பாக மண்டலத்தில் அமர்ந்து தான் அகஸ்தியன் கண்ட விண்ணுலக இயக்கங்களை நான் அறிய முடிந்தது

பாக மண்டலத்தில் அமர்ந்து தான் அகஸ்தியன் கண்ட விண்ணுலக இயக்கங்களை நான் அறிய முடிந்தது

 

“ஆதியிலே” உருவான உருவின் (உணர்வின்) தன்மையை அது எப்படி உருவானது…? என்று அகஸ்தியன் கண்டவன். அதை எல்லாம் அவன் பாக மண்டலத்தில் (கர்நாடகா காவிரி ஆறு உருவாகும் இடம்) இருக்கப்படும் பொழுது கண்டது.

உணர்வின் அணுக்களின் இயக்கங்கள் எப்படி…? என்பதை அதாவது
1.ஒரு உணர்வின் தன்மை “எதனின் பாகம்… எதனுடன் இணைந்து கலந்து செல்கின்றது…?” என்பதை அறிகின்றான்
2.அதனால் தான் அந்த இடத்திற்குப் பெயர் “பாக மண்டலம்” என்ற பெயரே வந்தது.

பிரபஞ்சம் எப்படி உருவானது…? தனித்தனித் தன்மையாக (கோள்கள் நட்சத்திரங்கள்) இருந்தாலும் சுழற்சி வட்டத்திற்குள் அது எப்படி இயங்குகின்றது…? கூட்டமைப்பாக பிரபஞ்சம் என்ற நிலையை அது எப்படி அடைகின்றது…? என்பதையும் அகஸ்தியன் அறிகின்றான்.

இதே போன்று தான் நம் உயிரின் தன்மையின் இயக்கமும்…!
1.உடலுக்கு அது சூரியனாக இருக்கின்றது.
2.நம் உடலுக்குள் பல கோடி உணர்வுகள் சேர்த்து இது ஒரு பிரபஞ்சம் ஆகிறது.

நம் சூரியக் குடும்பத்தைப் போல அண்டத்தில் 2000 சூரியக் குடும்பங்கள் உண்டு. அதே போல் பல ஆயிரம் குடும்பங்கள் வளர்ச்சி பெற்றதும் உண்டு. அவை எல்லாம் தனித்தனியாக அகண்ட அண்டமாகச் சுழன்று கொண்டுள்ளது.

சில இடங்களில் பார்த்தோம் என்றால் வான மண்டலத்தில் நட்சத்திரங்கள் அதிகமாக அடர்த்தியாகத் தெரியும். அது எல்லாம் இன்னொரு பிரபஞ்சத்தில் உள்ளதைத்தான் நாம் அவ்வாறு காண முடிகிறது.

இது எல்லாம் “பாக மண்டலத்தில் என்னை அமர வைத்து குருநாதர் காட்டிய நிலைகள்…!”

அது ஒன்றுடன் ஒன்று இணைந்து சுழற்சியாகும் நிலை இங்கிருந்து பார்க்கப்படும் பொழுது வித்தியாசங்களாகத் தெரிய வரும்.

இதையெல்லாம் விஞ்ஞானிகளும் படம் எடுக்கின்றார்கள். எப்படி இருக்கிறது…? என்பதையும் அறிகின்றார்கள். அது எங்கே சுழலுகின்றது…? எங்கெங்கு நகர்ந்து செல்கிறது…? என்பதையும் பார்க்கின்றார்கள்.

எப்போதோ ஓர் காலத்தில் கோள்கள் அனைத்தும் சந்தர்ப்பத்தில் ஒரே நேர்கோட்டில் வரக்கூடிய வாய்ப்பு உண்டு.
1.அப்படி வந்தால் பூமிக்கு அதனுடைய ஈர்ப்பு சக்தி குறைகின்றது.
2.ஒன்று நகர்ந்து ஓடலாம்… அது எப்படிப் போகும்…? என்று சொல்ல முடியாது.
3.ஒரு நொடிக்குள் இது நடக்கும். சூரியனுடைய ஈர்ப்பு சக்தி இல்லை என்றால் டபக்… என்று கீழே இறங்கிவிடும்.

இன்று இருப்பது நாளை இல்லை…! இது போன்று எத்தனையோ மாற்றங்கள் நடந்து கொண்டே தான் உள்ளது.

வான்வீதியில் உருவாகும் மின்னல்கள் ஒன்றுடன் ஒன்று மோதும் போது ஏற்படும் இயக்கத்தினால் தான் உயிரணுவிற்குள் துடிப்பு வருகின்றது. இரண்டும் சண்டை இட்டுக் கொண்டே இருக்கும்.

எது…?

ரேவதி நட்சத்திரம் என்பது பெண்பால். கார்த்திகை நட்சத்திரம் என்பது ஆண்பால். ரேவதி நட்சத்திரம் அதைக் கண்டவுடன் அஞ்சி ஓடுகின்றது.

இப்படி இது இரண்டுக்கும் ஒத்துக் கொள்ளவில்லை என்ற நிலை வரும் பொழுது
1.வியாழன் கோளின் கதிரியக்கப் பொறிகள் தாக்கிய உடனே மூன்றும் சேர்த்து ஒன்றாக இணைந்து
2.இரண்டு என்ற நிலை இல்லாது மூன்று என்ற நிலை அடைகின்றது.
3.அப்பொழுது அங்கே துடிப்பு ஏற்படுகின்றது.

அத்தகைய துடிப்பின் ஈர்ப்பினால் அதற்கு அருகில் இருக்கக்கூடியது சிக்கப்படும் பொழுது மற்ற உணர்வுகளைத் தனக்குள் சேர்த்து ஒரு அடர்த்தியின் தன்மை அடைந்து “உயிரணுவின் தோற்றமாகின்றது…”

உயிரணுவின் துடிப்பினால் வெப்பம் (உயிர்) உருவாகிறது. ஆனால் கோள்கள் அனைத்தும் சுழற்சியினால் வெப்பமடைகிறது. அதனால் தான் சூரியனைச் சர்வேஸ்வரன் என்றும் பூமியைப் பரமேஸ்வரன் என்றும் உயிரை ஈஸ்வரன் என்றும் ஞானிகள் காரணப் பெயரிட்டு அழைத்தார்கள்.

உயிர் மற்ற ஜீவணுக்களை உருவாக்கும் சூரியன் அணுக்களை உருவாக்கும். சூரிய பிரபஞ்சத்தில் தான் உயிர் அணுக்கள் துடிப்பின் நிலைகள் கொண்டு உருவாகின்றது.

அந்தத் துடிப்பினால் மற்ற உணர்வோடு சேர்த்து இரண்டும் மோதலான பின் அணுவின் துடிப்புகளாகி அந்த அணுவின் மலம் தான் இந்த உடலாகின்றது.
1.இந்த அணுக்களின் மலத்திற்கு… இந்த உடலைப் பாதுகாக்கத் தான் இன்று எத்தனையோ வேலைகளைச் செய்கின்றோம்.
2.பல கோடி அணுக்களின் மலம் நம் உடல்.
3.இதைத் தான் மும்மலம் மும்மலம் மும்மலம் என்று சொல்வார்கள்.

வெப்பம் காந்தம் விஷம் இந்த மூன்றினால் உருவாகும் அந்த அணுக்களின் மலம் தான் இந்த உடல் என்று தெளிவாக்குகின்றார்கள்.

ஆக…நாம் இந்த உடலை… நமது… எனது… எனக்குச் சொந்தம்…! என்று சொல்லிக் கொண்டிருக்கின்றோம்… அதைத் தான் சொந்தம் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம்.
1.ஆனால் நமக்கு சொந்தமானது உயிர் தான்
2.அந்த உயிருடன் ஒன்றும் உணர்வை ஒளியாக மாற்றும் அத்தகைய பருவத்தைத் தான் உங்களுக்கு இப்போது ஏற்படுத்துகின்றோம்.

God has no form

God has no form

The place of worship namely temples churches mosques etc.. are places where everyone irrespective of his status goes to worship God.

The place is made pure so that people going there will have their thoughts on God only. It is with this idea that so many temples churches and mosques and all such places of worship all over the country have been built by the Siddhas of those days.

1.Idols have been installed in these places of worship to bring the attention
2.that there is one above all of us… who will look after the welfare of all.

After installing these idols the Siddhas live there with all the powers that they have a acquired from Shakti “knowing the thoughts of the numerous people” who come to worship there and grant their request.

All these are done by Maha Rishis, Sabdha Rishis and Gnana Rishis who have got all grace from God.
1.It is because these great souls remain with their body and soul in the places where they have built these temples for ever
2.that there is still some unity and fear in the hearts of people for the mistakes that they commit.

If these temples had not been there… and there was no God and justice in this world. It is a gift to us that those Rishis who lived in this world in those days and are “with us even now” protecting us like Gods.

When God is in us and we are God why should we say that some people are above us and some others below us…?

High and low do not come by their religion, caste or wealth.

Those who have got their thoughts and have got the powers from God and achieved a high state in knowledge and can bless us with their grace. They are in a higher level than us and we should worship them to get solace to our souls.

1.It is not possible for any person to find out and tell about the state of the form of God.
2.It is not possible even for those great souls who live in the mental world and enlighten us on so many truths
3.and given various shapes for the Gods that we worship in the form of idols
4.to see or hear about the shape of God.

It is possible to know about and see God… “only for Him who exists in everything…”

All those who have got the grace of Sakthi and realize their real state and know that their soul is immortal can rise their state to that of Siddas and Gnanis
1.but is there anyone who has seen the form of God and talked to him…?
2.”God has no form” and we are not eligible to say that also.

It is only by our own thoughts and breath that we can rise up and lead a contended life.

The power that we can absorb depends upon our thoughts.
1.God blesses us at that state
2.in which our thoughts approach Him.

“தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டுள்ளது போல் தான்” இன்றைய மனிதனின் வாழ்க்கை இந்த உலகிலே உள்ளது

“தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டுள்ளது போல் தான்” இன்றைய மனிதனின் வாழ்க்கை இந்த உலகிலே உள்ளது

 

பூமிக்கு வெளியிலே அணுகுண்டுகளை வெடித்துப் பரீட்சித்துப் பார்த்ததும்… இராக்கெட்டுகளை அதிகமாக விண்ணிலே செலுத்திக் கொண்டிருப்பதும்… அதன் மூலம் கதிரியக்கங்கள் எல்லாக் கோள்களுக்குள்ளும் அதிகமாகப் பரவி விட்டது.

நட்சத்திரத்திலிருந்து இயற்கையாக வெளிப்படக்கூடிய கதிரியக்கச் சக்திகள் ஒன்றுடன் ஒன்று மோதி மின்னலாக வரும் பொழுது
1.விஞ்ஞானத்தினால் பரவச் செய்துள்ள கதிரியக்கங்களில் இது பட்ட பின் இரு மடங்காகிவிடும்… கோள்களிலும் இது அதிகமாகிவிடும்.
2.இப்படிப்பட்ட அலைகள் இந்தப் பிரபஞ்சத்திற்குள் இப்பொழுது சுழன்று கொண்டுள்ளது… சூரியனுக்கு அருகிலும் வந்துவிட்டது.

உதாரணமாக… இரண்டு மின்சார வயர்கள் ஒன்றுடன் ஒன்று மோதினால் இரண்டு மடங்கு கரண்டுகள் அதிகமாகி அதனுடன் சேர்ந்த பல்புகள்… மற்ற சாதனங்கள் அனைத்தும் ஃப்யூசாகி விடுகின்றது.

சூரியனின் சுழற்சியில் இப்பொழுது மின்சாரம் (இயக்கம்) சீராக இருக்கின்றது. ஆனால் இயற்கையால் உருவாகும் கதிரியக்கமும் மனிதனால் பரவச் செய்த கதிரியக்கமும் மோதிய பின் இரு மடங்கு இயக்கமாகி சூரியனுக்குள் அப்படிச் செல்லும் போது அங்கே இரு மடங்கு மின்சாரம் உற்பத்தி ஆகும்.

அப்போது நம் உயிரின் துடிப்பும் அதிகரிக்கப் போகின்றது. அதனால் நம் உடலில் உள்ள அணுக்களும் வேகமாகத் துடிக்க ஆரம்பிக்கும். இப்படி வேகமானால் சிந்திக்கும் தன்மை இழந்து விடுவோம்.

ஒரு நொடிக்குள் இப்படி நடந்து விட்டால்…
1.மனிதனுக்கு மனிதன் அடித்துக் கொல்லும் நிலை வந்துவிடும்.
2.இந்த உணர்வலைகள் பாய்ந்து காட்டிற்குள் இருக்கக்கூடிய மிருகங்களும் நகரத்திற்குள் வரும் வாய்ப்புகள் உண்டு.
3.ஒரு நாள் முழுவதற்கும் இதனுடைய பாதிப்பு இருந்தால் உலகில் முக்கால்வாசி மக்கள் தன் நினைவை இழந்து… இறந்து விடுவார்கள்.

விஞ்ஞான ரீதியில் எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்று எத்தனையோ கம்ப்யூட்டர்களை உலகெங்கிலும் வைத்துள்ளார்கள். எலக்ட்ரிக்கின் சக்தி இரு மடங்காகும் பொழுது அதனுடன் தொடர்பு கொண்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் அனைத்தும் கருகிவிடும். அதில் இவர்கள் வைத்திருக்கின்ற அளவுகோலும் மாறிவிடும்.

அடுத்த நாட்டை அழிப்பதற்காக பூமிக்குள் எத்தனையோ குண்டுகளைச் சேமித்து வைத்துள்ளார்கள். அதிலே மற்ற மின்னலோ இயற்கையின் சீற்றங்களோ பாதித்து விடாதபடி அதற்குண்டான பாதுகாப்புக் கவசமாகக் கம்ப்யூட்டர்கள் மூலம் இணைத்து வைத்துள்ளார்கள்.

ஒரு மின்னல் பாய்ந்து அந்தக் குண்டுகள் அனைத்தும் வெடித்தால் அருகில் இருக்கக்கூடிய இடமே முழுமையாக அழிந்துவிடும். அதனால் தான் எல்லா இடங்களிலும் அதைக் காப்பதற்காக வேண்டி கம்ப்யூட்டர் மூலம் நுண்ணிய நிலைகளில் இயக்கிச் சீராக வைத்திருக்கின்றார்கள்.

ஆனால் இரு மடங்கு மின்சாரம் உற்பத்தியானால் என்ன ஆகும்…? இவைகள் அனைத்துமே செயல் இழந்துவிடும். கம்ப்யூட்டர்கள் ஃப்யூஸ் ஆகிவிடும்.

ஏனென்றால் இயக்கத் தொடர் அதிகமானவுடன் அதற்குள் இருக்கும் காந்தம் அதிகமாகி… அனைத்தையுமே வேகமாக இயக்கும்படி செய்து கருக்கி விடுகின்றது. அந்தப் பாதுகாப்பு இழந்தால் புதைத்து வைத்த குண்டுகள் வெடிக்கத் தொடங்கும்.

1.நாடு… நகரம்… மக்கள்… நீ… நான்… உன் சொத்து… என் சொத்து… என்று சொன்னாலும் எல்லாமே சிதைவுண்டு போய்விடும்.
2.அந்த அளவிற்குத் தலைக்கு மேல் கத்தியைத் தொங்கவிட்டு கீழே அமர்ந்திருப்பது போன்று
3.”எப்பொழுது கயிறு அறுந்து விழும்…?” என்று சொல்ல முடியாத நிலையில் இப்படிப்பட்ட போர் முறையில்தான் இருக்கின்றோம்.

கடவுளின் அவதாரத்தில் வராக அவதாரம் உயிரின் துடிப்பாகிப் பல உணர்வுகளை மாற்றி அமைத்து உணர்வின் தன்மை எதனையுமே பக்குவப்படுத்தும் மனித நிலை பெற்ற பின் தான் விண்ணுலக ஆற்றலைக் கவர்ந்து தனக்குள் அதை உருவாக்கும் ஆற்றலைப் பெற்றான் மனிதன்.

ஆனால் அது எல்லாம் அரசர்கள் காலத்தில் அஞ்ஞான வாழ்க்கையாகி… இன்று உடலின் இச்சைக்கு என்று வளர்த்துக் கொண்டார்கள் விஞ்ஞானிகள்.

அகஸ்தியனோ நஞ்சினை வென்று உணர்வுகளை ஒளியாக மாற்றிப் பிறவி இல்லாத நிலை அடைந்து (அந்த உயிர்) என்றுமே ஒளியாக இருக்கின்றான் துருவ நட்சத்திரமாக.

அவனைப் பின்பற்றிச் சென்றவர் அனைவரும்… மனிதனின் ஆறாவது அறிவை ஏழாவது நிலை பெற்று ஒளியின் சரீரம் பெற்றது சப்தரிஷி மண்டலம்.

அது தான் சிருஷ்டித்துக் கொண்ட மண்டலம். ஆறவது அறிவைத் தனக்குள் நுகர்ந்து உணர்வினைச் சிருஷ்டித்துக் கொண்டது… சப்தரிஷி… சிருஷ்டி…! காரணப்பெயராக இவ்வாறு வைத்து நாம் தெரிந்து கொள்ளக் காட்டினார்கள்.

1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியையும் சப்தரிஷி மண்டலங்களின் சக்தியையும் நாம் எடுத்து வளர்த்துக் கொண்டால்
2.நடக்கப் போகும் அந்தத் தீமையிலிருந்து நாம் மீள முடியும்.
3.நம் உணர்வுகளை எல்லாம் உயிருடன் ஒன்றி ஒளியாக மாற்றிய பின்
4.அகண்ட அண்டத்தில் எது வந்தாலும் அதை ஒளியாக மாற்றி மீண்டும் நிலையான சரீரமாக வளர முடியும்.

கணவன் மனைவி இரு உயிரும் ஒன்றாகி உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி அத்தகைய நிலை பெற்றவர்கள் தான் சப்தரிஷி மண்டலத்தில் இன்றும் உள்ளார்கள்.

ஆனால் தனித்த நிலையில் வளர்ச்சி பெற்றால் முனி…! மற்றொன்றை வீழ்த்திடும் சக்தி கொண்டது. பின் அதுவும் மடிந்து விடும். வளரும் சக்தி இல்லை.. இதற்கு முனி என்று பெயர். தன் வலிமையைக் காட்டும்… மற்றொன்றை முறியடிக்கும்… பின் அதுவும் மடியும்.

நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் கணவன் மனைவி என்ற நிலையில் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்திகளை எடுத்து…
1.இரு உணர்வும் ஒன்றாக இணைந்து இரு உயிரும் ஒன்றாக இணைத்து உணர்வை ஒளியாக மாற்றிக் கொண்டே வந்தால்
2.உடலை விட்டுச் சென்ற பின் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குச் சென்றடைய முடியும்.
3.விஞ்ஞானத்தினால் வரக்கூடிய தீமைகளிலிருந்து தப்பி விண் செல்ல முடியும்.

The present state of World

The present state of World

In the present state of the world
1.man wants his prestige to rise
2.for this he wants money and to earn money
3.he wants his body to be in a healthy condition.
4.It is for this only that the he prays to God in many ways.

Those who say that we should not pray to God asking for worldly wealth are considered to be “mad people…”

In the present world no one ask the question who is God…?

If we do not pray for food to God does the body not require food..? He has given hunger to this body, should we not pray to Him to give us food…?

These are the ways in which the present man thinks.

People think only about the hunger of the body and no one thinks of the “hunger of the soul…” The present world is only for the hunger of the body.

All the states that we get are only due to the hunger of the body. We should think in which way the food taken for the hunger of the body is absorbed by the soul and know that the “hunger of the body can be controlled by the hunger of the soul…”

I do not say that all the persons born in this world should control their bodily hunger like Rishis and Gnanis. All people know what are the foods and the states their body accepts.

I do not say that you should live without food and water. The vehicle, body, can be kept in any state by controlling the thoughts.

Whatever state our body gets by the food that we take, the soul also gets. It is necessary for us to eat dress and enjoy our life. But the man who is greedy and acquires more than his requirements become a slave of himself.

In the present state of the increased population of today
1.love and affection have disappeared… only bodily hunger stands foremost.
2.to hear good advice and to tread the path of good people which help the development of our soul are not accepted today.
3.We think of God to satisfy the hunger of the body only.

Meditation helps a man to calm in his thoughts and actions. The man who meditates will not be proud or arrogant, have control over himself and lead a life with love towards all beings.

Our soul is different from our body. We should consider the soul staying in our body as a gift and live cooperating with Nature, learning the truths and getting our energy from the Sages.

The power of the sun is one state and it comes to us in that state in which we absorb it. See the effect of wind
1.it cools water that is hot when exposed to it, it makes the wood burn in a fire.
2.in the same way the power of Shakti is useful to us in whatever may we utilize it.

We can get that power according to our thought and you use it for good or bad purposes.

துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் அதிகரித்துக் கொள்ளுங்கள்

துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் அதிகரித்துக் கொள்ளுங்கள்

 

அகஸ்தியன் தன் வாழ்க்கையில் நஞ்சினைப் பிளந்து… கணவனும் மனைவியும் இரண்டறக் கலந்து உணர்வினை ஒளியாக மாற்றித் துருவ நட்சத்திரமாக ஆனார்கள்.

1.இந்தக் காற்றிற்குள் எத்தனையோ உணர்வுகள் இருந்தாலும் அதையெல்லாம் பிளந்து விட்டு
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று அதை நாம் நுகர்ந்து பழகுதல் வேண்டும்.

உயிரணு பூமிக்குள் வந்த பின் பல கோடிச் சரீரங்களில் தீமைகளைப் பிளந்திடும் உணர்வுகளைப் பெற்று பன்றியின் உடலை அமைத்து அதனின் வலுவின் துணை கொண்டு நாற்றத்தைப் பிளந்து வராக அவதாரமாக… நல்ல உணர்வுகளை நுகர்ந்து… அடுத்து பரசுராம்…! தீமைகளைச் சமப்படுத்தும் நிலைகள் மனிதனாக உருப்பெற்றது.

இந்தப் பிரபஞ்சத்திற்குள் எது இருந்தாலும் சமப்படுத்தி… அதைத் தனக்குகந்ததாக உருவாக்கும் சக்தி பெற்றவன் மனிதன். இப்படிப் பெற்றவன் தான் அகஸ்தியன்.

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி கணவனும் மனைவியும் இரண்டறக் கலந்து உணர்வினை ஒளியாக மாற்றிக் கொண்டே உள்ளார்கள்… துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளார்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரக்கூடிய உணர்வுகளை சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றிக் கொண்டே உள்ளது. இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கக்கூடிய எத்தகைய விஷத்தையும் ஒடுக்கக்கூடிய சக்தி பெற்றதுதான் துருவ நட்சத்திரம்.

அவ்வாறு வரக்கூடிய அந்த துருவ நட்சத்திரத்தின் ஒளி அலைகளை நம் பூமி துருவத்தின் வழியாகக் கவர்ந்து நமக்கு முன் பரவச் செய்து கொண்டுள்ளது.

அதை நாம் எடுக்கக்கூடிய நேரம் எது…?
1.துருவ நட்சத்திரத்தின் சக்தி பிரபஞ்சத்தில் பரவி வருவதை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றி
2.அதை நம் பூமியின் துருவப் பகுதி வழியாகக் கவரும் அந்த அதிகாலை நேரம் தான்.

ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று பல முறை உடலுக்குள் செலுத்த வேண்டும்

இதை உறுதிப்படுத்த… உருவாக்க… உணர்வினை வலுவாக்க… உடலுக்குள் அந்த வலிமையைச் சேர்க்க… தன் மனைவிக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி கிடைக்க வேண்டும்… அவர்கள் உடல் முழுவதும் படர வேண்டும் அவருடைய ஜீவான்மாக்கள் பெற வேண்டும்… அருள் ஒளி அவருக்குள் படர வேண்டும். அந்த அருள் ஒளி எனக்குப் பாய்ச்ச வேண்டும் என்று
1.இரு மனமும் ஒன்றுபட வேண்டும்… இரண்டு பேருமே இவ்வாறு எண்ணிக் கலந்து உருவாக்குதல் வேண்டும்.
2.இது தான் ரிஷி… சிருஷ்டிப்பது…! ரிஷி பத்தினி என்று அன்று சொல்வார்கள்.
3.இருவருமே ஒன்றாகச் சேர்த்து அருள் உணர்வுகளை வளர்த்துக் கொண்டால் முழுமை பெறுகின்றோம்.

இதைத் தான் காவியமாகப் படைத்து நமக்குக் கொடுத்துள்ளார்கள் அன்று ஞானிகள்.

காலையில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துச் சேர்த்துக் கொண்ட பின்… நாங்கள் பார்ப்போருக்கெல்லாம் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என் பார்வை அவர்கள் தீமையை அகற்றிடும் சக்தியாக வர வேண்டும் என்று நாம் நினைவுகளைச் செலுத்த வேண்டும்.

அதே சமயத்தில் இன்று விஞ்ஞான உலகில் வாழ்கிறோம். காற்று மண்டலத்தில் ஏராளமான நச்சுத் தன்மைகள் பரவி உள்ளது. அது நமக்குள் புகாது தடுத்துத் தூய்மைப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் வலுவை
2.மீண்டும் மீண்டும் நாம் சுவாசித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

உலகப் போர் என்ற நிலைகளில் அணுகுண்டுகள் வெடிக்கப்பட்டு அதிலிருந்து வெளிப்படக்கூடிய கதிரியக்கங்கள் பிரபஞ்சத்தில் பரவி எல்லாக் கோள்களும் எடுத்து சூரியன் அருகிலே சென்றால் அதற்குள் மோதலாகி “இரு மடங்கு காந்தத்தை” சூரியன் உற்பத்தி செய்யப் போகிறது.

அத்தகைய இயக்கச் சக்தி வரும் போது
1.நம் உயிரின் துடிப்பு அதிகரிக்கும்
2.அணுக்களின் துடிப்பு அதிகரிக்கும்.
3.உணர்வின் தன்மை மடியும் நிலைகள் வந்து விடும்.

அது போன்ற நிலை நம்மைப் பாதிக்காது தடுக்க வராகன் நாற்றத்தைப் பிளந்து நல்லதை மட்டும் எப்படிக் கூர்மையாக நுகர்ந்ததோ… அது போல் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியை நமக்குள் பெருக்கி அதை மாற்றிப் பழகுதல் வேண்டும்.

இதை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்… இதனுடைய அர்த்தங்களைப் புரிந்து செயல்பட வேண்டுமென்றால் ஆயுள் பத்தாது. குருநாதர் எமக்கு கொடுத்த அருள் உணர்வுகளை…
1.பாக மண்டலத்தில் (கர்நாடகா அகஸ்தியன் அமர்ந்த இடம்) பிரபஞ்சம் எப்படி உருவானது…? என்று
2.அகஸ்தியன் கண்ட உணர்வுகளை நானும் எடுத்து அதைக் கண்டு கொண்டதனால்
3.அந்த உணர்வின் அறிவு எனக்குள்ளும் வந்து குருவின் துணையால் இந்த உண்மைகளை அறிய முடிந்த்து.
4.அகஸ்தியன் கண்டுணர்ந்த உணர்வின் அறிவுதான் எனக்குள்ளும் புகுந்து அதையெல்லாம் அறிய முடிகின்றது.

இதைப் போலத் தான் நீங்களும் அறிந்து உங்களுக்குள் வரும் தீமைகளை அகற்றிடும் சக்தியாக… “அகண்ட அண்டத்தில் நடப்பதை அறிந்துணர்ந்து” அந்த அருள் ஒளியை உங்களுக்குள் விளையை வைத்துப் பிறவி இல்லாத நிலை அடைதல் வேண்டும்.

அதற்குத்தான் திரும்பத் திரும்ப… திரும்பத் திரும்பச் சொல்வது.

முதலிலே சொன்னது போன்று சூரியனுக்குள் இருந்து இரு மடங்கு மின்சாரத்தை உருவாக்கும் சந்தர்ப்பமாக அதிக சக்தி வாய்ந்ததாக இனி வரப்போகின்றது.

நம் உயிர் எலக்ட்ரிக்காக இருக்கின்றது. அந்த உணர்வின் வேகத் துடிப்பு வரும் பொழுது உயிரின் துடிப்பு அதிகமாகின்றது. அந்தத் துடிப்பாகும் பொழுது நமக்குள் உணர்வின் தன்மை அதிகரித்து… நம் நல்ல எண்ணங்கள் அனைத்தும் ஃப்யூஸ் ஆகிவிடும். சிந்திக்கும் தன்மை இழந்து விடுவோம்.

பூமிக்குள் நிலநடுக்கம் ஏற்படுவது போன்று தான் ஒரு நொடிக்குள் இத்தகைய நிகழ்ச்சிகள் நடந்து விடும். எலெக்ட்ரிக் இரு மடங்காகி சிந்தனைகள் இழந்து விட்டால்…
1.மறுபடியும் நல்ல சிந்தனைகளைக் கொண்டு வருவது மிகவும் கடினம்.
2.ஆகவே இப்பொழுது இருந்தே நீங்கள் தயாராகிக் கொள்ளுங்கள்.
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் அதிகரித்துக் கொள்ளுங்கள்.

அதன் உணர்வின் வலிமை கொண்டு எந்த நொடியிலே அந்த விஷத்தன்மையான இரு மடங்கு துடிப்பு அதிகமானாலும் அதைப் பிளந்து உங்கள் இயக்கத்தைச் சமப்படுத்தி கொள்ள இது உதவும்.

ஒரு நொடியானாலும் ஒரு மணி நேரம் ஆனாலும்… அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி எடுத்து சிந்தனை சிதறாது வைத்திருக்கலாம். உங்களையும் காக்கலாம் எதிர்கால மக்களையும் காக்கலாம்.

இயற்கையின் சீற்றங்கள் வரப்படும் பொழுது…
1.அந்த நேரத்தில் ஞானிகள் எவ்வாறு தன்னைப் பாதுகாத்துக் கொண்டார்களோ
3.அந்த உணர்வை நமக்குள் செலுத்தினால் நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

அந்த நிலை நீங்கள் அனைவரும் பெற வேண்டும் என்று வேண்டிக் கொள்கின்றேன்.

நெருப்பைத் தான் தெரிந்து வைத்திருக்கின்றோம்… ஆனால் உயிரைப் பற்றி நாம் தெரிந்து வைத்திருக்கவில்லை

நெருப்பைத் தான் தெரிந்து வைத்திருக்கின்றோம்… ஆனால் உயிரைப் பற்றி நாம் தெரிந்து வைத்திருக்கவில்லை

கோவிலுக்குச் சென்று யாகங்கள் செய்து வேள்விகள் செய்தால் ஆண்டவன் காப்பாற்றுவான்…! நீ ஏன் கஷ்டப்படுகின்றாய்…? யாகத்தை வளர்த்தால் தன்னாலே ஆண்டவன் வருகின்றான்…! என்று ஈப்படிச் செய்வதில் தான் நமக்கு நம்பிக்கை இருக்கிறது.

நெருப்பைத் திகு திகு என்று எரியவிட்டு அதிலே பால் நெய் இன்னும் என்னென்னமோ பொருளை எல்லாம் போட்டால் ஆண்டவனுக்கு இந்த வாசனைகள் போய் “எனக்கு வேண்டியதெல்லாம் கிடைக்கும்… அவன் நமக்குக் கொடுப்பா…!” என்ற எண்ணத்திலே தான் நாம் இருக்கின்றோம்.

உதாரணமாக… நெருப்பில் நாம் எந்தப் பொருளைப் போடுகின்றோமோ அந்த மணம் தான் வரும். நறுமணம் உள்ளதை நெருப்பிலே போட்டால்… அதை நுகர்ந்தால் நமக்கு ஆனந்தம் வரும்.

ஆனால் பக்கத்திலே சிறிது தூரத்தில் மிளகாயை அடுப்பிலே போட்டு வறுக்கிறார்கள் என்றால்… அந்தக் காற்று இந்தப் பக்கமாக அடித்தால் அது நம்மை இரும வைத்துவிடும்.

நெருப்பிலே படும் இந்த உணர்வுகள் எதுவோ அதுதான் நம்மை இயக்கும்.

ஆனால் நெருப்பிலே மிளகாயைப் போட்டால் நாம் ஏன் இரும வேண்டும்…?

1.எவ்வளவு பெரிய பக்திமானாக இருந்தாலும்
2.எவ்வளவு சக்திசாலியாக இருந்தாலும்
3.பிறருக்குத் தர்மத்தைச் செய்தாலும்
4.நல்ல உடல் வலிமை பெற்றவராக இருந்தாலும்
5.இந்த நெடி அந்த வலு உள்ளவர்களையும் இயக்கிவிடும்… அவர்களால் அதைத் தாங்க முடியாது.

அப்பொழுது இதை யார் இயக்குவது…? நமது உயிர்…!

அதனால் தான் நாம் அறிந்து கொள்வதற்கு உடலான அரங்கத்திற்குள் நம் உயிரிலே மோதினால் “அரங்கநாதன்…” என்று ஞானிகள் காட்டியுள்ளனர்.
1.எதன் உணர்வுகள் உயிரிலே படுகின்றதோ…
2.உணர்ச்சிகள் நம் உடலிலே பரவப்படும் பொழுது அரங்கநாதனாக மாறுகின்றது.

மிளகாய்த் தூளை நெருப்பில் போட்டால்… நீங்கள் அதை நுகர்ந்தால் உங்களை எது ஆட்சி புரிகின்றது…? அந்த நெடிதான் உங்களை ஆட்சி புரிகின்றது.

இதைப் போன்று தான் நீங்கள் நுகரும் உணர்வுகள் உயிரிலே பட்டால் அரங்கநாதன்… அந்தக் குணத்திற்குத்தக்க நாதங்கள் உருவாகி இந்த உணர்ச்சிகள் இந்த உடலை ஆளுகின்றது… ஆண்டாள்…!

யார் ஆள்வது…? நீங்கள் நுகர்ந்த உணர்ச்சிகள் தான் உங்களை ஆளுகின்றது. இதை நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே… நாம் எண்ணக்கூடிய உணர்வுகள் உயிரான நெருப்பில் யாகத்தீயாக அந்த அருள் ஞானிகள் உணர்வுளைப் போட வேண்டும்.

நம் உயிர் ஒரு நெருப்பு…!
1.உயர்ந்த ஞானிகள் உணர்வுகளை யாக்க் குண்டமான உயிரான நெருப்பிலே செலுத்தி
2.நம் உணர்வுகளை எல்லாம் புனிதப்படுத்திச் சொல்லின் நிலையாக அதை வெளிப்படுத்தும் பொழுது சூரியனுடைய காந்த சக்தியால் கவரப்பட்டு
3.நமக்குள்ளும் தீமைகள் நீங்குகின்றது நம் சொல்லைக் கேட்பவர்கள் தீமைகளும் நீங்குகின்றது
4.தீமையை நீக்கும் எண்ணங்களாக இந்தக் காற்று மண்டலத்திலே பரவுகின்றது… எல்லோருக்கும் நன்மை செய்யும் சக்திகளாக…!

இதுதான் ஞானிகள் சொன்னது.

இதைப் புத்தகத்தில் எழுதிக் காட்ட முடியாது. நெருப்பு எப்படி வேலை செய்கின்றதோ… அப்படித்தான் நமது உயிரும் வேலை செய்கிறது…! என்று அன்று இப்படித்தான் சொல்லிக் கொடுத்தார்கள்.

உயிரின் நிலைகள் வேலை செய்யும் என்று சொல்லவில்லை… அதற்குப் பதிலாக “நெருப்பு தான் செய்யும்…” என்று நெருப்பிலே பொருளைப் போட்டு ஆண்டவனுக்கு மணமாக அனுப்பி விட்டால் போதும் என்று இப்படி மாற்றி விட்டார்கள்.

ஆனால் அந்த நெருப்பிலே பொருளைப் போட்டால் எப்படி மணங்கள் வெளி வருகின்றதோ அதைப் போன்று தான்
1.நமது உயிரான நெருப்பிலே நாம் எண்ணத்தால் எடுத்து அந்த உயர்ந்த எண்ணங்களைப் பரப்பிச் சொல்லாகச் செயல்படுத்தி
2.உணர்ச்சிகளின் தன்மையாக நம் உடலுக்குள் விளைவிக்க வேண்டும் என்று அன்று சொன்னார்கள்.

இந்த உயிர் என்ற நிலைகளை விட்டு விட்டார்கள்… நெருப்பு தான் எல்லாம் செய்கிறது…! என்று அதைப் பிடித்துக் கொண்டார்கள்.

கல்யாணம் செய்யும் பொழுது எல்லாம் இந்த நெருப்பைப் போட்டு அக்னி சாட்சியாகச் செய்கிறோம் என்பார்கள்.

புதிதாக வீட்டைக் கட்டி அங்கே புகுந்தாலும் இதைப் போன்ற அக்னியைத்தான் அங்கே வளர்க்கின்றார்கள். கோவிலிலும் மற்ற இடங்களிலும் இந்த யாகங்களைத் தான் செய்கின்றார்கள்.

ஆனால் அதனுடைய உட்பொருளே நமது உயிர் ஒரு நெருப்பு அந்த நெருப்பிலே உயர்ந்த உணர்வுகளைப் போட்டு அந்த மணங்களைப் பெருக்கி அதைத் தானும் மற்ற எல்லோரும் பெறும்படியாகத்தான் சாதாரண மக்களுக்கும் புரியும் வண்ணமாகச் சாஸ்திரமாகக் கொடுத்துச் சென்றார்கள்.

1.நெருப்பை மட்டும் தான் இன்று நாம் தெரிந்து வைத்திருக்கின்றோம்
2.ஆனால் உயிரைப் பற்றி நாம் தெரிந்து வைத்திருக்கவில்லை.

நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் மறைந்த உண்மைகளை எல்லாம் உங்களுக்குத் தெளிவாக எடுத்துச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

Divine souls

Divine souls

In this world we lead an illusive life. What is the result of such a life…? Who enjoys the wealth that we have earned during our life time…?
1.Many people think that their wards enjoy them.
2.How long are they going to tell our names…?
3.Those wards also go round in the same cycle like us and how long will it take for them to forget our names…?

We should not lead a life saying that it is our fate or as a result of our births but “lead a life in which we know our real state…”

There are some divine souls born in this world long ago whose names are remembered in this world even today. We should try to lead a life like them.

The Siddhas have told us the several benefits that we can get by taking proper breath. Are there not people who in their states have obtained several super human powers and still remain in that state…?

They have expressed for the benefit of the people of their home land several means by which others can obtain that state.

1.The persons who obtained super human powers in those days used their bodies as a vehicle for their soul
2.to travel throughout this world and to other planets also.

A king Bairava by name was one of those great souls. He used to get into their bodies leaving his body to lie as a corpse and go round his country to find out facts and “help his people…”

In one such occasion he entered into the body of a watch dog to go round the city in the night to get first hand information.

Some persons who had vengeance against the king knew this and destroyed his body. Since then that King’s soul remains in the dog’s body and remains even today in the mental world.

Though his material body has been destroyed the soul did not have any further births and remaining in the mental world comes to our world in many forms “doing good to several persons…”

Even after knowing that…
1.there are many Siddhas eagerly waiting to come and help us in many ways
2. and the very thought of them we do not take their help but indulge in “worldly pleasures only…”

We should have a desire for love. We should not destroy the everlasting treasure, our soul, but make our breath and thoughts a slave of our soul.

With the powers that we have obtained from God and getting the grace of the great persons who lived before us “live a happy life in this world…”

துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வை நுகர்ந்து நுகர்ந்து “அதையே முன்னிலைப்படுத்த வேண்டும்”

துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வை நுகர்ந்து நுகர்ந்து “அதையே முன்னிலைப்படுத்த வேண்டும்”

 

ஒரு குழம்பை வைக்கிறோம் என்றால் பல சரக்குகளை அதனுடன் இணைக்கின்றோம். அதிலே
1.உப்பு அதிகரித்தால் கைப்பின் நிலையே வரும்.
2.இனிப்பின் சத்தைக் கலந்து விட்டால் இனிப்பின் நிலையே வரும்.
3.காரத்தை அதிகரித்து விட்டால் காரத்தின் உணர்வின் செயலாகவே அது உள்ளடங்கும்.

இதை போலத்தான் மனிதனுக்குள் வளர்த்துக் கொண்ட குணங்கள் பல பல இருப்பினும் ஒரு குழம்பிற்குள் கூட்டாக வைப்பது போல… உயர்ந்த குணங்கள் கொண்டு மனிதன் இருப்பினும்… இரக்க உணர்வு கொண்டு பிறருடைய துயரைக் கேட்டறிந்து நன்மைகள் செய்தாலும்… அந்த இரக்கத்தால் ஈர்த்துக் கொண்ட வேதனை உணர்வுகள் உடலுக்குள் சிறுகச் சிறுகக் கலந்து விடுகிறது.

குழம்பிற்குள் நஞ்சைக் கலந்து உணவாக உட்கொண்டால் எப்படி மயக்கப்படும் நிலை வருகிறதோ அது போல நல்ல உணர்வின் சத்துக்கள் நமக்குள் இருப்பினும்
1.வேதனையான உணர்வுகளை நம் ஆன்மாவிலே கலக்கப்படும் பொழுது
2.நம்மை அறியாமலே அடிக்கடி வேதனை என்று சொல்லே வரும்… வேதனை என்ற நினைவே வரும்.
3.அதைக் கொண்டு வாழ்க்கையை பலவீனப்படுத்தச் செய்யும்
4.எதையுமே சரியாகச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுவிடும்.

வேதனையை எடுத்தோம் என்றால் அது உமிழ் நீராக மாற்றப்பட்டு நம் உணவுடன் கலக்கப்பட்டு அந்த வேதனையே உணவுடன் கலந்து இரத்தங்களாக மாறுகின்றது. வேதனை என்பது நஞ்சு.

பல பொருள்களைப் போட்டு அதனுடன் எந்த வாசனையான பொருளை இணைக்கின்றோமோ அந்த வாசனையின் தன்மையாகவே “சுவை” இருக்கும்.

இதைப் போலத் தான் நம் உடலுக்குள் உயர்ந்த குணங்கள் இருப்பினும்
1.வேதனையை எடுக்க எடுக்க நஞ்சு கலந்த உணர்வின் தன்மை உணவுடன் கலக்கப்பட்டு உணர்வின் சுவையை மாற்றி விடுகின்றது.
2.அதிலே கலந்து அது ரசமாக மாற்றப்படும் பொழுது அது இரத்தமாக மாறுகின்றது.

அந்த இரத்தத்தினை உடலில் உள்ள வால்வுகள் இழுத்து உடலுக்குள் பரவச் செய்யும். அல்லது அதை வடிகட்டும் நிலையில் கொண்டு கிட்னி கல்லீரல் இவைகளுக்கு எடுத்து அனுப்பும்.

இரத்தமாக மாறியதை அனுப்பும் பொழுது
1.முதல் வால்விலே இந்த நஞ்சின் தன்மை தாக்கிய பின் வீக்கமடைந்து விடுகின்றது.
2.உருவான இந்த இரத்தத்தை ஈர்க்கும் தன்மையும் அது இழந்து விடுகின்றது… பின் எரிச்சல் வருகின்றது.

அடுத்த பிஸ்டன் இந்த இரத்தத்தை உடலுக்குள் இழுப்பதற்கு முன்னால் இது இழுத்தவுடன் அதனுடைய தொடர் வரிசைக்குக் கிடைக்கவில்லை என்றால் “அங்கே பளீர்ர்… என்று மின்னும்…”

காரணம் அந்த இரத்தத்தை உறிஞ்சினால் இதற்கு வலு இருக்காது விஷம் கலந்த நிலைகள் கொண்டால் அந்த நஞ்சினால் மயக்கம் வரும்.

விஷத்தின் தன்மை அதிகரிக்கும் பொழுது வால்விலே வீக்கம் ஏற்பட்டு இரத்தம் அதிகமாக அதன் வழி புகும் நிலை இழக்கப்படுகின்றது. அப்பொழுது எரிச்சலாகிறது.
1.ஒரு பக்கம் எரிச்சலாகும்
2.மறு பக்கம் பளீர்ர்… என்று மின்னும்.

ஆனாலும் திருப்பி எடுக்கும் நிலைகள் கொண்டு இரத்தம் வரவில்லை என்றால் வாய்வின் தன்மை பளீர்ர்… என்று ஊடுருவிச் சென்று ஆகாரம் இல்லாத நிலைகளாக மற்றதை இயக்கச் செய்யும். அப்பொழுது அங்கே வலி அதிகமாகும்.

மருத்துவரிடம் சென்றால் இது ஹார்ட் அட்டாக் என்று சொல்வார்கள்.
1.விஷத்தின் தன்மை அதிகரித்து விட்டால் நாடியின் துடிப்புகளும் குறையும்.
2.நாடியின் துடிப்பு ஒரு நொடிக்கு இவ்வளவு இருக்க வேண்டும் என்றால் அடிக்கடி வேதனைப்படுவோருக்கு அது குறையாக இருக்கும்.
3.மருத்துவரும் இதை உறுதிப்படுத்தி அதற்கு வேண்டிய உதவிக் கருவிகளை மாற்ற வேண்டும் என்பார்.
4.அதை வைத்து இந்தத் துடிப்பைச் சீர்படுத்தினால் தான் வாழ முடியும்… இல்லையென்றால் இருதயம் நின்று விடும் என்பார்.

விஞ்ஞான அறிவுப்படி அதைச் செய்தோம் என்றால் அதன் வழி வாழலாம் சிறிது காலம்.

ஆனால் மெய் ஞானிகள் காட்டிய முறைப்படி யாம் சொல்லும் இந்தக் கூட்டுத் தியானங்களின் மூலம் ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி அந்த மகரிஷிகள் உணர்வை எடுத்து என்ற இந்த இயக்கத்தின் தொடரை நாம் ஈர்ப்போம் என்றால்
1.அந்த மகரிஷிகளின் உணர்வின் சத்து ஆகாரத்துடன் கலந்து
2.இரத்தத்தில் உள்ள நஞ்சினைக் குறைக்கச் செய்யும்… நாடித் துடிப்பின் வேகத்தைக் கூட்டச் செய்யும்.

ஹார்ட் அட்டாக் வருவதன் காரணமே… மற்றவர்கள் பட்ட வேதனையை… அவர்களுக்குள் துடிப்பு குறைந்த நிலையை நுகர்ந்தது.. அந்த நஞ்சான உணர்வுகள் நம் இரத்தத்திலே கலந்தது… இருதயத்தின் வால்வுகள் அதனால் சீராக இயங்க முடியவில்லை.

இந்த உணர்வின் சத்து உடல் முழுவதும் பரப்பப்படும் பொழுது மற்ற உறுப்புகளும் செயலற்றதாக ஆகிவிடுகின்றது.

மற்றவருடைய வேதனைகளைக் கேட்டு உபகாரம் செய்தாலும் அந்த வேதனையான உணர்வுகளை உயிர் இயக்கி அதை உணர்த்தினாலும்… உணர்த்திய உணர்வின் சத்து உணவுடன் உமிழ் நீராகச் சுரக்கப்பட்டு… இந்த அமிலத்தின் சத்து இரத்தத்துடன் கலக்கப்படும் பொழுது வால்வுகள் சீர் கெடுகின்றது.

இருதயத்திற்குள் சென்ற இதே இரத்தம் கிட்னிக்கு வந்தால் சிறுகச் சிறுக அதையும் சீராக இயக்க விடாது தடுத்து விடுகிறது. இரத்தத்தில் வரும் தீமைகளை அகற்றும் தன்மையை கிட்னி இழந்து விடுகின்றது.

இதைப் போல பல நிலைகள் வருவதைத் தடுக்க வேண்டும் என்பதற்குத் தான் கூட்டுத் தியானங்கள் மூலம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் தகுதியை ஏற்படுத்துகின்றோம்.

மற்றவர்கள் துன்பப்படுவதைப் பார்க்க நேர்ந்தால்… அடுத்த கணம் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அதை அவ்வப்போது உடனுக்குடன் நுகர்ந்து பழக வேண்டும்.

உடனுக்குடன் கவரும் அந்தத் திறன் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காக…
1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவர் உடலில் விளைய வைத்த உணர்வுகளை எனக்குள் பதிவு செய்து இது எவ்வாறு இயக்குகிறது…? என்று
2.உணர்த்திய உணர்வவினை எனக்கு உபதேசித்த முறையிலேயே உங்களுக்கும் அதைக் கொடுக்கின்றேன்.

கேட்டறிந்த உணர்வுகள் பதிவாகி… மீண்டும் நீங்கள் நினைவு கொள்ளும் பொழுது அந்த உணர்வின் ஆற்றல் மகரிஷிகளின் உணர்வுகளைப் பெறச் செய்கின்றது.

அதை நுகர்ந்தால் நோய்களை உருவாக்கும் அத்தகைய சக்திகளை மாற்றி விடுகின்றது அதற்குத்தான் இதை எல்லாம் உங்களுக்குச் சொல்கின்றோம்.

ஈரேழு பதினாலு லோகம் எது…? அதை வென்றவர்கள் யார்…?

ஈரேழு பதினாலு லோகம் எது…? அதை வென்றவர்கள் யார்…?

 

ஆரம்ப நிலைகள் விண்ணிலே உயிரணுவாகத் தோன்றினாலும்… அப்படித் தோன்றிய நிலைகள்
1.பலவாறு அணுவின் தன்மை ஒன்றை ஒன்று விழுங்கி அணுத் தன்மை வளர்ந்து அதன் வழிகளிலே கோளாகி…
2.கோளாகி ஆற்றல் பெற்று நட்சத்திரமாகி நட்சத்திரங்கள் சூரியனாகி அதனின்று விளைந்து ஒரு பிரபஞ்சமாகி
3.பிரபஞ்சத்திற்குள் ஒரு கோளாகி அந்தக் கோளுக்குள் மற்ற அனைத்தும் வடிக்கச் செய்து பூமியான நிலைகள் கொண்டு அதிலே உயிரணுக்கள் தோன்றி
4.மற்ற கல்லும் மண்ணும் மற்ற நிலைகள் ஆவியாக மாறி தாவர இனச் சத்துக்களாக மாறி
5.தாவர இனச் சத்துகளின் ஆவிகளைச் சுவாசித்து உயிரணுக்கள் அதை உட்கொண்டு வடித்து
6.அணுத் திசுக்களாக உயிரினங்களின் தோற்றங்களாகி மனிதனாக வளர்ச்சி பெற்று வந்துள்ளோம்.

ஒரு அணுவின் தன்மை வளர்ச்சியில் சூரியனாக எப்படி ஆனதோ அதே போன்று பிரபஞ்சத்திற்குள் தோன்றிய உயிரணுவின் துடிப்பு மற்ற உணர்வின் சத்தை எடுத்து மனிதனாக வளர்ச்சி பெற்று வரும் பொழுது “எதையுமே அடக்கி ஆளும் சக்தி மனிதனுக்கு உண்டு…”

ஆரம்ப நிலையில் அணுவின் தன்மை பெற்ற நாம் மனிதனாக வளர்ச்சி பெற்று வந்தாலும் சூரியனாக வளர்ச்சி பெற்று வந்தாலும் “சூரியனையே அடக்கியாளும் சக்தி மனிதனுக்கு உண்டு…”

அத்தகைய ஆற்றலின் தன்மை…
1.எல்லாவற்றிலும் அது வடித்து உணர்வின் ரசத்தின் தன்மையை அது வடிகட்டிய நிலைகள் கொண்டு மனிதனாக உருப்பெற்றான்.
2.அவ்வாறு உருப் பெற்றதன் நிலைகள் தன் எண்ணத்தை சூரியனிடத்திலே பாய்ச்சி இவனுடைய உணர்வுகளை அங்கே இயக்கச் செய்து
3.சூரியனையே திசை திருப்பவும் கோள்களைத் திசை திருப்பவும் கூடிய ஆற்றல்கள் பெற்றவர்கள் அன்றைய மெய் ஞானிகள்.

அவ்வாறு பெற்றவர்தான் அகஸ்திய மாமகரிஷி…!

மனித உருவாகும் பொழுது தான் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாக மனித உடல் பெற்றாலும் இந்த வினைக்கு நாயகனாக மனித உடலிலிருந்து வெளிப்பட்டது தான் ஆறாவது அறிவு.

சூரியனிலிருக்கக் கூடிய நிறங்கள் ஆறு அதைப் போன்று மனிதனுக்குள் அறிவு ஆறு.
1.சூரியனுடைய ஆறாவது அறிவு ஆறு நிறங்கள் ஏழாவது ஒளி.
2.மனிதனுக்கு அறிவு ஆறு ஏழாவது அறிந்துணர்ந்து செயல்படும் தன்மை.
3.பிரபஞ்சத்திற்குள் வரக்கூடிய விஷத்தின் ஆற்றலைச் சூரியன் ஒளியாக மாற்றும்… ஒளியாகக் காட்டும்.
4.ஆனால் மனிதன் இருளுக்குள் மறைந்த பொருளை அறிந்துணர்ந்து செயல்படும் ஆற்றல் பெற்றவன்… இருளை ஒளியாக மாற்றும் திறன் பெற்றவன்.

இருளான சரீரத்திற்குள் நின்று உயிர் உணர்வுகளை வளர்க்கச் செய்த இந்தத் தசைகளை (உடலை)
1.மீண்டும் இன்னொரு தசைகளின் (உடல்) தன்மை பெறுவதற்குப் பதில்
2.சூரியன் எப்படிப் பிரகாசிக்கின்றதோ இதைப் போன்று தன் உணர்வை ஒளியாக மாற்றி உயிராத்மாவை ஒளியாக மாற்றி விண் செல்வது…

இது தான் கடைசி நிலை.

சூரியப் பிரபஞ்சத்திற்குள் தோன்றிய எத்தகைய சக்தியின் நிலைகளையும் வென்று “அதை ஒளியாக மாற்றி விண் செல்ல முடியும்…” என்ற நிலையை அன்றைய அகஸ்திய மாமகரிஷி நமக்கெல்லாம் உணர்த்திச் சென்றுள்ளார்.

அவன் தென்கோடியிலே தோன்றியவன் தான். தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று நாம் அவனைத் தான் போற்றிக் கொண்டிருக்கிறோம்.
1.அவன் வழி வந்த மக்கள் தான் நாம் அனைவருமே.
2.அவன் சென்ற எல்லையினை நாமும் அடைய வேண்டும்.

பார்த்தது வேடிக்கை என்றாலும்… நம்மை அறியாமலே அது நோய்க்குக் காரணமாகின்றது

பார்த்தது வேடிக்கை என்றாலும்… நம்மை அறியாமலே அது நோய்க்குக் காரணமாகின்றது

 

நாம் தவறே செய்ய வேண்டியதில்லை. கோப உணர்வு கொண்டு ஒருவன் மற்றவனைத் தாக்குகிறான் என்றால் அதைக் கண்ணுற்றுப் பார்க்க நேர்ந்தால் அவன் உடலிலே விளைந்த தாக்கும் உணர்வுகள் அந்தக் கார உணர்ச்சிகள் வெளிப்படுவதை அவன் உடலிலிருந்து வெளி வந்த அந்த உணர்வலைகளைக் கண் நமது ஆன்மாவாக மாற்றுகின்றது.

1.உற்றுப் பார்த்த இந்த உணர்வின் சத்தைக் கண்கள் ஊழ்வினையாக நமக்குள் பதிவு செய்கின்றது.
2.பதிந்த உணர்வுகளை நாம் ஈர்க்கப்படும் பொழுது உடலுக்கு முன் ஆன்மாவாக மாற்றுகின்றது.
3.ஆன்மாவிலிருந்து சுவாசித்து உயிருக்குள் படும் பொழுது எரிச்சலும் வேதனையும் வருகிறது.

நல்ல குணம் கொண்டு பார்ப்பதனால் இத்தகைய நிலை ஏற்படுகின்றது.

உதாரணமாக ஒரு “சப்” என்று இருக்கும் பொருளுக்குள் காரத்தை இணைத்து விட்டால் “காரத்தின் சுவையே” முன்னாடி வரும்.

இதை போலத் தான் தவறு செய்வோரை உற்றுப் பார்த்து வேகமாக “இப்படிச் செய்கிறானே…” என்று அந்தக் கொடூர உணர்வுகளைச் சுவாசிக்கும் பொழுது இந்த உணர்வை நம் கண் கவர்ந்து உடலுக்குள் பதிவு செய்ததை உடலுக்குள் விளையும் தன்மையாக மாற்றி விடுகின்றது.

நாம் எண்ணிய உணர்வுகள் அது ஆன்மாவாக வருகின்றது… சுவாசித்த பின் உயிரிலே ஒன்றுகின்றது. நல்ல குணங்களுடன் அது கலக்கப்படும் பொழுது அவன் செய்த தவறின் உணர்வாக உடலுக்குள் வேகமாக இயங்குகின்றது.

1.கோபமான அந்த உணர்வலைகள் நம் சாப்பிட்ட உணவுடன் கலந்து இரத்தமாக மாறுகின்றது.
2.இப்படி அந்த வேகமான நிலைகள் இரத்தமாக மாறி வரும் பொழுது இருதய வால்வுகளில் எரிச்சலும் வேதனையும் வருகின்றது.
3.எரிச்சலான உணர்வுகள் உடலுக்குள் வடிகட்டப்படும் பொழுது உடலெல்லாம் எரிச்சலும்
4.நம் சொல்லிலே எரிச்சலும்… எந்த ஒரு பொருளைப் பார்த்தாலும் எரிச்சலும் நமக்குள் உருவாகத் தொடங்குகிறது.

நம்மைப் பார்ப்போர் ஆன்மாவில் இது பட்ட பின் நம்மை அறியாமலே அவர்களும் எரிந்து விழுவார்கள்… நம்மை வெறுப்பார்கள். ஆனால் நாம் தவறு செய்யவில்லை.

சண்டையிடுவதை வேடிக்கை பார்த்தோம். அந்த உணர்வின் தன்மை நம் இரத்தத்துடன் கலக்கப்படும் பொழுது “இரத்தக் கொதிப்பை உருவாக்கும் செல்கள்” அதிகமாக விளைந்து விடுகின்றது. நாம் மகிழ்ந்து உணர்ந்த உணர்வுகள் இனிப்பு… இதிலே கலக்காது பிரிந்து சென்று விடுகின்றது.

இனிமை கொண்ட நண்பர்களிடத்திலே பழகினால் அடிக்கடி அங்கே கோபப்படும் பொழுது “இவன் கோபக்காரன்…” என்று அவர் நம்மிடமிருந்து விலகுவது போல
1.சுவை மிக்க உணர்வை உருவாக்கி அந்தச் சுவையை அறிவிக்கும் உணர்வுகள் இரத்தத்தில் கலந்திருப்பினும்
2.காரத்தின் நிலைகள் எல்லை கடந்து சென்ற பின் இந்தச் சுவையான நிலைகள் பிரிந்து விடுகின்றது.
3.அதனால் ஜீரணிக்கும் சக்தி இழக்கப்பட்டுச் சர்க்கரைச் சத்தாக விளைந்து விடுகின்றது. இவ்வாறு
4.சர்க்கரைச் சத்து வரும் பொழுது இரத்தத்தில் அது அதிகரிக்க நம் உடல் உறுப்புகள் அனைத்தும் சோர்வடையச் செய்கின்றது.

அதே சமயம் இறுகிய உணர்வு கொண்ட இந்தக் காரத்தின் உணர்ச்சிகள் சிறு மூளையில் தாக்கப்படும் பொழுது கண்கள் சிவப்பதும்… இரத்தக் கொதிப்பு ஆவதும் இது இரண்டுமே எதிர்மறையாகும் பொழுது “மயக்கங்கள்” வருகின்றது.

மனிதனுடைய சிந்தனைகள் குறைக்கப்படுகின்றது… மனிதன் கீழே விழுந்து விடுகின்றான்.

சர்க்கரைச் சத்தும் இரத்தக் கொதிப்பும் இரண்டும் வந்தாலும் சர்க்கரைச் சத்திற்கு மருந்து கொடுத்தால் இரத்தக் கொதிப்பிற்கு ஒத்துக் கொள்ளாது. இரத்தக் கொதிப்பிற்கு மருந்து கொடுத்தால் சர்க்கரைச் சத்திற்கு ஒத்துக் கொள்ளாது.

நெகட்டிவ் பாசிட்டிவ் என்ற நிலைகளில் இயங்கும் பொழுது
1.சுவாசப் பையிலே சளிகள் உருவாகத் தொடங்கும்… மூச்சு இறைக்கவும் தொடங்குகிறது.
2.உடலுக்குள் வரும் உமிழ் நீர்களை இலகுவாக்கி அதனின் தன்மை குறைக்கும் நிலைகளில் ஜீரணிக்கும் சக்தியையும் இழக்கச் செய்கின்றது.

கோபத்தை அதிகரிக்கப்படும் பொழுது நம் உடலில் உள்ள பித்த சுரப்பிகள் அதிகமாக அந்தப் பித்தத்தைச் சுரக்கின்றது. எவ்வளவு கடினமான பொருளைச் சாப்பிட்டாலும் பித்த சுரப்பி இயங்கி சாப்பிட்ட ஆகாரத்தை ஜீரணிக்கின்றது.

ஆனால் கார உணர்வுகள் அதிகமாகும் பொழுது பித்த சுரப்பியின் இயக்கம் அதிகரித்து வேகமாகப் பீய்ச்சப்படும் பொழுது பசியும் அதிகரிக்கும். பசியினால் அதிகமாகச் சாப்பிடச் சாப்பிட பித்த சுரபி அதிகமாகச் சுரக்கச் சுரக்க விஷத்தின் தன்மை அதிகரித்து உடலில் உறுப்பின் இயக்கங்கள் குறைய நேர்கின்றது.

சீராக இயக்க வேண்டும் என்ற நிலை வரும் பொழுது சர்க்கரையின் தன்மை அதிகமாக இருப்பதால் அதற்கொத்த செயலைச் செயல்படத் தொடங்குகிறது. இரத்தக் கொதிப்பு அதிகரிக்கும் பொழுது இதனுடைய செயல் அதிகரிக்கிறது. உறுப்புகள் சோர்வடைகிறது.

அதே சமயத்தில் சிந்திக்கும் போது அதிகக் கோபமும் சுவையான பொருள்களை உட்கொள்ள முடியாத நிலையும் வரும்.

1.சர்க்கரைச் சத்து அதிகரிக்கப்படும் பொழுது செவ்வணுக்கள் வளராதபடி
2.நுகர்ந்த உணர்வுகள் மலங்களாகக் கழிக்கப்படும் பொழுது இரத்தத்தை நீராக மாற்றும் நிலை ஆகிவிடுகிறது.
3.இதனால் மற்ற உடலின் எஞ்சிய பாகங்கள் செயலற்றதாகிக் கிருமிகள் உருவாகித் தசைகள் அனைத்தும் அழுகும் நிலை ஏற்படுகின்றது.
4.விஷங்கள் அதிகரிக்கப்படும் பொழுது வேதனை அதிகரிக்கின்றது… உறுப்புகள் பலவீனம் அடைகின்றது.

இதற்கு மத்தியில் காரத்தின் நிலையும் உச்சகட்டம் அடையப்படும் பொழுது காரத்துடன் விஷத்தின் தன்மையும் கலந்து விட்டால் சிறு மூளையின் பாகம் தாக்கப்படும் பொழுது நரம்புகளைச் சுண்ட வைத்து விடும்..

ஒரு மிளகாயை வாயிலே போட்டால் ஆ…! என்று அலறுகின்றோம்… வாயிலே உமிழ் நீர் காணாது போய் விடுகின்றது. இது போன்று நஞ்சின் தன்மை சிறு மூளையில் தாக்கப்படும் பொழுது “நரம்பியல்களை” அது முடக்கி விடுகின்றது.

உதாரணமாக கார்களில் பிரேக் இடுவதற்காக பிரேக் ஆயில் கொண்டு அழுத்தி அதன் மூலமாக இயந்திரத்தை இயக்கி அதை நிறுத்துவார்கள். இது போன்று தான்
1.நம் நரம்புகளுக்குள் உருவாகும் ஆசிட்டின் தன்மையின் இயக்கங்கள்
2.நாம் எண்ணப்படும் பொழுது அதிலிருக்கக்கூடிய காந்தப்புலனின் தன்மைகள் ஊடுருவி
3.கை கால்களை மடக்குவதும் அங்கங்களை இயக்குவதும் செயலாக்குவதும் இதன் வழி தான்.

தீமையான உணர்வுகளால் (கார உணர்ச்சிகளால்) சிறு மூளை தாக்கப்பட்ட பின் இரத்தக் கொதிப்பின் அழுத்தம் அதிகரிக்க அங்கே இயங்கிக் கொண்டிருக்கும் நுண்ணிய அலைகள் செயலற்றதாகி விடுகிறது.
1.அதற்குள் அனுப்பும் ஆசிட் அதனுடைய செயலை இழந்துவிட்டால் கை கால் அங்கங்கள் சுருங்கி விடும். ஆனால் நாம் தவறு செய்யவில்லை.
2.சந்தர்ப்பத்தால் சண்டையிட்டதை வேடிக்கையாக பார்த்து நுகர்ந்தோம் அதனுடைய வளர்ச்சி தான் இந்த நிலைக்கு வந்து விடுகின்றது,

இதைப் போன்ற நிலையிலிருந்து விடுபட வேண்டும் என்றால் ஒவ்வொரு நிமிடமும் மகரிஷிகளின் அருள் சக்திகளை நம் உடலுக்குள் இணைத்துக் கொண்டே வர வேண்டும்.

காரணம் அந்த மகரிஷிகள் எத்தகைய நஞ்சினையும் தன் உணர்வின் வலுவால் சக்தி வாய்ந்த நிலைகள் கொண்டு அதை அடக்கி ஒளியாக மாற்றிச் சென்றவர்கள்.

அப்படி விண் சென்ற மகரிஷிகள் எத்தனையோ பேர் உண்டு…!
1.அவர்கள் பெற்ற சக்திகளை நாம் பெற்றோம் என்றால்
2.நமக்குள் வரும் இத்தகைய தீமைகளை மாற்றி அமைக்க முடியும்… நோய் வராது தடுத்துக் கொள்ள முடியும்.