ஞானப் பாதையில் உயர்வு பெற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

AGATHIAR -sages

ஞானப் பாதையில் உயர்வு பெற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

 

குருநாதர் எம்மைக் (ஞானகுரு) காட்டுக்குள்ளும் மேட்டுக்குள்ளும் அழைத்துச் செல்லும் பொழுது அன்று சோறு கிடையாது.
1.குருநாதர் உபதேசம் சொல்லும் பொழுதெல்லாம் அதைக் கூர்ந்து கேட்டுக் கொண்ட இருக்க வேண்டும்.
2.சிறிது திரும்பினாலும் அடி விழும்.. கவனம் அவர் பக்கம் போகும்…!

உங்களிடம் கொக்கி என்ன போட்டிருக்கின்றோம்..? என்றால் உங்களின் எதிர்பார்ப்பை வைத்து இழுத்து வைத்திருக்கிறேன். காந்தத்தை வைத்து இழுத்து வைத்திருப்பதால் அந்த உணர்வின் தன்மையைக் கொண்டு வர முடிகின்றது. இல்லையென்றால் கொண்டு வர முடியாது.

மற்ற கூட்டங்களில் மற்றவர்கள் உபதேசம் செய்வதைப் பார்த்தால், “ஆகா…!” என்று ஒருவர் கைதட்டுவார். இந்தப் பக்கம் இவர் என்ன செய்கின்றார்…? என்று பார்ப்பார்கள். ஒரு சொல் வந்தவுடன் “ஆகா…!” என்பார்கள். அடுத்தவர் கேட்பதையும் தடைப்படுத்துவார்கள்.

இதுவெல்லாம் நமது வாழ்க்கையில் எது நம்மை மாற்றி அமைக்கின்றது…? அதை நாம் எப்படி மாற்ற வேண்டும்…? என்பதற்குத்தான் இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை உங்களிடம் கொடுக்கின்றோம்.

அதிகாலை நான்கு மணிக்குச் சில முக்கியமான உணர்வுகளை அனுப்புகின்றேன். அனுப்பும் பொழுது அதை எப்படியும் பெற வேண்டும் என்று எண்ணுகின்ற பொழுது அந்த உணர்வுகள் தெரிய வரும்.
1.“சாமி…” நம்மை எங்கே கவனிக்கின்றார்…?
2.மற்றவர்களைத் தான் கவனிக்கின்றார்…! என்று நினைத்தீர்கள் என்றால்
3.உங்களுக்குக் கிடைப்பதை நீங்களே தடைப்படுத்திக் கொள்கின்றீர்கள் என்று தான் அர்த்தம்.

எல்லோரும் மெய் ஞானம் மெய் ஒளி பெற வேண்டும்…! என்ற ஐக்கிய உணர்வு கொண்டு ஒளியானவர்கள் தான் மகரிஷிகள். அவர்கள் வளரும் ஒளிகள்.
1.மகரிஷிகள் எல்லோருடைய துணை கொண்டுதான் ஒளியாக ஆனார்கள். ஏன் நாம் ஆக முடியாதா…?
2.மற்றவர்களுக்குத்தான் கொடுத்தார். எனக்குச் சாமி கொடுக்கவில்லை என்று பிரித்து விட்டால் என்னவாகும்…?
3.எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்றுதான் யாம் செய்கின்றோம்
4.அவர்களுக்குக் கிடைக்கின்றது… ஏன்… நமக்கும் கிடைக்கும்…! என்று தான் நினைக்க வேண்டும்.
5.எல்லோரும் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணும்பொழுது தான் நாமும் அதைப் பெறக்கூடிய தகுதி பெறுகின்றோம்.

நாம் ரேடியோ டிவியை எங்கெங்கு திருப்புகின்றோமோ எந்தெந்த ஸ்டேசனைத் திருப்பி வைக்கின்றோமோ அந்த அலைவரிசை கிடைக்கின்றது.

அதே போல நாம் அந்த மகரிஷியின் உணர்வைப் பதிவு செய்திருக்கின்றோம். அந்த மகரிஷிகள் அவர்கள் உங்களுக்குக் கிடைக்கும் என்று எண்ணும் பொழுது
1.இதைக் காட்டிலும் அதிகமாக அவர்களுக்குக் கிடைக்கும்
2.உங்கள் துணை வைத்து அவர்கள் எண்ணும் பொழுது இந்த வலு அவர்களுக்குக் கிடைக்கின்றது.
3.நீங்கள் இங்கு பெறுகின்றீர்கள்… உங்களுக்குக் கிடைக்க வேண்டும்…! என்று அவர்கள் தியானிக்கும் பொழுது அவர்கள் அங்கே பெறுகின்றார்கள்.

சூரியன் தனித்துப் பிரகாசமாகவில்லை. அது போல் மகரிஷிகள் தனித்து ஒருவர் பிரகாசம் ஆகவில்லை. எல்லோருடைய உணர்வையும் ஒன்றி ஐக்கியமாக்கி அந்த எண்ண அலைகளை வைத்த்துத்தான் ஒளியாக ஆனார்கள்.

இனி… இன்னொரு உடல் நமக்கு வேண்டவே வேண்டாம்…!

New solar family

இனி… இன்னொரு உடல் நமக்கு வேண்டவே வேண்டாம்…!

 

வானத்தில் வால் நட்சத்திரங்களைப் பார்க்கின்றோம். அதே போல் எரிகற்களையும் பார்க்கின்றோம். இது எல்லாம் எங்கிருந்து வருகிறது…?

மற்ற பிரபஞ்சங்களிலிருந்து வரும் கழிவுகள் எதிலேயுமே பிடிப்பில்லாத நிலையில் அப்படி வருகிறது. அத்தகைய நிலைகளைத் தான் நமது சூரியன் இழுக்கின்றது.

சூரியனுக்குப் போகும் பாதையில் நமது பூமி இடைமறிக்கும் பொழுது துருவப் பகுதியின் வழியாக நமது பூமி கவர்ந்து கொண்டபின் காற்று மண்டலம் அழுத்தத்திற்குள் வந்தவுடன் சூடேறிக் கரைந்து விடுகின்றன

அப்படி அது கரையவில்லை என்றால்… அத்தனையும் பூமிக்குள் அப்படியே விழுந்தால்… நாம் யாரும் இங்கே வாழ முடியாது…!
1.நம் பூமியில் தினமும் எரிகற்கள் விழுந்து கொண்டுதான் உள்ளது.
2.நமது பூமியின் காற்றழுத்தத்திற்குள் வரும்போது கரைத்து விடுகின்றது
3.கரைக்க தவறிய ஒரு சில பெரிய பாறைகளும் பூமியில் விழத்தான் செய்கின்றது.

இதைப் போன்றுதான் நமது வாழ்க்கையில் வரும் தீமையான உணர்வுகளை அதை நமக்குள் ஈர்க்கும் சக்தி அனைத்தும் நீக்கி விட்டால்
1.நமக்கு முன்னாடி வரும் அந்தத் தீமையின் உணர்வுகளை
2.எந்தப் பிடிப்பும் இல்லை எனும் பொழுது
3.காலையில் சூரியன் அதை அழைத்துச் சென்று விடுகின்றது

அதனால்தான் அதிகாலையில் முக்கியமாகத் துருவ தியானத்தின் மூலம் உங்கள் ஆன்மாவைத் தூய்மை செய்து கொள்ளச் சொல்கிறோம்.

துயரமோ சங்கடமோ சலிப்போ வெறுப்போ வேதனையோ இதைப் போன்ற நிலைகள் வரப்படும்போதெல்லாம் “ஈஸ்வரா…!” என்று உங்கள் உயிரான அந்த ஈஸ்வரலோகத்தை எண்ணுங்கள்.

அந்தத் துருவ நடசத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் என்று அவனிடமே கேட்டு ஏங்குங்கள் அப்போது இந்த உணர்வுகள் அதிகரித்து தீமையின் உணர்வுகளை மாற்றி அதை அடக்கும் சக்தியாக வரும்.

ஒரு குழம்பில் காரம் புளி உப்பு மற்ற எல்லாப் பொருள்களையும் போட்டபின் சுவையாக எப்படி மாறுகின்றதோ இதைப் போல சுவைமிக்க உணர்வுகளாக ஒளியான அணுக் கருக்கள் நம் இரத்தத்தில் இந்திரலோகமாக மாறுகிறது

இவ்வாறு மாற்றப்படும் போது தீமை என்ற உணர்வின் தன்மையை ஈர்க்கத் தவறுவதால் தீய அணுக்களுக்கு ஆகாரம் கிடைக்காதபடி தவறுகின்றது

துருவ நட்சத்திரத்தின் உணர்வை அதிகமாக இழுத்துக் கொண்டால் தீமையான அணுக்கள் உணவு இல்லாதபடி அது சோர்வடைகின்றது. அது மட்டுமல்லாது தீய அணுக்கள் உடலுக்குள் உருவாகாதபடி தடுக்கப்படுகின்றது.

மண்ணிற்குள் மறைந்துள்ள விஷ வித்துக்கள் மழை பெய்த பின் உடனே எப்படி முளைத்து வருகின்றதோ இதைப் போல
1.நம் உடலில் எலும்புக்குள் ஊழ்வினையாகப் பதிவான தீமையான அணுக்கள்
2.இந்த உடல் இருக்கும் வரை அதனுடைய வேலைகளைத் தொடர்ந்து செய்யும்.

ஆனால் அந்த உணர்வின் அணுக்களைப் பெருக்கி விட்டால் அது விளைந்து அதற்குத் தகுந்த உடலுக்குள் உயிர் நம்மை அழைத்துச் சென்று விடும்.

ஆகவே அத்தகைய ஊழ்வினை என்ற நிலைகளை உருவாக்காதபடி உணர்வின் ஒளிக் கற்றைகளாக மாற்றிடல் வேண்டும். இந்த உடலை விட்டு நாம் செல்லும் பொழுது
1.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இணைந்து தொக்கிய உணர்வுகளைக் கரைத்து விடலாம்.
2.கரைத்த விஷத் தன்மைகளை எல்லாம் சூரியன் கவர்ந்து என்று விடுகின்றது
3.உயிருடன் ஒன்றிய ஒளியின் அறிவு அங்கே துருவ நட்சதிரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் விளைகின்றது
4.துருவ நட்சத்திரம் விளைய வைக்கும் அந்த விஷமற்ற உணர்வை உணவாக உட்கொண்டு அதன் தன்மை கொண்டு நாம் வளர்ச்சி அடைவோம்.
5.இதுவே ஒளியான ஓர் பிரபஞ்சம்…!

நாம் சூரியக் குடும்பம் எப்படி இருக்கின்றதோ இதே போல அதன் அமைப்பிலே நாம் சேர்க்கப்படும்போது துருவ நட்சத்திரமும் வலு அடைகின்றது. அதனின் ஈர்ப்பு வட்டமும் “ஒளி மயமாகின்றது…!”

உலகில் இது பரவப்படும்போது இருள் சூழும் நிலைகளில் இருந்து விடுபட்டு ஒளி மயமாக மாற்றும் சக்தி பெறப்படுகின்றது

ஆகவே நமது குருநாதர் ஈஸ்வரபட்டர் காட்டிய வழிகளில் இன்னொரு பிறவிக்குச் செல்ல விரும்பாதீர்கள். இந்த உடலில் பற்றை வைக்காதீர்கள்.

எத்தகைய குறைகளைக் காணினும் அதை அகற்ற முயற்சி எடுங்கள். குறை என்ற உணர்வு தோன்றிய பின் அது நமக்குள் உருவாகாதபடி தடைப்படுத்த அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் ஈஸ்வரா என்று அந்த உணர்வை அதிகரித்துக் கொள்ளுங்கள்.

அதன் உணர்வை உடலான இந்திரலோகத்தில் பெருக்கச் செய்யுங்கள். அதன் உணர்வு பெருகினால் நமக்குள் தீய அணுக்கள் சிறுக்கும். நமக்குள் மன பலமும் மன வலிமையும் வரும்.

மரணமில்லாப் பெரு வாழ்வை எப்படிப் பெறுவது…?

polaris lights.jpg

மரணமில்லாப் பெரு வாழ்வை எப்படிப் பெறுவது…?

பன்றி தன்னுடைய உடலில் தீமைகளை வென்றிடும் நல்ல உணர்வின் தன்மைகளை தன் வாழ் நாள் முழுவதும் சுவாசிக்கின்றது. சேர்த்துக் கொண்ட நல்ல உணர்வுக்கொப்ப பன்றியை விட்டு வெளி வந்த உயிரான்மா பரிணாம வளர்ச்சியாகி மனிதனாகப் பிறக்கின்றது.

இதைப் போல நம்முடைய மனித வாழ்க்கையில் துயர் என்ற நிலைகள் வரப்படும் போது
1.அந்தத் துன்பங்களையும் தீமைகளையும் அகற்றி
2.அதையெல்லாம் ஒளியாக மாற்றிய துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்தல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அடிக்கடி நுகர்ந்து தீமைகளை உருவாக்கும் அணுக்களை அடக்கி அதை மடியச் செய்யப்படும் போது எந்தத் தீமை வந்தாலும் அதை ஒளியாக மாற்றிடும் திறன் பெறுகின்றோம்.

1.இப்படி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வின் தன்மை நம் உடலுக்குள் அதிகமாக அதிகமாக…
2.தீமைகளை வென்றிடும் உணர்வுகள் வளர வளர…
3.இந்த உடலை விட்டு நாம் சென்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலத்துடன் இணைவோம்.

அங்கே சென்றால் இந்த உடலில் பெற்ற நஞ்சினை நீக்கி விட்டு உணர்வினை ஒளியாக மாற்றி அழியா ஒளியின் சரீரம் பெறலாம்.

இந்தப் பிரபஞ்சத்திலும் சரி… அகண்ட அண்டத்திலும் சரி… அங்கிருந்து வரும் கடுமையான விஷத் தன்மைகளையும் ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றது தான் அந்தத் “துருவ நட்சத்திரம்….!”

இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் சூரியனோ மற்றவைகளைக் கவர்ந்து பிரபஞ்சத்தை இயக்க உதவினாலும்
1.அந்தச் சூரியனே ஒரு காலம் மடிய நேரும்.
2.அதே போல் பல தீமையின் உணர்வுகளை நமது பிரபஞ்சம் நுகர நேர்ந்தால்
3.பிற மண்டலங்களில் இருந்து இதுவும் மடிந்து விடுகின்றது.

ஆனால் இதிலே உயிர் உருவாகி உணர்வின் தன்மையில் வளர்ச்சி பெற்ற நாம் இந்த மனிதப் பிறவியிலிருந்து தீமைகளை அகற்றத் தவறினால் தேய் பிறை என்ற நிலை வருகின்றது.

ஆரம்பத்தில் சூரியன் தான் வளர்ச்சி அடையப் பல தீமைகளை ஒளி நிலைகளாக மாற்றி இந்தப் பிரபஞ்சத்தை உருவாக்கும் ஆற்றலாகப் பெறுகின்றது.

சூரியன் ஒளிக்கதிராக மாற்றியது போன்று இந்தப் பிரபஞ்சத்திலே தோன்றிய ஒரு உயிரணு (நாம்) பல விதமான உணர்வுகளை நுகர்ந்தறிந்து உணர்வினை ஒளியாக மாற்றும் தகுதியான மனிதச் சரீரம் பெறுகின்றது.

மனிதனான நிலையில் அறிந்து… உணர்ந்து… தெளிந்து… தெளிவாக வாழ்ந்திடும் அந்த உணர்வின் தன்மை பெற்ற பின்…
1.சந்தர்ப்பத்தால் நுகரும் தீமைகளை (முதலிலே கூறியபடி) நாம் நுகர நேர்ந்தால்
2.தீமையின் உணர்வுகளுக்கு அழைத்துச் சென்று மனிதனைத் தேய்பிறையாக ஆக்கிவிடுகிறது.

ஆனால் நாம் அந்த அருள் என்ற உணர்வினை நமக்குள் வளர்த்தால் இந்த உணர்வின் தன்மை கொண்டு நம் உடலுக்குள் ஒளி என்ற உணர்வினை உருவாக்கி
1.இந்த உடலைப் பிளந்து விட்டு
2.உயிர் எதனின் வலுப் பெற்றதோ அங்கே
3.அந்தச் சப்தரிஷி மண்டலத்திற்கு அழைத்துச் செல்கின்றது.

சப்தரிஷி மண்டலம் வெளிப்படுத்தும் உணர்வினை உணவாக எடுத்து ஒளியின் சக்தியாக மாற்றிடும் சக்தி பெறுகின்றது.

சூரியன் அழியலாம்… ஆனால் உயிரணுக்வாகத் தோன்றி உலகின் உணர்வை அறிந்து தனக்குள் ஒளியின் உணர்வாக உருவாக்கி விட்டால் அந்த ஒளியை எவையும் அழிக்க முடியாது.

1.ஆகவே நஞ்சினை வென்றிடும் உணர்வு பெற்ற இந்த உயிர்
2.இந்த உடலையே ஒளியாக மாற்றிடும் உணர்வின் துணை கொண்டு
3.அந்த ஒளியின் தன்மையையே உணவாக உட்கொண்டு
4.பேரொளியை வெளிப்படுத்தும் நிலை அடைகின்றது.

அந்த நிலையை மனிதனாகத் தோன்றிய நாம் ஒவ்வொருவரும் அடைதல் வேண்டும்.

சப்தரிஷி மண்டலத்தில் இருக்கும் எண்ணிலடங்காத ஒளியான உயிராத்மாக்கள் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்

Sabdharishi mandalam.PNG

சப்தரிஷி மண்டலத்தில் இருக்கும் எண்ணிலடங்காத ஒளியான உயிராத்மாக்கள் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்

கணவன் மனைவியாக வாழ்பவர்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி இருவருமே தியானிக்க வேண்டும். ஏனென்றால் நம் உயிரும் சிவ சக்தியாகத் தான் வாழ்கின்றது.

கணவன் தான் பெற்ற அந்தச் சக்தியைத் தன் மனைவிக்குக் கொடுக்க வேண்டும் அதே போல் மனைவி தான் பெற்ற சக்தியைக் கணவனுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும்.
1.ஒருவருக்கொருவர் பெற வேண்டும் என்று இரண்டு பேருமே இவ்வாறு எண்ண வேண்டும்.
2.உயர்ந்த சக்திகள் பெற வேண்டும் இரண்டு பேருமே ஏங்கி எடுக்கும் உணர்வுகள் கருவாகின்றது.

இன்றும் பார்க்கலாம்…! சாதாரணமாக மந்திரவாதிகள் – குடுகுடுப்புக்காரர்கள் இருப்பார்கள். கணவனும் மனைவியும் சேர்ந்து தான் இந்த மந்திரத்தின் நிலைகளில் செயல்படுத்துவார்கள்.

மந்திரத்தால் கணவனுக்கு ஏதாவது ஆனாலும் உடனே மனைவி அதை எடுத்து அதைச் சரி செய்யும். அதாவது ஏவல் பில்லி சூனியங்களால் கணவன் தாக்கப்பட்டால் உடனே மனைவி எடுத்துச் சரி செய்வார்கள்.

இரண்டு பேரும் அந்த மந்திரம் கற்றுக் கொள்ளவில்லை என்றால் அங்கே ஒன்றும் வேலை ஆகாது. தன் மாமன் மச்சானிடம் கொடுக்க மாட்டார்கள். இது மந்திரத்தின் செயல்கள்.

இதைப் போன்று தான் அக்காலத்தில் கணவனும் மனைவியுமாக வாழ்ந்த அகஸ்தியனும் அவர் மனைவியும் பூமியின் துருவத்தை உற்று நோக்கி (வானிலே) துருவத்தின் வழியாக வரும் உணர்வின் தன்மை இருவருமே தனக்குள் பெற்று வானவியலின் உணர்வையே மேற் கொண்டு பார்க்கும் நிலைகள் வருகின்றது.

1.இருபத்தியேழு நட்சத்திரத்தின் தன்மையைத் தனக்குள் கவருகின்றார்கள்.
2.அந்த உணர்வின் வலிமையைப் பெறுகின்றார்கள்.
3.அது மற்ற கோள்களுடன் கலந்து வருவதையும் அதைச் சூரியன் பெறுவதையும் கணவன் மனைவி இரண்டு பேருமே நுகர்கின்றார்கள்.

அப்படிப் பெற்ற உணர்வுகள் தான் நம் பிரபஞ்சத்தின் இயக்கத்தை முழுமையாக அறிந்து அதைத் தனக்குள் பெருக்கி வளர்த்து கொண்டார்கள்.

இரண்டு உயிர்களும் இரண்டு உடல்களும் இரண்டு பேருமே ஒன்றாகச் சேர்க்கப்படும் போது தான் வசிஷ்டரும் அருந்ததியுமாக அவர்கள் வளர்ந்தனர். நளாயினியைப் போல ஒருவரை ஒருவர் மதித்து நடந்தனர்.

கணவன் மனைவியை மதித்து நடப்பதும் மனைவி கணவனை மதித்து நடப்பதும்
1.இந்த இரு உணர்வும் வந்தவுடனே “சத்தியவான் சாவித்திரி…!”
2.இந்த உயிர் சத்தியமாகின்றது
3.தன்னுள் இணைந்து கொண்ட சக்தி அது உண்மையின் உணர்வாக ஒளியாக மாறுகின்றது.
4.அதைத் தான் சத்தியவான் சாவித்திரி என்று சாவித்திரி எமனிடம் இருந்து தன் கணவனை மீட்டினாள் என்று காட்டப்பட்டது.

(இன்று ரொம்பப் பேர் வீட்டிலே பார்க்கலாம். சத்தியவான் சாவித்திரி நிறையப் பேர் இருப்பார்கள். ஒருவரை ஒருவர் உதைத்துக் கொண்டு நீயா…? நானா…? என்ற வகையில். இன்று இதைத் தான் அதிகமாகப் பார்க்க முடிகின்றது. அகஸ்தியனும் அவன் மனைவியும் பெற்ற நிலைகள் இல்லை)

அகஸ்தியனும் மனைவியும் இரு உயிரும் ஒன்றென இணைத்து இன்னொரு உடலுக்குள் சேராதபடி உணர்வுகளை ஒன்றாக இணைந்து எந்தத் துருவத்தைக் கூர்மையாக உற்றுப் பார்த்து நுகர்ந்தார்களோ அந்த உணர்வின் தன்மை வலிமை கொண்டு இந்த உடலை விட்டுச் சென்ற பின் அந்த எல்லையை அடைந்தார்கள்.

நம் பூமிக்கு வரும் உணர்வினை ஒளியாக மாற்றி ஒளிக் கதிராகத் துருவ நட்சத்திரமாக இருக்கின்றார்கள். இது ஒரு குடும்பம். அகஸ்தியனுடைய தாய் தந்தை அவர் உடலிலே இருந்தார்கள். அவர்களும் அதே ஒளியின் சரீரமாக அவனுடன் இருக்கின்றார்கள்.

அகஸ்தியனைப் பின்பற்றிச் சென்றவர்கள் அவருடைய ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலமாகச் சுழன்று கொண்டுள்ளார்கள். அன்னை தந்தை அரவணைப்பில் ஒளியாகச் சென்று சப்தரிஷி மண்டலங்களில் இருப்போரும் பல உண்டு.

உடலை விட்டுப் பிரிந்து சென்ற எங்கள் அன்னை தந்தையரின் உயிரான்மாக்கள் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும். அவர்கள் உடல் பெறும் உணர்வுகள் கரைய வேண்டும் என்று சொன்னவர்கள்
1.அவர்கள் தனித்துச் சென்றாலும் அந்தக் கூட்டமைப்பில்
2.சப்தரிஷி மண்டல ஈர்ப்பு வட்டத்தில் அழியா ஒளியின் சரீரமாக இன்றும் வாழ்ந்து வளர்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.

இதைப் பார்க்கலாம்…! அந்தச் சப்தரிஷி மண்டலத்தில் நம் கண்ணுக்கு புலப்படாத எண்ணிலடங்காத ஒளியான நிலைகள் நிறைய உண்டு.

1.டெலஸ்கோப் (TELESCOPE) வைத்து நீங்கள் பார்த்தாலும் ஒரு சில தான் தெரியும்.
2.அதைக் காட்டிலும் நுண்ணிய அலைகள் அந்த காலத்தில் அகஸ்தியன் வாழ்ந்த காலத்தில் சென்றவர்களும் அவன் பின் சென்றவர்களும் பல உண்டு.

சப்தரிஷி மண்டலமே மனிதன் அடைய வேண்டிய கடைசி எல்லை..!

தாய் தந்தையரின் ஆசி பெற்று நாம் பிறவியில்லா நிலை அடைய வேண்டும்

Father day mother day.jpg

தாய் தந்தையரின் ஆசி பெற்று நாம் பிறவியில்லா நிலை அடைய வேண்டும்

நமக்கு கடவுள் யார்…? நம்மை உருவாக்கியது யார்…? நமது அன்னை தந்தை உயிரே ஈசன். அவர்களுடைய எண்ணங்களால் தான் தனக்குள் எடுத்து நம்மை உருவாக்கினர்.

தாய் தந்தையர் கடவுளாக இருந்து தெய்வமாக நம்மைக் காத்தார்கள்…! எப்படி…?
1.நாம் பாம்பாக இருந்திருப்போம் அல்லது கொசுவாக இருந்து அவர்களின் இரத்தத்தை குடித்திருப்போம்.
2.அடித்த பின் அவர்கள் உடலுக்குள் போயிருப்போம்.
3.வீட்டில் எறும்பு தொல்லை கொடுத்தது என்று நசுக்கி இருப்பார்கள்.
4.நம் உயிர் அந்த உடலுக்குள் போயிருக்கும். அந்த உடலிலிருக்கும் உணர்வை எடுத்து மனிதனாக பிறக்கும் தகுதி பெறும்.

ஆகவே மனிதனாக நம்மை உருவாக்கியது யார்…? கடவுள் எங்கே இருக்கின்றான்…? நமது தாய் தந்தை தான் கடவுள். நம்மை மனிதனாக உருவாக்கிய அவர்கள் தான் கடவுள். இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

முதலில் அவர்கள் மனிதன் ஆனார்கள். பல இன்னல்களைக் கடந்து வந்து இன்னலிலிருந்து மீண்டிடும் நிலை பெற்றார்கள். இன்னலிலிருந்து மீள்வதற்காக ஒன்றை அடித்துக் கொன்றார்கள். அந்த உயிர் அங்கே சென்றது. மனிதனாக உருவானது.

ஆகவே நமக்கு மனித உரு கொடுத்தது யார்..? நம்முடைய தாய் தான். தெய்வமாக காத்ததும் நம் தாய் தான்.

கர்ப்பிணியாக இருப்பவர்கள் எத்தனை அவஸ்தைப்படுகிறார்கள்…? குழந்தை பிறந்த பின் அந்தத் படுகிர அவஸ்தையைப் பார்த்தால் தெரியும். குழந்தைக்குத் தலை வலிக்கிறது என்றால் தாய் என்ன செய்கிறது…?
1.உடனே பதறுகின்றது… குழந்தைக்கு என்ன ஆயிற்றோ…? என்ற உணர்வை நுகர்கின்றது,
2.காக்கும் உணர்வைக் கொண்டு வருகின்றது.
3.அந்த உணர்வுகள் அனைத்தும் நம் உடலிலேயும் பதிவாயிருக்கின்றது.

குழந்தைப் பருவத்தில் அதை எண்ண முடியவில்லை என்றாலும் வளர்ந்த பின் தாயின் காக்கும் உணர்வை எண்ணினால் எத்தகைய தீமையாக இருந்தாலும் நாம் காக்கப்படுவோம்.

“தாயின் உணர்வு நம்மைக் காக்கும்…!” என்ற நிலையை நாம் மறந்தே விட்டோம். விநாயகர் தத்துவத்தில் இது தெளிவாகக் கூறப்படுகின்றது.

இன்று தாயைத் திட்டுவதும் பேய் என்று விரட்டுவதும் அவஸ்தைப் படச் செய்வதும் தான் பெறும் பகுதிக் குடும்பங்களில் இருக்கிறது.

வேதங்களைக் கற்றுவந்த பின் யாக சாலைகளில் மந்திரங்கள் ஓதி பல உணர்வுகளைத் தீயிலே போட்டுப் பொசுக்கிப் பிற ஆன்மாக்களைத் தனக்குள் கைவல்யம் ஆக்கி மந்திரமாக்கிக் கொண்டு நான் கடவுளையே கை வசம் வைத்திருக்கிறேன் என்று தான் உலக மதங்கள் கூறுகின்றது.

இதிலிருந்தெல்லாம் நாம் என்று மீளப்போகிறோம். முழுமையாக அழியும் தருணத்தில் இருக்கும் இந்தக் காலகட்டத்தில் நாம் எப்படி வாழவேண்டும் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்..!

இன்று கடலில் உள்ள மணலில் இருந்து யுரேனியத்தைப் பிரித்து எடுத்து அணுகுண்டாகவும் ஹைட்ரஜன் குண்டுகளாகவும் உருவாக்கி வைத்துள்ளார்கள். அதை எல்லாம் பரீட்சாந்திரமாக விண்வெளியிலும் வெடிக்கச் செய்துள்ளார்கள்.

வான் வீதியில் உள்ள நிலைகளைத் தெரிந்து கொள்ள இராக்கெட்டுகளை உந்து விசையால் அனுப்புகிறார்கள். அவைகள் வெளிப்படுத்திய கதிரியக்கச் சக்திகள் அனைத்தும் அங்கேயும் கலக்கப்பட்டு விட்டது.
1.சூரியன் அதைக் கவர்ந்து அலைகளாக மாற்றும் போது
2.நம் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து கோள்களிலும் அந்த விஷக் கதிரியக்கங்கள் கலந்து விட்டது.

உதாரணமாக இரண்டு மின்சாரம் (PHAES TO PHASE) ஒன்றானால் என்ன ஆகும்…? வீட்டில் உள்ள பல்புகள் பீஸ் ஆகிறது. அதைப் போன்று மனிதனின் சிந்தனைகள் அனைத்தும் சிதறப் போகின்றது. அந்த ஒரு நொடிக்குள் மனிதர்கள் மிருகம் ஆகிறார்கள்.

அதாவது மனித உடலாக இருந்தாலும் சிந்தனைகள் சிதறி மிருகங்களைப் போன்ற இயக்கமாகிவிடும். (ஏற்கனவே சில இடங்களில் அப்படித்தான் இருக்கிறது)

இந்த நிலையில் தான் நாம் அனைவரும் இருக்கின்றோம். ஒரு நொடிக்குள் மாறி விடுகிறது. நமக்கே தெரியாது. மனிதனுக்கு மனிதன் கொல்லும் நிலை வருகின்றது.

கடவுளின் அவதாரம் வராக அவதாரம் நாற்றத்தைப் பிளந்து நல்ல உணர்வின் தன்மையை எடுப்பது போல் விஷமான உணர்வுகள் கலந்திருக்கும் இந்த உலகிலிருந்து மீண்டிட அருள் மகரிஷிகளின் உணர்வை உங்களுக்குள் ஆழமாகப் பதிவாக்கிக் கொள்ளுங்கள். அத்தகைய தீமைகள் வருவதற்கு முன் நுகர்ந்து பழகுங்கள்.

காலையில் விழித்தவுடன் வானை நோக்கி ஏங்கித் தன் கணவருக்கு/மனைவிக்கு அந்த மகரிஷியின் அருள் சக்தி கிடைக்க வேண்டும். அவர் உயர்ந்த ஞானம் பெற வேண்டும். அந்த அருள் என்றும் எனக்குள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று இருவருமே எண்ண வேண்டும்.

இந்த மனித வாழ்க்கையில் நாம் என்றுமே தீமைகளைப் பற்றிடாமல் அருள் உணர்வுகளைப் பற்றுடன் பற்றி பிறவி இல்லா நிலைகள் அடைதல் வேண்டும்.

மரணமில்லா பெருவாழ்வு பெற வேண்டும் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்…?

cosmic power of human

மரணமில்லா பெருவாழ்வு பெற வேண்டும் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்…?

 

நாம் மனிதராக வாழும் அனைவரும் நாம் ஒருவருக்கொருவர் அருள் ஞானத்துடன் வாழ்தல் வேண்டும். ஒருவருக்கொருவர் மகிழ்ந்து வாழும் உணர்வை நாம் நுகர்ந்து பழகுதல் வேண்டும்.

1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எல்லோரும் பெறவேண்டும்.
2.அவர்கள் வாழ்கையில் அறியாது இருள்கள் நீங்க வேண்டும்.
3.மெய்ப் பொருள் காணும் அருள் சக்தி பெறவேண்டும்.
4.அவர்கள் குடும்பம் எல்லாம் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழவேண்டும்.
5.அவர்கள் பிறவி இல்லா நிலை அடைதல் வேண்டும். அருள் ஞான வாழ்க்கை வாழ்தல் வேண்டும்.
6.இருளை அகற்றிடும் மெய்ப் பொருள் காணும் அருள் சக்தி நம் பூமியில் வாழும் மக்கள் அனைவரும் பெற வேண்டும் என்று
7.நாம் எல்லோரும் தியானிக்க வேண்டும்.

இவ்வாறு நாம் தியானிக்கும் எல்லோருடைய உணர்வுகளும் ஒன்றாகச் சேர்த்தால் என்ன ஆகும்…?

தீமையான உணர்வுகளை மனிதர்களான நாம் ஈர்க்கும் சக்தி குறைந்தால் இந்தக் காலையில் 6 மணிக்கு எல்லாம் சூரியன் தனக்குள் இழுத்துச் சென்று அதை எல்லாம் அங்கே கரைத்து விடும். ஒளியாக மாற்றும்.
1.நம்முடைய ஆன்மா தூய்மையாகின்றது.
2.நாம் வாழும் இந்தப் பூமியான பரமாத்மாவும் தூய்மையாகின்றது.

உதாரணமாக அடுப்பிலே வைத்து எரிக்கப்படும் ஒரு விறகானது பல விதமான உணர்வுகள் வைத்து அது எரிகின்றது. விறகு எரிந்து நெருப்பாக மாறுகின்றது… ஒளியாக மாறுகின்றது.

விறகோ கருகிவிடுகிறது. ஆனால் அதற்குள் இருக்கும் அந்த மணங்கள் பிரிந்து விடுகின்றது. அந்த உணர்வின் தன்மைகள் அனைத்தும் சூரியன் கவர்ந்து ஒளியாக மாற்றிக் கொள்கின்றது.

அந்த விறகிலிருந்து வந்த ஆவியின் தன்மை எதன் உணர்வு பெற்றதோ புவியின் ஈர்ப்பின் தன்மை கொண்டு எந்த வித்தின் தன்மை இங்கு பெறுகின்றதோ அதே மரத்தின் அதே வித்தாக (அந்த விறகின் மணங்கள்) இணைந்து மீண்டும் விளைகின்றது.

ஆகவே எதன் எதன் உணர்வின் தன்மை எது எது விளைகின்றதோ அது எல்லாம் இயற்கையில் இப்படி மாற்றிக் கொண்டே உள்ளது. (ஆவியாக இருப்பது திடப்பொருளாகின்றது மீண்டும் அது ஆவியாகிறது மீண்டும் திடப்பொருளாகிறது)

ஆனால் நாம் “என்றுமே மாறாத நிலைகள் பெற வேண்டும்…!” என்றால் என்ன செய்ய வேண்டும்…?

ஆறாவது அறிவு பெற்ற மனிதன் நஞ்சினை வென்று ஏழாவது நிலையாக உணர்வுகளை ஒளியாக மாற்றி என்றும் பதினாறு என்ற நிலை அடைந்த
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாம் அனைவரும் நுகர்ந்து பழகுதல் வேண்டும்.
2.நம் உடலுக்குள் அதைப் பெருக்குதல் வேண்டும்.
3.அதை அழியாச் செல்வமாக நமக்குள் மாற்றி அமைத்தல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழும் சப்தரிஷி மண்டல எல்லையை நாம் அடைதல் வேண்டும்.

என்னுடைய சகோதரரின் உயிரான்மாவைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்தேன்

Immortal state - astral

என்னுடைய சகோதரரின் உயிரான்மாவைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்தேன்

 

மகரிஷிகள் அருள் சக்தியைப் பெற்று இந்த உடலுக்குப் பின் சப்தரிஷி மண்டலத்தை அடைய வேண்டும் என்ற நிலையில் என்னுடைய சகோதரன் அதிகமாகப் பற்று வைக்கவில்லை.

அப்படி இருக்க வேண்டும்… இப்படி இருக்க வேண்டும்…! என்று இந்தக் கணக்கை தான் அவர் போட்டுக் கொண்டு இருந்தார்.

ஏனென்றால் நம்முடன் பழகிய அந்த உணர்வு வந்த பின் இந்த தியான வழி அன்பர்களின் உணர்வு துணை கொண்டு தான் அந்த ஆன்மாவை விண் செலுத்தி இந்த உணர்வின் தன்மை கரைத்தல் வேண்டும்.

ஏனென்றால் எனது சகோதரர் எனக்கு மூத்தவர் இங்கே தபோவனத்திலிருந்து பிரிந்தாலும் அவருக்கு இந்த எண்ணமில்லை.

என்னிடம் அவர் கேட்பார். எனக்கு அது இல்லை… இது இல்லை…! பையன் இப்படி இருக்கிறான்… அப்படி இருக்கிறான்… என்று சொல்லிக் கொண்டு இந்த உணர்வைத் தான் அதிகமாக வளர்த்தார். ஆனால் சப்தரிஷி மண்டலத்தை அடைய வேண்டும் என்ற பற்று அவருடன் இல்லை.

கடைசியில் “எனக்கு நெஞ்சு வலிக்கிறது…! என்று என்னிடம் சொன்ன போது நான் (ஞானகுரு) சொன்னேன்.
1.சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அந்த உணர்வின் தன்மை பெற வேண்டும் என்று ஏங்குங்கள்.
2.அந்த உணர்வை உங்கள் உடலுக்குள் செலுத்துங்கள் என்று சொன்னேன்.
3.எனக்கு வலி இல்லை….! அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெற வேண்டும் என்ற எண்ணி உடலுக்குள் அதைச் செலுத்துங்கள்..! என்று சொன்னேன்.

அவர் எங்கே…? நான் நெஞ்சு வலிக்கிறது என்று சொல்கிறேன்… நீ இப்படிச் சொல்கிறாயே என்கிறார்…!

யார்…? என்னுடன் கூடப் பிறந்தவர். நான் சொல்வதை இதை அவரால் எண்ண முடியவில்லை. காரணம் இந்த “உடல் பற்று தான்…” அவருக்குள் அதிகமாகியது.

80 வயது ஆகிவிட்டது…! நான் போகிறேன்… என்று
1.இனி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து அங்கே போங்கள்…! என்று சொன்னேன்.
2.அந்த உணர்வு அவர்களுக்குள் கொஞ்சம் கூட எட்டவில்லை.

காரணம் அவர் என் தாய் தந்தைக்கு ரொம்பத் தொல்லை கொடுத்து விட்டார். அதன் உணர்வு வரப்போகும் போது அந்த எண்ணங்கள் அந்த உறுதியான நிலைகள் மீண்டும் அவரைப் பிறவிக்கு இழுக்கும் தன்மை வந்தது.

இருந்தாலும் நம்முடன் அவர் வாழ்ந்த அந்த பழக்கத்தில் இருந்ததனால் உடலை விட்டுப் பிரிந்து சென்ற பின் அவரை அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்து விண் செலுத்த முடிந்தது. ஒளிச் சரீரம் பெறச் செய்ய முடிந்தது.

இதை போலத் தான் குடும்பங்களில் பற்று இல்லாமல் போனாலும் ஆன்மீக வழியில் அதாவது இந்தத் தியான வழி பற்றிலேயே இல்லாமல் இருந்தாலும் கூட உடலை விட்டுப் பிரிந்த அந்த உயிரான்மாக்களை
1.அந்த குடும்பத்தைச் சார்ந்தோர் யாம் சொல்லும் (ஞானகுரு) இந்தத் தியானத்தை வழிப் படுத்தி
2.அந்த உயிரான்மாக்களைப் பிறவி இல்லா நிலை அடையச் செய்ய வேண்டும்.
3.அவர் எப்படி இருந்தாலும் அந்த ஆன்மாக்களை… அந்தச் சூட்சம சரீரத்தை விண் செலுத்தி
4.இந்த உடலில் உள்ள நஞ்சுகளை அங்கே சப்தரிஷி மண்டல ஒளி வட்டத்திலே கரைத்து விடவேண்டும்.

உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களை நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் நாம் அவசியம் விண் செலுத்தியே ஆக வேண்டும்.

https://wp.me/p3UBkg-1Ev

மின்னலைப் பேரொளியாக மாற்றிக் கொள்ளும் பயிற்சி

Lightning spiritual bolt

மின்னலைப் பேரொளியாக மாற்றிக் கொள்ளும் பயிற்சி

 

மின்னல் ஒரு மனிதனைத் தாக்கினால் அந்த உடல் கருகி விடுகின்றது. ஆனால் உயிர் கருகுவதில்லை. அது துடித்துக் கொண்டே தான் இருக்கும். (உயிருக்கு அழிவே இல்லை…!)

பின் உடலை விட்டுச் சென்ற பின் இந்தக் கருகிய உணர்வு கொண்டு மீண்டும் புழுவாகப் பூச்சியாகத் தான் அது பிறக்கும். மனித உருவுக்கு வர முடியாது.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் அருள் ஞானிகளின் உணர்வை நாம் நுகர்ந்து நமக்குள் வலு ஏற்றிக் கொண்டால்
1.அந்த மின்னலையும் நமக்குள் மின் கதிராக மாற்றி
2.மின்னலில் வரும் எதிர் நிலையை மாற்றி நமக்குள் தீமைகளை வென்றிடும் சக்தியாகப் பெற முடியும்.

அதாவது மின்னல் பட்ட பின் உடலையோ மரத்தையோ மற்றதைக் கருகச் செய்கிறது. மின்னல் பூமியின் நடு மையம் ஊடுருவிச் சென்றால் அங்கே கொதிகலன்களாக மாறி பல மாற்றங்கள் ஏற்படுகிறது.

அத்தகைய மின்னலின் தன்மையும் தனக்குள் கவர்ந்து எதனையுமே வென்றிடும் அருள் சக்தியாகப் பெற முடியும். அத்தகைய பேரருள் உணர்வைத்தான் ஞானத்தின் உணர்வாக உங்களுக்குள் பதியச் செய்து கொண்டிருக்கின்றோம் (ஞானகுரு).

பேரருள் என்றால் “அனைத்தையும் இயக்கக்கூடிய.. அறிந்து கொள்ளக்கூடிய சக்தி…!” என்று பொருள். அப்படி ஆனது தான் துருவ நட்சத்திரமும் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பில் வளரும் சப்தரிஷி மண்டலமும்.

சூரியன் எப்படி மற்ற கோள்களையும் நட்சத்திரங்களையும் தன்னுடன் இணைந்து வாழச் செய்கின்றதோ இதைப் போல துருவ நட்சத்திரம் வெளிப்படுத்தும் உணர்வினை எடுத்து நமக்குள் வளர்த்துக் கொண்டால் அதன் அரவணைப்பில் சென்று நாமும் பிறவி இல்லா நிலை அடைய முடியும்.
1.இனம் இனத்தைத் தான் சேரும்.
2.இனம் இனத்தைத்தான் வளர்க்கும்.

வேதனை என்ற உணர்வை விளைய வைத்தால் அந்த வேதனைப்படுத்தும் உணர்வை உணவாக உட்கொள்ளும் அந்த இனத்தின் ரூபத்தைப் பெற உயிர் அங்கே அழைத்துச் சென்று அந்த உடலைப் பெறச் செய்கிறது.

அதைப் போல துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலம் வெளிப்படுத்தும்
1.பேரருள் பேரொளியை நமக்குள் சேர்த்துக் கொண்டால்… அதன் வலுவைப் பெற்றால்
2.அந்த இனத்தோடு நாம் சேர்க்கப்பட்டு
3.நம் உடலில் வரும் இருளை அகற்றி மெய் வாழ்க்கை வாழ முடியும்.

உங்களை நம்புங்கள். நீங்கள் எதை எண்ணுகின்றீர்களோ உயிர் உங்களை அதுவாகவே உருவாக்குகின்றது அதன் வழியே உங்களை வழி நடத்துகின்றது. பேரருள் பெற்றுப் பேரொளியாக மாறுங்கள்…!

நமது எல்லை எது…?

self-confidence power

நமது எல்லை எது…?

 

கடலுக்குள் ஒடங்களில் செல்லப்படும் போது எதை எல்லையாக வைக்கின்றனரோ எத்தனையோ அலைகள் வந்தாலும் அதிலிருந்து மீட்டு அந்த எல்லையைப் போய் அடைகின்றனர்.

அதைப் போல தான் மனித வாழ்க்கையில் எத்தனையோ விதமான கோபம் சலிப்பு வேதம் குரோதம் வேதனை போன்ற அலைகள் மோதிக் கொண்டே இருக்கிறது.

அப்பொழுது எந்தக் குணத்தைக் கவர்ந்து கொள்கிறோமோ அந்தக் கவர்ந்து கொண்ட சக்தி தான் “வசிஷ்டர்…” என்பது. அது நம் உடலாக ஆகப்போகும் போது “அது நம்முடன் இணைந்து வாழ்கின்றது…!” என்று பொருள்.

1.வேதனைப்படுவோரை உற்றுப் பார்த்து அதை நாம் நுகர்ந்தால் “வசிஷ்டர்…!”
2.அதாவது வேதனையான சக்தியை நாம் அருந்தப்படும் பொழுது
3.நம்முடன் இணைந்து (அருந்ததியாக) வேதனை என்ற உணர்வைத்தான் உருவாக்கும்.

அதே போல ஒரு குடும்பத்தில் தாயோ தந்தையோ உடலை விட்டுச் சென்றால் விட்டால் நாளை என்ன செய்யப் போகிறோம்..? என்று வேதனையைத் தான் நாம் படுகிறோம்.

இதைப் போன்ற துன்பங்களிலிருந்தெல்லாம் விடுபட்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்ற அருள் ஒளி கொண்டு அதைப் பிளக்க வேண்டும்.

கணவனும் மனைவியும் எந்தக் காரணத்தைக் கொண்டும் தீமைகள் தமக்குள் உருவாகாதபடி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி என்ற உணர்வைப் பெற்று வசிஷ்டர் அருந்ததி போல வாழவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

நளாயினி போன்று கணவன் மனைவியை மதித்து நடப்பதும் மனைவி கணவனை மதித்தும் நடத்தல் வேண்டும். இவ்வாறு நடந்தால் இரு மனமும் ஒன்றுகின்றது.

சாவித்திரி என்ன செய்கின்றாள்…? எமனிடம் இருந்து தன் கணவனை மீட்டினாள். ஆக இன்னொரு பிறவிக்குப் போகாதபடி இரு உயிரும் ஒன்றென இணைந்தவர்கள் தான் இன்று துருவ நட்சத்திரமாக இருக்கின்றனர்.

1.இரு மனமும் ஒன்றி…
2.இரு உணர்வும் ஒன்றி…
3.இரு உயிரும் ஒன்றி…
4.அந்தப் பேரருள் என்ற உணர்வை வளர்த்து
5.இல்லற வாழ்கையில் இருள் என்ற நிலையை அகற்றி
6.நஞ்சு என்ற நிலைகளை அகற்றி நஞ்சை அகற்றிடும் பெரும் சக்தி பெற்று
7.இனிப் பிறவி இல்லா நிலைகள் அடையும் அருள் மார்க்கத்தைத்தான் அன்று ஞானிகள் நமக்குக் காட்டினர்.

எங்கள் குடும்பத்தில் மகரிஷியின் அருள் சக்தி படரவேண்டும் எங்கள் குடும்பத்தில் அறியாது தீமைகள் அகல வேண்டும். எங்கள் குழந்தைகள் கல்வியில் ஞானம் பெற வேண்டும். கருத்தறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும். உலக ஞானம் பெற வேண்டும். உலகைக் காத்திடும் அருள் ஞான குழந்தைகளாக வளர வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

அந்த அருள் ஒளி கொண்டு வாழ்க்கையில் வரும் தீமைகள் எல்லாவற்றையும் விலக்கி அருள் உணர்வை வளர்த்து பிறவிப் இல்லா நிலை என்ற நிலையை அடைய நாம் பிராத்திப்போம்… தியானிப்போம்…!

இந்த உடலுக்குப் பின் நாம் அந்தச் சப்தரிஷி மண்டலத்தில் இணைவதே நமது எல்லை…!

அமாவாசைக்கு முன்னோர்களுக்குச் சாப்பாடு வைத்துக் கூப்பிடலாமா…?

Full moon meditation

அமாவாசைக்கு முன்னோர்களுக்குச் சாப்பாடு வைத்துக் கூப்பிடலாமா…?

 

இன்றைய வழக்கில் உள்ளப்படி அமாவாசை அன்று பற்றும் பாசம் கொண்டு… நம் மூதாதையர்கள் சாப்பிடுவதை எல்லாம் வைத்து… அவருடைய துணிமணிகளை எல்லாம் வைத்துப் படைத்துக் கும்பிட்டோம் என்றால் என்ன ஆகும்…?

முன்னோர்களின் உணர்வு நம்மிடம் இருக்கிறது. அமாவாசை அன்று அவரை நினைத்து ஏங்கிக் கூப்பிட்டால் உடனே அந்த ஆன்மா இங்கே வந்துவிடும்.

நம் உடலிலே அந்த ஆன்மா வந்த பின் அவர் என்னென்ன நோய்வாய்ப்பட்டாரோ அவர் என்னவெல்லாம் கவலைப்பட்டாரோ அந்த உணர்வுகள் வீட்டில் சுழன்று கொண்டு தான் இருக்கும். அது நிச்சயம் நமக்குள் வரும்.

அதே போல் அவர்கள் எந்தப் பக்தி கொண்டு இருந்தார்களோ அதன் வழியில் குலதெய்வங்கள் என்று நாமும் பிரசாதம் வைத்து வாத்திய இசைகளை எழுப்பிப் (மேள தாளங்கள்) பூஜைகள் செய்யப்படும் போது நம் குடும்பத்தில் யார் உடலிலேயாவது வந்து அருளாடத் தொடங்கும்.
1.நான் இப்போது தெய்வமாக இருக்கின்றேன்…!
2.எனக்கு வேண்டியதை நீங்கள் செய்யவில்லை…!
3.இந்தக் குடும்பத்தில் இன்னார் எல்லாம் என்னை மறந்துவிட்டனர்.
4.எனக்கு ஏன் உணவு கொடுக்கவில்லை…? என்று இப்படி அருளாடத் தொடங்கும்.

அந்த அருளாடுபவர் உடலில் நீங்கள் பார்க்கலாம். முன்னோர்களுக்கு எந்த நோயின் தன்மை வந்ததோ இந்த உடலிலும் அதே நோய் நிச்சயம் வரும்.

இதைப் போல குலதெய்வங்களின் ஆன்மாக்கள் நம் குடும்பங்களில் சுழன்று வந்து புகுந்த உடல்களை விட்டு நீங்கிய பின் அடுத்து மனிதன் அல்லாத உடலைப் பெறும் தகுதி தான் பெறுகின்றது.

இதைப் போன்ற நிலைகள் இருந்து நாம் ஒவ்வொருவரும் விடுபடுதல் வேண்டும். அப்பொழுது அதற்காக வேண்டி என்ன செய்ய வேண்டும்…? உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்களுக்கு நாம் எந்த உணவைக் கொடுக்க வேண்டும்…? நாம் எந்த உணவை உட்கொள்ள வேண்டும்…?

பௌர்ணமி அன்று வீட்டில் உள்ளோர் அனைவரும் ஒன்று சேர்ந்து
1.அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும்
2.துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும்
3.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும்
4.சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளியும் நாங்கள் அனைவரும் பெறவேண்டும் ஈஸ்வரா என்று
5.புருவ மத்தியில் எண்ணி விண்ணிலே நினைவைச் செலுத்தித் தியானித்தல் வேண்டும்.

அவ்வாறு தியானித்த அந்த வலுவின் துணை கொண்டு எங்கள் குலங்களின் தெய்வங்களான முன்னோர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலந்து உடல் பெறும் உணர்வுகள் கரைய வேண்டும் என்று உந்தித் தள்ளினால் அவர்களை அங்கே எளிதில் செலுத்திவிடலாம்.
1.நாம் உடலுடன் உள்ளோம்.
2.அவர்கள் உயிரான்மாக்கள் எடையற்றது.
3.இயந்திரம் போன்று நாம் உந்தித் தள்ள முடியும்.

நம்முடைய முன்னோர்கள் சப்தரிஷி மண்டலத்தின் ஒளி வட்டத்தில் கலந்து நிலையான ஒளிச் சரீரம் பெறவேண்டும் என்று நாம் எண்ணி ஏங்குகிற பொழுது நமது முன்னோர்களும் ஒளிச் சரீரம் பெறுகின்றனர். (இது தான் முன்னோர்களுக்கு நாம் கொடுக்க வேண்டிய உணவு)

பௌர்ணமி அன்று இதைப் போல அந்த அருள் ஒளி பெற வேண்டும் என்று செய்தால் முன்னோர்களின் ஆன்மாக்கள் ஒளியின் சரீரம் ஆகின்றது.

அவர்கள் ஒளியின் சரீரம் ஆன பின் அந்த ஒளியின் உணர்வை எடுத்து நாம் நமக்குள் அந்த அரும் பெரும் சக்தி பெற வேண்டும் என்ற உணர்வை எடுக்க வேண்டும். (இதைத்தான் நாம் உணவாக எடுக்க வேண்டும்)

பௌர்ணமி அன்று அவர் அருள் ஒளி பெற வேண்டும் என்ற உணர்வினை நாம் செலுத்தினோம் என்றால் நம் குடும்பத்தில் உள்ள இருளை நீக்கும்.

இப்படி அந்த அருள் ஒளி எங்கள் குடும்பத்தில் பரவி எங்கள் குடும்பத்தில் அறியாது சேர்ந்த இருளை நீங்கி மெய் பொருள் காணும் அருள் சக்தி எங்கள் குடும்பத்தில் பெற வேண்டும் என்று எவரெல்லாம் எண்ணுகின்றனரோ அவர்கள் குடும்பத்தில் வரும் தீமைகளை அகற்றும் வல்லமை பெறுகின்றனர். பிறவி இல்லாத நிலையை அடைய இது உதவும்.