மனிதனே மனிதனுக்குள் சென்று நோய்வாய்ப் படச் செய்து வீழ்த்தி… மனிதரல்லாத உருவைத் தான் பெறுகிறது

மனிதனே மனிதனுக்குள் சென்று நோய்வாய்ப் படச் செய்து வீழ்த்தி… மனிதரல்லாத உருவைத் தான் பெறுகிறது

 

ஒருவருக்கு சர்க்கரைச் சத்து அதிகமாக இருக்கும்… இரத்தக் கொதிப்பு அதிகமாக இருக்கும்… ஆஸ்மா நோயிருக்கும்… டி.பி. நோய் இருக்கும்.

1.ஆஸ்மா நோய் உள்ளவர்கள் இரத்தக் கொதிப்பிற்குண்டான மருந்துகளைச் சாப்பிட்டால் அது ஆஸ்மா நோய்க்கு ஒத்துக் கொள்ளாது.
2.அதே சமயத்தில் ஆஸ்மாவிற்குண்டான மருந்தை உட்கொண்டால் இரத்தக் கொதிப்பிற்கு அது ஒத்துக் கொள்ளாது.
3.ஆனால் சர்க்கரைச் சத்துக்குரிய மருந்தைச் சாப்பிட்டால் இந்த மூன்றுக்கும் ஒத்துக் கொள்ளாது.

தனித்தனித் தன்மையாகி நம் உடலுக்குள் பல விதமான போர் முறைகளை ஆரம்பித்து எத்தகைய மருந்திற்கும் அது கட்டுப்படாது நிலை ஆகிறது.

ஆக மூன்றுக்கும் ஒரு விதமான மருந்தை உட்கொள்ளும் பொழுது
1.அந்த விஷம் கலந்த மருந்தினைச் சாப்பிடும் பொழுது
2.கிட்னி விஷத்தைப் பிரிக்கும் தன்மை இழந்து விட்டால் உப்புச் சத்தாக மாற்றி விடுகின்றது.

உப்புச் சத்தும் சர்க்கரைச் சத்தும் சர்க்கரை நோயும் இரத்தக் கொதிப்பும் இதைப் போன்ற பல நிலைகள் வரப்படும் பொழுது மனித உறுப்புகள் சீராக இயங்காது மனித உறுப்புகள் அனைத்தும் செயல் இழந்து விடுகின்றது.

அந்த உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் பழுதடையும் பொழுது அதில் விளைந்திடும் அணுக்கள் தான் கடைசியில் நமக்குள் வருகின்றது.
1.இந்த உடலில் நல்ல அணுக்கள் வளர முடியாத தன்மையும் வரும் பொழுது
2.உயிர் இந்த உடலை விட்டு வெளியே செல்கின்றது.

வெளி செல்லும் பொழுது “கடைசி நிமிடம் எதனை இந்த உடலில் வளர்த்துக் கொண்டதோ” அந்த அணுத்தன்மையாக அது உயிரான்மாவில் பெருகி விடுகின்றது.

பல விதமான பயிர்களை விவசாயம் செய்கின்றோம். அதிலே எந்தெந்தப் பொருள்களை இணைத்து அந்த வித்து விளைகின்றதோ அடுத்த செடி விளையும் பொழுது அதே போல விளைகின்றது.

விஞ்ஞான அறிவு கொண்டு பல விதமான கலவைகளைச் சேர்த்து ஒரு கருவுக்குள் மாற்றி அமைத்து அப்படிப்பட்ட வித்தினை உருவாக்கி விட்டால் அது வளர்ந்த பின் அதன் இனத்தைப் பெருக்குகின்றது.

மாடு ஆடோ நாயோ மனிதனோ எலியோ இதைப் போன்ற நிலைகளை எல்லாம் மனிதன் இன்று புதிது புதிதாக மாற்றி அமைக்கின்றான்.

இந்த ஒரு உடலுக்குள் வந்த பின்
1.எப்படி இன்னொரு உடலுக்குள் அணுக்கருக்களைச் சேர்த்து அதைக் கருவாக விஞ்ஞானத்தில் உருவாக்குகின்றானோ
2.இதே போல நாம் இந்த உடலை விட்டு வந்தபின் யாருடன் நாம் பிரியமாகப் பழகி இருந்தோமோ
3.அந்த வலு ஈர்க்கப்பட்டால் அந்த உடலுக்குள் இந்த ஆன்மா புகுந்து விடுகின்றது.
4.புகுந்த பின் இந்த உடலில் எதனை உருவாக்கியதோ அதே போல அணுக்களை அங்கே மாற்றம் அடையச் செய்து
5.அந்த உடலில் உள்ள அணுக்களும் அந்த உயிருக்கு அது மாற்றம் அடையச் செய்து விடுகின்றது

ஆனால் இதைப் போல இந்த உடலில் எத்தனை துயரங்கள் பட்டதோ எத்தனை வேதனைகள் பட்டதோ எத்தனை சங்கடப்பட்டதோ எத்தனை சலிப்புப் பட்டதோ குடும்பத்தில் எத்தனை விரக்தி அடைந்ததோ…
1.ஆக அன்பும் பாசமும் கொண்டு நாம் இப்படி வாழ்ந்தோம் பிறருக்கு உதவி செய்தோம் என்று எண்ணினாலும்
2.அந்த வேதனையின் நிலையே முன் வந்து வேதனை அதிகரித்து அதிகரித்த நிலையில்
3.அடுந்த உடலுக்குள் சென்ற பின் அந்த உடலில் இதே நிலையாகி அதில் அந்தக் கருவாக உருவாக்கப்பட்டு
4.இந்த உயிர் மனிதனல்லாத உருவினை உருவாக்கும் அணுக்களைப் பெருக்கிவிட்டு
5.அந்த உடலையும் வீழ்த்திவிட்டு வெளிவந்த பின் மனிதனல்லாத உருவை உருவாக்கி விடுகின்றது.

இந்த உயிரின் வேலை அது தான்.

எந்த உடலில் உருப்பெற்றதோ அந்த உடலிலும் அந்த வேதனை என்ற நஞ்சு வளர்ச்சியாகி அவர்கள் பண்பு பரிவு கொண்ட நிலையில் அவர்களை யார் நுகர்தறிந்தாலும் அவர் உடலுக்குள் சென்று… இப்படித்தான் மனிதனே மனிதனுக்குள் சென்று மனிதனை நோய்வாய்ப் படச் செய்து வீழ்த்தி மனிதரல்லாத உடல்களைத் தான் பெறுகின்றது.

ஆகவே… துயர்படும் உணர்வுகளைக் கண்டுணர்ந்தாலும் அதிலிருந்து விடுபட நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் காலை துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வினை உபதேசித்து
1.செவி வழி கேட்டுணர்ந்து உணரச் செய்து…
2.உங்கள் உயிரில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வின் கருக்களை ஈஸ்வர லோகத்தில் உருவாக்கச் செய்கின்றோம்.

அந்த உணர்வு உங்கள் இரத்த நாளங்களில் கருக்களாக உருவாக்கச் செய்து உங்கள் உடலுக்குள் வளர்ச்சி அடையப்படும் பொழுது உங்களுக்குள் இதற்கு முன் தீமை என்ற உடலை வளர்த்த நிலைகளுக்கும் நஞ்சு கொண்ட உணர்வுகளுக்கும் எதிர்ப்பாகும் பொழுது
1.நாம் நல்ல குணம் கொண்டு தீமைகளை உருவாக்கப்படும் பொழுது நமக்குள் துயர் என்ற நிலைகள் எப்படி வருகின்றதோ
2.துயர் என்ற நிலைகள் வரப்படும் பொழுது இதிலிருந்து விடுபட்ட அருள் ஞானிகளுடைய உணர்வை நாம் நுகர்ந்தறியப்படும் பொழுது
3.தீமையை உருவாக்கும் அணுக்களை அது மடியச் செய்து விடுகின்றது.
4.தீமைகள் நமக்குள் வந்தாலும் மடிந்திடும் உணர்வுகள் தனக்குள் அது ஒளியாகி உயிரோடு ஒன்றி ஒளியின் சுடராகப் பெருகுகின்றது.

பன்றி நாற்றத்தைப் பிளந்து நல்ல உணர்வுகளை நுகர்ந்து மனிதனாக அடுத்து எவ்வாறு சரீரம் பெற்றதோ இதைப் போல
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நமக்குள் அதிகமாக அதிகமாக
2.தீமைகளை வென்றிடும் உணர்வுகள் வளர வளர
3.இந்த உடலை விட்டு நாம் சென்றால்
4.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலத்துடன் நாம் இணைய நேரும் (இவ்வழியில் செல்வோர்…!)

செய்யத் தவறியதை… செய்ய மறந்ததை… நாம் அனுதினமும் இப்போது செய்ய வேண்டும்

செய்யத் தவறியதை… செய்ய மறந்ததை… நாம் அனுதினமும் இப்போது செய்ய வேண்டும்

 

துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் சப்தரிஷிகளின் அருள் சக்தியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் துருவ நட்சத்திரத்தின் பேர்ருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா… என்று “புருவ மத்தியில் எண்ணி” ஏங்கித் தியானித்து… அந்த வலுவைக் கூட்டுங்கள்.

அதை வைத்து நம் முன்னோர்களின் உயிரான்மாக்களை விண் செலுத்த வேண்டும். காரணம்… நம் மூதாதையர்களுக்கு குலதெய்வங்களுக்கு இதற்கு முன்னாடி நாம் அதைச் செய்ய மறந்து விட்டோம்.

இப்போது
1.சப்தரிஷி மண்டலத்தின் பேர்ருள் பேரொளியை வலுப்பெறச் செய்து
2.மகரிஷிகள் காட்டிய அருள் வழியை உங்களுக்குள் அந்த உணர்வைத் தூண்டி
3.நினைவைத் தன்னிச்சையாக விண்ணை நோக்கிச் செலுத்தும்படி பயிற்சி கொடுக்கின்றோம்.
4.அதை நீங்கள் பெறும் தகுதியை ஏற்படுத்துகின்றோம்.

இதே ஏக்கத்தோடு நாம் அனைவரும் அந்தச் சப்தரிஷி மண்டலத்தின் உணர்வைப் பெற்று அதனின் வலுவின் துணை கொண்டு அவரவர்கள் குலதெய்வங்களான உயிரான்மாக்களை அந்த சப்தரிஷி மண்டலத்துடன் எளிதில் இணைக்க முடியும்.

ஏனென்றால் அந்த வலுவின் தன்மை கொண்டு
1.குலதெய்வங்களின் உயிரான்மாக்களை உந்தித் தள்ளப்படும் பொழுது அந்த சப்தரிஷி ஈர்ப்பு மண்டலத்தில் செல்கின்றது
2.உடல் பெறும் உணர்வுகள் கரைகின்றது… உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நிலைக்கின்றது
3.அப்பொழுது அந்த சப்தரிஷி மண்டலத்துடன் அது சுழல்கின்றது.

உதாரணமாக நாம் பூமியின் நிலைகளைக் கடந்து ஒரு இராக்கெட்டை விண்ணிலே செலுத்துகின்றோம். அப்பொழுது பூமியின் ஓடுபாதையில் அது சுழலச் செய்யும் பொழுது அதன் வரிசையில் சுழலுகின்றது.

அதே சமயத்தில் பூமியின் நிலைகள் தென் வடக்கில் சுழலும் போது
1.அந்த சுழலும் தன்மைக்கு இதனுடைய ஈர்ப்பின் வேகத்தைக் கூட்டும் போது அதே ராக்கெட் சுழலுகின்றது.
2.ஆனால் அதனுடைய வேகத்தை குறைத்து பூமியின் சுழல் வட்டத்தில் அதனுடைய சமமான நிலைகள் இருக்கும்போது
3.எந்த ஊரின் நிலையோ அதனின் நிலை கொண்டு அங்கே நிலை கொண்டு அதனைச் செயல்படுத்துகின்றது.

இதை போன்று தான் நாம் எந்த மனித உடலில் இருந்து உணர்வினை ஒளியாக மாற்றி இன்றும் ஒளியின் சரீரமாக சப்தரிஷி மண்டலமாக இருக்கின்றனரோ
1.அவர்கள் உணர்வுகளை நம் உடலுக்குள் செலுத்தி இதனின் வலு துணை கொண்டு
2.நம் மூதாதையர்களுடைய உடலை விட்டு பிரிந்து சென்ற ஆன்மாக்களை
3.நாம் இந்த முறைப்படி ஆயிரக்கணக்கானோர் வலு கொண்டு விண் செலுத்துதல் வேண்டும்.

அவ்வாறு விண் செலுத்தினால் அந்த ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் செல்கின்றது பின் உடல் பெறும் உணர்வுகள் கரைந்த பின் அந்த ஈர்ப்பு வட்டத்திலே சுழலத் தொடங்கி விடுகின்றது.

விண் செலுத்திய பின் அந்தந்தக் குடும்பத்தைச் சார்ந்தோர் அந்த சப்தரிஷி மண்டலங்களின் பேர்ருள் பேரொளி பெற வேண்டும்… துருவ மகரிஷிகளின் அருள் சக்தி நாம் பெற வேண்டும் என்று ஏங்கினால்…
1.அந்த உணர்வைப் பெற்று இந்த வாழ்க்கையில் வரும் கடும் தீமைகளை கூட மாற்றி
2.அந்த மகரிஷிகளின் உணர்வை நமக்குள் வளர்த்துக் கொள்ளலாம்.

ஏனென்றால் இதற்கு முன் நாம் செய்யத் தவறிய அந்த உணர்வு கொண்டு நாம் ஒவ்வொருவரும் இந்த பௌர்ணமி நாளில் இது மாதிரி தொடர்ந்து உந்தித் தள்ளினால்… இன்னொரு உடலுக்குள் பேயாக நின்று அதனை ஆட்டிப் படைத்து அதற்குப் பின் வெளியில் வந்தாலும்… அவர்களுடைய உணர்வுடன் நம் நினைவினை ஆற்றலை பரப்பப்படும் பொழுது (இன்னொரு உடலுக்குள்) இந்த நஞ்சினைக் கரைத்து விட்டு… “விண் செல்லும் உணர்வினைத் தனக்குள் பெரும் தகுதியை ஏற்படுத்துகின்றது…”

ஆகவே மனிதனாக நம்மை உருவாக்கி நம்மை சீராட்டி தாலாட்டி வளர்த்த குலதெய்வங்களை “இன்னொரு பிறவியின் நிலை அடையாமல் செய்வதே… நம்முடைய தலையாயக் கடமையாகும்…”

அவரவர் வீடுகளில் இருந்தே இதைப்போல இந்த உணர்வினை எடுத்துச் செயல்படுத்த முடியும். ஒரு கூட்டமைப்பாக ஆயிரக்கணக்கானோர் சேர்ந்து எடுத்தோம் என்றால்
1.அவர்களை நாம் துரித நிலைகள் கொண்டு எந்த உடலை விட்டு வெளியில் வந்தாலும்
2.அவர்களுடைய உணர்வு தான் நம் உடலாக இருப்பதனால் நாம் அவர்களை எளிதில் அனுப்ப உதவும்.

ஏனென்றால் இப்பொழுது நாம் சாங்கியத்தில் சுட்ட சாம்பலைக் கங்கையில் அல்லது ஓடும் நீரில் கரைத்தால் பாவம் போய்விடும்… மோட்ச தீபம் ஏற்றினால் அவர் சொர்க்கம் போவார்…! என்று தான் நம்மைச் செய்ய வைத்துள்ளார்கள்.

ஆகவே… காலத்தால் மறைந்த இந்த நிலையை மகரிஷிகளின் அருளால் இதைப் போன்ற மூதாதையர்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்து அவர்களை பிறவியில்லா நிலை அடையச் செய்வோம்.

அவர்கள் அங்கு ஒளி நிலை பெற்றால் இந்த உணர்வு கொண்டு நாம் இந்த பூமியில் வரும் தீமைகளை அகற்றிவிட்டு நாம் இந்த வாழ்க்கையில் மகிழ்ந்து வாழவும் மகரிஷிகள் அருள் வட்டத்தில் வாழ்ந்து… இங்கு வரும் தீமைகளில் இருந்து விடுபட்டு மகிழ்ந்து வாழ முடியும்.

1.இந்த உடல் நமக்குச் சொந்தமல்ல… உயிரே நமக்குச் சொந்தம்
2.ஆனால் இப்பொழுது உயிருக்கும் நமக்கும் சொந்தம் இல்லாத நிலைகளில் இருக்கின்றோம்.
3.ஆகவே உயிரின் தன்மையை நாம் சொந்தமாக்க வேண்டும்

ஆக நாம் எதை எண்ணுகின்றோமோ அதனை வைத்து இந்த உயிர் உடலை இயக்குகின்றது. ஆகையினால் “உயிர் தான் நமக்குச் சொந்தம்” என்று யாரும் நாம் எண்ணவே இல்லை.

அவனால் உருவாக்கப்பட்டது தான் இந்த உடல் என்ற நிலையில் நாம் அவனை வேண்டி நாம் எதை எண்ணி எடுக்கின்றோமோ அதை உருவாக்குகின்றது.

ஒருவருக்கு நாம் கடுமையாகத் தீங்கு செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றோம். அதை உயிர் உருவாக்குகின்றது… அந்த உணர்வை உடலுக்குள் பரப்புகின்றது. அதையே (தீமையை) செய்யும்படி செய்கின்றது.

ஒருத்தருக்கு நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றோம்… அந்த உணர்வின் தன்மை இந்த உடலை இயக்கிக் காட்டுகின்றது.

ஆனால் தீமையின் உணர்வை நாம் பெற வேண்டும் என்று எண்ணி விட்டால்
1.அந்தத் தீமையின் உணர்வின் அணுக்கள் நமக்குள் விளைந்து
2.நம் உடலை அழுகச் செய்து நம்மை வேதனைப்படச் செய்கின்றது‌.

யார் வேதனைப்பட வேண்டும் என்று எண்ணுகின்றோமோ அந்த வேதனையின் உணர்வின் அணுக்கள் நமக்குள் விளைந்து அந்த வேதனையையே நமக்குள் உருவாக்கி விடுகின்றது.

இதைத்தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று சொல்வது. ஆகவே நாம் எதுவாக ஆக வேண்டும் என்று சிந்தித்துச் செயல்பட வேண்டும்.