“மனிதன் விண் செல்வதற்காகவே…” விநாயகரை வைத்துக் காட்டினார்கள் அன்றைய ஞானிகள்

VINAYAGAR - RIVER SIDE.jpg

“மனிதன் விண் செல்வதற்காகவே…” விநாயகரை வைத்துக் காட்டினார்கள் அன்றைய ஞானிகள்

விஞ்ஞானி வான்வீதியில் எந்தக் கோள் எங்கே செல்கின்றது என்பதைப் பதிவாக்குகின்றான். கம்ப்யூட்டர் மூலம் ஆயிரம் மடங்கு அதைப் பெருக்குகின்றான்.

பெருக்கிய பின் அந்த உணர்வின் அதிர்வுகளை எடுத்துக் கொண்ட பின் எந்தக் கோளின் உணர்ச்சியோ அதை எலக்ட்ரானிக்காக மாற்றுகின்றான்.

அதை நாடாக்களில் பதிவு செய்து ஒரு ராக்கெட்டின் முகப்பில் வைத்து உந்து விசையால் உந்தச் செய்து விண்ணுக்குச் செலுத்துகின்றான்.
1.வேறு பாதையில் செல்லாதபடி
2.எந்தக் கோளின் உணர்வலைகளைப் பதிவாக்கி வைத்துள்ளனரோ அந்த அலைகள் வான்வீதியில் வரும் பொழுது
3.அதன் திசைப் பக்கம் அழைத்துச் செல்கிறது.

அந்த உணர்வின் அழுத்தமான பின் ராக்கெட் அதைத் தொடர்ந்து செல்கின்றது. அந்த உணர்வின் ஒலி அதிர்வுகள் அனைத்தையும் தரை மார்க்கத்தில் இங்கிருந்து அதை எடுக்கின்றனர்… பார்க்கின்றனர்.

இதைப் போல தான் அன்றைய மெய் ஞானிகள் மனிதனின் வாழ்க்கையில் நாம் எதைப் பெறவேண்டும்…? பிறவி இல்லா நிலைகள் அடைந்து எப்படி விண் செல்ல வேண்டும்..? என்ற நிலையைத் தெளிவாக்கினான்.

இதை உணர்த்துவதற்குத்தான் விநாயகர் தத்துவத்தையே காட்டினார்கள். ஒரு உயிரின் தன்மை பல கோடிச் சரீரங்களை எடுத்து அதிலே வளர்ச்சி அடைந்து மனிதனாக எப்படி உருவாக்கியது என்றும் அதிலே உணர்த்தினார்கள்.

மேற்கே பார்த்து வைத்து நாம் கிழக்கே பார்க்கும்படி வைத்து நீர் நிலை இருக்கும் பக்கம் விநாயகரை வைத்தார்கள்.

நாம் சுவாசித்த உணர்வுகள் அனைத்தும் உடலுக்குள் சென்று கணங்களுக்கு அதிபதியாகிப் பரிணாம வளர்ச்சி அடைந்து மனிதனாக வளர்ந்து வந்தோம்.

மனிதனான பின் நாம் உணவுகளை எப்படிச் சுவைமிக்கதாகப் படைத்து உட்கொள்கிறோம் என்ற உணர்வுகளைக் காட்டி இந்தப் பிள்ளை யார்…? என்று கேள்விகுறி வைத்துச் சிந்திக்கும்படி செய்கிறார்கள்.

காலை 4 மணியில் இருந்து 6 மணிக்குள் நாம் குளித்து உடல் அழுக்கைப் போக்குகின்றோம். துணி அழுக்கைப் போக்குகின்றோம். கரை ஏறி வந்த பின் இந்த விநாயகரை உற்று பார்க்கும்படி நீர் நிலை இருக்கும் இடத்தில் விநாயகரை வைத்தார்கள் அன்றைய ஞானிகள்.

ஆதி மூலம் என்ற இந்த உயிர் பல பல உணர்வின் தன்மை தனக்குள் விளைந்து உயிர் ஈசனாக நின்று மனிதனை எப்படி உருவாக்கியது என்று தன்னை அறிவதற்காக கணங்களுக்கெல்லாம் ஈசா.. “கணேசா…!” என்று நம் உயிரை வணங்கும்படி செய்தார்கள்.

வான இயல் புவியியல் உயிரியல் அடிப்படையில் பேருண்மைகளை எல்லாம் உணர்ந்து உணர்வுகளை ஒளியாக மாற்றிக் கணவனும் மனைவியும் ஒன்றென இணைந்து விண்ணுலக ஆற்றலை ஒளியாக மாற்றிக் கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தினை நினைவாக்கி அதைப் பதிவாக்கி நினைவினை விண்ணை நோக்கி ஏங்கும்படி செய்கின்றார்கள்.

1.இங்கே டி.வி ரேடியோவை அது எந்த ஸ்டேசனோ… எந்த அலைவரிசையோ அதை வைத்து எப்படிக் கவர்கின்றோமோ
2.அதைப் போல் அந்தத் துருவ நட்சத்திரத்தினைப் பதிவாக்கி
3.நம் எண்ணத்தால் அதைக் கவரும்படி செய்தார்கள் ஞானிகள்.

அந்த அகஸ்தியன் தனக்குள் வரும் நஞ்சினை எல்லாம் அவன் வென்றான். நாமும் அந்த நஞ்சினை வெல்லும் சக்தியைப் பெறுவதற்காக விநாய்கரை வைத்தான்.

காலையில் எழுந்த உடனே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று புருவ மத்தியிலிருக்கும் உயிரிடம் வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நம் உடலில் உள்ள இரத்தங்கள் முழுவதிலும் கலக்கச் செய்ய வேண்டும்.

ஏனென்றால் நாம் காலையில் இருந்து இரவு வரையிலும் எத்தனையோ பகைமை உணர்வுகளையும் தீமைகளையும் துன்பங்களையும் பார்த்து… கேட்டு நுகர்ந்திருப்போம்.

நுகர்ந்தது அனைத்தும் நம் உறுப்புகளில் அந்த அணுக்களில் இருக்கும். இரத்தத்தில் இருந்து தான் அந்த உணர்வின் தன்மையை பகிர்ந்து கொள்கின்றது. அந்த விஷத்தின் தன்மை உடலுக்குள் வராதபடி நல்லதாக்க வேண்டும்.

இராமாயணத்தில் காட்டியிருப்பார்கள். இராமன் காட்டுக்குள் செல்லும் போது குகனை நண்பன் ஆக்கிக் கொண்டான் என்று.

அதைப் போல அருள் மகரிஷிகளின் உணர்வைத் தனக்குள் சேர்த்து நம் இரத்தங்களில் கலக்கச் செய்து உடல் முழுவதும் சுழலச் செய்தால் பகைமை உணர்வுகள் ஈர்க்கும் தன்மை குறைக்கப்பட்டு அனைத்து அணுக்களையும் நண்பனாக்கும் நிலையைக் கொண்டு வருகின்றது.

இராமாயணத்தின் நிலைகளை நீங்கள் தெரிந்து கொண்டால் மனிதன் வாழ்க்கையில் எப்படி வாழ வேண்டும் என்ற உண்மையை உணர முடியும்.

இந்த உடலுக்குப் பின் இனி நாம் எங்கே செல்ல வேண்டும் என்ற நிலையை அதிலே நிலை நிறுத்திக் காட்டினான் அந்த மெய் ஞானி.

ஆதிசங்கரர் சொன்ன தத்துவம்

sri-adi-shankarar

ஆதிசங்கரர் சொன்ன தத்துவம்

ஆதி சங்கரரிடம் காசியில் இருக்கும் இந்த விநாயகருக்கு யாகங்கள் செய்து வந்தால்தான் உனக்கு நல்லது என்கிறார்கள் துவைதவாதிகள்.

ஆதிசங்கரர் அதைச் செய்ய வேண்டியதில்லை என்றும் இந்த உடலுக்குள் உணர்வின் எண்ணங்கள் உண்டு. அதை எண்ணத்தாலே எடுத்துச் சுவாசிக்கும்போது அதை நான் பெற முடியும்.
1.இந்த உயிரான நிலைகள் அதனின் துடிப்பைக் கூட்டி
2.எண்ணத்தின் வலுவைக் கூட்டுவதற்கு சுவாச நிலைகள் கொண்டு
3.மெய் ஞானியின் அருள் உணர்வைச் சுவாசிக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டினார்.

அப்பொழுது அந்தத் துவைதவாதிகள் அன்றிருக்கக்கூடிய அரசர்கள் இவருக்கு எதிர்ப்பு நிலை ஆகின்றனர். ஜைன மதம் ஒரு பக்கம் தாக்குகிறது. இந்து மதம் ஒரு பக்கம் தாக்குகிறது. இவர் போகும் பக்கமெல்லாம் எதிர்ப்பு.

இவர் இந்த உண்மையை எடுத்துச் சொல்லும்போது எதிர்ப்புதான் அதிகமாகிறது.

இந்த துவைதவாதிகள் அனைவருமே மனித உடலில் விளைந்த இந்த மந்திரத்தை எடுத்து அடுத்து ஒருவனுக்கு வயிற்றுவலி வரவேண்டும் என்றால்
1.வயிற்று வலியுடன் இறந்தவன் எந்த மந்திரத்தாலே இறந்தானோ
2.அந்த உணர்வின் தன்மையை அந்த மந்திரத்தால் அந்த நோயான உணர்வின் தன்மையை எடுத்து
3.அடுத்தவர் உடலில் செருகினால் போதும். அவனுக்கும் வயிற்று வலி வரும்.

வாதம் போன்ற நிலைகளில் வாதநோயால் இறந்தவனுடைய உடலில் இருந்து பிரித்து மற்றொருவனுக்கு செருகினால் அவனுக்கு வாதநோய் வந்துவிடும். இதுதான் ஏவல்.

தெய்வத்திற்குச் சக்தி இருக்கிறது என்ற நிலையில் இங்கே சிலைகள் செய்து உருவங்களாக அமைத்து கதைகள் சொல்ல அவன் எடுத்துக் கொண்ட நிலைகளுக்குச் செயல்படுத்தினார்.

இன்றும் நாம் இன்னென்ன குணங்களுக்கு இன்னென்ன மந்திரத்தை ஜெபித்தால்தான் நல்லது என்று செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

அன்று அத்வைதத்தின் உண்மையினுடைய நிலைகளை அன்று ஆதிசங்கரர் சொல்லும்போது துவைதவாதிகள் நீ இந்த வேள்விகள் செய்யாவிட்டால் அவஸ்தைப்படுவாய் என்று சொன்னார்கள்.

சொன்னதோடு மட்டுமல்லாது ஏவல் செய்து இவருக்கு வயிற்றுவலி வரவைத்துவிட்டார்கள்.

வயிற்றுவலி வந்தபின் இவர் கடும் நிலைகளில் சுவாசித்து அத்வைத நிலைகளில் வயிற்று வலியை நிவர்த்தி செய்தார். நிவர்த்தி செய்து அந்த தத்துவத்தை தன் நிலையை, நிலைநாட்டிக் காட்டுகின்றார்.

வேதியர்கள் அன்று துவைதத்தின் தத்துவத்தை இவரிடத்தில் வாதிட்டு பல நிலைகள் எத்தனையோ வேலைகளைச் செய்தார்கள். அதையெல்லாம் மாற்றித் தன் நிலைகளை அங்கே வெளிப்படுத்தினார்.

ஆதிசங்கரர் அதைச் செயல்படுத்தும்போது அன்றைய அரசர்கள் சிலைகளுக்கு முன்னால் யாகங்கள் வளர்ப்பதும் சிலைகளுக்கு அபிஷேகம் செய்வதும் பால் ஊற்றிப் பிற நிலைகள் செய்வதும்தான் “உண்மையான பக்தி…!” என்ற நிலைகளில் அவர்கள் வாதிட்டனர்.

ஆனால் ஆதிசங்கரர் சொன்னது…!
1.நாம் எண்ணும் சுவாசத்தின் நிலைகள் நம் உயிரான ஈசனிடத்தில் அந்தச் சுவாசங்கள் பட்டு
2.அது உறைந்து… நாம் எந்தெந்தக் குணங்களை எண்ணுகிறோமோ
3.அந்தக் குணமே நம் உயிரில் பட்டு அபிஷேகங்கள் நடக்கின்றது.
4.அவ்வாறு அபிஷேகம் செய்யும்போது நம் உடலிலுள்ள நல்ல குணங்களுக்குப் போய்ச் சேருகின்றது
5.நல்ல குணங்களுக்கு அது மகிழ்ச்சி ஊட்டுகின்றது என்று தெளிவாக்கினார்.

ஆதிசங்கரர் சொன்ன தத்துவம் – 2
அன்று ஆதிசங்கரர் சொன்ன அத்வைதத்தின் தத்துவம் அதாவது சூட்சம நிலைகளில் இருப்பதை நாம் சுவாசித்து நம் உடலுக்குள் சேர்ப்பதுதான் அந்த நிலை.

சூட்சமத்திற்கு எத்தனை குணமிருக்கின்றதோ நல்ல எண்ணங்கள் எடுத்து நல்லதே செய்ய வேண்டுமென்று ஒருவரைப் பார்த்து எண்ணும் பொழுது அந்த நல்ல குணங்களை நீ சுவாசிக்கின்றாய்.

கோவில்களில் உடல்களில் இருக்கக்கூடிய அந்தக் குணங்களை வடிவமைத்துத்தான் அந்தச் சிலையைக் காட்டியது.
1.கோவிலிலே தெய்வத்தைப் பார்க்கப்படும் பொழுது
2.இந்தத் தெய்வத்தின் குணத்தின் சக்தியை, நாங்கள் பெற வேண்டும் என்று சுவாசிக்க வேண்டும்.
3.அந்தத் தெய்வம் எந்த நல்லதைச் செய்கின்றதோ அந்தத் தெய்வ குணத்தைப் பெற வேண்டும்
4.எங்கள் பேச்சும் மூச்சும், அந்தத் தெய்வ நிலைகள் பெற வேண்டும் என்று சுவாசிக்க வேண்டும்.

வியாபாரம் செய்யும் பொழுது “எங்களிடம் பொருள் வாங்கிச் செல்வோரும், அவர்களது குடும்பத்தினர் அனைவரும், நலமாக இருக்க வேண்டும்” என்று இந்தச் சுவாசத்தை எடுத்துச் சரக்குகளை எடுத்துக் கொடுத்தால் நன்றாக இருப்பார்கள்.

இப்படி பிறரை வாழ்த்தும் பொழுது இந்த உணர்வின் தன்மை ஏங்கும் பொழுது உடலுக்குள் இருக்கக்கூடிய உயிருக்கு இந்த உணர்வுகள் பட்டு இந்த உணர்வின் தன்மையை அங்கே இயக்கி நன்மையை விளையச் செய்யும்.
1.அங்கே நல்லதாகும் பொழுது
2.அங்கிருந்து வாழ்த்து கிடைக்கும் என்று இப்படிச் சொன்னார் ஆதிசங்கரர்.

ஆனால் இன்றிருக்ககூடிய நிலைகள் “தொடாதே… இதைத் தொடாதே…!” என்று வர்ணாசரமத் தன்மையை ஏற்படுத்தி அதில் தீட்டு வந்துவிட்டால் சக்தி போய்விடும் என்றும் சொல்வார்கள். இவையெல்லாம் மந்திரத்தின் நிலைகள். மனித உணர்வுக்குள் இருக்கக்கூடிய எதிர் சக்தியினுடைய நிலைகள் வரப்படும் பொழுது செயல்படாது.

இதைப் போலத்தான் ஒரு கோவிலில் மந்திரத்தை ஜெபிக்கும் பொழுது, ஒருவன் இறந்துவிட்டால் இவன் செய்த நிலைகளுக்கு அங்கே ஆவிகள் சுற்றும் என்பார்கள். அதற்கென்று ஒரு மந்திரத்தைச் சொல்லி சில நிலைகளை ஜெபிப்பார்கள்.

உலக ரீதியிலே மந்திரமில்லாத மதமில்லை. மனிதனுக்குள் விளைய வைத்த இந்தச் சக்தியைத்தான் ஆண்டவன் என்ற நிலைகள் கொண்டு நாம் மந்திர சக்திகளைச் ஜெபிக்கப்படும் பொழுது அந்த மனிதனுக்குள் விளைய வைத்த ஆற்றலைக் கூட்டியவுடன்
1.எவரொருவர் மந்திரத்தை ஜெபிக்கின்றாரோ
2.அந்த மந்திரத்திற்குள் இது வந்துவிடுகின்றது.

இவைகளெல்லாம் மூல மந்திரத்தினுடைய முறைகள். அந்த மூல மந்திரத்தின் முறைகள் பிரகாரம் துவைதவாதிகள் செய்தார்கள். ஆகையினால் அதற்கென்ற நிலைகளில் சில கருத்தன்மைகளைக் கூட்டி அதற்கென்று குரு நிலைகளைக் காட்டிச் சாஸ்திரங்களை விதித்திருக்கிறார்கள்.

இது தெரியாதபடி உள்ளவர்கள்
1.அந்த மந்திரத்தை ஜெபித்தார்கள் என்றால் திரும்பத் திரும்ப ஜெபித்தார்கள் என்றால்
2.மந்திரப் புத்தகங்களில் எழுதி வைத்ததை ஜெபித்தார்கள் என்றால்
3.முருகனைக் கைவல்யம் பண்ணலாம்… பல நிலைகளைப் பெறலாம் என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள்.
4.நாம் வாழ்நாள் முழுவதற்கும் இதை ஜெபிப்போம்.

இதைப் போல நாம் மந்திரத்தை ஜெபித்தோமென்றால் நாம் இறந்தபின் இன்னொருவன் இதே போல ஜெபித்தானென்றால் அவன் உடலில் நம் ஆன்மா புகுந்துவிடும்.

அன்று அரசர்கள் காலத்தில் துவைதவாதிகள் என்னன சொன்னார்கள்…?

1.நீ பல வேலைகளில் ஈடுபட்டிருப்பாய்
2.அதனால் எண்ணி எடுப்பதற்கு உனக்கு நேரமில்லை
3.ஆகையினாலே யாகம் செய்ய ஒருவன் இருப்பின் அவனிடம் பொருளையும் காசையும் கொடுத்துவிட்டு
4.அவன் சொல்வதையெல்லாம் ‘உம்…” என்று கேட்டுக் கொண்டு யாகத்தில் எல்லாம் போட்டுவிட்டால்
5.ஆண்டவன் நேராகக் கொடுப்பான் என்று போதித்தனர்.

ஏனென்றால் இங்கே சிலைக்குப் பால் ஊட்டிக் காட்டுவது நெய் மற்றும் பலவற்றை விட்டு வாசனை விட்டுக் காட்டுவது பழ வர்க்கங்களில் அபிஷேகம் செய்வது சிலைக்கு மேல் எதையெல்லாம் போட்டார்களோ அதையெல்லாம் தீயிலிட்டு மந்திரத்தைச் சொல்லி யாகத்தைச் செய்து, அதற்கென்ற மந்திரத்தைச் சொல்லி செயல்படுத்துவார்கள்.

இங்கே யாகத்தைச் செய்தால் நல்லது நடக்கும் என்று யாகக் குழியைத் தோண்டி பலவற்றைப் போட்டுக் கண ஹோமம் அந்த ஹோமம் இந்த ஹோமம் என்று செய்வார்கள்.

நம் உடலுக்குள் இருக்கக்கூடிய ஆத்திரம், கோபம், சலிப்பு, பயம் போன்ற குணங்கள் நமக்குள் இருந்து வேலை செய்கிறதென்றால் அதை மாற்றுவதற்காக அதைக் காட்டிலும் ஆத்திரமூட்டும் தன்மை பயத்தினால் துடித்துக் கொண்டு, சிந்தனையற்ற நிலையில் இருப்பவர்களை மாற்றுவதற்கு இதே போன்ற யாகக் குழியைத் தோண்டி அங்கே சிலைகளுக்குச் செய்தது போல இந்த மந்திரதைச் ஜெபித்தால் ஆண்டவன் உடனே வந்து அந்த அக்னி பீடத்திலிருந்து இறங்கி, உனக்கு நல்லது செய்வான்…! என்று சொன்னார்கள்.

ஒருவன் எந்த உணர்வாலே சோர்வடைந்திருக்கின்றானோ எந்த நோயினால் சோர்வடைந்திருக்கின்றானோ அதற்கு இந்த மந்திரங்களைச் சொல்லி புஷ்பத்தைப் போட்டு ஜெபித்துக் கொண்டிருப்பார்கள்.

இதே போல மந்திரங்களை ஜெபிக்கும் பொழுது இன்னொரு மனித உடலில் இருக்கும் அந்த அலைகளை எடுத்துச் செயல்படுத்துவார்கள்.
1.ஆனால், கேட்பது மட்டும்தான் கேட்கும்.
2.கேட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு, இவையெல்லாம் செய்ததனால், எல்லாம் நன்றாகிவிடும் என்ற எண்ணத்தை மட்டும் கொடுத்துவிட்டு
3.காசு வாங்கிச் சென்றுவிடுவார்கள் அந்த மந்திரம் ஜெபிப்பவர்கள்.
4.ஆனால் நாம் யாகத்தையும் செய்தோம்… அப்புறமும் முடியவில்லை என்றால்
5.ஆயுள் ஹோமம் செய்யவேண்டும்” என்று திசை திருப்பிவிடுவார்கள்.
6.இதுதான் துவைதவாதிகள் செய்து கொண்ட நிலைகள்.

அந்தத் துவைதத்தின் தத்துவத்தில் தான் நாம் இன்று இருக்கின்றோம்.

adi-shankara

பக்ஷிராஜன் (ஜடாயு) பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

jadaayu.jpg

பக்ஷிராஜன் (ஜடாயு) பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

உயிரையும் ஆன்மாவையும் இரண்டையும் ஒன்றாகக் கலக்கும் சக்தியின் வீரியத்தைக் காட்ட வந்த காவிய மகரிஷியே வான்மீகி ஆவார்.

தன்னுடைய காவியத்தில் அந்த உயிர் ஆன்ம சக்தியின் தொடருக்கு இராமன் சீதை என்று காட்டினாலும் வாழ்க்கைத் தத்துவத்திலும் கூட “ஒருவனுக்கு ஒருத்தி…!” என்றபடி வாழும் வாழ்க்கை நியதியைக் காட்டினார்.

அந்த வழியில் நடந்திடும் பரிபக்குவத்தை மனிதர்கள் தங்களுக்கு ஏற்படும் அனுபவ ஞான நிலைகளும் கூட
1.தங்களுக்குத் தாங்களே விதித்துக் கொள்ளும் வாழ்க்கை நெறி முறையின் கோட்பாடு என்று காட்டி
2.அது சக்திச் சுடரால் காக்கப் பெறும் என்ற சூட்சமத்தையும் காட்டினார்.

அப்படிப்பட்ட வாழ்க்கை நெறி “கற்பு…” என்னும் சுடரால் ஒளி பெற்று விளங்குவதால் அந்தக் “கற்பு நெறி…” என்பது ஒழுக்கம் என்கிற தொடரில் பெறப்படும் உயர்ந்த பண்பு நிலை தான்.

நாம் கைக்கொள்ள வேண்டிய சாராம்சமாக அதையே வழிகாட்டியாக அமைத்து நடை முறைச் செயலாக அதனின் இயக்கம் கொண்டால் அது நல் வினைப் பயனாகப் பெற்று
1.நம் உயிர் ஆன்ம சக்தி என்றும் பிரகாசித்து
2.ஜோதித் தத்துவத்தில் நிலையாக விளங்கும்.

அப்படிக் காக்கப் பெறாத வாழ்க்கைத் தொடர் என்பது காமத்தின் அடியாக எழும் மோகமாகி வாழ்க்கை நெறியை அழித்து உயிர் ஆன்ம சக்தித் தொடரில் குலத்தையும் பூண்டோடு அழித்து மறைத்துவிடும்.

சாந்த குணம் பெற்ற உயிர் சக்தியான இராமன் அகன்றாலும்.. தைரிய குண சக்தியான லட்சுமணனால் காக்கப்படும் நிலை இருந்திருந்தாலும்…
1.சீதை என்ற ஆன்மாவில் பதியப் பெறும்
2.ஆசை என்னும் குண உந்துதல் சரீரத்துடன் ஊட்டப் பெற்றால் என்ன ஆகும்…?

நம் ஆன்மாவில் எதைப் பதிவு செய்து வழி நடத்துகின்றோமோ அதுவே ஆன்ம சக்தியாக சரீரத்தையும்
1.ஊட்டப் பெற்ற சக்தியின் தொடரில்
2.ஊட்டப் பெற்ற சக்தியின் வாசனை சமைக்கப்பட்டு சரீர கதியில் வெளி வந்து
3.அந்தச் சமைப்பின் தொடரிலே உடலில் உள்ள எல்லா உயிரணுக்களையும் தன் செயலுக்கு (ஆசைக்கு) வழி நடத்துகின்றது.

ஆசை என்ற சிறு தொடரில் இப்படி அறியாது அகப்படும் ஆத்ம சக்தியானது மோகம் என்னும் படு குழியில் வீழ்த்தப்படுவதைக் காட்டிடவே
1.இராவணனிடம் அகப்பட்டுத் தத்தளிக்கின்றது என்பதாக
2.இராவணேஸ்வரன் சீதையைக் கவர்ந்து சென்றான் என்பதில்
3.அவன் பூமியோடு பெயர்த்து எடுத்துத்தான் சீதையைக் கவர்ந்தான் என்று காட்டப்பட்டிருக்கும்.

ஏனென்றால்
1.ஆன்ம சக்தியை வலுவானப் பெற்றிருந்தால்
2.எத்தகைய தீய குண சக்தியின் வீரியமும் ஆன்ம சக்தியை நெருங்க முடியாது…! என்பதே அதனின் சூட்சமப் பொருள்.

அந்தத் தொடரில் சிந்திக்கத் தலைப்படும் ஞானி அறிய வேண்டிய உண்மையின் சாரம் ஒன்று உண்டு.

நம் ஆத்மாவைக் காக்கும்… காத்துக் கொண்டிருக்கும்.. ஜெப ஆகார அமில குண சூட்சமத்தைக் காட்டவே சீதையைக் காக்க வந்த “பக்ஷிராஜன்…! (ஜடாயு) என்ற ஓர் பாத்திரப் படைப்பில் விளக்கம் தந்தார் வான்மீகி.

ஒரு தந்தை தன் குழந்தையைப் பேணுவது போல் அது நம் ஆன்மாவை எப்பொழுதும் வட்டமிட்டுக் காக்கும் என்றெல்லாம் தொடர்புபடுத்திக் காட்டியுள்ளார். ஆனாலும்
1.நம் ஆன்ம சக்திக்குச் சக்தியூட்டும் உயிர்ச் சக்தி (இராமன்) இல்லாததால்
2.அசுர குணத் தன்மை வீரிய குணச் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டது என்று தெளிவாக்குகின்றார் வான்மீகி.

அந்த ஜாடாயு தன் சிறகை இழந்துவிட்டது என்பதே நம் சூட்சமச் சரீரத் தொடரில் சிறகு இழந்து விட்டால் உயிர்ச் சக்தி தன் பறக்கும் தன்மை இழந்து விடுகிறது.

மீண்டும் ஆன்ம சக்தியான சீதையை உயிர்ச் சக்தியான இராமன் அடைய எத்தனை கடும் சோதனைகளுக்கு ஆட்படுகிறான்.

பல உயர்ந்தோரின் ஞானத் தொடர்பு பெற்ற பின் உயர் சக்திகளைப் பெற்றுத் தன் எண்ணம் கொண்டு வழி வகுத்த பாதையில் உயர்வில் தான் சீதையை அடைய முடியும்.
1.அதைத் தவிர வேறு மார்க்கம் எதுவும் இல்லை என்ற சூசகப்படுத்தி
2.நம் உயிர் ஆன்ம சக்தி காக்கப் பெறும் தொடர்பை வலியுறுத்துகிறார் காவிய ரிஷியான வான்மீகி.

மகாபாரதத்தில் திரௌபதியை அவமதிப்பதாகக் காட்டுகின்றார்கள் – அதனுடைய விளக்கம் என்ன…?

Kannan Drowpathai.jpg

மகாபாரதத்தில் திரௌபதியை அவமதிப்பதாகக் காட்டுகின்றார்கள் – அதனுடைய விளக்கம் என்ன…?

சபையில் வைத்துத் தன் மனைவியை திரௌபதையை அவமானப்படுத்தினாலும் அதே சமயத்தில் அதை ஏற்றுக் கொள்ளும் தன்மை வரவில்லை. “அவர்களும் அறிந்து உணரட்டும்…!” என்ற உணர்வு பெறுகின்றது.

ஏனென்றால் இவை அனைத்துமே கண்களால் கவர்ந்த உணர்வுகள் தான். திரௌபதி யார்…? கண்ணனின் சகோதரி தான்.
1.கண்கள் தான் மற்றதைக் கவர்ந்து நமக்குள் உணர்த்துகின்றது.
2.நாம் கண்ணால் பார்கின்றோம்…
3.கண்ணின் நிலைகளில் காந்தப்புலன் அறிவு கவர்ந்து உயிருடன் இணைக்கப்படும் போது திரௌபதி
4.புலனறிவு ஐந்தின் வலு எதுவோ அதற்கு தக்கவாறு அது இயக்கிக் காட்டுகிறது (ஐந்து பேருக்கு ஒருத்தி).

இவைகளை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

கண்ணனின் சகோதரியை அர்ச்சுனனுக்குத் திருமணம் செய்து வைக்கிறார்கள். அர்ச்சுனன் வலிமையான நிலைகள் கொண்டாலும் அதன்படி இந்தப் புலன் அறிவு ஐந்தும் கண்களால் நுகர்ந்த வலுவான உணர்வு படி உடலாக்கபடும் போது பீமன் ஆகின்றான்.

அடுத்து நகுலன் ஆகும் பொழுது மற்ற உணர்வுகளைச் சிந்திக்கும் படி செய்கின்றான். சகாதேவன் ஒன்றுக்கு உதவி செய்யும் தன்மைக்கு வருகின்றான்.

நுகர்ந்தது அனைத்தும் சாந்தத்தின் நிலைகள் கொண்டு உள் அடங்கி அதன் வழி தீமைகளை எண்ணாதபடி தனது உணர்வின் தன்மை பெறுகின்றான் தர்மன். தீமைகளை நுகரவில்லை. நல்ல உணர்வின் தன்மையை அவன் நுகர்கின்றான்.

இருந்தாலும் இந்தப் பஞ்ச பாண்டவர்கள் தீமை என்ற எண்ணம் உட்புகாதபடி தடுத்து நிறுத்திப் போர் முறை கொண்டு அவைகள் எந்த வகையிலும் செயல்படாதபடி மற்ற தீமைகள் எதுவோ அது வராதபடி தடுத்து நிறுத்துகின்றார்கள்.

அதாவது நம் வலிமையை எதிலே கொண்டு வரவேண்டும்…? என்பதைத்தான் மகாபாரதத்தில் அங்கே காட்டுகின்றனர்.

திரௌபதியை சூதிலே வைத்து ஆடிவிடுகின்றான். ஏனென்றால் வாழ்க்கையில் ஒவ்வொரு சிக்கலிலேயும் மனிதன் சிக்கி விடுகின்றான். சிக்கிக் கொண்டபின் என்ன ஆகின்றது.

அங்கே அவமானப்படுத்துகின்றான். யாரை…? திரௌபதியை…! சபையில் வைத்து நிர்வாணப்படுத்துகிறார்கள். அப்பொழுது தன் உணர்வின் தன்மை கொண்டு எண்ண செய்கிறது..?
1.அங்கே நிர்வாணப்படுத்துவதை திரௌபதி எண்ணவில்லை
2.உயர்ந்த நிலைகள் பெறவேண்டும் என்ற எண்ணத்தை அங்கே செலுத்துகின்றது
3.தன்னை அவமதிக்கிறார்கள் என்று திரௌபதி எண்ணவில்லை.

எதற்காக இப்படிக் காட்டுகிறார்கள்…?

நமது வாழ்க்கையில் யார் நம்மை அவமதித்தாலும் “நம்மை அவமதிக்கிறார்…!” என்ற உணர்வின் தன்மையை நமக்குள் வகுத்தால்
1.அதன் உணர்வே நமக்குள் விளைந்து விடும் என்பதையும்
2.அதை நாம் எப்படி மறுத்துப் பழகவேண்டும்…? என்று அங்கே தெளிவாகக் காட்டப்படுகின்றது.

இதையே இராமாயணத்திலேயும் காட்டுகின்றனர். அதாவது இராமன் வாலியை நேரடியாகப் பார்க்கவில்லை.

அதே சமயத்தில் அவன் அருள் உணர்வைத் தனக்குள் எடுத்துக் குகை மேல் இருக்கும் பாறையை வைத்து வாலி வெளி வராதபடி மூடி விடுகின்றான். வாலியின் உணர்வை வலு குறைக்கச் செய்கிறான்.

மகாபாரதத்தில் திரளபதை – நாம் நுகரும் சக்திகள் அவமதிக்கும் உணர்வுகள் இருப்பினும்
1.அந்த அவமதிப்பவன் உணர்வை ஏற்றுக் கொள்ளவில்லை.
2.ஏனென்றால் ஒருவர் நம்மை அவமதித்தாலும் அதை நாம் ஏற்றுக் கொள்ளாத வரையிலும் நம்மை ஒன்றும் பாதிக்காது.
3.ஆனால் விட்டு விட்டால் என்றுமே அது நம் நல்ல குணங்களை மூடி மறைத்துவிடும்.

ஆகவே வலு கொண்ட உணர்வு கொண்டு நாம் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதை உணர்த்துவதற்குதான் இவ்வாறு மகாபாரத்தில் தெளிவாகக் காட்டுகின்றனர்.

மகாபாரதத்தின் இறுதியில் கண்ணனும் அவனுடைய வலு இழந்து விடுகிறான். பீமனும் என்ன செய்கின்றான்..? இந்த உயிரான நிலைகள் கண்ணன் இறந்த பின் இவனுக்கு உணவு கிடைக்காது இவனும் மடிகின்றான்.

தர்மனுடன் எது சேர்ந்து செல்கின்றது…? கடைசியில் அந்த நாய் தான் கூடப் போகின்றது என்று மகாபாரதத்தில் காட்டுகின்றார்கள். ஆகவே எது விசுவாசமாக இருந்தது…? வளர்த்த நாய் தான் செல்கின்றது.

நாயை ஏன் அங்கே மோட்சத்திற்குக் கொண்டு போகவேண்டும்…?

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று நம்முடைய உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றுகின்றோம்.

நம்மை அறியாது வந்த தீமைகளை எல்லாம் அடக்கி நல்ல உணர்வுகளாகச் செயல்படுத்த வேண்டும் என்றும் எல்லோரும் நலம் பெற வேண்டும் என்ற உணர்வின் தன்மையை நாம் சுவாசிக்கின்றோம்.
1.இப்படி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகரப்படும் போது அங்கே போகின்றோம்.
2.நுகர்ந்த உணர்வுகள் நம்முடன் இணைந்து பிறவி இல்லா நிலை அடைகின்றது.
3.தன்னுடன் அது விசுவாசமாக இருந்ததால் அது தன்னைப் பாதுகாத்தது.
4.”நாம் சுவாசித்ததே.. நாம் நுகர்ந்ததே.. அந்த மோப்பம் தான் நம்மைக் காக்கின்றது…” (அதனால் தான் நாய் என்று அதை காண்பித்து தன்னுடன் கூடவே மோட்சத்திற்கு வருகிறது என்று தெளிவாக்குகின்றார்கள்.)

நாம் நுகர்ந்த உணர்வு தான் நம்மைப் பாதுகாக்கின்றது. அந்த உணர்வின் தன்மை வலு இழக்காதபடி தன்னைப் காக்கின்றது. வீரிய தன்மை எடுக்கப்படும் பொழுது பிறருடைய துயரங்களை இது எடுத்துக் கொள்வது இல்லை. யாருடைய ஈர்ப்புக்கும் செல்லாதபடி ஏகாந்தமாக விண் செல்கிறது என்று தெளிவாக்குகின்றார்கள்.

கொல்லூரில் நடந்த நிகழ்ச்சி – புலியிடம் பெற்ற அனுபவம்

Power and wisdom

கொல்லூரில் நடந்த நிகழ்ச்சி – புலியிடம் பெற்ற அனுபவம்

 

கொல்லூரில் யாம் (ஞானகுரு) இருக்கப்படும்போது மழை அதிகமாக பெய்து கொண்டிருக்கிறது. ஆறு மாதங்கள் மழைப் பெய்யும். குறைந்தது இரண்டு மூன்று மாதங்கள் விடாது மழை பெய்யும்.

இங்கு கார்த்திகை மாதம் மழை பெய்வது போன்று அங்கு ஆடி மாதம் விடாது மழை பெய்யும். யாம் அமர்ந்து கொண்டு மழையில் நனைந்துக் கொண்டே இருக்கவேண்டும். குருநாதர் சொன்னதை எல்லாம் செய்து கொண்டிருக்க வேண்டும்.

அட்டைப் பூச்சிக் கடித்து இரத்தம் போய்க் கொண்டிருக்கின்றது. மழை நீர் எனது மேலே பட்டதற்கும் இந்த இரத்தத்திற்கும் இரத்தத்தில் குளித்த மாதிரியாகி விட்டது. அட்டைக் கடிப்பது தெரியாது. இரத்த வாசனை வருகின்றது.

புலி சும்மாவா இருக்கும். இரத்த வாடை வந்தவுடன் அது மோப்பம் பிடித்து “கிர்…கிர்” என்று சுற்றி வருகின்றது.

இதை எமது குருநாதர் எம்மைப் பார்க்கச் சொல்கிறார். வாசனையை நுகர்ந்து அது சுற்றிச் சுற்றி வருகின்றது. எம்மை அட்டை சாப்பிட்டது. குடித்துவிட்டு இரத்தம் வெளியிலே போகின்றது. வாசனையைக் கண்டு கொண்டு இந்த புலி வருகின்றது. அது சுற்றிச் சுற்றி வந்து நிற்கின்றது.

குருநாதர் எம்மை எழுப்பிவிட்டுப் பாதுகாப்பாக இருந்து அந்த உணர்ச்சியின் உடைய நிலைகளையும் வேகத்தையும் எண்ண அலைகளையும் கவனிக்கச் சொல்கிறார்.

இந்தச் சமயத்தில் அந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை நீ எப்படி எடுக்க வேண்டும். இந்த உணர்வு கொண்டு அந்த உணர்வுடன் எப்படி பாய்ச்ச வேண்டும். எம்மிடம் குருநாதர் இரண்டு மூன்று ஆயுதங்கள் கொடுத்திருக்கிறார்.

1.ஒன்று யாம் வேகமாக எண்ணினோமென்றால் அதற்குக் கண் தெரியாமல் போகும்.
2.மற்றொன்று வாயை அசைக்க முடியாமல் போகும்.
3.இதுபோன்று இரண்டு விதமான சக்தி கொடுத்திருக்கின்றார்.
(ஒன்று தாக்க வந்தது. அதற்கென்று இந்த உணர்வை எடுத்துச் சுவாசித்தால் அதற்குக் கண் தெரியாமல் போகும். அல்லது வாய் அசைக்காதபடி கைகால்கள் அங்கேயே நின்று விடும்.)
4.மூன்றாவது அந்த எண்ணத்தைச் சுவாசித்தால் நமக்குச் சாதகமான நிலைகளில் அதனுடைய உணர்வை மாற்ற வேண்டும்.

நம்மிடம் இருந்து போகும் கெட்ட வாசனையைத் தடுத்து நிறுத்திவிட்டு நம்முடைய பாசமான உணர்வு
1.குழந்தைகளிடம் எப்படி அது பாசத்தைச் செலுத்துகின்றதோ அந்த மாதிரி ஒரு உணர்வைச் செலுத்தியவுடன்
2.அது எவ்வாறு கொஞ்சுகின்றது, குலாவுகின்றது என்ற நிலையைக் குருநாதர் எம்மிடம் காண்பிக்கிறார்.

இங்கே எனக்குப் பயம் துடிக்கின்றது. என்னதான் தியானம் இருந்தாலும், பதுங்கிப் பதுங்கிப் புலி அருகில் வருகின்றது. இப்படிச் சுற்றி வருகின்றது, அப்படிச் சுற்றி வருகின்றது.

புலிகள் இரண்டு ஜோடியாக வருகின்றது. ஒன்றாக இருந்தால் தப்பிக்கலாம். இரண்டும் அருகில் இருந்தால் எப்படியிருக்கும்…? மனது படக்…படக் படக்கென்று அடித்துக் கொண்டிருக்கின்றது.

குருநாதர் கொடுத்த பவர் இருக்கிறது என்று தைரியமாக இருக்கின்றது. இதைப் பாய்ச்சிக் கண் தெரியாமல் போய்விட்டால் முதலில் அந்த கண் தெரியாத உணர்வை யாம் எடுக்க வேண்டும்.

கை கால் அசையாத நிலை இருக்கவேண்டும் என்றால் அந்த அலையை யாம் சுவாசிக்க வேண்டும். அந்த அலையைச் சுவாசித்துப் பிரித்து என் உடலில் சேர்த்துத் தான் பாய்ச்ச வேண்டும். பார்ப்பது செய்வதற்கு நன்றாக இருக்கும்.

பின் நாடட்களில் இதே உணர்வு வந்தவுடன் என்னுடைய கண்ணின் கருவிழி கொஞ்சம் கொஞ்சமாக மங்கி போகும். சக்தியைக் கொடுத்துவிட்டு இதையும் சொல்லியிருக்கிறார்.

எதையுமே செய்யாவிட்டால் புலி நம்மை அடித்துச் சாப்பிட்டுவிடும். அது எம் வாசனையை நுகர்ந்து அருகில் வரும்போது நீ இப்படிச் செய்தால் இப்படிப் போவாய்… கை கால்கள் வராமல் போவிட்டால் உன் அங்கங்களும் இந்த மாதிரி ஆகிவிடும் என்று இதையும் சொல்லியிருக்கிறார்.

ஆனால் புலிக்கு அதன் பசிக்கு எதையாவது அடித்து சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும். இங்கே யாம் நடந்து செல்லும்போது வில் மாதிரி அட்டைப் பூச்சி எம் மீது ஒட்டிக் கொள்கின்றது.

ஒட்டியது தெரியவில்லை. இரத்தத்தைக் குடித்துவிட்டு புளியங் கொட்டை மாதிரி தொப்பு தொப்பு என்று கீழே விழுகின்றது. இரத்தம் சொட்டுகின்றது. முதலில் எமக்குத் தெரியவில்லை. இரத்த வாசனை பட்டு புலி வந்த பின்புதான் எமக்குத் தெரிகின்றது.

இந்த இடத்தில் என்ன செய்ய வேண்டும்…? புலி ஒரு நிமிடத்தில் தாவினால் எத்தனையைத் தான் சிந்திக்க முடியும். ஆனால் பவர் கொடுத்திருக்கிறார். திடீரென்று வாரும்போது இதை எடுப்பதா…? அதை எடுப்பதா…?

திடீரென்று ஏதாவது வந்து விட்டால், நாம் ஐய்யய்யோ… ! அம்மா, அப்பா என்றுதானே சத்தம் போடுகிறோம். “ஈஸ்வரா…” என்றா சப்தம் போடுகிறோம்…? எவ்வளவு தூரம் சொன்னாலும் கூட ஐய்யய்யோ…! அம்மா என்றுதான் சப்தம் போடுகிறோம். இப்படிச் சொன்னாலும் பரவாயில்லை “ஐய்யய்யோ ஐய்யய்யோ” என்றுதானே சொல்கிறோம்.

“அம்மா…!” என்று சொன்னால் கூட இந்த உணர்வைக் கேட்டு நாய் கூட நிற்கும். அம்மா…! என்று யார் சொல்லப் போகிறார்கள்… சொல்ல மாட்டார்கள். “ஐய்யய்யோ ஐய்யய்யோ” என்று தான் சத்தம் போடுபார்கள். அல்லது லபோ லபோ என்பார்கள்.

“அம்மா…” என்றால் நாய் கடிக்காதே..! வேகமாகக் கடிக்க வரும்போது அம்மா….! என்று சொன்னால் போதும்.

அப்பொழுதுதான்…
1.அந்த தாய்ப் பாசத்திற்கு வேணடி என் அம்மாவை அந்த இடத்தில் நினைத்து
2.அந்தப் பாசத்தின் உணர்வின் நிலைகள் கொண்டு எம்மை எப்படி வளர்த்ததோ
3.அந்த உணர்வுடன் சேர்த்து நீ சுவாசி…! என்று குருநாதர் சொன்னவுடன்,
4.அந்த உணர்வலைகளை வேகமாகச் செலுத்தியவுடன் தன் குழந்தையிடம் எப்படிச் சுழல்கின்றதோ
5.அதே மாதிரி அந்த அலையை எடுத்து, அந்த உணர்வுகளை எடுத்துக் கொடுக்கச் சொல்லிச் சொன்னார்.

ஆனால் இதற்கு நேரம் ஆகும். இந்தத் தாய்ப் பாசத்தை எடுத்துக் கொடுப்பதற்கு நேரமாகும். இதை எடுத்துக் கொடுப்பதிற்குள் அது முந்திவிட்டால் நம்மைக் கொன்றுவிடும். உடனடியாக இதைச் செய்ய வேண்டும்.

இதை விடுத்து விட்டு உடனடியாக எண்ணியவுடன் அதன் கண்ணோ மகை காலோ போகவேண்டும் என்று எதை நினைக்கிறோமோ அது போய்விடும். அதற்குப் போய்விடும். ஆனால் கடைசியில் நமக்கும் கண்ணும் கை காலும் போய்விடும்.

மனிதனாக இருக்கும் நாம் ஒவ்வொரு அங்கமாக இழந்து விட்டால் அடுத்து இந்த உயிராத்மாவில் எது சேரும்…? அது தான் சேரும் என்று குருநாதர் இதையும் கொடுத்து அதையும் காட்டி எல்லாமே அனுபவமாகக் கொடுத்தார்.

யாம் உங்களுக்கு லேசாகச் சொல்கிறோம். ஆனால் கஷ்டப்பட்டுப் பார்த்து வந்தோம். உங்களுக்குள் வரக்கூடிய துன்பத்தை லேசாகப் போக்கும்படி ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை எடுங்கள் என்று சொல்கிறோம்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை ஒவ்வொரு நிமிடமும் எடுத்து உங்கள் துன்பங்களைப் போக்கிக் கொள்ளுங்கள் என்று சொல்கிறோம்.

சங்கடத்துடன் நாம் தியானம் இருக்கக் கூடாது

jadakkini.JPG

சங்கடத்துடன் நாம் தியானம் இருக்கக் கூடாது 

காப்பிய ரிஷி வான்மீகி ஆச்சா மரத்தை வாலியின் தொடர்பில் பதம் பார்த்த பொழுது “ஆத்ம சக்தி பெறும்…” சக்தி அலைத் தொடர்பில் குறைவுபட்டது.
1.காரணத்தை அறிந்து அதைச் செயல்படுத்தி
2.எண்ணத் தடையாகும் இராமபாணத்தை மீண்டும் எய்ததின் தொடரே வான்மீகி பெற்ற ஜடாக்கினி அனுபவ ஞானம்,

எடையிடும் பொருளே எடை காட்டும் கல்லாக ஆனதில் எடையிடும் எண்ண அளவீட்டில் தராசின் முனை முள் அளவீடு காட்டுவதைப் போல் தன்னுடைய அனுபவ ஞானம் நிறைவு காண (மீண்டும்) சபரியிடம் பதம் பார்த்தான் வான்மீகி.

மனைவியைப் பிரிந்த இராமன் சபரிக்கு மோட்சத்தை அளித்திட இயலவில்லை என்ற கதையின் தொடர்பிற்குச் “சூட்சம விளக்கம் உள்ளது…!”

இராம ஜெப ஏக்கமாக ஜெபத்தில் ஏங்கினாள் சபரி. அந்த ஏக்கத்தைப் பூர்த்தி செய்ய
1.சங்கடத்தின் அலைகளை ஈர்த்துக் கொண்ட வழி காட்டும் குருவானவர்
2.பூரணத்துவம் நிறைவு பெறாத தொடர் நிலையில் தன்னை உணர்ந்து மீண்டும் அதற்குண்டான வழியமைத்தான்.

மகரிஷிகளுடன் தொடர்பு கொண்டு பெறும் ஜடாக்கினி சக்தியைத் தன் ஈர்ப்பிற்குச் செயல் கொண்டிட சங்கடமற்று சமமான பாவனையில் இருத்தல் வேண்டும்.

அந்த நிலை இல்லாத போது உண்மைச் சீடர்களின் ஏக்கம் குருவிற்கே எற்பட்டு உண்மையை உணர்ந்து… தான் தெளிந்து.. சூரிய குலம் என்று குறிப்பிடும் வீரிய அமில முலாம் ஈர்ப்பின் தொடர்புகளில் தொடர்பு கொண்டு… ஈர்த்து வலுக் கொண்டிட்டால் இராமபாணம் பாயும்… தன் இலட்சியத்தையும் எய்தும்.

அதாவது
1.இராமபாணம் திரும்புவதைப் போல் செயல் கொண்டிடும் அந்தச் சக்தி
2.எண்ண ஈர்ப்பின் வலுவால் வலுத்துத்
3.தன் சக்தியை மீண்டும் வலுக் கூட்டிக் கொள்ள முடியும்.

“சபரி மோட்சம்…!” என்று சொல்கின்ற சூட்சமத்தில் சபரி பெற்ற சக்தியின் வலு ஐயப்ப மாமுனியின் தொடர்பால் தன் எண்ண இலட்சியத்தை அடைந்தது.

இந்தச் சக்தியின் தொடர்பால் அந்த ஐயப்ப மகான் தன் சக்தியின் குறைவுபடாத் தன்மையில் அந்தச் சபரியின் மூலத்தையே தாய் சக்தியாக ஆக்கிக் கொண்டார். ஐயப்பன் தன் அனுபவத்தில் பெற்றுக் கொண்ட எத்தனையோ சக்தித் தொடரில் இந்தச் சபரி சக்தியும் ஒன்று.

 

நம்மை ஆட்டிப் படைக்கும் தீமைகளை அடக்கி நல்லதைச் செயல்படுத்தும் வழி முறை என்ன…?

1.jpg

நம்மை ஆட்டிப் படைக்கும் தீமைகளை அடக்கி நல்லதைச் செயல்படுத்தும் வழி முறை என்ன…?

மனிதன் தவறு செய்வதில்லை. சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வு அவனை இயக்கி விடுகின்றது. அதுதான் அவனை ஆட்சி புரிகின்றது. ஆனால் சந்தர்ப்பத்தை ஏற்படுத்த கூடிய நிலை பெற்றவன் தான் மனிதன்.

மற்ற உயிரினங்கள் வலு கொண்ட மிருகத்தைக் கண்டு “அது தன்னத் தாக்கிவிடும்…!” என்று அதையே நினைத்து அதில் இருந்து தப்ப வேண்டும் என்று எண்ணுகின்றது.

அதே போல நமக்கு யாராவது தொல்லை செய்கிறார்கள் என்றால் அவர்களையே நினைத்து “எனக்கு தொல்லை கொடுத்து கொண்டிருக்கின்றான்…!” என்று எண்ணி வாழுகிறோம்.
1.அவன் தொல்லை கொடுத்த உணர்வு நமக்குள் வரும் போது
2.அந்தத் தொல்லையே மீண்டும் மீண்டும் வருகின்றது.

தொழிலின் நிமித்தம் நாம் கடன் கொடுத்து வாங்குகின்றோம். ஒருவருக்குக் கொடுத்த பின் சந்தர்ப்பம் அவர்களால் திரும்பக் முடியவில்லை என்றால் “நான் கொடுத்தேன்… எனக்குத் திரும்பக் கொடுக்கவில்லை…!” என்ற வேதனையைத் தான் எடுக்கின்றோம்.

அந்த வேதனை உணர்வை எடுத்து இங்கே நம் உடலுக்குள் சமைத்து வேதனையை வளர்க்கப்படும் போது அடுத்து யாரிடம் பேசினாலும் அந்த வேதனை உணர்வுடனே பேசுகிறோம்.

அப்பொழுது அவர்கள் நல்ல மனதையும் கெடுக்கச் செய்கின்றது. நம்மையும் கெடுக்கின்றது. ஆக மொத்தம் அந்த வேதனை என்ற உணர்வே நம்மை ஆட்சி புரியத் தொடங்கின்றது.

நம்முடைய திறமைகள் எவ்வளவு இருப்பினும்… முதலில் நல்ல குணங்கள் இருக்கும் போது செல்வத்தைத் தேடி வைத்திருந்தாலும் இந்த வேதனை அதிகமான பின் அந்த செல்வத்தையே காக்கும் திறன் அற்றுப் போகிறது.

செல்வத்தில் சுகமாக வாழ்ந்த நிலையில் அடுத்தவர்களுக்குப் பணத்தைக் கொடுத்திருந்தாலும் அது திரும்ப வரவில்லை என்றால் அவர்களிடம் கேட்டுச் சண்டைக்குப் போகிறோம்.

கடன் வாங்கிவரோ… என்னிடம் பணம் இல்லையே… நான் எப்படிக் கொடுப்பேன்…? நான் பணத்தைத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்று தானே நினைக்கின்றேன்… நான் என்ன தரமாட்டேனா…? என்ற வாதம் தான் வரும்.

ஆனாலும் பணம் வரவில்லையே…! என்ற நிலையில் வேதனை உணர்வுகளை எடுத்து எடுத்து அது நம்மை அறியாமலேயே பெரும் சிக்கலில் கொண்டு போய் விட்டுவிடும்.

அப்பொழுது வேதனையான அணுக்கள் நமக்குள் வளரத் தொடங்கி விடுகின்றது. அது நல்ல உணர்வை நமக்குள் அணுக விடாது செயல்படுத்தும். அதிலிருந்து நாம் எப்படித் தப்புவது…?

இதைத் தான் மகாபாரதத்தில் கௌரவர்கள் என்று காட்டியிருப்பார்கள். ஒவ்வொரு செயலிலும் நல்லது செய்து கொண்டு இருப்பீர்கள்.
1.வேதனை என்ற வந்த பின் அந்த வேதனையோ மிகவும் வலு பெற்றது.
2.அதையே அடிக்கடி எண்ண வேண்டியது வரும்.
3.நல்லதை யார் சொன்னாலும் உங்களால் கேட்க முடியாது.
4.அவர் சொல்வார்…! அவருக்கென்ன தெரியும்…? நான் படுகிற கஷ்டம் எனக்குத் தானே தெரியும்…! என்று நல்லதை எண்ண விடாது.

அந்தக் கௌரவர்கள் வலு கொண்ட நிலையில் நாம் நல்லதைச் செய்ய விடாதபடி சிந்தனை இல்லாத சில செயல்களைச் செயல்படுத்தச் செய்கின்றது.

ஆகவே இதிலே நாம் எத்தகைய நல்லதை எண்ணினாலும் நம் உடலில் விளைய வைத்த உணர்வுகள் வேதனை சலிப்பு சஞ்சலம் கோபம் குரோதம் இவைகள் எல்லாம் நம் உடலில் வளர்ந்து விளைந்து விட்டால் அவைகளுடைய வலுவால் நம்மை நல்லதை நுகர விடாது.

அதாவது நமக்குள் இருக்கக்கூடிய கௌரவர்கள்… “என்னை இப்படித் திட்டினான்… திட்டினான்…!” என்ற உணர்வு வரும் போது
1.நல்லதை உள்ளுக்குள் விடுவது இல்லை.
2.நல்லதைச் செயல்படுத்த முடியவில்லை.
3.கோபம் வந்தால்.. நீங்கள் நல்லது யார் சொன்னாலும் கேட்கின்றீர்களா…?
4.கோபமான உணர்வுகள் உங்களுக்குள் தூண்டப்பட்டிருந்தால் நல்லது ஏதாவது கேட்பீர்களா…?

கோபமான உணர்வுடன் நீங்க இருக்கப்படும் போது ஒரு சந்தோசமான உணர்வையோ ஒரு ஆடல் பாடலையோ ஒரு நல்ல சம்பவங்களையோ சொன்னால் என்ன ஆகும்…? அந்த உணர்வின் தன்மை கொண்டு இதை அழிக்கத்தான் செய்யும். அழிக்கத்தான் உதவும்.

அதைத்தான் கௌரவர்களுக்கும் பஞ்ச பாண்டவர்களுக்கும் போர்…! எனறு சொல்வது.

ஏனென்றால் நமக்குள் எடுத்து கொண்ட உணர்வுகள் ஒவ்வொன்றும் தன்னை வளர்த்துக் கொள்ளும் நிலைக்குதான் அது செயல்படுத்தும். ஆகவே அதிலிருந்து நாம் மீள்வதற்கு என்ன செய்வது…?

சூரியனிலிருந்து வெளிப்படும் வெப்பமும் காந்தமும் துருவ நட்சத்திரத்தில் இருந்து வரக்கூடிய உணர்வைக் கவர்கின்றது.
1.நாம் அந்த அருள் உணர்வின் தன்மையை நமக்குள் பெருக்கிப் பழகுதல் வேண்டும்.
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நம் உடலுக்குள் பெருக்க வேண்டும்.

நாம் எந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் புலனறிவால் நுகர்ந்தோமோ ஒளியின் சுடராக நமக்குள் இங்கே விளைகின்றது. இருளை அகற்றி மெய் பொருள் காணும் அந்த சக்தியை நமக்குள் பெறச் செய்கின்றது.

1.அதிலே அர்ஜுனன் என்பது துருவ நட்சத்திரத்தின் ஒளிக்கதிரின் வலிமை.
2.நாம் நுகர்ந்த பின் அந்த ஒளியின் உணர்வை ஊட்டுவது பீமன். அதாவது வலுக் கொண்ட உணர்வின் தன்மை கொண்டு எதையுமே அலட்சியமாகத் தூக்கும்…! என்பது.
3.நகுலன் என்பது நாம் நுகர்ந்த அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நமக்குள் (உடலிலே) ஒவ்வொன்றுடன் இணைந்து அதனுடன் “தன் உணர்வை உயர்த்தும்…!” என்று பொருள்.
4.சகாதேவன் என்பது இருளை அகற்றி அதைத் “தன்னுடைய பண்புடன் அரவணைத்துக் கொள்வது…!”
5.தர்மன் என்பது அந்த அருள் உணர்வின் தன்மையைத் “தனக்குள் ஏற்றுக் கொள்வது…!” என்பது பொருள்.

அப்படி ஏற்றுக் கொண்ட நிலையில் நாம் சுவாசிக்கும் உணர்வுகள் அனைத்தையும் துருவ நட்சத்திரத்தின் இயக்கமாக மாற்றும்… நம்மைப் பேரொளியாக மாற்றும் என்பது பொருள்.

நல்லதைக் காக்கும் சக்தி

Fool proof protection

நல்லதைக் காக்கும் சக்தி 

நாம் நகை செய்யும்போது பித்தளையும், செம்பும், பொடி செய்து வைத்து இவை இரண்டையும் நெருப்பில் காட்டியவுடன் அந்தத் தங்கச் செயின் ஒன்றாக ஒட்டிக் கொள்கின்றது.

வெறும் தங்கத்துடன் தங்கத்தை வைத்துச் செயினாக செய்ய வேண்டுமென்றால் முடியாது. இரண்டிற்கும் ஒரு அளவான சூடு வேண்டும். வெள்ளியும் செம்பும் கலந்து வைத்தவுடன் இது சீக்கிரம் சூடாகி கரைந்து இத்துடன் போய் ஒட்டிக் கொள்கிறது. அதைப்போல
1.நாம் நல்ல மனது எவ்வளவு தூரம் இருந்தாலும்
2.நல்ல மனது கொண்டே நம்மைக் காப்பாற்ற முடியாது.

நாம் நல்ல மனதுடன் போய்க் கொண்டிருக்கிறோம். எதிற்புறம் ஒரு மாடு பயத்தினாலோ அல்லது வேறு காரணத்தினாலோ மிரண்டு ஓடி விருகிறது. அப்பொழுது அது வெளிப்படுத்தும் மூச்சலைகள் நாம் கண்ணில் பார்த்தவுடன் அந்த உணர்வை நாம் சுவாசிக்க நேருகிறது.

அது எதைக் கண்டோ பயந்து மிரண்டு தன்னையறியாமல் கட்டுக் கடங்காமல் ஓடி வருகிறது. அப்படி ஓடி வரும்போது நம் மீது மோதினால் என்ன ஆகும்…?

நம் உயிருக்கே ஆபத்து. நம் வாழ்க்கையைச் சரிபடுத்த முடியாது.

அப்பொழுது அந்த மாடு வெளிப்படுத்தும் மூச்சில் நம் கண் புலனறிவு ஈர்த்து உயிரிலே பட்டவுடன் அது வேகமாக நமக்குள் பயத்தை ஊட்டி அந்த மாடு மிரண்டு வருவதில் இருந்து நம்மைத் தப்பிக்கச் செய்கின்றது.

1.அப்பொழுது அந்த வாழ்க்கை என்கிற செயின் ஒழுங்காக இருக்கிறது.
2.இல்லாவிட்டால் நம் வாழ்க்கையில் நல்ல குணத்தை நல்லதை எண்ணியதைக் காப்பாற்ற முடியாது.
3.இந்த உடலில் உயிர் இருக்கும் வரைக்கும்தான் செயல்படுத்த முடியும்.
4.இந்த உயிர் போய்விட்டால் ஒன்றுமே இல்லை.
5.இந்த உடலுக்குள் இருந்து உயிர் இயங்க வேண்டுமென்றால் உடல் நலமாக இருக்க வேண்டும்.

அந்த மாடு மிரண்டு ஓடிப் வரப்படும்பொழுது அந்த உணர்வுகள் பட்டுத்தான் நம்மைக் காப்பாற்ற முடியும். ஆக நம் உடலைக் காப்பாற்றிக் கொள்கிறோம். அதே சமயம் பயமான எண்ணங்களை நாம் சுவாசித்து நம் உடலுக்குள் சேர்த்துக் கொள்கிறது.

நாம் செம்பும் வெள்ளியும் சேர்த்து தங்கத்துடன் ஒட்ட வைக்கும்போது இரண்டும் அதனுடன் கலந்து விடுகின்றது. மறுபடியும் நெருப்பில் போட்டு உருக்கினாலும். இவை இரண்டும் கலந்தேதான் இருக்கும்.
1.நீங்கள் அடிக்கடி அழித்து அழித்துப் பற்ற வைத்துக் கொண்டே இருந்தால்
2.செம்பும் வெள்ளியும்தான் தேறும், கடைசியில் தங்கம் குறைந்துப் போகும்.

இதே மாதிரி நாம் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையில் கொஞ்சம் கொஞ்சமாக நம்மைப் பாதுகாக்கும் எண்ணத்தை எடுத்து எடுத்து நாம் இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு சரீரமாக மாற்றி எல்லா துன்பத்தையும் துடைக்கக் கூடிய ஆற்றல் மிக்க சக்தியாகப் பெற்று வந்துள்ளோம்.

இவ்வளவு உயர்ந்த தங்கத்தைப் போல சுத்த தங்கத்தைப் போல அதே மாதிரிப் புழுவிலிருந்து மனிதனாகத் தோன்றும் வரையிலும் அந்த உயர்ந்த சக்தியின் நிலைகளை நமக்குள் தங்கமாக வைத்திருக்கிறோம்.

வாழ்க்கை என்கிற நிலைகளில் ஒவ்வொரு நிமிடமும் பயம் ஆத்திரம் எல்லா நிலையும் வருகிறது. எல்லாம் பித்தளை செம்பு வெள்ளி போன்றவை, அடிக்கடி இவை நம் உடலில் சேர்ந்து விட்டால் நம் உயிரான வெப்பம் இவையெல்லாம் சேர்த்துக் கலந்துக் கொண்டே போய்க் கொண்டிருக்கும்.

நல்ல மனதாக இருப்போருக்கு இப்படி ஆகிறது. இன்று நல்லதைப் பற்றி எண்ணுகிறோம். அடுத்து யாராவது தப்பான நிலைகளைப் பார்த்து விட்டால், அந்த உணர்வு வந்து அதையும் நாம் சேர்த்துக் கொள்கிறோம்.
1.இப்படி நம் நல்லகுணத்தை அழித்து விடுகின்றது.
2.இதை நாம் சுத்தப்படுத்த வேண்டுமல்லவா…!

வாழ்க்கையில் எப்படி இருந்தாலும் குறையில்லாமல் நாம் வாழமுடியாது. நாம் ரோட்டில் போகும்போது குறையான நிலைகளை நாம் பார்க்காமல் இருக்க முடியாது. யாராவது சண்டை போடுகிறார்கள் என்றால் அதைப் பார்ககாமல் இருக்க முடியாது.

இருவர் சண்டை போடும்போது யார் எதற்கு என்கிற வகையில் நாம் கேட்போம். சும்மா போய்க் கொண்டிருக்கும்போது அடித்தான் உதைத்தான் அடித்து ரொம்பக் காயமாகிவிட்டது என்று சொல்வார்கள்.

அடப் பாவிப்பயலே…! இந்த மாதிரி அடித்தானே என்று நமக்குள் பயமும் ஆத்திரமும் கோபமும் வருகிறது. ஏனென்றால் அந்த உணர்வுப் பட்டு அதற்குத் தகுந்த எதிர்மறை நமக்குள் உருவாகிறது.

அப்பொழுது நாம் அதைச் சுவாசிக்கும்போது உயிரில் பட்டு உணர்வு உமிழ் நீராக மாறுகிறது. நம் உடலில் சேர்ந்து விடுகின்றது. அதைத் துடைக்க வேண்டுமல்லவா…!

ஆகவே தீமையோ கஷ்டமோ துன்பமோ வேதனையோ வரும் பொழுதெல்லாம்
1.உங்கள் கண்களின் நினைவு ஈஸ்வரா…! என்று
2.புருவ மத்திக்குச் சென்று அதைத் தடைப்படுத்த வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று இதை நீங்கள் வழிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நான் (ஞானகுரு) பெறுகின்றேன். உங்களுக்கும் மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று ஜெபம் இருக்கின்றேன்.

நீங்கள் எதை எல்லாம் நல்லதாக வேண்டும் என்று செய்கின்றீர்களோ அது நல்லதாக வேண்டும் என்று ஜெபம் செய்கின்றேன்.

ஏனென்றால் உபதேசம் செய்த உணர்வலைகள் இங்கே இருக்கின்றது. உங்களுக்குள்ளும் பதிவாக்குகின்றோம்.

டி.வி. ஸ்டேசனிலிருந்து ஒலி – ஒளி பரப்பு செய்யும் போது அதே ஸ்டேசனை வைத்தால் எப்படிப் படம் தெரிகின்றதோ அதே போல்
1.ஈஸ்வரா…! என்று உயிரை நினைக்கும்போது
2.அந்த மகரிஷிகளின் உணர்வலைகள் உங்களுக்குக் கிடைக்கும்.
3.நீங்கள் அதை வளர்ப்பதற்கு உங்களுக்குச் சந்தர்ப்பம் இருக்கின்றது.

உங்களால் முடியும்…!

தீய சக்திகளுடன் நேரடியான மோதலைத் தவிர்க்க நாம் ஏன் விலகிச் செல்ல வேண்டும்…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

va;i ugriva.JPG

தீய சக்திகளுடன் நேரடியான மோதலைத் தவிர்க்க நாம் ஏன் விலகிச் செல்ல வேண்டும்…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

வாலியின் வீரிய குணத்தின் தன்மையின் ஆணவம் எந்த எதிர் மோதல்களையும் தன் வசமாக்கித் தன் சக்தியுடன் ஒன்றச் செய்யும் சூட்சமம் பெற்றது.

அதிலே நல்வினைப் பயனை எண்ணியிருந்தால் ஆச்சா மரம் வெட்டப்படத் தேவை இருந்திடாது. அது தான் மனித குல மனத்தின் வீரிய சக்தி…!

வாலி வதம் என்ற சம்பவம் சபரிமலைத் தொடர் அருகே ஒதுக்குப்புற வட பகுதியில் வாழ்ந்த ஓர் இன மக்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவம்.

தவத்தின் சக்தி பெற்றவன் பிற ஆன்மத் தொடருக்கு அனைவரும் அந்தச் சக்தி பெறவேண்டும் என்ற எண்ணம் கொண்டு ஜடாக்கினியின் செயல் இருந்திருந்தால் அவன் நிலை உயர்ந்திருக்கும். வான்மீகி பதம் பார்த்தான். அந்த ஆச்சா மரம் வீழ்ந்தது.

ஜடாக்கினி மனதிறத்தால் மற்றவர்கள் பெறும் சக்தித் தொடருக்கு எண்ணத் தடை ஏற்படுத்தித் தீவினையால் விளையாடி விட்டான். அதன் பயன் இராமபாணம் வான்மீகியால் பாய்ச்சப்பட்டது.

ஜடாக்கினி உயர் எண்ண வீரிய சக்தி தீவினைப் பயனை விளைவிக்கும் மந்திர சக்தியுடன் மோதுண்ட பொழுது எந்தப் பிரம்மாஸ்திரம் வென்றிருக்கும் என்பதனை விளக்கிடவும் வேண்டுமோ…?

இராமன் மறைந்திருந்து அம்பெய்தான் என்பதன் சூட்சமம் என்ன…? அதிலே நீங்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய காரியம் ஒன்றுண்டு.

தியானத்தின் மூலம் ஞானச் செல்வங்கள் (மனிதர்கள்) இன்று பெற்றுக் கொண்டிருக்கும் உன்னத நிலைகளும் மற்ற செயல்களும் எதைக் காட்டும்…?

நீங்கள் பெற்றுக் கொண்டிருக்கும் ஞான சக்திகளைப் பலர் பல எண்ணம் கொண்டு நோக்கிடும் செயலுக்கு
1.உங்களை உற்றுப் பார்க்க ஆரம்பித்தால் – அவர்களின் பார்வை அலையை
2.உங்களின் பார்வை அலையை நேர் கொண்டு மோதிடாமல் தவிர்த்திடவும் வேண்டும்.

மற்றவர்கள் மத்தியிலே உலகோதய வாழ்க்கையைப் பற்றிப் பேச வேண்டிய நிலையில்
1.பிறரின் பார்வையைக் கூடுதலான நேரம் நம் பார்வையோடு சந்திக்காமல்
2.சிறிது தவிர்த்திடவும் வேண்டும்.

தன் தவ சக்தியைக் குறைத்துக் கொண்டு வாலியின் தொடர் மீண்டும் பிறருக்குத் தீங்கிழைக்காதவண்ணம் தடுத்து ஆட்கொண்ட செயல் தான் வான்மீகியார் பெற்ற அனுபவ நிலை என்பது

அந்தக் காப்பிய ரிஷி மீண்டும் தன் ஈர்ப்பின் தொடரில் வெகு வேகமாகச் சக்தியைக் கூட்டிக் கொள்ளும் செயலில் பற்பல ரிஷிகளுடன் தொடர்பு கொண்டார். அதில் பரசுராமர் தொடரும் உண்டு.

ஜடாக்கினி அனுபவம் ஞானம் என்பதே உயர் சக்தி வலுக்கூடும் வலுவின் வலுவாகும்,
1.தன்னுடைய அனுபவமே போதனையாகி
2.உயர் சக்தியை ஆட்கொள்ளும் நாத வித்தின் மூலம் பரிமளிக்கும் செயல் நிலைக்கு
3.மீண்டும் எண்ண வலுவின் திட வைராக்கிய சிந்தனையால்
4.எந்த மண்டலமோ அந்த மண்டலத்தின் சூட்சமும்
5.எந்தெந்த நட்சத்திரங்களோ அவைகளின் அமில குண ஈர்ப்பின் சேமிப்புமாக
6.இந்தச் சரீரத்தை வைத்து ஈர்க்கும் காந்த அமிலத் தொடர்பும்
7.பேரொளியாகச் சுடர்விட்டுப் பிரகாசித்திடும் நிலையாக
8.தன் உயிர் அமில மூல முலாமைத் தெளிந்து
9.அந்தச் சக்தியின் தொடரில் எண்ண வலுவை உயர்வாக்கிப் பெறும் ஜடாக்கினி ஒளி சக்தி கொண்டு
10.குறைவுபடா சேமிப்பாக்கிச் செயல் கொள்வதே பக்குவமான செயல் ஆகும்.

நோயிலிருந்து விடுபடுங்கள்

human body.jpg

நோயிலிருந்து விடுபடுங்கள்

நாம் நல்ல நறுமணங்கள் கொண்ட உணவுகளை உட்கொண்டாலும் அந்த நறுமணத்தை வீரியமாக இயக்கச் செய்யும் நஞ்சு அதிலே உண்டு. அத்தகைய நஞ்சினை எல்லாம் நம் உடல் பிரிப்பதனால் நம் மலம் நாற்றமான நிலையில் வருகின்றது.

நம்முடைய ஆறாவது நல்ல உணர்வின் சத்தை எல்லாம் நம் உடலாக மாற்றி நஞ்சை நீக்கிடும் நல்ல உணர்ச்சிகளாகத் தூண்டுகின்றது ஆகவே தான் இதைப் பரசுராம் என்று கூறுகின்றார்கள்.

மனிதனாக இருக்கும் நாம் இன்று விஷமான பொருள்களை நாம் உட்கொண்டாலும் அதன் சக்திக்குத் தகுந்தவாறு
1.நம்முடைய கிட்னி (KIDNEY – சிறுநீரகங்கள்) என்ற உறுப்பு இரத்தத்தில் வரும் அந்த நஞ்சினை வடிகட்டி விடுகின்றது.
2.அதைப் போல நம் குடல் உறுப்புகளிலும் சில நஞ்சினைப் பிரிக்கும் தன்மை வருகின்றது.
3.இரத்தத்தில் வரும் நஞ்சினைப் பிரிக்கப்படும் பொழுது விஷ அணுக்கள் உருவாக்காதபடி தடுத்துவிடுகின்றது.

அதே சமயம் நாம் சுவாசிக்கும் உணர்வுக்குள் நஞ்சு கலந்த உணர்வு வந்தாலும் அது உடலுக்குள் செல்வதற்கு முன் நமது பெரு மூளை வடிகட்டிவிடுகின்றது. அதைச் சளியாக மாற்றிவிடுகின்றது.

நமக்குள் தீமைகளை அகற்றிடும் சக்தி இப்படி விளைந்தாலும் சம அளவாக இருக்கும் பொழுது எல்லாமே சீராக இயங்குகின்றது. ஆனால் விஷத்தின் அளவு அதிகரித்துவிட்டால் நம் கிட்னி சரியாக வேலை செய்யாது.

அது சரியாக வேலை செய்யவில்லை என்றால்
1.விஷத் தன்மை கொண்ட அணுக்கள் அதிகமாகப் பெருகத் தொடங்குகின்றது.
2.நம் உடலில் சர்க்கரைச் சத்து அதிகரித்துவிடுகின்றது
3.வாத நோய் அதிகரித்து விடுகின்றது. உப்புச் சத்தும் அதிகமாகின்றது.

கிட்னி பிரிக்கும் தன்மை இழந்த பின் உப்புச் சத்து அதிமாகி விட்டால் நம் உடலில் உள்ள எலும்புகள் அனைத்திலும் அது ஊடுருவிவிடும். எலும்புகளைப் பலவீனப்படுத்திவிடும்.

சாதாரணமாக உப்பை வெளியிலே ஒரு இடத்தில் வைத்திருந்தால் அது கசியும் தன்மை வரும்.

இதைப் போல் நம் உடலுக்குள் அந்த அதிகப்படியா இருக்கும் உப்பு கசியும் தன்மை வந்துவிட்டால் சுவாசப்பைகளில் மூச்சுத் திணறல் அதிகரித்துவிடும். சுவாசிப்பதே மிகவும் கடினம் ஆகின்றது.

இதைப் போன்று நமக்குள் வந்துவிடுகின்றது. இதை மாற்றுவதற்கு என்ன சக்தி வைத்திருக்கின்றோம்…?

மிருகங்கள் அனைத்துமே நஞ்சின் தன்மை கொண்ட வலுவான உடலாகப் பெற்றிருக்கின்றது. நஞ்சின் தன்மையைத் தன் உடலாக்கும் நிலைகள் கொண்டு தனக்குப் பாதுகாப்பான நிலைகளாக மாறுகின்றது.
1.ஆனால் மனிதனுக்கோ நஞ்சை நீக்கினால் தான் பாதுகாப்பு.
2.நஞ்சு அதிகரித்து விட்டால் நம் உடலுக்கு பாதுகாப்பற்ற நிலையாக ஆகிறது.

ஆனால் அருள் மகரிஷிகள் அனைவருமே தன் வாழ்க்கையில் இத்தகைய நஞ்சுகளை எல்லாம் வென்று உணர்வை உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக ஆக்கியவர்கள்.

வைரம் எவ்வாறு நஞ்சினை உள்ளடக்கி ஒளியின் சிகரமாக இருக்கின்றதோ இதைப் போல மகரிஷிகள் தன் உயிரின் நிலைகள் கொண்டு தன் வாழ்க்கையில் வந்த
1.நஞ்சினை ஒடுக்கிடும் ஆற்றல்மிக்க சக்தியினை தனக்குள் எடுத்துப் பொருள் அறிந்திடும் நிலையும்
2.இருள் நீக்கிடும் நிலையும் தனக்குள் மகிழ்ந்திடும் ஆற்றல் மிக்க ஒளியின் சிகரமாக உணர்வினை மாற்றியமைத்து
3.இன்றும் விண்ணுலகில் துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலங்களாகவும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

அதனின்று வெளிப்படும் உணர்வின் ஆற்றல்கள் நம் பூமியிலே படர்ந்து கொண்டிருக்கின்றது. அந்த மெய் ஞானிகள் உணர்த்திய உண்மைகளை குருநாதர் காட்டிய வழியில் உபதேசித்து உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றோம்.

அந்தப் பதிவின் துணை கொண்டு அருள் ஞானியின் உணர்வின் சத்தைப் பெறும் வித்தாக உங்கள் எண்ணங்களில் பதிவு செய்து உங்கள் நினைவின் ஆற்றலை விண்ணுக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து அதைப் பருகும் தகுதியையும் ஏற்படுத்துகின்றோம்.

இதை நீங்கள் செம்மையாகப் பயன்படுத்தினால் உங்கள் உடலுக்குள் இருக்கும் எல்லா உறுப்புகளுக்குள்ளும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி ஊடுருவி நஞ்சான வித்துகளை எல்லாம் வலுவிழக்கச் செய்ய முடியும்.

நோயிலிருந்து விடுபடவும் முடியும்…!