சுயநலம் எதுவாக இருக்க வேண்டும்…?

சுயநலம் எதுவாக இருக்க வேண்டும்…?

 

எண்ணத்தால் உருவாக்கப்பட்டது தான் இந்த மனித உடல் “இராமேஸ்வரம்…” ஆனாலும்…
1.மனிதனாக உருவான பின் தீமைகளை நீக்கிய உணர்வுகளைப் பெற வேண்டும் என்று எண்ணத்தால் அதை நுகர்ந்து
2.உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அனைத்தையும் ஒன்றாக இணைத்தால் ஒளி உடல் பெற முடியும்.

அதாவது… எண்ணத்தால் தான் இந்த உணர்வின் தன்மை மனிதனாக உருவாக்கப்பட்டது. அதே எண்ணத்தால் இருளை நீக்கி ஒளி என்ற உடலைப் பெற்றது தான் “துருவ நட்சத்திரம்…”

அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை அனுதினமும் காலையில் எடுத்து நம் உடலில் உள்ள இரத்தநாளங்களில் பெருக்கிப் பழகுதல் வேண்டும்… அந்தக் கணக்கைக் கூட்டுதல் வேண்டும்.

சிவன் ஆலயத்தில் நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்கப்பிள்ளை என்பது போல் நாம எதை எல்லாம் சுவாசிக்கின்றோமோ அதை நமது உயிர் உருவாக்கி விடுகின்றது… உருவாக்கிய பின் உடலாக மாற்றுகின்றது.

மனிதனாக உருப்பெற்ற பின்… இந்த உடலில் வெறுப்பு வேதனை சலிப்பு சங்கடம் கோபம் ஆத்திரம் போன்ற குணங்கள் அதிகரித்து விட்டால் அந்தக் கணக்கின் பிரகாரம்… இந்த உடலுக்குப் பின் வேதனைப்படுத்தியே மற்றொன்றை உணவாக உட்கொள்ளும் அடுத்த உடலை இந்த உயிர் அமைத்துவிடும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபடுவதற்குத்தான்
1.இராமேஸ்வரத்தைக் காட்டினார்கள்…
2.அங்கே துருவ நட்சத்திரத்தினை நாம் நேரடியாக பார்க்கும்படி வைத்தார்கள் ஞானிகள்.

விநாயகர் ஆலயம் இருக்கும் இடங்களிலே அங்கே மரங்களை வைத்து விட்டால் நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தைப் பார்க்க முடிவதில்லை… அல்லது கட்டிடங்கள் இருந்தாலும் அதைப் பார்க்க முடிவதில்லை.
1.ஆக… தனித்து அந்தக் கடல் பாகம் இருக்கப்படும் பொழுது
2.துருவ நட்சத்திரத்தை நாம் தெளிவாகப் பார்க்க முடியும்.

“நேரடியாகப் பார்த்து…” அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் இருக்கக் கூடிய ஜீவ அணுக்கள் ஜீவான்மாக்கள் பெற வேண்டும் எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கி அணுக்கள் அனைத்திலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று நாம் நமக்குள் சேர்க்க முடியும்

ஒவ்வொருவரும் தன் உடலுக்குள் “துருவ நட்சத்திரத்தின் சக்தியைச் சேர்க்க வேண்டும்…” என்பதற்குத் தான் அந்த இடத்தை ஞானிகள் தேர்ந்தெடுத்தார்கள்.

ஆக… மனிதனாக உருவாக்கிய உயிரை நினைவு கொண்டு… உயிரை ஈசனாக மதித்து… ஒளியின் உணர்வைப் பெறச் செய்வதற்குத் தான் இத்தனையும் விளக்கமாகச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

1.நீங்கள் எல்லோரும் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்ற எண்ணங்களை
2.நான் (ஞானகுரு) எண்ணும் பொழுது எனக்கு அந்தப் பலன் கிடைக்கிறது.
3.இது என்னுடைய சுயநலம்…!

ஒருவர் இடைஞ்சல் செய்கின்றார்…! என்றால் அதை நீக்க வேண்டும் என்றோ அல்லது அதற்கு இன்னொரு இடைஞ்சலைச் செய்தோம் என்றால் இதுவும் சுயநலம் தான்.

1.ஆனாலும் அந்த இடைஞ்சலை நீக்கும் சக்தியை எடுத்துச் செயல்படும் நிலை வரும் பொழுது
2.எனக்குள் பல தீமைகளை நீக்கும் சக்தியாக அது வருகிறது.

தீமைகளை நீக்கும் உயர்ந்த சக்திகளை நான் பெறுவது போன்று ஒவ்வொருவரும் நீங்கள் எளிதில் பெற முடியும். பெற்று உயிருடன் ஒன்றிடும் உணர்வுகளைத் துருவ நட்சத்திரத்தைப் போன்று ஒளியாக மாற்றிக் கொள்ள முடியும்.

“ஆதி சக்தியின் சக்திக்கே…” துணை சக்தி கொள்ளும் வடிவெடுக்கும் உருவம் தான் மனித உடல்

“ஆதி சக்தியின் சக்திக்கே…” துணை சக்தி கொள்ளும் வடிவெடுக்கும் உருவம் தான் மனித உடல்

 

தன் உணவைத் தான் எடுக்கப் போகன் செய்த செயல் முறைதான் “முருகா” என்ற சிலை.
1.ஒவ்வொரு சக்திக்கும் (அது) எந்தச் சக்தியாக இருந்தாலும்
2.தன் சக்தி வளர உணவு தேவை.

உணவை எடுக்க அவரவர்கள் உணர்த்திய முறை கொண்டு தான் போகனால் சீனாவில் பல மருத்துவங்களையும் வெடி குண்டுகளையும் முகம்மது நபியின் உடலை எடுத்து முஸ்லீம் நாடுகளில் தன் உணர்வைப் பதித்து உணர்வின் எண்ணமுடன் தன் உணவை எடுத்தார்.

இப்படி… தான் வளர தனக்குகந்த வளர்ச்சியில் ஆகாரமாகப் பல நிலைகளை உணர்வின் எண்ணமுடன் பதியச் செய்த முறை கொண்டு தான் அன்றிலிருந்து இன்று வரை பக்தி முறை தொடர் கொண்டுள்ளது.

பக்தியின் உண்மையான உணர்வின் எண்ணத்திற்கு அவர்களின் சக்தியைக் கொண்டு பக்திக்குகந்த பலனை அளித்துத் தனக்கு உணவை எடுக்கின்றார்.

கவிதைகளையும் பல காவியங்களையும் எழுத்தில் பதியச் செய்து பல சித்தர்கள் அதைப் படிப்பவர்களின் எண்ண உணர்வைத் தனக்குகந்த உணவாக எடுக்கின்றனர் “இன்றும்…!”

அன்றெழுதிய இராமாயணம் கீதை பைபிள் குரான் இவை எல்லாம் காலப் போக்கில் உருக்கள் மாறினாலும் அன்றெழுதிய உணர்வின் சக்தித் தொடரில் படிப்பவருக்கும்… எண்ணுபவர்க்கும்… அவ்வுணர்வின் சுழற்சியைக் கொண்டு…
1.இன்றளவும் அதனை எழுதியவருக்கு உணர்வின் எண்ணத்திற்கு
2.அவர்களுக்கு உணவு கிடைத்துக் கொண்டேயுள்ளது.

இந்தப் பூமியில் பல கோடிச் சித்தர்கள் பல உணர்வுகளில் இருந்தாலும் அவரவர்களின் வளர்ச்சிக் குணத்திற்கு உகந்தபடி எல்லாம் தன் எண்ண உணர்வை என்றும் அழியாத் தொடரிலும் சில சொல் ரூப மந்திரங்களிலும் பதியச் செய்துள்ளான் அந்தச் சித்தன்.

ஐயப்பனை எண்ணும் பொழுது ஒரு கோஷம். முருகனை எண்ணும் பொழுது வேறு ஒரு கோஷம். இப்படி இயேசு கிறிஸ்துவுக்கும் முகம்மது நபிக்கும் புத்தருக்கும் கொங்கணவருக்கும் அவர்கள் பதிய வைத்த இக்கோஷத்தால் இன்றளவும் தன் உணர்வுக்குகந்த உணவை எடுத்து தான் வாழ்ந்து… வளர்ந்து… பலவற்றையும் வாழ வைத்திருக்கின்றார்கள் “சக்தி கொண்ட சக்திகளை…!”

உணவில்லாமல் எதுவுமே வளர்வதில்லை…!

பிம்ப உடல் கொண்ட ஜீவத் துடிப்பு உருவங்களுக்குத் திடமான உணவு தேவை. ஆனால்
1.பிம்ப உடல் கொண்ட திட உணவை உட்கொள்ளும் இந்த மனித சக்தியில் இருந்து தான்
2.உணர்வின் எண்ண உணவையும் உட்கொள்ளும் சக்தி நிலை வளர்கின்றது.

தாவரங்கள் நீரையும் சில எருக்களையும் உணவாக உட்கொண்டாலும் உணர்வுடன் கூடிய எண்ண உணவெடுக்கும் முறை மனித ஞானத்திற்குத்தான் உண்டு. மனித ஞான உணர்வின் உயர் சக்தியில் ஊன்றியுள்ள உண்மைதனை உணரல் வேண்டும்.

மனித நிலையிலிருந்து மாறி மிருக நிலையிலும் மற்ற பட்சிகளின் புழு பூச்சிகளின் நிலையிலும் உணர்வின் எண்ண ஞான உணவெடுக்கச் சக்தியில்லை.

1.ஞானத்தின் உணவை எடுத்துச் சித்தன் என்ற செயலாகிச் சப்தரிஷியின் செயலாக்கி
2.ஆதி சக்தியின் சக்திக்கே துணை சக்தி கொள்ளும்
3.வடிவெடுக்கும் உருவங்கள் தானப்பா… இந்த மனித பிம்ப உடல்…!

பல கோடி ஆண்டுகளாகவே நற்சக்தியின் விதைகள் விதைக்கப்பட்டுப் பலனை எடுத்து… மீண்டும் மீண்டும் பலன் கொண்டு… தான் எடுத்த உயர் ஞானத்தைக் கொண்டு… பல ஞானங்களின் உணவு எடுத்துக் கருவாகி உருவாகி… தனியோரு மண்டலமாக உருவாகிச் சுழன்று கொண்டேயுள்ள சக்தியில் “முதல் எது… கடைசி எது…?”

உங்கள் வழிக்குத் தான் என்னை அழைக்கின்றீர்கள்… குரு அருளைப் பாய்ச்சினாலும் எவரும் மதிப்பதாகத் தெரியவில்லை…!

உங்கள் வழிக்குத் தான் என்னை அழைக்கின்றீர்கள்… குரு அருளைப் பாய்ச்சினாலும் எவரும் மதிப்பதாகத் தெரியவில்லை…!

 

விஷக் கிருமிகள் பரவிக் கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில் அந்த விஷத்தன்மைகள் நமக்குள் வராது தடுத்துப் பழகுதல் வேண்டும் காரணம்… இனி வரும் காலம் மிகக் கடினமாக இருக்கின்றது.

இன்று நாம் வாழக்கூடிய இந்தக் கால கட்டத்தில்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை இந்தப் பூமி முழுவதும் பரவச் செய்து
2.நம் உடலுக்குள் அதிகமாகப் பெருக்கி… அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை
3.நமக்குள் “பெரும் வட்டமாக…” மாற்றிக் கொள்ள வேண்டும்.

எலக்ட்ரிக்… எலக்ட்ரானிக்…! தீமையான உணர்வுகளை மாற்றி அமைக்கும் சக்தியினைப் பெறச் செய்வதற்குத் தான் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.

பதிவானதை நினைவாக்கி உங்கள் உடலை உருவாக்கிய அணுக்களுக்கு… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை பெறச் செய்வதற்குத் தான் இந்தப் பயிற்சியைக் கொடுக்கின்றோம்

மற்ற மார்க்கங்களில் எல்லாம் இப்படிச் செய்ய மாட்டார்கள். காசைக் கொடுத்துத் தான் அதிலே மெம்பராக வேண்டும். அவர்கள் சொல்கிறபடி எல்லாம் கட்டுப்பட வேண்டும்… கட்டுப்பட்டவர்களுக்குத் தான் சொல்லிக் கொடுப்பார்கள்.

ஆனால் யாம் உங்களுக்கு நேரடியாக பப்ளிக்காக (PUBLIC) சொன்னால்…
1.நீங்கள் என்ன செய்கின்றீர்கள்…? அலட்சியப்படுத்தி விடுகின்றீர்கள்…!
2.இங்கே இந்தப் பக்கம் கேட்டு விட்டு அந்தப் பக்கம் காது வழியாக வெளியில் விட்டு விட்டுச் செல்கின்றீர்கள்.

என் குடும்பத்தில் ஒரே தொல்லையாக இருக்கின்றது. என் பிள்ளைகள் இப்படி இருந்து கொண்டிருக்கின்றது. நான் எதைச் செய்தாலும் அது நஷ்டம் ஆகின்றது…! என்று இதைத்தான் இராகமாகப் பாட ஆரம்பிக்கிறீர்கள்.

“நான் (ஞானகுரு) கொடுத்த சக்தியைப் பயன்படுத்துவோம்…!” என்ற நிலை இல்லாது இருக்கின்றது. எவ்வளவோ சிரமப்பட்டுப் பெற்ற… எனக்குள் விளைய வைத்த… அந்த உயர்ந்த ஞானத்தைத் தான் உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.
1.ஆனால் கொடுத்த வித்தை உதறித் தள்ளிவிட்டு உங்களுக்குள் வேதனையைக் கூட்டிக் கொண்டு
2.என்னையும் வேதனைக்கு உள்ளாக்கும் நிலைக்குத்தான் நீங்கள் வருகின்றீர்கள்
3.உங்கள் வழிக்குத் தான் என்னை அழைக்கின்றீர்கள்
4.இருளை நீக்கும் குரு அருளைப் பாய்ச்சினாலும் எவரும் மதிப்பதாகத் தெரியவில்லை
5.இருக்கலாம்… மதிப்பதாக நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கலாம்…
6.ஆர்வம் இருக்கும்…! ஆனால் அப்புறம் என்ன செய்வீர்கள்…?
7.அவன் அப்படிப் பேசினான்… இவன் இப்படிச் செய்கின்றான்…! சும்மா விடுவதா…?
8.கடன் வாங்கிச் சென்றவன் பணத்தைத் திரும்ப கொடுக்கவில்லையே… என்னை ஏமாற்றுகின்றானே…! என்ற
9.இந்த நினைவுகள் தான் வருகின்றதே தவிர நான் சொல்லும் நிலைகளை எடுக்கும் நிலை இல்லை…!

இந்த வாழ்க்கையில் நம்மை அறியாமல் எத்தனையோ தீமைகள் ஆட்டிப்படைக்கின்றது. அதை எல்லாம் மாற்றி அமைக்க அருள் உணர்வுகளைப் பெருக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் முடிவு மிகவும் நெருங்கி விட்டது…!

இன்று இளம் குழந்தையாக இருந்தாலும் சரி… வயது முதிர்ந்தவர்களாக இருந்தாலும் சரி… நம் பூமி கொதிகலனாக மாறிக் கொண்டிருக்கின்றது… விஷத்தன்மைகள் அதிகமாகப் பரவுகின்றது.

இந்தப் பூமிக்குள் மட்டுமல்ல…! இந்தப் பிரபஞ்சத்திற்குள்ளேயே கடும் தீய விளைவுகள் ஆகி அல்லோகலப்படக்கூடிய சந்தர்ப்பங்கள் வந்து கொண்டிருக்கின்றது. யார்… எதைத் தேடி… எதைக் காக்கப் போகின்றோம்…!
1.இது போன்ற நிலைகளை எல்லாம் கடந்து
2.என்றுமே அந்தத் துருவ நட்சத்திரத்துடன் ஒன்றி வாழ நாம் பழகிக் கொள்ள வேண்டும்.

இந்தச் சூரியனே அழிந்தாலும் பிரபஞ்சமே அழிந்தாலும் இந்தப் பிரபஞ்சத்திலே தோன்றிய உயிரணு மனிதனாக வளர்ச்சி அடைந்து.. தன் ஆறாவது அறிவை ஏழாவது… ஒளியாக மாற்றி விண்ணிலே சப்தரிஷி மண்டலமாக வாழ்வது போல் நாமும் அங்கே வாழ முடியும்…! ஏகாந்த நிலையை அடைய முடியும்… எதிர்ப்பே இல்லாத நிலையம் நஞ்சை ஒளியாக மாற்றிடும் திறனும் பெற முடியும்.

அதைப் பெறக்கூடிய தகுதியைத்தான் திரும்பத் திரும்ப உங்களுக்கு இங்கே ஏற்படுத்துகின்றோம்.

“என் உணர்வைப் பெற்றால் தான்…” எனக்கும் உனக்கும் மத்தியில் உள்ள திரை விலகும்

“என் உணர்வைப் பெற்றால் தான்…” எனக்கும் உனக்கும் மத்தியில் உள்ள திரை விலகும்

 

படைப்பின் படைப்பனைத்திற்குமே ஒவ்வொன்றிற்கும் அதன் படைப்புக் குணம்… மணம் உண்டு. கல் மண் உலோகங்கள் அனைத்திற்குமே மணமுண்டு.

மணமில்லா உரு நிலை எதுவுமே பெறுவதில்லை.

நம் பூமிக்கு மட்டுமல்ல… பால்வெளி மண்டலத்திலும்… நட்சத்திர மண்டலங்களிலும்… வளர்ந்த பெரிய மண்டலங்கள் எதுவானாலும்… அதன் ஆரம்ப நிலை அமில ஈர்ப்பு ஜீவத் துடிப்பு மணமுடன் ஒலியாகி ஒளியாகி நீராகும் செயல் தான் கொள்கின்றது.

மணம் கொண்ட வழியிலேயே உணர்வும் பெறுகின்றது. மணத்துடன் கூடிய உணர்வால் தான் உணவையே உட்கொள்ள முடிகின்றது.

இந்நிலையை எதற்காக இங்கே உணர்த்துகின்றேன்…?

1.உன் ஜெப நிலையால் உன் உணர்வின் எண்ணத்தை
2.என் பால் (ஈஸ்வரபட்டர்) செலுத்தி எம் அலையின் தொடரை நீ பெற்றால்
3.உன் உணர்வின் உணவாக எம் அலை பாயும்.

ஒரு பருப்பில் பல பருப்புகள் விளைகின்றன. அதைப் போல்
1.எம் உணர்வை நீ எடுத்து
2.உன் உணர்விற்கு உணவாக ஊட்டம் கொடுத்து உன் வளர்ச்சியை நீ பெற்றால்
3.உனக்கும் எனக்கும் மத்தியில் உள்ள திரை விலகி
4.அனைத்தையும் காணும் “அபூர்வ சக்தியாக” ஞான சக்தியின் சித்து நிலை பெற முடியும்.

பருப்பு பருப்பாகவே இருந்தால் பல பருப்பைக் காண முடியுமா…? பயிர் செய்து பலன் பெற்று பலனின் பயிர் வளர் தொடர்பில்தான்… பருப்பென்ற பருப்பு குணப் பயிர் வளர்ப்பே வளர்ந்து கொண்டேயிருக்குமேயன்றி பயிர் செய்யாமல் பயிர் வளர் தொடர் எதுவும் காண முடியாது.

1.ஒன்றின் தொடர் ஒன்று வளர்கின்றது
2.ஒன்று என்றென்றும் வளர தன் வளர்ப்பிற்கு உணவு தேவை.
3.அதைப் போன்று நாங்கள் (மகரிஷிகள்) வளர உன்னை வளர்க்கின்றோம்.
4.நீ வளர நீயும் வளர்க்க வேண்டும் பிறரை…!

வளர்ப்பின் தொடர் வளர்ப்பு வளர்ந்து கொண்டேயிருந்தால் தான் எந்த ஒரு வளர்ச்சியும் வளர்ந்து கொண்டேயிருக்கும்.

1.பயிர் வளர்ப்பு மட்டுமல்ல….
2.ஜீவித வளர்ப்பு மட்டுமல்ல…
3.மண்டலங்களின் வளர்ப்பு மட்டுமல்ல…
4.ஞானிகளின் வளர்ப்பு மட்டுமல்ல…
5.அவ்வாதி சக்தியின் படைப்பின் சக்திக்கே… படைப்பின் படைப்பாகி பலவற்றின் படைப்பின் தொடர் படைத்துக் கொண்டேயிருக்க வேண்டும்.

வழித் தொடர் வெள்ளாமை ஒவ்வொன்றிலும் வளர்ந்து கொண்டேயிருந்தால் தான் அவ்வளர்ச்சியின் செயல் வளர்ந்து கொண்டேயிருக்கும்.

1.முற்றுப் பெற்று… முக்தி பெற்று… முடிவடையும் சக்தி எதுவுமே இல்லை.
2.முழு முதலாக வளர்வது தான் ஆதியின் அந்தச் சக்தி.

உடல் வளர உணவு தேவை. உணர்வின் எண்ணம் வளர ஞானத்தின் உணவு தேவை. உணர்வின் எண்ணத்தை ஞானம் என்ற உணவை உட்கொண்டு இவ்வுடல் என்ற பிம்ப ஜீவ சக்தி கொண்ட வடிவின் அணுவின் உயிரணுக்களுக்கு ஞானத்தை உணவாகக் கொடுத்து
1.ஞானத்தால் வளர்த்த உடல் அணுக்களைச் சித்து நிலை பெற்றிடவே
2.ஞானம் என்ற உணர்வெடுத்துச் “சித்தன்” என்று உருவாகுங்கள்.

இப்பொழுது புரிகிறதா போகன் அமைத்த முருகனின் சிலை எதற்கு என்று…?

தன் நிலை உயர தன் உணர்வு வளர முருகனைப் படைத்தான் போகன். முருகன் சிலையைப் படைத்து முருகா… என்ற நாத உணர்வு ஜீவ சக்தியை உணவாக உட்கொள்கின்றான் இன்றும் போகன்.

1.ஒவ்வொரு சித்தனும் இந்த ஞான பூமியில் தன் ஞானத்தை வளர்த்துக் கொள்ள
2.தன் வளர்ப்பின் வளர்ப்பு வளர வழிப்படுத்திய உண்மைகள் பல உண்டு.

போகரின் வழித் தொடர் முருகன் முருகனின் உருவத்தை காட்டி உணர்வின் எண்ண ஜீவ உணவை உட்கொள்கின்றான் போகன்.

முருகன் ஆலயம் செல்லும் பக்தர்களில் உணர்வால் உண்மை பக்தி பூண்ட ஆயிரம் பக்தர்கள் சென்றால்…
1.ஆயிரத்தில் ஒன்றிரண்டு பக்திமான்களாவது
2.ஞானத்தின் சக்தி பெறச் செல்வதுண்டல்லவா…!

தன் உணவாக நல் மணிகளைத் தான் உண்டு பல மணிகளைத் தருகின்றான் போகன்.

உணர்வின் வலு கொண்டு உன் எண்ணத்தால்… கண் வழியாக அருளைப் பாய்ச்சு…! என்றார் குருநாதர்

உணர்வின் வலு கொண்டு உன் எண்ணத்தால்… கண் வழியாக அருளைப் பாய்ச்சு…! என்றார் குருநாதர்

 

குருநாதர் காட்டிய அருள் வழியில் நான் இருபது வருடம் முப்பது வருடம் காடு மேடெல்லாம் அலைந்தேன்.
1.ஒவ்வொரு நிமிடத்திலும் எதிர் நிலையான உணர்வுகள் உன் உடலுக்குள் என்ன செய்கின்றது…?
2.இதற்கு மாற்று நீ என்ன செய்ய வேண்டும்… நீ எப்படி இருக்க வேண்டும்…?
3.தீமைகளை நீ எப்படி மாற்ற வேண்டும்…? என்று தான் குருநாதர் காட்டினார்.

ஏனென்றால் பல தொல்லைகள் பட்டேன்… என் குடும்பத்தையே அனாதையாக விட்டு விட்டுத் தான் சென்றேன்.

அவர்களைப் பற்றி எண்ண விடாதபடி செய்தார் குருநாதர். ஆனால் சில சந்தர்ப்பங்களில் அவர்களைப் பற்றி எண்ணும் பொழுது… பாசத்தால் அவர்களின் உணர்வுகள் உன் உடலுக்குள் எப்படி வேகமாக வருகின்றது…! என்றும் காட்டினார் குருநாதர்.

ஒரு பாத்திரம் சரியாக இருந்தால் அது நலமாக இருக்கும். அதிலே ஓட்டை விழுந்து விட்டால் அதை உபயோகப்படுத்த முடியாது.

அது போல் இந்த உடல் என்ற இந்தப் பாத்திரத்திலே இருக்கக்கூடிய ஓட்டைகளை (பிற தீமையின் உணர்வுகள்) அடைக்க வேண்டும் என்றால்
1,அதைச் சமப்படுத்தினால் தான் நீ உன்னைக் காத்து உன் குடும்பத்தில் உள்ளவரையும் காப்பாற்ற முடியும் என்று
2.இதெல்லாம் அனுபவபூர்வமாகத் தான் குருநாதர் உணர்த்தினார்.

இமயமலையில் பனிப்பாறைகளுக்கு மத்தியில் நான் செல்லப்படும் போது எனக்குள் சில உணர்ச்சிகளைத் தூண்டச் செய்கிறார். பழனியில் என் குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாததை அங்கே நேரடியாகக் காட்டுகிறார்.

அதைக் கண்ட பின் என் குழந்தையை எண்ணும் பொழுது பனிப்பாறையிலே என் இருதயமே இரைச்சலாகின்றது… உறையும் தன்மை வருகின்றது. அப்படியே விட்டு விட்டால் உயிரே போய்விடும்.

அப்போதுதான்… நீ உன் குழந்தையை இங்கிருந்து எப்படிக் காக்கப் போகின்றாய்…? என்று வினா எழுப்பினார்.

உன் குழந்தையைக் காக்க வேண்டும் என்றால்
1.நான் உனக்குச் சொன்ன உணர்வின் வலு கொண்டு
2.உன் எண்ணத்தால்… கண் வழியாக அங்கே அருளைப் பாய்ச்சு
3.அவனைக் காப்பதற்குண்டான நிலைகளை நீ செய்…! என்றார்.

இப்படி என் குடும்பமே பல வகைகளிலும் அல்லல்பட்டது. என்னைச் சார்ந்தோர் அனைவரும் கஷ்டப்பட்டுத்தான் தான் நான் ஒவ்வொன்றையும் தெரிந்து கொள்ள முடிந்தது… “இப்படித்தான் தெரியச் செய்தார் குருநாதர்…”

அதைப் போன்று தான் இப்போது உங்கள் குடும்பத்திலும் உங்களை அறியாது எத்தனையோ தீமைகள் வருகின்றது. ஆனால் நீங்கள் தவறு செய்யவில்லை. பிற மனித உடலில் விளைந்த உணர்வுகளை நீங்கள் நுகரும் போது அந்த நிலை ஆகிறது.

பத்திரிக்கை வாயிலாக டி.வி. வாயிலாக உங்களுக்குள் தினசரி எத்தனையோ அதிர்ச்சியான உணர்வுகள் புகுகின்றது.
1.அந்த உணர்ச்சிகள் இயக்கப்பட்டு உங்கள் உடலை என்னவெல்லாம் அது பாடு படுத்துகின்றது…?
2.அப்போது அந்தத் தீமையே உங்களை ஆட்சி புரிகின்றது… நல்ல குணங்கள் ஆட்சி புரிவதில்லை.
3.உயிரிலே படும் அந்தக் கலக்கமான உணர்வுகளே இயக்கச் சக்தியாக வருகிறது.

காரணம்… நெருப்பிலே எந்தப் பொருளைப் போடுகின்றமோ அந்த மணம் தான் வரும். நம் உயிர் நெருப்புக்குச் சமம்.

ஆனால் நமது ஆறாவது அறிவால் இருளை நீக்கும் ஒளியான உணர்வுகளைச் சேர்த்தோம் என்றால் அந்த உணர்ச்சிகளை ஊட்டி… எண்ண வலிமை கொண்டு நம் வாழ்க்கையைச் சீர்படுத்த முடியும்.

இருளை நீக்கி ஒளியாக மாற்றும் அருள் ஞானிகள் உணர்வை நுகர்ந்து உடலில் இருக்கக்கூடிய இரத்தங்களில் செலுத்தி ஒவ்வொரு அணுக்களுக்கும் அதைப் பெறச் செய்தால்
1.இருளை நீக்கும் ஆற்றல் பெற்று சிந்தித்துச் செயல்படும் தன்மை வாழ்க்கையில் வரும்
2.அதே சமயத்தில் நம் மீது மோதும் தீமையின் உணர்வுகளை எதிர்கொண்டு நீக்கும் தன்மை வரும்.

எப்படி…?

எலக்ட்ரிக்… எலக்ட்ரானிக்…! ஒரு உணர்வின் அழுத்தத்தின் தன்மை எதுவோ அதைக் கொண்டுதான் நவீன இயந்திரங்களை இன்று இயக்குகின்றான் மனிதன்… “விஞ்ஞான அறிவு கொண்டு…!”

இதைப் போன்று தான் நமது உயிர் நமக்குள் எலக்ட்ரிக்காக இருக்கின்றது… நாம் சுவாசிப்பதை எலக்ட்ரானிக்காக மாற்றி இயக்குகிறது. ஆனால் வேதனை என்ற உணர்வுகள் எலக்ட்ரானிக்காக மாறி விட்டால் அந்த வேதனையின் இயக்கமாகத் தான் உயிர் நமக்குள் உருவாக்கும்.

இதையெல்லாம் வென்ற
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எலக்ட்ரானிக்காக நாம் மாற்றினால்
2.இதன் உணர்வுகள் எதிர் கொண்டு அந்த வேதனைகளைத் தள்ளிவிட்டு விடும்
3.நமக்குள் சிந்தித்து செயல்படும் தன்மையும் அருள் வாழ்க்கை வாழ்ந்திடும் தன்மையும் வரும்
4.எதிர்வரும் தீமையின் உணர்வின் தன்மையை நமக்கு நாமே உணர்ந்து அந்த உணர்வுகள் நமக்குள் வளராதபடி தடுக்கவும் முடியும்.

உபதேசத்தின் வாயிலாக உங்களுக்குள் இப்பொழுது பதிவாக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் வலுவால்… இருளை நீக்கி என்றுமே உங்கள் வாழ்க்கையில் மகிழ்ந்து வாழலாம். மற்றவர்களையும் மகிழ்ச்சியாக வாழச் செய்ய முடியும்.

1.நீங்கள் ஒருவர் மகிழ்ந்து வாழ்ந்தால் போதும்
2.அதன் உணர்வு உங்கள் குடும்பத்தில் உள்ள எல்லோரையும் மகிழ்ச்சி அடையச் செய்யும் சக்தியாகப் படரும்
3.உங்கள் உடலில் இருக்கக்கூடிய அணுக்களும் ஒளியாக மாறும்.

உங்கள் வாழ்க்கையில் பேரின்பப் பெரு வாழ்வு பெறும் பயிற்சியைத் தான் இப்பொழுது யாம் (ஞானகுரு) தந்து கொண்டிருக்கின்றோம்.

இதனைக் கற்றுக் கொண்டு நீங்களும் சரி உங்கள் குடும்பத்தாரும் சரி உங்களைச் சார்ந்த்தோரும் சரி எல்லா நலமும் வளமும் பெற்று… இந்த பூமியில் படர்ந்து கொண்டிருக்கும் நச்சுத்தன்மைகளை நீக்கக்கூடிய அந்த வலிமையை நீங்கள் ஒவ்வொருவரும் பெற வேண்டும்.

ஞானத்தின் வளர்ச்சிக்கு மகரிஷிகளின் தொடர்பிலேயே இருக்க வேண்டும்

ஞானத்தின் வளர்ச்சிக்கு மகரிஷிகளின் தொடர்பிலேயே இருக்க வேண்டும்

 

நல் உபதேசத்தைக் கேட்பதும்… நல்ல நூலைப் படிப்பதும்… நம் உணர்வின் எண்ணமுடன் சுழன்று கொண்டே தான் இருக்கும்.

1.இஜ்ஜீவ உணர்வின் சக்தியைக் கொண்டு
2.இவ்வெண்ண நிலையை எதன்பால் திருப்புகின்றோமோ
3.அவ்வலைத் தொடரின் பதிவு ஒலிகள் அதனுடன் கூடிய நல் அலைகளை மீண்டும் பதியச் செய்ய
4.இவ்வெண்ணத்தால் எடுக்கும் தியானத்தால் இவ்வுணர்வு முழுவதுமே
5.நற்சக்தியின் அலையை நாம் பதிவு செய்து கொள்ள முடியும்.

கோவில் குளங்களுக்குச் செல்லும் பக்திமானுக்கு அவன் கனவிலும் நினைவிலும் இதே நிலைகள் தான் சுழன்று கொண்டிருக்கும்.

பல கோவில்களுக்குப் போவது போலவும் அங்குள்ள ஆண்டவனைத் தரிசிப்பது போல “கனவுகளிலும்…” அதே சமயத்தில் “நினைவான எண்ணத்தில்…” எக்கோயிலுக்குச் செல்லலாம்…? எந்த நூலைப் படிக்கலாம்…? எந்த ஞானியைத் தரிசிக்கலாம்…? என்ற உணர்வு அலைப்பிடிப்பில் தான் பக்திமானுடைய எண்ண உணர்வலை எடுக்கும் சுவாசம் கொண்ட அலை பதிந்திருக்கும்.

திருடனுக்கும் சரி… அவன் உணர்வின் எண்ணத்தில் எடுக்கும் சுவாசத்தைக் கொண்டு எவ்வலை ஓடுகின்றதோ…! அவ்வலையின் செயலுக்குகந்த எண்ணத்திற்கொப்பத்தான் அவன் நினைவும் கனவும் இருக்கும்.

விவசாயி ஆனாலும் சரி.. விஞ்ஞானி ஆனாலும் சரி… குடித்துத் தன் உணர்வை இழந்தவன் ஆனாலும் சரி…
1.எந்த ஒரு பழக்கப்பட்ட செயலுடன் கூடிய வாழ்க்கையுடன் வாழ்கின்றோமோ அதன் நிலைக்கொப்ப
2.உணர்வின் எண்ணத்திற்கொப்ப சுவாசத்தால் இவ்வுடலில் பதிவாகியுள்ள நிலைக்கொப்ப சுழற்சியில் தான்
3.ஒவ்வொரு மனித ஆத்மாவின் ஜீவ சக்தியின் அலைத் தொடரும் செயலும் வெளிப்படுகின்றன.

இச்சுழற்சியில் “அந்தந்தக் குண அமிலச் செயல் வட்டத்திற்குள்” மட்டும் உணர்வைச் செலுத்தி வாழ்பவனை அவனுள் பதிவாகியுள்ள குண அமிலத்திலிருந்து மீட்டுவது கடினம்…!

அதே சுழற்சியில் இருந்தாலும் ஆத்ம வளர்ச்சியை வளர்க்க முடியாது.

உணர்வுடன் கூடிய எண்ணத்தை நம்முள் “பல கோடி ஆண்டுகளாகப் பதிவாகி உள்ள குண அமிலத்துடன்…”
1.நற்சக்தியின் அமிலத்தை ஞானத்தால் நாம் எடுக்கும் ஜெபத்தைக் கொண்டு
2.நம்மைக் காட்டிலும் சக்தி வாய்ந்த சூட்சம நிலையில் உள்ள சப்தரிஷிகளுடன் தொடர்பு கொண்டு
3.உணர்வின் எண்ணமுடன் இழுக்கும் சுவாசத்தைக் கொண்டு உடல் முழுவதும் அதைப் பாய்ச்சி
4.ஏற்கனவே நாம் பல காலமாகச் சேமித்து வைத்துள்ள இக்குண அமிலத்துடன்
5.நற்சக்தியின் ஒலி அலை பாயப் பாய
6.மனிதச் சக்திக்குள் எச்சக்தியும் அறியக்கூடிய நிலை பெறலாம்.

நம்மைக் காட்டிலும் உயர்ந்த சக்தியைப் பெறும் வழித் தொடரை நாம் பெற்றோமானால் தான்
1.ஜீவனுடன் கூடிய இம்மனித உடல் பிம்பத்திலிருந்து எச்சக்தியையும்
2.இருந்த இடத்திலிருந்தே உணரவும் காணவும் மாற்றி அமைக்கவும் முடியும்.

ஆனால் நற்சக்தியின் பயனைப் பக்குவம் கொண்ட பத நிலையில் செயல்படுத்தக்கூடிய நிலையும் நாம் பெற வேண்டும்.

புகழ் கண்டு மயங்காதே…
புகழாரம் பாடாதே…
புகழ் தேடிச் செல்லாதே…!

இன்னல் கண்டு கலங்காதே…
இகழ்ச்சி கண்டு பதறாதே…
இகழ்ந்துரைக்க எண்ணாதே…!

நம் ஞானத்தின் வழித் தொடர் வெளிப்பட்டவுடன் நம்மை எதிர் நோக்கியுள்ள நிலைகள் தான் மேலே குறிப்பிட்டவை எல்லாம்.

1.இந்நிலையுடன் கூடிய உணர்வின் பிடியில் சிக்குண்டவர்கள்…
2.தன் வளர்ச்சியின் ஞானத்திலிருந்தே உயர முடியாத சுற்றலில்
3.இன்றளவும் பலர் சுற்றிக் கொண்டுள்ளார்கள்.

ஆகவே ஞானத்தின் வளர்ச்சிக்கு மகரிஷிகளின் தொடர்பிலேயே இருக்க வேண்டியது மிகவும் அவசியம்…!

“நாம் செய்யும் தொழில்…” எப்போது தெய்வமாகிறது…?

“நாம் செய்யும் தொழில்…” எப்போது தெய்வமாகிறது…?

 

“நாம் உயர்வான எண்ணங்களை எண்ணும் பொழுதெல்லாம்…” அந்த நேரம் நல்ல நேரமாகின்றது. அப்போது உயர்வான சிந்தனைகளும் உயர்வான நிலைகளும் நமக்குக் கிடைக்கின்றது.

நாம் தொழில் செய்கிறோம்… கடையிலே பொருள்களைப் பொட்டலமாக வைத்து வியாபாரத்திற்காக வைக்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம்.

கடைக்கு வருபவர்கள் பொருள் வேண்டும் என்று கேட்கின்றார்கள். பொருளைக் கையில் எடுத்துக் கொடுக்கும் பொழுது நாம் எந்தெந்த எண்ணத்துடன் கொடுக்கின்றோம்…?

பொருள்களுக்குண்டான பணத்தை
1.அவர் சரியானபடி கொடுப்பாரா…? தர மாட்டாரா…?
2.அல்லது போன தடவை போன்று பணத்தைக் கொடுக்காது இழுத்தடிப்பாரா…? என்ற
3.இந்த எண்ணத்தோடு நாம் கொடுத்தால் என்ன ஆகின்றது.

ஏனென்றால்… நம்மிடம் பொருளை வாங்கிச் செல்வோர் அதை நல்ல முறையில் உபயோகித்து (அல்லது மற்றவருக்கு விற்று) அந்தப் பணத்தை உடனே நமக்குக் கொடுக்க வேண்டும். அவருக்கும் அந்த வருமானம் வர வேண்டும் என்று எண்ணினால்
1.நாம் நல்லதாக எண்ணுகின்றோம் என்று அர்த்தம்… அந்த நேரமும் நல்ல நேரமாக அமைகின்றது.
2.அதே சமயத்தில் பொருளை வாங்கிச் செல்வோருக்கும் அங்கே நல்ல வியாபாரம் ஆகிறது.

ஏனென்றால் நாம் எதை எண்ணி… தொட்டு… அந்தப் பொருளை எடுத்துக் கொடுக்கின்றோமோ… அதிலே நம் உணர்வுகள் பதிவாகி விடுகின்றது எலக்ட்ரிக் எலக்ட்ரானிக்.. பொருள்களிலும் அந்தக் காந்தப் புலன் உண்டு.

நாம் தொட்டு எடுத்துக் கொடுக்கும் ஒவ்வொரு பொருளிலும் எத்தகைய எண்ணங்கள் உணர்வுகளைப் பதிவு செய்கிறோமோ “அது கலந்து தான்…” அங்கே செல்கின்றது.

நாம் சந்தேகப்பட்டு…
1.பணத்தைக் கொடுக்க மாட்டான்… இழுத்தடிப்பான்…! என்று
2.இந்தக் கலக்கமான உணர்வுடன் அதைத் தொட்டு எடுத்துக் கொடுக்கும் பொழுது
3.அவர்களும் இதை வைத்து வியாபாரம் செய்தார்கள் என்றால் அங்கேயும் வியாபாரம் மந்தமாகி விடுகிறது
4.அவர்களுக்கும் அந்த நேரத்திற்கு பணம் வராது… நமக்கும் சரியான நேரத்திற்குப் பணம் வராது.
5.அப்போது இந்த நேரம் என்ன ஆகிறது…? நாம் முதலிலே சந்தேகத்துடன் எண்ணித் தொட்டுக் கொடுத்த நேரம் கெட்ட நேரமாகி விடுகிறது.

இதை எல்லாம் மாற்ற வேண்டும் என்றால்… ஒவ்வொரு நாளும் உயர்ந்த குணங்களைத் தான் நாம் வளர்த்துக் கொண்டு வர வேண்டும். அப்போது உயர்ந்த உணர்வுகள் நம் கைகளிலும் பதிவாகின்றது. நாம் எதையெல்லாம் தொட்டுக் கொடுக்கின்றோமோ அந்த உணர்வுடனே பொருள்கள் வெளியே செல்கின்றது.

நல்ல நேரத்தை இப்படித் தான் நாம் உருவாக்குதல் வேண்டும்.

உதாரணத்திற்கு ஒரு பொருளை எடுத்துக் கொடுக்கப்படும் போது…
1.அந்தப் பொருளை வாங்கிச் செல்வோர் அவர் வாழ்க்கையில் நலமும் வளமும் பெற வேண்டும்
2.மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும்
3.பொருள் அவர்களுக்கு நல்ல முறையில் பயன்பட வேண்டும் என்ற எண்ணத்துடன் கொடுத்துப் பாருங்கள்.

அவர்கள் வியாபாரம் நல்லதாகும்… இதை உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

அதே சமயத்தில் இரண்டு பேர் காசு கொடுக்க வேண்டும். ஆனால் கொடுக்காதபடி எதையோ பொய்யாகச் சொல்கின்றார்கள். அப்போது அந்த நேரத்தில்… பொய் சொல்கின்றான்… ஏமாற்றுகின்றான்… இப்படிச் செய்கிறானே…! என்று நாம் வேதனைப்பட்டால் என்ன ஆகிறது…?

அதே எண்ணத்துடன் அடுத்து இன்னொருவருக்குச் சரக்கை எடுத்துக் கொடுப்போம். கொடுத்தால் அந்தப் பொருளிலும் அந்த வேதனை பதிவாகி விடுகின்றது.
1.அவர்களுக்கும் இதே உணர்வு இயக்கப்பட்டு அங்கிருந்தும் பணம் அடுத்து வராது
2.இது போன்று எத்தனையோ நிலைகள் நம்மைத் தொடர்ந்து வருகிறது – நாம் அறியாமலே.

அந்த மாதிரி நேரங்களில் என்ன செய்ய வேண்டும்…?

சரி… அவர்களுக்கு அந்த வருமானம் வரட்டும்… கொடுக்க வேண்டும் என்ற அந்த எண்ணம் அவர்களுக்கு வரட்டும்… என்று நாம் எண்ணிக் கொடுத்தால் நம் உடலில் பதிவாகும் இந்த உணர்வுகள் தொட்டுக் கொடுக்கும் பொருளிலும் படுகின்றது. அவர்களுக்கு அது நல்ல நேரமாக அமைந்து விடுகிறது.

சங்கடப்பட்டு நாம் பொருளைக் கொடுத்தோம் என்றால் அது நமக்கும் கெட்ட நேரமாகிறது… நம் பணம் வருவதில்லை. சங்கட உணர்வு அங்கே இயக்கி அவர்களுக்கும் கெட்ட நேரத்தை உண்டாக்குகிறோம்.
1.ஏனென்றால் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக்… (உணர்வின் அழுத்தம்)
2.எல்லாமே எதன் உணர்வின் இயக்கமாக அமைகின்றதோ அதன் நிலையாக அது மாறி விடுகிறது.

நம் குழந்தை மீது பாசமாக இருக்கின்றோம். அவனிடமிருந்து தகவல் வரவில்லை என்ன ஆனதோ…? என்று வேதனைப்பட்டால் இதே உணர்வுகள் குழந்தையை இயக்கப்பட்டு அவன் சிந்தனையைச் சிதறும்படி செய்து விடுகின்றது… அவன் மேடு பள்ளம் தெரியாதபடி கீழே விழுந்து விடுவான்.

நாம் சுவாசித்துக் கவர்ந்து வெளிப்படுத்தும் எல்லா உணர்வுகளும் சூரியனுடைய ஈர்ப்புக்குள் தான் வளர்கின்றது… அதே சமயத்தில்
1.நம் உடலுக்குள் எதன் எதன் நிலைகளைப் பதிவாக்குகின்றோமோ
2.பதிவானது நம் ஈர்ப்புக்கு வருகின்றது… உணர்வின் இயக்கமாக நம்மைச் செயல்படுத்துகிறது.

ஒரு செடி எந்தச் சத்தைக் கவர்ந்து கொண்டதோ அதைத்தான் காற்றில் இருந்து கவந்து வளர்கின்றது. அதைப் போன்று தான் நம் உடலுக்குள் எத்தனை வகையான குணங்கள் இருக்கின்றதோ எதை எதை நாம் எண்ணி இயக்குகின்றோமோ அதை இழுத்து வளரத் தொடங்கும்.

இப்படி நம் உடலுக்குள் எண்ணிலடங்காத உணர்வுகள் உண்டு. அதிலே தீமையின் உணர்வுகள் அதிகமாகும் பொழுது நல்ல உணர்வுகளைச் செயலற்றதாக மாறுகிறது.

இதற்கு நாம் என்ன செய்வது…?

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை அடிக்கடி பதிவாக்கி… அதைக் கூட்டி நமக்குள் பெருக்கி பழகுதல் வேண்டும். இது கூடினால் அதைத் தணிக்கின்றது.

எந்தக் காரியத்தைச் செய்ய தொடங்கும் முன்பும்…
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து
2.எல்லாவற்றிலும் அதைக் கலக்கும் ஒரு பழக்கம் வருதல் வேண்டும்.
3.அதற்குத் தான் இந்தப் பயிற்சி.

ஆகவே அருளைப் பெருக்குங்கள்… இருளை அகற்றுங்கள்… மெய்ப் பொருள் காணும் அருள் சக்தி பெறுங்கள்.

ஆதி சக்தியாக இருந்தாலும் சப்தரிஷியாக இருந்தாலும் உணவு இல்லாது வாழ (இயக்க) முடியாது

ஆதி சக்தியாக இருந்தாலும் சப்தரிஷியாக இருந்தாலும் உணவு இல்லாது வாழ (இயக்க) முடியாது

 

பருப்பைப் பயிராக்கினால் பல பருப்பை அந்த ஒரு பருப்பு பலன் தருகிறது. ஒன்று வளர தன் வளர்ப்பின் பலன் தான் ஒவ்வொன்றும். சூரியன் தான் வளரப் மற்றதை வளர்க்கிறது.
1.ஒவ்வொரு இயற்கையின் ஜீவ வளர்ப்பும் தான் வளர…
2.தன் வளர்ப்பில் பிற வளர்கிறதே தவிர…
2.தன் வளர்ப்பில்லாமல் பிற வளர்ப்பு எச்சக்தியும் வளர்த்திக் காட்ட முடியாது.

தன் உணவைத் தான் எடுத்து தான் வளர்த்து தன் வளர்ப்பில் பிறவற்றையும் வளர்க்கச் செய்கிறது சூரியன். மற்ற மண்டலங்களின் ஈர்ப்பைத் தனக்கு உணவாக எடுத்துத் தான் வளர்ந்து தன் வளர்ச்சியின் பலனை வெளிப்படுத்தி அவ்வளர்ச்சியின் நிலையால் பிறவும் வளர்ந்து ஒன்றின் வளர்ப்பில் படர்கின்ற வளர்ப்பின் செயல் தான் எல்லாமே…!

தான் உட்கொண்டு தன் உணர்வை ஒவ்வொரு உயிரணுவும் ஜீவ சக்தி கொண்டு உணர்வால் எடுக்கும் முறை கொண்ட வழி கொண்ட தொடர் நிலைப்படி தான் சகல நிலைகளும் உள்ளன.

1.மிகவும் சக்தி வாய்ந்த அகில சக்தியான ஆதி சக்தியின் படைப்பிற்கே
2.தன் படைப்பின் உணவை உட்கொண்டு உட்கொண்டு
3.தன் படைப்பின் படைப்பில் பலவற்றையும் படைக்கின்றான்.

அதே போல்
1.உயிரணு தோன்றி..
2.அவ்வுயிரணுவின் உயிர் தோன்றி..
3.உயிர் செயலின் வழித் தோன்றி…
4.உயர் ஞான சக்தியாகி…
5.சகலமும் காணும் சப்தரிஷியானாலும்…
6.“அந்தச் சப்தரிஷியின் உணர்வுக்கும்…!” தன் வளர்ப்பை வளர்க்க உணவு தேவை.

தான் உண்டு… தான் வாழ… பிறரையும் வாழ வைக்க முடியுமேயன்றி “பிறர் வாழ்ந்தால் தான் வாழ முடியும்…!” என்ற நிலை எதற்குமே இல்லை.

நட்சத்திர மண்டலங்களும்… வளர்ந்து விட்ட சகல மண்டலங்களும்… காற்றினில் கலந்துள்ள பல கோடி அமிலங்களின் ஜீவ சத்துக்களும்… நீரும்… ஒளியும்… அனைத்துமே… தன் உணவை உட்கொண்டு தான் வளர்ந்து கொண்டுள்ளளன.

1.உணர்வின் சுழற்சிக்கு உணவு தேவை
2.உணவில்லாமல் எந்த ஜீவத் துடிப்பும் உயிர் வாழ்வதில்லை.

ஜீவனுடன் கூடிய பிம்ப உடலுடைய மனிதன் “ஜீவ சக்தி கொண்ட நீரையும் திடப்பொருள் உணவையும்” உட்கொண்டு வாழ்கின்றான்.

மிருகங்களும் மனிதனை ஒத்த நிலையில் வாழ்கின்றன. தாவரங்களின் நிலை “ஈர்ப்பின் சுவாசமுடன் உணவை” உட்கொண்டு அவை வாழ்கின்றன.

உடலை விட்டுப் பிரிந்த ஆத்மாக்கள் உணர்வின் எண்ண நிலைக்கொப்ப தன் உணர்வு அழியாவண்ணம் நுகர்ந்து
1.தான் வாழ்ந்த காலத்தில் உண்டு வாழ்ந்த ஆகாரங்களின் வாசனையின் உணர்வை ஈர்த்து
2.தன் உணர்வுக்குகந்த உணவைக் காற்றிலிருந்து தன் சுற்றத்தாரின் உணர்வுடன் கலந்து
3.தன் உணவை உட்கொண்டுதான் ஆவி நிலையில் உள்ளவர்களும் வாழ்கின்றனர்.

ஆக..
1.ஜீவனற்ற பொருள்களுக்கு எதுவும் தேவையில்லை.
2.ஆனால் ஜீவனற்ற பொருளும் ஆவியாகக் கரைந்து பிறவற்றுக்கு ஆகாரமாகத்தான் செல்கிறது.
3.உணவில்லாமல் எந்த ஜீவ சக்தியும் வாழ்வதில்லை…

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மகரிஷிகள் வெளிப்படுத்திய ஞானப் பொக்கிஷங்களை எல்லோருக்கும் பங்கிடுவோம்

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மகரிஷிகள் வெளிப்படுத்திய ஞானப் பொக்கிஷங்களை எல்லோருக்கும் பங்கிடுவோம்

 

உதாரணமாக ஒரு மனிதன் கடுமையான நோய்வாய்ப்பட்டிருக்கின்றான் என்று வைத்துக் கொள்வோம்.

அதை மற்றவர்கள் வந்து நம்மிடம் சொல்லப்படும் பொழுது பாசத்துடன் அதனைக் கேட்டறிவோம். அந்த மனிதருடன் நாம் பாசத்துடன் பழகினோம். நல்ல மனிதர்… இப்பொழுது நோய் வந்து அவஸ்தைப்படுகின்றார்…! என்று எண்ணுவோம்.

பார்த்து அந்த விவரங்களைக் கேட்டறிந்தபின் நாம் என்ன செய்வோம்…?.

அடுத்தடுத்து அடுத்தடுத்து மற்ற நண்பர்களிடத்திலும் இதைச் சொல்வோம். அப்படிச் சொல்லப்படும் பொழுது அவர்களும் அந்த வேதனைப்பட்டு வருத்தப்படும் நிலைகள் வருகின்றது.

இது எப்படி ஒருவருக்கொருவர் இயக்குகிறதோ… அதைப் போலத் தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் தொடர்ந்து இங்கே கொடுக்கும் இந்த உபதேசத்தின் வாயிலாக
1.இதை நீங்கள் கேட்கக்கூடிய சந்தர்ப்பத்தை எடுத்து
2.“மறைந்த ஞானப் பொக்கிஷத்தை” மீண்டும் யாம் (ஞானகுரு) நினைவுபடுத்தி
3.அந்த அலைகள இங்கே பெருக்கிக் கொண்டே வருகின்றோம்.
4.உயர்ந்த ஞானத்தின் உணர்வலைகளை “நீ ஒலி பரப்பு…” என்று குருநாதர் சொன்னதால் தான் இதைச் செய்து கொண்டிருக்கின்றோம்

அது இங்கே பரவியிருப்பதனால் இதை நீங்கள் படிக்கும்போது ஒவ்வொரு அர்த்தமாக உங்களுக்குள் விளங்கத் தொடங்கும்.

அதை மற்ற நண்பரிடத்தில்
1.“சாமி இப்படிச் சொன்னார்…” என்று சொன்னால் இலேசாகப் பதிவாகும்…
2.இந்த உணர்வுகளை அவர்களும் நுகர நேரும்.
3.இப்படிச் சிறுகச் சிறுக இந்த மெய் உணர்வுகள் பரவும்.

ஆன்மீகத்தின் நிலைகளில் அந்த ஞானத்தைப் பெற வேண்டும் என்ற ஏக்கத்தில் இருந்தால் அவர்களுக்கு இந்த உபதேசத்தின் உணர்வுகள் இது படும்.

நீங்கள் என்னுடைய உபதேசத்தைப் படிக்கின்றீர்கள். இதை நீங்கள் மற்றவர்களிடம் சொல்லப்படும் பொழுது இந்த உணர்வுகள் பதிந்த பின் யாம் எதையெல்லாம் வெளியிட்டோமோ அதை அவர்கள் நுகர நேருகின்றது.

ஏனென்றால்… இந்தப் பதிவு (RECORD) உங்களிடம் பண்ணியிருக்கின்றேன்.

ஒரு டேப்பில் பதிவு செய்த பின்…
1.அடுத்தடுத்து அடுத்த டேப்பில் பதிவு செய்யப்படும் பொழுது எப்படி நாம் மாற்றிக் கொண்டே போகின்றோமோ
2.இதைப் போலத் தான் உங்களுக்குள் பதிவான நிலை மற்றவர்களுக்குச் சொல்லப்படும் பொழுது அது பதிவாகின்றது.

அப்படிப் பதிவான பின் அந்த அலைகளை மீண்டும் அவர்கள் நுகர்ந்து அதைப் பெற முடியும்.

டேப்பில் பதிவு செய்வது ஜீவனற்றது. ஆனால்…
1.யாம் உபதேசம் செய்த நிலைகளை எடுத்துச் சொல்லப்படும் பொழுது
2.“ஓ” என்று ஜீவ அணுவாகி மீண்டும் அதனை வளர்க்கும்… வளர்த்துக் கொண்டிருக்கும் நிலைகளாகச் செயல்படும்.

இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக இந்தக் காற்று மண்டலத்தில் மெய் ஞானிகள் உணர்வுகள் பரவும்.

1.பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அந்த மகரிஷிகளால் வெளிப்பட்ட அந்த மெய் ஞானப் பொக்கிஷங்களை
2.எல்லோருக்கும் பங்கிடலாம்… எல்லோரையும் பெறச் செய்ய முடியும்.

இது என் ஒருவனால் முடியாது. நாம் அனைவரும் சேர்ந்து ஒருங்கிணைந்தால் தான் சாத்தியமாகும்.

உங்களால் நிச்சயம் முடியும்.

மகரிஷிகள் நம் அருகிலே இருந்தாலும் அவரை அணுகவிடாது தடுப்பது எது…?

மகரிஷிகள் நம் அருகிலே இருந்தாலும் அவரை அணுகவிடாது தடுப்பது எது…?

 

தியானத்தில் அமர்ந்து குருநாதரால் உபதேசிக்கப்படும் உபதேசத்தைக் கேட்பதற்கு முன் ஈஸ்வரபட்டரின் உருவமும் அவர் ஆசியும் கிடைத்தது.

ஒரு பக்கம் அவரும் மற்றொரு பக்கமும் நானும் அமர்ந்துள்ள நிலையில் அவருடன் தொடர்பு கொண்டதின் சக்தியினால் அவரிடமிருந்து நான் பெற்ற அருள் மொழிகள்… அவர் உணர்த்திய உண்மைகள் எல்லாம் தியானத்தின் மூலம் அவரிடமும் ஞானகுருவிடமும் தொடர்பு கொண்டிருந்தாலும்
1.அவர் உணர்த்தும் உபதேசங்களைக் கேட்டுக் கொண்டிருந்தாலும்
2.அவர் உபதேசித்த செயல் வடிவை என்னால் செயலில் காண முற்பட்டும் முன்னேறும் நிலை பெறவில்லை.

அவரிடம் தொடர்பு கொண்டவுடன்… என் எண்ணத்தில் “சகலத்தையும் அறியக்கூடிய உணர்வு எண்ணத் துடிப்புடன்” ஈஸ்வரபட்டரிடம் ஆசி கேட்டேன்.

உடனே தன் கையால் வாயை மூடிக் கொண்டார்…! எனக்கும் அவருக்கும் மத்தியில் மிகப் பெரிய நீளமான “திரைச் சீலை” ஓடியது.

திரைச் சிலைக்கு அப்பக்கம் மாமகரிஷி ஈஸ்வரபட்டரும் இந்தப் பக்கம் நானும் அமர்ந்துள்ள நிலையில் திரைச் சீலையின் இப்பக்கம் இருந்தே அவர் அமர்ந்திருப்பதுவும் பேசுவதும் கேட்கின்றது.
1.ஆனால் எனக்கும் அவருக்கும் மத்தியில் திரை…!
2.இந்தத் திரைக்குப் பொருள் என்ன…? என்று வினா எழுப்புகின்றார் குருநாதர்.

உடனே என் எண்ணத்தில் நான் இன்னும் பயந்த நிலையில் தான் இருக்கின்றேன்…. அவர் உணர்த்துவதை எடுத்துச் சொல்லும் பக்குவம் ஒன்று தான் உள்ளது.

அவர் அருளும் ஞானத்தின் வழி செயல் அடைய முடியாததற்கு இந்தப் பயம் தான் திரையாக உள்ளதா…? என்று எண்ணியவுடன் தலையை மட்டும் அவர் ஆட்டுவதை உணர்ந்தேன்.

பிறகு தியானத்தில் ஒரு நொடிப் பொழுதில் என் நினைவு இவ்வுலகக் குடும்ப எண்ணங்களுடன் மோதுண்டது.
1.என் உறவினரில் ஒருவர் அறியாது பெருமை கொள்ளும் செயலின் எண்ணம் வந்தது
2.பிறகு பிறரிடம் நெருங்கிய அந்த உறவினரின் குறையை நான் எண்ணிப் பார்க்கும் பொழுது
3.இதை எப்படியும் குருநாதர் நிறைவுபடுத்தித் தந்து விடுவார்… என்ற எண்ண மோதலில்
4.குருவிடம் அப்பொழுது அதை எண்ணித் தியானிக்கவும் செய்தேன்.

இப்படி வரிசையாக எண்ணங்கள் சென்ற பின் இப்பொழுது உனக்கும் எனக்கும் மத்தியில் உள்ள திரை எதற்கென்று புரிந்ததா…? என்று குருநாதர் கேட்டார்.

உன் குடும்பச் சுழற்சியில் எந்த ஒரு நிலைக்கும்…
1.எண்ணத்தின் ஈர்ப்பை அவர்களிடம் செலுத்தி
2.அவர்களுடனே ஒன்றி
3.அவர்களுக்காக வேண்டுகிறாய்.

பந்தம் பாசம் அன்பு பரிவு அனைத்தும் வேண்டியது தான்.
1.“பற்றற்ற நிலை…” என்ற உபதேசத்தை என்னிடம் பெற்றவரும் நீ தான்.
2.ஆனால் உன் ஞானத்தால் பற்றற்ற நிலையின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

மற்ற உறவினர்களைக் காட்டிலும் இரத்தத் தொடர்புடைய சொந்தங்களின் ஈர்ப்பு அதிவிரைவில் நம்மை வந்து சாடும்.

தியானத்தால் நல்வழிப்பட்டு ஞானத்தின் பால் நீ செல்ல வேண்டிய நிலையில்… பந்த பாசங்களின் உணர்வு எண்ணத்தை உன்னுள் அவர்களின் நிலையையெல்லாம் ஏற்றிக் கொண்டே வருகின்றாய்.
1.அவர்களுக்காக அதே சுழற்சி வாழ்க்கையிலேயே இருந்து
2.அவ்வெண்ணத்துடன் உன் எண்ணத்தைக் கலக்கவிடுவதனால்
3.உன் ஞான வளர்ச்சியும் வளர முடியாது.

பந்தபாசங்களை எல்லாம் நீ ஒதுக்கிவிட்டு ஞான வழிக்கு வா…! என்று உணர்த்தவில்லை.

அவர்களிடம் உள்ள குறையையும் நிறையையும் உன் எண்ணத்துடன் நீ ஏற்றிக் கொள்ள வேண்டியதில்லை.
1.அவர்களின் நிலைக்காக அவர்கள் எண்ணச் செயல் மோதும் பொழுதெல்லாம்
2.அவர்களுக்கு நல் உணர்வு தா ஈஸ்வரா…
3.அவர்கள் நிலை உயரட்டும்…! என்ற எண்ணத்துடன் இறைசக்தியின் அலையைச் செலுத்த வேண்டும்.

ஆகவே அவர்கள் உணர்வலையுடன் நீ கலக்காமல் நீ பெற்ற நற்சக்தியின் அலையைக் கொண்டு அவர்கள் உயர உன் எண்ணத்தைச் செலுத்திடல் வேண்டும்.

1.பிறரின் எண்ணச் சுழற்சியில் “நீ சிக்காமல்…”
2.உன் எண்ணச் சக்தியை இறை சக்தியின் செயலாக
3.அவர்களிடம் செலுத்திவிடு…! என்று உபதேசம் அளித்தார் ஈஸ்வரபட்டர்.

இப்பொழுது தெரிகிறதா… உனக்கும் எனக்கும் உள்ள திரை எதற்கென்று…? என்று மறுபடியும் வினா எழுப்பினார் குருநாதர்.