ஞானிகள் பெற்றதைப் போன்று ஒளிச் சரீரம் பெறுவதே நமது குருநாதர் காட்டிய தியானம்.

ஞானிகள் பெற்றதைப் போன்று ஒளிச் சரீரம் பெறுவதே நமது குருநாதர் காட்டிய தியானம்

 

அன்று சப்தரிஷிகளாக வாழ்ந்தவர்கள் அவரில் கண்டறிந்த உணர்வுகள்… தெளிந்த உணர்வுகள் அவர்கள் உடலில் விளைந்ததை… சொல்லின் மூலமாகவும் செயல் வடிவிலும் வெளிப்படுத்திய
1.அந்தப் பேரருள் உணர்வுகள் அனைத்தும் சூரியனால் கவரப்பட்டு
2.அந்த அருள் உணர்வுகள் வான் வீதியில் நம் பூமியில் பரமாக இருக்கின்றது
3.பரமாத்மாவாகக் கலக்கப்பட்டுள்ளது… பரத்தின் ஆன்மாவாக.

தாவர இனங்கள் தன் உணர்வின் சத்தைக் கவர்ந்து செடிகளாக விளைந்தாலும் அதனின்று வெளிப்படும் சத்து… அதுவும் இந்தப் பரமாத்மாவில் தான் கலந்துள்ளது.

அந்தந்தத் தாவர இனங்களில் விளைந்த வித்துகளை எடுத்து நிலத்திலே ஊன்றப்படும் பொழுது… புவியின் ஈர்ப்பின் துணை கொண்டு தன் தன் தாய் செடியின் சத்தினைக் கவர்ந்து… அதன் வழி வளர்ந்து அதன் உணர்வுகள் குணங்கள் அனைத்தும் விளைந்து… மீண்டும் தன் தன் இனத்தின் வித்துகளை உருவாக்குகின்றது.

இதைப் போன்று தான் சப்தரிஷிகள் தனது வாழ்க்கையில் தன்னை அறிந்து இருளை அகற்றி பேரருள் பெற்றுப் பேரொளியாக ஆன அவர்கள் உடலிலிருந்து வெளிவந்த உணர்வுகள் அனைத்தும் இங்கே பரமாத்மாவாக இருக்கின்றது.

1.நமது குருநாதர் காட்டிய அருள் வழியில்… எமக்கு அருளிய அருள் வழிப்படி யாமும் கண்டுணர்ந்து
2.அருள் உணர்வை எமக்குள் வளர்த்துச் சொல்லாக இப்பொழுது வெளிப்படுத்தும் போது இந்த பரமாத்மாவில் இதுவும் படர்கின்றது.
3.சொல்லப்படும் பொழுது எவரெவர்கள் இதைக் கவர வேண்டும் என்ற உணர்வுடன் நுகர்ந்தறிகின்றனரோ
4.கவர்ந்த உணர்வுகள் வித்தாக அவர்களுக்குள் பதிவாகின்றது.

நிலத்திலே எப்படிப் வித்துக்களைப் பண்படுத்தி அதைச் சீராக வளர்க்கின்றோமோ இதைப்போல மகரிஷிகளின் உணர்வலைகளைப் பெறக்கூடிய சத்தாக… “உங்களுக்குள் ஞான வித்தாக இப்பொழுது பதிவு செய்கின்றேன்…”

நீங்கள் எந்த அளவிற்கு அதைப் பெற வேண்டுமென்று கவர்கின்றீர்களோ அந்த அளவிற்கு அது பதிவாகி விடுகிறது. அப்படிப் பதிவான நிலையை நினைவு கொண்டு மீண்டும் கவர்ந்தால்
1.அருள் ஞானிகள் பெற்ற உணர்வுகளை உங்களுக்குள் வளர்க்க முடியும்.
2.வளர்த்த உணர்வின் தன்மை கொண்டு உங்கள் வாழ்க்கையில் தீமைகளை அகற்ற முடியும்.
3.சப்தரிஷிகள் இருளை அகற்றிப் பொருள் கண்டுணர்ந்து எப்படி வாழ்ந்தனரோ
4.பிறவியில்லா நிலை என்னும் நிலையை அடைந்தனரோ அந்த அருள் உணர்வை நீங்களும் பெற முடியும்.

குருநாதர் எப்படிப் பல உண்மைகளை அறிந்துணர்ந்தாரோ அதனை எமக்குள் பாய்ச்சி அதன் வழி என்னிலிருந்து வெளிப்படும்படி செய்தாரோ அதே வழிப்படியே உங்கள் அனைவருக்கும் ஞான வித்தாகப் பதிவு செய்கின்றேன். உங்களுக்குள் அறியாத சேரும் தீமையிலிருந்து விடுபடச் செய்கின்றேன்.

நீங்கள் வளர்க்கும் அந்தப் பேரருள் உணர்வுகள் பரமாத்மாவிலே பரவுகின்றது.
1.இங்கே வாழும் மக்கள் அனைவரும் அவரவர்கள் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட இருளை அகற்றி அருள் வழி அனைவரும் வாழ்ந்திடவும்
2.எத்தனை கோடிச் சரீரங்களில் அதை எல்லாம் கடந்து இந்த உயிர் இன்று மனிதனாகக் கொண்டு வந்ததோ
3.உயிரைப் போன்றே உணர்வுகள் அனைத்தும் ஒளியாகி ஒளிச் சரீரம் பெறுவதே
4.அதாவது ஞானிகள் பெற்றதைப் போன்று ஒளிச் சரீரம் பெறுவதே நமது குருநாதர் காட்டிய தியானம்.

இங்கே இப்போது பதிவு செய்ததை மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து “அந்த ஆற்றலைப் பெற வேண்டும் என்று எண்ணினால்” அதுவே தியானம் ஆகின்றது.

ஜெப ஆற்றலை அருந்துவதே… “சித்தன் சுட்டிக் காட்டிய அன்னம்”

ஜெப ஆற்றலை அருந்துவதே… “சித்தன் சுட்டிக் காட்டிய அன்னம்”

 

மொழி வளர்ச்சி உற்ற விதத்தில் எண்ணுகின்ற எண்ணத்தை வெளியிடும் விதமாக வளர்ந்து… முதிர்வின் மூலமே சப்தஸ்வர நாதலயமாக (இசை) மொழி அமைப்பின் கோர்வை கொண்டு… உள்ளக்கிடக்கையை வெளியிடும் ஏற்றதோர் அமைப்பாக்கி வெளியிடும்… கருத்தின் பாங்கை இரசனையாக உணர்ந்து கொண்ட இடம்… செயலை… யாதென உரைக்கலாம்…?

பாணன் இசைக்கின்றான்… அந்த இசைக் கலைஞன் ஸ்வர பேதமின்றி உள்ளன்போடு இசைக்கின்ற பொழுது “அந்த இசை… உயிரைப் பற்றி நிற்கின்றது…”

இப்படி உரைக்கின்ற பொருளின் உண்மை நிலையே…
1.உணர்வின் எண்ணத்தை மாற்றிக் கொண்டிடும் நிலையால்
2.தீமையான எண்ண குணங்களின் வசம் ஆட்படும் மனது
3.உயர் தன்மையின்… உயர்வு எண்ண நிலை பெற்றிட முடியாது.

நற்குணத் தன்மைகளின் செயல்பாட்டில் “தெய்வீக இசை…” உடல் கடந்து “உயிரைத் தொடுகின்றது” என்ற சொல்லில் ஈர்த்துக் கொண்டிடும் குணச் சிறப்பு விளங்கும்.

மோகத்தின் பால் சிக்குண்ட மனம்…
1.அக்கணையால் தாக்கப் பெற்று… அந்த மோகக் கனலால் தகிக்கப் பெற்று
2.ஆத்ம நிலையே அதனால் தேய்ந்துவிடும் நிலைக்குச் சென்று விடுகிறது.

அதே சமயத்தில் இந்தப் பேருண்மையை உணர்ந்து கொண்டு செயல்படுகின்ற அறிவின் ஆற்றலாக… மோக குணத்தை விலக்கிக் கொள்ள வேண்டிய ஆகார ஜெப ஆற்றலை அருந்துவதே… சித்தன் சுட்டிக் காட்டிய “அன்னம்”

1.மெய் ஞான விழிப்பைச் செயல்படுத்திடும் அறிவாகிய அன்னம்
2.தீதெண்ண குணத்தன்மைகள் விலக்கி… நற்குணத் தன்மைகள் சுரந்திடும் ஈர்ப்பின் அமுதத்தை அருந்த வேண்டிய செயலையே
3.பாலுடன் கலந்த நீரை விலக்கிப் “பாலை மட்டும் அருந்தும் அன்னம்” என்று உரைக்கப்பட்டது

அத்தகைய பகுத்தறியும் ஆற்றல் கொண்டிட்ட அறிவாகிய “அன்னத்தின் மேல் பிரம்மனுடன் சரஸ்வதியாகக் காட்டப்பட்டது மறைபொருள்…”

அந்த நிலையே சிவ சக்தியின் கலப்பாக… ஓங்கார நாதத் தொனியாக… “நாதத்தின் தலைவியாம் கலைமகள்…” பிரம்மத்துடன் கலந்து செயல்படும் சக்தியாக… ஓ…ம் என்ற ஓங்கார நாதம் கேட்பது எங்கே…?

ஊன் உயிர் கலந்திட்ட ஒன்றிய மனத்தின் செயல் தன்மையாக…
1.நாம் உரைக்கின்ற தியானத்தின் வழியாகக் கடைப்பிடிக்கும் ஞானச் செல்வங்கள்
2.அந்த ஓ…ம் என்ற ஓசை கேட்கும் நிலை அடைவர்… மெய்ஞானச் சுடராக விளங்குவர்.

மனச் சோர்வுக்கு மருந்தே தியானம் தான்

மனச் சோர்வுக்கு மருந்தே தியானம் தான்

 

தியானத்தின் மூலம் உயர்ந்த சக்திகளை ஈர்த்துக் கொண்டிடும் செயலால்… தன்னை வளர்த்துக் கொண்டிடும் “ஒலி மின் நுண்காந்தப் புலமாய்”
1.தனக்குள் ஆட்டுவிக்கும் சக்தியைத் தன்னை ஆட்கொண்ட “ஈஸ்வரரின் அருள்” என்றே உரைக்கின்றாய் அல்லவா.
2.அந்த வார்ப்பினைக் காத்துக் கொண்டிருக்கும் செயலில் “காட்டும் உறுதி”
2.சகல மகரிஷிகளினாலும் அன்பு சப்தரிஷிகளினாலும் அருள் நோக்கால் கணிக்கப்படுகின்ற செயலை அறிந்து கொண்டே
3.இத்தியான வழியில் பெற்றிடும் பக்குவத்தில் பெற்று வளர்த்திட “முயல்வோர்கள் முயற்சிக்கட்டும்…!”

“ஈர்ப்பின் கனி” ஈர்த்துக் கொண்டிடும் செயல் பற்றிக் கூறியவை போல் “விளத்தின் கனி” பற்றி அறிந்திடும் ஆக்கம் கூறுவேன்.

ஜீரணிக்கக் கூடிய செரிமானத் தடையைப் பற்றிப் பேசுகின்றாய்.
1.மனத்தின் பரிமாணம் கொள்ளும் உணர்வுகள்
2.தமக்குகந்த “சலனத்தின் நிலை” ஏற்பட்டு விடாத மனத் திறனே
3.உடலைக் காத்திடும் கவசம் ஆகும்.

ஓடு நெகிழ்ந்து அக்கனியின் சேமிப்பாம் சக்தியே… அந்த ஓடு உடைந்து விடாத வண்ணம் வெளிக்கொண்டு வரும் செயல் நிகழ்வு எப்படி உண்டானது…?

வேழம் (யானை) தன்னுள் கொண்டிட்ட ஈர்ப்பின் வலு வீரிய சக்தி கொண்டுதான்…! தன் ஜீவனைப் பற்றிச் சிந்திக்கும் செயலற்ற நிலையாக இருந்தாலும்… “மாற்று நிலைகள் உட்பகுந்திடாதபடி” அந்த வேழத்தின் வலு வீரியம் நாம் வழி நடத்தும் இந்த தியான வழியிலே செயல்படுமப்பா.

1.மனச்சோர்வினுக்கு மருந்து எது…”
2.மனத்தினைத் தெளிவுபடுத்திடும் இந்தத் தியானமே ஆகும்.

வரும் வேக அப்பொருளைக் காப்பது யார்…?

உன் உயிர் குரு வழி நடந்திடும் பக்குவத் தன்மையில்தான்…! என்றே அதை உரைத்திடல் வேண்டுமோ…?

மாலைக்குப் பின் இருள் வரும்…! ஆனால்
1.மாலை வருவதற்கு முன்பே நம் பார்வையில் இருள் காட்டினால்
2.நாம் கொள்ள வேண்டிய பக்குவம் இன்னும் அதிகமாக வலுவாக்கப்படுதல் வேண்டும் என்பதே “அப்பொருள்…!”

அருள் வழியில் தன்னுள் வளர்ப்பாக்கும் சகல சக்திகளையும் செயல்பாட்டில் உலகினுக்கு வழிகாட்டி… சோர்வு நிலை நீக்கி… திண்மையின் மனம் ஏந்தி… ஞானச் செல்வங்கள் (நீங்கள்) நிலைபெற்று வளர்ந்து வலுவாகி… சிவ சக்தியாக ஆதி சக்தியின் கலப்பாக வேண்டும். அதுவே எமக்கு மகிழ்ச்சி.

எமது ஆசிகள்.

வலுவாகத் தியானம் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது

வலுவாகத் தியானம் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது

துன்பத்தை விளைவிக்கும் அணுவாக உடலில் வளர்ந்து விட்டால்
1.உயர்ந்த ஞானிகள் உணர்வை நாம் நுகர்ந்தாலும் இது அணுக்களாக வளரப்படும் போது அது (துன்ப அணுக்கள்) அஞ்சும்…
2.அது கிளர்ச்சியை உண்டாக்கும்… அது நடுங்கும்… உணர்ச்சிகளை ஊட்டும்.
3.அப்போது மேல் எல்லாம் வலிக்கிறதே என்போம்.

நான் தியானம் செய்கின்றேன். எனக்கு மேல் வலிக்கிறதே என்று சொல்வார்கள். சில பேர் நான் தியானம் இருக்கின்றேன்… எனக்கு நல்ல எண்ணங்களே வர மாட்டேன் என்கிறது…! என்று சொல்வார்கள். நுகரப்படும் பொழுது என்னுடைய எண்ணங்களை எங்கோ அழைத்துச் செல்கின்றது என்றும் சொல்வார்கள்.

அழுக்குப் பட்டு விட்டால் அதை நுகர்ந்தால் அந்த அழுக்கின் மணமே வரும். அந்த அழுக்கு நமக்குள் நிலைத்திருக்காது அருள் மகரிஷிகளின் உணர்வுகளைப் பெற வேண்டும் என்று மீண்டும் மீண்டும் எண்ணினால் இந்த அணுக்கள் விளைந்து அசுத்தத்தை உருவாக்கும் அணுக்கள் மடிகின்றது.

1.மடியும் போது எப்படித்தான் இருந்தாலும் அது துடிக்கத்தான் செய்யும் அதனுடைய உணர்வை ஊட்டத்தான் செய்யும்
2.வேதனை என்ற உணர்வு ஆக்கப்படும் பொழுது அருள் மகரிஷிகளின் உணர்வை நுகரப்படும் பொழுது அதற்கு வேதனை…
3.அது துடிக்கும் உணர்ச்சிகளை ஊட்டும். நாம் நல்ல நிலைகளைப் பெற விடாதபடி அது தடுக்கும்.

ஆனாலும்… அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று மீண்டும் “ஒரு தடவைக்குப் பல முறை செய்ய வேண்டும்…”

இந்த உணர்வின் நினைவாற்றல் அதை அடக்கிடும் ஆற்றளாக நமக்குள் பெருகுகின்றது… அதுவே நமக்குள் வலுவாகின்றது. இந்த உடலை விட்டுச் சென்றால் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சுழன்று கொண்டிருக்கும் ஆறாவது அறிவை ஏழாவது நிலைகள் பெற்ற சப்தரிஷி மண்டலத்துடன் நம்மை இணைக்கச் செய்யும்.

அவர்கள் உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்தவர்கள்… ஒளியாக வளர்ந்து கொண்டிருப்பவர்கள். அதனை நாம் நுகரப்படும் பொழுது தெளிந்து தெரிந்து தெளிவாக வாழ்ந்திடும் அணுக்களாக நமக்குள் விளையும். ஆகவே அதைச் சொந்தமாக்க வேண்டும்.

1.இந்த வாழ்க்கையில் வரும் இன்னல்களைச் சொந்தமாக்கி விட்டால்…
2.நான் நல்லதைச் செய்தேன் எனக்கு இப்படி வந்து விட்டதே…! என்ற இந்த ஏக்கத்தை வளர்த்து விட்டால்
3.மீண்டும் பிறவிக்குத் தான் வர முடியும்.

இந்தச் சாமியார் தருவார் அந்தத் தெய்வம் தரும் என்று இப்படி எண்ணங்களை அலைய விட்டால் நாம் நுகர்ந்த அந்த உணர்வே நமக்குள் தெய்வமாக இயக்குகின்றது.

அந்த எண்ணமே சீதா ராமனாகின்றது சுவையின் எண்ணங்களாக உருவாக்குகின்றது அதன் உணர்வின் சக்தியாக கடவுளாக நமக்குள் இயக்குகின்றது. அந்தக் குணமே நமக்குள் தெய்வமாக வரும்.

அஞ்சும் உணர்வுகளை நுகர்ந்து விட்டால் அதுவும் சீதா தான் அந்த உணர்வின் எண்ணங்களை நமக்குள் உணர்த்தப்படும் பொழுது சீதாராமா தான் இதை உருவாக்குவது நாராயணன் சூரியன். தனக்குள் கலந்து கொண்ட உணர்வுகள் உயிரிலே நுகர்ந்தால் சீதாராமா.

நாராயணன் திரேதா யுகத்தில் சரீர யுகத்தில் எண்ணங்கள் கொண்டு இயக்குகின்றான் நாராயணன். நரநாரயணனோ நாம் நுகர்ந்த உனர்வை அணுவாக மாற்றுகின்றான் என்ற உண்மையைத் தெளிவாக்குகின்றார்கள்.

ஆகவே இதை உணர்ந்து கொண்டு இந்த வாழ்க்கையில் நாம் எதைப் பற்றிடல் வேண்டும்…?
1.அருள் மகரிஷிகளின் உணர்வைப் பற்றுடன் பற்றிடல் வேண்டும்
2.இந்த வாழ்க்கையில் வாழும் பொழுதே “தீமைகளை அகற்றிடும் வல்லமையைப் பெற வேண்டும்…”

உலக மக்கள் அனைவரும் அருள் ஒளி பெரும் சக்தி பெற்றிடத் தவமிருப்பேன்

உலக மக்கள் அனைவரும் அருள் ஒளி பெரும் சக்தி பெற்றிடத் தவமிருப்பேன்

 

1.ஓம் ஈஸ்வரா…! என் உடலை உருவாக்கிய உயிரை “ஈசன்” என்று துதிப்பேன். ஓம் ஈஸ்வரா.. ஓம் ஈஸ்வரா…! உயிரால் உருவாக்கிய என் உடலைச் “சிவன்” என்று துதிப்பேன். ஓம் ஈஸ்வரா…!

2.என் உடலுக்குள் இணைந்த உணர்வுகள் அனைத்தையும் வினைக்கு நாயகனாகத் துதிப்பேன்…! விநாயகனாகத் துதிப்பேன்…! நான் நுகர்ந்த உணர்வுகள் அனைத்தும் சீதாராமனாகத் துதிப்பேன்…! ஓம் ஈஸ்வரா.. ஓம் ஈஸ்வரா…!

3.உயிரால் உருவாக்கிய கண்ணைக் கண்ணன் என்று துதிப்பேன். கண்ணின் கருவிழியை ருக்மணி என்று துதிப்பேன். கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலனறிவை சத்தியபாமா என்று துதிப்பேன். ஓம் ஈஸ்வரா.. ஓம் ஈஸ்வரா…!

உயிரால் உருவாக்கிய கண்ணின் கருவிழி தன் எதிரிலே இருப்பதை உடலுக்குள் பதிவாக்குகின்றது. அந்த உருவத்தில் இருந்து வெளிப்படும் உணர்வின் சத்தைக் கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலனறிவோ கவர்ந்து அங்கே இருக்கும் உண்மை உணர்வுகளைத் தனக்குள் ஊட்டுகின்றது சத்தியபாமா என்று. இரண்டும் சேர்த்துக் கண்ணன் என்று ஞானிகள் இதைக் காரணப் பெயர் சூட்டினார்கள்.

4.கண்ணின் கருவிழியை ருக்மணி என்று துதிப்பேன். கண்ணின் காந்தப் புலனறிவை சத்தியபாமா என்று துதிப்பேன். கவர்ந்த உணர்வுகளைச் சீதாராமன் என்று துதிப்பேன். கவர்ந்த உணர்வுகள் அனைத்தும் என்னுள் எண்ணங்களாக இயக்கும் உணர்வைச் சீதாராமன் என்று துதிப்பேன். ஓம் ஈஸ்வரா.. ஓம் ஈஸ்வரா…!

5.உயிரின் துடிப்பை ஈசன் என்று துதிப்பேன். உயிரின் துடிப்பால் உருப்பெறும் வெப்பத்தை விஷ்ணு என்ற துதிப்பேன். துடிப்பால் ஈர்க்கும் சக்தியை லக்ஷ்மி என்று துதிப்பேன். உயிரால் நுகர்ந்த உணர்வுகள் உடலில் அணுவாகும் பொழுது பிரம்மா என்று துதிப்பேன். உருப்பெற்ற மணத்தைச் சரஸ்வதி என்று துதிப்பேன்… பிரம்மாவின் மனைவி என்று துதிப்பேன். ஓம் ஈஸ்வரா.. ஓம் ஈஸ்வரா…!

6.பல கோடி உடல்களில் அறிந்துணர்ந்த உணர்வுகள் அனைத்தும் மனித உடலுக்குள் உருப்பெற்று வளர்ந்த அரும் பெரும் சக்தியை அருள் ஞான சக்தியாகத் துதிப்பேன். மாற்றி அமைக்கும் சக்தியாக முருகா என்று துதிப்பேன்… முருகு என்று துதிப்பேன்… என்னை அழகுப்படுத்தும் அறிவு என்று துதிப்பேன். அருள் ஞான சக்தி என்று துதிப்பேன். அருள் வழியில் எனக்குள் உருவாக்கும் ஆறாவது அறிவைப் பிரம்மன் என்று துதிப்பேன். பிரம்மா என்று துதிப்பேன். ஓம் ஈஸ்வரா.. ஓம் ஈஸ்வரா…!

7.அருள் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் சக்தியாக ஆறாவது அறிவு கொண்டு அந்த அருள் ஞான வழியில் வாழ்வேன்.., அருள் ஒளியாகப் பெறுவேன், பிறவியில்லா நிலை அடைவேன்…! அண்டத்தில் ஒளிச்சுடராக வாழ்வேன், வளர்வேன். ஓம் ஈஸ்வரா.. ஓம் ஈஸ்வரா…!

8.உயிரால் உருவாக்கிய இந்த மனித உடலைக் காப்பேன். அருள் ஞான சக்தியை நுகர்வேன். எனக்குள் அறியாது சேர்ந்த தீய வினைகளை அகற்றுவேன். அருள் சக்தியை எனக்குள் பெறுவேன். இந்த உடலுக்குள் அறியாது சேர்ந்த தீய வினைகளால் விளைந்த நோய்கள் அனைத்தையும் அகற்றுவேன், அருள் ஞான சக்தி பெறுவேன். ஓம் ஈஸ்வரா.. ஓம் ஈஸ்வரா…!

9.இந்த உடலில் அறியாது சேர்ந்த தீய வினைகளால் விளைந்த ஆஸ்துமா நோய், சர்க்கரை சத்து, இரத்தக் கொதிப்பு, வாத நோய் அனைத்தையும் அகற்றுவேன். அருள் ஞான சக்தியை என் உடலில் வளர்ப்பேன்… அருள் சுடராக வளர்ப்பேன்.

என் உடலில் உள்ள அணுக்கள் அனைத்தையும் மகரிஷிகளின் அருள் ஒளி பெறச் செய்வேன். அருள் ஞான வழியில் இந்த உடலைக் காப்பேன். இந்த உடலை உருவாக்கிய ஈசனைத் துதிப்பேன். அருள் ஒளி பெறுவேன். இந்த உடலில் வந்த இருளை நீக்குவேன். ஓம் ஈஸ்வரா.. ஓம் ஈஸ்வரா…!

10.என் உடலை உருவாக்கிய என் அன்னை தந்தையைக் கடவுளாகத் துதிப்பேன். என்னைக் காத்தருளிய அருள் சக்தியாக விளங்கிய என் அன்னை தந்தையைத் தெய்வமாகத் துதிப்பேன்.

என் வாழ்க்கைக்கு வழி காட்டிய என் தாய் தந்தையை முதல் குருவாகத் துதிப்பேன். அவர்கள் வழியில் அருள் ஒளி பெறுவேன். இருளை நீக்கும் ஆற்றலைப் பெறுவேன். என் அன்னை தந்தை துணை கொண்டு அருள் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவேன். ஓம் ஈஸ்வரா.. ஓம் ஈஸ்வரா…!

11.வாழ்க்கையின் இருளை அகற்றுவேன். அருள் ஞான வழியில் வளர்வேன். என் பார்வையில் நான் பார்ப்போர் அனைவரும் தெளிந்த மனம் பெறத் தியானிப்பேன். உலகைக் காத்திடும் உணர்வாக என்னுள் வளர்த்திடுவேன். உலகம் அனைத்தும் ஒன்றென்று இணைப்பேன். உலக சக்தியே எனக்குள் உண்டென்று உணர்வேன்.

அருள் ஞான வழியில் உலக மக்கள் அனைவரையும் என்னுடன் இணைந்து… கல்யாணராமனாக வாழ்ந்திடுவேன். இணைந்து வாழ்ந்திடுவேன். இன பேதமின்றி மொழி பேதமின்றி மத பேதமின்றி வாழ்ந்திட அருள் ஞான சக்தியைத் தியானிப்பேன். உலக மக்கள் அனைவரும் அருள் ஒளி பெரும் சக்தி பெற்றிடத் தவம் இருப்பேன். ஓம் ஈஸ்வரா.. ஓம் ஈஸ்வரா…!

உங்களைக் காக்கும் ஆற்றல்மிக்க சக்தி

உங்களைக் காக்கும் ஆற்றல்மிக்க சக்தி

 

இந்த உபதேசத்தைக் கேட்பவர்கள் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது
1.கூட்டுத் தியானத்தின் மூலமாக மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறக்கூடிய தகுதியை உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கின்றோம்.
2.அதைப் பதிவு செய்வதற்குத் தான் பௌர்ணமி தியானமும் மற்ற அனைத்துமே.

மனிதனின் உணர்வில் கலந்த நஞ்சினை மாற்றி உணர்வுகளை ஒளியாக மாற்றி முதல் மனிதன் அகஸ்தியன் துருவத்தை அடைந்து துருவத்தின் சக்தியைத் தனக்குள் பெற்று ஒளிச் சரீரம் பெற்று விண்ணுலகம் சென்றது. அகஸ்தியன் துருவனாகித் துருவ மகரிஷி ஆகி துருவ நட்சத்திரம் ஆனது

அவர்கள் உடல்களில் இருந்து வெளிப்படுத்தப்பட்ட நஞ்சினை வென்றிடும் உணர்வினைப் பின்பற்றிச் சென்றவர்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இன்றும் சப்தரிஷி மண்டலங்களாகத் திகழ்ந்து கொண்டு உள்ளார்கள்

அங்கிருந்து வெளிப்படும் அந்த உணர்வின் ஆற்றல் மிக்க சக்திகள் நம் பூமியிலே படர்ந்து கொண்டிருக்கின்றது. அதனை நாம் பருக வேண்டும் என்றால்
1.அந்த ஆற்றல்மிக்க சக்திகளை நம் உடலில் பதிவு செய்த பின்பு தான்
2.அந்தச் சக்தியைப் பெறும் தகுதியைப் பெறுகின்றோம்.

இப்பொழுது ஒருவருக்கொருவர் திட்டிக் கொண்டால் அதைப் பத்து வருடம் கழித்து எண்ணினால் கூட நமக்குள் அந்த எண்ணங்கள் உடனே கோபமும் ஆத்திரமும் வெறுப்பும் இந்த உணர்ச்சிகள் உணர்வுகள் தூண்டப்படுகின்றது.

இதைப்போன்று தான் மகரிஷிகளின் அருள் சக்திகள் ஆழமாகப் பதிவாக்கிக் கொண்ட பின் ஒவ்வொரு நிமிடமும் மனிதன் வாழ்க்கையில் நம்மை அறியாது வரும் சலிப்பு சஞ்சலம் வேதனை வெறுப்பு போன்ற உணர்வுகள் நமக்குள் அழுக்காகச் சேர்வதை நாம் மாற்றி அமைக்க முடியும்.

கூட்டு தியானங்களின் மூலமாக அனைவரும் நலம் பெற வேண்டும் என்று பதிவாக்கிய ஆற்றல்மிக்க சக்திகள் இங்கே பரவி உள்ளது அந்த ஆற்றலைப் பெற வேண்டும் என்று எண்ணி “வேறு எண்ணங்கள் இல்லாதபடி”
1.மகரிஷிகளின் அருள் சக்தியை நான் பெறுவேன்
2.என் உடல் முழுவதும் அதைப் பரவச் செய்வேன்
3.என்னை அறியாத வந்த இருளை நீக்கச் செய்வேன்
4.மகரிஷிகளின் ஆற்றலால் இந்த மனித வாழ்வில் நலமும் வளமும் பெறுவேன்
5.என் தொழிலில் மன மகிழ்ச்சி அடைவேன்
6.என் சொல் எல்லோரையும் நலம் பெறச் செய்யும்
7.என் பார்வை அனைத்தையும் நலம் பெறச் செய்யும்
8.என்னைப் பார்ப்பவர்களை அது நல்லவராக்கும் என்ற உணர்வுடன் நீங்கள் ஏங்கித் தியானித்தால் போதுமானது.
9.இந்தக் காற்றிலே பரவி உள்ள அந்த அருள் உணர்வுகள் “உங்களைக் காக்கும் உணர்வாக விளையும்…”

ஏனென்றால் அனைவரும் நலம் பெறும் சக்தியாகத் திகழ வேண்டும் என்று சதா நான் (ஞானகுரு) தியானம் இருக்கின்றேன்… தவம் இருக்கின்றேன்

இதை மனதில் வைத்து நீங்கள் அனைவருமே தியானத்தின் மூலம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்று… அவ்வப்போது ஆத்ம சக்தி செய்து தீமையை நீக்கும்படி… உணர்வுகளை ஒளியாக மாற்றும்படி வேண்டிக் கொள்கின்றேன்.

குப்பையில் வளர்கின்றது “நல்ல சக்தி மணிகள்”

குப்பையில் வளர்கின்றது “நல்ல சக்தி மணிகள்”

 

மாற்றத்தின் வளர்ச்சித் தொடர் அலையினால் இக்காற்றுடன் அதன் சக்தி நிலையும் வளர்ச்சியுறும் நிலையிலிருந்து கூடப் போகின்றது.

காற்றிலிருந்துதான் அத் தீய சக்தி அதன் ஈர்ப்பில் வளர்கிறது. அதனால் இனம் தான் அத்துடன் கலக்கப் பெறுகிறது என்று உணர்த்தியுள்ளீரே… “வளர்ச்சியுறும் நிலை” என்றால் என்ன…? என்று அடிப்படை வினா எழும்பலாம்.

சூரியனிலிருந்தும் பால்வெளி மண்டலத்திலிருந்தும் நம் பூமியின் ஈர்ப்புக்கு வரும் குண அமிலமானது பூமியின் சுவாசத்தில் இழுபட்டு அது வெளிப்படுத்தும் நிலையுடன் பூமியுடன் ஐக்கியப்பட்டு அதன் உயிரணுத் தோன்றி அதன் வளர்ச்சியில் வளரும் செழிப்பிலிருந்து வெளிப்படும் அமில குணங்களின் நிலை வேறுபடுகிறது. அழுத்தமான அமில குணங்கள்தான் சூரியனிலும் பால்வெளி மண்டலத்திலும் உள்ளன.

சுவாசத்தில் பட்டு வெளிப்படும் நிலையில் வளரும் இயற்கையிலிருந்து வெளிப்படும் அமிலத்தின் மாற்றம் உண்டு.

1.இப்பொழுது நாம் பலதரப்பட்ட உணவு வகைகளை உண்டு மீதியைக் குப்பையாக்குகின்றோம்.
2.அக்குப்பையில் இருந்து அதன் ஈர்ப்பில் உள்ள சத்துக்களை மட்டும் எடுத்து உன்னத மணிகளைக் காண்கின்றோம்.

இப்படி இது நாள் வரை அமில குணங்களையும் உயிரணுக்கள் சுவாச நிலைகள் மண்டலத் தன்மைகள் ஒவ்வொன்றின் நிலையையும் உணர்த்தி வந்தோம் என்றால் எதன் அடிப்படைப் பொருள் காண…?

1.நம் உடலில் பல வகை அமிலங்கள் கொண்ட பல கோடி உயிரணுக்கள் உள்ளன.
2.இதிலிருந்து எல்லாம் நம் ஞான மணியை ஈர்த்து ஒளி பெறல் வேண்டும்.

குப்பையில் வளர்கின்றது நல்ல சக்தி மணிகள்.
1.இவ்வுடல் என்ற குப்பைக் கூட்டிலிருந்து நம் மணிக்கான உரம் எடுத்துக் கொள்ள வேண்டிய செயல் முறையை
2.இத்தியானம் என்ற வழிபாட்டு முறையினை ஏற்படுத்திக் கொண்டால் பக்குவச் செயல்படுத்தி
3.நம் உடலில் உள்ள பல அமிலங்களில் கலந்துள்ள பல கோடி உயிரணுக்களில் இருந்து நம் ஞானத்தின் வளர்ச்சிக்கு சத்தெடுத்து
4.தெய்வ ஞானம் பெற்று… ஒவ்வொரு மனிதனும் “தான் அடைய வேண்டும் என்று எண்ணும்…” உன்னத நிலை எது…? என்று அறிந்து ஒளி பெறலாம்.

சக்தி நிலை சகலத்திலும் இருந்தாலும் அதற்குகந்த வழி நிலையில்தான் அச்சக்தி நிலை வளர்கின்றது. மாற்றவோ திருத்தவோ மனித ஞானத்திற்கு வழி தெரிகின்றது.

இருந்தாலும்… தன் ஞானத்தைப் பலவற்றிலும் கலக்கவிட்டுள்ள மனிதன் தன்னைத் தானே உணர்வும் ஞான வழிபாட்டினை அறியாமல் வாழுகின்றான். கால நிலையின் குறைவை… இப்பொழுது உள்ள மனித வாழ்க்கையின் சந்தர்ப்ப காலத்தைப் பயன்படுத்தி வாழுங்கள்.

“தன் பலம்” காணுங்கள்

“தன் பலம்” காணுங்கள்

 

1.தன் சக்தி நிலை கூடக்கூட ஆத்ம பலம் வலுவேறி
2.தன் உயிராத்மாவிற்கு வீரிய உரம் ஏற்றித் தன் பலம் என்னும் உண்மை பலத்தை
3.இம் மனித ஆத்மாக்கள் பெறக்கூடிய நிலை பெற வேண்டும்.

தன் பலம் பெறத்தக்க வழிமுறைகளைப் பல உணர்த்தியுள்ளோம். மண் மணலாகி… மணல் உருண்டு வளர வளரச் சிறு கல்லாகி… பாறையாகி… மலையாகி வாழவில்லையா…?

ஒன்றுடன் ஒன்று சக்தி நிலை கூடிக்கூடி வலுப்பெற்று வளர்ந்து கொண்டேதான் உள்ளது. மனிதனின் வளர்ந்த நிலை தான் “எல்லாவற்றின் ஐக்கியமும்…” அறிவாற்றல் கொண்டுள்ள மனிதன்
1.தன் ஞானத்தை இவ்வழித்தொடரில் உரம் பெற்று ஆத்ம பலம் பெறப் பெற
2.மனிதனின் உயிரணுவின் வளர்ச்சி நிலை வளரப் பெறுகிறது.

உயிரணுவாய் உயிராத்மாவாய் இச்சுழற்சி வட்டத்தில் பிறந்து வாழும் நாம்… ஒவ்வொரு இயற்கையும் பலவாக வளரும் பொழுது இயற்கையின் உயர் சக்தி மனிதன் தன் உயிராத்மாவிற்கு உரம் கூட்டி அவ்வுயிராத்மாவை வளர்க்கக் கூடிய பக்குவ ஞானத்தைச் செயல் கொண்டு வளர்த்திட்டால்… இம் மனிதனின் உண்மையின் “உயர்ந்த பலம் கூடி” உயர் நிலை பெறலாம்.

காற்றில் தான் சகலமும் கலந்துள்ளன. அக்காற்றிலுள்ள அமில குணத்தில் தனக்குகந்த சக்தியை ஒவ்வொரு இயற்கை குணங்களும் அதற்குகந்த அமிலத்தை ஈர்த்து வளர்க்கும் செயலைப்போல்… மனிதனாய் வாழும் நாமும் நம் எண்ணத்தை இவ் இயற்கையில் காற்றுடன் கலந்துள்ள அமில சக்தியில் பலவும் உள்ள பொழுது… இவ்வெண்ணத்தைக் கொண்டு நாம் எடுக்கும் சுவாசத்தினால் நாம் எடுக்கக்கூடிய எண்ண நிலைக்கொப்ப… அதன் செயல் கொண்ட அமில குணத்தின் சக்தியை நம் சுவாசம் ஈர்த்து நம் உயிராத்மா பலம் கொள்கின்றது.

இக்காற்றிலும் நீரிலும் இருந்துதான் மின் அலையை எடுக்கின்றார்கள்.
1.இவ்வுலகினில் தோன்றும் மின் அலைகளின் துளிகள் தான் உயிரணுக்கள் யாவையுமே.
2.உயிர்த் துடிப்பு ஏற்படவே அம்மின் அலை இருந்தால்தான் செயல் கொள்ள முடியும்.

நீரைப் பாய்ச்சிச் சுழலவிட்டு மின் அலையை எடுத்து ஒளியையும் பல இயந்திரங்களை இயக்கவும் சாதன முறை கொண்டு செயலாக்குகின்றோம்.

இப்பூமி பல மண்டலங்களில் இருந்து வரும் ஒளி அலைகளையும் அம் மண்டலங்களின் இயற்கை குணத்தையும் ஒன்றுக்கொன்று ஈர்த்து எடுக்கின்றது என்றால் “காந்த அலையின் ஈர்ப்பினால்” ஒவ்வொன்றும் சுழன்று செயல்படுகிறது.

நம் பூமி சூரியனின் ஒளி அலையை ஈர்த்து வெளிப்பட்டு இவ்வுலகச் சுழற்சி ஓட்டத்தில் ஓடியே செயல்படுவதுவும்… ஒவ்வொரு உயிரணுவுமும் ஜீவ உடல்களும் வாழுகிறதென்றால் “காந்த மின் அலையின் சக்தி நிலையில் இருந்துதான்” எல்லாமே செயல் கொள்கின்றன.

மின்சாரத்தை விஞ்ஞானத்தில் மட்டும் காண்கின்றீர். இவ்வுடலும் மற்ற எல்லாமுமே மின் அலையின் கூட்டுத்தான்.

மிகவும் சக்தி வாய்ந்த உயிரணுவின் ஆத்மக்கூட்டை இவ்வுடல் என்ற பிம்ப வாழ்க்கைக்குச் சொந்தப்படுத்தி இப்பந்தச் சுழற்சியிலேயே நம் சக்தியையும் செயலையும் விரயப்படுத்துதோடு இல்லாமல்… பல சஞ்சலங்கள் கொண்ட ஆவேச உணர்ச்சிகளுக்கெல்லாம்… நம் உயர் சக்தியை நம்மை அறியாமல் விரயப்படுத்துகின்றோம்.

பல கோடி கோடி உயிரணுக்களின் துணை கொண்டு உயிர் வாழும் நாம் இவ்வட்டச் சுழற்சியில் வாழ்க்கை என்ற நிலையிலும் நிறைவு பெறாத வாழ்க்கையை வாழ்ந்து… இம்மனிதனாய் வாழ்ந்த… வாழக்கூடிய செயல் பெற்ற நாம்…
1.இவ்வெண்ணச் சுழற்சியை “எதற்கும் பயன்படாத நித்தியக் கடனில் மூழ்கி வாழ்கின்றோம்…”
2.தன் உயிராத்மாவை நல் ஞானம் பெறும் வழி பெற்ற ஞானியின் செயலினால் என்ன பயன்…? என்ற வினாவும் எழும்பலாம்.
3.உயிராத்மாவின் வலுவைக் கூட்டுவதினால் என்ன பயன்…? என்ற வினாவும் எழும்பலாம்.
4.பயன் கண்டு இச்சுழற்சி வாழ்க்கையில் வாழ்ந்து மட்டும் எப்பயனை எவ்வாத்மா (சாதாரண நிலையிலுள்ள ஆத்மா) கண்டது…?

ஆதி சக்தியின் பரம்பொருளின் உண்மையை (அடைய) உணர பல ஆத்மாக்களுக்கு ஆவல் உண்டு.

தன் உயிரணுவின் ஆத்ம பலத்தை நாம் கூட்டிக் கொண்டால்… அப்பரம்பொருளின் சக்தி அலையில் உள்ள உயர்ந்த சக்தியின் ஈர்ப்பை நம் எண்ணத்தினால் ஜெபம் கொண்டு ஈர்க்கவல்ல முறை பெற்று… நம் உயிராத்மாவிற்கு நல் உரத்தை நாம் சேமிக்கலாம்.

நம் எண்ணத்தைப் பல நிலைகளில் செயல்படுத்தி வாழ்ந்து…
1.நம் உடலில் உள்ள பல கோடி உயிரணுக்களையும் அதனதன் எண்ண நிலைக்கொப்ப வாழ விடாமல்
2.அனைத்து உயிரணுக்களும் நம் உயிரணுவிற்கு நாம் எண்ணும் ஒரு நிலை கொண்ட எண்ணத்தில் செயல்படும் வழி முறை கூட்டி
3.வாழ்க்கையில் ஏற்படும் எந்த நிலைக்கொப்ப எண்ணத்தின் தொடரின் ஈர்ப்பிலும் நாம் சிக்காமல்
4.அதிலிருந்து ஒதுங்கிச் சலிப்புற்றும் வாழாமல்
5.எவ்வட்டச் சுழற்சி எண்ணத்தையும் நாம் எண்ணியே அடிமைப்படாமல்
6.பரம்பொருளின் உண்மைச் சக்தியின் வீரிய குணத்தின் அலைத்தொடரில் ஐக்கியம் கொண்டே வாழக்கூடிய பக்குவம் நாம் பெறுவது தான்
7.நம் உயிராத்மாவின் பலத்தைக் கூட்டிக் கொள்ளும் நிலை.

நாக சர்ப்பம் விஷத்தையே ஈர்க்கும் சுவாச குணமுடையதாய் இருப்பதினால் அதன் எண்ண நிலை எதன் நிலைக்கும் மாறு கொள்வதில்லை. விஷ ஜெந்துவாய் நாம் காண்கின்றோம். “அவ்விஷத்தையே உரமாக்கி வைரமாக்கி… மாணிக்கமாய் சேமித்து வளர்த்து… ஒரு நிலையில் வாழ்கின்றது‌ அந்நாக சர்ப்பம்…”

பல நினைவலைகள் பலவும் உள்ளவன் தான் மனிதன்.
1.பலவற்றில் ஒன்றான உயர் அமில ஞான குணத்தை எண்ணிடும் வழி முறையைத் தான் பெறல் வேண்டும்
2.பெற்று “தன் பலம் காணுங்கள்” என்று உணர்த்துகின்றோம்.

இயற்கையில் உள்ள அனைத்து நிலைகளுமே அதனதன் குண வட்டத்தில்தான் ஒரு நிலையில் ஈர்த்து வளர்ந்து வாழுகின்றன. ஒன்றுடன் ஒன்று வளர்ச்சி பெற்று வளர்ந்துள்ள இயற்கையில் இஜ் ஜீவ ஜெந்துக்களின் நிலையில்தான் பல மாற்ற குணங்கள் உண்டு.

1.தன் நிலை உணர்ந்து மனிதன் வாழ்ந்தால் உலக ஞானத்தையும்
2.மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்தி என்று உணர்த்தும் அப்பரம்பொருளின் உண்மையையும் உணர முடியும்.

உறுப்புகள் தியானம்

உறுப்புகள் தியானம்

 

சிறுகுடல் பெருங்குடல்:-
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் சிறுகுடல் பெருங்குடல் முழுவதும் படர்ந்து… சிறுகுடலையும் பெருங்குடலையும் உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஆசைப்படுங்கள். இப்பொழுது சிறுகுடலும் பெருங்குடலும் வீரியமடைகின்றது.

குடல்களில் வரக்கூடிய உபாதைகளோ ஆகாரத்தை ஜீரணிக்க முடியாத நிலையோ இது போன்ற குறைபாடுகள் இருந்தால் இவ்வாறு நாம் தியானித்தால்
1.நமது குடலில் வளர்ச்சி அடைந்த அணுக்களை வீரியமடையச் செய்து
2.சாப்பிடும் ஆகாரத்தை நல்ல இரத்தமாக மாற்றும் சக்தி பெறுகின்றது.

இப்பொழுது சிறுகுடல் பெருங்குடல் உற்சாகமடைவதை உணரலாம்.

கணையங்கள்:-
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் கணையங்கள் முழுவதும் படர்ந்து கணையங்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா.

சாப்பிடும் ஆகாரத்தை ஆவியாக மாற்றி அமிலமாக மாற்றும் அந்தக் கணயங்கள் ஒவ்வொரு விதமான நிலைகளாகப் பிரித்துச் சீராக்குகின்றது.

சர்க்கரை ஆலைகளில் “கெமிக்கலைப் போட்டு” அழுக்குகளைப் பிரித்து நல்லதாக மாற்றிக் கொண்டு வருவது போன்று நமக்குள் இருக்கும் நல்ல உணர்வுகளைப் பிரித்து மூன்று விதமான நிலையில் அது மாற்றுகின்றது.
1.கணையங்களை உருவாக்கிய அணுக்களுக்கு துருவ நட்சத்திரத்தின் வலுவை ஏற்றப்படும் பொழுது…
2.சத்துகளைச் சமமாகப் பிரித்து நல்ல உணர்வை ஊட்டும் நற் சக்தியாக மாற்றுகின்றது.

கல்லீரல் மண்ணீரல்:-
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் கல்லீரல் மண்ணீரல் முழுவதும் படர்ந்து கல்லீரல் மண்ணீரலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா.

பெரிய கல்களையும் அடுத்து சிறு கல்களையும் அடுத்து மணல்களையும் போட்டு அதன் மூலம் அழுக்குத் தண்ணீரை வடிகட்டினோம் என்றால் அழுக்குகள் அங்கே பிரிக்கப்பட்டு நல்ல நீராக அது மாறுகிறது.

அதைப் போன்று கல்லீரலை மண்ணீரலும் அமிலமாக மாற்றுவதைப் பரிசுத்தப்படுத்தி “நல்ல இரத்தமாக” மாற்றும் சக்தி பெறுகின்றது.

நுரையீரல்:-
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் நுரையீரல் முழுவதும் படர்ந்து நுரையீரலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா.

ஒரு இன்ஜினுக்குள் பெட்ரோல் சென்ற பின் அதை ஆவியாக மாற்றி இன்ஜினை அது எப்படி இயக்குகின்றதோ அதைப் போல்
1.அமிலமாக மாற்றியதை நுரையீரலுக்குள் சென்ற பின் வாய்வாக மாறி அதன் உணர்வு கொண்டு
2.நம் உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தையும் இதன் துணை கொண்டு இயக்கும் சக்தி பெறுகின்றது நமது நுரையீரல்.

வெளியிலிருந்து காற்றை இழுப்பதும் நம் உடலுக்குள் தீமைகளைக் கழிப்பதும்
1.அருள் உணர்வைப் பெறச் செய்வதும் அனைத்துமே இந்த நுரையீரல் தான்.
2.ஆகவே தீமையை நீக்கும் அந்த வலிமையான சக்தியை நுரையீரலை உருவாக்கிய அணுக்களை நாம் பெறச் செய்தல் வேண்டும்.

ஆனால் வேதனை என்ற உணர்வின் நுகர நேர்ந்தால் சளி போன்ற நிலைகளும் ஆஸ்துமா போன்ற நிலைகளும் டிபி போன்ற நிலைகளும் கேன்சர் போன்ற நோய்களும் உருவாகக் காரணமாகி விடுகின்றது.

இதைப் போன்ற தீமைகளை நீக்க நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் நுரையீரலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கினால்
1.உடல் முழுவதுக்கும் நல்ல சுவாசத்தை அனுப்பி
2.நல்ல அணுக்களை இயக்கி நமக்குள் நல்ல உணர்வை உருவாக்கும்.

வேதனையான உணர்வை உடலில் சேர்த்தால் இந்த உடல் முழுவதும் படர்ந்து எல்லாமே சோர்வடைந்துவிடும்… உறுப்புகளும் சோர்வடைந்துவிடும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து மீட்ட அந்தச் சக்தி வாய்ந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியினை உங்கள் நுரையீரலை உருவாக்கிய அணுக்கள் பெற வேண்டும் என்று ஏங்கிப் பெறச் செய்யுங்கள்… வலிமை பெறச் செய்யுங்கள்.

கிட்னி:-
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் கிட்னி முழுவதும் படர்ந்து கிட்னியை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா.
1.இவ்வாறு துருவ நட்சத்திரத்தின் சக்தியை அங்கே வீரியமடையச் செய்தால்
2.சர்க்கரைச் சத்து உப்புச் சத்து வாத நீர் போன்ற நிலைகளைப் பிரித்து நமது இரத்தத்தைச் சுத்தமாக்கும்.

அவ்வாறு சுத்தமாக்கும் அந்தக் கிட்னிக்கும் சிறுநீரகத்தை உருவாக்கிய அணுக்களுக்கும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உங்கள் கண்ணின் நினைவினை அங்கே செலுத்தி அந்த உறுப்புகளை உருவாக்கிய அணுக்களை வீரியமடையச் செய்யுங்கள்.

அது வலிமை பெற்றால் சர்க்கரைச் சத்து உப்புச் சத்து வாத நீர் போன்ற நிலைகள் வராதபடி தடுக்க இது உதவும்.

இருதயம்:-
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இருதயம் முழுவதும் படர்ந்து இருதயத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா.
1.இவ்வாறு செய்தால் சிந்திக்கும் வலிமையும்… வரக்கூடிய தீமைகளை அகற்றிடும் வலிமையும் பெறக்கூடிய தகுதி நாம் பெறுகின்றோம்.
2.உடல் முழுவதற்கும் அந்த வலிமையான உணர்வுகளைச் செலுத்தி நம் உடல் உறுப்புகளைச் சீராக இயக்கும் அந்த அருள் சக்தி பெறுகின்றது.

சிந்திக்கும் ஆற்றலும்… தீமைகளை அகற்றும் வலிமையும்… பொருளறிந்து செயல்படும் திறனும் பெறக்கூடிய சக்தி நம் இருதயம் பெறுகின்றது.

நம் புருவ மத்தியில் துருவ நட்சத்திரத்தினை நிலைநிறுத்த வேண்டும்

நம் புருவ மத்தியில் துருவ நட்சத்திரத்தினை நிலைநிறுத்த வேண்டும்

 

அம்மா அப்பா அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தியால் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அதனின்று வெளிப்படும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவினைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஆசைப்படுங்கள்.
2.இப்பொழுது கண்ணில் அந்த ஈர்க்கும் சக்தி அதிகரிக்கின்றது.

கண்ணின் நினைவினைப் புருவ மத்திக்குக் கொண்டு வாருங்கள். புருவ மத்தியில் வீற்றிருக்கும் உங்கள் உயிரான ஈசனிடம் நினைவைச் செலுத்துங்கள். கண்களை மெதுவாக மூடுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உயிரான ஈசனிடம் வேண்டி “உயிர் வழி” அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

அந்தச் சக்தி பெற வேண்டும் என்று ஆசையுடன் ஏங்கி இருங்கள்

இப்பொழுது புருவ மத்தியில் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறும் பொழுது
1.உயிரைத் தாண்டி உங்கள் உடலுக்குள் தீமையை இயக்கும் உணர்வுகள் உள் புகாது தடுக்கப்படுகின்றது.
2.புருவ மத்தியில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நிலை நிறுத்தப்படும் பொழுது அதை ஈர்க்கும் சக்தி அதிகரிக்கும்
3.உங்கள் உடலில் உள்ள தீமையான அணுக்களுக்கு ஆகாரம் செல்லாதபடி தடைப்படுத்தப்படுகிறது.
4.தீமையான அணுக்கள் உடலில் வளராது தடுக்கப்படுகிறது.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று “திரும்பத் திரும்ப” எண்ணி ஏங்கித் தியாநியுங்கள்.

உங்கள் புருவ மத்தியில் ஈர்க்கும் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உயிரிலே மோதும் பொழுது “ஒரு வெளிச்சம்” உருவாகும்.

உங்கள் கண்ணின் நினைவினை உங்கள் உடலுக்குள் இருக்கும் இரத்த நாளங்களில் செலுத்துங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் இரத்த நாளங்களில் கலந்து இரத்த நாளங்களில் உள்ள ஜீவணுக்களும் ஜீவான்மாக்களும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

1.உங்கள் உடலுக்குள் தீய வினைகளை விளைய வைக்கும் அந்த அணுக்களுக்கும்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று நினைவைச் செலுத்தப்படும் பொழுது
அந்தத் தீய அணுக்களும் அடிபணிந்து நல்ல அணுக்களாக மாறும் திறன் பெறுகின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் உடலில் உள்ள இரத்தங்கள் முழுவதும் படர்ந்து அதில் உள்ள ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று ஆசைப்படுங்கள். இப்பொழுது இரத்த நாளங்களில் உள்ள அந்த அணுக்கள் உற்சாகமடையும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளி எங்கள் இரத்தங்களில் கலந்து உடல் முழுவதும் கலந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று உங்கள் கண்ணின் நினைவினை உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்குள் செலுத்துங்கள்.

அந்த சக்தி அங்கே பெற வேண்டும் என்று ஆசையுடன் ஏங்கித் தியானியுங்கள். உங்கள் உடல் உறுப்புகள் அனைத்தும் இப்போது உற்சாகமடையும்.

1.இத்தகைய வலுவை நாம் அடிக்கடி ஏற்படுத்தி இது ஒரு பழக்கத்திற்கு கொண்டு வந்தால்
2.தீமைகள் வரும்பொழுது எல்லாம் உடனுக்குடன் அதை மாற்றிக் கொள்ள முடியும்
3.தீமையிலிருந்து விடுபட முடியும்… உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியாக்க முடியும்.