துருவன் நஞ்சை நீக்கி ஒளியாக மாற்றிய சக்தியை நம் கிட்னிக்குப் பெறச் செய்ய வேண்டும்

துருவன் நஞ்சை நீக்கி ஒளியாக மாற்றிய சக்தியை நம் கிட்னிக்குப் பெறச் செய்ய வேண்டும்

 

வயல்களில் நாம் களைகளை நீக்கினாலும் அதற்குள் மறைந்த வித்துக்கள் மீண்டும் முளைத்து வந்துவிடுகின்றது. இதைப்போலத்தான் நமது வாழ்க்கையில் எத்தனையோ விதமான வெறுப்பு உணர்வுகளை நாம் நுகர நேருகின்றது.

கண்களால் நாம் பதிவாக்கித்தான் நாம் நுகருகின்றோம். நுகர்ந்த உணர்வால் நாம் அறிகின்றோம்.
1.அந்த உணர்வுகள அனைத்தும் நம் இரத்தத்தில் கலந்து
2.நம் இரத்தமே மாசுபடும் நிலைகள் கொண்டு மாசுபடும் இரத்தங்கள் நம் உடல் முழுவதும் படரப்படும் பொழுது
3.நமது நல்ல அணுக்களைச் செயலற்றதாக மாற்றிக் கடும் நோயாகி நம் உறுப்புகளில் நோய்கள் உருவாகி விடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளை நாம் தடுப்பதற்கு… அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாகி ஒளியின் உடலாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வினை நாம் எண்ணி ஏங்கி நம் நினைவினைப் புருவ மத்தியில் வைக்க வேண்டும்.

அப்படி வைக்கப்படும்பொழுது நாம் இதற்கு முன்னாடி தீமைகளை நுகர்ந்திருந்தாலும் அந்த வெறுப்பு, வேதனை, சலிப்பு, சஞ்சலம், சங்கடம், கோபம், குரோதம் போன்ற உணர்வுகள் நம் உடலுக்குள் போகாது தடைப்படுத்திவிடும்.

அடுத்து நம் கண்ணின் நினைவு கொண்டு ஒவ்வொரு உறுப்புகளுக்கும் அதை உருவாக்கிய அணுக்களுக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் செலுத்தப்படும் பொழுது அது வீரியமடைந்து இந்த இரத்தங்களிலிருந்து வரும் விஷத்தன்மைகளை அது ஏற்காது அது கழித்துவிடும்.

பின்… விஷத்தின் தன்மைகளை வடிகட்டும் கிட்னிக்குள் “துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும்” என்று வீரிய சக்தி உண்டாக்கப்படும் பொழுது
1.எப்படி அகஸ்தியன் அவன் துருவனாகும் பொழுது விஷத்தின் தன்மை நீக்கி உணர்வினை ஒளியாக மாற்றிச் சென்றானோ
2.அத்தகைய வலுவான நிலைகள் கொண்டு கிட்னி விஷத்தின் தன்மை வடிகட்டி நல்ல இரத்தங்களாக உருவாக்கி
3.நம் இருதயத்தைச் சீராக இயக்கி இருதயத்திலிருந்து மூளை பாகம் செல்லும் இந்த இரத்தங்களைப் பரிசுத்தமாக்கி
4.நமக்குள் நல்ல இயக்கமும் நல்ல நினைவும் உருவாக்குகின்றது.

இவ்வாறு அந்தத் “துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள்” நமக்குள் இருளை நீக்கி ஒளி பெறும் தன்மையாக நமது அறிவாக இயக்கத் தொடங்கும்.

வாழ்க்கையில் நாம் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அதிகமாகச் சேர்க்கச் சேர்க்க அதைப் பற்றுடன் பற்றி வாழும் நிலை உருவாகிறது.

சலிப்போ, சோர்வோ, சஞ்சலமோ, வேதனையோ, கோபமோ இந்த உணர்ச்சிகள் நமக்குள் வரும் பொழுதெல்லாம்…
1.“ஈஸ்வரா” என்று உங்கள் கண்ணின் நினைவினைப் புருவ மத்தியில் உயிரின்பால் செலுத்தி உயிரான ஈசனிடம் வேண்டி
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று எண்ணினால் அங்கே தீமைகள் புகாது தடுக்கப்படுகின்றது.

பின் அதே கண்ணின் நினைவு கொண்டு ஒவ்வொரு உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்கும் அந்தச் சக்தியைச் செலுத்தப்படும் பொழுது அது வீரியத்தன்மை அடைந்து விடுகின்றது.

அப்பொழுது நாம் அறியாது நுகரும் வேதனை உணர்வுகள் இரத்தத்தில் கலந்தாலும் “கிட்னி அதைச் சுத்தப்படுத்தி” நல்ல உணர்வுகளை நம் உடலுக்குள் பரவச் செய்கின்றது.

அதே போன்று எல்லா அணுக்களிலும் “துருவ நட்சத்திரத்தின்” உணர்வுகளை வலுவாக்கப்படும் பொழுது உடலில் உள்ள அணுக்கள் தீமைகளை ஏற்காது அதை நீக்குகின்றது.

இப்படி ஒதுக்கும்போது
1.நமது வாழ்க்கையில் நோய் வராததும் மன வலிமையும் சிந்தித்துச் செயல்படும் தன்மையும்
2.நாம் எத்தகைய தீமையைப் பார்த்தாலும் அந்தத் தீமையின் உணர்வு இயக்காது… நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளவும் முடியும்.

எல்லா அணுக்களிலும் தீமையை நீக்கும் அருள் சக்தியைப் பெறச் செய்வோம்

எல்லா அணுக்களிலும் தீமையை நீக்கும் அருள் சக்தியைப் பெறச் செய்வோம்

 

1.உங்களையெல்லாம் யாம் எங்கே கொண்டு போகின்றோம்…?
2.அந்த அகஸ்தியன் உணர்வு கொண்டு துருவ நட்சத்திரத்துடன் இணைக்கின்றோம்.
3.குருநாதர் என்னை இப்படித்தான் கொண்டு சென்றார்.

அவர் காட்டிய நிலைகளில் தான் யாம் உங்களையும் அங்கே இணைக்க முடியும்.

ஒவ்வொன்றையும் சேர்த்து உங்கள் உடலில் எத்தனை விதமான குணங்கள் இருந்தாலும் அதனுடன் இணைத்து இணைத்து அதனின் உணர்வை உங்களுக்குள் பாய்ச்சுகிறேன்.

உங்கள் கண்ணின் நினைவு உடலிலுள்ள ஒவ்வொரு அணுக்களுக்கும் இதைச் சேர்க்கும்.
1.அப்படிச் சேர்க்கும் பொழுது நம் உடலிலுள்ள அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஏற்கும் பருவம் வருகின்றது.
2.அதை ஏற்கக்கூடிய பருவத்தைச் செய்தால் தான் ஈர்க்கும்… இல்லையென்றால் எடுக்காது.

அதனால் தான் அந்த உணர்ச்சியின் தன்மை கொண்டு நமது குருநாதர் கொடுத்த அருள் வழியில் இதை உங்களிடம் சேர்க்கின்றோம். இதைப் பக்குவப்படுத்துதல் உங்கள் கையில்தான் இருக்கின்றது. ஆனாலும் உங்களை ஆயுள் மெம்பராகச் சேர்த்துக் கொண்டோம்.

வீட்டில் ஏதாவது சலிப்பு சஞ்சலம் வந்து விட்டால் “ஈஸ்வரா” என்று புருவ மத்தியில் எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் படர்ந்து எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்… உற்சாகம் ஊட்டும்.

குழந்தைகள் ஏதாவது குறும்புத்தனம் செய்தால் இதே போல ஆத்ம சுத்தி செய்து விட்டு… என் பிள்ளை ஞானியாக வேண்டும்…. அவன் கல்வியில் உயர்ந்தவனாக வேண்டும் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

யாராவது எதிரியாகப் பேசுகிறார்கள் என்றால் உடனே “ஈஸ்வரா” என்று எண்ணி அதைத் தடுத்துவிடுங்கள்.
1.அவர்கள் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும்.
2.அவர்கள் செய்வது யாருக்கும் தொல்லையில்லாத நிலை பெற வேண்டும்
3.அவர்களது பகைமையூட்டும் இந்த நிலைகள் மாற வேண்டும் என்று எண்ணுங்கள்.

இவ்வாறு நாம் எண்ணும் பொழுது அவர்கள் உணர்வுகள் நமக்குள் வருவதில்லை.

ஏனென்றால்… “ஈஸ்வரா” என்று எண்ணி நம் உடலுக்குள் பெறச் செய்து விட்டு அந்த உணர்வின் தன்மையைச் சொல்லப்படும் பொழுது இந்த உணர்வு (நாம் எடுக்கும் அருள் உணர்வுகள்) இரத்தத்தில் கலந்து செல்லும். இந்த அருள் உணர்வுகள் நம் ஆன்மாவாக மாறுகின்றது… வலுவாகிறது.

அப்பொழுது இந்த உணர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக அங்கே போய்ச் சேரும். அவன் திருந்தும் நிலை வரும்.
1.அவன் திருந்த எண்ணினால் அவனுக்கு நல்லதாகிறது.
2.நம்மைத் திட்டும்போது நம் உடலுக்குப் பாதுகாப்பாக இருக்கும்.

சொல்வது உங்களுக்கு அர்த்தமாகிறதல்லவா.

இதே மாதிரி வாழ்க்கையில் நாம் ஒவ்வொரு நிமிடத்திலும்
1.ஒவ்வொரு குணங்களிலும்
2.ஒவ்வொரு உணர்விலும்
3.ஒவ்வொரு செயல்களிலும் துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கலந்து கொண்டே வரவேண்டும்.

பல விதமான குழம்பு வைக்கிறோம், பல விதமான பலகாரம் செய்கின்றோம். அதே மாதிரி நமக்குள் அந்தத் தீமை செய்யும் உணர்வைச் சுவை மிக்கதாக மாற்றிவிடுகிறோம்.

இப்படி நம் இரத்தத்தில் கலக்கும் பொழுது நம் உடலிலுள்ள எல்லா அணுக்களுக்கும் சேர்கின்றது. “கொஞ்சம் இதில் பொறுமை தேவை…”

ஏனென்றால் மனிதனுடைய உணர்வுகள் ஒருவர் மேல் வெறுப்பாகி விட்டால் ரோட்டில் போகும் பொழுது பார்த்தால் “போகின்றான் பார்…” என்ற இந்த உணர்வை வளர்த்துக் கொள்கின்றோம்.

இதே மாதிரி ஒருவன் யாருக்கோ தவறு செய்கின்றான். அதை நாம் பார்த்து விடுகின்றோம். பார்த்தவுடன் அவனின் நினைவு வருகின்றது. அதே உணர்வை எடுத்துத் தவறு செய்யும் அணுக்களைத்தான் நாம் வளர்க்கின்றோம்.

ஒருவன் சாபம் விடுகின்றான்… அவன் எதைப் பார்த்தாலும் சாபம் விட்டுக் கொண்டே இருப்பான். அவனைப் பார்த்தவுடன் பதிவு செய்து விடுகின்றோம். இந்த சாப அலைகள் அடுத்து நமக்குள் எதை எடுத்தாலும் தீமை செய்யும் அணுக்களாக வளர்ச்சி பெறுகின்றது.

அந்த மாதிரி உணர்வுகள் வரும் பொழுது
1.அந்தக் கணமே “ஈஸ்வரா”என்று துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் புருவ மத்தியில் கொண்டு வரவேண்டும்.
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடலிலுள்ள ஜீவ அணுக்கள் ஜீவ ஆன்மாக்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

நம் வாழ் நாளில் இதைப் பழக்கத்திற்குக் கொண்டு வரவேண்டும். இவ்வாறு செய்து அந்தத் தீமையான உணர்வுகளை நம் ஈர்ப்பு வட்டத்திலிருந்து தள்ளிப் பழக வேண்டும்..

ஒருவர் திட்டினார் என்று வைத்துக் கொள்ளுங்கள். திட்டியவர்களை எண்ணினால் புரை ஓட வைக்கின்றது. இங்கிருந்து தானே போகின்றது. யார் உடலில் விளைந்ததோ அங்கே போகிறது.

அப்படி உங்களை நினைக்கும்போது அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாங்கள் பெற வேண்டும் என்று நீங்களே இதைப் பெற்றிட வேண்டும்.

அதாவது மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். எங்கள் உடல் முழுவதும் பெற வேண்டும் எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும் என்று எண்ணிவிட்டு
1.அவர்களுக்குள் அறியாது சேர்ந்த இருள் நீங்க வேண்டும்
2.அவர்கள் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் என்று நாம் எண்ணும் போது இந்த உணர்வு நமக்குள் வருகிறது.
3.அவர்கள் உணர்வு பதிவாகிறது… இதனுடன் கலந்து அதை நாம் மாற்றி விடுகின்றோம்.

அப்பொழுது துருவ நட்சத்திரத்தின் பேரருளை இங்கே இணைத்து விடுகிறோம். உள்ளே கெட்டது போகாமல் மாற்றி விடுகிறோம். இந்த உணர்வு இரத்தத்தில் கலக்கிறது. இரத்தத்தில் கலந்தவுடன் அதை எடுப்பதற்கு வழிவேண்டுமல்லவா…!

அது கலந்தவுடன் இதை மாற்றிவிட்டுத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று இதை முந்திக் கொடுத்துவிடுகிறோம்.
1.அதைக் கொடுத்தவுடன் நாம் கலந்து போவதை எடுத்துப் பழக வேண்டும்.
2.ஒன்றில்லாது ஒன்றில்லை…! எதுவுமே ஒன்று இணைந்தால் தான் அது வளரும்.

வட துருவத்தில் இருப்பது இழுக்கும். தென் துருவத்தில் இருப்பது தள்ளும். ஏனென்றால்
1.தென் துருவம் சூரியனைப் பார்த்து இருக்கின்றது.
2.வட துருவம் மேலே இருந்து இழுக்கிறது.
3.அதாவது காந்தத்தில் மற்றொரு காந்தத்தை வைத்தால் தள்ளிக் கொண்டே போகும்.

இதைப் போன்று நாம் நமது வாழ்க்கையில் எத்தகைய தீமைகள் வந்தாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை நமக்குள் கலந்து கொண்டே இருக்க வேண்டும்.

1.நம் உடலில் உள்ள இரத்தத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளைக் கலந்து கொண்டே இருக்க வேண்டும்,
2.நம் உடலை உருவாக்கிய அனைத்து அணுக்களிலும்
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளைக் கலந்து கொண்டே இருக்க வேண்டும்.

அந்த மகரிஷிகள் சென்றடைந்த எல்லையை நாம் அடைய வேண்டும், அதற்குத் தான் இதை உணர்த்துகின்றோம்.

நாம் அனவரும் ஒன்று சேர்ந்து துருவ நட்சத்திரத்தின் சக்தியை உலகமெங்கும் பரவச் செய்வோம்

நாம் அனவரும் ஒன்று சேர்ந்து துருவ நட்சத்திரத்தின் சக்தியை உலகமெங்கும் பரவச் செய்வோம்

 

அருள் ஞானச் சக்கரத்தை தினமும் உற்றுப் பாருங்கள். அதிலிருந்து துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி வரும்.

என்னென்ன காரியங்கள் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதை எல்லாம் எண்ணுங்கள்.
1.குடும்பத்தில் ஒன்றுபட்டு வாழ வேண்டும்
2.விவசாயம் செழிக்க வேண்டும்
3.தொழில் பெருக வேண்டும் வாடிக்கையாளர்கள் நலமாக வாழ வேண்டும்.
4.நோயுற்றவர்களுக்குத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைத்து
5.அவர் நோய் நீங்கி உடல் நலம் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

சக்கரத்தை வைத்துப் பயபக்தியுடன் செயல்படுங்கள். பாலோ பழமா பதார்த்தத்தையோ வைத்துத் தியானம் இருந்துவிட்டு நீங்களும் உட்கொள்ளுங்கள்… குழந்தைகளுக்கும் கொடுங்கள்.

எல்லோரும் உடல் நலம் பெற வேண்டும் அருள் ஞானம் பெற வேண்டும் என்று இந்த வழியைக் கடைப்பிடித்து வாருங்கள்.

எங்கள் ஊர் நன்றாக இருக்க வேண்டும் தெரு நன்றாக இருக்க வேண்டும் வீடு நன்றாக இருக்க வேண்டும் அடிக்கடி இந்த உணர்வுகள் இங்கே படர வேண்டும் என்று சக்கரத்தை உற்றுப் பார்த்து இந்த உணர்வுகளைப் பரப்புங்கள்.

1.ஊரில் உள்ள அனைவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும்
2.ஊரிலே விவசாயம் செழிக்க வேண்டும்
3.மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று
4.”சக்கரத்திற்கு முன்…” இதை எல்லாம் சொல்லிக் கொண்டே வாருங்கள்.

அதன் வழி ஓரளவுக்கு அனைவருக்கும் இந்த உணர்வுகள் படரும்… பரவும். ஊரில் உள்ள குடும்பங்களும் நலமாகும் சக்தி பெறும். இந்த உணர்வுகள் பரவப் பரவ எல்லோரும் அதைப் பெறும் தகுதி ஏற்படும்.

டிவி ஸ்டேஷனில் எந்த ஒளிபரப்பு செய்கின்றார்களோ அந்த அலைவரிசையைத் திருப்பினால் அது தான் வரும். அதே போல
1.குருநாதர் காட்டிய அருள் வழியில் நாம் அந்த அல்லைவரிசையை எடுத்துப் பரப்பப்படும் பொழுது
2.மற்ற யாரிடமும் பேசினாலும் கூட அவர்களுக்குள்ளும் இது பதிவாகின்றது.

அவர்களுக்கு இந்த எண்ணம் வந்தால் அதை எடுத்து வளர்த்துக் கொண்டால் அவர்களும் அவர்களை அறிய முடிகின்றது. அறியாது வந்த கஷ்ட நஷ்டங்களைப் போக்க முடிகின்றது.

உலகம் நலம் பெற்று வாழ நாம் இந்த முறைப்படி தியானத்தைச் செயல்படுத்த வேண்டும். எல்லோரும் நன்றாக ஆகும்பொழுது நமக்குள் அருள் மகரிஷியின் உணர்வுகளை எளிதில் பெற முடியும்.

ஒவ்வொரு குடும்பங்களிலும் கூட்டுத் தியானமிருங்கள். அந்தக் குடும்பம் நன்றாக வேண்டும்… குடும்பத்தில் குழந்தைகளும் மற்றவர்களும் தொழிலும் சீராக வேண்டும் என்று தியானமிருங்கள்.

நோயற்றவர்களுக்கும் அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும் அவர்கள் நலம் பெற வேண்டும் என்று கூட்டுத் தியானத்தில் முயற்சி எடுங்கள்… நலமாக வேண்டும் என்று ஒன்று சேர்ந்து சொல்லுங்கள். கூடுமானவரை சீக்கிரம் அவர்கள் உடல் நலம் பெறுவார்கள்.

என்ன தான் நோய் நீங்கினாலும் கூட நாம் வாழக்கூடிய காலம் குறுகியதுதான். எப்படியும் இந்த உடலை விட்டு நாம் பிரியத் தான் வேண்டும்… இந்த உடல் நமக்குச் சொந்தம் இல்லை.

அப்பொழுது என்ன செய்ய வேண்டும்…?

1.எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று அருள் ஒளியை அங்கே பாய்ச்சப்படும் பொழுது
2.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகள் நமக்குச் சொந்தமாகின்றது.

உடல் நோய்வாய்ப்பட்டாலும் உடல் சுருங்கத் தான் செய்யும்… அருள் உணர்வுகள் பெற்ற பின் தீய உணர்வுகள் தீய அணுக்கள் குறையப்படும் பொழுது உடல் சுருங்கத் தான் செய்யும். ஆனால்
1.பேரருள் என்ற உணர்வுகள் உயிரிலே பட்டு… ஒன்று சேர்த்து இணைந்த பின்
2.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திலிருந்து அதைக் கவர்ந்து
3.அந்த உணர்வை உணவாக எடுத்து “ஒளியின் பிளம்பாக…” மாறும்.

எப்போதுமே பிறவியில்லா நிலை அடையும் அந்தச் சக்தி பெறுகின்றோம். அதைத்தான் இராமாயணத்தில் இராமன் நேரமாகிவிட்டது என்று மனதைக் குவித்துப் பூஜித்தான் என்று காட்டியிருப்பார்கள்.

நம்முடைய எண்ணங்கள் அனைத்தும் ஒன்று சேர்த்து… பகைமை இல்லாத உணர்வுகளை வளர்த்து… உடலில் இருக்கும் பொழுது ஒளியின் உணர்வைச் சேர்த்து… உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக மாற்ற வேண்டும். கடைசி நிலை அது தான்…!

தியானிக்கும் பொழுது என் நெற்றியைப் பார்க்கச் சொன்னதன் நோக்கம்

தியானிக்கும் பொழுது என் நெற்றியைப் பார்க்கச் சொன்னதன் நோக்கம்

 

குரு காட்டிய அருள் வழியில் என் உயிரான ஈசனிடம் வேண்டி என் குரு காட்டிய அருள் உணர்வை நான் ஏங்கிப் பெறுகின்றேன்.
1.அந்த அருள் பெற வேண்டும் என்ற ஏக்கத்துடன் நீங்கள் உங்கள் உயிரை வேண்டும் பொழுது
2.கண்ணின் வழி குரு காட்டிய அருள் வழியில் “அந்தத் துருவ நட்சத்திரத்துடன் உங்களை இணைக்கச் செய்கின்றேன்…”

குரு எனக்கு அதன் வழி தான் காட்டிக் கொண்டு வந்தார். அதன் வழியே உங்களுக்கும் குரு வழியைக் காட்டி அந்த உணர்வினை எடுக்கும்படி செய்வதற்காக உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.

இப்பொழுது என்னுடைய நெற்றியில் புருவ மத்தியைப் பாருங்கள்…! அம்மா அப்பா அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கி அப்படியே உற்றுப் பாருங்கள்.

குரு காட்டிய அருள் வழியில் அவர் அருள் வழி காட்டிய அகஸ்தியனுடைய அருளும் அவன் துருவனான அந்த அருள் உணர்வும் துருவ நட்சத்திரமான அந்தப் பேரருளும்
1.உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று என் உயிரான ஈசனிடம் வேண்டி ஏங்கித் தியானிக்கின்றேன்.
2.அதன் வழி நீங்கள் ஏங்கும்போது அந்த உணர்வுகள் அந்த அலைகள் இங்கே வந்து
3.உங்கள் உடலில் அந்த உணர்ச்சிகள் பரவி பேரருளைப் பெறும் தகுதியைப் பெறுகின்றீர்கள்.

நாம் அதிலே ஆயுள் கால மெம்பராக இணைகின்றோம். இதிலிருந்து உறுதி பூண்டு யாம் உபதேசித்த உணர்வின் வழிப்படி வாழ்க்கையில் வழி நடத்துகின்றேன். அந்த வழி நடத்தும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணுங்கள்.

அம்மா அப்பா அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டி அதே உணர்வு கொண்டு கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் எண்ணி உற்றுப் பாருங்கள்… அதை ஏங்கிப் பெறுங்கள்.

உங்களுக்கு… உங்கள் உயிரான ஈசனிடம் நான் வேண்டி…
1.ஈசன் வீற்றிருக்கும் ஆலயத்தில் அந்த அருள் உணர்வுகள் படர வேண்டும்
2.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருள் படர வேண்டும்
3.அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
4.துருவ மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
5.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று
6.உங்கள் உடலில் அந்த அருள் சக்தி படர வேண்டும் என்று உங்களைத் தியானிக்கின்றேன்.

நீங்களும் அதன் வழி பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது அந்த அருள் உணர்வுகள் நீங்கள் பெறுவதை உணர முடியும் உங்கள் உடலில் அது ஒளியலைகளாகப் பரவுவதையும் உணரலாம்.

தியானப் பயிற்சி

தியானப் பயிற்சி

 

அம்மா அப்பா அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருள் சக்தியால் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷி ஆகித் துருவ நட்சத்திரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் அதனின்று வெளிப்படும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கி உங்கள் நினைவைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள்.
1.கண்ணின் நினைவை அங்கே கொண்டு செல்லுங்கள்… கண்ணால் ஈர்க்கும் சக்தி வரும்.
2.இந்த உணர்வுகள் நெஞ்சின் எலும்புக்குள் ஊழ் ஊழ்வினை என்ற வித்தாக இப்பொழுது பதிவாகின்றது.
3.உங்கள் நெஞ்சில் பதிவாகும் உணர்வுகள் தெரிய வரும்.

கண்களால் துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கவரும் சக்தி வருகின்றது. கருமணிகளில் ஈர்க்கும் சக்தி கிடைக்கும். கண் கனமாக இருக்கும். கருமணியில் கவரப்படும் பொழுது நெஞ்சிலே ஊழ் வினை என்ற ஞானவித்து பதிவாகும்.

கண்களை மூடுங்கள். புருவ மத்தியில் இயங்கிக் கொண்டிருக்கும் உயிரான ஈசனிடம் நினைவைச் செலுத்துங்கள். துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவை உயிருடன் இணையுங்கள்.

இப்பொழுது உயிரால் கவரப்படும் சக்தியாக மாறுகின்றது.

முதலில் கண்களிலே கவர்ந்தோம். கவர்ந்த உணர்வு நுகரப்படும் போது உயிரில் பட்டுத் தான் அது இயங்கும்.

ஆனால் கண்ணில் கவர்ந்த நிலைகள் ஈர்க்கும் சக்தி பெறச் செய்து ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாகி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உயிரான ஈசனிடம் வேண்டி ஏங்கித் தியானியுங்கள்.

1.உயிர் வழி துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஈர்க்கும் சக்தி பெறுகின்றீர்கள்.
2.உங்கள் புருவ மத்தியில் கனமாக அந்த ஈர்ப்பு நிலைகள் தெரிய வரும்.
3.துருவ நட்சத்திரத்தின் சக்தி உயிரில் மோதும் பொழுது சில வெளிச்சங்களும் தெரிய வரும்.

இப்பொழுது உங்கள் கண்ணின் நினைவினை உங்கள் ரத்த நாளங்களில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று நினைவைச் செலுத்துங்கள்.

இரத்த நாளங்களில் எத்தனையோ கோடி உணர்வுகள் உண்டு. அந்த உணர்வுகளை இயக்கும் கருத்தன்மை உண்டு. ஜீவணுக்கள் உண்டு.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி ரத்தங்களில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

எறும்பை நசுக்கினாலும் அந்த ஆன்மா ரத்தத்தில் தான் இருக்கும் மனிதன் மேல் பண்பு கொண்டு வாழ்ந்திருந்தாலும் அந்த ஆன்மா நமக்குள் வந்தால் அதனுடைய இயக்கத்தை உண்டாக்கும்.

எறும்பின் உயிரான்மா மனிதனாக உருப் பெறும் கருத்தன்மை அடைகின்றது.
1.ஆனால் மனிதனுடைய ஆள்மா வந்தால் அவனுக்குள் ஈர்க்கப்பட்ட துயரம் எதுவோ அந்த உணர்வை நமக்குள் இயக்கும்.
2.அத்த இயக்கம் நமக்குள் வராதபடி தடுக்க துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி ரத்த நாளங்களில் கலந்து
3.அதில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
4.கண்ணின் நினைவை ரத்தத்தில் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது இரத்த நாளங்களிலே புது உணர்ச்சிகள் தோன்றும். உடலிலேயே உற்சாகம் ஊட்டும் உணர்வு வரும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் ரத்தங்களிலே கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

எல்லா உறுப்புகளிலும் நினைவைச் செலுத்துங்கள். இவ்வாறு செய்வதனால் உயிர் வழி உடலுக்குள் செல்லும் தீய உணர்வுகளைத் தடைப்படுத்துகின்றோம்.

அதே சமயத்தில் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்திலும் துருவ நட்சத்திரத்தின் வலுவைச் சேர்க்கின்றோம்.
1.நமது ஈர்ப்பு வட்டத்தில் உள்ள தீய அணுக்களுக்குண்டான உணர்வுகளை
2.உடலில் ஈர்ப்பு வட்டத்திலிருந்து நகர்த்திச் சென்று விலக்கி விடுகின்றது… அல்லது ஒதுக்கி விடுகின்றது.
3.இப்பொழுது நல்ல அமைதி கிடைக்கும். தீய உணர்வுகள் அனைத்தும் நம் ஈர்ப்பு வட்டத்திலிருந்து அகன்று சென்று விடுகிறது.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் சிறுகுடல் பெருங்குடலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

முதல் முகப்பில் உள்ள அந்தச் சிறுகுடலில் தான் முதலில் ஆகாரங்கள் செல்கின்றது. அந்த ஆகாரத்தை ஜீரணிக்கும் சக்தி அந்த அணுக்களுக்குத் தான் உண்டு.

துருவ நட்சத்திரத்தின் வீரிய சக்தியை அந்த அணுக்களுக்குப் பெறச் செய்யுங்கள். அதன் கீழ் உள்ள பெருங்குடலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

இப்படித் தியானித்து வந்தால் அந்த உறுப்புகள் உங்களுக்குத் தெளிவாகத் தெரிய வரும். இதை எடுக்க எடுக்க அதை உணர முடியும் அறிய முடியும் உங்கள் உடல் உறுப்புகளில் என்ன நடக்கிறது…? என்று.

1.சிறுகுடல் பெருங்குடல் உருவாக்கிய அணுக்கள் வீரியமடையும் பொழுது குடலில் உள்ள குறைபாடுகள் நீங்கும்.
2.வயிற்று வலியோ மற்ற கோளாறுகளோ அது எல்லாம் நீங்கும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் கணையங்கள் முழுவதும் படர்ந்து கணையங்களை உருவாக்கிய அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற அருள்வாய் ஈஸ்வரா.

சிறுகுடல் பெருங்குடல் ஆகாரத்தின் சத்துகளை அது உருவாக்கி அமிலமாக மாற்றி வெளி வருவதை உங்கள் உடலில் உள்ள கணையங்கள் மூன்று விதமாகப் பிரிக்கின்றது.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை அங்கே செலுத்தப்படும் பொழுது ஆகாரத்தில் கலந்து வரக்கூடிய விஷத்தன்மைகளை மாற்றி நல்ல உணர்வை உருவாக்கும் தன்மை கணையங்களுக்கு ஏற்படுகின்றது.
1.உடலை ஒட்டி இருக்கக்கூடிய கணையங்களின் உணர்ச்சிகளை…
2.அந்த உறுப்பின் இயக்கத்தை உணர முடியும்… அறிய முடியும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் கல்லீரல் மண்ணீரல் முழுவதும் படர்ந்து கல்லீரல் மண்ணீரலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைச் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.

கல்லீரலை மண்ணீரலை உருவாக்கிய அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறும் பொழுது உற்சாகமடையும். அங்கிருக்கும் குறைகளை நீக்கும் அரும்பெரும் சக்தியாக மாறும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் நுரையீரல் முழுவதும் படர்ந்து நுரையீரலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவை நுரையீரலில் செலுத்துங்கள்.

நுரையீரலை உருவாக்கிய அணுக்கள் உற்சாகம் அடையும். இந்த வீரிய சக்தியை நீங்கள் உருவாக்குகின்றீர்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் சிறுநீரகங்கள் முழுவதும் படர்ந்து சிறுநீரகங்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா. கண்ணின் நினைவைக் கிட்னியில் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.

இவ்வாறு செலுத்தினோம் என்றால் உப்புச் சத்து சர்க்கரைச் சத்து வாதநீர் போன்ற நிலைகளைச் சுத்திகரித்து நல்ல ரத்தமாக மாற்றும் சக்தி பெறுகின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இருதயம் முழுவதும் படர்ந்து அதை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா. இப்போது அந்த இருதயம் சுறுசுறுப்படைவதை உங்களால் உணர முடியும்

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் கண்களில் உள்ள கருமணிகள் இரண்டும் பெற அருள்வாய் ஈஸ்வரா.
1.கண்களிலே துருவ நட்சத்திரத்தின் சக்தி ஈர்க்கப்படும் பொழுது கருமணியில் வெளிச்சம் வந்து கொண்டே இருக்கும்.
2.நெஞ்சிலே உள்ள எலும்புக்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வு பதிவாகிக் கொண்டே இருக்கும்.

குறைகளையோ வேதனைகளையோ மற்றவைகளைப் பார்த்தவுடனே அடுத்த நிமிடமே ஈஸ்வரா என்று துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கருமணிகளில் படர வேண்டும் என்று ஏங்கித் தியானித்தால் கருமணிகளில் படும் விஷத்தன்மைகளைச் சுத்தப்படுத்தும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் நரம்பு மண்டலம் முழுவதும் படர்ந்து நரமபினை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தச் சக்தி பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவினை நரம்பு மண்டலம் முழுவதும் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.

நரம்பு மண்டலத்தில் உள்ள வாதநீர் பித்த நீர் விஷ நீர் முடக்குவாதம் போன்ற நிலைகள் வராதபடி அந்த அணுக்களை வீரியமடையச் செய்யும் பொழுது நரம்பு மண்டலம் சீராகும். வாத சம்பந்தப்பட்ட பல நோய்களைத் தவிர்க்க இது உதவும்

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் எலும்பு மண்டலம் முழுவதும் படர்ந்து எலும்பு மண்டலத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரருளும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் நெஞ்சின் எலும்புக்குள் படர்ந்து அங்கிருக்கும் ஊன் முழுவதும் படர்ந்து ஊனை உருவாக்கிக் கொண்டிருக்கும் அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா.

1.இவ்வாறு செய்யும் பொழுது துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எளிதில் பெறக்கூடிய தகுதி பெறுகின்றோம்.
2.நாம் எண்ணும் பொழுதெல்லாம் துருவ நட்சத்திரத்திலிருந்து வரக் கூடிய சக்தியைப் பெறுகின்றோம்.
3.அந்த சக்தி அங்கே நெஞ்சின் ஊனுக்குள் படர்வதை இப்போது உணரலாம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் தசை மண்டலம் முழுவதும் படர்ந்து தசைகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரழகும் எங்கள் தோல் மண்டலம் முழுவதும் படர்ந்து தோலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா.

தோல் மண்டலத்தை உருவாக்கிய அணுக்களுக்குள் துருவ நட்சத்திரத்தின் சக்தியைச் செலுத்தப்படும் பொழுது உடலிலே பெரிய வெளிச்சமே தோன்றும். உடலில் இருந்து வெளிச்சங்கள் வரும்.

1.துருவ நட்சத்திரத்தின் பேரருளை இவ்வாறு எடுத்து ஒரு பெரிய பாதுகாப்புக் கவசமாக அமைத்துக் கொண்டால்
2.விஞ்ஞானத்தினால் வரும் தீமைகளிலிருந்து விடுபட்டு நல்ல உணர்வுகளை வளர்த்துக் கொள்ள இந்தச் சந்தர்ப்பம் உங்களுக்கு உதவும்.

இந்தத் தியானத்தை அனுதினமும் காலையில் ஐந்தரை மணியிலிருந்து ஆறரை மணிக்குள் ஒரு அரை மணி நேரமாவது எடுக்க முடிந்தால் எடுங்கள். முக்கியமான நேரம் அது… அந்த நேரத்திலே அருள் சக்திகளைச் சேர்த்துத் தீமைகளைத் தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள்.

ஞான சக்தி

ஞான சக்தி

 

தியானத்தைக் கடைப்பிடிப்பவர்களுக்கு மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்துகின்றேன். தியானம் எடுத்தவர்கள் “தொழிலில் நஷ்டம்…” என்ற வார்த்தையே இங்கே வரக்கூடாது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் எங்கள் ரத்த நாளங்களில் கலக்க வேண்டும் என்று
1.சிறிது நேரம் இப்படி எடுத்துச் சிந்தித்தீர்கள் என்றால் “நஷ்டம் எதனால்…?” என்ற அந்த ஞானம் வரும்.
2.அதிலே எந்தக் குறைபாடு இருக்கின்றதோ அதைத் திருத்தி அமைக்கக்கூடிய சக்தி வரும்.

ஐயோ… நஷ்டமாகி விட்டது நாளை என்ன செய்யப் போகின்றோம்…! என்று பதட்டத்தை அங்கே கொடுத்து விட்டால் நல்ல சிந்தனை வராது.

தொழில் வகையில் நாம் வளர்கின்றோம் என்றாலும் கூட சிறிது நஷ்டம் ஆனால் தியானத்தில் வளர்ந்து வரும் பொழுது நஷ்டத்திற்காக நாம் இந்த தியானத்தைச் சீராகப் பயன்படுத்தினோம் என்றால் அந்த உயர்ந்த உணர்வு வலுவாகும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்கிற பொழுது அது வலுவாகின்றது. அந்த உணர்வு நம்மை இயக்கி அனைத்தையும் சீர்படுத்தும்.

1.எந்தச் சந்தர்ப்பமாக இருந்தாலும் உடனே ஆத்ம சுத்தி செய்து பழக வேண்டும்.
2.தீமைகளைத் தூக்கி எறிந்து விட வேண்டும்.

கண்ணிலே தான் பார்க்கின்றோம்… நினைக்கின்றோம்… இழுத்து மூக்கு வழி சுவாசித்து உயிரிலே படுகின்றது. இதே கண்ணின் நினைவு கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கவரும்படிச் சொல்கின்றோம்.

அதே கண்ணின் நினைவு கொண்டு கவர்ந்த சக்தியை உயிரிலே இணைக்கின்றோம். இணைத்தவுடனே அங்கே வலுப்பெறுகின்றது.

1.மற்றவர்கள் சங்கடமான வெறுப்பான இந்த உணர்வுகள் பதிவாகி இருந்தாலும் உள்ளே செல்லாதபடி தடைப்படுத்தப்படுகின்றது.
2.இப்படி அதை முதலில் நிறுத்திப் பழக வேண்டும்… அது நம்மை இயக்கிவிடக் கூடாது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று புருவ மத்தியிலே நிலை நிறுத்திப் பழக வேண்டும். கண்ணின் நினைவு கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் ரத்த நாளங்களில் கலக்க வேண்டும் எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கி அணுக்கள் பெற வேண்டும் என்று உள்ளே கொண்டு போக வேண்டும்.

தியானத்தில் உடலில் உள்ள எல்லா உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்குத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறும்படி நாம் நாம் பழக்கத்தைச் செய்து வைத்திருக்க வேண்டும்.

சந்தர்ப்பங்களில் அதை எடுத்து வரிசைப்படுத்தி நம் உடலில் எல்லா உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்கும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று வலு கொடுக்க வேண்டும்.
1.அதாவது அந்த நேரத்திலே எச்சரிக்கை செய்து
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று புருவ மத்தியிலே வலுவை ஏற்றும் பொழுது
3.நமக்குள் எந்தத் தீமையும் உள்ளே புகாது தடுக்கப்படுகின்றது.

ஏனென்றால் வேதனையோ வெறுப்போ நஷ்டமோ கஷ்டமோ இது எல்லாம் வாலி… சக்தி வாய்ந்தது…! ஆனால் இதையெல்லாம் வென்றது துருவ நட்சத்திரம்.

தீமை வருகிறது என்று அதன் மேல் இச்சைப் பட்டால் அது வலிமை கூடி விடுகின்றது. ஆனால் அதற்குப் பதிலாக வேதனையை நீக்கிய துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற இச்சைப்பட்டால் உயிரில் இணைகின்றது. அந்த உணர்வு கிரியை.

உயிரிலே பட்டவுடன் உடல் முழுவதும் சென்று அந்தச் சக்தி கிரியை ஆகிறது.
1.அகஸ்தியன் எப்படித் தீமையை நீக்கித் துருவ நட்சத்திரமாக ஆனானோ அந்த உணர்வின் ஞானமாக நம்மை இயக்கத் தொடங்கும்.
2.அது தான் ஞான சக்தி… ஆகவே தீமை புகாது தடுத்துக் கொள்கிறோம்.

ஒரு பழக்கத்திற்கு வந்து விட்டால் சர்வ சாதாரணமாகச் செயல்படுத்தலாம்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை நம் இரத்தத்தில் வலுவாக்க வேண்டும்

துருவ நட்சத்திரத்தின் சக்தியை நம் இரத்தத்தில் வலுவாக்க வேண்டும்

 

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியிலும் தியானம் என்பது பிறருடைய கஷ்டங்களைப் பார்த்தால் “அதை நாம் திரும்ப எண்ணுவது தியானம் தான்…”

ஆனால் அதே சமயத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புக்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று அதை ஏங்கித் திரும்பத் திரும்ப எண்ணினால் இதுவும் தியானம் தான்.

பிறர் கஷ்டப்படும் உணர்வை நமக்குள் வராமல் தடுக்கலாம்.

வேதனைப்படுவோரைக் கேட்டு உணர்ந்தபின் நமக்குள் வராது தடுக்க வேண்டுமென்றால் இதே துருவ நட்சத்திரத்தின் பேரருளை இதே போல முறைப்படுத்தி நம் உடலில் உள்ள ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று செலுத்தி விட்டால் “உண்மையான தியானம் இது தான்…”
1.வாழ்க்கையையே தியானமாக்குதல் வேண்டும்
2.தீமையைப் புகாது தடுத்தல் வேண்டும்
3.தீமையை நீக்கிய அருள் ஞானியின் உணர்வுகளை நமக்குள் செலுத்திப் பழகுதல் வேண்டும்
4.நமது உடலில் உள்ள ஒவ்வொரு அணுவும் அதைப் பெறும்படி நாம் செய்ய முடியும்.

காரணம் ஒருவர் கோபப்படுகிறார் என்ற உணர்வை நாம் அடிக்கடி நுகர்ந்தால் நமது உடலிலே இரத்தக் கொதிப்பாகி விடுகின்றது.

இரத்தக் கொதிப்பு ஆவதற்குக் காரணமே சந்தர்ப்பத்திலே நாம் நுகர்ந்த உணர்வுகள்… அந்தக் காரமான உணர்வுகளை உணவாக உட்கொள்ளும் அணுவாக உருவாகி விடுகின்றது.

ஒரு அணு உருவாகி விட்டால் அது மீண்டும் தன் உடலிலே பல அணுக்களை உருவாக்கி நமக்குள் இரத்தக் கொதிப்பின் தன்மையைக் கொண்டு வந்து விடுகின்றது.

இப்படி ஆகாதபடி ஒருவர் கோபப்பட்ட உணர்வை நாம் நுகர்ந்தாலும் அடுத்த நிமிடம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பெரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்றும் எங்கள் இரத்த நாளங்களிலே கலக்க வேண்டும் எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பெரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்ற நினைவினை உடலுக்குள் செலுத்த வேண்டும்.

நாம் நுகர்ந்த உணர்வுகள் உமிழ் நீராக மாறி நம் ஆகாரத்துடன் கலந்து இரத்தமாக மாறி அந்த இரத்தத்திற்குள் காரமான உணர்ச்சியை இயக்கும் அணுவாக உருவாவதற்கு முன்
1.நாம் துருவ நட்சத்திரத்தின் சக்தியை முந்திச் செலுத்தி விட்டால்
2.நம் இரத்தத்தில் உள்ள அணுக்கள் அனைத்திலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர்கிறது
3.அந்தக் காரமான உணர்வுகள் வந்தாலும் அதைத் தணித்து விடுகின்றது.

உதாரணமாக மிளகாய் காரமாக இருக்கின்றது. அதை நாம் குழம்பிலே கலக்கப்படும் பொழுது அது எல்லாவற்றுடன் கலந்து சுவையாக மாற்றுகின்றது.

இதைப் போல நமது வாழ்க்கையில் வெறுப்போ வேதனையோ கோபமோ குரோதமோ போன்ற உணர்வுகளை நாம் நுகர்ந்து அறிந்து கொண்டாலும் அந்த உணர்வுகள் நமக்குள் வளர்ந்திடாது தடுத்துப் பழகுதல் வேண்டும்.

அகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரமாகி இத்தனையும் விஷத்தை நீக்கி உணர்வை ஒளியாக மாற்றிய அதனின்று வரும் உணர்வுகளை நாம் நுகர்ந்து நமது இரத்தங்களில் கலக்கச் செய்யும் பொழுது அது வீரியமடைகின்றது… தீமைகள் வராது தடுக்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை இந்தத் தியானத்தின் அருளை நீங்கள் ஒவ்வொரு நொடியிலும் பெற முடியும். உங்கள் வாழ்க்கையில் இதையே தியானமாக்கிக் கொள்ளுங்கள்.

1.உங்கள் வாழ்க்கையில் எத்தகைய கொடிய நிலைகளை நுகர்ந்து அறிய நேர்ந்தாலும்
2.அந்தக் கொடிய உணர்வுகள் உங்களிலே வளராது தடுக்க அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற்று
3.உங்கள் உடலில் உள்ள அணுக்களை அந்த வலுவான அணுக்களாக மாற்றி அமைக்க முடியும்.

மனிதன் ஒருவனால்தான் இதைச் செய்ய முடியும்…!

நாம் கட்டாயப்படுத்திப் பெற வேண்டிய சக்தி

நாம் கட்டாயப்படுத்திப் பெற வேண்டிய சக்தி

நமது சகஜ வாழ்க்கையில் ஒருவன் தீய செயலைச் செய்கின்றதைப் பார்க்கும் பொழுது அதனின் உணர்வுகளை நுகர்ந்து நமக்குள் பதிவாக்கி விட்டால் பின் “அவன் தீய செயல்களைச் செய்கின்றான் செய்கின்றான்…” என்று அடிக்கடி எண்ணும்போது அதனின் உணர்வுகள் நமக்குள் வளர்ந்து அவன் எந்தத் தீய செயலைச் செய்தானோ அதையே நாமும் செய்யக் கூடிய தன்மை வந்து விடுகின்றது.

அப்போது தியானத்தில் உட்கார்ந்தால்
1.இது முடியலே… அது முடியலே… உட்கார முடியலே…! என்று எண்ணிக் கொண்டே இருந்தால் அதுதான் வளரும்.
2.எப்படியும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெற வேண்டும் என்று கட்டாயப்படுத்தி உட்கார்ந்து பாருங்கள்.
3.இந்த உணர்வுகள் உங்களுக்குள் வலுப் பெறும் பொழுது உங்களைச் சும்மா இருக்க விடாது.
4.அந்த நேரத்தில் இதனின் உணர்வை எடுக்கச் சொல்லும்.
5.இந்த உணர்வு வரும்போது பிறர் தீமைகளை அகற்றும் வலிமை பெறுகின்றோம்… தீமைகள் வராதபடி தடுக்கவும் முடியும்.

மனிதர்களான நாம் இந்தச் சரீரத்திற்குப்பின் இனி ஒரு பிறவி இல்லை என்ற நிலையில் முழுமை பெற வேண்டும்.

நமது குருநாதர் காண்பித்த அருள் வழியில் “துருவ நட்சத்திரத்தின் பெரருளும் பேரொளியும் பெற வேண்டும்” என்ற உணர்வை மட்டும் நீங்கள் கூட்டி வளர்த்துக் கொண்டால் போதும்,
1.அகண்ட அண்டத்தையும் இந்தப் பிண்டத்தையும் இவைகளின் இயக்கத்தின் உண்மைகளையும் அறியும் தன்மை வரும்.
2.தீமைகளை அகற்றும் சக்தியும் வரும்.

நமது உயிர் நாம் எதை நுகர்கின்றோமோ அதன் உணர்வை வளர்த்து அதன் உணர்ச்சியின் தன்மை கொண்டுதான் இந்த உடலை இயக்குகின்றது.

சந்தர்ப்பத்தால் தீமையின் உணர்வுகளை நாம் நுகரப்படும்போது தீமையான அணுக்கள் நமது உடலில் வளர்ந்து விட்டால் அதனின் உணர்ச்சிகளைத் தூண்டி அது தன் இனத்தைப் பெருக்குகின்றது.

ஆனால் தீமைகளை வென்ற அருள் உணர்வின் தன்மையை நமக்குள் உருவாக்கி விட்டால் அதன் தன்மை கொண்டு தீமைகள் வராது காக்கும் நிலையினை நம்முள் உருவாக்குகின்றது.

இன்று ஒரு விஞ்ஞானி ஒரு உயிரினத்தின் செல்களை எடுத்து மற்றவைகளுடன் இணைக்கும் நிலையாகக் கட்டாயப்படுத்தித்தான் திணிக்கின்றான்.

1.இதன்படி இந்த உயிருடன் இணைத்துக் கொண்டபின் இதனின் ரூபமே மாறுகின்றது.
2.இப்படி ஆட்டை மாடாக்குகின்றான்… மாட்டை ஆடாக்குகின்றான்… எத்தனையோ வகைகளில் செயல்படுத்துகிறான்.
3.இப்படி ஒவ்வொன்றிலும் “கட்டாயப்படுத்தியே திணிக்கின்றான்…”

நாம் பள்ளிக்குச் செல்கின்றோம்… டாக்டருக்குப் படிக்கின்றோம். அங்கே எத்தனையோ நிலைகளைச் செயல்படுத்திக் காண்பிக்கின்றனர்.

ஆனால்… தானே கட்டாயப்படுத்திப் படிக்க வேண்டும்… பார்க்க வேண்டும் என்ற உந்துதல் கொண்டு எவர் செயல்படுகின்றனரோ அவரே உயர்ந்த டாக்டர்களாக ஆகின்றார்கள்.

ஆனால் படிக்கும் பொழுது “இது என்னடா… சங்கடமாக இருக்கிறது…?” என்ற உணர்வை எடுத்துக் கொண்டவர்கள் நிச்சயம் சங்கட டாக்டராகத் தான் வருவார்.

டாக்டரான பின் முதல் இரண்டு நோயாளிகளுக்கு வைத்தியம் பார்த்தபின் மூன்றாவது நோயாளியைப் பார்க்கும் பொழுது இவரை அறியாமலேயே சலிப்பு வந்துவிடும். இந்த உணர்வு கலந்தபின இவர் பார்க்கும் வைத்தியமெல்லாம் சீராக இருக்காது.
1.எனவே நாம் கட்டாயப்படுத்தித்தான்
2.அருள் ஒளியின் உணர்வுகளை நமக்குள் தியானித்தல் வேண்டும்.

ஒரு விஞ்ஞானியோ இன்ஜினியரோ ஆராய்ச்சி என்ற தத்துவத்தில் வரப்படும்போது “இதைப் பெற வேண்டும்” என்று கட்டாயப்படுத்தி ஆராய்ச்சி செய்து உயர்ந்த நிலைகளுக்குக் கொண்டு வருகின்றனர்.

இப்படி வலுகொண்ட உணர்வு கொண்டு ஆராய்ச்சிகளைச் செய்யும் பொழுது தான் விஞ்ஞான அறிவு வளர்ச்சி பெறுகின்றது. இதன் வழி கொண்டு அகண்ட அண்டத்தையும் ஆய்ந்தறியும் நிலைகள் வருகின்றது.

ஒரு விஞ்ஞானி ஒன்றைக் கண்டுபிடிக்கின்றான் என்றால் அவருடைய மாணவன் அதைவிட ஒன்றைப் பெற வேண்டும் என்று தன் உணர்வை வலுபெறச் செய்யும் பொழுது அவன் குரு கண்டறிந்ததை விட அதிகமான ஒன்றைக் கண்டறியும் நிலை வருகின்றது.

இப்படி வளர்ந்ததுதான் விஞ்ஞானம்.

இதைப் போன்று நமது குரு காண்பித்த அருள் வழியில்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளை நாம் நமக்குள் பெறும் பொழுது
2.அகண்ட அண்டத்தின் பேருண்மையின் தன்மைகளை அறியும் ஆற்றல் பெறுகின்றோம்.

நமது உணர்வின் தன்மையே நமக்குள் ஒளியாக மாற்றும் பொழுது மிகவும் உயர்ந்த நிலைகளை நாம் பெறுகின்றோம்.

நமது உயிருக்கு என்றும் அழிவில்லை. உணர்வுகள் மட்டுமே மாறிக் கொண்டே உள்ளது. ஆகவே நாம் இன்று மனிதனாக இருக்கிறோம். இந்த மனித உடலில் விஷமான உணர்வுகளை நமக்குள் சேர்த்துக் கொண்டால் உயிர் அடுத்த சரீரத்தை விஷப் பாம்பாக மாற்றிவிடுகின்றது.

அருள் ஒளி என்ற உணர்வினை நம் இந்திரலோகத்திற்குள் உருவாக்கி நம்முள் ஏகாந்த நிலை கொண்டு சொர்க்கலோகத்தை உருவாக்கலாம்.

இதை நாம் நம்முள் கட்டாயப்படுத்திச் செயலாக்க முடியும். மனிதரால் இது சாத்தியமாகக் கூடியதே…!
1.சிறிது காலம் இந்த உணர்வின் தன்மையை நம்முள் வளர்த்தால் இந்த உணர்வுகள் நமக்குள் சொர்க்கபூமியாக மாற்றும்.
2.நம் உயிரைச் சொர்க்க வாசலாக அமைக்கலாம்.
3.உயிருடன் ஒன்றி உயிரின் வழி கொண்டு நமக்குள் சொர்க்கலோகம் என்ற நிலையை உருவாக்கி
4.என்றும் ஏகாந்த நிலை என்ற நிலையை அடையலாம்.

தான் பெற்ற சக்தி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று “அவ்வப்போது எண்ண வேண்டியது மிக மிக அவசியம்…”

தான் பெற்ற சக்தி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று “அவ்வப்போது எண்ண வேண்டியது மிக மிக அவசியம்…”

 

சிவ சக்தியாகக் கணவன் மனைவியாக எம்மைச் (ஞானகுரு) சந்திக்க வருகின்றீர்கள்… உபதேசத்தையும் கேட்கின்றீர்கள்… தியானமும் இருக்கின்றீர்கள்.

இருந்தாலும் சந்தர்ப்பத்தால்… தனித்த நிலைகள் வருவோர் சிலர் எம்முடைய நுண்ணிய உபதேசங்களைக் கேட்கப்படும் பொழுது
1.மனைவி தன் அருகில் இல்லை என்றாலும்
2.இந்த உபதேசக் கருத்துக்கள் மனைவிக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ணினீர்களா…? சொல்லுங்கள் பார்க்கலாம்…!

ஆனால் யாம் உங்களிடம் இதை முதலில் சொல்லாமல் விட்டதன் நோக்கம் என்ன…?

மெய் ஞானிகளைப் பற்றிய உணர்வை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம். இந்தச் சக்தி என் மனைவிக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும். திருமணம் ஆகாதவர்கள் தன் தாய் தந்தையருக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

தன் மனைவி பெற வேண்டும்… தன் தாய் தந்தையர் அது பெற வேண்டும்… அவர்கள் அருள் எனக்குக் கிடைக்க வேண்டும் என்று யாராவது இப்படி நினைக்கின்றீர்களா…? யாரும் நினைத்திருக்க மாட்டீர்கள்…!

மற்ற நேரங்களில் எல்லாம் எண்ணுகின்றோம். இருந்தாலும் சாமி இங்கே வந்திருக்கின்றார் அவருடைய உபதேசத்தை கேட்க வேண்டும் என்ற ஆர்வத்திலே சாமியை எண்ணும் பொழுது அதை மறந்து விடுகின்றீர்கள்.
1.சாமி மேலே ஞாபகம் இருக்கின்றது.
2.ஆனால் தன் மனைவி தாய் தந்தையர் பற்றி எண்ணம் இல்லாது போய் விடுகின்றது.

சாதாரணமாகத் தியானிக்கும் போது எல்லோரையும் எண்ணுவீர்கள். ஆனால் “சாமி இங்கே உபதேசிக்கின்றார்…” என்று அதை மட்டும் தான் எண்ணுகின்றீர்கள்.
1.ஆனால் இந்த மாதிரி நேரங்களில் இதை மாற்றிப் பழக வேண்டும்.
2.நீங்கள் தனியாகக் கேட்டாலும் உபதேசத்தைக் கேட்டுத் தியானிக்கும் பொழுது
3.தன் மனைவிக்கும் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று அவசியம் என்ன வேண்டும்.
4.அந்த அருள் ஒளி அவர்களுக்குக் கிடைக்க வேண்டும்…
5.அந்த அருள் ஞானத்தை எனக்குத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்று கண்டிப்பாக எண்ண வேண்டும்.

இதே போல மனைவி மட்டும் எமது உபதேசத்தைக் கேட்டுத் தியானித்தால் அவர்களும் இதே போன்று கணவனுக்கு எண்ண வேண்டும். அவர்களும் இதைப் போன்ற பழக்கத்திற்கு வந்தால் “எங்கிருந்தாலும் இந்த சக்தி உங்களுக்கு உறுதுணையாக அமையும்…”

சாமி என்ற நிலை வரும் போது சாமியை மட்டும் தானே நினைவு கொண்டு எண்ணுகின்றீர்கள்… அதை உங்களுக்குள் பதிவு செய்கிறீர்கள்.

இப்பொழுது சொல்லி உங்கள் நினைவாற்றலைத் தூண்டி அதைப் பதிவு செய்கின்றோம்.
1.ஆகவே எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று இச்சைப்பட்டு அவசியம் அதை இணைத்துப் பழக வேண்டும்.
2.இச்சா சக்தி கிரியா சக்தி என்ற நிலைகளுக்கு வளர்ச்சிக்குக் கொண்டு வர வேண்டும்.

மனைவி பெற வேண்டும் என்றும் கணவன் பெற வேண்டும் என்றும் இப்படி ஒருவருக்கொருவர் “உயர்ந்த உணர்வுகள் கிடைக்கும் போதெல்லாம் இச்சைப்பட்டு வர வேண்டும்…”

ஆக இணைந்த நிலைகளிலேயே கிரியை ஆக்கிச் செயல்பட்டு கொண்டு வர வேண்டும். இந்தப் பழக்கத்திற்கு வர வேண்டும் என்பதற்குத் தான் இதை இப்பொழுது ஞாபகப்படுத்தி உங்களுக்கு உணர்த்துகின்றோம்.

“புலனறிவால்…” மெய்ப் பொருள் காணும் திறனை வளர்த்துக் கொள்ளும் பயிற்சி

“புலனறிவால்…” மெய்ப் பொருள் காணும் திறனை வளர்த்துக் கொள்ளும் பயிற்சி

 

ஒரு பயிற்சி:-
ஆறாவது அறிவின் உணர்வு கொண்டு வளர்த்துக் கொண்ட “முருகனின் காட்சியைக் காண வேண்டும்…” என்று வானை நோக்கி உற்றுப் பார்த்து உங்கள் நினைவினைச் செலுத்துங்கள். சிறிது நேரம் மேல் நோக்கிப் பாருங்கள்

அந்த அலைகள் குவிந்து உங்களுக்கு முருகனாகக் காட்சி தெரியும்..

பூமியில் வாழ்ந்த மனிதர்களுக்குள்
1.எந்தெந்த முருகன் உணர்வுகளைக் கவர்ந்து அலைகளாகப் பரவப்பட்டதோ
2.அதை மீண்டும் நாம் குவிக்கப்படும் பொழுது இந்த உருவத்தை நாம் காண முடியும்.

அதாவது… டிவிக்களில் எப்படிப் படக்காட்சிகளைக் காணுகின்றோமோ… அதே போல்… மன வலிமை கொண்டு எண்ணும் பொழுது அலைகள் குவிந்து முருகனாகக் காட்டும்.

எதற்காக இதைச் சொல்கிறோம்…?

அன்று வாழ்ந்த அகஸ்தியரும் வியாசகரும் வானுலக ஆற்றலைத் தங்களுக்குள் வளர்த்து உடலில் அதைப் பெருக்கப்பட்டு அந்த உண்மையின் உணர்வுகள் அருள் ஞான ஒளியாகப் படர்ந்திருப்பதை
1அதை எண்ணி நுகரப்படும் பொழுது வியாசகர் கண்டதை நாம் காண முடியும்.
2.விஷத் தன்மையால் நம் பூமி சுழல்வதும்
3.துருவப் பகுதி வழி விண்ணுலக ஆற்றலைக் கவர்வதும் அதனால் தனக்குள் மாற்றம் அடைவதையும்
4.தாவர இனங்களாக உருப்பெற்றதையும் அதை எடுத்து உயிரினங்கள் எப்படி உருப்பெறுகிறது…? என்பதையும் நீங்கள் காண முடியும்.
5.மேரு என்ற மலையை மத்தாக வைக்கப்பட்டு என்று சொல்லும் பொழுது
6.மேலே சொன்ன பூமியின் இயக்கத்தைக் காட்சியாகத் தியானம் செய்யும் பொழுது பார்த்திருக்கலாம்.

இவையெல்லாம் அன்று வியாசகரால் கண்டுணரப்பட்ட உணர்வுகள்.

காரணம்… அகஸ்தியன் கண்டறிந்த உணர்வுகளை வியாசகர் கவர்ந்து பூமியின் செயலாக்கங்களை உணர்ந்ததை
1.அக்கால மொழி கொண்டு அதனை வெளிப்படுத்திய உணர்வுகள்
2.அவனில் விளைந்த உணர்வுகள் இங்கே பரவி உள்ளது.

ஆகவே நாம் காண வேண்டியது எது…?

அகஸ்தியன் துருவ மகரிஷியாகி உணர்வினை ஒளிச் சரீரமாக மாற்றி வாழ்ந்து கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து ஒளி அலைகளாகப் பரவிக் கொண்டிருப்பதைப் பெற வேண்டும் என்று எண்ணி ஏங்குவோம்.

துருவ மகரிஷியாகும் பொழுது அகஸ்தியனும் அவன் மனைவியும் ஒருவருக்கொருவர் உணர்வுகளைப் பாய்ச்சி இருவரும் அதைப் பரிமாறிக் கொண்ட நிலையை அவர்கள் உடலில் விளைந்த அலைகள் இங்கே பாய்ந்து கொண்டிருப்பதை நாம் காண்போம்.

மீண்டும் வானை நோக்கி உற்றுப் பாருங்கள்..!

அகஸ்தியன் துருவ மகரிஷியாக உருப்பெறும் காலத்தில்
1.கணவனும் மனைவியும் துருவத்தின் ஆற்றலைப் பெற வேண்டும் என்று
2.ஒருவருக்கொருவர் என்று ஏங்கிய உணர்வுகள் அது பரவி வரும் பொழுது
3.அந்தக் காலத்தில் வாழ்ந்த “அவர்கள் இருவரின் உடல் அமைப்பு…” அலைகளாகப் படர்ந்திருப்பதை நீங்கள் காணலாம்.

துருவப் பகுதி வழியாகக் கவர்ந்த உணர்வுகள் ஒன்றாக இருவருக்குள்ளும் இணைந்து இந்த உணர்வின் தன்மை ஒளிச் சரீரமாகி எந்த எல்லையில் நிலை கொண்டார்களோ
1.அங்கே சென்று துருவ நட்சத்திரமாக உருப்பெற்ற உணர்வை நீங்கள் காணலாம்.
2.அகஸ்தியனும் அவர் மனைவியும் இரு உணர்வும் ஒன்றாகி ஒளி சரீரமாக இணைந்து துருவப் பகுதிக்குச் சென்றதை நீங்கள் காணலாம்
3.துருவ நட்சத்திரமாக ஒளியாக இருப்பதையும் காணலாம்.

இப்பொழுது இதைக் கண்டவர்களும் சரி… மற்றவர்களுக்குள் பதிவானதும் சரி… அந்தத் துருவ மகரிஷியின் ஆற்றல் பெற வேண்டும் என்ற நினைவுடன் இரவிலே நீங்கள் படுத்து உறங்கினால்
1.அந்த உணர்வுகள் கிளர்ந்து உயிருடன் ஒன்றி உங்களுக்குள் பெருகி
2.அதனின் ஆற்றலை உங்கள் புலனறிவிலே காண முடியும்.

ரேடியோ டிவிக்களில் எப்படி ஒளி ஒலி என்ற நிலையில் அலைகளாக அனுப்பப்படும் பொழுது விஞ்ஞான அறிவு கொண்டு அதைக் கவர்ந்து வீட்டிலேயே அதைக் காணும்படிச் செய்கின்றார்கள்.

அதைப் போலத் தான் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அந்த உடலிலிருந்து வெளி வந்த உணர்வலைகளைச் சூரியனின் காந்த சக்தி கலந்து அலைகளாக மாற்றி வைத்துள்ளது.
1.நமது குருநாதர் இந்த உண்மையின் உணர்வினை எமக்குள் பதிவாக்கி அந்த நினைவினை எடுக்கும்படிச் சொல்லி
2.அதனின் அருள் ஞான வித்தாக இதைக் கேட்போர் உணர்வுகளில் ஊழ் வினையாகப் பதிவு செய்து
3.வினைக்கு நாயகனாக வளர்ந்ததை மீண்டும் நினைவு கொள்ளும் பொழுது
4.காற்றில் படர்ந்திருப்பதை அதன் வளர்ச்சியாகக் கவர்ந்து அந்த உணர்வினை கண் புலனறிவிலே காண முடியும்.

இருந்தாலும்… சில உண்மைகள் படக்காட்சிகளாக உங்களுக்குத் தெரிய ஆரம்பித்தால்
1.திடீரென்று இந்த உணர்வின் வேகம் கூட்டப்படும் பொழுது
2.அந்த உருவங்கள் தெரிந்தால் அதைக் கண்டு அஞ்சி ஓடுபவர்களும் பலர் உண்டு… பயந்து விடுவார்கள்.

ஆகையினால்… அந்த உணர்வின் தன்மை “அப்படிக் காட்சியாகக் கிடைக்கக் கூடாது…” என்பதற்கும் ஒளியின் சிகரமாக விண்ணிலே சென்று அருள் ஞானத்தின் உணர்வை “ஒளியின் உணர்வாக…” உங்களுக்குள் வளர்ப்பதற்குத் தான் இதைச் செயல்படுத்துவது.

சாமி நமக்கு ஒன்றும் காட்சியாகக் கொடுக்கவில்லையே என்று நீங்கள் எண்ணவே வேண்டியதில்லை. “நாம் காண வேண்டியது அந்த ஒளியான உணர்வுகள் தான்…”

அந்த உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றி ஒளியாக மாற்றும் திறன் பெறுவது தான் நம்முடைய கடைசிக் கடமை. இதை எல்லாம் நீங்கள் அனைவரும் பெறுவதற்குத் தான் பயிற்சியாகக் கொடுக்கின்றோம். நிச்சயம் நீங்கள் பெறுவீர்கள்.

முந்தி எல்லோருக்கும் காட்சிகளைக் கொடுத்துக் கொண்டு வந்தேன் சில உண்மைகளை அறியும்படியும் செய்தேன் புவியின் ஈர்ப்புக்குள்.
1.ஆனால் அதனுடைய பலன் மனிதனின் இச்சைகள் வளர்க்கப்பட்டது.
2.விண் செல்ல அந்த உணர்வுகள் விடவில்லை.

அவ்வாறு ஆகாதபடி உங்களுக்குள் மெய் ஒளியைப் பெறும் ஆற்றலாகத் தான் அதை இப்பொழுது ஏற்படுத்துகின்றோம்.

விஞ்ஞான அறிவால் இந்தக் காற்று மண்டலம் கடும் விஷத்தன்மை கொண்டதாக வளரப்படும்போது… அதை மனிதன் நுகர்ந்து சிந்தனையற்றவனாக ஆக்கும் நிலைகள் வந்து கொண்டிருக்கும் நிலையில்… அதிலிருந்து நம்மை மீட்டி நம் சிந்தனையை விண்ணிலே செலுத்த வேண்டும்.

அப்போது நம் அருகிலே அந்த மகரிஷிகள் உணர்வுகள் வரும் போது மனிதன் தீமைகளிலிருந்து விடுபட
1.நாம் நுகர்ந்த உணர்வுகள் தன்னைக் காக்கவும் மற்றவரைக் காக்கவும் விண்ணின் ஆற்றலைப் பெருக்கவும்
2.இந்த உடலை விட்டு அகன்ற பின் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய இது உதவும்.

அதற்குத்தான் இந்தப் பயிற்சியைக் கொடுத்தது.