ஆக்கினை என்றால் என்ன…?

Kundalini yoga

ஆக்கினை என்றால் என்ன…?

மூலாதாரம் என்றால் நமக்குள் வரும் (நாம் சுவாசிக்கும்) இந்த உணர்வின் தன்மை எலும்பும்… இரத்தங்களும்… நரம்பு மண்டலமும்.. இந்த மூன்றும் சேர்த்து அங்கே அணுத் தன்மை ஜீவன் பெறச் செய்யக்கூடிய நிலைகளாகக் கவர்ந்து “விந்துடன் கலக்கும்…” ஜீவ அணுக்களாக மாற்றுகின்றது.
1.இது தான் மூலம் என்பது… மூலாதாரம் என்பது…!
2.அங்கே உயிரணுக்கள் தோற்றுவிக்கும் நிலைகள் வருகிறது என்றால்
3.இது வைத்தியரீதியில் அகஸ்தியன் கண்டது.

ஆக்கினை என்றால் நாம் எதை நுகர்கின்றோமோ இந்த உயிரின் தன்மை அங்கே ஆன பின் இந்த உணர்வுகள் நமக்குள் இயக்குகின்றது. இதையாவது குறைந்தபட்சம் தெரிந்து கொண்டால் பரவாயில்லை.

ஆக்கினை என்றால் நம் உணர்வின் தன்மை இதிலிருந்து (உயிரிலிருந்து) தான் ஆணையிடுகின்றது. இங்கே மூலாதாரத்தில் மாற்றுகின்றது என்று இந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் கொண்டு வரும் பொழுது அவர்கள் வித்தியாசமான நிலைகளில் கீழிருந்து என்று மாற்றிக் கொண்டு போகிறார்கள்.

1.மூலாதாரம் என்றால் நம் உயிர் மூலம்.
2.நாம் நுகரும் உணர்வுகளே ஆதாரம்.
3.ஆக எந்த உணர்வின் தன்மையோ அந்த ஆதாரத்தின் வழி கொண்டு தான்
4.இந்த உணர்வுகள் இயக்குகிறது என்று சாஸ்திரங்களும் வேதங்களும் கூறும் நிலைகள்.

இதிலே கண்ணன் மூலாதாரத்தைப் பற்றிக் கூறுகின்றான் என்று சொல்வார்கள். அவன் கூறிய மூலாதாரம் வேறு..! நுகர்ந்த உணர்வின் தன்மை எதனை.. எப்படி இயக்குகிறது…? என்பதை
1.எண்ணம் கொண்டு இந்தக் கண்கள் உண்டானது
2.கண்கள் கொண்டு எண்ணங்கள் உண்டானது
3.இப்படி ஒன்றுடன் ஒன்று எப்படி இணைந்தது என்று கீதையிலே இது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த உணர்வுகளை இவர்கள் வேறு விதமாக அவரவர்களுக்குத் தக்கவாறு மாறி “குண்டலினி யோகா… இராஜயோகா…” என்று பேர்களை மாற்றிக் கொண்டு ஆசனத்தை எடுத்துக் கொண்டாலும் இப்படிப் பல நிலைகளைக் கொண்டு வருகின்றனர்.

இதிலே வேதங்களில் மந்திரங்கள் கூறப்பட்டிருக்கும். மறைமுகமான மந்திரங்களை இவர்கள் சொல்லி விட்டால் இன்னொரு உடலில் பெற்ற உணர்வுகள் இவருக்குள் பதிந்து இந்த மந்திரத்தின் உணர்வும் அதே நிலைக்குப் பதிவு செய்தால் அதே உணர்வு கொண்டு அங்கே இயக்கும்.

ஏனென்றால்…
1.மந்திரங்கள் என்பது மனிதன் உணர்வை மீண்டும் தனக்குள் கவர்வது என்று பொருள்.
2.ஒரு மனிதன் உணர்வைப் பாய்ச்சப்பட்டு அதை அடக்கித் தனக்குள் கவர்ந்து கொள்வது என்பது அதர்வண வேதம்.

கோவில்களிலும் மற்றவைகளிலும் யாகங்கள் செய்வார்கள். அங்கே பல புகை மண்டலங்களை எழுப்பி அவன் சொல்லும் சொல்களை நாம் கூர்ந்து கவனிப்போம். ஆனால் கல்லுக்குச் சக்தி ஏற்றுவதாக நாம் நினைக்கின்றோம்.

ஆனால் நாம் கேட்டுணர்ந்து… நம் செவிகளில் பட்டு… அந்த உணர்வின் தன்மையை நுகர்ந்து… நமக்குள் ஒரு அணுத் தன்மையாக ஆகும் நிலையைக் கொண்டு வருகின்றனர்.

ஆகவே அவன் சொல்லும் உணர்வை நாம் அதிகமாகப் பெருக்கப்படும் பொழுது இந்த அணுக்களின் தன்மை வந்துவிடுகின்றது.
1.இப்படித்தான் அதர்வண வேதத்தில் ஒரு மனிதனின் உணர்வை மயக்கி அதாவது வசியம் செய்வார்கள்.
2.அடுத்து அந்த மனிதன் இறந்த பின் அதே மந்திரத்தைச் சொன்னால் கைவல்யம்.
3.பின் இந்த உணர்வின் தன்மை சொல்லாக வெளியிடப்படும் பொழுது ஏவல்..!

இப்படித்தான் மூலாதாரத்தில் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள் தொட்டவுடனே இதை ஏவல் பண்ணிவிடுவார்கள். நாம் கூர்ந்து கவனித்து அதன் மேல் நாட்டத்தைச் செலுத்தும் பொழுது செய்து விடுகின்றனர்.

ஆனால் யாம் இப்பொழுது இங்கே சொல்லப்படுவது உங்கள் நினைவு அனைத்துமே இயற்கையாக விளையும் தன்மைகளில் அங்கே சென்றடைகின்றது.
1.அந்த ஞானிகளின் அருள் உணர்வின் தன்மை அங்கே (உயிரிலே) ஆக்கினையாக மாறி
2.உடலுக்குள்அது கருத்தன்மை அடைகின்றது.

அந்த ஒளியின் உணர்வாக உயிர் எப்படி ஆனதோ அந்த உணர்வின் தன்மை பெறுவதற்காக வேண்டி இதைச் செய்கிறோம். ஏனென்றால் உங்களை அந்தத் துருவ நட்சத்திரத்திற்கே அழைத்துச் செல்கிறேன்.

அதிலிருந்து வரும் உணர்வுகள் ஒன்றி வரும் இந்த நேரத்தில் அதன் உணர்வுகள் அந்த அகஸ்தியன் எப்படித் துருவனாகித் துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமானானோ அதன் உணர்வை உங்களைப் பெறச் செய்வதற்கே உங்கள் நினைவாற்றலை இங்கே பரவப்படும் பொழுது அந்த உணர்ச்சிகளைத் தூண்டியவுடன்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உங்கள் ஆன்மாவாக மாறுகின்றது.
2.பின் அந்த நுகர்ந்த உணர்வுகள் அணுத் தன்மை அடைகின்றது.

இந்த அணுத் தன்மை உங்கள் உடல்களில் பெருகி விட்டால் உங்கள் ஆன்மாவில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் பெருகுகின்றது. அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் பெருகிவிட்டால் பகைமை என்ற நிலைகளைத் தடுத்து நிறுத்தும்.

இந்த உடலுக்குப் பின் ஏகாந்த நிலை கொண்டு… அண்டத்திலே என்றுமே ஒளியின் சுடராக.. “அழியாத நிலைகளில் வாழத் தொடங்கும்…!”

நாம் விழித்திருக்க வேண்டும்..! என்று ஞானிகள் சொன்னதன் மூலக் கருத்து என்ன…?

Prtecting force Polaris north star

நாம் விழித்திருக்க வேண்டும்..! என்று ஞானிகள் சொன்னதன் மூலக் கருத்து என்ன…?

 

உதாரணமாக நம்மிடம் ஒருவர் சண்டையிடுகிறார்… திட்டுகிறார்..! என்றால் அதற்குப் பின் நாம் தியானத்தில் அமர்ந்தால் “அந்த எண்ணங்கள் ஓடிக் கொண்டே இருக்கும்…!” அதை மாற்ற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள். அதைச் சுவாசியுங்கள்.

இந்த உணர்வுகளைச் சுவாசித்துக் கண்களை மூடுங்கள். அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணுங்கள்.

இப்பொழுது எவரால் நமக்குள் அந்தத் தீமையான உணர்வுகள் உந்தப்பட்டு நாம் தியானிக்க முடியாமல் இருக்கின்றதோ அவர்களுக்கும் அறியாத இருள் நீங்கி அவர்களும் பொருள் கண்டுணரும் சக்தி பெறவேண்டும் என்று எண்ணிவிடுங்கள்.

அப்பொழுது அவருடைய உணர்வுகள் நமக்குள் வருவது தணிந்து விடும். அதாவது எப்படிச் செடிகளுக்கு உரம் கொடுக்கின்றோமோ இதைப் போல நமக்குள் இருக்கும் நல்ல அணுக்களுக்கு இவ்வாறு சக்தி ஏற்றிக் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு மாற்றவில்லை என்றால்..
1.அவர்கள் உணர்வுகள் நமக்குள் விளைந்து..
2.அந்த அணுக்கள் – சண்டையிட்ட அவர் திட்டிய அந்த உணர்ச்சியை உந்தித் தனக்கு உணவாக எடுத்துக் கொள்கிறது.

மேலும் நீங்கள் தியானத்தில் அமர்ந்தாலே அவர்கள் அப்படிச் செய்கிறார்கள்… இப்படிச் செய்தார்கள்…! என்ற எண்ணங்கள் அதிகமாகி குறையாகப் பேசிய அணுக்கள் அதிகமாகி நம் நல்ல அணுக்களுடன் போர் செய்யத் தொடங்கும்.

1.அப்பொழுது நமக்குள் மனக் கலக்கம்… மன நோய்… போன்ற நிலைகள் எல்லாம் வரும்.
2.பின் உடல் நோய் அதிகரிக்கத் தொடங்கிவிடும்.
3.ஆக நமக்குள் மனிதன் என்ற ஆறாவது அறிவின் நிலைக்கே எட்டாதபடி நாம் ஐந்தாவது அறிவுக்கே திருப்பிக் கொண்டு போவோம்.

இதை எல்லாம் நாம் மாற்றியமைத்துப் பழக வேண்டும். நம் வாழ்க்கையே இப்படித் தியானமாக்க வேண்டும்.

அதை விட்டுவிட்டு முதலில் ஒரு பத்து நிமிடம் உட்கார்ந்து பழகிய பின் அடுத்து மணிக்கணக்கில் உட்கார்ந்து தியானத்தில் நான் சக்தி பெறுவேன் என்றால் அடுத்த கணம் நாம் வாழ்க்கையில் செல்லும் பொழுது முதலில் சொன்ன மாதிரி வரும்.

ஏனென்றால் இன்றைய மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் அதிர்ச்சியான செய்திகளையோ பிறர்படும் கஷ்டங்களையோ இப்படி எத்தனையோ நாம் கேட்கிறோம். காணாததற்கு பத்திரிக்கையும் டி.வி.யும் பார்க்கின்றோம்.

அதைப் பார்க்கும் பொழுது அரசியலில் பற்று இருந்தால் இப்படிச் செய்கிறார்கள்..! என்று வெறுப்படைவோம்.

இதை எல்லாம் பேசிக் கலந்து உரையாடினாலும் அடுத்த கணம் இந்த உணர்வுகள் மாறாதபடி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று ஏங்கிச் சுவாசியுங்கள்.

1.நாம் எதைக் கேட்டோமோ அதெல்லாம் நலம் பெறவேண்டும்…
2.நாடு நலம் பெறவேண்டும்…
3.அவர்கள் ஒன்றுபட்டு வாழ வேண்டும்…
4.தெளிந்த மனம் பெறவேண்டும்…! என்ற உணர்வுகளை நமக்குள் வளர்க்க வேண்டும்.

பிறருடைய உணர்வுகள் இப்படி வந்தாலும் நமக்குள் அது வளராது மாற்றியமைத்து இப்படி நல்ல அணுக்களை நாம் பெருக்கலாம்.

அந்த அருளைப் பெறவேண்டும் என்ற எண்ணங்கள் வரும் பொழுது இது சிறுத்து விடுகிறது… துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நமக்குள் பெருகி விடுகிறது…! அப்பொழுது அது நமக்குள் அடங்கி வந்து விடுகிறது.

அதே போல் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலேயும் நாம் தவறு செய்யாமலேயே சில தவறுகள் வந்துவிடும். ஒரு விபத்து நடந்து விட்டது…! என்று ஓடி வந்து ஒருவர் சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். உடனே ஆ…! என்று கேட்டுக் கொண்டே இருப்போம்.

1.இந்த உணர்வுகள் நமக்குள் பட்ட பின்
2.அவர் எந்த வகையில் விபத்தில் சிக்கினார்…! என்று சொன்னாரோ அதே உணர்வுகள் நமக்குள் தூண்டப்பட்டு
3.நாம் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தால் ஓரத்தில் போகவிடாமல்
4.நம்மை அறியாமலே நடு ரோட்டுக்கு அழைத்துச் செல்லும்.

ஏனென்றால் நாம் நுகர்ந்த உணர்வு நம்மை அறியாமலே இவ்வாறு அழைத்துச் செல்லும். ஆகவே இந்த மாதிரி “விபத்து மற்ற அதிர்ச்சியான விஷயங்களைக் கேள்விப்பட்டால்…” அடுத்த கணமே துருவ நட்சத்திரத்தை எண்ணி ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்,

அவர்கள் சிந்தித்துச் செயல்படும் தன்மையும் அவர்கள் உடல் நலம் பெறும் சக்தியும் அது பெறவேண்டும் என்ற எண்ணங்களை நாம் நமக்குள் அதை உருவாக்கிப் பழக வேண்டும்.

ஏனென்றால் அதை எல்லாம் நாம் நல்ல குணங்களுடன் பார்க்கும் பொழுது… பிறருடைய தீமைகளை நாம் நுகர்ந்து நுகர்ந்து அந்த அணுக்கள் நமக்குள் பெருகிப் பெருகி… நம் நல்ல குணங்களைச் செயலற்றதாக மாற்றிக் கொண்டேயுள்ளது.

மனக் கவலையும் மனக் குழப்பமும் ஆகி… எப்படி வாழ்வது…? என்ற நம் நிலையாகிப் பல திசைகளுக்கும் ஆளாக்கி விடுகின்றது.

ஆனால் யாம் சொன்ன முறைப்படி ஆத்ம சுத்தி செய்து அந்தத் துருவ நட்சத்திரத்துடன் தொடர்பு கொண்டு அதன் ஈர்ப்பிலேயே இருக்க வேண்டும். அப்பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தினைப் பற்றுடன் பற்றுகின்றோம்.

இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளை எல்லாம் நாம் பற்றற்றதாக மாற்றுகின்றோம். இது ஒரு பழக்கத்திற்கு வந்து… அந்த அணுக்கள் நமக்குள் பெருகி விட்டது என்றால் நம்மை அறியாமலே அந்த நல்ல சொல்கள் வந்துவிடும்.

ஒரு பாடலைப் பாடுகிறோம் என்றால் அது பதிவாகி விட்டது என்றால் அந்தப் பாடல் சீராக வரிசையாக வரும்.

ஆனால் பாடல் முழுவதுமாகப் பாடுகின்றார்கள் என்றாலும் இடைமறித்து ஒரு வரியை மட்டும் தனித்துச் சொல்ல வேண்டும் என்றால் இரண்டாவது தரம் அந்தப் பாடல் நமக்கு நினைவுக்கு வராது. மறுபடியும் முதலிலிருந்து பாடிக் கொண்டே வர வேண்டும்.
1.அந்த வரிசைப்படுத்தி வரப்படும் பொழுது நமக்குள் அதனின் தொடர் வரிசை வருகின்றது.
2.இடையிலே சிக்கி விட்டால் நமக்கு அந்த நினைவு வராது.
3.ஏனென்றால் அந்த உணர்வின் தன்மை நமக்குள் இயங்கி அதன் அடுத்தடுத்து அடுக்குகளில் வருகின்றது.

இதனால் தான் நமது வாழ்க்கையில் எப்பொழுதுமே விழித்திருத்தல் வேண்டும்… தீமைகள் புகாதபடி விழித்திருந்து பழக வேண்டும்…! என்று சொல்வது.

சிவன் இராத்திரி அன்று விழித்திரு…! என்று ஞானிகள் சொன்னதன் மூலக் கருத்தே இது தான்.

விஞ்ஞானி புதுப் புது தாவர இனங்களையும் உயிரினங்களையும் உருவாக்குகின்றான்… மெய் ஞானி ஒளியான அணுக்களை உனக்குள் நீ உருவாக்கு…! என்றான்

மனிதன் இராமலிங்கமாக மாறும் வழி

ramalingam rameswaram

மனிதன் இராமலிங்கமாக மாறும் வழி

1.கோவிலுக்குச் சென்று அர்ச்சனை செய்து உன் குறைகளை எல்லாம் சொன்னால் அவன் தீர்த்துத் தருவான்…
2.அதற்காக வேண்டி நீ காணிக்கை போடு… அதைப் போடு இதைப் போடு..
3.நேர்த்திக் கடனைச் செய் அதைச் செய்…! என்று சொல்லி விட்டார்கள்
4.பழனிக்குப் போனாலும் இது தான்… திருப்பதிக்குப் போனாலும் அது தான்.

ஆனால் அந்தக் கோவிலின் பண்புகளை நமக்கு யாரும் எடுத்துச் சொல்லவில்லை.

“ஏழு கொண்டலவாடா…” என்று தெலுங்கில் சொல்வார்கள். ஆறாவது அறிவை ஏழாவது நிலையாக “ஒளியாக மாற்ற வேண்டும்” என்று பொருள்.
1.ஏனென்றால் இந்த ஆறாவது அறிவை இயக்குவது உயிர்
2.ஆக இந்த உடலை ஆள்வது “பெருமாள்…”

திருவேங்கடாசலபதி…! இங்கே இந்த உடலில் இருப்பது எல்லாவற்றையும் ஆட்சி புரிந்து கொண்டிருக்கின்றான் என்ற தத்துவத்தைக் கொடுக்கின்றார்கள்.

அதை நாம் யாராவது புரிந்து கொண்டோமோ…? என்றால் இல்லை. தத்துவத்தை நமக்குத் தெளிவாக ஞானிகள் கொடுத்துள்ளார்கள்… யாரும் அதை மதிப்பதில்லை.

இங்கிருந்து அங்கே திருப்பதிக்குப் போய்க் காணிக்கையைப் போட்டால் “அவன் நமக்கு எல்லாம் செய்வான்…!” என்ற நம்பிக்கை தான்.
1.சாமிக்கு விலங்கு போட்டால் ஐய்யய்யோ…! என்பார்கள்
2.காசு குறைவாக இருப்பதால் விலங்கு போட்டுவிட்டு அப்புறம் சாமியை ஜெயிலிருந்து மீட்டுகிறார்களாம்…!

இப்படி நம்மை முட்டாளாக்கி வைத்திருக்கின்றார்கள்…!

இங்கே உபதேசத்தை நீங்கள் கேட்கிறீர்கள்…! எப்பொழுது உங்களுக்குள் என்ன நடக்கிறது…?

“அரங்கநாதன்…” நல்ல (ஞானிகளின்) உணர்வுகளை நீங்கள் கேட்கும் பொழுது உங்கள் உடலான அரங்கத்திற்குள் உயிர் என்ன செய்கிறது…? நாதங்களாக வெளிப்படுத்துகிறது. (அரங்கம் + நாதம்)

அந்த நாதங்கள் என்ன செய்கிறது..? சந்தோஷமான உணர்ச்சிகளை ஊட்டுகிறது. அது தான் அரங்கநாதன்,

அரங்கநாதனின் மனைவி யார்…? ஆண்டாள். அந்த உணர்ச்சிகள் தான் நம்மை ஆள்கிறது. ஆண்டாள்…! என்று தெளிவாகச் சொல்கிறார்கள்.

கோபமான உணர்வை நுகர்ந்தால் அரங்கநாதன் என்ன செய்கிறது…? அந்தக் கோபமான உணர்ச்சி தான் நம்மை ஆளும் ஆண்டாள்.

ஆனால் எல்லோரும் மகிழ்ந்து வாழ வேண்டும் என்ற உணர்வைச் சுவாசித்தால் அரங்கநாதன். இந்த அரங்கத்திற்குள் மகிழ்ந்து வாழும் அந்த உணர்வுகள் நம்மை ஆளும்.

1.காரணப் பெயரை வைத்துத் தெய்வங்களை உருவச் சிலைகளாக வைத்து
2.நாம் நம்மை அறிந்து வாழ்வதற்கு ஞானிகள் எவ்வளவு பெரிய சக்தியை ஊட்டியிருக்கின்றார்கள்…?
3.அதை நாம் உணர வேண்டுமல்லவா…!

ஏனென்றால் இந்த உடலில் கொஞ்ச நாள் தான் நாம் வாழ்கிறோம். சிறிது காலமே வாழும் இந்த மனித வாழ்க்கையில் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து வாழ்க்கையில் வரும் பகைமைகளை எல்லாம் அகற்றிடல் வேண்டும்.

எந்தப் பகைமையையும் நாம் இழுக்காதபடி வாழ்ந்து வந்தால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குப் போய்ச் சேர்கின்றோம். இராமலிங்கமாக ஆனது தான் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக ஆனது.

அங்கே சென்றால் பிறவியில்லா நிலை அடைகின்றோம். அந்தப் பிறவியில்லா நிலை அடையக்கூடிய சக்தியைத் தான் ஞானிகள் நமக்குக் கோவிலில் காட்டியிருக்கின்றார்கள்.

எங்கேயுமே இல்லாத தத்துவங்கள் நம் ஆலயங்களில் தான் உண்டு…!

First and fore most god

எங்கேயுமே இல்லாத தத்துவங்கள் நம் ஆலயங்களில் தான் உண்டு…!

 

பரிணாம வளர்ச்சியில் நல்ல குணங்கள் கொண்டு வளர்ந்ததால் தான் நாம் இன்று மனிதனாக வந்திருக்கின்றோம். ஆனால் நம் வாழ்க்கையில் சலிப்பு சஞ்சலம் சங்கடம் வெறுப்பு வேதனை என்ற உணர்வுகள் வந்துவிட்டால் நம் உடலில் நோயாக மாறுகின்றது.

அப்படி நோயாக மாறாது தடுக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்….?

நம் உடலில் மனிதனாக உருவாக்கக் காரணமான நல்ல குணங்களைத்தான் கோவில்களிலே தெய்வமாக வைத்துக் காண்பிக்கின்றார்கள்.

1.தெய்வத்திற்கு வைரக் கிரீடத்தை வைக்கின்றார்கள்
2.தங்க நகைகளைப் போடுகின்றார்கள்
3,அழகான பட்டாடைகளையும் உடுத்துகின்றார்கள்
4.மலர் மாலைகளையும் போடுகின்றார்கள்
5.கனிகளையும் வைக்கின்றார்கள்.
6.இருட்டறைக்குள் வைத்து திரையைப் போட்டு மூடி இத்தனை அலங்காரமும் செய்கிறார்கள்
7.திரையை நீக்கியவுடன்… அங்கிருக்கும் சாமி மங்கலாகத் தெரிகிறது… சரியாக உணர முடியவில்லை.

அப்படி என்கிற பொழுது விளக்கை வைத்துக் காண்பிக்கின்றார்கள். “விளக்கைக் காட்டியவுடன்” அங்கிருக்கும் பொருள்கள் எல்லாமே தெரிகிறது.

வைரக் கிரீடம் இருக்கிறது பட்டாடை தெரிகிறது நகைகள் தெரிகிறது கனிகள் தெரிகிறது… எதனால்…? இந்த விளக்கினால்…!

அப்பொழுது நம்முடைய ஆறாவது அறிவினால் அதைத் தெரிந்து கொள்கிறோம். ஆடு மாடுகளுக்கு இவை எல்லாம் தெரியுமோ…? அங்கே உணவுப் பொருள் இருந்தால் அதை உட்கொள்ளப் போகும். அந்தக் குணத்தை அறிய முடியாது.

1.ஆகவே மனிதர்கள் தெய்வ குணங்களைத் தெரிந்து கொள்வதற்குத் தான் உருவம் அமைத்தார்கள்..
2.இது துவைதம்…! விளக்கைக் காட்டும் பொழுது உருவம் தெரிகிறது.
3.அப்பொழுது நாம் எதை எண்ண வேண்டும்…?
4.பொருளறிந்து செயல்படும் இந்தச் சக்தி நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா…! என்று எண்ணுதல் வேண்டும்.
5.(அங்கிருக்கும் பொருள் எல்லாம் விளக்கினால் தெரிகிறது அல்லவா…!)

நம் பையன் வெளியிலே இரண்டு பேருடன் பழகி விளையாண்டு கொண்டிருக்கின்றான். அப்பொழுது அவர்கள் செய்யும் அதே குறும்புத்தனத்தை நம் பையனும் செய்யத் தொடங்குகிறான்.

நாம் என்ன சொல்கிறோம்…?

ஏண்டா அவர்களுடன் சேர்ந்து கெட்டுப் போகிறாய்..? என்று தான் நம் பையனைத் திட்டத் தெரிகிறது. ஆனால் அவனை மாற்றத் தெரிகிறதா..? தெரியவில்லை…!

அப்பொழுது அவர்களுடன் சேர்ந்து அந்த மாதிரி ஆகிவிட்டான்…! என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்..?

ஈஸ்வரா…! அவன் பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும். அந்தப் பையன்களிடம் சேராத நிலைகளில் நல்ல உணர்வு பெறவேண்டும் என்று நாம் நல்ல உணர்வுகளைப் பாய்ச்சுதல் வேண்டும்.

ஏனென்றால் அவர்களுடன் சேர்ந்ததால் தான் நம் பையனும் தவறு செய்கிறான்..! என்று அறிந்து கொள்கிறோம். அதற்காக வேண்டி மேலே சொன்ன நல்ல உணர்வைப் பாய்ச்சிவிட்டு
1.இந்த மாதிரி அவன் கெட்டவனப்பா…! அவனுடன் சேராதே…!
2.அதனால் தான் உனக்கு இடைஞ்சல் வருகிறது… நீ பார்த்துச் செய்யப்பா…!
3.நீ எவ்வளவு நல்லவனாக இருந்தாய்..! அவர்களுடன் சேர்ந்ததால் உனக்கும் இந்தக் குறும்புத்தனம் வந்ததல்லவா…! என்று சொல்லி
4.அருள் உணர்வைப் பாய்ச்சி அவனைத் திருத்த வேண்டும்.

அதே போல் உதாரணமாக வீட்டில் மருமகள் தரையைப் பெருக்கிச் சுத்தம் செய்து கொண்டிருக்கின்றார்கள். யாரோ வருகிறார்கள்…! என்று சொல்லி அவசரமாகக் கூட்ட வேண்டும் என்று செய்கிறார்கள்.

அதிலே கொஞ்சம் குப்பையை விட்டு விட்டால் போதும் மாமியார் பார்த்து என்ன செய்கிறது…? கூட்டுவதைப் பார்…! இங்கே இவ்வளவு குப்பை இருக்கிறது… அதைக் கூட்டத் தெரிகிறதா…?

மருமகள் மீது பிரியம் இருந்தால் அன்பாகச் சொல்லும். அன்பு இல்லை என்றால் இந்த மாதிரிக் குறையாகத் தான் சொல்லும்.

மருமகள் என்ன சொல்கிறது…? குப்பை இருக்கிறது…! என்று சொன்னால் நான் கூட்டி விடுகின்றேன். இதற்கு ஏன் இந்த மாதிரி வெடுக் என்று பேச வேண்டும்…? என்று மாமியாரை எண்ணுகிறது.

அப்பொழுது அந்த இடத்தில் என்ன நடக்கிறது…? ஒருவருக்கொருவர் பகைமையாகும் சந்தர்ப்பம் உருவாகிறது.

இந்த மாதிரி ஆகாமல் ஒருவருக்கொருவர் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்பதைக் காட்டுவதற்குத்தான் கோவிலில் விளக்கை வைத்துக் காட்டுகின்றார்கள்.

இந்தத் தெய்வ குணத்தைப் பெறவேண்டும்… வைரத்தைப் போல் எங்கள் சொல்லும் செயலும் வாழ்க்கையும் ஜொலிக்க வேண்டும்… தங்கத்தைப் போல் மங்காத மனம் நாங்கள் பெறவேண்டும்.. மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் நாங்கள் பெறவேண்டும்… கனியைப் போன்ற இனிமையான சொல்லும் செயலும் நாங்கள் பெறவேண்டும்…! என்று ஆலயத்தில் ஒவ்வொருவரும் எண்ணுதல் வேண்டும்…! இந்தச் சக்தி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

இப்படி ஆலயத்தில் காட்டியபடி மருமகள் எண்ணினால்
1.சரி… அத்தை அவர்கள் மனதில் ஏதோ நினைத்துச் சொல்கிறார்கள்.
2.அவர்களுக்கு என் மேல் நல்ல பிரியம் வர வேண்டும்
3.அரவணைத்துச் சொல்லும் அந்த நல்ல மனது வரவேண்டும் என்று எண்ணினால் அங்கே பகைமைகள் அகலுகிறது.

அதே போல் மாமியாரும் ஆலயத்தில் காட்டியபடி எண்ணினால்
1.மருமகளுக்குச் சிந்தித்துச் செயல்படும் சக்தி வர வேண்டும்
2.பொறுப்புடன் செயல்படும் சக்தி பெறவேண்டும் என்கிற பொழுது அங்கே குறைகள் அகலுகிறது.

இப்படி..
1.ஒவ்வொருவரும் அந்தப் பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும்
2.பரிபக்குவ நிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும்
3.சந்தர்ப்பவசத்தால் குடும்பத்தில் வரும் குறைகளை அகற்ற வேண்டும் என்று தான்
4.எங்கேயும் இல்லாத இந்தத் தத்துவங்களை நம் கோவில்களில் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.

ஞானிகள் காட்டிய அருள் வழியில் நாம் நடந்து பழக வேண்டும்.

வியாபாரமோ தொழிலோ எதனால் நஷ்டம் அடைகிறது…?

Real bahkti

வியாபாரமோ தொழிலோ எதனால் நஷ்டம் அடைகிறது…? 

 

நிறையப் பேர் என்ன சொல்கிறார்கள்… அல்லது நினைக்கின்றார்கள்… என்றால் “சாமி (ஞானகுரு) கோவிலுக்கே போகவேண்டாம்” என்று சொல்கிறார்… என்கிறார்கள்.

கோவிலுக்குள் செல்லும் பொழுது அந்த ஞானிகள் சொன்னதை நினைவுபடுத்தி அந்தத் தெய்வ நிலையை நாம் செயலாக்க வேண்டும் என்பதைத் தான் யாம் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

ஒரு கட்டிடம் கட்ட வேண்டும் என்றால் முதலில் பிளானைப் (PLAN) போடுகின்றீர்கள். வீட்டை எப்படிக் கட்ட வேண்டும் என்று அந்த அளவுகளைப் படத்தின் மூலம் எடுத்துக் கொண்டோம் என்றால் “இன்னென்ன இடத்தில் இது இது வருகிறது…” என்று அந்தப் படத்தைப் பார்த்தே அறிந்து கொள்கிறோம்.
1.இந்தப் படத்தைப் போட்ட பின் தான் எங்கே வீடு கட்டப் போகிறோமோ அந்த இடத்திற்குச் செல்கிறோம்.
2.அப்படி இல்லாமல் அங்கே போய் வரைகிறோமா…?

அதே போல் தான் கோவிலுக்குச் சென்று நாம் அந்தத் தெய்வ குணத்தின் சக்திகளை எடுக்கச் சொல்கிறோம். அதை எடுத்துக் கொண்ட பின்
1.உங்கள் வீட்டிலே…
2.உங்கள் வாழ்க்கையிலே..
3.உங்கள் தொழிலிலே…
4.நீங்கள் சம்பந்தப்பட்டிருக்கும் மற்ற எல்லாவற்றிலுமே
5.அதை எப்படி எப்படிப் பக்குவப்படுத்த வேண்டும் என்ற அந்த எண்ணங்கள் தெளிவாக வருகின்றது.
6.ஏனென்றால் கோவில் அவ்வளவு புனிதமான இடம்…!

பல கோடிச் சரீரங்களில் நல்ல குணங்களை வளர்த்து அதை உருவாக்கி மனிதனைச் சிந்திக்கச் செய்யும் சக்தி நம் உடலில் இருக்கின்றது.
1.அந்தத் தெய்வ குணத்தை உயர்த்து…!
2.அந்தத் தெய்வ நிலையை நீ பெறு…! இதற்குத் தான் கோவில்.

உதாரணமாக நாம் ரோட்டில் போகும் பொழுது ஒரு கண்ணாடி நம் காலில் பட்டு இடறுகின்றது. அடிபட்டதும் இரத்தம் வருகின்றது. உடனே நாம் என்ன சொல்கிறோம்…? நடு ரோட்டில் இப்படி அறிவு கெட்டதனமாகக் கண்ணாடியைப் போட்டிருக்கின்றார்கள் பார்…! என்று சொல்வோம்.

அந்த உணர்ச்சி வேகத்தில்… யார் போட்டார்களோ அவர்கள் நாசமாகப் போகவேண்டும்…! என்றும் சொல்கிறோம். இதே உணர்வு நமக்குள் என்ன செய்கிறது..?

அதே நாசப்படுத்தும் எண்ணங்களை அதிகப்படுத்தி நம் நல்ல குணங்களை அழிக்கின்றது.

ஏனென்றால் “நாசமாகப் போக வேண்டும்…” என்ற நினைவை எடுக்கின்றோம். அடுத்தாற்போல் நம்முடைய வியாபாரத்திற்காக வேண்டிய ஒரு சரக்கை வாங்கச் செல்கிறோம் என்றால் அங்கே சென்றவுடன் நம் கண்களில் அந்த (நாசமாக்கும்) உணர்வு தான் வரும்.

நல்ல சரக்கை நீங்கள் பார்க்கவே முடியாது.

உங்கள் மனம் என்ன செய்யும்…? அங்கே இருக்கும் மட்டமான சரக்கை எடுத்து அதை வாங்கி இதை வைத்து வியாபாரம் செய்யலாம்… விலை மிகவும் சகாயமாக இருக்கின்றது… என்று நினைப்போம்.

வாங்கி வந்த பின் வியாபாரம் சரியாக இருக்காது… யாரும் வாங்கவில்லை என்கிற போது நஷ்டமாகிவிடும். அந்த நேரத்தில் ஒரு நல்ல சரக்கை எடுத்துக் கொடுத்தாலும் கூட அதைப் பயன்படுத்துபவனுக்கு அது மட்டமாகிவிடும். அப்பொழுது
1.அதை வாங்கிச் சென்றவன் என்ன சொல்வான்…?
2.இந்தக் கடைக்குப் போனால் வெறும் மட்டமான சரக்கைக் கொடுக்கின்றான் என்று
3.வாடிக்கையாக வாங்கும் ஆளும் நம்மை விட்டுப் போய்விடுவார்.
4.ஆக… கடைசியில் நாசமாகப் போவது யார்…? கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்…!

நாம் எடுத்துக் கொண்ட அந்த உணர்வுகள்… அதைத்தான் கீதையிலே நீ எதை நினைக்கின்றாயோ… நீ அதுவாகின்றாய்…! என்று கண்ணன் சொல்வதாக வியாசகர் தெளிவாக்குகின்றார்.

நாம் எடுக்கும் எண்ணங்கள் அந்தக் கண்களுக்குத் தான் வரும். அதன் உணர்வு கொண்டு தான் நாம் தேர்ந்தெடுப்போம்.

வேதனையான உணர்வுடன் இருக்கும் பொழுது பாருங்கள்…! சமைக்க வேண்டும் என்று அரிசியை எடுத்தால் அதிலே கல் நிறைய இருக்கும்.

கோபமான நிலையில் இருக்கும் பொழுது பாருங்கள்… மிளகாயைப் பார்த்தால் மிகவும் இரசிப்பாக இருக்கும். சமையல் செய்யும் பொழுது ஒரு மிளகாயை அதிகமாகப் போட்டுவிடுவோம். சாப்பிடுபவர்கள் உஸ்…உஸ்… எரியுதே..! என்பார்கள்

கண்களின் இயக்கத்தைப் பற்றி அன்று வியாசகர் எவ்வளவு தெளிவாகக் கீதா உபதேசத்திலும் மகாபாரதத்திலும் எழுதியிருக்கிறார் என்று பார்த்தீர்கள் என்றால் அந்தப் பேருண்மைகளை நீங்கள் அறிய முடியும்.

நமது வாழ்க்கையில் நம்மை அறியாமல் வரும் தீமைகளைத் தன் ஆறாவது அறிவு கொண்டு எப்படிச் சமப்படுத்தி வாழ வேண்டும் என்பதைக் காட்டுவதற்குத்தான் ஆலயங்களை அமைத்தனர் ஞானிகள்.

1.கண்களால் பல நிலைகளை அறிந்து பதிவாக்குவதும்
2.கண்களால் கவர்ந்த உணர்வுகளை உயிருடன் இணைப்பதும்
3.உயிரின் நிலைகள் அதைச் செயலாக்குவதும்
4.அந்த உணர்ச்சிகள் நம்மை எப்படி இயக்கி.. நமக்குள் உருவாக்கி.. அதுவாக நம்மை எப்படி ஆக்குகிறது..? என்றும்
5.ஆயிரத்தி எட்டு குணங்களாக ஆலயத்திலே தெளிவாக்கப்பட்டுள்ளது.

அதே கண்கள் கொண்டு உற்றுப் பார்த்து அந்தத் தெய்வச் சிலைகளில் காட்டிய தெய்வ குணங்களை நமக்குள் எடுத்து அதை நாம் பெறவேண்டும்… எங்கள் குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் பெறவேண்டும்… இங்கு வருவோர் அனைவரும் அந்தத் தெய்வ குனத்தைப் பெறவேண்டும்.. என்று எண்ணினால் எப்படி இருக்கும்…!

1.நாம் அந்தத் தெய்வமாகவே ஆகின்றோம்…!
2.பண்படுத்தும் உணர்வுகள் நமக்குள் விளைகின்றது,
3.நம் சொல் செயல் பிறரைப் பண்படுத்தும் நிலையாக உருவாகின்றது.

இந்த உடலுக்குள் இருக்கும் சக்தியின் நிலைகளைத்தான் அங்கே தெளிவாக்குகின்றார்கள். நீ எதை எப்படி வளர்க்க வேண்டும்… எதன் வழி நீ வாழ வேண்டும்…? என்றும் ஞானிகள் காட்டுகின்றார்கள்,

சுவைமிக்க கனிகளைத் தெய்வத்திற்குப் படைப்பதன் நோக்கம் என்ன…?

Adi Sankara Advaitam

சுவைமிக்க கனிகளைத் தெய்வத்திற்குப் படைப்பதன் நோக்கம் என்ன…?

 

கோவிலில் சாமிக்குப் பழம் வைத்துப் படைத்து விட்டுப் பின் அதைச் சாப்பிடுகின்றோம். ஆனால் அந்தக் கனிகளை ஏன் படைக்கின்றோம்… என்பதைப் பற்றி அறிந்திருக்கின்றோமா…?

என் சொல்லைக் கேட்போர் அவர்கள் வாழ்வில் அந்தக் கனியைப் போன்ற இனிமை பெறவேண்டும். இந்தக் கோவிலுக்கு வருவோர் அனைவரும் அந்தக் கனியைப் போன்ற இனிமையான நிலைகள் பெறவேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்…! என்பதற்கே ஞானிகள் அதைப் படைக்கச் சொன்னார்கள்.

இதை எதற்காக இப்படி எண்ணச் சொல்கிறார்கள்…?

வீட்டில் நம்முடைய பையன் இருப்பான். சொன்னபடி கேட்கவில்லை… என்று அவனைத் திட்டியிருப்போம். அந்தக் கோபமான உணர்வும் வெறுப்பான உணர்வும் நமக்குள் இருக்கும்.

வேலையிலிருந்து வீட்டுக்குச் சாப்பாட்டுக்காக வந்திருப்பீர்கள். நீங்கள் எவ்வளவு தான் சந்தோஷமாக இருந்தாலும் கூட
1.நீங்கள் வந்த நேரத்திற்கு… உடனே சாப்பாடு வரவில்லை என்றால்
2.சுர்..ர்ர் என்று உங்களுக்குக் கொஞ்சம் கோபம் வரும்.
3.என்னா… நேரம் ஆகிப் போய்விட்டதா…? அந்த வெறுப்பின் உணர்வு இங்கே வளரும்.

இரண்டு தரம் இப்படிக் காலதாமதமாகினால் போதும். நம்முடைய இந்த நினைவும்… நம்முடைய கடும் சொல்லும் இப்படி வந்தவுடனே அவர்களை இந்த எண்ணமே சீராக வேலை செய்யவிடாமல் தடுக்கும்.

ஆனால் நாம் என்ன நினைப்போம்…?

1.உன் வேலையே இப்படித்தான்…! என்ற வகையிலே
2.இந்த உணர்வுகளை வளர்த்தவுடனே பகைமையை உண்டாக்கிவிடும்.
3.அப்படி உருவாகும் பகைமையைத் துடைக்கின்றோமா… என்றால் இல்லை…!

தெருவில் சண்டை போட்டவர்களைப் பார்த்திருப்போம். அப்பொழுது சண்டையிடும் உணர்வுகள் நமக்குள் பதிவாகின்றது. மற்ற வேதனைப்பட்டவர்களைப் பார்த்திருப்போம். அந்த வேதனைப்படுபவரிடமிருந்து வேதனையான சொல் தான் வரும். அதுவும் நமக்குள் பதிவாகின்றது.

இப்படி எத்தனையோ வகையில் பிற தீமைகள் நமக்குள் வருகிறது. அதை எல்லாம் நாம் குறைப்பதே இல்லை. ஆக அந்தத் தீமையின் விளைவுகளை எல்லாம் குறைப்பதற்குத்தான் “கோவிலிலே அந்தப் பொது விதிகளைக் காட்டுகின்றார்கள்…!”

1.நாங்கள் பார்ப்போர் அனைவரும் அந்தக் கனியைப் போன்ற இனிமையான சொல்லும் செயலும் பெறவேண்டும்
2.இந்தக் கோவிலுக்கு வருவோர் அனைவருக்கும் இந்த இனிமையான நிலைகள் பெறவேண்டும் என்று எண்ணி
3.அந்த இனிமையான உணர்வுகளை நாம் நுகர்ந்து எடுக்கும்படி சொல்கிறார்கள்.

ஏனென்றால் அந்தக் கோவிலுக்கு நம் பிள்ளையும் வருகின்றது… மனைவியும் வருகின்றது… மற்றவர்களும் வருகின்றார்கள். அந்த எல்லோருடைய உணர்வும் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கின்றது.

இந்தக் கோவிலுக்கு வருவோர் அனைவரும் கனியைப் போன்ற இனிமையான சொல்லும் செயலும் பெறவேண்டும் என்று அங்கே எண்ணும் பொழுது அவர்கள் மீது இருக்கும் பகைமைகளை எல்லாம் மொத்தமாக மாற்றி விடுகின்றோம்.

பகைமைகளை மறந்து ஒன்றுபட்டு வாழும் தன்மை வருகின்றது. நம் சொல்லிலே இனிமையும் பார்வையில் கனிவும் மகிழ்ந்து வாழும் சக்தியையும் நாம் ஒவ்வொருவரும் பெறுகின்றோம். இது தான் ஆதிசங்கரர் காட்டிய உண்மையான அத்வைதம்.

அங்கே அந்த ஆலயத்தில் காட்டியபடி… “இந்தத் தெய்வம் காப்பாற்றும்…!” என்ற நிலையில்
1.தெய்வ குணத்தை நாம் பெறவேண்டும்..
2.அந்தத் தெய்வீக நிலையை நாம் பெறவேண்டும்… என்கிற பொழுது
3.நாம் இதை எல்லாம் எண்ணினோம் என்றால் அந்தத் தெய்வ குணத்தையும் தெய்வ நிலையையும் நாம் பெறுகின்றோம்.
4.அப்பொழுது அந்த எண்ணம் நம்மைக் காக்கின்றது,
5.நம் சொல்லைக் கேட்போர் மற்றவர்களையும் அது காப்பாற்றுகின்றது.

சொல்வது அர்த்தமாகின்றது அல்லவா…! இது தான் நம் ஞானிகளால் கொடுக்கப்பட்டுள்ள கோவிலின் உண்மை நிலைகள்…!

கோவில் என்பது குறைகளையும் குற்றங்களையும் வேதனைகளையும் சொல்லி அழுகும் இடமல்ல..!

treasure-in-temple.jpg

கோவில் என்பது குறைகளையும் குற்றங்களையும் வேதனைகளையும் சொல்லி அழுகும் இடமல்ல..!

சீதாவை இராவணன் சிறைப்பிடித்துச் சென்று “எத்தனையோ கொடுமைப்படுத்தினான்..!” என்று வேதனைப்படுகின்றோம். ஏன் இராமனே கர்ப்பிணியான சீதாவைக் காட்டில் கொண்டு போய் விட்டான்..! என்று வேதனைப்படுகிறோம்.

இராமன் நான் மக்களுக்காக வேண்டி இதைச் செய்கிறேன்…! மக்கள் என்னைக் குறையாகச் சொல்கிறார்கள் நீ போ….! என்று கர்ப்பிணியான சீதாவைக் காட்டில் தள்ளி விட்டால் அது என்ன செய்யும்…?

இராமாயணக் காவியத்தைப் படித்துப் பாருங்கள். ஏனென்றால் நாம் நுகரும் உணர்வுகள் சீதா இராமா. அந்த மகிழ்ச்சியான எண்ணங்கள் நமக்குள் அந்த உணர்ச்சியைத் தூண்ட வேண்டும். நாம் தூண்டுகின்றோமா…?

1.கண்ணிலே பார்ப்பது துவைதம்
2.நுகர்ந்து (சுவாசித்து) அறிவது அத்வைதம்
3.சுவாசித்தது நம் உயிரிலே பட்ட பின் அந்த உணர்வின் தன்மை விசிஷ்டாத்வைதம்.

தூய்மையான உணர்வை உன் உடல் ஆக ஆக்கு. இது தான் கோவிலின் தத்துவம். ஆனால்
1.கோவிலுக்குப் போய் எத்தனை பேர் அழுகாமல் வருகின்றார்கள்..?
2.அங்கே குறைகளைச் சொல்லாதவர்கள் யார்…?

“சரணாகதித் தத்துவம்” என்று ஒன்றை மட்டும் பழகி வைத்திருக்கின்றோம். காசைக் கொடுத்து அபிஷேகம் எல்லாம் செய்து பழம் மற்ற பொருள்களை எல்லாம் கொடுத்து அங்கே குறைகளைத் தான் சொல்லிக் கொண்டிருக்கின்றோம்.

கோவிலை மதிக்கின்றோமா…? நம் உடலைக் கோவிலாக மதிக்கின்றோமா…? உயிரை ஈசனா மதிக்கின்றோமா…? ஆக கோவிலுக்குச் சென்று எதை அபிஷேகம் செய்கிறோம்…?

குறைகளையும் குற்றங்களையும் வேதனைகளையும் சொல்லி உயிரால் உருவாக்கப்பட்ட உடலான ஆலயத்தை அசுத்தப்படுத்துகின்றோம். நன்மை ஏதாவது செய்கிறோமா…!

சில குடும்பங்களில் அண்ணன் தம்பிக்குள் ஒற்றுமை இல்லாது போய்விடுகிறது. எத்தனையோ பேர் பஞ்சாயத்துப் பண்ணினாலும் ஒன்றும் அது முடியவே முடியாது

ஒருத்தருக்கு ஒருத்தர் அண்ணன் தம்பிக்குள் வீராப்பு செய்து கொண்டு கடைசியில்…
1.தன் உடலில் நோய்களைத் தான் உருவாக்கிக் கொள்கிறார்களே தவிர
2.இந்த உடலுக்குப் பின் நாம் எங்கே போக வேண்டும் என்பதை மறந்து விட்டார்கள்.

ஆனால் நாம் நுகர்ந்த அந்த உணர்வுகளை எல்லாம் நம் உயிர் படைத்தே தீரும். அதை நாம் அனுபவித்தே தான் தீர வேண்டும். அதிலிருந்து தப்ப முடியாது.

ஏனென்றால் நாம் நுகர்ந்த உணர்வை எல்லாம் நம் உயிர் இயக்கிக் காட்டுகிறது. அப்பொழுது நம் ஆறாவது அறிவை வைத்து வரும் தீமைகளைத் துடைக்க வேண்டுமா… இல்லையா,..?

1.தீமைகளைத் துடைப்பதற்கு.. நம் ஆறாவது அறிவை எப்படிப் பயன்படுத்துவது…? என்பதைத்தான்
2.ஆலயங்களிலும் காவியங்களிலும் ஞானிகள் தெளிவாகக் காட்டியுள்ளார்கள்.

உணவாக உட்கொள்ளும் உணவில் மறைந்துள்ள நஞ்சை மலமாக மாற்றிடும் ஆறாவது அறிவைச் சரியான நிலையில் பயன்படுத்துவதற்காக உருவம் அமைத்து தெய்வச் சிலைகளுக்குப் பாலபிஷேகம் சந்தனம் அபிஷேகம் பன்னீர் அபிஷேகம் செய்து அதைக் காட்டுகின்றனர்.

அதைப் (துவைதம்) பார்த்ததும்…
1.எங்கள் குழந்தைகள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.குடும்பத்திலுள்ளோர் எல்லோரும் ஒரு ஆனந்த நிலை பெற வேண்டும்
3.எங்கள் வீட்டிற்கு வரும் அனைவரும் ஆனந்த நிலை பெற வேண்டும்
4.எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் அந்தப் பாலை போல மனம் பெற வேண்டும்
5.ஒன்றுபட்டு வாழும் அந்த அருள் சக்தியும் பண்புடன் வாழும் அருள் சக்தியும் எல்லோரும் பெற வேண்டும் என்று
6.சாமிக்கு அந்த அபிஷேகம் செய்யும் பொழுது இப்படி எல்லாம் எண்ணினால் (அத்வைதம்) ஒன்றுபட்டு வருமா வராதா…?

அந்த உயர்ந்த உணர்வுகள் நம் ஒவ்வொருவருக்குள்ளும் விளையும் (விசிஷ்டாத்வைதம்). இதைத் தூண்டுவதற்குத் தான் ஞானிகள் சிலையை வைத்தார்களே தவிர
1.அங்கே போய் கஷ்டத்தை எல்லாம் சொல்லி
2.நான் அந்த அத்தனை நேரம் உனக்கு விரதம் இருந்தேன்… என்னை ஏன் இன்னும் சோதிக்கின்றாய் என்று அழுது புலம்புவதற்காக அல்ல…!

ஆகவே நம்மைச் சுத்தப்படுத்துவதற்காக ஞானிகள் கட்டிய கோவிலை நாம் அசுத்தப்படுத்தலாமா…?

என் பையனுக்கு அந்த அருள் ஞானம் கிடைக்க வேண்டும். அவன் தெளிந்த மனம் பெற வேண்டும் என் குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் அருள் ஞானம் பெறவேண்டும் நாங்கள் பார்க்கும் அனைவரும் மகிழ்ந்து வாழ வேண்டும் என்று எண்ண வைப்பதற்குத்தான் கோவிலைக் கட்டினார்கள்.

ஈசனுக்குச் செய்ய வேண்டிய அபிஷேகத்தை நாம் செய்கிறோமா…?

Abishekam - temple

ஈசனுக்குச் செய்ய வேண்டிய அபிஷேகத்தை நாம் செய்கிறோமா…?

கோவிலுக்குச் செல்பவர்கள் இன்றைய வழக்கத்தில் என்ன செய்கிறார்கள்..?

பால் அபிஷேகத்திற்குக் சாசு எல்லாம் கொடுத்து விட்டு என் பையனுக்கு அத்தனை செலவழித்தேனே.. அவன் இப்படி ஆகிவிட்டானே…! என்று வேதனையைத் தான் எண்ணுகிறார்கள்.

அங்கே சாமிக்குச் சந்தனம் அபிசேகம் செய்யும் போது பார்த்தால் இங்கே இவர்களுக்குக் கண்ணில் தண்ணீர் வரும். அழுது கொண்டிருப்பார்கள். ஆக அங்கே குறையைத்தான் எண்ணிச் சொல்கிறார்கள்.

1.என் பையன் இப்படி இருக்கிறான்.
2.என் வீட்டுக்காரர் இப்படி எல்லாம் பேசுகிறார்.
3.என் மாமியார் இப்படிப் பேசுகிறார்கள்
4.என் நாத்தனார் இப்படிப் பேசுகிறது
5.பக்கத்து வீட்டில் இடைஞ்சல் செய்கிறார்கள் என்று
6.வரிசையில் இதைத்தான் கோவிலில் அடுக்கிக் கொண்டு போகிறார்கள்.

அங்கே சந்தோஷத்தை ஊட்டும் நிலையில்லாதபடி அதை மொத்தமாகவே சிறைப்பிடித்து விடுகிறார்கள். சீதாவை இராவணன் என்ன செய்கிறான்…? சிறைப் பிடித்து வைத்துக் கொள்கிறான்.

1.அதாவது சுவாசித்த அந்த அரக்க உணர்வுகள் உங்களுக்குள் சேர்த்துக் கொண்ட பின்
2.அடுத்து நல்லதை அங்கே பேச முடியவில்லை…!

இராமாயணத்தில் இதை எல்லாம் தெளிவாகவே கொடுக்கின்றார்கள். ஆனால் நாம் அதைப் புரிந்து கொண்டோமா என்றால் இல்லை…!

இன்றைக்குப் பண்புடன் இருக்கிறோம் பாசத்துடன் இருக்கிறோம். நம்முடைய குழந்தைகள் நன்றாகப் படிக்க வேண்டும் என்று நினைக்கிறோம்.

ஆனால் அவனுக்குச் சரியாகப் படிப்பு வரவில்லை என்றால் அவன் படிக்கவில்லையே.. படிக்கவில்லையே…! என்று எண்ணி வேதனைப்படுகிறோம். வேதனை உணர்வுகள் நமக்குள் வந்துவிடுகின்றது.

அதை எல்லாம் நீக்குவதற்காகத் தான்
1.நம் உடலில் உள்ள ஆயிரத்தி எட்டு குணங்களையும் கோவில்களில் சிலைகளாக வடித்து வைத்து
2.அது ஒவ்வொன்றும் என்னென்ன செய்யும் என்று காட்டியிருக்கின்றார்கள்.

சிவாலயம் ஆனாலும் பெருமாள் கோவிலாக இருந்தாலும் மற்ற எந்தக் கோவிலாக இருந்தாலும் நம் உடலில் நடக்கக் கூடியதைச் சிலைகளாக உருவமாக்கி நாம் எப்படி வணங்க வேண்டும் என்று காட்டினார்கள் ஞானிகள்.

நம் பையன் தவறு செய்கிறான் என்றல் உற்றுப் பார்க்கின்றோம். அந்த உணர்வை நாம் நுகர்ந்தால் நம் உயிரிலே “அபிஷேகம்” நடக்கின்றது.

ஆக அவனின் தவறான செயலைப் பார்த்ததும் நமக்கு எரிச்சல் ஆகின்றது. அதை நம் உடலில் சேர்க்கப்படும் போது எரிச்சலான உணர்வையே மீண்டும் நமக்குள் கூட்டுகின்றது.

எரிச்சன் ஆன பின் பையனிடம் “ஏன்டா இப்படிச் செய்கிறாய்…?” என்று கேட்டால் இது அவனுடைய உயிரில் “அபிஷேகம்” நடக்கிறது. அவன் உடலில் எரிச்சல் ஆகிறது.

தாயோ தந்தையோ யார் சொன்னாலும் அவர்கள் மேல் அவனுக்கு வெறுப்பு வருகின்றது. ஆனால் அவர்கள் தப்பு செய்யவில்லை.

1.மனிதன் சந்தர்ப்பத்தல் தனக்குள் நுகர்ந்த உணர்வுகள் அது எப்படிக் கெடுதலாக அமைகின்றது…?
2.அதை எப்படி நல்லதாக மாற்றிக் கொள்ள வேண்டும்…? என்பதனை
3.ஆலயத்தில் அன்று ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

எப்படி…?

சாமி சிலைக்கு அபிஷேகம் செய்வதாகக் காட்டுகின்றார்கள். பாலாபிஷேகம் சந்தனாபிஷேகம் பன்னீர் அபிஷேகம் என்று எத்தனையோ அபிஷேகங்கள் செய்கிறார்கள்.

அதைப் பார்த்ததும் நாம் எதை எண்ண வேண்டும்…?

1.அந்தப் பாலைப் போன்ற மனம் நாங்கள் பெற வேண்டும்.
2.என் பையனுக்கு அந்தப் பாலைப் போல மனம் வர வேண்டும்.
3.எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் பாலைப் போல ஒரு தெளிந்த மணம் பெற வேண்டும்.
4.சந்தனத்தைப் போல நறுமணம் நாங்கள் பெற வேண்டும்
5.எங்கள் குடும்பத்தில் என் கணவருக்கு என் பிள்ளைக்கு எல்லாருக்கும் சந்தனத்தைப் போன்ற நறுமணம் கிடைக்க வேண்டும் என்று எண்ணிடல் வேண்டும்.

அங்கே சாமி சிலைக்கு அபிஷேகத்தை நடத்தும் போது மற்றவர்கள் செய்யும் தவறுகளை நாம் எண்ணினால் அந்த உணர்வுகள் தான் நமக்குள் அபிஷேகம் நடக்கிறது.

அந்த உணர்வின் தன்மை உயிரான ஈசனுக்குள் பட்டு நம் உடலுக்குள்ளும் போகின்றது. நாம் எதைச் சுவாசிக்கிறோமோ அதற்குத் தகுந்த மாதிரித்தான் நம் உடலில் உள்ள எல்லா அணுக்களுக்கும் இது சாப்பாடாகக் கிடைக்கும்.

ஆகையினால் நல்ல அணுக்களை வளர்க்க வேண்டும் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்..?

அங்கே பாலாபிஷேகமோ சந்தனாபிஷேகமோ செய்யும் பொழுது நாம் எண்ண வேண்டியது
1.பாலைப் போன்ற தூய்மையான மனம் என் பையனுக்கு வர வேண்டும்…
2.அவனுக்குத் தெளிந்த மனம் வர வேண்டும்
3.மகிழ்ந்து வாழும் சக்தி அவனுக்குக் கிடைக்க வேண்டும் என்று இப்படித் தான் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

இதைச் செய்தால் நமக்குள் வந்த எரிச்சலை மாற்ற முடியும். பையனுக்கும் சரி மற்றவர்களுக்கும் சரி அந்தப் பக்குவமான நிலையில் சொல்லப்படும் பொழுது அங்கேயும் எரிச்சல் ஆகாது.. வெறுப்பு வராது.. மகிழ்ந்திடும் உணர்வுகள் வரும்.

செய்து பாருங்கள்…!

சிரமமான நேரங்களில் நல்ல உணர்வுகளை எப்படிக் கொண்டு வருவது…?

Bhakti and Meditation

சிரமமான நேரங்களில் நல்ல உணர்வுகளை எப்படிக் கொண்டு வருவது…?

 

சாமி சிலைக்குப் பாலாபிஷேகம் செய்யும் போது சில பேரைப் பாருங்கள். வீட்டில் இருக்கின்ற கஷ்டத்தை எல்லாம் சொல்வார்கள்.
1.நான் இப்படி இருக்கின்றேனே…!
2.உனக்கு எத்தனை தடவை பாலாபிஷேகம் செய்திருக்கின்றேன்…?
3.குடும்பத்தில் எத்தனை தொல்லைகள் வந்து கொண்டே இருக்கிறது…?
4.பக்கத்து வீட்டுக்காரனைப் பார்… என்னை எப்படி எல்லாம் பேசுகிறான்..
5.கேட்கும் நேரம் எல்லாம் அவனுக்குக் காசு கொடுத்தேன்… அதைக் கேட்கப் போனால் என்னை எத்தனை திட்டு திட்டுகிறான்..? என்று
6.இப்படி வரிசையாக அடுக்கிக் கொண்டே போவார்கள்.

ஆனால் கடனை வாங்கியவருக்கு எல்லாம் திரும்பக் கொடுக்க வேண்டும் என்ற பிரியம் இருக்கிறது. ஆனால் அவர்களுக்கு வரவேண்டிய காசு வரவில்லை.

நாம் இரண்டு தடவை நடந்திருப்போம். மூன்றாவது தரம் போகப்போகும் போது என்ன செய்கிறோம்…?

இப்படி எல்லாம் சொல்லிக் கொண்டு இருந்தால் ஒன்றும் நடக்காது.. பணம் கொடுக்க மாட்டார்கள்…! என்று “பணம் கொடுக்கவில்லையே” என்று கோபமாகப் பேசி அந்த வெறுப்பாகின்றோம்.

இப்படி ஒரு தரம் வெறுப்பாகப் பேசிக் கொண்டு வந்தால் போதும். நமக்குப் பணம் திரும்பக் கொடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருந்தார்கள் பாருங்கள்.
1.அதற்குக் கூட அவர்களுக்கு வருமானம் வராதபடி
2.இந்த வெறுப்பாகப் பேசிய உணர்வுகள் அங்கே அவர்களுக்குத் தொல்லை செய்யும்.

ஏனென்றால் இந்த உணர்வுகள் அங்கே வேதனைப்படும் செயலாக அவர்களை இயக்கத்தான் செய்யும். அதனால் அவர்களுக்கு வியாபாரம் இல்லாமல் போகும்.

நாம் பணம் கேட்கப் போகும் போதெல்லாம் இன்னும் கொஞ்சம் கோபித்துக் கொண்டே வருவோம். இங்கே இவர்களிடம் கோபித்துக் கொண்டு வந்த பின் அதே உணர்வுடன் அடுத்த இடத்தில் பணம் கேட்டால் அங்கேயும் வராது.

பணம் வரவில்லை என்கிற பொழுது நம் குழந்தைகள் கிட்டேயும் சீறிப் பாய்வோம். அந்த மாதிரி நேரத்தில் சொந்தபந்தம் யாராவது வந்தாலும் அவர்கள் அன்பை இழந்து விடுவோம்.

முதலில் எங்கள் வீட்டிற்குச் சாப்பாட்டுக்கு வாருங்கள்…! என்று அவர்களிடம் சொல்லியிருப்போம். ஆனால் அந்தச் சிரமான நேரத்தில் அந்தச் சொந்தக்காரர்கள் வீட்டிற்குள் வந்தால் போதும்.

இந்த நேரத்திற்கு வந்திருக்கின்றார்கள் பார்… சாப்பாட்டுக்கு…! என்று தன்னை அறியாமலேயே அவர்களைப் பகைமையாக மாற்றுகிறது. அதை யார் செய்தது….?

நாம் நுகர்ந்த அந்த உணர்வுகள் நம்மை அப்படிச் செயல்படுத்துகிறது.

இதை எல்லாம் நாம் தெளிவாக அறிந்து கொள்வதற்குத் தான் சிலையை வைத்து “இந்தத் தெய்வம் நல்லது செய்யும்…!” என்று ஆலயங்களில் காட்டினார்கள் ஞானிகள்.

அங்கே சாமிக்கு அபிஷேகம் செய்யும் பொழுது
1.பாலைப் போல் மனம் நாங்கள் பெற வேண்டும்.
2.சந்தனத்தை போல் நறுமணம் நாங்கள் பெற வேண்டும்
3.பன்னீரைப் போல் ஒரு தெளிந்த மணம் நாங்கள் பெற வேண்டும்
4.இந்த ஆலயம் வருவோர் அனைவருக்கும் அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று
5.இந்த உணர்வை எல்லாம் நுகர்ந்தால் நமக்குள் இங்கே அபிஷேகம் நடக்கின்றது
6.அந்த உணர்ச்சிகள் நம் உடல் முழுவதும் பரவுகின்றது. (எப்படி…?)

பாலைப் போன்ற மனத்தையும் சந்தனத்தின் நறுமணத்தையும் பன்னீரின் மணத்தையும் எண்ணி ஏங்கும் பொழுது – சுவாசிக்கும் உணர்வுகள்
1.நம் உயிரிலே படும் போது “சங்கு”
2.அந்த உணர்ச்சிகள் “சக்கரம்” இயக்கம்
3.அந்த நல்ல உணர்வுகளாக நாம் இயக்க முடியும்…! என்பதனை ஆலயங்களில் தெளிவாக்கப்பட்டுள்ளது.

ஆக நம்முடைய வாழ்க்கையின் சிரமமான நேரங்களில் நல்ல உணர்ச்சிகளை எப்படிக் கொண்டு வர வேண்டும்..? நல்ல இயக்கமாக எப்படி மாற்ற வேண்டும்…? என்பதற்குத்தான் ஆலயங்களை அமைத்தார்கள் ஞானிகள்.