துன்பம் வரும் நேரத்திலே யாம் (ஞானகுரு) சொன்னதை நினைவுக்குக் கொண்டு வாருங்கள்

துன்பம் வரும் நேரத்திலே யாம் (ஞானகுரு) சொன்னதை நினைவுக்குக் கொண்டு வாருங்கள்

 

உங்கள் வாழ்க்கையில் அறியாது வரும் துன்பத்தைத் துடைக்கத் தான் அருள் ஞானிகளுடைய சக்திகளை வாக்காகக் கொடுத்துக் கொண்டு வருகின்றோம்.

திட்டியவர்களையோ குறை சொல்பவர்களையோ நீங்கள் எண்ணும் பொழுது துன்பங்கள் எப்படி உண்டாகின்றதோ… அந்தத் துன்பம் உண்டாகும் நேரத்திலே யாம் (ஞானகுரு) சொன்னதை நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.

1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நான் பெறுவேன்
2.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
3.மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் சொல்லும் செயலும் புனிதம் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.
4.உங்கள் துன்பங்கள் உங்களை விட்டு அகலும்.

ஏனென்றால் வான்மீகியோ வியாசரோ “எல்லாம் தெரிந்து” அவர்கள் அந்த நிலை பெறவில்லை.
1.சமைத்து வைத்தது… “சப்தரிஷி மண்டலத்தில் இருக்கக்கூடிய மெய் ஞானிகள்”
2.அந்த உணர்வின் மணம் அங்கிருந்து வெளிப்பட்டது.
3.வெளிப்பட்டதை அந்த சந்தர்ப்பம் யாரெல்லாம் எடுக்கின்றார்களோ அவர்கள் ஞானியாகின்றார்கள்.

அது போன்று தான் இந்தச் சந்தர்ப்பம் உங்களுக்கும்…! எண்ணி எடுக்கப்படும் பொழுது நீங்களும் அந்த ஞானியாக முடியும் அத்தகைய நிலை நீங்கள் பெற வேண்டும் என்பதுதான் எம்முடைய ஆசை…!

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். வாழ்க்கையில் வரக்கூடிய இருளை நீக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்துங்கள்.
1.மகரிஷிகளின் அருள் ஒளி பெறுவேன்
2.என் பேச்சால் மூச்சா’ல் உலகம் நன்மை பெறச் செய்வேன்
3.இந்த உடலை விட்டுச் சென்றால் விண்ணின் நிலைகளை நான் அடைவேன்.
4.எந்த மகரிஷி வழி காட்டினானோ அவன் வழியிலே செல்வேன்
5.மெய் வழியிலே நான் செல்வேன்… மெய் ஒளி பெறுவேன்…!

உயிர் விண்ணிலே ஒளியாகத் தோன்றியது… பூமிக்குள் விஜயம் செய்து உடல் பெற்றது… மனித உடல் பெற்ற நிலையில்
1.உணர்வுகள் அனைத்தையும் “உயிரைப் போன்ற ஒளியாக மாற்றி விண் செல்வேன்…” என்ற
2.இந்த உணர்வுகளை உங்களுக்குள் ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

எது நிறைவேற வேண்டும் என்று நான் (ஞானகுரு) ஆசைப்பட்டேனோ அதற்காக வேண்டி குருநாதர் காட்டிய வழியில் உங்கள் உயிரைக் கடவுளாக மதிக்கின்றேன்… உங்கள் உடலை ஆலயம் என்று மதிக்கின்றேன்… உங்களுக்குள் இருக்கக்கூடிய குணங்களைத் தெய்வங்களாக மதிக்கின்றேன்…!

நீங்களும் இதே போன்று உயிரைக் கடவுளாக வைத்து உடலை ஆலயமாக மதித்துப் பிறரிடமிருந்து தீய உணர்வுகள் வந்தாலும்… அவர்கள் தீமையாகப் பேசினாலும்… உங்கள் உடலுக்குள் சேராதபடி மாற்றிக் கொள்ளுங்கள்.

பிறருடைய உணர்வுகளை நாம் சேர்க்க வேண்டியது இல்லை. உயிரான ஈசனிடம் வேண்டி அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெருக்கிப் பிற உணர்வுகள் உள்ளே புகாது தடுத்துக் கொள்ளுங்கள்.

1.நமது குருநாதர் காட்டிய அருள் வழிப்படி “அவரின் துணை கொண்டு”
2.மெய் அறிவின் ஆற்றலைப் பெறும் தகுதியின் வித்தை செம்மையானபடி நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

துன்பப்படும் நேரங்களில் எல்லாம் “மகரிஷிகளின் அருளைப் பெறுவேன்…” என்று எண்ணுங்கள்… தீமைகள் புகாது தடுக்க இது உதவும்…!

மனித வாழ்க்கையில் எவ்வளவு கௌரவமாக வாழ்ந்தாலும் உடலை விட்டு உயிர் சென்று விட்டால்… அடுத்து இந்த உடலைத் தூக்கி எறியத்தான் செய்கின்றார்கள்.

எவ்வளவு கோடிப் பணம் சம்பாதித்தாலும் அவர்களுக்கும் இந்த நிலைதான்…! அவர் இறந்த பின் செல்வத்தை மற்றவர்கள் எப்படிப் பங்கிட்டு கொள்கிறார்கள் என்பதையும் பார்க்கலாம். அவர்கள் ஒருவருக்கொருவர் எப்படிச் சாடிக் கொள்கிறார்கள்…? எப்படி வெறுக்கும் நிலை வருகிறது…? என்பதையும் பார்க்கலாம்.

ஆகவே அது போன்ற நிலையில் சிக்காதபடி இந்த மனித வாழ்க்கையில் நாம் சந்திக்கும் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… எங்களைப் பார்க்கும் போது அந்த மகிழ்ச்சியூட்டும் உணர்வாக அவர்களுக்குள் வர வேண்டும் என்ற உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள்.

ஆகவே அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்று உங்கள் மூதாதையரின் உயிரான்மாக்கள் விண் சென்று… விண்ணின் ஆற்றலைப் பெறக்கூடிய தகுதியை நீங்கள் பெற்று… இருளை நீக்கி ஒளியின் தன்மையாக “நீங்கள் விண் செல்லும் நிலைக்கே இதை உபதேசிப்பது…”

நீங்கள் வளர்ச்சியாவது போன்று உங்கள் குடும்பத்தில் குழந்தைகளையும் அவர்களுக்குள்ளும் இந்த உணர்வுகளை வளர்த்திடும் சக்தியாக பிஞ்சு உள்ளங்களிலும் வேரூன்றி வளரட்டும்.

சூரியனின் ஈர்ப்பில் கோள்கள் விளைவது போன்று
1.குழந்தைகள் உங்களுடன் இணைந்து செயல்பட்டுப் பிரகாசிக்கும் சொல் தொடராக அவர்கள் வெளிப்படுத்தி
2.வீட்டுக்குள் நீங்கள் தெய்வமாகவும் வீட்டிற்குள் சுடர் விளக்காகவும்
3.உங்கள் பேச்சும் மூச்சும் உலக மக்களுக்கு இருளை நீக்கிடும் நல்ல உணர்வாகப் படர வேண்டும் என்று வேண்டிக் கொள்கின்றேன் (ஞானகுரு).

நிகழ்ந்து கொண்டிருக்கும் உலக மாற்றத்திற்குப் பின் மனித உரு என்ன ஆகும்…?

நிகழ்ந்து கொண்டிருக்கும் உலக மாற்றத்திற்குப் பின் மனித உரு என்ன ஆகும்…?

 

இன்றைய மனிதக் கரு ஜீவ சக்திகளும்… இப்பூமியில் பிறப்பெடுத்து உடலற்ற ஆத்ம உயிர்களும்…
1.இன்றுள்ள விஷ நிலையான எண்ண வளர்ச்சித் தொடர்பலையினால்
2.இன்றைய அறிவு… ஞான செயல்… திறமை… உருவ அழகு… இவற்றின் நிலை யாவையுமே
3.இனி நிகழப் போகும் பிரளய காலத்திற்குப் பிறகு மாறப் போகின்றன.

மனித உணர்வின் எண்ணமே விஞ்ஞான அணுக் கதிரியக்கச் செயற்கைப் பூகம்ப நிலையாலும்.. லேசர் இயக்கச் செயலுக்காக சூரிய அலையில் பூமிக்கு எவ்வலையை பூமி சமைத்து வடிகட்டிப் பூமி வளர்ந்து வாழுகின்றதோ சூரிய சக்தியிலிருந்து அதைப் பிரித்ததாலும் பல பல மாற்றங்கள் ஆகிவிட்டது.

(அந்த அமில வண்ணம் (ULTRA VIOLET) பிரகாசமான VIOLETt கலர் காட்சியாகத் தெரிகிறது)

இப்படி அந்த அணுக் கதிர்களை விஞ்ஞானச் செயலுக்காகச் சில நாடுகள் பூமி எதைத் தன் ஈர்ப்பிற்கு எடுக்காமல் பூமியின் சுழற்சியில் வடிகட்டி (FILTER செய்து) தன் வளர்ப்பை வளர்த்துக் கொண்டுள்ளதோ அதையே மனித விஞ்ஞானம் தனித்துப் பிரித்து விட்டது… அதனால் விஷம் கொண்ட காற்றாக இன்று மாறி விட்டது.

ஆத்ம ஜீவ வாழ்க்கை சக்தியின் உன்னத ஞான வாழ்க்கையை உணர்ந்து வாழாமல்… செயற்கை வாழ்க்கை விஞ்ஞானச் செயலுக்காக… மனிதனின் தன் நிலை மறந்த “போதை” உணர்வு வலு நிலைக்கு உணவு நிலையாக… விஞ்ஞான அணுக் கதிர்களை உபயோகிக்கும் அளவுக்கு வளர்ந்து விட்டனர்.

நிகரில்லா நிலை பெற்ற.. நித்தியமான நிலையில் வளரும் மனித ஞான வளர்ச்சியையே குரோத வஞ்சனை வெறி தேச மத உணர்வு நிலையில் ஒருவரை ஒருவர் அழிக்க வந்துவிட்டனர்.

தன்னுடைய பேராசையாலும் குரோதத்தாலும் விஞ்ஞான வளர்ச்சியைக் கொண்டு இவ் அணு சக்தியை சூரியனிலிருந்து பிரித்தெடுத்து
1.அழிவுச் சக்திக்காகப் பயன்படுத்துகின்றோம்…! என்ற உண்மையை மறைத்து
2.திரை போட்டு ஆக்கச் சக்தியென்ற வழியைச் சொல்லி
3.மனித விஞ்ஞானம் இன்று வளர்ந்துள்ளது.

அதனால் இன்றைய மனித உணர்வின் எண்ணச் சிதறல்களும் தன்னைத் தான் உணராத நிலையும் ஏற்பட்டு விட்டது.

இத்தகைய தருணத்தில் தனக்குள் உள்ள இறை நிலையை உணர்ந்து… தான் உடல் பெற்று… உணர்வு பெற்று… சுவையும் குணமும் பெற்று… சரீர ஞானச் செயல் கொண்ட மனித வாழ்க்கை உன்னதச் செயலில் இருந்து உயர்வு நிலை கொள்ளும் வழித் தொடரை ஒவ்வொரு ஜீவ ஆத்மாவும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஊசி முனைக்கு மேல் உருவத்தில் ஆயிரம் மடங்கு சிறிதாயுள்ள உயிராத்மா உருவக சரீர ஜெட ஜீவச் செயல் பெற்றுச் செயல் புரியும் உயிராத்மாவை நல்லுணர்வின் ஞான ஜெபத்தால் வளர்த்திட வேண்டும்.

இச்சரீர அணு அனைத்தையுமே உயர் ஞான உணர்வு எண்ணம் கொண்டு செயல்பட்டு ஜோதி நிலையான ஒளி நிலைக்கு ஆத்ம உயிரின் வலுவைக் கூட்ட வேண்டும்.

தெய்வம் என்பது நம் உயிரே நமக்குத் தெய்வம் தான் என்று உணர வேண்டும். ஆகவே… நமக்குள் உள்ள தெய்வ உயிரைப் பிறிதொரு ஈர்ப்புப் பிடியில் தன் உணர்வற்ற இன்பம் என்ற உணரும் சுவை ஈர்ப்பில் சிக்க விடக் கூடாது.

போதை… காமம்… அதி விரைவு… வெறியான சுவை உணவின் இச்சை… போன்ற இவ் இன்ப உணர்வின் தொடர்பிலெல்லாம் எண்ணத்தின் வலுவைச் செலுத்தாமல்
1.தன்னுள் உள்ள இறை உயிர் ஆத்மாவை வலுவாக்கிக் கொள்ள
2.உடலில் உள்ள அணுக்கள் அனைத்தையுமே
3.உயர்வு ஞான நற் குண ஜெப நிலையினாலும்
4.சம நிலைகொண்ட சாந்த உணர்வு வலுத் தொடரினாலும் உயர்த்திட வேண்டும்.

ஏனென்றால்… இன்றுள்ள தன்மை பிரளய மாற்றத்திற்குப் பிறகு பூமியின் மாற்றுச் சக்தியால் பூமி வளர்த்த அணு யாவையும் எப்படி நெற் செடியில் அதற்குகந்த ஆகார நிலை கிடைக்கவில்லை என்றால் “பதர் அரிசி மணி” வளர்கின்றதோ அதைப் போன்று மனித ஆத்ம உயிர்கள் ஜீவ உயிர்கள் யாவையுமே பிறப்புப் பெற்றாலும் சரீரம் எண்ணம் செயல் ஒலி ஒளி ஆகிய எவையுமே இன்றுள்ள நிலை பெற முடியாது…!

தனக்குகந்த ஆகார சக்தி கிடைக்கா விட்டால் காய்கறி கனிகளில் கரடு நிலை தட்டிய காய் கனிகள் வளருவதைப் போன்று தான் வரும்.
1.சில பிராணிகள் ஜீவ சக்தி பெற்றிருந்தாலும் “தேவாங்கு” போன்று
2.அமர்ந்தது அமர்ந்த நிலையிலேயே பிறப்பெடுத்து வாழ்ந்து மடிகின்றதோ
3.அதைப் போன்ற பிறப்பு நிலைதான் பிரளய நிலைக்குப் பின் வரும்.

பிறப்பு நிலை இன்றைய நிலை போல் மீண்டும் வளராது…!

வெப்பத்தைக் கூட்டிக் காந்த சக்தியைக் கூட்டினால் “மகரிஷிகள் உணர்வினைக் கவரும் தகுதி பெறலாம்”

வெப்பத்தைக் கூட்டிக் காந்த சக்தியைக் கூட்டினால் “மகரிஷிகள் உணர்வினைக் கவரும் தகுதி பெறலாம்”

 

காற்றிலே மகரிஷிகளின் அருள் சக்திகள் இருக்கின்றது. அந்த அருள் ஞான வித்துக்களை நீங்கள் பெறுவதற்குத் தான் இந்த உபதேசத்தின் வாயிலாக இப்பொழுது பதிவு செய்கின்றோம்.

உதாரணமாக பலகாரம் சுட வேண்டும்… அச்சு முறுக்கு செய்ய வேண்டும் என்றால் அது கரண்டியை எடுத்துக் காய வைத்துக் கொள்கின்றார்கள் அதற்குப்பின் அதிலே மாவை ஒட்ட வைத்துச் சுடுகின்றார்கள்.

ஆனால் அந்த கரண்டியை காய வைக்காதபடி அதைச் செயல்படுத்த முடியுமா…?

அச்சு முறுக்கு செய்ய வேண்டும் என்றால் அந்த இரும்பு கரண்டியை முதலிலேயே அது சூடாக்கிக் கொள்ள வேண்டும்.
1.அது சூடான பிற்பாடு மாவிலே முக்கினால் சொய்ங்… என்று ஓட்டிக் கொள்கிறது
2.அதற்குப் பின் எண்ணைய்ச் சட்டியிலே அதைச் சுட்டால் முறுக்கு சீராக வரும்… கரண்டியிலிருந்து அச்சு முருக்கு அழகாக விழுகும்.

பக்குவம் தெரிந்தவர்கள் இப்படிச் செய்கிறார்கள்…!.

அச்சு முறுக்கு அவர்கள் சுடுகிறார்கள் என்று நாம் கரண்டியைக் “காய வைக்காதபடி… பச்சையாக வைத்தால்” என்ன ஆகும்…? மாவு ஒட்ட மாட்டேன் என்கிறது கரண்டி சரியில்லை என்று சொன்னால் சரியாக இருக்குமா…?
1.அந்தக் கரண்டி சூடாகி
2.மாவை இழுக்கக்கூடிய அந்தப் பவர் (சக்தி) வேண்டும்.

அதே போன்றுதான் நம்மிடம் எத்தனையோ குணங்கள் இருக்கின்றது சொன்ன முறைப்படி தான் நான் தியானம் செய்கின்றேன் என்று “காந்த சக்தியை எடுக்காதபடி…” தியானம் செய்தால் எப்படிச் சரியாக வரும்…?

1.காந்த சக்தியை எடுத்து நமக்குள் சூட்டை ஏற்றி வைத்துக் கொள்ள வேண்டும்
2.ஓ…ம் ஈஸ்வரா…! என்று உயிரைப் பரிபூரணமாக
2.அந்த உணர்வோடு புருவ மத்தியில் எண்ண வேண்டும்… இது முக்கியம்…!

(“ஓம் ஈஸ்வரா… ஓம் ஈஸ்வரா…” என்று சும்மா வெறுமனே சொல்வதனால் பயன் இல்லை)

1.ஓ…ம் ஈஸ்வரா என்கிற போது நாம் எண்ணியது பிரணவமாகின்றது
2.உணர்வுடன் நினைவை அங்கே செலுத்தப்படும் பொழுது காந்த சக்தி ஓடுகின்றது… இழுக்கக்கூடிய திறனும் கூடுகின்றது.

ஏனென்றால் நாம் எண்ணியது பிரணவமாகின்றது. எந்தக் குணத்தை நாம் எண்ணுகின்றோமோ அது உயிரிலே பட்டு ஜீவன் பெறும் போது பிரணவம். அதற்குப் பெயர் தான் ஓ…!

ஓ…! என்று சப்தமாகி ம்… உடலுக்குள் சென்று அந்த உணர்வின் சத்து அடங்குகின்றது. ஓம் நமச்சிவாய… சிவாய நம ஓம் எந்தக் குணத்தை எண்ணுகின்றோமோ அது நம் உடலாக மாறுகின்றது ஆகையினால் ஈஸ்வரா என்று எண்ணும் போது அந்தச் சக்தி கிடைக்கின்றது.

ஆனால் “அயோக்கியப் பயல்…!” என்று ஒருவனை எண்ணும் பொழுது அவனை நினைத்தாலே எரிச்சல் ஆகின்றது.

அதை மாற்றி அமைக்க… “ஈஸ்வரா…!” என் சொல் பேச்சு அனைத்தும் நல்லதாக இருக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

யாராவது நம்மைக் கெடுதலாக நினைத்தார்கள் என்றால் என் பேச்சு அவர்களுக்கு நல்லதாக இருக்க வேண்டும் என்னைப் பார்க்கும் பொழுதெல்லாம் அவர்களுக்கு நல்ல எண்ணங்கள் வர வேண்டும் என்று இந்த எண்ணத்தை நாம் எண்ணினாலே போதுமானது.
1.காந்தப் புலன்கள் ஈர்க்கின்றது
2.இந்த நல்ல உணர்வின் சக்தி நமக்குள் கூடுகின்றது.

யாருடனாவது சண்டை போட்ட பின்பு பாருங்கள் உங்கள் நெஞ்சுப் பகுதியில் படபட… படபட… என்று துடிப்பலைகள் வரும்.

அப்பொழுது அந்த நேரத்தில் யாராவது வந்து ஒரு நல்ல செய்தியைச் சொல்லட்டும். இந்த நேரத்திற்கு வந்து சொல்கின்றான் பார்…! என்று வெறுப்பு தான் வரும். நல்லதைச் சொன்னாலும் கூட சனியன் எப்படியோ போகுது போ…! என்ற எண்ணம் தான் வரும்.

வீட்டிலே பையன் நம்மிடம் சண்டை போட்டு விட்டான் என்று வைத்துக் கொள்வோம். அந்த நேரத்தில் தொழிலில் வேலை செய்வோர் நம்மிடம் வந்து பத்தாயிரம் ரூபாய் லாபம் வருகிறது என்று சொன்னால் நாம் என்ன சொல்வோம்…?

சந்தோஷமான செய்தியாக அவர் சொன்னாலும் கூட என்னத்தைச் சம்பாரித்து வைத்து என்னத்தைப் பண்ணப் போகின்றோம்…? போய்யா நீ…! என்ற சொல் தான் வரும்.

பத்தாயிரம் ரூபாய் பணம் லாபம் வருகிறது என்று அந்த நேரத்தில் சந்தோஷப்பட முடியுமா…? முடியாது.

ஏனென்றால் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்தாலும் கூட பையன் மீது வெறுப்பாக இருக்கின்றோம் காரணம் நாம் சொன்னபடி அவன் கேட்கவில்லை… நம்மை எதிர்க்கின்றான்… முறைக்கின்றான்…! என்றால் உடனே வெறுப்பாகி விடுகிறது.

அப்போது இங்கே வியாபாரத்தில்
1.லாபம் அதிகமாக வருகிறது சரக்கு எல்லாம் நன்றாக விற்பனையாகிறது என்று சொன்னாலும் கூட
2.இந்த அளவுக்குப் பணம் கிடைக்கும் என்று கணக்குப் போட்டுச் சொன்னாலும் கூட
3.எனக்கு இந்த அளவுக்கு நீங்கள் கமிஷன் கொடுத்தால் கூட போதும் என்று அவர் நம்மிடம் விவரங்களை எல்லாம் சொன்னாலும் கூட
4.எனக்கு எல்லாம் தெரியும்… நீ உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போய்யா…! என்று
5.பணம் அதிகமாகக் கிடைக்கிறது என்று சந்தோஷப்பட முடியாதபடி உதறித் தள்ளும் உணர்வு தான் வரும்.

ஏனென்றால் பையன் மீது இருக்கும் வெறுப்பு நம்மை இவ்வாறு இயக்கி விடுகின்றது. பணம் சம்பாதிக்கும் எண்ணத்தையும் அடுத்து மாற்றுகிறது.

இது எல்லாம் நடைமுறையில் ஒவ்வொருவரும் செய்வதைத் தான் சொல்கின்றேன்.. நான் புதிதாக ஒன்றும் சொல்ல வரவில்லை. இதைத் தான் அனுபவம் என்று சொல்வது.

உங்களுக்கும் இப்போது தெரிகின்றது இதை மற்றவர்களுக்கும் சொல்லத் தெரிய வேண்டும்.

இதிலிருக்கும் உண்மைகள் இன்னென்ன மாதிரி இருக்கின்றது என்று பிறருக்குச் சொல்லிச் சொல்லி… ஞானிகள் காட்டிய வழியில் திரும்பத் திரும்ப நாம் செயல்படுத்தினோம் என்றால் “அந்த ஞானம் நமக்குள் தன்னிச்சையாக வரும்…”

ஈஸ்வரா என்று உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஒவ்வொரு நொடிப் பொழுதும் எடுத்துக் கொண்டே வந்தால்
1.அந்த ஞானிகள் உணர்வுகள் உயிரிலே பட்டு
2.அந்த உணர்ச்சியில் தூண்டப்பட்டு அந்த ஞானத்தின் தொடராக அது வரும்
3.மற்றவர்களுக்கு தெளிவாகவும் அமைதியாகவும் எடுத்துச் சொல்லக்கூடிய நிலையாக வரும்.

தொடர்ந்து இதைச் செய்தால் உயர்ந்த சத்தாகவும் உங்களுக்குக் கிடைக்கின்றது உங்கள் சொல் அனைவரையும் காக்கக் கூடிய சக்தியாகவும் வரும்…!

எங்கள் சாமி (ஞானகுரு) பிரமாதமாகப் பேசுகிறார் என்று சொல்வதை விடுத்து விட்டு சாந்தமான நிலைகள் கொண்டு அருள் உணர்வுகளை எடுத்து வளர்த்து… எல்லோரையும் பெறச் செய்யும் அந்தப் பக்குவத்தினை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

எல்லாவற்றையும் பகுத்தறிந்து வளர்ச்சியாக்கும் விஞ்ஞானம் மனிதனுக்கு அடுத்த வளர்ச்சி நிலைக்கு ஏன் செல்லவில்லை…?

எல்லாவற்றையும் பகுத்தறிந்து வளர்ச்சியாக்கும் விஞ்ஞானம் மனிதனுக்கு அடுத்த வளர்ச்சி நிலைக்கு ஏன் செல்லவில்லை…?

 

பக்தி மார்க்கத்தில்… ஜெப நிலையில்… மந்திரத்தை ஜெபித்துக் கொண்டே எத்தனையோ காலங்களாகத் தெய்வ சக்தி கிட்டும் என்ற எண்ணத் தொடரில் சுழற்சி வட்டத் தொடரில் ஜெப மந்திரங்களை ஓதி யோக நிலை பக்தி நிலை என்ற நிலையில் எல்லாம் கால நிலையைக் கடத்தி ஆழ் நிலையில் இச்சரீரத்தையே பயிற்சி செயலில் ஆரோக்கிய நிலையில் செயலாக்கி இருந்தாலும் காணப் போகும் பலன் என்ன…?

1.எண்ண நிலையைக் கொண்டு அறியும் ஞான வழியின்
2.காந்த மின் நுண் அலை கூடிய வலுவாகிய உடல் சமைப்பின் ஆத்ம உயிரின் வலு நிலை பெற்றால் தான்
3.பக்தி மார்க்கத்திலும் யோக மார்க்கத்திலும் மற்ற எந்த விஞ்ஞான மார்க்கமானாலும்
4.இத்தொடர் நிலையை மனித ஆத்மா பெற்றதென்றால்தான்
5.மனித சக்தியின் தெய்வ சக்தியை இவ்வுடல் சமைக்கும் உணர்வின் எண்ணத்தை – அறியும் ஞான ஆற்றலை
6.அறிந்தோரின் ரிஷி சமைப்பின் அலைத் தொடரை உணர்வின் எண்ணத்தில் அறிந்து உயர்வு நிலையை நாம் பெற முடியும்.

இப்பூமி சமைக்கும் வழித் தொடரில் சுழலும் எண்ண நிலையை இப்பூமியையே இயக்கவல்ல உயர் வழியை அறிய இவ்வண்ணத்தைக் கொண்டு அறியும் நிலை கொண்டு செயல்படுத்த வேண்டும்.

அதற்காக வேண்டி இச்சரீரக் கோளத்தின் அணுக்கோடிகளுக்கெல்லாம் ரிஷித் தொடர்பை ஏற்படுத்தி உயர் ஞானம் அறிந்த அந்தச் சமைப்பு நிலை கொண்டு
1.இச்சரீரத்தைக் கொண்டே உயர்வு நிலை பெறவல்ல செயலுக்கு
2.நம் உணர்வின் எண்ணம் அறியும் தன்மை கொண்டு
3.நம் தியான நிலை செயல்பட வேண்டும்.

பொருள் சேர்க்கையும்… சரீர பிம்பத்தைக் காக்கும் வழி முறையும்… இத்தொடரில் வாழ்க்கை நிலையில் மோதப்படும் வழி முறைக்கு மட்டும்… எண்ணத்தின் உணர்வைச் செலுத்திச் சுழல் வட்டத்தில் சுழலும் வாழ்க்கையில்…
1.பிறப்பும் இறப்பும் இயற்கை நிலை என்று எண்ணத்தைச் செலுத்தி விடாமல்
2.எண்ணத்தின் ஞானத்தைக் கொண்டுதான் இயற்கை நிலையே உருப்பெறுகின்றது…! என்பதை மனிதன் உணரல் வேண்டும்.

ஆதிசக்தியின் அமில சக்தி உருவாகிப் பல கோடி மாற்றங்களில் சுழலுகின்ற சுழல் வட்டத்தில்… மனித எண்ணத்தைக் கொண்டு அறியும் வழித் தொடரில் உருவாகும் உயர்வு நிலை சமைப்பு தன்மை மாறவே… ஒன்றில் இருந்து ஒன்று மாற “இவ்வெண்ண நிலையின் தொடர் நிலை உருவாக்கித் தந்த உரு நிலை தான் இப்பூமியின் நிலை…!”

பிறப்பு இறப்பு இயற்கை என்றால்…!
1.இயற்கையாக வாழ்க்கை நிலையை மனிதன் ஏன் ஒன்றி விடாமல்
2.ஒவ்வொரு செயலையும் பக்குவம் கொண்டு பகுத்தறிவினால் செயல்படுத்துகின்றான்…?

விஞ்ஞானம்… மருத்துவம்… விவசாயம்… போன்ற எல்லா துறைகளையும் மனிதனின் எண்ணம் பகுத்தறியும் நிலைக்குச் செல்லும் பொழுது
1.மனித சரீரத்திற்கு அடுத்த உயர்வு நிலைக்கு
2.தன் பகுத்தறிவின் ஞானத்தை ஏன் செலுத்தவில்லை…?

நதி மூலமும் அகஸ்தியன் தான்… ரிஷி மூலமும் அந்த அகஸ்தியன் தான்…!

நதி மூலமும் அகஸ்தியன் தான்… ரிஷி மூலமும் அந்த அகஸ்தியன் தான்…!

 

அகஸ்திய மாமகரிஷி அவர் வாழ்ந்த காலத்தில் இந்தப் பூமியில் உள்ள மலைப்பகுதிகளில் எல்லாம் சுழன்று வந்து பல பல ஆற்றல்மிக்க சக்திகளைப் பெற்றார்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குக் காட்டிய அருள் வழிப்படி
1.பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் கண்டறிந்த விண்ணின் ஆற்றல்மிக்க உணர்வின் தன்மையை
2.இங்கே பாபநாசம் மலைப் பகுதியில் நாம் அமர்ந்து மீண்டும் அந்த உணர்வின் ஒலிகளை எழுப்பப்படும் பொழுது
3.இங்கே மீண்டும் அது ஜீவன் பெறுகின்றது.

குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் அதை நினைவுபடுத்தும் போது அந்த உணர்ச்சியின் வேகம் அதைப் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்ச்சியை உங்களுக்குள் தூண்டும்படி செய்கிறோம்.

இங்கே படர்ந்துள்ள பதிந்துள்ள அந்த அகஸ்தியன் உணர்வுகளுடன்… குரு உணர்வுகளைக் கலந்து அதனுடன் இணைக்கச் செய்து தான் யாம் (ஞானகுரு) உபதேசிக்கின்றோம்.

எம்முடைய உபதேசத்தைக் கூர்ந்து கவனிக்கப்படும் போது
1.உங்கள் எண்ணங்கள் அந்த மகரிஷியின் உணர்வுகளை ஈர்க்கும் தன்மையாக
2.அதை நுகரும் நிலையும் கவரும் நிலையும் வருகின்றது.

அகஸ்திய மாமகரிஷி பெற்ற அந்த அருள் சக்திகளை ஊழ்வினையாக உங்களுக்குள் பதியச் செய்யும் நிலைக்குத்தான் இங்கே பாபநாசத்திற்கு அழைத்து வந்தது.

காரணம்…
1.அன்று அகஸ்தியன் அவன் தனக்குள் விளைய வைத்த சக்தி வாய்ந்த ஆற்றல்கள்
2.இந்த இடத்தில் (பாபநாசம் மலை) இருக்கும் பாறைகளுக்குள் காந்தப் புலனால் கவரப்பட்டுப் பதிவாகியுள்ளது.

அந்த மகா ஞானி பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் அவன் உடலில் தாவர இனங்களின் சத்துக்களை நுகர்ந்தறிந்தான். அறிந்த நிலைகள் கொண்டு மற்ற தாவர இனங்களை அதனுடன் இணை சேர்த்து “மகா சக்தி வாய்ந்த தாவர இனங்களாக…” (புதிதாக) உருவாக்கினான்.

அதாவது இன்று விஞ்ஞானிகள் மற்ற மற்ற தாவர இன செல்களை இணைத்து எப்படிப் புதிய தாவர இனங்களை உருவாக்குகின்றார்களோ அது போன்ற சக்தி வாய்ந்த தாவர இனங்களின் சத்துக்களை இணைத்து “மிக மிக சக்தி வாய்ந்த தாவர இனங்களாக…” அகஸ்தியன் உருவாக்கினான்.

1.அந்தத் தாவர இனச் சத்துக்களை மனிதர்கள் நுகர்ந்தால்
2.அவர்கள் உடலில் அறியாது சேர்த்ததீய வினைகளை நீக்கிடும் ஆற்றல் மிக்க சக்தியாக ஆது பெருகுகின்றது.
3.அதற்கே அகஸ்தியன் அதை எல்லாம் உருவாக்கினான்.

பிற்காலத்தில் வந்தவர்கள் அனைவரும் அத்தகைய தாவரங்களைப் பயன்படுத்தி வேருடன் அறுத்து அழித்து விட்டார்கள். அவைகள் அதற்குப்பின் வளர்ச்சி இல்லாது அதை வளர்த்திடவும் அதைக் காத்திடவும் நிலையில்லாது சென்று விட்டது. அகஸ்தியனால் உருவாக்கப்பட்ட பல தாவர இனங்கள் காலத்தால் இப்படி அழிந்துவிட்டது.

இந்த மலைப்பாங்குகளில் அன்று அகஸ்தியன் தன் உணர்வின் ஆற்றலால்… அவன் எண்ணத்தால் சுவாசித்து… பல பல தாவர இனங்களின் சத்துக்களை அவன் இணை சேர்த்துச் சக்தி வாய்ந்ததாக மாற்றி அமைத்தான்.

இந்தப் பூமியில் அகஸ்தியன் சென்ற அனைத்து மலைப்பகுதிகளிலும்… இப்படிப் பதியச் செய்தான்.

வானில் மேகங்கள் கூடி வந்தாலும் மலைப் பாங்குகளில் வரும் பொழுது
1.அங்கே அகஸ்தியனின் உணர்வலைகள் பதிந்து இருப்பதனால்
2.தாவரங்கள் அந்த மேகங்களைக் கவர்ந்து அழைத்து வரப்படும் போது
3.பாறைகளுக்குள் அகஸ்தியனின் உணர்வுகள் பட்டதைக் கவர்ந்து “ஜீவ நீராக… ஜீவ நதியாக உருவாகின்றது…”

அப்படி உருவாகும் ஜீவித நீரால் அப்பகுதியில் மற்ற தாவர இனங்கள் புதிதாக ஜீவன் பெறும் நிலையும் வந்தது. அதே சமயத்தில் அகஸ்தியன் எந்தெந்தத் தாவர இனங்களை உருப்பெறச் செய்தானோ அதற்கு நீரே இல்லை என்றாலும் மேகங்களைக் கூடச் செய்து ஜீவித நீர் கிடைக்கும் அளவிற்கு ஆற்றல் கொண்டதாக அவன் உருவாக்கினான்.

1.வெறும் கற்பாறைகளாக இருந்தாலும் அந்தப் பாறைகள் மேகங்களைக் கவர்ந்து நீராக வடிக்கச் செய்கின்றது
2.தான் உருவாக்கிய அந்த உயர்ந்த சக்தி வாய்ந்த தாவர இனங்களை வளர்த்திடுவதற்காக
3.அவ்வாறு செய்தான் அன்றைய முதல் மெய் ஞானியான அகஸ்தியன்…!

புலனை அடக்கும் ஆழ்நிலை தியானத்தால் அமைதி கிடைக்கும்… “உயர்வு கிடைக்காது…!”

புலனை அடக்கும் ஆழ்நிலை தியானத்தால் அமைதி கிடைக்கும்… “உயர்வு கிடைக்காது…!

 

உதாரணமாக நத்தையை ஒத்த பல பிராணிகள் உருவ நிலைக்குகந்த உணர்வு நிலையிலேயே அதன் உருவத்திலேயே “பாதுகாப்பபு நிலை கொண்டு” (ஓடு) அறிவின் எண்ண நிலை பெறுகின்றது.

எப்படிப் பாலை உஷ்ணப்படுத்திய பின் அதன் ஆவி நிலை வெளிப்பட்டு ஏடு (ஆடை) நிலை அடைகின்றதோ அந்நிலையின் தொடர் போன்று
1.தாய் எடுக்கும் சுவாசத்தில்
2.தாயின் உடல் நிலையின் உதிரத் தொடர்புடன் உருக்கொள்ளும் கர்ப்ப சிசு
3.உதிரத்தின் தொடர்பு உஷ்ண நிலை பெற்று
4.அதனுடைய அமில நிலைக்கொப்ப உராய்வு நிலை கொண்டு உருவ நிலை (மனித உடல்) பெறுகிறது.

அதனின் வளர்ச்சி நிலை முற்றிய தன்மையில் உணரும் நிலையும் எண்ண நிலையும் பெறுகின்றது. “எண்ண நிலை” என்பது அதனுடைய ஆவி (ஆத்ம) நிலையிலேயே அதற்குத்தக்க எண்ண நிலையில் தான் தாய் உடலில் புகுந்து பிறப்பிற்கே வருகின்றது.

பிறப்புத் தொடரில்… ஜீவ சக்தி கொண்ட சரீர நிலை முற்றிய நிலையின் பிறப்பு நிலை கொண்ட பிறகு தான் சரீர மனித நிலை செயல் நிலை யாவும் “பகுத்தறிந்து…” செயல் கொள்கின்றன.

1.இதற்குப் பின் வளரும் நிலைக்கும்…
2.வழி கொள்ளும் வளர்ச்சி நிலைக்கு வழி காட்டும் நிலைக்காகவும் தான்
3.இயற்கை நிலையையும் இயற்கைத் தொடர்பு நிலையையும்
4.அதில் வளர்ச்சி கொண்டு மாற்றப்படும் தொடர் நிலையையும் உணர்த்தி வந்தேன் (ஈஸ்வரபட்டர்).

ஆனால் தான் வளர்ந்த தொடரிலேயே பகுத்தறியும் அறிவு நிலை கொண்ட மனித ஆத்மாவும் “இயற்கை” என்ற பிடிப்பிலேயே சிக்குண்டு வாழ்ந்து விட்டால் “பிறப்பின் பலன்” இல்லாது போகின்றது.

ஏனென்றால் எண்ணத்தின் தொடர்பைக் கொண்டு உருவாக்கும் ஆதி சக்தியின் அகில சக்தியுடன் தெய்வ சக்தி கொண்டு படைப்பு நிலையைப் படைக்கவல்ல சக்தி கொண்ட பகுத்தறியும் எண்ணத்தால் உயரவல்ல நிலையை அடைய வேண்டும்.

இயற்கை என்ற சுழற்சியிலேயே சுழன்று… தன் சக்தியை உணராமல்… முக்தி நிலை பெறும் மார்க்க நிலைக்குச் சிலரின் உபதேச நிலைகளைக் கேட்டு… ஐம்புலனை அடக்கி ஆழ்நிலையில் உயர்வு நிலை பெறலாம்…! என்ற வழி காட்டும் தொடரில் சென்றால்… சரீர வாழ்க்கை நிலையில் மட்டும் தான் ஆரோக்கிய நிலையும் அமைதியும் கிட்டும்.

உயர்வு நிலைக்குச் செல்ல வேண்டும் என்றால்
1.உணர்வின் எண்ணம் பகுத்தறியும் எண்ணத்தால்
2.அறியும் ஞான வழியில் தான் உயர்வு நிலை கொள்ள முடியும்.

ரோட்டில் செல்லும் போதெல்லாம் செய்ய வேண்டிய ஆத்ம சுத்தி

ரோட்டில் செல்லும் போதெல்லாம் செய்ய வேண்டிய ஆத்ம சுத்தி

 

இந்த உபதேசத்தின் வாயிலாக அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை உங்களைப் பெறச் செய்து கொண்டிருக்கின்றோம். நீங்கள் எண்ணும் போதெல்லாம் அதைப் பெறக்கூடிய தகுதியாக இது அமைகின்றது.

நீங்கள் எங்கே வெளியே சென்றாலும்
1.பஸ்ஸிலே சென்றாலும்… மற்ற வாகனத்தில் சென்றாலும்
2.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஆத்ம சுத்தி செய்து கொண்டே செல்லுங்கள்
3.ஆத்ம சுத்தி செய்துவிட்டு நாங்கள் பார்ப்போர் அனைவரும் நலம் பெற வேண்டும்…
4.வாகனத்தில் செல்வோர்கள் எல்லாம் நலம் பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் செல்லுங்கள்.

ஏனென்றால் ரோட்டிலே வாகனத்தில் செல்லும் நிலையில் எத்தனையோ விபத்துக்களும் சேதாரங்களும் ஆகிறது. அதையெல்லாம் மறந்துவிட்டு நாம் எந்த வாகனத்தில் சென்றாலும் ஆத்ம சுத்தி செய்து கொண்டே செல்ல வேண்டும்.

பஸ்ஸிலே பயணம் செய்வோர் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் அவர்கள் உடல் நலம் பெற வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.

நாம் வாகனத்தில் போகும் பொழுது…
1.ரோட்டிலே “பாதசாரிகள்” நடந்து செல்பவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.அவர் வாழ்க்கையில் மகிழ்ந்திருக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
3.உங்கள் எண்ணம் உங்களையும் காக்கின்றது… பஸ்ஸிலே பயணம் செல்வோரையும் காக்கின்றது… ரோட்டில் செல்வோரையும் காக்கின்றது.

அதே போன்று பத்திரிக்கையையோ டிவியையோ பார்த்தாலும் அடுத்த கணமே மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள்.

அதற்குப் பின் மகரிஷிகளின் அருள் சக்தி உலக மக்களுக்குக் கிடைக்க வேண்டும். உலகில் அறியாது சேரும் இருள்கள் நீங்க வேண்டும். உலக மக்கள் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்… மன பேதமின்றி வாழும் அந்த அருள் சக்தி பெற வேண்டும். மகரிஷியின் அருள் உணர்வுடன் ஒன்றி வாழ்ந்திடும் அந்த சக்தி உலக மக்கள் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

அப்பொழுது நீங்கள் அதுவாக ஆகின்றீர்கள்…!

இது போன்ற உணர்வுகளை நாம் பெருக்கப் பெருக்க உலகம் எங்கிலும் இந்த அருள் உணர்வுகள் பெருகும். காற்று மண்டலத்திலும் மகரிஷிகளின் அருள் சக்தி அதிகமாகப் பெருகும்.

1.நமது நினைவுகள் அனைத்தும் அந்த மகரிஷியின் அருள் வட்டத்தில் இணையும்.
2.அந்த உடலை விட்டு அகன்றால் வாழ்க்கையில் வரும் எந்தத் துயரங்களும் நம்மைப் பற்றி விடாது அந்த சப்தரிஷி மண்டலத்துடன் இணைகின்றோம்.
3.ஆகவே அந்த மகரிஷிகளுடனே ஒன்றி வாழுங்கள்.

ஆகவே நம் வாழ்க்கையின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அதிகமாகப் பெருக்கப் பெருக இந்தப் பூமியின் பிடிப்பு குறைந்து மிதப்பது போன்று அந்த உணர்வு கிடைத்திருக்கும்… பூமியின் ஈர்ப்பு குறைந்திருக்கும்.

உங்கள் நினைவு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் சென்றால் எப்பொழுதுமே அதைப் பற்றுடன் பற்றுகின்றீர்கள். யாருடைய உணர்வும் இழுத்து விடாதபடி தடுத்துக் கொள்ள முடியும்
1.இதை ஒரு பழக்கமாக நாம் வைத்துக் கொள்ள வேண்டும்…
2.“குரு அருள் உங்களுக்கு என்றுமே உறுதுணையாக இருக்கும்…”

மாறி மாறி ஏற்படும் “வெப்பத்தினாலும்… குளிர்ச்சியினாலும் தான்…” சிருஷ்டியே நடக்கின்றது

மாறி மாறி ஏற்படும் “வெப்பத்தினாலும்… குளிர்ச்சியினாலும் தான்…” சிருஷ்டியே நடக்கின்றது

 

அண்ட கோளத்தில் அமில சுழற்சியில் சுழன்று கொண்டே மிதந்து கொண்டுள்ள அமில நிலைகள் அவை அவை சுழற்சி ஓட்டத்தில் சந்திக்கின்ற சீதோஷ்ண நிலையின் தொடர்பு நிலைக்கொப்ப மாற்றத் தன்மைகளை ஏற்படுத்தி சீதோஷ்ண நிலை மோதலின் தொடரைக் கொண்டு அதனுடைய குணத் தன்மையில் வலுத்தன்மை பெறுகின்றது.

உதாரணமாக நாம் பால்… காபி… கஞ்சி… போன்ற வஸ்துக்களைச் சமைத்து வைத்துள்ள நிலையில் அதைக் காய்ச்சி வைத்துள்ள பாத்திரத்தில் அதைக் காய்ச்சி அப்படியே வைத்தவுடன்
1.அதிலுள்ள ஆவி நிலை வெளிப்பட்டு மேல் நிலையில் “ஆடையாக” திடம் கொண்டு படிந்து விடுகின்றது.
2.உஷ்ணம் உள்ள வரை பாலில் ஆடை கட்டுவதில்லை
3.குளிர்ந்த நிலையிலும் அதே தன்மையில் அது உள்ளது.

ஆனால் உஷ்ணப்படுத்தி ஆறிய நிலையில் அதன் குறிப்பிட்ட கால நிலைக்குப் பிறகு அதன் நிலையில் புளிப்பு நிலை கொண்டு மாற்று நிலை ஏற்பட்டு அதை எடுக்காமல் அப்ப்டியே வைத்து விட்டால் என்ன நடக்கின்றது…?

அதில் இரண்டு மூன்று நாட்களில் பூமியின் உஷ்ண நிலைக்கொப்ப புழுக்கள் வளர்கின்றன. அந்தப் புழுக்கள் வளரும் நிலையில் அதையும் அப்படியே விட்டு விட்டால் மேலும் என்ன நடக்கின்றது…?

அதுவே பாலில் அதிகமாக வளர்ந்த புழு ஒன்றை ஒன்று உட்கொண்டு… அதற்குகந்த ஆகாரம் வேண்டி நிலையில் ஒன்றுக்கொன்று உட்கொண்ட நிலையில் பெரும் புழுக்களாகின்றது.

1.பின் ஆகாரம் கிடைக்காத நிலையில் அதனுடைய ஜீவ நிலை பிரிந்து
2.நீர் சக்தி வெளியாகி படிம நிலைக்கு அந்தப் புழு உட்படுகின்றது.
3.இதற்குப் பிறகும் அத்தொடரில் பல நிலைகள் மாறு கொள்கின்றன.

இத்தொடரைப் போன்றே அண்டத்தின் அமிலத் தொடரும் உஷ்ண நிலைக்கொப்பவும் குளிர் நிலைக்கொப்பவும் அமில நிலைச் சேர்க்கைக்குச் சமைப்பு நிலையில் “பல பல உருக்கள்…” உருப்பெறுகின்றன.

சூரியன் சமைத்த ஆறு வகைக் குணத்தின் வண்ண நிலை பூமி சமைக்கும் ஏழாம் வண்ணமாகி மோதலுடன் தொடர்பெடுத்து பூமியின் ஈர்ப்பு நிலைக்கு பூமித் தொடர்பு கொண்ட பூமி சுழற்சியுடன் சுழலுகின்ற அமிலச் சமைப்பில் தொடர் வளர்ச்சியின் தன்மையைத்தான் “இயற்கை” என்றுணர்த்துகிறோம்.

1.இதிலே மாற்ற நிலைகள் பலவாக உருப்பெற்று மாறி மாறித் தொடர்கின்ற நிலையினில்
2.ஜீவ சக்தி கொண்டு உயிரணுத் தன்மை உருவான நிலையில்
3.உணர்வுத் தன்மை வளர்கின்ற இயற்கைத் தாவர நிலை மாறி
4.சரீர நிலை உணர்வு கொள்ளும் பொழுது அறிவு நிலை கொண்ட எண்ண நிலையும் உருவாகிறது.

தனித்து யாரும் விண் செல்ல முடியாது…!

தனித்து யாரும் விண் செல்ல முடியாது…!

 

இன்று தன் கணவன் என்று இருக்கும்… ஆனால் கணவனுக்கோ தொழில் நிமித்தம் வேலை பார்க்கும் இடங்களில் அவருக்குப் பல தொல்லைகளைக் கொடுத்திருப்பார்கள்.

1.“உன்னை விட்டேனா பார்…?” என்ற நிலைகளில் கோபமாகச் சண்டை இட்டிருந்தால்
2.கடைசியில் உடலை விட்டுச் சென்ற பின் அந்த உடலுக்குள் கணவனுடைய ஆன்மா சென்று விடும்…
3.அவருடைய எண்ணமே எமனாக மாறிவிடும்.

அந்த எண்ணத்தின் வழி மற்றவர் உடலுக்குள் கணவன் சென்று விட்டால் அடுத்து… “தன் கணவன்…” என்று சொல்வதற்கு என்ன இருக்கின்றது…?

அதே போன்று தொழிலில் நஷ்டம் என்று வரும் பொழுது ஒருவர் கணவனுக்கு உதவி செய்கின்றார். இருந்தாலும் வாழ்க்கையின் கடைசியில் உடல் பலவீனமாகும் பொழுது… நன்றிக்காக வேண்டித் தனக்கு உதவி செய்தவரின் எண்ணம் தான் வரும்.

அந்த எண்ணம் வந்து உடலை விட்டுச் சென்று விட்டால் அவர் உடலுக்குள் தான் கணவனின் ஆன்மா செல்லும்.
1.இங்கே இவருக்குக் கணவன்… பிள்ளைகளுக்கோ தந்தை…
2.உடலை விட்டுச் சென்று இன்னொரு உடலுக்குள் போனால் பேய்…!
3.அந்த உடலில் இருந்தும் வெளியே சென்ற பின் மாடோ ஆடோ தான்…!
4.ஆட்டிலோ மாட்டிலோ அங்கே உரு பெற்ற பின் அதன் இனமாக வளர்ந்தது இதற்குத் தாயாக மாறுகின்றது.

அப்போது இங்கே இந்த மனைவிக்குக் கணவன் எங்கே…? மற்றொன்றுக்குத் தான் கணவனாக மாறுகின்றது.

ஆகவே தான் “எமனிடமிருந்து சாவித்திரி தன் கணவனை மீட்டினாள்…!” என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டது.

ஆனால்… சாங்கியப்படி என்ன செய்கிறோம்…? கணவன் இறந்து விட்டால் தாலியை நீக்கிவிடுகின்றோம். ஏனென்றால் கணவனை இழந்தவர் என்று மற்றவர்களுக்குத் தெரிவதற்காக அவ்வாறு செய்து வேதனையைத் தான் உருவாக்குகின்றோம்.

வேதனையை உருவாக்கினால்… கணவனை மனைவி எங்கே மீட்டுவது…? சற்று சிந்தித்துப் பாருங்கள்…!

பல இலட்சம் ஆண்டுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியனும் அவர் மனைவியும் துருவ நட்சத்திரமாக இன்றும் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள். அவர்களைப் பின்பற்றிச் சென்றவர்கள் அனைவரும் சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

இன்று பெரும் பகுதியானோர்…
1.தனித்த ஆளாக நான் கடும் தவம் இருந்து விண்ணுலகம் சென்று விடுவேன்…
2.பிறவா நிலை அடைந்து விடுவேன்…! என்று எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்.
3.முடியாது…! முனி(வனாக)யாகத் தான் மாற முடிமே தவிர உணர்வின் தன்மை “ஒளியாக மாற்றும் திறன் இருக்காது…”

கணவனும் மனைவியும் இரு மனமும் ஒன்றாகி “அந்த உணர்வுகள் உராய்ந்து குழந்தைகள் எப்படி ஜெனிக்கின்றதோ” அதே போன்று இந்த உடலை விட்டு அகன்ற பின் கணவன் மனைவி எவர் முன் பின் சென்றாலும் அங்கே இரு மனமும் ஒன்றாகி ஐக்கியமாகி… ஒரு உணர்வாகும்.
1.என்றுமே ஒளியின் கருவின் அணுவினை உருவாக்கிக் கொண்டே
2.வளர்ந்து கொண்டே செல்லும்…! (துருவ நட்சத்திரம் – சப்தரிஷி மண்டலம்)

தாவர இனங்களிலும் ஆண்பால் பெண்பால் உண்டு. ஆண்பால் வீசும் உணர்வினைப் பெண்பால் கொண்ட செடி கொடிகள் கலந்தால் தான் அதிலே மற்ற வித்துக்கள் உருவாகும். இல்லையென்றால் வித்துக்களைக் காண முடியாது.

அன்று வாழ்ந்த அகஸ்தியனும் திருமணம் செய்துதான் மனைவியை அரவணைத்துத் தன்னுடன் அழைத்துச் சென்றார். அகஸ்தியன் என்று (சொல்) தனித்துச் சொன்னாலும்
1.அவன் உருவாக்கிய உணர்வின் தன்மை கொண்டு தன் மனைவியைத் தன்னுடன் அழைத்தே சென்றான்.
2.அதைத்தான் கவர்ந்து கொண்ட உணர்வுகள் “வசிஷ்டரும் அருந்ததியும் போன்று…” என்று சொல்வது

கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் இரு மனமும் ஒன்றாக இயக்கி… குறைகள் இருப்பினும் அதை நீக்கி… அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை இணைத்துக் குறைகளைக் களைந்து… அந்த ஞானிகள் உணர்வு கொண்டு இந்த வாழ்க்கையிலே ஒன்று சேர்த்து வாழ வேண்டும்

இதற்குப் பெயர் நளாயினி…!ஆகவே என்றுமே இணை பிரியாது ஒருவருக்கொருவர் மதித்து நடக்க வேண்டும் என்பது.

1.குடும்பத்திலே கணவன் மனைவிக்குள் குறைகள் வரும்
2.உடலில் அழகான துணிகளை நாம் அணிந்திருந்தாலும் அதிலே அழுக்குப் படியத்தான் செய்யும்
3.அதை மீண்டும் மீண்டும் நாம் தூய்மைப்படுத்திக் கொண்டுதான் இருக்க வேண்டும்.

இதைப் போன்று தான் வாழ்க்கையில் கணவனுக்கும் மனைவிக்கும் சில சந்தர்ப்பம் வெறுப்பின் நிலைகள் வரும். அதைக் களையும் தன்மையாக “மகரிஷியின் அருள் சக்தி கொண்டு இணைத்து” அதை மாற்றுதல் வேண்டும்.

கணவன் மனைவியின் உணர்வுகளை மதித்து… அதே போல் கணவன் சொல்வதை மனைவி மதித்து… இரு உணர்வு ஒன்றாகும் போது தான்
1.மகிழ்ச்சி என்ற உணர்வும்.. இருளைப் போக்கும் அருள் சக்தியும் கிடைக்கின்றது.
2.காவியத்திலே காட்டப்பட்ட இந்த உண்மைகளை நமக்கு யாரும் தெளிவாகச் சொல்லவே இல்லை.

“மனைவி மட்டும் தான்” என்று ஒருதலைப் பட்சமாக நளாயினி முடவனான கணவனைச் சுமந்து சென்றாள்…! என்று திரிபு செய்துவிட்டனர்.

கணவன் மனைவி இருவருக்குள்ளும் எந்தக் குறைகள் இருப்பினும் ஒருவரை ஒருவர் மதித்து அந்தக் குறைகளைக் களைந்து மகிழ்ச்சியை உருவாக்க வேண்டும்…!

அப்படி உருவாக்க வேண்டும் என்றால் கணவன் மனைவி இருவருமே சமப்படுத்தி இணைத்து… விண்ணுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த சப்தரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும்.

இந்த வாழ்க்கையில் கணவன் மனைவி இருவரும் ஒன்று சேர்ந்து “வசிஷ்டரும் அருந்ததியும் போன்று வாழ்ந்தவர் எவரோ… அவர்கள் தான் அங்கே இருக்கின்றார்கள்…”

அவர்களை எண்ணிக் குறைகளைக் களைய அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைத் தனக்குள் இணைத்து இணைத்து இருள்களை மாய்த்து “ஒன்று சேர்ந்து விண் செல்ல வேண்டும்…!” என்பதுதான் தத்துவம்.

மனதில் ஏற்படும் “இரு நிலைப் போராட்டம்”

மனதில் ஏற்படும் “இரு நிலைப் போராட்டம்”

 

பிறப்பெடுத்த நாளிலிருந்து நாம் இறக்கும் காலம் வரை… “நினைவின் ஓட்ட நிலை” சுழன்று கொண்டே தான் உள்ளது.

எண்ணத்தின் சரீர உணர்வின் நினைவு நிலை இச்சரீர வாழ்க்கையில் மட்டும் தானா…? ஆவி நிலையில் கர்ப்பக் காலத்தில் இதன் ஓட்ட நிலை யாது…? என்ற நிலையை உணரல் வேண்டும்.

ஆத்ம பிம்பத்தில் இந்நினைவலைகளின் சுழற்சி ஓட்ட எண்ண உணர்வு ஒவ்வொரு நொடிப் பொழுதும் ஓடக்கூடிய நிலைக்கொப்ப எண்ணத்தின் நினைவின் ஆணைக்கொப்ப சரீரச் செயல் சொல்லாகவும் செயலாகவும் நடைபெறுகின்றது.

எண்ணத்தின் ஓட்ட இயக்க நிலைக்கொப்பச் சரீரச் செயல் நடக்கவும்… உண்ணவும்… எழுதவும்… சரீரத்தால் இயங்கத்தக்க அவய நிலைகள் எண்ணத்தின் உணர்வு உந்தியவுடன்… தன் தன் செயலைப் புரிகின்றது.

எண்ணத்தின் நினைவோட்டத்தை
1.செய்த நிலை… செய்யப் போகும் நிலை… செய்யும் நிலை என்ற தொடரில் எண்ணத்தைச் செலுத்தும் நிலையிலும்
2.சரீர அங்கத்தின் செயல் நிலை செயல் கொள்ளா எண்ண நிலையிலும்
3.எதில் எதிலெல்லாம் எண்ணத்தின் உணர்வுகள் உருள்கின்றதோ அத்தொடரில் எல்லாம்
4.ஜீவ சக்தியுடன் கூடிய உஷ்ண அலை கொண்ட இச்சரீர ஓட்ட இயக்கத் தன்மையிலேயே
5.சுவாசத்தின் மோதலில் – நடக்கப் போகும் நினைவின் எண்ண உணர்வு செலுத்தக் கூடிய தருணத்திலும்
6.சுவாச அலையின் துடிப்பு நிலை அணு வளர்ப்பைக் கொண்டு
7.நினைவலையின் எண்ண உணர்வை இச்சரீர பிம்ப வாழ்க்கையில்
8.ஆத்மா தன் பதிவு நிலைக்குப் பதித்துக் கொள்கின்றது.

ஆனால் நடை முறையில் அவரவர்கள் உடல் அமைப்பு நிலைக்கொப்ப நினைவின் எண்ண ஓட்டம் சுழன்று கொண்டேயுள்ள நிலையில் “ஒரே சமயத்தில்” இரண்டு நிலையான போராட்ட நிலையும் இச்சரீரத்திற்கு உண்டு.

நினைவின் எண்ணத்தால் ஆத்மாவில் பதியப் பெற்ற எண்ண நிலையும்… எண்ணத்தின் உணர்வை ஆத்மா சமைக்கும் தருண நிலை மோதலில் “பதிவு பெற்ற நிலை… பதிவாக்கும் நிலை…!” இந்த இரண்டு நிலையில் ஒன்றை நாம் முடிவெடுக்க எண்ணத்தைச் செலுத்தும் தருணத்தில் போராட்டமாகின்றது.

எச்செயலுக்காக எண்ணத்தைச் செலுத்திச் செயல் கொள்ள விழைகின்றோமோ அதே செயலைச் செய்விக்க வேண்டிய நிலைக்காக
1.ஆத்மாவின் பதிவு நிலையில் ஏற்கனவே பதியப் பெற்ற நிலையில் எண்ணங்கள் மோதும் பொழுது
உள் மனம் வெளி மனம் என்ற இரண்டு நிலையான ஓட்ட நிலையில் மோதும் எண்ணச் செயலை
3.இச்சரீர பிம்ப வாழ்க்கையில் காண்கின்றோம்.

அதில் சில போராட்ட நிலைகளும் எண்ணத்தில் ஏற்பட்டு அதன் வழியிலும் சில முடிவுகள் எடுக்கின்றோம்.

சரீர அங்கத்தில்… ஆத்மாவின் செயல் இயக்கும் பிறப்பு இறப்பு கால ஓட்டத்தில்… எண்ணத்தின் நினைவோட்ட நிலை “இரண்டு நிலையில்” செயல் கொள்ளும்.
1.இத்தகைய இரண்டு நிலையே
2.மனிதனின் அறிவு… பகுத்தறியக் கூடிய உயர் ஞானத்திற்கு வித்தாக அமைந்துள்ளது.

மிருகங்களின் செயலில் இத்தகைய இரண்டு நிலை கொண்ட எண்ண ஓட்ட அறிவின் பகுத்தறியும் தன்மை நிலை குறைவாக உள்ளது. மேலும் சரீர அங்கத்தின் செயல் தன்மையும் மனிதனை ஒத்த சொல்லாற்றல் நிலையும் குறைவு.

ஆகையினால்… சரீர உணர்வின் நிலைக்கொப்ப ஆத்மாவின் பதிவு நிலை செயலை “எண்ண உணர்வின் மோதாத சரீர எண்ண நிலைக்கொப்ப… ஒரு நிலையில் தான்” மிருகத்தின் செயல் உள்ளது.

ஆனால் மனித ஞானத்தில் உயர்ந்த சக்தி நிலையாக ஆத்மாவின் பதிவு நிலை செயல் ஞானம் அமைந்துள்ளது.

உடலுடன் உள்ள சரீர ஜீவ சக்தியின் செயலினால் மனித ஆத்மாவின் உயர்வு நிலையே “உள் மனம்… வெளி மனம்…” என்ற நினைவின் எண்ண உணர்வு செயல் கொள்ளும் செயலினால்…
1.அறிவின் பகுத்தறிவு நிலை கொண்டு
2.ஞானத்தின் வளர்ச்சியை எந்நிலைக்கும் வளர்த்துக் கொள்ள முடியும்.

உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆத்மாக்கள்… சரீரத்தில் உள்ள பொழுது பதித்துக் கொண்ட அதனின் நினைவோட்டங்கள் ஆத்மாவுடன் பதிவாகி… ஆவி நிலையில் சுழன்று ஓடினாலும் எவ் எண்ண அலையாக இந்த ஆத்மா பதித்துக் கொண்டதோ அதே எண்ண நிலைக்கொப்பத்தான் சுழல முடியும்.

அவ்வாறு சுழலும் நிலையில் தான் பெற்ற சுவை குண எண்ண நிலைக்கொப்பச் சரீரங்கள் கிடைக்கும் பொழுது அவ் ஈர்ப்பில் இவை சிக்கி ஆவி நிலையில் உள்ள ஆத்மா சரீர ஈர்ப்பில் உட்புகுந்து விடுகின்றது.

அதாவது…
1.ஜீவ சக்தி கொண்ட அலை கிடைத்தவுடன்
2.தன் ஆத்மாவின் வலுவை வளர்க்க நீர் சத்தின் உஷ்ண நிலை கிட்டியவுடன்
3.அதனுடைய வளர்ப்பு நிலை வளர்ச்சி கொண்டு பிறப்பு நிலைக்கு வருகின்றது.