இறைவன் தெய்வம் குரு

இறைவன் தெய்வம் குரு

 

மகரிஷிகள் தன்னைத்தான் கண்டுணர்ந்த முறைப்படி
1.மனிதனின் வாழ்க்கையில் எவ்வாறு உயர்வு பெற வேண்டும்…?
2.உயர்ந்த சக்திகளை எவ்வாறு பெற முடியும்…? என்ற நிலையை
3.தெளிவாக உணர்த்தி உள்ளார்கள் கடவுளின் அவதாரம் பத்து என்று.

அதே சமயம் சிவ தத்துவத்தின் பிரகாரம் நாம் எடுத்துக் கொண்ட உணர்வை நம் உயிர் ஓ…! என்று இயக்கி… நாம் எண்ணிய குணங்களை ம்…! என்று தன் உடலாக்கும் பொழுது சிவமாகின்றது.

நாம் எந்த குணத்தினை எண்ணுகின்றோமோ அந்த குணத்தின் தன்மை உடலுடன் இணைந்து இயக்கப்படும் போது “வினை என்றும்… விநாயகா என்றும்…” காரணப் பெயரைச் சூட்டுகின்றார்கள் ஞானிகள்.

நாம் கடவுளாக வணங்குவது எல்லாமே…
1.ஒவ்வொரு இயக்கப் பொருள்களுக்கும் மகரிஷிகள் காரணப் பெயர்களை வைத்து
2.நாம் அறிந்து கொள்வதற்காகச் செயல்படுத்தப்பட்டது தான் அவை அனைத்துமே.
3.கடவுள் என்று தனிச் சக்தியாக எதுவும் இயங்கவில்லை.

நாம் எண்ணிய உணர்வுகள் அனைத்தும் உடலாகும் பொழுது சிவம் என்றும்… உடலுக்குள் அது இணைந்து செயல்பட்த் தொடங்கி விட்டால் வினை என்றும்… இந்த வாழ்க்கையில் நாம் எந்தக் குணத்தை அதிகமாகச் சேர்க்கின்றோமோ அந்த குணமே கணங்களுக்கு அதிபதியாகின்றது கணபதி…!

ஒருவரைக் கோபிக்கிறோம் என்றால் அந்தக் கோப உணர்வை நாம் சுவாசிக்கப்படும் போது “ஓம் நமச்சிவாய… சிவாய நம ஓம். அந்தக் கோபத்தின் வழிதான் நாம் செயல்படுத்த வேண்டி வரும்.

கோப உணர்வுகளை அதிகமாகச் சேர்த்து விட்டால் கணங்களுக்கு அதிபதியாகி அதன் வழிகளில் இந்த உடலில் இயற்கையில் இருந்த நிலையைக் காட்டிலும் மாற்றமாகித் தேய்பிறையாக மாற்றுகின்றது.

கோப குணம் வளர்ச்சி அடைந்து… நல்ல குணங்களைத் தேய்பிறையாக மாற்றுகின்றது. ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம்.

இந்த வாழ்க்கையில் எந்தக் குணங்களை அதிகமாகச் சேர்க்கின்றோமோ அதன் உணர்வுப்படி கணங்களுக்கு அதிபதியாகி அதனுடைய செயலை இந்த உடலுக்குள் உருவாக்கும்.

நம் உயிர் ஈசனாக இருக்கும் பொழுது
1.நாம் எண்ணிய எண்ணங்கள் உடலுக்குள் உணர்வாகி உணர்வின் அணுவாகி
2.உடலுடன் இணையப்படும் பொழுது இறை… “இறைவா…”
3.அந்த உணர்வின் சக்தி உடலுக்குள் இயங்கத் தொடங்கினால் “தெய்வம்”
4.அந்த உணர்வின் சக்தி இயங்கி மீண்டும் அதைத் திரும்ப எண்ணினால்
5.அந்த குணத்தின் செயலாக நம்மை இயக்கும் “குரு…” என்று இவ்வாறு காரணப் பெயர்களை வைத்து
6.நாம் இயங்க வேண்டிய முறைகள் எது…? நாம் எப்படி இயங்க வேண்டும்…? நம்மை எப்படி இயக்க வேண்டும்…? என்ற முறைகளை வகுத்து
7.ஞானிகள் நமக்கு அதைக் காவியங்களில் தெளிவாகக் கொடுத்துள்ளார்கள்.

அதாவது இயற்கையின் உணர்வின் தன்மையைக் காவியமாக்கி… அந்தக் கருத்தினை எண்ணத்தால் எண்ணி அந்த உணர்வை நுகர்ந்தால்… நம் உயிர் அதை ஓ… என்று ஜீவ அணுவாக மாற்றி ம்… என்று நம் உடலாக மாற்றுகின்றது.

ஆகவே இந்த மனித வாழ்க்கையில் நாம் எதை நுகர வேண்டும்…? எதை நாம் வழிப்படுத்த வேண்டும்…? என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது நமது சாஸ்திரங்கள்.

போகரின் பூர்வாங்கம்

போகரின் பூர்வாங்கம்

 

“கசாங்” என்ற நாமம் கொண்ட ஒருவர் சீனாவில் மஞ்சள் நதி பாயும் பாதையில் ஒரு பள்ளத்தாக்கில் ஒரு உயிர் பிரியும் துறவிக்கு உதவி செய்கிறார். அவருடைய ஆசியும் உபதேசமும் கிடைத்ததும் ஞானியாகும் வாய்ப்பைப் பெற்று மூலிகை வைத்திய நிபுணராகின்றார்.

சில சித்துகள் செய்யும் பொழுது அந்த நாட்டு அரசனின் கோபத்திற்கு ஆளாகித் தப்பிக் காட்டுக்குள் மறைந்து வாழ்கின்றார். சில அபூர்வ சக்திகளும் பெறுகின்றார்,

பின்னர் திபெத்தில் துறவிகளிடம் கலைகள் பல பயின்று இந்திய நாட்டுக்குள் நுழைந்து தெற்கே வருகின்றார். காளிங்கராயரிடம் தொடர்பு ஏற்பட்டதும் அவரையே குருவாக ஏற்கிறார்.

காளிங்கராயரிடம் உபதேசம் பெற்று வாழ்ந்து வரும் சமயம் கஞ்ச மலைக்கு (சேலம் அருகில்) வருகின்றார்கள். அந்த மலையின் மூலிகை விசேஷ குணத்தினால் இளமை பெறும் வாய்ப்பு பெற்று அதன் தொடரில் கஞ்ச மலையில் உள்ள காந்தப் பாறையில் இருவரும் தியானத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

போகரின் (கசாங்) அழகிய தோற்றம் கண்டு அழகன் என்ற பொருளில் முருகா என்று அழைக்கும் குரல் கேட்டு அதைக் குரு தனக்குக் கொடுத்த அருள் வாக்காக ஏற்று அதனின் ஈர்ப்புத் தொடரிலேயே ஓம் முருகா என்ற நிலையில் உணர்வைச் செலுத்துகின்றார் போகர்,

அதன் பின் வாழ்க்கைச் சக்கரம் என்ற சூழலில் அகப்படும் வாய்ப்பாக அமையும் தருவாயில் குரு குறிப்பால் உணர்ந்து போகருக்கு விடை கொடுத்து அனுப்பிவிடுகின்றார்.

1.பிறவியின் பயனை எப்படி அடைவது…? என்ற நிலையை உணர்த்தி
2.அதன் வழியில் எப்படிச் செயல்பட வேண்டும்…? என்பதை சூசகமாக உணர்த்தி
3.காயகல்பமாகப் பேரின்பப் பெருவாழ்வு எப்படி வாழ வேண்டும்…? என்று போகருக்கு ஆசி கூறுகின்றார் காளிங்கநாதர்.

காளிங்கநாதர் தான் பறக்கும் நிலை பெற்ற சித்து நிலையில்
1.சரீரத்தையே இரும்புக் கல் தாதுவாக்கி
2.விண்ணின் ஆற்றலைப் பெற்று உயிராத்மாவை ஒளியாக மாற்றி மண்டலமாகச் சுழலச் செய்து
3.இன்றும் பேரொளியாக வாழ்ந்து கொண்டுள்ளார்.

போகர் தனக்குகந்த சீடர்களைத் தேர்ந்தெடுத்துக் கடுமையான தியானப் பயிற்சிகள் மூலம் அவர்களைப் பக்குவப்படுத்துகின்றார். அவர்களும் அதில் தேர்ந்து வளர்ந்து வருகின்றார்கள். அதிலே முதன்மை பெறுகின்றார் புலிப்பாணி.

அப்பொழுது உண்டாக்கப்பட்டதே தந்த வைத்திய முறையும் நாடி ஜோதிடமும். அப்பொழுது திடீரென்று போகரைக் காணாமல் அவர் சென்ற இடத்தை அறியாமல் சீடர்கள் திகைக்கின்றனர்.

புலிப்பாணியார் தன்னுடைய ஞானத்தால் போகர் சீனாவில் இருப்பபதை அறிந்து அங்கு சென்று அவரை அழைத்து வருகின்றார். நேராக இருவரும் பழனிக்கு வருகின்றார்கள்.

போகர் தான் சீன சென்ற நிலையில் தன்னுடைய தவ சக்தியை இழந்ததாகக் கூறி மீண்டும் அந்தத் தவத்தினை மேற்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்.

அதற்குக் குரு உபதேசம் அவசியம் என்று உணர்ந்து கஞ்ச மலைக்குச் சென்று தன் குருவாகிய காளாஞ்சி நாதரைத் தேடுகின்றார்.
1.அவர் தன் சரீரத்தையே கல்லாக்கி மண்டல சுழற்சியில் செயல்படும் விதம் அறிந்து
2.அவர் கூறிய வழியிலேயே அவரை விஞ்சிக் காட்ட வேண்டும் என்ற மன உறுதியுடன்
3.பழனிக்கு வந்து தன் சீடராகிய புலிப்பாணியையே குருவாக ஏற்கின்றார்.

சிஷ்யன் எப்படிக் குருவாக முடியும்…! என்று அவர் சங்கடப்படுகின்றார். போகர் அவரைத் தேற்றி அதற்குரிய வழிகளைக் கூறுகின்றார்.

போகர் தன் கையில் உள்ள தண்டத்தை ஒரு பீடத்தில் வைத்து அந்தத் தண்டத்திலே சூட்சமமாகப் புலிப்பாணி இருந்து குரு பீடம் ஏற்று உபதேசிக்கும்படி வேண்டுகிறார்.

புலிப்பாணி வான இயலின் தத்துவத்தைப் போகருக்கு அருளுகின்றார். குருவிற்குச் சிஷ்யன் உபதேசம் செய்ததால் “தகப்பன் சுவாமி…! என்ற பெயர் நிலைக்கின்றது.

தண்டத்திலிருந்து உபதேசம் பெற்று தன் சக்திக்கு வலு கூட்டியதால் போகநாதர் “தண்டபாணி…” என்ற நாமம் பெறுகின்றார். பின்னர் தண்டபாணிக்குச் சிலை செய்ய எல்லோரும் முடிவெடுத்துப் பழனியில் ஒன்றுகூடி ஞான திருஷ்டியினால் நவபாஷாண மூலிகைகளைத் தேடி உலகெங்கும் பறக்கும் சக்தியினால் சென்று தேடிக் கொண்டு வருகின்றனர்.

கல்வம் (மருந்து அரைக்கும் ஒரு குழிக்கல்) என்ற கருவியில் அதை இட்டு அரைத்து காற்றில் காயும் முன் அதைச் சிலையாக உருவாக்குகின்றார்கள்.

மீன் செதில் போல் முருகன் சிலை உருவெடுக்கின்றது. அதைப் பராமரிக்கும் பணி புலிப்பாணியாருக்குக் கொடுக்கப்படுகின்றது.

போகர் அதன் பின் அரபு நாடுகளுக்குச் சென்று அங்கே சில வேலைகளைச் செய்கின்றார் (மக்காவில்)
1.அங்கே உருவமற்ற இறைவனாகப் படைத்தார்.
2.”ஆயிரம் ஜோதிலிங்கம்…” என்றும்
3.சுவாசமாகிய நிலையைக் குறிக்க யானையின் தலை மீது வீரியத் தன்மை ஏற்படுத்தப்பட்டு ஒரு சக்தி பீடத்தின் மேல் அமைத்தார்.
4.அதை அடையாளப்படுத்தும் விதமாக “சொர்க்கத்தின் கல்…” என்று பெயர் வைத்து
5.அந்தக் கல்லில் நேர் மையத்தில் நடுப்பாகத்திலிருந்து கீழ் நோக்கிச் செல்லும் அமைப்பை உண்டு பண்ணி “ஜோதிலிங்கத்தை” ஸ்தாபித்தார் போகர்.

பழனி மலை முருகன் போல் ஐவர் மலையில் கோரக்கர் கோரக்கும்பர் கோரக்நாத் என்று அழைக்கப்படும் ஒரு ரிஷியின் தலைமையில் புலிப்பாணியால் முருகன் சிலை செய்யப்படுகின்றது. சிலை பூர்த்தியாகும் நேரம் போகரும் வருகின்றார்.

கோரக்நாத்தைப் போகர் இலங்கையில் உள்ள கதிர்காமம் சென்று வரப் பணிக்கின்றார். அங்கே உள்ள பூமியின் பொக்கிஷங்கள் ஈர்ப்பின் செயல் வளர்ச்சி முதலியவற்றை அறிகின்றார் அவர்.

பின்னர் போகர் தான் “நிர்விகல்ப சமாதி…!” நிலைக்குத் தன்னைத் தயார்படுத்துகின்றார். கோரக்நாத் ஐவர் மலை முருகன் சிலை ரகசியம் அறிந்து பிருகு மகரிஷியின் வழித் தொடரால் தான் அது ஸ்தாபிதம் செய்யப்படும் நிலை தெரிந்து கதிரிக்குச் சென்று போகர் போல் அவரும் சமாதி நிலை கொள்கின்றார்.

உண்மைகளைத் தேடிச் சென்றாலும்… பெற முடியாத நிலையாகப் போய்க் கொண்டுள்ளது

உண்மைகளைத் தேடிச் சென்றாலும்… பெற முடியாத நிலையாகப் போய்க் கொண்டுள்ளது

 

1.அரசியல் ரீதியிலும் சரி… பாட நிலைகளில் தத்துவங்களைப் போதித்துக் கொண்டிருப்போரும் சரி…
2.ஞானிகள் காட்டிய அறநெறிகளைக் கடைப்பிடித்து அதன் வழியில் இன்று செயல்படுகிறார்களா…! என்றால் இல்லை.

யாரையும் தவறாகச் சொல்கின்றேன் என்று எண்ண வேண்டாம். “நான் அல்ல இதைச் சொல்வது…!” குருநாதர் காட்டிய அருள் வழியில் தான் இதை உணர்த்துகின்றேன்.

காரணம்… இன்றைய உலக மக்கள் நல்லதை ஏங்கித் தவிக்கும் போது அந்த நல்ல உணர்வின் செயல்கள் எவ்வாறு மறைந்து கொண்டிருக்கின்றது…? என்பதைப் பார்க்கலாம்.

மதங்களில் தவறில்லை…! மதத்தின் தன்மை வகுத்து நல்ல ஒழுக்கங்களை ஞானிகள் கொடுத்திருந்தாலும் பிற்காலங்களில் தவறின் நிலைகளுக்கு வருகின்றது.

அகஸ்தியன் வழியில் வியாசகர் அண்டத்தின் தன்மையைக் கண்டறிந்து அதை உணர்த்தினாலும் அவருக்குப் பின் வந்தவர்கள்…
1.ஒவ்வொருவரும் ஒவ்வொரு பிரிவாகப் பிரித்து முழுமையின் தன்மையை அறிய முடியாது
2.காலத்தால்… அரசு… அரசியல் என்ற நிலையில் இது மறைந்து விட்டது.
3.தன் நாட்டைக் காக்க தன் மதத்தைக் காக்கப் போர் முறைகள் உருவாக்கப்பட்டதால் உண்மைகள் மறைந்து விட்டது.

அன்று “மந்திரவாதிகளால்” மக்களை அடிமைப்படுத்தும் நிலைகள் இருந்தது. மனிதன் மடிந்த பின் அவன் உணர்வைக் கவர்ந்து அதனின் உணர்வின் தன்மை கொண்டு ஏவல் பில்லி சூனியம் என்று அன்றைய காலங்களில் அரசர்கள் செய்தார்கள்.

இஸ்ரேல் நாட்டில் அன்று போர்களுக்குச் செல்ல வேண்டும் என்றால் குறி வைத்து அம்பை எய்து “ஜோதிடம் பார்த்துத் தான்” அதனைச் செயல்படுத்துவார்கள். அம்பு எய்த நிலைகள் கொண்டு அரசனின் வலுவின் நிலை அறிந்து தான் செயல்படுவார்கள்.

நமது நாட்டிலும் அரசனாக இருந்த கட்டபொம்மனும் மந்திர ஒலியால் “ஜக்கம்மா” என்ற நிலையில் குலதெய்வமாக வளர்க்கப்பட்டு… அதனை ஈர்க்கப்பட்ட கருவின் தன்மை கொண்டு எதிரிகளைக் கண்டுணர்ந்து… எதிரிகளிடமிருந்து தப்பிக் கொள்ளும் உணர்வின் தன்மை கொண்டு செயல்பட்டான்.

மற்ற நாடுகளிலும் இதே போன்று மந்திர ஒலிகளால் தனக்குள் கவரப்பட்டு தன்னையும் தன் நாட்டையும் காத்திடும் நிலையாக மனிதர்களுக்குள் மதங்களை உருவாக்கினார்கள்.

1.மதத்தால் சொன்ன நிலைகளை ஏற்படுத்திய பின் அதையே மந்திரம் ஆக்கி
2.அந்த மந்திரத்தின் நிலைகள் கொண்டு மனிதன் இறந்து விட்டால் அதைக் கவர்ந்து சக்தி வாய்ந்ததாக மாற்றி
3.தன் நாட்டினுடைய நிலைகளுக்கு மதங்களுக்குப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

எந்த மதமாக இருந்தாலும் ஞானிகள் காட்டிய நிலைகள் மனிதர்களுக்குள் படர்ந்த பின்… பதிந்த நிலைகள் எவ்வாறு இயக்குகிறது என்ற நிலையை மந்திர ஒலிகளாக மாற்றித் தான் செயல்படுத்தி வந்தார்கள்.

அந்த மகான்கள் காட்டிய நிலைகளை யாரும் இப்போது கடைப்பிடிக்கவில்லை. எந்த மதத்தின் நிலைகள் கொண்டு பிரிவுகள் பிரிந்ததோ அந்த ஞானிகள் சொன்ன உண்மை நிலைகள் மறைக்கப்பட்டது.

நான் பெரிது… அவர்கள் செய்வது தவறு… இவர்கள் சொல்வது பொய்… என்று மதத்திற்குள் இனங்களாகப் பிரிக்கப்பட்டு அதனின் நிலைகள் கொண்டு
1.உலகெங்கிலும் மகான்கள் கொடுத்த நிலைகள் மக்களுக்குக் கிடைக்க முடியாதபடி
2.இன்று உண்மைகளைத் தேடிச் சென்றாலும் பெற முடியாது நிலைகளாக மடிந்து கொண்டுள்ளது “விஞ்ஞான அறிவு கொண்டு…”

மெய் ஞானத் தத்துவத்தால் மாற்றி அமைக்க வேண்டியது…!

மெய் ஞானத் தத்துவத்தால் மாற்றி அமைக்க வேண்டியது…!

 

மனிதனின் உடலில் உண்ணும் உணவிற்கொப்ப உடலில் இரத்தம் எப்படி மாறுபாடு கொள்கின்றதோ அதே போன்று நாம் சுவாசிக்கும் உணர்விற்கொப்பவும் உயிரணுக்களின் தோற்றம் உடல் தன்மையில் வளர்கின்றது.

இன்று விஞ்ஞான ரூபத்திலேயே மருத்துவரின் ஆராய்ச்சியில் உணவு உட்கொள்வதற்கு முன்னும்… பின்னும்… மற்றும் இனிப்புப் பதார்த்தங்களைத் தந்தும்.. (SUGAR LEVEL IN BLOOD) ஆராய்ச்சிகள் நடத்துகின்றார்கள்.

அதற்கொத்த விகிதத்தில் இரத்த அணுக்களின் மாற்றத்தைக் காணுகின்றார்கள், அதைப் போன்றே
1.உணர்வின் நிலைக்கொப்ப எடுக்கப்படும் எண்ணத்தால்
2.உயிரணுக்களின் ஆத்ம பதிப்பு உடனே இரத்த அணுக்களில் சேர்வதைக் காட்டிலும்
3.ஆத்மாவின் பதிவு எண்ணத்தின் மோதலாக
4.எண்ணத்தின் செயல்பாடு உணர்வைத் தூண்டக் கூடிய நிலையில்
5.உயிரணுக்களின் விகிதத் தன்மை வீரியம் கொள்கின்றது.

புரியாத புதிராகப் படிப்பவர்களுக்கு இது தோன்றும்…!

உணவை உண்ணும் பொழுது உடலுக்குள் இரத்தத்தில் உடனே அது அணுவாகச் செயல் கொள்கிறது. அதுவே “எண்ணத்தில் எடுக்கும் எதுவாகிலும்…!” நம் ஆத்மாவில் பதிவாகிறது.

பதிவான பின் ஆத்மாவின் உந்துதலினால் உணர்வில் மோதுண்டு ஒன்றையே மீண்டும் மீண்டும் எண்ணத்தில் கொண்டு உடலுக்குள் இருக்கும் (ஜீவ) உயிரணுக்களிலும் அச்சத்துக் கூடக்கூடிய சந்தர்ப்பத்தை எண்ணத்தால் எடுக்கும் உராய்வினால் ஏற்படுத்துகின்றோம்.

அப்படி ஏற்படுத்துவதினால் வாழ்க்கையில் மனித ஆற்றலின் செயல் யாவையும் “எண்ணமே தான் கடவுள்..!” என்ற தத்துவத்தில் எண்ணத்திற்கொப்பத்தான் செயல் திறமையின் ஆற்றலின் பரிமாண சக்தியாக வளர்கின்றது.

1.இந்தப் பிரபஞ்சத்தின் உண்மையை உணர்ந்த ஞான ரிஷிகள் பிருகு முனிவரும் பிருகண்ட ரிஷியும்
2.என்றும் பதினாறு என்ற மார்க்கண்டேயத் தத்துவமாக இந்தப் பூவுலகத்திற்குத் தத்துவரீதியாக உணர்த்தினார்கள்
3.அந்த உண்மைகள் யாவையும் ஆதிசங்கரர் காலத்திற்குப் பிறகு வேதங்களாகப் பிரிக்கப்பட்டு விட்டது

என்றும் பதினாறு என்ற நிலையில் அழியாததாக “உயர்வெய்தும் உயிர் ஆத்மாவின் உயர்வை…”
1.இன்றைய மனித ஆற்றலின் சிந்தனை எல்லாம்
2.சரீர சுகத்தின் செருக்கில்
3.விஞ்ஞானத்தின் இயந்திரக் கதிக்கு அடிமைப்பட்டு விட்டது.

எண்ணத்தைக் கொண்டு எதையும் சிந்தனையில் சீர்படுத்தி உணரக்கூடிய தன்மை ஒவ்வொரு ஜீவ ஆத்மாவுக்கும் உண்டு. செலுத்தும் பக்குவத்தில் தனக்குள் இருக்கும் உயிரான ஈசனைச் சூட்சமத்தின் துணை கொண்டு ரிஷி சக்திகளின் சக்தியைக் காண வேண்டும்.

விதியின் கதிப்படி நடப்பதை எல்லாம் மதி கொண்டு மாற்றியமைப்பது போல் ஒவ்வொரு மனித ஆத்மாவில்…
1.சரீர விதியின் கதியை மாற்றியமைக்கக்கூடிய செயலை
2.“நான்”என்ற உண்மை உணர்தலில் பெற முடியும்.

விஞ்ஞானத்தில் எப்படி இயற்கை வளங்களைச் செயற்கை முறையால் மாற்றியமைத்து பல உண்மைகளை மாற்றும் நிலைப்படுத்துகின்றனரோ அது போன்ற நிலையை மனிதத் தத்துவத்திலும் “மெய் ஞானத் தத்துவத்தால்” மாற்ற முடியும்.

1.சரீர எண்ண அறிவின் ஆற்றல் கொண்ட மனிதப் பிறப்பின் தொடரில்
2.உயிரணுவின் தோற்றத்தின் நட்சத்திர ஒளி அலை அமிலத்தின் கூறு கொண்டு
3.பிறப்பின் தொடரில் வாழும் விதியின் கதியின் வாழ்க்கையில்
4.பிறப்பின் தொடரில் வாழும் முறையில் அந்தப் பிறப்பின் முடிவும்
5.நட்சத்திரத் தொடர் கொண்ட பூமியின் கதிக்கு
6.பூமி தொடர்பு கொள்ளக்கூடிய நட்சத்திர ஒளிகளின் செயல் தன்மை
7.ஒவ்வொரு இயற்கையின் செயலிலும் நடக்கும் கதி கொண்டு இயற்கையின் சுழற்சியுடன் சுழல்கின்றது.
(அதாவது உயிர் தோன்றி பல பிறவிகள் எடுத்து மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து பிறந்து இறந்து சுழலும் நிலையின் இயல்பு இதுவே)

ஆனால் மதி கொண்ட ஞான ஒளி எடுக்கும் ஆத்ம ஞானிகளின் செயல் எப்படிப்பட்டது…?

உயிர் தோன்றிய அந்த (தன்னுடைய) நட்சத்திரத் தொடரையே தன் எண்ணத்தின் அறிவின் ஆற்றலைக் கொண்டு சரீரத்தில் இயங்கும் உயிராத்மாவின் ஒளித் தன்மையை விழிப்புறச் செய்கின்றார்கள். எப்படி…?

1.மெய் ஞான ஒளி அறிவின் வேரை வளர்க்கக்கூடிய
2.வான் கோள்களின் விண்மீன்களின் தொடர்பு படுத்தும் ஒளிச் சக்தியால்
3.ஆத்மாவின் விழிப்பால் – பேரண்டத்தின் உண்மையின் வளர்ப்பு கொண்ட விண்மீன்களின் விழிப்பு நிலையை
4.தன் சிந்தனையின் அறிவின் ஆற்றலைக் கொண்டு பெற்று
5.என்றும் பதினாறாக ஒளிரும் நட்சத்திரமாக விண்ணிலே பிரகாசிக்கச் செய்கின்றார்கள்.

மனிதனின் முதிர்வு நிலை அதுவே…!

“நான்…!” என்னும் பலன்

“நான்…!” என்னும் பலன்

 

நான் என்பது யார்…? உயிரா.. ஆத்மாவா… இந்த உடலா..?

சரீரம் என்பது அழியக்கூடியது தான். ஆனால் இந்தச் சரீரத்தின் உண்மையின் இயக்கத்தில் உண்மையில் எண்ணம் என்பது எது…?

1.ஒரு பம்பரம் சுழல்கிறது என்றால் எந்த வேகத்தை அதற்குத் தருகின்றோமோ அது வரைக்கும் தான் அதனுடைய சுழற்சி இருக்கும். பின் நின்றுவிடும்
2.குழந்தையை ஆட்டுவிக்கும் ஒரு தூளியும் நாம் ஆட்டுவிக்கும் வேகத்திற்கொப்பத்தான் ஆடுகின்றது. பின் ஆட்டம் நின்றுவிடும்.

செயற்கையில் சுழலும் பொருள்கள் (ஜீவன் இல்லாத) அனைத்துமே நாம் செய்விக்கும் திறனைப் பொருத்து அதன் ஓட்டத்தின் கதியை அடைகின்றது. இயந்திரங்களும் அதனுடைய செயல்பாட்டின் நிலைக்கொப்ப ஓடுகின்றது.

ஆனால் கோள்களின் ஓட்டம் இயற்கையின் கதி விகிதத்தைக் கொண்டு ஜீவனுடன் ஓடிக் கொண்டே உள்ளது. இருந்தாலும்
1.மனிதனின் செயல் நிலையில் உண்மையின் தத்துவ உட்பொருளான
2.”நானின்…” இயக்கத்தை நாம் அறிதல் வேண்டும்.

சுவாசம் எடுத்துவிடுவதும்… கண் இமை மூடித் திறப்பதும்… செவி ஒலி கேட்பதும்… சுவை உமிழ் நீர் ஊருவதும்… இவை எல்லாமே நம் எண்ணத்தைச் செலுத்தாமலே தானே நடக்கின்றது.

கோள்கள் இயற்கையின் கதியில் எப்படி அது இயற்கையின் மாற்றத்திற்கொப்ப எல்லாம் செயல்பட்டு வளர்ந்தே ஜீவனுடன் எண்ணம் இல்லாமல் ஓடிக் கொண்டுள்ளதோ அதைப் போன்று தான்
1.நம் சரீரத்தின் இயக்கத்தின் கதியும் எண்ணத்தைச் செலுத்தாமலேயே
2.பசி… தூக்கம்… மற்றும் உடல் உபாதைகளில் ஏற்படும் வேதனைகளும்… தன் தன் கதியில்
3.நாம் எண்ணத்தைச் செலுத்தாமலே ஓடிக் கொண்டுள்ளது. (பசியோ தூக்கமோ உடல் வலியோ நாம் எண்ணி வருவதில்லை)

செயல்படும் நிலையில் ஏற்படும் மாற்றத்தால் அந்த உந்துதல் ஏற்படக் கூடிய தருணத்தில்தான்
1.எண்ணத்தில் அதை அறிந்து
2.சாப்பிடவோ தூங்கவோ வலியை நீக்க வேண்டும் என்றோ
3.எண்ணத்தை அதற்காகச் செயல்படுத்துகின்றது உடல்.

கோள்களுக்கு எண்ணம் இல்லாததினால் அது சந்திக்கும் மற்ற கோள்களின் அமிலத் தொடர்பைக் கொண்டு அதன் ஜீவ ஓட்டம் தன் இச்சையில் ஓடிக் கொண்டுள்ளது.

மனித உடலின் இயற்கையின் செயல்படும் கதியில் ஏற்படக்கூடிய மாற்றத்திற்கு எண்ணத்தைக் கொண்டு பசிக்கு உணவையும்… சோர்வுக்கு உறக்கத்தையும்… செலுத்தக்கூடிய எல்லாவற்றிற்கும் எண்ணத்தைச் செலுத்துகின்றோம்.

அப்பொழுது… இந்த “எண்ணம் தான்…” நானா…?

விதை முளைத்து மரமாகி பலன் தந்து பல நாள் வாழும் மரத்திற்கு எண்ணம் இல்லாவிட்டாலும் உணர்வின் செயல் தன்மை உள்ள மரத்தின் உயிர் தன்மை வலுவாகி வளர்த்துக் கொள்கிறது.

தாவரங்கள் எண்ணமில்லாத இயற்கையின் வலுவானாலும் அதற்கு அடுத்த நிலை என்ற உயர் நிலைக்கு உயிர்ப்பிக்கும் அந்தத் தாவரங்களும் செல்வதில்லை.

ஆனால் மனிதச் செயலுக்கோ தன் எண்ணத்தைக் கொண்டு தெய்வ குணங்களான உயர் தன்மைகளை வளர்த்திட அறு குணங்களை உணரக்கூடிய எண்ணத்தின் பால் வரையறுக்கப்பட்ட குணச் சிறப்பின் விதிக்கொப்ப
1.மனிதனிடம் செயலாகும் எண்ணத்தின் கதி கொண்டே
2.நான் என்பது யார்..? என்ற எண்ணத்தை ஊன்றிப் பார்த்தோமானால்
3.மனித எண்ணத்தில் ஓடக்கூடிய பல குணங்களில் பொறுக்கி எடுத்த
4.நற்குணம் ஆறு எதிர் நிலையான தீய குணங்கள் ஆறு என்ற அடிப்படையில்
5.மனிதனுக்குள் ஓடக்கூடிய பல ஆயிரக்கணக்கான எண்ண குண நலன்கள்
6.பல விந்தையின் விபரீத நிலையிலும் செயல் கொள்கின்றதப்பா…!

அவனவன் எடுத்துக் கொண்ட எண்ணத்தின் தன்மைக்கொப்ப மெய் ஞானியாகவும் ஆகின்றான் விஞ்ஞானியாகவும் ஆகின்றான் அல்லது அஞ்ஞானியாகவும் ஆகின்றான்.

மற்ற எந்த உயிரினங்களுக்கும் இல்லாத சிறப்பாகத் தன் எண்ணத்தால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் எடுத்துக் கொண்ட நிலைக்கொப்ப மருத்துவம் பொறியியல் தத்துவம் கலைகள் இசை விவசாயம் என்று செயல்படுத்துகிறார்கள் அல்லவா…!

ஆகவே எண்ணத்தின் மூலமே உயிரின் பரிமாணத்தின் பலனாக மனித ஆத்மாவின் வலுவிற்கு வழி தேடும்
1.“நான்…!” என்னும் பலனை
2.நாம் அறிதல் வேண்டும்.

“கண்” தான் நமக்கு ஆண்டென்னா…!

“கண்” தான் நமக்கு ஆண்டென்னா…!

 

சாதாரண ஆண்டன்னாவை வைத்து அருகிலே ஒலி/ஒளிபரப்பப்படும் அலைளை டிவி ரேடியோவில் படமாக ஒலிகளாகக் காணுகின்றோம். அதே சமயத்தில் வெகு தொலைவில் இருந்து ஒளிபரப்பப்படும் அலைகளைக் கவர்வதற்குச் சக்தி வாய்ந்த ஆண்டன்னாக்களை வைத்துக் கவர்கின்றோம்

தொலைவில் இருந்து வருவதை எளிதில் காணுவதற்குச் சக்தி வாய்ந்த ஆண்டென்னாக்களைப் பொருத்துகின்றார்கள். அப்பொழுதுதான் அதைக் குவித்து திரைப்படங்களாக டிவிக்களில் நாம் காண முடிகின்றது.

இதைப் போன்று தான் பழகியவர்களின் உணர்வுகளை நாம் உற்றுப் பார்த்துப் பதிவு செய்து கொண்டுள்ளோம்… “அவருடைய ரூபங்களை… அவருடைய சொல்களை… அவருடைய செயல்களை…!”

அதே சமயத்தில் காவியங்களைப் படிக்கப்படும் பொழுது அதிலே சித்தரிக்கும் உணர்வின் தன்மையையும் இதைப் போன்று தான் நாம் பதிவு செய்து கொள்கின்றோம்.

1.இவ்வாறு நாம் எதை எதை எல்லாம் எண்ணிப் பதிவு செய்து கொண்டோமோ…
2.பின் கண்கள் வழி கூடித் தான் நினைவாற்றல் (அந்த அலைகள்) வருகிறது
3.கண்கள் தான் நமக்கு ஆண்டன்னாவாகச் செயல்படுகின்றது.

என்னை ஒருவன் திட்டுகிறான் என்றால் அவன் உருவைப் பார்த்துப் பதிவாக்குகின்றோம். ஆனால் அவனின்று வெளிப்படும் உணர்வுகள் அலைகளாகப் படர்கின்றது.

அவன் சொல்லும் உணர்வைப் பதிவாக்கி விட்டால்… நான் இங்கிருந்து அமெரிக்காவுக்குச் சென்றிருந்தாலும் அயோக்கியன்…! என்னைத் திட்டினான்… பேசினான்… என்று திரும்ப எண்ணினால்
1.அந்த உருவங்கள் நினைவலைகளாகத் தெரிய வருகின்றது.
2.அந்த உணர்வின் தன்மை என் உணர்வுக்குள் விழிகளில் இருக்கும் திரைகளில் பட்டு உணர்த்துகின்றது… கண்கள்.
3.உணர்வின் நினைவாற்றலாக எனக்குள் இயக்கி அந்தக் கோப உணர்ச்சியைத் தூண்டுகின்றது.

விஞ்ஞான அறிவால் டிவி ரேடியோ மூலம் மற்றவைகளைக் காணுவது போன்று… மெய் ஞான அறிவால் பார்க்கப்படும் போது…
1.நுகர்ந்து பதிவு செய்து கொண்டது அது தான் கண்ணன்… கண்கள்
2.நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய்.
3.எதைப் பதிவு செய்கின்றாயோ… அதனையே தான் நீ நினைக்கின்றாய்
4.பதிந்த உணர்வுகளை நினைக்கப்படும் பொழுது அதன் நினைவைக் கூட்டும் பொழுது அதுவாகவே நாம் மாறுகின்றோம் என்று தான்
5.அன்று வியாசகர் இதை எல்லாம் நமக்குத் தெளிவாக எடுத்துரைத்தார்.

சாதாரண மனிதனிடம் பழகும் பொது திட்டியவன் தவறுகளைச் செய்தவன் இடையூறு செய்தவன் என்று எண்ணத்தால் பதிவு செய்து கொண்ட பின் அந்த நினைவுகள் எதிர்கொண்டு வருகின்றது. நோயுற்றவர்களைப் பரிவுடன் பார்க்கப்படும் பொழுது அதுவும் பதிவாகி… நமக்குள் அந்த அலைகளும் வரத் தொடங்குகின்றது.

நம் பிள்ளைகள் மீது பாசம் கொண்டு இருந்தாலும்… சந்தர்ப்பத்தால் அவன் தவறு செய்கின்றான் என்றால் அந்த உணர்வைப் பதிவு செய்து கொள்கின்றோம்.
1.நல்லவனாக இருக்கும் பொழுது ஒரு பதிவு
2.ஆனால் தவறு செய்யும் போது அது ஒரு பதிவு
3.அவன் செய்த தவறினைப் பற்றி நாம் எண்ணப்படும் பொழுது
4.“நல்லவனாக இருந்தான்… இப்போது இப்படி ஆகிவிட்டான் என்ற உணர்வு நம்மை இயக்குகின்றது.

இதை எல்லாம் நாம் எளிதில் காணுகின்றோம்.

இத்தகைய உணர்வலைகள் படரும் பொழுது நம்முடைய நல்ல எண்ணங்கள் தடைப்படுகின்றது…. நம் செயல்களும் மாறாக வரத் தொடங்குகிறது. தீமையின் உணர்வுகளை நுகரும் பொழுது நமக்குள் அது நோயாகி விடுகின்றது நல்ல சிந்தனைகள் அழிந்து விடுகின்றது.

இதைப் போன்று நம் எண்ணத்தால் நமக்குள் பதிவு செய்து கொண்ட நிலை எதுவோ கண்ணின் நினைவுக்கு வரும் பொழுது புவியிலிருந்து கவர்ந்து,,, ஆன்மாவாக மாற்றி… உயிரின் தன்மை நுகர்கிறது.

எப்படி ஆண்டன்னா அந்தந்த அலைகளைக் கவர்ந்து டிவி ரேடியோக்களில் பரப்பப்படும் பொழுது அந்த இயந்திரங்கள் ஒளி ஒலியாகப் பரப்பிப் படமாக ஒலிகளாகக் காட்டுகின்றதோ அதைப் போன்று தான் நம் கண்ணின் நிலைகளும்.

விஞ்ஞான அறிவுப்படி இந்த உண்மைகளை நீங்கள் காணலாம்.

இதை எல்லாம் ஏன் சொல்கிறோம் என்றால் நம்மை அறியாது பதிவாகும் தீமையின் இயக்கங்களிலிருந்து தன்னை மீட்டிக் கொள்ளும் அருள் சக்திகளை எவ்வாறு பெற வேண்டும் என்பதற்குத் தான்…!

சக்தி வாய்ந்த ஆண்டன்னாக்களை வைத்து வெகு தொலைவில் இருப்பதை விஞ்ஞான அறிவு கொண்டு கவர்வது போன்று தான்
1.விண்ணிலிருந்து வரும் மெய் ஞானிகளின் உணர்வுகளை நீங்கள் கவர்வதற்கு உபதேச வாயிலாகப் பதிவாக்குகின்றேன் (ஞானகுரு).
2.பதிவானதை அடிக்கடி நினைவுக்குக் கொண்டு வந்தால் உங்கள் கண்களுக்கு ஆற்றல் மிக்க சக்திகள் கூடி…
3.நினைத்தவுடன் ஞானிகள் அருள் சக்திகளைப் பெறும் தகுதி நீங்கள் பெறுகிறீர்கள்… வரும் தீமைகளை அகற்றிட முடியும்.

யோகா…!

யோகா…!

 

விவேகானந்தர் வக்கீலுக்குப் படித்திருந்தாலும் நமது ஞானிகள் உணர்த்திய தத்துவங்களை எடுத்துரைத்து
1.எந்த மனிதனுக்கு நீ பூரண சேவை செய்கின்றாயோ அதுவே உனக்குள் கடவுளாக நின்று அதுவே உனக்கு நன்மை செய்கின்றது.
2.உன் ரூபத்தில் அவர்களுக்குள் கடவுளாக நின்று அது செயலாக்குகின்றது.
3.நீ கடவுளை எங்கே தேடுகின்றாய்…? உன்னுள்ளே கடவுள் உண்டு என்று உணர்த்தினார்.

ஆனால் ஆரம்பத்தில் கடவுளைத் தேடி விவேகானந்தர் அலையும் நிலையில் இராமகிருஷ்ண பரமஹம்சரைக் கண்டு கடவுள் எங்கே இருக்கின்றார்…? நான் பார்க்க வேண்டும்…! என்று கேட்கின்றார்.

ஆனால் அந்தச் சமயத்தில் இராமகிருஷ்ண பரமஹம்சர் முள் படுக்கையின் மீது படுத்திருக்கின்றார். விவேகானந்தர் அதை உற்றுப் பார்த்து “இங்கே முள் அல்லவா இருக்கின்றது அதிலே படுத்திருக்கின்றீர்களே…!” என்று கேட்கிறார்.

1.நீ முள் என்று பார்க்கின்றாய்… அதனால் உனக்கு வேதனை (வேதனையின் உணர்வை உனக்குள் நின்று உனர்த்துவது கடவுள்) தெரிகின்றது.
2.நான் முள் என்று நினைக்கவில்லை… எனக்கு வேதனை இல்லை…! என்று சுருக்கமாகச் சொல்லிப் பாடத்தை முடிக்கின்றார்.

விவேகானந்தர் நம் நாட்டின் தத்துவங்களை… பக்தியின் நல்ல ஒழுக்கங்களை அமெரிக்காவிற்குச் சென்ற போது சுட்டிக் காட்டினார். உலக நிலைகளில் இந்தியாவின் நிலைகளைப் பரப்பவும் செய்தார்.

மனிதனுக்கு எவ்வாறு சேவை செய்ய வேண்டும்…? ஏனென்றால் அதுவே கடவுள் ஆகிறது.
1.நீ எண்ணும் எண்ணமே உனக்குள் கடவுள் ஆகிறது
2.அதனின் உணர்வின் செயலாக கடவுள் செய்கின்றது
3.கடவுளுக்குச் செய்யும் சேவையாக இது ஆகிறது என்ற இந்தத் தத்துவத்தை அவர் கொடுத்தார்.

இதை எல்லாம் குருநாதர் என்னிடம் (ஞானகுரு) சொன்னார். நான் புத்தகங்களைப் படிக்கவில்லை.

இந்தியா முழுவதும் யாத்திரை செய்த விவேகானந்தர் இமயமலைச் சாரலில் செல்லும் சமயம்… மந்திரவாதியிடம் சிக்கிக்கொண்ட ஒரு சீடன் “இங்கே மகான் வருகின்றார்…” என்று தேடி ஓடி வந்து விவேகானந்தர் காலிலே பாத நமஸ்காரம் செய்கின்றான். உங்களுடைய அருள் தேவை என்று கேட்கின்றார்… அவரின் சொற்பொழிவுகளையும் கேட்கின்றான்.

ஆனால் சீடனின் குருவான அந்த மந்திரவாதியியோ “நான் கடவுளையே கைவல்யம் செய்துள்ளேன் என்று சொல்லும் சக்தி பெற்றவன் அவனிடம் சிக்கியவன் தான் விவேகானந்தரின் சொற்பொழிவுகளைக் கேட்கின்றான் அவரிடம் ஆசீர்வாதம் கேட்க வருகின்றான்.

இதற்கு முன்னாடி எத்தனையோ நடந்த நிகழ்ச்சிகள் வேறு…! கடைசியிலே நடந்த நிகழ்ச்சிகளை ௳ட்டும் நீங்கள் தெரிந்து கொண்டால் போதும்.
1.இதையெல்லாம் புத்தகத்தைப் படித்துவிட்டு நான் சொல்கிறேன் என்று யாரும் எண்ண வேண்டாம்
2.புத்தகத்தை படிக்கக்கூடிய சரியான நிலை எனக்கில்லை.
3.ஒரு பத்திரிகையைப் படிக்க வேண்டும் என்றாலும் நண்பர்கள் தேவை.
4.என்னுடைய படிப்பறிவு அவ்வளவுதான்…!

தான் விவேகானந்தரின் ஆசி பெற்றதைத் தன்னுடைய மந்திரவாதியிடம் அந்தச் சீடன் சொல்கின்றான்

ஆனால் அந்த மந்திரவாதியோ… நாளை அவன் பேசப்படும் பொழுது இரத்த இரத்தமாகக் கக்கப் போகின்றான்… அவருடைய பாதத்தை நீ நமஸ்காரம் செய்து வருகிறாயே…! என்று அவனை அச்சுறுத்துகின்றான்.

மந்திரவாதி தனக்குள் இருக்கும் ஆவியின் நிலைகள் கொண்டு ஏவல் செய்து விவேகானந்தர் மறுநாள் பேசப்படும் பொழுது… இரத்த இரத்தமாகக் கக்க வைக்கின்றான்.

அதைக் கடந்து சென்ற பின் விவேகானந்தர் குருவை எண்ணிப் பார்க்கின்றார். இராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்னது…
1.நீ எதை எண்ணுகின்றாயோ அதுவே உனக்குள் கடவுளாக இருக்கின்றது.

2.அந்த உணர்வின் செயலாக்கமே உன்னுடைய செயலாக்கமாக வருகின்றது
3.முள் படுக்கையில் நான் படுத்திருக்கும் பொழுது “நீ கடவுளைக் காண வேண்டும் என்று வந்தால்
4.அப்போது நீ எண்ணிய உணர்வின் தன்மையை உன் உயிர் தான் அதை (அந்த வேதனையை) எவ்வாறு இயக்குகின்றது.
5.அந்த உணர்வின் செயலாக செயல் எவ்வாறு இருக்கின்றது என்று காட்டுகின்றார்

அதைக் கண்டு கொண்ட பின்பு தான் “நான் கடவுளைக் கண்டு கொண்டேன் எனக்குள்ளேயே…!” என்று அவர் உணர்ந்து ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதித்து அந்த உணர்வின் எண்ணங்களை எவ்வாறு இயக்க வேண்டும் என்று கால்நடையாக இந்தியா முழுவதும் பறைசாற்றினார்… பாத யாத்திரையாகச் சென்று.

ஆனால் வட இந்தியாவில் மந்திர ஒலிகள் அதிகம்… தென்னாட்டில் இங்கே சுழன்று வந்தார். இங்கிருக்கும் அறிவுகளைக் கண்டார்… மக்களுக்குத் தெளிவான நிலைகளை வழி காட்டினார்.

ஆனால் யாரும் அதை ஏற்றுக் கொள்ளதில்லை புத்தகங்களைப் படிக்கின்றோம்… அறிவின் ஞானத்தைப் போதிக்கின்றோம். தன் நிலையில் அவர் போதிப்பதைக் கடைப்பிடிப்பதில்லை.

காரணம்… நாட்டில் நடக்கும் நடப்புகளில் நல்ல ஒழுக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றாலும் அரசியல் பேதம் மத பேதம் இன பேதம் மொழி பேதம் என்று சாடும் பொழுது… இதை அதிகமாகச் சுவாசித்த பின்… தன் எண்ணங்களில் அதைக் கவரப்படும் போது உண்மையின் நிலையைத் தன்னுள் செயல்படும் நிலைகளை இழந்தே நிற்கின்றோம். அதை மாற்றும் நிலைகள் அற்றே போய்விட்டது.

குருவை எண்ணுகின்றார்…
1.எண்ணியதுதான் கடவுள் என்று நீ உணர்த்தினாய்… அதன்படி உயர்ந்த நிலைகளை எண்ணினேன்
2.ஆனால் இந்த ஏவல் என்ற நிலைகள் “என்னைச் சாடுகின்றதே…” என்று விவேகானந்தர் வேதனைப்படுகின்றார்.

நான் யாருக்கும் தீங்கு செய்யவில்லையே உயர்ந்த எண்ணத்தைத் தானே எண்ணினேன் என்று சாதாரண மனிதன் பலருக்கு உபதாரம் செய்துவிட்டு அதன் நிலைகள் என்னைக் கடவுள் சோதிக்கின்றான் சோதிக்கின்றான் சோதிக்கின்றான் என்று வேதனையைச் சுவாசிப்பது போன்று இவரும் அவ்வாறே சுவாசிக்கின்றார்… நான் எந்தப் பிழையும் செய்யவில்லையே என்று…!

குரு அருளால் மந்திரவாதி ஏவல் பண்ணுகின்றான் என்று உணர்ந்து கொள்கின்றார். அதைப் புரியும் ஆற்றல் வந்துவிட்டது.

எனது உயிர் எனக்குள் இருந்து படைக்கின்றது என்று நீ சொன்னாயே. நான் நன்மைகளைத் தானே செய்கின்றேன். ஆனாலும் அவனுடைய தீமையின் நிலைகள் எனக்குள் வருகின்றதே… ஏவல் செய்கின்றானே…! என்று அவர் சிந்திக்கின்றார்.

மனிதனுக்குள் எடுத்துக் கொண்ட இந்த மந்திரத்தின் ஒலிகள் அவன் ஏவல் செய்யும் பொழுது “எந்தத் தீமையும் செய்யும் என்று” இதைப் பிற்காலங்களில் உணர்த்துகின்றார் தீமைகள் இருந்து மீள வேண்டும் என்று.

இதையெல்லாம் என் குருநாதர் சொன்னதை உங்களுக்கு அப்படியே சொல்கின்றேன்

பரமஹம்சர் காட்டிய நிலையில் கடவுளைக் காண என்று உண்மை நிலையில் தன்னை நாடி வந்தவருக்கு அந்த உணர்வின் தன்மை ஊட்டி தனக்குச் சரியான சீடனாக விவேகானந்தரை எடுத்து… இந்த உணர்வின் வேட்கைகளை உலகிற்குப் பரப்பச் செய்தார்.

ஆனாலும் அந்தத் தத்துவ ஞானி இத்தனை இன்னல்கள் பட்டார்.

அங்கே நகர்ந்து செல்லப்படும் பொழுதுதான் அடுத்தடுத்து அடுத்தடுத்து இந்தத் தீமைகள் வரப்படும் பொழுது “வெறுத்திடும் நிலைகள்” அவருக்குள் வருகின்றது.

1.இந்த உலகின் நிலைகள் நடப்பதை நான் என்னவென்று சொல்வேன்…! என்று தன் மூச்சின் உணர்வின் தன்மையை ஏங்கி…
2.தவறு செய்வோர் நிலைகளை இவருக்குள் அடக்கி அடக்கி அதனால் “தனக்குள் கொதிக்கும் நிலையே” அவருக்குள் வருகின்றது.

நான் தவறு செய்யாது இருந்து… மந்திரவாதியின் சீடன் இங்கே வந்து ஆசீர்வாதம் வாங்கிச் சென்ற பின் நடந்த நிகழ்ச்சியால்… இவருக்குள் கொதிப்புகள் எழுந்து
1.தீமைகளைச் செய்கின்றானே…! இந்தப் பாழடைந்த உலகத்தை நான் என்னவென்று சொல்வேன்…?
2.இனி நான் எதை எதிர்த்துப் போராடுவது என்ற நிலையில்
3.குறுகிய நேரத்தில் “இந்த உடலை விட்டு அகன்றால் போதும்…” என்ற அந்த உணர்வின் நிலையே அவருக்குள் வருகின்றது.

நன்மைக்காகச் செயல்படுத்திய நிலையில் கடைசியில் இந்த உடலை விட்டுப் போனால் போதும்… சேவை என்ற நிலை இருப்பினும் எல்லோரும் இந்த உண்மைகளை உணரட்டும்…
1.அருள் உணர்வுகள் என் உடலில் நிலைத்திருக்கட்டும்…
2.தீமைகளில் நான் சிக்காது இந்த உடலை விட்டு இந்த ஆன்மா பிரிந்தால் போதும் என்று கதறுகின்றார்.

இந்த உணர்வுகள் வேட்கை அதிகமாகும் போது தான் தன்னை அணுகி உள்ள சிஷ்யர்களிடம் “எனக்குக் கொதிக்கின்றது… வீசுங்கள்…” என்று தன் ஆன்மாவை அங்கே பிரிக்கின்றார்.

இவரைக் குண்டலினி யோகம் கற்றவர் என்று சொல்கின்றார்கள். எந்தக் குண்டலினியை அவர் செய்தார்…?

அவர் பள்ளியிலே படிக்கும் காலத்தில் குண்டலினி யோகம் இருந்தால் அதைப் பெற வேண்டும் என்று படிக்கும் பொழுது தான் யோகத்தை மரத்தடியில் செய்து கற்றுக் கொண்டார்.

ஆனால் பிற்காலத்தில் இராமகிருஷ்ண பரமஹம்சரைச் சந்திக்கப்படும் பொழுது
1.யோகம் என்பது அது அல்ல…
2.நீ எதை நினைக்கின்றாயோ இந்த உணர்வு தான் உனக்குள் யோகமாக அமைந்து
3.உணர்வின் செயலாக்கங்களாகச் செயலாற்றுகின்றது என்று பரமஹம்சர் சொன்னார்.

உணர்வினை நுகரும் நிலைகள் கொண்டு “உயிரின் இயக்கத்தால் உணர்வின் நிலை உனக்குள் எவ்வாறு வருகின்றது…?” என்ற இந்த யோகத்தைத் தான் இராமகிருஷ்ண பரமஹம்சர் கற்பித்தார். இவர்கள் சொல்லும் குண்டலினியை அவர் செயல்படுத்தவில்லை.

நான் யார்…? என்ற புதிருக்கு “விடை”

நான் யார்…? என்ற புதிருக்கு “விடை”

 

1.பல பல பிறவிகளில் நாம் செய்த நிலைகள் அனைத்தும் செய்வினையாகி (PAST)
2.அதனுடைய செயல் தொடராக இந்தப் பிறவியில் செய்கின்ற (தற்சமயம் நிகழ்ந்து கொண்டிருக்கும் – PRESENT) வினைப் பயனாகி
3.மீண்டும் செய்த வினையாகின்ற எண்ணத்தின் வழிச் செயலுக்கு வித்தாகும் (FUTURE) “இவனே…!”
4.ஏற்கனவே செய்யப்பட்ட முன் ஜென்ம வினையான உரத்தை ஈர்த்து
5.வினையினது இரு வழிச் செயலான நல்வினை தீவினை இரண்டின் பயன் வீரியப் பயனுக்கு
6.அந்தத் தொடரில் இவனும் உட்பட்டு இரண்டின் பலன்களையும் அனுபவிக்கும் நிலை வருகின்றது.

தீமையோ நன்மையோ எந்த வினையின் வீரியம் அதிகமாகின்றதோ அதற்குள் மற்றொன்று உள்ளடங்கி விடுகின்றது. அப்படி நடக்கும் செயலைத் “தன் விதி” என்னும் செயல்பாடாக
1.செய்த வினையின் வீட்டில் (முன் பிறவிப் பயனால் உருவான உடலில்)
2.செய்யப்பட்ட வினை வந்து இருந்து தன் அரசைத் தான் ஓச்சி
3.தனது செயலுக்கு இவனின் எண்ண உந்துதல்களுக்குத் துணையாகி
4.இன்ப துன்பங்களை ஒவ்வொரு நாளும் அனுபவிக்கச் செய்கின்றது.

மூலமும் இவனே ஆகின்றான்…! மூலக் காரணமும் இவனே ஆகின்றான்…! என்னும் தத்துவக் கோட்பாட்டின் தொடரில் நல்லது கெட்டதன் காரணத்தை ஆராயப் புகும் இவன்
1.தன் எண்ணச் செயலின் நிகழ்வு வழிக் கொள்கைகளைப் புரிந்து கொண்டான் என்றால்
2.நான் என்பது யார்…? என்ற புதிருக்கும்…
3.உயிரா…? ஆன்மாவா…? எண்ணமா…? என்றெல்லாம் சிந்திக்கச் செய்யும்
4.சுழல்கின்ற அணுவின் (உயிரணு) சுழலோட்ட எண்ணத்தின் வினைப் பயனைக் கண்டுணரலாம்.
5.மதி கொண்டு தெளிவு பெற்று உயர் ஞானம் பெறும் செயலுக்கெல்லாம் வழி உணர்ந்திடலாம்
6.அந்த வழியில் நல்வினைப் பயனுக்குச் சக்தி ஊட்டி… சக்தி பெற்று
7.ஆதி சக்தியால் (இயற்கை) கலப்பான தீவினையான எண்ணப் பயன் களையத் தலைப்பட்டு
8.அதைத் தொடர்ந்து வரும் செய்யப்பட்ட வினையின் (இப்பொழுது செய்து கொண்டிருக்கும்) நற்செயலின் செயலுக்கே உரமாக்கிடலாம்.

ஆகவே இந்த ஜென்மத் தொடரில் தொடர்ந்து செய்யப்படுகின்ற வினையின் செயலை
1.நற் செயலாக்கினால்
2.நல் சுவாசத்தால் ஈர்த்துக் கொண்டால்
3.அவ்வாறு அமைக்கும் அதே தொடரில் – செய்த வினைப் பயனை நல் வினையின் வளர்ப்பாக ஆக்க முடியும்.

சந்தர்ப்பத்தால் வரும் தீவினைப் பயன்களை எல்லாம் களைவதற்குத் தியான முறையாக வான இயல் வழியைக் (விண் செல்லும் மார்க்கம்) கண்டு அதன் வழியில் செல்லச் செல்ல அனைத்தும் ஒன்றான நல்வினைப் பயனாக்கிடலாம்.

இத்தகைய விதிகளை எல்லாம் செயல்படுத்துகின்ற காரண காரிய கர்த்தாவான மூலமும் “இவனே ஆவான்…!”

“தூர திருஷ்டி…”

“தூர திருஷ்டி…”

 

1.கண்களால் பார்க்கும் செயல்படம்
2.அகத்திற்குள் தோன்றும் எண்ணத்தின் கற்பனைப் படம்.
3.கனவில் காணும் படம்
4.பிறர் சொல்லும் ஒலி (சொல்லை) கேட்டு அந்த எண்ணத்தில் எடுக்கும் படம்.
5.இப்படி மனித உணர்வில் நாம் நான்கு வகைப் படங்கள் எடுத்துக் கொண்டே உள்ளோம்.

நம்முடைய எதிரில் காண்பவை எல்லாம் நம் கண்கள் படமாக எடுத்துக் கொள்கின்றது.

கற்பனையாக எண்ணும் படத்தை நம் எண்ணத்தின் உணர்வில் ஒரு தடவை எந்த இடத்தை எண்ணிக் கற்பனையில் படம் எடுக்கின்றோமோ அதே தொடர் தான் எப்பொழுது அந்த இடத்தை எண்ணும் பொழுதெல்லாம் நினைவில் வருகின்றது.

அதே படத் தொடர்
1.மற்றவர்கள் ஒலியால் சொல்லக்கூடிய பொருளைப் பற்றி
2.எண்ணத்தின் நினைவு படமாகவே
3.நம் ஆத்மாவில் நாம் பார்க்காமலேயே படமெடுத்து விடுகின்றது – “கற்பனையில்…!”

எண்ணம் உறங்கிய நிலையில் ஆத்மாவில் பதிவான உணர்வின் தொடர் கொண்டு நாம் சுவாசிக்கும் பொழுது “தூக்கத்திலே மோதும் சுவாச ஒலியால்” கனவாக… அந்தப் படமாக… ஆத்மாவில் பதிவு நிலை ஏற்பட்டுவிடுகின்றது.

சரீர வாழ்க்கையில் வாழக்கூடிய செயல் தன்மையில் கண்களால் மட்டுமல்லாமல் ஆத்மாவின் தொடர்பிலும் இப்படம் பதிவாகின்றது. (உதாரணமாக – செவி வழி கேட்கும் ஒலிகள்,,, மூக்கின் வழி சுவாசிக்கும் மணங்கள்… உடலில் உணரும் உணர்வுகள்…)

கண்களால் தான் நாம் அதிகமாகப் படமாக எடுக்கின்றோம். இருந்தாலும் அத்தகைய ஒளி கொண்ட சுவாச கதியில் இயக்கத்தின் தொடர் நம் கண்களின் தொடர்பில்லாமல்
1.கற்பனை… கனவு… வெளியிலிருந்து வரும் ஒலி இந்த மூன்றின் படமும்
2.உணர்வின் பதிவு கொண்டு சுவாசமெடுக்கும் காந்த மின் அலையால் ஆத்மாவின் படமாகப் பதிந்திருக்கின்றது.
3.ஆகவே பார்க்கும் பொருளைப் பற்றிய படங்களும் ஆத்மாவின் பதிவுப் படமே.

இந்தச் சரீரத்தின் செயலால் ஏற்படும் ஆத்மாவின் இயக்கத்தின் கதி தான் மனித வாழ்க்கையின் உயிர் செயல்பாடாக ஆத்மாவின் இயக்கம் ஜீவ காந்த சரீரமுடன் செயல் கொள்கின்றது.

இந்த ஜீவ காந்தமுடன்… ஆத்ம உயிரில்…
1.ஒலி… ஒளி கொண்ட பதிவின் தன்மை உணர்வின் நினைவலைகள் மோதும் செயல்பாட்டில்
2.விழிப்பு நிலை ஏற்படக்கூடிய “ஐந்தாம் நிலையான… ஞானத்தின் செயல் அறிந்து “தூர திருஷ்டி…! (TELESCOPE போல்) என்ற காட்சியைக் காணும் நிலையும்
3.அதற்கடுத்த “ஆறாம் நிலையில்… அண்டத்தில் சுழலும் மண்டலங்களின் உண்மையை” நம் ஆத்மா அங்கு சென்று அறியும் நிலையும்
4.”ஏழாம் நிலையான… படைப்பின் படைப்பாக்கும்” செயல் தன்மையும்
5.அடுத்தடுத்த நிலைக்கு இந்த “உயிரும் ஆத்மாவும்” இணைந்து ஒளிப் படம் எடுக்கும் இந்த ஆத்மாவுக்கே ஏற்படக்கூடிய செயல் நிலைக்கு
6.ஆத்மாவின் விழிப்பு (“நம் விழிப்பு நிலை”) இந்தக் கண் ஒளியில் இருந்து பெறுவதற்கு
7.விழிப்படலத்தின் ஒளித் தன்மையை “மின் காந்த ஈர்ப்பின் செயலுக்குக் கொண்டு வர வேண்டும்…”

அதாவது முதலில் சொன்னபடி நான்கு விதமான படங்களை எடுக்கும் நாம் ஐந்து ஆறு ஏழு என்ற நிலையில் நமக்குச் சொந்தமான “நம் உயிர் ஈர்ப்பது போல்” அலைகளை இழுத்துக் கவர்ந்து இயக்கும் நிலைக்கு வர வேண்டும்.

மூக்கு வழியாகக் காற்றைச் சுவாசிப்பது போல் “ஆன்மாவின் விழிப்பு என்ற… அந்தக் கண்கள் வழியாக” நுண்ணிய அலைகளைக் கவரும் நிலைக்கு வர வேண்டும்.

இன்று விஞ்ஞானக் கருவிகள் கவரும் நுண்ணிய அலைகளைக் காட்டிலும் மிகவும் நுண்ணிய நிலைகளைக் கவர முடியும்.

அது தான் ஆன்மாவின் விழிப்பு நிலை என்பது..!

ஞானிகள் வாழ்ந்த காலத்தில் நடந்த நிகழ்ச்சிகள்

ஞானிகள் வாழ்ந்த காலத்தில் நடந்த நிகழ்ச்சிகள்

 

அன்றைய காலங்களில் இஸ்ரேல் நாட்டில் கிழக்கே பார்த்து வணங்கும் நிலை தான் உண்டு… நமது நாட்டிலும் கிழக்கே பார்த்து வணங்கும் நிலைகள் உண்டு.

ஆனாலும் அன்று நபிகள் நாயகம் மேற்கே பிறைச் சந்திரனைப் பார்க்கின்றார். அது தேய்ந்து வளர்வதையும் பார்க்கின்றார்.

அதாவது சந்திரன் தேய்ந்த நிலைகள் கொண்டு அமாவாசைக்குப் பின் கண்ணுற்றுப் பார்க்கப்படும் போது
1.சூரியனின் ஒளிக்கதிர்கள் அதன் மீது படும்பொழுது எப்படி அது வளர்கின்றதோ
2.இதைப் போல மனிதனுடைய எண்ணத்தில் தீமைகள் அகற்றிடும் தன்மை வளர வேண்டும் என்று
3.பிறைச் சந்திரனைக் காட்டி… ஆரம்பத்தில் அது வளர்வது போன்று
4.ஒளி கண்டு இருள் மறைவது போன்று “மனிதன் தனக்குள் எவ்வாறு தெளிந்த நிலைகள் பெற வேண்டும்…?” என்று
5.உபதேசக் கருத்துக்களை அங்கே மதீனாவில் பரப்பினார்.

அதன் வழியில் அக்காலங்களில் கிழக்கே பார்த்து வணங்குவதற்குப் பதில் மேற்கே பார்த்து வணங்கும்படி செய்தார்.

ஆரம்பத்தில் மக்காவில் நடந்த அதர்மங்களையும் தெய்வீகப் போர்வையில் தவறான நிலைகள் பல செய்ததையும்… தடுக்கத் தனக்கென்று ஒரு கூட்டத்தை அமைத்துப் போர் முரசு கொண்டு நபிகள் செயல்படுத்தினார்.

காரணம்… ரோமானியர்கள் (கவர்னரின்) ஆட்சிக்கு கீழ் இருந்தாலும் அங்கே தீமை கொண்ட கொள்ளையர்கள் பெரும் சொத்துகளைச் சேர்த்து… மற்றவர்களை அடக்கி ஆண்டு… ஆங்காங்கு இருக்கும் நிலைகள் கொண்டு போர்கள் செய்து கொண்டிருந்தார்கள்.

1.சட்டங்கள் இருப்பினும் மதத்தின் கீழ் கடைபிடிப்பதில்லை. அந்த மதங்களின் மீது ஏதும் கை வைப்பதில்லை.
1.அவர்களுக்குக் கப்பம் கட்டுவதும் தன்னை எதிர்க்காத நிலைகள் இருந்தால் போதும் என்ற நிலைகள் இருந்ததனால்
2.இனப்போர்களும் மற்ற போர்களும் வந்தது.

இப்படி… மதத்தின் கீழ் தெய்வீகப் போர்வையில் அங்கே கொள்ளை அடிப்பதும் கொலைகள் செய்வதும் பல தவறுகள் செய்யும் அந்த நிலையில் இருந்து விடுபட வேண்டும் என்று நபிகள் நாயகம் போர் செய்து அந்த மக்காவைக் கைப்பற்றினார்.

அவருக்குள் செயல்பட்ட மகானின் அந்த ஞானத்தின் தொடர் கொண்டு அங்கே மக்காவில் இருக்கும் நிலைகளைச் சீராக்கினார்.

அங்கே 4000 ஆண்டுகளுக்கு முன்…
1.போகரால் உருவாக்கப்பட்ட முருகனும்
2.மனித உணர்வின் நிலைகள்… பல குணங்களின் சிறப்பு கொண்ட விநாயகர் தத்துவமும் “சிலைகளாக” மக்காவில் உண்டு.
3.அதிலே இருக்கும் விநாயகர் சிலையைத் தான் இன்றைய நிலைகள் திருப்பி வைத்து (போகருடைய நிலைகள் கொண்டு) முத்தமிடுகின்றார்கள்.
4.அங்கே யானை மீது லிங்கமும் உண்டு.

இது குருநாதரால் காட்டப்பட்ட நிலைகள். ஏனென்றால் இந்த உலகில் நடக்கும் இரகசிய நிலைகளை குருநாதர் தெளிவாக்கினார்… உலக மக்கள் அனைவரும் தெளிந்திட வேண்டும் என்ற நோக்கத்தில்…!

உணர்வின் எண்ணங்கள் கொண்டு உடல் எப்படி இயங்குகின்றது என்பதையும்… உயிரின் இயக்கங்களையும் உணர்வின் செயலாக்கங்களையும் இப்போது யாம் சொல்வது போன்று தான் அக்காலங்களில் அவர் தெளிவாக எடுத்துரைத்தார்.

அதே சமயத்தில் மனிதனுக்கு மனிதன் எவ்வாறு உதவ வேண்டும்…? என்றும் தீய பழக்கங்களிலிருந்து விடுபட வேண்டும்… குடி போதையோ மற்ற தவறான நிலையில் இருந்து அறவே நீக்கப்பட வேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.

1.மனிதனை உருவாக்கிய உயிரைக் கடவுளாக மதித்து
2.உடலுக்குள் தீங்கு விளைவிக்காது காத்திட வேண்டும் என்று உணர்த்தினார்.

அப்படி உருவாக்கிய நிலைகள் கொண்டு தான் அங்கே மற்ற பழைய சிற்பங்களையும் சிலைகளையும் நீக்கிவிட்டு “உண்மையின் பொருளை மக்கள் பெற வேண்டும்” என்று செயல்படுத்தினார்.