இவை என்ன உலக இயற்கை…?

இவை என்ன உலக இயற்கை…?

 

(16.12.1979 அன்று தினமணிச் சுடரில் வெளி வந்த கட்டுரை)

அயல் நாட்டுக் கார் ஒன்று நீண்ட படகு போல் வீதியில் வேகமாகச் செல்கின்றது. இதை பார்க்கும் ஒருவர் அருகில் நிற்பவரிடம் சொல்கிறார்.

அந்தப் பெரிய காரில் போவது யார் தெரிகிறதா…? கள்ளக் கடத்தல் செய்து பொருள்களைப் பதுக்கி வைத்து அந்தக் குற்றத்திற்காகத் தண்டனை பெற்றாரே… அவர் தான்…!

ஆமாம்…! அவர்கள் தான் இப்படி ஆடம்பரமாக வாழ முடியும்…! என்று பெருமூச்சுடன் கூறுகின்றார் மற்றொருவர்.

அந்த வியாபாரிக்குத் தண்டனை விதித்த “மேஜிஸ்டிரேட்” அந்த வீதியில் உள்ள பஸ் ஸ்டாண்டில் பஸ்ஸுக்காக வெயிலில் நிற்கின்றார். 2… 3… பஸ்களில் ஏகக் கூட்டம் அவரால் ஏற முடியவில்லை. “கோர்ட்டுக்கு நேரமாகிவிட்டதே” என்ற துடிப்போடு அடுத்த பஸ்ஸை எதிர்பார்த்து நிற்கின்றார்.

அந்த வீதியிலேயே பெரிய வீடு… ஆடம்பரமான பங்களா…! தொடர்ந்து லஞ்சம் பெற்றதற்காக வேலையில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட அரசாங்க அதிகாரி ஒருவருடைய வீடு அது…! என்பது எல்லோருக்கும் தெரியும்.

அதே வீதியில் கொஞ்சம் தள்ளி… சிறு வீடு ஒன்றில் அந்த வேலை நீக்கம் பெற்றவருக்கு மேலதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவரின் வீடு இருக்கிறது.

அவர் நேர்மையான அதிகாரியாகப் பணியாற்றியவர்… எல்லோராலும் பாராட்டுப் பெற்றவர்… வேலையில் திறமையானவர்…! ஆனால் லஞ்சம் வாங்கும் திறமை அவரிடம் இல்லை.

நான்கு பெண்களைப் பெற்ற அவர் ஓய்வூதியத்தை வைத்துக் கொண்டு குடும்பத்தை நடத்த முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றார்.

ஆக கலப்படம் செய்பவர்களும் கள்ளச் சந்தையில் வியாபாரம் செய்யும் வணிகர்களும்… லஞ்சம் பெற்றுக் கணக்கில்லாமல் சேர்த்து வரும் செல்வத்துடன் சீரோடும் சிறப்போடும் வாழுகின்றனர்.

அது மட்டுமல்ல…! ஊராரும் அவர்களைத் தான் போற்றுகின்றார்கள்… புகழ்கின்றார்கள். கள்ளச் சந்தையில் ஈடுபடாத வணிகர்களைக் “கையாலாகாதவர்கள்” என்று இழிவாகக் கருகின்றனர்.

கலப்படம் செய்வதற்குப் பயப்படும் வியாபாரிகளைத் “துணிச்சல் இல்லாதவர்கள்” என்று கேலி செய்கின்றார்கள். கயவர்களைப் போற்றும் உலகம் கண்ணியமானவர்களைத் தூற்றுகின்றது.

இதன் பயனாகத் தீயோர்கள் பிறர் மதிக்க வாழுகின்றனர்… நல்லோர்கள் இதயம் நலிந்து ஏங்கி இருக்கிறார்கள். இந்த விசித்திரமான நிலை இன்று போல் அன்றும் இருந்திருக்கின்றது. மனித குலத்தின் இயல்பும் மாறவில்லை அல்லவா…!

பணத்தைப் புகழ்வதும் பண்பாட்டைப் புறக்கணிப்பதும் மனிதனின் மாறாத தன்மை போலும்…! இந்த இழிநிலையினை காணும் நல்லோர்கள் மனம் நொந்து வருந்துவது இயல்பு தானே…!

ஒழுக்கமான வாழ்வே உயர் ஞானத்தின் பயன் என்று உரைத்த மெய்யடியார்கள் இதைக் கண்டு இதயம் இடிந்து போகின்றனர்.

“தீது அவம் கெடுக்கும் அமுதம்” என்று இறைவனை ஏத்தும் ஞானிகளால் தீமை ஓங்குவதையும் நன்மை நலிவடைவதையும் கண்டு எப்படிச் சகிக்க முடியும்…?

பண்புகளுக்கெல்லாம் பகைவர்களாக உள்ளவர்கள் புன்முறுவலோடு பொலிவுடன் வாழுகின்றனர். அன்பு நிறைந்த நல்லோர்கள் நலிந்து ஏங்குகின்றனர்.

எண்ணிலா இத்தகைய துயர் விளைவிக்கும் இது என்ன உலகத்து இயற்கை…! கண்ணனே…! கடல் கடைந்த வண்ணனே…! தாளாது அடியேனை உன் கழலிணைச் சேருமாறு அருள் புரிவாய்…! இந்த வாழ்வு வேண்டாம்…! என்று இதயம் கரைந்து பாடுகின்றார் நம்மாழ்வார்.

நல்லவர்கள் நலிவதும் நல்லோர் அல்லாதவர்கள் நன்கு வாழ்வதும் எதனால்…? மனிதன் தனக்கு வரித்துக் கொண்ட சமுதாய அமைப்பு முறையின் விளைவு தானே…?

அறத்திற்கு மாறான இந்த அவல நிலை அடியார்களின் உள்ளத்தை உலுக்குகின்றது இதைக் கண்டு சகித்துக் கொண்டு இருப்பதை விட உலக வாழ்வை விட்டு மறைவதே உகந்ததாகப் படுகின்றது.

இது மட்டுமா…? தான் உண்ணுவதற்கு என்று பிற உயிர்களைக் கொல்லுகின்றானே மனிதன்…! ஏமாற்றிப் பிடித்தும் வலையில் சிக்க வைத்தும் உயிரினங்களைப் பிடித்து அவற்றைக் கொன்று உண்ணுகின்றான்.

அறம் என்பது என்ன…? என்று அறியாத நிலையில் இவ்வாறு மனிதன் பிற உயிர்களைக் கொன்று உண்ணுகின்றான். கொல்லாமையை விட அறம் ஏது…? இதனை அறியாதவர்கள் உயிர்களைக் கொன்று பசியாறுகின்றனர்.

இதைக் கண்டு சகிக்க முடியவில்லை ஆராவமுதனே…! என்னை உன் திருவடியின் கீழ் அழைத்துக் கொள்… என்னைக் கூவி அழைத்துக் கொள்…! என்று இறைஞ்சுகின்றார் ஆழ்வார். புலால் உண்பதன் புன்மையினை அறப்போருளை அறியாதவர்களின் செயல் என்கிறார்.

“அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்” என்பது குறள்.

பிற உயிர்களைக் கொல்லாமல்தானே அறத்திற்கு அடிப்படை. தன் உடம்பு பெருக்க வேண்டும் என்பதற்காக… தான் மற்றொரு உயிரின் உடம்பைத் தின்பவன் எவ்வாறு அருள் உடையவனாக இருக்க முடியும்…? என்று கேட்கின்றார் திருவள்ளுவர்.

பிற உயிர்களைக் கொன்று உண்ணும் பழக்கம் அறத்திற்கும் அறத்தின் பயனாக அருளுக்கும் மாறுபட்டது என்பதால் அது விலக்கப்படுகின்றது.

உலக வாழ்விலே அருளும் அறமும் நலிகின்ற போதெல்லாம் நல்லவர்கள் மனம் நலிகின்றது. அறம் போற்றி வாழ்பவர்கள் அல்லல்படுவதும் அல்லாதவர்கள் ஆடம்பரமாக வாழ்வதும் உயிர்களைக் கொன்று உண்டு தம் ஊனை வளர்ப்பதும் உலகத்து இயற்கையாகி விட்டது…! உலக வாழ்வோடு ஒன்றிய இயல்பாகி விட்டது.

இப்படிப்பட்ட உலகில் வாழ்வதை விட்டு இறைவன் திருவடியில் விரைவில் சேர்வதே வித்தகர்களின் விசாரமாகி விடுகிறது என்று இதயம் இடிந்து இவ்வாறு பாடுகின்றார்கள்.

ஈஸ்வரபட்டரின் பதில்:-
நம்மாழ்வார் இயற்றி வெளியிட்ட அருட்பாக்களை ஆராய்ந்து இந்நிலையின் பொருளை விளக்குகின்றனர்.

நீதியைப் புகட்டும் நீதிபதியின் வாழ்க்கைத் தரத்தையும்… அந்த நீதிபதியினால் தண்டனைக்குட்பட்ட குடிமகனின் வாழ்க்கை நிலையையும்… இரண்டு வெவ்வேறு நிலை கொண்ட பொருளாதார அடிப்படையில் “இந்த ஞானவழிக்கும்… ஆத்மீக வழியின் தொடர் நிலைக்கும்” ஒப்பிட்டுப் பதம் காண்கிறனர்.

1.அவன் சென்ற வியாபார நோக்கின் வழி எண்ணத் தொடரின் செயலுக்கும்
2.நீதிபதியின் நற்போதனை நிலைக்கும்
3.வாழ்க்கை நிலையை இப்பொருளாதார ஏற்றத் தாழ்வை ஒப்பிட்டுச் செயல் காண்பது எந்த வழியில்… எந்த ஞானியாக இருந்தாலும் உத்தமம்…!

ஆத்ம நிலையை அறிய… இறை பக்தியை ஏற்றம் கொண்டு வழி நடந்திடும் இவ்வுணர்வுடையோர் இந்நிலையை ஒப்பிட்டு… இந்நிலையினால் தன் எண்ணத்தை விரக்திப்படுத்தி… இறைவனடி ஒன்று தான் உத்தம நிலை என்று “விலகிச் சென்று… ஆத்ம ஜெபம் என்ற இறை பக்தியை வளர்க்கின்றார்களாம்…!”

நீதிபதி தான் வந்த வழியில் நீதிக்காகச் செயல் கொண்டு செயலாற்றுவதற்கும் அவர் வாழ்க்கையின் பொருளாதார நிலைக்கும் ஒப்பிடலாகாது.

வியாபாரியின் நோக்கில் பல தவறுகள் நீதிக்கு புறம்பட்டதாக இருந்தும் பொருளாதார ரீதியில் உயர்ந்துள்ளதை வைத்து
1.இறைவனைப் பாகுபடுத்திட்ட நிலை தான்
2.இன்றைய மனிதர்களின் எண்ண நிலை எல்லாம்.

சத்தியத்திற்கும் தர்மத்திற்கும் அடிபணிந்தே வாழ்ந்தும் பல இன்னல்களை ஏற்க வேண்டியது உள்ளதே… “ஆண்டவனின் சோதனை நிலை” என்ற எண்ண நிலையிலேயே அப்பாகுபாடு என்னும் எண்ணமே…
1.தர்மவான் சத்தியவான் என்று வாழ்ந்தாலும்
2.தன்னையே குறுக்கிக் கொள்ளும் இந்த எண்ணத்தினால் தான்
3.இன்றைய இந்த உலகில் உள்ள சத்திய நியாயமும் மறைந்து வரும் நிலை.

சத்தியத்திற்குச் சோதனை வரும் என்ற எண்ண நிலையிலேயே அச்சோதனை நம்மைப் பற்றிக் கொள்கின்றது.
1.இந்நிலையில் சத்தியம் என்பது எப்படி ஜெயம் கொள்ளும்…?
2.எண்ணத்தில் உள்ள சத்தியத்தையும் தர்மத்தையும் இன்றைய மனிதன் சோதனையாக எண்ணி “நழுவ விட்ட காலம் இது…”

வாழ்க்கையில் பல தவறுகளைத் தவறென்று உணர்ந்தே செய்பவனும்… தன் எண்ண நிலையைச் சோர்வுக்கும் தோல்விக்கும் அடிபணிந்திடச் செய்திடாமல்… நன்மை தீமை கொண்ட எவ்வழிக்கும்… ஒரே எண்ணமுடன் சோர்வை அண்ட விடாமல் செல்பவனின் பொருளாதார வாழ்க்கை நிலையும் குடும்பத்தின் செயல் நிலையும் வளமுடன் தான் வாழ்கின்றன.

1.பல தவறுகள் செய்கின்றான்… அவனை ஆண்டவன் பார்ப்பதில்லை.
2.நல் உணர்வு கொண்ட நமக்கேன் சோதனை…? என்ற எண்ணத்திலேயே நம்மைத் தாழ்த்தி
3.அதனால் வரும் நம் ஆத்ம நிலையின் சோர்வினால்
4.நல் உணர்வுகளை நாம் பெற்றிருந்தாலும் நம் நிலையும் குன்றி நம் பொருளாதார நிலையும் கீழ்ப்பட்டு
5.நம்மையே நாம் குன்றச் செய்து கொள்கின்றோம்.

இவ்வண்ண நிலையில்தான் ஆண்டவனின் ஜெபமும் ஞான நிலையும் இறை பக்தியும் இவ்வுலகமும் இவ்வுலகைச் சார்ந்த அனைத்து உலகங்களுமே அடக்கம் பெற்று வாழ்ந்திடும்… “இவ்வாத்மாண்டவனின் (தனக்குள் இருக்கும் ஆண்டவன்) எண்ணத்தை உணர்ந்திடாமல்” வாழ்ந்திடும் மக்களின் எண்ணத்தையும்… நம் முன்னோர் சூட்சுமத்தில் வெளிப்படுத்திய நூல்களில் உள்ள உண்மை நிலையை உணர்ந்திடாமல்… மக்களின் எண்ணத்தையே கேள்விக்குறியாக ஆக்கிவிட்டார்கள் என்று சில நிலைகளினால்.

1.பக்தி… ஞானம்… பரம்பொருள்… பரமாத்மா… என்றே பல நிலைகளைப் போதனைப்படுத்தி
2.இறை பக்தியாக ஆத்ம ஜெபம் எடுக்கும் நிலையை இன்று உணர்த்துவாருமில்லை… செயல் கொள்வாரும் இல்லை.
3.இறைவனை எண்ணுவதே இப்பொருளாதார ஆசையின் அடிப்படையில் தான் (இன்றைய நிலை).

இவ்வண்ண நிலை கொண்ட நாம் எடுக்கும் சுவாசத்தினால் மட்டும்தான்… ஒவ்வொரு ஆத்மாவின் வழித்தொடர் நிலையுண்டு.

ஒரு குடும்பத்தில் உள்ள மூத்த தலைவனின் நிலைக்கொப்பதான் அவன் சேமித்துச் செயல் கொள்ளும் வழித் தொடரின் நிலையில்… எண்ணத்தினால் அவனைச் சார்ந்துள்ளோரின் நிலையின் எண்ணக் கலப்பும் வழித்தொடரின் செயல் நிலைகொள்கின்றது.

நம்மாழ்வார் இயற்றிய பாடல்களில் உள்ள நிலையின் அர்த்தத்தையே கால நிலைக்கு ஏற்ப இன்று உணர்த்துகின்றார்கள்.
1.உண்மைத் தத்துவ நிலை எது…?
2.உணர்ந்து செயல்பட வேண்டும்.

பறக்கும் தட்டு

பறக்கும் தட்டு

 

05.12.1979 அன்று தினமணி பத்திரிக்கையில் வெளி வந்த செய்தி:-

பாரிஸில் (பிரான்ஸ்) சென்ற மாதம் 26ஆம் தேதி பறக்கும் தட்டு தூக்கிச் சென்றதாகக் கூறப்பட்ட வாலிபர்… நேற்று மீண்டும் அதே இடத்தில் தோன்றினார்.

பாரிஸுக்கு மேற்கு செயிண்ட் சூன் பகுதியைச் சேர்ந்த பாண்டைன் என்ற 19 வயது வாலிபரும் அவரது இரு நண்பர்களும் தங்கள் வீட்டு வாசலில் காரில் துணிப் பெட்டிகளை ஏற்றிக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது காருக்குச் சிறிது தூரத்தில் “ஒளியுடன் கூடிய பந்து போன்ற ஒரு பொருள்” தெரிந்தது. அது வர வர மிக பெரிதாகிக் கொண்டே வந்தது. அதன் ஒளியும் கண்ணை எரிக்கும் அளவுக்குப் பிரகாசமானது.

கார் அருகே அந்தப் பொருள் வந்த பொழுது… பெரிய பந்து போல் இருந்தது. பாண்டைன் மட்டும் நின்று கொண்டிருந்தார். மற்ற இருவரும் அதைப் படம் எடுக்க வீட்டிற்குள் ஓடினர்.

கேமிராவுடன் திரும்பி வந்த பொழுது பாண்டைனைக் காணோம்… காரைச் சுற்றி ஒரு பிரகாசமான ஒளி இருந்தது. பின் அதுவும் மறைந்தது.

தகவல் அறிந்த பிரெஞ்சு போலீசார் உடனடியாக பாண்டைனைத் தேடுவதில் முனைந்தனர். பறக்கும் தட்டு இறங்கிய இடத்தில் கதிரியக்கச் சோதனையை போலீசார் நடத்தினர்.

அங்கு கதிரியக்கம் இல்லை என்று கண்டுபிடிக்கப்பட்டது பாண்டைனுடைய இரு நண்பர்களையும் போலீசார் தீர விசாரித்தனர்.

இதற்கு இடையே எந்த இடத்தில் பறக்கும் தட்டு பாண்டைனை எடுத்துச் சென்றதாக கூறப்பட்டதோ அதே இடத்தில் நேற்று அவர் தோன்றினார்.

பறக்கும் தட்டு எடுத்துச் சென்ற அன்று என்ன உடை அணிந்து இருந்தாரோ… அது சிறிது கூடக் கலையாமல் இருந்தது. அவர் பையில் வைத்திருந்த பணம் அப்படியே இருந்தது.

தான் பறக்கும் தட்டால் எடுத்துச் செல்லப்பட்டதைக் கூறும் பாண்டைன்… அதற்குப்பின் ஒரு வாரத்தில் என்ன நடந்தது…? என்று தெரியவில்லை. திடீரென்று தான் பழைய இடத்தில் இருப்பதாகத் தெரிய வந்தது என்று கூறினார்.

இது பற்றி இனம் புரியாத… “பறக்கும் பொருட்கள் பற்றி ஆராயும் பிரெஞ்ச் விண்வெளி விஞ்ஞானிகளிடம்” தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்வரபட்டரின் பதில்:-

பந்து போன்ற அந்த ஒளி பிறரால் ஏவப்பட்ட பறக்கும் தட்டு என்ற சாதனம் அல்ல. “பறக்கும் தட்டு” என்ற பீதி கொண்ட நிலையில் எண்ணம் கொண்ட இச்செயல்… எந்த நிலையில் ஏற்படுகின்றது…? என்பதனை உணர்ந்திட வேண்டும்.

இந்த மனித ஆத்மாவிற்குப் பல அமில சக்திகளைத் தன்னில் ஈர்த்து மனித பிம்பமாக வாழ்ந்திடும் சக்தி நிலை உண்டு.

அணுவிலிருந்து பல நிலை மாறி மனித ஆன்மாக்களாக வாழ்ந்திடும் இப்பிம்பச் சக்திகளுக்கு
1.தாவர வர்க்கங்களைப் போன்றும்
2.மற்றைய கனி வளம் திரவங்கள் இப்படித் தனித்த ஒரு நிலை கொண்ட ஈர்ப்பு சக்தியிலிருந்து மாறு கொண்ட அனைத்து அமிலங்களையுமே
3.தன் எண்ணத்திற்குகந்த எந்த அமிலத்தையும் ஈர்க்கும் சக்தி நிலை (மனித ஆன்ம பிம்ப உடலுக்கு) உண்டு.

நம்மைச் சுற்றியுள்ள நம் பூமியும்… நம் பூமியுடன் தொடர்பு கொண்ட மண்டலங்களின் சக்தியும்… நம் சூரியனின் சக்தியிலிருந்து வந்திடும் அணு பிம்பங்களின் தொடர்பினால்… இந்த மனித ஆத்மாவை எந்நிலைக்குகந்த ஒரு நிலை கொண்ட அணு சக்தியையே… இவ் எண்ணத்தின் தொடர்பினால் ஈர்த்து வெளிப்படுத்தும் சுவாசத்தின் சக்தியினால்… “இன்று ஒரு நிலை கொண்ட ரிஷிகளின் நிலையைப் போல உடலையே ஒளியாக்கி… ஆவி பிம்பமாக ஜோதியாகச் செயல்படுத்திட முடிந்திடும்.

ஒவ்வொரு உடலையுமே இப் பிம்ப நிலை தெரியாமல் ஒளியுடன் ஒளியாகப் பறந்த நிலைப்படுத்திட முடிந்திடும்.

இன்று அங்கு நடந்திட்ட இந்நிலை “விஞ்ஞானத்தில் வழி வந்த” சித்து நிலை பெற்றோரின் சக்தி நிலை செயல் கொள்கின்றது
1.சித்து நிலை பெற்ற விஞ்ஞானி
2.தன் உடலையே ஒரு நிலை கொண்ட அமிலத்தை ஈர்த்துth தன் பிம்பத்தையே ஒளிப்படுத்தி…
3.அந்த ஒளியுடனே மற்ற ஆத்ம பிம்பத்தையும் ஒளிப்படுத்தித் தன்னுள் ஈர்த்து
4.தான் அடைந்த ஒளி பெறும் சக்தியின் நிலையினால் தன்னுள் சேர்த்த மற்ற ஆத்ம உடலையும்
5.அந்நிலையிலேயே ஈர்த்திடும் ஆராய்ச்சி நிலையில் நடந்த நிலை தான் அங்கு நடந்த நிலை.

ஆவியின் தொடர்பு கொண்டு “மனோவசியம் செய்வதைப் போல” ஆத்ம பிம்பத்தையே ஒளிப்படுத்தி மற்ற ஆத்ம பிம்பத்தையும் தன்னுள் ஈர்க்கும் நிலை தான் அங்கு நடந்ததன் நிலை.

விஞ்ஞானத்தின் செயல் எல்லாம் இயற்கையுடனும் மற்ற அணுக்களின் தொடர்புடனும் செயற்கையாகச் செயல்பட்டு விளையாடியது.

இந்தப் பூமியில்… இந்தக் கலியில்… விஞ்ஞான வழியில் வந்த சித்து நிலையினால் “ஆத்மாவுடன் ஆத்மாவை இணைக்கும்… ஒளி நிலை விளையாட்டு நிலைக்கு வந்துள்ளது…”

பிம்பத்தையே ஒளியாக்கிடும் சக்தி பெற்றவன் அந்நிலையின் சக்தித் தொடரைச் செயல்படுத்திட… மற்ற ஆத்மாவை ஈர்த்து ஏன் செயல் கொண்டிட வேண்டும்..?

மனித ஆன்மாக்களின் எண்ணத்தையே கலக்கம் கொண்டிடும் நிலைக்குத் தான் பெற்ற சக்தியை ஏன் இப்படி விரயம் ஆக்க வேண்டும்…?

இப்பூமியில் இந்தியாவில் கோயில்களை நம் சித்தர்களினால் செயல்படுத்திடும் புண்ணிய ஸ்தலப்படுத்தி… அங்கு பக்தி நெறியில் வந்திடும் ஆன்மாக்களுக்கு ஒளியுடனே ஒளியாக… தான் பெற்ற சக்தியை ஒளியின் வழியில் நல்லருளைப் பாய்ச்சிடும் (நம் சித்தர்களின்) வழியையே தான் மாற்று வழியில் அவர்கள் (விஞ்ஞான) செயல்படுத்துகின்றனர்.

அவ்வெண்ணத்துடன் தொடர்புடனே… அந்த வழியில் வந்த விஞ்ஞானச் சித்தனும் இங்குள்ளதைப் போல் பக்தி நெறி கொண்ட கோயில் நிலை அங்கு இல்லாததின் நிலையால்… வந்த விளையாட்டு நிலை தான் இது.

ஞானிகள் கருப்பணசாமியை வைத்ததன் நோக்கம்

ஞானிகள் கருப்பணசாமியை வைத்ததன் நோக்கம்

 

நம்மைத் திட்டுபவர்கள்… சாபம் இடுபவர்கள்… இவர்களை எல்லாம் ஓட்டுக் கேட்டுக் கொண்டே இருப்போம். அதற்காக வேண்டித் தான் கருப்பணசாமியை வைத்து மோப்ப நாயையும் பக்கத்தில் காட்டி இருப்பார்கள்.

ஏனென்றால்
1.ஒட்டுக் கேட்டவுடன் நம் நல்ல புத்தியெல்லாம் இருண்டு விடுகிறது.
2.இருண்டு போன பின் நாம் எப்படித் தவறு செய்கின்றோமோ அதே போன்று
3.அந்த உணர்வுகள் நமக்குள் இருக்கும் நல்ல உணர்வுகளைக் கொன்று புசிக்கத் தொடங்கி விடுகிறது.
4.நீ நுகர்ந்து பார்த்த உணர்வுகள்… உன் நல்ல குணங்களை இப்படிக் கொன்று விடுகின்றது…! என்பதைத் தான்
5.சிலையை வைத்து மோப்ப நாயையும் அருகே வைத்து ஞானிகள் காண்பிக்கின்றார்கள்.

ஆனால் இன்று வழக்கத்தில் நாம் என்ன செய்கிறோம்…?

கருப்பண்ணசாமிக்கு ஆட்டை வெட்டி அவனுக்குப் படையல் செய்தால் தன்னைக் காப்பான்… அது காவல் தெய்வம்… என்று சொல்லி அதற்குப் பலியிட்டு அதை வணங்கிக் கொண்டிருக்கின்றோம்.

அந்த ஆவேச உணர்வு கொண்டு என்ன செய்கின்றோம்…? அங்கே ஆட்டைப் பலி கொடுத்தேன் என்ற நிலையில் நாம் செய்த அந்த உணர்வுகள் இங்கே வந்து பிறரை இரக்கம் இல்லாதபடி துன்பப்படுத்தச் செய்யும்.

உதாரணமாக… கொலை செய்பவனைப் பார்த்தோம் என்றால் அவன் அரக்கத்தனமாகத் தான் போவான். அவனுக்கு எந்த நோயும் வராது. ஆனால் பல கொலைகளைச் செய்வான்… தெம்பாக இருப்பான்.

யாரையும் பற்றி அவன் அஞ்சுவதில்லை… அவனுக்குக் கொலை செய்வது தான் வேலை.

இதைப் போன்ற உணர்வின் தன்மை வரும் பொழுது அவன் எப்படி அந்த வலுப்பெற்றானோ இதைப் போல நமக்குள் இந்த அரக்க உணர்வுகள்… பலியிட்ட உணர்வுகள்… அதிகமாகி விடுகின்றது.

இறந்த பிற்பாடு என்ன செய்வேன்…?
1.நாம் பலியிட்டுக் கும்பிட்டது போன்று அடுத்தவர்கள் கருப்பணசாமிக்குப் பலியிட்டுக் கும்பிடுகிறார்கள் என்றால்
2.அந்த உடலுக்குள் புகுந்து… ஆவியாகப் போய்ச் சேர்ந்து விடுவேன்.

ஆனால் அவர்கள் ஆட்டைப் பலி கொடுக்கவில்லை என்றால் “எங்கடா ஆட்டைக் காணோம்…? ஏண்டா பலி கொடுக்கவில்லை…? பார்… உன் குடும்பத்தையே தொலைத்து விடுகின்றேன்…! எனக்கு ஆடு இப்பொழுதே வேண்டும்…! என்று சொல்லி இந்த உடலுக்குள் வந்த ஆவி அவனையும் ஆடச் சொல்லி ஆடைக் கேட்கும்.

இப்படித்தான் மனித உடலில் விளைய வைத்த உணர்வுகள் இயங்கிக் கொண்டிருக்கின்றது.

இருளை போக்க நாம் பிறரின் வேதனைகளை கேட்டறிந்தோம். ஆனால் அது நம் நல்ல குணங்களை இருளச் செய்து நம்மை அறியாமலே தவறு செய்ய வைக்கின்றது. அசுர செயல்களைச் செய்ய வைக்கின்றது.

அதே உணர்வு நம் நல்ல குணத்தை எப்படித் தாக்குகிறது என்பதைத் தான் இவ்வாறு சித்தரித்துக் காட்டினார்கள் ஞானிகள்.

அதற்கு மாறாக நாம் செய்யும் பொழுது மனித உடலில் எதை விளைய வைத்தோமோ அதனின் செயலாகத்தான் அடுத்து இருண்ட நிலையாக அந்தத் தெய்வமாக உருவாக்கி விடும்… அதே பலியைத் தான் இது கேட்கும்.

கருப்பணசாமி என்ற நிலைகளில் “அருளாடி” சொல்லும் பொழுது பேயை அங்கே ஓட்டலாம் என்று சொல்வார்கள். பேய் பிடித்தவர்களின் குடுமியைப் பிடித்து ஆட்டி… இரண்டு உதையைக் கொடுக்கும்.

ஒரு மாதத்திலிருந்து மூன்று மாதத்திற்கு அந்த ஆட்டம் குறைந்திருக்கும்.

அடுத்து பார்த்தோம் என்றால் அங்கே சென்று என்னை நீ அடக்கினாயா…? உன்னை நான் என்ன செய்கிறேன்…? என்று மீண்டும் ஆடத் தொடங்கும்.

1.இது தான் நாம் கண்ட பலனே தவிர
2.ஞானிகள் காட்டிய தீமைகள் இந்த விடுபடும் அருள் வழிகளை நாம் கடைப்பிடிக்கவில்லை

இதை எல்லாம் அறிந்து கொள்வதே மிகவும் நல்லது.

பூமியின் இயற்கையையே பாழ்படுத்திவிட்டான் இன்றையக் கலி மனிதன்

பூமியின் இயற்கையையே பாழ்படுத்திவிட்டான் இன்றையக் கலி மனிதன்

 

நம் பூமியின் ஈர்ப்பிற்கு சக்தி தரும் காந்த மின் அலையின் வளர்ச்சிக்கு ஊற்றாக அமையப் பெற்றது தான்
1.உலகின் மூன்று இடங்களில் உள்ள “காந்த மின் கிணறுகள்…!”
2.கடலுக்கடியில் ஒன்று.. பாலைவனத்தில் ஒன்று… மலைப் பகுதியில் ஒன்று…!
3.இக்காந்த மின் கிணறுகளின் ஈர்ப்பு அதிகப்பட்டுப் பட்டு வளர்ச்சிப்படுமேயானால்
4.நம் பூமிக்கு… பூமியின் ஈர்ப்பு சக்தி அதிகப்படும்.
5.அதனால் அதிகப்படியான ஜீவ இன வளர்ச்சிக்குகந்த சத்து அமில நிலையைத் தர வல்ல தாவரங்களின் இயற்கை வளம் பெருகியிருக்கும்.

நம் பூமியைக் காட்டிலும் வியாழனும் சூரியனும் வளர்ந்துள்ளது. அவைகள் நம் பூமியை விட அதிக ஈர்ப்புக் குணமுடையதாக வளர்ந்து மற்ற எல்லா மண்டலங்களுக்கும் அதன் சக்திக் குணத்தைத் தருகின்றது.

1.அந்த வியாழனைப் போன்று வளர்ந்து பெருக்கும் நிலை நம் பூமிக்கு இப்பொழுது குறைவுபட்டுள்ளது.
2.நம் பூமியும் கன விகிதத்தில் வளர்ந்து தான் வருகிறதேயன்றி
3.தன் ஈர்ப்பின் சக்தியை வளர்க்க முடியாத நிலை ஆகிவிட்டது.

காரணம் இன்றைய கலி மனிதன் தன் விஞ்ஞான செயற்கை மின் அலையைக் காண சூரியனின் சக்தி அலையை
1.நம் பூமி ஈர்க்கும்… பூமியின் இயற்கை வளர்ச்சியைத் தடைப்படுத்தி
2.அதைச் செயற்கை மின்சாரமாகக் கண்டு எடுத்து விட்டான்,

பூமியின் ஈர்ப்புக் காந்த சக்திக்குக் கிடைக்க வேண்டிய ஆகார நிலையை… அது எடுத்து… உண்டு… வளர்ந்து… பலன் காணும் முன்… இன்றைய கலி அறிவு மனிதனால் துரித நிலையில் மின்சாரம் கண்டு பூமியின் வளர்ச்சிக்கும் வருங்கால உயிரினங்களின் வளர்ச்சி நிலைக்கு மாற்றம் தரவல்லவனாகி விட்டான் “இன்றையக் கலி மனிதன்…!”

இக்கலி மனிதனால்… “அவன் அறிவாற்றல்” என்ற மேம்பாட்டில் கண்ட “செயற்கையினால்…!” பல கோடி உயிரணுக்களின் சக்திக் கலவையாகக் கலந்து வாழ்ந்து… தான் வாழ்வதோடு மட்டுமல்லாமல்
1.வளர்ந்து கொண்டே சுழன்றோடும் இந்தப் பூமியின் நிலையைத் தன் செயலுக்காக
2.மின் அலையைப் பாழ்படுத்தியதனால் பூமியின் இயற்கையையே பாழ்படுத்திவிட்டான்.

இதனின் நிலையை மாற்றி நம் பூமி வளரத்தான்… இக்கலி மாறி கல்கியாக வருவதற்குத்தான் பல கோடிச் சித்தர்களும் சப்தரிஷிகளும் செயல் கொள்கின்றனர்.

இக்கலி மாறும் தருணத்திற்குள் இந்தப் பூமியின் அமிலக் குணத்துடன் ஒன்றி வாழ்ந்த மனித இனக் குண சக்தி இருந்தால் தான் மீண்டும் மீண்டும் மண்டல சக்திகளும்… எந்த ஒரு புதிய படைப்பு நிலையும் வளர்க்க முடியும்.

எண்ண சக்தியின் வளர்ச்சி நிலை கொண்ட அமில… குண ஜீவன்.. மனிதனிலிருந்து தான் இந்நிலை வளர முடியும் என்ற உண்மையில் தான் சப்தரிஷிகளும் அவர்களின் ஆசி பெற்ற சித்தர்களும் செயல்படுகின்றனரப்பா…!

கூரை அமைக்கத் தூணோ சுவரோ தேவை, அது போல் இம்மனித ஆத்மாக்களின் எண்ண வளர்ச்சியின் மேம்பாட்டில் தான் மண்டல வளர்ச்சி உண்டு… மற்றெல்லா வளர்ச்சியும் உண்டு.

இதன் நிலையை உணர்ந்து ஒவ்வொரு மனித ஆத்மாவும் இஜ்ஜீவ உடல் பிம்ப நிலையிலிருந்து தன் உயிரணுவான காந்த உயிர் சக்தியை நல்ல நிலையில் எடுக்கும் எண்ணம் கொண்டு இந்த உடலில் உள்ள அனைத்து உயிரணுக்களையும் வீரிய சக்தி பெறும் வழித் தொடர்படுத்திடல் வேண்டும்.

தான் எடுக்கும் ஜெப நிலையால் தன் உடலில் உள்ள அனைத்து உயிரணுக்களும் ஒளி பெற்று தானாக ஓர் உயிரணு ஆத்மாவுடன் பல கோடி அணுக்களும் ஒன்றுபட்டுச் செயல்படுமானால்
1.அதன் சக்தி ஜெபத்தினால் எடுக்கும் நுண் அலையின் தொடர்பைக் கொண்டு
2.பலவாகப் படர்ந்துள்ள சப்தரிஷிகளின் ஒளி அலையைப் பெற்று
3.அவர்களின் தொடர்பின் மூலம் பல செயல்களை இந்த உயிராத்மாவினால் வளர்க்க முடியும்.

ஏனென்றால் வாழ்க்கையின் பொருள் என்பது வாழும் காலங்களில் பிறர் போற்றித் துதித்து… “மடிந்த பிறகு…. புகழாஞ்சலி பெறுவதல்ல…!”

இம்மனிதப் பிம்ப வாழ்க்கையில் எடுக்கும் ஒளி அலையின் நிலையின் வளர்ச்சி தான் எல்லாவித இயற்கைக் குண வளர்ச்சி மண்டலங்களின் சக்தியும் என்பதனை உணர்ந்து கொள்ளுங்கள்.

இப்பொழுது வாழும் குறுகிய கால வாழ்க்கையில்
1.இந்தச் சந்தர்ப்பத்தைக் குறுகிய நிலைப் புகழுடன் மங்க விடாமல்
2.பேரண்டப் பெரு நிலை என்ற உயர்ந்த அண்டமாகும் சக்தி நிலையைப் பெறும் தகுதிக்குத் தான்
3.யாம் இங்கே தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கும் பாட நிலையின் உண்மை நிலை.

தஞ்சாவூர் பிரஹதீஸ்வரர் கோவில்

தஞ்சாவூர் பிரஹதீஸ்வரர் கோவில்

 

ஆவியின் தொடர்புடன் தான் பல அணுக்களின் உந்தலினால் நாம் வாழ்க்கை வாழ்ந்து கொண்டுள்ளோம் என்றேன். தாஜ்மஹாலின் நிலையை விளக்கினேன்.

இங்கு பல கோயில்களின் நிலையும் அது போல் தான். தஞ்சாவூர் பிரஹதீஸ்வரர் கோவில் நிலையென்ன…?

அங்கு ஆண்ட இராஜராஜ சோழனின் எண்ணமேதான் அக்கோயில். எவ்வெண்ணம் வைத்து அவ்வரசன் அக்கோயிலை ஸ்தாபிதம் செய்தாரோ… அதே எண்ணம் கொண்டே அவ்வரசர் உடலை விட்டு அவ்வாத்மா பிரிந்த பிறகும் அந்த நிலையிலேயே அவ்வாத்மா அங்குள்ளது.

இன்றும் மறு ஜென்மம் எடுத்திடாமல் சூட்சும நிலைக்கும் சென்றிடாமல் ஆசையின் நிலையிலேயே அவ்வாத்மா அங்கே சுற்றிக் கொண்டுள்ளது. இதைப் போல் தான் பல கோயில்களின் நிலையும்.

அன்று வாழ்ந்தவர்களின் மன நிலையைப் பொறுத்தே கோயில்களை எழுப்பினார்கள். இங்கு வாழும் மக்களின் எண்ணமும் இங்கு வாழ்ந்தவர்களின் எண்ணத்தின் தொடர்புடன்தான் உள்ளன.

ஒவ்வோர் இடத்திலும் வாழ்ந்தவர்களின் எண்ணம் எந்தெந்த நிலையில் உடலை விட்டுப் பிரிந்து சென்றனவோ அதே நிலையில் தான் அவர்கள் வாழ்ந்த பூமியில் வாழ்பவரின் எண்ணமும் தன் எண்ணத்திற்கு உகந்ததைச் செயல்படுத்த அவ்வெண்ணத்திற்கு உகந்தவர்களின் உடலில் அவ்வாத்மா சென்று தன் எண்ணத்தைச் செயல்படுத்துகிறது.

1.ஒவ்வொரு மனிதனின் நிலையும் இந்த நிலையா…?
2.பிற ஆவிகளின் தொடர்பில்லாமல் யாருமில்லையா…?
3.இங்கு மட்டும்தான் இந்நிலையா…?
4.இவ்வுலகின் மற்ற பாகங்களில் உள்ளவர்களின் நிலையெல்லாம் எந்நிலை…?

இப்படிப் பல வினாக்கள் எழுந்திடலாம் இதைப் படிப்பவர்கள் ஒவ்வொருவருக்குமே.

மன நிலையில் நமக்குள்ள அதி பேராசையும் அதி கோபம் துவேஷம் இந்நிலையை நாம் வளரவிடும் பொழுது பல ஆவிகள் நம்மைத் தாக்கும் நிலைக்கு ஆளாகித்தான் ஒவ்வொருவருமே வாழ்கின்றோம்.

முன் ஜென்மத்தில் நமக்கிருந்த எண்ணத்திற்கும் இஜ்ஜென்மத்தில் வாழும் முறைக்கும் தொடர்புள்ளதினால் ஒரே குடும்பத்தில் வாழ்ந்திடுபவர்களுக்கும் எண்ண நிலை மாறுபடுகிறது. நம் எண்ணத்திற்கு உகந்த அணுக்களின் தன்மையும் நமக்குள் குடிபுகுகின்றது.

1.விதையொன்று போட்டுச் செடி ஒன்று முளைவதல்ல.
2.எண்ணத்திற்கு உகந்த ஆவிகளின் தொடர்பு ஒவ்வோர் உடம்பிலும் உள்ளன.

இந்நிலையிலிருந்து நாம் விடுபட நம் நிலையில் அத்தெய்வ பக்தி என்ற ரூபப்படுத்தி நம் முன்னோர்களென்பது சூட்சும நிலையில் வாழ்ந்திடும் ஆண்டவன் ரூபத்திலுள்ள அரும்பெரும் ஜோதிகள் வழிகாட்டியபடி அஹிம்சையையும் அன்பையும் ஏற்றே பேராசையையும் பெரும் கோபத்தையும் நம்மை அண்டவிடாமல் வாழ்வதுவே நல் வாழ்க்கை.

அவ்வழியினைப் பிடித்து நம்மைச் சுற்றியுள்ள பல ஆவிகளின் ஏவலுக்கு நாம் ஆளாகாமல் இந்நிலையை அறிந்து வாழ்வதுதான் உத்தமம்.

1.ஜோதிடம் கண்டு வாழ்வதுவும் ஆவியின் தொடர்புடன்தான்
2.மை போட்டுக் கேட்பதுவும் ஆவியின் தொடர்புடன்தான்
3.பூ கட்டிக் கேட்பதுவும் கோயில்களில் அருள் வந்து ஆடுபவர்களைக் கேட்பதுவும் ஆவியின் தொடர்புடன்தான்.

வழிவழியாய் வந்தவர்கள் எண்ணத்தில் இருந்து வந்ததுவே ஆண்டவனின் ரூபத்தில் நாமத்தைச் சொல்லித் தன் எண்ணத்தைச் செயல்படுத்த இவ்வாவிகளெல்லாம் வந்து ஆடுவது தான் இன்று நாம் காணும் நிலையெல்லாம்.

இன்று நாம் வாழும் இந்நாட்டில் ஆண்டவனின் ரூபத்தில் ஆவியின் தொடர்பாட்டத்தைக் காண்கின்றோம். இவ்வுலகில் ஒவ்வொரு பாகத்திலும் ஆங்காங்கு வாழ்ந்த மக்களின் எண்ணம் ஒவ்வொரு ரூபத்தில் அவர்கள் ஆவி உலகிற்குச் சென்ற பிறகும் இப்பொழுது வாழ்ந்திடும் மக்களின் ரூபத்தில் வந்தே தான் செயல்படுத்துகிறார்கள்.

ஆவியின் தொடர்பில்லாமல் எத்தேசத்திலும் எந்நிலையும் நடக்கவில்லை…!

விஞ்ஞானியாய் விஞ்ஞானம் பல கண்டு வாழ்பவனுக்கும் அவன் வழியில் இருந்த ஆவியின் தொடர்பினால் தான் இவன் விஞ்ஞானமும் வளர்கிறது. ஒவ்வொரு பாகத்திலும் இவ்வாவியின் தொடர்பு கொண்டுதான் வாழ்கின்றார்கள் மக்கள் எல்லோருமே.

1.தன் நிலை உணர்ந்து வாழ்பவர்கள்தான் சூட்சும உலகிற்குச் செல்கிறார்களே தவிர
2.ஆவியின் தொடர் கொண்டு வாழும் ஒவ்வொருவரும் அடுத்தடுத்தே பல பிறவியை எடுக்கின்றார்கள்.

பல பிறவியில் மனிதராகவே பிறவி எடுத்தாலும் நன்றே…! ஆனால் மனிதப் பிறவி மாறுபட்டு மிருகமாகி மிருகத்திற்கும் கீழ்நிலைக்குச் சென்று புழுவாகி விமோசனமே இல்லாமல் இத்தெய்வமான மனித வாழ்க்கையை ஏன் சிதற விட்டு அழுகும் அணுக்களாக அல்லல்பட்டுச் சுற்றிக் கொண்டே இருக்க வேண்டும்…?

மனித ஜென்மத்திலிருந்து மாறுபட்டு மிருக ஜென்மத்திற்கு வந்தாலே மனித ஜென்மத்தில் நடந்தவை எல்லாமே மிருக ஜென்மத்தில் தெரிந்திடும்.

நடந்தவைகள நினைத்தே மிருகமாகி ஒவ்வொரு ஜென்மத்திலும் விட்ட குறையெல்லாம் தெரிந்தே ஏன் அல்லல்பட்டு வாழ வேண்டும்…?

1.இவ்வுடல் என்னும் மாய ரூபம் தான் மாறுபடுகிறது
2.நம் எண்ணம் என்றுமே அழிவதில்லை
3.நம் ஆத்மாவுடனேதான் நம் எண்ணமும் சுற்றிக் கொண்டுள்ளது.

இந்நிலையில் நாம் இருப்பதனை உணர்ந்து ஒவ்வொருவரும் தெளிந்து தெரிந்து வாழ்ந்திட வேண்டும்.

தாஜ்மகால்

தாஜ்மகால்

 

மக்களின் வாழ்க்கையில்… ஆவியின் தொடர்பு கொண்ட நிலையில் தான் பலரின் நிலை உள்ளது.

1.மனிதர்களின் எண்ணம் நல்வழியில் சென்று… தெய்வ பக்தி கொண்டு அவர்கள் செல்லும் வழிக்கெல்லாம் தெய்வமாக அருள் புரிகின்றார்கள்…
2.நாம் இப்பொழுது போற்றி வணங்கிடும் சப்தரிஷிகளும் ஞானிகளும் சித்தர்களும்.

நல்வழியை மாற்றி நாம் நம் மனதை அடிமைப்படுத்தி வாழும் வாழ்க்கைக்குச் சென்றால்.. அதைப் போன்றே ஆசை கொண்டு சென்ற பல ஆவிகளின் தொடர்புகளை நம்முள்ளேயே நமக்குத் தெரியாமலேயே ஈர்த்துவிடுகிறோம்.

அப்போது… “அந்த ஆவிகளின் ஏவலுக்குகந்தவனாக நம்மை நாம் அடிமைப்படுத்தி வாழ்கின்றோம்…” என்பதனை உணர்ந்து வாழ்வதற்காகத்தான் இதை உணர்த்தி வருகின்றேன்.

காலம் காலமாக இவ்வாவிகளின் நிலை செயல்பட்டுக் கொண்டேயுள்ளது.

நல்ல நிலையில் உடலை விட்டுப் பிரிந்த ஆவிகள் சூட்சும நிலையிலிருந்து கொண்டே
1.தான் வாழ்ந்த குடும்பத்திற்குத் தன் அங்கத்தின் அங்கமாகத் தான் பெற்று வளர்த்த மக்களின் நன்மைக்காக
2.தெய்வமாக இருந்து பல நல் சக்திகளைத் தான் வாழ்ந்த குடும்பத்திற்குப் பாய்ச்சி
3.தன் இரத்த தொடர்புடைய பிள்ளைகள் வாழும் காலம் வரை அந்தக் குடும்பத்திற்குத் தான் விட்டுச் சென்ற சில குறைகளைப் பூர்த்தி செய்திட
4.பல உதவிகளை அக்குடும்பத்தில் உள்ளோர் அறியாமலேயே அது செயல்படுத்தி வருகின்றது.

அந்தக் குடும்பத்திலேயே தன் எண்ணத்தைச் சுழல விட்டு அந்த ஆவியின் நிலை இருக்கின்றது. அந்நிலையின் தன்மை பூர்த்தி பெற்ற பிறகு தான் தன் நிலைக்கு உகந்த உடல் கிடைத்த பிறகு மறு ஜென்மம் பெற்று அடுத்த வாழ்க்கைக்கே வருகின்றது.

ஆனால்… குரோதத்திலும் பேராசையிலும் தான் வாழ்ந்த நாளில் பல தீய பழக்கங்களுக்குத் தன்னை அடிமைப்படுத்தி வாழ்ந்த ஆவிகள் எல்லாம் ஆவி நிலைக்குச் சென்ற பிறகும் எந்த நிலையில் அந்த ஆவி பிரிந்ததோ அதே குரோத நிலையில் தான் சுழல்கிறது.

அந்த ஆவி குரோதத்தை எந்த நிலையில் விட்டுச் சென்றதோ… அதைக் குரோதம் கொண்டவர்கள் மூலமாகச் செயல்படுத்துகின்றது. அதாவது… வும் நல்ல நிலையில் இருந்த ஆவி எப்படியெல்லாம் தன் நிலையைச் செயல்படுத்துகிறதோ அதே போல்தான் இந்தத் துர் ஆவிகளும் வந்து செயல்படுத்துகின்றன.

இத்துர் ஆவிகளின் அத்தகைய சுவாச நிலையினால் தான் மனிதன் மிருகமாகும்… அதாவது மிருக இனத்திற்குச் சென்று வாழும் நிலைக்கு ஆளாகின்றான்.

ஆகவே… வாழ்ந்த நாளில் நாம் எடுக்கும் வாழ்க்கை முறை கொண்டு தான் மறு ஜென்மம் நமக்கு அமைவதே…!

இன்று மனிதர்களுக்கு உள்ள எண்ணமும் செயல் திறமை அறிவு அனைத்துமே மிருக ஜெந்துக்களுக்கும் பறவைகளுக்கும் உண்டு.
1.மனிதனைக் காட்டிலும் பறவைகள் மிருகங்கள் இவைகளுக்குத் தன் போன சரீரத்தின் நிலை எல்லாம் தெரிந்திடும்
2.நாய்க்கு அனைத்து நிலைகளையும் தெரிந்துவிடும்,

ஆனால் அவைகளுக்குச் சொல்லாற்றலும் நம்மை ஒத்து செயல்படுத்த அங்கங்களும் இல்லாததினால்… “தான் விட்டுச் சென்ற குறையை எண்ணியே மிருகமாக வாழ்கின்றன…”

ஆனால் அந்த மிருகத்தைத் தன் நிலைக்கு அரும்பெரும் சுவையாக்கிச் சமைத்து உண்ணுகின்றான் ஈன்றைய மனிதன். இவன் உண்ணும் நிலையும் ஆவியாகி அந்த மிருகத்துக்கும் தெரிகின்றது.

மிருக உணவையும் பறவைகளின் உணவையும் நாம் புசிப்பதினால்
1.அவற்றின் உடல்களில் எந்தெந்த அணுக்களின் தாக்குதல்கள் இருந்தனவோ
2.அவற்றையெல்லாம் நம்முள்ளும் நாம் ஏற்றிக் கொள்கின்றோம்.

இப்படியெல்லாம் பல நிலை கொண்ட ஆவித் தன்மைகள் இந்த உலகில் உள்ள பொழுது
1.அந்த ஆவி அணுக்களுக்கு நம்மை நாம் அடிமைப்படுத்திடாமல்
2.வரும் தடங்கல்களை எல்லாம் நாம் போக்கிக் கொண்டு
3.நம்முள் உள்ள சிறு சிறு மனச் சஞ்சலங்களையும் நம்மையே சுற்றிக் கொண்டில்லாமல் அதைப் புனிதப்படுத்தி வாழ்ந்திட வேண்டும்.

இன்று தாஜ்மஹால் என்ற நிலையில் உள்ள மும்தாஜ் எனும் ஆவியின் நிலை என்ன…?

அந்த ஆவி இன்னும் அந்த தாஜ்மஹாலிலேயே அந்த நிலையிலேயே சுற்றிக் கொண்டுள்ளது.

எந்த எண்ணத்தைப் பூர்த்தி பெறாமல் விட்டுச் சென்றதோ அதே நிலையில் தான் இன்னும் உள்ளது அந்த இரண்டு ஆவிகளுமே…! ஷாஜஹான் என்னும் ஆவியும் மும்தாஜின் ஆவியும்.
1.அவ்வாவிகளுக்கு அதற்கு மேல் நிலைக்குச் செல்லும் நிலைக்கும் ஆசைப்படவில்லை
2.மறு ஜென்மத்திற்கும் வரவில்லை… சூட்சும நிலைக்குச் செல்வதற்கும் முடியவில்லை.

ஆனால் அந்த இரண்டு ஆவிகளுமே ஆனந்த நிலையில் தான் இன்றும் அந்நிலையில் உள்ளன. அவையின் நிலை என்றுமே அந்நிலையில் தான் இருந்திடும்… ஆனந்த நிலையில் அன்புடனே வாழ்ந்து வருகின்றன. அந்த மாளிகையில்…!

வாழ்ந்த நாளில் இரண்டும் இணைந்து வாழாத நிலையில் ஆவி நிலையில் இணைந்த காவியக் காதலராக இன்றும் வாழ்கின்றார்கள் அந்த இரண்டு ஆவிகளுமே.

இந்நிலை போல் ஆவி உலகில் பல நிலைகள் உள்ளன.

“இன்று சொல்லும்” பக்தி நெறியில் வளர்ந்ததல்ல… சப்தரிஷிகளின் வளர்ச்சி நிலை

“இன்று சொல்லும்” பக்தி நெறியில் வளர்ந்ததல்ல… சப்தரிஷிகளின் வளர்ச்சி நிலை

 

இந்த மனிதப் பிறப்பை எடுக்கவே நம் வாழ்க்கையில் காணும் முறைப்படி கர்ப்பத்தில் பத்து மாதம் இருந்து பிறப்பெடுத்து வாழ்ந்து மடிந்து மீண்டும் இதே நிலை என்ற உணர்வுகளும் இது நாள் தொட்டு மனித ஆத்மாவின் உயிர்ப் பிறப்பின் வளர்ச்சி நிலையின் தத்துவ நிலைகளும் உண்மையை உணர்த்தி மனிதனுக்கு நல் வழி காட்டவில்லை.

தாவர வர்க்கமாகி அத்தாவர குண ஈர்ப்பில் வளர்ந்த நிலையில் வளர்ந்த நிலை என்பது…
1.தாவரங்களிலேயே எண்ணிலடங்கா பல கோடி இன வளர்ச்சியுண்டு.
2.ஒன்றிலிருந்து மாறுபட்டு மாறுபட்டு மீண்டும் அந்தத் தாவர இனமே மற்றொன்றாகின்றது… வளர்ந்து கொண்டேயுள்ளது.

இந்தத் தாவரங்களில் பல அபூர்வ உன்னத அமிலக் குணத்தின் ஈர்ப்பில் அது வளர்ந்து வாழ்ந்து அது மடிந்த பிறகு மீண்டும் இம்மண்ணில் அத்தாவர இனத்துடன் இம்மண்ணின் ஈர்ப்புக் குணமும் சேர்ந்து மற்றொரு குணமும் பெறுகின்றது.

இது மடிந்த நிலையில் இதிலிருந்து வெளியாகும் ஆவி அமிலம் தன் இனத்துடன் இனமாகச் சேரும் பொழுது… ஒன்றின் மேல் ஒன்று பட்டு கன நிலை ஏற்பட்ட பிறகு… பூமியின் ஈர்ப்பில் அதற்கு மேல் கனத் தன்மை கொண்ட தன் இன உலோகமுடன் அது கலந்து விடுகின்றது.

இப்படியே பூமியின் காந்த ஈர்ப்பின் ஆவி நிலையான இவ்வெட்கையின் வளர்ச்சி தாவர நிலையிலிருந்து பிரிந்த அமில குணத்தில் சக்தி கொண்ட வலுவாக மனித வர்க்கங்கள் ஆரம்பக் கதியில் தோன்றியது.

அப்படித் தோன்றியிருந்தாலும்… இன்றைய மனிதன் ஒன்றிலிருந்து ஒன்றாக மனிதனிலிருந்து மனிதன் பிறக்கும் இன்றைய உலகில்…
1.தாவரங்களை எப்படி நாமாகப் பயிர் செய்து
2.அதன் மகசூலிலிருந்து மீண்டும் மீண்டும் அதன் மகசூலை எடுக்கின்றோமோ
3.அதன் நிலை போன்ற வழி நிலையில் மனிதக் கருக்கள் தோன்றி வந்தன. (மக்கள் தொகைப் பெருக்கம்)

இன்றைய நாளில் நாம் பயிர் செய்யும் நிலங்களில் பல காலங்களுக்கு ஒரே இனப் பயிரைப் பயிர் செய்யும் பொழுது அந்தப் பூமியின் ஈர்ப்பில் உள்ள சக்தி குறைந்து அந்த நிலத்தின் பலன் நிலை குறைவுபடுகிறது அல்லவா…!

அதைப் போன்று ஆரம்பக் கதியில் உயர்ந்த உயிரணுவாகப் பல சக்தி அமிலத்தைக் கூட்டிக் கூட்டி மனிதனாகிப் பிறப்பு மாறி மாறி… அவன் எடுக்கக்கூடிய எண்ணத்தின் ஈர்ப்பின் நிலையினால்
1.மனித அமில குணமுள்ள நாள் வரை மனிதக் கருவில் உதித்து வாழ்ந்து மனிதனாக உள்ள நிலையில்
2.மிருகக் குணத்தில் வாழும் மனிதன் நிச்சயம் அடுத்த பிறப்பில் மிருகமாகின்றான்.

மிருகமாகி… அதன் சுழற்சி வட்டத்தில் ஓடி மீண்டும் மிகவும் ஈன நிலையான புழு பூச்சியாகி… அந்த இனத்தின் சுவாச நிலையில் மீண்டும் பல கோடி ஆண்டுகளுக்குப் பிறகுதான் மனிதனாக வரக்கூடிய தன்மை ஒரு சாரருக்கும் மிருக நிலையிலிருந்து அதன் சுவாச குணத்தில் மனிதனாகும் சில அபூர்வ சக்திகளின் மனிதனாகும் வழித் தொடரும் சிலருக்கு உண்டு.

இதற்கெல்லாம் அப்பாற்பட்ட சக்தியான புதிய உயிரணுவே… அத்தாயின் கருவிற்குத் தோன்றக்கூடிய வாய்ப்பு நிலையும் பல உயிராத்மாக்களுக்கு வந்து வாய்க்கின்றன. இந்த நிலையைப் பெறுவது என்பது பல கோடியில் ஒன்றாகத் தான் இருக்குமே அன்றி எல்லா உயிரணுக்களும் அப்படி வளர்வதில்லை.

மனிதனாக உள்ள காலங்களில் ஒவ்வொரு சாராரும் ஒவ்வொரு ஊர்… நாடு… தேசம்… என்ற நிலையிலும் அங்குள்ள மனிதர்களின் எண்ண வளர்ச்சியிலும் உடல் உருவம் அனைத்திலுமே அங்குள்ள பூமியின் ஈர்ப்பின் சுவாசத்தினால் மாறு கொள்கின்றனர்.

1.ஒரு சாரார் பிறந்து வளர்ந்து தன் ஜீவித வாழ்நாள் எல்லாம் கிடைக்கப் பெற்று அதே சுழற்சியில் மடிகின்றனர்.
2.இன்னும் சில சாரார் தன் ஜீவிதத்துடன் அறிவாற்றலின் வளர்ச்சி மேம்பாட்டில் பலவற்றை அறிய எண்ணி வாழ்கின்றனர்.
3.இன்னும் சில சாரார் தன் சக்தியின் அறிவைக் கொண்டு புதிய ஆற்றல் படைப்புகளை ஆராய்ந்து செயலாக்கிக் காட்டுகின்றனர்.

இப்படி மனித ஆத்மாக்களின் எண்ணமே அதன் எடுக்கும் வளர்ச்சியில் மேன்மை கொண்டு அந்த மேன்மையின் சக்தியை ஈர்க்கும் பக்குவத்தில் செலுத்தினால் தான் அது வளர்ச்சியின் பாதையாகின்றது,

ஏனென்றால்
1.மனிதனின் உடலிலுள்ள உயர் காந்த அலையின் சக்தியான ஜீவ உயிர் உள்ளதினால்
2.நாம் எந்தச் சக்தியை ஈர்த்து எடுக்கின்றோமோ அதன் பலனை நம் உயிராத்மா ஈர்க்கக்கூடிய நிலை உண்டு.
3.ஆக.. காந்த மின் அலை கொண்ட உடலப்பா மனிதனின் ஜீவ உடல்.

விஞ்ஞானத்திற்குச் செயலாக்கக் காந்த மின் அலையுடன் உலோகங்களின் சக்தி அமிலத்தைப் பூசி அதிலிருந்து சூரியனின் ஒளி அலைகளில் வரும் மின் அலைகளைத் தன் ஆராய்ச்சிக்குகந்த நிலைக்கும் தான் செயலாக்கும் விஞ்ஞானக் கருவிகளின் நுட்ப வேலைகளுக்கும் எடுத்துக் கொள்கின்றனர்.

இன்றைய விஞ்ஞான மனிதன்…
1.சூரியனின் ஒளி அலையில் உள்ள சக்தி அலைகளைப் பிரித்தெடுத்து
2.அதன் தொடர் அலையிலிருந்து தான் பல விஞ்ஞானச் சாதனைகளைப் புரிகின்றான்.
3.இதை யாரும் மறுக்க முடியாது…!

அதே மின் அலையுடன் காந்த சக்தியின் ஈர்ப்பின் ஜீவ உயிராத்மாவான உடலைக் கொண்ட நாம்… நம் எண்ண அலையை எதெனெதன் பால் செலுத்தி அதீத ஈர்ப்பின் எண்ணத்தை நம் உயிராத்மா ஈர்க்கும் வழித் தொடர் பெற்றால் விஞ்ஞான சாதனையில் கண்டு மகிழும் அனைத்துச் சக்தியும் நம் உயிராத்மாவினால் காண முடியும். அந்தச் சக்தி நம் உயிருக்கு உண்டு.

இதன் வழித் தொடரில் தான் சித்து நிலையும்… சப்தரிஷியின் நிலையும் எற்பட்டதேயன்றி இன்றையக் காலத்தில் பிரித்து இருக்கும் பக்தி முறையின் நெறிப்பாட்டில் இல்லை.

1.மனிதனையும் தெய்வத்தையும் வேறுபடுத்திக் காட்டி
2.மனிதனின் எண்ணத்தையே குன்றச் செய்துவிட்டனர்…
3.தெய்வத்தின் பக்தி பூண்ட “அருள் நெறித் தொண்டர்கள் என்பவர்கள்…!”

இன்று நாம் சிந்தனை குலைந்து (TENSION… STRESS…) உணர்ச்சிவசப்படுவதற்கு முக்கிய காரணம்

இன்று நாம் சிந்தனை குலைந்து (TENSION… STRESS…) உணர்ச்சிவசப்படுவதற்கு முக்கிய காரணம்

 

உதாரணமாக மிளகாய் காரமாக இருக்கின்றது. அந்தக் காரமான மிளகாயிலும் புழு உருவாகிறது.

அதைக் காட்டிலும் கடுமையான பூச்சி மருந்துகளை அடித்து அந்தப் புழுவைக் கொல்லும் பொழுது புழு சாகின்றது.
1.புழுவைக் கொன்ற அந்த விஷம் ஆவியாக மாறுகின்றது.
2.அந்த மிளகாய்ச் செடியில் புழுவைத் தாக்கிய இந்த விஷம் ஊடுருவுகின்றது.

அந்த மிளகாய்ச் செடியில் விளைந்த மிளகாயை நாம் உணவுப் பதார்த்தங்களில் சேர்த்தால் விஷத்தன்மை கொண்ட அணுக்கள் உருவாகி நமக்குள் “நோயாகவும்…” மாறுகின்றது.

மனிதன் விஞ்ஞானத்தால் பல விஷப் பூச்சிகளைக் கொன்றாலும் இது இந்த நிலை ஆகின்றது.

முந்தைய காலங்களில் இத்தகைய விஷப் பூச்சிகள் ஏற்பட்டால் அதை இயற்கையான முறைகளைக் கையாண்டு பூச்சிகள் உருவாகாமல் தடுத்தார்கள்.

சாணத்தை எரிக்கும் பொழுது
1.அந்த நெருப்பால் விஷம் ஒடுங்குகின்றது.
2.அப்பொழுது விஷத்தை ஒடுக்கும் உணர்வுகள் அந்தச் சாம்பலில் கலந்துவிடுகின்றது

மாட்டுச் சாணங்களைச் சாம்பலாக உருவாக்கி அந்த சாம்பலைப் பயிர்களில் தூவி விடுவார்கள். சாம்பலைத் தூவினால் பயிர்களின் உருவான இந்தப் பூச்சிகள் இந்த மணத்தைக் கண்டு மடிந்துவிடும்.

ஆனால் அதற்கு எதிர் நிலையாகப் படும் போது அதை உணவாக உட்கொண்டாலும் நல்ல அணுக்களாக மாறுகின்றது.

அந்தச் செடியில் விளைந்து வருவதை உணவாக உட்கொண்டால் நமக்கு நோயில்லாத நிலை வருகின்றது.

தாவர இனக் கழிவுகளைச் சேர்த்துக் குளங்களில் வண்டலாக மாறுகின்றது. இந்த வண்டலையும் சாணத்தையும் கலந்து வரும் போது
1.இந்த மண்களில் விஷப் புழுக்கள் உருவாவதில்லை.
2.சோளமோ மற்ற பருப்போ அதிலே போட்டோம் என்றால் புழுக்கள் அதிகமாக விழுவதில்லை.

புழுக்கள் அதிகமானாலும் சாம்பலையும் வெறும் உப்பையும் கலந்து அதிலே தூவினால் பருப்பு காய்கறிகளில் வரக்கூடிய புழுக்கள் அதனுடைய செயலாக்கங்களை இழந்து விடுகின்றது.

நெற் பயிர்களுக்கும் இதைப் போல சாம்பலும் சாப்பாட்டு உப்பையும் கலந்து தூவினால் அந்த காலங்களில் நெல் பயிரும் நன்றாக இருந்தது.

இப்போது விஞ்ஞான முறைப்படி விஷத்தைத் தூவிப் புழுவைக் கொல்கின்றார்கள்.
1.அதனுடைய முட்டையில் இந்த விஷம் பட்டு
2.இந்த விஷத்தைத் தாங்கக்கூடிய புழுவாக அடுத்து வந்து விடும்.

அடுத்து இதே மருந்தைத் தூவினால் புழு சாவதில்லை.

அதே சமயம் செடிக்குள் விஷத்தன்மை கலந்து கலந்து அதிலே உருவாகும் நெல் மணியிலும் அது கலந்து விடுகின்றது. கத்தரிக்காய் மற்ற எல்லாக் காய்களுக்கும் விஷ மருந்து தூவவில்லை என்றால் அவை விளைவதில்லை.

செடியில் விஷம் கலந்தபின் அதில் விளைந்த காய்கறிகளைச் சாப்பிடும்போது தூவிய விஷம் நம் இரத்த நாளங்களிலே கலந்து நம் உடலிலுள்ள அணுக்களுக்கு ஆகாரமாகச் சேர்கின்றது.

விஷத்தின் தன்மை உணவாக உட்கொள்ளும் போது இந்த மனித உடலை உருவாக்கிய நல்ல அணுக்களும் அதனுடைய செயலாக்கங்களைக் குறைக்கின்றது.

செடியில் தூவிய விஷங்கள் அனைத்தும் ஆவியாக மாறியதைச் சூரியன் எடுத்து வைத்துள்ளது.

ஆக செடியில் விளைந்ததை நாம் உணவாக உட்கொள்ளும் போது நம் உடலில் உள்ள அணுக்களுக்குள் அந்த விஷங்கள் கலந்துவிடுகின்றது.

அதன் வளர்ச்சியில் செடிக்குத் தூவிய மருந்தினைச் சூரியன் ஆவியாகக் கவர்ந்து வைத்துள்ள அந்த விஷங்களை நம் உடலில் உள்ள அணுக்கள் அது இழுக்கும். இழுக்கும் பொழுது நம் ஆன்மாவாக மாற்றும்.

நம் ஆன்மாவாக மாற்றும்போது
1.நம் நல்ல குணங்களுடன் சேர்த்து
2.அந்த விஷமான ஆவியைச் சுவாசிக்கும் போது
3.நமக்குள் சிந்திக்கும் தன்மை இழக்கப்படுகின்றது.
4.மனமும் பலவீனப்படுகின்றது.
5.சொல்லிற்குள் நயம் கெடுகின்றது.

விஷம் கலந்த உணர்வுகளை நாம் கலந்தால் எப்படி “ஆ…” என்று அலறுகின்றோமோ இதைப் போல நாம் நுகர்ந்த உணர்வுகள் சொல்லாக வெளிப்படும் போது ஒருவர் செவிகளில் கேட்டபின் அந்த உணர்வுகளை அவர் நுகரும் போது அவரைச் சிந்திக்கும்படி செய்வதற்கு மாறாக “உணர்ச்சிவசப்படும்படிச் செய்கின்றது”.

1.நன்மையின் தன்மையை நீங்கள் சொன்னாலும்
2.சிந்திக்கும் தன்மைகளுக்கு மாறாக
3.வெறுப்பின் தன்மை உருவாக்கும் நிலையே
4.இந்த விஞ்ஞான அறிவால் வருகின்றது.

பண்டைய காலங்களில் எல்லாம் மனிதனுக்குகந்த நிலைகள் கொண்டு காட்டிற்குள் விளைந்த பல பயிரினங்களைச் சேர்த்துத்தான் நெல்லாகவும் மற்ற மற்ற தானியங்களாகவும் உருவாக்கினார்கள்.

பயிரினங்களில் பூச்சிகள் விழாது தடுப்பதற்காக மற்ற தாவர இனங்களை இது உரங்களாக இட்டார்கள். அப்படி இடப்படும் போது இந்த உரங்கள் தாவர இனச் சத்தைக் கொல்லும் பூச்சிகளை வளரவிடாது தடுக்கின்றது

அந்த மெய்ஞான வழியில் உருவாக்கிய நிலைகள் தான் இவைகள்.

விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்திருந்தாலும் அன்று வாழ்ந்த மெய் ஞானிகளின் உணர்வை அறியாது செயல்படும் பொழுது மனிதனின் சிந்தனையைக் குறைக்கும் நிலைக்கும் அழிக்கும் நிலைக்குத்தான் கொண்டு செல்கிறது.

உதாரணமாக வீட்டில் சமையல் செய்யும் போது பெண்கள் மஞ்சளை அதிகமாகப் பயன்படுத்துவார்கள்… பூச்சிக்கொல்லி மருந்து என்று சொல்வார்கள்.

விஷமான அணுக்களைக் கொல்லக் கூடிய சக்தி மஞ்சளுக்கு உண்டு மஞ்சளை உணவுடன் கலந்து சாப்பிடும் பொழுது நம் உடலுக்குள் விஷ அணுக்கள் உருவாகாதபடி அது தடுக்கும்.

இப்பொழுது அதையும் மீறி…
1.வேதனையும் வெறுப்பும் கொண்டு பெண்கள் இருந்தால்
2.மஞ்சள் பவுடரையோ அல்லது மஞ்சளையோ கையில எடுத்து வைத்திருந்தால் போதும்… அதில் வண்டு விழுந்துவிடும்.

கடையில் மஞ்சளை அவர்கள் வைத்திருக்கும் வரை ஒன்றும் செய்யாது. அவர்களும் அதைக் காக்க ஒன்றும் செய்வதில்லை… சுத்தமாகத்தான் இருக்கும்.

ஆனால் வீட்டிலே வாங்கிக் கொண்டு வந்து வைத்து
1.அதில் குறிப்பாக வேதனைப்படுவோர் கையில் எடுத்து உபயோகப்படுத்தினார்கள் என்றால்
2.நிச்சயம் வண்டு விழுகும்… முழுவதும் பவுடராக மாறிவிடும்.

காரணம் மனிதனிலிருந்து விளைந்தது நாம் எண்ணி வெளிப்படுத்திய உணர்வுகள் தன்மைகொண்டு மனிதனிலிருந்து உருவாக்கக்கூடிய உயிரணுக்கள் தான் அவைகள் அதிகமாக…!

வான் வீதியில் இது போன்ற அணுக்கள் அதிகமாக உருவாவதில்லை.

1.மனிதன் ஆனபின் மனித உடலில் இருந்து வெளிப்படக்கூடிய மூச்சு கடும் விஷமான நிலைகளில் இப்போது உருவாகின்றது.
2.டைஃபாய்டு மூளைக் காய்ச்சல் இது எல்லாம் இப்போது வருவதற்குக் காரணம் அதுதான். (சிந்தனை குலைந்து மருந்தாக உணவாகும் இதிலிருந்து வெளிப்பட்ட உணர்வின் அணுக்கள்)

ஒரு மனிதன் வருகின்றான்… உற்றுப் பார்த்து அவனின் உணர்வை நுகர்கின்றோம் என்றால் நமது உயிரின் நிலைகள் ட்ரான்சாக்ஷ்ன்… ட்ரான்சிஸ்டர் என்றும் சொல்வார்கள்.

அதாவது
1.ரேடியோ எப்படி ஒரு இடத்திலிருந்து அடுத்த நிலைகளுக்கு மாற்றி
2.அந்த ஒலி அலைகளைச் சீராக கவர்ந்து எடுத்துக் கொடுக்கின்றதோ
3.அதைப் போல நமது உயிர் நாம் நுகரும் உணர்வுகளை மாற்றி நம் உடலுக்குள் கொண்டு செல்வதும்
4.அதன் சிந்தனைப்படி நம்மை இயக்குவதும் உண்டு.

அதே சமயத்தில் நம் உடலுக்குள் இருக்கும் (உருவாகி இருக்கும்) அணுக்கள் அது உணவுக்கு ஏங்கும் பொழுது… அந்த உணர்ச்சிகள் உயிருக்கு… அந்தச் சிறுமூளைக்கு… ட்ரான்சாக்ஷ்ன் ஆக வரும்.

உயிருக்குள் வந்தபின் அந்த உணர்வுகள் கண் காது மூக்கு உடலுக்கு இது ஆணையிடும். ஆணையிடும் பொழுது எந்த அணுக்களின் தன்மை அதிகமாக நேசித்ததோ நமது கண் இந்தப் பூமியில் இருப்பதை இழுக்கும்.

ஏனென்றால்… முதலில் உற்றுப் பார்க்கும் போது கருவிழியால் பதிவானது கருவிழியால் நுகர்ந்து நமக்குள் சேர்ந்தது.

உடலில் அப்படிப் பதிவாகும் இந்த உணர்வுகள் கண்ணுக்குள் வந்த பின் இதே காந்தப் புலனறிவு
1.தன் உணவுக்காகக் காற்றிலிருந்து தனக்குள் எடுத்துச் சுவாசிக்கச் செய்து
2.இரத்த நாளங்களில் கலந்து அதிலிருந்து அது உணவாக எடுத்துக் கொள்ளும்.

இது எல்லாம் ஒரு இயந்திரத்திற்குச் சமமாக நம் உடல் இயங்குகின்றது

ஆனாலும் அந்த அணுக்களின் செயலாக்கங்கள் எவ்வாறோ… அதற்குள் இந்த உயிருடன் கொண்ட உடலில் எத்தனையோ வேதனைப்படுகின்றோம்…!

வயிற்றிலே வலி வந்தால் தாங்க முடிவதில்லை. இது எல்லாம் அந்த உணர்வின் உயிரின் நிலைகள் இயக்கப்படும் பொழுது வயிற்று வலியை உருவாக்கும் அணுக்களை அது ஆகாரமாக எடுத்து அதிகமாகச் சேர்க்கும் பொழுது நுகர்ந்தபின் இந்த உணர்ச்சிகள் நமக்குத் தெரிகின்றது… வேதனைப்படுகின்றோம்.

இது எல்லாம் இயற்கையின் நிகழ்ச்சிகள். இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

எங்கும் இருக்கும் ஆண்டவனை… “தனித்த பிம்பத்தில்” காண முடியுமா…! கண்டாலும் நம்புவோமா…!!

எங்கும் இருக்கும் ஆண்டவனை… “தனித்த பிம்பத்தில்” காண முடியுமா…! கண்டாலும் நம்புவோமா…!!

 

ஆதிசக்தியின் சக்திக் குழந்தைகளான எல்லாமின் எல்லாமாக இறை சக்தி நிறைந்துள்ளது. ஒவ்வொரு சாராரும் இறைவனை அவரவர்கள் ஒவ்வொரு வழி கொண்டு வணங்குகின்றனர்.

நாஸ்தீகம் பேசுபவர்கள் (கடவுள் இல்லை என்பவர்கள்) இறை சக்தியைக் காட்டச் சொல்கின்றனர். எல்லா ஜீவராசிகளும்.. எல்லாமும் இறைவன் தான்…! என்றாலும் இறைவனை நாம் காண முடிகின்றதா…?

காட்சி:-

முதுகில் அரிப்பெடுத்த ஒருவர் அரிப்பெடுத்த இடத்தைத் தன் கையால் கீற முடியாமல் மற்ற உபகரணத்தை எடுத்துக் கீறுவதைப் போன்றும்… முதுகைச் சுவற்றில் தேய்ப்பது போன்றும் காட்சி தருகின்றார்.

விளக்கம்:-

தன் முதுகு தான்… ஆனால் தன் முதுகைத் தானே சொறிவதற்கு முடிவதில்லை. அந்த இடத்தில் என்ன உள்ளது…? என்று பார்க்கவும் முடிவதில்லை.

ஆனால் தனக்குச் சொந்தமான முதுகு தான். அதில் ஏற்படும் நமைச்சலையும் உணர்ச்சிகளையும் உணர முடிகின்றது.

அதைப் போன்று ஒவ்வொரு உயிரினத்திலும் அவ்வுயிரணு தோன்றிடவே
1.ஆண்டவனின் சக்தி ஆவியாக… உயிர் கொண்டு இருந்து தான் அனைத்து ஜீவன்களுமே வாழுகின்றன.
2.இப்படி இருக்க… ஆண்டவன் என்ற தனித்த பிம்பத்தைக் காட்டினால் தான் ஆண்டவன் என்று உணர முடியுமா…?

ஆகவே ஆண்டவனின் அருள் சக்திக்குகந்த செயல்படும் ஜீவன்களாகத் தான் ஒவ்வொரு ஜீவனும் ஜீவித்து வாழ்கின்றது.

இதை உணராமல்… தனக்கு எந்த அளவு சக்தி நிலை உள்ளதோ அந்த நிலையில் எடுக்கும் செயல் வாழ்க்கை தான் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும்… “அவன் எடுக்கும் சுவாச எண்ணம் கொண்டு செயல்படுகின்றது…”

1.நுண்ணிய சிறு கருவிகளை…
2.நுண்ணிய சிறு உறுப்பின் துணை கொண்டு தான் அதன் வேலைப்பாடு செய்ய முடிகின்றது.
3.கனம் கொண்ட பெரிய உறுப்புகளின் செயலுக்கு
4.அதன் செயலுக்குகந்த வலுவான சாதனப் பொருள் கொண்டு தான் அந்தப் பொருளை உருவாக்க முடிகின்றது.

அதைப் போன்றுதான் நாம் எடுக்கும் குறுகிய எண்ணத்தின் வளர்ச்சி கொண்ட சுவாசமாக இருந்தால்… அதன் தன்மைக்குகந்த குறுகிய ஞானம் கொண்ட வாழ்க்கை தான் நமக்கு அமையும்.

1.எண்ணத்தின் வலு…
2.எதன் அடிப்படையில் எதன் சக்தித் திறன் கூடுகின்றதோ
3.அதன் செயல் ஞானம் தான் நமக்கும் கிட்டும்.

எண்ணத்தின் உயர்வை இந்த உடல் என்ற ஆவியுடன் கூடிய ஆத்ம உயிர் இந்தப் பிம்பத்தில் உள்ள பொழுதே நம் சுவாச அலையை உயர்ந்த ஞான எண்ணமுடன் செலுத்தி எடுப்போமானால்… இப்பொழுதுள்ள ஜீவ சக்தி கொண்ட இந்த உடலில் எடுக்கும் ஞான அலையைக் காட்டிலும் “உயர்ந்த ஞான அலையை நாம் பெற முடியும்…”

இந்த மனிதப் பிறவியில் (உடலில்) இருக்கும் பொழுது தான் அதைச் செயல்படுத்த முடியும். ஆவி நிலையிலிருந்து பெற முடியாது.. மிருகங்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் அந்தத் தகுதி கிடையாது.

காட்சி:-

ஒரு பந்து நீரில் மிதந்து ஓடிக் கொண்டே உள்ளது. அந்தப் பந்தில் சிறு துவாரம் ஏற்பட்டவுடன் பந்தில் உள்ள காற்று பிரிந்து அந்தப் பந்தானது நீரின் உள் பாகத்திற்கு நிலத்திற்குச் சென்று விடுகிறது.

விளக்கம்:-

ஆக… இந்த உடல் என்ற காற்றடைத்த இந்தப் பந்து இந்த உடலில் உள்ள உயிர் ஆவி பிரிந்தவுடன்… நடக்கவோ நிற்கவோ முடியாமால் ஜீவனற்று… இந்தக் காற்று பிரிந்தவுடன் நிலத்துடன் கனத்து ஐக்கியப்பட்டு விடுகின்றது.

அதைப் போன்று இந்தக் காற்றின் அலை சக்தியை
1.நம் சுவாச நிலை கொண்டு நம் உடல் ஆத்மா மட்டும் வாழ்வதோடு அல்லாமல்
2.நம் எண்ணத்தின் ஆத்ம வலுவின் சக்தியும் வாழுகின்றது.
3.அதன் சக்தித் திறனை வழிப்படுத்தித் தருவது தான்
4.இங்கே ஈஸ்வரபட்டனாகிய யான் வெளிப்படுத்தும் இந்தத் தத்துவத்தின் உண்மை ஞான வழித் தொடர்…!

மனித வாழ்க்கையில் “நான் அதைச் செய்வேன்… இதைச் செய்வேன்…” என்று சொல்லத் தான் முடியும்

மனித வாழ்க்கையில் “நான் அதைச் செய்வேன்… இதைச் செய்வேன்…” என்று சொல்லத் தான் முடியும்

 

ஏற்கனவே சொல்லி இருக்கின்றேன்…! என்னுடைய (ஞானகுரு) அறியாத குழந்தைப் பருவத்தில் சில உயிரினங்களை (குருவி மைனா) உயிருடன் எரித்திருக்கின்றேன்… கை கால்களை இழக்கச் செய்து அதை வேடிக்கை பார்த்து ரசித்து உள்ளேன்.

அப்படி நான் ரசித்து வேடிக்கை பார்த்த உணர்வுகள்
1.எனக்குள் அணுக்களாக வளர்ந்து “விதி” என்ற நிலையாக வருகின்றது
2.அதனுடைய பருவ வளர்ச்சியில் அதே உணர்வாக இயக்கி என்னையும் முடக்கச் செய்கிறது.

இப்பொழுது நான் சக்தி பெற்றவனாக இருப்பினும்… எத்தனையோ பேருக்கு நான் உதவி செய்கின்றேன் என்ற எண்ணத்தில் இருந்தாலும்… கீழே விழுந்த பின் “என் கை எலும்பு முறிந்து விட்டதே…” என்று வேதனையாக எண்ணினேன் என்றால் “அந்த மரண பயத்தால் மீண்டும் பிறவிக்குத் தான் வருவேன்…”

1.ஆக… நான் அறியாத வயதில் செய்த உணர்வுகள் எதுவோ அது என்னை அதன் வழி அழைத்துச் சென்றது
2.அது இத்துடன் செல்லட்டும்… அருள் ஒளி எனக்குள் பெருக வேண்டும்
3.என்னைப் போன்று பிறருக்கு இந்த நிலைகள் வரக்கூடாது என்று நான் எண்ணி ஏங்கப்படும் பொழுது
4.மரண பயத்திலிருந்து நான் விடுபடுகின்றேன்… அருள் மகரிஷிகளுடன் தொடர்பு கொள்கின்றேன்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் மனிதனுடைய அடுத்த எல்லையான பிறவி இல்லா நிலையை அடையத்தான் நாம் முயற்சிக்க வேண்டும்.

இந்த மனித வாழ்க்கையில்
1.நான் அதைச் செய்வேன்… இதைச் செய்வேன்… என்ற எண்ணங்கள் இருப்பினும்
2.எதையும் எவரும் செய்ய முடியாது (இது முக்கியம்).

உதாரணமாக நடந்து செல்லும் ரோட்டின் நடுவிலே ஒரு பொருள் இருக்கின்றது. அதை எடுக்க நான் ஆசைப்பட்டேன் என்றால் என் எண்ணம்… என்னுடைய ஆசை… அந்தப் பொருள் மீது தான் வரும்.

ஆனால் எடுக்கச் செல்லும் போது இடையிலே குறுக்கே வரும் வண்டியினைக் கவனிக்கவில்லை என்றால் ஆளை மாய்த்துவிடும். அல்லது மற்ற எதிரிகள் அந்தப் பொருளை நான் பெற முடியாதபடி தடுக்கும் செயலாக இருந்தால் அதை அறிய முடியாது.

அந்தப் பொருளை அடைய முடியவில்லை என்றால் வெறுப்பும் வேதனையும் கொண்டு கொதிப்படையும் தன்மை வருகிறது. அதனால் அவர்களை அழித்திடும் உணர்வுகள் தோன்றி… கடும் நோயாக உடலுக்குள் உருவாகி… நம் நல்ல உணர்வுகளை எல்லாம் அது அழித்து விடுகின்றது.

காரணம்… நாம் எண்ணியதை எல்லாம் நமது உயிர் உடலில் அணுக்களாக விளையச் செய்து விடுகின்றது. அதன் வழி தீமையை நமக்குள் விளைவிக்கின்றது.
1.இப்படி மனித உருவை மாற்றுகின்றதே தவிர இந்த உடலிலே யாரும் நீடித்து வாழ்வது அல்ல
2.இந்த உடல் நமக்குச் சொந்தமில்லை.

ஒரு வித்தினை நிலத்தில் ஊன்றினோம் என்றால் அது நிலத்தின் துணை கொண்டு தன் இனத்தைக் கவர்ந்து செடியாக வளர்ந்து மீண்டும் தன் இனத்தைப் பெருக்குகிறது.

இதைப் போன்று தான் நம் உடலும் ஒரு நிலம் தான்.
1.நம் உயிரின் இயக்கத் துணையால்… அதிலுள்ள காந்தப்புலனால் கவர்ந்து கொண்ட உணர்வுகள்
2.ஊழ்வினை என்ற வித்துக்களாக விளைந்து விடுகின்றது.

அது போன்று தான் இந்த உபதேசத்தின் வாயிலாக அருள் ஞான வித்தாக உங்களுக்குள் விளையச் செய்யப்படும் பொழுது நஞ்சினை வென்றிடும் உணர்வாக உங்களில் விளைகின்றது.

அருள் ஞான சக்தியாகப் பெருக்கிவிட்டால் உடலுக்குள் ஒளிச் சுடராக விளைகின்றது. இருள் சூழ்ந்த நிலைகளை ஒடுக்கி விடுகின்றது.

உடலை விட்டுச் செல்லும் பொழுது எந்தத் துருவ நட்சத்திரத்தைப் பற்றுடன் நாம் பற்றினோமோ அங்கே செல்கின்றோம். ஆகவே நாம் மரணம் இல்லாப் பெரு வாழ்வு வாழ வேண்டும். ஒவ்வொருவரும் அந்த நிலை பெற வேண்டும்.

1.எனது குரு காட்டிய அருள் வழியினை நீங்கள் அனைவரும் பெற வேண்டும்
2.உங்கள் நினைவாற்றல் அந்தச் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைய வேண்டும்
3.அந்த அருள் உணர்வுகள் உங்களுக்குள் விளைய வேண்டும்… நஞ்சினை வென்றிடும் ஆற்றல் நீங்கள் பெற வேண்டும்.
4.உங்கள் மூச்சின் தன்மை நல்ல உணர்வாக இந்தப் பூமி முழுவதும் படர வேண்டும்

ஞானிகளைப் போல் நஞ்சினை அடக்கும் ஆற்றலை நீங்கள் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் குரு காட்டிய அருள் வழியினை உங்களுக்குள் பதிவு செய்வது.