உடலின் கடைசி முடிவு

உடலின் கடைசி முடிவு

 

மகாபாரதத்தில் திரௌபதி என்பது உயிர் (உணர்வின் உணர்ச்சி) பஞ்ச பாண்டவர்கள் (புலனறிவு ஐந்து) நுகரப்படும் பொழுது இந்த ஐந்து பேருடைய உணர்வுகள் கொண்டு அதை இயக்குகின்றனர்.

சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்பமும் காந்தமும் நுகரும் சத்தும் அதன் உணர்வின் தன்மை மணமும் சேர்த்துப் புலனறிவு ஐந்து என்று
1.இந்த உணர்வின் தன்மை நாம் எக்குணத்தை நுகர்கின்றோமோ அந்த உணர்வின் இயக்கமாகத்தான் இயக்குகின்றது.
2.கண்ணனின் சகோதரி திரௌபதி. தன்னுடன் இணைந்து உணர்வினைக் கண் காட்டுகின்றது உடலிலே.
3.சகோதரியாக உடலுக்குள் தன் உணர்வின் நிலையாக உணர்த்துகின்றது… கண்ணன்.
4.ஆக எதை எண்ணுகின்றானோ அந்த உணர்வின் தன்மை அது உள்முகமாக எவ்வாறு ஊட்டுகின்றது என்று மகாபாரதத்தில் காட்டுகின்றார்கள்.

ஆனால் பிறரை அடிமைப்படுத்த வேண்டும் என்ற உணர்வுகளை வளர்த்துக் கொள்வதைக் ”கௌரவர்கள்” என்று காட்டுகின்றார்கள்.
1.உண்மையின் உணர்வை நுகர்ந்தால் பஞ்ச பாண்டவர்களை சூதின் நிலைகள் கொண்டு திசை திருப்புகின்றனர்.
2.தன் உணர்வின் வலிமை கொண்டு உள் புகாது நன்மையினைப் பெறாது கௌரவர்கள் தடைப்படுத்துகின்றார்கள்.

ஆக… கௌரவர்கள் பாண்டவர்கள் இருவருக்கும் போர் முறை என்று காட்டுகின்றார்கள்.

உணர்வின் வலுவைக் காட்டப்படும் போது நாம் எண்ணும் உணர்வுகள் அர்ஜுனன் என்றும்… அவன் உணர்வின் தன்மை கொண்டே நம்மை மாற்றுகின்றான் என்றும் இதே உணர்வின் செயலாக அதனின் செயலாக்கங்களும்… “அதுவே வலுவாகிறது என்றும்”
1.உணர்வின் உணர்வுகள் நமக்குள் எடுக்கும் போது – ஆன்மா எதனின் உணர்வோ அது…!
2.அதாவது கெடுமதியோ அல்லது கெடுமதியை நீக்கும் உணர்வுகள் வரப்படும் பொழுது “பீமன்” அது வலுக் கொண்ட உணர்வின் ஆன்மாவாகின்றது.

ஆன்மாவிற்குள் அதனின் வலிமை பெறுகின்றது என்ற உண்மையைக் காட்டுகின்றனர்.

பாண்டவர்கள் வலுக் கொண்டாலும் உள் நின்று புகாது தடுக்கும் நிலையே கௌரவர்கள். பல நிலைகள் கொண்டு மகாபாரதப் போர் நடந்தாலும் தீமை என்ற உணர்வுகள் வளரப்படும் பொழுது இவர்கள் (பாண்டவர்கள்) ஜெயித்தாலும் கண்ணன் மடிகின்றான். அதற்கு முன் பலராமன் மடிகின்றான்… “கடைசி முடிவு…”

1.நாம் நுகரும் உணர்வுகள் எண்ணம்…
2.எண்ணத்தின் நிலை கொண்டே கண்.
3.கண்ணின் நிலை கொண்டே பல உணர்வுகள் அதிலிருந்து பல எண்ணங்கள்
4.அதன் வழி கொண்டே உணர்கின்றோம் வளர்கின்றோம் என்ற நிலை தெளிவாக்கப்படுகின்றது.

கண்ணனின் சகோதரன் பலராமன் மூத்தவன் என்று கொண்டு வருகின்றார்கள். பலராமன் மடியப்படும் போது கண்ணனுக்கும் செயலில்லை… அவனும் மடிகின்றான். பின் ஈர்க்கும் வலுவின் தன்மை இல்லை என்றால் பீமனும் மடிகின்றான்

நகுலன் சகாதேவன்… உணர்வைக் கவர்ந்தால் தான் நகுலனும் இயக்க முடியும் நன்மை தீமை என்பதை அறியும் நிலை அவர்களால் தான் அங்கே இருக்கின்றது… அப்போது அவர்களும் செயலை இழந்து விடுகின்றார்கள்.

அனைத்து வலிமை கொண்டு தீமைகள் புகாது தடுக்கும் அர்ஜுனனும் வலுவை இழக்கின்றான்,,, மடிகின்றான். வீரிய உணர்வுகளை இழந்த பின் அவன் கண்ணுக்கு முன்னாடியே திருடர்கள் திருடுகின்றார்கள் மாடுகளை ஓட்டிச் செல்கின்றார்கள்.

காண்டீபத்தை எடுத்து மந்திரத்தைச் சொல்லி ஏவுகின்றான்… ஆனால்.
1.மற்ற சகோதரகள் செயல் இழந்த பின் அது ஒன்று சேர முடியவில்லை.
2.இவனுடைய ஆயுதங்கள் அங்கே பாய முடியவில்லை. திருடர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை.
3.தான் வீழ்ந்து விட்டோமே என்ற உணர்வுகள் வருகின்றது.

ஏனென்றால் கண்களால் கவர்ந்த உணர்வுகள் வலுவை இங்கே ஊட்டித்தான் “அந்த வலுவால் இயக்குகின்றது” என்பதை இங்கே காட்டுகின்றார்கள்.

உடலுக்குள் உணர்வுகள் எவ்வாறு இயக்குகின்றது கண்ணன் மடிந்த பின் மற்ற நிலைகள் மடிந்த பின் எப்படி உடலுக்குள் செயல்கள் மடிகின்றது என்பதை மகாபாரதத்தில் தெளிவாகக் காட்டுகின்றார்கள்.

நாம் நுகரும் உணர்வுகள் எண்ணங்கள் வேதனை என்று நுகர்ந்தால் வாலி… கோபம் என்றால் காளி…!

நாம் நுகரும் உணர்வு உயிரில் பட்ட பின் இந்த உணர்வின் தன்மை எவ்வாறு இயக்குகின்றது…? இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் அறிந்திடல் வேண்டும்.

1.நமக்குள் புகுந்த பிறிதொரு உணர்வுகள் நல்லதைப் புகவிடாமல் தடுக்கும் நிலையினை எவ்வாறு தடுக்க வேண்டும்…?
2.மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்ற வழி வகைகளை ஞானிகள் காட்டுகின்றார்கள் மகாபாரதத்தில்.

இன்றைய உடலின் கணக்கு எதுவாக இருக்க வேண்டும்…?

இன்றைய உடலின் கணக்கு எதுவாக இருக்க வேண்டும்…?

 

உதாரணமாக நாம் கோபப்பட்டு ஆத்திரப்பட்டுப் பிறருக்குத் தொல்லை கொடுக்கிறோம் என்றால்… நாமே அசுர குணங்களை வளர்க்கும் தவத்தை மேற்கொள்கின்றோம் என்று பொருள்.

நாம் எண்ணிய தவம் அனைத்தையும் உயிர் அந்த உணர்வின் கருவாக இந்திரலோகத்தை மாற்றி அமைக்கின்றது.
1.மகிழ்ச்சியை மாற்றி நமக்குள் வெறுப்பு என்ற உணர்வுகளும் எவரையும் கொன்று புசிக்கும் உணர்வே வருகின்றது.
2.இங்கே பிரம்மலோகம் அதன் உணர்வின் தன்மை வளர்க்க நேர்கின்றது.
3.சிவனும் அதன் வழிப்படி வரம் கொடுத்து விடுகின்றான்.
4.ஆகவே மூன்று லோகத்தையும் வென்றிட வேண்டும் என்று தான் இராவணனின் தவம் அமைகின்றது.
5.அந்தத் தவத்தின் பலன் கொண்டு இந்த உடலில் விளைந்து (வீழ்ச்சி அடைந்து) இந்திரலோகத்தைக் கைவல்யப்படுத்திய பின்
6.அசுர உணர்வுகளை உருவாக்கும் அணுவின் தன்மையாக வருகின்றது.
7.இந்த மனித உடலை விட்டுச் சென்ற பின் புலியாகப் பிறக்க நேர்கின்றது.

அப்படி உருவான பின் புலியின் உயிரும் ஈசனே. அதன் இயக்கத் தொடரும் விஷ்ணுவே ஈர்க்கும் காந்தம் லட்சுமி.

அப்போது தீமைகளை உருவாக்கும் பிரம்மத்தின் தன்மை அந்தப் பசியை அடக்கும் தன்மையாக அல்லது தன் பசிக்காக ஏங்கும் பொழுது மற்றொன்றைக் கொன்று புசிக்கும் உடலாக (அது பிரம்மமாக) மாறுகின்றது.

அந்த உணர்வின் தன்மை உடலாகும் போது அது சிவம் ஆகின்றது. ஆக புலியின் உடலும் சிவமே அதன் உடலுக்குள் உருவாக்கும் அந்த இந்திரலோகத்தை மாற்றி அசுர உணர்வுகளை உருவாக்கும் உலகமாக மாற்றுகின்றது.

உயிரின் தன்மை விஷ்ணுவாக இருக்கின்றது இயக்கம் ஈசன் ஆகின்றது. இதை எல்லாம் தெளிவாக தெரிந்து கொள்வதற்குத் தான்
1.ஓர் உடலை விட்டு உடல் மாறும் பொழுது ஒரு உடலில் நாம் நுகரும் உணர்வுகள் நமது உயிர் எவ்வாறு உருவாக்குகின்றது…?
2.அந்த உணர்வின் தன்மை கருவாக எப்படி உருவாகின்றது…?
3.கருவான பின் ஏற்கனவே இருந்த உடலை அது எப்படி நலியச் செய்கின்றது…?
4.உயிர் இந்த உடலில் எதனைச் சேமித்ததோ அதன் வழி வெளிவந்த பின் அதற்குத்தக்க உணர்வை நுகர்ந்து
5.உடல்களை எப்படி மாற்றுகின்றது…? என்று காட்டுகின்றார்கள்.

இது தான் சிவன் ஆலயத்தில் நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை என்று காட்ட்டி இருப்பார்கள். சாதாரண மக்களும் நாம் புரிந்து நம் வாழ்க்கையில் எவ்வாறு வாழ வேண்டும்…? என்று என்பதனைக் கற்பிக்கின்றது நம் சாஸ்திரங்கள்.

நந்தீஸ்வரன் என்றால் ஒரு கோபப்படும் உணர்வை நுகர்ந்தால் உயிருக்குள் பட்டு அந்த உணர்வின் தன்மை உருவாக்குகின்றது. உருவாக்கிய பின் அதே கோபத்தின் உணர்வு மீண்டும் இந்த உடலுக்குள் அணுவின் தன்மை அடைந்து கோபத்தை உருவாக்கும் உணர்வின் அணுவாக விளைகிறது.

அப்பொழுது அதனுடைய தன்மையை அது உருவாக்கிக் கொண்டே இருக்கின்றது.. அது தான் நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை.

இந்த வாழ்க்கையில் கோபத்தின் தன்மை அதிகமாக்கினால் அதன் உணவின் தன்மை கொண்டு இப்படி நிகழ்ந்து விடுகின்றது.

அதே சமயத்தில் கோபம் வரும் பொழுது “தந்திரமாக மற்றவர்களை ஏமாற்றிச் சென்றால் அதன் உணர்வின் தன்மை நரியாகப் பிறக்கச் செய்கின்றது…”

இதைப் போல எந்தெந்த உணர்வின் தன்மையை நமக்குள் மாற்றி அமைக்கின்றோமோ அதன் உணர்வுக்கொப்ப மனிதனாக இருப்பதை இந்த உயிர் மாற்று உடலை அமைத்து விடுகின்றது.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

அதர்வண வேதம்

அதர்வண வேதம்

 

ரிக் வேதம் சாம வேதம் யஜுர் வேதம் அதர்வண வேதம் – ஒரு பொருளின் நிலைகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படும் பொழுது
1.ஒன்றை விழுங்கி… அப்போது நாதத்தின் சுருதிகள் மாறுகின்றது.
2.அதனுடைய இனப்பெருக்கம் இனச்சேர்க்கை இனத்தை உருவாக்கும் என்ற நிலைகள் வேதங்களில் இப்படிப் பிரிக்கப்பட்டுள்ளது.

இயற்கையின் விளைவின் தன்மை பெறப்படும் பொழுது அதர்வண வேதத்தைத் தனியாகப் பிரித்துக் காட்டுவார்கள்.

ஒரு புலி மானைப் பார்க்கிறது என்றால் அதனுடைய வேகத்துடிப்புகள்… மான் பார்த்த பின் உடனே அஞ்சி நடுங்க வைக்கின்றது. இது அதர்வண வேதத்தைச் சேர்ந்தது.

புலியின் உணர்வு இதற்குள் சேர்ந்த பின் மான் செயலற்றதாகி அதனைப் புலி விழுங்கி விடுகின்றது. மானின் உணர்வுகள் இயங்காது உயிர் அகன்று வந்த பின் புலி கவர்ந்து கொண்ட பின் தன் இனமாகச் சேர்த்து அதனின் உயிரைத் தன் இனமாக வளர்கின்றது. இதைக் கவனமாக வைத்துக் கொள்ளுங்கள்.

அதர்வண வேதம் என்ற நிலையில்
1.ஒரு உணர்வின் தன்மை ஒன்றைக் குவித்து உணர்வால் மாற்றப்பட்டு இது வளர்ந்த பின்
2.உயிருடன் இணைந்த பின் இதைக் கொண்டு அது இணைத்துக் கொண்ட
3.அதாவது விழுங்கிய உணர்வின் தன்மை கொண்டு எவ்வாறு ரூபங்கள் மாறுகின்றது…? என்ற நிலையை அதர்வண வேதம் காட்டுகிறது.

வேத சாஸ்திரங்கள் படித்தவர்கள் இருக்கலாம். ஆனால் வேதத்தின் நுண்ணிய நிலைகளை அன்று மெய் ஞானிகள் சித்தரித்துக் காட்டினார்களே…!
1.அதனின் உண்மைப் பொருளை இன்று காணாது
2.அதர்வண வேதம் என்ற நிலைகளில் யாகத்தைச் செய்து ஒவ்வொரு தெய்வத்திற்கும் சக்தி ஊட்டுகின்றார்கள்.

யாக வேள்விகளை நாம் பரப்பப்படும் பொழுது அந்த மந்திரங்களைச் சொன்ன பின் இந்தத் தெய்வத்திற்குச் சக்தி ஊட்டப் போகின்றோம் என்ற நிலைகளில் 48 நாட்கள் மந்திரங்களை ஓதுகின்றார்கள்.

அந்த தெய்வத்திற்காகப் பல பொருள்களை இட்டு அவர்கள் சொல்லும் மந்திரங்களும் யாகத் தீயில் போடும் பல மணங்களும் இவையெல்லாம் சேர்த்து சோமபானம் (மது) என்பதையும் ஐதீகத்திற்காக என்று சொல்லி ஊற்றுவார்கள்.

அங்கே அவர்கள் சொல்லும் மந்திரங்களை நாம் கேட்டுணர்ந்தால் இதற்குப் பெயர் வசியம். ஆலயத்தில் உள்ள தெய்வத்திற்கு சக்தியைச் செருகேற்றுகின்றார்கள் என்றால் இப்படிச் சொல்லும் பொழுது மனிதன் இந்த தெய்வம் இன்னது செய்யும் என்று காவியங்களைத் தீட்டுகின்றார்கள்… மந்திரங்களைச் சொல்கிறார்கள் நாம் கேட்டறிகின்றோம்.

அவர்கள் சொல்வதெல்லாம் நமது உயிருக்குள் ஆழமாகப் பதிவாகி விடுகின்றது.

மந்திரத்தைச் சொன்ன பின் வாத்தியங்களை வைத்து இசைகளை இசைப்பார்கள். ஒவ்வொரு மேளத்திற்கும் ஒவ்வொரு விதமான நாதங்கள் உண்டு ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமான வாத்தியங்களை வாசிப்பார்கள்.

1.கருப்பண்ணசாமி மாடசாமி இவர்களுக்கெல்லாம் டும்…டும்…டும்… என்று அடிப்பார்கள்.
2.அப்படி அடித்தாலே போதும் தன்னை அறியாமலே ஆட்டங்கள் வந்து விடும்.
3.எதைப் பதிவு செய்து வைத்துள்ளதோ அந்த உறுமி மேளச் சத்தத்தைக் கேட்டாலே போதும்…
4.ஆடாத பேயெல்லாம் ஆட ஆரம்பித்து விடும். இது எல்லாம் சுருதிகள் மந்திரத்தால் ஏற்படுத்தப்பட்ட நிலைகள் தான்.
5.யாக வேள்விகளால் வரக்கூடிய சில தீமைகள் இவைதான்.

பக்தி மார்க்கங்களில் யாகத்தைச் செய்து தெய்வத்திற்கு நெய்வேத்தியம் வைத்து அதன் வழிகளில் நாம் சக்தி பெறுவது என்பது “மந்திர ஒலிகள் தான்…”

மந்திரம் இல்லாத மதங்கள் இல்லை. ஒவ்வொரு மதமும் மந்திரத்தை உருவாக்கித் தான்… உருவத்தின் தன்மை கொண்டு ஒவ்வொரு கோயிலுக்கும் சில நிலைகளைச் செயல்படுத்துகின்றார்கள்.

இதைப்போல எடுத்துக் கொண்ட உணர்வுகள் நாம் கேட்டறியும் போது
1.நாதங்கள் சுருதிகள் அவர்கள் சொல்லும் வாக்கியங்கள்… இந்தத் தெய்வம் இன்னது செய்யும் என்று பறைசாற்றி…
2.தெய்வ குணங்களைச் சித்தரித்து அது நமக்கு வாரி வழங்கும் என்று ஆசையை ஊட்டி
3.அதனின் நிலைகள் இவர்கள் ஓதும் மந்திரத்தை நாம் செவிகொண்டு கேட்கப்படும் பொழுது ஒலி அலைகள் நமக்குள் பதிவாகின்றது.

அவர்கள் சொல்லும் உணர்வுகள் வந்து நல்ல குணத்தில் அதர்வண வேதமாக “நல்லதுக்குள் தீமைகளாகப் பதிவாகி விடுகின்றது…”

இதிலிருந்தெல்லாம் மீள வேண்டும் அல்லவா.

நமக்குள் மறைமுகமாக செயல்படும் இயக்கங்கள்

நமக்குள் மறைமுகமாக செயல்படும் இயக்கங்கள்

 

கண்ணுக்குப் புலப்படக்கூடியது அனைத்துமே துவைதம்… அதிலே மறைந்த உணர்வின் தன்மை எடுக்கப்படும் பொழுது அத்வைதம்…
1.அந்த உணர்வலைகளை நாம் கவர்ந்து விட்டால் விசிஷ்டாத்வைதம்.
2.எதனின் உணர்வின் தன்மை நமக்குள் எடுத்துக் கொள்கின்றோமோ
3.அந்த உணர்வு நம் உடலுக்குள்ளேயே இருந்து மறைந்திருந்து செயல்படுத்துகின்றது.

சந்தர்ப்பத்தில் ஒரு வேதனைப்பட்ட நிலைகளைப் பார்த்தோம்… அது சூட்சமமாக இருக்கின்றது அது.

அவர்கள் வெளிப்படுத்திய அந்த வேதனை உணர்வலைகள் அத்வைதம். அதை நாம் இப்படி செய்கின்றாரே என்று நுகர்ந்தறியப்படும் பொழுது விசிஷ்டாத்வைதம். கவர்ந்து கொண்ட உணர்வுகள் நமக்குள் இயக்குகின்றது.

பின் என்ன செய்கின்றது…?

1.என்னை அறியாமலே அவர்களை எண்ணும் பொழுதெல்லாம் வேதனை வருகின்றது.
2.வேதனை வருவது ஏன்…? என்று நமக்குத் தெரிவதில்லை… நம்மை அறியாமலே அப்பொழுது புலம்புகின்றோம்.

ஆகையினால் தான் இதை விசிஷ்டாத்வைதம் என்று காண்பிக்கின்றார்கள்.

1.நீ கவர்ந்து கொண்ட உணர்வு எவ்வாறு உன்னை இயக்குகிறது…? என்பது
2.சாஸ்திர விதிகளில் தெளிவாக இப்படிக் காட்டப்பட்டு இருக்கின்றது.

ஆனால் அத்வைதம் வேறு விசிஷ்டாத்வைதம் வேறு என்று இரண்டு பிரிவாகப் பிரிந்து கொண்டு சண்டை இட்டுக் கொள்கின்றார்கள். இது தான் உண்மை இல்லை இதுதான் உண்மை என்று சொல்கின்றார்கள். மறைமுகமாக இயக்குகிறது என்று சொல்கின்றது… நீங்கள் எப்படி நேரடியாக இயக்கும் என்று சொல்லலாம்…? அவர்களுக்குள் ஒரு போர் முறை.

வியாசகரால் கொடுக்கப்பட்டது தான் இந்த உண்மைகள்…! அதையாவது குறைந்தபட்சம் தெரிந்து கொண்டிருக்கின்றோமா…? என்றால் இல்லை. அதை அறியும் பக்குவமாவது இருக்கிறதா…? என்றால் இல்லை.

மற்றவர்கள் வெளிப்படுத்திய உணர்வலைகள் அத்வைதம்… சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து அதை அலைகளாக வைத்துள்ளது. அதே சமயத்தில் அந்த உடலைப் பார்த்து அதே உணர்வின் தன்மை நுகரப்படும் பொழுது விசிஷ்டாத்வைதம்.

தனக்குள் கவர்ந்து கொண்ட நிலைகள் தன்னை அறியாமலேயே மறைமுகமாக செயல்படுகின்றது… விசிஷ்டாத்வைதம் என்று தெளிவாகவே ஞானிகள் நமக்குக் கொடுத்துள்ளார்கள்.

இதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும் அல்லவா…!

விநாயகர் தத்துவப் பிரகாரம் வணங்கப்படும் பொழுது நம்மை அறியாது இயக்கும் இந்த நிலைகளை மாற்றி அமைக்க
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
3.எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் என்ற இந்த உணர்வை
4.தனக்குள் மறைமுகமாகவே தீமைகளை அகற்றும் நிலையாக உருவாக்குவது – விசிஷ்டாத்வைதம்.

ஞானிகள் உணர்வைத் தனக்குள் சேர்த்துத் தீமை வராதபடி இந்த உணர்வின் ஆற்றலைப் பெருக்கும் மார்க்கமாக இதை நீ வினைக்கு நாயகனாக ஆக்கு “விநாயகா…”
1.அருள் உணர்வுகளுக்கு நாயகனாக நீ இரு
2.அந்த உணர்வின் செயலின் எண்ணத்தை உனக்குள் உருவாக்கு…! என்று தெளிவாக ஞானிகள் நமக்குக் கொடுத்துள்ளார்கள்.

ஆகவே அந்த ஞானிகள் காட்டிய வழியில் அருள் உணர்வுகளை நுகர்ந்தபின்… அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் உலகில் வாழும் மக்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ வேண்டும் எல்லோரும் அருள் ஒளி பெற வேண்டும் அவர்களை அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும் என்று
1.இப்படி எண்ணும்படி தான் ஆலயங்களைக் கட்டி
2.அதிலே மறைமுகமாகவே நமக்குள் பல உயர்ந்த சக்திகளைப் பெறும்படி செய்தார்கள் ஞானிகள்.

ஓ..ம் நமச்சிவாய என்றால் அபாயம் ஒன்றுமில்லை என்று ஏன் சொன்னார்கள்…?

ஓ..ம் நமச்சிவாய என்றால் அபாயம் ஒன்றுமில்லை என்று ஏன் சொன்னார்கள்…?

 

மனித உணர்வில் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றித் துருவ மகரிஷியாக விண் சென்ற அவனை நாம் அடிக்கடி எண்ணுதல் வேண்டும்.

இந்தப் பூமியில் வாழும் பொழுது
1.அவன் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றிய அந்த உணர்வின் சக்தி
2.எனக்குள் ஜீவன் பெற்று நாமும் ஒளியின் சரீரமாக மாற வேண்டும்.
3.இது தான் ஓம் நமச்சிவாய

ஆனால் அவனின் நினைவலைகளை யாரும் நமக்குச் சொல்லவில்லை. இதை “ஓ…ம் நமச்சிவாய ஓ…ம் நமச்சிவாய என்று சொன்னால் உனக்கு அபாயம் ஒன்றும் இல்லை…” என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள்.
1.எதைச் சிவமாக்க வேண்டும் என்று அன்று ஞானிகள் சொன்னார்கள்.
2.அதை யாரும் நாம் பெறவில்லை.

தவ யோகிகளும் கொடுத்திருப்பார்கள் சினிமாப் படங்களிலும் கொடுத்திருப்பார்கள் ஓ…ம் நமச்சிவாய ஓ…ம் நமச்சிவாய. அவன் எதைத் தனதாக… சிவமாக… ஆக்க வேண்டும் என்று சொன்னான்…? என்று யாராவது எண்ணுகின்றார்களா…! என்றால் இல்லை.

சிவனின் அருளைப் பெறப் போகின்றேன் என்றால் அந்தச் சிவன் யார்…? நம் உடல் தான் சிவம்.
1.நாம் எண்ணியதை எல்லாம் உயிர் ஜீவனாக்கிச் சிவமாக மாற்றுகின்றது என்ற நிலையை
2.இந்த உண்மையைக் கண்டு சொல்லி இருந்தாலும் அதை நாம் உணரவே இல்லை
3.யாரும் உணர்த்தவும் இல்லை உணரும்படிச் செய்யவும் இல்லை.

காவியமாகப் படைத்து விட்டார்கள் நாடக மேடையில் வேஷம் போட்ட மாதிரி நம்மை அலைய விட்டு விட்டார்கள்.

உயிரணுவாகத் தோன்றியதிலிருந்து மனிதனாக நாம் பரிணாம வளர்ச்சியில் எப்படி வளர்ந்தோம்…? என்று அந்த ஞானிகள் சொன்ன இயற்கையின் உண்மையினை நாம் அறிதல் வேண்டும்.

ஓர் புழு ஒரு உணர்வைச் சுவாசித்தால் ஓ…ம். எந்தச் சத்தை சுவாசித்ததோ அந்த உணர்வின் சத்து அதன் உடலாக மாறுகின்றது ஓம் நமச்சிவாய.

ஆதியிலே ஓர் உயிர் அது தோன்றிய நிலையில் உயிருக்குள் துடிப்பின் இயக்கம் இருந்தால் தன் அருகில் இருக்கக்கூடிய செடியின் சத்தை இந்த உயிருக்குள் துடிப்பின் ஈர்ப்பான காந்தம் இழுத்து அந்த உயிருடன் இணைக்கச் செய்யும்போது ஓ… ம்… ஓம்…! என்கிற பொழுது ம் என்பது பிரம்மம்.

1.சுவாசித்த உணர்வுகள் அதற்குள் ஜீவனாகி அது உடலாகின்றது
2.இந்த உயிரான ஒளி இயக்கப்படும் பொழுது மின்னுகின்றது
3.ஆனால் இழுத்து அந்தச் சத்தான நிலைகள் இதனுடன் இணைக்கப்படும் பொழுது
4.ஒளி மறைக்கப்பட்டு உடலாகின்றது… சிவமாக மாறுகின்றது.

அந்த நந்நாளைத் தான் நாம் சிவன் இராத்திரி என்று சொன்னார்கள். உயிர் முதன் முதலில் தாவர இன சத்தை நுகர்ந்து அது உடலாகி உடலுக்குள் ஒளியின் சிகரமாக இருக்கின்றது.

எந்தத் தாவர இன சத்தை இந்த உயிர் இணைத்து உடல் ஆனதோ அந்த மணம் தான் வினை – விநாயகா. விநாயகன் பிரணவத்திற்கு உரியவன் என்றும் சொல்வார்கள்.

எந்த மணத்தை நாம் சுவாசிக்கிறோமோ அது எனக்குள் பிரணவமாகி இயங்கி ஜீவனாகின்றது. உயிர் இருக்கும் பொழுது தான் எண்ணியது அனைத்தையும் உடலாக மாற்றிக் கொண்டே இருக்கின்றது… சதா சிவமாக ஆக்கிக் கொண்டே உள்ளது.

1.ஆகவே… அருள் ஞானிகளின் உணர்வை நாம் சதா சிவமாக உடலாக ஆக்கிக் கொண்டு வர வேண்டும் என்பதற்குத் தான்
2.ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய என்று தெளிவாக ஞானிகள் நமக்கு உணர்த்திச் சென்றார்கள்.

தன்னைக் காத்துக் கொள்ளும் உணர்வை வளர்ப்பதற்குத் தான் “சாஸ்திரங்களை உருவாக்கினார்கள் ஞானிகள்”

தன்னைக் காத்துக் கொள்ளும் உணர்வை வளர்ப்பதற்குத் தான் “சாஸ்திரங்களை உருவாக்கினார்கள் ஞானிகள்”

 

மனித வாழ்க்கையில் நாம் நுகரும் ஒவ்வொரு உணர்வுகளையும் சித்திரை (சிறு திரை) மறைத்துக் கொள்கின்றது. புது வருடத்தில் (வெளிச்சத்தை மறைக்கும் இருளைப் பிளந்து ஆறாவது அறிவின் துணை கொண்டு இருளைப் போக்கிப் பொருள் காண வேண்டும் என்பது

புது வருடம் தமிழ் வருடப் பிறப்பு என்று சொல்வார்கள். ஒவ்வொரு மாதத்திலும் விசேஷத்தை வைத்ததின் நோக்கங்கள் 12 ராசி என்றும் வைப்பார்கள்.
1.இந்தப் 12 மாதத்திலும் ஒவ்வொரு உணர்வின் தன்மை எவ்வாறு இயக்குகின்றது…?
2.ராசியின் தன்மை எவ்வாறு விளைய வேண்டும் என்று நான் 12 மாதத்திலும் 12 ராசிகள் என்று சொல்வார்கள்.

ஒவ்வொரு மாதத்திலும் நாம் எதை எதைச் செய்ய வேண்டும்…? என்ற நிலையில் சித்திரை பிறக்கும் பொழுது நாம் எதைச் செய்ய வேண்டும்…? என்று உணர்த்தினார்கள் ஞானிகள்.

வருடம் பிறந்து விட்டது… நமது வாழ்க்கையில் பிறர் செய்யும் தவறைக் கண்டுனர்ந்தாலும் அச்சித்திரையை…
1.உத்தராயணம் என்ற இந்த ஒளி கொண்டு இருளைப் போக்கிப் பொருள் கண்டு
2.புது வருடம் நாம் நடக்க வேண்டும் என்பதற்குத்தான் வரிசைப்படுத்தி நமக்குத் தத்துவத்தைக் கொடுத்தார்கள் மாதங்களையும் அமைத்தார்கள்.

ஆனால் அதை எல்லாம் யாரும் நமக்கு விளக்கமாகச் சொல்வதற்கு இன்று இல்லை. யாம் இப்பொழுது இதைச் சொன்னால் “புதிதாக ஏதோ சொல்கிறார்…” என்று எம்மைச் சொல்கின்றார்கள்.

ஏனென்றால் இன்று ஒவ்வொரு மாதத்திலும் இதைச் செய்ய வேண்டும் அதைச் செய்ய வேண்டும் என்று எத்தனையோ ஐதீகங்களையும் சாங்கியங்களையும் தான் நாம் செய்து கொண்டிருக்கின்றோம்.

காரணம்… காலத்தால் இந்த உண்மைகள் மறைந்து விட்டது… மறைத்து விட்டார்கள்.

சித்திரை – ஒரு கனி விளைந்த பின் அது எப்படித் தன் வித்தாக ஆகின்றதோ இதைப் போன்று
1.பல கோடி உணர்வின் தன்மை தனக்குள் கனியாகும் பொழுது
2.அதனின் வித்து ஒவ்வொன்றும் தன்னைக் காத்துக் கொள்ளும் உணர்வாக விளைந்தது.

இதைப்போல்
1.ஒவ்வொரு சரீரத்திலும் தன்னைக் காத்துக் கொள்ளும் உணர்வே விளைந்தது
2.அந்த விளைந்த நிலைகள் கொண்டு உயிரான நிலைகள் மனிதனின் நிலைகள் வரும் பொழுது கனியாகின்றது.

ஒரு மாங்கனி தன் இனத்தின் வித்தை அது உருவாக்கிக் கொள்கிறது. இதைப் போல் தான் உயிரான நிலைகள் கொண்டு பல கோடி உணவை உணவாக உட்கொண்டாலும்… அவை அனைத்திலும் ஒருக்கிணைந்து “ஒவ்வொன்றும் தன்னைக் காத்துக் கொள்ளும் உணர்வாக வந்த… இந்த ஒளியின் சுடராக ஆறாவது அறிவின் தன்மை கொண்டு விளைந்த நிலைகள் “கார்த்திகேயா…”

அதனின் உணர்வு கொண்டு மனித வாழ்க்கையில் வரும் சித்திரையை (குறைகளை) புது வருடம் நீக்க வேண்டும்
1.இருளை நீக்கி மறைந்த பொருளைக் காண வேண்டும்…
2.எவ்வாறு தீமையிலிருந்து மீள வேண்டும்…?
3.எவ்வாறு ஒளியாக மாற வேண்டும்…? என்ற தத்துவத்தைத் தான் மெய் ஞானிகள் நமக்குத் தெளிவாகக் கொடுத்துள்ளார்கள்.

கோவிலைக் கோவிலாக நாம் மதிக்கின்றோமா…?

கோவிலைக் கோவிலாக நாம் மதிக்கின்றோமா…?

 

1.தெய்வீகப் பண்புகளை வளர்க்கக் கூடியது தான் நம்முடைய ஆலயங்கள் அனைத்துமே…!
2.அந்த எண்ணத்துடன் நாம் அங்கே செல்கிறோமா…? என்றால் இல்லை.

ஆனால் கல்லைக் கும்பிடுகின்றார்கள் பிசாசைக் கும்பிடுகின்றார்கள் என்று ஒருவன் சொல்கின்றான்.

தட்டுங்கள் திறக்கப்படும் என்று சொன்னால் உடனே அங்கே சென்று விடுகின்றார்கள். ஆவியை ஏவி விட்டு அதன் வழி செயல்படுவதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.

குழந்தைகள் அங்கே படிப்புக்காகச் சென்றாலும் கூட “நீ பொட்டு வைக்காதே… கோலம் போடாதே…” என்று சொல்கின்றார்கள்.

1.அனைவருடைய மனதையும் ஒன்று சேர்த்து என் குடும்பம் ஒன்றாக வாழ வேண்டும் என்று காலையில் பெண்கள் நெற்றியில் திலகத்தை வைத்து
2.ஒன்று சேர்ந்து வாழ்ந்திடும் அந்த மகிழ்ச்சியான எண்ணங்கள் வர வேண்டும் என்று புள்ளிகளை இட்டு அதை இணைத்து
3.குடும்பத்தில் அனைவரையும் இணைத்திடும் நிலையாகத் தான் கோலமிடச் சொன்னார்கள் நம்முடைய ஞானிகள்.

நீ கோலமிடாதே என்று அவ்வாறு சொல்பவர்கள் பின்னாடி செல்லக்கூடிய கூட்டங்களும் இருக்கின்றது. நம் சாஸ்திரங்களைக் குழி தோண்டிப் புதைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

மனிதன் எப்படிப் பண்பட வேண்டும் என்று ஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களை மதம் என்ற நிலையில் பிரிக்கின்றார்கள். உயிர் கடவுள் என்று சொன்ன நிலைகளையும் மாற்றி அமைக்கின்றார்கள்.

இன்னொன்று என்ன செய்கிறார்கள் தெரியுமா…!

இந்தப் பள்ளியில் பிள்ளைகள் நன்றாக படிக்கிறது என்று தான் சேர்த்து விடுகின்றார்கள். அங்கே பிக்னிக் போக என்று பஸ்ஸில் அழைத்துச் செல்கின்றார்கள். போய்க் கொண்டிருக்கும் பஸ் திடீரென்று ரிப்பேர் ஆகி நின்று விடுகின்றது.

டிரைவரை “சும்மா” அது இது என்று பார்க்கச் சொல்லி விடுகின்றார்கள்… ஒன்றும் வேலை செய்யவில்லை.

உடனே… எல்லோரும் கூட்டுப் பிரார்த்தனை செய்யுங்கள் “அவரவர் இஷ்ட தெய்வங்களை எண்ணி வணங்கிக் கும்பிடுங்கள்” என்று சொல்கின்றார்கள். பஸ் சரியாகி ஓட வேண்டும் என்று எண்ணுங்கள்…! என்று சொல்கின்றார்கள்

அடுத்து பஸ்ஸை ஓட்டிப் பார்க்கின்றார்கள்… பஸ் ஓடவில்லை.!

இப்பொழுது இயேசு கிறிஸ்துவை எண்ணிப் பார்க்கலாம் ஏல்லோரும் அவரைத் தியானியுங்கள் என்று சொல்கின்றார்கள். அதற்குப்பின் பஸ்ஸை ஓட்டிப் பார்த்தால் பஸ் ஓடுகின்றது.
1.ஆஹா…! கர்த்தர் வந்து இந்த பஸ்ஸை இயக்குகின்றார் ஓடாத பஸ்ஸை ஓடச் செய்கின்றார் என்று இ
2.வ்வாறெல்லாம் மனிதனுடைய எண்ணங்களைத் திசை திருப்பிக் கலாச்சாரங்களையே மாற்றிக் கொண்டுள்ளார்கள்.
3.இது போன்ற சம்பவங்களும் இந்த உலகில் நடந்து கொண்டுதான் இருக்கின்றது… இது போன்ற நிலையிலிருந்து நாம் எப்பொழுது தப்புவது…?

நம்முடைய ஆலய பண்புகள் எவ்வளவு தெளிவானது…?

1.யாருக்குமே அங்கே வேற்றுமை இல்லை
2.ஆலயம் வருவோர் அனைவரும் தெய்வீக நிலை பெற வேண்டும்
3.மக்கள் அனைவரையும் ஒன்றுபட்டு வாழச் செய்ய வேண்டும் என்பதற்கே ஆலயம்.

ஆனால் அந்த ஆலயத்தை இன்று நாம் அவமதித்துத் தான் நடக்கின்றோம். ஏனென்றால் தன் கஷ்டத்தை எல்லாம் அங்கே அங்கே சொல்வது… பணம் கிடைக்கவில்லை என்றால் அந்த தெய்வத்தையே பழிப்பது. இந்த நிலையில் தான் நாம் இருக்கின்றோம்.

கோவிலைக் கோவிலாக நாம் மதிக்கின்றோமா…?

நம் உடலே ஒரு கோவில்… அருள் ஞானிகள் உணர்வை இங்கே வளர்க்க வேண்டும். தெய்வ குணத்தை வளர்க்க வேண்டும்.

இதைக் கேட்டறிந்தவர்கள் ஒவ்வொருவரும் இனியாவது
1.அங்கே சென்று அருளைப் பெருக்குவதற்கு
2.தெய்வீகப் பண்புகளைத் தங்களுக்குள் வளர்த்துக் கொள்வதற்கு
3.மக்கள் அனைவரையும் ஒன்றுபட்டு வாழச் செய்வதற்கு அந்த ஆலயத்தில் வேண்டுங்கள்.

நம் உடலுக்குள் இருக்கும் நல்ல குணங்கள் காக்கப்பட வேண்டும் என்பதற்குத்தான் ஆலயத்தைக் கட்டினார்கள்.

1.பொருளறிந்து செயல்படும் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா
2.எங்கள் குழந்தைகள் கல்வியில் சிறந்த ஞானம் பெற வேண்டும் ஈஸ்வரா
3.அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் அனைவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் ஈஸ்வரா
4.நாங்கள் அனைவரும் சகோதர உணர்வுடன் வாழ வேண்டும் ஈஸ்வரா
5.அந்த அருள் சக்தி நாங்கள் அனைவரும் பெற வேண்டும் ஈஸ்வரா என்று நாம் வணங்கினால்
6.மற்றவர்களும் அவ்வாறு அங்கே கும்பிடுகின்றார்கள்.

இங்கே தனித்து இருக்கும் போது அதை எடுக்க முடியவில்லை…! ஆனால்
1.கூட்டாக ஆலயத்திற்குச் சென்று அந்த்த் தெய்வ குணத்தை எண்ணி எடுக்கும்படி செய்கின்றார்கள்
2.இதை நாம் யாராவது செய்கின்றோமா…?

மனிதனுடைய ஆறாவது அறிவு கொண்டு ஏழாவது நிலையாக ஒளியாகத் தெளிந்து… தெரிந்து… தெளிவான வாழ்க்கை வாழ்வதற்கு… ஆலயத்தை அமைத்தார்கள் ஞானிகள்.

அதை நாம் புரிந்து நடக்க வேண்டும்.

எதை நமச்சிவாயமாக ஆக்க வேண்டும்…?

எதை நமச்சிவாயமாக ஆக்க வேண்டும்…?

 

பிறர் செய்யும் தவறுகளைப் பார்க்கப்படும் பொழுது “இப்படித் தவறு செய்கின்றார்களே…” என்று எண்ணுகின்றோம். ஆனால் அந்த நேரத்தில் “அவர்கள் தவறிலிருந்து விடுபட வேண்டும்…” என்று நாம் எண்ண முடியவில்லை.

அதற்குண்டான ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் நிலையாகத்தான்
1.உடல் அழுக்கையும் துணி அழுக்கையும் தினசரி போக்குவது போன்று
2.வாழ்க்கையின் சந்தர்ப்பங்களில் நம்மை அறியாது வந்து சேரும் அழுக்கைப் போக்க
3.விண்ணை நோக்கி நினைவைச் செலுத்தி மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நுகர்ந்து நம் உடலுக்குள் செலுத்தி
4.நாம் கேட்டறிந்த தீமைகளைத் தூய்மைப்படுத்தும்படி… ஆன்மாவைத் தூய்மைப்படுத்தச் சொன்னார்கள் ஞானிகள்.

பல முறை இவ்வாறு செயல்படுத்த… இந்த வாழ்க்கையில் யாரையெல்லாம் சந்தித்தோமோ அவர்கள் எண்ணுவதற்கு நேரமில்லை. இருப்பினும்
1.என்னைப் பார்ப்போருக்கெல்லாம் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் படர வேண்டும்.
2.அவரை அறியாத இருள்கள் நீங்க வேண்டும்
3.அவர்கள் பிணிகள் நீங்க வேண்டும்
4.அவர்கள் வாழ்க்கையில் மலரைப் போன்ற மகிழ்ச்சி பெற வேண்டும்
5.அவர்கள் குடும்பம் எல்லாம் நலம் பெற வேண்டும் ஈஸ்வரா என்று
6.நமக்குள் ஆண்டு கொண்டிருக்கும் உயிரிடம் கேட்டால் ஓ…ம் நமச்சிவாய… ஓ…ம் நமச்சிவாய…”

ஓ… …ம் நமச்சிவாய ஓ… …ம் நமச்சிவாய என்று வெறும் வாயில் சொல்வதில் பொருள் இல்லை. அது வெறும் சொல்.

காரணம்… நாம் எந்த உணர்வினை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று எண்ணுகின்றோமோ அது ஓ…ம் நமச்சிவாய…! அந்த அனைவரும் நலம் பெற வேண்டும் என்ற அந்த உணர்வினை நமக்குள் சிவமாக்க (உடலாக) வேண்டும்.

ஆக…. எதை நமச்சிவாயமாக ஆக்க வேண்டும்…?

சாஸ்திரங்களில் ஓ…ம் என்றால் பிரணவம் என்று காட்டப்பட்டுள்ளது. “அதையே சொன்னால் ஜீவன் வந்துவிடும்” என்று தவறான வழிகளில் ஜெபித்துக் கொண்டுள்ளோம்.

அவன் சொன்ன உள் பொருளே… வாழ்க்கையில் வந்த இருளைப் போக்கிட “மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும் என்று எண்ணும் பொழுது…”
1.நமது உயிர் அதை ஓ… என்று அதைப் பிரணவமாக்கி
2.ம்… என்று நம் உடலாக ஆக்குகின்றது

அதாவது… மகரிஷிகளின் அருள் சக்திகளை உன் உடலாக்கு உனக்குள் அதை ஜீவ அணுவாக ஆக்கு என்று தான் காவியத்தைப் படைத்துள்ளார்கள்.

ஆனால் வெறுமனே ஓ… …ம் நமச்சிவாய என்று சொன்னால் “சிவன்” தன்னையே சொல்லிக் கொண்டிருக்கின்றான் என்று… எதையாவது ஓடி வந்து செய்வார் என்று “இப்படிப்பட்ட நம்பிக்கையை” ஊட்டி விட்டார்கள்.

சந்தர்ப்பத்தில் ஒருவன் விபத்துக்குள்ளாகின்றான். “இப்படி ஆகிவிட்டதே” என்று பதட்டமாகி வேதனையுடன் சுவாசிக்கும் பொழுது ஓ…ம் நமச்சிவாய. பய உணர்வுகளை எடுக்கும் பொழுது அது உடலாக… சிவமாக ஆகிவிடுகிறது.

அடுத்து நமக்குள் நடுக்கமும் அச்சமும் ஏற்படுகின்றது.

உன் உயிர் நீ நுகர்ந்ததை எவ்வாறு உடலாக ஆக்குகின்றது…? என்று காட்டுகின்றார்கள்.
1.நடந்த விபத்தை கண்கள் உற்றுப் பார்க்கும்படி செய்தது… அந்த உணர்வினை கவரும்படி செய்தது
2.உயிர் ஓ… என்று பிரணவமாக்குகின்றது உணர்வினை உனக்குள் உணர்த்துகின்றது
3.உணர்வினை உடலாக (சிவமாக) உறையச் செய்கின்றது என்று தான் சாஸ்திரங்கள் தெளிவாக நமக்குக் காட்டியுள்ளது.

நாம் யாரும் தவறு செய்யவில்லை…! சந்தர்ப்பத்தில் தான் அந்த விபத்து நடந்தது. வேண்டுமென்று அவன் விழுகவில்லையே…! அவன் வாழ்க்கைக்குச் சென்றான்… எதிர்பாராது வண்டி மோதுகின்றது… அடிபட்டு அவன் துடிக்கின்றான்.

அவன் உடலிலிருந்து துடித்து வெளிப்படுத்தும் உணர்லைகளைச் சூரியன் கவர்கின்றது… அலைகளாகப் பரப்புகின்றது.

நம் கண் அவனைப் பார்க்கின்றது… உணர்வினை கருவிழி (படமாக) பதிவாக்குகின்றது. அவன் வெளிப்படுத்திய அலைகளைக் கண்ணின் காந்தப்புலன் நமது ஆன்மாவாக மாற்றி… சுவாசிக்கும்படி செய்து… உயிரிலே பட்ட பின் உணர்த்துகின்றது… உடலில் ஜீவான்மாவாக மாற்றுகின்றது.

ஆக நாம யாரும் தவறு செய்யவில்லை… நம்முடைய புலனறிவு தீமைகளிலிருந்து விடுபடும் உணர்வாகக் காட்டுகின்றது… தீமை என்று உணர்த்துகின்றது.

ஆனால் ஆறாவது அறிவின் துணை கொண்டு “அதிலிருந்து நாம் விடுபட வேண்டுமே…!”

தீமைகளிலிருந்து விடுபடுவற்குத் தான் விநாயகர் தத்துவத்தில் காட்டிய வழிப்படி…
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று “உயிருடன் ஒன்றினால்” ஓ…ம் நமச்சிவாய.
2.அவன் (மகரிஷி) தீமைகளை எப்படி அகற்றினானோ “சிவாய நம ஓ…ம்” நம் தீமைகளை அகற்றச் செய்கின்றது.

நாம் பார்ப்போருக்கெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வு பெற வேண்டும்… அவர்களை அறியாத இருள்கள் நீங்க வேண்டும்… அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும்… அவர்கள் நோய்கள் நீங்க வேண்டும்… எல்லோரும் அந்த அருள் சக்தி பெற வேண்டும்… மெய்ப்பொருள் கண்டுணர்ந்து செயல்படும் சக்தி பெற வேண்டும்…! என்று இப்படி எண்ணினால் இது ஓ…ம் நமச்சிவாய…! சிவாய நம ஓ…ம்.
1.அந்த அரும் பெரும் சக்திகள் நம் உடலாகின்றது
2.மற்றவரின் தீமைகளை அகற்றும் சக்தியாக நம்மிடமிருந்து வெளிப்படுகின்றது.

இதை நாம் அறிந்து கொள்ளுதல் வேண்டும்.

“ஆலய வழிபாடு” என்பதே இன்றைய காலத்தில் எப்படி எப்படியோ மாறிவிட்டது…!

“ஆலய வழிபாடு” என்பதே இன்றைய காலத்தில் எப்படி எப்படியோ மாறிவிட்டது…!

சூட்சமத்தில் நடப்பதை நாம் எப்படி அறிந்து செயல்பட வேண்டும்…? என்று
1.அன்று அகஸ்தியன் உருவ வழிக்கு (தெய்வ) உணர்வுகளை ஊட்டி அருவ நிலைகளை நீ எப்படி நுகர்வது…?
2.அந்த அருவத்தை உனக்குள் சேர்க்கப்படும் பொழுது அந்த ஞானத்தின் வழி உன்னை எப்படிக் காக்க வேண்டும்…? என்று
3.ஆலயங்களிலே சிலைகளை வடிவமைத்தான்.

ஆனால்… சிலையை வைத்து இன்று பூஜை செய்பவரும் சரி ஆலயத்திற்குப் பக்தி கொண்டு செல்வோரும் சரி… துயரத்தைத் தான் வளர்த்துக் கொண்டிருக்கின்றோமே தவிர “துயரத்தை நீக்கும்… ஒரு சொல் கூட வருவதில்லை…”

கேட்டால் நான் அப்படியெல்லாம் கும்பிடுவதில்லை என்று சொல்வார்கள் பெரும்பகுதியானவர்கள். நான் அப்படிக் கும்பிடுவதில்லை இப்படித்தான் கும்பிடுகிறேன் என்பார்கள் சொல்லுக்குப் பதில் வரும் அவ்வளவு தான்…!

ஆனால் உண்மையின் இயக்கங்கள் நமக்குள் அது வளரும் முறைகளை நாம் கையாள்வது எப்படி…? என்பதைச் சூட்சுமத்தில் நடப்பதைத் தான் உருவத்தை அமைத்துக் கொடுத்தனர் ஞானிகள்.
1.உருவத்தை அமைத்துக் கொடுத்த அந்த ஞானிகளை
2.சிறிதளவாவது நாம் மதிக்கின்றோமா என்றால் இல்லை

அன்று கல்வி அறிவு இல்லை என்றாலும் தெய்வ நிலைகளை எளிதாக எடுத்துக் கொண்டார்கள் அது எல்லாம் படிப்படியாக மாறி இன்று அனைத்துமே வேறு வழிகளில் திரும்பி விட்டது.

அன்றைய பக்தியின் நிலைகள் ஆலயத்திற்குச் சென்றால் அந்தத் தெய்வீக குணத்தைப் பெற வேண்டும் என்று “தெய்வத்திற்கு முன் நின்று… தவறு செய்யக் கூடாது…!” என்ற எண்ணம் இருந்தது.

இன்று தெய்வத்திற்கு முன் நின்று தவறைச் சொல்லிவிட்டு “பார் என்னை என்னைஸ் சோதிக்கின்றாய்…” என்ற நிலை தான் வருகின்றது. கல்வி அறிவு கொண்டு இன்று வளர்ந்து கொண்டவர்கள்
1.தவறையும் செய்துவிட்டு… தெய்வத்திடம் சென்று தன்னை நியாயப்படுத்தி
2.அந்த உணர்வுகளை வளர்த்துக் கொள்பவர் தான் பலர் உண்டு.

ஞானிகள் காட்டிய உணர்வுகளை இதுவரை நாம் பெறவில்லை…! கொலை செய்பவனும் தன்னை நியாயப்படுத்திக் கொள்கின்றான்
1.என்னை இப்படியே தொல்லை படுத்திக் கொண்டிருக்கின்றான்… நீ கேட்க மாட்டேன் என்கிறாய்.
2.அதனால் அவனைத் தொலைத்து விட்டு உனக்கு வந்து நான் காணிக்கை செலுத்துகிறேன் என்று போடுகின்றார்கள்… இப்படியும் உண்டு.

நான் காளியாக மாறுவேன் பேயாக மாறுவேன் அதன் வழியில் நான் செயல்படுத்துவேன் ஏனென்றால் காளி கோவிலில் ஆட்டையும் கோழியையும் கொடுத்துவிட்டு… பார்…! எனக்கு அவன் இடைஞ்சல் செய்தான்…! அதற்காக வேண்டி ஆட்டைப் பலியிட்டு அவன் நாசமாகப் போக வேண்டும் என்று இப்படித்தான் கும்பிடுகின்றார்கள்.

“ஒன்றுமறியாத ஜீவன்களை அங்கே கொல்கின்றோம்…” என்பதை மறந்து விடுகின்றார்கள்

இதைப் போன்று எத்தனை துயரின் நிலைகளைத் தான் தெய்வம் என்ற நிலையில் வளர்க்க முடிகின்றதே தவிர அருள் ஞானிகளின் உணர்வை நாம் பெற முடியவில்லை.

சாதாரண பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் தான் ஆலயத்திலே சிலைகளை வைத்தார்கள் ஞானிகள். இது இந்த குணம் கொண்டது என்று ஸ்தல புராணங்களை வடித்து நீ முதலில் எதை எடுக்க வேண்டும்…? என்ற நிலையில் அதைக் காட்டுகின்றார்கள்.

அது மட்டுமல்லாமல்…
1.அங்கிருக்கும் சிலைக்கு எத்தனையோ அபிஷேகங்களைக் காட்டி
2.உயிரான ஈசனுக்கு நாம் ஊட்ட வேண்டிய நல் உணர்வுகளை… அருள் மணங்களை… அங்கே உணர்த்துகின்றார்கள்.

ஞானிகள் காட்டிய வழியில் உயிரான ஈசனுக்கு நல் மணங்களை ஊட்டினால் மகிழ்ந்து வாழும் சக்தி பெற முடியும்… தெய்வீகப் பண்புகளை வளர்க்க முடியும். மனிதன் என்ற முழுமை அடைய முடியும்.

எண்ணத்தால் உருவாக்கப்பட்ட… “உடலுக்குள் நடக்கும் இராமாயணம்”

எண்ணத்தால் உருவாக்கப்பட்ட… “உடலுக்குள் நடக்கும் இராமாயணம்”

 

ஒவ்வொரு நாளும் எந்தெந்த குணங்களை நாம் நுகர்கின்றோமோ உயிருடன் ஒன்றிய சக்தியாக அது மாற்றுகின்றது
1.நாம் நுகரும் உணர்வுகள் அனைத்தும் அதற்குண்டான சக்தியாக மாற்றுகின்றது.
2.அப்படி இணைந்த நிலைகளில் அது அது… தன் தன் இனத்தைப் பெருக்கத்தான் முயற்சிக்கும்.

இராமனுடைய தாயோ சாந்தமானது. அவளுக்குப் பிறந்தது சாந்தமான குணம் கொண்ட இராமன். அவன் தான் இந்த சாம்ராஜ்யத்தை ஆளக்கூடியவன்… இந்த உடலை… அனைவரையும் அரவணைத்து தனக்குள் வாழும் நிலை பெற்றவன் என்ற உணர்வைத் தாய் எண்ணுகின்றது.

இராமனின் தாய் அப்படி எண்ணினாலும்
1.ஆசையால் நுகர்ந்த உணர்வு… அதே ஆசையின் நிலை கொண்டு…
2.அதாவது பரதனுடைய தாயோ தன் மகனுக்குத் தான் பட்டம் சூட்ட வேண்டும் என்று விரும்புகிறது.

நல்லவனுக்கு… தலைமகனுக்கு… இந்த பட்டத்தைச் சூட்டினால் இந்த சாம்ராஜ்யத்திற்கு நன்றாக இருக்கும் என்ற ஆசை கொண்டு வளர்த்தாலும்
1.சகோதர ஒற்றுமை கொண்ட இவன் அண்ணனே சிறந்தவன் என்று பரதன் சொல்கின்றான்.
2.இதை மக்களுக்கு எடுத்துக் காட்டுகின்றார்கள்.
3.(அண்ணன் என்று செயலாற்றினாலும்… அவன் வரும் வரையிலும் அவன் காத்திருந்தான் என்று உணர்த்துகின்றார்கள்).

ஆகவே இராமனுடன் சேர்ந்தால் அவருடன் இணைந்து அவன் போக்குக்குச் சென்று விடுவான் என்று பரதனுடைய தாய் எண்ணுகின்றது. அப்போதுதான் இராமனைக் காட்டுக்கு அனுப்புகின்றது.

காட்டிற்குள் 12 வருடம் வனவாசம் சென்றால் “அந்த ஒரு மண்டலத்திற்குள்” பரதன் சிறப்பான நிலைகள் அடைந்து விடுவான். இவனின் ஆட்சி வந்தால் இராமன் வெறுத்து விடுவான் என்று சூழ்ச்சி செய்கின்றது.

இதற்கென்று சூதின் நிலைகளை உபதேசிக்கக் கூடியவர்களின் (கூனி) உணர்வுகளை அந்தத் தாய் செவிகளில் கேட்கின்றது.
1.ஒவ்வொரு உணர்ச்சியும் ஆசை என்ற நிலையில் வரும் போது அந்த உணர்வின் தன்மை எப்படி மாற்றுகின்றது…? என்பதை…
2.ஒருவர் வாழ்வதைப் பார்த்தபின் “அந்த வாழ்க்கை வாழ வேண்டும்…” என்று தன் மகனையே காக்கின்றது.

நமக்குள் எடுத்துக் கொண்ட குணம் எந்தச் சக்தியோ அந்தந்த இனத்தைப் பெருக்கத்தான் நம்முடைய குணங்கள் அது வரும் என்பதனைத் தெளிவாக்குகின்றனர்.

உயிர்… தான் நுகர்ந்ததை எல்லாம் தன் சக்தியாக ஆக்கினாலும் அது மீண்டும் தன் இனத்தையே பெருக்கும் என்ற நிலையை அங்கே தெளிவாகக் கூறுகின்றார் வான்மீகி.

நுகர்ந்த உணர்வின் சத்து உடலுக்குள் இயக்கும் சக்தியாக இருப்பினும் நுகர்ந்த உணர்வுகள் உடலாகிறது… அதன் வழி கொண்டு உருப்புகளாகின்றது அந்த உறுப்புகளின் வளர்ச்சியைக் கொண்டுதான் இராவணன்…! அதாவது
1.அவன் சகலகலா வல்லமை பெற்றவன் எல்லா இசைகளிலும் அவன் வல்லவன் சர்வ வல்லமை கொண்டவன் என்று
2.புழுவிலிருந்து மனிதன் வரையிலும் அதனுடைய உணர்வுக்கொப்ப இசைகள் வளர்ந்தது.
3.அதன் இசைகளுக்கொப்ப மனித உருவைக் கொடுத்தது
4.இசைகளிலே வல்லவன்… இவன் சிவனை வணங்குகின்றான்… “உடல் மீது பற்று கொள்கின்றான்” என்று காட்டுகின்றார்கள்.

ஆதே சமயத்தில்… தசரதன் என்றால் பத்தாவது நிலையை அடையக்கூடிய உயிர்… தான் பல உணர்வுகளை எடுத்தாலும் “சந்தர்ப்பத்தால் நுகர்ந்தது…” தன்னுடன் இணைத்துக் கொண்ட சக்தி (கைகேயி) தன் மகனுக்கே பட்டம் சூட்ட வேண்டும் என்று
1.நல்லவன் ஆட்சி புரிய வேண்டுமென்று ஆசை வளரப்படும் பொழுது
2.அப்பொழுது எந்த நிலை…? என்று காட்டுகின்றார்கள்.

சிவன் என்ற உடல் வரப்படும் பொழுது இராவணன் தன்னுடன் இணைந்து செயல்படும் சகோதரி சூர்ப்பணகை “மற்றொன்றின்” அழகைக் கண்டு இராமனை அவள் விரும்புகின்றார்.

இராமனைத் தனக்குள் கவர வேண்டும் என்று விரும்பினாலும்… அவன் மனைவி அழகாக இருக்கின்றாள்… அவளை ஒதுக்கினால் தானே இங்கே வருவான். ஆகவே அவனுடைய மனைவியை மற்றவருடன்கு சேர்த்து விட்டால் அதற்குண்டான நிலையில் தனக்குக் கிடைக்கும் என்று அவளுடைய அழகைப் பற்றி இராவணனிடம் வர்ணிக்கின்றாள்.

அவள் அழகாக இருந்ததால் “என்னை இராமன் அவமதித்தான்…” என்று குறை கூறி இந்த உணர்வை இராவணனிடம் ஊட்டுகின்றாள். இதை உற்றுப் பார்க்கும் போது இராவணன் சீதாவை அடைய ஆசைப்படுகின்றான்.

இந்த உணர்வு அவனுக்குள் வரும் பொழுது
1.அவன் சகல வல்லமை பெற்றிருந்தாலும் பத்தாவது நிலையை அடையும் இந்த உணர்வுகள்
2.அதனால் பகைமை உணர்வுகள் உடலுக்குள் எப்படித் தோற்றுவிக்கின்றது…? என்பதை அப்படிக் காட்டுகின்றார்கள்.

அதே சமயத்தில் அவனுக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்கள் எல்லாம் தூங்குகின்றது… கும்பகர்ணன்…! என்றுமே அந்த நல்ல குணங்கள் தூங்கிக் கொண்டிருக்கும். ஆனால் அவன் மிக மிக நல்லவன்…! (தீமையின் நிலை அதிகரிக்கும் போது நல்ல குணங்கள் செயலிழந்திருப்பதை அப்படிக் காட்டுகின்றார்கள்).

தான் நுகரும் உணர்வுகளால் எது உருவாகின்றதோ…
1.வெறுக்கும் உணர்வுகளும் ஆசையின் உணர்வுகளும் வரப்படும் பொழுது
2.இவனுள் விளையும் உணர்வே இவனுக்கு எதிரியாகின்றது.
3.இராவணனை அவன் மகனே எதிர்க்கும் நிலை வருகின்றது.

இயற்கையின் சக்தி நல்லவன் என்று வரப்படும் பொழுது… தீமை என்ற உணர்வு வந்தால் அதை வெறுக்கும் தன்மை வருகின்றது.

இவனுக்குள் விஷத்தின் தன்மை கலந்தபின் இவனுடைய செயலாக்கங்கள் அனைத்தும் எந்த இசைகளைக் கண்டானோ… அனைத்தும் “சோக இசைகளாக மாறுகிறது…!”

தன் உணர்வின் தன்மை… இராமனுக்கு யார் காவலனாக தூதுவனாக இருக்கின்றார்…? ஆஞ்சநேயர்.
1.சூரியனிலிருந்து வெளிப்படக்கூடிய வெப்பம் காந்தம் விஷம்… “இராமா லட்சுமணா” என்றாலும்
2.ஒரு சுவையின் சத்தை… தனக்குள் எதை எடுத்துக் கொள்கின்றதோ (சீதாலட்சுமி) அந்த குணத்தைக் காக்க
3.அந்த உணர்வின் தன்மை ஊடுருவி அதைக் காக்கும் செயலாகச் செயல்படும்.
4.இராமன் இட்ட கட்டளையை ஆஞ்சநேயன் செயல்படுத்துவான்.

அதாவது வேதனை என்ற உணர்வை நாம் எடுத்துக் கொண்டால்… அந்த உணர்வின் தன்மை தன்னைப் பாதுகாக்கும் நிலையாக… மற்றதை (நல்லதை) அது அடக்கும்.

எந்த உணர்வின் தன்மை…? அந்த எண்ணங்கள் தான்…!

ஆக எதைக் கவர்ந்ததோ அதன் உணர்வின் தன்மை “சீதா…” என்ற சுவையைக் காக்கும் உணர்ச்சிகளையே அங்கே தூண்டுகிறது. இதைக் காட்டுவதற்கு ஆஞ்சநேயர்… தாவிச் செல்லும் உணர்வுகள்…! என்று காட்டுகின்றார்கள்.
1.ஒரு உணர்வின் உணர்ச்சி எவ்வாறு செயல்படுகிறது…?
2.மற்றவர்களை அது எப்படி இயக்குகின்றது…? என்ற நிலையும்
3.எண்ணங்கள் எப்படி உணர்வுகள் ஆகின்றது…?
4.உணர்வுகள் எப்படி உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது…?
5.உணர்வுகள் எப்படி உடலாகின்றது…?
6.உணர்வுகள் எப்படி அதனதன் உணர்ச்சியின் தன்மையைத் தூண்டுகிறது…? என்ற நிலையை
7.அன்று வான்மீகி மூடனாக இருந்தாலும் தெளிவாக உணர்த்துகின்றார்.