விஷத்தை ஒளியாக மாற்றும் “நுண்ணிய உணர்வுகளை” உங்களுக்குள் பதிவாக்குகின்றேன்

விஷத்தை ஒளியாக மாற்றும் “நுண்ணிய உணர்வுகளை” உங்களுக்குள் பதிவாக்குகின்றேன்

 

விஷத்தால் தாக்கப்படும் பொழுது தான் “நகர்ந்து ஓடும் நிலை” பெறுகின்றது… வெப்பமும் காந்தமும் உருவாகின்றது. மூன்று சக்தியாக இயங்குகின்றது…
1.வெப்பம் காந்தம் விஷம் மூன்று தான் ஆதியிலே உருவானது.
2.இயக்கத்திற்கு மூலம்… வெப்பம் உருவாவதற்கு மூலம்… விஷம் தான்.

அதே சமயத்தில் விஷம் வெப்பமாகி… வெப்பமாகும் போது உணர்வின் சுழற்சியாகும் போது சூரியனாகி விஷத்தைப் பிரிக்கின்றது. அது மற்றதுடன் கலந்து ஓர் இயக்கச் சக்தியாக மாற்றுகின்றது.

இதைப் போன்று தான் “விஷத்தின் தாக்குதலால்…” ஏற்பட்டது தான் உயிர்.

நாம் நுகரும் உணர்வுகள் அதனின் இயக்கத்திற்கு ஒவ்வொரு அணுக்களிலும் இந்த விஷம் உண்டு.
1.விஷத்தின் இயக்கம் தான் என்றாலும் உணர்வின் சத்து அதிகரித்து
2.அதன் உணர்வின் உணர்ச்சியின் எண்ணங்களைத் தூண்டச் செய்யும் நிலைதான் இது.

சூரியனால் கவரப்பட்ட வெப்பம் காந்தம் விஷம் என்று இருந்தாலும் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வைக் கவர்ந்து கொண்டால்
1.இந்த விஷ இயக்கத்தை அடக்கிய உணர்வுகள் அடக்கும் உணர்ச்சியை நமக்குள் கூட்டுகின்றது.
2.கவர்ந்து கொண்ட காந்தம் லட்சுமி அதனுடன் இணைக்கப்படும் பொழுது அதைப் பிரிக்கும் சக்தி பெறுகின்றது.
3.ஏனென்றால் முக்கியமாக உங்களுக்குள் நுண்ணிய உணர்வுகளைப் பதிவாக்குகின்றேன்.

“சிந்தனை கொண்டு…” உங்கள் வாழ்க்கையில் உங்களைக் காக்கும் உணர்ச்சிகள் வர வேண்டும் என்பதற்குத் தான் உங்களுக்குள் இதை இணையச் செய்து அதைப் பதிவாக்குகின்றேன்.

சந்திக்கும் சந்தர்ப்பங்கள்
1.அதிலே இக்கட்டான நிலை வரும் பொழுது
2.துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற்று அதிலிருந்து விடுபடுவதற்கு இது உதவியாக இருக்கும்.

ஆகவே ஒளியின் சரீரம் பெறக்கூடிய நிலையில் ஆயுள் மெம்பராக நாம் இருக்கப்படும் பொழுது அதை அடிக்கடி நினைவுக்குக் கொண்டு வர வேண்டும்.

நம்மைச் சங்கடப்படுத்தியவர்கள் வேதனைப்படுத்தியவர்கள் சலிப்புப் படுத்தியவர்கள் நம்மிடம் சண்டையிட்டவர்கள் இவர்களைப் பற்றித் தான் அதிகமாக எண்ணம் வருகின்றது.

ஏனென்றால் அதனுடைய “அழுத்தம்…” அதிகம்…!

இதையெல்லாம் மாற்றும் சக்தி கொண்டது தான் துருவ நட்சத்திரம். அதை உங்களுக்குள் இணைக்கின்றேன். அப்படி இணைக்கப்படும் பொழுது ஒவ்வொரு உணர்விலும் சேர்ந்து கொள்கின்றது.

பல சரக்குகளைப் போடுகின்றோம் அதிலே காரத்தை இணைத்த பின் அனைத்தையும் ஒருங்கிணைத்துச் சுவைமிக்கதாக அந்த உணர்ச்சியை எப்படிக் கூட்டிக் கொண்டு வருகின்றதோ இதைப் போன்று
1.விஷத்தை அடக்கிடும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை இணைக்க வேண்டும்
2.எப்போது தீமையைப் பார்த்தாலும் கேட்டாலும் நுகர்ந்தாலும் அடுத்த கணம் துருவ நட்சத்திரத்தின் சக்தி கொண்டு அதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத்தான் காலை துருவ தியானத்தில் அதை மீண்டும் மீண்டும் உங்களை எண்ணி எடுக்கும்படி சொல்கின்றோம்.

“மெய் ஞானம் பெற வேண்டும்” என்று விரும்புபவர்கள் தான் இங்கே இருப்பார்கள்

“மெய் ஞானம் பெற வேண்டும்” என்று விரும்புபவர்கள் தான் இங்கே இருப்பார்கள்

 

யாம் எல்லா இடங்களுக்கும் சுற்றி அனுபவங்கள் பெற்ற பிற்பாடு தான்
1.இந்தச் சக்தியை உங்கள் அனைவருக்கும் எப்படிக் கிடைக்கச் செய்ய வேண்டும்…? என்று தெரிந்து கொண்டேன்.
2.குரு வழியில் இப்பொழுது அதைக் கொடுத்துக் கொண்டு வருகின்றோம்.

ஆனால் எம்மைப் போற்ற வேண்டும் என்று யாம் விரும்பினால் எதை வேண்டுமானாலும் செய்யலாம். அடேயப்பா… எங்கள் சாமி பெரியவர்…! என்று சொல்ல வைக்கலாம்… இங்கே கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால் எதற்கு வரும்…?

இப்பொழுதும் கூட்டங்கள் வருகின்றது… ஆனால் அதை நான் கழித்து விட்டுக் கொண்டுதான் இருக்கின்றேன். உண்மையான நிலைகள் பெற வேண்டும் என்று விரும்புவர் இதிலே தங்கி இருப்பார்கள்.

உடல் இச்சைக்கு என்று கேட்டு வருபவர்கள் குறைத்தே தான் இருக்கும்.

1.அருள் வழியில் மெய்ப்பொருள் காணும் திறன் பெற வேண்டும் என்று விரும்புவர்களுக்கு
2.அந்தச் சத்தை ஏற்றிக் கொடுத்து கொண்டே இருப்பேன்.

முழுமையாக இந்த உடலுக்கு வேண்டும்… தன் வாழ்க்கைக்குக் தான் வேண்டும் என்று எண்ணி வருபவர்களை நான் “சிறிது சிறிதாகக் கழித்து விட்டு விடுவேன்…”

இந்த உடலை வைத்துத் தான் நாம் உயர்ந்த சக்தி பெற வேண்டும்… அருள் ஞானத்தைப் பெற வேண்டும். நீங்கள் வளர்ந்தீர்கள் என்றால் மற்றவரையும் பெறச் செய்யலாம். நீங்கள் வளர்ந்தால் தானே…!

நான் ஒருவன் என்ன செய்ய முடியும். என் ஒருவனால் ஒன்றும் செய்ய முடியாது. நான் நினைக்கலாம் யானையைப் பண்ணலாம் பூனையைச் செய்யலாம் என்று. அப்படிச் சொன்னால் “அது வெறும் திமிர்தான்…! அப்படி ஒன்றும் செய்ய முடியாது…”

ஒரு நெல்லை எடுத்துப் பல நெல்களாக அதை விளைய வைத்து எல்லோரையும் பெறச் செய்யலாம்.
1.இந்த அடிப்படையில் வலுவைக் கொடுத்துத்தான் எல்லோருக்கும் உயர்ந்த சக்தியைக் கொடுக்க முடியும்.
2.குரு எனக்குக் கொடுத்தது அது தான்… அதைத் தான் உங்களையும் செய்யச் சொல்கிறேன்.

நான் அதைச் செய்கிறேன் என்று “அந்த நான்” வந்து விட்டால் அதற்குப்பின் வளர்ச்சி இல்லை… தீர்ந்துவிடும்…!

நீங்கள் வளர வேண்டும் என்று நான் நினைக்க வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும் உங்கள் பார்வை அனைவரையும் நல்லவராக்க வேண்டும்… என்ற இந்த எண்ணத்தை நான் எப்பொழுது கொண்டு வருகின்றேனோ
1.நீங்களும் வளர்கின்றீர்கள் நானும் வளர்கின்றேன்.
2.உலகத்தையும் வளர்க்க முடிகின்றது… நானும் அந்த வளர்ச்சி பெற முடியும்.

சூரியன் எதனின் துணை இல்லாதபடி தான் மட்டும் சக்தி பெற வேண்டும் என்றால் முடியாது. 27 நட்சத்திரங்கள் பிற மண்டலத்திலிருந்து வருவதை எடுத்து இங்கே கொடுக்கவில்லை என்றால் சூரியன் இயங்க முடியாது.

பிற மண்டலங்களின் சக்தி வரவில்லை என்றால் இந்தப் பிரபஞ்சத்திற்கும் சக்தி இல்லை. அண்டத்தில் இருப்பது இந்தப் பிரபஞ்சத்திற்குள் சேர்க்கப்பட்டுப் பிண்டத்திற்குள்ளும் இருக்கின்றது.

1.உணர்வுகள் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக மாற்றி விட்டால் அகண்ட அண்டத்தில் எங்கு வேண்டுமென்றாலும் செல்லலாம்…
2.என்றும் பதினாறு என்று வளர்ச்சி அடையும்… அது வேகாநிலை… எதிலுமே வேகாது.
3.2000 சூரியக் குடும்பத்தை முதலில் வட்டமிடும். பின் அதைக் கடந்து அகண்ட அண்டத்திற்கும் செல்லும்.
4.அப்படி அடைந்த ஒரு கூட்டமைப்பாகச் செல்லும்.

இருண்ட உலகமாக இருப்பது ஒளியின் சிகரமாக அகண்ட அண்டம் விளையும். அது எத்தனையோ கோடி வருடங்கள் ஆகும்.

அனைத்தும் ஒளியாக மாறிவிட்டது என்றால் அதற்குப் பின் மனித இனங்களைச் சீக்கிரமாக மாற்றும் நிலை வரும். ஒளியின் சுடராக ஒளிக்குள் எல்லாமே ஒளியாகும்.

இப்படி எத்தனையோ ஆண்டுகள் நாம் வளர்ச்சி பெற வேண்டும்.

சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் உயிருடன் நாம் ஒன்ற வேண்டும்

சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் உயிருடன் நாம் ஒன்ற வேண்டும்

 

நான் படிக்காதவன் தான் இத்தனையும் பேசுகின்றேன். இயற்கையின் பேருண்மைகளை அறியும் தகுதியை குருநாதர் எமக்குக் கொடுத்தார்.

நீங்கள் படித்திருந்தாலும் படிக்கவில்லை என்றாலும்
1.இந்த உபதேசத்தின் வாயிலாக உணர்வினைப் பதிவாக்கிக் கொண்ட பின் உங்கள் நினைவாற்றல் கொண்டு
2.அண்டத்தையும் அளந்தறிந்த அகஸ்தியனின் உணர்வினை உங்களுக்குள் கருவாக உருவாக்க முடியும்.
3.இருளை அகற்றிடும் ஆற்றல்மிக்க சக்தியையும் நீங்கள் பெற முடியும்

அந்த நம்பிக்கையில் தான் இதைப் போதிக்கின்றேன். கேட்டறிந்ததை நினைவுக்குக் கொண்டு வந்து அதை நீங்கள் வளர்த்துக் கொள்ள முடியும்.

காடு மேடெல்லாம் நான் அலைந்தேன்… திரிந்தேன்… அறிந்தேன்… துன்புறுத்தப்பட்டேன்… துன்பத்திலிருந்து மீண்டிடும் உணர்வை குருநாதர் உணர்த்தினார்… அதைக் கவர்ந்தேன்.

துன்பத்தை அகற்றும் உணர்வுகளை வளர்க்கும் படி செய்தார். அதில் வளர்த்த உணர்வின் ஞானத்தைத் தான் உங்களுக்குப் போதிக்கின்றேன்.
1.நீங்கள் இதை நினைவு கொண்டு வந்து வளர்த்தால்
2.உங்கள் வாழ்க்கையில் அறியாது வந்த இருளைப் போக்க முடியும்.

இந்த உடல் நீடித்த நாள் நம்முடன் இருக்கப் போவதில்லை. ஆகவே உடலில் இருக்கும் பொழுதே அருள் ஒளியை வளர்த்துக் கொள்ளுங்கள்.

அனைவரும் நலம் பெற வேண்டும் என்ற எண்ணத்தை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள். நாம் பார்ப்போர் நம் சொல்லைக் கேட்டோர் அனைவரையும் நலம் பெறச் செய்ய முடியும்.

நீங்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளை அவர்கள் எடுத்துக் கொண்டால் அவர்களும் அதைப் பெறுவார்கள். எடுத்துக் கொள்ளவில்லை என்றால் வளர்ச்சிக்கு வர முடியாது.

அனைவரும் நலம் பெற வேண்டும் என்று அருள் ஞானத்தைப் போதியுங்கள். அருள் ஒளியை நுகருங்கள். அருள் ஞான அணுக்களை உருவாக்குங்கள். பிறவி இல்லா நிலையை அடைய முற்படுங்கள். நம் எல்லை எது…? என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள். அதை மையமாக வைத்து வாழுங்கள்.

மையம் எது…?

1.இந்த உடலுக்குப் பின் நாம் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும்… மனிதனின் கடைசி எல்லை அது தான்.
2.அங்கே ஒளியாக மாறிவிட்டால் அகண்ட அண்டத்தில் எங்கு வேண்டுமென்றாலும் சுழலாம்… என்றும் 16 என்று நிலை அடையலாம்.

மனித உடல் பெற்ற நிலையில் அறியும் ஆற்றல் ஆறாவது அறிவாக உள்ளது கார்த்திகேயா…! உயிர் தான் இதையெல்லாம் உருவாக்குகின்றது. அவனுடன் நாம் ஒன்றிட வேண்டும்.

உயிர் எப்படி நம்மைத் தெளிவாக்குகின்றதோ இந்த உணர்வின் தன்மை ஒளியாக மாற்றும் திறன் ஆறாவது அறிவுக்கு உண்டு. அதன் துணை கொண்டு அருள் சக்திகளை வளர்த்துக் கொண்டால் அடுத்துப் பிறவி இல்லை.

சொர்க்க பூமி சொர்க்கவாசல் என்று நாம் எண்ணும் உணர்வின் தன்மை அருள் ஒளி கொண்டு இங்கே வளர்த்தால் அங்கே விண் செல்ல முடியும்… சப்தரிஷி மண்டலத்துடன் இணைய முடியும்.

1.சொர்க்க பூமியாக இருக்கும் இந்த நிலையை சொர்க்கலோகமாக மாற்ற வேண்டும்.
2.சொர்க்க வாசலை நாம் நாட வேண்டும்.
3.சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் உயிருடன் ஒன்ற வேண்டும்
4.அருள் ஒளிச் சுடரை நாம் வளர்க்க வேண்டும்… அதன் வழி அது நம்மை அங்கே அழைத்துச் செல்லும்.

விண்ணுக்குப் போகும் உந்து விசை

விண்ணுக்குப் போகும் உந்து விசை

 

விண் வெளியில் உள்ள கதிரியக்கப் பொறிகள் மற்ற மண்ணுடன் கலந்திருப்பதைப் பிரித்து அணுக்கதிரியக்கமாக மாற்றி அதன் உணர்வின் வலிமை கொண்டு அதன் சேர்க்கையில் பல கலவை கொண்டு “உந்து விசையாக மாற்றி” விண்ணிலே ராக்கெட்டை ஏவுகின்றார்கள்.

அதனின் தொடர் கொண்டு… பூமியின் ஈர்ப்பின் அழுத்தத்தைப் பிளந்து பூமியைக் கடந்து சென்று… ஈர்ப்பற்ற நிலைகளில் சுழன்று கொண்டிருக்கின்றது ராக்கெட்டின் செயலாக்கங்கள் விஞ்ஞான அறிவால்.

இதைப் போன்று தான்
1.விண்ணுலகில் எவ்வாறு உயிரின் தன்மை உருப்பெற்றதோ மண்ணுலகில் அது ஈர்க்கப்பட்டு
2.பல நட்சத்திரங்களில் இயக்கப்படும் பொறிகள் கோள்களாக மாறி அந்த உணர்வின் அலைகள் படர்ந்து வருவதைத் துருவத்தின் வழி பூமி நுகர்ந்து
3.அதன் வழி தாவர இனங்களாக வளர்ச்சி பெற்று அதன் உந்து விசையாக அதனின் உணர்வு இயக்கப்பட்டு
4.அதன் தொடர் வரிசையில் அதனதன் எடுத்துக் கொண்ட உணர்வுக்கொப்ப ரூபங்கள் மாறி மனிதனான பின் மனிதன் தன்னிலை அடைகின்றான்.
5.துருவத்தை நுகர்கின்றான்… நுகர்ந்ததைத் தனக்குள் ஒளிசுடராக மாற்றுகின்றான்.

அகஸ்தியன் இதையெல்லாம் பெற்ற பின் தன் மனைவிக்கும் இதை ஓதுகின்றான்… மனைவி பெற வேண்டும் என்று விரும்புகின்றான்.

மனைவியோ தன் கணவனுக்குப் பெற வேண்டும் என்று அவர்கள் இரு உணர்வும் ஒன்றாகி… அது கருவாகி ஒளியாக மாற்றும் திறன் பெறுகின்றார்கள் அகஸ்தியனும் அவன் மனைவியும்.

அதன் வழி விண் சென்ற அவர்கள் துருவ நட்சத்திரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள். ஆகவே கடவுள் எப்படி இருக்கின்றான் என்பதை நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

அதனை நாம் நுகர்ந்தால் அதன் வழியில் நாமும் அங்கே செல்ல முடியும்.

அகஸ்தியன் கண்ட பேருண்மைகளை எல்லாம் உங்களுக்குள்ளும் இப்பொழுது பதிவாக்கும் நிலை வருகின்றது.
1.பேரண்டத்தைக் கண்டுணர்ந்த அகஸ்தியன் உணர்வை நமது குரு தனக்குள் கவர்ந்தார்.
2.ஒளியின் சுடராக விண்ணின் ஆற்றலை அவன் கண்டான்… பூவுலகின் நிலையையும் அறிந்தான்… உயிரியலின் தத்துவத்தை அறிந்தான்.
3.பேரண்டத்திலிருந்து எவ்வாறு நுகர்ந்தது என்று மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் அகஸ்தியன் தொடர்வரிசையை அறிந்தான்.
4.அதைத் தனக்குள் உருவாக்கினான்… கருவின் வித்தாக உருவாக்கினான்.
5.அந்த வித்தினைத் தான் எனக்குள்ளும் பதிவு செய்தான்
6.அவன் உணர்வின் துணை கொண்டு அந்த எண்ணங்களை எடுக்கப்படும் பொழுது விண்ணின் ஆற்றலை நான் நுகர முடிகின்றது.

அதில் விளைந்த உணர்வின் எண்ணங்களை வித்தாக ஊழ்வினையாகப் பதிவு செய்ய முடிகின்றது.

இதை நீங்கள் நினைவு கொள்வீர்கள் என்றால் அந்த உணர்வின் துணை கொண்டு மண்ணுலகை வென்று வானுலகின் உணர்வை நீங்கள் நுகர்ந்து கணவன் மனைவியாக இதை வளர்த்துக் கொண்டால்
1.உடலை விட்டுச் சென்ற பின் அதே விண்ணுக்கு உங்களை அழைத்துச் செல்லும்.
2.இது நிச்சயம்…!

இன்று நல்ல நினைவு இருக்கும் போதே அருள் உணர்வை வளர்க்கும் பருவத்திற்கு நாம் வர வேண்டும்

இன்று நல்ல நினைவு இருக்கும் போதே அருள் உணர்வை வளர்க்கும் பருவத்திற்கு நாம் வர வேண்டும்

 

இந்த மனித உடலில் நாம் வாழும் இந்தச் சிறிது காலத்திற்குள்ளேயே நாம் ஒளியான நிலைகள் பெற வேண்டும். ஏனென்றால் இந்த உடலில் எவ்வளவு காலம் வாழ்கிறோம் என்பது தெரிகின்றது.

அதற்குள் எத்தனையோ நிலைகளில் நாம் ஆசை வைக்கிறோம். எல்லாவற்றையும் செலவழிக்கின்றோம்… ஆடம்பரத்திற்கும் செலவழிக்கின்றோம்.
1.ஆனால் எதுவும் நிற்கின்றதா…?
2.செல்வத்தைச் சம்பாரித்து அழகாக வீட்டைக் கட்டி உடலையும் அழகு படுத்தினாலும்
3.நோய் என்ற நிலை வந்து விட்டால் அது எல்லாவற்றையும் தூக்கி எறி…! என்று சொல்கின்றோம்.
4.அந்த நேரத்தில் நல்லதை எல்லாம் வேண்டாம் என்று சொல்கிறோம் அல்லவா.

இன்று நன்றாக மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள். யாராவது ஒரு சொல் தவறாகக் கேவலமாக சொல்லிவிட்டால் உடனே மனது சோர்வடைந்து விடுகின்றது.

என்னைக் கேவலமாகப் பேசினார்கள்… கேவலமாகப் பேசினார்கள்…! என்று வேதனை வருகின்றது. இந்த உணர்வை எடுத்துக் கொண்ட பின் அவர் மீது வெறுப்பும்… அவர் என்னென்ன சொன்னார்களோ அதை எல்லாம் எடுத்து இந்த உடலில் விளைய வைக்கத் தொடங்குகின்றோம்.

அதாவது… கீதையில் நீ எதை நினைக்கின்றாயோ நீ அதுவாகின்றாய் என்பது போல் அவர்கள் உணர்வு இங்கே உருவாகிறது.

1.அவர்கள் சொன்னால் சொல்லிவிட்டுப் போகின்றார்கள்
2.மகரிஷிகள் அருள் சக்தியால் அவர்களுக்கு நல்ல புத்தி வரவேண்டும் என்று சொன்னால் அந்த உணர்வு நம்மை இயக்காது.

இப்படிப்பட்ட உணர்வை எடுத்து நாம் அதைத் தடுத்துப் பழக வேண்டும். அதனால்தான் ஆறாவது அறிவைச் சேனாதிபதி என்று சொல்கின்றோம்.

அதைத் தடுக்கக்கூடிய வல்லமை எப்படிப் பெற வேண்டும்…?

மகரிஷிகளின் அருள் சக்திகளை… அந்த அருள் ஞானத்தை நமக்குள் பெருக்கப்படும் பொழுது அது பாதுகாப்பாக வரும்.
1.அந்த மகரிஷியின் உணர்வுகளைப் புருவ மத்தியில் நம் உயிருடன் இணைக்கப் பழக வேண்டும்.
2.அங்கே உருவாக்கும் திறனாக அது அமையும்… அது தான் பிரம்மாவைச் சிறை பிடித்தான் முருகன்.
3.அருள் ஒளியின் உணர்வை அணுக்களாக நமக்குள் பெருக்கினால் அது நம்மைக் காக்கின்றது.

வேதனையான உணர்வை நுகர்ந்து விட்டாலோ தீமையின் விளைவாகவே நம்மை மாற்றிவிடும்.

இதைப் போன்ற நிலையிலிருந்து விடுபட்டு அருள் உணர்வை ஆழமாகப் பதிவாக்கிப் பெருக்கிக் கொண்டு பெரிய தத்துவ ஞானியாக வளர வேண்டும். எல்லோரையும் காத்திடும் சக்திகளாக நாம் வரவேண்டும்.

பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்குள் இந்த உணர்வைப் பதிவு செய்ய வேண்டும்.

ஏனென்றால் நான் படிக்காதவன் தான் இத்தனையும் பேசுகின்றேன். படித்துக் கொண்டிருப்பவர்கள் ஆழமாகப் பதிவாக்கி இந்த ஆற்றலை நீங்கள் பெறப் பழகிக் கொள்ளுங்கள்.

எல்லோரும் நலம் பெற வேண்டும் என்ற உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள் உங்கள் பார்வை இருளை அகற்றும் உயர்ந்த சக்தியாக வளரட்டும்.
1.அருள் ஞானத்தைப் பெறும் கருவின் தன்மை உருவாக்க வேண்டும்.
2.உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றும் திறன் நீங்கள் பெற வேண்டும்.

அகண்ட பேரண்டத்தின் உண்மை நிலைகள்

அகண்ட பேரண்டத்தின் உண்மை நிலைகள்

 

மற்ற சூரியக் குடும்பத்திலும் நம்மைப் போன்ற மனிதர்கள் வாழ்கின்றார்கள்.
1.நம்மைக் காட்டிலும் வளர்ச்சி இல்லாத மனிதர்களும் உண்டு… வளர்ச்சி அடைந்தவர்களும் உண்டு.
2.இங்கே நமக்கு முடி உண்டு… முடி இல்லாது மொட்டைத் தலையாக உள்ளவர்களும் சூரியக் குடும்பங்களில் உண்டு.

நம் சூரியக் குடும்பத்தில் ஒரு பூமி இருக்கிறது என்றால் இரண்டு பூமி இருக்கக்கூடிய குடும்பங்களும் உண்டு. ஒன்று வளர்ச்சி உள்ளதாகவும் உண்டு… சிலது வளர்ச்சி இல்லாததும் உண்டு. இரட்டைக் குழந்தை என்று சொல்கிறோம் அல்லவா அது போல…!

இதையெல்லாம் விரிவாக்கமாக குருநாதர் ஒரு நாள் காட்டுகின்றார்.

சூரியக் குடும்பத்திற்குள் எல்லா இடத்திற்கும் பயணம் செய்வது வருடக் கணக்காகும் என்று சொல்கின்றார்கள். அகண்ட நிலையில் 2000 சூரியக் குடும்பத்திற்கும் போக வேண்டுமென்றால் எப்படி இருக்கும்…?

2000 சூரியக் குடும்பம் என்பது அகண்ட அண்டமாக இருக்கிறது, இதைக் காட்டிலும் எத்தனையோ அண்டங்கள் இருக்கின்றது.

அதனுடைய விரிவடைந்த நிலைகளை நீங்கள் பார்க்கப் போனால் மனிதனுக்கு ஆயுள் பத்தாது. ஆயுள் பத்தாது என்று மட்டுமல்ல… போகவும் முடியாது.
1.ஆனால் போக வேண்டும் என்றால் நம் குருநாதர் காட்டிய வழியில்
2.இந்த அருள் உணர்வுகளைப் பெற்றால் அதுபாட்டுக்குப் போய்க் கொண்டே இருக்கும்.

வான்வெளியில் நட்சத்திரங்களாக நம் கண்ணுக்குத் தெரிவதெல்லாம் 2000 சூரியக் குடும்பத்தின் ஈர்ப்பில் உள்ளது தான்.

நம் சூரியனைக் காட்டிலும் வலுவடைந்த பெரிய அளவில் உள்ள சூரியனும் சில பிரபஞ்சத்தில் இருக்கின்றது. ஒரே அளவாக இல்லை.

நீங்கள் ஒரு சமயம் இதையெல்லாம் பார்க்க நேர்ந்தால்
1.இரவிலே படுத்திருக்கும் பொழுது உங்களை மேலே அழைத்துச் செல்லும்.
2.எந்த உணர்வு பதிவானதோ ஆன்மாவிலே கலக்கும். பறப்பது போல் இருக்கும்.

ஒரு சிலர் பயந்து போய் எங்கேயோ போய் விடுவோமோ என்று எண்ணிப் பிடித்துக் கொண்டவர்களும் உண்டு. இதெல்லாம் வரும்.

ஏனென்றால் இந்த உணர்வுகள் இயக்கப்படும் போது
1.உங்கள் ஆன்மா அதனுடன் தொடர்பு கொண்டு வட்டமிடும்.
2.அதனுடைய உணர்வுகள் அறிவாக இங்கே உங்களுக்குள் வளரும்.
3.ஒரு விழுது பாய்ந்து தான் தாவர இனங்களுக்குள் வளர்ச்சி அடைகிறது…
4.அது போல் அகண்ட அண்ட்த்துடன் நீங்கள் தொடர்பு கொள்ள முடியும்

நீங்கள் இரவிலே கனவு காண்கிறீர்கள் என்றாலும் மற்ற மனிதர்கள் உடலிலிருந்து வரக்கூடியது… மற்றவர் சொல்லும் பொழுது அதைக் கேட்டிருந்தால் இரவில் உயிரிலே படும்.

இந்த உணர்வு அங்கே அழைத்துச் செல்லும். எங்கேயோ இருக்கின்ற மாதிரி இருக்கும்… பள்ளத்திலேயோ மேட்டிலேயோ மலை மீதோ எங்கெங்கோ செல்வதாகத் தெரியும்.

அந்தந்த பகுதியில் எந்தெந்த மனிதனுடைய உணர்வு விளைந்து அந்த நினைவாற்றல் இருந்ததோ அப்படி இயக்கப்பட்டு கனவுகளாக வருவதும் உண்டு.

இது எப்படியோ அப்படித்தான்…
1.அந்த அருள் ஞானிகள் உணர்வுகள் உங்களுக்குள் விளையப்படும் போது
2.அது உங்களை அங்கே அவர்கள் வாழும் எல்லைகளுக்கு அழைத்துச் செல்லும்…!

அருள் ஞானப் பசியைத் தீர்க்கும் நிலைக்குத் தான் உபதேசிக்கின்றோம்

அருள் ஞானப் பசியைத் தீர்க்கும் நிலைக்குத் தான் உபதேசிக்கின்றோம்

 

“அருட்பெரும் ஜோதி நீ… தனிப்பெரும் கருணை நீ…” என்று உயிருடன் ஒன்றினார் இராமலிங்க அடிகள். அருள் ஞானம் பெற வேண்டும் என்று விரும்பிய ஆன்மா பல அற்புதங்களைச் செய்கிறது… அவருக்கே தெரியாமல் தான் இயங்குகிறது. அருள் ஒளியைத் தனக்குள் எடுக்கப்படும் பொழுது ஒளியாகின்றது.

1.”அன்பே சிவம்…” என்ற அரவணைக்கும் உணர்வுகள் எனக்குள் அன்பாகி உடலில் சிவமாக வேண்டும்.
2.எல்லாவற்றையும் அரவணைத்துக் கொண்டால் அந்த அரவணைக்கும் உணர்வின் தன்மை
3.தனக்குள் மகிழ்ச்சியூட்டும் உணர்வின் தன்மை ஒளியாக மாறும்.

அது தான் அருட்பெருஞ்ஜோதி நீ தனிப் பெரும் கருணை நீ.

பிறர் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று சந்தோஷத்தை எனக்குள் உருவாக்கி விட்டால் இருள் இங்கே வருமோ…? ஆக… இருண்ட நிலைகளில் இருந்து மீள வேண்டும் என்ற நிலையைத் தான் அவர் உணர்த்துகின்றார்.

அந்த மகிழ்ச்சி பெறும் உணர்வுகள் அருட்பெரும் ஜோதி நீ தனிப் பெரும் கருணை நீ. எண்ணியதைத் தான் உருவாக்குகின்றாய் கந்தகோட்டத்திற்குள் அமர்ந்துள்ள கந்தவேலே…! யார்…? நம் உயிர் தான்.

பல விதமான உணர்வு அமைந்துள்ள கோட்டை இது. வேல் என்றால் கூர்மையானது.
1.பல விதமான உணர்வுகள் சேர்த்துத் தான் இந்த உடல் உருவானது… கந்தக்கோட்டம்.
2.உயிருடன் எண்ணப்படும் பொழுது கூர்மையின் நிலைகளில் அதை உணர்த்துகின்றது.
3.அருட்பெரும் ஜோதி நீ தனி பெரும் கருணை அங்கே அமர்ந்து துடிப்பாகி உயிரின் துடிப்பாகி
4.கூர்மையாக உணர்வின் தன்மை அறியச் செய்து ஒவ்வொன்றையும் ஒளியாக எனக்குள் உணர்த்துகின்றாய்
5.அறிவின் செயலாக என்னை இயக்குகின்றாய் என்றார்.

உயிர் தான் அங்கே இருந்து இவ்வாறு செயலாக்குகின்றது.

இராமலிங்க அடிகள் உயிருடன் எடுத்துக் கொண்ட உணர்வுகள் ஒளியாக ஜோதியாக… விண்ணிலே இருக்கின்றார். உடல் பற்றை அவர் வைக்கவில்லை. இந்த உடலுடன் வந்தது உடலுடனே போகட்டும் என்ற நிலையில் உயிருடன் ஒன்றி அவர் விண் சென்று விட்டார்.

தனக்குள் தீமை வராது தடுக்கும் சேனாதிபதி… ஆறாவது அறிவு கார்த்திகேயா. பல கோடிச் சரீரங்களில் தீமைகளை உணர்ந்து உணர்ந்து பரிணாம வளர்ச்சி அடைந்து…
1.தீமையிலிருந்து விடுபடச் செய்து அனைத்தையும் அறிந்திடும் அறிவாக மனித உடலில் உள்ளது.
2.அது தான் கந்தகோட்டத்திற்குள் அமர்ந்துள்ள கந்தவேலே…!

அருட்பெரும் ஜோதி நீ தனிப்பெரும் கருணை நீ…! எப்பொழுதுமே ஜோதியாக இருக்கின்றாய் தனிப்பெரும் கருணையாக இருந்து என்னை இயக்குகின்றாய். ஆக எண்ணியதைத் தான் அது உருவாக்குகின்றது.

1.யாரிடமும் நான் யாசிக்கக் கூடாது… யாருக்கும் இல்லை என்றும் சொல்லக்கூடாது,
2.அருள் தாகத்துடன் வருபவருக்கு அந்த அருள் ஞானத்தைப் போதிக்க வேண்டும்
3.இருளை அகற்ற வேண்டும் என்பது தான் அவருடைய தத்துவம்…!

யாம் இப்பொழுது உங்களுக்குக் கொடுப்பதெல்லாம் அந்த அருள் ஞானப் பசியைத் தீர்க்கும் நிலைக்குத் தான்…! ஏங்கி வரக்கூடியவர்களுக்கு அந்த அணுக்களுக்கு அந்த ஞானத்தை ஊட்டுகின்றோம். ஏங்கி வருவோர் தான் இங்கே வருவார்கள்.

பசியைத் தீர்க்கும் போது அருள் ஒளியாக அங்கே வளர்கின்றது. அதனால்தான் “மணிக்கணக்காக…” இந்த உணர்வுகளை உங்களுக்குப் போதிப்பது.
1.மற்ற எண்ணங்களைத் திருப்பாதபடி மற்ற உணர்வுகளை எல்லாம் ஒடுங்கச் செய்து சொர்க்கலோகத்திற்கே அழைத்துச் செல்வது.
2.மற்ற உணர்வை மறக்கச் செய்வதற்குத் தான் அப்படிப் பேசுவது.

எனக்குள்ளும் அந்த அருள் வளர்கின்றது… இந்த உணர்வை நீங்கள் கேட்கப்படும் பொழுது அருளானந்தம் உங்களுக்குக் கிடைக்கிறது. தீமையிலிருந்து நீங்கள் நிச்சயம் விடுபடுகின்றீர்கள்.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நம் குணத்திலும் உணர்விலும்… மகரிஷிகள் உணர்வை இணைத்துக் கொண்டே வர வேண்டும்

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நம் குணத்திலும் உணர்விலும்… மகரிஷிகள் உணர்வை இணைத்துக் கொண்டே வர வேண்டும்

 

நீங்கள் ஏதேனும் வேலையாக வீட்டிலிருந்து வெளியே செல்கின்றீர்கள் அல்லது ஒரு தொழிலைத் தொடங்குகின்றீர்கள் என்றால்… அது சமயம்
1.அகஸ்திய மாமகரிஷிகளையும்
2.அவர் துருவ மகரிஷியான நிலையையும்
3.துருவ நட்சத்திரமான நிலையையும் இந்த மூன்று நிலைகளையும் ஏங்கி எண்ணுங்கள்.

அதனின் உணர்வுகளை நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணியபின் உங்கள் தொழிலைச் செய்யத் தொடங்குங்கள்.

இந்த முறையில் நீங்கள் பதிவு செய்யும் ஞான வித்துக்கள் உங்கள் உடலில் உள்ள இரத்தங்களில் கருவாக வளர்ச்சி பெற்று… நீங்கள் எதை எண்ணிப் பதிவு செய்தீர்களோ அந்தச் சக்தியைப் பெறக்கூடிய தகுதியை… அத்தகைய உணர்வின் அணுக்களை இரத்த நாளங்களில் பெருக்குகின்றது.

1.முதலில் கரு முட்டையாகின்றது.
2.பின் அதனின் உணர்வின் தன்மையை எண்ண எண்ண அவைகள் அணுக்களாக வளர்ச்சி அடைகின்றது.

உதாரணமாக… கோழி முட்டையிட்ட பின் அதை அடைகாத்து அதன் உணர்வின் தன்மை கொண்டு அங்கே வெப்பமாக்குகின்றது. அதன்பின் அந்த வெப்பத்தின் துடிப்பு கொண்டு கருவின் துணை கொண்டு குஞ்சாக விளைகின்றது.

குஞ்சாக வெளி வந்த பின் தாய்க் கோழி எதைத் தன் உணவாக எடுத்துக் கொண்டதோ அதே உணவைக் குஞ்சும் தன் உணவாக உட்கொள்ளத் தொடங்குகின்றது.

இதைப் போன்று
1.இந்த உபதேசத்தின் வாயிலாக யாம் உங்களை நுகரச் செய்த உணர்வுகள் அனைத்தும் உங்களிடத்தில் கருவாக உருவாகின்றது.
2.அதனை நீங்கள் மீண்டும் மீண்டும் உங்களில் நினைவுபடுத்தும் பொழுது அந்த உணர்வின் அணுக் கருமுட்டைகள் வளர்ச்சி பெறுகின்றது.

அதாவது… நீங்கள் இதே எண்ணத்தைத் திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது… அது உங்களுக்குள் “அடைகாக்கப்படுவது…” போன்றதாகி விடுகின்றது.

கோழி தான் இரை தேடுவதற்கு வெகு தூரம் சென்றிருந்தாலும் தன் குஞ்சின் நினைவு கொண்டு தான் முட்டையிட்ட அதே இடத்திற்கு வந்து அடைகாக்கின்றது.

அதைப் போன்று நீங்கள் எந்தத் தொழிலுக்குப் போவதாக இருந்தாலும் மகரிஷிகளின் அருள் உணர்வை எடுத்துப் பழகிக் கொண்டால்
1.அடிக்கடி நினைவுபடுத்தி அந்தச் சக்தியை நீங்கள் பெறும் போது அடைகாப்பது போன்று ஆகி
2. மகரிஷிகளின் அருள் சக்தியை உங்களுக்குள் வளர்க்கும் திறந் பெறுகின்றீர்கள்.

கோழி தான் இரை தேடும் பொழுது தன் குஞ்சுகளைக் கூவி அழைத்துத்தான் தன் குஞ்சுகளுக்கு இரை கொடுக்கிறது.

அதைப் போன்று நமக்குள் மகரிஷிகளின் உணர்வுகள் அணுக் கருவாகி விட்டால்
1.இதனின் உணரச்சியின் கிளர்ச்சிகள் நமது இரத்த நாளங்களில் கிளம்பும் பொழுது
2.நமது உயிர் அந்த உணர்வுகளை இயக்கி காற்றில் கலந்துள்ள அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை
3.கண்கள் வழியும் காதுகள் வழியும் உடல் வழியும் நாம் சுவாசிக்கும் அந்த உணர்வு வழியும் கவர்ந்து
4.நமது உடலுக்குள் பரவச் செய்து அந்த ஒளியான அணுக்களாக உருவாக்குகின்றது.

நாம் அருள் மகரிஷிகள் காண்பித்த அருள் வழியில் நடந்தால் அது நமக்குள் வளர்ச்சி பெற்ற பின் நம்முடைய நினைவாற்றல் “மாமகரிஷி அகஸ்தியன்…” சென்ற பாதையில் செல்லும்.

நமது வாழ்க்கையில் எத்தகைய விருப்பு வெறுப்புகளை நுகர்கின்றோமோ அது நமக்குள் கருவாகி விடுகின்றது. உதாரணத்திற்கு நாம் ஒன்றுமே செய்ய வேண்டாம்.

ஒருவர் தாக்கப்படுவதை உற்று நோக்கி அதனின் அச்ச உணர்வை நாம் நுகர்ந்து விட்டால் அந்த அச்சத்தின் உணர்வுகள் நமது உடலில் “ஊழ்வினை…” என்ற வித்தாகப் பதிவாகி விடுகின்றது.

நாம் நுகர்ந்தறிந்த உணர்வுகள் நமது இரத்த நாளங்களில் கருவாக உருப்பெற்றுவிடுகின்றது. இப்படிப் பதிவாகி… பதிவானதை மீண்டும் நினைவுபடுத்தினால் அதனின் உணர்வுகளை நாம் நுகரும் சக்தி பெறுகின்றோம்.

அப்படி நுகரும் சக்தி பெற்றபின் அந்த உணர்வுகளை நமது உயிர் உடல் முழுவதும் சுழலச் செய்கின்றது.

அந்த உணர்வுகள் நமது இரத்த நாளங்களில் கலக்கப்படும் பொழுது அணுக்கருக்களின் தன்மையினை அடைகின்றது. நமது உடலில் கருவான அணுக்களுக்கு வீரியம் ஊட்டுகின்றது.

1.வேதனைப்படுவோர் உணர்வை நமக்குள் பதிவாக்கி விட்டால் முதலில் சில காலம் தெரியாது.
2.இந்த அச்சுறுத்தும் உணர்வுகள் நுகர்ந்தது அடைகாப்பது போன்று அந்த அணுக்கருக்கள் வளர்ந்து விட்டால்
3.குஞ்சு தன் இரைக்காக கத்தும் பொழுது தாய் கோழி கூற்று பரப்பித் தன் குஞ்சுக்கு இரை கொடுப்பது போன்று
4.நமது உயிர் உணர்வின் ஒலி அலைகளை எழுப்பிச் நமது சிறுமூளை பாகத்திற்கு எட்டச் செய்கின்றது.

பின் அந்த உணர்வின் தன்மை கொண்டு கண்களுக்கும் செவிகளுக்கும் மூக்கிற்கும் உடலுக்கும் கிளர்ச்சிகளை உந்தி அதன் வழி சுவாசிக்கச் செய்து அதனின் எண்ணத்தை நமக்குள் பெறச் செய்து நமது இரத்த நாளங்களில் கலக்கச் செய்து நமது உடலில் உள்ள அணுக்கருக்களுக்கு ஆகாரத்தைக் கொடுத்து உதவுகின்றது.

காலையில் நாம் தொழிலுக்குச் செல்லும் பொழுதோ தொழில் ஆரம்பிக்கும் பொழுதோ அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பெற வேண்டும் என்ற உணர்வினை அடிக்கடி கூட்டினோம் என்றால் அதை அடைகாத்தது போன்றதாகின்றது.

அவ்வாறு அடைகாத்து அந்த உணர்வின் தன்மை குஞ்சாகப்படும் பொழுது
1.நம்மையறியாமலே நமக்குள் அந்த மகரிஷிகள் பால் எண்ணங்கள் செல்லும்.
2.இதனின் உணர்வுகளை நமக்குள் வளர்த்து விட்டால் நாம் எண்ணுவதற்கு முன்பே அந்த உணர்வைக் கூட்டி
3.அருள் உணர்வுகளைப் பெறும் அந்த உணர்ச்சிகளைத் தோற்றுவிக்கும்.

மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பெற வேண்டும் என்று எண்ண எண்ண அதனின் உணர்வுகள் நமக்குள் விளைகின்றது. அடைகாப்பது போன்று காத்து (திரும்பத் திரும்ப நுகரும் உணர்வுகள்) அந்தக் கருக்கள் நமக்குள் விளைந்து கொண்டேயிருக்கும்.

ஏனென்றால் நாம் நுகரும் உணர்வுகள் நம்முள் குஞ்சுகளானாலும்
1.அடுத்தடுத்து நாம் தியானத்தில் எடுக்கும் போது இவைகளெல்லாம் கருக்களாகின்றன.
2.பின் நினைவாக்கப்படும் பொழுது அது வளர்ச்சி அடைந்து கொண்டே, இருக்கும்.

இப்படி நமது வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலும்… ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்… ஒவ்வொரு குணத்திலும்… ஒவ்வொரு உணர்விலும்… அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை இணைத்துக் கொண்டே வரவேண்டும் (இது முக்கியமானது).

அந்த மகரிஷிகள் எவ்வாறு உயிருடன் ஒன்றிய உணர்வுகளை ஒளியின் சுடராக மாற்றி இன்று சப்தரிஷி மண்டலத்தில் இணைந்து வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கின்றார்களோ அந்த அரும் பெரும் சக்திகளை நமக்குள் அணுக்கருக்களாக மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.
1.அதற்குத்தான் இதை உபதேசிப்பது
2.அந்த நிலைகளை அனைவரும் அடைவதற்கு எமது அருளாசிகள்.

விண்ணின் ஆற்றலைப் பெற்றுத் தீமைகளை ஜீரணித்தவர்கள் மகரிஷிகள்

விண்ணின் ஆற்றலைப் பெற்றுத் தீமைகளை ஜீரணித்தவர்கள் மகரிஷிகள்

 

பல நிலைகள் நாம் தவறு செய்யாமலே உருவாகின்றன. நாம் வயிறு நிறையச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது பிறர் நம்முடன் சண்டை போட்ட நினைவுகளை நாம் கொண்டு வந்தவுடன் அன்று நமக்கு அஜீரணமாகின்றது… அல்லது சாப்பிட்ட ஆகாரத்தைச் சரியாகச் செயல்படுத்துவதில்லை.

ஏனென்றால் நம் உடலில் அனைத்து குணங்களின் செல்கள் பதிவாகி இருக்கின்றது.
1.நாம் எந்த குணத்தைச் செயல்படுத்துகின்றோமோ
2.அந்த உணர்வான செல்கள் அனைத்துமே ஒருங்கிணைந்து இயக்கப்படும்போது
3.அதற்குத் தக்கவாறுதான் நம் நரம்பு இயங்குவதும் நம் சுவாசம் இயங்குவதும் குடல் இயங்குவதும் நம் எண்ணங்கள் பேசுவதும் எல்லாமே.

இப்பொழுது கோபமாகப் பேசுபவரைப் பார்த்தால் உச்சிமுடி நட்டமாக எழுந்து நிற்கும். பயம் கலந்த கோபத்தை உண்டாக்கப்படும் போதும்… சில்… என்ற நிலை ஏற்படும்படி எதிர்பாராத ஒரு பயத்தை உண்டாக்கினாலும் நம் தலைமுடி கிர்… என்று மேலே எழுந்துவிடும்.

1.இவையெல்லாம் இந்த உணர்வின் செல்கள் இயங்குவதனால்தான்.
2.நாம் அல்ல… நாம் இதைத் தடுத்து நிறுத்த முடியாது.

இப்படித்தான் இயற்கையிலேயே நம்மை அறியாமலேயே பல நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதை நாம் அறிந்துணர்ந்து நம் உடலில் வரக்கூடிய பிணிகளைப் போக்க வேண்டும்.

அதற்கு என்ன செய்வது…?

மெய் ஞானிகள் அவர்கள் இங்கே வாழ்ந்த காலங்களில் விண்ணுலகச் சக்தியைப் பெற்று வளர்த்து… அவர்கள் உடலில் அத்தகைய ஆற்றல்களைப் பெற்றுத் தன்னையறியாமல் ஆட்டிப்படைக்கும் சில உணர்வுகளை அவர்கள் அடக்கினர்.

1.நமக்குக் கோபம் வருகிறதென்றால் நம்மையறியாமல் துடிப்போம்.
2.ஆனால் ஞானிகள் மத்தியில் அந்த உணர்வுகள் சென்றதென்றால் அது அவர்களுக்குள் அடங்கி அதற்குண்டான ஞானத்தை ஊட்டி
3.எந்தச் செயல் வேண்டுமோ… அந்தச் செயலுக்குண்டான வலுவை ஊட்டும்.

காரமான உணர்வுகள் தூண்டப்பட்டால் அந்தக் காரமான நிலைகளிலேயே நம்மைப் பேசும்படிச் செய்து பிறிதொன்றைத் தாக்கச் செய்யும். ஏனென்றால் அதை ஜீரணிக்கக்கூடிய சக்தி நம்மிடத்திலே இல்லை.

மெய் ஞானிகள் விண்ணின் ஆற்றல் மிக்க சக்தியைத் தனக்குள் எடுத்துக் கொண்டதனால்
1.அவர்களுடைய புலனறிவுகளில் எது சிக்கினாலும்
2.அது அவர்களுடைய உணர்ச்சிகளைத் தூண்டுவதில்லை.

எத்தகைய குணங்கள் கொண்டு பிறர் செய்தாலும் அந்த உணர்ச்சிகள் தூண்டா வண்ணம் அவர்களுக்குள் வந்தவுடன் அடங்கி
1.அவர்களது ஆற்றல் மிக்க சக்திகள் இவருடைய பார்வை பட்டவுடன்
2.அவர்களுக்குள் இருக்கக்கூடிய கெட்ட குணங்கள் அப்படியே அடங்கிவிடும்.

இப்பொழுது நாம் நல்லவர்களாக இருக்கிறோமென்றால் ஒருவர் சிறு குற்றமான செயலைச் செய்கிறார். நம் மீது ஒரு பழிச்சொல்லைச் சொல்கிறார் என்றால் “அந்தச் சொல் வெறும் வார்த்தை தான்…”

அதை நமக்குச் சொன்னவுடன் அந்த உணர்ச்சிகள் தூண்டப்பட்டு நமக்குள் அதை அடக்க முடியவில்லை. “இவ்வாறு சொல்கிறானே…!” என்று பதட்டமும் பயங்கரமான விளைவுகளும் ஏற்பட்டுவிடும்.

ஏனென்றால் அவர் செய்த உணர்வுகள் நமக்குள் இயக்கித் தவறு செய்யும் நிலைகளுக்கு… “எங்கிருந்து அந்தத் தவறு வந்ததோ அவர்களை அழிப்பதற்கு வருகின்றது…”

“இல்லாததைச் சொல்கிறான்…!” என்ற உணர்ச்சியின் வேகம் தூண்டுகின்றது. ஆனால் அதே சமயம் இந்த உணர்ச்சியுடன் சேர்ந்து உமிழ் நீராகச் சுரந்து நம் ஆகாரத்துடன் கலந்து விடுகின்றது.

இப்படி ஆகாரத்துடன் கலந்தவுடன் அது நம் உடலில் சாப்பிட்டவுடன் சத்தான ஆகாரத்தை ஜீரணிக்கக்கூடிய சக்தி இழந்து அதனுடைய செயல்களைச் செயலாக்கத் தொடங்கிவிடுகின்றது. அது இரத்தமாக மாறி நம் தசைகளாக மாறி நாளடைவில் வலியாகவோ வேதனையாகவோ வந்து விடுகின்றது.

1.மெய் ஞானிகள் தங்கள் வாழ்க்கையில் வந்த பெரும் தொல்லைகளையும் அடக்க
2.விண்ணின் ஆற்றல்களைப் பெற்றுத் தன் உயிராத்மாவை ஒளியாக மாற்றிச் சென்றனர்.
அவர்கள் எதை எதையெல்லாம் அவர்கள் மூச்சாலும் பேச்சாலும், சொல்லாலும் அவர்கள் வெளிப்படுத்தினார்களோ அந்த அலைகள் நம் பூமியில் படர்ந்து கொண்டிருக்கின்றது. அவையெல்லாம் சீக்கிரம் அழிவதில்லை.
நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் பேசியதெல்லாம் ஆற்றல் மிக்க உணர்வின் சக்தி கொண்ட வெப்பகாந்தங்கள் தாக்கியவுடன் அது அழிந்துவிடும்.
அந்த உணர்வுகள் இந்த உணர்வுடன் அதை ஈர்த்துக் கொண்டு மற்ற உணர்வுகள் காரத்துடன் காரம் சேர்த்து காரமாக உருப்பெற்று மற்றவர்களைத் தாக்கும் உணர்வாகச் சென்றுவிடும்.

ஆனால் மெய் ஞானியின் சக்திகளை அதை மற்ற சாதாரணமான ஒரு அணுவின் தன்மை புவிக்குள் வருவதை அதைச் செயலிழக்கச் செய்ய முடியாது.

ஆகையினால் அந்த ஞானிகளுடைய சக்தியை மனிதன் சாதாரணமாக எடுக்க முடியாது.

நினைத்தவுடன் நீங்கள் எடுக்கும் ஆத்ம சுத்திக்கு
1.‘’ஓ…ம் ஈஸ்வரா’…’ என்று உங்கள் உயிருடன் தொடர்பு கொண்டு
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கும்போது
3.அந்த அருள் சக்தியை நீங்கள் உடனே பெற முடியும் என்று உங்களுக்கு உறுதியாகச் சொல்கின்றோம்.

காரணம்… அவர்கள் எடுத்துக் கொண்ட ஆற்றல் எவ்வழிகளில் பெற்றார்களோ அதை…
1.அவருடைய நிலைகளை உபதேசித்து உங்கள் உணர்வுக்குள் பதியச் செய்யும் போது
2.இந்த உணர்வுகள் உங்களுக்குள் வித்தாக மாறுகின்றது.

அந்த வித்திற்கு நீங்கள் துருவ நட்சத்திரத்தின் பேரொளியை எடுத்து ஊட்டினால்தான் அந்த வித்திற்குச் சக்தி கூடும். அப்பொழுது அந்த ஞானியருடைய உணர்வலைகள் காந்தத்தின் பவர் கூடினால்தான் அந்த ஞானியருடைய எண்ண அலைகளுக்குச் சக்தி கூடுகின்றது.

‘’ஓ…ம் ஈஸ்வரா…’’ என்று உயிருடன் தொடர்பு கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற வேண்டும் எங்கள் ஜீவாத்மா பெற வேண்டுமென்று எண்ணி நம் உடலுக்குள் எல்லா அணுக்களிலும் செலுத்த முடியும்.
1.அவ்வாறு எல்லா அணுக்களிலும் செலுத்திச் சர்வ தீமைகளையும் நீக்கி
2.அனைத்தையும் ஒளியாக மாற்றி நாம் மகிழ்ந்து வாழ முடியும்,

இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை என்ற அழியா ஒளிச்சரீரம் நாம் அனைவருமே பெற முடியும்.

“எத்தனை வருடம்…” உயிர் இந்த உடலில் இருக்கப் போகின்றது…!

“எத்தனை வருடம்…” உயிர் இந்த உடலில் இருக்கப் போகின்றது…!

 

தியானத்தின் சக்தி கொண்டு இந்த உடலை நலமாக்கி நலமாக்கி நாம் வாழ்ந்து வந்தாலும் “எத்தனை வருடம்…” உயிர் இந்த உடலில் இருக்கப் போகின்றது…!

உடல் நலத்திற்காக நாம் எண்ணினாலும்
1.என்றும் நீடித்த ஆயுளாக இருக்கும் அருள் மகரிஷிகள் உணர்வை எடுக்கப்படும் பொழுது
2.உடல் வேதனைகளை நீக்கிவிட்டு சிறிது காலமாவது மகிழ்ந்து வாழ முடியும்.
3.அந்தக் குறுகிய காலத்திலே உயர்ந்த சக்தியினைப் பெற்று வெளிவரும் பொழுது
4.எதைப் பற்றுடன் பற்றி நாம் அந்தச் சக்தியை எடுத்து வளர்த்தோமோ அங்கே செல்ல முடியும்.

அவ்வாறு நாம் செயல்படவில்லை என்றால்… தன் வாழ்க்கைக்கு இந்த உடலுக்கு யார் உதவி செய்தார்களோ அவர்கள் மீது எண்ணத்தைச் செலுத்தினால் அந்த உடலுக்குள் தான் ஆன்மா செல்லும்.

சொத்தைச் சம்பாதித்து வைத்தேன்… என் பிள்ளை எப்படிச் சமாளிக்க போகின்றானோ…? என்று தன் பையன் மீது குறை கூறி எண்ணத்தைச் செலுத்தினால் அங்கே தான் செல்லும்.

இப்படிப் பல நிலைகள் கொண்டு மனிதனின் ஈர்ப்புக்குள் சிக்கி விடுகிறது. அங்கே சென்றாலும் நோயைத்தான் உருவாக்குவோம்… அடுத்து மனிதனல்லாத உருவை உயிர் உருவாக்கும்.

இதை எல்லாம் மாற்றி அமைக்க வேண்டும்.

விஷத்தின் தன்மை எதிலே ஊடுருகின்றதோ அதன் நிலையாகத் தான் அது மாற்றும். ஆனால்
1.விஷத்தை வென்றவன் அருள் ஞானி.
2.அந்த உணர்வினை எடுத்து உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களுக்கும் பாய்ச்சப்படும் பொழுது ஒளியாக மாற்ற முடியும்.

பாம்பினங்கள் தனக்குள் இருக்கும் விஷத்தினை மற்ற உயிரினங்கள் மீது பாய்ச்சி அதில் உள்ள விஷத்தினையும் தனக்குள் எடுத்து நாகரத்தினமாக எப்படி மாற்றுகின்றதோ… இதைப் போலத் தான் எத்தகைய நஞ்சையும் அடக்க வல்லமை பெற்றவன்… ஆறாவது அறிவை ஏழாவது ஒளியாக மாற்றியவன் சப்தரிஷி.

“அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்…” என்று நம் எண்ணத்தைக் கூட்ட வேண்டும்.

எத்தகைய துயரைக் கேட்டறிந்தாலும் சலிப்படைந்தாலும் சங்கடப்பட்டாலும் அடுத்த நிமிடம் ஈஸ்வரா என்று உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

பின் அங்கிருக்கக்கூடிய கஷ்டங்கள் நீங்க வேண்டும் என்று நாம் சொல்லி விட வேண்டும்.

நாம் சொல்வதை யார் எண்ணி எடுக்கின்றார்களோ அவர்களுடைய கஷ்டங்களும் நிச்சயம் நீங்குகின்றது. அப்போது அந்தக் கஷ்டமான உணர்வுகள் நமக்குள் வராது தடுக்க முடியும்.
1.உங்களுடைய வாக்கு அங்கே செயலாகும்.
2.அதைக் கண்டு நீங்கள் மகிழ முடியும்… உணர்வுகள் ஒளியாக மாறுகிறது.

ஆனால் நாம் சொல்லியும் கேட்கவில்லையே என்று அவர்கள் உணர்வை நுகர்ந்து மனதை இருளச் செய்து விடக்கூடாது.
1.எப்படியும் அந்த அருள் உணர்வைப் பெறுவார்கள்…
2.வாழ்க்கையில் தெளிந்து செயல்படுவார்கள் என்ற எண்ணத்தை நமக்குள் வளர்க்க வேண்டும்.