குளவி புழுவைத் தன் இனமாக மாற்றுவது போல் தான் இயற்கையின் செயலாக்கங்களும்

குளவி புழுவைத் தன் இனமாக மாற்றுவது போல் தான் இயற்கையின் செயலாக்கங்களும்

 

ஒரு குளவி ஒரு புழுவைத் தூக்கிக் கொண்டு வந்து அதைத் தன் இனமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்படுகின்றது.

இன விருத்திக்கான உமிழ் நீரைச் சுரக்கும் பொழுது அதை மண்ணிலே போட்டுப் பிசைகின்றது. மண்ணிலே போட்டுப் பிசையும் பொழுது ஒரு நிறம் இருக்கிறதென்றால் தனக்குகந்த மண்ணை எடுத்துச் சுண்ணாம்பினால் அதைக் கலந்து எடுத்துக் கொண்டு வருகின்றது.

அதிலே இருக்கக்கூடிய காந்தப் புலனறிவிலே தன் உமிழ் நீரைப் பாய்ச்சுகின்றது. பாய்ச்சி உருண்டையை எடுத்து வந்து கூடாகக் கட்டுகின்றது. அதற்குள் புழுவைக் கொண்டு வந்து அடைக்கிறது.

1.தன் இனவிருத்தியின் உணர்வின் நோக்கம் கொண்டு புழுவைத் தாக்குகின்றது.
2.தாக்கியவுடன் புழுவின் உணர்வின் செல்கள் வெளியிலே போகாதபடி அது மறைத்து விடுகின்றது.
3.முதலில் கவசமாகக் கட்டி விடுகின்றது…. அதிலிலுள்ள விஷத்தின் தன்மை புழுவின் தோலைச் சருகாக மாற்றி விடுகின்றது.

அதற்கு அந்தச் சக்தி இருக்கின்றது.

அப்பொழுது புழுவின் உடலை உருவாக்கிய உயிரும்… உயிரால் உணர்வால் ஆக்கப்பட்ட, உடலுக்குண்டான அணுக்களிலும்… இந்த விஷத்தின் தன்மை பாய்ந்து விஷமாக ஆகின்றது.
1.விஷத்தன்மை பாய்ந்த நிலையில்
2.புழுவிற்கு அந்தக் குளவியின் நினைவாற்றல் தான் அதிகமாக வருகின்றது.
3.அந்த நினைவாற்றல் அதிகரிக்கப்படும் பொழுது உடல் சருகாகுகிறது.

மீண்டும் அந்தக் கூட்டின் மேலிருந்து குளவி “ரீங்கார ஒலிகளை” எழுப்புகின்றது.

அந்த உணர்வின் இயக்கமானபின்…
1.இதே நினைவலையில் அந்த உணர்வின் செல்கள் மாறி விடுகின்றது.
2.இந்தக் கூட்டின் வழியாக அந்த உமிழ் நீரைச் சேர்த்தபின்… அந்த ஒலி அலைகளைப் புழு எடுக்கின்றது.

உதாரணமாக… நட்சத்திரங்களில் இருந்து வரக்கூடிய கதிரியக்கங்கள் பூமிக்குள் ஊடுருவி… அந்தக் காந்தப் புலனறிவு இயக்கும் காந்தம் அதிகமாகும் பொழுது… பூமியின் நடுவிட்டம் வரை ஊடுருவிச் செல்லும்.

ஊடுருவிச் செல்லும் பொழுது மரங்கள் மேல் தாக்கப்பட்டால் மரங்கள் கருகி விடுகின்றது. அப்படி ஊடுருவிப் பூமிக்குள் சென்றவுடனே, வெல்டிங் (welding) வைத்தால் எப்படி ஓட்டை ஆகின்றதோ அதே போல பாறைகளில் ஊடுருவி “அதற்குள் சில நுண்ணிய அலைகளைப் பாய்ச்சுகின்றது…”

அது தனக்குள் சேர்த்து…
1.மொத்தத்தில் வடித்துக் கொண்ட உணர்வுகளை ஆவியாக மாற்றும் பொழுது
2.அதன் வழி பூமிக்குள் பல மாற்றங்களைக் கொடுக்கின்றது.

பிற மண்டலங்களிலிருந்து வரும் விஷத் தன்மையை நட்சத்திரங்கள் அது தனக்குள் உருவாக்கி… அது உமிழ்த்தும் அலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொண்டபின் அந்த அலைகளின் வீரியம் வருவதும்
1.நம் பூமியின் ஈர்ப்புக்குள் நுழைந்து கொண்டபின்
2.அது ஈர்த்து நடுமையத்தில் கொண்டு சேமித்துக் கொள்கின்றது.

அதைப் போல் நாம் சுவாசிக்கும் நிலைகள்… எந்தந்த உணர்வுகளை உடலுக்குள் பாய்ச்சினாலும்
1.உடலில் விளைந்த அந்த உணர்வுகள் எல்லாவற்றையும்
2.உயிரிடமே கொண்டு வந்து உயிராத்மாவாகச் சேர்த்து வைத்துக் கொள்கின்றது.

உயிரின் இயக்கங்களில் ஊடுருவி…
1.உணர்வின் அணுக்களைப் பெருக்கித் தன் நினைவுடன் இயக்கச் செய்து
2.தன்னுடன் ஒன்றச் செய்து ஒரே இயக்கமாகக் கொண்டு வருகின்றது.

இதற்கும் அதற்கும் (பூமிக்கும் உயிருக்கும்) உண்டான வித்தியாசத்தைக் காட்டுகின்றார் குருநாதர்.
எனக்குப் படிப்பறிவு இல்லாததால் “நேர்முகமாகவே…” இதையெல்லாம் காட்டுகின்றார். இந்த உணர்வின் இயக்கங்கள் பூமியின் நடுமையும் அடைவதை காட்டுகின்றார்.

ஆனால் நட்சத்திரங்களின் கதிரியக்கங்கள் ஊடுருவும் பொழுது ஒவ்வொன்றையும் எப்படி இடைமறித்துக் கருக்கச் செய்கின்றது…? வெல்டிங் அடிக்கும் போது ஓட்டை விழுவது போன்று எப்படி ஆகின்றது…? என்று காட்டுகின்றார்.

மின்னல் தாக்கிய பின் மரங்கள் கருகின்றது. மின்னல் ஊடுருவி பூமிக்குள் செல்கின்றது. இப்படி… 27 நட்சத்திரங்கள் நிலைகள் அங்கே பூமிக்கடியில் ஒன்று சேர்த்துக் கொதிக்கலனாக மாறுகின்றது. அதிலிருந்து… கலவைகள் ஆவியாக மாறி தனது நிலைக்குப் பூமி மாற்றுகின்றது.

இதைப் போல் தான்
1.குளவியின் விஷத்தன்மை கூட்டிற்குள் அடைபட்ட புழுவின் உடலுக்குள் பாய்ந்து
2.அது தன்னுடைய வேகங்களை எடுத்து அணுக்களில் பட்ட பின்
3.புழுவின் உயிர் குளவியை எண்ணியே அதனின் உணர்வலைகளை எடுத்து
4.உடலின் செல்களை மாற்றிப் “புழு குளவியின் ரூபமாகின்றது…”

இது பரிணாம வளர்ச்சி.

அகண்ட அண்டத்தின் ஒளிர் ஞான தத்துவ அடக்கமே… “பேரருள் பேரொளி”

அகண்ட அண்டத்தின் ஒளிர் ஞான தத்துவ அடக்கமே… “பேரருள் பேரொளி”

 

(1) முடிவே இல்லாதது…!
1.ஒன்றுடன் ஒன்று மோதி 2.ஒன்றுடன் ஒன்று கலவையாகி உருவாகி
உருமாற்றமாகிக் கடைசியில் ஆவியாகி 3.மீண்டும் திடமாகி
மீண்டும் அதே சுழற்சி 1,2,3.. 1,2,3

(2) என்றுமே அழிவில்லாதது
1.விண்ணிலே தோன்றும் உயிர்
2.உயிருடன் ஒன்றி ஒளியாக மாற்றிய மகரிஷிகள்

(3) நிலையானது…! (4) சத்தியமானது…!
ஆதிசக்தியின் இயக்கம்…! வெப்பம் காந்தம் விஷம் இந்த மூன்றும் சேர்ந்து எதைக் கவர்கிறதோ அதனின் இயக்கம் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே உள்ளது.

5) ஒளிர் ஞான தத்துவ அடக்கமே…! பேரருள் என்பது.
ஆதிசக்தியின் இயக்கத்தின் நோக்கமே அனைத்தையும் ஒளியாக ஒளிரச் செய்வது… ஒளியின் வளர்ப்பாக முதிர்வடையச் செய்வது தான். அது தான் பேரருள்.
அப்படிப் பேரருளாக முதிர்ந்து ஒளியாக ஒளிரச் செய்து ஒளியின் வளர்ப்பை வளர்க்கும் போது பேரொளியாகிறது. அவர்கள் தான் மகரிஷிகள். துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலம் போன்றவைகள்.

மேலே சொன்ன ஐந்தையும் உள்ளடக்கிய தத்துவம்

ஆதிசக்தியின் படைப்பின் பரிணாம வளர்ச்சியில் மனிதனாக ஆன பின் ஞானத்தின் வழித்தொடரைத் தனக்குள் விளைய வைத்து உடலை விட்டு அகன்றால்
1.பேரண்டத்தில் எத்தனை தீமையின் நிலைகள் நஞ்சாக இருப்பினும் தன்னை அணுகாது
2.அதை அடக்கிடும் நிலைகள் கொண்டு ஒளியின் சரீரமாக மாற்றிடும் நிலைகள் வருகின்றது.

அப்படி ஆனவர்கள்தான், இன்று எதனையும் பிளந்திடும் நிலைகள் பெற்றவர்கள், சப்தரிஷிகள்.
1.ஆக ஒவ்வொரு பூமியின் தொடர் கொண்டும் வாழுகின்றார்கள்
2.அந்தந்த பிரபஞ்சம் இறந்தாலும், இவர்கள் தனி மண்டலமாக இயக்கப்பட்டு
3.தீமையற்ற உலகை அவர்களுக்குள் சிருஷ்டித்துக் கொண்டிருப்பார்கள்.

ஒவ்வொரு சூரியக் குடும்பத்திலும் ஏற்பட்ட இந்த மண்டலங்கள் வேறு வேறு விதமாக இருப்பினும்
1.உடல் பெற்ற உணர்வின் நிலைகளிலிருந்து
2.தீமைகளைப் பிளந்த உணர்வுகள் ஒருக்கிணைந்து
3.பெரும் மண்டலமாகத் திகழ்கின்றார்கள்.

இந்த அகண்ட பேரண்டத்தில், இப்பேர்ப்பட்ட மகரிஷிகளும் உண்டு. ஆக, மனிதனில் தெளிந்த நிலைகள் கொண்டு அது பெரும் வட்டமாகச் சுழன்று கொண்டுள்ளார்கள்.
1.மனிதர்களாகிய நாம் அனைவரும்
2.அதிலே இணைந்தால்தான் நல்லது.

முழுமையான விரிவாக்கம்

பேரண்டம், முதலிலே இருண்ட நிலைகளில் இருந்தது,
1.ஒன்றுடன் ஒன்று மோதி சுழற்சி வேகம் கொண்டு சூரியன்களாக விளைந்து நட்சத்திரங்களாக விளைந்து
2.அதிலே தோன்றிய கோள்களாக விளைந்து, உயிரணுக்களாக விளைந்தது.

உயிரணுக்கள் அதனின் நிலைகள் நுகர்ந்து நுகர்ந்து
1.உணர்வின் தன்மை உடல் பெற்று
2.எண்ணத்தின் நிலைகள் கொண்டு இயங்கத் தொடங்கும் நிலைகள் கொண்டு
3.தன்னைக் காத்திடும் காத்திடும் நிலைகள் கொண்டு வந்தது.

இப்படி இந்த உயிரின் நிலைகள் உடல்களைக் காத்திடும் நிலையாக வந்தாலும்,
1.இந்த உயிருடன் ஒன்றி
2.ஒளியின் சரீரமாகத் தன்னைக் காத்திடும் நிலைகளில் விளைந்தவர்கள் தான் மகரிஷிகள்.

ஆகவே அது அனைத்தும் நாம் பெற முடியும்.

அதைப் பெறச் செய்வதற்குத்தான் மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் அருளிய அருள் வழிப்படி விண்ணின் ஆற்றலைக் காண அதைப் பெறும் பாக்கியத்தை இன்று நாம் அனைவரும் பெற்றுள்ளோம்.

ஆகவே நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் நாம் அனைவரும் மெய் உலகைப் படைக்கும் சக்தியாக ஒருங்கிணைந்து செயல்படுவோம்.

“ஐயோ… பாவம்…!” என்று இரக்கப்படுவதில் உள்ள பின் விளைவுகள்

“ஐயோ… பாவம்…!” என்று இரக்கப்படுவதில் உள்ள பின் விளைவுகள்

 

உதாரணமாக இரயிலிலே நாம் பிரயாணம் செய்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். நாம் இரக்கம் ஈகை பண்பு கொண்டவர்கள். அங்கே பயணம் செய்பவர்களில் ஒருவர் கடுமையாக வேதனைப்படுகிறார் என்று பார்க்கிறோம்.

அவரை நமக்குத் தெரியாது… அவர்களிடம் நாம் வேறு உணர்வு கொண்டும் பழகவில்லை. பிரயாணம் செய்யும் பொழுது தான் பழக்கம். அவர் சிரமப்படுவதை… இரக்க மனம் கொண்டு என்ன… ஏது…? என்று பார்க்கின்றோம்.

ஆனால் அவருடன் வந்தவர்களோ சலிப்பாகச் சஞ்சலமாகவே அவரிடம் பேசுவார்கள். ஏனென்றால் அடிக்கடி அவரிடம் கவலைப்பட்டுப் பழகியவர்கள் அல்லவா. இருக்கிற இடத்தில் சும்மா இரு…! ஏன் இவ்வாறு செய்து கொண்டிருக்கிறாய்…? என்று அடிக்கடி பேசுவார்கள்.

ஆனால் நாமோ…
1.ஏன் இப்படி…? என்று இரக்கத்தோடு இந்த செயலைக் கவனிக்கின்றோம் ஏனென்றால் அன்று ஒரு நாள் தானே பழகுகிறோம்.
2.ஆகையினால் ஏன் இந்த மாதிரிச் செய்கிறீர்கள்…! உங்களுக்கு என்னம்மா வேண்டும்…? ஏதம்மா வேண்டும்…? என்று இப்படிப் பதிவு செய்கிறோம்.

இப்படிப் பண்போடு சொல்லப்படும் பொழுது அவர்களுக்கு வேதனை கொஞ்சம் தணிகிறது. “இந்த உணர்வு…” அந்த வேதனைப்படுவர் உடலிலே ஆழமாகப் பதிவாகி வலுப் பெற்று விடுகின்றது.

நாம் என்ன நினைக்கின்றோம்…! இந்தப் பெண்மணி இவ்வளவு கஷ்டப்படுகின்றது… ஆனால் இரக்கமில்லாதபடி சமுதாயம் பேசுகிறது பார்…! என்று “அவர்கள் உணர்வை…” நமக்குள் பதிவு செய்கின்றோம்.

அடுத்து அவர் ஊருக்குப் போய்ச் சேருகின்றார். அவரைச் சார்ந்தவர்கள் உணர்வு வரும் பொழுது இந்த எண்ணங்கள் அதிகமாகிறது…
1.பார்… எத்தனை நல்லது செய்தோம்…? எத்தனை வசதி கொடுத்தோம்…? நம்மை இப்படித் தான் பேசுகிறார்கள்.
2.ஆனால் இரயிலில் பயணம் செய்யும் பொழுது “அந்த மகராசி… என்ன உபச்சாரம்…!” என்ற இந்த உணர்வு அங்கே வலுப்பெறுகின்றது.

ஆனால் நாமோ அவர்கள் வேதனையைப் பதிவு செய்கின்றோம். அதாவது
1.அவர்கள் உடலில் விளைந்தது நமக்குள்ளே…!
2.நம்முடைய உடலிலே பதிவான உணர்வுகள் அங்கே…!
3.அதே சமயத்தில் அங்கே வேதனைப்படுவருடைய வீட்டிலோ அவருக்கு வெறுப்பு.

உடலை விட்டுப்பிரியும் போது அவரின் உணர்வுகள் “இரயிலில் தனக்கு ஆதரவாகப் பேசியவர் மேல் நினைவு வருகின்றது…!” விதிப்படி அவர்கள் எண்ணுகின்றார்கள்.

உயிர் பிரியும் பொழுது அந்த ஆன்மா எந்த உணர்வைக் (எண்ணங்களை) கடைசியிலே வலுவாக எடுத்துக் கொண்டதோ…
1.நாம் இங்கே இருந்தாலும் நம் மீது அந்த நினைவுகள் வந்து உடலுக்குள் புகுந்துவிடுகிறது.
2.நம் உடலில் அந்த ஆன்மா புகுந்தது நமக்கே தெரியாது.

ஆனால் அந்தக் குடும்பத்தைச் சார்ந்தவர்களை எண்ணும் போது… பாவிகள் என்று பதிவு செய்து அந்த எண்ண அலைகளை அங்கே பரப்புகின்றது. இவ்வாறு பதிந்த எண்ணங்கள் கொண்டு இதிலே மடிந்து விடுகின்றது.

சாப அலைகள் அந்தக் குடும்பத்தைச் சாடுகிறது. இறந்த உடலில் விளைந்தது அனைத்துமே அந்தக் குடும்பத்திற்குப் பாய்கின்றது.

ஆனால் இங்கே பற்று கொண்ட நிலையில் மகராசி எனக்கு ஆதரவாகப் பேசியது என்ற அந்த எண்ணத்துடன் அந்த ஆன்மா இங்கே வந்து விடுகின்றது.

விஷத்தில் பாதாமைப் போட்டால் எப்படி இருக்கும்…? அந்த மாதிரி
1.அவர் வேதனைப்பட்ட உணர்வுக்குள் இந்த உணர்வின் தன்மை கலந்து இங்கே இயக்கச் சக்தியாக மாறுகிறது.
2.அந்த உடல் எவ்வாறெல்லாம் வேதனைப்பட்டதோ… தன் குடும்பத்தாரை வெறுப்புடன் எப்படிப் பேசியதோ…
3.இங்கே வந்தபின்… தன் குடும்பத்தில் உள்ளவர்களிடம் வெறுப்பாகப் பேச வைக்கும்.

பார்க்கலாம்… சில குடும்பங்களில் நேற்று வரை அவருடைய பேச்சு பழக்க வழக்கம் எல்லாமே… நல்லதாக உதவி செய்வதாக இருக்கும். ஆனால் இந்த ஆன்மா புகுந்த பின் பார்த்தால் எல்லோரையும் வெறுத்துப் பேசும்.

நேற்று வரை எல்லோருக்கும் நல்லதைத்தான் செய்தார் ஆனால் இப்பொழுது இப்படிப் பேசுகின்றாரே…! என்னமோ தெரியவில்லை…! என்பார்கள்.
1.அந்த உடலிலே விளைந்த உணர்வின் செல்கள் நோயாக மாற்றிவிடும்.
2.பெரும்பகுதி இப்படித்தான் மனிதன் வாழ்க்கையில் தேய்பிறையாகச் சென்று கொண்டிருக்கின்றான்.

ஆனால் இது எல்லாம் சாஸ்திரங்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதைத்தான் உங்களுக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

ஞானிகள் உணர்வுகள் நமக்குள் வளர்ச்சியாகும் போது சில உண்மைகளைப் பிரித்துக் காட்டும்

ஞானிகள் உணர்வுகள் நமக்குள் வளர்ச்சியாகும் போது சில உண்மைகளைப் பிரித்துக் காட்டும்

 

நாம் சும்மா இருக்கின்றோம்… அப்போது ஒருவரைப் பார்க்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம். பார்த்தவுடனே…
1.அவர் எடுத்துக் கொண்ட உணர்வு கொண்டு நமக்குள் நினைவோட்டங்கள் திடீரென்று ஓட ஆரம்பிக்கும்.
2.ஒரு வெளிச்சத்தைப் போட்டவுடன் அங்கிருக்கும் பொருள்கள் எப்படித் தெரிய வருகின்றதோ இது போன்று
3.இந்த உணர்வின் ஓட்டங்கள் வரும்… இன்னது தான் என்று…!
4.காரணம் ஞானிகள் உணர்வு நமக்குள் வரப்படும் பொழுது அந்த உண்மைகளை உணர முடியும்.

நாம் இங்கே தொழிலில் இருப்போம்… ஆனால் இது இரண்டையும் பிரித்துக் காட்டும் பொழுது நாம் அதைத் தெரிந்து கொள்ளலாம்.

ஒரு கம்ப்யூட்டரில் இரண்டு அலைகள் போட்ட உடனே எழுத்து வடிவிற்கு வேண்டிய நிலையில் நமக்கு வேண்டிய அந்த பாஷை இந்தியோ… தமிழோ… ஆங்கிலமோ… பிரித்துக் கொடுக்கின்றார்கள்.

அந்த அழுத்த உணர்வுக்குச் (COMMAND) சென்றவுடன் அதனதன் நிலைகளில் கம்ப்யூட்டர் இயக்குகின்றது.

இதைப் போன்று தான்… நமது உயிர் சூரியன் காந்த சக்தி கவர்ந்த உணர்வுகளை நுகரப்படும் பொழுது எலக்ட்ரானிக்காக (உணர்ச்சிகளாக) மாற்றுகின்றது.
1.மாற்றியவுடன் அதனுடைய பிரிவு… அளவுகோல் எதுவோ
2.அதற்குத் தகுந்த மாதிரி அந்த உணர்வின் இயக்கமாக நம் உடலை இயக்கும்.

நம்முடைய உயிரின் வேலை காந்தத்தை இழுக்கின்றது. அதிலே வந்த அந்த உணர்வு நம் அழுத்தம் எதுவாக இருக்கின்றதோ அதற்குத் தகுந்தாற் போல் எலக்ட்ரானிக்காக மாற்றும்.

மாற்றிய அந்த உணர்வுகளைப் பரப்பப்படும் பொழுது
1.அதனுடைய இன இயக்கங்கள் அந்த அதிர்வுகளைக் கொடுத்து உடலை இயக்கிக் காட்டும்.
2.அதற்குத் தகுந்த சிந்தனையும் அதற்குண்டான செயல்களையும் நமக்குள் இயக்கும்.

கம்ப்யூட்டரில் மின்சாரத்தை மையமாக வைத்து உணர்வின் செல்களுக்கு எலக்ட்ரானிக்காக… இந்த மாற்ற உணர்வுகளைக் கொடுக்கின்றார்கள். கடிகாரத்தில் பார்க்கலாம் அந்தந்தக் கால பருவம் வந்தபின் அதை நமக்கு (அலாரம்) அறிவுறுத்துகின்றது.

அதில் இருக்கக்கூடிய பேட்டரி செல்கள் இந்த வேலையைச் செய்கின்றது அதில் எதை ஆணையிட்டு வைத்திருக்கின்றோமோ அதன் உணர்வின் கருக்களை மாற்றி மாற்றி அளவுகோல் பிரகாரம் இயக்கும்.

ஆனால் சிறிதளவு அதிலே நீர் பட்டு விட்டால் அளவுகள் மாறிவிடும்… அதனின் இயக்கமே மாற்றமாகிவிடும். நீரில் உள்ள காந்தப்புலன் அதை அழிக்கும் திறன் கொண்டது.

நாம் எதையெல்லாம் எண்ணுகின்றோமோ நம் உயிர் எலக்ட்ரானிக்காக மாற்றி அந்த உணர்வின் வலு செல்கள் எப்படி இருக்கின்றதோ அதன் இயக்கமாக உடலை இயக்குகின்றது.

விஞ்ஞான அறிவுப்படி எலக்ட்ரானிக் இயந்திரத்தை இயக்குகின்றது. இயக்கிய நிலையோடு விஞ்ஞானம் சரி. அதில் வளர்ச்சி பெற முடியாது தேய்வு தான் உண்டு. ஆனால்… மெய்ஞான அறிவுப்படி
1.உயிர் எலக்ட்ரானிக்காக மாற்றி அந்த உணர்வின் இயக்கப்படி நம்மை இயக்கும்.
2.இயற்கையின் நிலைகள் கொண்டு இந்த உணர்வின் அணுக்களை வளர்ச்சி பெறும் தன்மை பெற்றது
3.இதில் எந்தெந்தத் தன்மையோ அதனதன் அளவுகோல் கூடக் கூட அணுக்களின் உணர்வுக்கொப்ப வளர்ச்சி பெருகிக் கொண்டே வரும்.

அதனுடைய முடிவு எதை எடுத்து உருவாக்கியதோ அந்த உணர்வுக்கொப்ப செல்களை மாற்றி உருவத்தையே உயிர் மாற்றிவிடும். சொல்வது அர்த்தமாகிறது அல்லவா…!

மனித ரூபம் உருப்பெறும் தகுதியும்… அது இழக்கப்படும் சந்தர்ப்பமும்

மனித ரூபம் உருப்பெறும் தகுதியும்… அது இழக்கப்படும் சந்தர்ப்பமும்

 

கொசு நம்மைக் கடிக்கின்றது… நம் இரத்தத்தை உணவாக உட்கொள்கிறது. மனிதனின் உணர்வுகள் கொசுவின் உடலில் பரவுகின்றது. ஆனால் அது மனிதனைப் போன்ற ரூபம் ஆவதில்லை.

இரத்தம் அதற்கு உணவாகின்றது. மனித இரத்தத்தில் உள்ள உணர்வுகள்
1.மனிதனுக்குண்டான சிந்தனைகள் எதுவோ அது அனைத்தும் அந்தக் கொசுவுக்கு வருகிறது.
2.அதாவது… மனிதனின் நினைவே அதற்குள் வருகின்றது.

அந்த இரத்தத்தின் உணர்வுகள் கொண்டு அது சிறிது காலமே வாழ்ந்தாலும் உடலை விட்டுப் பிரியும் அதனுடைய உயிரான்மா மனிதன் ஈர்ப்பிற்குள்ளே வருகின்றது.

பரிணாம வளர்ச்சியில் ஒரு மான் புலியை உற்றுப் பார்த்து அதனுடைய கொடூர உணர்வினை நுகரப்படும் பொழுது புலியின் உணர்வுகள் மானுக்குள் அதிகமாகின்றது… மான் இறந்தால் புலியின் ஈர்ப்புக்குள் சென்று மான் புலியாக மாறுகிறது.

கொசு மனிதனின் இரத்தத்தைக் குடிக்கின்றது. மனிதனின் உணர்வு அதிகமாகிறது. ஆனால் நினைவு மனிதன் மேல் வரும் பொழுது
1.அந்தக் கொசு மனிதனுடைய ஈர்ப்பு வட்டத்திற்குள் சிக்கப்பட்டு நம் சுவாசத்தின் வழி உள்ளே சென்று
2.மனித உணர்வை மீண்டும் தனக்குள் எடுத்துக் கருவாகி முட்டை மாதிரி ஆகி விடுகிறது.

அதே போல் ஒரு எறும்பை நசுக்குகிறோம் என்றால் நம்முடைய நினைவு கொண்டு அந்த உயிர் நமக்குள் வந்துவிடும். ஒரு ஆட்டை இம்சித்துக் கொல்கிறோம் என்றால் அது வேதனைப்படும் நினைவுகள் கொண்டு மனிதனுடைய ஈர்ப்பிற்குள் அந்த உயிரான்மா வந்து விடுகின்றது.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை. பரிணாம வளர்ச்சிக்கு அது வருகின்றது. மனிதன் உணர்வுகள் அதிகமாக இருப்பதால் அந்த உயிரணுக்கள் மனிதனில் உருப்பெறும் “அணு திசுக்களாக..” விளையத் தொடங்கி விடுகின்றது.

எந்த மனிதருக்குள் அந்த உயிரான்மா வந்தாலும் அந்த கால நிலைகளுக்கொப்ப உடலை விட்டு உயிர் வெளியேறி விட்டால் அந்த உயிரான்மா அதாவது எறும்பு ஆடோ அதனுடைய உயிரணுக்கள்
1.வாழ்ந்தவர்… யாருடன் நட்பாக அல்லது உறவு கொண்டு அதிகமாகப் பழகினாரோ
2.அந்த எண்ணம் கொண்டு இந்த ஆன்மாக்கள் அந்த உடலுக்குள்ளே திரும்பச் சென்றுவிடும்.
3.இப்படி ஏழு மனித உடல்களிலே இது மாறி மாறி வந்து மனிதனின் நிலைகளில் முழுமை பெறும் அணுக்களாக விளையப்பட்டு
4.ஏழாவது மனிதனுக்குள் வரும் பொழுது மனிதனாக முழுமை பெறும் வளர்ச்சிக்கு வருகின்றது.

அப்படிப்பட்ட நிலைக்கு வந்தாலும் அதில் பெண்பால் ஆண்பால் என்ற கரு முட்டைகளும் யார் யாருக்குள் இது கலக்கின்றதோ அவைகளுக்கு ஒப்ப மனிதனாக உருப்பெறுகின்றது.

பெண்பாலுக்கும் அந்த முட்டை உருவாகின்றது… ஆண்பாலுக்கும் அந்த முட்டை உருவாகின்றது. ஆனால் இரண்டும் சேர்த்து இணைந்த நிலைகள் மோதும் பொழுது தான்… கரைந்து… ஒன்றை விழுங்குகின்றது அதற்குள் இணைகின்றது. கரு வளர்ச்சிக்கு வரும் தன்மை அடைகின்றது.

எத்தனையோ கோடி உயிரணுக்கள் உடலுக்குள் இருந்தாலும் அங்கே கருவுக்குள் சென்று மனிதனாகப் பிறக்கும் தன்மை உயிரணுக்களுக்குத் தோன்றுகின்றது.

இருந்தாலும் ஒரு உடலிலே மனிதனாகப் பிறந்து மனிதன் இறந்த பின் “அவன் வளர்ச்சி இல்லாத நிலைகளில்…” இன்னொரு உடலுக்குள் இந்த ஆன்மா சென்று விட்டால் இது…
1.பல மனிதச் சரீரங்களில் புகுந்த உயிரான்மாக்கள் இந்த உடலுக்குள் புகுந்தால்
2.அங்கே மனித உருப் பெறாதபடி தடைப்படுத்திக் கொண்டே இருக்கும்.

ஏனென்றால்… மனிதனான பின் அதில் வளர்ச்சியற்று விபத்திலேயோ… அல்லது வெறுப்பான நிலைகள் கொண்டு தற்கொலையோ… வளர்ச்சி பெறும் தன்மையைத் தன் எண்ணத்தால் குறைத்து விட்டால்
1.அந்த ஆன்மா எந்த மனித உடலுக்குள் சென்றாலும் அங்கே கருக்களை வளர விடாதபடி தடுக்கும்.
2.உயிரணுக்கள் மனிதனாகப் பிறக்கும் தகுதி அங்கே இழக்கப்படுகிறது.
3.அதாவது “குழந்தை உருவாகும்… குழந்தையை உருவாக்கும் ஆற்றல்” அங்கே தடுக்கப்படுகிறது.

நாரதன் கொடுக்கும் ஞானக்கனியின் விளக்கம்

நாரதன் கொடுக்கும் ஞானக்கனியின் விளக்கம்

 

ஒரு மாங்கனி அது இனிப்பாக இருக்கும்பொழுது, அந்தச் சுவையின் மணத்தையே வெளிப்படுத்தும். காயாக இருக்கும் பொழுது புளிப்பின் உணர்ச்சியைத் தூண்டும்.

இதைப் போல மனிதனாக இருக்கும் நாம் காயின் பருவத்தில் இருக்கும் பொழுது கனியாகும் உணர்வின் தன்மையை நாம் கவர்ந்தால் கனியும் தன்மையை அடைகின்றோம்.

ஆனால் கனியாவதற்கு முன் வெப்பத்தின் தணல் அதிகமாக இருந்தால் வெம்பி மரத்திலிருந்து விழுந்து விடும். வெம்பிய நிலைகள் கொண்டு வித்து உருவாகாது… அதனுடைய சத்தும் நமக்குள் நல்லது ஆகாது.

ஆகவே “வெம்பாத நிலைகள் கொண்டு…”
1.கனியின் தன்மையை அடைந்த கனியைப் போல
2.உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு மெய்ஞானியின் உணர்வைத் தனக்குள் வளர்த்து
3.உணர்வுகள் அனைத்தும் கனியாகி உயிருடன் ஒன்றிய கனியின் தத்துவமாக
4.ஏழாவது நிலையாக ஒளிச் சரீரம் பெற வேண்டும்..

இதைத்தான் கந்த புராணத்தில் தெளிவாகக் காட்டப்பட்டது.

நாரதன் கனியைக் கொண்டு வந்து, சிவனிடம் கொடுக்கின்றான். சிவன் யார்…? நமது சரீரமே.

நாரதன் கனியைச் சிவன் கையில் கொடுத்து உலகை எவர் ஒருவர் முதலில் வலம் வந்து விடுகின்றாரோ அவருக்கு இந்தக் கனியைக் கொடுத்துவிடு என்று சொல்கின்றான்.

அப்பொழுது… ஆறாவது அறிவின் தன்மை உலகை அறிந்து கொள்ளும் நிலைகள் கொண்டு…
1.எண்ணத்தில் விரிவடைந்து புற உலகத்தை எண்ணுவோமேயானால்
2.”உலகைச் சுற்றத்தான்…” அந்த உணர்வு செல்லும்.

இந்த ஆறாவது அறிவு “தெரிந்து கொண்டேன்…” என்ற நிலை வரப்பபடும் பொழுது “எனக்கு வசதி இருக்கிறது…” என்று எண்ணத்தால் எண்ணினாலும் ஒன்றை மறந்து விடுகின்றான்.

எவ்வாறு மறந்து விடுகின்றான்…? ஞானம் இருந்தும், தான் உணர முடியாத நிலைகள் எவ்வாறு ஆகுகின்றது…? என்று காட்டுகிறார்கள்.
1.‘நான் ஒரு நொடியில் உலகை வலம் வந்து விடுகின்றேன்’ என்று
2.எண்ணத்தால் வேகமாகச் சென்று விடுகின்றான் முருகன் (ஆறாவது அறிவு).

அதே சமயம்… சிவன் அருகில் விநாயகன் இருக்கும் பொழுது
1.பேரண்டமும் பெரு உலகமும் உன் அன்னை தந்தைதான்.
2.பேரண்டம் சுழல்வதற்கும்… அந்தப் பேரண்டத்தின் ஆற்றல் உன் அன்னை தந்தைக்குள் இருக்கின்றது.
3.இது தான் உனக்கு உலகம்.
4.அவர்களைச் சுற்றி… நீ இந்த வினையாகச் சுற்றி… நிலைக்கு வந்து சேர்.
5.அந்தக் கனியின் தன்மையை நீ பருகலாம்…! என்று நமக்குத் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார்கள்.

கனி – நாரதன் என்று உணர்த்தப்படுவது என்ன…?

ரிஷியின் மகன் நாரதன். மனிதனின் உயர்வின் தன்மை கனியாக்கியவன் அந்த மகரிஷி. அந்தக் கனியின் தன்மை அங்கிருந்து வரப்படும் பொழுதுதான்… “நாரதனைக் கனியாக்கி”
1.கனியினைச் சிவனிடம் கொடுக்கப்படும் பொழுது பேரண்டமும் பேருலகமும் அன்னை தந்தை
2.அந்த உணர்வுடன் ஒன்றிய நிலைகள் கொண்டு நீ அந்தக் கனியைப் பெறு.
3.அதனைக் கொண்டு நீ கனியாகு.

உன் ஆறாவது அறிவு கொண்டு… “எங்கே இருக்கும்…?” என்றும் “எங்கோ இருக்கும்…!” என்றும் கடவுளைத் தேடாதே…!

உனக்குள், உயிரான நிலைகள் அன்னையாகவும் தந்தையாகவும்… அதனின் உணர்வின் சத்து உனக்குள் தாயாகவும் சிவசக்தியாகவும் இயங்கிக் கொண்டிருக்கும் இந்த உடலை மறவாதே…!

சிவனையும் நமக்குள் இருக்கும் சக்தியையும் நமக்கு எவ்வளவு தெளிவாக எடுத்துரைத்துள்ளார்கள் ஞானிகள்…? எதை வினையாகச் சேர்க்க வேண்டும்…? விநாயகன் யார்…?
1.அந்த ஞானியின் உணர்வை உனக்குள் வினையாக்கி அதை நீ கனியாக்கு
2.கனியானவன் அவன்…! என்று தெளிவாக எடுத்துரைத்தான் அந்த மகாஞானி.

நாம் இங்கே என்ன செய்கின்றோம்…? அந்த உட்பொருளைக் காணாதவாறு, கதையைக் கதையாகத்தான் காணுகின்றோமே தவிர… மெய்ப்பொருளைக் கண்டுணரும் ஆறாவது அறிவைத் தனக்குள் செலுத்தி… உட்பொருளைக் கண்டுணரும் நிலைகள் இல்லை.

மெய்ப்பொருளைக் கண்டுணர வேண்டும் என்று கவிப்புலமை கொண்டு, உணர்வின் வேட்கை கொண்டு நாதங்களின் சுருதியாக அதற்குள் பிரித்தாலும்… கவிப்புலமைகள் பல வந்தாலும்… புலமை பெற்றவருக்கே தெரியும்.

அருணகிரிநாதர்… “நாத விந்துகள் ஆதி நமோ நமோ…” என்று பாடினார்.
1.உடலுக்குள் எந்த உணர்வின் தன்மையை எடுத்தோமோ நமது உயிருக்குள் சேர்க்கப்படும் பொழுது அது ஆவியாகின்றது.
2.அந்த உணர்வின் தன்மை நமது உடலாகும் பொழுது “நாத விந்துகள் ஆதி நமோ நமோ…!”

நாம் எதையெல்லாம் எடுக்கின்றோமோ எந்த குணத்தை எடுக்கின்றோமோ
1.அந்த உணர்வின் சத்து உடலுக்குள் சேர்க்கும் பொழுது, “ஆதி…”
2.உடலாகச் சேர்க்கும் பொழுது “நமோ நமோ…”

பாடலின் உட்பொருள் தெரியாமல் பாடிக் கொண்டு போய் விடுகின்றோம். இவையெல்லாம் நமது ஞானிகள் கண்ட பேருண்மைகள். நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் நலம்.

இயற்கையின் உண்மைகளை “குருநாதர் எனக்குக் காட்டிய விதம்…”

இயற்கையின் உண்மைகளை “குருநாதர் எனக்குக் காட்டிய விதம்…”

 

நம் இந்திய நாட்டிலே அரசர்கள் ஆட்சி செய்யும் பொழுது எத்தனையோ போர் முறைகள் ஏற்பட்டது. அதிலே மதப் போர்களும் இனப் போர்களும் நடந்தது.
1.அதனால் எண்ணிலடங்காத கொலைகளும் தகாத செயல்களும் நடந்தது.
2.இது எல்லாமே அந்தந்த இடங்களிலே பதிவாகியுள்ளது
3.எத்தனையோ உடல்கள் எரிக்கப்பட்டது… எரிந்த உணர்வின் அலைகளும் ஆங்காங்கு பதிவாகி உள்ளது.

மெய் ஞானத்தால் அந்த அணுக்களைப் பற்றி அறிய முடியும். ஆனால் உயிரினங்களில் ஜீவணுக்களாக வளர்ந்து விடுகின்றது.

அதே சமயத்தில் விஞ்ஞான அறிவு கொண்டு எலக்ட்ரானிக் என்ற முறைப்படி (ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்) அந்த அலைகளைக் கவர முடியும்.
1.விஞ்ஞான அறிவால் அதை எல்லாம் அறிய முடிந்தாலும் அதனால் அவர்களுக்குப் பயனில்லை.
2.காரணம் அத்தகைய நிலை வருவதற்கு முன்னாடி… கண்டுபிடிக்கக் கூடியவர்கள் அழிந்து விடுவார்கள்.

விஞ்ஞான அறிவுகள் (எலக்ட்ரானிக்) அந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்து விட்டது.

இதைப் போன்று தான்
1.நமது உயிரும் எலக்ட்ரானிக்காக இருந்து ஒவ்வொரு நிலைகளையும் காட்டிக் கொண்டிருக்கின்றது.
2.கரண்டை உற்பத்தி செய்கிறது… எடுத்துக் கொண்ட உணர்வுகளை அலைகளாக இயக்குகின்றது.

இதைக் காட்டுவதற்குத் தான் குருநாதர் காடு மேடேல்லாம் எம்மை அலைய வைத்தார்.

அக்காலங்களில் தவம் இருக்கச் சென்றவர்களும்
1.அகஸ்தியன் எவ்வாறு எல்லாம் தாவர இன மூலிகைகளைத் தனக்குள் நுகர்ந்தறிந்தான்…? என்ற நிலையும்
2.அதே வழியில் போகர் எவ்வாறு எடுத்தார்…? என்ற நிலைகளையும்
3.அவர்களைப் பின்பற்றிக் காட்டுப் பகுதியில் அரசர்கள் சென்ற நிலைகளையும்
4.அது எல்லாம் எப்படி ரெக்கார்டு (பதிவு) ஆகி இருக்கின்றது…? என்பதைக் காட்டுகின்றார்.
5.அந்த அலைகளை எடுத்துத்தான் எனக்கு அதையெல்லாம் குருநாதர் உணர்த்துகின்றார்.
5.அதை எல்லாம் தெரிந்து தான் உங்களிடம் இப்பொழுது சொல்கின்றேன்.

நான் தெரிந்த மாதிரி நீங்களும் தெரிய வேண்டும் என்றால் சிறிது நாளாகும். ஆனால் தெரிய முடியும்…!
1.தெரிந்தாலும் நமது வாழ்க்கைக்கு இதை விலக்கி விட்டு
2.மெய் ஞானிகள் உணர்வைப் பெறுவதாகவும் அதை வளர்ப்பதாகவும் வர வேண்டும்.

தெரிந்து கொண்டேன் என்ற நிலையில் “ஆசை…” உடலின் இச்சைக்கு அதிகமாகி இதிலே சிக்கிவிட்டால் “நான் பெரிய மகான்…!” என்ற நிலையில் உடல் பற்றுக்கே அழைத்து விடும்.

சொல்வது அர்த்தமாகிறது அல்லவா…!

அந்த மெய் ஞானிகள் உணர்வைப் பெற வேண்டும் என்று எண்ணி அதை நீங்கள் பெற்று வளர்த்துக் கொண்டால் அங்கே செல்லலாம். காரணம் இதையெல்லாம் கண்டுபிடிக்கலாம் என்று வந்து விட்டால் இந்த உலக ஆசைகள் வளர்ந்து விடும்.

அன்றைக்கு காந்திஜி அவர் இங்கிலாந்தில் வட்டமேசை மாநாட்டிற்குப் போகும் போது “முதலில் அவரை உள்ளே விடமாட்டேன்…” என்கின்றார்கள்

இந்தியாவைப் பற்றிப் பேசப் போகும்போது “அரை வேஷ்டியைக் கட்டிக் கொண்டிருக்கின்றார்…” என்று உள்ளே விடமாட்டேன் என்கிறார்கள் அவர்களைப் போல கோட் சூட் அணிந்து வந்தால்தான் அரசனைப் பார்க்க முடியும்

ஆனால்… காந்திஜி அவர் எப்படியோ சாதித்து உள்ளே போய்விட்டார் அப்பொழுது அங்கே அவர் பேசும் பொழுது அவருக்கு மரியாதை கொடுக்கின்றார்கள்.

இருந்தாலும் அவர்கள் ராஜதந்திரத்தில் என்ன செய்கின்றார்கள்…? ஒரு டெலஸ்கோப்பைக் கையில் கொடுத்தார்கள்

இது எனக்குத் தெரியாது. ஆனால்… குருநாதர் இதை எனக்கு ஞாபகப்படுத்துகின்றார்.

மாநாட்டிற்குப் போய்விட்டுத் திரும்பிக் கப்பலில் வரும்போது நிறைய நாட்களுக்குப் பிறகு அந்த டெலஸ்கோப்பை எடுத்துக் கடலுக்குள் பார்க்கிறார் காந்திஜி.

அப்பொழுது ஆழ் கடலில் உள்ளுக்குள் மீன்கள் போவதெல்லாம் அதிசயமாகத் தெரிகிறது. “ஆ…! அந்த மீன் போகிறது பார். ஆகா… இங்கே இந்த மீன் போகிறது பார்..,” என்று ஆச்சரியப்படுகிறார்.

இப்படிச் சொன்னவுடனே காந்திஜி கூட வந்த தேசாய் காந்தி… அபுல்கலாம் ஆசாத்… இந்த இரண்டு பேரும் இதைப் பார்த்தவுடனே “எனக்குக் கொடு… உனக்குக் கொடு…” என்று வாங்கிப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்

கடலுக்குள் இருக்கும் அந்த அதிசயங்களைப் பார்க்கும் ஆசையில் ஒருவருக்கொருவர் “வெடுக்…” என்று அதை வாங்குவது – தான் பார்ப்பது என்று… கப்பலில் வரும் பொழுது இத்தனை நிலைகளும் அந்த மூன்று பேருக்குள்ளும் நடக்கின்றது

காந்திஜி ஒரு மகான்…! எல்லோருக்கும் உபதேசித்து வந்தாலும்… அப்பொழுது அந்த இடத்தில் அந்த அதிசயத்தைப் பார்க்கும்போது இவருக்கு ஆசைகள் உருவாகின்றது.

அப்பொழுது அவர் என்ன செய்தார்…?

இப்படிப்பட்ட ஆசைகள் உருவான பின்பு இனி நம் கையில் இந்த டெலெஸ்கோப் இருந்தால்
1.நாம் மூன்று பேரும் நிச்சயமாக நண்பர்களாக இருக்க மாட்டோம்.
2.”பகைமையாகி விலகி விடுவோம்…” என்று டெலெஸ்கோப்பை வாங்கி அதை வேகமாகத் தூக்கி கடலில் போட்டுவிட்டார் காந்திஜி.
3.இது நமக்கு வேண்டாம்…! என்று இப்படிச் செய்கிறார்.

இது நடந்த நிகழ்ச்சி.

காங்கிரஸில் நான் ஆர்வமாக ஈடுபட்டிருந்தாலும் எனக்கு இது தெரியாது. ஆனால் குருநாதர் இதைக் காண்பிக்கின்றார். அவர் காண்பித்த பிற்பாடுதான் எனக்கு இது தெரிகின்றது.

குருநாதர் இதைத் தெளிவுபடுத்துகின்றார். ஏனென்றால்
1.இயற்கையின் பேருண்மை நிலைகளை நான் உனக்குக் காண்பிக்கின்றேன்.
2.நான் உனக்குக் காண்பித்த நிலைகளை “மற்றவர்களுக்கும் நீ சொல்வாய்…”
3.எல்லோரும் “பார்க்க வேண்டும்…” என்று ஆசைப்படுவார்கள் என்று இதை எச்சரிக்கை செய்கிறார்

பார்க்க வேண்டும் என்ற அந்த ஆசையில் “எல்லாம் தெரிய ஆரம்பித்தவுடன்…”
1.அவர்கள் அதிலேயே ஆசைப்பட்டு “இந்தப் பூமியின் நிலையில்தான் இருக்க வேண்டும்…” என்று எண்ணுவார்கள்.
2.வந்தவர்கள் அனைவரும் இந்தப் புவியின் பற்றின் உணர்வைப் பெருக்கி விட்டார்கள் என்றால்
3.அப்புறம் – நீ போக வேண்டும் என்ற காட்டிய பாதைக்கு அவர்கள் போக மாட்டார்கள்.

நான் அதைப் பார்த்தேன்…! இதைப் பார்த்தேன்…! என்ற இந்த உணர்வு ஒன்றியவுடனே ஆசையின் உணர்வுகள் வளர்ந்துவிடும் என்று குருநாதர் உணர்த்துகிறார்.

ஆகவே அதை விடுத்து விட்டு…
அந்த மெய் ஞானிகள் உணர்வைப் பெற வேண்டும் என்ற உணர்வினை நீங்கள் வளர்த்து, அதை உங்கள் உடல்களிலே பெருக்கி எல்லா அணுக்களிலும் சேர்த்தால்… உயிருடன் ஒன்றிடும் நிலையாக ஒளியின் சரீரமாக அங்கே போகலாம். ஏனென்றால்
1.இந்த உடல் பற்றை அகற்றி உயிர் பற்றை வளர்த்தவர்கள் ஞானிகள்.
2.உடலுக்காக வாழாமல் நம் உயிருக்காக வாழ வேண்டும்
3.அப்பொழுது அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் நாம் இணைய முடியும்.

குருநாதர் இப்படித்தான் அனுபவபூர்வமாக அனைத்தையும் எமக்கு உணர்த்தினார்.

மனிதனின் சுவாச நிலை

மனிதனின் சுவாச நிலை

 

உடலுக்கு நம் கண் ஆண்டென்னாவாக இருக்கிறது. எப்படி…?

ஒருவர் ஒன்றைச் சொல்லும் பொழுது நாம் அவரை உற்று நோக்குகிறோம்… அவரைப் படமாக்குகின்றோம்… பதிவாக்குகின்றோம்.

அதே சமயம் அவர் உடலில் இருந்து வெளிப்படும் உணர்வலைகளைச் சூரியனின் காந்த சக்திகள் கவர்ந்து வைத்திருக்கின்றது. சுவாசித்த பின் அந்த உணர்வுகள் நமக்குள் பதிவாகிறது.

அது எங்கே…? எப்படிப் பதிவாகின்றது…?

1.உடலில் இருப்பது – காந்தம் “எலும்பு”
2.நாம் எண்ணிய சத்துக்கள் அனைத்தும் நம் உடலில் வடித்து எதையும் கிரகிக்கக் கூடிய சக்தியாக
3.”ஊழ்வினை” – நம் எலும்புக்குள் ஊனாக இருக்கிறது… உடல் அனைத்திலுமே இந்த ஊன் இருக்கும்.

காந்தம்… உடலில் இப்படி இருக்கும் போது “எதையாவது நாம் உற்றுப் பார்க்கிறோம் என்றால்… அந்த உணர்வை எடுத்து ரெக்கார்ட் செய்து விடுகின்றது….!”
1.மற்றவர்கள் சொல்வது போன்று மூளையில் பதிவாக்குவதில்லை
2.உடலில் தான் பதிவாக்குகின்றது…!

ஒரு மைக்கை வைத்து நாம் பேசுகிறோம் என்றால் ஒரு டேப் (TAPE) அதைப் பதிவாக்குகிறது. அந்த நாடாவிலே தான் அது பதிவாகின்றது.

மைக்கில் பேசுகிறோம்… இருந்தாலும் அதற்கு முன்னாடி ட்ரான்சாக்ஷன் செய்யக்கூடிய வயர் வழியாகப் பிரித்து (AMPLIFIER)… ஒலி பெருக்கிக்குக் கொண்டு செல்கின்றது. அப்பொழுது பேச்சை நாம் கேட்க முடிகின்றது.

உதாரணமாக நீங்கள் என்னைத் திட்டுகின்றீர்கள் என்று வைத்துக் கொண்டால்… “உடனே” நான் உங்களைக் கூர்ந்து கவனிக்கின்றேன்.

அப்பொழுது உங்கள் உடலில் இருந்து எது வெளிப்படுகிறதோ… வெளிப்படும் அந்த எண்ணங்களை சூரியனுடைய காந்த சக்தி கவர்கின்றது. என் கண்ணுக்குள் இருக்கும் கருவிழி ருக்மணி… உங்களுடைய உருவத்தை எனக்குள் படமாக்குகின்றது.

உங்கள் உடலிலிருந்து வெளிப்பட்ட எண்ண அலைகளைச் சூரியனின் காந்த அலைகள் கவர்ந்து கொள்கின்றது. அப்பொழுது அவரைப் பார்க்கப்படும் பொழுது எதைக் கண் படம் எடுத்ததோ அதை இழுக்கப்படும் போது சத்தியபாமா…! என்னைத் திட்டுகின்றீர்கள் என்ற உண்மையை உணர்த்துகிறது.

இப்படிப் படம் எடுக்கப்படும் பொழுது உடலில் இருக்கக்கூடிய செல்கள் அதைப் பதிவாக்குகின்றது. அதாவது ஒரு நாடாவிலே பதிவாக்குவது போல்
1.ஊழ்வினை என்று உடலில் உள்ள எலும்புக்குள் பதிவாக்கி (டேப்பில் பதிவு செய்வது போல்) விடுகிறது.
2.இப்படி ஆயிரக்கணக்கானவரை நாம் பார்த்துப் பதிவாக்குகின்றோம்.

இதிலே கவனங்கள் எப்படி இருக்கிறதோ… ஒருவர் திட்டுகிறார் என்றால் கூர்மையாக அதை உற்று நோக்கிய பின் “இரு நான் பார்க்கிறேன்…!” என்றால் அதை மறக்க முடியாது.

ஆனால் சாதாரணமாக சந்தர்ப்பத்திலே பேசிக் கொண்டிருக்கும் பொழுது “நாளைக்கு இந்த இடத்திற்கு வாருங்கள்… இன்னதைத் தருகிறேன்…” என்று சொன்னால்
1.அது நமக்குத் தேவைப்பட்ட முக்கியமான பொருளாக இருந்தால்
2.”அவரிடம் போய் வாங்க வேண்டும்” என்ற எண்ணம் இருக்கும்.

அப்படி இல்லாது இருந்தால்… நாளைக்குப் பார்க்கலாம் வாருங்கள் என்று சொன்னாலும் அது நமக்குள் சரியாகப் பதிவாகாது… நினைவும் சரியாக வராது. இரண்டு நாட்கள் கழித்து “என்னங்க…? நான் வரச் சொன்னேன்… வரவில்லையே…” என்று அவர்கள் கேட்பார்கள்.

ஆனால் இந்தப் பக்கம் வந்தால் உன்னை உதைத்து விடுவேன்…! என்று சொன்னால்
1.அது “சுருக்…” என்று பட்டு விடுகின்றது… ஆழமாகப் பதிவாகி விடுகிறது
2.இப்படிப் பதிவான பிற்பாடு அவரை நினைத்தவுடனேயே அந்த ஆத்திரமும் வெறுப்பும் வருகிறது

இந்த இடத்திற்கு வா பார்க்கலாம்… என்று சொன்ன பிற்பாடு
1.அங்கே போன பின் உணர்ச்சி வேகம் குப்..குப்.. என்று வரும்.
2.ஆனால் போக்கிரியாக இருக்கிறான் என்றால் நம் மனது பட..பட..பட.. என்று அடிக்கும்.

போக்கிரி இல்லாதபடி நம்மைப் போன்று சமமானவர்களாக இருந்தால் அவர் பேசிய பேச்சுக்கு (அவரின் உணர்வு தாக்கியவுடன்) நம்முடைய வலு கொண்டு “அவன் என்ன செய்வான்…? பார்க்கலாம்…!” என்ற நினைவு தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்… மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருக்கும்.

1.அவர்களை எண்ணும் பொழுது அந்த எண்ணம் நினைத்த உடனே அதைக் குவிக்கும்
2.டிவி.க்களிலே படம் எப்படித் தெரிகின்றதோ அதே மாதிரி அந்த நினைவலைகளை இழுத்து உருவமாகக் காட்டும்… உடனே அது தெரியும்
3.பரவலாக இருக்கக்கூடிய அலைகளை இழுத்துக் கண்ணுக்கு முன்னாடி புலனறிவுக்குள் “அதைக் காட்டிக் கொண்டே இருக்கும்…”

அதே உணர்வின் செயல் உயிருக்குள் பட்டு அதனுடன் தொடர் கொண்ட சிறு மூளைக்குள் சென்றவுடன்
1.ட்ரான்சாக்ஷன் ஆகி… எந்த உணர்வோ… நமக்குள் பதிவானது அந்த செல்களில் எடுத்து… அது இயங்க ஆரம்பிக்கும்.
2.அதே அலைகளை எடுத்து எடுத்து… நாம் பேசும் பொழுது தொடர்ச்சியாக வேலை செய்ய ஆரம்பிக்கும்.

நாம் எடுக்கக்கூடிய வார்த்தை நம் சிறுமூளை உயிரிலே பட்டு…
1.அந்தச் சுவாசத்தின் வழி எடுக்கக்கூடிய காற்றை… காந்தத்தைப் பிரித்து… உணர்வின் சத்தைப் பிரித்து
2.அந்த அலைகளை ட்ரான்சாக்சன் செய்து சிறுமூளை உடலுக்குள் உணர்வுகளைச் செயல்படுத்துகின்றது.

ஆனால் அதே சமயத்தில் நாம் எண்ணிய உணர்வுகளை உமிழ் நீராக மாற்றி விடுகின்றது… சாப்பிட்ட ஆகாரத்துடன் அது கலந்து விடுகிறது.
1.நம் கண்ணுக்கு “நாம் எண்ணுவது தெரிவதில்லை…!”
2.நினைவுகள் எடுக்கும் பொழுது அது உமிழ் நீராக அது மாறுகின்றது.

எப்படி…?

வெயில் காலத்தில் மாங்காயையும் உப்பையும் தொட்டுச் சிலர் விரும்பிச் சாப்பிடுவார்கள். அந்தப் புளிப்பு அவர்களுக்கு மிகவும் ரசிப்பாக இருக்கின்றது. மாங்காய் புளிப்பு தான்… ஆனாலும் அதை ரசிக்கின்றார்கள்.

அதைப் பற்றி நான் சொன்னாலும்… மாங்காயையே இப்பொழுது நீங்கள் பார்க்கவில்லை… ஆனால் உமிழ் நீர் உங்களுக்குள் எப்படிச் சுரக்கின்றது…?

மாங்காய் என்று சொன்னவுடனே கப..கப.. என்று உமிழ் நீர் ஊறுகிறது அல்லவா…! அந்தப் புளிப்பின் நிலைகள் கொண்டு உங்களுக்குள் உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது… நினைவலைகளைத் தூண்டுகின்றது.

மாங்காயைப் பார்க்கவில்லை… ஆனால் அந்தச் சுவையின் தன்மை கொண்டு உமிழ் நீரைக் குவிக்கின்றது.

இதற்கு முன்னாடி உமிழ் நீர் ஊறவில்லை..! ஆனால் சொன்னவுடனே எப்படி உமிழ் நீர் ஊறுகின்றதோ இதே மாதிரித் தான் எரிச்சலாக ஒருவர் பேசுகிறார் என்றால் அதைப் பார்த்து நுகர்ந்ததும் அதே எரிச்சலான உணர்வு நமக்குள் வருகிறது. சொல்கிறது அர்த்தமாகிறதல்லவா…!

எரிச்சலான உணர்வு கொண்டு பேசுகிறார்… நாம் உற்றுப் பார்க்கின்றோம் அந்த எரிச்சலான உணர்வு நமக்குள் வருகின்றது
1.”சுழி முனை” என்பதற்கு விளக்கம் சொல்கின்றேன்
2.சுவாசித்த உடனே அதை ட்ரான்சாக்ஷன் செய்கின்றது
3.கண்ணினுடைய நினைவுகள் வரப்படும் பொழுது “மேக்னெட்… அந்த சுவிட்சைக் கிளைத்து விடுகின்றது…”
4.நம் உடல் மொத்தமாக அதை இழுக்க ஆரம்பிக்கும்
5.எந்த குணத்தி(ன்)ல் சுவிட்சைப் போடுகின்றமோ அதை இழுக்கின்றது

ரேடியோ டிவி பெட்டிக்குள் பல ஸ்டேஷன்களைப் பதிவு செய்து வைத்திருக்கின்றனர். எந்த ஸ்டேஷனை… எந்த அலைவரிசயைத் திருப்பி வைக்கின்றோமோ அந்த அலையைக் காற்றிலிருந்து பிரித்து இங்கே எடுத்துக் கொண்டு வருகிறது.

இதே மாதிரி நம் உடலில் ஆயிரக்கணக்கான அலைவரிசை உண்டு. எந்த அலைவரிசையை இழுத்துப் பேசுகிறோமோ… அந்த அலைவரிசை “தன்னாலே பேசும்…”

எண்ணும்போது அந்த அலைகளை எடுத்து நம்மால் உணர முடிகின்றது… நுகர முடிகின்றது… செயல்படுத்த முடிகின்றது.
1.அந்த உணர்வின் அலைகளைச் சுழி முனை சுழற்றி
2.சிறு மூளை ட்ரான்சாக்ஷன் செய்து பிரித்து அந்த உணர்ச்சிகளை உடல் முழுவதும் சுற்ற வைக்கின்றது.

அப்போது அதே உணர்வு தான் நமக்குள் வேலை செய்யும்…!

ஆகவே… நாம் எண்ணக் கூடியதை எல்லாம் எலும்பிற்குள் அந்த மேக்னெட்டில் பதிவு செய்து விடுகின்றது. மீண்டும் நினைத்தவுடன்…
1.அந்த எண்ணங்கள் வீரியமடைந்து கண்ணின் நினைவுகளுக்கு வருகின்றது
2.காற்றில் இருப்பதை இழுக்கிறது… இழுத்தவுடனே சுவாசத்திற்குள் கொண்டு வருகின்றது
3.சுவாசிக்கும் பொழுது எதை எதை நாம் பதிவு செய்திருக்கின்றோமா
4.நம் உடலில் இருக்கக்கூடிய செல்கள் மொத்தமாக இழுத்துப் பிரித்து ஆத்மாவாகக் கொண்டு வருகின்றது.
5.அதைத்தான் நாம் சுவாசிக்கின்றோம்… அதுதான் நம்மை ஒவ்வொரு நொடியிலும் இயக்குகின்றது.

யாம் கொடுக்கும் ஞானப் பொக்கிஷத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்

யாம் கொடுக்கும் ஞானப் பொக்கிஷத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்

 

ஆரம்பத்தில் எத்தனையோ காட்சிகளை எல்லோருக்கும் நான் கொடுத்துக் கொண்டு வந்தேன்… சில உண்மைகளை அறியும் படியும் செய்தேன் – புவியின் ஈர்ப்புக்குள்.
1.அதிலே மனிதனின் இச்சைகள் வளர்க்கப்பட்டது… உடலின் இச்சைக்குள் நிகழ்ந்தது…
2.விண் செல்ல அந்த உணர்வுகள் விடவில்லை.

ஆகவே… அதை எல்லாம் நிறுத்தி விட்டு இப்பொழுது உங்களுக்குள் அந்த மெய் உணர்வைப் பெறும் ஆற்றலாக உபதேசிக்கின்றேன்,

விஞ்ஞான அறிவால் வரும் காற்று மண்டலம் விஷத்தன்மை கொண்டதாக வளரப்படும்போது மனிதன் அதை நுகர்ந்து சிந்தனையற்றவனாகச் செயல்படும் உருப்பெறும் அதிலிருந்து நம்மை மீட்டிக் கொள்ள நம் சிந்தனையை விண்ணில் செலுத்தி மகரிஷிகள் அருள் சக்திகளை நாம் பெற வேண்டும்.

1.அதனைப் பெற்று நம் உணர்வு கொண்டு தன் அருகில் வரும் மனிதனின் தீமைகளிலிருந்து விடுபடவும்
2.நுகர்ந்த உணர்வுகள் மற்றவரைக் காக்கவும் தன்னைக் காக்கவும் விண்ணின் ஆற்றலைப் பெருக்கவும்
3.உடலை விட்டு அகன்ற பின் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் நாம் இணைய இது உதவும்.

இந்த உடல் நமக்குச் சதமல்ல. ஆனால்… வாழ்க்கையில் இந்த உடலின் இச்சைகுகந்த உணர்வுகளைப் பெறப்படும் பொழுது எந்தத் தெய்வம் செய்யும் என்ற உணர்வுகளைப் பதிவு செய்தனரோ அதே தெய்வச் சிலையாகப் பார்த்துணர்ந்த உணர்வுகள் மடிந்த பின் அதே உணர்வலைகளை அதே ஏக்கம் கொண்டவர்கள் “இன்ன தெய்வத்தைக் கண்டேன்…” என்று சொல்வார்கள்.

இதுகளெல்லாம் மனிதனுடைய இச்சைக்குள் வளர்த்துக் கொண்ட நிலைகள்.

ஆகவே இந்தத் தெய்வக் காட்சிகள் என்பது… மனிதனில் உருவாக்கி வேஷமிடப்பட்டு அதனைப் படமாக்கி மீண்டும் அலைகளாக அனுப்பி (விஞ்ஞான அறிவிலே) அதை நுகரப்படும் பொழுது அதையே எப்படிக் காட்சியாகக் காணுகின்றமோ இதைப் போலத் தான் கண் புலனறிவுகளில் சிலையை உற்று நோக்கி ஆடைகளை அலங்கரித்த அதன் உணர்வை நமக்குள் பதிவாக்கிய பின்… உடலை விட்டுச் சென்ற பின் அந்த அலையின் ரூபமாகச் செல்லும்.
1.அதை மீண்டும் குவிக்கப்படும் பொழுது
2.எதனை வலுவாகச் சேர்த்தோமோ அந்த ரூபமாக முருகனாகவும் காளியாகவும் காட்டும்.

கொடூர உணர்வின் தன்மை கொண்டு ஒரு பூதகணையைக் காட்டி (துஷ்ட தெய்வங்கள்) கோரப் பல்களைக் காட்டி இதுதான் காக்கும் என்றும் அதற்குப் பல உயிரினங்களைப் பலியிடப்பட்டு அதனை நேசித்துத் தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்று ஒரு மனிதன் நுகர்ந்து மடிந்திருந்தால் அதே உணர்வலைகளை உற்று நோக்கி அச்சத்தால் நுகர்ந்தால் கோரப்பல் கொண்ட அந்தச் சிலையின் உணர்வுகள் ரூபங்கள் பட்டு அதைக் கோர உருவமாகக் காட்டும்.

கோரமான உருவம் பற்களுடன் வருகிறது என்று சிலர் சொல்வதையும் கேட்கலாம். என் வாய் பேசாது தடுக்கின்றது என்றும் சொல்வார்கள். அச்சம் கொண்ட நிலையாக வேறு எந்தச் செயலையும் செய்ய முடியாதபடி செயலாற்றதாகவும் அது மாற்றும்.

மனிதனில் உருவாக்கப்பட்ட உணர்வுகள்… இதை எல்லாம் காட்சிகளாகக் காணக்கூடாது. மெய் வழி சென்று மெய் உணர்வைத் தனக்குள் பெற்ற அருள் ஞானிகள் உணர்வு உங்களுக்குள் பெறுவதற்குக் காலத்தால் இந்தக் காட்சியின் தன்மை சிறுகச் சிறுக குறைத்து விட்டேன்.

ஆரம்பக் காலங்களில் சில நேரங்களில் பக்தியின் நிலைகள் கொண்டு வரப்படும் பொழுது சில உணர்வின் இயக்கங்கள் “பொருட்கள் எப்படி வருகின்றது…?” என்று அதை எல்லாம் காட்டினேன்.

நான் குடியிருந்த தெருவில் முதலில் யாரும் நம்ப மாட்டார்கள். ருக்மணி என்ற அம்மாள் வீட்டிலே பூஜை புனஸ்காரம் செய்து கொண்டிருக்கும் போது இந்தப் பக்கம் இருக்கக்கூடிய விநாயகர் அந்தப் பக்கமாக நகர்ந்து செல்லும். அந்த விநாயகர் மீது பல விபூதிகள் வரும். பல பொருள்கள் மாறி மாறி வரும்.

அதையெல்லாம் கண்டபின் “சாமி மிகவும் சக்தி வாய்ந்தவர்” என்று அதற்குப் பின்னால் தான் நம்புகின்றார்கள். இந்த அடிப்படையில் தான் என் தெருவிலிருப்பவர்கள் நம்பி இங்கே பலர் வந்தார்கள்.

எங்கள் வீட்டில் குடியிருந்தவர்கள் எங்களுக்கும் அந்த விபூதி வேண்டும் என்றார்கள். உங்களுக்கு “ஒரு சக்கரம்” தருகிறேன் என்று கொடுத்தேன்… பின் அதிலிருந்து விபூதி வந்தது,

இதைக் கண்டு ஒரு ஐந்து ஆறு பேர் சாமி எங்களுக்குச் சக்கரம் வேண்டும் என்று கேட்டார்கள். சக்கரத்திலிருந்து விபூதி வந்தவுடனே இந்தப் பக்தி என்ன செய்கிறது…?

சாமி நமக்குப் பெரிய சக்தி கொடுக்கின்றார்… அருள் கொடுக்கின்றார்… வரம் கொடுக்கின்றார்…! என்று இப்படித்தான் எம்மை உணர்ந்தார்கள்.
1.ஆனால் இது எப்படி இயக்குகிறது…? என்று அதை அறியும் பற்றினைச் செலுத்தவில்லை.
2.அதிசயங்களையும் ஆச்சரியங்களையும் யாம் காட்டப்படும் பொழுது
3.இதிலே தான் சக்தி இருக்கின்றது கடவுளே உருமாற்றி உதவி செய்கிறார் என்று இந்த உணர்வுகளைத் தான் அவர்களால் வளர்க்க முடிகின்றது.

ருக்மணி பல பேரைத் தன் வீட்டிற்குக் கூட்டிக் கொண்டு வந்து… பூஜை அறையில் நடந்த நிகழ்ச்சிகளைக் காட்டி… பாருங்கள்…! சாமியை நாம் என்னமோ மோசமாக நினைக்கின்றோம்… ஆனால் விபூதி எல்லாம் வந்திருக்கிறது…! என்று தெருவில் உள்ள எல்லோரையும் கூப்பிட்டுக் காண்பித்தது.

அதற்குப் பின் தான் தெருவில் உள்ளவர்கள்… “ஓஹோ…! சாமிக்கு நிறைய சக்தி இருக்கிறது என்று… நான் அங்கே வரும்பொழுது எல்லாம் விபூதி வாங்குவதற்கு வருவார்கள். இப்படித்தான் அவர்கள் தெரிந்து கொண்டார்கள்.

இது எல்லாம் தன் உணர்வின் சக்திகள் வளர்ந்திருப்பதை நுகரும் ஆற்றலை அது எப்படி உருவாகின்றது மந்திர ஒலிகளால் உருவாக்கப்பட்ட உணர்வுகள் எப்படி அந்த அணுக்களாக மாறுகின்றது…? என்று
1.இந்த நினைவின் ஆற்றலை அவர்கள் கண்களின் பதிவையே அங்கே ஊட்டி…
2.அவர்கள் எண்ணங்கள் மூலமாகவே விபூதியாக எப்படி அங்கே வருகிறது…? என்று
3.அன்று நான் அப்படிச் சொல்லவில்லை (அதாவது உண்மையைச் சொல்லவில்லை).

“சாமிக்குச் சக்தி இருக்கிறது…” என்று எதை ஏங்கிப் பெறுகின்றனரோ இந்த உணர்வின் எண்ணங்கள் அங்கே பதிவாகும் பொழுது… அவர்களாலேயே அதனை அங்கே இயக்கும்படிச் செய்தது. குருநாதர் காட்டிய நிலைகள் அங்கே சில அற்புதங்களையும் செயல்படுத்திநேன்.

ஏனென்றால் நான் செய்தேன் என்று இவர்கள் எண்ணுகின்றார்கள். ஆனால் நினைவின் ஆற்றலை அவர்கள் கண்களுக்கு முன்னாலேயே அந்த உணர்வு குவிக்கப்படும் பொழுது…
1.சேர்த்து விபூதியை வரவழைப்பதும் அந்த சிலைகள் நகரும்படி செய்வதும்
2.அவருக்குள் அந்த உணர்வின் சக்தியைக் கொடுத்துத் தான் அதை அறியும்படி செய்தேன்.

அவருடைய எண்ணங்கள் வளர்ச்சி எதுவோ அதனின் உணர்வலைகள் பாயப்படும் பொழுது அதில் உள்ள காந்தப்புலன் நினைவாற்றலை அங்கே குவிக்கும்… அதன் வழி எல்லாமே நடக்கும்.

ஆனால் அதற்குப் பிற்பாடு அது எதுவும் வரவில்லை… நடக்கவில்லை. காலத்தால் பல உண்மையின் உணர்வுகளைச் சொல்லச் சொல்ல… உண்மையின் நிலைகள் அங்கே வளர வளர அவை எதுவும் வராது.

ஏனென்றால் சாமிக்குச் செய்யத் தெரியாது என்று அல்ல. எல்லாவற்றையும் கவர்ச்சி செய்வதற்கு வந்தார் என்று என்னைப் பெரிய ஆளாகக் காட்டி என்னைப் போற்ற வைக்கவும் முடியும்.
1.அதனால் எனக்கு என்ன பலன்…?
2.உங்களுக்கு என்ன பலன்…? – ஒன்றும் இல்லை.

ஏனென்றால் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் மெய் உணர்வைத் தனக்குள் எடுத்து இருள் சூழ்ந்த நிலைகளை நீக்கி மெய்ப் பொருளைக் காணும் உணர்வுடன் ஒன்றி மனிதனின் எல்லையான சப்தரிஷி மண்டலத்தை அடைய வேண்டும்.

1.ஞானிகள் சென்ற பாதையிலே நாம் செல்ல வேண்டும். அந்த உணர்வை நமக்குள் வளர்க்க வேண்டும்.
2.இருள் சூழ்ந்ததை நீக்கிடும் ஆற்றலை நமக்குள் பெற வேண்டும் என்பதற்குத்தான்
3.உங்கள் எண்ணங்கள் அனைத்தையும் மனிதனில் தீமைகளை வென்று ஒளியாக இருக்கும் துருவ நட்சத்திரத்தின் பால் செல்லும்படி செய்து
4.அங்கிருந்து வரும் உணர்வலைகளை நுகர்வதற்குப் பயிற்சியாகக் கொடுக்கின்றோம்.

அதைத் தான் ரிஷியின் மகன் நாரதன் நாராயணனின் அபிமான புத்திரன் நாரதன் என்று காட்டியது. மனிதனான அகஸ்தியன் ஒளியாக மாறித் துருவ நட்சத்திரமாக உருப்பெற்றுள்ளார்.

அதிலிருந்து வரக்கூடிய உணர்வைத்தான் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது… நாராயணனின் அபிமான புத்திரன் நாரதன்.

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து உருவான உணர்வின் தன்மையை யாரெல்லாம் நுகர்கின்றார்களோ அவர்களுக்குள் அது நாரதனாகச் சென்று
1.தீமைகள் அகற்றும் உணர்வாக ஒவ்வொரு உணர்வுக்குள்ளும் சென்று அந்த உணர்வினை அடக்கி
2.தீமைகளை அடக்கிடும் சக்தியாக இந்த உணர்வு எப்படி இயக்குகின்றது என்று தான் காவியங்களில் காட்டப்பட்டுள்ளது.

ஆனால் அது எல்லாம் இன்று “அந்த நிஜம் பொய் ஆகிவிட்டது… பொய் நிஜமாகிவிட்டது…”

இப்பொழுது பொய்யைக் காட்சியாகக் காணும் போது அதை நிஜமாகக் காணுகின்றீர்கள் அல்லவா…!
2.அதே சமயத்தில் உங்கள் உணர்வின் நினைவாற்றலை உங்களை நம்பாது பொய்யாக்கி விடுகின்றீர்கள்.

உணர்வின் ஆற்றலைப் பெறும் தகுதியை இழந்து… “சாமி சொல்கிறார் எனக்கு ஒன்றும் கிடைக்கவில்லையே…!” என்று ஏக்கமாகும் பொழுது நம்மால் முடியவில்லை…! என்று “உங்கள் சக்தியைப் பொய்யாக்கி விடுகின்றீர்கள்…”

இதைப் போன்ற நிலையிலிருந்து விடுபட்டு நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் மனிதன் தீமைகளை வென்று ஒளியின் சரீரமாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைக் கூர்மையாக நுகர்ந்தறிந்து அதனை வளர்த்து… இருள் சூழ்ந்த உணர்வை நீக்கி அருள் பெறும் உணர்வின் தன்மையை என்றும் பேரின்ப பெருவாழ்வு என்ற நிலையில் வாழும் அந்த நிலையை “இந்த மனித சரீரத்திலேயே நீங்கள் பெற வேண்டும்…”

இத்தகைய கூர்மை அவதாரத்தை நீங்கள் எடுத்தால் ஒளியின் சரீரமாக மாறலாம்.

ஒவ்வொரு உயிரினமும் தன்னைக் காட்டிலும் வலுக்கொண்ட மற்ற உயிரினங்களை கூர்மையாக உற்றுப் பார்த்து அதனிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்ற நிலையில் அதனின் வலுவை எடுத்து வளர்ச்சி பெற்றுத் தான் ரூபங்கள் மாறியது.

அகஸ்தியனும் அவன் மனைவியும் விண்ணின் ஆற்றலை துருவத்தின் வழிக் கூர்மையாக ஏங்கிப் பெற்றனர். தீமை அகற்றும் வலிமை பெற்றனர்… இரு உயிரும் ஒன்றாகி இரு உணர்வும் ஒன்றாகி ஒளியின் சரீரம் ஆனது.

இந்தப் பிரபஞ்சத்தில் வருவது அனைத்தையுமே ஒளியின் சரீரமாகத் தனக்குள் கருவாக்கி உருப்பெற்று அகண்ட பேரண்டத்தில் என்றும் 16 என்று வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அதைக் கூர்மையாக எண்ணி அதன் வலிமையை பெற்றோம் என்றால் வாழ்க்கையில் வரும் இருளை நீக்கி “என்றும் பேரின்பப் பெருவாழ்வு” என்ற நிலையில் நாமும் வாழ முடியும்.

ஆகவே… மனிதனின் கடைசி எல்லை என்பது… உயிருடன் ஒன்றி உணர்வை ஒளியாக மாற்றிச் சென்றவர்கள் எல்லையை நாம் அடைவதுதான்.

ஆனால்… உடலில் ஆசை கொண்டு அந்த உணர்வு உயிருடன் ஒன்றி விட்டால் அந்த உணர்வுக்கொப்ப இன்னொரு கூட்டுக்குள் அழைத்துச் சென்று அந்த ரூபமாக நம்மை மாற்றி அதன் உணர்வாக நம்மை இயக்கிவிடும். இது அனைத்தும் உயிரின் செயல்களே.

நாம் எதை எண்ணுகின்றோமோ அதனையே அது உருவாக்குகின்றது… அதன் செயலாக நம்மை இயக்குகின்றது… அதன் ரூபமாக நம்மை மாற்றுகின்றது.

“தனக்குள் பயமோ வெறுக்கும் நிலையோ தீமைகள் செய்து அது வலுப்பெற்ற பின்”
1.அத்தகைய வலுவை நாம் நுகர வேண்டியதில்லை.
2.அருள் ஞானிகள் உணர்வை நாம் பெறுவோம்.
3.நமது பார்வையில் பிறருடைய இருளை நீக்கிடும் சக்தியாக மாற்றுவோம் என்ற இந்த வலிமையைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

பிறருடைய தீமை நம்மைத் தாக்காது. இந்த உணர்வு அவர்களுக்குள்ளும் ஊடுருவி அவர்களும் உண்மையை உணரும்படி செய்யும்… தீமையிலிருந்து விடுபடுவார்கள். நமக்குள் வரும் தீமையைத் தடுக்கும் ஆற்றலும் வருகின்றது.

அதனைப் பெற வேண்டும் என்று தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் இதை அனைவரும் எளிதாகப் பெறும்படி வழிகாட்டுகின்றோம்.

அகஸ்தியர் காட்டிய விநாயகர் தத்துவத்தை முன்னணியில் வைத்துக் காலை துருவ தியானத்தில்… கணவன் மனைவியாக இணைந்து வாழ்ந்த அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வருவதைக் கணவன் மனைவி நீங்கள் இருவரும் பெற்று இரு உடல்களிலும் வளர்த்து இரு உணர்வையும் ஒன்றாக்கி உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நிலை கொள்ளும் சக்திகளாக நீங்கள் பெற்றுப் பழகுங்கள்.

பிறவி இல்லா நிலையை இந்த உடலிலேயே பெறுவோம் என்ற உணர்வுடனே இந்தப் பயணத்தைத் தொடருங்கள். இந்த அலையின் தொடர் கொண்டு உங்களுக்குள் தீமைகளை அகற்றும் சக்தியாக வளரும். அதை நீங்கள் காணலாம்.

“பயத்துடன் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்” அச்சுறுத்தும் உணர்வு கொண்ட நிலை இருந்தால் அந்தப் பயமான உணர்வு வந்து அது அச்சுறுத்தும் உணர்வாகக் குவிந்து உயிரிலே மோதப்படும் பொழுது இரவிலே அறியாதபடி புலனறிவிலே சொப்பணங்களைக் காணுவதும் காணாத உருவங்களைக் காண்பதும் அந்த அச்சத்தினால் உடல் நடுக்கம் ஆவதும் உடல்கள் வேர்ப்பதும் அஞ்சி எழுந்து ஓடும் நிலைகளும் கூட வரும்.

1.அத்தகைய அஞ்சிடும் உணர்வுகள் நமக்குள் இருப்பினும்
2.அந்த அச்சத்தை நீக்கிடும்… அச்சமான இருளைப் போக்கிடும்…
3.அந்த மகரிஷியின் அருளை கணவன் மனைவியாக நீங்கள் எடுத்து வளர்த்துக் கொள்ளுங்கள்.
3.திருமணமாகாதவர்கள் அன்னை தந்தை உணர்வோடு இணைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

அருள் ஞானம் பெற வேண்டும் அறியாத இருள் நீங்க வேண்டும் என்று உயிரிடம் வேண்டுங்கள். அதை எல்லாம் மாற்றி அமைக்கும் மன பலம் பெறுவீர்கள் மன உறுதி பெறுவீர்கள் தெளிந்த நிலை பெறுவீர்கள்

“அத்தகைய சக்தி உங்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்” என்று தான் குருநாதர் எனக்குக் காட்டிய அனைத்தையும் உங்களுக்கு அப்படியே எடுத்துக் கொடுத்துக் கொண்டிருக்கின்றேன்.

ஆகவே அருள் உணர்வுகளை வளர்த்து அருள் வாழ்க்கை வாழுங்கள் “அருளானந்தம் பெறுவீர்கள்…”

பரமாத்மா ஆத்மா ஜீவாத்மா உயிராத்மா

பரமாத்மா ஆத்மா ஜீவாத்மா உயிராத்மா

 

பிரபஞ்சத்தில் உருவாகும் அனைத்தையும் நம் பூமியான பரமாத்மா கவர்ந்து தனது ஆன்மாவாக மாற்றுகின்றது. அப்படி மாற்றும் பொழுது தனது சுழற்சியின் ஈர்ப்பு வட்டத்தில் தனக்குள் பலவையும் பல கலவையாகிப் பாறைகளாகவும் உலோகங்களாகவும் மற்ற நிலைகளாகவும் உருவாக்குகின்றது.

1.அது உருவாக்கி உமிழ்த்தி வெளிப்படுத்தும் உணர்வினைச் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்தால்
2.மீண்டும் இந்தப் பரமாத்மாவில் பல கலவைகளாக மாறுகின்றது.

ஆகவே இந்த ஆன்மாவில் விளைந்து கூட்டமைப்பாக வெளிப்பட்ட அந்த உணர்வின் ஆவியின் தன்மையைச் சூரியனின் காந்த புலனறிவு கவர்ந்து பரமாத்மாவாக மாற்றுகின்றது.

இந்தப் பரமாத்மாவில் ஒன்றுடன் ஒன்று பலவிதமான உணர்வுகள் சேர்த்துத் தாவர இனங்கள் விளைகின்றது. தாவர இனங்கள் விளையப்படும் போது அதுவும் பல பல கலவை கொண்டு உருவாகின்றது.

உதாரணமாக ஒரு விஷச் செடியை எடுத்துக் கொண்டால் அதிலிருந்து வெளிப்படும் உணர்வினைச் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்கின்றது. அந்தச் சத்தினைப் பரமாத்மாவாக மாற்றுகின்றது.

பரமாத்மாவாக பூமியிலே படர்ந்து கொண்டிருக்கப்படும் பொழுது இந்த விஷச் செடியில் விளைந்த வித்தினை நாம் நிலத்தில் ஊன்றினால்… இந்தப் பரத்தில் ஊன்றினால்… பரத்தின் துணை கொண்டு பரமாத்மாவில் இருக்கும் விஷச் செடியின் சத்தினை அது நுகர்ந்து தன் இனத்தின் வித்தினை வளர்க்கின்றது… அந்தச் செடி வளர்கின்றது.

இதைப் போல் தான் எண்ணிலடங்காத தாவர இனங்கள் உருமாறி அது அது வெளிப்படுத்தும் உணர்வினைச் சூரியன் கவர்ந்து பரமான இந்தப் பரமாத்மாவாக மாற்றிக் கொண்டுள்ளது.
1.இந்தப் பரமாத்மாவில் இருந்து தான் சகல தாவர இனங்களும் வளர்ந்து
2.தன் தன் இனத்தை விருத்தி செய்து கொண்டுள்ளது இதே பரமாத்மாவில்.

உயிரணு தோன்றி பூமிக்குள் வந்த பின் தாவர இனச் சத்தை நுகர்ந்தால் ஜீவாத்மாவாக மாறுகின்றது. ஜீவான்மாவாக மாறிய பின் தன் உணவுக்காக ஏங்கப்படும் பொழுது… இந்தப் பரமாத்மாவிலிருந்து தனது உடலைச் சுற்றி வரும் ஆன்மாவாக மாறுகின்றது.

தனது ஆன்மாவாக மாறிய பின்… உயிர் உடலில் இருக்கும் ஜீவான்மாவிற்கு உணவைக் கொடுத்து வளர்க்கின்றது.

வேதனைப்படுபவரை… சங்கடப்படுபவரை… சலிப்புப்படுபவரை… வெறுப்பப்படுபவரைப் பற்றிக் கேட்டறிந்த உணர்வுகள் அனைத்தும் பரமாத்மாவிலே கலக்கின்றது.
1.உற்றுப் பார்த்து நுகர்ந்தறிந்தால் அதே உணர்வின் அணுவாக நம் உடலில் ஜீவான்மாவாக உருவாக்கி விடுகின்றது.
2.ஜீவான்மாவாக உருவாக்கி விட்டால் உயிரின் துணை கொண்டு பரமாத்மாவிலிருந்து தனது ஆன்மாவாக மாற்றி
3.தனக்குள் விளைந்து தன் உடலுக்குள் இருக்கும் ஜீவான்மாக்களை வளர்க்கின்றது.

ஒரு செடி விளைந்தால் எப்படித் தன் இனத்தின் வித்தை உருவாக்குகின்றதோ இதைப் போல நமது சகஜ வாழ்க்கையில் எத்தகைய நல்ல குணங்கள் பெற்றிருப்பினும் வேதனை வெறுப்பு சங்கடம் சலிப்பு குரோதம் கோபம் பகைமை உணர்வுகள் இதைப் போன்ற நிலைகள் அதிகமாக நமக்குள் வளர்ச்சியாகி விளைந்து விட்டால் “விஷத்தின் தன்மை கொண்ட அணுக்களின் பெருக்கமாகிவிடும்…”

ஏனென்றால் நமது ஜீவான்மாக்கள் தீமையின் உணர்வை வளர்க்கப்படும் பொழுது நம் உடலான பரத்தில் பல தீமைகள் உருவாகி… மனித உடலான இந்தப் பரதத்தில் அதை மாற்றும் சக்தியாக வருகின்றது.

1.எப்படி ஒரு வித்து முழுமையான பின் அதைக் கொண்டு மற்ற நிலைகள் விளைகின்றதோ…
2.பல கலவை கொண்டு அக்ரிகல்ச்சரில் வித்துக்களை உருவாக்குவது போன்று…
3.நாம் நுகர்ந்தறிந்த உணர்வுகள் தீமையின் விளைவுகள் அதிகமானால்
4.நம் உடலில் உள்ள அனைத்து அணுக்களும் சேர்த்து உயிரான்மாவாக மாறுகின்றது.

உடலை விட்டு உயிரான்மா சென்றால் இதே வேதனை கொண்ட உடலைப் பரமாக்கி… வேதனை உணர்வைத் தனது ஆன்மாவாக்கி… அதன் வழியில் வாழ்க்கையின் வழித் தொடர ஆரம்பித்து விடும்.

இதிலிருந்து நாம் மாற்றுவதற்கு துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் பேரருள் பேரொளியை நாம் நுகர்தல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியும் இந்தப் பரமாத்மாவிலே தான் படர்ந்துள்ளது.
1.அதை நமக்குள் பதிவாக்கி மீண்டும் அதை நினைவாக்கி உடலில் பெருக்கிக் கொண்டால்
2.நமது ஆன்மாவும் தூய்மையாகின்றது மன வலிமையும் பெறுகின்றது நமது உடலும் நலமாகின்றது.
3.உடலுக்குள் இருக்கும் ஜீவான்மா தெளிவடைகின்றது… ஒளியின் தன்மை பெறத் தொடங்கி விடுகின்றது.

நட்சத்திரங்களில் இருந்து வரும் துகள்கள் ஒன்றுடன் ஒன்று உராயப்படும் பொழுது மின்னலாக வெளிப்படும் அந்த ஒளிக் கற்றைகளைத் துருவ நட்சத்திரம் கவர்ந்து ஒளியின் அலைகளாக மாற்றுகிறது.

1.நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைச் சேர்த்துக் கொண்டால்
2.நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் ஒளிக்கற்றைகளை நாமும் நகர்ந்து
3.நம் உடலுக்குள் இருக்கும் நஞ்சினை மாற்றிடும் ஜீவான்மாவாக மாற்றுகின்றது.

ஆகவே நமது வாழ்க்கையில் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்தப் பேரருள் உணர்வுகளைப் பெற்று நம் உடலில் இருக்கும் அணுக்கள் அனைத்தையும் பேரொளியாக மாற்றிப் “பிறவி இல்லாத நிலை அடைந்திட உயிரான்மாவை ஒளிமயமாக மாற்றி ஒளிச் சரீரம் பெற்றிட” குரு அருளும் எமது அருளும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.