எல்லாவற்றிலிருந்தும் தப்பும் சக்தி மனிதனுக்குண்டு…!

Remote spiritual power

எல்லாவற்றிலிருந்தும் தப்பும் சக்தி மனிதனுக்குண்டு…!

சூரியன் தன் பாதரசத்தால் தான் கவர்ந்தாலும் மற்ற உணர்வலைகள் வரப்படும்போது மோதி இது நெருப்பாகி கவர்ந்தவற்றில் உள்ள விஷத்தைப் பிரித்து விடுகின்றது. அதனுடைய சந்தர்ப்பத்தால் அது செயல்படுத்துகின்றது

அதே போல் நம்முடைய சந்தர்ப்பம் தீமை என்ற உணர்வுகளை கண்ணால் கவர்ந்து அந்த உணர்வின் தன்மை நாம் நுகர்ந்துதான் இந்த மனித வாழ்க்கையை நடத்துகின்றோம். அப்படி வரக்கூடிய தீமையான உணர்வுகளை நாம் தடுத்துப் பழக வேண்டும்.

1.அந்தத் துருவ நட்சதிரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் எண்ணி
2.எங்கள் உடல் முழுவதும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர வேண்டும் என்ற உணர்வை
3.உள்முகமாக உடல் முழுவதற்கும் கண்ணின் நினைவு கொண்டு செலுத்த வேண்டும்,

அபப்டி எடுத்துக் கொண்டால் நம்மைப் பயமுறுத்தும்… அச்சுறுத்தும்… கோப்படுத்தும்… வேதனைபடுத்தும்… இதைப் போன்ற உணர்வுகளை எல்லாம் நமக்குள் புகாது தடுத்துக் கொள்ளலாம்…! என்று அனுபவபூர்வமாக மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குக் (ஞானகுரு) காட்டுகின்றார்.

எங்கே வைத்து..?

டெல்லியிலிருந்து விமானத்தில் வந்து கொண்டிருக்கும் பொழுது திடீரென்று எதிர்மறையான காற்று மண்டலத்திற்குள் செல்லும் போது விமானம் கவிழும் சந்தர்ப்பத்தில் இந்த உபதேசத்தைக் கொடுக்கின்றார்.

“கவிழப் போகிறது…!” என்ற நிலை ஆன பின் விமானத்தில் உள்ள பிரயாணிகள் எல்லோரும் பயந்தார்கள். ஆனால் நீ ஏன் பயப்படவில்லை..?
1.நீ இந்த உடலின் இச்சைப்படவில்லை
2.நீ உயிரின் இச்சைப்பட்டாய்…!
3.ஏனென்றால் உயிர் ஒளியானது… அறியும் தன்மை ஆனது…!
4.அதே அறியும் தன்மையை நீ அச்சம் இல்லாமல் எடுப்பதனால் உனது காக்கும் சக்தியும் அதிலே சேரலாம்…! என்று சொன்னார்.

அத்தனை பேர் பயந்தாலும் நீ ஒருவன் இந்த உயர்ந்த உணர்வுடன் வலிமையாக இருந்தால் விமானம் கவிழாது காக்கப்பட்டது..! என்று காட்டுகின்றார்.

ஆக இப்படிக் காக்கப்பட்ட விமானங்கள் எத்தனையோ…! என்று அங்கு காட்டுகின்றார்.

ஏனென்றால் இயற்கையின் நியதிகள் எப்படி இயங்குகின்றது…? என்பதை குருநாதர் இப்படி எமக்குப் பல வழிகளிலும் காட்டினார்.
1.எல்லாவற்றிலும் தப்பும் உணர்வுகள் மனிதனுக்கு உண்டு.
2.எல்லாவற்றிலும் தப்பிய மனிதன்தான் அகத்தியன்.

அவன் துருவத்தின் ஆற்றலைத் தனக்குள் பெற்றான்… துருவ நட்சத்திரமானான். அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரக்கூடிய உணர்வை நமக்குள் அதிகமாக்கினால்… நம் ஆன்மாவில் பெருக்கிக் கொண்டால்… “தீமையான உணர்வுகள் எது வந்தாலும் அதை விலக்கித் தள்ளிவிடும்…!”

துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஆழமாகப் பதிவாக்கிக் கொண்டால் உங்கள் எண்ணத்தால் உங்களைக் காத்துக் கொள்ள முடியும். அதற்குத்தான் இதைச் சொல்கிறோம்.

அதிகாலையில் நாம் செய்ய வேண்டிய அர்ச்சனை

souls-cleaning.jpg

அதிகாலையில் நாம் செய்ய வேண்டிய அர்ச்சனை

ஒரு நோயாளியை உற்றுப் பார்த்து “இப்படி ஆகிவிட்டதே…!” என்று அதை நுகர்ந்தறிந்து அவருக்கு உதவி செய்தாலும் அவன் உடலில் வந்த நோயின் விளைவுகள் இங்கே காற்றிலே உண்டு. நமக்குள்ளும் பதிவாகி இருக்கின்றது.

மீண்டும் அவனை எண்ணும் பொழுதெல்லாம் அந்த உணர்வுகள் நமக்குள் விளைந்து நமக்கும் நோயாகின்றது. இதை மாற்ற வேண்டும் அல்லவா…!

நோயாளியைப் பார்த்து உதவி செய்தோம். மற்றவர்கள் வேதனைப்படுகின்றார்கள் என்று பார்த்து அதை அறிந்து கொள்கின்றோம். அப்படிக் கஷ்டப்படுபவர்களுக்கு எல்லம் நாம் உதவி செய்து கொண்டே தான் இருக்கின்றோம். (அந்த வேதனைகளை நாம் துடைப்பதில்லை)

1.ஆனால் அவர்கள் உடலிலுள்ள வேதனைகளைத் தெரிந்து கொண்ட பின்
2.இப்படி ஒரு பத்துப் பேருடைய கஷ்டங்களையும் துயரங்களையும் அறிந்து உதவி செய்தால்
3.உதவி செய்தவருக்கே அந்த நோய் வருகிறது.

உதவி செய்தவருக்கு நோய் வந்த நிலையில் கடைசியில் என்ன சொல்வார்.
1.நான் எல்லோருக்கும் உதவி செய்தேன்
2.என்னை ஆண்டவன் சோதிக்கின்றார்..! என்பார்.

ஏனென்றால் நாம் எண்ணிய உணர்வைத்தான் நம் உயிர் இயக்குகின்றது. நாம் எண்ணியதை எல்லாம் உடலாக்குகின்றது. அதைத்தான் நம் உயிர் ஆண்டவனாக இருந்து ஆள்கின்றது.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்தல் வேண்டும்.

1.ஆண்டவன் எங்கேயோ இருக்கின்றான்…! என்ற நிலையில் சாங்கியங்களைச் செய்து… அர்ச்சனை செய்து…
2.அவன் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வான்…! என்றால் அது அல்ல அர்ச்சனை.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று அந்த உணர்வைச் சுவாசிக்கும் பொழுது
1.உயிரிலே படுகின்றது… அபிஷேகம் நடக்கின்றது.
2.அந்த உணர்ச்சியின் ஒலி அலைகள் உடலிலே உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.
3.துருவ நட்சத்திரத்தின் சக்தி பெறவேண்டும் என்று ஏங்கி எடுத்த உணர்வுகள் அந்த உணர்ச்சியின் அலைகளாக நமக்குள் சேர்கின்றது.
4.இது தான் உண்மையான அர்ச்சனை.

மனிதனின் வாழ்க்கையில் எப்படி வாழ வேண்டும் என்று ஞானிகள் கற்பித்த இந்த உணர்வுகளை நாம் எப்படிப் பழகுதல் வேண்டும்…?

நம் பூமியின் வடதுருவப் பகுதியில் விண்ணிலிருக்கும் துருவ நட்சத்திரத்தில் இருந்து வெளி வரும் உணர்வலைகளைச் சூரியனின் காந்தப்புலன் கவர்கின்றது. அலைகளாக மாற்றி வருவதை நம் பூமி துருவத்தின் வழி கவர்கின்றது. நமக்கு முன்னாடி இங்கே வருகின்றது.

அவ்வாறு வரும் அந்த உணர்வின் தன்மைகளை நுகர்ந்து நம் உடலிலே சேர்க்க வேண்டும். ஆகவே அதிகாலையில் நான்கு மணியிலிருந்து ஆறு மணிக்குள் அந்தத் துருவ தியான நேரத்தில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை எண்ணி ஏங்கிப் பெற்றுப் பழகிக் கொள்ள வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும்.. எங்கள் உடலில் உள்ள இரத்த நாளங்களிலே கலக்க வேண்டும். எங்கள் உடலில் உள்ள ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் பெறவேண்டும் என்று ஏங்கி உடலுக்குள் செலுத்தி அதை பல முறை தியானிக்க வேண்டும்.

அப்பொழுது அந்த அகஸ்தியன் எதைக் கண்டானோ அதை எல்லாம் நாம் நுகர்கின்றோம். இப்படி அந்த அருள் சக்திகளை அதிகாலையில் பெற்றுப் பழகிக் கொண்டால்
1.அதற்குப் பின் எப்பொழுது வேண்டும் என்றாலும்
2.அதை எடுத்து நல்லதாக நாம் மாற்றிக் கொள்ள முடியும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை தியானத்தின் மூலம் நுகர்வதால் நமக்குக் கிடைக்கும் பேறுகள்

POLARIS.jpg

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை தியானத்தின் மூலம் நுகர்வதால் நமக்குக் கிடைக்கும் பேறுகள்

துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் எண்ணி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் நாம் ஏங்கித் தியானித்து வருகின்றோம்.

கண்ணின் நினைவைப் பூமியின் வடதுருவத்தின் வழியாக விண்ணிலே செலுத்தி அந்தத் துருவ நட்சத்திரத்துடன் ஒன்றி அதிலிருந்து வெளிப்படும் பேரருள் பேரொளி உணர்வுகளை நாம் விண்ணிலிருந்து நுகர்வோம் என்றால் அதை உயிர் “ஓ…ம் நமச்சிவாய…!” என்று நம் உடலாக மாற்றுகின்றது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நம் உடலுக்குள் பெருகப் பெருக
1.நம் உடலில் அறியாது சேர்ந்த இருளை அது மாற்றுகின்றது
2.நம்மைத் தெளிந்த மனம் பெறச் செய்கின்றது
3.தெளிவான வாழ்க்கை வாழ முடிகின்றது
4.இல்லற வாழ்க்கையில் இருளை அகற்றும் திறன் பெறுகின்றோம்
5.இருளை அகற்றி மெய்ப் பொருள் காணும் அருள் சக்தி பெற முடிகின்றது.
6.இந்த வழியில் பேரின்ப நிலை பெறும் தகுதி பெற்று இந்த உடலில் என்றும் பேரின்ப நிலையை அடைய முடிகின்றது.
7.இந்தப் பிறவியிலேயே துருவத்தின் ஆற்றலை நாம் நுகர முடிகின்றது.
8.துருவ நட்சத்திரத்தின் பேரருளை நமக்குள் பெருக்க முடிகின்றது.
9.இந்த உடலில் அந்த உணர்வின் சத்தைப் பெறச் செய்தால் ஓ..ம் நமச்சிவாய… என்று ஒளியின் சரீரமாக மாறுகின்றது.
10.இப்புவியின் பற்றை அகற்றுகின்றது.
11.இப்புவியில் நஞ்சைப் பற்றற்றதாக மாற்றுகின்றது.
12.பேரருளைப் பெற்று “என்றும் பேரொளி…” என்ற நிலைகளை நாம் அடைய முடிகின்றது.
13.என்றும் ஏகாந்த நிலை அடைய முடிகின்றது.
14.ஏகாந்த வாழ்க்கை என்றும்… ஏகாதசி என்றும்… என்றும் பத்தாவது நிலையாக கல்கி என்று நிலை கொள்ள முடிகின்றது.
15.எந்தத் தீமையும் நம்மை அணுகாது
16.பேரொளி உணர்வுகள் என்றுமே நம்மை அணுகி வருகின்றது… ஒளியின் சரீரமாகப் பெற முடிகின்றது.
.
ஆகவே அந்த நிலையைப் பெற நம் குருநாதர் ஈஸ்வரபட்டர் காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் பேரருளை நாமும் நுகர்வோம்.
1.நமக்குள் துருவ நட்சத்திரத்தின் பேரொளியை உருவாக்குவோம்.
2.நம்மை அறியாது வந்த இருளை அகற்ற நாம் தியானித்து அரும் பெரும் சக்திகளை நாம் சுவாசிப்போம்.
3.நம் உடலில் அறியாது வந்த இருளை அகற்றுவோம்.
4.என்றும் ஏகாந்த நிலை பெறும் சக்தியை நாம் சதா தியானிப்போம்.
5.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் வட்டத்தில் என்றுமே மகிழ்ந்து மகிழ்ந்து வாழ்வோம்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எந்த வழியில் பெறுவது…?

Polaris direct link

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எந்த வழியில் பெறுவது…? 

 

மகரிஷிகள் இந்த உலகப் பற்றை உடலின் பற்றை விட்டு உயிரின் பற்றிலே விண் சென்றவர்கள்.
1.உயிரின் சேர்க்கை
2.உயிர் ஒளியால் உணரப்பட்ட உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றப்படும் பொழுது
3.உயிருடன் ஒன்றிய ஒளியாக ஆனவர்கள் மகரிஷிகள்.

அந்த மகரிஷிகளின் வழியில் குருநாதர் காட்டிய இந்த நெறியை நாம் பின்பற்றப்படும் பொழுது நாமும் அந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் தான்.

ஏனென்றால் விண்ணுலக ஆற்றலை இந்த மண்ணுலகில் வந்து அதனைத் தனக்குள் கண்டான் விஞ்ஞானி. மண்ணுக்குள் கண்டாலும் புவியின் ஈர்ப்பு நிலைகளை உணர்ந்தான்.

ஆனால் அதே சமயத்தில் ஒரு இராக்கெட்டை ஏவும் போது இந்த பூமியின் ஈர்ப்பு நிலை சுற்று அதைப் போல பன்மடங்கு வேகத் துடிப்பினை உந்து விசையாக அனுப்புகின்றான்.

புவியின் ஈர்ப்பைக் கடந்துச் சென்றபின் அதனுடைய வேகத் துடிப்பு அதிகமாகின்றது. இந்த உணர்வின் தன்மை கொண்டு தானே மிதக்கும் நிலை வருகின்றது. எந்த வேகத் துடிப்பின் நிலை கொண்டிருக்கின்றானோ அதை நிலை கொள்ளவும் செய்கின்றான்.

இதைப் போலத்தான் அகஸ்தியன் கண்ட விண்ணுலக ஆற்றலையும் அணுவின் ஆற்றலைக் கண்டுணர்ந்ததையும் இந்த உபதேசத்தின் வாயிலாக உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.

1.ஈஸ்வரபட்டர் ஆரம்பத்தில் இதையெல்லாம் என்னுள் (ஞானகுரு) இணைத்தார்.
2.நான் உங்களுக்குள் அதை இணைக்கின்றேன்.

அணுவின் ஆற்றலை தனக்குள் அறிந்த அகஸ்தியன் அணுவின் இயக்கத்தை அறிந்துணர்ந்து விண்ணின் ஆற்றலைத் தனக்குள் பருகி அதையும் சேர்க்கின்றார்.

நமது பூமி தனக்குள் இழுக்கும் போது இடைமறித்து உணர்வை நுகர்ந்து அந்த வலுவை பெறுகின்றார். அதனால்தான்
1.காலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தை இடைமறித்து
2.அதிலிருந்து வரும் சக்திகளை அந்த வழிகளில் உங்களை சேர்க்கச் சொல்வது.

ஒரு வெளிச்சத்தைக் கண்டபின் அங்கு இருக்கும் பொருள் தெரிவது போல் அந்த மகரிஷிகள் உடலில் விளைந்த உணர்வுகளை நமக்குள் ஒளியாக மாற்றும்போது
1.நம்மை அறியாது பிறிதொரு உடலில் விளைந்த உணர்வுகள்
2.நம்மை எப்படி இயக்குகின்றது என்பது தெரிகின்றது.

திடீரென்று ஒருவர் ஏதாவது சொல்லி விட்டார் என்றார் நம்மால் அடக்க முடிகின்றதா…? இல்லையே…!

ஏனென்றால் அவர் உடலில் விளைந்த உணர்வுகள் நமக்குள் பாய்ந்தபின் நம்மை எப்படி இயக்குகின்றது என்பதைத் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

இதைப் போல அந்த மகரிஷிகள் உணர்வுகளை எடுத்து ஒவ்வொரு நிமிடமும் ஆத்ம சுத்தி செய்யும் போது நமக்குள் அந்த உணர்வின் இயக்கத்தையும் உணர முடிகின்றது

நம் தெளிந்த அறிவு மறைக்கப்படும் பொழுது சிந்தனை குறைகின்றது. இருளிலிருந்து விடுபட முடியாத போது அந்த மகரிஷிகளின் அருள் ஒளி கண்டபின் இருளிலிருந்து விடுபடும் மன பலம் கிடைக்கின்றது.
1.அதனால்தான் உங்களை அதிகாலையில் எப்படியும் அந்த நேரத்திற்குத் தட்டி எழுப்பி விடுவதும்
2.அந்த உணர்ச்சிகளை தூண்டச் செய்வதும்.

அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்…?

நம் நினைவினை மேல் நோக்கிச் செலுத்த வேண்டும். மகரிஷிகளின் உணர்வின் ஒளிகளை எடுத்து நமது உயிருடன் ஒன்றச் செய்து நமது உடலிலுள்ள உறுப்புக்களை உருவாக்கிய அணுக்களுக்கு உணவாகக் கொடுத்துப் பழக வேண்டும்.

1.உயிரிலே நம் குருநாதர் கொடுத்த அச்சக்தியை எண்ணி
2.உள்முகமாக உடலுக்குள் செலுத்தி
3.ஆன்மாவைத் தூய்மைப்படுத்திக் கொண்டே இருக்கவேண்டும்.

துருவ நட்சத்திரத்தைப் பற்றுடன் பற்றி எல்லோரையும் அதைப் பற்ற வைக்க வேண்டும்

Polaris and earth

துருவ நட்சத்திரத்தைப் பற்றுடன் பற்றி எல்லோரையும் அதைப் பற்ற வைக்க வேண்டும்

 

நீங்கள் எந்த நிமிடம் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெற வேண்டுமென்று “ஈஸ்வரா…!” என்று உயிருடன் ஒன்றுகின்றீர்களோ அப்பொழுது நீங்கள் அந்தச் சக்தியைப் பெறும் தகுதியை ஏற்படுத்துகின்றோம்.
1.அதை விரையமில்லாது எந்த நிமிடத்திலும் எடுக்கலாம்.
2.அதற்குத்தான் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை ஆழப்பதிவு செய்வது.
3.நீங்கள் பார்க்கின்றவர்களுக்கு எல்லாம் அதைக் கிடைக்கச் செய்ய வேண்டும்.

உங்கள் சொல் பேச்சு பார்வை உங்கள் மூச்சலைகள் இந்தக் காற்றிலே பரவினாலும் நீங்கள் யாருக்குப் பார்த்து அவர்கள் நன்மை பெற வேண்டும் என்று எண்ணத்தைப் பாய்ச்சினாலும் அதை அவர்களும் பெற முடியும்.

ஒரு செடிக்குப் பக்கம் களை இல்லாது தன் இனத்தின் செடி பெருகி விட்டால் குவிந்த சக்தி கொண்டு அந்தத் தாவர இனங்கள் செழிப்பாக வளரும். களைகள் முளைத்து விட்டால் அந்த நிலையில் வளர்வதில்லை.

அதைப் போன்றுதான் நமது வாழ்க்கையில் களைகள் முளைக்காமல் இருக்க வேண்டுமென்றால்
1.நாம் யாரைப் பார்த்தாலும் அவர்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்
2.அவர்கள் பொருள் காணும் நிலைகள் பெற வேண்டும்
3.அவர்கள் குடும்பம் நலம் பெற வேண்டும்
4.அவர்கள் தொழில்கள் நலம் பெற வேண்டும்
5.அவர்கள் எதிர்காலம் சிறந்திருக்க வேண்டுமென்று எண்ண வேண்டும்.

இதைத்தான் கீதையில் நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று சொல்வது. அந்த உணர்வின் சக்தி நமக்குள் வருகின்றது.

நம் உணர்வுகள் அனைத்தையும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் வட்டத்தில் இணைக்கச் செய்து நண்பர்களைச் சந்திக்கும் பொழுதெல்லாம் உங்கள் சக்தியை அவர்களுக்குப் பரப்பி அவர்களைச் சந்திப்போர் எல்லாம் அதைப் பெறச் செய்ய வேண்டும்.
1.நாம் துருவ நட்சத்திரத்தைப் பற்றுடன் பற்றி
2.எல்லோரையும் அதைப் பற்ற வைக்க வேண்டும்.

சூரியன் எத்தனையோ விஷத் தன்மையான நிலைகளை எடுத்தாலும் அந்த விஷத்தைப் பிரித்து ஒளியின் சுடராக மாற்றுகின்றது. அதில் விளைந்த மகாஞானி உலகில் அவன் சுவாசிக்கும் உணர்வுகள் எதுவானாலும் அதிலுள்ள நஞ்சினைப் பிரித்துவிட்டு ஒளியின் சுடராக மாற்றிக் கொண்டுள்ளான்.

இந்த மனித உடலில் அவர்கள் பின்பற்றிய அந்த உணர்வைச் சேர்த்தால்தான் என்றும் ஒளியின் சுடராக நிலைக்க முடியும். அதைப் பெறச் செய்வதற்குத்தான் இந்த உபதேசமே.

வேதனையை ஒடுக்கச் செய்யும் “துருவ நட்சத்திரத்தின் நீல ஒளிக் கற்றைகள்…”

 

Bluish violet Poari rays

வேதனையை ஒடுக்கச் செய்யும் “துருவ நட்சத்திரத்தின் நீல ஒளிக் கற்றைகள்…”

 

மனிதனின் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் எத்தனையோ பல சிக்கல்கள் வருகிறது. இதைத் தடுப்பதற்கு நாம் எந்த ஆயுதம் வைத்திருக்கின்றோம்…?

உதாரணமாக நாம் வயல்களில் பயிரிடுகின்றோம் என்றால் ஒரு வேலியைப் போட்டு மறைத்து மற்ற உயிரினங்கள் வராதபடி பாதுகாத்துக் கொள்கின்றோம். இதே போல் தான்
1.நம் உடலில் கார்த்திகேயா…!
2.இந்த ஆறாவது அறிவு நாம் தெரிந்து கொள்ளும் அறிவாக வருகின்றது,
3.சேனாதிபதி இந்த ஆறாவது அறிவு தீமைகள் வராது பாதுகாக்கின்றது.

அதே சமயத்தில் ஒன்றை மனிதனின் ஆறாவது அறிவு என்கிற பொழுது தன் எண்ணத்தால் உருவாக்கும் சக்தி பெற்றது. அதாவது ஒன்றை ஒன்றுடன் இணைத்தால் ஒன்று உருவாகும் என்று அறிந்து செயல்படும் அறிவைப் பெற்றவன்.

அருள் ஒளி பெற்றவன்… உணர்வின் தன்மை ஒளியின் தன்மையாக உருவாக்கியவன்… ஒளியின் சரீரமாகப் பெற்றவன்… யார்…? அந்த அகஸ்தியன்…! அந்த ஒளியான உணர்வை நமக்குள் நுகர்ப்படும் பொழுது இருளை அகற்றும் ஒளியின் உணர்வாக நமக்குள் உருவாக்க முடியும்.

நஞ்சை ஒடுக்கிய அந்த ஞானியின் உணர்வை நமக்குள் உருவாக்கப்படும் பொழுது இருள் என்ற நிலைகள் இங்கே அகற்றப்படுகின்றது.

பாம்புகள் தன் விஷத்தைப் பாய்ச்சி மற்ற உயிரினங்களை விழுங்குகின்றது, அந்த விஷங்கள் பாம்பின் உடலில் பல வர்ணங்களாக நாகரத்தினமாக ஆகிறது. ஆனால்
1.அந்தத் துருவ மகரிஷியோ (அகஸ்தியன்) விஷத்தை வென்று ஒளியின் உணர்வாகப் பெற்றவன்
2.அது நீல நிறமாக இருக்கும். இளம் நீலம்…!

நெருப்பு எரியும் பொழுது அதில் நீல நிற ஜுவாலை வந்தால் அது வீரியமான நெருப்பாக வரும். இதே போல தான் துருவ நட்சத்திரத்தின் ஒளியும் தெரியும்.
1.வானத்தில் மற்ற நட்சத்திரங்களைக் காட்டிலும்
2.துருவ நட்சத்திரத்தைப் பார்த்தோம் என்றால் இளம் நீலமாகப் பள…பள..பள.. என்று மின்னும்.
3.அதிலிருந்து வரும் பேரருள் பேரொளியை நமக்குள் நுகர்ந்து பழக வேண்டும்.
4.இந்த உணர்வை நம் உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களிலும் இணைக்க வேண்டும்.

உதாரணமாக வேதனை வெறுப்பு கோபம் ஆத்திரம் என்ற உணர்வுகளை நாம் நுகரும் பொழுது ஓ…ம் நமச்சிவாய.. என்று அந்தந்தக் குணத்திண் அணுக்களாக உருவாக்கி அவைகள் எல்லாம் நம் உடலாக மாறுகின்றது.

ஆனால் அத்தகைய உணர்வுகள் நம் உடலாக ஆவதற்கு முன்னாடியே அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து அதற்கு ஜீவன் கொடுக்காதபடி தடுத்து விட வேண்டும்.

அகஸ்தியனைப் போன்று நாம் நம் உணர்வுகளை ஒளியாக மாற்றிடல் வேண்டும். அதற்காகத்தான் இதைச் சொல்கிறோம் (ஞானகுரு).

நஞ்சை ஒடுக்கி நீல நிற ஜொலிப்பாக வெளிப்படுத்தும் துருவ நட்சத்திரத்தின் இயல்பு

polaris lights

நஞ்சை ஒடுக்கி நீல நிற ஜொலிப்பாக வெளிப்படுத்தும் துருவ நட்சத்திரத்தின் இயல்பு

 

ஒரு நல்ல பாம்பு தன் உடலில் உருவான நஞ்சை ஒரு எலி மேல் பாய்ச்சி அதை உணவாக எடுத்துக் கொள்கிறது. எலியின் உணர்வை இயக்குவதும் அந்த நஞ்சு தான்.

எலியின் உடலில் உள்ள நஞ்சின் தன்மை வேறு. அதே போல தவளையின் உணர்வுகள் அதில் உள்ள விஷங்கள் வேறு. நல்ல பாம்பு தவளை மேல் தன் விஷத்தைப் பாயச்சி அதையும் உணவாக உட்கொள்கின்றது.

பாம்பு தனக்குள் உருவாகும் விஷத்தைப் பல உயிரினங்களின் பாய்ச்சிப் பல விதமான விஷங்கள் கொண்ட உடல்களை அந்தப் பாம்பு விழுங்குகிறது என்று வைத்துக் கொள்வோம்.

பலதரப்பட்ட உயிரினங்களைப் பாம்பு உணவாக உட்கொள்வதால் பல விஷத்தின் தன்மை அந்தப் பாம்பிற்குள் கலக்கப்பட்டு அது பல விதமான உணர்வின் வர்ணங்களாக இருக்கும்.
1.நாகரத்தினத்தை எடுத்துக் கொண்டால் அதிலே பல வர்ணங்கள் இருக்கும்.
2.ஆனால் வைரத்தின் நிறங்களோ நீலம் கலந்த நிலையில் வரும். அதனுடைய மின்னணு ஒளியின் தன்மை கூடும்.
3.பாம்பு விஷத்தைப் பாயச்சி பல உணர்வுகளை எடுத்ததால் நாகரத்தினத்தில் பல பல நிறங்கள் வரும்.
4.இதுதான் நாகரத்தினத்திற்கும் வைரத்திற்கும் உண்டான வித்தியாசம்.

பாம்பு தன் விஷத்தைப் பாய்ச்சிப் பல உயிரினங்களின் விஷங்களைத் தனக்குள் எடுக்கும் பொழுது அந்த விஷங்கள் உறைந்து விடுகிறது. ஆனால் வளர்ச்சி அற்றது. அது முழுமை அடைந்து விட்டால் அதிலே விளைந்த உணர்வுகள் அந்த ஒளியைத் தான் ஊட்டும்.

1.அகஸ்தியன் துருவனாகித் துருவ மகரிஷியான நிலையில்
2.பல விதமான கோணங்களில் விஷத்தை ஒடுக்கிய உணர்வுகளைப் பெற்றதால்
3.வைரத்தைப் போன்ற அந்த நீலத்தின் தொடர் கொண்டு நீல நிறமாக ஒளிச் சுடராகக் காட்டுகிறது.

உதாரணமாக நெருப்பு எரியும் போது அது நீலநிறமாக இருந்தால் தான் அந்த நெருப்பிற்கே வீரிய சக்தி உண்டு. சிவப்பாகவோ மஞ்சளாகவோ நிறம் இருந்தால் அதற்கு அவ்வளவாக வலு இல்லை.

நீலம் கலந்த ஒளி வரப்போகும் போது சூடு அதிகமாகும். ஏனென்றால் அந்த உணர்வின் தன்மை குவிக்கப்பட்டு வீரியத் தன்மை பெறுகிறது.

இதைப் போலத்தான் பல கோடிச் சரீரங்களிலிருந்து பரிணாம வளர்ச்சியில் வந்த அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாக துருவ நட்சத்திரமாக வளர்ச்சியாகி இயற்கையில் விளைந்த விஷத்தை ஒடுக்கி ஒடுக்கித் தன் வலுவான நிலைகள் பெற்றவன்.

தன் உடலில் உள்ள அணுக்களை எல்லாம் அத்தகைய வலுவான ஆற்றல்களைப் பாய்ச்சிக் கொண்டவன். திருமணமான பின் அகஸ்தியன் தான் பெற்ற சக்தி அனைத்தையும் தன் மனைவிக்குள் பாய்ச்சினான்.

அவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து இரு மனமும் ஒரு மனமாகி இரு உணர்வும் ஒரு உணர்வாகி இரு உயிரும் ஒரு உயிராக ஒன்றென இணைத்துக் கொண்டவர்கள்,

இருந்தாலும் ஒரு மனிதன் தனித்த நிலைகள் கொண்டு எல்லாவற்றையும் வெல்வேன் என்ற உணர்வைக் கொண்டு வளர்ந்து வந்தாலும் பாம்புக்குள் வீரிய சக்தி எப்படி நாகரத்தினமாக மாறுகின்றதோ இதைப்போல தனித் தன்மை கொண்டு வளர்ச்சி பெறும் ஜீவனற்ற கல்லாகத் தான் இருக்கும்.

அதாவது கடும் தவம் என்ற நிலைகள் கொண்டு முனி என்ற நிலையில் எதையும் தாக்கிடும் உணர்வாகத் தான் வரும்.
1.அப்படிப்பட்ட உணர்வைத் தான் பெற முடியுமே தவிர
2.இரண்டறக் கலந்து உணர்வின் தன்மை ஒளியாக மாற்றும் சக்தி பெறச் செய்யாது.

ஆகவே ஒவ்வொருவரும் அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளி வரும் பேரருள் பேரொளியைக் கவர்ந்து “கணவன் தன் மனைவி பெற வேண்டும்… என்றும் மனைவி தன் கணவன் பெற வேண்டும் என்றும்…!” இரு உணர்வும் ஒன்று சேர்த்து விட்டால்
1.துடிப்பு கொண்ட ஜீவனுள்ள உணர்வின் தன்மையாகப் பேரொளியாக வருகிறது.
2.திடப் பொருளாக மாறாது. பேரருளின் சேமிப்பாக ஒளி அலைகளாகப் பேரொளியாக மாறும்.
3.துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வின் அலைகள் இளம் நீல நிறமாக இருக்கும்.
4.தியானம் செய்பவர்கள் அதைக் கண்களால் நிச்சயம் காண முடியும்.

மனிதனை மகரிஷியாக மாற்றியமைக்கும் சக்தி “துருவ நட்சத்திரம்…!”

Protected cirlce of Polaris

மனிதனை மகரிஷியாக மாற்றியமைக்கும் சக்தி துருவ நட்சத்திரம்

 

உதாரணமாக ஒரு மனிதன் விஷத்தினைக் குடித்து விட்டான் என்றால் எருமை மாட்டுச் சாணத்தைக் கரைத்து மிதமான சூட்டில் அதன் மேலே காலை வைத்து விட்டால் உடலில் இருக்கும் அந்த விஷத்தை இழுத்துவிடும். ஏனென்றால் எருமை மாட்டிற்கு விஷம் ஜாஸ்தி.

சாப்பிடும் ஆகாரத்தில் இருக்கும் விஷத்தை எல்லாம் தன் உடலாக்கிக் கொண்டு நல்ல உணர்வைச் சாணமாக மாற்றுகின்றது எருமை.

எருமை மாட்டுச் சாணத்தை கரைத்து கொஞ்ச நேரம் அதில் காலை வைக்க வேண்டும். சாப்பிட வேண்டியதில்லை. ஆனால் பாதத்தை அதில் வைக்கும் போது விஷத்தை முறிக்கும் ஆற்றல் வருகிறது.

இந்த இயற்கையில் உணவாக உட்கொள்ளும் உணவிற்குள் வரும் விஷத்தை மாற்றுவதற்கு இது ஒரு வழி. எருமை மாட்டுச் சாணத்தில் விஷத்தை மாற்றியமைக்கக் கூடிய அந்தச் சக்தி உண்டு.

ஏனென்றால் தான் உணவாக உட்கொள்ளும் உணவிற்குள் மறைந்து வரும் விஷத்தினை எருமை தன் உடலாக மாற்றிக் கொள்கின்றது.
1அதிலே வரும் கழிவின் தன்மையை
2.நஞ்சினை மாற்றும் தன்மையாக… அந்தச் சாணம் வருகின்றது.

நம் வாழ்க்கையில் எப்போதெல்லாம் வேதனைப்படும் உணர்வுகளை நுகர்கின்றோமோ அல்லது செவிகளில் கேட்கின்றோமோ அப்பொழுதெல்லாம் அந்த உணர்வின் உணர்ச்சிகள் உந்தப்பட்டு கண்கள் உற்று நோக்கும். வேதனை உணர்வை நுகரச் செய்யும். உயிரிலே பட்ட பின் அந்த உணர்வுகளை நம் உடல் முழுவதும் சுழலச் செய்யும்.

உடல் முழுவதும் வேதனை என்ற உணர்வுகள் சுழலப் போகும் போது நம் உடலுக்குள் இருக்கும் நல்ல குணங்களின் அணுக்களிலும் இது சாடி விடுகிறது.

ஏனென்றால் விஷம் எதிலேயும் ஊடுருவிக் கலந்து விடும்.

நல்ல குணங்களை அதற்கு அப்புறம் நாம் எண்ண முடிகிறதா…? என்ன தான் நீங்கள் எடுத்தாலும் இந்த விஷம் நல்ல குணங்களை அடக்கிவிடும்.

உதாரணமாக நீங்கள் வேதனைப்படும்படியான கடுமையான சொல்லை ஒருவர் சொல்லி விட்டால் அடுத்து நீங்கள் என்ன செய்வீர்கள்…?
1.சொன்னால் சொல்லி விட்டுப் போகிறார்… அவர் சொன்னதை விட்டு விடுங்கள்…! என்று
2.யாராவது உங்களிடம் சமாதானமாகப் போகச் சொன்னால் நீங்கள் கேட்பீர்களா…?

அட… உங்களுக்கு என்னங்க தெரியும்…? அவன் பேசுவது அவ்வளவு மோசமாக இருக்கிறது. இத்தனை தீமைகளை எனக்குச் செய்கிறான் அவனை எப்படிச் சும்மா விட முடியும்…! என்று தான் வரும்.
1.ஆகவே இது அந்த இயற்கையின் நியதிப் பிரகாரம்
2.இந்த உணர்வுகள் அவன் செயலாக்கங்களைத் தான் இயக்கும்.

ஒரு அடுப்பில் பாத்திரத்தை வைத்து நெருப்பைக் கூட்டி அந்தப் பாத்திரத்தில் என்னென்ன பொருளைக் கலக்கின்றோமோ எல்லாம் கலந்து ஒன்றாகச் சேர்ந்து அது ஒரு பொருளாக மாற்றுகின்றது.

அதே போல் தான் வேதனை என்ற உணர்வுகளை நமக்குள் நுகர்ந்த பின் மற்ற நல்ல குணங்களுடன் அது இணைந்து அதனுடைய விஷத் தன்மையாக நம்மை மாற்றுகின்றது.

அப்படி ஆன பின் அதற்குள் பல அதிகமான நல்ல குணங்களைச் சேர்த்தால் தான் இந்த விஷத் தன்மை தணியும். ஆனால்
1.அதிகமான நல்ல குணங்களைச் சேர்ப்பதற்கு முன்னால்
2.அடுக்கடுக்காக அடுத்தடுத்து அந்த வேதனையை நாம் நுகரும் சக்தியே வந்து விடுகிறது
3.விஷத் தன்மைகள் அதிகமாக நம் உடலில் பரவத் தொடங்குகிறது.

இதை மாற்ற வேண்டுமா இல்லையா…?

அதற்காக வேண்டித்தான் நஞ்சினை வென்ற அந்த அகஸ்தியரைப் பற்றி உங்களுக்குள் திரும்பத் திரும்ப உணர்த்துகின்றோம். அகஸ்தியன் தன் தாயின் கருவிலிருக்கும் பொழுதே நஞ்சினை வென்றிடும் சக்தி பெற்றவன்.

பிறந்த பின்… அவன் வாழ்க்கையில் தன் பார்வையில் வரும் நஞ்சினை ஒடுக்கி… ஒடுக்கி… ஒடுக்கி… அந்த நஞ்சினையே ஒளியாக மாற்றும் தன்மை பெற்றவன்.

அந்த அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக இன்றும் விண்ணிலே அகண்ட அண்டத்தில் வரும் எத்தகைய விஷத்தையும் உணவாக எடுத்து ஒளியாக மாற்றிக் கொண்டே உள்ளான்.

அப்படி ஒளியாக மாற்றிக் கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளியை நுகர்ந்து நம் உடலுக்குள் உருவாக்கிக் கொண்டால் நம்மை அறியாமல் வரும் வேதனை கோபம் ஆத்திரம் சலிப்பு சஞ்சலம் குரோதம் பயம் போன்ற விஷமான உணர்வுகளை எல்லாம் ஒடுக்கிவிடும்.

1.உடலில் வந்த விஷத்தை “மாட்டுச் சாணத்தை” வைத்து ஒடுக்குவது போல்
2.தங்கத்தில் கலந்த செம்பையும் பித்தளையும் “திரவகத்தை” ஊற்றி நீக்குவது போல்
3.நம் உணர்வில் கலந்து வரும் தீமைகளையும் துன்பங்களையும் நீக்க அந்தத் “துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை” ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் சேர்க்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைச் சேர்க்காமல் நமக்குள் எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியும். ஏனென்றால் துருவ நட்சத்திரம் மனிதனை மாற்றியமைக்கும் சக்தி…!

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தொட்டுக் காண்பித்த அந்தத் துருவ நட்சத்திரத்தை “நாமும் நேரடியாகத் தொடர்பு கொள்வோம்”

Polaris direct link

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தொட்டுக் காண்பித்த அந்தத் துருவ நட்சத்திரத்தை நாமும் நேரடியாகத் தொடர்பு கொள்வோம்

 

1.உங்கள் பொட்டிலே தொட்டுக் காட்டுவதைக் காட்டிலும்
2.அந்த மெய் ஞானிகளின் உணர்வின் தன்மைகளை உங்கள் உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களுக்கும்
3.இந்த உபதேசத்தின் வாயிலாக வீரிய உணர்வாக ஊட்டுறோம்.
4.கேட்டுணர்ந்த உணர்வுகள் உங்கள் உடலிலுள்ள எல்லா அணுக்களிலும் கலக்கின்றது.

அந்த அருள் உணர்வைப் பெருக்கி இருளிலிருந்து மீட்டி உயிர் என்ற உணர்வின் தன்மை ஆறாவது அறிவு – கார்த்திகேயா அறிந்திடும் உணர்வு ஒளியாகி ஒளியின் அறிவாக நாம் வளரும் பருவத்திற்கு தான் இதைக் கொடுக்கின்றோம்.

யாம் (ஞானகுரு) உபதேசித்த அருள் உணர்வுகளை அடிக்கடி கேட்டுப் படித்துப் பதிவாக்கிக் கொள்ளுங்கள்.
1.நம்மை நாம் அறிய முடியும்.
2.உலக ஞானத்தையும் அறிய முடியும்.
3.வாழ்க்கையில் அறியாது வந்த வேதனைகளை அகற்ற முடியும்.
4.என்றும் பேரொளியாக விண்ணிலே நிலைத்திருக்க முடியும்.

நம்முடைய உணர்வுகள் ஒளியாகும் பொழுது நம் சொல்லும் செயலும் அதை நுகர்வோருக்கும் இருளை அகற்றிடும் நிலையாக வருகின்றது. ஒளியான உணர்வை அவர்களும் உருவாக்க முடியும். ஆகவே ஒவ்வொருவரும் தீமைகளை நீக்கி என்றும் ஒளியின் சரீரமாகப் பெற வேண்டும்.

நமது குரு மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அந்தத் துருவ நட்சத்திரத்துடன் நேரடியாகத் தொடர்பு கொண்டார். என்னையும் துருவ நட்சத்திரத்தை உற்றுப் பார்க்கச் சொன்னார்.

1.அகண்ட அண்டத்தை அறிந்துணர்ந்த குருவின் உணர்வுகளையும்
2.அவருக்குள் விளைந்த அவர் கவர்ந்த விண்ணின் ஆற்றல்களையும்
3.அவர் பெற்ற நிலையை என்னையும் (ஞானகுரு) பெறச் செய்தார்.

அவர் காட்டிய அனைத்தையும் நீங்களும் பெறவேண்டும் என்பதற்காக உங்கள் உயிரைக் கடவுளாக ஈசனாக மதிக்கின்றேன். உங்கள் உடலை அந்த ஈசன் அமைத்த ஆலயம் என்று மதிக்கின்றேன். ஈசன் வீற்றிருக்கும் அந்த ஆலயங்கள் பரிசுத்தமாக வேண்டும் என்று எண்ணுகின்றேன்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தொடர்பு கொண்ட அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நீங்களும் பெற வேண்டும் என்று எண்ணுகிறேன்.

உங்கள் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும் என்று அந்த மெய்ப் பொருள் காணும் அந்த உணர்வுகளை வளர்த்து வைத்திருக்கின்றேன்.

இந்த உணர்வின் தன்மை கொண்டு குருவை எண்ணி அங்கே ஏங்குகின்றேன். உங்கள் உயிரைக் கடவுளாக எண்ணி துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற்று நீங்கள் உயர்ந்த நிலை பெறவேண்டும் என்று எண்ணும் போது அந்த உயர்ந்த எண்ணங்கள் எனக்கும் கிடைக்கிறது.

ஆகவே அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி அந்தத் துருவ நட்சத்திரமான அந்த உணர்வை உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டி புருவ மத்தியில் எண்ணி ஏங்குங்கள்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவருடன் இணைந்து அவருடைய துணையால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளைக் கவர்ந்து நம் உடலில் உள்ள எல்லா அணுக்களுக்கும் சேர்ப்போம்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவினை உங்கள் உடலுக்குள் செலுத்தித் திரும்பத் திரும்பத் தியானியுங்கள்.

1.சிவ தனுசு என்ற மனித உணர்விற்கு மாற்றும் நிலையை நீக்கிவிட்டு
2.உயிர் என்ற ஒளியின் தன்மை ஆக்க விஷ்ணு தனுசை நம் உடலுக்குள் பாய்ச்சி
3.தீமையை அகற்றிடும் பேரின்ப பெருவாழ்வு வாழும் அந்த உணர்வின் தன்மையை நமக்குள் பாய்ச்சுவோம்.
4.பேரருள் உணர்வைப் பெருக்குவோம்.

ஓம் ஈஸ்வரா குருதேவா… ஓம் ஈஸ்வரா குருதேவா… ஓம் ஈஸ்வரா குருதேவா…!

ஆயுள் எதிலே இருக்கிறது…?

membership of gurudevar

ஆயுள் எதிலே இருக்கிறது…?

இந்த உலகமும் இந்தப் பிரபஞ்சமும் எப்படி இயக்குகின்றது…? இந்த பிரபஞ்சத்தில் உருவாகும் உணர்வுகள் நம்மை எப்படி இயக்குகின்றது…? என்ற பேருண்மைகளை எல்லாம் நாம் கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும்.

அகண்ட அண்டங்களாக இருந்தாலும் ஒன்றுடன் ஒன்று இணைந்தே வாழ்கிறது. ஒரு சூரியக் குடும்பத்திலிருந்து வரும் உணர்வுகள் அடுத்த மண்டலத்திற்கு உணவாகச் செல்லும்.

அப்படிப் பிற மண்டலங்களில் இருந்து வருவதை 27 நட்சத்திரங்களும் கவர்ந்து பால்வெளி மண்டலமாக்கி அதைத் தூசிகளாகத் துகள்களாக அனுப்புகிறது.

அப்படி வரும் துகள்களைக் கோள்கள் ஒவ்வொன்றும் அதனதன் பங்குக்கு எடுத்துக் கொள்கிறது. இது எல்லாம் ஒட்டு மொத்தமாகச் சூரியனின் ஈர்ப்புக்குள் வந்த பின் அது மோதி விஷத்தைப் பிரித்து வெப்ப காந்த அலைகளாக மாற்றி இந்தப் பிரபஞ்சத்தையே இயக்குகிறது.

அதே போல் தான் மனிதர்களாக வாழும் நிலையில்
1.வெளியிலிருந்து நாம் நுகரும் உணர்வுகள் அனைத்தையும்
2.நம் உடலில் என்னென்ன உறுப்புகள் இருக்கிறதோ அது அது பிரித்து எடுத்து
3.அந்தந்த அணுக்களுக்குண்டான ஆகாரமாகக் கொடுக்கின்றது.
4.அதன் வழி கொண்டு அந்த உறுப்புகள் வளர்ச்சியாகிறது.
5.உறுப்புகளின் உணர்வுகள் அந்தந்தப் பாகத்திற்கொப்ப மலங்களை உருவாகும் போது உடலின் அமைப்பு உருவாகிறது.

நம்முடைய பிரபஞ்சத்தில் இயக்கங்கள் எப்படி இருக்கின்றதோ அதே போல் நாமும் ஒரு பிரபஞ்சம். இரண்டாயிரம் சூரிய குடும்பங்கள் என்று சொல்லும் பொழுது இரண்டாயிரம் மனிதர்கள் ஒருவருக்கொருவர் கலக்கின்றோம்.

அகண்ட அண்டம் என்றாலும் அதற்குள் இரண்டாயிரம் சூரிய குடும்பங்கள் உருவாகின்றது போலத்தான் ஒவ்வொரு மனிதனும் ஒரு பிரபஞ்சம்.

இரண்டாயிரம் மனிதர்கள் சேர்த்தால் ஒரு அகண்ட அண்டம் என்ற நிலை வரும். இதற்குள் விளையும் உணர்வுகள் ஒருவருக்கொருவர் பரிமாற்றம். அதிலே எதனின் உணர்வுகளை நாம் சேர்க்கிறோமோ அதனின் வளர்ச்சியாகத்தான் நாம் இருப்போம்.

ஒருவருக்கொருவர் இப்படிப் பரிமாறும் நிலையில்… குடும்பப் பற்று கொண்டு வாழும் பொழுது
1.என்னை இப்படிப் பேசிவிட்டானே…
2.என்னை இப்படிக் கேவலப்படுத்தி விட்டானே.. என்ற இந்த உணர்வை எண்ணி எடுத்துக் கொண்டால்
3.வேதனையும் வெறுப்பும் அதிகமாக வளர்ந்து நம் ஆயுள் காலம் எதலே முடியும்…?
4.யார் நம்மைத் திட்டினானோ அவன் உடலில் போய் அவனை வீழ்த்த முடியும்.
5.அவனையும் வீழ்த்தியவுடனே அந்த ஆயுள் காலம் என்ன செய்யும்…?
6.விஷத்தின் தன்மைகள் அதிகமாகி மனித ரூபமற்ற நிலைகளாக மிருகங்களாகவோ விஷ ஜெந்துக்களாகவோ மாறி
7.வீரிய உணர்வு கொண்டு மற்றொன்றைக் கொன்று புசிக்கும் அசுர உணர்வுகளாக நம்முடைய ஆயுள் காலம் அதுவாக மாறும்.

ஆகவே அந்த ஆயுள் காலம் நாம் எதற்குப் போக வேண்டும்…? நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் தீமைகளை வென்ற அந்தத் துருவ நட்சத்திரத்துடன் நாம் ஆயுள் மெம்பராக இணைய வேண்டும்.

ஏனென்றால் இந்தப் பிரபஞ்சத்தின் உண்மைகளை எல்லாம் உணர்ந்து
1.இருளை அகற்றியவன்
2.அகத்தின் உணர்வுகளை அறிந்தவன்
3.உண்மையின் இயக்கத்தை அறிந்தவன்
4.துருவத்தின் ஆற்றலை தனக்குள் உருவாக்கி அந்த உணர்வின் தன்மையைத் தன் உடலில் திருப்பம் ஆனவன்
5.தான் பெற்ற ஆற்றல்களை எல்லாம் தன் மனைவிக்குக் கொடுத்து மனைவியின் உணர்வோடு இணைத்தவன்
6.ஆண் பெண் என்ற உணர்வு கொண்டு அருள் உணர்வுகளை வளர்த்தவன் தான் “அகஸ்தியன்…!”
7.அந்த அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக உள்ளான்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வின் தன்மையை எடுத்து நாம் ஆயுள் கால மெம்பராகும் போது அது அது எடுத்து நாம் எதிலே இருக்க வேண்டுமோ அதில் இருக்க வேண்டும்.

இதை எல்லாம் நீங்கள் முழுமையாக உணர வேண்டும் என்பதற்குத்தான் அகஸ்தியமாமகரிஷியின் அருள் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்து கொண்டே வருகின்றோம்.