செல்வம் நம்மைத் தேடி வர வேண்டும்…! என்றால் என்ன செய்ய வேண்டும்…?

treasure of arul blessings

செல்வம் நம்மைத் தேடி வர வேண்டும்…! என்றால் என்ன செய்ய வேண்டும்…?

 

விஞ்ஞான அறிவால் பேரழிவுகள் வருகின்றது. அந்த அறிவிலிருந்து நீங்கள் மீள வேண்டும். மற்றவர்களையும் மீட்க வேண்டும். இந்த உடலுக்குப் பின் நாம் பிறவி இல்லை என்ற நிலையை அடைதல் வேண்டும்.

இந்த உடல் இருக்கும் பொழுதே நாம் பிறவி இல்லை என்ற நிலையை அடைதல் வேண்டும். ஏனென்றால்
1.எத்தனை நிலை இருந்தாலும் கோடிச் செல்வங்கள் நாம் வைத்திருப்பினும்
2.நமக்கு அந்தச் செல்வம் உறுதுணையாக இருப்பதில்லை.

ஏன்..?

“நம் உடல் நலம் சரியில்லை…!” என்றால் செல்வத்தைக் கொண்டு வந்து நமக்கு முன்னாடி வைத்தால் அதன் மீது வெறுப்பு தான் வரும்.

அந்தச் செல்வத்திற்காகவும் சொத்தின் பாகங்களைப் பிரிக்கும் பொழுதும் ஒருவருக்கொருவர் சகோதரர்களுக்குள் சண்டையாகிப் பகைமையாகி அதனால் எடுத்துக் கொண்ட வெறுப்பு உணர்வுகள் நோயின் தன்மையாக அடைந்த பின் அந்தப் பணத்தைப் பார்த்தாலே வெறுப்பு தான் வரும்.
1.இதனால் தான் எனக்குப் பகைமையானது…
2.இதனால் தான் எனக்கு நோயே வந்தது…
3.சனியன்…! அதன் முகத்திலேயே நான் முழிக்கக் கூடாது…! என்று சொல்வார்கள்.

அதே சமயத்தில் புறப் பொருளைப் பற்றித் தெரியாதபடி அருளைப் பற்றி நாம் தெரிந்து… அதை வளர்த்துக் கொண்டால்… பொருள் மேல் ஆசையே வராது. (அனுபவத்தில் பார்க்கலாம்)

ஆகவே… அருள் ஞானத்தின் மீது ஆசை வரப்படும் பொழுது அருள் சக்தியை வைத்துக் கிடைக்கக்கூடிய பொருளைச் சிதறாதபடி எடுக்கப்படும் பொழுது மன நிம்மதி கிடைக்கும்…!

போதுமான நிலைகளில் நமக்கு வேண்டியது நிச்சயம் வந்து கொண்டே இருக்கும். இதையும் உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்…!

உதாரணமாக நான் (ஞானகுரு) யாரிடத்திலும் தபோவனத்திற்காகப் பணத்தைத் தேடிப் போவதில்லை. ஆனால் தபோவனத்தின் வளர்ச்சி அதுபாட்டுக்கு வளர்கிறது.

எப்படி…?

1.எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்..! என்று
2.குருநாதர் இட்ட கட்டளைப்படி அருள் சேவையைச் செய்து கொண்டேயிருக்கின்றேன்.
3.பணம் எப்படி வருகிறது… எப்படி நடக்கிறது…? என்பது இங்கே என்னுடன் கூட இருப்பவர்களுக்கே தெரியாது.

ஆனால் வெளியில் இருந்து பார்க்கிறவர்கள்.. இந்தச் சாமி என்ன கள்ள நோட்டு அடிக்கிறாரா..? என்று கேட்கிறார்கள்…! அதற்கு என்ன செய்வது..?

காசு வருகிறது… எந்த வழியில் காசு வருகிறது…! என்று எல்லோருக்கும் ஒரு சந்தேகம். எனக்கே கூடச் சந்தேகம் தான்.

“காசு இல்லை…!” என்று நினைத்துக் கொண்டிருப்பேன். ஆனால் அடுத்த நாள் பார்த்தால் எந்த வகையிலாவது பணம் வந்து விழுகிறது.

காரணம்…
1.இந்த இயற்கையின் உணர்வுகள் எதை எண்ணுகின்றோமோ…
2.அதை மக்கள் மத்தியிலே ஒன்று சேர்த்து.. அந்த உணர்வின் தன்மை
3.“நாம் எல்லோரும் ஒன்றாக வாழ வேண்டும்…!” என்ற இந்த உணர்வு ஒன்று சேர்க்கப்படும் பொழுது
4.அது தான் தன்னிச்சையாக எடுத்து அந்தச் செயல்களைச் செயல்படுத்துகின்றது.
5.நான் (ஞானகுரு) அல்ல…!

எல்லோரது மனமும் அந்த உறுதியாக்கப்படும் பொழுது அந்த ஒளியின் உணர்வை நமக்குள் உறுதியாக்கும் சக்தியாகச் செயல்படுகின்றது.

இங்கே எம்முடன் பத்து இருபது வருடமாகப் பழகியவர்கள் இதை எல்லாம் அறிந்திருக்கலாம். எப்படி வளர்ச்சி அடைகிறது… எப்படி எப்படிச் செயல்படுகிறது..? என்ற நிலையைச் சிலர் உணர்ந்தும் இருக்கலாம்.

யாம் ஆசீர்வாதம் கொடுக்கும் பொழுது காசு ஏன் உங்களுக்குக் கொடுக்கின்றோம் என்றால் இதற்குத்தான். மற்றவர்கள் யாரும் இப்படிக் காசு கொடுக்க மாட்டார்கள்…!

அருளைப் பெருக்குங்கள்.. எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துங்கள்… அழியாச் செல்வம் உங்களைத் தேடித் தேடி வரும்…!

படைத்தவனின் படைப்பைப் படைக்கப்பவனின் படைப்பாக்க வேண்டும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

creator's creation

படைத்தவனின் படைப்பைப் படைக்கப்பவனின் படைப்பாக்க வேண்டும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

போகரின் காலத்திற்குப் பிறகு போகரால் வழிப்படுத்திச் சென்ற பண்டிகை தான் தீபாவளிப் பண்டிகை.
1.நம்முள் உள்ள அசுர குணங்களை அழித்து நற்குணங்களின் ஒளியைப் பெறத் தான்
2.தீபாவளிப் பண்டிகை கொண்டாடும் முறை உணர்த்தப்பட்டது.

ஆனால் இன்றைய எண்ண ஓட்டத்தில் அசுரனையே வணங்கும் முறைப்படுத்திச் செயல்படும் வழியில் எண்ண ஓட்டங்கள் வளர்ந்து விட்டன.

தீய குணங்களை அகற்ற வேண்டிய அந்த நந்நாளில் சமமான எண்ணத்தைச் சாந்தமுடன் புத்தாடை புனைந்து… மகிழ்ந்து… தீபமேற்றி… உற்றார் சுற்றமுடன் இனிமையுடன் கலந்துறவாட ஏற்படுத்திய தினத்தைச் “சந்தோஷமுடன் எந்த ஆத்மா எந்த வழியில் கொண்டாடுகிறது…?”

1.இன்றைய சமுதாய இனப் பிடிப்பாக “அந்த நாள்”
2.பல இன்னல்களுக்கு மனித ஆத்மாக்கள் செல்லக்கூடிய உணர்வு ஓட்டத்தில் சுழன்று கொண்டுள்ளது.
3.அன்று சித்தர்களினால் ஒவ்வொன்றையும் உணர்த்திச் சென்றதன் பொருள் வேறு
4.இன்றைய மனித ஆத்மாக்கள் செயலாக்கும் பொருள் வேறு…!

ஒவ்வொரு காலத்திலும் சப்தரிஷிகள் சில உடல்களை ஏற்று எதற்காக அவர்களின் உணர்வலைகளை வெளிப்படுத்திச் செல்கின்றனர்…?

1.படைப்பின் படைப்பையே
2.படைக்கப்பட்டவனின் படைப்பாக்க…
3.அவர்களின் செயல் முறை செயலாக்குகின்றதப்பா…!

ஆவியாகிப் பிம்பமாகி ஆவியாகிச் சுழலும் வளர்ச்சியில்
1.சுழற்சி நிலைக்கொப்ப வழி நிலை செல்லாமல்
2.சுழற்சியின் சக்தியைப் படைக்கப்பட்டவனிடம் சமர்ப்பிக்கும் செயலுக்குத் துணை செய்கின்றார்கள் சப்தரிஷிகள்.

நீரில் ஓட்டத்தை நாம் அதன் இச்சையில் (போக்கில்) விடாமல் அந்த நீரைத் தேக்கி வைத்து “அணையைக் கட்டி” அந்த நீரின் சக்தியைப் பல ரூபங்களில் பயன்படுத்திக் கொள்கிறோம்.

அதைப் போல்… பால்வெளி மண்டலத்தில் படர்ந்து சுழன்று நிறைந்துள்ள அமில குணங்களின் ஈர்ப்பை
1.உருவான உலகமாக்கி
2.உலகினிலே கருவைக் கொண்டு உருவாக்கி
3.உருவின் உருக்களாகப் பல உருக்களை வளரச் செய்து
4.தன் ஞானத்தின் சக்தி அலைக்குச் சக்தி எடுத்துக் கொள்கின்றனர் சப்தரிஷிகள்

நாம் பலன் காணத்தான் பலவற்றையும் செய்கிறோம். ஒவ்வொரு மனிதனும் அவன் எண்ணத்திற்குகந்த நிறைவைக் காண நித்தமும் செயலாற்றுகின்றான்.

இருந்தாலும்… எண்ணியோ எண்ணாமலோ எல்லா ஆத்மாக்களும் தன் உணர்வில் வழி பெறுவது எதனை…?

வாழ்க்கையில் தன் உணர்வுக்குகந்த எண்ணச் செயல் நிறைவுறாதவன் விரக்தி என்ற வீண் சலிப்புடன் வாழ்க்கையை முடித்துக் கொள்ளத் தற்கொலை என்ற நிலைக்கும் தன் உணர்வைச் செயலாக்குகின்றான்.

வெறுப்பு விரக்தி என்ற நிலை மனிதனுக்கு எப்படி ஏற்படுகின்றது..?

தன் உணர்வின் எண்ணத்திற்கொப்ப எண்ணச் செயல் நிறைவுறாத தருணத்தில் சலிப்பும் சோம்பலும் விரக்தியும் உட்பட்டுத் தன் ஆத்மாவையே மாய்த்துக் கொள்ளும் வழிக்குச் செல்கின்றான்.

உணர்வாலும் உருவாலும் தன் நிலையை எண்ணுபவன்…
1.உருவ எண்ணத்தின் சுழற்சியிலேயே சிக்குண்ட வாழ்க்கை உணர்வை மாற்றி
2.எண்ணத்தால் உணரும் ஞான வழிபாட்டில் தன் உணர்வைச் செலுத்தினால்
3.விரக்தியும் சலிப்பும் அற்று விவேகம் பெறலாம்.

இவ்விவேக உணர்வலையின் ஞானத்தை உணர்ந்து வாழ்க்கையில் எண்ணும் நிறைவைப் பல ஆத்மாக்கள் பெறுகின்றனர்.

ஆனால் இன்றைய காலத்தில் மனிதனின் உணர்வலை அனைத்தையுமே அரசர்கள் ஆண்ட காலத்தில் தன் உயர்வை வெளிக்காட்ட
1.“கதைகளையும்… கற்பனைக் காவியங்களையும்..” உண்மை போல் வெளிப்படுத்தியதை…
2.அந்த மாய உணர்வுகளையே உண்மை என்ற வாழ்க்கையின் நெறியில் கலந்து விட்ட
3.அத்தகைய உணர்வலையின் சுழற்சியில் சிக்கி (SOCIAL MEDIA) உழன்று கொண்டுள்ளது.

இந்த நிலை மாறிச் சப்தரிஷிகளின் செயல் வட்டத்திற்குள் சென்றால் தான் சப்தரிஷிகளின் செயலுக்கே அவர்களின் உணர்வின் உணவு கிடைக்கப் பெறும்.

அதன் வழியில் அவர்களுக்கும் அவர்களின் சக்தி அமிலத்தைக் கூட்டிடல் முடியும். அதன் மூலம்
1.மீண்டும் மனிதக் கரு தோன்றினால் தான்
2.மனிதக் கருவின் பிம்ப உடல் ஞானத்தை வைத்துத்தான் மீண்டும் மனித சமுதாயம் காண முடியும்.

மனித சமுதாயத்தின் எண்ண ஈர்ப்பு அலை இருந்தால் தான் சப்தரிஷிகளின் செயலுக்கே உணவு கிடைக்கும். உணவு இல்லாவிட்டால் அவர்களின் உணர்விற்கு உருவில்லை.

சப்தரிஷிகளின் செயல் அந்தந்தக் காலகட்டத்தில் உணர்த்தப்படுகின்றதென்றால் இந்த அடிப்படையில் தான்…!

இக்கலி மாறி கல்கி வரும் தருணத்தில் இன்றுள்ள எண்ண உருவ சுவாச மக்கள் இதே உணர்வலையில் இந்தப் பிம்பங்களை மாற்றி மீண்டும் மனித அமில ஜீவன் தோன்றினால்… இன்றுள்ள ஞானத்தைக் காட்டினாலும்… உருவ பிம்ப அழகைக் காட்டிலும்.. முற்றும் மாறுபட்ட உருவ அமைப்பு ஞான உருவங்கள் தான் அமையப் பெறும்.

அதுவும் கலி மாறி கல்கி மனித ஜீவன் கொள்ளப் பல பல ஆண்டுகள் ஆகிவிடும்.
1.காற்று மண்டலத்தில் உருளும் அமில உயிர்களுக்கெல்லாம்
2.மீண்டும் ஜீவன் கொள்ளும் காலத்திற்குள் பல மாற்றங்கள் ஏற்பட்டு விடும்.

அதனால் இன்றைய ஞான சக்திகளைச் செயலாக்கக்கூடிய பிம்ப ஜீவன்களான நாம் நம் சப்தரிஷிகளின் உணர்வலையின் சக்தியுடன் ஜெபம் கொண்டால்
1.அவர்களின் செயலின் சக்திக்கு
2.நம் சக்தியும் கூடிச் செயல் கொள்ள முடியும்.

அனைவரும் “பேரின்பப் பெருவாழ்வு பெறவேண்டும்…” என்பதற்காக இதைச் சொல்கிறேன்

planets and stars power

அனைவரும் “பேரின்பப் பெருவாழ்வு பெறவேண்டும்…” என்பதற்காக இதைச் சொல்கிறேன்

 

27 நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் உணர்வுகள் ஒவ்வொன்றும் அது கலவையாகும் பொழுது அது எப்படி எல்லாம் மாறுகின்றது…? அதிலே ஒளிக் கதிர்களாக இருப்பது தங்கமாக எப்படி மாறுகிறது..? என்று இதை எல்லாம் வரிசைப்படுத்திக் காட்டினார் குருநாதர்.

27 நட்சத்திரத்தின் சக்திகளை ஒவ்வொரு கோள்களும் எப்படி எடுக்கிறது…? அதற்குள் எனென்ன மாற்றங்கள் ஆகிறது…? என்று ஒவ்வொன்றாகக் காட்டினார்.

செவ்வாய்க் கோளை எடுத்துக் கொண்டால் சிவப்பு நிறமான நிலைகளும்… அதிலிருந்து வருவதும்… எப்படி இருக்கின்றது…?

புதன் கோளை எடுத்துக் கொண்டால் மஞ்சள் நிறமாக எப்படி வருகிறது…? 27 நட்சத்திரங்களின் சக்திகள் இதனுடன் கலவையாகப்படும் பொழுது புதன் கோள் எடுத்து எத்தனையோ வகையான உலோகத் தன்மை கொண்டதாக எப்படி மாறிக் கொண்டிருக்கின்றது..?

அதே சமயத்தில்
1.வியாழன் கோள் எடுக்கும் பொழுது
2.அந்த நட்சத்திரங்களின் கதிர்வீச்சின் தன்மையைத் தனக்குள் அடக்கி
3.ஒரு பொருளுக்குள் ஊடுருவி “இணைக்கும் சக்தியை” எப்படிக் கொடுக்கின்றது…?

இதிலே ஆவித் தன்மையாக ஆன பின் சனிக்கோள் எப்படி அந்த ஆவியான நிலைகளை எடுத்து நீராக எப்படி மாற்றுகின்றது…? இதை எல்லாம் நமது குருநாதர் தெளிவாகக் கொடுக்கின்றார்.

ஒவ்வொரு கோளும் தனக்கென்று உபகோள்களாக வளர்க்கப்பட்டு ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக எடுத்து வளர்கிறது. ஒவ்வொரு கோளுக்கும் எட்டுக் கோள் பத்துக் கோள் பன்னிரெண்டு கோள் என்று உப கோள்கள் உண்டு.

வியாழன் கோளுக்கு 27 உபகோள்கள் உண்டு. அந்த 27 கோள்களும் 27 நட்சத்திரத்தின் சக்திகளைக் கவர்ந்து தனக்குள் எடுத்துப் பல கலவைகளாக மாற்றுகின்றது.

அது ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித்தியாசமான நிலைகளில் வரும்.

வியாழனின் உபகோள்களிலேயே
1.ஒன்று இந்தப் பக்கம் சுற்றும்
2.ஒன்று அப்படியே மாற்றிச் சுற்றி வரும்.
3.விஞ்ஞானிகள் இதைக் கண்டு கொள்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றார்கள்.
4.அது மாறி வரும் பொழுது வேறு ஒரு திசையிலிருந்து வருகிறதா…!
5.இது என்ன…? என்கிற வகையில் இன்னும் ஆராய்ச்சி செய்து கொண்டு தான் உள்ளார்கள்.

அந்த 27 உபகோள்களும் அது சுழன்று கொண்டு தான் இருக்கிறது. 27 நட்சத்திரங்களின் சக்திகளை அது கவர்ந்து இதற்குள் அதை எல்லாம் சேர்த்து ஒரு கலவையாகி இந்த உணர்வின் தன்மை “ஒரு புதுவிதமான கதிரியக்கமாக…” மாற்றுகின்றது.

சனிக்கோள் எப்படி அது உறைபனியாக மாற்றுகின்றதோ இதைப் போல வியாழன் கோள் உறையும் பனியாக மாற்றுகின்றது. இன்றும் அவ்வாறு ஆக்கிக் கொண்டு தான் இருக்கின்றது.

இதை எல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால்
1.எதிர் காலத்தில் இந்த உண்மைகளை நீங்களும் அறிய வேண்டும்.
2.நான் மட்டும் தெரிந்தால் போறாது… எத்தனை காலம் இந்த உடலில் இருக்கப் போகின்றேன்…!

ஆகவே அந்தப் பேருண்மைகளை நீங்கள் எல்லோரும் உணர்ந்து… நீங்களும் தெளிந்து… “இந்த உலகில் வரும் இருளை மாய்க்கக்கூடிய சக்தியாக வரவேண்டும்…!”

அதுவே என்னுடைய (ஞானகுரு) தவம்.

“இராணுவம்” என்ற பெயரில் மனித குலத்தின் குணங்களையே மாற்றியமைக்கக் காரணமாக இருந்த அரசியல் தலைவர்கள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

drug addictions

“இராணுவம்” என்ற பெயரில் மனித குலத்தின் குணங்களையே மாற்றியமைக்கக் காரணமாக இருந்த அரசியல் தலைவர்கள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

இன்றைய சமுதாய மக்களின் நிலையில் குணங்கள் அவர்களால் ஏற்பட்டதல்ல. அவர்களை மாற்றியமைக்க
1.விஞ்ஞான ரீதியில் செயல்படுத்திய “இயந்திர மனிதர்கள் தான்”
2.இன்று இராணுவம் என்று செயல்படுத்தப்பட்ட மனிதர்கள்…!

மனிதனையே… அவன் உணர்வின் அலையையே… (புத்தியை) நாட்டின் இன வெறி உணர்வு கொண்ட செயலுக்காகப் பேராசையில் தன் நாடு என்ற உணர்விற்காகத் தன் நாட்டையும் தன் பலத்தையும் கூட்டிக் கொள்ளப் பல தவறான பழக்கங்களை அன்று ஏற்படுத்தினர்.

இராணுவ முறையினால் மனித ஆத்மாவின் உணர்வின் எண்ணத்தை மாற்றப் “போதை வஸ்துக்களை” உண்ணச் செய்தனர்.

அப்போதையின் உணர்ச்சியுடன் மனிதன் உள்ள நிலையில் அவன் எண்ணத்துடன் குரோத வெறி சக்தியான இராணுவப் பயிற்சி முறைகளை ஊட்டி வழிப்படுத்தினர்.

அதே உணர்வலையின் சுற்றலில் மனித ஆத்மாக்களின் எண்ணத்தை மாற்றியதில்… அன்றாண்ட அரசியல் வீரர்களில் சிலரால் வழிப்படுத்திய நிலை இன்றளவும் உள்ளன.

“சர்ச்சில்” ஆண்ட காலத்திலும் “ஹிட்லர்” ஆண்ட காலத்திலும் அவர்களின் ஆட்களின் உணர்வுடன் இப்போதை வஸ்துக்களைச் செலுத்தப்பட்டுப் போதை உணர்வுடன் மனிதன் உள்ள பொழுது அவனுக்குப் பல பயிற்சிகளைக் கொடுத்தனர்.

எந்த உணர்வின் பயிற்சி அலையைப் புகட்டினார்களோ… அதே உணர்வின் செயலைச் செய்யத்தக்க மனித ஆத்மாக்களை இப்படி உருவாக்கி விட்டனர் அன்றிருந்த அரசியல் தலைவர்கள்…! இன்றும் இதன் வழித் தொடர் சில நிலைகளில் உழன்று கொண்டு தான் உள்ளது.

மனிதனை மனிதனே உண்ணும் உணர்வலை கொண்ட வெறிக் குணங்களின் செயல்கள் சில பாகத்தில் நடந்து கொண்டு தான் உள்ளது.
1.விஞ்ஞான ரீதியிலும் சில மந்திரவாதிகளின் நிலையிலும்
2.தன் இன வர்க்க உணவையே உண்டால் தனக்கு வீரிய சக்தி கிடைக்கும் என்ற உணர்வில்
3.பல செயல்கள் நடக்கின்றன இந்த உலகின் பல பாகங்களில்.

இயேசு கிறிஸ்து அக்காலத்தில் தோன்றிச் சில ஒளி அலைகளைச் செயலாக்கிச் சென்றார். முகமது நபியின் காலத்திலும் அவர் எடுத்த அலையின் தொடர் அவர் வாழ்ந்த அவரின் எண்ணமுடன் செயல்பட்டவர்களுக்குத் தன் சக்தி அலையைப் பரப்பித்தான் சென்றார்.

1.இயேசு கிறிஸ்துவின் காலத்திலும் நபிகளின் காலத்திலும்
2.மனிதர்களின் எண்ணத்தை நல் உணர்வின் வழியில் சுழற்சிப்படுத்தி…
3.ஒளி அலைகளை அவர்கள் பால் செலுத்தி அவர்கள் ஆத்மாவை வளர்க்கச் செய்து
4.ஒன்றைப் பலவாக நல் ஒளியின் அலையைப் பரப்பச் செய்த செயலில்
5.அவ்வுணர்விற்கு உகந்த ஆத்மாக்களைச் செயல்படுத்துவது என்பது கடினமாகிவிட்டது.

அதை எல்லாம் மாற்றி அமைக்கத் தான் ஞானிகளைப் பற்றியும் சித்தர்களைப் பற்றியும் திரும்பத் திரும்ப உணர்த்திக் கொண்டே வருகின்றேன்.

நற்குணங்களின் வடிவாக முருகா என்ற ஆறு குணங்களைத் தெய்வமாக்கி அன்பு பண்பு பாசம் பரிவு வீரம் சாந்தம் என்ற நற்குணங்களை முருகனாக வடிவம் படைத்து மலை உச்சியிலும் மலைக்கு நடுவில் இடும்பன் என்ற தீய குணங்களைப் படைத்து இடும்பன் என்ற நிலையையும் உணர்த்தினார் போகர்.

ஒவ்வொரு மனித ஆத்மாவும் அவர்கள் வாழ்க்கையில் வரும் தீமைகளிலிருந்து விடுபட்டு வாழ்க்கையில் உயர்வான நிலை பெற வேண்டியதன் அவசியத்தைக் குறிக்க
1.மலை மேல் முருகனின் சிலையை அறுகுணங்களாக ஆறுமுகனாகப் படைத்து
2.சிலையை வணங்கும் முறையைப் போகர் ஏற்படுத்தினார்.

இடும்பனான குணங்களை அகற்றித் தெய்வ குணத்தை ஒவ்வொரு ஆன்மாவும் பெறவேண்டும் என்பதற்கே முருகன் சிலையை வைத்தார் போகர்.

அந்தச் சிலையை வணங்கும் ஆன்மாக்களுக்கு எல்லாம் நல் ஒளியின் அலையை இன்றும் பாய்ச்சிக் கொண்டிருக்கின்றார்.

குரு கொடுக்கும் “அருள் வாக்கு”

guru and disciple

குரு கொடுக்கும் அருள் வாக்கு

 

ஒரு சமயம் குருநாதர் உனக்குத் தங்கம் செய்யத் தெரியுமாடா…? என்று என்னைக் (ஞானகுரு) கேட்டார்..?

எனக்கென்ன சாமி தெரியும்…! என்று சொன்னேன்.

ஈயக்கட்டியை வாங்கிக் கொண்டு வா… ஒரு இரும்புக் கரண்டியைக் கொண்டு வா… என்றார். வாங்கிக் கொண்டு வந்தேன்.

காட்டுக்குள் கூட்டிக் கொண்டு போனார். அங்கே “சில மரங்களுக்கு முன்னாடி இருக்கும் குப்பைகளை எல்லாம் காண்பித்து…” இதை எல்லாம் எடுத்துக் கொண்டு வா..! என்றார்.

அதை எல்லாம் அள்ளிப் போட்டு நெருப்பை வைத்துக் கொளுத்துடா என்றார். குப்பை எரிந்த பிற்பாடு பார்த்தோம் என்றால் அதிலே இருக்கும் சத்துகள் எல்லாம் ஈயத்தில் இறங்கி அடுத்தாற்போல் பார்த்தால் “தங்கமாக” இருக்கிறது.

குருநாதர் இந்தப் பக்கம்… அந்தப் பக்கம்… என்று பல இடத்திலிருந்து எனக்குத் தெரியாமல் தான் குப்பையை அள்ளச் சொன்னார். நானும் அதை எல்லாம் குறித்து (அடையாளம்) வைத்துக் கொண்டேன்.

எல்லாம் செய்த பிற்பாடு தங்கக் கட்டியாகி விட்டது. குருநாதரிடம் சுற்றிக் கொண்டிருக்கும் பொழுது ஒரு வாத்தியார் ஆசாரியார் எல்லாம் என்னிடம் பழக்கமானவர்கள் இருந்தார்கள்.

குருநாதர் செய்த தங்கக் கட்டியை விற்கச் சென்றேன். அப்பொழுது அந்தத் தங்கக் கட்டியின் தரம் எப்படி இருக்கிறது… பாருங்கள்..! என்றேன்.

நீ பைத்தியக்காரரிடம் (ஈஸ்வரபட்டர்) ஏன் சுற்றுகிறாய்…? என்ற காரணம் இப்பொழுது தான் தெரிகிறது என்றார்கள் அவர்கள். நீ சரியான “காரியப் பைத்தியம் தான்…” என்றார்கள்.

நீ எவ்வளவு வேண்டுமானாலும் தங்கத்தைச் செய்து கொண்டு வா.. நான் வாங்கிக் கொள்கிறேன்…! என்றார் அந்த ஆசாரி.

முதலில் குருநாதர் தங்கம் செய்த மாதிரியே அவருக்குத் தெரியாமல் நானும் செய்து பார்த்தேன். தங்கம் வந்துவிட்டது…! அதைச் செய்த பிற்பாடு ஆசாரியிடம் கொடுத்த பிற்பாடு அவர் என்ன செய்தார்…?

அட அடா… எனக்குக் கொஞ்சம் வழி கொடுத்தால் நான் எத்தனையோ செய்வேன்.. அடுத்து வாத்தியார் என்ன செய்தார்…? அட.. நீ செய்யாமல் போனால் பரவாயில்லையப்பா…! என்று அந்த வாத்தியார் என்னைச் சுற்றி சுற்றி வந்தார். நான் போகும் பக்கம் எல்லாம் வந்தார்.

கொஞ்சம் போல.. ஒரு கோடி மட்டும் காட்டிவிடு…! என்றார். நீ பாவம் செய்ய வேண்டாம் நான் அதைச் செய்து கொள்கிறேன். உனக்கு வேண்டிய கட்டடம் எல்லாம் கட்டித் தருகிறேன்.

அடேயப்பா..! அவர் என்னைச் சுற்றியே வந்தார். இப்படித் தங்கம் செய்ய வேண்டும் என்ற ஆசையில் ரொம்பப் பேர் என்னைச் சுற்றி வந்தார்கள் சிறிது காட்டிக் கொடுங்கள் என்று…!

தங்கமே எனக்குச் செய்யத் தெரியாது என்றேன்.

இல்லை… நீங்கள் தங்கத்தை விற்று வந்திருக்கின்றீர்கள்… அது எப்படி…? மிகவும் நயமான தங்கம் என்று எல்லோரும் சொல்கிறார்களே…! என்று கேட்டு நான் எங்கே போனாலும் துரத்திக் கொண்டே வருகின்றார்கள்.

காரணம்… குருநாதர் ஒவ்வொரு தாவரத்திலும் என்ன சத்து அடங்கி இருக்கின்றது…? என்று காட்டினார்.
1.ஒவ்வொரு தாவர இனங்களின் உணர்வும் எப்படி மாறியது…?
2.அந்தத் தாவர இனச் சத்துக்களைச் சூரியன் எப்படி எடுத்து வைத்திருக்கிறது…?
3.அதை எடுத்து அலைகளாக மாற்றும் பொழுது நட்சத்திரங்கள் இரண்டு மோதும் பொழுது இந்த உணர்வுகள் எப்படி அதிலே இணைகிறது…?
4.அது இணந்த பின் அதனுடைய மாற்றங்கள் எப்படி மாறுகிறது…? என்கிற வகையிலே குருநாதர் தெளிவாகக் காட்டினார்.

இதை எல்லாம் உங்களுக்குச் சொல்லால் சொல்லி நிரூபிக்க வேண்டும் என்றால் உங்கள் மனதில் வைத்திருக்க முடியாது.

ஆனால் செய்து காண்பித்தோம் என்றால் சாமி சொல்லி விட்டார் அல்லவா… நாமும் செய்து பார்ப்போம் என்று
1.இந்த ஆன்மீக நிலையை எடுப்பதற்குப் பதில்
2.இந்த வாழ்க்கைக்குத் தேவை என்று “பணத்தின் மீது” ஆசை வைத்து விடுவீர்கள்.

அந்த மாதிரிப் போனவர்கள் நிறைய உண்டு… இன்றும் இருக்கின்றார்கள்.

“சாயிபாபா” லிங்கத்தை எப்படிக் கக்கி எடுத்துக் கொடுக்கின்றார்…! என்று ஒரு பையனுக்கு எடுத்துக் காண்பித்தேன். அவன் செய்தான்… அதற்குப் பின்னாடி அவன் பெரிய கடவுளாக மாறிவிட்டான்.

சிலருக்கு இந்த மாதிரி விவரங்கள் எல்லாம் சொன்னவுடனே தனித் தனிக் கடவுளாக மாறி
1.ஈஸ்வரபட்டர் தனித்து (SPECIAL) அவர்களுக்குக் கொடுத்தார் என்று
2.இந்தக் குருநாதரை மறந்து விட்டார்கள்.

உலகத்தைப் பற்றி அறிய வேண்டும் என்று சிலருக்குக் காண்பிக்கப்படும் பொழுது அதிலேயும் “எல்லாம் தெரிந்து விட்டது…!” என்று சில பேர்
1.இன்னும் கொஞம் தானே…
2.அப்புறம் பிடித்தால் போய்விட்டது என்று
3.எம்மை (ஞானகுருவை) மறந்தவர்கள் நிறையப் பேர் இருக்கின்றார்கள்.

இப்பொழுதும் அப்படி குருவை மறப்பவர்கள் உண்டு. ஏனென்றால் தனித்து இந்த உடலின் ஆசை தான் வருகிறது.

மேற்கொண்டு அருள் ஞானத்தைப் பெருக்க வேண்டும் என்ற நிலையோ இயற்கை எப்படி இருக்கிறது….? அதிலே நீங்கள் எப்படி வளர வேண்டும்…? என்ற உண்மையைச் சொன்னாலும் கூட இந்த உடல் இச்சையே வருகிறது.

அந்தப் பேரின்பப் பெருவாழ்வு என்ற அழியாத ஒளியின் சரீரம் பெற வேண்டும் என்ற ஆசை வருவதில்லை.

இதை எல்லாம் நீங்கள் தெளிவாக அந்த உண்மைகலை உணர வேண்டும் என்பதற்கே அனுபவமாகக் கண்டதை வெளிப்படுத்துகின்றேன்.

என்றோ அழிந்திருக்க வேண்டிய இந்தப் பூமியை இன்னும் காத்துக் கொண்டிருக்கும் சித்தர்களின் செயல்கள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

earth change protection

என்றோ அழிந்திருக்க வேண்டிய இந்தப் பூமியை இன்னும் காத்துக் கொண்டிருக்கும் சித்தர்களின் செயல்கள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

அன்று ஆண்ட அரசரகள் தன் நிலை குறையாமல் இருக்க இயேசு பிரானை இம்சித்தது “யூதர்கள்…” என்று பழியை அவர்கள் மேல் போட்டுத் தன் உயர்வை மங்காமல் பாதுகாத்துக் கொள்ள தங்களை மறைத்துக் கொண்டனர்.

அதே சமயத்தில் யூத சமுதாய இன மக்கள் எங்கிருந்தாலும் அவர்களை அழிக்க வேண்டும்…! என்ற வெறியில் அன்று பலரை அன்றாண்ட அரசர்கள் அந்த உடல்களை அழித்தார்கள்.

அந்த உடல்களில் ஏறிய “ஒளி அலை…!” அழித்த உடலிலிருந்து எங்கப்பா சென்றிருக்கும்…? இன்றும் யூத இனத்திலிருந்து தப்பி வந்த மக்கள் தான் இந்தியாவிலும்… ஆரிய இனங்களாகக் குடியேறி வழித் தொடர் பெற்று இன்று வரை சமுதாயச் சுழற்சியில் உள்ளனர்.

இந்த உலகினில் தொழில் நுட்ப வல்லுனர்களில் உயர் ஞானம் கொண்டவர்களில் பெரும்பான்மையோர் யூத சமுதாய இன மனிதர்கள் தாம்.

இயேசு பிரானை அன்றாண்ட அரசர்கள் அவர் சக்தி வெளிப்படாமல் இருக்க ஒரு தடங்கலை ஏற்படுத்தியிருக்கா விட்டால் இயேசுவின் ஞானத்தினாலேயே இந்த உலக மனித ஆத்மாக்களுக்கு அன்றே பல உயர்ந்த சக்திகளை இன்னும் வளர்ச்சிப்படுத்தி இருப்பார்.

இயேசு பிரான் ஏன் உடலை விட்டுச் சென்ற பிறகு வளர்ச்சி அளித்திருக்கக்கூடாது…? மகானின் சக்தியிலும் தடங்கலா…?

1.ஜீவ உடலில் இருந்து எடுக்கும் சுவாச அலையில்
2.இந்தப் பூமிக்கு வேண்டிய சக்தி அலையை ஈர்க்க
3.எண்ணத்தின் உணர்வால் எடுக்கும் சுவாசத்தில்
4.அந்த ஒளி அலை காந்தத் தன்மை ஈர்ப்பிற்கு வர வேண்டும்.

பொதுவான மண்டலம் தான் பால்வெளி மண்டலம். பல மண்டலங்களுக்கும் பால்வெளி மண்டலம் தான் சக்தி தருகின்றது. ஆனாலும்
1.ஈர்ப்பிற்கு வருவதற்கு
2.இவ்வெண்ணச் சுவாசத்தில் எடுக்கும் அலையின் காந்தத் தன்மை தான் பூமியில் பாய முடியும்.

எண்ணத்தால் வழிப்படுத்தும் செயலினால் தான் பூமிக்கு ஈர்ப்புச் சக்தியே கூடியதேயன்றி “தானாக” எதுவும் நடக்கவில்லை.

மகான்களின் சக்தி ஒளியை ஆத்மாக்களின் எண்ணத்துடன் பாய்ச்சி “அவர்கள் எடுக்கும் சுவாச அலையினால் தான்…!” பிற மண்டலங்களின் ஒளி அலையும் நமக்குக் கிட்டும்.

அன்றைய புராணக் கதைகளில் விளக்கியுள்ள சனி பகவான் கேது செவ்வாய் இப்படி ஒவ்வொரு மண்டலங்களுக்கும் உருவங்களையும் கோவைக் கதைகளையும் எதற்காக உணர்த்திச் சென்றான் நம் சித்தன்…?
1.தெரிந்தோ தெரியாமலோ கதை உருவில் காணும் உருவ ஈர்ப்பில்
2.எண்ணம் செல்லும் பொழுது அவ்வலை சக்தி பூமியில் வந்து பதிகிறது.

இயேசு பிரானின் காலத்தில் தேவலோகத்திலிருந்து தேவ தூதர்கள் நட்சத்திரங்களாக மின்னி வந்தார்கள்…! என்று எதனை உணர்த்தினார்கள்…?

இயேசு பிரான் வந்ததினால் தான் நம் பூமிக்கே பல மண்டலங்களின் ஈர்ப்பலையின் தொடர் ஏற்பட்டது. இயேசு பிரான் சில மலைகளிலிருந்து ஜெபம் செய்தார். அந்த மலைகளுக்கே சில ஒளி அலையை எடுக்கும் முறைப்படுத்திச் சென்றார்.

அவரது ஒளி அலை பாயப்பட்ட பல ஆத்மாக்கள் யூத இன சமுதாயத்தில் சித்து நிலையிலும் சூட்சும செயலிலும் அவர் இருந்த காலத்திலிருந்த மனித ஆத்மாக்களே இன்று வரையிலும் உள்ளனர்.

விஞ்ஞானத்தால் பல சாதனைகளைப்படுத்திப் பல மண்டலங்களுக்குப் பல விஷ வாயு குண்டுகளைச் செலுத்தி அதனை வெடிக்க வைக்கும் முறையெல்லாம் படுத்தி
1.குரோத உணர்வின் நாட்டுப் பற்று வெறியினாலும்
2.ஜாதி மத இன வெறியினாலும் செய்யப்படும் சூழ்ச்சிகளை எல்லாம்
3.இன்றும் மாற்றி அமைத்து வருகின்றனர் இயேசு பிரானின் வழித் தொடரின் ஆசி பெற்ற யூத இன சித்து நிலை கொண்ட சிலர்.

என்றோ அழிந்திருக்க வேண்டிய இப்பூமியை வெறியுணர்வு கொண்ட சமுதாய இன மக்களை அவர்களின் எண்ணத்தில் ஏற்படும் செயல் விளைவுகளையெல்லாம் “மாற்றிக் கொண்டு தான் இந்தச் சித்தர்கள் உள்ளார்கள்…!”

துதிக்கும் மடாலயங்களில் சிலுவையில் அறையப்பட்ட சோர்ந்த முகம் கொண்ட இயேசு பிரானைக் காணுகின்றார்கள். அந்த இயேசு பிரான் செயலாக்கும் முறையை “யாராவது உணர்கின்றார்களா…?”

போகர் உருவாக்கிய நவபாஷாணச் சிலையின் இரகசியம்

NAVAPASHANAM MURUGAN

போகர் உருவாக்கிய நவபாஷாணச் சிலையின் இரகசியம்

 

போகர் என்றாலே “தாவர இனச் சத்தை எல்லாம் போகித்தவர்…” என்று பொருள்.

ஆதியிலே அகஸ்தியன் இயற்கையின் சக்திகளை எப்படி மோகித்து அந்த உணர்வின் தன்மையைப் போகித்து அந்த உணர்வின் சக்தியை அணுவாக மாற்றினானோ அதே போல் தான் அகஸ்தியன் பெற்ற அருளை போகரும் பெற்றதனால் “போகர்…!”

எதனையுமே நுகர்ந்து…
1.உணர்வுகளை அறிய வேண்டும்…! என்ற ஆர்வத்தைக் கூட்டிக் கூட்டிக் கூட்டி
2.அந்த உணர்வின் சத்தைத் தனக்குள் பெருக்கி
3.மணத்தால் நுகர்ந்திடும் ஆற்றல் பெற்றவர் போகர்.

நவக்கோள்கள் அது வெளிப்படுத்தும் உணர்வுகள் பூமியிலே படர்ந்திருக்கும் பொழுது “பாஷாணக் கற்களாக…” அது விளைந்திருக்கும்.

அப்படிப் பாஷாணக் கற்களாக விளைந்ததைத் தனித்துத் தனித்து எடுத்து இந்த நவக்கோளின் உண்மையை அறிந்து நவபாஷாணத்தால் ஒரு சிலையை உருவாக்கினார்.

27 நட்சத்திரங்கள் ஒன்றுக்கொன்று மோதி அது ஒளி வீசும் உணர்வுகளையும் இந்த நவபாஷாணத்திற்குள் அதைப் பதியச் செய்தார்.

அந்த உணர்வின் இயக்கத்தைக் கொண்டு எந்தெந்தக் குணத்தில் எந்தெந்தக் கோள்களின் சத்து எதெனெதன் நிலைகளில் இருக்கிறது என்ற நிலையை அந்த நவபாஷாணத்திற்குள் பாய்ச்சினார்.

புழுவிலிருந்து மனிதனாக வந்த நிலையில் பலவிதமான உணர்வுகளை… பல விதமான உணவுகளை… தான் உட்கொண்டு அதனைதன் உணர்வு கொண்டு எண்ணங்கள் உருவாகி… அதன் வழியில் வளர்ச்சி பெற்ற உண்மையை… அறிந்து கொண்டவன் போகன்.

1.ஒவ்வொரு தாவர இனச்சத்தின் தன்மைகளிலும் மனிதனை உருவாக்கக் காரணமாக இருந்த
2.நஞ்சை வென்றிட்ட… நஞ்சை வென்றிடும்.. அந்த உணர்வின் சத்துக்கள்
3,புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் ஒவ்வொரு உடலுக்கும் ஒவ்வொரு விதமான விஷங்கள் இருக்கும்
4.அது நாளுக்கு நாள் விஷங்களை மாற்றி… மாற்றி… மாற்றி…
5.விஷத்தை மாற்றிடும் சக்தி பெற்ற பின் தான் மனிதனாக உருவாக்கியது என்பதை உணர்ந்து
6.மனிதனுக்கு மூலமாக இருந்த விஷத்தை வென்றிடும் தாவர இனச் சத்தின் தன்மைகளையும்
7.அந்தச் சிலையில் சாரணையாக ஏற்றினான் (நவக்கோள்கள் + 27 நட்சத்திரங்கள் + தாவர இன சத்துக்கள்).

விஷம் கொண்ட மற்ற விஷ ஜெந்துக்கள் மிருகங்கள் மோப்பத்தால் நுகர்ந்தறிந்து தங்களைக் கொன்று புசித்திடாமல் இருப்பதற்காக வேண்டி அக்காலங்களில் அகஸ்தியனின் தாய் தந்தையர்
1.பல விதமான மூலிகைகளைத் தான் படுத்திருக்கும் பக்கம் பரப்பி வைக்கின்றார்கள்…
2.அரைத்து உடலிலும் பூசிக் கொள்கிறார்கள்.
3.அந்த மூலிகைகளின் மணத்தைக் கண்டு அந்த உயிரினங்கள் விலகிச் சென்றுவிடுகின்றன.

அத்தகைய மணங்களை அகஸ்தியனின் தாய் நுகர்ந்ததனால் அந்தத் தாயின் கருவிலிருந்த அகஸ்தியன் உடலுக்குள் நஞ்சினை வென்றிடும் ஆற்றலின் சக்திகள் விளைந்தது.

27 நட்சத்திரங்களின் உணர்வுகளும் கடும் நஞ்சு கொண்டது. நட்சத்திரங்களிலிருந்து வரும் கதிரியக்கங்கள் மின்னலாகத் தாக்கும் பொழுது மற்றொன்றை ஊடுருவி வீழ்த்திவிடும். அத்தகைய வீரிய சக்தி கொண்டது தான் நட்சத்திரங்கள்.

தாய் கருவில் இருக்கும் பொழுது… அகஸ்தியனின் சந்தர்ப்பம் அதனை எல்லாம் அடக்கித் தனக்குள் அணுத் தன்மையாக மாற்றிக் கொண்டது… மாறியது….! அந்த அகஸ்தியன் தான் இன்றும் அழியாத நிலைகள் கொண்டு துருவ நட்சத்திரமாக உள்ளான்.

ஆகவே அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியின் துணை கொண்டு அகஸ்தியனுக்குப் பின் இரண்டாவது… இந்த போகன் 5000 ஆண்டுகளுக்கு முன் அறிந்துணர்ந்தான்.

நம் பிரபஞ்சமும் கோள்களும் நட்சத்திரங்களும் எப்படி உருவானது…? என்று அகஸ்தியன் கண்ட உணர்வை அவனும் தனக்குள் கண்டுணர்ந்து நஞ்சை வென்றிடும் சக்தி பெற்றான்.

1.27 நட்சத்திரங்களின் மின்னல்கள் தாக்கப்படும் பொழுது அந்த மின் கதிர்கள் நவபாஷாணத்திற்குள் ஊடுருவி
2.அதன் வழி கொண்டு இந்த 27 நட்சத்திரங்களையும் ஒருங்கிணைத்து
3.அந்த உணர்வின் தன்மை தனக்குள் பெறச் செய்யக்கூடிய தகுதி பெற்ற ஒரு சிலையை “முருகன் சிலையாக…” உருவாக்கினான் போகன்.

அதாவது
1.ஆறாவது அறிவின் நிலைகளை “முருகா…!” என்று அறிவின் சிறப்பாகக் காட்டி
2.நாம் மனிதனாக எப்படி வந்தோம்…?
3.மனிதனாக ஆன பின் இத்தனை அறிவும் நாம் எப்படிச் செய்ய முடிந்தது…? என்பதை அவன் கண்டுணர்ந்து
4.நமக்கெலாம் தெரியப்படுத்தினான்…. அந்தப் போகன்.

ஒவ்வொரு பகுதி மக்களும் அந்த உணர்வுகளை அதை எப்படிப் பெறுகின்றனர் என்ற நிலையை அறிவதற்காக வேண்டி இந்தப் பூமி முழுவதற்கும் ககன மார்க்கமாகச் சென்று அறியும் சக்தி பெற்றான்.

அந்த அறிவின் சக்தி பெற்ற நிலையில் இந்த நவபாஷாணச் சிலையை உருவாக்கி…
1.அதன் வழியில் இன்றைக்கு நாம் எல்லாம் வழிபடும் நிலையாக
2.ஆறாவது அறிவின் பெருமையை சிலை ரூபமாக வெளிப்படுத்தியது போகன் தான்..!

தன்னைத் தாழ்த்தி மற்றவர்களை உயர்த்துவதே “அவதார புருஷர்களின் செயல்…” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Jesus christ

தன்னைத் தாழ்த்தி மற்றவர்களை உயர்த்துவதே “அவதார புருஷர்களின் செயல்…” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

நம் பூமியில் சப்தரிஷிகளின் செயலினால் அந்தந்தக் கால மாற்றத்தில் அவர்களின் சக்தியை உணர்த்தப் பல உடல்களை ஏற்று “இம்மனித ஆத்மாக்களை வழி நடத்திச் சென்றனர்…!” என்று உணர்த்தி வந்தேன்.

இயேசு கிறிஸ்து காலத்தில் நடந்தவை என்ன…?

அவர் வாழ்ந்த காலத்தில் அன்றுள்ள மக்களைத் தன் ஒளி வட்டத்தில் கலக்கச் செய்ய சப்தரிஷியினால் இயேசு கிறிஸ்து அவதரித்தார்.

அவரை அன்றைய மக்கள் ஏற்றுக் கொண்டு அவர் வழி நடக்கத் தவறி…
1.அன்றைய அரசு தன் புகழ் குறையும் என்பதற்காக அந்த மகானைத் துன்புறுத்தியதைத்தான் உலகம் அறியும்.
2.ஆனால் இயேசு கிறிஸ்துவால் செயலாக்கிய நிலைகள் எவை என்பதை உணர முடிந்ததா…?
3.பரிவையும் பண்பையும் பாசத்துடன் அன்பாக்கி ஊட்டிச் சென்றார் இயேசு பிரான்.

அவர் அவதாரத்தில் வந்து அன்பையும் பண்பையும் மட்டும் தானா புகட்டிச் சென்றார்…? ஓர் மகான் தன் நிலையை உணர்த்த “உலகத்தின் ஜீவாத்மாவின் உடலில் ஏறிச் செயல்பட்டார்…” என்றால் அந்த மகானுக்கு எந்த நிலை எல்லாம் ஏற்படும்…? என்று தெரியாமலா போய்விடும்.

இயேசு கிறிஸ்துவின் உபதேசத்தினால் அவர் வழி ஏற்று அவர் வழி வந்து அவரின் சக்தி அலையைப் பெற்ற பல ஆத்மாக்களுக்கு அவரால் திராட்சை இரசம் அளிக்கப்பட்டது. இன்றும் கிறிஸ்துவ ஆலயங்களில் திராட்சை இரசம் தரப்படும் முறையுள்ளது.

ஆனால் இயேசுவினால் தரப்பட்ட திராட்சை இரசமுடன் அவரது சக்தியுடன் அவர் பெற்ற நல் ஒளியின் சக்தி அலையைப் போதைப்படுத்தி அந்த இரசத்துடன் கலந்து பலருக்கு அளித்து
1.அவர்களின் உடலிலேயே பல ஒளி அலைகளைப் பாய்ச்சி
2.அவரது செயலுடன் அவர்களின் எண்ணத்தையும் கலக்கச் செய்து
3.அதனால் அவரின் ஒளி வட்டத்தை இந்தப் பூமியில் என்றும் நிலைக்கும்படிச் செயலாக்கிவிட்டுத் தான் அவ் இயேசுபிரான் சென்றார்.

இன்றளவும் அவரின் பெயர் நிலைக்கபடுகிறதென்றால் எதன் அடிப்படையில்…? இயேசுவே…! என்ற ஒலி அலையை எடுக்கும் ஆத்மாக்கள் அலையுடன் அவர் பெற்ற சக்தி அலைகள் இன்றளவும் பரவிக் கொண்டுதான் உள்ளன.

இயேசு கிறிஸ்துவினால் அன்று தரப்பட்ட திராட்சை இரசம் அருந்திய ஆத்மாக்களின் உடல் வழித் தொடர் கொண்ட ஆத்மாக்கள் இன்றும் யூதர்கள் என்ற சமுதாயத்தில் உள்ளனர்.

அவர்கள் உடலின் தன்மையிலேயே பல வீரிய சக்தி நிலை குணங்களுடன் பிறந்து வாழ்கின்றனர். யூதர்களினால் இன்றும் பல நல்ல அலைகளை எடுத்து உலகிற்குப் பயன்படச் செய்ய முடிகின்றது.

1.ஒவ்வொரு உடல் தன்மைக்கும் பல மாற்றங்கள் உண்டு
2.ஒன்றை ஒத்த நிலையில் ஒன்று இல்லை
3.ஒன்று போலவே எல்லாம் இருந்தால்… எந்த வளர்ச்சிக்கும் வழியில்லை.

யூதர்களின் உடலின் சக்தி அமில குணமே உயர்ந்த நிலையில் வளர்ச்சியுற்றுச் செயல்படும் வண்ணம் வைக்கப்பட்டது இயேசு கிறிஸ்துவினால் தான்.

இயேசு கிறிஸ்துவை விஷத்தை அருந்தச் செய்தும் அவர் ஆன்மா பிரியவில்லை. சிலுவையில் வைத்து அறைந்தும் அவர் ஆத்மா பிரியவில்லை.

பல அமில குணங்களின் உணர்வின் எண்ணத்தில் வாழ்ந்திருந்தால் அவர் ஆத்மா பிரிந்து சென்றிருக்கும். ஆத்மா பிரியாத உடலைத்தான் இவர்கள் கல்லறையில் வைத்தார்கள். பூமியிலும் காற்றுள்ளது. பூமியின் உள் நிலையிலும் காற்றுள்ளது.

மகானின் உடலை இம்சித்ததாக இவர்களையே இம்சைப்படுத்திக் கொள்ள வேண்டாம் என்ற உணர்வினால் தான்
1.அவர்களின் ஆன்மா நிம்மதி பெறப்படும்
2.அவர்களின் ஆசையும் தன் ஆசை தான்..! என்று
3.அவர்களின் இச்சைக்குத் தான் உட்பட்டு இயேசுபிரானும் செயல்பட்டாரேயன்றி
4.”தான் உயர்ந்த மகான்…!” என்று அந்த நிலையில் தன் உயர்வைக் காட்டவில்லை
5.ஒவ்வொரு ஆத்மாவும் உயர வேண்டும் என்று உலகிற்கு வந்த அவதார புருஷர்
6.தன் உயர்வை உணர்த்திச் செல்வாரா…? அவரின் செயல் தான் இன்றளவும் தொடர்ந்திருக்குமா…?
7.என்று அந்த உடலை ஏற்றாரோ அந்த உடல் அக்கல்லறையில் அப்படியே தான் உள்ளது.

அவர் வந்து சென்று வளர்த்துச் சென்ற ஒளி அலையின் வட்டமும் வளர்ந்து கொண்டுதான் உள்ளது இன்றளவும்…!

இந்தக் கலியில் ஞானம் பெறுபவன் மட்டும் எப்படித் தப்புவான்…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

stable spiritual power

இந்தக் கலியில் ஞானம் பெறுபவன் மட்டும் எப்படித் தப்புவான்…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

ஞானத்தின் வழி செல்லும் போதனை முறையையும்… தியான வழிபாட்டின் முறையையும்… மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொல்வதின் நிலை என்ன…?

இந்தப் பூமி தோன்ற இந்தப் பூமியின் ஜீவன் பெற அஜ்ஜீவனின் வளர்ச்சியினால் மனித ஆன்மாக்கள் தோன்ற…
1.இவர்கள் சொல்லும் “இயற்கைச் சக்தி…” என்றாலும்
2.இதற்கு மூல சக்தி வளர ஒரு சக்தி தேவை.

அச்சக்தி அமிலக்கூட்டு நிலை பெற்றோர்கள் நம் சப்தரிஷிகளின் செயல் வடிவம்தான் நம் பூமியும்… பூமியில் வளர்ச்சியான எல்லாமுமே…!

பல கோடி ஆண்டுகளாக எண்ணிலும் கருத்திலும் எடுத்துச் சொல்ல முடியாத மாற்றங்களின் செயல் திறனில் வழி வந்த நிலையில்
1.மனித இனம் தோன்றி மனித இன குண அமில வளர்ச்சியிலிருந்து தான்
2.மீண்டும் மீண்டும் சகல சக்திகளையும் சக்தி வழி பெறச் செயலாக்க முடியும் என்ற உண்மையின் தத்துவத்தில்…
3.தான் வடித்த வடிவான “மனித மகசூலான ஞான ஒளியைத்தான்…” நம் சப்தரிஷிகள் காணத் துடிக்கின்றனர்.

தன் செயலின் பலன் தான் மனித இனம். இந்த மனித இனம் தோன்றி வளர சப்தரிஷிகளின் செயல் காலத்தில் பல கோடி ஆண்டுகள் ஆகிவிடுகின்றன.

இவ்வினம் தோன்றி அவ்வினத்தின் ஒளியை எடுத்தால் தான் மீண்டும் மீண்டும் இவ்வின வளர்ச்சிக்கு அவர்கள் பயிர் செய்ய முடியும். செய்த மகசூலில் வரும் பயிரை எல்லாம் உணவாக உண்டு கழித்து விட்டால் மீண்டும் பயிர் செய்ய விதை நெல் தேவைப்படுகின்றது.

அவர்கள் செய்த பயிருக்கு மகசூல் பெற்று அந்த மகசூலில் மீதமான விதை நெல் இருந்தால் தான் மீண்டும் மகசூல் காண முடியும். இதன் அடிப்படையின் நிலையை ஒத்துத்தான் நம் சப்தரிஷிகளின் நிலையும் மகசூலைக் கண்டு அதிலுள்ள பலனால் மீண்டும் மீண்டும் பயிர் செய்யச் செயல் புரியும் நிலை தான் “இங்கே உணர்த்தும் நிலை…!”

இதனை ஒத்துப் பல நிலைகளில் செயல் புரிந்து வருகின்றனர் சப்தரிஷிகள்.

இந்த மனிதக் கரு தோன்றி இது நாள் வரை அவர்களின் ஒளி வட்டத்தில் கலக்கும் நிலை கொண்ட ஆன்மாக்களின் வளர்ச்சியைக் காண பல காலமாகப் பல செயல்களைப் புரிந்து வருகின்றனர். ஆனால்
1.இம்மனித ஆன்மாக்களின் எண்ண வாழ்க்கையில்
2.அவ்வொளி ஞானத்தின் சித்து நிலை பெறப்படுவது மிகவும் குறைந்தே வருகின்றது.

தன் ஞான வளர்ச்சியை உலகுக்கு உணர்த்தத்தான் அந்தந்தக் கால கட்டத்தில் அச்சப்தரிஷிகளே தோன்றி அக்கால மாற்றத்தின் சில நிலைகளைச் செயல் புரிந்து அவர்கள் நல் ஒளியின் ஆத்மாக்களை எடுத்ததின் நிலை தான் நாம் இன்று கேள்விப்படும் பல மகான்கள் தோன்றிய நிலை எல்லாம்.

அந்த மகான்கள் தோன்றியதன் நிலை எல்லாம் தான் வளர்த்த பூமியின் சக்தியிலிருந்து தன் சக்தியின் பலனைப் பெற்றால் தான்… மீண்டும் சப்தரிஷிகளுக்கு அவர்களின் செயலின் மண்டலம் தோன்றி வளர்ந்து “ஜீவனை வளர்க்க முடியும்…”

சூரியனைச் சுற்றியுள்ள நாற்பத்தியேழு மண்டலங்களில் நம் பூமியில் மட்டும் இன்று மனித ஆன்மாக்கள் வாழ முடிகின்றது. இன்று வாழும் இதே நிலை இக்கலியின் மாற்றத்தில் அழியப் பெறுவதனால் மீண்டும் மனித ஜனனம் தேவை.

காற்று மண்டலமே விஷக் கோளமாகச் சுழலும் இந்தக் கலியில் இதன் வளர்ச்சி நிலையின் மாற்றத்தின் பொழுது மனிதன் தன்னைத் தானே அறிந்து கொள்ளச் செயலாக்கியுள்ள இந்த விஷக் குண்டுகள் வெடிப்பதற்கு முதலிலேயே இம்மனிதனின் ஞானம் ஒளி பெற்றால் அச்சப்தரிஷிகளின் ஒளிக் கூட்டு அதிகப்படும்.

உலகமே விஷமாகி ஜீவராசிகள் அனைத்துமே மடியப் போகின்றன என்றால் ஞானம் பெறுபவன் மட்டும் எப்படித் தப்புவான்…?

ஒரு பானை சாதம் வடிக்கின்றோம்.
1.அப்பானையில் இட்ட அரிசி எல்லாம் வெந்து சாதமாக ஆனாலும்
2.அதில் உள்ள கல் வேகுவதில்லை அல்லவா…!

பூமியில் உற்பத்தி செய்தது தான் அந்தப் பானையும் அக்கல்லும் விறகும் கரியும் அடுப்பும் எல்லாமே…! அதனதன் வளர்ச்சி கொண்டு விறகு எரிந்து உஷ்ணத்தைக் கக்கிச் சாம்பலாகின்றது.

சுட்ட சட்டி எந்த உஷ்ணத்தை ஏற்றி அடுப்பு எரிந்தாலும் அது தாங்கி நீரை அவியாக்கி அரிசி எல்லாவற்றையும் வேக வைத்தாலும் அந்தக் கல் மட்டும் எந்த உஷ்ணமாக ஏறினாலும் அப்படியே உள்ளது.

அதைப் போன்று ஒளியின் சக்தியால் பிம்பம் கொண்ட “நாம்” அச்சக்தி பிம்பத்தின் பிம்ப ஞானம் பெற்றால் இந்தப் பூமியின் மாற்றத்தினால்
1.நீரும் நெருப்பும் விஷ வாயும் நம் ஒளியை எந்தப் பின்னமும் படுத்தாது
2.சாதத்தில் கொதித்து வந்த கல்லைப் போன்று…!

சாங்கிய சாஸ்திரத்திற்கும் மெய் ஞானிகள் கொடுத்த சாஸ்திரத்திற்கும் உண்டான வித்தியாசங்களை அறிந்து கொள்ள வேண்டும்

athimoolam agastya

சாங்கிய சாஸ்திரத்திற்கும் மெய் ஞானிகள் கொடுத்த சாஸ்திரத்திற்கும் உண்டான வித்தியாசங்களை அறிந்து கொள்ள வேண்டும்

 

கணவன் இறந்தால் சாங்கிய சாஸ்திரப்படி மனைவியின் மாங்கல்யத்தைப் பிரித்து எடுத்துக் கொள்கிறார்கள். ஏனென்றால்
1.“கணவனை இழந்தவள்…” என்று தெரிந்து கொள்ள வேண்டுமாம்.
2.அந்த மாங்கல்யத்தைக் கழட்டி விட்டால் தான் தன் குழந்தைகள் மீது பற்று வருமாம்.

இப்படிச் செய்கின்றனர்.

மாங்கல்யத்தைத் தான் தூக்கி எறிந்து விடுகின்றார்கள். வாழ்க்கையில் என்று திருமணம் ஆனதோ அவருடன் கலந்து உறவாடிய உணர்வுகள் உடலுடன் இருக்கின்றதே அதை என்றைக்குத் தூக்கி எறிவது…?

சொல்லுங்கள் பார்க்கலாம். தூக்கி எறிய முடியுமா…? அவர் சம்பாரித்த சொத்தைத் தூக்கி எறிகின்றீர்களா..?

“கணவர் தன்னுடன் இருக்கின்றார்…!” என்ற நிலைகளை எடுத்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழும் அந்தச் சப்தரிஷி மண்டலங்களுடன் கணவரின் உயிரான்மா இணைந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து பெரு வீடு பெரு நிலை என்ற நிலை அடைந்து அழியா ஒளிச் சரீரம் பெறவேண்டும் என்ற உணர்வுகளை மனைவி எண்ணி எடுக்க வேண்டும்.

அங்கே சப்தரிஷி மண்டலங்களில் இணைத்த பின் அவரை “ரிஷி” என்ற நிலைகளில் நாம் எண்ணி அந்த அருள் பெறவேண்டும் எங்கள் குடும்பத்தில் அறியாது வந்த இருளை நீக்க வேண்டும் என்று மனைவி அதை எண்ணி வளர்த்தால் அந்த அருள் உணர்வுகள் இங்கே வரும்.

மாறாக… கணவன் மேல் பற்று கொண்டு “என்னை விட்டுப் போய்விட்டாயே…!” என்று எண்ணினால்
1.கணவனின் உயிரான்மா மனைவியின் உடலுக்குள் தான் வருகின்றது.
2.அவர் உடலில் வந்த நோய்கள் தான் இங்கே விளைகின்றது.

மீண்டும் இந்தப் பற்றின் தன்மை கொண்டு “போய்விட்டார்” என்று எண்ணி என் குழந்தைகளை நான் எப்படிக் காப்பேன்…? என்ற உணர்வுகளை எடுக்கும் பொழுது வேதனை என்ற விஷத்தைத்தான் வளர்க்க முடிகின்றது.
1.கணவனையும் பாதுகாக்க முடியவில்லை.
2.ஆக நம்முடைய உணர்வையும் நாம் காக்கும் சக்தியை இழந்து விடுகின்றோம்.

இப்படிப்பட்ட விஷத்தின் தன்மை பெற்றால் இந்த உடலை விட்டுச் சென்ற பின் நாம் விஷத் தன்மை கொண்ட உடலாகத்தான் மாற்றுகின்றோம்…! என்ற நிலையை எல்லோருமே மறந்து விடுகின்றனர்.

ஆனால் நம் ஞானிகள் நமக்கு உணர்த்திய பேருண்மை என்ன…?

மனிதன் பல் கோடிச் சரீரங்களில் விஷத்தை நீக்கி… நீக்கி… நீக்கி… விஷத்தை நீக்கிடும் அரும் பெரும் சக்தியாக இந்த மனித உடலை உருவாக்கியுள்ளான்..! என்பதைச் சாதாரணமாக “ஒரு கல் சிலையை வைத்து…!” நமக்குத் தெளிவாக்குகின்றனர்.

1.யானைத் தலையை வைத்து மனித உடலைப் போட்டு
2.நாம் பல கோடிச் சரீரங்களில் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கெல்லாம் நாயகனாக
3.இந்த மனித உடலை உருவாக்கியது விநாயகா…!

“ஆதிமூலம்” – நம் பூமிக்குள் ஆதியிலே வந்த இந்த மூலமான உயிர் தன் வாழ்க்கைக்குச் சுவாசித்த உணர்வு மூஷிகவாகனா… அதாவது
1.சுவாசித்த உணர்வு கொண்டு வாழ்க்கை நடத்தி
2.தன்னைக் காட்டிலும் வலுவான உணர்வுகளைச் சுவாசித்துக் கணங்களுக்கு அதிபதியாகி
3.பரிணாம வளர்ச்சியாகி நஞ்சு கொண்ட உணர்வுகளிலிருந்து விடுபட்டு
4.இப்படித் தான் நாம் மனிதனாகப் பெற்றோம் என்ற நிலைகளைக் காட்டுகின்றனர்.

மிருகங்கள் அனைத்துக்கும் உடல் வலிமை உண்டு. ஆனால் மனிதனுக்கு எண்ண வலிமை உண்டு என்று காட்டுவதற்காகத் தான் யானைத் தலையைப் போட்டு மனித உடலைப் போட்டு விநாயகரைக் காட்டினான் ஞானி.

ஆக… ஆதிமூலம் என்ற உயிர் பலகோடிச் சரீரங்களில் சேர்த்துக் கொண்ட உணர்வுகள் எல்லாம் வினைக்கு நாயகனாக இந்த மனித உடலை உருவாக்கியது விநாயகா…!

இந்த வினைகளுக்கெல்லாம் நாயகா… விநாயகா என்று மனிதனாகப் பெற்ற பின்
1.இந்த உடலை மதிக்கும்படி செய்கிறான்
2.இந்த உடலை உருவாக்கிய கணங்களுக்கெல்லாம் ஈசா… கணேசா என்று
3.உயிரான ஈசனை வணங்குபடிச் சொல்கிறான்.

இந்த வாழ்க்கையில் வரும் தீய வினைகளை எல்லாம் அகற்றி விட்டு அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நல் வினைகளாகச் சேர்த்து ஒளியாக மாறி “உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக நீ ஆக வேண்டும்…” என்பது தான் விநாயகர் தத்துவத்தின் மூலம்…
1.ஞானிகள் காட்டிய சாஸ்திரம் இது தான்.
2.அகஸ்தியனால் காட்டப்பட்டது தான் விநாயகர் தத்துவம்.

ஆகவே நேற்றைய செயல் இன்றைய மனித உடல்… இன்றைய உடல் நாளைய ஒளி உடலாக நாம் ஒவ்வொருவரும் பெறுதல் வேண்டும். இதை நாம் தெளிவாகத் தெரிந்து அதன் வழி கொண்டு நம் வாழ்க்கையை நடத்த வேண்டும்.