உருவாகும் உருவ சக்திக்கே நாம் உருவம் தரலாம் – ஈஸ்வரபட்டர்

உருவாகும் உருவ சக்திக்கே நாம் உருவம் தரலாம் – ஈஸ்வரபட்டர்

 

ஆதியிலே… மண்டலங்கள் சுழன்று… வளர்ந்து… ஆவியாகி… குளிர்ந்து… மீண்டும் ஆவியாகி… அந்தந்த மண்டலங்கள் விடும் சுழற்சி ஈர்ப்பு வெக்கை உணர்வில்… தன் வளர்ப்பின் வளர்ப்பிற்குத் தன் சுவை ஈர்ப்பை வளர்த்துக் கொண்டே வந்தது.

அவை அவை எடுத்துச் சமைத்துக் கக்கிய… பல சுவை கொண்ட பல மண்டலங்களின் தொடர்பு கொண்டு… பல அலையின் ஈர்ப்பின்… தொடர் அலைச் சேர்க்கை… சுவை அமில குண ஈர்ப்பு நிலை ஏற்பட்ட பிறகு தான் “சூரிய குடும்பமாகவும் அதிலே பூமியாகவும்” மண்டலங்கள் வளர்ந்தன.

அவை எடுத்த சுவை குண சமைப்பு அமிலத் தொடரினால் பல பல வளர் மாற்றத்தின் கூட்டுக் கலவையில் சமைத்த சத்துத் தன்மையின் சக்தி குணம் இந்தப் பூமியில் படர்ந்து தாவர இன வளர்ச்சியானது.

பின் ஜீவ சக்தி வளரக்கூடிய காற்றமில வளர்ச்சி உற்பத்தி வளர்ப்பு நிலை கொண்ட பிறகுதான்… இந்தக் காற்றான ஆவி குணத்தின் ஜீவ சக்தி வளரக்கூடிய தன்மை வளர்ந்து… பலவில் பலவாக ஆனது.

ஜீவ வளர்ச்சியின் பல பல மாற்ற சுழற்சி ஈர்ப்பின் சுழல் வட்டத்தில் மோதுண்டு மோதுண்டு ஒவ்வொரு ஈர்ப்பு மாற்றத்திலும்… ஒவ்வொரு மாற்றத்தின் சக்தியும்… ஒவ்வொரு வளர்ச்சியாக அந்த உயிரணு கூட்டிக் கொண்ட பல சுவை அமில வளர்ப்புடன் வார்ப்பாகி ஜீவ பிம்ப நிலை கொள்கிறது.

இஜ்ஜீவ பிம்பத்தில்…
1.சுவைக்கும் நிலையும்
2.செயலாற்றக் கூடிய அங்க அவயங்களும்
3.ஒளி ஈர்த்துச் செயலாற்றும் திறமையும் பல வார்ப்பில் மாறி மாறி
4.ஒவ்வொரு நிலை கொண்டு மோதுண்ட சுழற்சி வழித் தொடரில் ஒலி ஒளியாகி
5.வழித் தொடர் கொண்டு உயர் சக்தி நிலை பூண்டு மனிதப் பிம்பக் கரு ஞானம் கூடியது.

சூரியனைச் சேர்த்து நாற்பத்தி எட்டு மண்டலங்களும் ஒன்றாக இயங்கித் தன் வளர்ப்பின் வளர்ப்பாக பல நட்சத்திரங்களை வளர்த்துச் செயலாகும் சக்தியில் உருவான உரு நிலை தந்த மனித ஞான பிம்பம் வளர்ந்ததப்பா…!

மண்டல ஈர்ப்பின் சுழற்சி கதியில் நேர்ப்பார்வையில் செயல் வழியில்
1.இயற்கைத் தன்மையில் சுழலும் சக்தியையே
2.இந்த மண்டலச் சந்திப்பு நிலைதனைத் திசை திருப்பும் நிலைதனை ஏற்படுத்துகின்றனர் சப்தரிஷிகள்.

இந்தப் பூமியில் உள்ள மனிதனைக் காட்டிலும் “ஞான சக்தியில் வளர்ந்த மனிதக் கரு உரு நிலை” இந்த நாற்பத்தி எட்டுக் மண்டலங்களில் இல்லா நிலை… மற்ற சூரியக் குடும்ப மண்டலங்களில் உண்டு.

இந்தப் பேரண்ட பெரு நிலையின் வளர்ப்பு செயல் எவை…? என்று எப்படி அறிய முடியும்…?

உயிரணு தோன்றி… ஈர்ப்பு நிலையில் சிக்குண்ட செயல் வழிக்கு… முடிவில்லா உருமாற்ற நிலை வளர்ப்புச் சுழற்சியின் முடிவே இல்லை.
1.வளர்ப்பின் வளர் நிலையை உயர் வளர்ப்பின் வளர்ப்பாக்கி
2.உன்னத வளர்ப்புகளை வளர்க்க ஆரம்ப உயிரணு தான் வித்தப்பா…!

இந்த மனித பிம்ப உடல் சேமித்த பதம் கொண்ட பக்குவ நிலைதானப்பா வளர்ப்பின் வளர்ப்பை வளர்க்கும் நிலை. இதை உணர்ந்து உயர் ஞான அலையின் வழி சென்றோமானால்… “உருவாகும் உருவ சக்திக்கே நாம் உருவம் தரலாம்…!”

மனிதப் படைப்பு என்பது முழு முதல் கடவுள்…!

அழுக்குச் சட்டையை மாற்றித் தூய்மையான ஆடை அணிவது போல் அருள் ஞானியின் உணர்வை நம் ஆன்மாவாக்க வேண்டும்

அழுக்குச் சட்டையை மாற்றித் தூய்மையான ஆடை அணிவது போல் அருள் ஞானியின் உணர்வை நம் ஆன்மாவாக்க வேண்டும்

 

உதாரணமாக நம் மீது தெரிந்தோ தெரியாமலோ சாக்கடையைப் பூசிக்கொண்டு இருந்தால் அந்த நேரத்தில் அடுத்தவர்கள் நம்மைப் பார்த்தால் யாராக இருந்தாலும் விலகித் தான் சென்று கொண்டிருப்பார்கள.

அதைப் போல் சங்கடத்தையும் வெறுப்பையும் எடுத்து அடுத்தவரிடம் அதே எண்ணத்துடன் பேசிக் கொண்டிருந்தால் நம் மீது அவர்களுக்கு “வெறுப்பு” தான் வரும்.

இதை எல்லாம் மாற்ற வேண்டும் என்றால்
1.அந்த அருள் ஞானிகளின் உணர்வுகளை நாம் புத்தாடையாக அணியும் பழக்கத்திற்கு வரவேண்டும்…
2.அந்த அருள் ஞானிகளின் உணர்வுகளை நம் ஆன்மாவாக மாற்ற வேண்டும் அது தான் தீப வழி (தீபாவளி).

ஒருவர் மட்டும் செய்வதல்ல. எல்லோரும் அந்த அருள் ஞானிகளின் உணர்வுகளை எண்ணி எடுக்கும் பழக்கம் வரவேண்டும்.

அதிகாலை துருவ தியானத்தில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எல்லோரும் கிடைக்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் எண்ணி எடுக்க வேண்டும்.

அடுத்து வெளியில் எங்கே சென்றாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி எங்கள் தொழில் முழுவதும் படர வேண்டும்… நாங்கள் பார்க்கும் அனைவரும் பெற வேண்டும் என்று அவசியம் எண்ண வேண்டும்.

வைரத்தைப் போன்று சொல்லில் ஜொலிப்பும் செயலில் ஜொலிப்பும் வாழ்க்கையில் ஜொலிப்பும் நாங்கள் பெற வேண்டும்… எங்கள் வாடிக்கையாளர் அனைவரது வாழ்க்கையும் வைரத்தைப் போன்று ஜொலிக்க வேண்டும்… எங்கள் வியாபாரம் செழிக்க வேண்டும் என்று இப்படி எண்ணி நாம் செயல்பட வேண்டும்.

அன்றாட வாழ்க்கையில் அழுக்குத் துணியை மாற்றி விட்டு நல்ல உடையை மாற்றுக் கொள்கிறோம் அல்லவா. அது போல் நம் ஆன்மாவில் படும் அழுக்கைத் துடைக்கும் ஒரு பழக்கத்திற்கு வரவேண்டும்.

உதாரணமாக மான் இருக்கின்றது. புலியைப் பார்த்தபின் தப்ப எண்ணுகின்றது. ஆனால் புலியின் உணர்வை நுகர்ந்தபின் உடலை விட்டுச் சென்ற பின் அடுத்துப் புலியாகப் பிறக்கின்றது.

மான் என்ற அந்தச் சட்டையைக் கழட்டிவிட்டு புலியின் உணர்வை ஆடையாக மாற்றுகிறது… புலியாக மாறுகிறது.

அது போல் ஒவ்வொரு நிமிடமும்…
1.நமக்குள் அந்த அருள் சக்தியைப் பெருக்கினால் இருளை நீக்கும் அணுக்கள் உடலிலே விளைகின்றது.
2.அந்த அருள் ஒளி பெற வேண்டும் என்று நாம் எண்ணி எடுக்க வேண்டும்.

மற்றவர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்று பார்த்தால் அதை நுகர்ந்தால் நம் உணர்வுகள் அழுக்காகி விடுகின்றது. சாக்கடை நம் ஆடையில் பட்டு விட்டால் உடனே அந்தச் சட்டையை கழட்டி விடுகின்றோம் அல்லவா.

அழுக்கான அந்தச் சட்டையைத் துவைக்காமல் மீண்டும் போடுவோமா…?

அதைப் போன்று தான் பிறிதொருவர் வேதனைப்படும் உணர்வை நுகர்ந்தால் அடுத்த கணம்
1.அந்த மகரிஷிகளின் உணர்வை எடுத்துத் தூய்மைபபடுத்தி
2.சட்டையை மாற்றுவது போன்று உடனே அந்த அருள் ஒளியின் சுடராக நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்.

இப்படி மாற்றினாலும் கூட மீண்டும் அழுக்கு சேரத்தான் செய்யும்.
1.தினமும் எப்படி அழுக்குச் சட்டையை கழட்டிவிட்டுத் தூய்மையான ஆடையாக மாற்றிக் கொண்டிருக்கின்றோமோ
2.அதே போன்று நம் வாழ்க்கையில எத்தகைய தீமை வந்தாலும்
3.உடனுக்குடன் நாம் மாற்றிக் கொண்டே இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணுவது தான் தீபாவளி வேதனைப்படுகிறேன் என்று தெரிகின்றது

உதாரணமாக வேதனைப்படுகிறார்கள் என்றும் தெரிகின்றது வேதனைப்படுத்துகிறார்கள் என்றும் தெரிகிறது.
1.வேதனைப்படுபவர்கள் வேதனைப்படுத்துபவர்கள் இரண்டு பேர் உணர்வையும் நாம் நுகர்கின்றோம்
2.வேதனைப்படுபவர் மீது நான் பிரியமாக இருந்தால் இப்படிச் செய்கிறான் பார்… என்று அவரின் வேதனையை நுகர்கின்றோம்
3.வேதனைப்படுத்துவோரைப் பார்த்தபின் உலகத்திற்கே தீங்கு விளைவிக்கின்றான் என்று
4.இந்த இரண்டையுமே நமக்குள் வளர்க்கின்றோம்.

இரண்டையும் நுகர்ந்து நம் எண்ணத்துடன் சேர்த்து உடலுக்குள் சேர்க்கும் பொழுது இது ஒரு பகுதியில் வளரும் அது ஒரு பகுதியில் வளரும்.

அவர்களுக்குள் அங்கே எப்படிப் பகைமையானதோ அதே போன்று பகைமை ஊட்டும் அணுக்களே நம் உடலில் விளையும். எதிரிகளைப் போன்று உடலுக்குள் அந்த இரண்டும் சண்டை போட ஆரம்பிக்கும்.

1.வீட்டிற்குள் சண்டை போட்டுக் கொண்டிருந்தால் நிம்மதியாகச் சாப்பிட முடியுமா…? சமையல் செய்ய முடியுமா…?
2.வேறு எந்த வேலையையும் சீராகச் செய்ய முடியுமா…?
3.அந்த மாதிரி நம் உடலுக்குள் சண்டை நடக்கும்.

இப்படி எல்லாம் ஆனால் நமக்குள் வேதனையும் நோயும் வருகின்றது என்று தெரிகிறது. இத்தகைய இருளை எல்லாம் நீக்கியது அந்தத் துருவ நட்சத்திரம். அந்த உணர்வை நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

சனியின் சக்தி எப்படிப்பட்டது…? – ஈஸ்வரபட்டர்

சனியின் சக்தி எப்படிப்பட்டது…? – ஈஸ்வரபட்டர்

 

சப்தரிஷி மண்டலம் ஏழு என்று உணர்த்துகின்றார்கள் புராணத்தில்… ரிஷி மண்டலத்தின் தொடர்பு நிலை என்ன…? வாரம் ஏழு நாட்களும் ஜாதகக்காரனுக்கு பன்னிரெண்டு ராசிகளும் உணர்த்திய முறை எல்லாம் எதுவப்பா…?

சனி மண்டலக் கோளமானது அது ஈர்த்து வெளிக் கக்கும் அலையின் செயலில் திடம் கொண்டு உருவாகின்றன 12 நட்சத்திரக் கோளங்கள். அதன் சுழற்சி ஈர்ப்பில் அந்தக் கோளத்தைச் சுற்றி வருகின்றது.

சூரியக் குடும்பத்தில் உள்ள மற்ற கோளங்களும் அவை ஓடும் சுழற்சி கதியில் வருட நிலைக்கொப்ப அந்தந்த மண்டலங்களின் நேர்பார்வை
1.சனியின் ஈர்ப்புப் பிடியில் சுழன்று வரும் பன்னிரெண்டு நட்சத்திர மண்டலங்களுடன் சந்திப்பு கூடும் பொழுது
2.சந்திக்கும் மண்டலத்தின் ஈர்ப்புப் பிடியில் சிக்கிக் கரைந்து விடுகின்றன இச்சனி வளர்த்த 12 நட்சத்திரங்களும்.

நம் பூமியின் ஈர்ப்பிற்கு வருடத்தில் இரண்டு முறை சந்திப்பு நேர்ப்பார்வையாக சனியின் பார்வை படுவதினால் வட மேற்கு தென் மேற்குக் காற்றுகள் வருகின்றன.

1.ஆகவே இந்த மழைக் காலங்களை உருவாக்கக்கூடிய வித்தை ஊன்றியவனே இந்தச் சனி தான்.
2.சனியின் நேர்ப்பார்வை சந்திப்பு பூமிக்கு இல்லையேல் கால நிலையில் பெய்யும் மழை இல்லை.

அதே போன்று சனியினால் உருவாகும் 12 நட்சத்திரங்களின் ஈர்ப்பு வட்டமானது இச்சுழற்சியில் ஈர்ப்பு மாறி நேர்கோட்டில் கரையக்கூடிய சந்திப்பு நிலையானது பூமியுடன் சந்திக்கும் நிலை ஏற்பட்டால் பூமியில் இப்பருவக் காலங்களில் ஏற்படும் “இயற்கையின் சீற்றம்” அதிகம் கொள்கிறது.

சனியினால் வளர்த்துப் பூமியின் ஈர்ப்பில் கரையும் நட்சத்திர மண்டலத்தின் விகிதத் தன்மையின் மாற்றங்கள் மற்ற மண்டலங்களின் சந்திப்புக் கால நிலைக்கொப்ப மாறுபடுகின்றது.
1.இதை வைத்துத் தான் சனியைப் போல் கொடுப்பாருமில்லை…
2.கெடுப்பாருமில்லை…! என்று உணர்த்தினார்கள்.

வருடத்தில் இரண்டு தடவை சந்திக்கும் சனியின் நேர்ப் பார்வையில் சனி வளர்த்த நட்சத்திர மண்டலத்தின் சந்திக்கும் நிலைக்கொப்ப பூமியின் ஈர்ப்பில் கரையப்படும் அந்த அமில நிலையானது பூமியின் ஈர்ப்பில் வளரும் நிலை கொண்டு தான் பூமியின் இயற்கைக் கால நிலைகள் உள்ளன இன்று.

இந்நிலையில் சப்தரிஷிகளின் நிலை என்ன…?

பல கோடி நட்சத்திர மண்டலங்கள் உண்டு. வளர்ந்து கொண்டேயுள்ள சுழன்று கொண்டே மிதந்து கொண்டேயுள்ள செயலில் தான் நாம் உள்ளோம்.

மிதப்பின் மிதப்பாக… உருளும் தன்மையில் உருவமாக.. ஞானத்தை வளர்க்கும் மனிதக் கரு உரு நிலை வளர.. ரிஷிகளினால் வளர்க்கப்படும் வளர்நிலை எந்நிலை கொண்டதாக உள்ளது இன்று…?

உருவாகும் சக்திக்கே உருவகம் தந்தவர்கள் நம் சப்தரிஷிகள் தானப்பா…!
1.இந்த மனிதக் கரு உரு ஞானத்தை வளர்க்க
2.அவர்கள் ஏற்படுத்திய வழிப்படுத்தும் செயலாகத் தானப்பா இன்று நாம் வாழ்கின்றோம்.
3.அவர்கள் ஓட்டிச் செல்லும் வாகனத்தில் அமர்ந்துள்ளவர்கள் தான் நாம்.

சூரியனை ஜீவனாக வைத்து நாற்பத்தி ஏழு மண்டலங்களை அங்கங்களாக வைத்து உருவாக்கிய வாகனத்தில் அமர்ந்துள்ள ஜீவ சக்தியை ஓட்டிச் செல்பவர்கள் சப்தரிஷிகள் தானப்பா…!

ஜீவ சக்தி உருவாகும் நிலை எப்படி…?

மிதந்து கொண்டேயுள்ள பல் சுவை கொண்ட நீரின் ஆவியானது திடம் கொண்டு கனமாகி.. ஈர்ப்பின் சழற்சியில் ஆரம்ப ஈர்ப்பு நிலைக்கொப்ப… மிதந்து கொண்டேயுள்ள நிலையிலிருந்து கனமாகி… “உந்தித் தள்ளும் ஈர்ப்பின் நிலை பெறுகின்றது…”

எச்சுவையை ஆரம்பத்தில் ஈர்த்து ஈர்ப்பிற்குச் சுழன்று தங்க இடம் கொள்ளாது பல சுவைகளை ஈர்த்து கனம் கொண்டு திடமாகி நகர்ந்து ஓடுகின்றது.

“தங்க இடம் கொள்ளாமல்…!” தன் சுழற்சியின் ஈர்ப்பில் சுழன்று வளர்ந்தது தான் சூரியன் சந்திரன் வியாழன் புதன் சனி மற்றெல்லா வளர்ந்த மண்டலங்களும்… மற்ற நாம் காணும் நட்சத்திர மண்டலங்களும்…!

இயற்கையின் செயலாக்கங்களையும் சப்தரிஷிகளின் செயலாக்கங்களையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே சிறுகச் சிறுக உங்களுக்குள் புகட்டி வருகின்றேன்.

குறைகளையே சொல்லிக் கொண்டிருப்பதைக் காட்டிலும் அதிலிருந்து மீட்கும் மார்க்கங்களைச் பேசிப் பழக வேண்டும்

குறைகளையே சொல்லிக் கொண்டிருப்பதைக் காட்டிலும் அதிலிருந்து மீட்கும் மார்க்கங்களைச் பேசிப் பழக வேண்டும்

 

தீமையை அகற்றும் வல்லமையை ஒவ்வொருவரும் பெற வேண்டும்.
1.ஒவ்வொருவரும் நம் குருநாதரைப் போன்று ஆகவேண்டும்… குருநாதராக மாற வேண்டும்.
2.சாமி (ஞானகுரு) தான் பக்கத்திலிருந்து கொடுப்பார்… என்று எண்ணாதீர்கள்.

குருநாதர் கொடுத்த ஞான வித்தை உங்களிடம் விதைக்கின்றேன். நீங்கள் அதை வளர்த்துக் கொள்ள வேண்டும். “சாமி செய்வார்…” என்று எண்ணி அதை வளர்தது விடாதீர்கள்.

எல்லாவற்றையும் சாமி பார்த்துக் கொள்வார்… எல்லாமே சாமி செய்வார்… நாங்கள் வளர்ந்து விடுவோம்…! என்று எண்ணினால் அது எப்படி வளர முடியும்…?

எல்லாமே சாமி பார்த்துக் கொள்வார் என்று உங்களுக்குப் பதிலாக நான் சாப்பிட்டால்… நீங்கள் பட்டினியாக இருந்தால் யார் பார்ப்பது…?

1.நம்பிக்கை எப்படிச் செல்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
2.தன்னை நம்புவதில்லை… சாமியைத் (ஞானகுரு) தான் நம்புகிறார்கள்.

ஆனால் “சாமி சொன்ன அருளை நமக்குள் வளர்த்துக் கொண்டோம்…” என்றால்
1.அது எவ்வளவு பெரிய வேலை செய்யும்…? என்று உணர்ந்து கொள்ளுங்கள்.
2.யாம் சொல்லும் அருள் ஞானிகளைப் பற்றிய உபதேசங்களை எல்லோருக்கும் எடுத்துச் சொல்லுங்கள்.
3.அப்போது தான் உங்களுக்குள் இது பெருகி விளையும்.

உதாரணமாக ஒருவரைப் பார்த்து “அவர் மோசமான ஆள்… ரொம்பவும் மோசமான ஆள்…!” என்று பேசிக் கொண்டே இருங்கள். உங்களுக்குள் அது அதிகமாக விளையும்… பார்க்கலாம் நீங்கள்.

வீட்டிற்குள் நுழைந்தால் சண்டை நிச்சயம் வரும்… உங்கள் வியாபாரம் மந்தமாகும்… இப்படிச் செய்கிறார் என்று யாருடனாவது வம்புக்கு இழுத்துக் கொண்டு போகும்.

ஆக எதைப் பேசுகின்றோம்…? குறைகளைத் தான் பேசுகின்றோம்.

1.அதை எல்லாம் நீக்குவதற்குண்டான மார்க்கங்களை நீங்கள் பேசிப் பாருங்கள்.
2.யாம் சொல்லும் இந்தப் பேருண்மைகளை நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.

குறை என்று தெரிகின்றது. அடுத்த கணம் அந்த மகரிஷிகளின் அருள் ஒளியைத் தனக்குள் எடுத்து அவர்களும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… அவர்களை அறியாது சேர்ந்த இருளை நீக்க வேண்டும்..! என்று இதனைக் கலந்து நீங்கள் சேர்த்துக் கொள்ளுங்கள்.

குறை நமக்குள் வளரவே வளராது…! அவர்களுக்குள்ளும் வளராது தடுத்துவிடும்.

அருள் வழியில் இப்படி நடக்க வேண்டும் என்று இதனை எடுத்துச் சொல்லுங்கள். தீமைகள் பாதிக்காது என்றும் எடுத்துச் சொல்லுங்கள். இதை எல்லாம் தெளிவாகவே ஞானிகள் நமக்குக் கொடுக்கின்றார்கள்.

ஆனால் குறைகளைச் சொல்லிச் சொல்லி அதையே ஒவ்வொருவரும் வெளிப்படுத்தும் போது அது என்னையும் தாக்குகின்றது. என்னை நான் பாதுகாத்துக் கொள்ளவே பெரிய கோட்டை கட்ட வேண்டி இருக்கின்றது. அமைதியாக உட்கார வேண்டி இருக்கின்றது.

உங்களுக்குச் சக்தியும் கொடுத்து அதே சமயத்தில் நீங்கள் அறியாது ஏதாவது செய்தாலும் அந்தத் தீமை வராது காக்கக்கூடிய சக்தியாகவும் நான் இருக்கின்றேன்.

“குருநாதர் ஒளியாகி விட்டார்…” என்று அவரை விட்டுவிட்டு நான் தனியாக இருந்தால் என்ன ஆகும்…?
1.அவர் என்னைக் காப்பாற்றுவார் என்று சொன்னால்…
2.அவர் சொன்னபடி அந்த எண்ணத்தை எடுத்தால் என்னைக் காப்பாற்றும்.

கடையிலிருந்து சரக்குகளை வாங்கிக் கொண்டு வந்தாலும் அதை சமைத்து சாப்பிட்டால் தானே சரியாக இருக்கும். சமைக்காமல் சாப்பிட முடியுமா…?

ஆகவே அந்த அருள் ஒளியை எடுத்து நமக்குள் சமைக்க வேண்டும். உயர்ந்த சக்திகளை எடுத்து நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு ஆகாரமாகக் கொடுத்துப் பழக வேண்டும்.

குருநாதர் எனக்குக் கொடுத்த அதே வழியில் தான் உங்களுக்கும் கொடுத்துக் கொண்டு வருகின்றேன்.

உயர் சக்திகளை உருவாக்கி வளர்ப்பதற்கு எண்ணத்தால் எடுக்கும் ஞானச் சுழற்சி ஜீவன்கள் அவசியம் தேவை – ஈஸ்வரபட்டர்

உயர் சக்திகளை உருவாக்கி வளர்ப்பதற்கு எண்ணத்தால் எடுக்கும் ஞானச் சுழற்சி ஜீவன்கள் அவசியம் தேவை – ஈஸ்வரபட்டர்

 

1.வளர் சக்தியான உயர் ஞானம் மனித பிம்பத்திற்கு எப்படி வந்தது…?
2.சொல்லாற்றல் செயலாற்றல் என்று உரைக்கும் வழித் தொடர் ஞான வளர்ச்சி நிலை உருவானது எந்த நிலை கொண்டு..?
3.நாற்பத்தியேழு கோளங்களில் இல்லாத சக்தி இந்தப் பூமி வளர்த்த மனித ஞானத்திற்கு எப்படி வந்தது..?
4.ஜாதகம் பார்ப்பவரால் சனி மண்டலத்தைத் தருவான்… அழிப்பான்… என்று உணர்த்திய முறை எல்லாம் எப்படியப்பா வந்தது…?

சந்திரன் செவ்வாய் புதன் வியாழன் ராகு கேது சூரியன் இப்படி நாற்பத்தியேழு கோளங்களுக்கும் இல்லாத் தன்மை நம் பூமிக்கு உண்டு.

பார்க்கின்றான்.. கேட்கின்றான்… சுவைக்கின்றான்… நுகருகின்றான்… வாழுகின்றான் பல சக்தியையும் பெற்ற மனித பிம்பம் (மனிதர்கள்).

சுழற்சி கதியின் இயற்கை வளர்ச்சி செயல்தான் சூரியனே தவிர நினைத்த செயலைச் செயலாக்கும் எண்ண ஞான வளர்ச்சி சூரியனுக்கே இல்லை.
1.சூரியனுக்கே இல்லாத ஞான வளர்ச்சியின் செயல் மனிதனுக்கு எப்படி உருப்பெற்றது…?
2.இந்த நிலை கொண்ட மனித சக்தி எப்படி உருவானது…?

மிதந்து சுழன்று ஓடிக்கொண்டேயுள்ள சூரியனின் வளர்ச்சியின் அங்கங்கள் தான் சூரியக் குடும்பத்தின் நாற்பத்தியேழு மண்டலங்களும்… சூரியனைச் சேர்த்தால் நாற்பத்தியெட்டு.

இஜ்ஜீவ பிம்ப உடல் கோளத்தில் இயங்கும் அவயங்களைக் கொண்டு தான் (கை கால் ஐம்புலன்கள் மற்றும் உடலில் உள்ள உள் உறுப்புகள்) மனித பிம்ப ஆத்மாவின் வளர்ச்சி நிலை உள்ளது.

அதைப் போல் சூரியனின் அங்கங்களாக ஒன்றின் ஈர்ப்பின் துணை கொண்டு ஒவ்வொன்றின் வளர்ச்சியுமே அது வளர்க்கும் சக்தி கொண்ட உரத்தைச் சூரியன் பெறுகின்றது.

சூரியன் இயங்கிட… செயல்பட்டிட.. சூரியனின் அங்கங்களாக உள்ள நாற்பத்தியேழு மண்டலத்தின் துணை வேண்டும். அது இல்லையேல் சூரியனுக்குச் செயலில்லை.

மனிதனின் உடல் உறுப்பில் செயல்புரியும் அங்கமாக மனித இருதயத்திற்கு எந்தச் செயல் உள்ளதோ அந்தச் செயலைப் போன்ற நிலையைத் தரவல்ல மண்டலம் தான் சனி மண்டலம்.

சனியின் சக்தியினால் அது எடுத்து வெளிக்கக்கும் அமில ஈர்ப்பின் குளிர் தன்மையான ஆவி சக்தி சூரியனுக்கு இருதயம் போன்று செயல் கொள்கிறது.

மனித அங்கத்தின் செயலைப் போன்று ஒவ்வொரு மண்டலத்தின் செயலும் சூரியனைச் செயல்படுத்துகிறது.

ஆனால் ஜீவ ஆத்மாவான சூரியனின் அங்க அவயங்களான நாற்பத்தியேழு மண்டலங்களில் உருவத்தின் ஞானத்தின் சொல் எண்ண வலுவாற்றல் வளர் குழந்தையை வளர்ப்பது இந்தப் பூமி தான்.

நாற்பத்தியேழு மண்டலங்களின் அவயங்களை சூரிய பிம்ப ஜீவன் வளர்க்கும் வளர்ப்பு நிலை செயல் “இந்தப் பூமியில் வளர்த்த மனித பிம்ப வளர்ச்சியைக் கொண்டுதான் வளர்ந்திட முடியும்…!”

சப்தரிஷிகளின் சக்திச் செயலாக…
1.இந்தப் பூமிக்குப் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்தே
2.வளர்ப்பின் வளர்ப்புக்கான இந்தப் பூமிக்குப் பல அலைத் தொடரின் ஈர்ப்பு சுழற்சியை ஏற்படுத்திய நிலை கொண்டு
3.எந்நிலையையும் உருவாக்கவல்ல தெய்வ சக்தியை உருவாக்கும்
4.மனித பிம்ப ஞானத்தை வளர்க்கச் செயல் கொண்டனர்.

ஏனென்றால் உருவாக்கும் உயர் சக்திக்கு எண்ணத்தால் எடுக்கும் ஞானச் சுழற்சி ஜீவன்கள் அவசியம் தேவை
1.இந்தப் பூமியின் சக்திக்கு இவ்வீர்ப்பு அலையின் சுழற்சியைச் சுழலச் செய்து
2.ஜீவ பிம்ப மனித ஞானத்தை வளர்க்க
3.சூரியனை மையப்படுத்தி இந்த நாற்பத்தியேழு மண்டலங்களிலிருந்து வெளிக்கக்கும் அலைத் தொடர்பைத் தான் எடுத்து
4.பல பிரளய மாற்றங்கள் தந்து இந்தப் பூமியில் மனிதக் கரு ஞானத்தை வளர்த்தான் சப்தரிஷி.

நம் உடலில் உள்ள இரத்தத்தை அடிக்கடி தூய்மைப்படுத்திக் கொண்டே வர வேண்டும்

நம் உடலில் உள்ள இரத்தத்தை அடிக்கடி தூய்மைப்படுத்திக் கொண்டே வர வேண்டும்

 

அந்த ஒளியின் சுடராக எல்லோரும் ஆக வேண்டும் என்று நாம் எண்ணுகின்றோம். இந்த உணர்வுகள் சூரியனால் கவரப்பட்டுப் பரமான இந்தப் பூமியில் பரமாத்மாவாகப் பரவுகின்றது.

நம் கண் கருவிழி பதிவாக்கியதைக் மீண்டும் நினைவாக்கப்படும் போது கருவிழியுடன் சேர்ந்த காந்தப் புலனறிவு அதனைப் பரமாத்மாவில் இருந்து கவர்ந்து நமது ஆன்மாவாக மாற்றிக் கொள்கின்றது.

1.நம் ஆன்மாவாக மாற்றி இங்கே சேர்த்தபின்
2.உணர்ச்சியைத் தூண்டுவதற்கொப்ப உயிர் அதை உள்ளே இழுத்து
3.உடலுக்குள் இருக்கும் அதனதன் அணுக்களுக்கு உணவு கொடுக்கின்றது.
4.உடலில் இருக்கும் ஜீவன்மாக்களுக்குச் சேருகின்றது.

இரத்தத்தின் வழி கொண்டு உடல் முழுவதும் அந்த அருள் உணர்வுகளைப் பாய்ச்சுகின்றது. ஜீவான்மாக்களுக்குள் அப்பொழுது செல்கின்றது.

அதனால்தான் இராமன் முதலில் குகனைத் தன் சகோதரன் ஆக்கிக் கொள்கின்றான் என்று இராமாயணத்தில் காட்டுகின்றனர்.

குகன் என்பவன் ஆற்றிலே படகை ஓட்டிச் செல்கின்றான். அதாவது நம் உடலில் இருக்கும் இரத்தங்கள்தான் ஆறாகவும் ஓடையாகவும் ஓடுகின்றது.

இந்த உடலான குகைக்குள் அருள் ஒளியின் சுடரை எடுத்துப் பெருக்கப்படும் பொழுது பகைமையற்ற உணர்வாக நம் உடலில் இருக்கக்கூடிய எல்லா உறுப்புகளுக்கும் இந்த இரத்தத்தின் வழியாகச் செல்கிறது.

1.இந்த உணர்வுகள் தன்மை நம் உடலுக்குள் நட்பின் தன்மையை உருவாக்குகின்றது
2.அதற்காக வேண்டித் தான் இராமன் குகனை நட்பாக்கிக் கொள்கின்றான்.

சீதா…! என்று நம் இரத்தத்தில் உயர்ந்த குணங்களை எடுத்து வளர்த்துக் கொண்டால் நம் உடலுக்குள் எல்லாவற்றிலுமே நல்லதைச் செய்யும் என்பதுதான் பொருள்.

காடு வனாந்தரங்களுக்குள் சென்றாலும் பகைமையற்ற உணர்வை நமக்குள் வளர்க்கும் தன்மை வருகின்றது. ஆகவே அடிக்கடி நம் இரத்தநாளங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

எதைக் கொண்டு…?

அந்த அருள் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். எங்கள் இரத்தநாளங்களில் அது கலக்க வேண்டும் என்று எண்ணும் பொழுது நம் உடலில் இருக்கக்கூடிய எல்லா இடங்களுக்கும் அந்த இரத்தம் செல்கின்றது.

1.உடல் உறுப்புகளுக்குள் எங்கெங்கெல்லாம் தீங்கு விளைவிக்கும் தன்மைகள் வருகின்றதோ அதை எல்லாம் இது அடக்குகின்றது.
2.நம் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்களைத் தூய்மைப்படுத்த இந்த முறையைக் கையாள வேண்டும்.

அந்த மகரிஷிகளின் உணர்வுகளை எடுத்து அடிக்கடி நம் இரத்தத்தைப் பரிசுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். எதிர்மறையான உணர்வின் இயக்கங்கள் வராது சமப்படுத்தும் சக்தியாக வரும்.

மன அமைதியும் சாந்தமும் ஞானமும் கிடைக்கும்…!

சிவசக்தி இல்லை என்றால் வளர்க்கும் சக்தியே இல்லை – ஈஸ்வரபட்டர்

சிவசக்தி இல்லை என்றால் வளர்க்கும் சக்தியே இல்லை – ஈஸ்வரபட்டர்

 

இந்த மனித பிம்ப உடல் ஞான ஆத்மாவுக்குத்தான் சொல்லாற்றலும் செயல் திறமையும் பகுத்தறியும் எண்ண வளர்ச்சியும் கொண்ட நிலை உள்ளதனால்
1.இந்நிலையை வளர்க்கும் முறை
2.ஆத்ம தியானம் பெறும் முறை ஒன்றினால் தான் முடியும்.

அனைத்து அண்ட கோடிகளையும் வளர்க்கும் அறியும் நிலை கொண்ட சக்தி இந்தப் பிம்ப உடலுக்குத்தான் உண்டு. இருந்தாலும் இந்தப் பிம்ப உடலிலும் “தனித்த ஆத்ம தியானத்தால்” உயர் ஞானக் கூட்டினைப் பெருக்க முடியாது.

ஆண் பிம்ப உடலுக்கு அமிலப் படைப்பைப் படைக்கத்தான் முடியும். ஆண் விடும் சுவாச அலையினால் மரம் செடி கொடிகள் தாவர இன வர்க்கத்தையும் மலைகள் உலோகப் பொருள்கள் இந்நிலை போன்ற சில பிம்பப் படைப்பாகத்தான் ஆண் வர்க்கச் சுவாச அலையில் உருப்பெறும் உரு நிலையுள்ளது.

இந்த உரு நிலைக்கு ஜீவன் தரக்கூடிய சக்திக் கூட்டு அலைகள் பெண்மையின் சுவாசக் கூட்டிற்கு உண்டு. பெண்ணினத்தின் சுவாச அலையிலிருந்துதான் புழு பூச்சி வண்டினங்கள் யாவையுமே ஜீவன் கொள்கின்றது.
1.நம் பூமியின் பிம்பமே “சிவ” பிம்பம் தான்
2.இந்த சிவ பிம்பனுக்கு ஈர்ப்புக் குணம் தந்தவள் “சக்தி” சுழற்சி தான்,
3.அமிலப் படைப்பு ஆணினம்
4.சக்தி ஈர்ப்பு பெண்ணினம்.

வளர்க்கும் முதல் இன அமில இனம்… ஆதி முதல்வனே… விநாயகனே… என்று உணர்த்திய “சிவ சக்தி” என்ற உரு நிலைக்கு உருவ வளர்ப்பின் வளர் நிலையின் ஆதி நிலையான சிவன் சக்தி என்ற ஆண் பெண் நிலையான அமிலக் கூட்டமைப்பு தான்.

அந்த ஈர்ப்பு சுழற்சியில் வளர்ப்பின் வளர்ப்பிற்கு நீர் நெருப்பு காற்று இவற்றை வளர்க்கும் முதல் நிலையான விநாயக குண நிலைக்கு வளர்ப்பின் வளர் நிலை சுழற்சியில்… வளரும் ஜீவ சக்திக்கு முருகன் என்ற குணப்படைப்பும்… முருகனுக்குத் துணை சக்தியான ஆசை குண தெய்வானையும்… தேவைக்கும் மேல் பேராசை வளர்ப்பு நிலை தான் வள்ளி குணம்.

முருகனுக்குப் பிள்ளையைக் காட்டவில்லை புராணம்…!

பூமியின் இயற்கை உண்மை உற்பத்தி முறையத்தான் சிவ சக்தியாக்கி ஆதிமுதல்வனாக விநாயகனைக் காட்டி சிவ சக்தி என்ற இந்தப் பூமியானது தன் வளர்ப்பின் வளர்ப்பிற்கு ஆவியாகி… பிம்பமாகி… நீர் நிலம் காற்றை எப்படி முதலாக வளர்த்ததோ அதனை விநாயகனாக உணர்த்தினார்கள்.

முருகன் என்ற பல குண நிலைகளை ஜீவ பிம்ப உடலாக்கி ஆசை என்ற அன்பைக் காட்ட தெய்வானையை உணர்த்தி இன்று வாழக்கூடிய நிலையான பேராசை வள்ளியை உணர்த்திச் சென்றான் அச்சித்தன்.

பூமி மட்டுமல்ல… உருவாகும் ஜீவ சக்தி அனைத்துமே ஒவ்வொன்றுமே
பிம்பம் சிவன்…
சக்தி ஈர்ப்பு…
வளர்ப்பு விநாயகன்…
பொருள் முருகன்…
தேவை தெய்வானை…
தேவைக்கு மேல் உணரும் பேராசை வள்ளியம்மை தான்…!

படைப்பின் உண்மை நிலை இது…!

படரும் வழி முறை இந்நிலை படைப்பான
1.அமிலத்தை ஆண் இனச் சுவாசம் படைக்கின்றது
2.ஜீவ சக்தியின் அலையைப் பெண் இனம் வளர்க்கின்றது.
3.படைப்பில்லையேல் ஜீவ பிம்பத்திற்கு உயிர்த் துடிப்பு இல்லை…
4.உயிர்த் துடிப்பிற்கு பிம்ப உடல் இல்லையேல் செயலில்லை.

உருவாகும் உயிர்க் கருவிற்கு அமில பிம்பத்தைத் தருவது ஆண் இனம். சக்தி ஈர்ப்பு ஜீவன் தருவது பெண் இனம். ஆணின் வித்து அமில வித்துத் தான். பெண்ணின் வித்து ஜீவத் துடிப்பு வித்து.

அமிலப் படைப்பைப் பெண்ணினம் ஏற்று ஜீவ சக்திக் கருவை வளர்க்கின்றது “தாயினம்…”

ஜீவ சக்திகளின் உண்மைப் படைப்பு எப்படி உள்ளதோ அதை ஒத்துத்தான் ஆதம தியானம் பெறும் வாழ்க்கை முறைக்கும் பெண்மையின் சக்தியின் ஈர்ப்பை ஆண் இனச் செயலில் பதிக்கும் நிலையில் தான் ஞான வளர்ச்சியும் அமைதியும் வழி கூட முடியும்.

1.சக்தித் தொடர்பு… சிவ பிம்பம் இணைந்து… வாழ்க்கையைப் போல் வளர்ந்தால் தான் உயர் சக்தி பெற முடியும்.
2.சிவ சக்தி இல்லையேல் வளர் சக்தி இல்லை…!