யாம் கொடுக்கும் சக்தியை “நீங்கள் எண்ணி எடுத்தால்…” அதை உணரும் வழி

யாம் கொடுக்கும் சக்தியை “நீங்கள் எண்ணி எடுத்தால்…” அதை உணரும் வழி

 

1.எப்படி இருந்தாலும் உடலை விட்டு நம் உயிர் பிரிந்து தான் ஆகும்.
2.கோடிச் செல்வம் இருந்தாலும் உடலுக்குள் உயிர் இருக்காது.

செல்வத்தைப் பாதுகாப்பதற்காக வேண்டி “அவன் என்ன செய்வான்…? இவன் என்ன செய்வான்…?” என்ற இந்தப் பயம்தான் வரும் பயத்தைத் தான் வளர்க்க முடியும்.

இதிலிருந்து நாம் எந்த நிலையிலும் தீமைகள் தன்னைத் தாக்காது மன உறுதி கொள்ள வேண்டும். துருவ நட்சத்திரத்தின் உணர்வை நம் உடலில் இருக்கக்கூடிய ஒவ்வொரு அணுக்களுக்கும் சேர்க்க வேண்டும்.

மன உறுதி கொண்டிருந்தாலும் அதிர்ச்சியான நிலைகளில் ஒருவன் தவறு செய்கின்றான் என்று உற்றுப் பார்த்த பின் நம் உடலுக்குள் வந்த உடனே பயம் ஏற்படுகின்றது.

ஏனென்றால்
1.நம் உடலில் உள்ள அணுக்களுக்கு எதிர் நிலையாகும் பொழுது எலக்ட்ரிக் எலக்ட்ரானிக்
2.அந்த அதிர்வுகள் நமக்குள் வருகின்றது.

அந்த அதிர்வான உணர்வுகள் நமக்குள் உமிழ் நீராக மாறி ஆகாரத்துடன் கலந்த பின்… பயத்தை ஊட்டும் உணர்வின் தன்மை உடலில் தசைகளில் ஏற்பட்டு விடுகின்றது. அல்லது இரத்தத்தில் கலந்து மற்ற அணுக்களுடன் சேர்த்துப் பயத்தை ஊட்டுகின்றது அந்த உணர்வின் அதிர்வுகள் தான்.

இதைப் போன்ற தீமைகளிலிருந்து தப்ப நாம் என்ன செய்ய வேண்டும்…?

குருநாதர் 20 வருடம் எம்மைக் காடு மேடெல்லாம் அலையச் செய்தார். அவரிடம் பெற்ற அனுபவங்களைத் தான் இப்பொழுது உங்களுக்கெல்லாம் சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

எத்தனை பேர் இதை எடுத்துக் கொள்கின்றார்கள்…! எல்லோருக்கும் இது கிடைக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். அதே வழியில் எத்தனை பேர் ஆசைப்பட்டு எடுக்கின்றார்கள்…?
1.கொஞ்சப் பேர் தான் வருகின்றார்கள்
2.அவர்களும் கூட… ஏதோ தொழிலுக்காக என்று எண்ணித்தான் வருகின்றார்கள்
3.நினைத்தது நடக்கவில்லை என்றால் இந்தச் சாமியிடம் என்ன இருக்கிறது…? என்று போய்க் கொண்டிருக்கின்றார்கள்.
4.யார் எதைச் செய்தாலும் இந்த உடலில் என்ன வைத்திருக்கிறோம்…? என்று தெரியாது…!

ஆகவே… உயர்ந்த சக்திகளை நீங்கள் எடுத்து இந்த உடலுக்குப் பின் பிறவியில்லை என்ற நிலை அடைய வேண்டும்.

ஜோதிடம் பார்த்து எல்லாம் பார்த்து “எல்லாம் போய்விட்டது” என்று வேதனையைத் தான் வளர்க்க நேரும். கடைசியில் பேயாசையாக அது வருகின்றது.

அந்த உணர்வுடன் இறந்தால் இதே போன்று ஆசை கொண்ட இன்னொரு உடலுக்குள் புகுந்து அங்கே போய்ப் பேயாகத் தான் ஆட்ட முடியும். அந்த உடலை வீழ்த்திய பின் மற்றதை மிரட்டி வாழும்… பார்த்த உடனே அச்சப்படச் செய்யும் அத்தகைய உடலமைப்பாகத்தான் உயிர் உருவாக்கி விடும்.

இன்று மனிதனாக இருக்கின்றோம்… நாளை அந்த நிலை ஆகிவிடும்…!

டாக்டர்கள் எப்படி இன்ஜெக்ஷன் செய்து உடனடியாக மருந்தை ரத்தத்தில் கலக்கச் செய்து விஷ அணுக்களைத் தணியச் செய்து உற்சாகமூட்டி உடல் நலம் பெறச் செய்கின்றார்களோ அதே போல் தான்
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை ஆத்ம சுத்தி மூலம் உங்களைப் பெறச் செய்கின்றோம்.
2.உங்கள் கண்ணின் நினைவினை உயிருடன் ஒன்றச் செய்து
3.உயிரின் நினைவு கொண்டு அருள் சக்திகளை உடலுக்குள் பாய்ச்சினால் “சிவன் நெற்றிக் கண்ணைத் திறந்தால் சுட்டுப் பொசுக்கி விடுவான்…”

நாம் புறக்கண்ணால் பார்க்கின்றோம். அதை நுகர்ந்து உயிரான அகக்கண்ணால் உணர்கின்றோம்.
1.புறக்கண்ணால் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைப் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டு ஏங்கி
2.நம் அகக் கண்ணான உயிருடன் மோதச் செய்து
3.துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று அதை ஈர்க்கும் சக்தி கொண்டு வந்தால்
4.உயிரில் உள்ள காந்தம் கண்ணின் தன்மை கொண்டு வந்து அதை இழுக்கும்.

நாம் அப்படி இழுக்கக் கற்றுக் கொண்டால் தீமை என்ற அணுக்கள் உடலில் இருக்கின்றதல்லவா… அதற்கு ஆகாரம் செல்லாதபடி முதலில் தடைப்படுத்தும்.

தடைப்படுத்தப்படும் பொழுது தீய உணர்வுகள் அதற்குக் கிடைக்காமல் போனால் அந்த அணுக்கள் சோர்வடையும். சோர்வடையும் பொழுது துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் ரத்த நாளங்களில் கலக்க வேண்டும் என்ற ரத்த நாளங்களில் உள்ள ஜீவணுக்கள் ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

பரிதாபப்பட்டு ஒருவருக்கு உதவி செய்கின்றோம். இறக்கும்போது அவன் என்ன செய்கின்றான்…? “மகராசன்…!” நல்ல நேரத்தில் எனக்கு உதவி செய்தான் என்று எண்ணுவான்.

அப்போது அந்த உணர்வுகள் கொண்டு அந்த ஆன்மா இந்த உடலுக்குள் தான் வந்து சேரும்… ஜீவான்மாவாக மாறிவிடுகிறது.
1.அவன் எப்படி வேதனைப்பட்டானோ துயரப்பட்டானோ அந்த உணர்வு உங்கள் ரத்தத்திலிருந்து அதனுடைய உணர்வை எடுக்கும்.
2.ரத்தத்தில் தான் அதனின் ஜீவிதமே இருக்கும்… தன் உணர்வை வளர்க்கும்.
3.உடல் முழுவதும் சுற்றி வரும் பொழுது… போகும் இடமெல்லாம் உடலில் குடைச்சல் வரும்.

அதே சமயத்தில் ரத்தத்தின் உணர்வுடன் சேர்த்து உயிர் பாகம் சென்றால் உணர்ச்சிகளாக இயக்கி அதன் இயக்கமாக நம் நினைவை இழக்கும்படி செய்துவிடும்.

உடலில் எந்தக் கோளாறும் இருப்பதில்லை. ஆனால்… ஐயோ என்னை அடிக்கின்றான்… பிடிக்கின்றான்…! என்று சொல்பவர்கள் இன்று எத்தனை பேர்கள் இருக்கின்றார்கள்.

அதே சமயத்தில் பழி தீர்க்கும் உணர்வைச் சேர்த்து “உன்னை நான் விடமாட்டேன்… நான் கொன்றே தீருவேன்… எனக்கு இப்படித் தொல்லை கொடுத்தார்கள்” என்று பூதகணங்களாக வளர்ந்து உடலுக்குள் வந்தால் உடலையே அழித்திடும் நிலையாக வரும்.
1.ஆக எதன் உணர்வைச் சேர்த்ததோ ரத்தத்திலிருந்து அதனுடைய வேலையைச் செய்யத்தான் செய்யும்.
2.அப்பொழுது அதை மாற்றுவது யார்…?

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று புருவ மத்தியிலே எண்ணி அந்த ஜீவான்மாக்களுக்கு உணவு சேராதபடி தடைப்படுத்தி… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் ரத்தங்களிலே கலக்க வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று உடலுக்குள் செலுத்திப் பழக வேண்டும்.

கண்ணின் நினைவை உடலுக்குள் அப்படிச் செலுத்த வேண்டும்.

நண்பர்களுக்குள் எனக்குத் துரோகம் செய்தான் பாவி என்று எண்ணும் போது உடலை இயக்குகின்றது.

அதே துரோகம் செய்த உணர்வு நமக்குள் இருக்கும் பொழுது அவனை எண்ணும் போது நமக்கு பதட்டமும் இப்படிச் செய்தானே என்று ஆத்திரத்தை ஊட்டும் உணர்வுகள் வரும் பொழுது… நாம் மற்றவர்களையும் சந்தேகப்பட்டு இங்கேயும் வெறுக்கும்படி செய்து “நல்ல காரியங்களைச் செயல்படுத்த முடியாதபடி” தடுத்து விடுகின்றது.

இது போன்ற சந்தர்ப்பங்களில் எல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணி எடுத்து என் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று செலுத்த வேண்டும்.

ஒவ்வொரு ஜீவணுக்களின் நுனியிலும் இந்தக் காந்த சக்தி உண்டு. கண்ணால் கவரப்பட்டு உணர்வின் தன்மை கரு முட்டையாகி அது அணுவாக மாறுகின்றது.
1.அதனால் அந்த அணுக்களில் அந்த அருள் சக்தியை மோதச் செய்ய வேண்டும்.
2.கண்ணின் நினைவை நேரடியாக இணைக்கப்படும் பொழுது நாம் எதை எண்ணுகின்றோமோ அந்த உணர்வின் காந்தத்தைச் செலுத்துகின்றோம்.

சிறுகச் சிறுக இப்படிச் சேர்த்துப் பழகினால் இன்னொரு உடலில் இருந்து நம் உடலுக்குள் தீமை செய்ய வந்தாலும் “அதை நாம் அருள் ஒளி கொண்டு மாற்றலாம்…”

இல்லை என்றால் எந்த இன்ஜெக்ஷனுக்கும் அது கட்டுப்படாது. அதன் உணர்வையே நமக்குள் செயல்படுத்தும். மற்ற எதையும் வைத்து அதை மாற்ற முடியாது.

மந்திரத்தை வைத்து இன்னொரு ஆவியை ஏவலாம். இரண்டு மாதம் மூன்று மாதம் அமைதியாக இருக்கும். மறுபடியும் அந்த ஆவியின் தன்மை வேலை செய்யும்.

இது போன்ற தீமையிலிருந்து நாம் தப்ப வேண்டுமா இல்லையா…?

அதற்குத் தான் இதை உபதேசிக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நீங்கள் பெற வேண்டும் உங்களை அறியாது சேர்ந்த தீமைகள் இருந்து விடுபட வேண்டும் அந்த அருள் உணர்வுகள் பெற வேண்டும்… உலக ஞானம் பெற வேண்டும் இந்த உடலைக் காக்கும் ஞானமும் உலகைக் காக்கும் அருள் ஞானமும் பெற வேண்டும் என்று தான் என்னுடைய பிரார்த்தனையே இருக்கின்றது.

ஒரு வெறுப்படைந்தவனுடைய உணர்வு எப்படி இயக்குகின்றதோ அதைப் போன்று
1.நீங்கள் அந்த உயர்ந்த சக்தி பெற வேண்டும் என்று நான் எண்ணும் பொழுது
2.இந்த உணர்வுகள் உணர்ச்சிகளை உங்களுக்குள் தூண்டிக் கொண்டே இருக்கும்.
3.சில நேரங்களில் நீங்கள் அதைக் கவனிக்கலாம்.
4.அந்த நேரத்தில் சிந்தனையைச் செலுத்தி… அந்த உயர்ந்த சக்திகளை எடுத்தால் நன்மை பயக்கும் சக்தியாக அதைப் பெற முடியும்.
5.ஏதோ ஒரு விதமான உற்சாகம் கிடைக்கின்றது என்று சொல்வீர்கள்… அடுத்து அந்த நினைவால் உயர்ந்த சக்தியை எடுக்கலாம்.
6.சில நேரங்களில் உங்களுக்கு அந்த நல்ல வாசனைகள் வரும். இனம் புரியாத ஒரு உற்சாகம் வரும்.
7.அன்று சந்தோசமாக இருக்கும்.. காரியங்கள் சீராக நடக்கும்.

இது எல்லாம் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்குத்தான் இதைச் செய்கிறேன். அதையே பயிற்சியாகக் கொடுத்து உங்கள் உடலில் இருக்கும் அணுக்களுக்கு கண்ணின் நினைவு கொண்டு அருள் ஞான உணர்வைப் பதிவு செய்கின்றேன்.

கண்ணால் பதிவு செய்யும் பொழுது எலும்புக்குள் ஊழ் வினையாகப் பதிவாக்கி விடுகின்றது.

செல்ஃபோன்களில் பதிவாக்கிய பின் அழைத்தால் அந்த நம்பர் எப்படித் தெரிய வருகின்றதோ அதைப்போல அந்த அருள் உணர்வுகளைப் பதிவாக்கி விட்டால்
1.மீண்டும் நினைவாக்கும் போது அந்தச் சக்தியை நீங்கள் பெற முடியும்.
2.அருள் உணர்வுகளை உங்களால் நுகர முடிகின்றது அறிய முடிகின்றது.
3.ரத்தத்தில் அது சேர்ந்து கெட்டதை அகற்றுகின்றது… நல்லதை உருவாக்க ஜீவன் கொடுக்கின்றோம்.

ஆனால் வீணாகக் கவலைப்பட்டு சஞ்சலப்பட்டு சங்கடப்பட்டு வெறுப்படைந்து வேதனைப்பட்டால் மீண்டும் அதை வளர்த்து மனித உடலிலே நோயாகி… அடுத்து மனிதனல்லாத உடலை உருவாக்கத்தான் அது உதவும்.

ஜோசியம் ஜாதகம் நல்ல நேரம் கெட்ட நேரம் எதுவும் ஒன்றும் செய்ய முடியாது. காரணம்… தீமையை நீக்க வேண்டும் என்று எந்த நேரத்தில் எண்ணுகின்றீர்களோ அதுவே உங்களுக்கு நல்லது.

1.தீமை வரும் பொழுது துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்ற உணர்வைப் பயன்படுத்தி
2.என் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று எப்பொழுது எண்ணுகின்றீர்களோ “அது எல்லாம் நல்ல நேரமாகின்றது…”

மனிதனுக்கு ஜாதகம் இல்லை… அவன் உருவாக்கும் சக்தி பெற்றவன். நல்லதை உருவாக்கப்படும் பொழுது நல்ல நேரம் வருகின்றது… நல்ல செயல் நடக்கின்றது… மன பலம் கிடைக்கின்றது… மன உறுதி கிடைக்கின்றது.

“எனக்குத் துரோகம் செய்தான்… தொல்லைப்படுத்தினான்” என்று எண்ணினால் அந்த நேரம் கெட்ட நேரம் ஆகின்றது. தொழில் செய்து நஷ்டம் ஆகிவிட்டது பையன் சொன்னபடி கேட்கவில்லை என்று எண்ணினால் அது எல்லாம் கெட்ட நேரம் தான்.

என் பையன் நல்ல ஒரு தெளிவானவனாக வரவேண்டும் தொழில் சீராக வேண்டும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணினால் பிள்ளைக்கு நல்ல நேரம்… நமக்கும் நல்ல நேரம் ஆகின்றது…!

நல்ல நேரமாக ஆக்க வேண்டும் என்றால் அதற்கு வலு வேண்டும் அல்லவா. சாதாரணமாக நினைக்க முடியாது.
1.அதற்குத்தான் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை உங்களைப் பெறச் செய்கின்றோம்.
2.அதை நீங்கள் பெற்று உங்களுக்குள் வலுவாக்கிக் கொண்டால் அதை நினைக்கும் போதெல்லாம் நல்ல நேரம் ஆகின்றது.

வேதனை என்று வரப்படும் பொழுது சர்க்கரைச் சத்து ரத்தக் கொதிப்பு ஆஸ்மா போன்ற நோய்கள் கடுமையாகின்றது. நான் நாளை என்ன செய்வேன்…? என்ற திகைப்பானால் வேதனை வெறுப்பானால் சளியாக உருமாறும் நிலையும் வந்து விடுகிறது. அடிக்கடி சலிப்பும் சஞ்சலமும் உருவானால் உப்பு சத்து உருவாகின்றது.

நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு “எதிர்ப்பான நிலை வரும் பொழுது… அது செயலற்றதாக மாறி…” இந்த உடலையே சீர்குலைக்கச் செய்கின்றது.

அதைப் போன்ற நிலைகளிலிருந்து நீங்கள் விடுபடுவதற்குத் தான்
1.எப்படியும் அந்த உயர்ந்த சக்திகளை நீங்கள் பெற வேண்டும்
2.உங்கள் குடும்பத்திலும் அந்த உயர்ந்த சக்தியைப் பாய்ச்ச வேண்டும்
3.அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும்
4.உங்கள் வாழ்க்கையில் நீங்கள் உயர வேண்டும்
5.உங்கள் பார்வை பிறருடைய தீமைகள் வராது தடுக்க வேண்டும் என்று இந்தப் பயிற்சியைக் கொடுக்கின்றேன்.

நீங்கள் எல்லாம் மெய் ஞானிகளாக உருவாக வேண்டும் என்ற ஏக்கத்துடன் உபதேசிக்கின்றேன்

நீங்கள் எல்லாம் மெய் ஞானிகளாக உருவாக வேண்டும் என்ற ஏக்கத்துடன் உபதேசிக்கின்றேன்

 

மனிதனுடைய எண்ணங்கள் இன்றைய உலகில் சீர் கேட்டுக் கொண்டிருக்கும் இந்த வேளையில் நமது குருநாதர் இயற்கையின் உண்மை நிலைகளை “மூடனாக இருந்த என் மூலமாக வெளிப்படுத்துகின்றார்…”

பன்றி சாக்கடையை நுகராது அதற்குள் இருக்கும் நல்ல பருப்பை நுகர்கின்றது. இதே போல் சாக்கடையாக இருக்கும் இந்தக் காற்று மண்டலத்தில் இருக்கும்
1.நல்ல உணர்வுகளான ஞானிகள் உணர்வுகளை நுகர்ந்தறிந்து அதை எடுத்துச் சொல்லின் ஒலியாக நீ வெளிப்படுத்தும் போது
2.எவர் இதைக் கேட்டு உணர்கின்றார்களோ அவர்கள் வாழ்க்கையில் இருள் சூழ்ந்த நிலைகள் நீங்கி மெய் ஒளி காணும் நிலைகளாக வளரும்.

இதை நீ செய்…! அவர்கள் வளர வேண்டும் என்று நீ எண்ணும் பொழுது நீ வளர்கின்றாய். அவர்கள் வளர வேண்டும் என்று நீ விண்ணை நோக்கி ஏகும் பொழுது அந்த உணர்வின் சக்தி உனக்குள் விளைகின்றது. ஆகவே
1.ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொருவரையும் மெய் ஞானிகளாக உருவாக்க வேண்டும் என்ற உணர்வுடன் ஏங்கி நீ உபதேசி.
2.அந்த உணர்வின் ஒலி அலைகளைப் பரப்பச் செய்.

இதை நினைவு கொண்டோர் உள்ளங்களில் அவரை அறியாது வந்த இருள்கள் நீங்கட்டும். அவர் வாழ்க்கையில் நல்ல உணர்வுகளாக மலரட்டும். அவருடைய மூச்சும் பேச்சும் இருள் சூழ்ந்த உலகில் இருந்து அவர்களை மீட்டி…
1.மெய் ஞானிகள் சென்றடைந்த அந்த அருள் ஒளிக் கூட்டத்துடன் இந்த உணர்வுகள் அழைத்துச் சென்று
2.அவர்கள் அனைவரும் மெய் ஞானிகளாக வளரட்டும்.

இதையெல்லாம் நீ எண்ணும் பொழுது அந்த நிலையை நீ அடைகின்றாய். இதைக் கேட்டுணர்ந்தோரும் அதை அடைகின்றார்கள் என்றார் குருநாதர்.

இந்த வாழ்க்கையில் எவ்வளவு நல்ல குணங்கள் கொண்டிருந்தாலும்… பிறர் செய்யும் குறைகளைக் காணும் போது நம்மை அறியாது வேதனைப்படுகின்றோம்… வேதனைப்படச் செய்கின்றது.

யாம் சொல்லும் முறைப்படி விநாயகர் தத்துவப்படி எண்ணும் போது அந்தத் துன்பங்கள் மறைகின்றது.

விநாயகர் என்பது “நம் உடல்” வினைக்கு நாயகனாக இருக்கின்றது…. அதை நாம் பூஜிக்க வேண்டும். முன் சேர்த்துக் கொண்ட வினைக்கு நாயகனாக மனித உடல் பெற்றாலும் அந்த மெய் ஞானிகளின் அருள் ஒளியை நமக்குள் வினையாகச் சேர்ப்பிக்க வேண்டும்.

மெய் ஞானிகள் ஒளிச் சரீரம் பெற்றது போன்று இந்த உடலில் வினைக்கு நாயகனாக ஒளிச் சரீரமாகப் பெறச் செய்யும் நிலை தான் விநாயகர் தத்துவத்தில் காட்டப்பட்டுள்ளது.

1.அவர்கள் சென்ற பாதையை நீ எண்ணுவாய் என்றால் நீயும் அதுவாகின்றாய்… கேட்டுணர்வோரும் அந்த நிலை பெறுகின்றார்கள்.
2.அவர்கள் பெற வேண்டும் என்று நீ ஏங்கும் பொழுது அவர்களுக்கு முன் நீ பெறுகின்றாய்.
3.உன் சொல்லைக் கேட்டுணர்ந்தவர்களும் உனக்குப் பின் அந்த நிலையில் வருகின்றனர்.

இதை எல்லாம் குருநாதர் எனக்கு உணர்த்தியது. இதைப் போன்றே நீங்களும் செயல்படுங்கள்.

பூமியில் மனிதனாகப் பிறந்த நிலையில் அருள் உணர்வுகளைப் பெற்று இருள் சூழ்ந்த நிலையிலிருந்து நீங்கி
1.உங்களுடைய மூச்சும் பேச்சும் உலக நன்மை பயக்கச் செய்யும் சக்தியாக வளர வேண்டும் என்ற ஏக்கத்தில் தான்
2.இதை எல்லாம் உபதேசிக்கின்றேன் “குருநாதர் காட்டிய அருள் வழிப்படி…”

குருநாதர் காட்டிய வழியிலே உங்களுக்குத் “தொட்டுக் காண்பிக்கின்றேன்”

குருநாதர் காட்டிய வழியிலே உங்களுக்குத் “தொட்டுக் காண்பிக்கின்றேன்”

 

இந்த வாழ்க்கையில் நம் நல்ல குணங்களை இழக்காத வண்ணம் ஞானிகளின் அருள் உணர்வுகளைச் சேர்த்து நமக்குள் வரும் துன்பத்தை நீக்கி வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த உபதேசத்தின் வாயிலாக அந்த மெய் ஞானிகளின் உணர்வுகளை அருள் ஞான வித்துக்களாக உங்களுக்குள் ஊன்றி வளர்க்கும்படி செய்கிறோம். ஏனென்றால் திரும்பத் திரும்பப் பல தடவை சொல்கிறேன்.

1.ஒரு தடவை சொன்னாலும்… அப்படியே சொல்லிக் கொண்டே சென்றால் அடுத்து உங்களுக்கு அந்த நினைவு வராது.
2.அதை மீண்டும் சொல்லும் பொழுது தான் ஞானிகள் உணர்வலைகள் உங்களுக்குள் பதிவாக ஏதுவாகும்.
3.பதிந்த பின் நீங்கள் மீண்டும் எண்ணும் பொழுது நினைவுக்கு வர இது உதவியாக இருக்கும்.
4.ஆனால்… சாமி இப்பொழுது தான் சொன்னார்… திரும்பவும் அதையே சொல்கிறார் என்று எண்ணி விட்டால்
5.“ஏற்கும் பக்குவம் குறைவாகி விடுகின்றது…” (இது முக்கியம்)

உதாரணமாக நாம் ஒரு கட்டிடத்தைக் கட்டுகிறோம் என்றால் வானம் தோண்டிச் சுண்ணாம்பையும் கல்லையும் வைத்துக் கட்டிக் கொண்டே போகின்றோம். அது ஈரமாக இருக்கின்றது.

சீக்கிரம் கட்டி முடிக்க வேண்டும் என்று செங்கலை மேலே ஏற்றி ஒரே நாளில் கட்டிட்த்தைக் கட்டினால் என்ன ஆகும்…? மொத்தமாக அமுக்கிக் கீழே விழுந்து விடும்.

கட்டிடத்தை ஆறச் செய்து நிறுத்தி அந்த ஈரம் உணரும் வரையிலும் பொறுத்திருக்க வேண்டும். கட்டியது இந்தப் பக்கம் சாய்ந்து இருக்கின்றதா…? அந்தப் பக்கம் சாய்ந்திருக்கின்றதா…? சரியாகக் கட்டியிருக்கின்றோமா…? என்பதைச் சிந்தித்துப் பார்த்து… ஈரம் காய்ந்த பின் அதன் மேல் கட்டிடத்தைக் கட்டுவது சாலச்சிறந்ததாக இருக்கும்.

அதைப் போன்று தான் துன்பத்தைப் போக்கிக் கொள்ளும் நிலையாக என்னிடம் நீங்கள் வரும் பொழுது அந்தத் துன்பத்தைப் போக்கிடும் உணர்வின் ஆற்றலைப் பதிவு செய்கின்றேன்.

இதைத்தான் “தொட்டுக் காட்டுதல்” என்று சொல்வது.

சில பேர் வருவார்கள். நான் அங்கே சென்றேன்… அவர் முதுகில் தட்டிக் காண்பித்தார்…! நெற்றியில் தொட்டுக் காண்பித்தார்…! நெற்றியில் பார் அங்கே தெரியும்… பின் உச்சிக்கு கொண்டு போ அது தெரியும்…! என்றெல்லாம் சொன்னதாகச் சொல்வார்கள்.

திட்டியவரைக் கூர்ந்து கவனிக்கும் பொழுது அது ஆழமாகப் பதிந்து விடுகின்றது. பதிந்ததை மீண்டும் எண்ணும் பொழுது உங்களுக்குக் கோபம் வருகிறது.

அதைப் போல் மெய் ஞானிகளின் உணர்வுகளைப் பெறும் போது துன்பத்தைப் போக்கும் உணர்வுகளாக அது உங்களுக்குள் வருகின்றது. தொட்டுக் காட்டுதல் என்பது…
1.உங்கள் உணர்வுக்குள் ஆழமாக… உங்கள் உள்ளத்திற்குள் தொட்டு
2.”உள்ளத்தைத் தொடும் நிலையாக உணர்வுகளை ஒன்றச் செய்து” பதியச் செய்கின்றோம்.
3.இது குருநாதர் காட்டிய வழியிலே தொட்டுக் காட்டும் முறைகள்.

மீண்டும் இதை நீங்கள் எண்ணும் போது காற்றில் படர்ந்திருக்கக்கூடிய ஞானிகள் அருள் சக்திகளைச் சுவாசித்து… உங்களுக்குள் வரும் படபடப்பு பயம் வேதனை இது போன்ற நிலைகளைக் குறைத்திட இது உதவும்.

சாமி ஆசீர்வாதம் கொடுத்தார் என்று வெறுமனே நினைப்பதில் பயனில்லை… குருநாதர் எனக்கு எப்படி ஆசீர்வாதம் கொடுத்தார்…?
1.மெய் வழியைப் பெறும் உணர்வின் தன்மையைத் தொட்டுணரச் செய்து
2.அந்த உணர்வின் செயலை ஒவ்வொன்றும் ஆழமாக எனக்குள் பதியச் செய்து
3.அந்த எண்ணத்தை நான் நுகர்ந்தறிந்து என் உடலுக்குள் சேர்க்கச் செய்து
4.அதை எண்ணும்போதெல்லாம் அந்த உணர்வின் எண்ண அலைகளைப் பரவச் செய்து பேச்சால் மூச்சால் அது வெளிப்படுவதை
5.அந்த உணர்வுகள் எனக்குள் விளையப்படும் பொழுது “அது எனக்குப் பாதுகாப்பாக வருகிறது…”
6.அந்த உணர்வின் சத்து என் உடலில் மணமாக வரும்.

இப்பொழுது நான் பேசிக் கொண்டிருக்கின்றேன். துன்பத்தைப் போக்க வேண்டும் என்ற எண்ணத்தில் என்னை நீங்கள் பார்க்கின்றீர்கள்.

“உங்கள் துன்பம் விலகிவிடும்…” என்று வாக்காக நான் சொல்லும் பொழுது இந்த உணர்வுகள் உங்கள் செவிகளிலே பட்டு ஒன்றிய பின் என்னை நீங்கள் அந்த உணர்வுடன் கூர்மையாகப் பார்க்கப்படும் பொழுது
1.எந்த மெய் ஒளியின் தன்மையை நான் பேசிக் கொண்டிருந்தேனோ
2.என் உடலிலிருந்து வெளிப்படும் அந்த மணத்தை நீங்கள் நுகர்ந்து
3.உங்களுக்குள் ஆறுதலை ஊட்டும் நிலையாக யாம் சொல்லும் வாக்குகள் பதிவாகி
4.அந்த உணர்வு வளர்ச்சியாகித் துன்பத்தைப் உணர்வுகளாக உங்களுக்குள் வரும்.
5.மறுபடி மறுபடி அதை எண்ணும் போது சிந்தித்து செயல்படும் அந்த எண்ணங்கள் உங்களில் தோன்றும்.

இதைத்தான் “தொட்டுக் காண்பிப்பது” என்று சொல்வது.

எந்தச் செலவும் செய்யாமல் உயர்ந்த சக்திகளை நீங்கள் பெற முடியும்

எந்தச் செலவும் செய்யாமல் உயர்ந்த சக்திகளை நீங்கள் பெற முடியும்

 

பணத்தை வைத்து வாழ்க்கையில் எதை வேண்டுமென்றாலும் ஜெயிக்கலாம். ஆனால்
1.ஆன்மீகத்தின் மூலம் மனதைப் பெரிதாக வைத்துக் கொண்டால் உயர்ந்த சக்திகளைப் பெற முடியும்.
2.இது மனதார எல்லோருக்கும் கொடுக்கக்கூடிய… கிடைக்கச் செய்யக்கூடிய பெரும் சக்தி.

பணத்தாலே செய்யக் கூடியது எதை வேண்டுமென்றாலும் உடனே சுலபமாகப் பெறலாம்.

ஒருவருடைய அன்பைப் பெறலாம். அவருக்கு வேண்டிய பொருள்களை வாங்கிக் கொடுத்தால் உடனே நல்லவர் என்று சொல்லிவிடுவார். ஆனால் அடுத்து கொடுக்கவில்லை என்றால் திட்டுவார்கள்.

காசைக் கொடுக்கக் கொடுக்க… நல்லவர் என்று போற்றிக் கொண்டே வருவார்கள். காசை மற்றவர்களுக்காகச் செலவழிக்கப்படும் பொழுது நான் தவறு செய்தாலும் கூட அதை ஏற்றுக் கொள்ளும் நிலை வந்து விடும்.

காசு கொடுத்து உங்களுக்காகச் செலவழித்துக் கொண்டேயிருக்கின்றேன் இருந்தாலும் தவறைச் செய்கின்றேன். அப்பொழுது நான் செய்வதை எல்லாம் சரி என்று தான் நீங்கள் சொல்ல முடியும்.

என்னங்க… இப்படித் தவறு செய்கிறீர்கள்…? என்று மீறிக் கேட்டால் என்னிடமே வாங்கிச் சாப்பிட்டு விட்டு எனக்கே துரோகம் செய்கிறான் பார்…! என்ற நிலை வந்துவிடும். வந்துவிடும் வம்பு…!
1.எந்த வகையில் தருமம் செய்தாலும் இப்படித்தான் வரும்.
2.இதைப் போன்ற நிலையில் இருந்தெல்லாம் நம்மை மீட்டுக் கொள்ள வேண்டும்.

காரணம்… பணம் என்பது உடலுக்குத் தான் வரும்

ஆனால் மெய் ஞானிகளுடைய அருள் உணர்வுகளைக் கூட்டினாலோ வாழ்க்கையில் வரக்கூடிய இருளை மாய்க்க உதவும். இதற்கு நீங்கள் எந்தப் பணமும் செலவழிக்க வேண்டியதில்லை.

உங்கள் மனதைப் பண்படுத்தி அந்த ஞானிகள் அருள் பெற வேண்டும் என்னுடைய மூச்சும் பேச்சும் எல்லோருக்கும் நல்லதாக வேண்டும் என்று யாம் சொல்லும் ஆத்ம சுத்தியை எடுத்துக் கொண்டு வந்தால்
1.வியாபாரம் நல்லதாகும்… குடும்பத்திற்குள் சண்டையை நிறுத்தி ஒற்றுமையாக இருக்கச் செய்யும்
2.கேட்போருக்கும் நல்லதாகும் அறியாத வரக்கூடிய பகைமைகளைத் தடுத்து நிறுத்தும்
3.இதை வைத்து எத்தனையோ உயர்ந்த நிலைகளைக் கொண்டு வர முடியும்.
4.உங்களுடைய எண்ணங்கள் அண்டவெளி வரை செல்லும்.

ஆனால் இவ்வளவு சுலபமாக இதையெல்லாம் சொல்லிக் கொடுத்தாலும் செய்வதற்கு நேரமில்லை…! இதை யார் செய்வார்கள்…? என்று அலட்சியப்படுத்தி விடுகின்றார்கள்.

காசைக் கொடுத்து விட்டு நட்சத்திரத்திற்கு அர்ச்சனை ஆராதனை செய்வதிலே தான் குறியாக இருக்கின்றார்கள். செய்தால் தெய்வம் ஓடி வந்து செய்யும்…! என்ற இந்த நம்பிக்கையில் தான் இருக்கின்றோம்.

பணத்தைச் செலவழித்து யாகத்தை வேள்விகளையும் செய்வதற்குப் பதிலாக எந்தச் செலவும் இல்லாமலே…
1.உங்கள் தாய் தந்தையரை எண்ணி மகரிஷிகள் அருள் சக்திகளை எடுத்து அதை உங்கள் உயிரான நெருப்பில் இணைத்துப் பாருங்கள்.
2.உங்களுக்குக் கிடைக்கக்கூடிய அனுபவங்களை வைத்து “உங்களிடம் இருக்கும் சக்திகளை” நீங்களே உணர முடியும்.

ஏனென்றால் உங்களுக்கு அந்த உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும் என்று சதா எண்ணுவது தான் என்னுடைய தியானமே. ஒவ்வொரு மகரிஷியும் ஞானியும் மனிதனைத் தான் தேடி வருகின்றார்கள்.

ஆகவே உங்களுக்குள் உங்களையே நீங்கள் தியானம் செய்யுங்கள் அந்த அருள் உணர்வுகள் சேரச் சேர… உங்களுக்குள் துன்பத்தை ஊட்டும் சகல உணர்வுகளும் விலகி விடும்.

குரு பலன்

குரு பலன்

 

அகஸ்தியனுக்கு முன் எவரும் விண் செல்லவில்லை. அகஸ்தியன் தான் துருவத்தை அறிகின்றான்.
1.அந்த உணர்வின் தொடர் கொண்டு முதல் மனிதனாக துருவ நட்சத்திரமாக உயிராத்மா ஒளியின் நிலை பெறுகின்றது.
2.பல லட்சம் வருடங்கள் ஆகிவிட்டது… இதையெல்லாம் நுகர முடியாது.
3.நமது குருநாதர் அவரின் ஆற்றல்மிக்க சக்தியின் துணை கொண்டு தான் அதை நமக்கு உணர்த்துகின்றார்.

விண் செல்லும் அந்த ஆற்றல்களை அவர் நுகர்ந்து அந்த உணர்வின் ஆற்றலைப் பருகிய
1.அந்தச் சக்தியின் திறன்… அவர் சொல்லும் உணர்வுகளை ஏங்கி எனக்குள் பதிவு செய்து கொண்டதனால்
2.அவரைப் பின்பற்றி அவரின் உணர்வை நினைவு கொள்ளும் பொழுது விண்வெளியின் ஆற்றலை நானும் நுகர முடிகின்றது.

ஆனால் குருநாதர் காட்டிய வழியில் அந்த விண்வெளியின் ஆற்றலை நாம் நுகர்ந்து அறிந்தாலும் ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் அதைச் சேர்த்துக் கொண்டிருந்தாலும் சாதாரண மக்கள் மத்தியில் பழகும் போது விருப்பு வெறுப்பு உணர்வுகளை நுகர நேர்கின்றது. அது போன்ற ஆயிரக்கணக்கானோர் உணர்வுகளைச் சேர்க்கும் பொழுது அது விஷத்தன்மை கொண்டது.

யார் வந்தாலும் என்னிடம் கஷ்டம் துன்பம் என்று சொல்கின்றார்கள் அல்லவா. எனக்குக் கஷ்டமாக இருக்கின்றது… என் குடும்பத்தில் துன்பமாக இருக்கின்றது…! என்று சொல்கின்றார்கள்.

அதைக் காதிலே கேட்கப்படும் பொழுது அந்த உணர்வுகள் உந்தப்பட்டுத்தான் அதை அறிவாக நான் அறிந்து கொள்ள முடிகிறது.

அப்படி வந்தாலும் குரு காட்டிய நிலைகள் கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை எனக்குள் கலந்து நான் சுவாசித்து…
1.ஒவ்வொரு நாளும் அதைச் சமப்படுத்த… சமப்படுத்த… சிறுகச் சிறுக எனக்குள் அது சேர்கின்றது.
2.அந்தச் சமப்படுத்தும் உணர்வின் தன்மையை மீண்டும் உங்களுக்கு உபதேசிக்கும் பொழுது
3.இந்த உணர்வின் எண்ண அலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொள்கிறது.

உபதேசிப்பதைக் கேட்கப்படும் போது அதை நீங்கள்
1.எந்த அளவிற்குக் கூர்மையாக எண்ணத்தைச் செலுத்துகின்றீர்களோ
2.எந்த அளவுக்குக் கூர்மையாகக் கவனிக்கின்றீர்களோ
3.எந்த அளவிற்குக் கூர்ந்து பதிவு செய்து கொள்கின்றீர்களோ… அந்த அளவுக்கு ஆழமாக உங்களுக்குள் இது பதிவாகின்றது.

அப்படிப் பதிவாக்கிய பின்… அதை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து மெய் ஞானிகள் வழிகளிலே நாம் அதைப் பெற வேண்டும் என்ற ஏக்கத்தைக் கூட்டினால் இந்தச் சக்தி உயர்கின்றது.

ஒவ்வொரு நிமிடமும் விண்ணை நோக்கி ஏங்கி… மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று விண்ணிலிருந்து அதை ஈர்த்து… உங்கள் உடலுக்குள் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று நினைவலைகளைச் செலுத்தும் போது உங்களுக்குள் சிறுகச் சிறுக இது சேர்கின்றது.

பள்ளிக்கூடத்தில் படிக்கிறோம் என்றால் பாடங்களைச் சொல்லாக… அதாவது “அவர்கள் சொன்னதை வெறும் பாடமாகப் படிக்கும் நிலைகள் வேறு…”

அதே சமயத்தில்
1.நேரடியாக… இன்னன்னது செய்கின்றது என்று அனுபவ நிலைகள் கொண்டு “அந்தப் பாடத்துடன் சேர்த்து உணரச் செய்யும் நிலைகள் வேறு…”
2.அனுபவத்துடன் காட்டும் நிலை வரும் பொழுது பொருள் கண்டுணர்ந்து விரயமற்ற நிலைகளில் செயல்படுத்த முடியும்.

ஆனால்… புதிதாக நான் ஒன்றை கண்டுணரப் போகின்றேன் என்ற நிலை வரும் பொழுது அது “குரு அற்ற நிலை…!” வெறும் பாட நிலைகளைக் கண்டுணர்ந்த பின் அதைச் செயலாக்கும் நிலைகளில் “எந்த உணர்வின் தன்மையும் தெரிந்து கொள்ளும் பொழுது பல விரயங்கள் ஆகும்…”

ஏனென்றால் அதைத் தெளிந்துணர வேண்டிய நிலை தான் வருகின்றது.

அது போல்… வாழ்க்கையில் தடைகள் வரும் போது பிறருடைய சோர்வான எண்ணங்கள் அதில் கலக்கப்படும் பொழுது “மெய் ஒளியைக் காணும் திறன் அற்று விடுகின்றது…”

ஆனால் குரு பலன் என்பது…
1.குருநாதர் காட்டிய அருள் வழிப்படி “எண்ணத்திலே எண்ணி நான் அவரை நினைவுக்குக் கொண்டு வந்து”
2.மெய் ஒளியைப் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வுகளைக் கூட்டப்படும் பொழுது
3.அவர் வழியினைக் கண்டு… அவர் உபதேசித்த உணர்வின் அலைகளைப் பின் தொடர்ந்து… அதை நான் நுகர நேர்கின்றது.
4.அவர் எதைப் பருகினாரோ “அவர் உணர்வுடன் ஒன்றி” அவர் பருகியதை நானும் பருக முடிகின்றது.
5.அதை நான் பருகப்படும் பொழுது… அந்த உணர்வின் எண்ண அலைகள் “எனக்குள் குவிகின்றது…”

அதே உணர்வின் எண்ணங்களை வெளிப்படுத்தும் பொழுது சூரியனுடைய காந்த சக்தி அதைக் கவர்கின்றது. இப்பொழுது நீங்கள் கேட்டுணரும் பொழுது எந்த அளவுக்குக் கூர்மையாக எண்ணுகின்றீர்களோ உங்களுக்குள் பதிவாகின்றது.

பதிவை மீண்டும் நினைவாக்கி யாம் சொல்லிக் கொடுத்த ஆத்ம சுத்தியை நீங்கள் அடிக்கடி செய்தாலே போதும்.
1.வாழ்க்கையில் வரும் தீமைகளை நீக்க முடியும்
2.அருள் ஞானம் பெற முடியும்… உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியாக மாற்ற முடியும்.
3.பிறவி இல்லா நிலையும் அடைய முடியும்.

“என் மீது பற்று இருந்தால் தான்” இந்த உபதேசக் கருத்துக்கள் உங்களுக்குள் பதிவாகும்

“என் மீது பற்று இருந்தால் தான்” இந்த உபதேசக் கருத்துக்கள் உங்களுக்குள் பதிவாகும்

 

ஞானிகள் சென்ற அவர்களுடைய அருள் வழிப் பாதைகளை உங்களுக்குச் சொல்ல வேண்டும் என்று எண்ணுகின்றேன். அந்த எண்ணத்திற்கு வலு கொடுக்க…
1.குருநாதர் அவர் கண்டறிந்த உணர்வை எனக்குள் பல உணர்வுகளைப் பதிவு செய்துள்ளார்.
2.அவர் உடலுக்குள் விளைய வைத்ததை எண்ணத்தின் செயலாக என்னிடம் சொல்கின்றார்
3.அதை நான் உற்று நோக்கும் பொழுது அந்த உணர்வின் சத்து
4.அவர் உடலில் இருந்து வரக்கூடிய ஒலியை என் செவிப்புலன் ஈர்த்தாலும்
5.அந்த உணர்வின் சத்து எனக்குள் ஊழ்வினையாக பதிவாகி விடுகிறது.

ஊழ்வினை என்றால் என்ன…?

ஒரு மரம் விளைந்து அதனின் வித்தாகும் பொழுது அந்த வித்தை எடுத்து நிலத்திலே நாம் அதைப் பதியச் செய்யும் பொழுது அந்த வித்து என்ன செய்யும்…/

எந்த மரத்திலிருந்து எந்த உணர்வின் சத்தை வித்தாக வளர்த்துக் கொண்டதோ அந்த வித்தின் உணர்வின் இயக்கமாக பூமியின் துணை கொண்டு இங்கே படர்ந்து இருக்கும் அந்த அலைகளைக் கவர்கின்றது.

உதாரணமாக வேப்ப மரத்தில் வித்து உருவாகிறது என்று வைத்துக் கொள்வோம். வேப்ப மரத்திலிருந்து வெளிப்படும் அந்தக் கசப்பின் உணர்வலைகளைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து அலைகளாகப் படரச் செய்கிறது.

வேப்ப மரத்தின் வித்தை மண்ணிலே பதியச் செய்யும் பொழுது காற்றிலே பரவிப் படர்ந்திருக்கும் தன் தாய் மரத்தின் உணர்வின் சத்துக்களை… சூரியனின் காந்தப் புலனறிவுகள் கவர்ந்து வைத்திருப்பதைப் புவியின் ஈர்ப்பின் துணை கொண்டு
1.அந்தச் சக்தியைக் கவர்ந்து உணவாக எடுத்துத் தனக்குள் விளைய வைத்து
2.வேப்ப மரமாக வளர்ந்து… “அதனின் வித்தாகவே” மீண்டும் விளைகின்றது.

இது தான் ஊழ்வினை என்ற வித்தின் இயக்கம்…!

இதைப் போலத் தான் குருநாதர் அவருக்குள் விளைய வைத்த உணர்வின் சத்தை எமக்கு உபதேசிக்கும் பொழுது… செவி வழி நான் கேட்டறிந்த உணர்வுகள் உணர்ச்சிகளாக உந்தப்பட்டு..
1.அந்த உணர்வின் ஆற்றலை நினைவு கொண்டு நான் மீண்டும் கூர்ந்து அதை எண்ணும் பொழுது அதைக் கவரும் நிலை ஏற்படுகின்றது.
2.கவர்ந்த உணர்வுகள் என் நினைவுடன் இணைக்கப்பட்டு ஒரு கருவின் தன்மையாக ஊழ்வினையாக வித்தாக எனக்குள் பதிவாகின்றது.

அதாவது… அவர் உபதேசித்த உணர்வின் தன்மையைக் கூர்மையாகக் கவனித்து அதுவே எனக்குள் பதிவாகி அது மீண்டும் என் நினைவுக்கு வரும் போது அவர் உடலில் விளைந்த தீமைகளைக் கண்டறிந்த மெய்ப் பொருளைக் கண்டுணர்ந்த உணர்வுகள் எனக்குள் வருகிறது.

மெய் உணர்வைத் தனக்குள் வளர்த்துத் தீமைகளை அகற்றி… உயிருடன் ஒன்றும் உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றி… இன்றும் விண்ணுலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர். அவர் தற்காலத்தில் தான் விண் சென்றவர்… சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்தவர்.

அவர் உடலிலே விளைந்த உணர்வின் எண்ணங்களை உங்களுக்குள் இப்பொழுது உபதேசிக்கப்படும் பொழுது கேட்டுணர்ந்தவர் அனைவருக்குள்ளும் ஊழ் வினையாகப் பதிவாகின்றது.

பதிந்ததை மீண்டும் எண்ணும் பொழுது…
1.குருநாதர் காட்டிய அருள் வழியின் உணர்வுகள் இங்கே படர்ந்திருப்பதை
2.அவரின் நினைவு கொண்டு அவருக்குள் விளைந்த உணர்வுகளை நாம் அனைவரும் கண்டுணர முடிகின்றது… கவர முடிகின்றது.
3.நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் விளையத் தொடங்குகிறது.
4.அதன் மூலம் அவர் கண்ட அனைத்தையும் நாமும் அறிய முடிகிறது.

விண்ணுலக ஆற்றலை எடுத்து நஞ்சினை வென்று உயிரோடு ஒன்றி ஒளியின் சரீரமாக விண்ணிலே இருக்கும் குருவின் ஆற்றல் நமக்குள்ளும் வளரும் தன்மை இப்பொழுது உருவாகின்றது.

அதைப் பெறுவதற்குத் தான் உங்களுக்குள் விளக்கமாக இப்பொழுது சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

உதாரணமாக… வேப்ப மரத்தின் வித்து மீண்டும் தன் தாய் மரத்தின் சத்தைக் கவர்ந்து “தன் இனமாகவே” வளர்த்துக் கொள்கின்றது. இதைப் போன்று தான்
1.சாமி மீது உங்களுக்குப் பற்று இருந்தால்
2.இப்பொழுது சொல்லக்கூடிய உபதேசக் கருத்துக்கள் அனைத்துமே உங்களுக்குள் ஆழமாகப் பதிவாகும்.

ஆனால் மற்றவர்களிடம் சென்று அவரின் (அந்த குருவின்) உணர்வை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்து வைத்திருந்தால் அவர் மந்திரங்களையோ அல்லது மற்ற எதைச் சொன்னாரோ அவர் உபதேசித்த உணர்வுகள் உங்களுக்குள் ஆழமாகப் பதிந்து விட்டால் அது வலுக் கொண்டதாக இருக்கும்.

நான் இப்பொழுது உபதேசிக்கும் உணர்வுகள் உங்களுக்குள் எட்டாது. அவரின் வலு அதிகமாக இருக்கப்படும் பொழுது நான் சொல்வதை ஒதுக்கிவிடும்.

1.என் மீது பற்று கொண்ட நிலையில் இருக்கப்படும் பொழுது தான்
2.நான் உபதேசிக்கும் உணர்வுகளை உங்களுக்குள் பதிவு செய்ய முடியும்… நுகர முடியும்… வளர்த்துக் கொள்ள முடியும்.
3.நம் குருநாதர் உணர்ந்த பேருண்மைகளையும் நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.

இதை எல்லாம் நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

நாம் அனைவரும் செய்ய வேண்டிய குரு சேவை… அருள் சேவை…!

நாம் அனைவரும் செய்ய வேண்டிய குரு சேவை… அருள் சேவை…!

 

உங்களுக்கு யாம் அடிக்கடி உபதேசித்த அருள் சக்திக்கு வலுக்கூட்டும் நிலையாக
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்ற உணர்வுகளைத் தூண்டி
2.அனைவரும் ஒன்று சேர்த்துத் தியானிக்கும்படி செய்து
3.என் குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்கள் அனைவரது உயிரையும் ஈசனாக மதித்து
4.ஈசனால் கட்டப்பட்ட உடல்களை ஆலயத்தை மதித்து
5.உங்கள் உடலுக்குள் இருக்கும் நல்ல குணங்கள் அனைத்தையும் தெய்வமாக மதித்து
6.உங்களை அறியாது உட்புகுந்த தீமைகள் நீங்க வேண்டும்
7.மனிதனாகக் காத்திட்ட அந்த அருள் தெய்வங்களான நற்குணங்கள் உங்களுக்குள் நிலைத்திருக்க வேண்டும் என்று
8.உங்களை நான் தியானிக்கின்றேன்… “என் குரு வழிப்படி…”

இப்போது உபதேசித்த உணர்வின் துணை கொண்டு நீங்கள் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கும்போது நம் முன் படர்ந்திருக்கும் மகரிஷிகளின் அருள் சக்திகளை…
1.பிறவா நிலை அடைந்த அவர்களின் உணர்வைக் கவர முடியாதபடி சக்தி வாய்ந்த நிலைகளாக இருந்தாலும்
2.நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து அவர்களை நினைவுக்குக் கொண்டு வந்து அதே நினைவின் வலுக் கொண்டு
3.நம் முன் படர்ந்திருக்கும் அந்த அரும்பெரும் சக்தியை அனைவரும் சேர்த்துக் கவர்ந்து
4.நம் உடலின் ஈர்ப்பு வட்டத்தில் சுழலச் செய்து
5.நம் ஆன்மாவில் இருக்கும் தீமைகளை அகற்றும் உணர்வாக கலக்கச் செய்து… அதன் உணர்வைச் சுவாசிக்கும்படி செய்து
6.அதை எப்பொழுதும் பெறும் நிலையாக உடலுக்குள் ஞான வித்தாக உங்களுக்குள் இப்போது ஊன்றப்படுகின்றது.

அவ்வாறு ஊன்றிய பின்… அனைவரும் மகரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும் தியானத்தில் அமர்ந்த அனைவருக்கும் மகரிஷிகள் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று எல்லோரும் ஒருங்கிணைந்த நிலையில் எண்ணி ஏங்கி அந்த அலைகளைப் பாய்ச்ச வேண்டும்.

அவரவர் உடலுக்குள் வெறுப்பு கோபம் குரோதம் என்ற எத்தனையோ உணர்வுகள் இருந்தாலும் நாம் அனைவரும் சேர்ந்து மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற இந்த உணர்வின் எண்ணத்தை ஓங்கி வளர்த்து அனைவருக்கும் அந்த மகரிஷிகள் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று
1.தனக்கென்று கேளாது அனைவருக்கும் அது பெற வேண்டும் என்று இந்த உணர்வுகளை வெளிப்படுத்தும் போது
2.சூரியன் காந்த சக்தியால் இது கவரப்பட்டுச் சக்தி வாய்ந்த உணர்வின் அலைகளாகப் படர்வதை
3.உங்கள் செவிப்புலனுக்குள் உணர்ச்சிகளை உந்தச் செய்து
4.அதனின் துணை கொண்டு உங்கள் கண் புலனறிவு அதைக் கவர்ந்து
5.எல்லோரும் அதைப் பெறும் தகுதியாக ஏற்படுத்துகின்றோம்.

ஏனென்றால் உங்களுடைய அனைவருடைய அருள் துணை கொண்டு இவ்வாறு செயல்படுத்தும் போது ஒவ்வொரு மனிதனுக்கும் இது சக்தி வாய்ந்ததாக இது மாறுகின்றது. அதனைப் பெறச் செய்வதற்குத் தான் கூட்டுத் தியானமாக அமைத்துக் கொடுத்துள்ளோம்.

மீண்டும் ஞாபகப்படுத்துகின்றோம்…!

யாரையெல்லாம் யாம் சந்தித்தோமோ… உபதேசம் கேட்ட அந்த அனைவருக்கும் எமது குரு அருளால் மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று உங்கள் உயிரை ஈசனாக மதித்து உங்கள் உடலை அவன் கட்டிய கோட்டையாக மதித்து உங்களை வளர்த்திட்ட அருள் குணங்களைத் தெய்வங்களாக எண்ணி அந்தச் சக்தி பெற நான் தியானிக்கின்றேன்.

அதே போல் நீங்களும் உங்கள் உயிரை ஈசனாக மதித்து உங்களிடம் இருக்கும் அருள் குணங்களைக் காத்திடும் நிலையாக அந்த மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நீங்கள் ஏங்கித் தியானித்தால்
1.உங்களை ஆண்டு கொண்டிருக்கும் ஆண்டவனான…
2.நீங்கள் எண்ணியதை உயர்த்தும் அந்த உயிரான ஈசனுடைய அருளைப் பெறுகின்றீர்கள்.

அதே சமயம் அவன் கட்டிய ஆலயமான இந்த உடலைப் பரிசுத்தமாக்க… நஞ்சினை நீக்கி ஒளிச் சுடராக மாற்றும் ஆலயமாக உருவாக்கிட… அவனுடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக நீங்கள் நிலைத்திருக்க… உங்கள் ஆறாவது அறிவு உறுதுணையாக இருக்கும்.
1.மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவேன் என்று தியானியுங்கள்.
2.என்னை அறியாது வந்த இருளைப் போக்குவேன் என்று நினைவு கொள்ளுங்கள்.

உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து உடலை ஆலயமாக மதித்து நற்குணங்களை எல்லாம் தெய்வங்களாக மதித்து உங்கள் வாழ்க்கையில் இவ்வாறு தியானிப்பீர்கள் என்றால் அருள் ஞானிகள் சுழற்றிய அந்த உணர்வுடன் உங்கள் எண்ண அலைகள் சுழன்று அறியாது வந்த தீமைகளை ரிமோட் கண்ட்ரோல் போன்று நீக்க முடியும்.

ரிமோட் கண்ட்ரோல் என்றால்…
1.விஞ்ஞான அறிவால் ஓரு சுவிட்சைத் தட்டி மேலே பறக்கும் விமானத்தையும் ராக்கெட்டையும் இங்கிருந்து இயக்குவது போல
2.ஞானிகளை எண்ணியவுடன் நம் நினைவுகள் அவர்கள் பால் சென்று அவர்களின் உணர்வினைக் கவர்ந்து
3.தீமையை நீக்கிடும் அந்த அரும்பெரும் சக்தியாகத் தனக்குள் விளைந்து
4.இந்த உடலே தீமைகளை அழித்திடும் நிலையாக ஒளியின் சுடராக மாற்றிடும் நிலையாக எல்லோரும் பெற முடியும்.

உங்களை நம்புங்கள்…! உயிரைக் கடவுளாக மதியுங்கள்…! உடலை ஆலயமாக மதியுங்கள்…! திரும்பத் திரும்பச் சொல்கின்றேன்.

ஏன்… உங்களால் நல்லதைப் பெற முடியும் என்று “உங்களை நீங்கள் நம்ப முடியாதா…?” சற்று சிந்தித்துப் பாருங்கள்.

எமது உபதேசங்களைக் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று மீண்டும் ஞாபகப்படுத்துகின்றோம்

எமது உபதேசங்களைக் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று மீண்டும் ஞாபகப்படுத்துகின்றோம்

 

மனிதனாக இருக்கும் நாம் பிறர் செய்யும் தவறை நாம் நல்ல உணர்வு கொண்டு பார்க்கப்படும் பொழுது இது இணைந்து… அவர் செய்யும் தவறின் உணர்வுகள் நமக்குள் இயங்கி… நல்ல குணங்களைச் செயலற்றதாக மாற்றி நல்ல உடலையும் செயலற்றதாக நலியச் செய்து அதிலிருந்து தோன்றும் எண்ணத்தையே நலியச் செய்து விடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நீங்கள் மீண்டிட வேண்டும் என்பதற்குத்தான் எமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வரபட்டர்… காட்டிய அருள் வழியினை உங்களுக்கு உபதேசிக்கின்றோம்.
1.விண்ணின் ஆற்றலை அருள் ஞானிகள் எவ்வாறு பெற்றனர்…?
2.அந்த உணர்வின் ஆற்றலை அவர்களுக்குள் எப்படிப் பெருக்கினார்கள்…?
3.அதை எப்படிப் பருகினார்கள்…? தனக்குள் எப்படி விளைய வைத்தனர்…?
4.இன்றும் விண்ணிலே எப்படி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்…?
5.அவர்களின் உணர்வை நீ நுகரும் பொழுது உன்னை அறியாது வந்த தீமைகளை எப்படி நீக்க வேண்டும்…? என்று எனக்கு உபதேசித்தார்.

அவர் சொன்ன வழிகளில் அதைக் கவர்ந்த நிலைகள் கொண்டு தான் தீமையை அகற்றிடும் நிலையாக இங்கே எம்மிடம் வருவோருக்கு
1.”உங்களுக்கு நோய் இல்லை…” என்று நான் சொல்லும் பொழுது
2.அந்த வாக்கினை ஏற்று இனி நோய் இல்லை என்று நீங்கள் திரும்ப எண்ணும் பொழுது அந்த நோய் குறைகின்றது.

ஆகவே இதை நீங்கள் எண்ணி இந்த உணர்வினை எடுத்துக் கொள்ளும் பொழுது உயிரிலே ஜீவன் பெற்று இந்த உணர்வினைக் கவரும் நிலை வருகின்றது.

விஞ்ஞான அறிவால் ஆண்டென்னாவிற்குச் சக்தி கொடுப்பதற்காக அதனுடன் சில வீரியக் கருவிகளைப் பொருத்துகின்றார்கள். அதன் துணை கொண்டு தான் பல பல ஆற்றல்கள எடுக்கின்றார்கள்.

அதைப் போல
1.அருள் ஞானிகள் உணர்வின் சத்தை உங்கள் நல்ல குணத்துடன் இணையச் செய்வதற்குத் தான் இந்த உபதேசம்.
2.அதன் வழி வாழ்க்கையில் உங்களை அறியாது வரும் தீமைகளிலிருந்து இந்த உணர்வின் துணை கொண்டு மீட்டிக் கொள்ள முடியும்.

தாவர இனங்கள் வாடி நலிந்திருப்பதை அதற்குள் உரச் சத்தை இணைத்து அதை ஏற்றுக் கொண்ட பின் தன்னிச்சையாகக் காற்றிலிருந்து அதன் சக்தியை எடுத்துச் செழித்தோங்கி வளர்ந்து வீரிய வித்தாக அது உருவாக்கிக் கொடுக்கின்றது.

இதைப் போன்று தான் மனித வாழ்க்கையில் உயர்ந்த குணங்கள் கொண்ட நாம்… சந்தர்ப்பசத்தால் நலியும் நிலை வரும் பொழுது அதை மாற்றிட அருள் ஞானிகளின் ஆற்றல்மிக்க சக்தியை “நீங்கள் எண்ணியவுடன் இந்த உபதேசம் மூலமாகக் கிடைக்கப் பெறச் செய்கின்றோம்.

ஏனென்றால் இந்த வாழ்க்கையில் நாம் சந்தித்தோர் வெளிப்படுத்தும் உணர்வுகளைக் கேட்டு…
1.”திருடன் திருடன்” என்று சொல்லி விட்டால் அந்த உணர்வுகள் நமக்குள் பாய்ந்து நம்மையும் திருட வைத்துவிடும்.
2.இவன் “பொய் சொல்கின்றான் பொய் சொல்கின்றான்” என்று திரும்பத் திரும்பச் சொன்னால்
3.அவனைக் காட்டிலும் நாம் பன்மடங்கு பொய் சொல்லும் நிலையே வந்துவிடும்.
4.இவன் “ஏமாற்றுகிறான் ஏமாற்றுகிறான்” என்று எண்ணி மற்றவரிடம் இதைப் பற்றிச் சொல்லிக் கொண்டேயிருந்தால்
5.அந்த ஏமாற்றும் உணவுகள் நமக்குள் விளைந்து இந்த வாழ்க்கையில் நாமும் ஏமாற்றும் நிலை அடைந்து விடுகின்றோம்.
6.அவன் செய்தான் நாம் ஏன் செய்யக்கூடாது…? என்ற நிலைகள் இதனின் நிலைகள் நமக்குள் வந்துவிடும்.

நம் வாழ்க்கையில் எதனைச் செய்கின்றோமோ இது தான் தியானம் என்பது. மற்றதை எண்ணித் திரும்பத் திரும்பச் சொன்னால் அதையே தியானிக்கிறோம்… அது விளைகின்றது.

அதைப் போல்… இப்பொழுது மகரிஷிகளின் அருள் சக்தியை உங்களுக்குள் பெறும்படி உணர்ச்சிகளைத் தூண்டுகின்றோம்.
1.மகரிஷிகளின் அருள் சக்தியை நான் பெறுவேன்
2.எனக்குள் தீமைகள் விளையாது தடுப்பேன்.
3.நான் பார்ப்பது அனைத்தும் நலம் பெறும் என்று அடிக்கடி எண்ணி எடுத்தால்… அதையே சொன்னால் இது தான் தியானம்.

அடிக்கடி அந்த அருள் ஞானிகளின் சத்தை நமக்குள் கிடைக்கச் செய்து அதனின் உணர்வை ஓங்கி வளர்க்க வேண்டும்.

இப்பொழுது ஒருவன் வேதனைப்படுகிறான் என்று வைத்துக் கொள்வோம். அவனைப் பார்க்கின்றோம்… அந்த வேதனையை நுகர்ந்தறிகின்றோம்… வேதனைப்படுகின்றான் என்று எண்ணுகின்றோம்… வேதனையிலிருந்து காத்து விடுகின்றோம்.

இருப்பினும் அவன் பட்ட வேதனை நமக்குள் வந்ததை நீக்க வழி வேண்டும் அல்லவா…!

அதற்குத்தான் இப்பொழுது அந்த அருள் ஞானிகளின் உணர்வை உங்கள் நல்ல குணங்களுடன் அடிக்கடி இணைத்துக் கொண்டே வருகின்றோம்.

இந்த உணர்வின் துணை கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நாங்கள் பெற வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று நீங்கள் எண்ணும் பொழுது
1.அவன் பட்ட வேதனையான உணர்வுகள் நம் ஆன்மாவிலே கலந்து விடாது
2.நம் உடலில் உள்ள ஜீவான்மாக்களில் கலக்காது
3.உயிருடன் இணைந்து மீண்டும் தொடர்ந்து செயல்படாது இதைத் தடுக்க முடியும்.

ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கும் பொழுது அந்த உணர்வின் சத்து உங்கள் ஆன்மாவிலே கலந்து தீமைகளை நீக்கி தீமையை நீக்கிடும் சக்தியாக உங்கள் நல்ல உணர்வுகளுடன் அது இணைந்து அதனின் உணர்வுகளைச் சுவாசிக்கப்படும் பொழுது “ஓ…” என்று ஜீவனாகி “உங்கள் உடலை ஒளிச் சரீரமாக உருவாக்க இது உதவும்…!

அதற்கே இந்த உபதேசத்தின் வாயிலாகச் சக்தி கொடுக்கின்றோம்.

சக்தி வாய்ந்த ஆண்டென்னாவை வைத்துத் தொலை தூரத்தில் இருக்கும் அலைகளை எப்படி இழுக்கின்றோமோ இதைப் போன்று அருள் ஞானிகளின் ஆற்றல் மிக்க சக்திகளை சக்தி வாய்ந்ததாக உங்களுக்குள் இணைக்கப்படும் பொழுது இதனை நீங்கள் நினைக்கும் பொழுது
1.உங்கள் கண்ணான ஆண்டென்னா வீரிய நிலை அடைந்து
2.சூட்சமமாக மறைந்திருக்கும் அருள் ஞானிகளின் ஆற்றல்மிக்க சக்திகளை நுகர்ந்து உங்கள் ஆன்மாவாக மாற்றி
3.உடலுக்குள் அந்த சக்தியினை வளரச் செய்வதற்குத் தான் இதை உபதேசிப்பது.

ஆண்டனாவிற்கு அதனுடன் இணை சேர்த்த இயந்திரங்கள் இல்லை என்றால் அதற்குத் தொலை தூரத்தில் இருக்கக்கூடிய அலைகளை இழுக்கும் திறன் இல்லை.

இதைப் போன்று தான் விண்ணிலிருந்து வரக்கூடிய ஆற்றல் மிக்க சக்திகளை நீங்கள் கவர்வதற்கு உங்களுக்குள் “அந்தத் தகுதியினை” ஏற்படுத்துகின்றோம்.

ஏனென்றால்…
1.அந்த மகரிஷிகள் உடல் பற்றை விடுத்துப் பிறவி இல்லாத நிலை அடைந்தவர்கள்… மிக மிகச் சக்தி வாய்ந்த நிலைகளைப் பெற்றவர்கள்.
2.அவர்கள் எண்ணங்களைத் தொட வேண்டும் என்றால் நமக்கு அந்தச் சக்தி வேண்டும்.
3.அந்தச் சக்தியினைப் பெறச் செய்வதற்குத் தான் இதைப் பதிவாக்குகின்றோம்.

எண்ணங்களைக் கூர்மையாக்கி அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று “இந்த உபதேசங்களை யார் ஒருவர் கூர்ந்து கேட்டு இதைப் பதிவாக்குகின்றார்களோ” அவர்களுக்கு இந்தச் சக்தி எளிதில் கிடைக்கும்.

மான் புலியைக் கண்டபின் அதனிடமிருந்து தப்பிக்க வலிமையாக எண்ணுவது போன்று தீமைகளிலிருந்து விடுபட அருள் ஞானிகளின் சக்திகளைப் பெற வேண்டும் என்று “கூர்மையாக நினைவைச் செலுத்தினால்… வலுவாக நினைவைச் செலுத்தினால்” இப்பொழுது உபதேசிக்கும் பொழுது அருள் சக்தியாக உங்களுக்குள் அது இணை சேர்கின்றது.

அப்படி இணைந்த நிலைகள் கொண்டு அந்த ஆற்றலை வலுப்பெறச் செய்வதற்கு நாம் தியானிப்போம். எல்லோரும் கூட்டாக எண்ணித் தியானிக்கப்படும் பொழுது அதனின் வலுக் கொண்டு மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற முடியும்.

ஆகவே… பிறருடைய வேதனையான உணர்வுகளைக் கண்டுணர்ந்தாலும் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… என்று திரும்பத் திரும்ப எண்ணி அந்த சக்திகளைச் சேர்க்கப்படும் பொழுது தீமையை விளைவிக்கும் நிலைகள் தடுக்கப்படுகிறது.

அடுத்து… மகரிஷிகளின் அருள் சக்தி அவர்களும் பெற வேண்டும் என்று நாம் எண்ணி
1.நம் கண் புலனறிவால் அந்த உணர்வின் ஆற்றல்களை அவர்களுக்குப் பாய்ச்சப்படும் பொழுது
2.இந்த உணர்வுகள் அவர் உடலுக்குள் ஊடுருவி அவர்கள் வேதனையைத் தணிக்க உதவும்.
3.அதே சமயத்தில் அவர்கள் வேதனை நமக்குள் வளராது தடுக்க முடியும்

இதைச் செயல்படுத்துவதற்குத் தான் “நீ விநாயகனை வணங்காமல் ஆலயத்திற்குள் சென்றால் பலன் ஏதும் இல்லை…!” என்று தெளிவாக எடுத்துக் காட்டி உள்ளார்கள் ஞானிகள்.

குரு காட்டிய அருள் வழிப்படி “அந்தக் கரண்டின் தொடர்வரிசையில்” நாம் செல்ல வேண்டும்

குரு காட்டிய அருள் வழிப்படி “அந்தக் கரண்டின் தொடர்வரிசையில்” நாம் செல்ல வேண்டும்

 

மனித உடல் பெற்ற பின் உணவாக உட்கொள்ளும் உணவிற்குள் மறைந்து வரும் நஞ்சினை மலமாக மாற்றிவிட்டு உணர்வின் தன்மை உயர்ந்த உணர்வின் சக்தியாக மாற்றக்கூடிய ஆற்றல் ஒவ்வொரு உடலிலும் சிறுகச் சிறுக வளர்ச்சி பெற்று மனிதன் தீயதை நீக்கி ஒளியின் சரீரமாகப் பெறும் தகுதி பெறுகின்றான்.

இதனைக் கடவுளின் பத்து அவதாரங்கள் வராக அவதாரத்தில் தத்துவத்தைக் கொடுத்துள்ளார்கள். ஏனென்றால் பன்றித் தலையை போட்டுத் தெய்வமாகக் காட்டப்பட்டு கும்பிடச் சொல்கிறார்கள் என்றால் “அதில் உள்ள உட்பொருளை” நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
1.இயற்கையின் பரிணாம வளர்ச்சியில் எப்படி வளர்ச்சி பெற்று வந்தோம்…?
2.ஒவ்வொரு சரீரத்திலும் எப்படி எல்லாம் ஆற்றல்களைப் பெற்று வந்தோம்…? என்று மெய் உணர்வுகளைத் தான் காட்டி இருந்தார்கள்.

ஆனால் அந்த மெய் வழிகளை நாம் காலத்தால் அறிய முடியாது போய் விட்டது. ஆனால் அதை எல்லாம்
1.இப்பொழுது நான் அதைப் பேசுகிறேன் என்றால் அதற்குண்டான தகுதி பெற்றவன் அல்ல.
2.மெய்ஞானியான மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவரின் உணர்வால் மெய் உணர்வலைகளை யாம் காண முடிந்தது.

இருந்தாலும் அதையெல்லாம் அறிந்து கொள்ள அவர் எனக்குப் பல இம்சைகளைக் கொடுத்தார். அந்த இம்சைகளை எல்லாம் மாற்றுவதற்கு மெய்ஞானியின் அருள் ஒளியினை எப்படிப் பெற வேண்டும்…? என்று உபதேசித்து உணர்த்தினார்.

1.துன்பங்களைக் கொடுத்து அந்தத் துன்பங்களை மாற்ற மெய் ஒளியினைப் பெறும் தகுதியை ஏற்படுத்தினார்.
2.ஆனால் உங்களுக்கோ… துன்பம் ஏற்படும் போது அந்தத் துன்பத்தை நீக்க மெய் ஒளி பெறும் மார்க்கத்தைக் காட்டுகின்றோம்.

ஆகவே இதை அலட்சியப்படுத்தி விடாதீர்கள்.

எனக்கு துன்பங்களைச் செயற்கையில் உண்டாக்கித் தான் அந்தத் தீய நிலைகளை நீக்குவதற்கு ஆற்றல்மிக்க சக்திகளைப் பெறும் தகுதியை குருநாதர் ஏற்படுத்தினார்.. எனக்குள் அது வளர்ந்தது.

அது போன்று உங்களுக்குள்ளும் அந்தச் சக்தி வளர வேண்டும் என்பதே எம்முடைய ஆசை.

குருநாதர் காட்டிய அந்த அருள் வழி கொண்டு துன்பங்களை நீக்கி அந்த உயர்ந்த ஆற்றல்களை நான் பெற்றது போன்று உங்களை அறியாது வரக் கூடிய துன்பங்களை நீக்க “உங்கள் எண்ணங்களை வளர்த்துக் கொண்டால்” துன்பத்தை நீக்கிவிட்டு இன்பத்தின் நிலைகளை வளர்க்க முடியும்.

என்றும் பேரின்ப நிலையாக பெருவீடான நிலைகள் பெற முடியும் என்பதை உங்களுக்குள் இப்பொழுது தெளிவாகக் கொடுக்கின்றோம். ஆனால் லேசாகச் சொல்கின்றோம் என்று இதை விட்டு விடாதீர்கள்.

விவசாய ஆபீஸில் எவ்வளவு நாளோ பக்குவப்படுத்தி நமக்குக் கொடுத்த வித்தினை அவர்கள் சொன்ன முறைப்படி அதை விதைத்து நீரை ஊற்றினால் இவ்வளவு பலன் தரும் என்று சொல்வது போல்
1.குருநாதரிடம் 12 வருட காலம் அவர் எனக்குள் பதிவு செய்த
2.அதன் மூலம் வளர்த்துக் கொண்ட அருள் வித்தைத் தான் உங்களுக்குள் அருள் வாக்காகப் பதிவு செய்கின்றோம்.

யாம் பதிவு செய்த வாக்குகளுக்குள் உங்களுடைய நினைவலைகளைச் செலுத்திக் கூட்டி காற்றிலிருந்து அந்த ஆற்றல் மிக்க மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்துப் பெருக்கி அதை வளர்த்துக் கொள்ளும் முறைதான் யாம் கொடுக்கக் கூடிய தியானப் பயிற்சி. ஞானிகள் சென்ற வழியும் அது தான்…!

ஆனால் சாமியிடம் சென்றால் தலைவலி போகும் மேல் வலி போகும் வயிற்று வலி போகும் என்றால் அது வளர்ச்சிக்கு வர முடியாது.
1.சாமி சொன்ன வழிகளில் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்துத் தனக்குள் வளர்த்துக் கொண்டால்
2.வலிகள் நீங்கும் என்ற உணர்வை நீங்கள் எடுத்துக் கொள்ளும் பொழுது அது தன்னாலே போகும்.
3.அந்த வழியில் செல்லும் பொழுது இருள் நிற்காது. அந்த இருளை நீக்கிடும் ஒளியின் தன்மை பெற வேண்டும்.

ஆனால் பாத்திரங்களிலே ஓட்டை உடைசலை அப்போதைக்கப்போது ஒட்டி அடைப்பது போன்று… இந்தச் சாமி செய்யும் அந்தச் சாமியார் ஏதாவது செய்வார் என்று சென்றால் அது எல்லாமே கழன்றுவிடும்.

அந்த மாதிரி இல்லாதபடி மெய் ஒளியின் தன்மை உங்களுக்குள் வளர வேண்டும். அந்த ஆற்றல்மிக்க சக்திகளை நீங்கள் பெற வேண்டும். உங்களுக்குள் அந்த சக்தி ஓங்கி வளர வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

நம்மைப் போன்ற பூமியிலே வாழ்ந்த மனிதர்கள் தான் ரிஷித் தன்மையை அடைந்து சப்தரிஷி மண்டலங்களாக வாழ்கின்றார்கள். அவருடைய உணர்வுகளைத் தான் பதிவு செய்கின்றோம்.

ஒவ்வொரு நேரத்திற்கும் ஒவ்வொரு உணர்வின் ஆற்றலை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம். அனைத்தும் தெரிந்து விட்டேன் என்ற நிலை வந்தால் தான் என்ற நிலை வளர்ந்து விடும். அது போன்று இல்லாதபடி உங்கள் அனைவருக்கும் பதிவு செய்கின்றேன்.

ஒன்றிலிருந்து ஒன்றை எடுத்து ஒன்றுக்குள் இணைத்து அதனின் துணையுடன் வளர்க்கப்படும் பொழுது தான் “விண்ணின் ஆற்றலை நீங்கள் வளர்த்துக் கொள்ளும் நிலை வருமே தவிர”
1.சாமி இவ்வளவு பெரிய ஆற்றல் பெற்று இருந்தாலும்
2.அது எல்லாம் எனக்குள் ஜீரணிக்கும் அந்த “குரு பலம்” கொண்டது தான்.

அதே போன்றுதான் நீங்கள் எந்தக் கரண்டுடன் தொடர்பு கொள்கின்றீர்களோ அதன் நிலைகள் தான் வளர்ச்சி இருக்கும். ட்ரான்ஸ்பாரம் மாறி இருக்கும் போது வேறு லைனில் இணைத்தோம் என்றால் அதற்குத் தகுந்தாற் போல் நம்மையும் திசை மாற்றிவிடும்.

ஆகையினால் மெய் ஒளியின் தன்மை கொண்டு அந்தக் கரண்ட் எத்தகைய லைட்டை நாம் போடுகின்றோமோ அதற்கு தகுந்த மாதிரி கரண்டை உற்பத்தி செய்ய முடியும். நமக்குள் எந்த வலுவோ அதை நாம் பெற முடியும்.
1.குரு காட்டிய அருள் வழிப்படி “அந்தக் கரண்டின் தொடர்வரிசையில் நாம் செல்லும் பொழுது தான்”
2.அதை நாம் பெறக்கூடிய தகுதி பெறுகின்றோம்.

உபதேச வாயிலாக யாம் கொடுக்கும் சக்தி “உங்களுக்குள் இயக்கச் சக்தியாக மாற வேண்டும்”

உபதேச வாயிலாக யாம் கொடுக்கும் சக்தி “உங்களுக்குள் இயக்கச் சக்தியாக மாற வேண்டும்”

 

குருநாதர் காட்டிய அருள் வழியில்
1.“துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறக்கூடிய தகுதிக்குத் தான் அடிக்கடி உங்களுக்கு உபதேசிப்பது…”
2.இந்த உணர்வுகள் பதிவாகி விட்டது என்றால் மீண்டும் நினைவுபடுத்துகின்றேன் அதைப் பெறுவதற்கு.
3.காரணம் பல நினைவுகள் உங்களை மூடி மறைக்கின்றது.

நான் சொல்வதைக் கேட்கும் பொழுது உங்களுக்கு வீரியம் பெறுகின்றது. அடுத்தாற்போல் இருவர் சண்டையிடுவதை நீங்கள் பார்த்தால்… சாமி என்ன சொல்கின்றார்…? பார்…! இவர்கள் என்ன செய்கிறார்கள்…? என்று
1.நான் சொன்னதை விட்டு விடுவீர்கள்… அதை எடுத்துக் கொள்வீர்கள்.
2.தீய அணுக்களுக்கு நிறைய சாப்பாடு கொடுத்து விடுவீர்கள்… அதற்கு விரியம் ஜாஸ்தி.
3.நமக்குள் அணுக்கள் அதிகமாக இருக்கப்படும் பொழுது அதை மாற்றும் சக்தியைக் கொடுத்து அதை மடக்கச் செய்ய வேண்டும்.

அப்படியென்றால் அந்த இடத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்…? காலை துருவ தியானத்தில் கொடுத்த சக்தியை நினைவுபடுத்தி வளர்க்க வேண்டும்.

பின்… சண்டை யாராவது போடுகிறார்கள் என்றால் பார்க்கப்படும் பொழுது அவர்களைக் கண் பதிவாக்குகின்றது. தவறு செய்கிறார் என்று பார்க்கின்றோம். அந்த உணர்வு அதே அணுவாக உடலுக்குள் மாற்றி விடுகின்றது.

இங்கே என்னிடம் உபதேசங்களைக் கேட்டுச் செல்கின்றீர்கள்…
1.நான் ஒருவன் தானே சொல்கிறேன்.
2.அந்தப் பக்கம் ஆயிரம் பேர் ஆயிரம் விதமாகப் பேசுகின்றார்கள்… செயல்படுகின்றார்கள்.
3.அது உங்களுக்குள் பெருகிவிடுகின்றது. நான் சொன்னது சிறுத்து விடுகின்றது.

கோவிலுக்குச் செல்கின்றோம்… அங்கே தெய்வத்தை வணங்குகின்றார்கள். தவறு செய்பவர்களை அங்கே பார்க்க நேர்கிறது. அர்ச்சனை செய்து பரிவட்டம் கட்டிப் பல மரியாதைகள் அவர்களுக்குச் செய்வார்கள்.

பல தவறுகள் செய்கின்றான்… சாமி அவனுக்குத்தான் உதவி செய்கின்றது என்று எண்ணுவோம். அந்த இடத்தில் கோவிலையே நீங்கள் வெறுக்கின்றீர்கள். அப்பொழுது நம் உணர்வுகள் என்னாகின்றது…? தீமைகள் தான் வருகின்றது.

அதே போல்… உபதேசங்களை நான் சொல்லிக் கொண்டே இருந்தாலும் அதைக் கேட்டு விட்டு
1.வெளியில் நடக்கும் நிகழ்ச்சிகளைப் பார்த்து உலகம் கெட்டு விட்டது என்று நீங்கள் அதற்குத் தான் சக்தி கொடுப்பீர்கள்.
2.நான் சொன்னதை நினைவுக்குக் கொண்டு வந்து அதை மாற்றி அமைக்க முடிகிறதா…? இல்லை.
3.ஏனென்றால் அந்த உணர்வுகள் அவ்வாறு இயக்குகின்றது.

நாம் எதற்காக வேண்டி காலையில் துருவ தியானம் செய்கின்றோம்…? ஈஸ்வரா…! அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று நாம் உடனுக்குடன் துடைத்துப் பழக வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி இங்கே படர வேண்டும் அறியாத இருள்கள் நீங்க வேண்டும் மெய்ப்பொருள் காணும் சக்தி இந்த ஆலயத்திலே படர வேண்டும் என்று எண்ண வேண்டும்.

சங்கடமாகப் பேசுகின்றார்கள் அவசியமில்லாமல் பேசுகின்றார்கள் என்று பார்க்கின்றோம். அந்த நேரத்தில் ஈஸ்வரா என்று எண்ணி நம்மை நாம் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

சாக்கடையில் ஒருவன் கல்லைத் தூக்கிப் போடுகின்றான் அல்லது ஒரு பன்றி அதற்குள் விழுந்து போகின்றது… வாலை வீசிக்கொண்டு எழுந்து செல்கின்றது. நம் மீது அசுத்தம் பட்டு விடுகின்றது.

நான் நல்ல துணியைப் போட்டேன் இவ்வாறு ஆகிவிட்டதே என்றாலும்… அடுத்து நாம் அதை உடனே துடைக்கத் தானே முற்படுகின்றோம் ஐய்யயோ இப்படிப் பட்டுவிட்டது ஐய்யய்யோ இப்படிப் பட்டுவிட்டது என்று சொல்லிக் கொண்டே போகின்றோமா…? இல்லை…!

புறத்தால் ஏற்படும் அசுத்தங்களை உடனுக்குடன் நாம் தூய்மைப்படுத்துகின்றோம். அகத்திற்குள் படும் தீமைகளைத் துடைக்க வேண்டும் என்றால் அதற்குத்தான் அந்த அருள் சக்தியை உங்களுக்குக் கொடுக்கின்றேன்.

அதை நீங்கள் நினைவுக்குக் கொண்டு வர வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

1.கண் கொண்டு பார்த்த உணர்வு இங்கே ஆன்மாவாகி சுவாசிக்கச் செய்து உயிரிலே படுகின்றது
2.அந்த உணர்வு தான் அறியச் செய்கின்றது…. உடலில் பரப்பச் செய்கின்றது.
3.அப்பொழுது உங்கள் நினைவு இங்கே செல்கின்றது…?

ஈஸ்வரா என்று கண்களின் நினைவுக்குக் கொண்டு வந்து உயிருடன் ஒன்றி அந்த அருள் சக்திகளை எடுக்க வேண்டும்.

ஆனால் நீங்கள் புருவ மத்தியை நினைக்கின்றீர்களா…?

கண்ணின் நினைவை இங்கே இணைத்து விட்டால் அது அகக்கண். அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் இன்று இங்கே தடைப்படுத்தும் பொழுது தீமைகள் புகாது தடுக்கப்படுகின்றது. இது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இடைமறித்து உள்ளே செலுத்த வேண்டும்.
1.இது ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்
2.எல்லோரும் நாம் பழக வேண்டிய நிலைகள்.

நாம் தவறு செய்யவில்லை…! அந்த உணர்வுகள் வந்தது என்றால் நம்மை இயக்கிக் குற்றவாளியாக மாற்றுகின்றது.

மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று தூய்மைப்படுத்திவிட்டு யாரைப் பார்த்தோமோ அவர்கள் அறியாத இருள்கள் நீங்க வேண்டும்… மெய்ப்பொருள் காணும் திறன் பெற வேண்டும்… இதைக் கலந்து இந்த உணர்வின் ஒலிகளைப் பரப்ப வேண்டும்.

இதை நாம் “பாதுகாப்புக் கவசமாகக் கொண்டு வர வேண்டும் நம் ஆன்மாவிலே…!” இப்படிச் செய்யும் பொழுது பிறருடைய உணர்வு நமக்குள் இழுக்காதபடி… நாம் எடுத்த உயர்ந்த உணர்வின் நினைவு வந்து நம்மைக் காக்கக் கூடிய சக்தியாக வரும்.

1.இது அரும்பெரும் சக்தி…! நாம் எடுத்து எடுத்து எடுத்து இதைக் கூட்டிப் பழகுதல் வேண்டும்.
2.வாழ்க்கையில் நாம் இப்படி மாற வேண்டும்.

குறையைக் கண்டு தான் விலகிச் செல்கின்றோம். ஆனால் குறைகளை உணர முடியவில்லை என்றால் அதிலே வீழ்ந்து மடிவோம்.

பூச்சிகள் மற்ற பறக்கக்கூடிய வீட்டில் பூச்சிகள் பறந்து வருகின்றது விளக்கு (தீபம்) எரிந்து கொண்டிருக்கின்றது என்றால் ஈர்க்கப்பட்டு அதில் விழுகின்றது. வேகமாக வந்து அதிலே பட்ட பின் கருகுகின்றது.

அதற்குத் தெரியாது…! நாம் தெரிந்தவர்கள்…! நம்முடைய தூய்மைப்படுத்தக் கூடிய உணர்வுகள் நஞ்சால் கருக்கப்படுகின்றது. சந்தர்ப்பத்தால் நுகர்ந்த வேதனைகளைச் சமப்படுத்தத் தெரியவில்லை என்றால் நம் நல்ல அணுக்களை அது கருக்கி விடுகின்றது.

விஷம் தாக்கப்படும் பொழுது தான் வெப்பமாகின்றது அதே விஷத்தின் தன்மை தாக்கப்படும் பொழுது நல்ல உணர்வை ஆவியாக மாற்றி விடுகின்றது. இந்த விஷம் நெருப்பாக மாறுகின்றது.
1.விஷத்தால் கவரப்படுவது என்ன செய்கிறது…?
2.எதிலே பட்டாலும் விஷம் அதைக் கெடுக்கின்றது.
3.அதை மாற்றுவதற்குத் தான் உங்களுக்கு ஆத்ம சக்தி என்ற ஆயுதத்தையே யாம் கொடுக்கின்றோம்.