள் தான் வந்தது நம் பூமியிலே அது விழுந்தால் எந்தப் பகுதியில் விழுகின்றதோ மக்கள் தங்கள் அழிக்கப்படுகின்றார்கள்.

இன்னொரு பக்கம் ஈர்ப்பு வட்டத்தில் இணைந்து விட்டால் பெரிய கோளாக மாறும். இரண்டு மடங்கு ஆகிவிட்டால் சுழற்சியின் வேகம் கூடி ஈர்ப்பின் தன்மை அதிகரித்துவிடும்.

அதிகரித்தால் வியாழன் கோள் போலவே நம் பூமியில் உள்ள மக்கள் அனைவரும் மடியும் தன்மை உருவாகிவிடும்.
1.இப்படி பிரபஞ்சங்கள் பலவாறு பல வகைகளிலும் மாறிக் கொண்டிருக்கும் இந்த வேளையில்
2.நாம் எதைச் செயல்படுத்த வேண்டும் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

விஞ்ஞானிகள் கண்டுபிடித்து அதையெல்லாம் அடித்து நொறுக்கும் சக்தி பெற்றிருந்தாலும் மக்களைக் காக்கும் நிலை இல்லை.

அன்று ஒரு காலம் அகஸ்தியன் தன்னுடைய பார்வையால் தனது உணர்வின் சக்தி கொண்டு…
1.பூமி நீளமாக வளர்ந்து கொண்டே செல்வதைக் குறைப்பதற்காகத் திசை திருப்பி
2.வட துருவத்தில் உருப் பெற்ற பனிப்பாறைகள் தென் துருவத்தின் வெப்பத்தால் கரைந்து கடல் நீராகப் பெருகச் செய்து சமப்படுத்தினான்
3.இன்று வரை சீராக ஓடிக் கொண்டுள்ளது.

ஆனால் விஞ்ஞானத்தின் நிலையில் பூமியிலே ஒரு பக்கம் அணுகுண்டுகளை வெடித்தார்கள் என்றால் சூரியனுடைய பிடிப்பு… அந்தக் காந்த அலைகளைத் தடுத்து நிறுத்தப்படும் பொழுது ஒரு பக்கம் ஈர்க்கும் தன்மை அதிகரித்துப் பூமி குடை சாயும் நிலை வரும்.

ஆக காலம் கடந்த நிலைகள் கொண்டு
1.இப்போதாவது இந்த உண்மைகளை அறிந்து கொண்டோம்… தவறவிட்டால் தப்பும் மார்க்கம் ஏது…?
2.இதைப் போன்ற தீமைகளிலிருந்து நாம் விடுபட வேண்டும்.

இத்தகைய உண்மைகளை எல்லாம் அறிவதற்காக வேண்டிக் காடு மலைகளை எல்லாம் குருநாதர் எம்மை (ஞானகுரு) அலைய வைத்தார். பல உணர்வுகளைப் பதிவாக்கினார்.

குருநாதர் காட்டிய அந்தப் பதிவின் நிலைகள் அனைத்தும் அறிந்து கொண்ட பின் நீங்களும் அதைப் பெற வேண்டும் என்று உபதேசிக்கின்றோம். குருநாதர் சொன்னது
1.மறைந்த நிலையினை மக்களுக்கு மீண்டும் எடுத்துக்காட்டு.
2.இந்த உலகம் மறையும் முன் மக்களைக் காக்க வேண்டும்
3.மக்களின் உணர்வுகள் உனக்குள் உண்டு அவர்கள் நலம் பெற வேண்டும் என்ற உணர்வினை நீ எடுத்துக் கொண்டால் மகிழ்ச்சி என்ற உணர்வு வருகிறது.
4.நீயும் ஒளியாக ஆகின்றாய் கேட்பவர் உணர்வுகளிலும் ஒளியாகின்றது
5.பிறவி என்ற நிலையை அகற்றுகின்றாய் அருள் ஒளி என்ற நிலையில் வாழ்கின்றாய்.
6.உன்னுடைய வாழ்க்கை அருள் வாழ்க்கையாக அமைகின்றது.
7.பேரருளை உனக்குள் வளர்த்துவிடு… எல்லோரையும் பேரின்பம் பெறச் செய்.
8.அதுவே உனக்குப் பேரானந்த நிலையில் ஏகாந்த நிலை பெற உனக்கு உதவும் என்று கூறினார்.

அதன் வழி தான் உங்களுக்குள் இருளை அகற்றும் அருள் ஒளியைப் பாய்ச்சி… உங்கள் நினைவு கொண்டு மாற்றிக் கொள்ளும் சக்தியாகக் கொடுத்துக் கொண்டிருக்கின்றேன்.

அருள் ஒளியை நீங்கள் பெற்று இருளை அகற்றிடும் ஞானிகளாக நீங்கள் வளர வேண்டும்… விஞ்ஞானத்தின் பேரழிவிலிருந்து அனைவரையும் மீட்டிட வேண்டும்.

ஜீவனுள்ள கனி “எலுமிச்சங்கனி”

ஜீவனுள்ள கனி “எலுமிச்சங்கனி”

 

1.ஈர்க்கும் கனி…
2.ஈசனின் சக்தியையே ஈர்க்கும் கனி…
3.ஈசனின் கனி எலுமிச்சங்கனி.

இக்கனியின் தன்மையை வைத்துப் பூஜைக்கும் உணவிற்கும் உபயோகப்படுத்துகிறார்கள். நற்காரியங்களுக்கு இக்கனியைத் தருகின்றார்கள்.

பல வழிச் சாமியார்களும் இக்கனியைப் பூஜை செய்து இக்கனியில் மந்திரித்து மக்களுக்கு அளிக்கின்றார்கள். இக்கனியின் தன்மை என்ன…?

இவ் ஈசனின் எலுமிச்சங்கனியின் தன்மை “பெரும் ஈர்க்கும் சக்தி உள்ள கனியப்பா…” இக்கனியைக் கையில் வைத்து நீ சில நிலைகளை நினைக்கும்போது உன் சுவாச நிலையைக் கனி ஈர்க்கிறது.

அந்நிலையில் அக்கனியை நீ முகர்ந்திட்டால் அக்கனியின் மணத்தை வைத்து உன் நிலை என்ன…? என்பதைக் கனியின் மணத்திலிருந்து உன் மன நிலையை நீ அறிந்திடலாம்.

இவ் ஈசனின் கனியைக் கையில் ஏந்தி
1.உன் மன நிலையைச் சந்தோசமாக்கி வேண்டிக் கொண்டால் நீ நினைக்கும் எந்தக் காரியத்தையும் அக்கனி ஈர்க்கிறது.
2.காரியம் முடியும் வரை தன் சக்தியின் அருளை உனக்கு அருள்கின்றது.

ஒரு எலுமிச்சங்கனியை உன் இல்லத்திற்கு வாங்கி வந்து உன் கையில் வைத்து அவ்வாண்டவனை வணங்கி அக்கனிக்குக் கற்பூர ஆராதனை காட்டி… அந்நிலையில் ஒரு காரியத்தை எண்ணிக் கொண்டு நீ வணங்கிடும் தெய்வ நிலையில் உள்ளவர்களை அழைத்திட்டால்… அந்நிலைக்கு அவர்கள் வருகின்றார்கள்.

அவ்வீர்ப்புத்தன்மை அந்தக் கனிக்கு உள்ளது. “காந்தத்தின்” ஈர்ப்பு நிலை போல் அக்கனிக்கும் ஈர்ப்பு நிலை உள்ளது.
பல சாமியார்களைப் பற்றிச் சொன்னேன் அல்லவா…! அவர்கள் நிலையில் எல்லோரும் எலுமிச்சங்கனியை வைத்திருப்பார்கள். அவர்கள் ஜெபத்திற்கும் அக்கருவித்து வேலைக்கும் இந்த எலுமிச்சங்ககனியைத்தான் தன் வசத்திற்கு வைத்துக் கொள்கின்றார்கள். இக்கனியின் தன்மையைப் பற்றி பல பல செப்பிடலாம்.

இக்கனி ஈர்க்கும் நிலையில் தன்னுள்ளேயே எல்லாவற்றையும் வைத்துக் கொள்கின்றது.
1.இக்கனிக்குச் சுவாச நிலை உள்ளது
2.இக்கனியைக் கையில் வைத்தால் இவ்வுலக சுற்றலையே அறிந்திடலாம்.

இக்கனியை வீட்டின் முகப்பில் கட்டுவது இக்கனியைக் காண்பவர்கள் எண்ணத்தைத் தன்னுள் ஈர்க்கிறது இக்கனி. அவர்கள் எண்ணம் நம்மை வந்து தாக்குவதில்லை. புரிகிறதா…?

கனியின் தன்மையிலேயே அவர்கள் எண்ணம் அந்த இடத்தில் அடிபடுகிறது. நம்மை வந்து அது அண்டுவதில்லை.

திருஷ்டி என்ற பெயரில் நீ கட்டுகின்றாய்… என்ன என்று புரியாமல்…! ஏன் மற்ற கனிகளை அந்நிலைக்குக் கட்டக்கூடாதா…? இக்கனிதான் சக்திக்கனி. இதனுடைய நிலை எக்கனிக்கும் இல்லை இவ்வுலகம் முழுவதுமே.

இக்கனியை வைத்துதான் பிழைக்கின்றார்கள் பல பல சாமியார்கள் எல்லாம் புரிந்ததா…?

1.இக்கனியின் சாறு எடுத்து மஞ்சளைக் கலந்து புருவத்தின் மத்தியில் இடுவதும் அவ்வீர்ப்பு நிலைக்குத்தான்.
2.நல்ல எண்ணத்துடன் இக்கனியில் செய்த குங்குமத்தை வைத்துக் கொண்டால்
3.தீய துர் ஆவிகள் வந்து அண்டிடாது என்பதெல்லாம் இதன் பொருளே.

மனித வாழ்க்கையில் செல்வம் நம்மைக் காக்காது… “அருள் செல்வமே நம்மைக் காக்கும்”

மனித வாழ்க்கையில் செல்வம் நம்மைக் காக்காது… “அருள் செல்வமே நம்மைக் காக்கும்”

 

கொசுக்களாகி மனிதனின் இரத்தத்தைக் குடித்துக் கருமுட்டைகளாகி மனிதனாகப் பிறவிக்கு வந்தால் அந்தக் குழந்தைகளின் உணர்வுகளைப் பார்த்தோம் என்றால் மிகவும் மோசமாக இருக்கும்.

இப்படி எத்தனையோ வகையான உயிரணுக்களின் தோற்றத்திலிருந்து சேர்த்துக் கொண்ட நிலையில் இருந்து உரு மாறிக்கொண்டே இருக்கின்றது.

பன்றியாக இருந்து நஞ்சினை நீக்கி மனிதனாக உருவாக்கிய பின்
1.நஞ்சை நீக்கும் சக்தி பெற்ற நிலையில்
2.இந்த மனித வாழ்க்கையில் வரும் நஞ்சினை துடைக்கத் தவறினால்
3.மீண்டும் பிறவிக் கடனில் தான் உழல்வோம்.

இன்று மனிதனாக இருக்கின்றோம் சமாளிக்கின்றோம்… செல்வத்தையும் தேடி வைத்திருக்கின்றோம். இருந்தாலும் ஹார்ட் அட்டாக் வருகிறது என்று வைத்துக் கொள்வோம்.

இலட்சக்கணக்கில் பணத்தைக் கொடுத்தால் உடனே இதயத்தை மாற்றிக் கொடுத்து விடுகின்றார்கள் சிறிது காலத்திற்கு வாழும்படி செய்கின்றார்கள். பணம் இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்…?

என்னுடைய (ஞானகுரு) பற்கள் விழுந்துவிட்டது. பல் செட்டைக் கட்டி நிஜப்பல் இருக்கின்ற மாதிரி நான் சாப்பிடுகின்றேன்… விஞ்ஞான அறிவு கொண்டு செய்து கொடுத்து விடுகின்றார்கள்.

பல் இல்லாதவர்கள் சரியாக மென்று சாப்பிடவில்லை என்றால் சத்தை சரி வர நல்ல இரத்தமாக மாற்ற முடியாது. அதனால் உடல் பலவீனம் அடைந்து விடும்.

ஒவ்வொன்றுக்கும் அதற்குத் தகுந்த உபாயங்ககளைக் கண்டுபிடித்துக் கொண்டு வருகின்றார்கள். ஆனால்
1.இப்போது இந்த மெய்ஞான அறிவைத் தெரிந்தும் துருவ நட்சத்திரத்தின் உணர்வை பெறத் தவறினால்
2.வரும் தீமைகளை அதை வைத்துத் துடைக்கத் தவறினால் நோயாகி
3.மீண்டும் கீழான சரீரங்களுக்குத் தான் செல்ல வேண்டி வரும்.

அதையெல்லாம் மாற்றுவதற்குத் தான் அடிக்கடி தியானப் பயிற்சியை உங்களுக்குப் பல வகைகளிலும் கொடுத்துக் கொண்டு வருகின்றேன்.

பௌர்ணமி தியானங்களை அமைத்து அந்தத் தியானத்தின் வலுக் கொண்டு குடும்பத்தில் உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களை அந்தச் சூட்சும சரீரத்தைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்யும் போது உடல் பெறும் உணர்வுகள் கரைந்து விடுகின்றது.
1.உயிருடன் ஒன்றிய உணர்வுகள் நாம் தியானித்த உணர்வுகள் அங்கே அதற்குள் தொக்கி நிற்கின்றது
2.அதை வைத்து அவர்கள் பிறவியில்லா நிலை அடைகின்றனர்.

அதே சமயத்தில் அந்தக் குடும்பத்தைச் சார்ந்தோரும் துருவ நட்சத்திரத்தை எண்ணும் போது அதிலே விளைந்த உணர்வுகள் எளிதில் பெறக்கூடிய தகுதியும் பெறுகின்றார்கள்… வரக்கூடிய நோயிலிருந்து விடுபடவும் முடிகின்றது… வாழ்க்கையைச் சீர்படுத்திக் கொள்ளவும் முடிகிறது. எப்பொழுது உடலை விட்டுப் பிரிந்து சென்றாலும் சப்தரிஷி மண்டல ஈர்ப்பு வட்டத்தில் இணையும் பருவம் பெறுகின்றனர்.

விஞ்ஞானிகள் இன்றைக்கு எத்தனையோ புதுப்புது உயிரணுக்களை உருவாக்குகின்றார்கள் உடல்களை மாற்றுகின்றார்கள்.

ஆனால் இறந்த பின் தன் உயிரான்மாவைப் பிறவியில்லா நிலை அடையச் செய்ய முடியுமா…? என்றால் அது முடிவதில்லை. கண்டுபிடித்த உணர்வின் தன்மை கொண்டு தன் சீடனுக்குக் கற்பித்திருந்தால் இறந்த பின் சீடனின் உடலுக்குள் தான் போக முடியும். தான் கற்ற ஞானத்தை வேண்டுமென்றால் அவனுக்குப் போதிக்கலாம்.

ஆனால் சந்தர்ப்பத்தில் வேதனையும் துன்பங்களும் வந்தால் ஞானிகள் காட்டிய முறைப்படி காலை துருவ தியானத்தினை எடுத்துக் கொண்ட பின்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உடலுக்குள் தூய்மைப்படுத்திக் கொண்டு
2.நோயற்றவர்களுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி சக்தி கிடைக்க வேண்டும் என்று இந்த உணர்வைப் பதிவு செய்து
3.நோய் நீங்கி நீங்கள் நன்றாக வேண்டும் என்று சொன்னால் அவர்களுக்கும் நம் வாக்கு நல்லதாகின்றது
4.நமக்குள்ளும் தீமை புகாது தடுத்துக் கொள்கின்றோம்.

இப்பொழுது எதன் மீது அதிகமாகப் பற்று கொள்கின்றோம்…? நோயை நீக்கும் அருள் ஞானிகள் உணர்வைப் பற்று கொள்கின்றோம். நோயின் உணர்வைப் பற்றற்றதாக மாற்றுகின்றோம்.

பற்று… பற்றற்று இரு…!

ஆகவே இந்த வாழ்க்கையில் எத்தகைய தீமைகள் வந்தாலும் அதன் மீது நாம் பற்று கொள்ளலாகாது. அதைப் பற்றற்றதாக ஆக்க வேண்டும் என்றால் அடுத்த நிமிடமே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று அந்த உணர்வினை நமக்குள் எடுத்து அதைப் பற்றுடன் பற்றிட வேண்டும்.

வேதனை உணர்வுகள் நம்மைப் பற்றிடாது பற்றற்றதாக மாற்றி… மற்றவர்களுக்கும் தீமையை நீக்கும் உணர்வுகளை இயக்கும் சக்தியாக அவர்களை அதைப் பற்ற வைத்து… பலவீனத்திலிருந்து மீட்டும் சக்தியாகக் கொண்டு வர வேண்டும். இதை வழிப்படுத்தி நாம் நடக்க வேண்டும்.

1.இந்த மனித வாழ்க்கையில் நம்மைச் செல்வம் காக்காது… அருள் செல்வமே நம்மைக் காக்கும்.
2.எத்தனையோ செல்வத்தை வைத்திருப்பவர்கள்… அவர்கள் குடும்பம் எல்லாம் துயரத்துடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

ஆகவே இதைப் போன்ற நிலையில் இருந்து விடுபடுங்கள்.

நல் மூச்சே விட்டிடுங்கள்

நல் மூச்சே விட்டிடுங்கள்

 

ஓம் என்னும் பதத்திற்கு ஓ…ம் என்ற ஓங்கார இசையில் கலந்திருப்பாய் என்று பாடுகின்றாய். அப்பாடலின் ஆணிவேர் என்னப்பா…?

ஒரு நிமிடம் உன் நிலையில் பகர்கின்றேன்… ஒரு சொல்லில் பகர்ந்திடப்பா…! உதய வழியை அளிக்கத்தான் இந்த நாள் முதல் உன் மனதிற்கு அளிக்கின்றேன்.

உன் வழியில் வந்த எண்ணம் ஒரே எண்ணம் உணர்ந்து விட்டாய் உன் உதயத்திலேயே.

1.தாவரங்களின் உயிர் அவ்வாணி வேரில் உள்ளது… அதன் ஈர்ப்புத் தன்மை சூரிய ஒளி பட்டுக் கீழ் நோக்கி இழுக்கின்றது.
2.மனிதனின் ஆணிவேர் உயிர் சிரசின் முன் பகுதியில் உள்ளது… மனிதனின் சுவாச நிலை சூரிய ஒளி பட்டவுடன் தன்னைத்தானே சுற்றுகின்றது.
3.இவ்வுலகத்தின் ஆணிவேர் அவ்ஓம் என்ற ஓங்கார இசையினிலே சுழல்கின்றது.

உன் உதயத்தில்… உன் ஜெப நிலையில்… அவ்வுலகச் சுழற்சியில் “ஓ…ம்” என்ற ஓங்கார நாதத்தை உணர்ந்திடலாம்.

ஒரு நிமிடம் ஜெப நிலையில் இருந்திட்டால் உன்னைச் சுற்றி உள்ள ஒலிகள் எல்லாம் அடங்கும். ஓ…ம் என்ற ஓங்கார இசையை ஜெப நிலையின் பொருள் நம்மைச் சுற்றியுள்ள ஓ…ம் என்ற ஓங்கார நாதத்தை அருளச் செய்யத்தான் இந்த நிலையை உண்டாக்கினேன். வழியமைத்துப் பாடம் புகட்டுகின்றேன்.

ஏட்டுப்படிப்பு மட்டும் தான் ஏற்கின்றாய். செயலில் வரவேண்டுமப்பா. ஓ…ம் என்ற ஒலியின் ஓங்கார இசையில் கலந்திடத்தான் இந்த உண்மைகளை உணர்த்திட்டேன்.
1.ஓ..ம் சக்தி என்ற பாடலை அமைத்திட்டேன்.
2.உருளுகின்ற சக்தியே… உயிரணுவின் சக்தியே… உயர்ந்து நிற்கும் சக்தியே…! பாடலின் பொருளும் பாடத்தின் பொருளும் ஒன்றுதான்.

ஓங்கார இசையினிலே ஓங்கி நிற்பாள் ஓம் சக்தி
சிங்கார இசையினிலும் இருந்திடுவாள் ஓம் சக்தி
சினமெல்லாம் தவிர்த்திடுவாள் ஓம் சக்தி
உலகெல்லாம் ஓங்கி நிற்கும் ஓம் சக்தி
உலகாளும் சக்தியே
உருளுகின்ற சக்தியே
உயர்ந்து நிற்கும் சக்தியே
உயிரணுவின் சக்தியே
உலகாளும் ஈசனின் சக்தியாய்
பூ மழையாகப் பொழிந்திடுவாய் சக்தியே…
பரிபூரணமாக என் மனதில் கலந்திடுவாய் சக்தியே
மனமெல்லாம் மணக்கச் செய்வாய் சக்தியே
ஓங்கார இசையினிலே ஓங்கி நிற்பாள் ஓம் சக்தி.

தியான நிலையில் நினைவெல்லாம் இன்னும் பரிபக்குவ நிலை வர வேண்டும். சுவாச நிலையில் “வாழ்க்கை முறையிலேயே” கலந்து வர வேண்டும் அத்தியான நிலை.

அந்நிலையில் தான் நீ அமரும் தியான நிலையில் இரண்டும் கலந்தால் தான் தியான நிலை கைகூடும்.
1.சுவாச நிலையின் எண்ணம் தான் முதல் படியில் வந்துள்ளது.
2.அடுத்த முதல் படியில் வந்துவிடும் ஓங்கார இசையின் நாதம் உன் செவிக்கு.
3.அத்தியான நிலைக்கு முதல் படி சுவாச நிலை அதைப் புரிந்திட்டாய்.

வரும் முதல் நிலை “ஓங்கார ஒலியைக் கேட்பது தான்…!” அந்நிலையில் நீ விடும் சுவாச நிலையே மறந்துவிடும். ஓங்கார ஒலி தான் உன் செவிக்குள்ளே ஒலித்து வரும்.

உலகத்தன்மையே ஓ…ம் என்ற ஒலியினால் தான் இயங்குகின்றது இவ்வொலிதான் உலகத்துக்கு ஆணிவேர். அவ்வொலியின் மேல் அவ்ஒளி பட்டவுடன் தான் இந்த ஜீவராசிகளின் ஜீவனெவல்லாம் தோன்றுகிறது.

இவ்ஒலியிலிருந்து நல் மனத்தைப் பெற்றிடுங்கள்… நல் மூச்சே விட்டிடுங்கள் என்பதெல்லாம் எந்த நிலையில்…?

நல் மூச்சே விட்டிடுங்கள் என்னும் பொழுது அந்நிலையில் உள்ள புஷ்பங்களையும் நறுமணம் கொண்ட பொருள்களையும் தேடுகின்றாய். அந்நிலையில் வருவதல்ல நல் மூச்சு.

நல் மூச்சு என்பதன் பொருள்…
1.உன் சொல்லிலும் செயலிலும் எண்ணத்திலிருந்து வருவது தான்.
2.உன் மனநிலையில் மகிழ்ச்சியாக உள்ள நாளில் அவ்விடத்தில் உள்ள அசுத்தக் காற்றுகளும் உன்னை வந்து அடையாது.
3.அந்நிலையில் உன் சுவாச நிலையம் அந்தத் தீய மணத்தை ஏற்றுக் கொள்ளாது.

ஆனால்… உன் மனமும் சுவாச நிலையும் உன் மன நிலையில் சோர்வு வந்துவிட்டால் உன் சுவாச நிலைக்கு எந்த நறுமணங்களும் வந்து அடையாது… புரிந்ததா…!

ஒலி நாடாக்கள் மூலம் யாம் (ஞானகுரு) உபதேசித்து வெளிப்படுத்திய கருத்துக்களின்படி நீங்கள் தியானியுங்கள்

ஒலி நாடாக்கள் மூலம் யாம் (ஞானகுரு) உபதேசித்து வெளிப்படுத்திய கருத்துக்களின்படி நீங்கள் தியானியுங்கள்

 

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அந்த உணர்வுகள் உலக மக்கள் அனைவரும் பெற வேண்டும்… அவர்களை அறியாத இருள்கள் நீங்க வேண்டும் என்று எண்ணினால் அவர்கள் உணர்வு நமக்குள் இருப்பதால் “அவர்கள் பெற வேண்டும்” என்று நாம் எண்ணும் பொழுது நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கும் அது கிடைக்கின்றது. நமக்குள் அகந்தை என்ற உணர்வு செயல்படாது ஒடுங்குகின்றது.

அன்று துருவன் (அகஸ்தியன்) காட்டிற்குள் செல்லப்படும் பொழுது துஷ்ட மிருகங்கள் மனிதனைக் கொன்று புசிக்கும் நிலை கொண்டு வந்தாலும்…
1.அவன் உடலில் இருந்து வெளிப்படும் விஷத்தை வென்றிடும் உணர்வுகள் அதை ஒடுங்கச் செய்வது போன்று
2.விஷமான உணர்வுகளைச் சந்தர்ப்பத்தால் நாம் நுகர்ந்து… மற்றொன்றைக் கொன்று புசிக்கும் கடும் நோயாக உருவாக்கும் அந்த உணர்வுகளை
3.நாம் அந்த துருவ மகரிஷிகளின் அருள் ஒளியின் உணர்வைச் சேர்த்து அந்த உணர்வுகளை ஒடுங்கச் செய்ய வேண்டும்.
4.ஆக அதை நுகர்கின்றோம்…! இந்த உணர்வுகள் நமக்குள் வளர்ச்சி அடைகின்றது.
5.அந்த அணுக்களின் பெருக்கங்களைக் கொண்டு வரும்போது கணங்களுக்கு அதிபதி ஆகிப் பிறவியில்லாப் பெரு நிலை அடைய செய்யும்

“பிரம்மாவைச் சிறை பிடித்தான்…” என்ற நிலையில் அந்த அருள் ஒளியைத் தான் நாம் பெறச் செய்ய வேண்டும்.

ஒருவனை அடிமையாக்க வேண்டும் என்று அகம் கொண்டு… துர்மார்க்க வழியில் அடித்து அவனைக் கைவல்யப்படுத்தி இன்னொருவர் மீது பாய்ச்சி அடக்கி ஆட்சி புரியும் நிலைகள் தான் இன்றைய உலகில் வந்து கொண்டிருக்கின்றது.

கடந்த கால நிலைகளில் மந்திர ஒலிகள் கொண்டிருந்தாலும்… உலோக உணர்வுகளை அறியச் செய்தாலும் அதனின் வளர்ச்சியில் அணுக் கதிரியக்கங்களையும் கண்டு கொண்ட பின் “இன்று மீண்டும்” ஆவியின் நிலைகளே தொடர்பு கொள்கின்றது.

அரச உணர்வு பெற்று விஞ்ஞான அறிவு கொண்டாலும் பேயாசை கொண்டு ராட்சச உணர்வு கொண்டு… மனிதன் தான் பெற வேண்டும் என்ற கௌரவ உணர்வு கொண்டு “நான்” என்ற நிலை உருவாக்கப்பட்டு அழித்திடும் உணர்வாகப் பெருகி… மனிதனே அசுரனாக மாறிடும் நிலையாக ஒருவரை ஒருவர் கொன்று புசித்து… அதை ரசித்திடும் நிலைகள் தான் இன்றைய உலகில் பெருகிக் கொண்டுள்ளது.

இது போன்ற உணர்வுகள் நமக்குள் சேர்ந்தாலும் “நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அதை அடக்கிடல் வேண்டும்…”

நஞ்சினை ஒடுக்கி ஒளியாக மாற்றிடும் அந்த உணர்வைப் பெருக்கி… நம் மூச்சும் பேச்சும் உலக மக்களை அறியாது இயக்கிக் கொண்டிருக்கும் அதில் அமிழ்ந்திருக்கும் அத்தகைய நிலையில் இருந்து அவர்களை விடுபடச் செய்யும் அருள் சக்தியைப் பெற நாம் தியானிப்போம்.

அனைவருடைய நிலைகளிலும் இருள் நீங்கி… மெய்ப் பொருள் என்ற தேவாதி தேவர்கள் என்ற மனித உரு பெற்ற நிலையினை… அருள் ஒளியின் உணர்வாக மாற்றிடும் நிலைபெறச் செய்வோம்… அருள் ஒளிச் சுடராகப் பெருக்குவோம்.

1.யாம் (ஞானகுரு) உபதேசித்த ஒலி நாடாக்களை ஆங்காங்கே வெளிப்படுத்தி
2.அதன் வழி நீங்கள் தியானியுங்கள்… உங்களுக்குள் இதை மனப்பாடமும் செய்து கொள்ளுங்கள்.
3..உபதேச ஒலி நாடாக்களைப் போட்டு அடிக்கடி அதைக் கேட்டுப் பதிவாக்குங்கள்… அனைவரையும் கேட்கச் செய்யுங்கள்.
4.அந்த உணர்வின் தன்மை கொண்டு உணர்ச்சிகளை உந்தச் செய்து நினைவை விண்ணிலே செலுத்தி
5.அருள் ஒளியின் உணர்வை உருவாக்கும் உணர்வின் உணர்ச்சிகளைத் தூண்டச் செய்யுங்கள்.

அறியாது ஆட்டிப் படைக்கும் அசுர உணர்வுகளிலிருந்து உலக மக்களை மீளச் செய்யுங்கள்… அருள் ஞான சக்தியை ஊட்டச் செய்யுங்கள்.

தேவாதி தேவர் என்ற சர்வ வல்லமை பெற்ற அவர்கள் உடலில் நன்மையை ஊட்டும் அருள் ஒளியின் உணர்வை நீங்கள் ஒவ்வொருவரும் உருவாக்கச் செய்யுங்கள்.

ஆகவே குறுகிய காலமே இந்த உடலில் வாழும் நாம் அனைவரும் அருள் ஒளி பெற வேண்டும் என்ற உணர்வுகளை வளர்த்திடல் வேண்டும்.
1.மற்றவரிடத்திலிருந்து வரும் தீமைகளை நுகர்ந்தாலும் அதை நாம் அருள் ஒளியாக மாற்றிடும் உணர்வாகப் பெற முடியும்
2.அருள் வழி வாழ்வோம் அனைவரும் அதைப் பெற நாம் தியானிப்போம்… தவமிருப்போம்.

ஞானத்தைப் புகழ்ந்து சொல்வது முக்கியமில்லை… அதை நமக்குள் வளர்க்க வேண்டும்.. அது தான் முக்கியம்…!

ஞானத்தைப் புகழ்ந்து சொல்வது முக்கியமில்லை… அதை நமக்குள் வளர்க்க வேண்டும்.. அது தான் முக்கியம்…!

 

கண்டார் விண்டதில்லை… விண்டார் கண்டதில்லை…! இதன் பொருள் என்ன…?

கண்டார்..! என்பதற்கு…
1.இந்த உலகின் உண்மை ஞானத்தைக் கண்டவர்கள் விண்டு…
2.வீண் விரய நிலையில் புரளிகளாக எந்த உண்மையையும் சொல்ல மாட்டார்.

விண்டார் கண்டதில்லை… என்பதன் பொருள்
1.விண்டவன் தன் எண்ணத்தில் ஏற்றிக் கொண்ட செயலைத்தான் விண்டு புகட்டுகின்றான்.
2.இவன் கண்டது எவற்றை…?
3.ஞானப் போர்வையைப் புகழ்படுத்திக் காண்பவன் விண்டு உணர்த்தும் நிலையாகத் தான் அது இருக்கும்.

ஞானத்தைப் புகழ்ந்து சொல்வது முக்கியமில்லை… அதை நமக்குள் வளர்க்க வேண்டும்.. அது தான் முக்கியம்…!

ஆக…
1.தன் ஞானத்தை வளர்க்க வேண்டும் என்றால் தியானம் வேண்டும்..
2.தியானம் பெற ஞானம் வேண்டும்.

ஞானம் என்பது மனிதனுக்கு எப்படி வளருகின்றது..?

பல குண நிலையில் வாழும் மனிதன்
1.தன் எண்ண கதியிலேயே… தன் குணமுடனே…
2.ஞானம் பெறல் வேண்டும் என்றால் எந்த ஞானமும் வளராது.
3.பல குணங்களுடன் உள்ளவனால் தியானத்தின் செயல் முறைக்கே வர முடியாது.

தியானம் என்பது… மனிதனின் குணத்தைச் சமமான சாந்த நிலை பெற்ற பிறகு
1.சாந்தத்தினால் இவ்வெண்ணத்தை ஓ…ம் என்ற நாதமுடன் எடுக்கும் முறைப்படுத்தி
2.தன் கவன நிலையை அதன் வழி செலுத்தும் பொழுது தான் ஞானம் பிறக்கின்றது.

மனிதனின் வாழ்க்கையில் சலிப்பு சங்கடம் கோபம் ஆத்திரம் இப்படியெல்லாம் ஒன்றின் தொடர் கொண்டு ஒன்று வளர்வது இயற்கையே.

இருந்தாலும்… அந்த இயற்கையின் கதியில்… அதே வேகத்தில்… நம் எண்ணத்தைப் பாய்ச்சி விட்டால் வளரும் நிலையற்று அழிக்கும் நிலைக்குச் செல்கின்றான் மனிதன்.

நம் ஆடையில் ஏற்படும் கறையை…
1.எப்படி அகற்றினால் அது போகும் என்று “பாங்காக…” (பக்குவமாக)
2.மற்ற இடத்தில் கறைபடியாமல்…
3.படிந்த இந்தக் கறையைப் போக்க நம் செயல்கள் இருந்தால்…
4.துணி பாழ்படாமல் சுத்தமாக அகற்றி விடலாம்.

கறை படிந்து விட்டதே…! என்று சலிப்புப் பட்டு அதை அடித்துத் தோய்த்துச் செயல்பட்டால் அந்தக் கறையும் போகாது… துணி தான் நைந்து போகும்.

மின்சாரத்தைப் பாய்ச்சி ஒளியைக் காண்கின்றோம். எந்த அளவு விகிதம் செலுத்தப்படுகின்றதோ அதற்குகந்த வெளிச்சத்தைத் தான் அந்த மின் ஒளி ஏற்றித் தருகின்றது.

அதைப் போல்… இவ்வெண்ணத்தை எந்த ஒரு செயல்முறைக்கும்
1.சாந்தமாக ஞானத்தைக் கொண்டு ஆராய்ந்து செயல்பட்டால்
2.வாழ்க்கையில் ஏற்படும் குறைகளுக்கு வழி முறை அமைத்துக் கொள்ளலாம்.

சலிப்பையும் சங்கடத்தையும் ஏற்படுத்திக் கொண்டால் கோபமும் அழுகையும் தான் ஏற்படும்.

எந்த ஒரு சூழ்நிலையானாலும்…
1.எண்ணத்தால் ஞானத்தைப் பாய்ச்சி அதிலுள்ள சிக்கலை அகற்றிவிட்டால் சாந்தமான சமநிலை பெற முடியும்
2.மேன்மேலும் நம் எண்ணத்தின் சாந்த நிலை கூடக் கூட… நம் எண்ணமே சாந்தமாகி
3.ஞானத்தால் எடுக்கும் வழித் தொடருக்குச் “சக்தி நிலை கூடுகிறது…”

“சாந்தமான நிலை பெற” ஞானத்தால் நம் வாழ்க்கையை வழிப்படுத்திக் கொண்டோமானால் தான்… நாம் எடுக்கும் வளர்ச்சிக்கு வழி அமைத்துக் கொள்ள முடியும்.

எந்த ஒரு சிக்கலுக்கும் எண்ணத்தைத் தெளிவுபடுத்தும் ஆத்மாவினால்… சாந்த நிலை பெறுவது என்பது கடினமல்ல.
1.பல சிக்கல்கள் வந்தாலும்…
2.தன் எண்ணத்தைக் கொண்டு அவர்கள் தெளிவு ஏற்படுத்திக் கொண்டேயிருப்பார்கள்.

ஆனாலும் அவர்களின் குண அமிலத்தில் அவர்கள் வளர்த்துக் கொண்ட “அவர்களுக்குச் சொந்தமான வளர்ச்சி நிலை தான்…” மேலோங்கி நிற்கும்.

எண்ணத்தைச் சாந்தப்படுத்தி சமநிலை பெறும் ஆத்மாவினால் நிச்சயம் ஞான ஒளி ஈர்ப்பின் வழியில் செல்ல முடியும்.

கொடிய நஞ்சினையும் கொடிய நோயையும் ஒடுங்கச் செய்யும் துருவனின் அருள் ஆற்றல்கள் – ஒரு பயிற்சி

கொடிய நஞ்சினையும் கொடிய நோயையும் ஒடுங்கச் செய்யும் துருவனின் அருள் ஆற்றல்கள் – ஒரு பயிற்சி

 

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் பெற்று
1.சர்வ நோய்களும் நீக்கிடும் அருள் ஒளி எங்களுக்குள் பெருகி இருளை அகற்றி
2.எங்கள் பேச்சு மூச்சும் சர்வ நோய்களை நீக்கிடும் அருள் சக்தி பெற்று
3.அனைவரையும் ஆனந்தப்படச் செய்யும் அருள் ஒளி எங்களுக்குள் பெற அருள்வாய் ஈஸ்வரா.

வேதனையான உணர்வுகளை அடிக்கடி நுகர்ந்தால் கண்களில் படும் போது கண் ஒளி மங்கும். உற்றுப் பார்த்த வேதனையான உணர்வுகள் இரத்தத்தில் கலந்து வரப்படும் போது கிட்னி அந்த விஷத்தின் தன்மையால் பாதிக்கப்படுகின்றது.

விஷம் கலந்த அந்த இரத்தம் இருதய வாயில் செல்லும் பொழுது அங்கே அடைப்புகள் போன்ற துன்பங்களை ஏற்படுத்தும். அந்த விஷம் கலந்த இரத்தம் நுரையீரல் கல்லீரல் போன்ற உறுப்புகளில் படரப்படும் போது இந்த விஷத்தின் தன்மையால் அதனை இயக்கும் நல்ல உணர்வுகள் நல்ல அணுக்கள் மடிகின்றது. பின் அதிலே கடும் நோயாக உருவாகும்.

இதைப் போன்ற ஏற்படும் தீமைகளிலிருந்து மீள…
1.நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் உடலில் எங்கே நோவு காணுகின்றதோ
2.“அந்தப் பகுதிக்கு”
3.அருள் மகரிஷிகளின் உணர்வுகள் பெற வேண்டும் என்று உணர்ச்சிகளை
4.”அங்கே” உந்தச் செய்யுங்கள்… அருள் உணர்வுகளைப் பாய்ச்சுங்கள்.
5.நஞ்சு கொண்ட அந்த உணர்வின் தன்மையை ஒடுங்கச் செய்யுங்கள்.

அருள் மகரிஷிகளின் உணர்வை உங்கள் உடலில் பரவச் செய்து… தீமை செய்யும் அணுக்களைத் தணியச் செய்யுங்கள்.

துருவன் காட்டிற்குள் செல்லும் பொழுது “அவனைக் கண்டு” மற்ற கொடூர உணர்வுகளும் மிருகங்களும் விஷம் கொண்ட விஷ ஜெந்துக்களும்
1.அதனுடைய விஷத்தை முறித்து எப்படிப் பதும்பி இருந்ததோ இதைப்போல
2.அந்தத் துருவனின் உணர்வுகளை துருவ மகரிஷியான உணர்வுகளை உங்கள் உடலுக்குள் செலுத்தி
3.”அகஸ்தியன்… துருவன்… துருவ நட்சத்திரம்…” என்ற இந்த மூன்றையும் உங்கள் உணர்வுக்குள் கலக்கச் செய்து
4.உங்கள் உடலில் உள்ள இரத்தங்கள் முழுவதிலும் கலக்கச் செய்யுங்கள்.

அப்போது…
1.ஒடுங்கும் தன்மை கொண்டு “உங்களிடம் அடங்கி”
2.உங்களில் மன மகிழ்ச்சியை ஓங்கச் செய்யும்
3.அருள் ஒளியின் உணர்வின் தன்மை பெறச் செய்யும்… அருளானந்தம் பெறச் செய்யும்.

ஆகவே… அருள் ஞானத்தை வளர்த்திடும் அந்த அருள் ஞானத்தைப் பெற அகஸ்தியனுடைய உணர்வுகளையும் துருவனின் உணர்வுகளையும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியையும் உங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்ற எண்ணத்தில்
1.எங்கே வலி என்ற உணர்ச்சிகளை உந்துகின்றதோ
2.”அவ்விடத்தில்” அந்த அருள் மகரிஷிகளின் சக்திகளைப் பாய்ச்சுங்கள்.

அந்த வலியைத் தணியச் செய்யுங்கள் இருளை அகற்றப் பழகிக் கொள்ளுங்கள்.

சந்தர்ப்பத்தால் உங்களை அறியாது எண்ணத்தால் நுகர்ந்த உணர்வுகள்… நஞ்சின் உணர்வு கொண்டு… உடலுக்குள் தேங்கியிருக்கும் இடத்தில் வேதனையக் கொடுக்கும்.

அதே எண்ணத்தால்… உங்கள் உடலில் எங்கே நோவு வருகின்றதோ அந்த இடத்திலே அகஸ்தியன் துருவன் துருவ நட்சத்திரம் என்ற இந்த மூன்று உணர்வுகளையும் உங்கள் நினவாற்றல் கொண்டு பாய்ச்சுங்கள்.

அதனுடைய வீரியத்தைத் தணித்துப் பழகுங்கள்…! அருள் ஒளியைப் பெருக்குங்கள். இப்போது உங்கள் உடலில் அருள் ஒளி படர்ந்து
1.உடலில் எத்தகைய பிணி இருக்கின்றதோ அது ஒடுங்கும்…
2.ஒடுங்கும் உணர்ச்சிகளை நீங்கள் உணரலாம்… அதை ஒடுக்கச் செய்யுங்கள்

அருள் ஞானிகள் உணர்வை உங்களுக்குள் பெருக்கச் செய்து அதை ஒடுங்கச் செய்யுங்கள். உங்களால் முடியும்…!

தியானத்தில் நாம் எடுக்க வேண்டிய “உயர் மின் காந்த அலை”

தியானத்தில் நாம் எடுக்க வேண்டிய “உயர் மின் காந்த அலை”

 

எண்ணத்தைக் கொண்டு தான் உணர்வை அறிகின்றோம். உணர்வைக் கொண்டு தான் எண்ணம் செயல்படுகின்றது.

இவ்வெண்ணமும் உணர்வும் இயங்க… இந்தப் பன்னிரெண்டு வகை குண அமிலங்களின் நிலையினால்
1.எண்ணத்தைக் கொண்டு உணர்வும்…
2.உணர்வைக் கொண்டு எண்ணமும்… இயங்கி வாழும் ஜீவாத்மாக்கள் எல்லாம்
3.இக்குண அமிலத்தையே ஒருநிலைப்படுத்தி எண்ணத்தைச் செயல்படுத்த வழி பெற்றால் தான்
4.இஜ்ஜீவ உடலுக்குள் உள்ள காந்த மின் அலையின் ஈர்ப்பை அதிகமாகச் சேமிக்க முடியும்.

காற்றிலும்… நீரிலும்… ஒளியிலும்… இக்காந்த மின் அலையின் சக்தி இருப்பதனால் தான் பூமியின் ஜீவித சக்தியே சுழன்று ஓடுகின்றது.

மின்சாரம் காண… “இச்சக்தி அலையை அதிகமாகக் குவித்து” அதனை ஒளியாக்கித் தருகின்றனர் செயலுக்குகந்தபடி எல்லாம். அதே காந்த மின் அலையின் சக்தி தான் ஒவ்வொரு ஜீவத் துடிப்பிலும் உள்ளது.

நம் ஜீவ உடலுக்குள் உள்ள மின் அலையைக் காட்டிலும் மின் அலையைக் குவித்து மின்சாரமாகச் செயலாக்க அந்தக் காந்த மின் அலை உடலில் ஏறும் பொழுது (CURRENT SHOCK) அந்த ஜீவ உடலில் உள்ள அலையையும் எடுத்துக் கொண்டு உடலை ஜீவனற்றதாக்கி விடுகின்றது.

காந்த மின் அலை இல்லாவிட்டால் ஜீவத் துடிப்பே இல்லை.

எந்த வீரிய சக்தி கொண்ட மின் அலையும் உலர்ந்த மரத்திலும் ஜீவ சக்தியைப் பிரித்துப் பல உஷ்ணங்களை ஏற்றி வடிவமைத்த கண்ணாடிகளிலும் பாய்வதில்லை.

இதுவே சிறிது ஈரச்சத்து அதிலிருந்தாலும் உடனே அம்மின் அலை பாய்கிறது. இம்மின் அலையின் சக்தி எல்லா ஜீவ சக்தியிலும் அதனதன் வளர்ச்சிக்கொப்பக் கூடியும் குறைந்தும் உள்ளது.

1.இம்மின் அலையை எடுக்கும் முறையைக் கொண்டு
2.நம் எண்ணத்தை ஞானத்தில் செலுத்தினால் தான்
3.ஞானத்தின் ஈர்ப்பு நமக்கு ஜீவ சக்தியின் சுவாச அலையில் தாக்கி
4.சுவாச அலையினால் நாம் எடுக்கும் எண்ணம் கொண்டெல்லாம் நம் உயிரணுவுடன் மோதி
5.நாம் எடுக்க வேண்டிய ஞான சக்தியின் ஒளி காந்த மின் அலையை
6.நம் ஜீவ உயிரும் இந்த உடலின் பல கோடி அணுக்களும் எடுக்க முடியும். (இது முக்கியமானது)

இதன் தொடர்ச்சியை மேன்மேலும் கூட்டிச் செயல்பட்டு இந்த உடல் என்ற கூட்டை அழியா உடலாகக் காயகல்பத்தை உண்டு தான் போகனும்… கொங்கணவனும்… இவர்களின் நிலையை ஒத்த பலரும் செயல்பட்டனர்.

இச்சக்தி மின் அலையைப் பெறவே சித்து நிலை பெற்ற சப்தரிஷிகளுக்குள் ஒவ்வொருவருக்கும் அவரவர்கள் சென்ற வழி முறையின் ஈர்ப்பு சக்தியில் மாற்றம் இருந்தாலும்
1.அவ்வழித் தொடர் ஞானத்தில் சுழன்ற பிறகு ஒரே நிலையில் தான்
2.”ஒரே நிலையில் தான்” என்பது ஒரு நிலையான காந்த மின் அலையின் தொடர்ச்சியுடன் தான் கலந்தார்கள்.

ஆண்டவனின் சக்தியை ஒன்றே குலம்… ஒருவனே தேவன்…! என்றும் அவ்வாண்டவனுடன் கலப்பதற்கு ஜோதி நிலை கண்டால் அச்சக்தியைப் பெறலாம் என்றும் அன்று உணர்த்தினார்கள்.

அஜ்ஜோதி நிலை பெறும் வழித் தொடர் என்னப்பா…? ஜோதி நிலை பெற்று விட்டால் ஆண்டவனாகி ஆண்டவனுடன் கலந்து நின்று முற்றுப் பெறுவதுவா…?

ஆண்டவனின் சக்தி ஒவ்வொரு ஜீவத் துடிப்பிலும் இக்காந்த மின் அலையின் சக்தியுண்டு. ஆனால் அச்சக்தியை உணர்ந்து நம் ஜீவாத்மா உயிர்ச் சக்தியை நாம் எடுக்கும் எண்ண ஜெபத்தால் கூட்டி இந்த உடலில் உள்ள எல்லா உயிரணுக்களும் (பன்னிரெண்டு குண அமிலங்களும்) அச்சக்தி அணுவை வளர்த்துக் கொள்ளும்படி செய்ய வேண்டும்.

ஆனால் நம்முள் உள்ள பன்னிரெண்டு வகை குண அமிலத்தை அதனதன் குணத்தின் செயலுக்கே நம் உணர்வையும் எண்ணத்தையும் செலுத்தினோம் ஆனால் இதே சுழற்சி வட்ட வாழ்க்கையில் தான் சுழல முடியுமே அன்றி பூமியின் ஈர்ப்பிலிருந்து மீளும் வழி இல்லை.

ஆக.. இந்த உலக ஆத்மாக்களின் குன்றிய எண்ணச் சுழற்சி பேராசை வாழ்க்கையில் தன்னையே மரித்துக் கொள்வதோடு அல்லாமல்…
1.மெய் ஞானத்தை உணர்த்தி உலகாயும் ஒளியாயும் நீராயும் காற்றாயும் நாம் வாழ வழி அமைத்த சப்தரிஷிகளின் சக்திக்கே…
2.தன்னை வளர்த்துப் படைத்த சக்திக்கே… ஊறு விளைவிக்கின்றான் இன்றைய மனிதன்.

தன் ஞானத்தை இக்காந்த மின் அலையின் ஈர்ப்பைப் பெற வளர்த்துக் கொள்ளவும் ஒவ்வொரு ஜீவனுக்கும் முடியும். ஆனால் ஞானத்தை வளர்க்கவும் செயலாற்றவும் முடியாத இயற்கையிலே பல சக்திகளை அறிந்த மிருக ஜெந்துக்களுக்கு நமக்குள்ள (மனிதன்) சந்தர்ப்பம் இல்லை.

ஆனால்….
1.நம்மில் நாம் எந்த ஆண்டவனைக் காணத் துடிக்கின்றோமோ
2.அவ்வாண்டவனால் நமக்குள் பல சக்தி அலைகளை படைக்கப் பெற்று வழி வந்த நாம்
3.நம் நிலையை உணராமல் இன்று வாழ்கின்றோம்.