“விஷத்தையே உணவாக எடுத்து” ஒளியின் கதிராக அதை மாற்றியவன் தான் அகஸ்தியன்

“விஷத்தையே உணவாக எடுத்து” ஒளியின் கதிராக அதை மாற்றியவன் தான் அகஸ்தியன்

 

பல கோடிச் சரீரங்களில் வளர்ச்சி பெற்று… மற்றொன்றுக்கு இரையாகி வேதனைப்பட்டு… நரகலோகத்தை அனுபவித்துத் தான் நாம் மனிதனாக வளர்ந்து வந்திருக்கின்றோம்.
1.சொர்க்கபூமியாக மனித உடலை வளர்த்து… சொர்க்கலோகமாக உருவாக்கி உள்ளது உயிர்
2.சொர்க்கவாசலாக அமைந்திருக்கும் உயிரின் துணை கொண்டு தான் நாம் “என்றும் சொர்க்கலோகமாக வாழ முடியும்…!”

துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலங்களும் சொர்க்கலோகத்தை அடைந்தது. ஆகவே இந்தச் சொர்க்க பூமியை நாம் சொர்க்கலோகமாக மாற்ற வேண்டும்.

நம் உடலுக்குள் இருக்கும் அணுக்களை மாற்றி அமைத்தலே… (அடுத்து) “பிறவி இல்லாத நிலை அடைதல்” என்பது. நமது சாஸ்திரங்களும் வேதங்களும் இதைத் தான் தெளிவாகக் கூறுகின்றது.
1.இப்பொழுது யாம் (ஞானகுரு) சொன்னால் உங்களுக்கு இது விளையாட்டாகத் தெரியலாம்.
2.ஆனால் எமது உபதேசங்களைக் கூர்ந்து கவனித்தால் உங்களுக்குள் ஆழமாகப் பதிவாகிவிடும்.
3.அது உங்களை ஞானிகளாக உருவாக்கச் செய்யும் ஆற்றல் கொண்டது.

தாய் கருவிலே இருக்கப்படும் பொழுது “நஞ்சை முறித்திடும் உணர்வுகள்” அகஸ்தியன் உடலிலே விளைந்தது.
1.அவன் பார்வையிலே படும் ஒவ்வொன்றும்… அது எத்தகைய நஞ்சாக இருந்தாலும் ஒடுங்கி
2.நஞ்சை முறித்திடும் அணுக்களாக அவனுக்குள் விளைகின்றது.

சூரியனை அவன் உற்றுப் பார்த்தாலும்… அதில் நஞ்சின் கடுமை இருப்பினும் எதிர்மறையான நிலைகள் அது உமிழ்த்தும் அல்ட்ரா வயலட் என்று விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட
1.அந்தக் கடும் நஞ்சினை இவன் நுகர்ந்தாலும் அந்த விஷத்தின் தன்மை இவன் உடல் உறுப்புக்களைப் பாதிப்பதில்லை.
2.ஆனால் “உணர்வின் ஒளிச் சுடர்கள்” கதிரியக்கப் பொறியாக நட்சத்திரங்கள் உமிழ்த்துவது போன்று இவனில் விளைகின்றது.

இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கங்களை கண் கொண்டு அவன் உற்றுப் பார்க்கப்படும் பொழுது… இவன் உடலுக்குள் இருக்கும் உணர்வுகள்
1.அந்த விஷத்தை ஒடுக்கி… விஷத்தை ஏற்று… தனக்குள் அதையே உணவாக எடுத்துக் கொள்ளும் நிலையும்
2.அதன் அறிவாக இந்த உணர்வின் தன்மை அவனுக்குள் ஒளியாக மாற்றிடும் திறனும் பெறுகின்றான் அகஸ்தியன்.
3.அவனுக்குள் ஒளியான அணுக்களாக விளைந்து கொண்டே வருகிறது.

பிரபஞ்சத்தின் சக்தி துருவத்தின் வழியில் பூமிக்குள் வந்து தாவரங்களாக எப்படி உருவாகின்றது…? என்று… அந்தத் துருவத்தைக் கூர்மையாக உற்று நோக்கி அதனின் உண்மையின் உணர்வை அறிந்து கொண்டவன் அகஸ்தியன்.

இப்படி அறிந்து கொண்ட பின்… அதன் வழி வரும் நஞ்சினை முறித்திடும் உணர்வும்… தனக்குள் ஒளிக்கதிர்களாக மாற்றிடும் தன்மையும் அவனுக்குள் வருகின்றது.

அவனின்று விளைந்த உணர்வுகள் வெளிப்பட்டதைச் சூரியனுடைய காந்தப் புலனறிவு கவர்ந்து அலைகளாகப் பரப்பி வைத்துள்ளது.
1.அதனை யாம் நுகர்ந்து உங்களுக்கு இப்போது வெளிப்படுத்த முடிகின்றது.
2.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குக் காட்டிய உணர்வுகள் (அவர் கற்றுணர்ந்த உணர்வுகள்) அவர் அதை வெளியிடும் பொழுது
3.அவரின் துணை கொண்டு அவர் ஊட்டிய உணர்வு கொண்டு அதை நுகர்ந்து… அதனின் உணர்வின் செயலாக்கங்களை அறிய முடிகின்றது.
4.அதுவே எனக்குள் அணுக்களாக விளைகின்றது.

நீங்கள் அதை இப்போது நுகரப்படும் பொழுது… நுகர்ந்த உணர்வுகளை உங்கள் உயிர் அணுவாக மாற்றும். அந்த உணர்வின் சக்தியை “உணவாக” ஏற்றுக் கொள்ளும் நிலை வரும் பொழுது
1.அந்த உணர்வுக்கொப்பச் சிந்தித்து செயல்படும் திறனும்
2.தீமைகளை அகற்றிடும் ஆற்றலும் நீங்கள் பெறுவீர்கள்.

அதற்கே அடிக்கடி உங்களுக்குள் இதைப் பதிவு செய்வது

நீங்கள் வளர நான் வளர முடிகின்றது. நீங்கள் வளர வேண்டும் என்ற நோக்கத்துடன் அந்த உண்மையின் உணர்வை நுகரப்படும் பொழுது எனக்குள்ளும் அது விளைகின்றது.

உணர்வின் ஒளி அலைகள் வெளிப்படும் பொழுது சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது. நீங்கள் நுகர்ந்தறியும் பொழுது உங்கள் உயிர் அதை அணுவாக மாற்றுகின்றது.
1.அணுக்களாக ஆன பின் தன் இரைக்காக உணர்ச்சிகளை உந்துகின்றது.
2.அதை நுகரும் பருவம் வரும் பொழுது “அந்த ஞானத்தின் தன்மை இயக்கும் சக்தியைப் பெறுகின்றீர்கள்…”

இதை நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஓம் ஈஸ்வரா…! – “ஒளியான உயிரணுக்களின் சங்கமம்…”

ஓம் ஈஸ்வரா…! – “ஒளியான உயிரணுக்களின் சங்கமம்…”

“சமமான நிலை நிலைக்கச் சாந்த நிலை தந்திடுவாய் ஈஸ்வரா…” என்று தியானத்தில் வேண்டுகிறோம். அதனின் உண்மைப் பொருள் என்ன..?

சாந்த குணம் பெற வேண்டும் என்ற எண்ணம் கொள்கிறோம்… முயற்சியும் செய்கிறோம். ஆனால் நம் முயற்சி செயலுக்கு வரும் பொழுது
1.நமக்குள் வந்து மோதும் உணர்வுகளின் மோதல்களை
2.தன் எண்ணம் கொண்டு தனக்குத் தானே சமப்படுத்தும் செயலுக்கு
3.அதை… யார்… எப்படிச் செயலாக்கம் செய்வது…?

இதன் பொருள் புரிந்ததா,.?

1.ஒரு சுரக்குடுவை நீரில் அமிழ்த்தப்பட்டால் “பொட…பொட…!” என்று சப்தமிட்டுத் தான் நீரை நிறைத்துக் கொள்கிறது.
2.ஆனால் அதே குடுவைக்குள் நீர் மொள்ளும் பொழுது “சப்தமே வராமல்…!” பக்குவமாக நிறைத்துக் கொள்ளும் முறையும் உண்டு.
3.இந்த இரண்டு செயல்களுக்கும் பொதுவானதே – நமக்குள் வந்து மோதும் உணர்வுகள்.

உதாரணமாக ஒரு சஞ்சலமான உணர்வை ஊட்டி விட்டால் பரபரப்பாகின்றோம்.. பதட்டமாகின்றோம்…! அதன் பின் உணர்ச்சிவசப்பட்ட இயக்கமாகத் தான் வரும். அப்பொழுது அந்தச் செயலால் சாந்த குணத்தைக் கூட்ட முடியுமா…?

ஒரு ஞானவான் சுரக் குடுவைக்குள் (சப்தமில்லாது) பக்குவமாக நீரை நிறைத்துக் கொள்வது போல் சமமான உணர்வுகள் கொண்டு செயல்படும் செயலில் “நிதானம் என்ற பொறுமை குணம்…” அவசியம் தேவை.

உணர்வுகளை மாற்றிட முயலும் பொழுது
1.அந்த மாற்று அலைத் தாக்குதலால் நாம் எடுத்த உணர்வுகளின் ஈர்ப்பில்
2.வேகம் கொண்டு தாக்கிடும் செயலில்… நாம் “ஆத்ம சுத்தி” பாதிக்கப்படுவது நிச்சயம்.

பரபரப்பான இந்த உலக வாழ்க்கை நடை முறையில் வாழும் மனிதர்கள் ஒவ்வொரு நிமிடமும் தான் எடுக்கும் உணர்வுகள் கொண்டு
1.அந்த உணர்வுகளுக்கு ஒத்த தீமையான அணுக்கள் தன் ஈர்ப்பில் ஒட்டிக் கொள்ளும் பொழுது
2.அதை நல்லதாக்கிச் செயல்படுத்த வேண்டிய நடை முறைச் செயல் என்ன…?

நாம் எடுக்கும் உயரிய ஜெப எண்ணத்தில்
1.அவ்வப்பொழுது வந்து மோதும் மாற்று அலைகளைத் தவிர்த்து
2.தான் இருக்கும் வழியிலேயே தன்னைத் தான் தற்காத்துக் கொள்ளவே “ஆத்ம சுத்தி என்ற ஆயுதம்…!”

ஆத்மாவைப் புனிதப்படுத்திக் கொள்வது என்பது என்ன…? எப்படி…?

வாழ்க்கை நடை முறையில் மாற்றமான எதிர் நிலையான உணர்வுகள் நமக்குள் மோதி அதனால் கிளர்ந்தெழும் செயலைத் தவிர்த்து
1.ஓ…ம் ஈஸ்வரா…! என்ற ஒலி நாதத்தைக் கூட்டி
2.அவ்வாறு சொல்லும் பொழுது புருவ மத்தியில் உயிரைப் பரிபூரணமாக எண்ணி
3.அந்த ஒலி நாத உள் நிறைவால்
4.தன் ஆத்மாவிற்குப் பாதுகாப்பான வளையமிட்டுக் கொள்வதே ஆத்ம சுத்தியின் சூட்சமம்.

தீமையான உணர்வுகள் வரும் பொழுது இப்படி ஆத்ம சுத்தி செய்து அதன் மூலமாக உயர்ந்த உணர்வுகளைக் கூட்டிக் கொள்ளும் செயலினால் மனித ஞானம் அடையப் பெறும் நிலை என்ன…?

இன்றைய மனித வாழ்க்கையில் விஞ்ஞானம் கண்டுபிடித்துள்ள வாகனங்கள் இயந்திரங்கள் உண்டாக்கிடும் ஓசைகளினாலும் இன்றுள்ள இசையின் சுவைக்கொப்ப மனதில் கூட்டிக் கொள்ளும் விகாரங்களினாலும் எழுந்திடும் ஓசைகளைத்தான் நாம் ஒவ்வொரு நாளும் கேட்கின்றோம்.

அவை எல்லாம் நம் செவிப்புலனில் பட்டு நமக்குள் எத்தனையோ மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

விநாயகன் உருவத்திற்கு “அகண்ட காதுகளையும்..” ஓ…ம் என்று போட்டு விநாயகரைப் “பிரணவத்திற்கு உரியவன்” என்றும் ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

ஓங்கார ஒலி நாதத்தைச் செவிமடுத்திடும் சூட்சமத்தைப் புரிந்து அதன் வழியில் செயல் அருள் உணர்வுகளை நமக்குள் கூட்டிக் கொண்டே வந்தால் அருள் உணர்வுகள் நமக்குள் ஜீவன் பெற்று அந்த நல்வினைகளாக நமக்குள் சேரும்.

இதனால் நடைமுறை வாழ்க்கையில் பரபரப்பான பதட்டமடையச் செய்யும் ஓசைகள் எத்தனை எத்தனையோ வந்து நம் மீது மோதினாலும் அதனை ஈர்க்காது மெய் ஒலியைக் கூட்டி மெய் ஒளியாக மாற்றிடும் செயலாக அமைந்துவிடும்.
1.இவை எல்லாம் மகரிஷிகளால் “கலைகள்…” என்று காட்டப்பட்ட
2.ஒளியான “உயிரணுக்களின் சங்கமம்” என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

சமமான நிலை நிலைக்க வேண்டும் என்ற செயலில் செயல்பட வேண்டிய முறை இது தான்…!