“நம்மைக் காக்கும் சக்தியை” நமக்குள் நாமே பெருக்கும் வழி

trust-yourself-3

“நம்மைக் காக்கும் சக்தியை” நமக்குள் நாமே பெருக்கும் வழி

 

சர்க்கரையைத் தயாரிக்கும் போது கரும்பில் இருக்கக்கூடிய சாற்றில் இருக்கும் விஷத்தைப் பிரிப்பதற்கு கெமிக்கலைத் தான் போடுகின்றார்கள்.

1.அந்தக் கெமிக்கலை ஒரு துணியில் போட்டால் துணி வெந்து போகும்.
2.ஆனால் அதைத்தான் சர்க்கரையில் போட்டு நாம் சாப்பிடுகின்றோம்.
3.பார்ப்பதற்கு அழகாக (சீனி) இருக்கின்றது ருசியாகவும் இருக்கின்றது.

இப்படி அந்தக் கெமிக்கலைக் கலந்து அழுக்குகளை நீக்கினாலும் அது சிறிது சர்க்கரையுடன் கலந்துவிடுகின்றது. இப்படி விஞ்ஞான அறிவால் ஒரு பொருளைத் தெளிவாக்கினாலும் விஷத் தன்மை நம் உடலுக்குள் சேர்கின்றது.

1.குடிக்கும் நீரிலும் இதைப் போன்றே தூய்மைப்படுத்துகின்றார்கள்.
2.நாம் சமையலுக்கு உபயோகப்படுத்தும் எண்ணெய் வகைகளிலும் கெமிக்கலைப் பயன்படுத்துகின்றனர்.

எண்ணையிலுள்ள கொழுப்பு சத்து மற்றவைகளை எடுப்பதற்காக கெமிக்கலைப் போட்டுச் சுத்தப்படுத்துகின்றனர். ஆனால் அது வேண்டாதவைகளை எடுத்து விடுகின்றது.

அதே சமயத்தில் நம் உடலுக்குள் அந்தக் கெமிக்கல் கலந்த எண்ணை சென்றுவிடுகின்றது. நம் உடலுக்குள் சென்றவுடன் எல்லா அணுக்களிலும் சேர்ந்து விடுகின்றது.

இதைப் போன்ற கடும் விளைவுகள் வருவதனால் இதிலிருந்து தப்புதல் வேண்டும். ஆகையினால் இதை நாம் அந்த மகரிஷிகளின் உணர்வைப் பெற்று அந்த உணர்வுகளை நமக்குள் வளராது தடுத்துப் பழக வேண்டும்.

1.இன்று இந்தக் காற்று மண்டலத்தில் பல வகையிலும் படர்ந்து வரும் நச்சுத் தன்மையால்
2.இந்த விஞ்ஞான அறிவால் அஞ்ஞான வாழ்க்கை வாழ்ந்து
3.சிந்தித்துச் செயல்படும் திறன் எல்லோருக்கும் இழந்து விட்டது.

அதனால் திடீரென்று உணர்ச்சிவசப்படுவதும்… தவறு செய்யக்கூடிய உணர்வுகளைத் தூண்டுவதும்… சிந்தனை இல்லாத செயல்களைச் செயல்படுத்தும் நிலைகள் வருகின்றது. (எல்லோருக்கும் இப்படித்தான்…!)

இதைப் போன்ற நிலைகள் வரப்படும் பொழுதுதான் போக்குவரத்துகளிலும் தொழில் செய்யும் இடங்களிலும் விபரீத விபத்துக்கள் ஏற்படுகின்றது.

மேலும்…
1.மனிதனுக்கு மனிதன் விபரீதச் செயல்களைச் செய்து (இன்றைய நிலை)
2.மனிதன் என்ற நிலை இல்லாதபடி இரக்கம் ஈகையற்ற நிலைகளில்
3.தாக்கிக் கொன்று கொண்டிருக்கும் உணர்வுகள் பெருகிவிடுகின்றது.

ஏனென்றால் ஒரு பொருளில் விஷம் பட்டால் அதை உட்கொண்டால் சிந்தனை சிதறிவிடுகின்றது. இதைப் போன்று விஷத் தன்மையை நமக்குள் அதிகமாகச் சேர்க்கச் சேர்க்க நம்மை அறியாமலே தவறு செய்யும் நிலைகளாக மாறுகின்றது… கடும் நோயாகவும் விளையும் தன்மை வருகின்றது.

இதைப் போன்ற கொடுமைகளிலிருந்தெல்லாம் நாம் மீள வேண்டும் என்றால் அதிகாலை துருவ தியானத்தை எப்படியோ நீங்கள் படுக்கையை விட்டு எழுந்தவுடனே எடுத்துத் தியானிக்க வேண்டும்.

தியானித்துவிட்டு…
1.மனைவிக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி கிடைக்க வேண்டும்
2.கணவனுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி கிடைக்க வேண்டும்
3.குழந்தைகளுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி கிடைக்க வேண்டும்
4.குடும்பத்தில் அனைவரும் அந்தச் சக்தி பெறவேண்டும் என்றும்
5.கட்டாயப்படுத்திச் செய்ய வேண்டும்.

குழந்தைகளையும் இவ்வாறு எண்ணும் பழக்கத்திற்குக் கொண்டு வர வேண்டும்.

ஒரு இரண்டு மூன்று நாளைக்கு அவர்களுக்குச் சொல்லிச் சொல்லி நீ மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறு… உடல் நலம் பெறுவாய்… உனக்கு நன்றாகப் படிப்பு வரும்… நல்ல ஞான சக்தி கிடைக்கும்…! என்று இது ஒரு பழக்கத்திற்கு வந்துவிட வேண்டும்.

காலை ஐந்து அல்லது ஐந்தரைக்குள் எழுந்து ஒரு பத்து நிமிடம் அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று தியானித்தால் போதும்.

இந்த மாதிரி எண்ணி எடுத்து அந்தச் சக்திகளைப் பெருக்கிப் பழக வேண்டும். நம்மைக் காக்கும் சக்தியை நமக்குள் நாமே பெருக்கும் பழக்கத்திற்கு வர வேண்டும்.

மனிதன் பெறவேண்டிய “ஞான வளர்ச்சியின் முக்கியத்துவம்” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

growth in meditation

மனிதன் பெறவேண்டிய “ஞான வளர்ச்சியின் முக்கியத்துவம்” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

விஞ்ஞானி ஓர் பொருளை அறிந்து உருவாக்குகின்ற செயலில் அப்பொருளின் தேவை நிலையில் “சிக்கல்கள் ஏற்படும் போது…”
1.மாற்று நிலை என்ன செய்யலாம்…? என்ற அறிவின் ஞானத்தைக் கூட்டி
2.தன் தேவைக்குகந்த செயலைச் செயலாக்கிட
3.மீண்டும் வளர்ந்த புதுப்பிக்கும் அறிவு ஞானத்தைக் கொண்டு
4.வளர்த்துக் கொண்டே செல்கின்றான் – விஞ்ஞானத்தில்.

காட்சி:-
ஆதிகாலத்தில் இருந்த இரண்டு சக்கரமுடன் கூடிய வண்டியைப் போன்றும்… அவ்வண்டியே அடுத்த நிலையில் பெரிய சக்கரமாக அமையப் பெற்றதைப் போன்றும்… அச்சக்கரத்தில் டயர் வைத்து உருள்வதைப் போன்ற வண்டியும் தெரிகின்றது.
1.ஆரம்பக் காலத்தில் இருந்த வண்டியும் இன்று நூதனத்தில் அமைக்கப்படும் வண்டியும்
2.அதைப் போன்றே ஆரம்பக் காலத்தில் ஓடிய நான்கு சக்கரங்கள் கொண்ட குதிரைகள் பூட்டிய ரதத்தையும் அதற்குப் பின் உருவான மோட்டார் வாகனத்தையும்
3.அதன் தொடரில் இன்றைய நூதன வசதியுடன் கூடிய மோட்டார் வாகனமும் காட்சியில் மாறி மாறித் தெரிகின்றன.

மெய் ஞான வழித் தொடரிலும்… மனித ஆத்மா தன் ஞானத்தைக் கூட்டி மனித ஆத்மாவின் உயர்வு நிலைக்கு வழிகாட்டிய பக்தி மார்க்க நெறி முறைகளை நம் அறிவின் ஞானத்தைக் கொண்டு உயர்த்திப் பார்ப்போமானால் “அதிலுள்ள உண்மை விளக்கங்களையும்… அதன் தொடரில் அறியக்கூடிய ஞானச் சித்துவையும்…” மனிதன் பெற முடியும்.

எண்ணத்தின் பகுத்தறியும் அறிவு நிலையினால் மனிதன் ஒன்றின் உருவகத்தில் பிறிதொன்றைச் சேர்த்து வாழ்க்கை வசதிக்கு அறிவின் ஞானச் செயலினால் முற்படுத்துகின்றான்.

காட்சி:-.
ஓர் ஓவியன் ஓவியம் வரைவதைப் போன்றும் பிறகு ஒரு பெண் தலையில் மல்லிகைப் புஷ்பத்தைச் செண்டாக்கி வைப்பதைப் போலவும் காட்சி தெரிகின்றது.

இதன் பொருள் யாது…?

போதனையில் புகட்டப்படும் பாட முறைக் கல்வியை… செயல் முறையில் செயல்படுத்த வேண்டியது மிகவும் அவசியம். ஆனால் ஆரம்பக் காலம் தொட்டு வெறும் போதனையை ஒத்த செயலுடன் நின்றிருந்தால்… எந்த மனிதனின் அறிவுத் திறனும் வளர முடியாது.

ஓவியன் தன் எண்ணத்தைக் குவித்து ஓவியம் எழுதும் பொழுது…
1.தன் ஞானத்தில் அந்தந்த இடங்களுக்குகந்த பகுத்தறிவைக் கொண்டு வண்ணங்களைச் செலுத்தினால் தான்
2.அந்த ஓவியத்தின் அழகே பொலிவு பெறுகின்றது.

பெண்ணிற்குத் தலையில் பூச்சூடும் வழி நிலையே நம் முன்னோர்கள் தான் வழிகாட்டியுள்ளார்கள். அதில் பல ஜீவ சக்தியுடன் கூடிய உண்மை நிலைகள் அதில் பொருந்தியுள்ளன.

இயற்கைத் தாவரத்தில் மலருடன் தன் சக்தியை வெளிப்படுத்தும் தாவரமும்… பூவாகிக் காயாகிக் கனி தரும் தாவர இனமும் இப்படி பல உண்டு.

மணமுடன் கூடிய மல்லிகையின் அமில குணமானது பெண் இன ஜீவ சக்திக்கு ஈர்ப்பு சக்தியை தரவல்லது.

மல்லிகை மலரைத் தலையில் சூடும் பொழுது
1.மனித இயக்கத்தின் அறிவு ஞானத்தை வளர்க்கும்
2.கவன நரம்பின் சிறு மூளை இயக்கத்தில் ஏற்படும் உஷ்ன அலையை
3.மல்லிகையின் மணமுடன் கூடிய அமிலத் தன்மை பின் தலையில் இருந்து வெளிப்படும் உஷ்ண அலையில் மோதும் பொழுது
4.அதனுடைய குண நிலை – பெண்களின் அறிவின் ஞான வளர்ச்சியில் ஏற்படும் உயர்வு நிலைக்கு “வித்தாகின்றது…”

முன்னோர்கள் உணர்த்திய இத்தகைய வழியிலும் நாம் அறியாத பல உண்மைகள் உண்டு. ஆகவே எண்ணத்தின் உணர்வை அறியும் ஞானம் கொண்டு வளர்க்கும் ஜெப நிலையில்…

1.வளர்ந்தோரின் தொடருடன் செலுத்தி
2.மேல் நோக்கிய எண்ணமுடன்
3.அவர்களிடமிருந்து உயர்வு ஞானத்தை நம் ஆத்மாவில் பதித்துக் கொள்ள வேண்டும்.

விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் செயற்கையாக உருவாக்கப்படும் நோய்களிலிருந்து விடுபட வேண்டும்

super-computers

விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் செயற்கையாக உருவாக்கப்படும் நோய்களிலிருந்து விடுபட வேண்டும்

 

இன்றைய உலகில் காற்று மண்டலத்தில் உள்ள நச்சுத் தன்மைகள் நமக்குள் புகாது தடுக்க வேண்டும்…!

காரணம்… விஞ்ஞான அறிவால் டி.வி. கம்ப்யூட்டர் (எலெக்ட்ரானிக்) மூலமாகவோ அல்லது உணவுப் பயிர்களுக்குள் தூவப்படும் பூச்சி மருந்துகளினாலோ பல வகையில் நஞ்சின் தன்மை தாவர இனங்களில் படர்ந்து கொண்டுள்ளது.

அது உணவுடன் கலந்து உடலுக்குள் கலக்கப்படும் பொழுது
1.நம் உடலில் உள்ள அணுக்களில் சேர்ந்து
2.விஷத் தன்மையை அதுவும் ஈர்க்கும் நிலை பெற்றுவிடுகின்றது.

விஷத் தன்மையை ஈர்க்கும் சக்தி பெறப்படும் பொழுது கை கால் குடைச்சல் சோர்வு விஷக் காய்ச்சல் இதைப் போன்ற பல நோய்கள் வரக் காரணமாகின்றது.

விஷத் தன்மைகள் அதிகமான அளவில் உணவுடன் கலந்து வருவதால் கேன்சர் நோயும் அதிகமாகப் பரவுகின்றது. அதே போல் எய்ட்ஸ் என்ற நோயும் விஞ்ஞான அறிவால் உருவாக்கப்பட்டது தான்.

ஒவ்வொரு நாட்டில் உள்ள மூட்டைப் பூச்சிகளையும் கொசுக்களையும் பரீட்சித்துப் பார்க்கின்றேன் என்று கொண்டு சென்று அதை அவர்கள் மற்ற கெமிக்கலில் கலக்கச் செய்து விஷமான அணுக்களை மீண்டும் உருவாக்கி அதிகரித்து விட்டனர்.

அதையே புதிதாக ஒரு பொருளாக உருவாக்கி… மனிதனுக்குள் கலக்கச் செய்து… விஷத் தன்மைகளைப் படரச் செய்து… (எயிட்ஸ் நோய்)
1.மக்களின் உடலைச் சிறுகச் சிறுக நலியச் செய்து
2.அந்த நாட்டையே சூனியமாக்கும் நிலைக்கு அமெரிக்காவில் அதைச் செய்தார்கள்.

ஆனால் அவன் நாட்டிலேயே முதலில் பரவியது. அங்கே பரவிய அதனுடைய தொடர்கள் மனிதனுக்கு மனிதன் பேசும் பொழுதே பரவு தன்மை வந்தது.

ஏனென்றால் அந்த எயிட்ஸ் நோய் அணுக்கள் மிகவும் விஷம் கொண்டது… அது வீரியமாகப் பரவும் தன்மை பெற்றது.

“எயிட்ஸ் நோய் உள்ளவர்கள்” அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலக்க வேண்டும் ஈஸ்வரா…! என்று அதிகமான அளவில் எடுத்துக் கொண்டால் அந்த நோய் மாறிவிடும்.

இதைப் போல் கேன்சரில் இருந்தும் மற்ற நோயிலிருந்தும் விடுபட வேண்டும். சர்வ நோய்களையும் நீக்கும் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று
1.இந்தத் தியானத்தின் மூலமாக அந்த அணுக்களை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
2.அடிக்கடி ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்.

அனுதினமும் அதிகாலையில் துருவ தியானத்தின் மூலம் துருவ நட்சத்திரத்தின் சக்தியை வலுவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

நோயுடனும் துன்பமுடனும் வருபவர்களுக்கு நாம் சொல்லித் தர வேண்டிய தியானப் பயிற்சி

Deep meditation

நோயுடனும் துன்பமுடனும் வருபவர்களுக்கு நாம் சொல்லித் தர வேண்டிய தியானப் பயிற்சி

இன்றைய கால கட்டத்தில்… நாம் செய்யும் தியானத்திற்குப் புதிய அன்பர்கள் வந்தால் உதாரணமாக அவர்களுக்கு நோய் என்று சொன்னால் கூட்டுத் தியானங்களில் கலந்து கொள்ளச் செய்யுங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்துத் தியானமிருந்த பின் அவர்களுக்கு உடல் நோயோ குடும்பத்தில் கஷ்டமோ இருப்பினும்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் குடும்பத்தில் படர வேண்டும்
2.குடும்பத்தில் நல்ல ஒற்றுமை ஏற்பட வேண்டும்
3.அனைவரும் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும்
4.குடும்பத்தில் அனைவரும் உடல் நலத்துடன் வாழ வேண்டும் என்று
5.கூட்டுத் தியானத்தில் அனைவரையும் சொல்லச் செய்து இந்த வாக்கினைப் பரவச் செய்யுங்கள்.

இது பதிந்து அவர்கள் மீண்டும் அந்த அருள் சக்திகளை எடுக்கத் தொடங்கினால் அவர்கள் சிரமங்களும் நீங்கும். அப்பொழுது அவர்களுக்கு ஒரு நம்பிக்கையும் ஏற்படும்.

நீங்கள் கொடுக்கக்கூடிய அருள் வாக்கு அவர்களுக்கு நல்ல முறையில் விளைந்து மகிழ்ந்த நிலைகள் பெறுவார்கள்.

யாராவது கோபமாகவோ வெறுப்பாகவோ பேசினால் உடனே ஆத்ம சுத்தி செய்து விட்டு அவர்கள் அறியாமை நீங்க வேண்டும்… மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழும் அந்தச் சக்திகளைப் பெறவேண்டும்… அவர்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழக்கூடிய நிலையும்… நல்ல பண்பும் அன்பும் பெருகக்கூடிய சக்தி பரவும்…! என்று சொல்லிப் பழக்கப்படுத்தச் சொல்ல வேண்டும்.

ஒவ்வொரு நாளும் இதே மாதிரி செய்து வந்தோம் என்றால் நமக்குள் அந்தச் சக்தி நாம் எதை எண்ணுகின்றோமோ ஓம் நமச் சிவாய… ஓம் நமச்சிவாய…! என்று நம் உடலுக்குள் அந்தச் சக்தி வளர்ந்து கொண்டே இருக்கும். அந்த அணுக்களும் பெருகிக் கொண்டே இருக்கும்.

ஆனால் குறைகளை அதிக நேரம் கேட்டு குறைகளைக் கேட்க ஆரம்பித்தால் அவர்கள் வரிசையாகச் சொல்லிக் கொண்டே வருவார்கள்.

அப்படிச் சொன்னால்…
1.எங்கள் குடும்பத்தில் இந்தக் குறை இருக்கிறது… அது நீங்க வேண்டும்…! என்று சொல்லி அப்படிக் கேட்கச் சொல்லிப் பழக்குங்கள்.
2.எங்கள் உடலில் இந்த நோய் இருக்கின்றது… அது நீங்கி என் உடல் நலமாக வேண்டும்…! என்று சொல்லச் சொல்லுங்கள்.
3.இருப்பதைச் சொல்லி விட்டு… அது நீங்க வேண்டும்… அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்…! என்ற உணர்வை ஏங்கிப் பெறச் செய்யுங்கள்.

ஏனென்றால் எது இருக்கிறது என்று தெரிய வேண்டும் அல்லவா…! சரவாங்கி நோய் இருக்கிறது… கை கால் மூட்டுகள் வலிக்கிறது… மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் எங்கள் மூட்டு வலி நீங்க வேண்டும். என் உடல் நலமாக வேண்டும்…! என்று எண்ணி இதை ஒரு பழக்கமாக்க வேண்டும்.

எங்கள் குடும்பத்தில் இந்த மாதிரிச் சிக்கல் இருக்கின்றது மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் குடும்பத்தில் படர்ந்து சிக்கல் நீங்கி குடும்பத்தில் ஒற்றுமை ஏற்பட வேண்டும் எங்கள் தொழில் வளம் பெறவேண்டும் என்று சொல்லிக் கேட்க வைக்க வேண்டும்.

1.இப்படி நல்ல எண்ணங்களை உருவாக்கி
2.அவ்வாறு எண்ணிய நல்ல சக்திகளை அவர்கள் பெற்று உடல் நலம் பெறச் செய்யவேண்டும்.

ஐம்புலனை அடக்கும் ஆழ்நிலை தியானத்தால் அமைதி கிடைத்தாலும் “உயர் நிலைக்குச் செல்ல முடியாது” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Natural intelligence

ஐம்புலனை அடக்கும் ஆழ்நிலை தியானத்தால் அமைதி கிடைத்தாலும் “உயர் நிலைக்குச் செல்ல முடியாது” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

உதாரணமாக நத்தையை ஒத்த பல பிராணிகள் உருவ நிலைக்குகந்த உணர்வு நிலையிலேயே அதன் உருவத்திலேயே “பாதுகாப்பபு நிலை கொண்டு” (ஓடு) அறிவின் எண்ண நிலை பெறுகின்றது.

எப்படிப் பாலை உஷ்ணப்படுத்திய பின் அதன் ஆவி நிலை வெளிப்பட்டு ஏடு (ஆடை) நிலை அடைகின்றதோ அந்நிலையின் தொடர் போன்று
1.தாய் எடுக்கும் சுவாசத்தில்
2.தாயின் உடல் நிலையின் உதிரத் தொடர்புடன் உருக்கொள்ளும் கர்ப்ப சிசு
3.உதிரத்தின் தொடர்பு உஷ்ண நிலை பெற்று
4.அதனுடைய அமில நிலைக்கொப்ப உராய்வு நிலை கொண்டு உருவ நிலை (மனித உடல்) பெறுகிறது.

அதனின் வளர்ச்சி நிலை முற்றிய தன்மையில் உணரும் நிலையும் எண்ண நிலையும் பெறுகின்றது. “எண்ண நிலை” என்பது அதனுடைய ஆவி (ஆத்ம) நிலையிலேயே அதற்குத்தக்க எண்ண நிலையில் தான் தாய் உடலில் புகுந்து பிறப்பிற்கே வருகின்றது.

பிறப்புத் தொடரில்… ஜீவ சக்தி கொண்ட சரீர நிலை முற்றிய நிலையின் பிறப்பு நிலை கொண்ட பிறகு தான் சரீர மனித நிலை செயல் நிலை யாவும் “பகுத்தறிந்து…” செயல் கொள்கின்றன.

1.இதற்குப் பின் வளரும் நிலைக்கும்…
2.வழி கொள்ளும் வளர்ச்சி நிலைக்கு வழி காட்டும் நிலைக்காகவும் தான்
3.இயற்கை நிலையையும் இயற்கைத் தொடர்பு நிலையையும்
4.அதில் வளர்ச்சி கொண்டு மாற்றப்படும் தொடர் நிலையையும் உணர்த்தி வந்தேன் (ஈஸ்வரபட்டர்).

ஆனால் தான் வளர்ந்த தொடரிலேயே பகுத்தறியும் அறிவு நிலை கொண்ட மனித ஆத்மாவும் “இயற்கை” என்ற பிடிப்பிலேயே சிக்குண்டு வாழ்ந்து விட்டால் “பிறப்பின் பலன்” இல்லாது போகின்றது.

ஏனென்றால் எண்ணத்தின் தொடர்பைக் கொண்டு உருவாக்கும் ஆதி சக்தியின் அகில சக்தியுடன் தெய்வ சக்தி கொண்டு படைப்பு நிலையைப் படைக்கவல்ல சக்தி கொண்ட பகுத்தறியும் எண்ணத்தால் உயரவல்ல நிலையை அடைய வேண்டும்.

இயற்கை என்ற சுழற்சியிலேயே சுழன்று… தன் சக்தியை உணராமல்… முக்தி நிலை பெறும் மார்க்க நிலைக்குச் சிலரின் உபதேச நிலைகளைக் கேட்டு… ஐம்புலனை அடக்கி ஆழ்நிலையில் உயர்வு நிலை பெறலாம்…! என்ற வழி காட்டும் தொடரில் சென்றால்… சரீர வாழ்க்கை நிலையில் மட்டும் தான் ஆரோக்கிய நிலையும் அமைதியும் கிட்டும்.

உயர்வு நிலைக்குச் செல்ல வேண்டும் என்றால்
1.உணர்வின் எண்ணம் பகுத்தறியும் எண்ணத்தால்
2.அறியும் ஞான வழியில் தான் உயர்வு நிலை கொள்ள முடியும்.

“மனதைக் குவித்தான்…” என்பதை மணலைக் குவித்தான் என்று திரிபு செய்து விட்டார்கள்

rameswaram ramalingam

“மனதைக் குவித்தான்…” என்பதை மணலைக் குவித்தான் என்று திரிபு செய்து விட்டார்கள்

 

இன்றைய உலகில் ஒவ்வொரு மனிதனும் வேதனையும் வெறுப்பையும் அதிகமாக வெளிப்படுத்துகின்றான். அதே சமயத்தில் தொழிற்சாலைகளிலும் மற்ற இடங்களிலிருந்தும் விஷப் புகைகளையும் அதிக அளவில் ஒவ்வொரு நாளும் காற்று மண்டலத்திலே ஊட்டுகின்றனர்.

1.இவை அனைத்தும் மேகங்களில் கலந்து
2.விஷத் தன்மையான மழை நீராகப் பெய்து கொண்டுள்ளது.

ஆக… மனிதன் விட்ட வேதனை உணர்வுகள் மேகங்களில் கலந்து மழையாகப் பெய்த பின் அந்த நீருடன் கலந்த விஷமான உணர்வுகள் பயிரினங்களில் படப்படும் பொழுது
1.மழைக் காலங்களில் எல்லாம் விஷம் கொண்ட பூச்சிகளாகவும் புழுக்களாகவும் எண்ணிலடங்காத அளவில் உருவாகி
2.நாம் பயிரிட்ட செடி கொடிகளைக் கொன்று தின்னும் நிலைகள் வளர்கின்றது.

இதை எல்லாம் மாற்ற வேண்டும் என்றால் நாம் ஒவ்வொருவரும் தியானத்தின் மூலம் அந்த அகஸ்திய மாமகரிஷியின் உணர்வுகளை எடுத்துக் கவர்ந்து “நம் மூச்சலைகள் மூலம்” அதை மேகங்களிலே கலக்கச் செய்ய வேண்டும்.

அகஸ்திய மாமகரிஷியின் அருள் உணர்வுகள் கலந்த மேகங்கள் மழை நீராகப் பொழிந்து பூமியில் படரப்படும் பொழுது
1.அது நல்ல அணுக்களாக உருவாகின்றது
2.அதன் மலங்கள் தாவரங்களில் சேர்க்கப்படும் பொழுது அருள் சக்தியாக வளர இது உதவும்.

ஏனென்றால் நீங்கள் விடும் மூச்சலைகள் வீணாகாது. மழை மேகங்களில் கலந்து மழை நீருடன் கலக்கப்படும் பொழுது அதிலிருந்து இந்த நாட்டில் வரும் தீமையின் உணர்வை மாற்றியமைக்கக்கூடிய சக்தியாக வரும்.

ஆகவே நாம் அனைவரும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்வோம். பேரானந்தம் பெறுவோம்… பேரின்பத்தைப் பெறுவோம்… அனைவரையும் பேரானந்தம் பெறச் செய்வோம்…!

1.நமக்குள் இங்கே நம் மனதை ஒன்றாக்குவோம்.
2.பேரன்பைப் பெருக்குவோம் என்ற இந்த உணர்வுடன் இதை நாம் செயல்படுத்துவோம்.

இதை அன்றே வான்மீகி காட்டியுள்ளார்..! அவர் நமக்குக் காட்டிய இராமாயணம் என்பது சாதாரண காவியம் அல்ல. இராமன் மனதைக் குவித்து இராமலிங்கமாக்கிப் பூஜித்தான் என்று அவர் காட்டியதை
1.மனதை… என்று சொன்னதை “மணலை..” என்று மாற்றிவிட்டார்கள்.
2.அன்றைய வாழ்க்கையின் எழுத்து வடிவுகள் வேறு
3.அதன் பின் வந்தோர் தவறின் பாதையில் நம்மை அழைத்துச் சென்று விட்டார்கள்.

நம் குருநாதர் ஈஸ்வரபட்டர் அதைத் தெளிவாக்கினார். ஆகவே மனதை ஒன்றாக்கினால் பேரன்பு அங்கே பெருகும்.

நம் வாழ்க்கையில்..
1.எல்லோரது நிலையும் மனதை ஒன்றாக்கப்படும் பொழுது பேரின்பப் பெருவாழ்வாக
2.என்றுமே பிறவி இல்லாத நிலையாக நாம் அடைய முடிகின்றது.

உலகில் இனி வரும் தீமைகளிலிருந்து விடுபட இதைத் தவிர வேறு வழி இல்லை..!

மாறி மாறி ஏற்படும் “வெப்பத்தினாலும்… குளிர்ச்சியினாலும் தான்…” சிருஷ்டியே நடக்கின்றது என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

heat gods

மாறி மாறி ஏற்படும் “வெப்பத்தினாலும்… குளிர்ச்சியினாலும் தான்…” சிருஷ்டியே நடக்கின்றது என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

அண்ட கோளத்தில் அமில சுழற்சியில் சுழன்று கொண்டே மிதந்து கொண்டுள்ள அமில நிலைகள் அவை அவை சுழற்சி ஓட்டத்தில் சந்திக்கின்ற சீதோஷ்ண நிலையின் தொடர்பு நிலைக்கொப்ப மாற்றத் தன்மைகளை ஏற்படுத்தி சீதோஷ்ண நிலை மோதலின் தொடரைக் கொண்டு அதனுடைய குணத் தன்மையில் வலுத்தன்மை பெறுகின்றது.

உதாரணமாக நாம் பால்… காபி… கஞ்சி… போன்ற வஸ்துக்களைச் சமைத்து வைத்துள்ள நிலையில் அதைக் காய்ச்சி வைத்துள்ள பாத்திரத்தில் அதைக் காய்ச்சி அப்படியே வைத்தவுடன்
1.அதிலுள்ள ஆவி நிலை வெளிப்பட்டு மேல் நிலையில் “ஆடையாக” திடம் கொண்டு படிந்து விடுகின்றது.
2.உஷ்ணம் உள்ள வரை பாலில் ஆடை கட்டுவதில்லை
3.குளிர்ந்த நிலையிலும் அதே தன்மையில் அது உள்ளது.

ஆனால் உஷ்ணப்படுத்தி ஆறிய நிலையில் அதன் குறிப்பிட்ட கால நிலைக்குப் பிறகு அதன் நிலையில் புளிப்பு நிலை கொண்டு மாற்று நிலை ஏற்பட்டு அதை எடுக்காமல் அப்ப்டியே வைத்து விட்டால் என்ன நடக்கின்றது…?

அதில் இரண்டு மூன்று நாட்களில் பூமியின் உஷ்ண நிலைக்கொப்ப புழுக்கள் வளர்கின்றன. அந்தப் புழுக்கள் வளரும் நிலையில் அதையும் அப்படியே விட்டு விட்டால் மேலும் என்ன நடக்கின்றது…?

அதுவே பாலில் அதிகமாக வளர்ந்த புழு ஒன்றை ஒன்று உட்கொண்டு… அதற்குகந்த ஆகாரம் வேண்டி நிலையில் ஒன்றுக்கொன்று உட்கொண்ட நிலையில் பெரும் புழுக்களாகின்றது.

1.பின் ஆகாரம் கிடைக்காத நிலையில் அதனுடைய ஜீவ நிலை பிரிந்து
2.நீர் சக்தி வெளியாகி படிம நிலைக்கு அந்தப் புழு உட்படுகின்றது.
3.இதற்குப் பிறகும் அத்தொடரில் பல நிலைகள் மாறு கொள்கின்றன.

இத்தொடரைப் போன்றே அண்டத்தின் அமிலத் தொடரும் உஷ்ண நிலைக்கொப்பவும் குளிர் நிலைக்கொப்பவும் அமில நிலைச் சேர்க்கைக்குச் சமைப்பு நிலையில் “பல பல உருக்கள்…” உருப்பெறுகின்றன.

சூரியன் சமைத்த ஆறு வகைக் குணத்தின் வண்ண நிலை பூமி சமைக்கும் ஏழாம் வண்ணமாகி மோதலுடன் தொடர்பெடுத்து பூமியின் ஈர்ப்பு நிலைக்கு பூமித் தொடர்பு கொண்ட பூமி சுழற்சியுடன் சுழலுகின்ற அமிலச் சமைப்பில் தொடர் வளர்ச்சியின் தன்மையைத்தான் “இயற்கை” என்றுணர்த்துகிறோம்.

1.இதிலே மாற்ற நிலைகள் பலவாக உருப்பெற்று மாறி மாறித் தொடர்கின்ற நிலையினில்
2.ஜீவ சக்தி கொண்டு உயிரணுத் தன்மை உருவான நிலையில்
3.உணர்வுத் தன்மை வளர்கின்ற இயற்கைத் தாவர நிலை மாறி
4.சரீர நிலை உணர்வு கொள்ளும் பொழுது அறிவு நிலை கொண்ட எண்ண நிலையும் உருவாகிறது.

நோயுற்றவர்களுக்குத் தியானத்தின் மூலம் கொடுக்க வேண்டிய மருந்து

Diabetes

நோயுற்றவர்களுக்குத் தியானத்தின் மூலம் கொடுக்க வேண்டிய மருந்து

 

உதாரணமாக குடும்பத்தில் ஒருவருக்குச் சர்க்கரை வியாதி (அல்லது வேறு எந்த வியாதிகாக இருந்தாலும்) இருக்கிறது என்றால் அதைக் கூட்டுத் தியானத்தின் மூலம் போக்க முடியும்.

மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்தநாளங்களில் கலக்க வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்துமே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்… என்று “முதலில்…” நாம் நமக்குள் வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பின் சர்க்கரைச் சத்து உள்ளவர் உடல் முழுவதும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்… அவர் உடல் நலம் பெறவேண்டும்… என்று
1.எல்லோரும் சேர்ந்து தியானித்து
2.அந்த அருள் உணர்வுகளை அவர் பால் பாய்ச்சுதல் வேண்டும்.
3.கூடுமான வரையிலும் அந்த நோயிலிருந்து விடுபட முடியும்.

இது ஒரு பழக்கமாக வந்துவிட்டால் ஒருவருக்கொருவர் இதைப் போல் சொல்லி “அங்கே நோய் நீங்க வேண்டும்” என்ற வாக்குகளைப் பதிவு செய்யுங்கள்.

அவர்களும் அந்த அளவுக்கு வளர்ந்து வந்துவிட்டால் நாம் ஒருவருக்கொருவர் நம் பார்வையில் பல தீமைகளைப் போக்க முடியும்.

1.ஒரு இரண்டு குடும்பத்தைச் சேர்ந்த நான்கு ஐந்து பேர் ஒன்று சேர்ந்து கூட்டுத் தியானத்தை அமைத்து
2.நோய்கள் அகல வேண்டும்… அவர்கள் உடல் நலம் பெறவேண்டும்
3.குடும்பங்களில் எல்லோரும் நலம் பெறும் சக்தியாக வாழ்ந்திட வேண்டும் என்று தொடர்ந்து செய்யுங்கள்.

ஒரு பிரசாதத்தையோ அல்லது வெறும் தண்ணீரையோ வைத்துத் தியானியுங்கள். தியானம் முடிந்த பின் அவர்களுக்குக் கொடுங்கள்.
1அப்படிக் .கொடுத்தீர்கள் என்றால் அந்த தண்ணீரே மருந்தாக மாறும்.
2.நோய் உள்ளவர்கள் குடித்தால் பச்சிலையோ மூலிகையோ கலந்த மாதிரி கசப்பாக இருக்கும்… அதுவே மருந்தாக மாறும்.
3.அதைச் சாப்பிட்டாலே உடல் நலம் பெறுவார்கள்.

இத்தகைய நிலைகளை நாம் உருவாக்கிப் பழக வேண்டும்.

எப்படித்தான் இந்த உடல் நலமாக இருந்தாலும் கடைசியில் முதுமை அடையும் பொழுது இந்த உடலை விட்டுப் போய்த்தான் ஆகவேண்டும். அப்பொழுது உடலை விட்டு ஆன்மா பிரிந்தால் நாம் அடுத்து பிறவியில்லா நிலை அடைய வேண்டும்.

ஆகவே… எந்த நிலையிலும்
1.நோயைப் போக்குவதற்கும்
2.இந்த அருள் ஞானத்தை நமக்குள் கூட்டிக் கொண்டே இருப்பதற்கும்
3.மகரிஷிகளின் அருள் சக்தியின் வலுவை நமக்குள் பெற்றிருந்தால்
4.உடலை விட்டு ஆன்மா எப்பொழுது சென்றாலும் நம் நிலை அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்துவிடும்.

அங்கே உடல் பெறும் உணர்வுகள் கரைந்து உயிருடன் ஒன்றிய நிலையாக

1.இப்பொழுது நாம் எடுக்கும் அந்த ஒளியான உணர்வே நிலைத்து நின்று
2.ஏகாந்த நிலை என்ற நிலையை அடைச் செய்யும்…!

இது… மனிதனான பின் நாம் உருப்பெற வேண்டிய நிலைகள்/ ஆகவே இதை நீங்கள் அனைவரும் பெறவேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.

நம் நினைவுகளுக்குள் ஏற்படும் “இரு நிலைப் போராட்டம்” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Two way thinking

நம் நினைவுகளுக்குள் ஏற்படும் “இரு நிலைப் போராட்டம்” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

பிறப்பெடுத்த நாளிலிருந்து நாம் இறக்கும் காலம் வரை… “நினைவின் ஓட்ட நிலை” சுழன்று கொண்டே தான் உள்ளது.

எண்ணத்தின் சரீர உணர்வின் நினைவு நிலை இச்சரீர வாழ்க்கையில் மட்டும் தானா…? ஆவி நிலையில் கர்ப்பக் காலத்தில் இதன் ஓட்ட நிலை யாது…? என்ற நிலையை உணரல் வேண்டும்.

ஆத்ம பிம்பத்தில் இந்நினைவலைகளின் சுழற்சி ஓட்ட எண்ண உணர்வு ஒவ்வொரு நொடிப் பொழுதும் ஓடக்கூடிய நிலைக்கொப்ப எண்ணத்தின் நினைவின் ஆணைக்கொப்ப சரீரச் செயல் சொல்லாகவும் செயலாகவும் நடைபெறுகின்றது.

எண்ணத்தின் ஓட்ட இயக்க நிலைக்கொப்பச் சரீரச் செயல் நடக்கவும்… உண்ணவும்… எழுதவும்… சரீரத்தால் இயங்கத்தக்க அவய நிலைகள் எண்ணத்தின் உணர்வு உந்தியவுடன்… தன் தன் செயலைப் புரிகின்றது.

எண்ணத்தின் நினைவோட்டத்தை
1.செய்த நிலை… செய்யப் போகும் நிலை… செய்யும் நிலை என்ற தொடரில் எண்ணத்தைச் செலுத்தும் நிலையிலும்
2.சரீர அங்கத்தின் செயல் நிலை செயல் கொள்ளா எண்ண நிலையிலும்
3.எதில் எதிலெல்லாம் எண்ணத்தின் உணர்வுகள் உருள்கின்றதோ அத்தொடரில் எல்லாம்
4.ஜீவ சக்தியுடன் கூடிய உஷ்ண அலை கொண்ட இச்சரீர ஓட்ட இயக்கத் தன்மையிலேயே
5.சுவாசத்தின் மோதலில் – நடக்கப் போகும் நினைவின் எண்ண உணர்வு செலுத்தக் கூடிய தருணத்திலும்
6.சுவாச அலையின் துடிப்பு நிலை அணு வளர்ப்பைக் கொண்டு
7.நினைவலையின் எண்ண உணர்வை இச்சரீர பிம்ப வாழ்க்கையில்
8.ஆத்மா தன் பதிவு நிலைக்குப் பதித்துக் கொள்கின்றது.

ஆனால் நடை முறையில் அவரவர்கள் உடல் அமைப்பு நிலைக்கொப்ப நினைவின் எண்ண ஓட்டம் சுழன்று கொண்டேயுள்ள நிலையில் “ஒரே சமயத்தில்” இரண்டு நிலையான போராட்ட நிலையும் இச்சரீரத்திற்கு உண்டு.

நினைவின் எண்ணத்தால் ஆத்மாவில் பதியப் பெற்ற எண்ண நிலையும்… எண்ணத்தின் உணர்வை ஆத்மா சமைக்கும் தருண நிலை மோதலில் “பதிவு பெற்ற நிலை… பதிவாக்கும் நிலை…!” இந்த இரண்டு நிலையில் ஒன்றை நாம் முடிவெடுக்க எண்ணத்தைச் செலுத்தும் தருணத்தில் போராட்டமாகின்றது.

எச்செயலுக்காக எண்ணத்தைச் செலுத்திச் செயல் கொள்ள விழைகின்றோமோ அதே செயலைச் செய்விக்க வேண்டிய நிலைக்காக
1.ஆத்மாவின் பதிவு நிலையில் ஏற்கனவே பதியப் பெற்ற நிலையில் எண்ணங்கள் மோதும் பொழுது
உள் மனம் வெளி மனம் என்ற இரண்டு நிலையான ஓட்ட நிலையில் மோதும் எண்ணச் செயலை
3.இச்சரீர பிம்ப வாழ்க்கையில் காண்கின்றோம்.

அதில் சில போராட்ட நிலைகளும் எண்ணத்தில் ஏற்பட்டு அதன் வழியிலும் சில முடிவுகள் ஏடுக்கின்றோம்.

சரீர அங்கத்தில்… ஆத்மாவின் செயல் இயக்கும் பிறப்பு இறப்பு கால ஓட்டத்தில்… எண்ணத்தின் நினைவோட்ட நிலை “இரண்டு நிலையில்” செயல் கொள்ளும்.
1.இத்தகைய இரண்டு நிலையே
2.மனிதனின் அறிவு… பகுத்தறியக் கூடிய உயர் ஞானத்திற்கு வித்தாக அமைந்துள்ளது.

மிருகங்களின் செயலில் இத்தகைய இரண்டு நிலை கொண்ட எண்ண ஓட்ட அறிவின் பகுத்தறியும் தன்மை நிலை குறைவாக உள்ளது. மேலும் சரீர அங்கத்தின் செயல் தன்மையும் மனிதனை ஒத்த சொல்லாற்றல் நிலையும் குறைவு.

ஆகையினால்… சரீர உணர்வின் நிலைக்கொப்ப ஆத்மாவின் பதிவு நிலை செயலை “எண்ண உணர்வின் மோதாத சரீர எண்ண நிலைக்கொப்ப… ஒரு நிலையில் தான்” மிருகத்தின் செயல் உள்ளது.

ஆனால் மனித ஞானத்தில் உயர்ந்த சக்தி நிலையாக ஆத்மாவின் பதிவு நிலை செயல் ஞானம் அமைந்துள்ளது.

உடலுடன் உள்ள சரீர ஜீவ சக்தியின் செயலினால் மனித ஆத்மாவின் உயர்வு நிலையே “உள் மனம்… வெளி மனம்…” என்ற நினைவின் எண்ண உணர்வு செயல் கொள்ளும் செயலினால்…
1.அறிவின் பகுத்தறிவு நிலை கொண்டு
2.ஞானத்தின் வளர்ச்சியை எந்நிலைக்கும் வளர்த்துக் கொள்ள முடியும்.

உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆத்மாக்கள்… சரீரத்தில் உள்ள பொழுது பதித்துக் கொண்ட அதனின் நினைவோட்டங்கள் ஆத்மாவுடன் பதிவாகி… ஆவி நிலையில் சுழன்று ஓடினாலும் எவ் எண்ண அலையாக இந்த ஆத்மா பதித்துக் கொண்டதோ அதே எண்ண நிலைக்கொப்பத்தான் சுழல முடியும்.

அவ்வாறு சுழலும் நிலையில் தான் பெற்ற சுவை குண எண்ண நிலைக்கொப்பச் சரீரங்கள் கிடைக்கும் பொழுது அவ் ஈர்ப்பில் இவை சிக்கி ஆவி நிலையில் உள்ள ஆத்மா சரீர ஈர்ப்பில் உட்புகுந்து விடுகின்றது.

அதாவது…
1.ஜீவ சக்தி கொண்ட அலை கிடைத்தவுடன்
2.தன் ஆத்மாவின் வலுவை வளர்க்க நீர் சத்தின் உஷ்ண நிலை கிட்டியவுடன்
3.அதனுடைய வளர்ப்பு நிலை வளர்ச்சி கொண்டு பிறப்பு நிலைக்கு வருகின்றது.

உட்கொள்ளும் உணவுகளில் கலக்கப்படும் விஷத் தன்மைகளை அகற்ற நாம் செய்ய வேண்டிய பயிற்சி

full meals

நாம் உட்கொள்ளும் உணவுகளில் கலக்கப்படும் விஷத் தன்மைகளை அகற்றச் செய்ய வேண்டிய பயிற்சி

 

இன்று நாம் உணவாக உட்கொள்ளும் உணவு வகைகளிலும் சரி… பயிர் செய்யும் பயிர்களிலும் சரி…
1.பல விதமான பூச்சிக் கொல்லி மருந்துகளைத் தூவப்படும் பொழுது
2.அது செடிகளில் பட்டு அதில் வரும் வித்துகளிலும் கலந்து வருகின்றது.
3.கலந்து வரும் நிலையில் அதைத்தான் உணவாக உட்கொள்கின்றோம்.

உணவாக உட்கொள்ளும் பொழுது அதுவும் நமக்குள் அணுவாக மாறுகின்றது. எந்த வித்திலே விஷம் கலந்ததோ அந்த விஷத்தையே நாமும் கலந்து நுகர நேருகின்றது.

அப்படி நுகரும் பொழுது விஷ அணுக்களின் தன்மை ஊடுருவி நம் உடலில் “கை கால் குடைச்சல்” போன்ற நோய்களை உருவாக்குகின்றது.

பூச்சிகளைக் கொல்லும் விஷம் கலந்த உணவுகளாக இருந்தாலும்
1.உணவு உட்கொள்ளும் பொழுது ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும்
3.அது இந்த உணவு முழுவதும் படர வேண்டும் என்று தியானிக்க வேண்டும்.
4.சாப்பிட உட்கார்ந்தவுடனேயே இந்த மாதிரி எண்ணும் ஒரு பழக்கம் வர வேண்டும்.
5.எனக்குள் உடல் நலம் பெறும் சக்தியாக வளர வேண்டும் என்ற உணர்வுடனே உணவை உட்கொண்டு பழகுங்கள்.

அந்த அருள் உணர்வுகள் நம் இரத்தங்களில் கலக்கப்படும் பொழுது நாம் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்து வரும் நஞ்சினை அகற்றிவிடுகின்றது.

இப்படிச் செய்யவில்லை என்றால் இந்த விஷத் தன்மை உடலில் அதிகமாகச் சேரச் சேர
1.உடலில் புதுவிதமான பல விதமான வருவதும்
2.சில நேரங்களில் சிந்தித்து நாம் பதில் சொல்லும் நிலைகள்
3.அதைச் சீராக சொல்ல முடியாத நிலையாக அதனுடைய நிலைகள் நம்மை மறைத்து விடும்.

இதைப் போன்ற நிலையிலிருந்தெல்லாம் நாம் தப்ப வேண்டும்.

ஏனென்றால்…
1.காற்றில் இருக்கும் அதே விஷமான உணர்வுகள்
2.எதனுடன் கலந்து எதை நம்முடன் சேர்க்கின்றதோ
3.அந்த உணர்வுகள் நமக்குள் விளைந்து விடுகின்றது.

அவசியம் நீங்கள் இதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே சொல்கிறோம்.