மனிதன் விண் செல்லும் வழியைத் தான் காட்டுகிறது “வேதங்களும் உபநிஷத்துக்களும்”

மனிதன் விண் செல்லும் வழியைத் தான் காட்டுகிறது “வேதங்களும் உபநிஷத்துக்களும்”

 

1.உருவம். அது ரிக்
2.ஒரு பொருளிலிருந்து மணங்கள் வரும்போது சாம.
3.ஒரு பொருளுடன் இணைந்து அதை மாற்று நிலைகள் உருமாற்றும்போது இரண்டு செயலும் தன் உணர்வின் சத்தை மாற்றுகின்றது அதர்வண.
4.இரண்டும் மாறி ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படும்போது யஜூர்.

ரிக் சாம அதர்வண யஜூர் மீண்டும் சாம…! வேதங்கள் கூறியபடித் தான் நான் (ஞானகுரு) உபதேசிக்கின்றேன். புதிதாக ஒன்றும் சொல்லவில்லை.

ஒருவர் உடலை விட்டுப் பிரிந்து விட்டால் அதர்வண வேதத்தில் உருவாக்கப்பட்ட சாங்கிய சாஸ்திரங்களைத் தான் நாம் கையாளுகின்றோமே தவிர… ஞானிகள் காட்டியதை நாம் கடைப்பிடிக்கவில்லை.

ஒரு மனிதன் கோபமாகப் பேசுகிறான் என்றால்
1.அதிலிருந்து வெளிப்படக்கூடியது சாம இசையாக மாறுகின்றது… மணங்களாக மாறுகின்றது… குணங்களாக மாறுகின்றது.
2.எந்த மனிதன் அதை நுகர்கின்றானோ அந்த இசையின் தன்மை சாந்த குணம் கொண்டவனை…
3.கோப குணங்கள் அடக்கி விடுகின்றது அதர்வண.
4.நல்ல குணங்களை அடக்கிய பின் யஜுர் கோபத்தை உருவாக்கும் வித்தாகிறது.

அதாவது நல்ல குணத்துடன் ஒரு கோபக்காரரின் உணர்வு சேர்ந்து விட்டால் யஜுர்… நம்முடன் கலந்து அந்த உணர்வின் தன்மை எனக்கு எவன் தீங்கு செய்தானோ அவனை எண்ணச் செய்கின்றது… மீண்டும் அதனுடைய நிலைக்கு…!

எந்த மனித உடலில் இருந்து இந்தத் தீங்கின் தன்மை விளைவித்ததோ அதனின் உணர்வின் வலுவாக அதே எண்ணங்கள் கொண்டால் அடுத்து அந்த உடலுக்குள் சென்று அதை வளர்க்கும்.

ஆனால்
1.இதையெல்லாம் வென்ற அருள் மகரிஷிகள் உணர்வை நாம் நுகர்ந்தோம் என்றால் அது சாம
2.அதை நமக்குள் நுகர்ந்து வளர்த்துக் கொண்டால் தீமையை அடக்கும் அதர்வண.
3.தீமைகள் அடக்கும் உணர்வுகள் ஒன்றி தனக்குள் முழுமை அடையும் பொழுது யஜுர் (வித்தாகிறது)

மீண்டும் அந்த அருள் மகரிஷிகளை நினைவு கொண்டால் அருள் ஞான உணர்வுகள் விளைந்து… மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் நிலைகளும் பெற்று இந்த உடலை விட்டு நாம் சென்ற பின் அருள் மகரிஷிகளின் வட்டத்தில் இணைகின்றோம்.

1.அவரின் சார்புடையோர் விண்ணின் ஆற்றலைப் பெருக்கி
2.அந்த உயிரான்மா சப்தரிஷி மண்டலம் சென்றடைய வேண்டும்
3.உடல் பெறும் உணர்வுகள் கரைய வேண்டும்
4.உயிருடன் ஒன்றிய அறிவின் ஞானம் நிலைத்திருக்க வேண்டும் என்று
5.எண்ணத்தால் எவர் ஒருவர் செய்கின்றனரோ “உபநிஷத்துக்களில் கூறப்பட்ட வழிப்படி அவர்கள் செய்கிறார்” என்று பொருள்.

வேதங்களில் காட்டப்பட்டுள்ள சாரங்களும் இது தான்.

அந்த உயிரான்மா முதலில் அழியா ஒளிச் சரீரம் பெறுகின்றது… அடுத்து அதன் வழியிலேயே அவரை பின்பற்றிக் அந்த குடும்பத்தாரும் விண் செல்ல ஏதுவாகின்றது.

நட்சத்திரங்களுக்குண்டான “ஜொலிப்பு”

நட்சத்திரங்களுக்குண்டான “ஜொலிப்பு”

 

வானவியல் இயக்கத்தின் அடிப்படையில் நமது சூரிய குடும்பத்திற்குப் பிற மண்டலங்களிலிருந்து வரக்கூடியதை எல்லாம் 27 நட்சத்திரங்கள் கவர்கிறது.

அதைக் கவர்வதற்காகப் பால்வெளி மண்டலமாக அமைத்து நூலாம்படை போல வலையை விரித்து விடுகின்றது.
1.பிற மண்டலங்களின் உருவான அணுக்கள் இதிலே பட்டபின்
2.அதனுடைய உணர்வைத் தனக்குள் எடுக்கும் பொழுது ஒளியின் மின்கதிர்களாக மாறுகின்றது
3.அதனால் தான் நட்சத்திரங்களுக்கு அவ்வளவு ஜொலிப்பு…!

அணு விசைகள் (அணு ஆயுதங்கள்) வெடித்த பின் அதனுடைய ஓளிக் கதிர்கள் நம் கண்ணை எப்படிப் பறிக்கின்றதோ… ஊடுருவிப் பாய்கின்றதோ… அதே போல் நட்சத்திரங்களிலிருந்து வரும் மின்னல்… அதாவது
1.ஒரு பொருளுடன் ஒரு பொருள் நட்சத்திரங்களின் அணுக்கள் (ஒன்றுடன் ஒன்று) மோதப்படும்போது
2.பளீர்… என்று மின்னலாக மிகக் கடுமையாக ஊடுருவிப் பாய்கின்றது.

அந்த மின்னலின் கதிரியக்கங்கள் புவியின் ஈர்ப்புக்குள் வந்தால் பூமியின் நடு மையத்திற்கே வேகமாக ஊடுருவிச் செல்கின்றது. பூமியைப் பார்த்தால் கல் (பூமியின் நிலப்பகுதி) மூடி இருப்பது போன்று இருக்கும். ஆனால்
1.ஒவ்வொரு கல்லுக்குள்ளும் பாறைக்குள்ளும் அந்த நட்சத்திரங்களின் கதிரியக்கப் பொறிகள் உண்டு
2.அதன் வழி பட்டபின் அதனுடைய தொடர் வரிசையில் நம் பூமியின் நடுவிட்டம் சென்றடைந்து
3.பூமியின் சுழற்சியில் தேங்கும் இடமான மையத்தில் தேங்கி விடுகின்றது.

இது அனைத்தும் சேமிக்கப்பட்டு கொதிகலனாக மாறி வெளியே இருப்பது அனைத்தையும் கூழாகக் கரைத்து விடுகின்றது. அதிகமான அமிலங்களாக மாறி விட்டால் அப்போது பூமியிலே நில நடுக்கம் தோன்றும். நிலங்கள் அப்படியே கீழே சரிந்து உள்ளே போவதை நாம் பார்க்கலாம்

நட்சத்திரங்கள் இது போன்று வெளிப்படுத்தும் கதிரியக்கப் பொறிகள் நம் பூமிக்குள் ஊடுருவி பூமியின் ஈர்ப்புக்குள்ளே சென்று விட்டால் சிறுகச் சிறுகச் சேமிக்கப்பட்டுத் தன் அருகில் உள்ள அனைத்தையும் கரைக்கப்படும் பொழுது மேல் பாகம் அப்படியே அமிழ்ந்து விடும் (பூகம்பம்).

எந்தப் பகுதியில் இதனுடைய அமிலங்களாக உருகப்படுகின்றதோ மேல் பாகம் எடை தாங்காது அப்படியே கீழே இறங்கும்.
1.விஞ்ஞான அறிவால் இதையெல்லாம் கண்டு கொள்வது அவ்வளவு சுலபம் அல்ல
2.எப்பொழுது எதைச் செய்யும்…? எப்படி ஆகும் என்று…!

இதைப் போன்ற எம்முடைய (ஞானகுரு) உபதேசங்கள் சில நேரங்களில் மிகவும் நுட்பமாக வெளி வரும். மற்றவர்கள் அதைத் தவறான வழிகளில் எடுத்துச் செல்வதும் உண்டு.

அத்தகையவர் கைகளில் சிக்கக் கூடாது என்பதற்காகத் தான் சில நேரங்களில் அதிவேகமாக யாம் சொல்வது. ஆனால் அதே சமயத்தில்
1.உணர்வின் ஈர்ப்புடன் பதிவு செய்ய வேண்டும்…
2/நல்ல வழியில் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பவர்களுக்கு உரமாக ஏற்றி
3.மீண்டும் நினைவு கொள்ளும் போது அந்த மெய் வழியினைப் பெறும் தகுதியும் அவர்களுக்கு ஏற்படுத்துகின்றோம்.

இதிலே எத்தனையோ வழிகள் உண்டு…!

தீமையை விளைவிப்போர் நன்மையைத் தீமையாக மாற்றி விடுவார்கள்… அந்த அருள் ஞானிகளின் உணர்வுகள் அதிலே சிக்கிவிடக் கூடாது.

யார் உண்மையிலேயே இந்த அருள் ஞானத்தைப் பெற வேண்டும் என்று ஏங்கிக் கொண்டிருக்கின்றர்களோ அவர்களுக்கு இது கிடைக்க வேண்டும் என்பதற்குத்தான் ஒவ்வொரு நிலைகள் உபதேசிக்கப்பட்டு
1.சில உண்மைகளை ஆழமாக உங்களுக்குள் பதிவு செய்வதும்
2.மெய் உணர்வின் உணர்வுகளை உங்களுக்குள் சில நேரங்களில் சிறிது வேகமாகப் பேசுவது உண்டு.

சாமி இலேசாகப் பேசிக் கொண்டிருந்தார் திடீரென்று இப்போது வேகமாகப் பேசுகிறார் என்று நீங்கள் எண்ண வேண்டியதில்லை.

உங்கள் ஈர்ப்புக்குள்… உங்கள் உணர்வின் குணங்களுக்குள் அதைச் சீராக நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்குத்தான் இப்படி எல்லாம் செய்வது.

இறந்தவர்களுக்கு நாம் நல்லதைச் செய்கின்றோமா… அல்லது கெடுதல் செய்து கொண்டிருக்கின்றோமா…?

இறந்தவர்களுக்கு நாம் நல்லதைச் செய்கின்றோமா… அல்லது கெடுதல் செய்து கொண்டிருக்கின்றோமா…?

 

இறந்த உங்கள் தாய் தந்தையின் நினைவாக ஒவ்வொரு அமாவாசையிலும் அல்லது வருடத்தில் ஒரு நாள் அமாவாசை அன்று படையல் வைத்துக் கும்பிடுகின்றீர்கள்.

அன்று விரதம் இருந்து… அவர்கள் எதை எல்லாம் உணவாக உட்கொண்டார்களோ அந்த உணவைப் படைத்து வணங்கி பின் நீங்கள் அதை உணவாக உட்கொள்கின்றீர்கள்.

அமாவாசை அன்று அந்த இருள் சூழ்ந்த காலங்களில் தான் மந்திரவாதிகள் சில வேலைகளைச் செய்வார்கள்.
1.சாங்கிய சாஸ்திரப்படி செய்பவர் குடும்பங்களின் வீட்டு வாசல்படியில் இருக்கும்
2.அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர் காலடி மண்ணை எடுத்துச் செல்வார்கள்.

இருண்ட நேரங்களில் அவர்கள் கற்றுணர்ந்த அதர்வண வேதத்தின்படி மந்திரத்தைச் சொல்வார்கள்.

குடும்பத்தில் யார் யார் எந்த தெய்வத்தைப் பக்தியில் எண்ணி அந்த்த் தெய்வத்தின் மந்திரத்தை ஆழமாகப் பதிவு செய்து அதைச் சொல்லிச் சொல்லி ஜெபித்தார்களோ அதன் துணை கொண்டு
1.அவருடைய நாமத்தையும் சொல்லி குடும்பத்தையும் சொல்லி மந்திரவாதிகள் ஜெபிப்பார்கள் என்றால்
2.இறந்த ஆன்மா அவருடைய கைகளிலே கைவல்யமாகி விடுகின்றது.

ஒவ்வொரு குணங்களுக்கும் ஒவ்வொரு மந்திர ஒலி ஒன்று உண்டு. அதை வைத்து அந்த ஆன்மாவில் இருக்கக்கூடியதைக் கைவல்யப்படுத்துவார்கள்.

அதே சமயத்தில் உடலை விட்டுப் பிரிந்து சென்ற அதாவது… கருக் கலைக்கப்பட்டு வெளிவந்த ஒரு பிண்டத்தைக் கையில் எடுத்து அதை ஜெபிப்பார்கள்.

ஜெபிக்கும் பொழுது அந்தப் பிண்டத்திலிருந்து அகன்று சென்ற அந்த உயிரான்மா அந்தப் பிண்டத்திற்கே மீண்டும் வரும்.

1.மனிதனாக வளர்ந்த மந்திர ஒலியினை அதிலே பாய்ச்சி…
2.இவர்கள் நினைவு எதுவோ அதை எல்லாம் செயல்படுத்தப்பட்டு
3.பிறருக்குத் தீமைகளை விளைய வைக்கவும்… செய்வினை தோஷம் என்று செய்வதும்
4.ஒரு பொருள் மீது இந்த ஒலி அலைகளைப் பரப்பி மந்திரத்தைச் சொன்னால் அந்தப் பொருள் கரைவதும்
5.இன்னொரு இடத்தில் அந்தப் பொருள் உருவாவதும் போன்ற மாயாஜால வேலைகளைச் செய்வார்கள்.

மந்திரத்தை ஜெபித்து காளியைக் கைவல்யம் செய்து வைத்திருக்கின்றேன்; மாரியைக் கைவல்யம் செய்து வைத்திருக்கின்றேன்; முனியப்பனைக் கைவல்யம் செய்து வைத்திருக்கின்றேன்; கருப்பணனைக் கைவல்யம் செய்து வைத்திருக்கின்றேன்… என்றெல்லாம் அவர்கள் சொல்வார்கள்.

தீமையின் விளைவுகளுக்கு ஒப்ப அதற்கென்று ஒவ்வொரு மந்திரச் சொல்லைச் சொல்லிப் பரப்பிவிட்டால் இந்த ஆன்மாவின் துணை கொண்டு எதிலேயுமே ஊடுருவிச் செயல்படும் சக்தியாகச் செயல்படுவார்கள்.
1.சாங்கிய சாஸ்திரத்தில் சிக்கியுள்ளோர்கள் அனைத்தும்
2.ஆன்மாக்களைப் பிறருக்கு கைவல்யப்படுத்துவதற்குத் தான் உதவ முடியும்

உதாரணமாக குடுகுடுப்பாண்டிகள் காலையில் வருவார்கள். அதற்கு முன் இரவிலே ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நின்று எத்தனையோ ஒலிகளை ஒலிப்பார்கள். ஒவ்வொரு வீட்டில் உள்ள உணர்வின் அலைகளை (சில நிகழ்ச்சிகளை) எதிரொலிக்கச் செய்வார்கள்.

காலையில் இங்கே வந்த பின் நீங்கள் அரிசியோ பருப்போ மற்றதோ கொடுத்தாலும்
1.உங்கள் வீட்டில் இருக்கும் பழைய துணி வேண்டும் என்று… அதைத்தான் விரும்பிக் கேட்பார்கள்.
2.நம் தலையிலிருந்து உதிர்ந்த முடி எதுவாக இருப்பினும் அவர்கள் கண்ணுக்கு அது சிக்கும்… அதையும் எடுத்துக் கொள்வார்கள்.

சிரசில் விளைந்த ரோமம் ஒன்று கிடைத்தால் போதும்…! அதை வைத்து
1.உங்கள் குடும்பத்தில் என்னென்ன நடந்தது என்று பழைய நிகழ்ச்சிகளைச் சொல்வார்கள்
2.நம்மை நம்பச் செய்வதற்காகப் பல வித்தைகளையும் செய்வார்கள்.

இது தான் “கடவுளை தனக்குள் கைவல்யப்படுத்தி வைத்திருக்கிறேன்…” என்று சொல்லி அற்புதங்கள் செய்பவருடைய நிலைகள்.

உலக ரீதியில் எடுத்துக் கொண்டாலும்… எந்த மதத்தின் அடிப்படையில் இத்தகைய நிலைகள் செய்கின்றாரோ பிறிதொரு மனித உடலில் விளைந்த… அதாவது இறந்தவரின் ஆன்மாக்களைத் தான் அவர்கள் கைவல்யப்படுத்திச் செயல்படுத்துகின்றார்கள்.

1.மந்திரம் இல்லாத மதம் எதுவும் இல்லை
2.அந்தந்த மதங்களுக்கு உண்டான சாங்கியங்கள் உண்டு
3.அதன் அடிப்படையில் தான் பல நிலைகள் இவ்வாறு இயக்கப்படுகின்றது.

மனிதன் இறந்த பின் மனித உடலில் உருவான இந்த உணர்வலைகள் பூமியில் உண்டு. உடலை விட்டு பிரிந்து சென்ற அந்த உயிரான்மாக்களும் காற்றிலே தான் சுழன்று கொண்டுள்ளது. அதைத் தான் அவர்கள் கைவல்யப்படுத்திக் கொள்கின்றார்கள்.

1.நம்முடைய ஆன்மா மந்திரக்காரர்கள் கையிலே இப்படிச் சிக்குவது சரியா…?
2.சாங்கிய சாஸ்திரப்படி அமாவசையன்று படையல் செய்து முன்னோர்களைக் கூப்பிடுவது சரியா…? என்று சிந்தித்துப் பாருங்கள்

ஆகவே… மகரிஷிகள் காட்டிய வழிப்படி உடலை விட்டு பிரிந்த ஆன்மாக்கள் யாராக இருந்தாலும் அவர்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணைப்பதே மேலானது.

(விண் செல்லும் ஆற்றலும்… விண் செலுத்தும் ஆற்றலும்…!https://wp.me/p3UBkg-1DK)

கார்த்திகை நட்சத்திரத்தின் சிறப்பு

கார்த்திகை நட்சத்திரத்தின் சிறப்பு

 

27 நட்சத்திரங்கள் பிற மண்டலங்களில் இருந்து வரும் சக்திகளைக் கவர்ந்து துகள்களாக மாற்றுகின்றது. அவை அனைத்தும் அடுக்கு வரிசையில் இருக்கும் ஒன்று மேலே ஒன்று கீழே என்ற நிலையில் 27 நட்சத்திரங்களும் 27 விதமான பாதைகளில் சுழன்று வருகின்றது.

அதிலே முன்னணியில் உள்ள கார்த்திகை நட்சத்திரம் பிற மண்டலங்களில் இருந்து தனக்குள் எடுக்கும் அந்த உணர்வின் சத்தைக் கவர்ந்து அலைகளாக மாற்றினாலும் அது தனது பால்வெளி மண்டலங்களாக அதை மாற்றுகின்றது.

1.ஒரு இருண்ட பொருளுக்குள் பல பேட்டரியைச் (CELLS) சேர்த்து எர்த்தை (EARTH) வைக்கப்படும் பொழுது ஒளியின் தன்மை அதிலே எப்படி வருகின்றதோ
2.இதைப் போன்று கார்த்திகை நட்சத்திரத்தில் விளையும் உணர்வுகள் மற்ற கோள்களின் நிலையில் சேர்க்கப்படும் பொழுது
3.அது ஒவ்வொன்றிலும் ஒளி அலைகளாக மின்னும் நிலைகளுக்கு மாற்றுகின்றது.

இது எல்லாம் இயற்கையின் சில நியதிகள்…!

நான் (ஞானகுரு) கல்வி அறிவில்லாதவன் தான். இருந்தாலும் குருநாதர் காட்டிய வழியில் அதை நான் கண்டுணர்ந்து
1.அதனுடைய செயலாக்கங்களைக் காணும் பொழுது விஞ்ஞான அறிவிற்கும் இதற்கும் வித்தியாசம் ஏராளம் உண்டு.
2.அந்த உணர்வுகளை உங்களுக்குள் பாய்ச்சப்படும் பொழுது எதிர்காலத்தில் உங்கள் உடலில் உள்ள அணுக்களில் அது வளர்ந்து
3.27 நட்சத்திரங்களின் இயக்க ஓட்டங்களையும் நீங்கள் காணலாம்
4.அதன் உணர்வின் தன்மை உங்கள் உடலுக்குள் இருக்கும் அணுக்களிலும் தெளிந்திடும் நிலையாக
5.நற்சக்திகளாக மாற்றிடும் தன்மையும் ஏற்படும்.

அதனைப் பெறச் செய்வதற்குத் தான் இதைச் சொல்வது. இனம் இனத்தை வளர்க்கும் என்று சொல்வார்கள்

ஆனால் இனத்திற்குள்ளும் ஒன்றுக்கொன்று இரைக்காக மோதுவதும் உண்டு. தன் இனத்தை பெருக்கும் நிலைகள் கொண்டு வருவதும் உண்டு.

மகா ஞானிகள் இத்தகைய (27) நட்சத்திரங்களின் ஆற்றலை ஒவ்வொரு அணுக்களிலும் செலுத்தப்பட்டுச் செருகேற்றி… உணர்வினை ஒளியாக மாற்றி தன் அறிவின் ஞானத்தை வளர்த்துக் கொண்டனர்.

1.அப்படி அந்த விண்ணுலக ஆற்றலைக் கண்டுணர்ந்த முதல் மனிதன் அகஸ்தியன்
2.தன் உணர்வுகளை எல்லாம் ஒளியின் சுடராக மாற்றினான்
3.அவனில் விளைந்த உணர்வலைகள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது… நம் பூமியின் ஈர்ப்பு வட்டத்திற்குள் சுழலச் செய்கின்றது. அதைப் பெறச் செய்வதற்குத் தான் இந்த உபதேசம்.

அதே போல் 27 நட்சத்திரங்கள் பிற மண்டலங்களின் உணர்வின் சத்தைத் தனக்குள் கவர்ந்து துகள்களாக மாற்றப்படும் பொழுது… சூரியன் தனக்குள் அதைக் கவர்ந்து உணவாக உட்கொண்டு அந்த அலைகளைப் பரப்பிக் கொண்டுதான் இருக்கின்றது.

சிலருக்கு இதைக் கேட்கப்படும் பொழுது சில வித்தியாசங்கள் ஏற்படலாம்
1.இதெல்லாம் நமக்கு எதற்கு…? விடிந்தால் சாப்பாடு கிடைத்தால் போதும்
2.குருடனுக்குத் தேவை கண் தானே…! நாளைக்கு என்ன ஆகுமோ ஏதாகுமோ…?
3.சாமி ஆசீர்வாதம் இருந்தால் போதும்
4.தொழிலிலே பணம் சம்பாதித்தால் போதும்… அது நல்ல முறையில் நடந்தால் போதும்
5.எங்கள் நோய் நீங்கினால் போதும்…! என்ற இந்த உணர்வில் தான் இருக்கின்றார்கள்.

ஆஅனால் இந்த மனித வாழ்க்கையில் நம்மை அறியாமல் நாம் நுகர்ந்து கொண்ட உணர்வுகள் நம் உடலில் சேர்க்கப்பட்டு வேதனையை உருவாக்கி நல்லவைகளை எண்ண விடாதபடி தடுத்துக் கொண்டுள்ளது.

அதை மீட்கவில்லை என்றால் நஞ்சின் தன்மை அதிகமாகிவிடும்… ஆரம்ப நிலைகளுக்கே உயிர் இந்த மனித உடலை மாற்றிவிடும். விஷ அணுக்களாக மாற்றிப் புழுவாக… பூச்சியாக… பாம்பாகத்தான் பிறக்க வேண்டி வரும்

காரணம்… இயற்கையின் மாற்றங்கள் எதனின் கலவை எதிலே ஆகின்றதோ அதற்குத் தக்க தான் உருக்கள் மாறுகின்றது.

குருநாதர் வான இயல் தத்துவத்தை என்னை அறியும்படி செய்வதற்காக
1.எத்தனையோ காடு மேடெல்லாம் அலையும்படி செய்தார்… அனுபவபூர்வமாகத் தெரியும்படி செய்தார்.
2.கடும் வேதனைகளால் அவதிப்படும் போது அதிலிருந்து மீள குருவை நான் நினைப்பேன்
3.அதே சமயத்தில் குருவை நினைத்து “என்னை இப்படி எல்லாம் அழைத்துச் செல்கின்றாரே…” என்று வேதனையும் படுவேன்.

ஏனென்றால் ஒரு சில தாவர இனங்களில் விஷத்தன்மை கொண்ட இலைகள் உண்டு. அது மேலே பட்டபின் உடல் சோர்வடையும் மயக்கமும் வரும்.

1.மலைப்பாதைகளிலே செல்லும் பொழுது உடல் சோர்வடைவது மட்டுமல்லாதபடி
2.இந்தத் தாவர இனங்களின் மூச்சலைகளும் அதை உணவாக உட்கொண்ட நஞ்சு கொண்ட உயிரினங்கள் அங்கே பரவி இருப்பதும்
3.அவைகள் மேலே பட்டால் அரிப்பு எடுப்பதும்
4.நான் இதைப் பார்ப்பதா…? அல்லது சோர்வைப் பார்ப்பதா…? என்று எத்தனையோ நிலைகள் இப்படி வருகின்றது.

இத்தனையும் எனக்குள் குருநாதர் உருவாக்கினார். இதிலிருந்தெல்லாம் எவ்வாறு நீ மீள வேண்டும் என்ற வினாவையும் எழுப்புகின்றார்.

நான் அதிலே மீண்டிடும் நிலையாக
1.ஞானிகள் இது போன்ற தீமையிலிருந்து எப்படி விடுபட்டார்கள் என்பதை உணர்த்தி
2.அந்தச் சக்திகளைப் பெறும்படி செய்தார்…. அதை எடுத்து எடுத்து மாற்றிக் கொண்டேன்.

அதையே தான் உங்களுக்குள்ளும் இப்போது பதிவு செய்கின்றேன்.

காட்டில் நான் சிரமப்பட்டுப் பெற்றதை… நீங்கள் உங்கள் வீட்டில் இருந்த இடத்திலிருந்தே “சிரமங்கள் வரும் போதெல்லாம்… அந்தச் சக்திகளைப் பெற முடியும்…” என்று உறுதியாகச் சொல்கிறோம் (ஞானகுரு).

நல் மணத்தை நான் தந்தேன்… உன் மனதை நல் மனதாக ஆக்கிக்கொள்

நல் மணத்தை நான் தந்தேன்… உன் மனதை நல் மனதாக ஆக்கிக்கொள்

 

நல் மணம் எல்லாம் எங்கு செல்கின்றது என்று எண்ணுகின்றாய்…? இயற்கை தந்த மணம் எல்லாம் நல் மனம் தான்.
1.இயற்கையின் மணத்தை எல்லாம் மனிதர்களாகிய நீங்கள் எடுத்துச் சமைத்து
2.நல் மணமான இயற்கை மணத்தைச் சமைத்தவுடன் உடனே எனக்கு அச்சுவை வந்து பின்பு நீ சுவைக்கின்றாய்.

நீ சுவைத்தவுடன் அதன் நிலையைப் பார்த்தாயா…?

கழிவு நிலை எல்லாமே மனிதனிடமிருந்து தான் வந்ததப்பா ஒரு நிமிடம் எண்ணிப்பார்… நாற்றம் என்பது என்னவென்று புரிந்துவிடும்…!

இயற்கை தந்த வரம் எல்லாம் இன்பமயமான மணம் தான் இயற்கையுடன் ஒன்றிப் பார். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு மணம் இருக்கும். கெட்ட மணம் என்பதெல்லாம் இந்தக் கெட்ட உடலிலிருந்து தான் வருகின்றது.

அசுத்தம் அசுத்தம் என்கின்றாய்…! அசுத்தம் எல்லாம் மனிதனிடம் தான் மனிதனிடம் தான் அசுத்தமா…? மிருகத்திடம் இல்லையா…? என்று நீ நினைக்கின்றாய்…! மனிதரிடம் இருந்துதான் மிருகத்திடம் வந்ததப்பா.

1.நான் தந்த இயற்கையில் இருந்து மனிதன் பிறந்தான்
2.மனிதனின் பாவ புண்ணியத்திலிருந்து மிருகம் எல்லாம் வந்ததப்பா.
3.மிருகத்திலிருந்து தான் பறவை எல்லாம் வந்ததப்பா
4.பறக்கும் பறவையிலிருந்துதான் ஊரும் ஊர்வனை எல்லாம் வந்ததப்பா
5.ஊரும் ஊர்வன எல்லாம் அன்ன ஆயிற்று…? என்று கேட்பாய்…?
6.ஊரும் ஊர்வன தான் பிறகு மனிதனாகவும் வருகிறது.

இம்மனிதனின் நிலையில் எப்படி எப்படி மாறுகின்றது என்று இப்போது புரிந்ததா…?

உலகம் மட்டும் உருள்வதில்லை மனிதன் நிலையும் உருள்கின்றது சொல்லும் விளக்கம் புரிந்ததா…?
1.உருளும் மனிதனாகப் பிறந்து விட்டாய்.
2.உருளும் தன்மை உனக்கு வேண்டாம்.

ஒரு நிலையான நிலை நீ இருக்க உன் தியானத்தைக் கூட்டிக் கொள் என்னும் பொருளும் இது தானே.

பெரும் தாதுப் பொருள் என்கின்றோம். அதன் தகதகக்கும் நிலை எல்லாம் எங்கிருக்கிறது என்கின்றாயா…?

உருளும் உலகத்தில் உள்ளே தான் பெரும் தாதுப்பொருளும் உள்ளது. அப்பொருளின் நிலைகளை எல்லாம் எண்ணிப்பார். எப்படி அதன் நிலை வந்தது…?

உலகம் உருளும் தன்மையிலே காற்றும் மழையும் பட்ட பின் சில நிலையில் நிலைத்திருக்கும் நல்லோரின் நினைவிலே அது உருவாகிறதப்பா…!

நல்லவரின் நிலை என்பது நான் சொல்லும் சுவாச நிலை…! அத்தன்மை பாய்ந்தவுடன் இப் பூமி இழுக்கிறது. தண்ணீருடனும் காற்றுடனும் நல்லோரின் சுவாச நிலைத் தாதுப் பொருள் எல்லாமே அவ்விடத்திற்கு உகந்தபடி தான் இழுக்கும்.

அவ்விடம் எப்படி வந்தது தெரிகின்றதா…? நீ விடும் மூச்செல்லாம் காற்றுடன் கலந்தவுடன் மூச்சு மட்டுமல்ல எல்லா ஓசைகளும் கலந்து தான் வருகிறது.

நீ சொல்லும் பூமித்தாய் என்பவள் யாரப்பா…? பூமித்தாயை நீ சொல்லும் வழியிலேயே நானும் சொல்கின்றேன் பூமித் தாய் எல்லாத் தன்மையும் தன்னுள்ளே அடக்கிடுவாள். அடக்கிவிட்டு அவள் தரும் நிலைகள்தான் இவை எல்லாம்.
1.வெறும் மண் என்று நீ நினைக்கின்றாய்
2.இம்மண் தான் இவ்வுலகத்தின் முதல் நிலையே.

முதல் நிலையின் தன்மையைத்தான் முதலிலேயே சொல்லிவிட்டேன். நீ விடும் மூச்சும் உலகத்தின் ஒலியைப் பற்றி முதலிலேயே சொல்லி இருக்கிறேன். மூச்சில் இருந்து தான் ஒலியும் பிறக்கின்றது. ஒலியின் தன்மையும் ஒளியாகி அவ்வொலி தரும் மழையிலே இப் பூமித்தாய் ஈர்க்கின்றாள்.

அவள் தரும் இயற்கையிலே மணம் எல்லாம் இருக்கின்றது. முதன் முதலில் மணத்தைப் பற்றி பேச ஆரம்பித்தேன்… அம்மணம் எங்கிருந்து வருகின்றது என்பது புரிகின்றதா…?

எல்லாமே சுழற்சி தான்… சுழலின் தன்மையை பார்த்தாயா…! இந்தப் பாடத்தின் தன்மை புரிந்ததா…?

சுழலும் தன்மையைப் புரிந்து கொண்டாயா…! சுழலுடன் சுழலாகக் கலந்து விட்டால் “கலந்தது” உனக்குத் தெரியாது.
1.இக்கலக்கங்களிலிருந்து மீள்வதற்கு ஒரே நிலை “தியான நிலை தான்…”
2.தியான நிலை பெற்றுவிட்டால் பெரும் சூட்சம உலகம் என்னும் சுழற்சியில் சிக்கி விடலாம்
3.சூட்சம உலகில் சிக்கிவிட்டால் பெரும் சூட்சுமம் எல்லாம் கண்டிடுவாய்.
4.ஈரேழு லோகம் என்பதைக் கண்டிடுவாய்… ஈன்றவன் யார் என்று கண்டிடுவாய்.

அவ்வுலகத்திற்குச் சென்றுவிட்டால் இவ்வுலகத்தின் நிலையைப் பார்த்திடுவாய் இவ்வுலகம் மட்டுமல்ல எவ்வுலகையும் உனதாக்கு. இப்பொழுது புரிகிறதா… தியான நிலையின் அவசியம் எல்லாம்…!

இச்சுழற்சி உனக்கு வேண்டுமா…? அல்லது அச்சுழற்சியில் சுழன்று விடுகின்றாயா…?

1.இருக்கும் நிலையை விட்டு ஏன் குருநாதர் பறக்கும் நிலையைச் சொல்கிறார் என்று எண்ணுகின்றாய்.
2.சக்தி தந்த இயற்கையின் தன்மையை அர்த்தமுள்ளதாகப் புரிந்து கொண்டு
3.சாமி சொன்ன சுவாச நிலையை மாற்றிடாது பிறவிப் பயனே போதும் என்ற எண்ணமுடன்
4.உன் நிலையை நிலை நிறுத்து… அதற்காகவே இந்தப் பாடம்…!

கல்கி

கல்கி

 

உலகெங்கிலும் தோன்றிய ஞானிகள் அனைவருமே
1.மனிதனின் உயிரைக் கடவுளாக மதி
2.மனிதனுக்கு மனிதன் மனிதனாக நீ மதி
3.மனிதனை ஒரு கடவுளாக மதி என்று தான் அனைவரும் சொல்லி உள்ளார்கள்.

அத்தகைய ஞானிகள்
1.மனிதனை மதித்தார்கள்… மனித உடலை மதித்தார்கள்
2.மனிதன் மகிழ்ந்திட வேண்டும் என்று எண்ணத்தைத் தனக்குள் வளர்த்தார்கள்
3.மனிதன் அவன் அறியாத இருள்களில் இருந்து மீள வேண்டும் என்ற சதா தியானித்தார்கள்.
4.மனிதன் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்ற ஏக்கத்தைத் தனக்குள் வளர்த்துக் கொண்டார்கள்.

அவர்கள் அனைவரும் பிறவிக் கடலை நீந்தி ஒளியின் சரீரமாக இன்றும் சப்தரிஷி மண்டலமாகத் திகழ்ந்து கொண்டு உள்ளார்கள் அது தான் கல்கி…!

கடவுளின் அவதாரத்தில்… என்றும் பதினாறு என்ற அழியா ஒளிச் சரீர வாழ்க்கையினை மனித உயிரான்மா பெறுவதைத்தான் ஞானிகள் “கல்கி” என்றார்கள்.

மனிதர் தாம் கல்கி என்ற பெருவீடு பெருநிலையை அடைவதைத்தான், பத்தாவது அவதாரமாகக் காண்பித்துள்ளார்கள்.

உயிரின் பரிணாம வளர்ச்சியில் இறுதியானதும் உறுதியானதுமான அழியா ஒளிச் சரீர வாழ்வே மனித இனத்திற்கு இலட்சியமாக இருக்கவேண்டும் என்றுரைத்தார்கள் ஞானிகள்.

ஆனால்
1.இந்தக் கலியில் மகரிஷிகளின் உணர்வுகளைத் தனக்குள் விளைய வைத்து
2.எவர் ஒருவர் உயிருடன் ஒன்றும் உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றுகிறார்களோ அவரே கல்கி.
3.வாழ்க்கையில் வரும் இருளை யாரெல்லாம் மாய்க்கின்றார்களோ…
4.ஆறாவது அறிவின் தன்மை கொண்டு நஞ்சினை அடக்குகின்றார்களோ… அவரே கல்கி.

உடல் நமக்குச் சொந்தமல்ல… சொந்தமல்ல…! என்று ஏன் அடிக்கடி சொல்கிறோம்…?

உடல் நமக்குச் சொந்தமல்ல… சொந்தமல்ல…! என்று ஏன் அடிக்கடி சொல்கிறோம்…?

 

உடலை நாம் சொந்தமாக்கினாலும்… இந்த உடலின் சொந்தத்தை வைத்து… மனித உடலின் தன்மை கொண்டு தான்…
1.இந்த வாழ்க்கையில் நம்மை அறியாது வந்த இருள்களை நீக்கி
2.உயிர் ஒளியாக இருப்பது போன்று நமது உணர்வுகள் அனைத்தும் ஒளியாக மாற்றிட முடியும்.

ஆனால்
1.மாற்றத் தவறினாலோ மீண்டும் பிறவிக்கே திரும்பச் செல்கின்றோம்.
2.”பிறப்புக்கு” என்று வந்தாலும் அதிலே மீண்டும் மனிதனாகப் பிறப்பது “எத்தனை கோடி ஜென்மங்களோ…!” என்று சொல்ல முடியாது.

இந்த மனித உடலை விட்டுச் சென்ற பின் இன்னொரு மனித உடலுக்குள் சென்று தான் மனிதக் கருவாக உருவாக முடியும். மனித உடலுக்குள் செல்லாது நாம் வேறு ஒரு உடலுக்குள் சென்று மனிதனாக உருப் பெற முடியாது (இது முக்கியம்).

குடும்பத்தில் நம் குழந்தை மீது அன்பைச் செலுத்துகின்றோம் அல்லது உற்ற நண்பன் மேல் அன்பைச் செலுத்துகின்றோம்… பாசத்தைச் செலுத்துகின்றோம் என்று வைத்துக் கொள்வோம்.

தன் குழந்தை மீது அன்பையும் பாசத்தையும் செலுத்தி விட்டால் கடைசியில் உடலை விட்டு நம் உயிரான்மா செல்லும் பொழுது யார் மேல் அன்பையும் பாசத்தையும் வைத்தோமோ “அந்த உணர்வு தான் முன்னணியில் இருக்கும்…. அந்த உடலுக்குள் தான் புகுவோம்…” (நண்பனோ அல்லது நம் குழந்தையோ)

ஆனாலும்
1.உடலை விட்டு ஆன்மா வெளியே செல்லும் பொழுது கடும் நோயுற்றுத் தான் வெளியே செல்கின்றது.
2.அதாவது… உடலின் இயக்கம் சீராகாதபடி உடல் நலிந்து உறுப்புகள் பின்னமாகி
3.அதன் பின் தான் இந்த உயிரான்மா வெளியே செல்கின்றது.

நாம் எந்த நிலையில்… எந்த நோயின் காரணமாக… இந்த உடலை விட்டு வெளியே செல்கிறோமோ பாசமாக இருக்கும் அந்த உடலுக்குள் தான் உயிரான்மா செல்லும்.

அவ்வாறு அந்த உடலுக்குள் உயிரான்மா சென்றால் இந்த உடலிலே எந்தெந்த நோய்கள் உருவாகி அவஸ்தைப்பட்டோமோ… அதே உணர்வை அந்த உடலிலும் செயல்படுத்தும்.

இந்த உடலில் எந்த ஆசைகள் பட்டோமோ… எதை எதையெல்லாம் செயல்பட வேண்டும் என்று எண்ணினோமோ… இதே உணர்வுகள் நமக்குள் வளர்க்கப்பட்டு யார் மேல் பாசமாக இருந்தோமோ… அந்தப் உடலுக்குள் நாம் சென்ற பின் “பேயாகத்தான்” ஆட்டிப் படைப்போம்.

நம் ஆசைகளை நிறைவேற்ற… இந்த உணர்வுகளை இங்கே தூண்ட இந்த ஆசையின் நிமித்தமே நோய் இங்கே (முதலில்) விளைந்தது.

அதே விளைந்த உணர்வின் தன்மை உடலை விட்டுச் சென்ற பின் இந்த உயிர் தன்னுடன் அதனை அழைத்துச் சென்று… யார் மேல் பாசம் கொண்டோமோ அவர் உடலுக்குள் சென்று… அந்த உடலுக்குள் அதே தீய விளைவை உருவாக்கி… அந்தக் குடும்பத்திலும் கஷ்டத்தை உண்டாக்கி நோயையும் உருவாக்கி… பேயான ஆசைகளைத் தூண்டி… வேதனையான உணர்வுகளை அங்கே அதிகமாக உருவாக்கி… “அந்த உடலையும் வீழ்த்தும்…”

பின் அந்த உடலில் வளர்த்த அந்த உயிரான்மா… அவர் உடலில் என்னென்ன ஆசைகள் வந்ததோ… இதே பேயின் உணர்வு கொண்டு “இன்னொரு உடலுக்குள் சென்று பேயின் தன்மையாக (இப்படி வரிசையாக) இயக்கும்…”

இந்த உடலில் இருந்து ஆன்மா (முதலில் புகுந்தது) வெளிவந்த பின் மனிதனுடைய சிந்தனையே அதற்கு இருக்காது.

காரணம் ஒரு துளி விஷத்தை உட்கொண்டால் நம் நினைவு தடுமாறுகின்றது. கூட ஒரு துளி விஷம் உட் கொண்டு விட்டால் மனிதனுடைய நினைவே இருப்பதில்லை… இழந்து விடுகின்றது.

இதைப் போன்று தான்
1.விஷத் தன்மை அதிகமாகி… உயிரான்மா மனிதனுடைய நினைவை இழந்து…
2.எத்தகைய விஷத் தன்மையை வளர்த்துக் கொண்டதோ அந்த விஷத்துடன்
3.இந்தப் பரமான பூமியில் பரமாத்மாவில் மிதந்து கொண்டே இருக்கும்.

அப்படி மிதந்து கொண்டிருக்கும் பொழுது அதனின் விஷத்தின் அளவுகோலுக்கு ஒப்ப… ஒரு விஷத் தன்மை கொண்ட உடலின் ஈர்ப்புக்குள் செல்லும். மனித உரு பெறும் தகுதி இழக்கப்படுகின்றது.

இதை நாம் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

ஆகவே வாழக்கூடிய நாள்களில் உடலில் நல்ல நினைவு இருக்கும் போதே மகரிஷிகள் உணர்வை உடலில் விளைய வைத்து
1.(நம்மை) உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றச் செய்து
2.யாருடைய ஈர்ப்புக்குள்ளும் சிக்காது நாம் விண் செல்ல வேண்டும்.

மரண பயத்தை நாம் அகற்ற வேண்டும்

மரண பயத்தை நாம் அகற்ற வேண்டும்

 

மனிதனின் வாழ்க்கையில் வேதனை சலிப்பு சங்கடம் வந்தாலும் அல்லது கொடிய நோய் இருந்தாலும் இதை அகற்றிய அருள் ஞானிகளின் உணர்வை தனக்குள் சேர்த்து உடலில் உருவான அந்த அணுக்களை நல்லதாக மாற்றிக் கொள்ள முடியும்.

பிறவி இல்லா நிலை அடைந்த அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை நமக்குள் சேர்க்கும் வண்ணம் அதை எளிதில் பெற்று… தான் பெற்ற சக்தியை மனைவிக்கும் மனைவி பெற்ற சக்தியைத் தன் கணவனுக்கும் என்று இரு உணர்வு ஒன்றாக இணைத்திட முடியும்.

1.உயிர் ஒளியான அந்த உணர்வினைத் தனக்குள் அறிவாக இயக்கி
2.கணவனும் மனைவியும் ஒன்றிய நிலைகள் கொண்டு
3.”இனி எந்தப் பிறவியும் வேண்டாம்…” என்ற நிலையில் பிறவில்லா நிலையாகப் பெரு வீடு பெரு நிலை என்ற நிலை அடைந்து
4.சப்தரிஷி மண்டலங்களாக… துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் மரணம் இல்லாப் பெரு வாழ்வு வாழ்ந்து கொண்டுள்ளார்கள்
5.அவர்களுக்கு என்றுமே மரணம் இல்லை.

இன்று மனிதனின் வாழ்க்கையில் தொழில் செய்கிறோம் என்றால் நமக்கு மரண பயம் வந்து விடுகின்றது…!

ஐயோ… தொழில் மந்தமாகிவிட்ட்தே…! வாங்கியவனுக்கு நாளைக்கு எப்படிப் பணத்தைக் கொடுப்பது…? கொடுக்கவில்லை என்றால்; அவன் திட்டுவானே…!

என் பிள்ளைகள் எல்லாம் என்ன ஆகும்…? நான் எப்படி வாழ போகிறேன் என்று
1.நமக்குள் இருக்கும் “வாழ வைக்கும்” அந்த நல்ல உணர்வுகளைச் செயலற்றதாக மாற்றி
2.மரண பயத்தை ஊட்டித் தன்னை அறியாமலே தற்கொலை செய்து கொள்ளும் நிலை வருகிறது.

அதாவது மரண பயம் என்ற உணர்வு வந்து விட்டால்… இந்த மனித உடலையே அழித்திடும் உணர்வின் எண்ணங்கள் வந்து மனித உடலையே அழித்து விடுகின்றது.

ஆனால்
1.அருள் ஞானிகளின் உணர்வை எடுத்து அந்த உணர்வை வளர்த்துக் கொண்டால்
2.மரணம் இல்லாத பெரு வாழ்வு வாழ முடியும்.
3.நாம் அந்த மகரிஷியின் அருள் சக்திகளை ஒவ்வொரு நொடியிலும் எடுத்து வாழ முடியும் வளரவும் முடியும்
4.நம் பார்வையால் பல தீமைகளையும் போக்க முடியும்.

தான் வாழ வேண்டும் என்று ஒவ்வொரு சரீரத்திலும் எடுத்துக் கொண்ட உணர்வுகள் வளர்ச்சியாகி பூரணத்துவம் அடைந்து நம்மை நாம் அறிவதும் உலகை அறிவதும் என்ற நிலை வருகின்றது.

ஆனாலும்..
1.தன் குழந்தை மேல் பாசத்தை வைத்தால் அந்தப் பாசத்தால் குழந்தை என்ன செய்வான்…? என்று வேதனைப்பட்டால் நம் நல்ல குணங்கள் மறைந்து விடுகிறது
2.கடன் கொடுக்கின்றோம்… வாங்கியதை அவர் திரும்பக் கொடுக்கவில்லை என்றால் நாளை என்ன செய்வது…? என்ற வேதனை வருகின்றது நல்ல குணங்கள் மறைந்து விடுகின்றது
3.நண்பர்களுடன் பழகுகின்றோம்… அவருடைய கஷ்டங்களைக் கேட்கின்றோம் நோய்களை அறிகின்றோம் அப்பொழுது நல்ல குணங்கள் மறைந்து விடுகின்றது.

இப்படித்தான் பௌர்ணமி சிறுகச் சிறுக தேய்பிறையாவது போன்று நமக்குள் இருக்கும் நல்ல குணங்கள் தேய்பிறை ஆகி விடுகின்றது.

மற்ற கோள்கள் மறைப்பு விலகும் பொழுது தான் சந்திரன் முழுமையான பௌர்ணமி ஆகின்றது.

நம் உயிரின் தன்மை கொண்டு மனித உடல் பெற்ற பின் தேய்பிறை ஆகாது என்றுமே பூரண பௌர்ணமியாக… ஒளியின் சரீரமாக ஆக வேண்டும் என்பதனை ஞானிகள் நமக்கு காட்டியுள்ளார்கள்.

ஆகவே தீமைகளை அகற்றும் சக்தியை யாரெல்லாம் வழிப்படுத்துகிறார்களோ அவர்களே மனிதன் என்ற முழுமை அடைகின்றார்கள்… நரசிம்ம அவதாரமாக ஆகின்றார்கள்.

தீமைகளை அகற்றி உயிருடன் ஒன்றி இந்த உணர்வின் தன்மை ஒளியாக மாற்றும் பொழுது கல்கி… ஒளியின் சரீரம் ஆகின்றார்கள். ஒளியின் சரீரம் பெறும் நிலை தான் பெரு வீடு பெரு நிலை என்ற நிலைகள்.

இந்தப் பிரபஞ்சமே அழிந்தாலும்…
1.அகண்ட உலகில் உள்ள மற்ற பிரபஞ்சங்களின் சக்தியை நுகர்ந்து நஞ்சினை வென்று
2.உணர்வினை ஒளியாக மாற்றிப் பேரின்ப்ப் பெரு வாழ்வு என்ற நிலையாக
3.மரணம் இல்லாப் பெரு வாழ்வாக என்றும் ஒளியின் சரீரமாக நாம் மாற முடியும்.

உலகில் படும் அவஸ்தையிலிருந்து விடுபட்டுப் பல கோடி ஆண்டுகள் வாழ்ந்திடலாம்

உலகில் படும் அவஸ்தையிலிருந்து விடுபட்டுப் பல கோடி ஆண்டுகள் வாழ்ந்திடலாம்

 

புண்ணிய ஸ்தலம் என்பது கோவில்கள் தான்…!

1.அந்தப் புண்ணிய ஸ்தலத்தில் உள்ள மூலவர் உருவினிலே
2.அந்த ஸ்தலத்தை நினைத்து எங்கிருந்தாலும் எவன் ஒருவன் வேண்டுகிறானோ
3.அந்நிலைக்கு அவனுக்கு அருள் புரிகின்றான் அந்நிலையில் அமர்ந்துள்ள மகான்.

புண்ணியம் எய்தி… பிறந்த பயனை தன் ஜெப நிலையால் தன் நிலையை ஜோதி நிலையாக்கி… அவன் ஸ்தாபிதம் செய்த சிலையில்… தன் ஜீவனை அந்த சிலையின் ஜீவனாக்கி… எண்ணுபவர்களுக்கெல்லாம் அவ்வெண்ணத்தின் வழியினிலே வழியமைக்கின்றான் அந்த மகரிஷி ஜோதி நிலையில்…!

ஆண்டவன் என்பவன் யார்…? என்று பல முறை கேட்டுள்ளேன், ஆண்டவன் என்பது இப்பொழுது புரிந்ததா…?

இறப்பும் பிறப்பும் அவனவன் செய்த கர்ம பயனால் வருவது தான்…! எமனும் வரவில்லை… காலதேவனும் வரவில்லை…! என்று முதலிலேயே சொல்லியுள்ளேன்.

அவனவன் பிறப்பையும் இறப்பையும் அவன் வழியில் உள்ள அவனுள்ளே உள்ள சக்தியின் பயனைப் பெற்றுத்தான் பிறக்கின்றான்… இறக்கின்றான்.

சுவாச நிலையில் தான் வியாதிகள் வருகிறது. அவன் வாழ்க்கை முறையில் உள்ள சுவாச நிலையும் அவனுக்கு வித்திட்டு வியாதியைப் பெருக்கச் செய்கிறது.

1.எண்ணத்தின் பயத்தினால் தான் வியாதி முற்றி
2.அச்சுவாச நிலை பெரும் மாறுபட்டு அந்த அழுகும் தன்மையுள்ள உடலில்
3.அவன் உடலில் உள்ள சிறு சிறு நல்ல அணுக்களும் அவனைக் காத்து வந்த நிலையை மாற்றி அந்த அணுக்களும் அழுகி
4.பெரும் வேதனையில் உள்ள அவன் விடும் சுவாச நிலை அவனையே அழிக்கின்றது பெரும் பயத்தினால்..!

அந்த நிலையில் அவ்வுயிர்… அவனுள் இருக்கும் அவ்வுயிர் சலிப்புடன் அவன் உடலை விட்டு ஆவி உலகம் செல்கிறது. அந்த ஆவிகள் தான் பிறகு (அடுத்த பிறவியாக) பிறக்கின்றது.

“எண்ணம் போல் வாழ்வு…!” என்றார்கள் பெரியவர்கள். எண்ணத்தை எண்ணத்தின் எண்ணம் எல்லாம் அவன் விடும் சுவாச நிலையில் தான் சுற்றுகிறது.

பெரும் வேதனை உள்ள மனிதன்…
1.தன்னுள் இருக்கும் ஈசனை நினைத்து “ஈஸ்வர தியானம்” செய்து
2.தான் செய்த பாவ புண்ணியங்களை மறந்து… எப்படியும் வாழ வேண்டும்…
3.ஒரு நிலையில் வாழ வேண்டும்… உயர்ந்த வாழ்க்கை வாழ வேண்டும்…! என்று
4.தன் எண்ணத்தினுள்ளேயே எண்ணிக் கொண்டு அவன் விடும் சுவாச நிலைக்கு அந்தச் சக்தியின் அருள் கிட்டுகிறது.

எண்ணத்தில் சலிப்பு வந்தவனுக்கு வாழ்ந்து என்ன பயன்…! என்ற நிலையில் அந்தச் சுவாசத்தை எடுத்துச் சுற்றுபவனுக்கு அந்த எண்ணமே தான் சுற்றுகிறது அவன் உடலில்.

அந்த எண்ணம் போல் தான் அவன் விடும் சுவாச நிலையில் சுற்றுகிறது அவன் எண்ணம். அந்நிலையே தான் அவனுக்கும் வருகிறது.

எண்ணத்தில்தான் குழந்தை பிறப்பிலிருந்து அதன் எல்லா நிலைகளிலுமே எண்ண வடிவில்தான் அதன் வாழ்க்கையே அமைகிறது.

முடிவில்லா இந்த உலகில்… முடிவில்லா உடலுடன்… “மூவுலகை ஆட்டி வைக்கும் அச்சக்தியைப் பெற்றிட…” இந்த உலகில் உதித்த ஒவ்வொரு உயிரும் காலம் சுற்றும் நிலை போல் அந்நிலை எய்திட முடியும்.

பல பிறவிகள் மாறுபட்டு ஆவி உலகில் படும் அவஸ்தையிலிருந்து விடுபட்டு… ஒவ்வொரு மனிதனும் வாழ்ந்திடலாம்… வாழ்ந்திடலாம்.. பல கோடி ஆண்டுகள் வாழ்ந்திடலாம்.

முடிவில்லா உலகைப் போலவே முடிவில்லாமல் வாழ்ந்திடலாம்…!

உயிருடன் ஒன்றும் உணர்வை ஒளியாக மாற்ற வேண்டியது மிகவும் முக்கியமானது

உயிருடன் ஒன்றும் உணர்வை ஒளியாக மாற்ற வேண்டியது மிகவும் முக்கியமானது

 

நோயாளியைப் பார்க்கின்றோம்… அவருடைய நோயைப் பற்றி அறிகின்றோம். அவருக்கு உதவியும் செய்கின்றோம். ஆனாலும் அவரின் நோய்க்குக் காரணமான உணர்வுகள் நமக்குள் வலுவாகிவிட்டால் அதை நாம் துடைப்பதில்லை… துடைக்கத் தெரிவதில்லை.

நோய் வளர்ந்த பின் மருத்துவர்களிடம் சென்று அதற்குத் தக்க மருந்தை உட்கொண்டு மாற்றிக் கொள்கின்றோம்.
1.நோயாளியைப் பார்த்த உணர்வு ஊழ்வினை என்ற வித்தாக நமக்குள் பதிவாகி இருக்கின்றது.
2.அதை நீக்குவதில்லை… நீக்கத் தெரியவில்லை
3.அப்போது மருந்து சாப்பிட்டு நோயை நீக்கினாலும் அந்த நோய் மீண்டும் வந்து கொண்டே தான் இருக்கின்றது.

வயல்களில் களைகளைப் பிடுங்குகின்றோம்… மீண்டும் அந்தக் களைகள் முளைக்கத்தான் செய்கின்றது. அது போல் அன்றாடம் எத்தனையோ தீமைகளைப் பார்க்கின்றோம். உடலில் அந்தத் தீமைகள் அதிகமாகி விட்டால் நோயாகி விடுகிறது.

டாக்டர்களை அணுகி அந்த நோயை நீக்கினாலும் களைகளைப் பிடுங்கிய பின் மீண்டும் அது எப்படி முளைக்கின்றதோ அதைப் போன்று நமக்குள் மீண்டும் நோய் வருகின்றது.

நோயை நீக்க…
1.இன்னொரு விஷம் கொண்ட மருந்துகளைக் கொடுக்கப்படும் பொழுது அதில் உள்ள விஷமும் உடலுக்குள் சேர்ந்து விடுகிறது
2.நோய்களை நீக்க இப்படி.. பல உபாயங்களைச் செய்தாலும்
3.அந்த விஷத்தன்மைகளால் உடல் உறுப்புகள் பாழாகிக் கொண்டுதான் இருக்கின்றது.

சிறிது காலம் வாழ்வதற்கு எத்தனையோ உபாயங்களை நாம் செயல்படுத்துகின்றோம். உடல் உறுப்புகள் பழுதானால் நுரையீரல்… இருதயம் இவ்வாறு மாற்று உறுப்புகளை வைத்து மருத்துவர்கள் வாழ வைக்கின்றார்கள்.

உடலில் எலும்பே இல்லை என்றாலும் இன்னொரு உடலில் இருந்து எலும்பை உருவாக்கும் அணுக்களை வைத்து… “மோல்டு செய்வது போன்று எலும்பை உருவாக்கி…” அதை மனிதனுக்குப் பொருத்துகின்றார்கள்.

ஏனென்றால் எலும்பை உருவாக்கிய அணுக்களை அது பெருக்கப்படும் பொழுது அதனுடைய மலம் எலும்பாக வளர்கின்றது. பண வசதி உள்ளவர்கள் பல லட்சங்கள் ஆனாலும் அதைப் பொருத்திக் கொள்கின்றார்கள்.

ஆனால் அப்படிப் பொருத்திக் கொண்ட நிலையில்… கால்களையோ மற்ற அங்கங்களை இழந்து இருந்தாலும்… மற்றொருவர் எந்தவிதப் பின்னமும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கப்படும் பொழுது
1.அவர்களைப் போன்று நமக்கு இல்லையே… நாம் இப்படி இருக்கின்றோமே…! என்ற வேதனை உணர்வு மீண்டும் வருகின்றது.
2.இப்படித் தொடர்ந்து வரும்போது முழுமையாக நோயிலிருந்து விடுபட முடிவதில்லை.

எத்தனையோ செல்வங்களைச் செலவழித்து உறுப்புகளை மாற்றி அமைத்தாலும் உடலை விட்டுச் செல்லும் பொழுது வேதனை உணர்ச்சிகள் உயிரோடு சேர்ந்தே செல்கின்றது.

நோயை நீக்க மருந்துகளை உட்கொண்டே வந்தாலும்… கடைசியில் இந்த உடலை விட்டுச் செல்லும் பொழுது அதற்குத்தக்க மாற்று உடலை இந்த உயிர் ஏற்படுத்தி விடுகிறது.

ஆனால்
1.விஷத்தன்மைகளை எல்லாம் நீக்கிய துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நுகர்ந்து நம் உடலில் பதிவாக்கி
2.தீமை என்ற உணர்வைக் கண்டால் உடனே அதை மாற்றி அமைத்து
3.நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களையும் நாம் நல்லதாக மாற்றி அமைக்க முடியும்.
4.துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஊழ்வினையாக மாற்றிக் கொள்ள முடியும்
ஒரு மனிதனுடைய மேல் தோல் பாழாகி விட்டால் அந்தத் தோலை உருவாக்கும் அணுக்களை வைத்து அழகான தோலையும் பொருத்தி விடுகின்றார்கள்.
1.ஆனாலும் உயிரைப் போன்று உணர்வின் தன்மை
2.ஒளியாக்கும் திறன் அவர்களிடம் இல்லை.

விஞ்ஞான அறிவு கொண்டு இந்த உடலைக் காக்க வேண்டும் என்று முயற்சிகள் எடுத்து எடுத்து வாழ்ந்தாலும் வேதனை உணர்வுகள் உடலில் வளர்ந்து கொண்டேதான் இருக்கின்றது இந்த உடலில் சேர்த்துக் கொண்ட நிலைக்கொப்ப அடுத்த மாற்று உடலை இந்த உயிர் உருவாக்கி விடுகிறது.

ஆனால் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பதிவாக்கி… துருவ நட்சத்திரத்தின் நினைவை அடிக்கடி கொண்டு வந்தால் உயிரான்மாவில் இது வலுவாகிறது.

பிறர் கஷ்டப்படுவதோ வேதனைப்படுவதோ துயரப்படுவதோ அல்லது உடலை விட்டு பிரிந்தவர்கள் பற்றிக் கேள்விப்படும் போதோ… அந்த நேரங்களில் எல்லாம் அதைத் தடுக்க…
1.ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் கொண்டு வந்து
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உயிர் வழி கவர்ந்து
3.அதே கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி உடலை உருவாக்கி அணுக்கள் அனைத்தும்
4.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும் என்று உள்முகமாகப் பாய்ச்சி
5.மீண்டும் இன்னொரு உடல் பெறும் நிலைகளை மாற்றிக் கொள்ள முடியும்.