தியானம் செய்வது என்பது சொத்துக்கும் சுகத்திற்கும் அல்ல…!

தியானம் செய்வது என்பது சொத்துக்கும் சுகத்திற்கும் அல்ல…!

 

உயிருடன் ஒன்றிடும் உணர்வுகளை ஒளியாக மாற்றிப் பிறவி இல்லா நிலை அடையும் பருவம் பெற்றவர்கள் தான் நாம்… இதே உயிர் தான்…!
1.அந்த உயிருடன் ஒட்டி ஆறாவது அறிவை நாம் சீராகப் பயன்படுத்தினால்
2.இந்த வாழ்க்கையில் கண்டறிந்த தீமையான உணர்வுகளை அவ்வப்பொழுது தூய்மைப்படுத்த முடியும்.

ஆனால் தூய்மைப்படுத்தத் தவறினால் ஒவ்வொரு குணத்திலும் அழுக்குகள் சேர்ந்து… பூரண நிலா அது பௌர்ணமிக்கு பின் எப்படிச் சிறுகச் சிறுகக் குறைந்து… கடைசியில் முழுமையாக இருட்டாவது போன்று நம் உடலில் அனைத்து உணர்வுகளும் சிறுகச் சிறுக இருள் அடைந்து விடுகின்றது.

இருளடைந்து விட்டால் அதை இயக்க முடியாத நிலைகள் கொண்டு இந்த உயிர் வெளியே சென்று விடுகின்றது. அந்த அடிப்படையில் உயிர் வெளியே சென்றால் சிந்திக்கும் தன்மை இழக்கப்பட்டு… அதற்குத் தகுந்த உடலாக… “மனிதனல்லாத உடலை” இந்த உயிர் உருவாக்கி விடும்.

மனிதனல்லாத உடலை உருவாக்கி விட்டால் மீண்டும் அந்த உடலைக் காக்கும் உணர்வுகள் பெற்றுத் தன்னைக் காட்டிலும் வலுக் கொண்ட உடலிந் உணர்வுக்கே செல்லும். ஆனால் மனிதனாக வர முடியாது.

நம் பையனை (குழந்தைகளை) நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்று நாம் எண்ணுகிறோம். ஆனால் நாம் எண்ணியபடி குழந்தைகள் சரியாக வரவில்லை என்றால்
1.தவறு செய்கின்றான் என்று ஆவேசமான உணர்ச்சிகள் நமக்குள் தூண்டப்படுகின்றது.
2.அப்பொழுது பேய் மனமாக மாறுகின்றது.

முதலில் நல்ல முறையில் வளர்க்கத் துடித்தோம். ஆனால் தவறு செய்கிறான் என்று தெரிந்த பின் பேயைப் போல அவனைத் தாக்கவும்… அறிவை இழக்கச் செய்வதும்… இதைப் போன்ற நிலைகள் வந்து விடுகின்றது.

நமக்குள் வளர்ந்த அறிவினை… “நாமும் நல்ல முறையில் வளர்க்க முடியாது” தடைப்படுத்தும் நிலையாக ஆகிவிடுகின்றது.

பூரண நிலா சிறுகச் சிறுக எப்படி மறைகின்றதோ… அதைப் போல் நமது வாழ்க்கையில் ஒவ்வொரு குணங்களையும் செயலற்றதாகவே மாற்றி வரக்கூடிய நிலையாகி விடுகின்றது அப்படிச் செயலற்றதாக ஆகிவிட்டால் மீண்டும் பிறவிக்குத் தான் வர வேண்டி இருக்கும்.

ஆகவே… இந்த உடலில் முழுமையான ஒளியாக மாற்றும் நம்முடைய ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்துவதற்குத் தான் உபதேச வாயிலாக உங்களுக்குப் பயிற்சி கொடுத்து… மகரிஷிகள் ஆற்றலை அருள் வாக்குகளாகக் கொடுக்கின்றோம்

பூரண நிலா போன்று நமது உயிர் என்றும் பரிபூரண நிலையை அடைவதே மனிதனின் முதிர்வு நிலை.
1.இந்தச் சந்தர்ப்பதை இழந்தால்
2.இந்த உடலில் படும் துன்பத்தைக் காட்டிலும் எத்தனையோ கோடித் துன்பங்களை அனுபவிக்க வேண்டி வந்துவிடும்.

ஆகவே நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் ஆழமாகப் பதிவாகி… நல் உணர்வுகளை உயர்வாக்கி… இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லா நிலை அடைதல் வேண்டும்
1.அதற்குத்தான் நமது தியானமே தவிர
2.சொத்து வேண்டும் சுகம் வேண்டும் என்பதற்காக அல்ல.
3.அருள் ஞான சொத்தை அந்தப் பேரின்பச் சொத்தைத் தான் நாம் தேட வேண்டும்.

இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்

தியானம் மாத்திரம் நல்ல நிலை அளித்திடாது… அதைப் பயன்படுத்தும் முறை முக்கியமானது

தியானம் மாத்திரம் நல்ல நிலை அளித்திடாது… அதைப் பயன்படுத்தும் முறை முக்கியமானது

 

மனித எண்ணத்தின் ஆற்றல் தியானத்தின் வழியாக எண்ணுகின்ற எண்ணமே ஒன்றை எண்ணிப் பெற்றிட வேண்டும் என்ற தீவிர வைராக்கிய சிந்தனைகே முதலிடம் தந்து ஈர்த்திடும் பக்குவத்தில் செயல்படுகிறது.

சரீரத்தில் மறைந்து கிடக்கும் சக்திகளை ஒழுங்குபடுத்திட யாம் கூறிடும் உணர்வுடன் கூடிய எண்ணத்தால் எண்ணி எடுக்கும் தியானத்தைப் பயிற்சியாகக் கொண்டிட்டால்
1.ஒருமுகப்படுத்தப்படும் சக்தியின் குவிப்பால்
2.விண்ணிலிருந்து வரும் ஒளி காந்த நுண் அணுக்களின் ஒளி அமில சக்திகளை ஈர்த்து
3.வளர்ப்பின் வளர்ப்பாக வளர்ப்பவனின் செயலில் நாம் பேரருளை வளர்க்க முடியும்.

இன்று உடல் பயிற்சி முறைகளுக்கும் தற்காப்புக் கலைகளுக்கும் இதே போல் பல தொடர்களுக்கும் தியானம் (YOGA, KUNDALINI) கற்பிப்பதாகக் கூறுகின்றார்கள்.

அப்படிக் கற்பித்தாலும் அவர்கள் தங்கள் எண்ணத்தில் திணித்துக் கொண்டிட்ட மாற்று எண்ணச் செயல்கள் (கோபம் சலிப்பு சங்கடம் வேதனை) வீரியமாக இருந்திட்டால் தியானத்தில் பெறும் சக்திகள் அனைத்தும் அவ்வெண்ண வலுவிற்கே செயல்படுமப்பா…!

வெறும் தியானம் மாத்திரம் நல்ல நிலை அளித்திடாது…! (இது மிகவும் முக்கியமானது)

சந்தர்ப்பத்தால் தனக்குள் ஊட்டப்பட்ட சங்கட வித்துக்களின் காந்த ஈர்ப்பின் செயல் தொடர்பால்
1.எந்தக் காழ்ப்பு உணர்வு கொண்டு ஊட்டப்பட்டதோ
2.அதைச் செவிமடுப்போர் கொண்டிடும் எண்ணம் அனுதாப நீர் (உமிழ் நீர்) பாய்ச்சி
3.விஷ விருட்சமாகச் செயல் கொண்டால் அதை உடலிலிருந்து களைந்திடும் செயல் மிகவும் கடினமப்பா…!

“இராமபாணம்…” உரமேறிய ஆச்சா மரங்களைத் துளைத்தது என்ற தத்துவ உண்மை உண்டு…!

அதைப் போல் சமமான உணர்வாக… நல்லெண்ணச் சுவாசமாக… உயிரான ஈசனுடன் ஒன்றி… ஞானிகள் காட்டிய நல் நெறியைச் சீராகக் கடைப்பிடித்து மகிழ்ந்து வாழும் சக்தி பெற்று பிறவாமை என்ற நிலை பெற வேண்டும்.
1.இந்த எண்ண உறுதியே…
2.சங்கட அலைகளைத் தகர்த்திடும் “அருமருந்து….”

(ஏனென்றால் நடக்காத… முடியாத… நடைபெறாத ஆசைகளை… முன்னாடி வைத்துக் கொண்டு “அதை எப்படியும் அடைந்தே தீர வேண்டும்…!” என்று முயற்சி செய்து முயற்சி செய்து அதனால் தோல்வியாகும் பொழுது சங்கடமும் சலிப்பும் ஏற்படுகிறது. அதனால் எந்த நன்மையையும் நாம் அடைய முடியாது. நடக்காததை மறந்து விட்டு நடக்கக்கூடியதை… நடக்க வேண்டியதை… எண்ணிச் சீர்படுத்திக் கொள்வதே தியானத்தைப் பயன்படுத்தும் முறையாகும்)

நல்லெண்ணம் கொண்டு பெற்றிடும் உண்மை ஞான வளர்ப்பால் நல்லாக்கம் பெற்றிடுவோம் என்ற எண்ணத்தின் உத்வேகச் செயலுக்கு “விவேகம் தான் தேவை…!”
1.வேகமும் வலிமையும் மட்டும் இருந்தால் இலக்கை அடைய முடியாது…
2.விவேகமும் ஞானமும் சாந்தமும் அவசியம் தேவை.

பௌர்ணமி தியானத்தின் முக்கியத்துவம்

பௌர்ணமி தியானத்தின் முக்கியத்துவம்

 

உடலை விட்டுப் பிரிந்து சென்ற மூதாதையர்களின் ஆன்மாக்களையும் நண்பர்கள் உறவினர்கள் ஆன்மாக்களையும் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை நமக்குள் கவர்ந்து அதன் ஈர்ப்பு வட்டத்தில் உள்ள சப்தரிஷி மண்டலத்துடன் எளிதில் இணையச் செய்ய முடியும்.
1.காரணம் அவருடைய உணர்வுகள் நமக்குள் இருப்பதால்
2.அதன் துணை கொண்டு அந்த ஆன்மாக்களை விண்ணுக்கு உந்தித் தள்ள முடியும்.

சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்தால் அவர்கள் வாழ்ந்த காலத்தில் உடலில் பெற்ற நஞ்சுகள் அனைத்தும் கரைந்து உயிருடன் ஒன்றிய உணர்வின் ஒளி அலைகள் நிலைத்திருக்கும்.

நமது ஆறாவது அறிவு கார்த்திகேயா. கார்த்திகேயா என்றாலே ஒளி… அனைத்தையும் அறிந்து கொண்ட நிலை. பல கோடிச்ச் சரீரங்களில் வந்த தீமைகளை நீக்கி மனித உடல் பெற்றது.

அத்தகைய ஆறாவது அறிவின் துணை கொண்டு இந்த வாழ்க்கையில் வரும் இருளினை மாற்றி உணர்வினை ஒளியாகப் பெறச் செய்யும் முறைதான் இப்பொழுது துருவ தியானத்தில் எடுக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி.

மூதாதையர்கள் உயிரான்மாக்களை சப்தரிஷி மண்டலங்களுடன் இணையச் செய்தால் அவருடைய உயிர் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நிலையாக நிற்கும்.

அவர்கள் சப்தரிஷி மண்டலம் அடைந்து விட்டால்
1.அவர்கள் விண் சென்ற உணர்வை நாம் நுகர்ந்து எடுக்கப்படும் பொழுது
2.அவர் வாழ்ந்த காலத்தில் நம் உடலில் பதிவான சில தீமையான உணர்வுகளை மாற்றி விடலாம்.

அதாவது… அவர் வாழ்ந்த காலத்தில் எடுத்துக் கொண்ட
1.வேதனையோ வெறுப்போ மற்ற நோய்களோ அதிகமாக இருப்பினும்
2.அதன் தொடர் வரிசையில் நமக்குள் வந்திருக்கும் இந்த நோய்களை மாற்றிவிடலாம்.

அல்லது அவர்கள் வாழ்க்கையில் சாப அலைகள் விடப்பட்டிருந்து… அந்த அலைகள் உடலில் இருந்தால் அந்த சாபச் அலைகள் நம்மையும் சாடும். ஆனால் அவர்களை விண் செலுத்தி விட்டால் அதன் உணர்வின் துணை கொண்டு அவர் வழியில் வந்த சாப உணர்வுகள் நமக்குள் வராதபடி தடுக்கலாம்.

ஆகவே… யார் உடலை விட்டுப் பிரிந்து சென்றாலும் அந்த ஆன்மாக்களை நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் விண் செலுத்திப் பழகுதல் வேண்டும். விண் செலுத்தி அங்கே உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்த பின் அவர் உடலில் உள்ள நோய்களோ மற்றதுகளோ நமக்குள் வளராது தடுக்க முடியும்.

இதை எல்லாம் ஏன் சொல்கிறோம் என்றால்… எப்படியும் நாம் பிறருடன் பழகத் தான் செய்கின்றோம். அவருடைய உணர்வுகள் நமக்குள் நம்மை அறியாமலே வளர்ந்து விடுகின்றது.

அதை எல்லாம் கரைப்பதற்கு… உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களை பௌர்ணமி அன்று சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கச் செய்து உடல் பெறற நஞ்சுகளைக் கரைக்கப் பழகிக் கொடுக்கின்றோம்.

அப்படிச் செய்து பழகிவிட்டால் குடும்பத்தில் உள்ள அனைவரும் முறைப்படி செய்யப்படும் பொழுது
1.இந்த உடலுக்குப் பின் நாம் எளிதில் சப்தரிஷி மண்டலம் அடையலாம்.
2.இல்லையென்றால் மற்றவருடைய பழகிய உணர்வுகளில் புவியின் ஈர்ப்புக்குள் நம்மை அழைத்து வந்துவிடும்

இது போன்ற நிலைகளிலிருந்து நாம் மீள்வதற்குப் “பௌர்ணமி தியானத்தைச் சீராக நாம் பயன்படுத்திக் கொள்ளுதல் வேண்டும்…”

பிடர்தல்

பிடர்தல்

 

தியானத்தின் மூலம் மகரிஷிகளின் பேரருள் பேரொளியை ஈர்த்திடும் செயல் முறையில் “விழிப்பார்வை கொண்டு…” வீரிய சக்தியைக் கொண்டு செயல்படுத்தும் விதத்தை அறிந்து கொள்ள வேண்டும்.

1.நமக்கு முன்னே மறைந்துள்ள திரையை (அறியாமை) நீக்கும் பொருட்டு
2.வேகம் என்ற சொல்லில் – “அறிந்து கொள்ளும் மன எண்ண வீரிய சக்தியாலும்”
3.முயற்சி என்ற ஞான சூத்திரம் கொண்டு – “உள் மனத் தெளிவின் ஆற்றல் கொண்டு அறிந்திட வேண்டும்…!’

“பிடர்தல்…” என்ற எண்ண உந்து சக்தியின் துணையால் இலட்சியம் கொண்டு பயணமாகும் மெய் ஞானப் பாதையில் மகரிஷிகளின் அருள் உணர்வுகளைச் சுவாசிக்கும் பொழுது அதை நம் அறிவின் ஞான எண்ணம் கொண்டு சமைத்து அந்தப் பேரின்பப் பொருளின் சத்தைப் பிரித்தெடுத்து ஆக்கம் கொண்டிடும் செயல் முறைகளில் செயல்படுத்துதல் வேண்டும்.

சிலர் தங்கள் சரீரத்தில் இயற்கையின் ஈர்ப்பு அமிலச் சேமிப்பைப் பெற்றிருக்கும் பொழுது
1.எண்ணத்தின் பிடர்தல் சக்தி கொண்டு அறிந்திடும் வழி முறையெல்லாம்
2.பூமியின் ஊடே செல்லும் நீரோட்ட வீரியத்தை
3.தன் சரீர அமில வீரியம் உடல் சமைப்பில் எழும் எண்ணத்தைக் கொண்டு மூச்சலைகளாக வெளிப்படுத்தும் பொழுது
4.அதில் செலுத்தப்படும் எண்ணம் பூமியின் சுவாச சமைப்பில் வெளிக் கக்கும் அமில அலைத் தொடர்புகளில் மோதுகிறது.

சரீரத்தின் எண்ண ஈர்ப்பில் காந்த வலுவின் வீரியம் கொண்டு சுவாச அலைகளால் தன்னுள் ஈர்க்கப்படும் பொழுது சமைக்கும் சமைப்பெண்ணமும்
1.எந்த இடம் நீர் சக்தி உள்ள இடமோ அந்த இடத்தில் நிற்கும் பொழுது
2.நாம் செலுத்திய உணர்வின் துடிப்பலைகளின் செயல் நிகழ்வாக
3.சரீரத்தைச் சுற்றி ஓடும் சப்த அலைகளின் காந்த வீரிய சுழல் தன்மைகளை அறிந்து கொள்ள முடிகின்றது.

இதைப் போல்
1.மகரிஷிகளின் அருள் ஒளிகளுக்குள் இருக்கும் நிலைகளை
2.ஒலி ஒளி என்ற நிலையில் பிரித்துப் பார்க்கும் பக்குவமாக வழி அமைத்து விட்டால்
3.அனைத்துப் பேருண்மைகளை அறியவும் உணரவும் முடியும்.

குழந்தைகள் படங்களைப் பார்த்த அந்தப் படத்தின் கருத்தை உணர்ந்து கொள்வதைப் போல்… நாம் சுவாசிக்கும் அந்த மகரிஷிகளின் அருள் ஒளிக்குள் இருக்கும் கருத்தாற்றலை உணர்ந்திடும் சூட்சம சக்தியின் ஆற்றலும் பெற முடியும்.

அந்தச் சூட்சமச் செயலின் வீரியமாக அந்த மகரிஷிகளின் அருள் ஆற்றலை ஈர்த்தெடுத்துத் தன்னுள் சமைக்கும் பக்குவத்தையும் பெற்றிடலாம்.

இந்த வலு வீரியத்தைக் கூட்டிடும் சக்தியின் தொடர் தன்னுள் வலுக் கொள்ள…
1.காந்த அமில குண வீரியத் தாய் சக்தியும் ரிஷிபத்தினி சக்தியும் சேர்த்துச்
2.சிவசக்தியாக உயிரான்மாக்களின் கலப்பாக கணவன் மனைவி இரு உயிரும் ஒன்றிடும் பக்குவம் பெற வேண்டும்.

அந்தந்த இடத்தில் அவர்கள் கட்டிய கோவிலில் இன்றும் ஜெப நிலையில் உள்ளார்கள் பல கோடிச் சித்தர்கள். கோவில் கட்டித்தான் அக்காலத்தில் அவர்களால் அந்த நிலையில் இருந்திட முடிந்தது.

1.கோவில் கொண்டு அந்த நிலையில் அடக்கமானவர்களும்
2.வேறு பல நிலையில் அடக்கமான ரிஷிகளும் யோகிகளும்
3.இவ்வுலக ஆரம்ப நிலையில் இருந்து மனித உடல் எய்தி இத்தன்மை பெற்ற பல கோடி ரிஷிகளும்
4.இன்னும் இக்கலியின் காலம் வரை காற்றுடனும் மழையுடனும் ஒளியுடனும் தான் பெற்ற சக்தியின் நிலையைக் கொண்டு
5.இவ்வுலக மக்களின் நன்மைக்காகப் பல முறையில் பல வழியில் உணர்த்துகிறார்கள்.

நன்றாகத் தியானம் செய்பவர்கள்… அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது

நன்றாகத் தியானம் செய்பவர்கள்… அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது

 

1.நம் உடலுக்குள் இருக்கும் எல்லா அறிவுகளையும் தெளிவாக்கும் நாள் தான் கார்த்திகை தீபம்… கார்த்திகை ஜோதி
2.அதாவது எல்லா அணுக்களுக்கும் தெளிவான (ஒளியான) உணர்ச்சிகளை ஊட்டும் நாள் இது.

கோபப்படுபவரை நாம் எண்ணினால் நம் மனம் இருண்டு விடுகின்றது. நோயோடு வாடுகின்றான் என்று பார்த்து அதை மீண்டும் எண்ணினால் நம் மனம் இருண்டு விடுகின்றது. சிந்தனை இழக்கச் செய்து நம்மைச் சோர்வடையச் செய்கின்றது.

ஆனால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுக்கப்படும் பொழுது… அத்தகைய இருண்ட நிலைகளை எல்லாம் தெளிவாக்கிச் சிந்தித்துச் செயல்படும் சக்தியை நமக்கு ஊட்டுகின்றது.

நமது சாஸ்திரங்கள் கூறிய தத்துவத்தின்படி விதியை மதி கொண்டு மாற்ற முடியும்.
1.நமது உயிரின் துணை கொண்டு மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற்று
2.உடலில் இருக்கும் எல்லாவற்றையும் அருள் ஜோதியாக இருள் சூழாத நிலைகள் கொண்டு
3.ஏகாந்த நிலையாக… என்றும் ஏகாதசி என்ற பத்தாவது நிலையை அடைய முடியும்.

மனிதன் ஒருவன் தான் இதைச் செயல்படுத்த முடியும்…! இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில்
1.இந்த உபதேசத்தின் வாயிலாக உங்கள் நினைவினைத் துருவ நட்சத்திரத்தின் பால் அழைத்துச் சென்று
2.அது வெளிப்படுத்தும் உணர்வுகளை கவரச் செய்து
3.அதை நீங்கள் நுகரப்படும் போது உங்கள் இரத்தத்திலே அந்த துருவ நட்சத்திரத்தினுடைய சக்திகள் சேருகின்றது.
4.உங்கள் உடலில் சோர்வோ எங்கேயாவது வேதனையோ இருந்தாலும் அது குறையத் தொடங்குகின்றது.
5.இப்பொழுது கேட்டுக் கொண்டிருக்கும் பொழுதே அந்த உணர்வுகள் குறையத் தொடங்கும்

அது மீண்டும் குறைய… அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை வலுவாக்கிக் கொண்டால் நமக்குள் இருக்கும் பிணிகளை மாற்றி… சிந்தித்து செயல்படும் வலுவைக் கூட்டி… அருள் உணர்வின் தன்மை கொண்டு இந்த வாழ்க்கையைத் தெளிவாக்கி ஒளியின் சுடராக நாம் மாற முடியும்.

ஒளியின் சுடராக மாற்றிக் கொண்டாலும்
1.நம் உடலுக்குள் இருக்கக்கூடிய அந்த அணுக்கள் நல்லதாக மாறும் பொழுது உடலிலே வலி தெரியும் …!
2.தீய உணர்வுகளை நுகரப்படும் பொழுது… அந்தத் தீயது நல்லதாக மாறும் பொழுது வலிகள் வரும்

நல்லதாக்க வேண்டும் என்ற நிலையில் ஆத்ம சுத்தியோ தியானமோ செய்து… அந்தந்தச் சந்தர்ப்பங்களில் மாற்றும் பொழுது
1.எல்லாம் மாற்றினேன்… ஆனால் வலிக்கிறது என்று கொஞ்சம் சங்கடம் இருக்கும்… வெறுப்பு கூட இருக்கும்.
2.ஆனாலும் ஒளியின் சுடராகும் பொழுது நம்மைத் தெளிவாக்கும்
3.ஓரளவுக்கு மாற்றிக் கொள்ளும் வலுவும் கிடைக்கிறது.

ஆகையினால் எப்படி இருந்தாலும் நம் உணர்வின் அணுக்களை ஒளியாக மாற்றப்படும் பொழுது தீமையின் உணர்வாக வளர்த்த… “இந்த உடலும் கரைகின்றது…”

அதே சமயத்தில் ஒளியின் சுடராக மாறி உயிருடன் ஒன்றி உயிரான்மா வெளி செல்லும் பொழுது பேரருள் பேரொளியாக ஏகாந்த நிலை அடைகின்றது.

ஆனால்… இந்த மனிதனின் வாழ்க்கையில் வெறுப்பும் வேதனையும் கொதிப்பும் அதிகமானால்… அதனதன் உணர்வுகள் கலக்கப்பட்டு அதற்குத் தக்க உடலாக… புலியோ நரியோ நாயோ பாம்போ தேளோ இதைப் போன்ற உடல்களுக்கு அழைத்துச் சென்று “நம்மை உருமாற்றிவிடும் நமது உயிர்…”

இன்றைய செயல் நாளைய சரீரமாக மாற்றிக் கொண்டே உள்ளது உயிர். இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த உபதேசத்தின் வாயிலாக உங்கள் இரத்த நாளங்களில் துருவ நட்சத்திரத்திந் உணர்வுகளைக் கலக்கும்படி செய்தோம்.
1.இந்த உபதேசத்தின் உணர்வுகள் உங்களை மனிதனாக உருவாக்கிய நல்ல அணுக்களுக்கு அமுதாகச் சேர்கிறது…
2.”அருள் வழியில் வளரும்” அத்தகைய அணுக்களாக மாற்றும்.

அந்த உணர்ச்சிகளை உங்களுக்குள் தூண்டும் அதற்கே இதைச் செயல்படுத்துகின்றேன் (ஞானகுரு).

குரு காட்டிய நெறிப்படி தியானிக்க வேண்டும்

குரு காட்டிய நெறிப்படி தியானிக்க வேண்டும்

 

யாம் ஞானகுரு) சொன்ன முறைப்படி யார் இந்தத் தியான வழியினைச் சீராகக் கடைப்பிடித்து வழி நடக்கின்றார்களோ “அவர்களுக்கு நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்…”

ஆனால் தீமை என்ற அடிப்ப்படையில் ஆசை நிலையில் அதைக் கொண்டு வந்தால் பாலிலே பாதாமைப் போட்டு பல சத்துக்களைப் போட்டு விஷத்தைப் போட்ட மாதிரி ஆகிவிடும்.

அதாவது செல்வத்தை அடிப்படையாகக் கொண்டு அந்த ஆசையுடன் தியானத்திற்கு வந்தார்கள் என்றால்… நிச்சயம் அவர்களுக்குக் கெடுதலாகும் அவர்கள் வார்த்தையைக் கேட்டு வழி நடப்பவர்களுக்கும் கெடுதலாகும்.

ஏனென்றால் அவர்கள் ஆசையைக் கூட்டப்படும் பொழுது அதை ஆசை அடுத்தவர்களுக்கும் வந்து சேர்ந்து விடுகின்றது கடந்த காலங்களில் இப்படித்தான் யாம் கொடுத்த பல உயர்ந்த சக்திகளை எல்லாம் கெடுத்து விட்டார்கள்.

அதையெல்லாம் எவ்வளவு நாள் அடக்கி வைத்திருந்தேன்… ஆனால்
1.நல்லதை எண்ணி ஏங்கி வருபவர்களுக்கு அது எப்படியும் தனித் தனித் தன்மைகளில் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று
2.இப்பொழுது விளக்கமாகச் சொல்லி வருகின்றேன்… அருள் உணர்வுகளைக் கிடைக்கும்படி செய்து கொண்டிருக்கின்றேன்..

என்னை நீங்கள் தேடுவதற்குப் பதில் எங்கிருந்தாலும் அங்கே அமர்ந்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்களும் ஜீவணுக்களும் பெற வேண்டும்.
1.எங்கள் உடலில் அறியாது சேர்ந்த நோய்கள் நீங்க வேண்டும்
2.சர்வ தோஷங்களையும் நீக்கக்கூடிய அருள் சக்தி பெற வேண்டும் என்று
3.மறுபடி மறுபடி இந்த உணர்வைக் கூட்டிக் கொண்டே வாருங்கள்.

உட்கார்ந்து தியானியுங்கள்.. இதையே எண்ணி ஒரு பழக்கமாகக் கொண்டு வந்தால் உங்கள் வாழ்க்கையில் வரக்கூடிய துன்பங்களைப் போக்க முடியும்.

நீங்கள் அந்தச் சக்தி பெற வேண்டும் என்பதற்குத்தான்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று
2.உங்களை எண்ணி சதா நான் தவம் இருக்கின்றேன்.

நண்பன் என்று அவன் அமெரிக்காவில் இருந்தாலும் எனக்குத் துரோகம் செய்தான் பாவி…! என்றால் எப்படிப் புரையோடி அவனை இயக்குகின்றதோ… அதே சமயத்தில்… நன்மை செய்தான் என்று எண்ணினால் எப்படி விக்கலாகிறதோ அதைப் போன்று உங்களை எண்ணி நான் தவம் இருக்கும் பொழுது அந்தச் சக்தி உங்களுக்கு எளிதில் கிடைக்கும்.

ஏக்கமாக இருக்கும் பொழுது உங்களுக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றது… ஆகவே ஏங்கித் தியானிக்க வேண்டும்.

ஆனால் “ஆசையை வேறு பக்கம் வைத்து” அவன் இப்படிச் செய்கின்றான்… இவன் ஏன்னைக் கேவலமாகப் பேசுகின்றான்… இவன் என்னைத் தவறாகச் சொல்கின்றான்… என்ற இந்த உணர்வு வரும் போது கலக்கமாகிறது.
1.என்னா சாமி…? எல்லாம் செய்தேன் ஒன்றும் நடக்கவில்லையே…! என்பார்கள்.
2.ஏனென்றால் இந்த ஆசையோடு கலக்கப்படும் பொழுது இந்தக் கலக்கம் தான் வரும்.

ஆகவே… தியானத்தைச் சீராகக் கடைபிடித்து வாருங்கள்… பேரருளைப் பெறக்கூடிய தகுதி பெறுவீர்கள்.

நீங்கள் எல்லோருமே துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெருக்கி இந்தக் காற்று மண்டலத்திலே சூழ்ந்து கொண்டிருக்கக் கூடிய நச்சுத்தன்மைகளை விரட்டக் கூடியவர்களாக நீங்கள் வளர்ச்சி பெற வேண்டும்.

எல்லாருக்கும் அதைக் கிடைக்கக் கூடிய சக்தியாக நீங்கள் பெற்று… விஞ்ஞான அறிவால் வரும் பேரழிவிலிருந்து மீட்க வேண்டும்.

தியானப் பயிற்சி

தியானப் பயிற்சி

 

1.எம்மை நேரடியாக நீங்கள் சந்திக்க வேண்டியதில்லை.
2.இருக்கும் இடத்திலிருந்து எண்ணினாலே என்னுடைய (ஞானகுரு) அருள் உங்களுக்குக் கிடைக்கும்.

அந்தப் பயிற்சியைத் தான் இங்கே கொடுக்கின்றேன்.

ஈஸ்வரா என்று உயிரை எண்ணுங்கள். அம்மா அப்பா தான் முதல் தெய்வங்கள் அவர்களால் தான் நாம் உடல் பெற்றோம். அவர்களின் நல்லாசி பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

அதே போன்று இந்தப் பேருண்மைகளை எல்லாம் எனக்கு உணர்த்தியது மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர். அந்த மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.

ஈஸ்வராய குருதேவரின் அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும். கண்ணிலே ஏங்கி நேராக உற்றுப் பார்த்துத் தியானியுங்கள்.

இப்போது கண் வழியாக அதை இழுத்துக் கவர்கின்றீர்கள் அடுத்து கண்ணின் நினைவு புருவ மத்திக்குக் கொண்டு வாருங்கள். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஏங்குங்கள்.

அங்கே காந்தம் இருக்கின்றது அதிலே நாம் துருவ நட்சத்திரத்தினைச் சேர்த்து இணைத்து விடுகின்றோம்.

ஆனால் வழக்கமாக நாம் மூக்கு வழியாகச் சுவாசிக்கின்றோம். நுகர்கின்றோம் உயிரிலே மோதி அந்த உணர்ச்சிகள் நம்மைத் தெரிய வைக்கின்றது… இயக்குகின்றது.

ஆனால் அதை முதலில் சொன்ன முறைப்படி புருவ மத்தி வழியாகத் துருவ நட்சத்திரத்தை அந்தக் காந்தத்தின் வழி கவரும் பொழுது பிற தீமைகள் சுவாசத்தின் வழி உள்ளே புகாதபடி துருவ நட்சத்திரத்தில் உணர்வுகள் அடைப்பாகி விடுகிறது.

ஆகவே தீமைகள் நமக்குள் போகாது நாம் தடைப்படுத்தி விடுகின்றோம்.

ஆனால் உள்ளே சென்றுவிட்டால் இரண்யன். நல்ல அணுக்களை அது கொன்றுவிடும் அது வேதனை கடும் நஞ்சு அதை நாம் குரு காட்டிய வழியில் தடைப்படுத்தி துருவ நட்சத்திரத்தினை கண்களிலே நினைத்து இங்கே கொண்டு வருகின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா கண்ணைத் திறந்தே தியானியுங்கள். பின் கண்களை மூடி துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாங்கள் பெற வேண்டும் துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாங்கள் பெற வேண்டும் என்று அப்படியே திரும்பத் திரும்ப எண்ணி ஏங்கிக் கொண்டே இருங்கள்.

பின் கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்துங்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று அந்த இரத்தங்களில் அதனைக் கலக்க வேண்டும் என்று எண்ணுங்கள்

சிறிது நேரம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி இரத்தத்தில் கலக்க வேண்டும் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் என்று செலுத்தி விட்டு அடுத்து அந்த இரத்தம் போகும் பாதைகள் அனைத்துமே அந்த இரத்தங்கள் முழுவதுமே துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளி படர வேண்டும் என்று நினைவைச் செலுத்துங்கள்.

அது உடல் முழுவதும் சுழன்று எல்லா உறுப்புகளுக்கும் சென்று அங்கு இருக்கக்கூடிய எல்லா ஜீவணுக்களும் ஜீவான்மாக்களும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று நினைவைச் செலுத்துங்கள்.

நாம் மற்றவருடன் பிரியமாக பழகி அன்புடன் இருந்து அவர் திடீர் இறந்து விட்டால் நம் மீது பாசமாக இருந்தால் அந்த ஆன்மா நம் இரத்தத்தில் தான் இருக்கும்.

அவருடைய கெட்டதெல்லாம் இரத்தத்தில் இருந்து கொண்டு நமக்கு அது தொல்லைப்படுத்தும் நிலையாக வரும். நம்முடைய சிந்தனைகளைக் குறைக்கும். அது உடலுக்குள் வந்துவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது.

அதனால் அந்த ஜீவான்மாக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்ற அவசியம் நாம் அந்த நினைவினைச் செலுத்த வேண்டும்.

உடலில் இருக்கும் எல்லா இடங்களுக்கும் துருவ நட்சத்திரத்தின் சக்தி பரவ வேண்டும் என்று நினைவைச் செலுத்த வேண்டும்.

அடுத்து இந்த வாயு மண்டலங்கள் அதாவது அந்த நரம்பு மண்டலங்கள் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் அதில் இருக்கக்கூடிய ஜீவான்மக்கள் துருவ நட்சத்திரத்தின் பேர்ருள் பேரொளி பெற வேண்டும் என்று நினைவினைச் செலுத்துங்கள்.

நாம் சர்வ காலம் கண்களில் எத்தனையோ உற்றுப் பார்க்கின்றோம். எக்ஸ்ரே எப்படி ஊடுருவிச் செயல்படுத்துகின்றதோ அது போன்று கண்களால் பார்த்த்து எலும்புக்குள் ஊனாக இருக்கும்.

நான் எதையெல்லாம் பார்க்கின்றோமோ வரிசையில் அங்கே பதிவாக்கிக் கொண்டே இருக்கும். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் எலும்பு மண்டலம் முழுவதும் படர்ந்து அதில் இருக்கக்கூடிய ஊனில் துருவ நட்சத்திரத்தின் பேர்ருள் பேரொளி படர வேண்டும் என்று கண்ணின் நினைவை உள்ளே செலுத்துங்கள்.

மீண்டும் புருவ மத்திக்குக் கண்ணின் நினைவைக் கொண்டு வந்து துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அங்கே நினைவைச் செலுத்துங்கள்.

இப்படியே மாற்றி மாற்றி எல்லா இடங்களுக்கும் நினைவைச் செலுத்தி பல முறை தியானியுங்கள்.
1.இப்படிச் செய்ய இது என்ன காசா பணமா…? ஒன்றும் இல்லை.
2.உங்கள் நினைவு மட்டும் தான். இதைச் செய்வதற்கு என்ன வந்தது…?
3.சிறிது நாளைக்குப் பழகிக் கொண்டால் தன்னாலே வேலை செய்யும்.

நல்லது திட்டியவனையோ அல்லது உடல்நிலை பற்றிய வேதனையோ திரும்பத் திரும்ப எண்ணுவதற்குப் பதிலாக அருளைப் பெற வேண்டும் என்று நாம் எண்ணினாலே போதுமானது.

ஏனென்றால் இனி வரக்கூடிய காலங்கள் மிக விஷத்தன்மை வாய்ந்ததாக இருப்பதால் அதையெல்லாம் மாற்றி அமைக்கக்கூடியவர்களாக நீங்கள் வரவேண்டும்… அந்தச் சக்தியைப் பெற வேண்டும் என்பதற்குத்தான் இதை மீண்டும் மீண்டும் உங்களுக்கு பல வகைகளிலும் எடுத்துச் சொல்லிக் கொண்டே வருகின்றேன்.

கடவுளின் அவதாரம் வராக அவதாரம் பன்றி எப்படிச் சாக்கடைக்குள் உள்ள நாற்றத்தைப் பிளந்து அதில் இருக்கும் நல்ல மணத்தை நுகர்கின்றது.

அதே போன்று நீங்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற்று அதன் உணர்வை உங்களுக்குள் வலுப்பெறச் செய்து எத்தகைய விஷத்தன்மையாக இருந்தாலும் அதைப் பிளந்து விட்டு உங்கள் சிந்தனை கலையாது உங்கள் வாழ்க்கையை அருள் ஞானத்தை போதிக்கும் அருள் உணர்வுகளை உங்களுக்குள் சேர்ப்பிக்கும் அந்தச் சக்தி பெற வேண்டும்.

1.இந்த உடலை விட்டு எப்பொழுது சென்றாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தோடு இணைய வேண்டும்
2.பிறவி இல்லா நிலை அடைய வேண்டும் என்று அதைப் பெறச் செய்வதற்கு தான் இந்த உபதேசம்.

“குரு வழியில்” துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறுதல் வேண்டும்

“குரு வழியில்” துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறுதல் வேண்டும்

 

1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருள் உணர்வுகளைத் தான்
2.குரு வழியில் எல்லோருக்கும் அது கிடைக்க வேண்டும் என்று ஏகமாக எண்ணி
3.அந்த உணர்வலைகளை இங்கே பரப்பிக் கொண்டே உள்ளோம்.
4.மிகவும் சிக்கலான காலங்களில் உங்களுக்கு வழிகாட்டக்கூடிய முதல் குருவாகவும் நான் (ஞானகுரு) இருக்கின்றேன்

குரு அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணும் பொழுது எல்லோரும் சேர்ந்து… தியானத்தின் மூலம் தவமிருந்து வெளிப்படுத்திய உணர்வுகள் இங்கே உண்டு… அது உங்களுக்குக் கிடைக்கின்றது.

அது மிகவும் வலிமை மிக்க சக்தி…!

யாம் சொன்ன முறைப்படி மாமகரிஷி ஈஸ்வராய குருதேவருடைய அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று நீங்கள் ஏங்கினால் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எளிதில் பெறலாம்.

எந்தக் காரியம் நடைபெற வேண்டும் என்றாலும் இந்த முறைப்படித் தான் எண்ணி அதைச் செயல்படுத்த வேண்டும். ஆனால்…
1.நமது ஆசை நல்ல உணர்வின் தன்மை கொண்ட ஆசையாக இருக்க வேண்டும்.
2.நல்லதைச் செயல்படுத்தக்கூடிய இச்சையில் நாம் செயல்பட வேண்டும்
3.அதன் வழி ஏங்கித் தியானித்தால் உங்களுக்கு அது கிடைக்கும்.

ஆகவே எந்தத் திசையில் எங்கிருந்தாலும் துருவ நட்சத்திரத்தின் பால் நினைவைச் செலுத்தி மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கினால் மிகவும் எளிதாக கிடைக்கும்.
1.அது வலிமைமிக்க சக்தியாக உங்களுக்குள் வரும்
2.உங்கள் அனுபவத்தில் இதைத் தெரிந்து கொள்ளலாம்.

நம்முடைய ஆசைகள் எல்லாம் “குரு வழியில்” அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறுவதாக இருக்க வேண்டும். குரு துணை கொண்டு அதைத் தான் பரப்புகின்றோம்.

எல்லோரும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்ற உணர்வுகளைப் பரப்பப்படும் பொழுது நம் பூமி முழுவதும் அது படர்கின்றது

உலகின் எந்த மூலையிலிருந்து நீங்கள் எண்ணினாலும்
1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருள் உணர்வுகளைப் பெற முடியும் (வாக்காகக் கொடுக்கின்றேன் – ஞானகுரு)
2.ஏனென்றால் அவர் உணர்வுகளைப் பெற்றுத் தான் நான் வளர்ந்தது
3.அவர் உணர்வை எடுத்துத் தான் உங்களுக்குள் பதிவாக்குகின்றேன்…
4.அவர் இன்று ஒளியின் உடலாக இருக்கின்றார்… அவருடைய உணர்வை எளிதில் பெற முடியும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்… அவர் எடுத்துக் கொண்ட உணர்வை எனக்குள் விளைய வைத்து அந்த ஞான வித்தைத் தான் உங்களுக்கும் கொடுக்கின்றேன்.

ஆகவே…
1.ஞானகுரு கூறிய வழிப்படி குரு அருளைப் பெறுவேன்
2.குரு அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறுவேன் என்றால்
3.இது தான் முறை… முறைப்படி துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறுகின்றோம்.

குரு காட்டிய உணர்வுகள் எனக்குள் விளைந்தாலும்… ஒளியின் உடலாக இருக்கும் அந்தக் குருவின் அருளை எளிதில் பெற முடியும்.

ஏனென்றால் சப்தரிஷி மண்டலத்தில் அவர் உள்ளார்…! அவர் உடலுடன் இங்கே இருந்த காலத்தில் எனக்கு உபதேசித்த உணர்வுகள் ஆழமாகப் பதிவானது. அதை உங்கள் எல்லோருக்குள்ளும் பதிவு செய்து… ஒருக்கிணைந்து அந்த உணர்வின் தன்மை அலைகளாகப் பரப்பி வைத்திருப்பதனால் அதனை நீங்கள் எளிதில் பெற முடியும்.

தியானம் செய்யச் செய்ய “ஒவ்வொரு நிமிடமும்… நம்மை எது இயக்குகிறது…?” என்று அறிந்து கொள்ள முடியும்

தியானம் செய்யச் செய்ய “ஒவ்வொரு நிமிடமும்… நம்மை எது இயக்குகிறது…?” என்று அறிந்து கொள்ள முடியும்

 

மனிதனின் வாழ்க்கையில் தொழிலில் முன்னேற்றம் அடைந்தால் “அது சந்தர்ப்பம் தான்…”

ஆனால் வளர்ச்சி அடையும் பொழுது நான்கு பேர் வந்து ஏதாவது ஆசையைக் காட்டியோ அல்லது நம் மீது வெறுப்பாகிக் கேவலமாகப் பேசும் நிலையோ வந்தால் அந்தச் சந்தர்ப்பம் நம் நினைவுகள் அனைத்தும் அவன் மீது சென்றுவிடுகிறது.

அந்தச் சந்தர்ப்பம் என்ன செய்கிறது…?
1.அவன் மீது கோபம் வெறுப்பு உண்டாக்குகிறது.
2.நம் தொழிலைச் சீராகப் பார்க்க முடியாது போய் விடுகிறது
3.நல்ல குணங்களையும் பாதுகாக்க முடியாது போய் விடுகிறது.

வேதனை என்ற உணர்வுகளை உடலில் அதிகமாகச் சேர்த்த பின் நல்ல அணுக்கள் மயக்கப்பட்டு விடுகின்றது சிந்திக்கும் வலிமை இழந்து விடுகின்றது

இந்த உணர்வுகள் அதிகமாகி இருதயம் பலவீனம் ஆகிறது. இருதயம் பலவீனமான பின் அடுத்து எதையுமே வலுவாக எண்ண முடியாது போய் விடுகிறது.

இப்படி வரக்கூடிய நிலைகளை மாற்றுவதற்குத் தான் உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்கு ஒவ்வொரு நிமிடமும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை வலு ஏற்றும்படி சொல்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
1.முதலில் கண்ணின் நினைவை உயிரான ஈசனிடம் செலுத்த வேண்டும்.
2.உயிரான ஈசனிடம் வேண்டி… துருவ நட்சத்திரத்தின் சக்தியை அதன் வழி ஈர்க்கும் தன்மையாகக் கொண்டு வர வேண்டும்.

பின் கண்ணின் நினைவை உடலில் உள்ள இரத்தங்களிலே செலுத்தி இரத்தம் முழுவதும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும்… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி இரத்தத்தில் உள்ள ஜீவணுக்களும் ஜீவான்மாக்களும் பெற வேண்டும்… உடல் உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களிலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் என்று எண்ணிப் பழக வேண்டும்.

அதற்குப் பின் சிறு குடல் பெருங்குடலை உருவாக்கிய அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
1.கொஞ்சம் கொஞ்சமாக உறுப்புகளுக்கு அந்தச் சக்தியை வலு சேர்க்கும் ஒரு பழக்கத்திற்கு வரவேண்டும்.
2.ஏனென்றால் எல்லா உறுப்புகளுக்கும் உடனடியாக அதை எடுக்கக்கூடிய பவர் கொடுக்கின்றோம்.

உணவாக உட்கொள்ளும் சாப்பாட்டுடன் சேர்த்த கொழுப்புச் சத்து சக்கரைச் சத்து உப்புச் சேர்த்து அதை பிரிக்கும் தன்னை பெற்றது நம்ம்ய்டைய கணையங்கள்.

ஆனால் அது சரியாகப் பிரிக்கவில்லை என்றால் கொழுப்புச் சத்து இரத்தத்துடன் கலந்து… இரத்தக் குழாய்கள் எல்லாம் அடைத்து விடுகின்றது.

சர்க்கரையும் உப்பையும் சீராகப் பிரிக்கவில்லை என்றால் உறுப்புகள் பலவீனம் அடைந்து விடுகிறது வலுவான அணுக்களாக இருந்தால் அதையெல்லாம் சீராகப் பிரிக்கும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கணையங்கள் முழுவதும் படர்ந்து அது சீராகப் பிரிக்கும் சக்தி பெற வேண்டும் என்று நாம் தியானிக்க வேண்டும்.

குளத்தில் இருந்து எடுக்கக்கூடிய தண்ணீரை பெரிய கற்கள் அப்புறம் சிறிய கற்கள் அப்புறம் குறு மணலைப் போட்டு வடிகட்டிச் சுத்தமான நீராகக் கொண்டு வருவது போல் தான் நம் கல்லீரலின் இயக்கமும்.

நாம் சாப்பிடும் ஆகாரம் கணையங்களில் இருந்து வடிகட்டி வரும் ரசத்தைக் கல்லீரல் மண்ணீரல் பிழிந்து வடிகட்டி நல்ல இரத்தமாக மாற்றுகின்றது. அது சீராக வடிகட்ட துருவ நட்சத்திரத்தின் சக்தியை வலு ஏற்றிக் கொடுக்க வேண்டும்.

1.சுவாசித்தது… நுரையீரலில் எது படுகின்றதோ
2.”அந்த மூச்சு” அதற்குத் தகுந்த மாதிரித் தான் வெளியில் இருந்து இழுக்கும்.

வேதனை வெறுப்பு எல்லாம் சுவாசத்தின் வழி வந்தது என்றால் கல்லீரல் மண்ணீரலைத் தாண்டி நுரையீரலுக்கு வந்தால் “படக்..படக்…” என்று அடிக்கும்.

அப்பொழுது மூச்சுத் திணறலாகும்…! காரணம் நாம் “சந்திக்கக்கூடிய சந்தர்ப்பம்” ஒரு நண்பர் வந்து… என் பையன் சொன்னபடி கேட்காமல் சேட்டை செய்கின்றான்… தொழிலில் என்னை ஏமாற்றுகிறார்கள்… உடம்பு சரியில்லை… என்று அவர்கள் கஷ்டத்தை எல்லாம் சொல்லட்டும்.

அதை எல்லாம் உ..ம் கொடுத்துக் கேளுங்கள். அடுத்த உங்கள் மனதில் என்னென்னவெல்லாம் ஓடுகிறது…? என்று பாருங்கள்.
1.தியானத்திற்கு முன்னாடி இதெல்லாம் தெரியாது
2.தியானத்தில் இப்பொழுது உணர முடியும்… நம்மை எது இயக்குகின்றது…? என்று அறிந்து கொள்ளலாம்.

நண்பர் தன் கஷ்டத்தைச் சொல்கிறார்கள் என்றால் உடனே சுதாரித்து… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உடனே ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.

இந்தப் பழக்கம் அவசியம் நமக்கு வரவேண்டும்.

1.மேலே அழுக்குப் பட்டபின் குளித்துச் சுத்தமாக்குவது போன்று…
2.துணியில் உள்ள அழுக்கைச் சோப்பை போட்டு நீக்குவது போன்று
3.ஆன்மாவில் உள்ள அழுக்கை நாம் தூய்மைப்படுத்தி ஆக வேண்டும்

துருவ நட்சத்திரத்தின் சக்தியை நம் உடல் உறுப்புகள் எல்லாவற்றிலும் வலு ஏற்றி நம்மை அறியாது உட்புகும் அசுத்தங்களை வடிகட்ட வேண்டும்.

நம் எண்ணம் சொல் செயல் தூய்மை பெறும்… வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச்சியும் கிடைக்கும். உடலுக்குப் பின் பிறவியில்லா நிலையும் அடைய முடியும்.

தீமையை நீக்கிய அனுபவங்கள் இல்லையென்றால் தியானத்தைச் செய்து பலனில்லை

தீமையை நீக்கிய அனுபவங்கள் இல்லையென்றால் தியானத்தைச் செய்து பலனில்லை

 

படித்ததை மட்டும் வைத்துக் கொண்டு இன்ஜினியர் வேலை பார்த்தால் அவர் காரியத்திற்கு ஆகாது. அனுபவ சித்தி அவசியம் வேண்டும்.

அதைப் போன்று தான் யாம் சொன்னதை எல்லாம் வெறும் பாடமாக வைத்துக் கொண்டு “சாமி சொன்னார்…!” என்று மட்டும் எண்ணக் கூடாது.

உபதேசிப்பதை எல்லாம் முதலில் ஆழமாகப் பதிவு செய்து ஞாபகத்தில் வைத்து… அதை உங்களுக்குள் வளர்த்துக் கொண்டே வர வேண்டும்.
1.சந்தர்ப்பத்திலே குறைபாடுகள் எப்படி வருகின்றது…? என்று அறிந்திடும் அந்த அனுபவம் வேண்டும்.
2.யாம் சொன்னதை எடுத்துப் பயன்படுத்தி அந்தக் குறைகளை மாற்றி அமைக்கக்கூடிய அனுபவம் பெற வேண்டும்.
3.”எது வந்தாலும்” அடுத்த கணமே மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து… நல்லதாக வேண்டும் என்று அதைத் தூய்மைப்படுத்தி…
4.அப்படித் தூய்மையாக்கிய அனுபவங்கள் கட்டாயம் வேண்டும்.

படித்துப் பட்டம் பெற்ற இன்ஜினியர் என்றாலும் அனுபவம் இல்லை என்றால் படித்த பாடத்தால் பலன் இல்லை. மருத்துவர்களாக வருபவர்கள் முதலிலே மருத்துவம் பற்றியதை முழுமையாகப் படித்துத் தெரிந்து கொள்கின்றார்கள்.

படித்த படிப்பை மட்டும் வைத்துக் கொண்டு “நோயை முழுமையாகக் குணப்படுத்த முடியாது…” அவர்களுக்கு அனுபவத்திற்கு என்று தனியாகப் பயிற்சி கொடுப்பார்கள்.

ஏனென்றால் ஒருவருக்கு ஒரு நோய் இருக்கிறது என்றால் படித்ததன் பிரகாரம் மட்டும் மருந்து கொடுக்க முடியாது. காரணம்…
1.அவர் உடலில் மற்றொரு உபாதை இருக்கும்…
2.அதற்கு இந்த மருந்து எதிர்ப்பதம் ஆகிவிடும்.

அதாவது ஒருவருக்கு ஆஸ்த்மாவும் இருக்கும்… இரத்தக் கொதிப்பும் இருக்கும். ஆஸ்துமாவுக்கு மருந்து கொடுத்தால் இரத்தக் கொதிப்புக்கு ஆகாது. இரத்தக் கொதிப்புக்கு மருந்து கொடுத்தால் ஆஸ்துமாவுக்கு ஒத்துக் கொள்ளாது.

மீண்டும் அவருக்கு நோய் அதிகமாகும்… வேதனையாகி பாதிப்புகள் அதிகமாகும்.

ஆனால் இது இரண்டையும் சமப்படுத்தும் நிலையாக
1.அதற்கு எப்படிப்பட்ட மருந்து கொடுக்க வேண்டும்…? என்று அந்த மருத்துவர் சிந்தனை செய்து
2.தன்னுடைய அனுபவத்தால் செயல்படுத்தி இரண்டையும் சீராக்கினால் தான் அவரை உடல் நலம் பெறச் செய்ய முடியும்.

ஆனால் “இன்ன நோய்க்கு… இன்ன மருந்து தான்” கொடுக்க வேண்டும் என்று சொல்லி இருப்பார்கள். அந்த ஆஸ்துமாவிற்கு என்று அவர் தனித்து மருந்து கொடுத்தால் சீராக வராது இரத்தக் கொதிப்புக்குக் குளிர்ச்சியான நிலை உருவாக்கும்படி செய்தால் ஆஸ்துமாவுக்கு அதிகமாகிவிடும். கர்…புர்… என்று இழுத்துக் கொண்டிருக்கும்.

அப்பொழுது எந்த நோயை நீக்குவது…?

ஆகவே அனுபவரீதியிலே இதற்கு என்ன செய்ய வேண்டும்…? என்று சிந்தித்து
1.ஆஸ்துமாவுக்குக் குறிப்பிட்ட நேரத்திற்கு அந்த உஷ்ணத்தை மேலே ஏற்றி
2.அதனுடன் இரத்தக் கொதிப்பிற்கு குளிர்ச்சிக்குண்டானதைக் கொடுத்துச் சமப்படுத்திக் கொண்டு வந்தால் இரண்டும் சமமாகும்.
3.ஆஸ்துமாவையும் குறைக்கும்… இரத்தக் கொதிப்பையும் குறைக்கும்.

ஆனால் சமப்படுத்த முடியாத மருந்தைக் கொடுத்தால் அது வேலையாகாது. குளிர்ச்சியைக் கொடுத்துத்தான் கொதிப்பை அடக்க முடியும். ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு விதமான செயலாக்கங்கள் வரும். அதனுடைய செயலாக்கங்களை அறிந்து அனுபவரீதியிலே கொண்டு வர வேண்டும்.

அதற்குத்தான்…
1.எம்முடைய (ஞானகுரு) அனுபவத்தை உபதேச வாயிலாக உங்களிடம் சொல்கின்றேன்.
2.அனுபவத்தைச் சொல்லி எந்த நிமிடத்தில்… அந்தக் குறைகள் எப்படி உங்களை இயக்குகின்றது…? என்றும்
3.அதை மாற்றி அமைக்க ஈஸ்வரா… என்று உங்கள் உயிரை எண்ணி அருள் சக்திகளை அங்கே நிலை நிறுத்தி
4.உங்கள் உடலுக்குள் அதை வலுவாக்க வேண்டும் என்று வாக்கினால் அதைப் பதிவு செய்கிறேன்.

அந்தப் பதிவை நீங்கள் நினைவுக்குக் கொண்டு வர வேண்டும். இப்படி நான் சொன்னதை எல்லாம் நீங்கள் கடைப்பிடித்து…
1.நான் செய்தேன் என்று செயல்படுத்தி அனுபவபூர்வமாக ஒவ்வொன்றாக்க் கொண்டு வந்தால்
2.அதன் வழி தான் இதை மாற்றியமைக்கக்கூடிய நிலையைக் கொண்டு வர முடியும்.

தொழிற்சாலையிலும் சரி… ஒரு இயந்திரத்தைச் சீராக்குவதிலும் சரி… அதைப் பற்றி அனுபவரீதியாகத் தெரிந்த பிட்டர்கள் (FITTER) இருப்பார்கள். படித்தவர்களைக் காட்டிலும் அவர்கள் அனுபவ அறிவு கொண்டவர்கள்.

ஆனால் இன்ஜினியரோ நான் சொன்னபடி செய்ய வேண்டும் என்று சொல்லலாம். அதன்படி செய்தும் விடலாம் ஆனால் அந்த இயந்திரம் வேலை செய்யும் போது அங்கே தேய்மானம் ஏற்பட்டு விடுகிறது.

தேய்மானம் ஆகும் போது அங்கிருக்கும் பிட்டருக்கு அதை பற்றி அனுபவம் இருக்கிறது. இந்த இடத்தில் சாய்வாக இருக்கின்றது… சமமாக்கி நேராக்கினால் தேய்மானம் ஆகாது… சரியாகிவிடும் என்று அவன் சொல்கிறான்.

ஆனால் படித்தவன் நான் சொல்கின்றேன்..! பிட்டர் நீ இந்த மாதிரிச் சொல்கிறாயே என்று இஞ்சினியர் சொன்னால் சரியாக வருமா…?

சில பேர் இப்படித்தான் நான் எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருக்கின்றேன்… தியானம் எல்லாம் கற்றுக் கொண்டிருக்கின்றேன். குண்டலினி யோகா செய்திருக்கின்றேன் என்றெல்லாம் சொல்வார்கள்.

1.ஆனால் “அந்த நுணுக்கம்…” எதிலிருந்து வருகின்றது…? என்று இல்லாதபடி சொன்ன பாடத்தை ஒப்படைக்கின்றார்கள்.
2.எப்படி மாற்றிக் கொண்டு வருவது…? என்பதை ஒதுக்கி அதை விட்டு விடுகிறார்கள்.

படித்தவர்கள் நிறையப் பேர் இருப்பார்கள். படிக்காதவர்கள் தியானத்தைப் பற்றிச் சொல்லும் பொழுது நான் எத்தனையோ படித்திருக்கின்றேன் எனக்கு எல்லாம் தெரியும் என்னிடம் வந்து நீ சொல்கின்றாயா…? என்று சொல்வார்கள்.

இப்படிச் சொன்னால்
1.படிக்காதவர் கண்டுபிடித்துச் சொன்னதை
2.படித்தவர் அறிய முடியாது போய்விடும்.

இது எல்லாம் இயற்கையின் நியதிகள்.

(அந்த உணர்வின் தன்மை கொண்டு உணர்ச்சிகள் கொண்டு செய்தோம் என்றால் அது பக்குவமாகும்).

வீட்டில் வடை சுடுவார்கள். எனக்கு எல்லாம் தெரியும் என்று சொல்லிக் கொண்டு நாமும் சொல்லலாம் அட.. அடுப்பில் சட்டியை வைத்து எண்ணை காய்ச்சுகிறார்கள்… மாவைத் தட்டிப் போடுகிறார்கள்… அவ்வளவு தான்…! என்றும் நினைக்கலாம்.

தண்ணீரைத் தெளித்து அவர்கள் எண்ணையின் சூட்டைக் கணிப்பார்கள் அது சுய்… என்று சப்தமிடும். ஓ… இவ்வளவுதானா…! என்று இவர்களும் அதே போன்று செய்து பார்க்கும் போது சுய்… என்று சப்தமிடும்.

1.ஆனால் அந்தச் சப்தத்தின் வித்தியாசங்கள் அவர்களுக்குத் தெரியும்
2.எந்த அளவிற்கு எண்ணெய் காய்ந்திருக்கிறது என்று…!

அதற்குத் தகுந்தது போன்று அவர்கள் மாவை பிசைந்து கொண்டே இருப்பார்கள். அல்லது மற்ற வேலை செய்வார்கள் அதற்குப்பின் இந்த வடையைப் போடுவார்கள். சமமாக அவர்கள் 10 வடையைப் போட்டர்கள் என்றால் அந்தப் பத்திற்கும் சூடு சரியாக இருக்கும். வெந்து சீராக வரும்… ருசியாகவும் இருக்கும்.

ஆனால் புதிதாக வடை சுடுபவர்கள் தட்டிப் போட்டால் ரெண்டு அல்லது மூன்று வடையைப் போட்டதும் எண்னையிலிருக்கும் சூட்டை எல்லாம் அது எடுத்துக் கொள்ளும். அடுத்து வடையைத் தட்டிப் போட்டால் சரியாக வேகாது. எண்ணை எல்லாம் மாவிற்குள் புகுந்து விடும்… எண்ணெய் காணாது போய்விடும்.

ஆனால் அனுபவம் பெற்றவர்கள் சுட்டுப் போட்டால் வடையில் எண்ணெய் இல்லை… வடை மொறு மொறு என்று ருசியாக இருக்கிறது.

ஆனால் அவர்கள் சுட்டதில் எண்ணை இருக்கிறது. மாவாக இருக்கிறது என்று சூட்டைக் கூட்டினால் மேலே கருகிவிடும். ஐய்யய்யோ கருகிவிட்டதே என்று எடுத்தால் இந்தப் பக்குவம் தவறும் போது என்ன ஆகிறது…? சாப்பிட்டால் ருசி இல்லை.

காரணம் அந்தப் பக்குவம் தெரிய வேண்டும்…!

ஆக எதுவுமே… ஒரு சிறியதாக இருந்தாலும் எல்லாவற்றிலும் அந்தப் பக்குவம் வேண்டும்
1.ஆன்மீகத்தை உங்களுக்குக் கொடுக்கின்றோம் என்றால் “பக்குவ நிலை பெறுவதற்குத் தான்” உணர்வுகளை அனுபவித்துச் சொல்கின்றோம்.
2.எம்மைப் போன்று நீங்களும் அனுபவரீதியில் தியானத்தை எடுத்து வளர்ந்தால் “உங்களைக் காப்பதற்கு உங்கள் எண்ணம் உதவும்…”