நாம் தேட வேண்டிய அகச் செல்வமான அருள் செல்வம்

நாம் தேட வேண்டிய அகச் செல்வமான அருள் செல்வம்

 

நாம் நமது வாழ்க்கையில் இந்த உடல் பற்றுடன் தான் வாழ்கின்றோம். எத்தனையோ ஆண்டு வாழ்கிறோம் என்று இந்த உடலுக்காகச் சேமித்து வைக்கும் சொத்தையும் நமது குடும்பத்தைப் பாதுகாக்கும் உணர்வே தான் வருகின்றது.
1.பாதுகாக்கும் உணர்வுகள் சிறிது தவறினால் வேதனை என்ற உணர்வுகளே வருகின்றது.
2.வேதனை என்ற உணர்வு வளர்ந்தால் தேடிய செல்வத்தைப் பாதுகாக்கும் சக்தியும் இழக்கப்படுகிறது.
3.பாதுக்க்கும் தன்மை இழந்து விட்டால் நம் உடலில் நோய் உருவாகின்றது.
4.நோய் உருவானால் இதுவே நாம் தேடிய செல்வமாக மாறிவிடுகின்றது.
5.நோயின் உணர்வுகள் விளைந்தால் அந்தச் செல்வத்தின் வழியே உயிர் அடுத்த உடலுக்குள் அழைத்துச் சென்று அந்த உடலை உருவாக்கி விடுகின்றது.

ஆகவே தேடிய செல்வங்கள் நமக்குச் சொந்தமில்லை. இந்த உடலும் நமக்குச் சொந்தமில்லை. வேதனை வெறுப்பு என்ற உணர்வைச் சொந்தமாக்கினால் அதன் உணர்வு கொண்டு அடுத்த உடலை உயிர் உருவாக்கி விடும். கோபம் குரோதம் என்ற நிலையானால் அதன் வழி அடுத்த உடலை உருவாக்கி விடுகிறது.

ஒரு நிலம் சரி இல்லை என்றால் அதைப் பண்படுத்துகின்றோம். ஒரு வீடு கட்டினால் அது சரியில்லை என்றால் அதைக் காட்டிலும் செல்வத்திற்குத் தக்க வீடுகளைக் கட்டுகின்றோம்.

இதைப் போல தான் நாம் நுகர்ந்த உணர்வுக்கொப்ப அடுத்த உடலை உருவாக்கி விடுகின்றது உயிர். ஆனால் அதைப் போன்ற உடலின் தன்மை வரும் பொழுது அதிலே நரக வேதனையைத் தான் படுகின்றது.

1.அத்தகைய வேதனைகளை உருவாக்குவதற்கு மாறாக
2.உயிர் என்ற உணர்வின் தன்மை கொண்டு என்றைக்கும் நிலையான சரீரமாக வாழும் நிலையை
3.பேரருள் பெற்ற உணர்வினைச் செல்வமாக்கி… பேரருள் என்ற உணர்வினை ஒளியாக்கிப் பிறவியில்லா நிலை அடைவதே கடைசி நிலை.

அதைத் தான் இராமேஸ்வரத்தில் ராமன் நேரமாகிவிட்டது என்று உணர்வின் தன்மை கூட்டி பூஜிக்கத் தொடங்கினான் என்று காட்டியுள்ளார்கள்.

இதைப் போலத் தான்
1.அனைவரும் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்றும் பகைமையற்ற வாழ்க்கை வாழ வேண்டும் என்றும் உணர்வினை ஒன்று சேர்த்துக் கூட்டி
2.அந்த உணர்வுகள் எல்லாம் ஒளியாகி ஒன்றாகி ஒளியாக்கப்படும் பொழுது இதே உணர்வுகளைப் பெருக்கி நீங்கள் எண்ணும் பொழுது
3.அந்த உணர்வுகள் உங்களுக்குள் ஒளியாக மாறி அருள் ஒளி என்ற நிலைகள் பெறும் தன்மை வரும்.

ஆகவே அதைப் பெறுவதற்குத் தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் இதை உணர்த்துகின்றேன்.

இந்த உடலின் நிலைகள் நாளடைவில் கரையும் தன்மை தான் வளரும். அதாவது வளரும் தன்மையில் உடல் கரையும்… ஆனால் உணர்வுகள் வளரும்.

1.எதன் உணர்வை வளர்க்கின்றோமோ… ஆக அருள் ஒளியை வளர்த்தால் அது என்றும் வளர்ந்து கொண்டே இருக்கும்
2.அந்த அருள் ஒளியை நாம் பெறுவதற்கே நாம் முயற்சிப்போம்.

செல்வமும் இந்த உடலும் நம்முடன் வருவதில்லை. அழியாச் செல்வமான அருள் உணர்வை நமக்குள் வளர்த்து அது வளரும் பருவத்தினை ஏற்படுத்தி வளர்த்திடும் நிலையும்… இருளை அகற்றி மெய்ப் பொருளைக் காணும் மெய் வழியில் நாம் செல்வோம் என்று பிரார்த்திக்கின்றேன்.

நீங்கள் வெளிவிடும் மூச்சு இந்தக் காற்று மண்டலத்தைப் பரிசுத்தப்படுத்தும் சக்தியாகப் படர வேண்டும்

நீங்கள் வெளிவிடும் மூச்சு இந்தக் காற்று மண்டலத்தைப் பரிசுத்தப்படுத்தும் சக்தியாகப் படர வேண்டும்

 

துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்கள் உடலில் பதிவாக்கி அதை நினைவு கொண்டு வளர்த்தால் உங்கள் வாழ்க்கையில் வரும் அசுத்த உணர்வுகளை நீக்கி அருள் உணர்வைப் பெருக்கச் செய்யும்.

உங்கள் வாழ்க்கையில் பொருளறிந்து செயல்படும் திறனும் இருளை அகற்றிடும் வல்லமையும் பெறுவீர்கள்.

தங்கத்தில் திரவகத்தை ஊற்றினால் செம்பு பித்தளை ஆவியாக மாறுவது போல அவ்வப்போது அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்தால் நுகர்ந்த உணர்வுக்குள் கலந்த விஷத்தை அகற்றி நல் உணர்வினைப் பெருக்கி இப்பிறவியில் பிறவி இல்லா நிலை என்னும் அருளுணர்வைப் பெருக்கி நாம் வாழ முடியும்.

அதனைப் பெறச் செய்வதற்குத் தான் இந்தத் துருவ நட்சத்திரத்தில் இருந்து வரும் பேரருளை பதிவாக்கி கொண்டே வருகின்றேன்.

திட்டியவரை மீண்டும் எண்ணப்படும் பொழுது தீமையின் உணர்வு எப்படி வருகின்றதோ… வேதனைப்படுபவரைப் பார்த்து அந்த உணர்வு பதிவானால் அவரை எண்ணும் பொழுது வேதனை உணர்ச்சிகள் எப்படித் தூண்டுகின்றதோ… இதைப் போல
1.வேதனைகளை அகற்றிய இருளை அகற்றிய அருளைப் பெருக்கும் தன்மையை நுகர்ந்து உங்களுக்குள் பதிவாக்கச் செய்கின்றேன்
2.எமது குருநாதர் எமக்குள் பதிவாக்கியது போன்று…!
3.அதன் வழியில் இருளை அகற்றிடும் அருள் ஞானிகளாக நீங்கள் ஆக வேண்டும்.
4.உங்கள் பேச்சும் மூச்சும் உலக மக்களை இருளில் இருந்து மீட்டிடும் திறன் பெற வேண்டும்.
5.உங்கள் மூச்சு இந்தக் காற்று மண்டலத்தையே நஞ்சினை அகற்றிடும் தன்மை பெறுதல் வேண்டும்
6.உங்கள் மூச்சால் உணவாக உட்கொண்ட உணவு தாவர இனங்களில் அது பட்டபின் நல்ல அணுக்களாக உருவாகி
7.அதனுடைய மலங்கள் தாவர இனங்களைச் செழித்து வளரச் செய்யும் தன்மை வர வேண்டும்.
8.உங்கள் மூச்சால் கேட்போர் உணர்வில் இருளகற்றி நல் அணுக்களாக உருவாக்கி நற்பயனை அடையும் மக்களாக நீங்கள் மாறுதல் வேண்டும்.

எமது குருநாதர் காட்டிய அருள் வழியில் இதை உபதேசிக்கின்றேன்.

என் ஒருவனால் இது முடியாது. ஒரு உயர்ந்த வித்தினை அது பலவாக உருவாக்கி பல வளர்ச்சிகளைப் பெறச் செய்து அனைவரது உடல்களிலும் இத்தகைய நிலைகளை உருவாக்கினால் உலக இருளை அகற்றலாம்… அருள் ஒளியைப் பெருக்கலாம்.

இனம் இனத்தைத் தான் வளர்க்கும் என்ற நிலைகள் கொண்டு அருள் ஒளியைத் தனக்குள் வளர்த்து விட்டால் அது தன் இனத்தை வளர்க்கச் செய்யும்… அருள் உணர்வைப் பெருக்கச் செய்யும்.

1.ஆகவே பேரருளை நமக்குள் பதிவாக்குவோம்
2.இருளை அகற்றுவோம் பேரொளியை வளர்ப்போம் என்று குருநாதர் காட்டிய அருள் வழியில் அதைப் பெற நாம் தியானிப்போம்… தவமிருப்போம்.

அகஸ்தியன் கண்ட அகண்ட பேரண்டம்

அகஸ்தியன் கண்ட அகண்ட பேரண்டம்

 

அகண்ட அண்டமும் பிரபஞ்சமும் அண்டத்துடன் அகண்டு அதன் நிலைகள் வந்த பின் இதிலே தோன்றிய உயிரணுக்கள் ஒவ்வொன்றும் ஆற்றல்களை நுகர்ந்து நுகர்ந்து… இந்தப் பிரபஞ்சத்தின் நிலையையும் அகண்ட அண்டத்தினையும் அறிந்திடும் உணர்வு பெற்ற மனிதன் “ஆறாவது அறிவு பெற்றவன்” என்பதனை குரு தெளிவாகக் காட்டுகின்றார்.

அதன் வழி பெற்றாலும்
1.அகஸ்தியன் தாய் கருவிலே இருக்கப்படும் பொழுது நஞ்சினை வென்றிடும் உணர்வுகளைப் பெறுகின்றான்.
2.அகண்ட அண்டத்தையும் அறிகின்றான்
3.பிரபஞ்சம் உருவான உணர்வின் தன்மையை அறிகின்றான்
4.பேரண்டம் உருவான உணர்வின் தன்மையை அறிகின்றான் அகஸ்தியன்.

அவன் அறிந்த உணர்வுகள் தான் இன்று உலகம் எங்கிலும் வானவியல் தன்மைகளும் உருப் பெற்றது. இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தை மட்டும் தான் இன்று காண முடிந்தது.

அகண்ட அண்டத்தையும் அதற்கு முந்திய நிலைகள் இருண்ட உலகையும் அறிந்துணர்ந்தான் அகஸ்தியன். அணுவின் இயக்கப் பொருளை உணர்ந்தவன் அகஸ்தியன்.

அவனால் கண்டுணர்ந்த உணர்வின் தன்மைகள் அவன் உடலில் விளைந்தது.
1.2000 சூரியக் குடும்பமாக இருந்தாலும் அதைக் காட்டிலும் எத்தனையோ 2000 குடும்பங்கள்
2.அகண்ட பேரண்டமாக இருக்கும் அதன் உணர்வுகளில் ஒன்றுடன் ஒன்று துணை கொண்டு தான்
3.ஒவ்வொன்றும் வாழ்கிறது என்ற நிலையை உணர்ந்தான்.

இவை அனைத்தும் கலந்த உணர்வு கொண்டு தான் மனித உடலுக்குள் அனைத்தையும் அறியும் தன்மை வருகின்றது. சகல பிரபஞ்சங்களையும் சகல அண்டங்களின் இயக்கங்களிலிருந்தும்… அத்தகைய அகண்ட அண்டத்துடன் தொடர்பு கொண்டு தான் நமது பிரபஞ்சமும் இயங்குகின்றது.
1.இதன் உண்மையின் உணர்வின் தன்மையை அறிந்தவன் அகஸ்தியன்.
2.இந்த உண்மைகளை நமது குருநாதர் என்னிடம் தெளிவாக எடுத்துக் காட்டிநார்.

இந்தப் பூமியில் மனிதனான பின் நஞ்சினை வென்றிடும் முதல் மனிதனாக அகஸ்தியன் பிறக்கின்றான். தாய் கருவிலே சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள் நஞ்சினை மாற்றியமைக்கும் நிலையைப் பெறுகின்றான்.

அவ்வாறு பெற்றவன் தான் பிறந்தபின் அவன் உடலுக்குள் இயக்கும் உணர்வின் தன்மையை அறிகின்றான். அறிந்து கொண்ட பின் உணர்வின் தன்மையை பிரபஞ்சத்தையும் பிரபஞ்சம் அகண்ட அண்டத்துடன் இயக்குவதையும் நமது பிரபஞ்சத்தில் கவரும் உணர்வுகளை நமது பூமி கவர்ந்து துருவத்தின் வழி கவர்வதையும் அறிந்துணருகின்றான்.

அவன் உணர்ந்த உணர்வுகள்
1.அவனுக்குள் உலகை அறியும் தன்மையும் உடலுக்குள் இயக்கும் உணர்வையும் அறிகின்றான்.
2.அகஸ்தியன் துருவன் ஆனான்… துருவ மகரிஷியானான்.

திருமணமான பின் தன் மனைவிக்குச் சொல்லி மனைவியும் ஏற்றுக் கொண்டு… கணவன் பெற்ற உணர்வுகள் பெற வேண்டும் என்று ஏங்கி… தான் ஓதிய உணர்வுகள் மனைவி ஏற்றுக் கொண்டு இரு மணமும் ஒன்றானது.

அவர்கள் இருவரும் ஒன்றான பின் தான் அண்டத்தை உணர்ந்த உணர்வுகள் அணுக்களாக விளைந்து… அண்டத்தின் ஆற்றலையும் அருள் ஒளியாக அது மாறிய நிலைகளை… கணவன் மனைவி ஆண் பெண் என்ற நிலையில் உருவாக்கினார்கள்.

அவ்வாறு உருவாக்கித் துருவத்தை எல்லையாக வைத்து அதை நுகர்ந்தறிந்து துருவ நட்சத்திரமாக வாழ்ந்து வருகின்றார்கள்
1.அகஸ்தியன் கண்ட பேரண்டத்தையும் அந்த ஆதியின் நிலையையும் நீங்கள் அறிய முடியும்
2.அதற்குத் தான் இதைப் பதிவு செய்கின்றேன்.

எறும்புக் குழியில் அமர வைத்து எனக்கு குரு கொடுத்த அனுபவம்

எறும்புக் குழியில் அமர வைத்து எனக்கு குரு கொடுத்த அனுபவம்

 

குருநாதர் காட்டிய அருள் வழியில் உலக அனுபவங்களைப் பெறுவதற்காக பல இன்னல்களை என்னை அனுபவிக்கச் செய்தார்.
1.நுகர்ந்த உணர்வுகள் எனக்குள் எப்படிச் செயலாக்குகின்றது…?
2.இதிலிருந்து மாற்றியமைக்கும் தன்மை எப்படிக் கொண்டு வர வேண்டும்…? என்று உணர்த்தினார்.

எறும்புக் குழியில் அமர்ந்து தவம் இருக்கும்படி செய்கின்றார். அமைதியாக நான் இருக்கும் பொழுது ஒன்றும் நடக்கவில்லை ஒரு எறும்பு என் காதிற்குள் சென்றது. அது உள் செல்லாதபடி விரலை வைத்துத் தள்ளினேன். அது துடித்து விட்டது.. மடிந்து விட்டது.

அந்த உணர்வின் அலைகளை மற்ற எறும்புகள் நுகர்ந்து துரித கதியில் இயங்கத் தொடங்குகிறது. புற்றிலிருந்து வரக்கூடிய எறும்புகள் அனைத்தும் இந்த உணர்வின் ஒலியை எப்படி அறிந்ததோ மணத்தின் தன்மை எப்படி அறிந்ததோ தெரியவில்லை.

என்றாலும் அதன் உணர்வின் தன்மையை வேகமாக அறிந்து கொண்டு என் உடலில் பல நிலைகள் கொண்டு கடிக்கின்றது. கடி தாங்காது அதையெல்லாம் நான் தேய்க்கத் தொடங்கினேன்.

1.நீ தேய்த்து நசுக்கிய எறும்புகள் அனைத்தும் உன்னுடைய ஈர்ப்புக்குள் வந்து விடுகிறது.
2.உனது உணர்வைக் கவர்ந்து கருவாக மாறுகின்றது.
3.ஆனால் எறும்பின் உடலில் உள்ள விஷமும் அது நசுக்கப்படும்போது அதனின் வேதனையையும் நுகர்ந்து நீ மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டாய்.
4.அந்த உணர்வுகள் உன் உடலுக்குள் செல்லும்போது உன் இரத்த நாளங்களில் விஷ அணுக்களை உருவாக்கும் உணர்ச்சிகளைத் தூண்டும் நிலை வருகின்றது.

நீ எத்தனை எறும்பை நசுக்கினாயோ உன் உடலில் 48 நாட்களுக்குள் இது ஒரு கூட்டமைப்பான உணர்வுகள் விளையப்பட்டு
1.உன் உடலில் கை கால் குடைச்சல் என்றும்
2.அந்த எறும்புகள் சாகும்போது எந்தத் துடிப்பு அவைகளுக்கு இருந்ததோ
3,பளீர் பளீர் என்று ஊசி குத்துவது போல் அதை நீ உணரலாம் என்று உணர்த்தினார்.
4.அதனுடைய இயக்கங்கள் எப்படி இருக்கிறது என்பதையும் காட்டுகின்றார்.

மனிதனான பின் ஒன்றைக் கொன்றோம் என்றாலும் அல்லது மனிதனாகப் பிறந்தாலும் கொல்லும் பொழுது பட்ட வேதனையின் உணர்வுகள் நம் இரத்த நாளங்களில் தான் கலக்கின்றது.

கொல்லவில்லை என்றாலும் விஷம் தாக்கப்பட்டு அதன் உணர்வின் நினைவானால் உடலுக்குள் செல்கின்றது. இதிலிருந்து மீளும் மார்க்கம் என்ன…? என்று இந்த வினாவை எழுப்புகின்றார்.

ஆக மொத்தம் எறும்பு தான் வாழ அது செயல்படுகிறது. அதனைக் காக்க அதன் உணர்வால் நம்மைத் தீண்டுகின்றது. நம்மைத் தீண்டும் போது அதன் உணர்வு நமக்குள் பட்டால் நாம் அதுவாக மாறிவிடுகின்றோம். இது இயற்கையின் நியதிகள்.

ஆறாவது அறிவு கொண்ட மனிதன் நாம் அதைக் கொன்றால் உடலுக்குள் வந்தாலும் அதனின் வேதனையை நாம் துடைக்க வேண்டும் அல்லவா அதற்கு நீ என்ன செய்யப் போகிறாய்…? என்று கேட்கின்றார் குருநாதர்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நீ நுகர்ந்தால் அது உனக்குள் பதிவாகி இருந்தால் அந்தச் சக்தியை நீ பெற முடியும்.

1.துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி என் உடலில் படர வேண்டும்.
2.கொன்ற உயிரான்மாக்கள் என் உடலுக்குள் வந்தாலும் “அருள் உணர்வு பெற வேண்டும் அருள் ஒளி என்ற உணர்வைப் பெறுதல் வேண்டும்…”
3.அருள் ஞானம் பெறும் உயர்ந்த உணர்வாக எனக்குள் வளர வேண்டும் என்று உடனுக்குடன் அதை மாற்றப்படும் பொழுது
4.அதைக் கொன்றாலும் நமக்குள் வந்து “அருள் ஞான உணர்வை வளர்த்திடும்” கருத்தன்மை அதிலே இணைந்து வளரும் தன்மை வருகின்றது.

இவ்வாறு இந்த உணர்வின் தன்மை இணைத்து விட்டால் உடனடியாக நமக்குள் அந்த அணுக்கள் ஈரத்தத்தில் வளரப்படும் பொழுது தீமையை மாற்றி நன்மையின் உணர்வை உருவாக்கும் தன்மை பெறுகின்றது.

இது அனைத்தும் நம் இரத்த நாளங்களில் வந்த பின் தான் உடலை உருவாக்கும் கரு விந்து என்ற உணர்வுகளுக்கு அழைத்துச் செல்கின்றது. அதனின் வலுக் கொண்டு தான் மனிதனை உருவாக்கும் கருத்தன்மை அடைகின்றது.

1.அப்படிக் கருத்தன்மை அடைவதற்கு முன் இந்த உணர்வினை மாற்றி விட்டால்
2.நாம் ஏங்கிய அருள் உணர்வுகள் கரு அறைகளுக்கு செல்லப்படும் பொழுது
3.அதை மாற்றி அமைத்து விடுகின்றது என்பதனை குரு தெளிவாகக் காட்டுகின்றார்.

துருவ நட்சத்திரத்தின் வலிமையை நமக்குள் கூட்டிக் கொண்டே வர வேண்டும்

துருவ நட்சத்திரத்தின் வலிமையை நமக்குள் கூட்டிக் கொண்டே வர வேண்டும்

 

ஆசையின் வாலிப பருவத்தின் உணர்வில் ஆணைக் கண்ட பின் அந்த உணர்வின் தோற்றமானால் அந்த உணர்வுக்கு நாம் அடிமையாகி விட்டால் அதன் உணவின் வளர்ச்சியாகி நம்மை வளர்த்த தாய் தந்தைக்கு நாம் இழுக்கு தேடும் நிலையே வருகின்றது.

தாய் வேதனைப்படுகிறது என்பதனை உணர்வதில்லை. நம் இச்சைகள் இப்படி வளரப்படும் போது இப்பொழுது உலக மாற்றங்கள் ஏற்படும் போது இதனுடைய விளைவுகள் எத்தனையோ ஆகிறது.

1.தாய் தந்தையை மறுத்து வெளியே சென்று தனித்து வாழும் உணர்வுகள் அனைத்தும்
2.துயர்படும் நிலைகள் தான் வாழ நேருகின்றது.
3.அது தவிர தாயையும் தந்தையையும் துயரத்தில் ஆழ்த்துகின்றோம்.

தேடிய செல்வங்கள் இருப்பினும் அதைக் கொண்டு தன்னைக் காத்திடும் நிலை இல்லாதபடி வேதனை என்ற உணர்வுகளை உருவாக்கித் தன் தந்தைக்குள் விஷத்தன்மை ஊட்டப்பட்டு
1.பாம்பாய் இருந்தேன்… என்னை அடித்து உன்னிடம் வளர்த்து மனிதனாக்கினாய்
2.நீ பாம்பாகப் போ என்று வேதனை உணர்வைத் தன் தாய் தந்தைக்கு ஊட்டி
3.அந்தப் பாம்பினத்தில் சேர்க்கும் தன்மை தான் இன்றைய குழந்தைகளுக்கு உள்ளது.

இதைப் போன்ற நிலைகளில் இருந்து எல்லாம் விடுபடுதல் வேண்டும்.

மனிதனான பின் உணர்வின் தன்மை எல்லாவற்றையும் கடந்து உணர்வின் ஒளியானது நட்சத்திரம். தீமையை நீக்கும் ஆறாம் அறிவின் தன்மை கொண்டு அவன் தெளிந்த உணர்வு கொண்டு துருவ நட்சத்திரம் ஆனான்.

அதிலிருந்து வரக்கூடிய உணர்வை
1.ஆறாவது அறிவின் வலிமையின் துணை கொண்டு காலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்வோமென்றால்
2.நுகர்ந்த உணர்வுகள் வலிமைமிக்கதாக மாறி அந்த உணர்வுகள் தெய்வ ஆணையாகி
4.தீமைகளை வெளியேற்றும் உணர்வின் வலிமையாகி நமக்குள் தீமை புகாது உணர்வின் வலிமை பெறச் செய்யும்.

இவ்வாறு வலிமை பெற்ற உணர்வுகள் எதன் வலிமையைப் பெற்றோமோ நாம் இந்த உடலை விட்டுக் கடந்த பின் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நம்மை இணைத்து… ஆறாவது அறிவை ஏழாவது நிலையான இனி பிறவி இல்லா நிலை நிலையும்… உடல் மாற்றம் இல்லாது இந்த உடலிலேயே ஒளியின் உணர்வாக நாம் மாறிடும் நிலை வருகின்றது.

எப்பொழுது துயரம் என்ற நிலைகளைச் சந்தர்ப்பத்தால் நுகர்கின்றோமோ அதை உடனே மாற்றிப் பழகுதல் வேண்டும்.
1.ஆறாவது அறிவின் துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின் வலிமையை
2.ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நமக்குள் கூட்டிக் கொண்டே வர வேண்டும்.

கலகப்பிரியன் நாரதன்

கலகப்பிரியன் நாரதன்

 

ரெண்டு பேர் சண்டை போடுகின்றார்கள். அதில் ஒருவர் நல்ல மனுஷன்…! இவன் இப்படிப் பேசுகின்றானே…! என்று நினைக்கின்றோம்.

திட்டப் போகும்போது நம்முடைய மனது கேட்கிறதோ…? ஏம்பா இந்த மாதிரி எல்லாம் பேசிக் கொண்டிருக்கின்றாய் என்கிறோம்.

உனக்கென்ன ஐயா…? என்று கேட்டால் இல்லாத வம்பெல்லாம் வரும். திருப்பி அதைத் திருத்த முடிகின்றதா என்றால் முடியவில்லை.

உங்களால் சொல்ல முடியுமா…?

1.அதே உணர்வு நமக்கு வந்தால் விட்டுவிடுவோமா. நான் சொல்கின்றேன் கேட்க மாட்டேன் என்கிறாய்.
2.இரு நான் பார்க்கிறேன் என்று வம்பு தான் பேசுவோம்.

தெரியுது… ஆனால் சொன்னாலும் வம்பு தான். அப்பொழுது அந்தக் கலகம் வருகிறது.

ஆனால்
1.அப்போது துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்தோம் என்றால் உயிருக்கு வருகின்றது
2.அந்த உணர்வுகள் ரத்தத்தில் கலக்கின்றது.

அந்தத் துருவ நட்சத்திரம் இதையெல்லாம் கரைத்தது. உள்ளுக்கே சென்று பிடிவாதமாக இருப்பதை உடனே சிந்திக்கும்படி செய்கிறது.

வாயிலே சொன்னால் அந்த சமயத்தில் கேட்காது. நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் ரத்தங்களிலே கலக்க வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று எண்ணிச் செலுத்துதல் வேண்டும்.

1.அப்பொழுது முன்னாடி பாதுகாப்பு வருகின்றது.
2.அதற்குத்தான் இந்தத் தியானப் பயிற்சியைக் கொடுக்கின்றோம்.
3.அதைச் சேர்க்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து இரத்தத்தில் கலக்க வேண்டும் என்று சேர்த்து விட்டால் நாம் எடுத்த உணர்வுகள் உமிழ் நீராகி சிறுகுடல் பெருங்குடலுக்குச் செல்லுகின்றது. இரத்தமாக மாறுகின்றது.

உடல் முழுவதற்கும் ஒரு நன்மை செய்யும் பக்குவமாக வருகின்றது.

வேதனைப்படுபவரைப் பார்க்கின்றீர்கள். அந்த உமிழ் நீர் வருகின்றது இந்த விஷத்தின் தன்மை எல்லாப் பக்கம் சென்று வேதனைப்படுத்துகின்றது.

ரிஷியின் மகன் நாரதன் நாராயணனின் அபிமான புத்திரன் நாரதன் அவன் கலகப் பிரியன். இந்த பிடிவாத குணங்களை விடுத்து விட்டு இருவரும் சமாதானமாகச் செல்லுங்கள் என்று விளக்கத்தைச் சொல்ல முடியும்.

நம் உடலிலும் அதைச் சமாதானப்படுத்த வேண்டும்

இந்த மனிதன் சும்மா இருந்தாலும் இவன் இப்படிப் பேசுகின்றான் பார்…!
1.அதை எடுத்து நமக்குள் வளர்த்துக் கொள்கின்றோம்.
2.ஆனால் அவர்கள் செய்த தவறை நாமும் செய்கின்றோம்..
நாம் தவறு செய்யவில்லை ஆனால் இந்த உணர்வு வருகின்றது.

அது தான் நாரதன் கலகப் பிரியன் கலகமோ நன்மையில் முடியும். நம் உடலில் எத்தனை விதமான கலக்கங்கள் இருக்கின்றதோ “அதை எல்லாம் மாற்றி விடுகின்றது…”