நாம் குடியிருக்கும் வீடுகளில் “துருவ நட்சத்திரத்தின் சக்தியை அதிகளவில் படரச் செய்ய வேண்டும்…”

நாம் குடியிருக்கும் வீடுகளில் “துருவ நட்சத்திரத்தின் சக்தியை அதிகளவில் படரச் செய்ய வேண்டும்…”

 

உங்கள் வாழ்க்கையில் உங்களை அறியாது உள் புகுந்த விஷமான சக்திகளை… அதனுடைய வலுவை இழக்கச் செய்வதற்குத் தான் கூட்டு தியானங்களில் யாம் உங்கள் எல்லோர் குரல்களையும் எழுப்பச் சொல்லியது.

அவ்வாறு வெளிப்படும் அந்த குரலின் தன்மைகளைக் காந்த புலன்கள் கவர்ந்தாலும்
1.வீட்டிற்குள் புவியின் ஈர்ப்புக்குள் அந்தக் காந்தப் புலன்கள் சங்கடம் சலிப்பு வேதனை இவைகள் பதிந்திருப்பதை
2.மெய் ஒளியின் தன்மை கொண்டு கூட்டு தியானத்தில் எல்லோரும் குரல்களை எழுப்பப்படும் பொழுது
3.அந்தத் துன்ப அலைகளை இது வீழ்த்தி நல்ல உணர்வுகளைப் படரச் செய்வதும்
4.நாம் எடுத்துக் கொண்ட அந்த உயர்ந்த உணர்வுகள் வீட்டுச் சுவர்களில் இருக்கும் காந்தப் புலன்கள் கவர்ந்து
5.வீட்டிற்குள் எப்பொழுதும் உங்களை மகிழ்ச்சியூட்டும் உணர்வாகப் பெறச் செய்யும்.

அதற்குத்தான் வீடுகள் தோறும் கூட்டுக் குடும்பத் தியானங்களைச் செயல்படுத்தும் படிச் சொல்வது.

சூரியன் எப்படிப் பிரபஞ்சத்திற்குள் ஒன்றுடன் ஒன்று மோதி ஒளியின் தன்மையாகத் தனக்குள் எடுத்துச் செயல்படுத்துகின்றதோ அதைப் போல நாம் ஒருங்கிணைந்த நிலையில் செயல்படுத்துவதற்கு அன்றைய ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி குரலை எழுப்பிக் கூட்டுத் தியானத்தைச் செயல்படுத்தும் படிச் சொல்கின்றோம்.

காரணம்
1.தனி ஒரு மனிதன் மட்டும் ஒன்றும் செய்து விட முடியாது.
2.பல அலைகளை உணரும்படி செய்து அந்த உணர்வின் ஆற்றல் கொண்டு தான்
3.நாம் கூட்டுத் தியானத்தில் எடுக்கக்கூடிய சக்தியின் மூலமாக ஒலிகளைப் பரப்பச் செய்து
4.வரக்கூடிய விஞ்ஞான நச்சுத்தன்மைகள் நம்மை அணுகாதபடி தடுத்துக் கொள்ள முடியும்.

பூமிக்குள் பிற விஷத்தின் தன்மைகள் உள்ளே புகாது ஓசோன் திரை எப்படி அமைகின்றதோ அதைப் போன்று
1.எத்தகைய நிலைகள் வந்தாலும் உங்களுக்குள்ளும் உங்கள் குடும்பத்திற்குள்ளும் அந்தத் தீமை புகாது பாதுகாப்புக் கவசமாக
2.ஆற்றல்மிக்க உணர்வுகளை உங்கள் ஆன்மாவிலே பெருக்கச் செய்வதற்கே இதைச் செய்கின்றோம்.

உங்களை நீங்கள் நம்ப வேண்டும்.

ஏதோ சாதாரணமாக இது கிடைக்கின்றது சாதாரணமாக விளக்கம் சொல்கின்றார் சாதாரண நிலைகள் பெறுகிறோம் என்று சாதாரணமாக எண்ணி விட்டு விடாதீர்கள்.

ஏனென்றால் எவ்வளவோ பணத்தைச் செலவழித்துப் பெற முடியாத சக்தியை இவர் சாதாரணமாகச் சொல்கின்றார் நாம் அப்படிப் பெற்றுவிட முடியுமா…? என்று நம்பிக்கை இழந்து விடாதீர்கள்.

நீங்கள் பெற வேண்டும் என்ற இந்த உணர்வில் தான் இதைக் கொண்டு வருகின்றேன். ஆகவே கூட்டுக் குடும்பத் தியானத்தினுடைய அவசியத்தை உணர்ந்து கொள்ளுங்கள். வாரத்தில் ஒரு நாளாவது குடும்பமாகத் தியானியுங்கள்.

நாள் முழுவதற்கும் உழைக்கின்றோம்.
1.ஒரு பத்து நிமிடமாவது அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து உங்களுக்குள் வளர்த்துப் பெருக்கி உங்கள் வீடுகளிலும் பெருக்கி
2.எல்லோரும் அதே போல் கூட்டமைப்பாகப் பெருக்கப்படும் பொழுது மிக உயர்ந்த சக்தியாக மாறுகின்றது.
3.உங்களைக் காக்கின்றீர்கள்… குடும்பத்தைக் காக்கின்றீர்கள்

இப்படி ஒவ்வொரு குடும்பமும் தங்களைக் காத்துக் கொள்ளும் நிலைக்கே இதை உணர்த்துகின்றேன்.

“மெய் ஒளியைத் தான்…” நாம் என்றுமே நாட வேண்டும்

“மெய் ஒளியைத் தான்…” நாம் என்றுமே நாட வேண்டும்

 

எனக்குக் காட்சி கொடுத்தார்… வந்தார்… நல்லதானது…! என்று சொல்வார்கள். காட்சி கொடுத்தார் நல்லதாகும் என்ற நிலை அது சில நாளைக்குத் தான் இருக்கும். மீண்டும் காட்சி கொடுத்தார் என்று நிறையப் பேர் சொல்லலாம்.

நானும் ஆரம்பத்தில் இவ்வாறு தான் நிறையக் காட்சிகளைக் கொடுத்துக் கொண்டிருந்தேன்.
1.இவைகள் எல்லாம் கூடாது…! என்று நிறுத்தி விட்டேன்
2.அந்த மெய் ஒளியைப் பெற வேண்டுமே தவிர இந்த உடலில் விளைந்த உணர்வை நீங்கள் தேடாதீர்கள்… நாடாதீர்கள்…!

நமது குருநாதர் காட்டிய வழிகளை எடுத்து இங்கே வளர வேண்டுமே தவிர இந்த உடல் என்றுமே மடிவது என்று அறிதல் வேண்டும்.

இந்த உடலில்… மெய் ஞானியின் உணர்வைப் பெற்றதை வலுப்படுத்தி அதை எடுக்கத் தொடர வேண்டுமே தவிர… “இவர் தான்…” என்ற நிலைகளுக்கு இந்த உடலின் உணர்வை எடுக்கக் கூடாது. இந்த உடலில் வரக்கூடியது அனைத்துமே வரும்… புவியின் ஆசைதான் வரும்.

உருவங்களைக் காட்சியாகக் கொடுத்தாலும்
1.உடனே அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும்
2.அந்த ஒளியின் நிலைகள் பெற வேண்டும் என்று அந்த மெய் ஒளியுடன் இணைத்து அந்த வலுவைப் பெற வேண்டுமே தவிர
3.சாமி வந்தார்… எனக்குக் காட்சி கொடுத்தார்…!
4.எனக்கு உடல் நலமானது… அது நல்லதானது… இது நல்லதானது…! என்று சொல்வதெல்லாம் உடல் இச்சைக்குத்தான் மாறும்.

அதைத்தான் யாம் வன்மையாகக் கண்டிப்பது. அந்த நிலையில் இருந்து நாம் மாறுபட வேண்டும். அந்த மெய் ஒளியை நாம் பெற வேண்டும். நம்முடைய பார்வையால் மற்றவர்கள் தீமைகள் நீங்க வேண்டும்.

சாமி செய்தார்…! என்பதற்குப் பதில்
1.சாமி பார்வை பிறருக்குப் பட்டு மற்றவருடைய தீமைகள் எப்படி அகன்றதோ…?
2.அதே உணர்வு உங்களால்… நீங்கள் அந்தத் தீமைகளை அகற்றும் சக்தியாக பெற வேண்டும்.
3.அதைப் பெற்றால் தான் சாமி சக்தி பெற்றதாக அர்த்தம்…!
4.இல்லை என்றால் அதில் அர்த்தமே இல்லை. அந்த வளர்ச்சிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.

ஏனென்றால் அந்த மெய் ஒளியை நீங்கள் பெறும் பொழுது தீமைகளை அது அகற்றுகின்றது. உங்கள் பார்வையும் சொல்லும் அவருக்குள் நுழையப்படும் பொழுது அவருக்குள் இருக்கும் தீமைகள் அகற்றப்படுகின்றது.

நமது வாழ்க்கையில் பிறர்படும் துயரத்தைக் கேட்கும் பொழுது நமக்குள் நின்று துயரத்தை உருவாக்குகின்றது. சாதாரண வாழ்க்கையில் இதைத்தான் நாம் உருவாக்குகின்றோம்.

ஆனால் எதை உருவாக்க வேண்டும்…?

பிறருடைய தீமைகளை நீக்கும் உணர்வுகள்… நாம் வளர்த்துக் கொண்ட அந்த உணர்வுகள் நம் பார்வையால் அங்கே வித்தாகப் பதிய வேண்டும்.

யாராவது தீமைகளைச் செய்தார்கள் என்றால் அதை நாம் கேட்டுத் தெரிந்து கொள்கின்றோம். அடுத்த கணமே… ஈஸ்வரா என்று அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இதை இணைக்க வேண்டும்.
1.என் பார்வை அவரைத் தீமையிலிருந்து விடுபடச் செய்ய வேண்டும்.
2.அவர்களும் மெய்ப்பொருள் காணும் திறன் பெற வேண்டும் என்று இந்த உணர்வைப் படைத்து அங்கே அனுப்ப வேண்டும்.
3.நமக்குள் அது வராதபடி அந்த மெய் ஒளியை நமக்குள் சேர்க்க வேண்டும்.

அந்தந்த நிமிடத்தில் எந்தத் தீமை வந்தாலும் அது வேலை செய்யாது. இந்த உணர்வை நம் பார்வையால் அங்கே செலுத்தும் பொழுது
1.நம்மால் அவர்கள் பயனடைகின்றார்கள்.
2.அவருடைய உணர்வுகள் நமக்குள் வளராது நம்மைப் பாதுகாத்துக் கொள்கின்றோம்.

இந்த இரு நிலையும் வேண்டும்.

துப்பாக்கியை எடுத்து அதிலே மருந்தினைக் கெட்டிக்கப்படும் பொழுது எங்கேயாவது உராய்ந்து விட்டால் வெடித்து விடும். அப்போது யார் அதைச் செய்கின்றாரோ அவரை அல்லவா அது காலி செய்து விடும்.

அப்பொழுது அதைப் பாதுகாப்பாகச் செயல்படுத்திக் குறி வைத்துத் தாக்கும் போது அங்கே வெடிக்கும் நிலை கொண்டாருகின்றார்கள்.

அதைப் போல் நாம் அந்த மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் வலுவாக்கிக் கொண்டு
1.நம்முடைய எண்ணப் பார்வையில் அவருடைய தீமைகளைப் பிளந்திட வேண்டும்.
2.அவர்களைக் காக்கும் உணர்வு தான் நமக்குள் விளைய வேண்டும்.

நமக்குள் அந்த மகரிஷிகள் உணர்வுகள் விளைந்தால் அவர்களைக் காக்கும் உணர்வு நமக்குள் வருகின்றது. நம்மைக் காக்கும் உணர்வு நமக்குள் வளரும்.

ஒவ்வொரு நொடியிலும் இதை நாம் செய்தாக வேண்டும்…!

கடலில் போகிறோம் என்றால் எத்தனையோ அலைகள் வந்து கொண்டிருக்கின்றது. நாம் எந்தத் தீவுக்குப் போக வேண்டுமா அதை எல்லையாக வைக்கின்றோம்.

இடைப்பட்ட அலைகள் அனைத்தையும் விலக்குகின்றோம். பெரிய அலை சிறிய அலை இதையெல்லாம் விலக்கிச் சென்று தான் அந்த எல்லையை அடைகின்றோம்.

இதைப் போன்று தான் மனித வாழ்க்கையில் நமது எல்லை எது…?

1.அந்த மகரிஷிகளின் அருள் வட்டமான எல்லை தான்… முடிவான நிலைகள் பேரானந்தப் பெரு நிலையான எல்லை.
2.அதை அடைய நாம் முயற்சிக்க வேண்டும்.

வாழ்க்கையிலே பாச அலை வருகின்றது… வெறுப்பு அலை வந்து மோதுகிறது… கோப அலைகள் வருகிறது… பகைமை அலைகள் வந்து தாக்குகிறது. இப்படி எத்தனையோ அலைகள் வந்து மோதுகின்றது.

இந்த மோதலில் பாசத்தினால் நாளைக்கு என் பையன் என்ன செய்யப் போகிறான்…? என்ற இந்த உணர்வு வந்தால் இந்த அலையிலேயே மூழ்கி விடுகின்றோம்.

பையனின் நினைவாற்றலே வருகின்றது. அவனுக்குள் சென்று விடுகின்றோம்.

ஒருவன் மீது வெறுப்படைந்து… எனக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டேயிருக்கிறான்… அவனை அப்படியே விடலாமா…? என்று எண்ணினால் நாம் போக வேண்டிய எல்லையை மறந்து விடுகின்றோம்.

இப்படியே இடைஞ்சல் செய்கின்றான் என்று அவனுடைய எண்ணத்திலேயே நாம் போய்க் கொண்டிருக்கின்றோம்.
1.அவனைத் திருத்தும் நிலைகளுக்கு நாம் அங்கே சென்றுவிட்டால் அதிலே மூழ்கி விடுகின்றோம்
2.அவனுடைய உணர்வு வளர்ந்த பின் அவன் உடலுக்குள் தான் நாம் செல்கிறோம்.

வாழ்க்கையில் பல விதமான அலைகளில் சிக்குண்டு மீள முடியாத நிலை வருகிறது. ஆகவே அந்த அலைகள் வரப்படும் போது மகரிஷிகளின் அருள் சக்திகளை நாம் எண்ணத்தால் எண்ணி எடுத்து அந்த அலைகளைப் பிளக்க வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி அவன் பெற வேண்டும். அவன் எதிர்காலம் சிறந்திருக்க வேண்டும்.. அவன் உயர்ந்த ஞானம் பெற வேண்டும் என்ற உணர்வை எடுக்கும் போது அவன் பாச அலையைப் பிளக்கிறது.
1.இந்தப் பாசம் அவனை உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்கிறது.
2.உயர்ந்த எண்ணம் கொண்டு கண்ணிலே நாம் பார்க்கும் போது அவனை ஒழுக்கமாக்குகிறது.

இதைப் போல் பலர் பகைமை கொண்டு பேசுவார்கள். நாம் நல்லதைச் செய்தாலும் இன்னொரு கெடுதல் செய்த ஆவி அந்த உடலுக்குள் இருந்தால் அது அவர்களுக்குப் பிடிக்காது. நம்மைக் கண்டாலே எதிரியாகக் கருதி இல்லாததை எல்லாம் சொல்வார்கள்.

தியானம் செய்கிறீர்கள்…! என்றாலே “என்னை ஏதோ செய்கிறான்…!” என்று சொல்ல ஆரம்பித்துவிடும். நான் ஒன்றுமே சொல்லவில்லை… என்னை இப்படிச் சொல்கிறான்…! என்று நீங்கள் நினைப்பீர்கள்.

ஒரு உடலுக்குள் ஆவி இருக்கப்படும் போது அது செயல்பட்டால்
1.நான் எதுவுமே சொல்லாதபடி “என்னைக் குறையாகச் சொல்கிறான் பாவிப்பயல்…” என்ற இந்த அலையில் சிக்கிவிடுகிறோம்.
2.அந்த அலைகளிலிருந்து விடுபட மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து
3.அவனுக்குள் இருக்கும் ஆவி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று அங்கிருந்தே நன்மை செய்யும் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

இதிலே நமக்குத் துணிவு வேண்டும். அதனால் தான் நன்மைகள் பல செய்யத் துணிவு வேண்டும் என்பது.

சொல்வது அர்த்தம் ஆகிறது அல்லவா. அந்த இடத்தில் துணிவு இருந்தால் தான் செய்ய முடியும்.

குருநாதர் கொடுத்த நிலைகளில் ஒவ்வொன்றையும் நீங்கள் வரிசைப்படுத்திப் பாருங்கள்.
1.நன்மை செய்ய வேண்டும்
2.நன்மைகள் வளர வேண்டும் என்றால் “அதற்குத் துணிவு வேண்டும்…”

நன்மைகள் செய்யப் போகும் நிலையில் அவருக்கு (உடலில் ஆவி உள்ளவருக்கு) உதவி செய்ய வேண்டும் என்று செல்லும் பொழுது… ஐய்யய்யோ…! பாவிப் பயல் எனக்கு ஏதோ செய்கின்றான் மருந்து வைக்கின்றான் விஷம் வைக்கின்றான்…! என்று சொல்வார்கள் பார்க்கலாம்.

அப்பொழுது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணிவிட்டு அவர் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மா மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். அவருக்குள் இருந்தே நன்மைகள் செய்யும் நிலை வளர வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.

ஏனென்றால் இதையெல்லாம் நாம் புரிந்து செயல்பட வேண்டும்.

நல்லது செய்கின்றோம்… ஆனால் பக்கத்து வீட்டுக்காரர் இல்லாததை எல்லாம் சும்மா சொல்லிக் கொண்டே இருப்பார். காரணம் அவர் உடலிலே இன்னொரு ஆன்மா இருக்கும்.

ஆன்மா இல்லாதவர்கள் யாரும் இல்லை. ஆனால் அவர்களுக்கு நம்மைக் கண்டவுடனே வெறுப்பாக இருக்கும். உடலிலே எரிச்சல் ஆகும்.

சிலருடைய வீடுகளுக்குள் சென்றால் அந்த எதிர்ப்பு நிலைகள் வரும். நம்முடைய மணம் பட்ட உடனே அங்கே எதிரியாக மாறுகின்றது.
1.அதற்குக் காரணம் அந்த மனிதன் அல்ல.
2.அந்த மனிதனுக்குள் இருக்கும் ஆன்மாவிற்கு இதைக் கண்ட பின் எரிச்சல் ஆகிறது.

நாம் இவ்வளவு தியானம் செய்கின்றோம்… நம்மை ஏன் இவ்வாறு சொல்கின்றார்கள்…? என்று நினைக்கின்றோம்.

அந்த இடத்தில் தான் நமக்குத் துணிவு வேண்டும் என்று சொல்வது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இந்த உணர்வினை அந்த உயர்ந்த சக்தியை நமக்குள் ஏற்றிக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால்
1.அவர் செயலைப் பார்த்த பின் இது வளர்ந்து விடுகின்றது.
2.ஆன்மாவிலே அது முன்னாடி அதிகமாகப் பெருகி விடும்.
3.இது பெருகி விட்டால் இதைச் சுவாசித்து அந்த உணர்வு இயக்க ஆரம்பித்து விடும்.

உயிரிலே பட்டவுடன் அதை வெளிப்படுத்துவது இந்த உயிர் தான். அது போன்ற நிலைகள் வந்தாலும்… “இடைமறித்து மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்…” என்று இங்கே கொண்டு வர வேண்டும்.

எங்கே…?

1.நம் கண்ணின் நினைவைப் பல முறை உயிருடன் ஒன்றச் செய்து
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் ஈஸ்வரா… என்று இப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்.

உடலில் இருக்கக்கூடிய ஆன்மாவிற்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைத்து அவர்களுக்கு அந்த நன்மை செய்யும் சக்தியாக வளர வேண்டும். இந்த இடத்திலே இதைச் செய்ய துணிவு ஜாஸ்தி வேண்டி இருக்கின்றது.

ஆனால் நாம் என்ன நினைப்போம்…? சாதாரணமாக நாம் ஒன்றுமே செய்யவில்லை…! ஆனால் நம்மை கண்டாலே அவர்களுக்கு எப்படித் தான் இருக்குமோ…? ஏன்னை இந்த மாதிரி எல்லாம் சொல்கின்றார்களே…!

ஏனென்றால் அவர்களுக்குத் தெரியாமலே அது இயக்கும்.

இந்தத் தியான வழியில் நாம் செல்லும் பொழுது இதையெல்லாம் தெரிந்து கொண்டால் தான்… அவ்வப்போது கொடுத்த இந்தச் சக்திகளை வலுப்பெறச் பயன்ன்படுத்த முடியும்.

1.நமக்குள் எத்தனையோ எண்ணங்கள் இருக்கிறது… அதனால் உருவான அணுக்களும் இருக்கின்றது.
2.ஒவ்வொரு நிமிடமும் அந்த அணுக்களுக்கு ஞானிகள் உணர்வைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து விட வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இதைச் செலுத்தினோம் என்றால் அதைத் தடைப்படுத்திவிடும். வளர்ந்த பின் இதை நீக்கிவிடும். அதற்குச் சத்து கிடைக்காதபடி மகரிஷிகள் உணர்வு வலுப்பெற்ற பின் தீமைகளைக் குறைக்கும்.

உங்கள் அனுபவத்தில் நன்றாக இதைத் தெளிவாகவே தெரிந்து கொள்ள முடியும்.

1.முதலில் சிரமமாகத் தெரியும்… சிறிது நாள் சென்றால் அதை நீக்கிவிடும்.
2.இப்படி நாம் வளர்க்க வளர்க்க நம்முடைய பார்வையே பிறருடைய தீமைகளை நீக்கும் சக்தியாக வரும்.

புவியின் ஈர்ப்புக்குள் சிக்காது… “துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்புக்குள் இணைக்கச் செய்வதற்கே துருவ தியானம்…!”

புவியின் ஈர்ப்புக்குள் சிக்காது… “துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்புக்குள் இணைக்கச் செய்வதற்கே துருவ தியானம்…!”

 

இந்த வாழ்க்கையில் மனிதனுக்கு மனிதன் தொடர்பு கொண்ட நிலையில் எப்படியும் பொறாமை வெறுப்பு வேதனை அன்பால் பண்பால் கவர்ந்த தீமையின் உணர்வுகள் நமக்குள் பதிவாகி இருப்பினும்
1.அந்தப் பதிவுகள் நமக்குள் நிலைக்காது அருள் மகரிஷிகள் உணர்வை நாம் நுகர்ந்து
2.அனைவரும் நலம் பெற வேண்டும் என்று இந்த உணர்வினை நாம் வெளிப்படுத்தும் போது
3.எத்தனை பேரின் உணர்வுகளை நாம் பதிவு செய்து வைத்திருக்கின்றோமோ
4.அந்த தீமையின் உணர்வுகள் நமக்குள் வளராது… அந்த மனிதரின் உணர்வை சந்தர்ப்பத்தால் நாம் சேர்த்த…
5.நமக்குள் உருப்பெற்ற அந்த அணுக்களுக்குள் மகரிஷிகள் உணர்வை இணைத்துப் பகைமையற்ற உணர்வுகளாக மாற்றுவது தான் தியானம்.

ஒரு மனிதன் நோயாக இருக்கின்றான் என்றால் அந்த நோயைக் கவர்ந்த பின் நல்ல உணர்வுடன் அது கலந்து நல்ல உணர்வுகளால் உருப்பெற்ற அணுக்கள் மாற்றமடைகின்றது.

நல்ல உணர்ச்சியை வளர்க்கும் அந்த அணுக்கள் குன்றும் பொழுது நல்ல உடலை உருவாக்கிய அணுவின் தன்மை பலவீனம் அடைகின்றது.

பலவீனமடையாது காக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

நம் உடலுக்குள் இருக்கும் அந்த அணுக்கள்… அதாவது எத்தனை பேரை நாம் எண்ணினோமோ அத்தனை பேருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

எத்தனை பேருடைய நல்லதை எண்ணி அவர்களின் வேதனையை கவர்ந்தோமோ… அது நம் நல்ல உணர்வுடன் கலந்து நம் நல்ல அணுக்களைப் பலவீனப்படுத்துவதை
1.அந்த மகரிஷிகளின் ஆற்றலை நாம் எண்ணி அந்த உணர்வினை நமக்குள் இணைக்கப்படும் பொழுது
2.இன்னொரு மனிதனில் விளைந்த தீமையின் உணர்வு “நமக்குள் விளையாது” அதை குறைக்கச் செய்யும்.

அதைத் தான் இந்நேரம் வரை உங்களுக்குள் உபதேசித்து அருள் மகரிஷிகள் உணர்வைச் சிறுகச் சிறுக அவர்கள் வளர்ச்சி பெற்றதை உங்களுக்குள்ளும் சேர்ப்பிக்கச் செய்த்து.

1.அகஸ்தியன் அந்த இளம் பருவத்திலிருந்து வளர்ச்சி பெற்ற உணர்வை
2.அந்தக் காலப்பருவத்தின் வயதை (துருவன் – ஒரு வயதிலிருந்து ஐந்தாவது வயது வரை பெற்றதை) உங்களுக்குள் சொல்லி
3.அவர் உடலில் விளைந்த உணவுகள் இங்கே பரவி இருப்பதை
4.அகஸ்தியன் துருவத்தைக் கண்டுணர்ந்த உணர்வையும்5. வானியல் தத்துவத்தைக் கண்டுணர்ந்த உணர்வையும் உங்களுக்குள் இணைத்து உபதேசித்து
5.இந்த உணர்வின் ஆற்றலை ஈர்க்கும் தன்மையாக தியானிக்கப் போகின்றோம்.

அந்த வானியல் உணர்வுகள் தனக்குள் அறிவாக எப்படி அகஸ்தியனுக்குள் இணைந்ததோ… துருவத்தை நுகர்ந்தறிந்து ஒளியின் சிகரமாக எப்படி மாற்றி அமைத்தாரோ…
1.அந்தத் துருவனின் வளர்ச்சியின் தன்மையை நீங்கள் நுகர்ந்து உங்களுக்குள் வளர்ச்சி பெறுவதற்குத் தியானிப்போம்.
2.குருநாதர் எனக்குள் படிப்படியாக அதை எப்படிக் கொண்டு வந்தாரோ…
3.அதை வைத்து நீங்கள் தியானிக்கும் போதெல்லாம் அந்தச் சக்தி உங்களுக்கும் கிடைக்க வேண்டும்.

அதற்குத்தான் இதைச் சொல்கின்றேன்.

உங்கள் கண்ணின் நினைவினை அகஸ்தியன் பால் செலுத்துங்கள்.
1.நம் பூமி “துருவத்தில் கவரும் அந்தச் சக்தி” நாங்கள் பெற வேண்டும் என்று புருவ மத்தியில் உயிரான ஈசனிடம் ஏங்கித் தியானியுங்கள்.
2.இப்பொழுது உங்களுக்குள் மிதக்கின்ற மாதிரி அந்தப் பூமியின் ஈர்ப்பு வட்டத்திலிருந்து துருவ நிலைகள் ஈர்க்கும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் தியானத்தில் அமர்ந்திருக்கும் நாங்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணி “ஏங்கிச் சுவாசியுங்கள்…”

இப்பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சென்று “உங்களை மிதக்கும்படி செய்யும்…” உடல்கள் இலகுவாகும்.
1.துருவத்துடன் நாம் தொடர்பு கொள்ளும் பொழுது… “இது அதிகமாக அதிகமாக…”
2.இந்த உணர்வுகள் வலுப்பெற்றால் “புவியின் ஈர்ப்புக்குள் வராது…”
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குள் செல்லும்.
4.அந்த ஈர்ப்பு வட்டத்தில் விளைந்து கொண்டிருக்கும் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் நம்மை இணையச் செய்யும்.

ஏனென்றால் மனிதர்களாக இங்கே வாழ்ந்தவர்கள் தான் அங்கே சென்றது. அதனால் “இடைமறித்து அந்த உணர்வுகளை உங்களுக்குக் கொடுத்து” அதைப் பெறும்படி செய்தது.

1.துரித நிலையில் அந்தச் சக்திகளை எல்லாம் உங்களைப் பெறச் செய்வதற்கும்
2.அதன் மூலம் நீங்கள் வளர்ச்சி பெறுவதற்கும் இது உதவும்.

எமது உபதேசங்களைப் படித்து… அதனின் நினைவாற்றலைக் கூட்டிக் கொண்டு தியானிக்க வேண்டும்

எமது உபதேசங்களைப் படித்து… அதனின் நினைவாற்றலைக் கூட்டிக் கொண்டு தியானிக்க வேண்டும்

 

தாய் கருவிலே வளர்ந்த அந்த உணர்வின் ஆற்றல் தான் நஞ்சின் தன்மையை அடக்கும் சக்தியாக சிறுகச் சிறுக வளர்ச்சி அடைந்து…
1.அகண்ட பேரண்டத்தில் வரும் நஞ்சின் இயக்கத் தொடரைக் காணும் திறன் பெற்றான் துருவன் (அகஸ்தியன்).
2.அவனில் விளைந்த உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்கப்படும் பொழுது
3.ஒவ்வொரு நொடியிலும் உங்களைச் சாடும் தீமையான உணர்வுகளை அது மாற்றிக் கொண்டே இருக்கும்.

இப்பொழுது இதைக் கேட்டுக் கொண்டிருக்கின்றீர்கள். அடுத்து நீங்கள் வேறு பக்கம் செல்லும் பொழுது என்ன நடக்கிறது…?

யாரும் உங்களைத் திட்டவே வேண்டாம். சும்மா இருக்கும் போது ஒருவன் மற்றவனைக் கடுமையாகச் சாடிப் பேசுகின்றான். அதை நாம் கேட்க நேர்கின்றது அந்த ஒலிகள் பட்டு அதைச் சுவாசித்த பின் நம்மை அறியாமலே அதே உணர்வுகள் இயக்கி விடுகின்றது… அந்த உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.

இது ஒரு பக்கம்.

இன்னொருவன் கடுமையான ஆயுதத்தைக் கொண்டு மற்றவனைத் தாக்குகின்றான். அடிபட்டவன் அலறி ஓடுகின்றான். அந்த உணர்வை நாம் நுகர்ந்தால் நமக்குப் பதட்டமாகின்றது. நம்மை அறியாமலே நடுக்கமும் பயமும் வருகின்றது.

அந்த உணர்வு தான் நம்மை இயக்குகின்றது. ஆனால் நுகர்ந்த உணர்வுகளை எல்லாம் உயிர் ஓ… என்று ஜீவணுவாக மாற்றித் தன்னுடன் அரவணைத்துக் கொள்கிறது.

பின் அவனில் விளைந்த உணர்வின் தன்மை நமக்குள் ஊழ்வினையாகப் பதிவாக்கப்படும் பொழுது வினைக்கு நாயகனாக… நினைவு வரும் பொழுதெல்லாம் இந்த உணர்வுகள் தூண்டிக் கொண்டே இருக்கின்றது.

நினைவு வரும் போது இயக்கினாலும் நினைவு இல்லாத பொழுது அதனுடைய வலிமை என்ன செய்யும்…?
1.புலனடங்கிச் சாந்தமாக… வேலை இல்லாது அமைதியாக ஒரு இடத்திலே உட்கார்ந்து இருந்தோம் என்றால்
2.இந்த உணர்வுகள் தூண்டப்பட்டு அது வலிமை பெற்றுவிடும்.
3.அடுத்து எந்த வேலைக்கும் போக விடாது…! பிரமை பிடித்த மாதிரி ஆகிவிடும்
4.நுகர்ந்த உணர்வு அதனுடைய வளர்ச்சி அதிகமாகும் பொழுது இப்படி இயக்கத் தொடங்குகிறது.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை.

சில குடும்பங்களில் வளர்ச்சி பெறும் குழந்தைகளின் உள்ளங்களில் இது போன்ற உணர்வுகளைக் கண்டு விட்டால் அது இயக்கிவிடும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் நீங்கள் விடுபட வேண்டும்.

நீங்கள் நுகர்ந்த அருள் உணர்வுகள் உங்களுக்குள் விளைந்து… யாருடன் பேசினாலும் கேட்போர் உணர்வுகளிலும் அந்த அருள் உணர்வுகள் பதிவாகி அவர்களையும் இருள் சூழ்ந்த நிலையிலிருந்து மீட்டிடல் வேண்டும்.

அத்தகைய நிலைகள் உங்களுக்குள் வந்தால் பிறிதொரு உணர்வுகளை உங்களுக்குள் இந்தத் தீமை நம்மை இயக்கிடாது அதை அடக்கும் ஆற்றல் பெறுகின்றீர்கள்.

அதைப் பெறச் செய்வதற்குத் தான்
1.அருள் ஞானிகளின் உணர்வுகளை ஊழ்வினையாக உங்களுக்குள் பதிவாக்கி
2.அந்த உணர்வின் வலிமை பெறச் செய்வது.

இந்த நினைவை நாம் வளர்க்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

கூட்டுத் தியானங்களில் யாம் வெளிப்படுத்திய உபதேசக் கருத்துக்கள் அடங்கிய புத்தகங்களை எடுத்து அடிக்கடி படிக்க வேண்டும். கேட்டது நினைவில் இல்லை என்றாலும் அது வலுப்பெறுவதற்கு
1.அந்த அருள் ஞான நூல்களை மீண்டும் படிக்க வேண்டும்… நினைவாற்றலை மீண்டும் பெருக்க வேண்டும்.
2.கூட்டமைப்பில் மற்றவர்கள் செவிகளிலும் இது கலக்கப்பட வேண்டும்.
3.தியானத்தில் ஒருவர் இன்று படித்தார் என்றால் அடுத்து மற்றொருவரைப் புத்தகத்தைப் படிக்கச் சொல்ல வேண்டும்.

அவருக்குள் விளைந்த உணர்வுகள் நமக்குள்ளும் கலக்கின்றது. கூட்டமைப்பில் எல்லோரும் சேர்த்துத் தியானிக்க வேண்டும்.

சந்தர்ப்பத்தால் எடுத்துக் கொண்ட பயத்தால் ஒரு சிலர் பயமான உணர்வுடன் இருப்பார்கள். அப்போது மனிதனை உருவாக்கிய மகிழச் செய்யும் அணுக்கள் பலவீனம் அடையப்படும் பொழுது… தனக்குள் இனம் புரியாதபடி நோய்கள் வருவதும் பிறர் வேதனைப்படும் உணர்வுகள் சிறுகச் சிறுக வந்து கடும் நோயாக விளையச் செய்து… நம்முடைய நினைவுகளை திசை மாற்றிக் கொண்டிருக்கும்.

அது போன்ற நிலைகளை நாம் அடக்க வேண்டும் என்றால்… அதற்கு அவசியம் யாம் வெளிப்படுத்திய அருள் ஞானப் புத்தகங்களை எடுத்துப் படியுங்கள்.
1.ஒரு பத்து பேர் இருந்தாலும் படிக்க வேண்டும்… ஐந்து நிமிடம் அல்லது பத்து நிமிடம் படியுங்கள்.
2.ஒருவரே என்று இல்லாதபடி தினமும் ஒருவரைப் படிக்கச் சொல்ல வேண்டும்.

அது போன்ற கூட்டமைப்பாக அமைத்துத் தியானித்து முடிந்த பின் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் அவர் அறியாத இருள்கள் நீங்க வேண்டும் மெய்ப்பொருள் காணும் சக்தி பெற வேண்டும்… அவர் உடலில் அறியாது சேர்ந்த தீயவினைகளால் விளைந்த நோய்கள் நீங்க வேண்டும் என்ற இந்த உணர்வினை அனைவரும் சேர்த்து அந்தப் பயந்தவரின் செவிப்புலனில் இயக்கப்படும் பொழுது வலிமை மிக்கதாக இது மாறி அவர் உடலில் இருக்கக்கூடிய பிணிகளை நீக்கும்.

தனித்த நிலையில் யாரும் இதைச் செய்ய வேண்டாம். காரணம்… ஒருவருக்குக் கடுமையான நோய் இருந்தாலும் அல்லது இன்னொரு ஆவி உடலுக்குள் புகுந்து இருந்தாலும் அதனுடைய வேகம் அதிகமாக இருக்கும்.

அதனுடைய உணர்ச்சிகளை பார்க்கப்படும் பொழுது அங்கிருக்கும் வெறுப்படைந்த உணர்வுகள் வேகத்தின் உணர்வுகள் அதற்கு வலு ஜாஸ்தி.
1.நமக்குள் நல்லதை எடுக்க விடாது முன் பகுதி இருந்து கொண்டு தடைப்படுத்தும்.
2.நல்ல உணர்வுகளை எடுக்கவில்லை என்றால் என்ன செய்வது…?
3.இதைப் போன்ற வருவதைத் தடைப்படுத்துவதற்கு கூட்டமைப்பின் தன்மைகளை வலுப் பெறச் செய்தல் வேண்டும்.

நாம் நுகரும் உணர்வின் தன்மை உயிலே பட்டுத் தான் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்குச் செல்லும். ஆக அந்த்த் தீமை புகாது தடுப்பதற்குத் தான் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை வலுப்பெறச் செய்து உங்கள் வலிமையைக் கூட்டுகின்றோம்.

ஆனால் இந்த வலிமை வருவதற்கு முன் தீமையின் வலு சேர்ந்து விட்டால் நல்லது நமக்குள் வராதபடி ரிமோட்… தள்ளிவிட்டுக் கொண்டே இருக்கும். அப்போது நல்லதை நுகர்வது எங்கே…? அந்த அறிவின் ஞானம் வருவது எங்கே…? இந்த வலிமையைப் பெறுவது எங்கே…?

ஆக நாம் எண்ணியதை உயிர் எவ்வாறு இயக்குகின்றது…? என்பதை நீங்கள் அறிவதற்குத் தான் அகஸ்தியனைப் பற்றிச் சொல்வது. அவன் தாய் கருவிலே பெற்ற சக்தியின் துணை கொண்டு அணுவின் ஆற்றலை அறிந்தவன்… நஞ்சை ஒடுக்கியவன்… ஒளியின் சுடராக இருப்பவன்…! அதை நாமும் பெறுதல் வேண்டும்.

ஏனென்றால் மீண்டும் மீண்டும் உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றோம். சாமி சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்கிறார் என்று எண்ணுவார்கள்.
1.உங்களுக்குள் அதை இணைத்து “அவர்கள் பெற்ற வளர்ச்சியை” உங்களுக்குள் நினைவுபடுத்தியே ஆக வேண்டும்.
2.அப்போது அந்த உணர்வின் “தொடர்வரிசையாக” மீண்டும் உங்களுக்குள் அது இயங்கும்.

பலகாரம் சுடுபவர்கள் ஒரு தரம் மாவைப் போட்டுப் பிசைந்தார்கள் என்றால் அடுத்தடுத்து அதே மாவைப் போட்டுப் பிசைந்து சுட்டுக் கொண்டுதான் இருப்பார்கள்.

ஏன் இப்படி திரும்பத் திரும்ப மாவைப் பிசைகின்றார்கள் என்று சொல்லக்கூடாது. முதலில் போட்ட அதே அளவுகளை மீண்டும் போட்டு அதைக் கொண்டு வரும் பொழுது தான் அதே ருசி… அதே மணம்… எல்லாமே ஒன்று போல் வரும்.

அவர்கள் எப்படிப் பலகாரங்களை மீண்டும் மீண்டும் சுவையாகச் சுடுகின்றார்களோ இதைப் போன்று தான் ஒவ்வொரு சமயத்திலும்
1.அந்த அருள் உணர்வுகளைச் சுவை மிக்கதாக வளர்த்ததை உங்களுக்குள் இணைத்து
2.உங்கள் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு உணர்ச்சிகளைத் தூண்டி
3.அதை வளர்க்கச் செய்வபதற்குத் தான் திரும்பத் திரும்ப யாம் சொல்வது.

அதாவது… பிறிதொரு உணர்வுகள் உங்கள் ஆன்மாவிலே கலந்துவிடாதபடி
1.அருள் உணர்வுகளைக் கூட்டி மற்ற தீமையின் வலுவைக் குறைக்கச் செய்வதற்கு தான் இவ்வாறு செய்வது.
2.எமது குருநாதர் எனக்கு இப்படித்தான் செய்தார்… அதே வழியில் தான் உங்களுக்குள்ளும் பதிவு செய்வதும் திரும்பத் திரும்பச் சொல்வதும்.

ஏனென்றால்
1.இந்த மனித உடல் நமக்குச் சதமானது அல்ல.
2.உயிர் தான் சதம் என்று நமக்குத் தெரிகின்றது.
3.அதனுடன் உணர்வுகளைச் சதமாக்கி இன்னொரு உடலுக்குள் புகுந்து விடாது அழியா ஒளியின் சரீரம் பெற வேண்டும்.

அதற்குத் தான் பல வகைகளிலும் உங்களுக்கு விளக்க உரையாகக் கொடுத்துக் கொண்டே வருகின்றேன்.

அருள் உணர்வுகளை நீங்கள் பெறப்படும் போது “பளீர்ர்…” என்று உங்கள் உடலிலிருந்து வெளிச்சம் வரும்

அருள் உணர்வுகளை நீங்கள் பெறப்படும் போது “பளீர்ர்…” என்று உங்கள் உடலிலிருந்து வெளிச்சம் வரும்

 

அகஸ்தியன் கண்டதை… துருவன் கண்டதை… எல்லோரும் காண முடியும். அந்த உணர்வுகளை நுகரப்படும் பொழுது நமக்குள் அது வளர்ந்து நம்மை அறியாமலே அதைக் காணும்படி செய்யும்.

எப்படி…?

உதாரணமாக கோபத்தையும் வெறுப்பையும் வேதனையையும் ஒருவன் துர்மரணம் அடைந்ததையும் சிதைந்து கொண்ட உணர்வுகள் வெளிப்பட்டதையும் நாம் கேட்டுணரப்படும் பொழுது அது நமக்குள் பதிவாகின்றது.

துர்மரணம் அடைந்தவன் வேகமாகவும்… கோபத்துடன் தாக்கும் உணர்வுகள் செயல்பட்ட்தையும்… அப்படிப் பதிவான உணர்வலைகள் இரவிலே தூங்கப்படும் பொழுது “கொடிய உணர்வின் சத்து…”
1.அந்த ஆவியின் அலைகளை உடல் அதை ஈர்த்துச் சுவாசிக்கும் பொழுது உயிரிலே பட்டு
2.புலனடங்கித் தூங்கும் நிலையில் முன் பின் பார்க்காதவர்களின் ரூபங்களைக் காணுவோம்.

தலை சிதைந்து அல்லது தலை இல்லாத மனிதனோ… அதாவது கொலை செய்யும் பொழுது தலை இல்லாத நிலையில் ஓடும். அந்த உடலில் இருந்து சிதைந்த உணர்வுகள் அணுக்களாக மாறியதை… பிறர் சொல்வதை நாம் கேட்டிருந்தாலும் கூட அது பதிவாகி இந்த நினைவுகள் அலைகளாக நம் சுவாசத்தில் புகுந்து கொடிய உணர்வுகள் சேர்க்கப்படும் பொழுது ஒன்றுடன் ஒன்று அப்படி ரூபங்கள் தெரிய வரும்.

இரவிலே தூங்கும் பொழுது பார்த்தால் அது கையில்லாததாக இருக்கும் காலில்லாது இருக்கும். ஒருவரை ஒருவர் தாக்க எண்ணும் இந்த உணர்வுகள் நம் உடலில் இருக்கும் நல்ல அணுக்களில் மோதியவுடன் நம்மை அறியாமல் வியர்த்து விறுவிறுத்து திடீரென்று முழிப்பாகி எழுந்து விடுவோம்.

இந்த உணர்வுகள் எப்படி நம் உடலை இயக்குகின்றதோ இதைப் போலத் தான்
1.இயற்கையின் நிலைகளைத் துருவன் கண்டுணர்ந்து தனக்குள் படிப்படியாக அவன் நுகர்ந்த ஆற்றல்மிக்க சக்திகளை
2.ஒன்றில்லாது ஒன்றில்லை என்ற நிலையில் அவனிடமிருந்து வெளிப்பட்ட தீமையை நீக்கிய உணர்வுகள் படர்ந்திருப்பதை
3.நினைவு கொண்டு அந்த உணர்வினை உங்களுக்குள் பதிவாக்கிக் கொண்டால்
4.இரவில் தூங்கும் பொழுது சிலருக்கு அவர்களை வான மண்டலத்திற்கே அந்தப் பதிவான உணர்வுகள் அழைத்துச் செல்வதையும் காணலாம்.

இந்தத் தியான வழியினைக் கடைப்பிடிப்போர் வானிலே மிதந்து கொண்டிருப்பதாகவும்… மிதந்து கொண்டே செல்வதாகவும் அந்த வான மண்டல இயக்கங்களைக் காணவும் முடியும்.

ஒரு சிலர் இரவிலே இதைப் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். மிதந்து கொண்டே அதைப் பார்த்த உடனே இதிலே அச்சப்படுவோரும் உண்டு.

பூமிக்குள் வராது அப்படியே மேலே சென்று விடுவோமோ…? வீட்டிலே பெண்டு பிள்ளைகளை எல்லாம் விட்டுவிட்டுச் சென்று விடுவோமோ…? என்ற இந்த உணர்வுகள் கலந்து விட்டால் திடீரென்று உடலிலே வியர்வையாகி “பூமிக்குத் திரும்ப மாட்டோமோ…” என்று திடுக்கிட்டு… முழிப்பவர்களும் உண்டு.

ஏனென்றால் இந்த உணர்வின் வலிமை புவியின் ஈர்ப்புக்கு வரும் பொழுது இப்படியும் கனாக்கள் பல நிலைகளில் வருவது உண்டு.

கனாக்கள் வருவதே…
1.எதை நுகர்கின்றோமோ அந்த உணர்வுகள் உயிருடன் உராய்ந்து
2.உடலுக்குள் சேர்த்து அது மோதுவது தான் நினைவாற்றலாக வருகின்றது.

குருநாதர் எனக்குள் பதிவு செய்த… துருவன் கண்டுணர்ந்த உணர்வினை… அந்த நினைவின் ஆற்றலை நான் பெறுவதற்கு எம்மைக் காடு மேடெல்லாம் அலையச் செய்தார்.

இந்த உணர்வுகள் உன்னை எப்படி இயக்குகின்றது…? அதை எப்படி மாற்றி அமைக்க வேண்டும்…? என்ற உண்மையைச் சொல்லப்படும் பொழுதுதான் அவர் வழியில் துருவன் பெற்ற ஆற்றல்களை… அவன் எவ்வாறு எல்லாம் தனக்குள் வந்ததை மாற்றி அமைத்தானோ “அதையும் நான் பெறும் தகுதியாக குருநாதர் ஏற்படுத்தினார்…”

அவர் எவ்வழியில் உணர்த்தி இதைப் பெறும் தகுதியை எனக்கு ஏற்படுத்தினாரோ அதன் வழியில் உங்களுக்குள்ளும் இதைப் பதிவாக்கி அந்தத் தகுதியை ஏற்படுத்துகின்றேன்.

1.அகண்ட அண்டத்தையும் இந்தப் பிண்டத்திற்குள் எப்படி இந்த உணர்வுகள் உருவானது என்ற நிலையையும் நினைவுபடுத்தி
2.அதனின் வலிமை கொண்டு நீங்களும் இதை அறிந்து உங்களுக்குள் இது விளைந்து உங்கள் வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றி
3.உங்கள் சொல்… கேட்போர் உணர்வுகளிலும் ஆழமாகப் பதிந்து
4.அவருக்குள் விளைந்த தீமைகளை அகற்றிடும் நிலையாக இது உருவாக வேண்டும்.
5.அருள் மகரிஷிகளின் உணர்வுகள் வளர்ந்து விட்டால் பதட்டத்தையும் மற்ற தீமைகளையும் அடக்கி “வெளிச்சமாக…” உங்கள் உடலிலிருந்து வரும்.

பழனியில் இருக்கும் ஒருவருக்கு இது போன்று கிடைத்தது. அவர் எதையுமே கூர்மையாக உணரக்கூடியவர். இந்த உபதேசத்தைக் கொடுக்கப்படும் பொழுது கூர்மையாகக் கவனித்தார். இப்படி எல்லாம் நடக்குமா…! என்று ஆச்சரியக் குறியுடன் எண்ணினார்.

இரவிலே தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது பளீர்ர்… என்று ஒளிகள் அவர் உடலிலிருந்து வெளிப்படுகின்றது. அவர் அரண்டு எழுந்திருக்கின்றார்… சப்தமிடுகின்றார்.

சப்தத்தைக் கேட்டு அவர் மனைவியும் எழுந்து பார்க்கின்றது. கணவர் உடலிலிருந்து வரும் வெளிச்சத்தை அதுவும் பார்க்கின்றது. அந்த இடமே வெளிச்சமாக மாறுகின்றது.

இந்த வயதிலேயே இதையெல்லாம் கண்டு விட்டால் நான் இனி என்ன செய்வது என்று தனக்குத் தானே அச்சுறுத்திக் கொண்டு என்னிடம் வந்து இதைக் கேட்டார்.

1.வெளிச்சத்தைப் பார்த்த நாளிலிலிருந்து எனக்குப் பயமாக உள்ளது.
2.மனிதனாகப் பிறந்தேன்… என் ஆசை எல்லாம் போய் விட்டால் நான் என்ன பண்ணுவது…? என்று அவர் இதைப் பிடிவாதமாகப் பிடிக்கின்றார்.
3.உண்மைகளை அவர் நுகர்ந்தாலும் அவருடைய பிடிவாத உணர்வுகள் அது இயக்கிக் கீழே அழைத்துச் சென்றது.

அவரின் பிடிவாதத்திற்குக் காரணம் என்ன…?

இந்த மனித வாழ்க்கையில் மற்றவர்களின் பழக்க வழக்கங்களைச் சேர்க்க விரும்புகின்றார். நண்பர்களுடன் அதிகமாகச் சேர்ந்து “மது குடிக்கும் பழக்கம் இருக்கின்றது…”

மதுப் பழக்கம் உள்ளவருடன் இணைந்து வரும் பொழுது அது அதிகமாகி விட்டது… தன் ஒழுக்கம் அவரிடம் மறைந்தே விட்டது.

1.உயர்ந்த சக்திகளைக் கொடுத்தும் இதை அவர் வலு சேர்க்கவில்லை.
2.தன் உடலின் இச்சை வரப்படும் பொழுது அதனுடைய மாற்றங்கள்…
3.மற்றவன் தான் செய்யும் உணர்வு வரப்படும் பொழுது அவருடைய நிலை ரொம்பவும் மோசமான நிலைக்குப் போய்விட்டது.
4.உயர்ந்த உணர்வுகல் கிடைத்தும் அவருக்குப் பலனில்லை.

ஏனென்றால் இந்த உணர்வின் வலிமை உடலின் இச்சைக்குத் தான் வருகின்றது. உடலின் இச்சைக்கு வந்தாலும் பல செயல்களைப் பார்த்துப் பலவீனம் அடையப்படும் பொழுது மன நிலை குழம்புகின்றது.

அதை அடக்குவதற்கு மதுவைக் குடிக்கின்றார்… தன் நிலையை மறக்கின்றார். மறக்கும் உணர்வுகள் தனக்குள் வளர்க்கப்படும் பொழுது தன் நிலையையே இழக்கச் செய்கின்றது.

1.ஏனென்றால் இது எல்லாம் மனிதனுக்குள் வரும் ஆசையின் உணர்வுகள்…!
2.அது வளர்ந்து விட்டால் நான் உயர்ந்த உணர்வுகளைக் கொடுக்கும் போது
3.அதை நீங்கள் “பயனற்றதாக ஆக்கி விடக்கூடாது… என்பதற்குத் தான் “உங்களுக்கு எச்சரிக்கையும் கொடுக்கின்றேன்…”

உயிரை “நம்முடைய வசத்திற்கு இயக்கலாம்…”

உயிரை “நம்முடைய வசத்திற்கு இயக்கலாம்…”

 

நெருப்பிலே ஒரு பொருளைப் போட்டோம் என்றால் அந்தப் பொருளின் மணமே அதிலிருந்து வரும். அதைப் போன்று நம் உயிரிலே எந்தச் சத்தைப் போடுகின்றோமோ அந்தச் சத்தின் மணமே வெளிப்படும்.
1.நமது உயிர் நெருப்புக்குச் சமம்.
2.மனிதனான பின் இந்த உயிரை “நம்முடைய வசத்திற்கு இயக்கலாம்…”
3.உயர்ந்த உணர்வு வரும் போது அது நமக்குள் அது திரும்பி வர வேண்டும்.

ஒருவர் வேதனைப்படுகிறார் என்று உற்றுப் பார்த்து நாம் நுகர்ந்தால் அந்த உணர்வு தான் நம் உடலுக்குள் பாய்ந்து அந்த வேதனையின் இயக்கமாக இங்கேயும் மாறுகின்றது.

அதே சமயத்தில் வேதனையை நீக்கிய அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்தோம் என்றால்… நம் வேதனை நீங்கி ஒளி என்று அறிவாகும் தன்மையாக… நமக்குள் நஞ்சு கலக்காது நஞ்சு வளராது தடுத்துக் கொள்ளும் சக்தியாக அது வருகின்றது.

மனிதனில் இப்படி வளர்ந்தவன் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷி ஆகி துருவ நட்சத்திரமாக ஆனது. அதிலிருந்து வரக்கூடிய உணர்வை நீங்கள் எடுத்துப் பழகுவதற்குத் தான் பயிற்சி கொடுக்கின்றோம்.
1.”ஏராளமாக…” அங்கிருந்து விளைந்து வருகின்றது.
2.எடுத்துப் பழகினால் உங்களுக்கு நல்லதாகும்.

வாழ்க்கையில் வரும் தீமைகளை மாற்றி… தீமைகளை அடக்கி நமக்குள் மகிழ்ந்து வாழும் சக்தியாக என்றும் ஏகாந்த நிலையாகப் பெறச் செய்யும். ஏகாதசி என்றால் எதுவுமே நம்மைத் தாக்காத நிலை பெறலாம். ஏகாதசி விரதம் என்றும் சொல்வார்கள்.

நாம் அந்த அருள் ஒளி பெற வேண்டும். நாம் பார்த்த குடும்பம் எல்லாம் பேரருள் பேரொளி பெற வேண்டும். இருளை அகற்றிப் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும் என்று எல்லோரும் நினைக்கும் பொழுது
1.எல்லோருடைய உணர்வு நமக்குள் இருக்கின்றது.
2.அவர்கள் பகைமையை நாம் எடுப்பதில்லை.
3.நமக்குள் இருக்கும் அந்த அணுக்களுக்கு அருள் உணர்வுகளை இணைத்துக் கொண்டே இருக்கும்.

நோய் என்று வரும் பொழுது எப்படி டாக்டர்கள் இன்ஜெக்ஷன் செய்து இரத்தத்தில் கலக்கச் செய்கின்றார்களோ இதைப் போன்றே உயிர் வழி கவர்ந்து நம் உடல் உறுப்புகளில் இணைக்கப்படும் போது அந்த அணுக்களை நாம் நன்மை செய்யக்கூடியதாக மாற்றியமைக்க முடியும்.

எப்படி இன்ஜெக்ஷன் செய்கின்றார்களோ அதைப் போன்று கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்தால் “அது தான் முக்கண்…!”
1.நாம் புறத்தால் பார்க்கின்றோம் அதையே… உயிருடன் சேர்த்து எண்ணப்படும் பொழுது உயிர் வழி நாம் இயக்க முடியும்.
2.அதற்காகத்தான் துருவ நட்சத்திரத்துடன் உங்கள் உணர்வை இயக்கப்பட்டு எளிதில் பெறுவதற்கு இப்படிக் கொடுப்பது.

இதில் ஒன்றும் சிரமம் இல்லை. எனக்கு அந்த நினைவு வருகின்றது இந்த நினைவு வருகிறது என்று எதையும் பற்றி நீங்கள் எண்ண வேண்டியதில்லை.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்று அடிக்கடி எண்ணினாலே போதுமானது. இந்த உணர்வுகளை மாற்றி அமைக்க முடியும். உடலில் வரும் சிரமங்களைப் போக்க முடியும்.

ஆனால் எப்படித்தான் இருந்தாலும் இந்த உடல் அழியக் கூடியது தான்.
1.உயிர் அழிவதில்லை…! அழியா உயிருடன் ஒன்றி அழியா உணர்வு பெற்ற அந்த மகரிஷியின் உணர்வுகளை எடுத்து
2.வாழ்க்கையில் வரும் எத்தகைய தீமைகளைக் கண்டாலும் அந்தப் பேர்ருள் பேரொளி உணர்வைக் கவர்ந்து நமக்குள் சேர்த்தால்
3.உடலின் ஆசைகளை விடுத்து ஒளி என்ற உணர்வின் தன்மை இணைத்து பிறவி இல்லா நிலை அடையும் சக்தி பெறுகின்றோம்.

நான் தியானிப்பது யாரை…?

நான் தியானிப்பது யாரை…?

 

குருநாதர் பித்தரைப் போன்று இருந்து சாக்கடை அருகே எம்மை அமரச் செய்து…
1.அந்தச் சாக்கடையை நீக்கி நல்ல உணர்வுகளை எவ்வாறு பெற வேண்டும்…? என்று
2.உபதேசித்த அருளைத் தான் “நீங்களும் நிச்சயம் பெற முடியும்” என்று உபதேசித்து வருகின்றோம்.

அந்த அருள் ஞானிகள் அவர்களுக்குள் விளைய வைத்த ஆற்றல்கள இங்கே நமக்குன் முன் படர்ந்திருப்பதை நிச்சயம் நீங்கள் பெற முடியும்.

நாம் எண்ணியதை நம் உயிர் படைக்கின்றது என்ற நிலையில் நாம் எதை எண்ணுகின்றோமோ அதுவாகின்றோம். கீதையில் சொன்னது போன்று நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்.

கண் காட்டிய வழியில் நிச்சயம் அந்த அருளை நீங்கள் பெற முடியும்.

1.யாம் உபதேசித்த உணர்வை நீங்கள் பெற வேண்டும் என்று “நான் தியானிப்பது யாரை என்றால்… உங்கள் உயிரைத் தான்…!”
2.உயிரால் அமைக்கப்பட்ட இந்த உடலான ஆலயத்திற்குள்…
3.மனிதனாக உருவாக்கப்பட்ட அரும்பெரும் சக்திகள் நல் உணர்வுகளாகத் தெய்வமாக இருக்கும் நிலையில்
4.அறியாத உட்புகந்து தீமைகள் செய்யும் அந்த நிலையை அகற்ற வேண்டும் என்பதற்குத்தான் இந்தத் தியான பயிற்சி.

ஒருக்கிணைந்த நிலையில் தியானிக்கப்படும் பொழுது உங்களுடைய நினைவலைகள் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று எண்ணும் போது… “உங்கள் உயிரை நான் தியானிக்கின்றேன்…”

1.என் குரு காட்டிய நிலைகள் கொண்டு உங்களுக்கு உறுதுணையாக
2.உங்கள் உயிரை ஈசனாக மதித்து அவன் கட்டிய ஆலயத்திற்குள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் என்று தியானிகின்றேன்.

மனிதனாக உருவாக்கிய அரும்பெரும் சக்தியான அந்தத் தெய்வ நிலைகள் மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும்… அங்கே அறியாத இருள்கள் நீங்க வேண்டும் என்று தான் உங்களை நான் தியானிக்கின்றேன்.

நீங்கள் இதை எண்ணித் தியானித்து அந்த ஆற்றல்களை வளர்த்துக் கொள்ளலாம்.

இந்த உபதேச வாயிலாக உங்கள் உணர்ச்சிகளைத் தூண்டச் செய்து… அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நீங்கள் பெற உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து உங்கள் உடலைக் கோவிலாக மதித்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்கள் உடலில் இணைய வேண்டும் என்று உங்களை தியானிக்கும் பொழுது
1.நீங்களும் அதே போன்று எண்ணினால் மகரிஷிகளின் அருள் சக்திகளை நீங்கள் கவரும் சக்தி பெற்று
2.உங்கள் ஆன்மாவிலே கலக்கப்பட்டு… உங்களுக்குள் சக்தி வாய்ந்த ஞான வித்துக்களாக ஊன்றப்படுகின்றது.

இந்த உணர்வின் நினைவு கொண்டு நாம் அனைவரும் ஒன்று சேர்த்து தியானத்தில் அமர்ந்திருக்கும் “அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்” என்ற வாக்கினைப் பதியச் செய்கின்றோம்.

அதன் வழியில் உடல் நலம் மன நலம் மன பலம் மன வளம் தொழில் வளம் பெறவும்… யாம் கொடுக்கும் வாக்கின் தன்மையால் ஒற்றுமையான உணர்வுகளை வளர்க்கவும் இது உதவும்.

இந்த உணர்வின் துணை கொண்டு உங்களுக்குள் அதை வலுப் பெறச் செய்வதற்கே குருநாதர் காட்டிய அருள் வழியில் மீண்டும் மீண்டும் உபதேசித்து உங்களுக்குள் அதை ஆழமாகப் பதிவாக்குகின்றோம்.

அந்த அருள் ஞானியின் சக்திகளைப் பருகும் தகுதி பெற வேண்டும் என்பதற்குத்தான் கூட்டுத் தியானத்தைச் செய்வது.

கூட்டுத் தியானம் இருக்கக் கற்றுக் கொண்டவர்கள்
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எந்த நிமிடத்தில் என்று எண்ணினாலும்
2.உடனுக்குடன் அதை நீங்கள் பெற முடியும்… தீமைகளிலிருந்து விடுபட முடியும்… மகிழ்ந்து வாழும் அருள் சக்தியைப் பெற முடியும்.

தியானத்தின் மூலம் மகரிஷிகளின் அருள் சக்திகளை “நமக்கு முன் மலை போல் குவியச் செய்ய வேண்டும்”

தியானத்தின் மூலம் மகரிஷிகளின் அருள் சக்திகளை “நமக்கு முன் மலை போல் குவியச் செய்ய வேண்டும்”

 

அன்று ஞானிகள் எவ்வாறு செயல்பட்டார்கள்…? அவர்கள் வழியில் எந்த வினைகளை நமக்குள் சேர்க்க வேண்டும்…? என்பதை குருநாதர் காட்டினார்.
1.அன்று அகஸ்தியன் சந்தர்ப்பத்தால் தீமையை நீக்கும் சக்திகளை எப்படி எடுத்தாரோ…? அதைப் போல
2.சந்தர்ப்பத்தால் துன்பப்பட்டு வருவோருக்கு மெய் உணர்வுகளை உணர்த்தி… அருள் ஞானிகள் அருள் வித்துக்களை அவர்களுக்குள் பதியச் செய்.
3.அதைப் பெற வேண்டும் என்று ஏங்கும்படி செய்… அந்த உணர்வுகளை அங்கே வளரச் செய்
4.அவர்களை அறியாது வந்த இருளை நீங்கச் செய்
5.அவர்களுக்குள் அது வளர்ந்து அதனால் மகிழ்ந்து உறவாடுவதை நீ பார்
6.அந்த மகிழ்ச்சியான உணர்வை உனக்குள் எடுத்துக் கொள்.
7.அந்த நிலையை நீ உருவாக்கி மகிழ்ச்சியான சொல்களை நுகர்ந்து உன் உடலுக்குள் செலுத்திவிடு…! என்று குருநாதர் காட்டினார்.

நீங்கள் எல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். உங்களை அறியாது சேர்ந்த விஷமான உணர்வுகள் நீங்கி இருள்கள் நீங்கி மெய் ஒளிகள் பெற வேண்டும் என்று “குருநாதர் காட்டியபடி யாம் செய்து கொண்டிருக்கின்றோம்…”

உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்களின் உயிரான்மாக்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து அவர்கள் ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் எண்ணும் பொழுது அவர்கள் மூலம் சப்தரிஷி மண்டல ஒளிகளை நாம் பெற முடிகின்றது… வாழ்க்கையில் வரும் இருளைப் போக்க முடிகின்றது.

உங்களுக்குள் அந்த நினைவின் எண்ணங்கள் என்றும் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்குத் தான் பௌர்ணமி தியானத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம்.

உடலை விட்டுப் பிரிந்து சென்ற மூதாதையர்களின் உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலம் சென்றடைந்து என்றும் 16 என்ற நிலை அடைந்து ஒளிச் சரீரமாக அவர்கள் பெற வேண்டும் என்று “நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து… உந்தித் தள்ள வேண்டும்…”

அதற்காகத் தான் யாம் உபதேசிக்கும் இந்த உணர்வின் ஆற்றல் ஒவ்வொரு உள்ளத்திலும் ஆழமாகப் பதிந்து அந்த உணர்வின் உணர்ச்சிகளை ஓங்கி வளரச் செய்துள்ளோம். அனைவரும் சேர்ந்து ஒரே எண்ணத்தில் ஏங்கப்படும் பொழுது தான் “அந்த மகா ஞானிகள் ஆற்றலைப் பெற முடியும்…”

ஏனென்றால்
1.மகரிஷிகள் எந்த ஒரு மனிதனுடைய ஈர்ப்பிற்குள்ளும் சிக்காமல் தப்பிச் சென்றவர்கள்.
2.அவர்கள் உடலில் விளைந்த உணர்வுகளை இழுக்கக்கூடிய வலு இழந்தவர்கள் தான் சாதாரண மனிதர்கள்.

இருந்தாலும் சிறு துளி பெரு வெள்ளம் போன்று எல்லோருடைய எண்ணங்களையும் ஒன்றாகச் சேர்க்கப்படும் பொழுது அது வலுவடைந்து பெரும் வெள்ளமாக அமைகின்றது.

மழையினால் ஏற்படும் வெள்ளம் குப்பை செத்தைகளை அடித்துச் செல்வது போல
1.நாம் எண்ணக்கூடிய அந்த ஒவ்வொரு ஞானிகளுடைய எண்ணங்களும் சிறுகச் சிறுகப் பதிவாகி
2.இந்த எண்ணங்கள் அனைத்தையும் அவர்கள் பால் ஓங்கிச் செலுத்தப்படும் பொழுது இந்த உணர்வலைகள் வளம் பெற்று
3.நமக்கு முன் நிற்கும் அசுத்த உணர்வுகளை… விஷத் தன்மை கொண்ட உணர்வுகளை அகற்றச் செய்யும்.

பன்றி சாக்கடைக்குள் இருக்கும் நல்ல பருப்பை எப்படி நுகர்ந்து எடுக்கின்றதோ அதைப் போல நாம் அனைவரும் சேர்ந்து இந்த உணர்வின் நினைவாற்றலை விண்ணிலே ஓங்கிச் செலுத்தப்படும் பொழுது அந்த மாக ஞானிகளின் உணர்வலைகள் இங்கே நமக்கு முன் குவிகின்றது. செத்தை குப்பை என்ற விஷத் தன்மைகளைப் பிளந்து அப்புறப்படுத்துகின்றது.

ஆக…
1.அந்த அருள் ஞானிகளுடைய சக்திகளை அவர்களை ஒத்த நிலைகள் நாம் எண்ணும் பொழுது அது இங்கே குவிக்கப்பட்டு
2.அவரவர்கள் எண்ணிய அளவுக்குத்தக்க நமக்கும் சிறிதளவு பங்கு கிடைக்கின்றது.
3.நம் உடலுக்குள் அது வளரும் தன்மை பெறுகின்றது.
4.அதை மீண்டும் எண்ணும் பொழுது எந்த நேரத்திலும் அந்தச் சக்தி கிடைக்கின்றது.

அதே சமயத்தில் நம் மூதாதையர்கள் அவர்கள் தவம் இருக்கவில்லை என்றாலும் வரம் வாங்கவில்லை என்றாலும் அவர் உடலில் விளைந்த உணர்வுகள் நமக்குள் உண்டு.

நாம் அனைவரும் ஒத்த உணர்வு கொண்டு உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று “இந்த உணர்வின் ஒலிகளை எழுப்பப்படும் பொழுது… அந்த ஒளி அலைகளுடன் அது மிதந்து அந்த விண்ணின் ஆற்றலில் நம்மால் சுழல வைக்க முடியும்…!”

இப்படித்தான் குருநாதர் எனக்குச் சொல்லிக் கொடுத்தார்.

நமக்காக வேண்டி பாடுபட்ட அந்த நல்ல உள்ளங்கள் தன்னை அறியாது சேர்ந்த இருளான நிலைகளில் இருந்து விடுபட இம்முறைகள் தான் கடந்த காலங்களில் ஞானிகள் காட்டிய நிலைகள். ஆனால் பிற்காலங்களில் இது மறைந்து விட்டது.

இன்று மனிதனுடைய எண்ணங்கள் முழுமையாக அழியும் இத்தருணத்தில் அது மீண்டும் இங்கே கிளர்ந்து எழுகின்றது. குருநாதர் எம்மிடம் சொன்னது…
1.அந்த ஞானிகளின் அருளாற்றலை உனக்குள் ஓங்கி வளரச் செய்து
2.உன்னை நாடி வருவோர் (எண்ணுவோர்) அனைவருக்கும் மகரிஷியின் அருள் ஒளி படர வேண்டும் என்று ஏக்க உணர்ச்சிகளைச் தூண்டி
3.அவர்கள் துன்பங்களிலிருந்து விடுபடச் செய்து அந்த மெய் ஒளியின் மகிழ்ச்சியான நிலைகள் வெளிப்படுவதை
4.நீ நுகர்ந்து அந்த விண்வெளியின் ஆற்றலை நீ பெறு.
5.இதுதான் உனக்கு நான் கொடுக்கின்ற வரம்…! அதைத்தான் நீ வளர்க்க வேண்டும் என்று குருநாதர் காட்டினார்.

ஆகவே நீங்கள் அனைவரும் அந்த நிலை பெற வேண்டும் என்ற இந்த இச்சையில் நான் எண்ணி ஏங்கிய உணர்வுகள் “என் உடலுக்குள் கிரியை ஆகிச் சொல்லாக வெளிப்பட்டதும்… என் உடலுக்குள் அந்த உணர்வுகள் கிரியை ஆகி அது இயங்கியதும்… அந்த ஞானத்தின் வழியிலே தான்…”

குருநாதரை நான் எண்ணும் பொழுதெல்லாம்… குரு வழியிலேயே அவர் காட்டிய அருள் ஞானம் எனக்குள் நான் எடுத்துக் கொண்ட இச்சையில் “இன்றும் விளைந்து கொண்டிருக்கின்றது…”
1.அந்த ஞானத்தின் சொல் தொடராக வெளிப்படுகின்றது.
2.நீங்கள் கூர்ந்து கவனிக்கும் போதும் அதைச் சுவாசிக்க நேர்கின்றது.
3.அருள் வித்தாக அதன் சத்தைப் பெறும் சக்தியாக உங்களுக்குள் விளைகின்றது.

அதற்காக வேண்டித் தான் பொறுமையுடன் பொறுப்புடன் ஏங்கி… ஒவ்வொரு நாளும் அந்த அருள் ஞானிகளின் சக்திகளை உங்களுக்குள் பதிவு செய்கின்றேன். உங்களை அறியாது வந்த இருள் நீங்க வேண்டும் என்ற ஆசையில் தான் மணிக் கணக்கில் “திரும்பத் திரும்ப… திரும்பத் திரும்பச் சொல்வது…”

காரணம்…
1.ஒவ்வொரு நொடியிலும் நல்லதையே எண்ணுவோம்…! ஆனாலும் அடுத்த கணம் சங்கடத்தை எண்ணுவோம்…!
2.இது போன்ற நிலைகள் நமக்குள் சேராத வண்ணம் தடுப்பதற்குத் தான்
3.“திரும்பத் திரும்ப நீங்கள் வளர வேண்டும்” என்று அந்த இச்சையை நான் வெளிப்படுத்துகின்றேன்.

நமது குருநாதர் உபதேசித்து உணர்த்திய அருள் வழிப்படி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நீங்கள் ஒவ்வொரு நொடிப் பொழுதும் எடுத்து உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்குள் வலுக் கொண்டதாகச் சேர்த்துக் கொள்ளுங்கள். உயிருடன் ஒன்றும் அனைத்தையும் ஒளியின் சுடராக மாற்றுங்கள்.

இந்த மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் நாம் எதைத் தியானிக்கின்றோம்…?

இந்த மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் நாம் எதைத் தியானிக்கின்றோம்…?

 

ஆலயங்களுக்குச் செல்வோர் இன்று பெரும்பகுதியானவர்கள் எப்படி வணங்குகின்றார்கள்…?

1.என் பையனை நான் கஷ்டப்பட்டு வளர்த்தேன்… அவன் இப்பொழுது என்னை எதிர்க்கின்றானே…!
2.எனக்கும் மனைவிக்கும் மக்களுக்கும் ஒத்துக் கொள்ளாத நிலைகளில் வேதனைகளை நீ அனுபவிக்கச் செய்கின்றாயா…?
3.எத்தனை காலம் தான் நீ என்னை சோதிக்கின்றாய்…? என்று தீமையைத்தான் அங்கே எடுக்கின்றோம்.

கையிலே விஷத்தைத் தடவி அப்படியே அடுத்த பொருளை எடுப்பது போன்று தான் செயல்படுகின்றோம்.

ஆனால் ஞானிகள் காட்டியதோ… ஆலயத்திற்குள் காட்டப்பட்டுள்ள தெய்வ குணங்களை எண்ணித் தியானித்து… அந்தச் சக்தியைத் திரும்பத் திரும்ப எண்ணி நமக்குள் வளர்த்துக் கொள்ளும் நிலைதான்… அதாவது நல்லதை வளர்ப்பது தான் “தியானம்…”

ஒருவன் நம்மை ஏசி விட்டாலோ… பையன் மீது பற்று இருந்து அவன் தவறு செய்கின்றான் என்று ஒரு முறை ஆழமாகப் பதிவு செய்து விட்டாலோ… இப்படிச் செய்கின்றானே… இப்படிச் செய்கின்றானே… இப்படிச் செய்கின்றானே…! என்று “தியானிக்கின்றோம்…”

1.அதனின் உணர்வு நமக்குள் அவனை வெறுக்கும் நிலையாக அந்த வெறுப்பு வளர்ந்து…
2.நம் சொல்லைக் கேட்போருக்கு நம்மை வெறுக்கும் நிலையும்…
3.அதே வெறுக்கும் நிலை வியாபாரத்தில் ஒரு சொல்லைச் சொல்லும் பொழுது என்னைப் பார்க்கும் போது வெறுப்பாகி…
4.நம் வியாபாரமும் மந்தமாகி விடுகிறது.

இது மட்டுமல்ல…! வாழ்க்கையில் எங்கே சென்றாலும் சலிப்பு சஞ்சலம் வெறுப்பு போன்ற உணர்வுகளை அடிக்கடி எண்ணினோம் என்றால் “இதெல்லாம் தியானம் தான்…”

இந்தத் தியானத்தின் பலன் நாம் தொழில் செய்யும் இடங்களிலேயும் வெறுப்பான உணர்வுகள் பதிவாகி அதையே மீண்டும் எண்ணி… இவனும் இப்படிச் செய்கின்றான்… அவனும் இப்படிச் செய்கின்றான்… எல்லோரும் மோசமானவர்கள்…! என்று “இதைத் தியானிக்கிறோம்…”

மனிதனின் ஆறாவது அறிவு கொண்டு கருணைக் கிழங்கை வேக வைத்து விஷத்தை நீக்கி சுவை மிக்கதாகப் படைக்கின்றோம். இதே போல தங்க நகை செய்யும் போது செம்பும் வெள்ளியையும் வைத்து அழகான ஆபரணமாகச் செய்தாலும்… பின் மீண்டும் அதை அழித்துப் புதிய நகை செய்ய வேண்டும் என்றால் திரவகத்தினை ஊற்றி அதனுடன் கலந்த செம்பையும் வெள்ளியையும் ஆவியாக்கி நீக்கிவிட்டுச் சுத்தமான நிலையில் மீண்டும் நகையைச் செய்கின்றோம்.

இதைப் போன்று தான்…
1.இந்த மனித வாழ்க்கையில் துன்பப்படுவோருக்கு நாம் நன்மைகள் செய்தாலும்
2.நம்மை அறியாமல் பிற உணர்வுகள் நம் உடலுக்குள் சென்று அது துரிதமாக இயக்கி வேதனைப்படுகின்றார்கள் என்பதை உணர்த்தினாலும்
3.அதைத் துடைக்காது விட்டு விட்டால் நம் நல்ல குணங்களை மறைத்து விடுகின்றது.

இப்படி மீண்டும் மீண்டும் நல்ல குணங்களை மறைக்கும் செயலாக அந்தத் தீமைகளைத் துடைக்காது சலிப்பு சஞ்சலம் சங்கடம் வெறுப்பு வேதனை போன்ற உணர்வுகளை அடுக்கடுக்காகச் சேர்த்துக் கொண்டே வந்தால் நல்ல உணர்வுகளை எல்லாம் நாம் செயலற்றதாக மாற்றி விடுகின்றோம்.

நல்ல குணங்களால் உருவாக்கப்பட்ட இந்தச் சரீரத்தைப் பாழ்படுத்தி நம் எண்ணத்தையும் சொல்லையும் மற்றவர்கள் கேட்கப்படும் போது அங்கேயும் பாழ்படுத்திக் கொள்ளும் நிலையாக உருவாகி விடுகிறது.

1.ஆகவே இந்த மனித வாழ்க்கையில் நாம் எதை ஒவ்வொரு நாளும் தியானிக்கின்றோம்…?
2.சங்கடத்தையும் சலிப்பையும் கோபத்தையும் வெறுப்பையும் வேதனையும் தான் நாம் தியானிக்கின்றோம்.

இதிலிருந்து விடுபட வேண்டும் அல்லவா…!

ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி விநாயகரைப் பார்க்கப்படும் போதெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இதைத் தியானித்து… எல்லோருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் ஒளி கிடைக்க வேண்டும்… அவர் அறியாத இருள்கள் நீங்க வேண்டும் மெய்ப்பொருள் கண்டறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் என்று எண்ணினால்… கீதையிலே சொன்னது போன்று நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய்…!

1.பிறர் நலம் பெற வேண்டும் என்று நாம் எண்ணிய உணர்வுகள் நமக்குள் விளைந்து
2.விளைந்த அந்த உணர்வின் சொல் கேட்போர் உணர்வுகளிலும் தீமைகளை அகற்றி விடுகின்றது.

நமது வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும்…? நாம் எடுக்கும் தியானம் எப்படி இருக்க வேண்டும்…? என்பதற்குத்தான் ஆலயங்கள்.

நல்லது செய்யும் பொழுது மறைந்த நிலையில் தீமைகள் நமக்குள் உள் சென்று நல்ல குணங்களை இயக்கத் தடைப்படுத்திக் கொண்டிருக்கும் அந்தத் தடைகளை நீக்க..
1.அருள் ஞானிகளின் உணர்வைத் தியானித்து உள் செலுத்தித் தீமையை அகற்றிடும் நிலையாக
2.ஆறாவது அறிவால் இயற்கையில் விளைந்த நஞ்சினை நீக்கி நல்ல உணர்வினை அதற்குள் சேர்ப்பித்து சுவை மிக்கதாகப் படைப்பது போல
3.எது நல்ல குணமோ அதை நம் வாழ்க்கையில் மீண்டும் சுவைமிக்கதாக மாற்றும் நிலையாகத் தான் ஆலயங்கள் அமைக்கப்பட்டது.

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்த நன்மையின் நிலைகளைக் காத்திடவும் அந்த நன்மைகள் உங்கள் உடலைக் காத்திடவும் பிறருக்கு நன்மை செய்த அவர்களைக் காத்திடவும் அருள் ஞானிகள் உணர்வை நீங்கள் பெற்று உங்களை அறியாத வந்த தீமைகளை நீக்க ஒரு “ரிமோட் கண்ட்ரோல்…!”

அதாவது… ஒரு வேப்பமரம் தன்னுடைய கசப்பான மணத்தின் தன்மை கொண்டு அதனுடைய வலுவால் தன் அருகிலே மற்ற நறுமணங்கள் வந்தாலும் அதை வர விடுவதில்லை. இதே போன்று தான் ரோஜாச் செடி மற்ற மணங்களைத் தன் அருகிலே வர விடுவதில்லை.

இதைப் போல… கோபம் கொண்டவர்கள் சாந்தமாக ஒருவர் பேசினால் அவர்களைக் கண்டாலே எரிச்சல் வரும். சாந்தமானவர்களுக்கு கோபமாகப் பேசுபவர்கள் செயலைப் பார்த்தபின் அவர்களுக்கு அந்த வேதனை வருகின்றது.

ஆனால் தாவர இனங்கள் அனைத்தும் மற்ற மணங்களைத் தன் அருகிலே வரவிடாதபடி ஒதுக்கி விடுகின்றது. மனிதர்களோ
1.அதே மணத்தைக் கொண்ட எண்ணங்களை “நாம் நுகர்ந்து தான்” அறிய முடிகின்றது.
2.ஆனால் “தாவரங்கள் நுகராது” தன் வலுவால் மணத்தால் ஒதுக்குகின்றது.

அதே தாவர இனச் சத்து மனிதனுக்குள் வரும் பொழுது நினைவின் ஆற்றலால் நுகர்ந்து… பின் இதை வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளி விடுகின்றது. ஆனால் உள் சென்று தான் வெளி செல்கின்றது.

உயிரினங்களுக்கும் தாவர இனங்களுக்கும் உண்டான வித்தியாசம் இது தான்…!

இந்த மனித வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்ற… தங்கத்திலே திரவகத்தை ஊற்றுவது போல மகரிஷிகள் உணர்வை நமக்குள் நுகர்ந்து… தீமைகள் புகாது காத்திடும் நிலையே அருள் ஞானிகள் காட்டிய தெய்வப் பண்புகள்.

எத்தகைய துயரம் ஏற்பட்டாலும் “ஈஸ்வரா…!” என்று உங்கள் உயிரை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்னை அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும்… மெய்ப்பொருள் கண்டுணர்ந்து செயல்படும் திறன் பெற வேண்டும் என்று தியானித்தால் இந்த உணர்வு உங்களுக்குள் விளைகின்றது.

நான் சொன்ன இந்த முறைப்படி தியானித்தால் அந்தச் சக்தி உங்களுக்குக் கிடைக்கும்….! (ஞானகுரு)

எதை நமக்குள் காயத்ரி ஆக்க வேண்டும்…?

எதை நமக்குள் காயத்ரி ஆக்க வேண்டும்…?

 

1.கண்ணுக்கு முன் பரவிக் கிடப்பது பரமாத்மா…!
2.அதிலிருந்து நாம் எண்ணி எடுப்பது ஆத்மா
3.அந்த உணர்வுகள் எனக்குள் விளைவது ஜீவாத்மா
4.விளைந்த உணர்வுகள் எதனெதன் உணர்வுகள் எனக்குள் இணைத்து எதைக் காக்க வேண்டும் என்று எண்ணினேனோ
5.இந்த உணர்வின் ஆற்றலுடைய நிலைகள் என் உயிருடன் சேர்த்து நினைவுடன் இயக்கக்கூடிய ஆற்றலாக
6.ஒரே இயக்கமாக வருவது காயத்ரி நான்காவது – உயிராத்மா.

நாம் எண்ணிய உணர்வுகள் அனைத்தும் தனக்குள் அது சிருஷ்டிக்கப்படுகின்றது.

இறைவா என்று சொல்லும் பொழுது எதை இறையாக்க வேண்டும்…? எதை நாம் காயத்ரி ஆக்க வேண்டும்…?

காயத்ரி என்றால் உயர்ந்த எண்ணங்களை எண்ணி எடுக்க வேண்டும். பரமாத்மா ஆத்மா ஜீவாத்மா உயிராத்மா காயத்ரி. நாம் விளைவித்த உணர்வின் தன்மையை இயக்கிக் காட்டுவது தான் காயத்ரி.

சூட்சமத்தில் நடக்கக்கூடிய நிலைகள் சூரியனைப் பற்றியது.
1.உயிருடன் இணைந்து இயக்கும் நிலையில் சூரியனுடைய நிலைகள் உயிரின் தன்மையாக மாற்றி
2.மற்றதனுடன் கலந்து இயக்கும் நிலைகள் காயத்ரி… ஆக உருப்பெறும் சக்தியாக மாறுகின்றது
3.மனிதனுடைய எண்ண உணர்வுக்குள் ஒன்றுக்குள் பட்ட உடனே காயத்ரி.

ஆனால் அழிக்கும் உணர்வாக காயத்ரி ஆக மாற்றப்படும் பொழுது அந்த உணர்வின் தன்மை அதர்வண வேதத்தில் தத்துவத்தை அப்படி மாற்றி விட்டார்கள்

அழிக்கும் உணர்வைத் காயத்ரியாக்கி மந்திர ஒலியாகத் தனக்குள் சிருஷ்டித்து அந்த உணர்வின் அலையாகத் தனக்குள் இயக்கி மந்திரம் என்ற நிலையில் கொண்டு சென்று விட்டார்கள்.

காயத்ரி மந்திரம் பெரும்பகுதி எதற்கு உதவுகின்றது…? அதர்வண வேதத்திற்குப் பயன்படுகிறது. அதர்வண வேதத்தில் சிருஷ்டிக்கும் தன்மை உணர்வின் எண்ண அலைகளைப் பரப்பச் செய்து அதனின் நிலைகள் கொண்டு கவர்வது தான்… உண்மையை அவர்கள் உணராதவர்கள் அல்ல.

ஆனால் மனித வாழ்க்கை பிரதானம் என்கிற பொழுது நமக்குள் படைக்கும் தன்மை இங்கே எதிலே படைத்து பக்தியில் நாம் எங்கே செல்கிறோம்…? என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

1.பக்தி என்பது நல்லது தான்
2.அதிலே நல்லதைக் காக்கும் திறன் இல்லை என்கிற பொழுது மெய் வழியை இழந்து விட்டு
3.இருள் சூழும் நிலையில் சிக்கி அதிலே தான் செல்ல வேண்டி வரும்.

இதிலிருந்து விடுபடுவதற்கு உங்களை நீங்கள் நம்ப வேண்டும். உயிரைக் கடவுளாக மதிக்க வேண்டும். நமக்குள் எண்ணியதை அவன் ஈசன் படைத்து விடுவான்… பிரமமாக இருந்து நமக்குள் சிருஷ்டிப்பவன் அவன் தான்.

ஆகவே நாம் எந்த உணர்வினைச் சுவாசிக்க வேண்டும்…? பிரம்மத்தின் சக்தியாக எதைத் தனக்குள் வளர்க்க வேண்டும்…? என்ற நிலையை நிலைப்படுத்தி காற்றிலே படர்ந்திருக்கும் மகரிஷிகள் உணர்வுகளை எடுக்கும் திறனுக்கு நாம் வர வேண்டும்.

உணவை எடுத்து நாம் சாப்பிடுவதற்குக் கைகள் வேண்டும் கைக்குண்டான வலுப்பெற வேண்டும். வெறுமனே பார்த்து அல்லது எண்ணி அதைச் செயல்படுத்த முடியாது.

1.காற்றுக்குள் படர்ந்து இருக்கும் ஆற்றல்மிக்க சக்திகளை
2.ஞானிகளின் ஆற்றல்மிக்க வித்துக்களை நமக்குள் பெருக்கித் தான் அதைக் கவர்ந்து எடுத்துக் கொள்ள முடியும்.

வேப்பமரம் தன் உணர்வின் ஆற்றல் வலுக் கொண்டு இருக்கும் போது தான் அந்தக் கசப்பான உணர்வை… மற்ற உணர்வுகள் படர்ந்திருந்தாலும்… தனக்குள் அந்தக் கசப்பினைப் பிரித்து அதனின் உணர்வின் சத்தாக விளைய வைத்துக் கொள்கின்றது.

ரோஜாச் செடியை எடுத்துக் கொண்டால் தன்னுடைய சத்தின் தன்மை இந்த காற்றுக்குள் படர்ந்து இருந்தாலும் அந்த விஷத்திற்குள் இருந்து தான் நறுமணத்தின் தன்மை கவர்ந்து வளர்த்து அந்த நறுமணத்தினை நமக்கு ஊட்டுகின்றது.

இதைப் போன்று நமக்குள் ஆயிரக்கணக்கான குணங்கள் இருந்தாலும் வேதனை ஊட்டும் உணர்வின் தன்மை வரும் பொழுது வேதனையைச் சுவாசித்து உடல் நலியும் தன்மையும் நோயையும் வரவழைத்துக் கொள்கின்றோம். நறுமணத்தின் நல்ல குணங்களைச் சுவாசிக்கும் வலுவை நாம் இழந்து விடுகின்றோம்.

ஆகவே அந்த நறுமணத்தின் நிலைகள் ஆற்றல் மிக்கதாக ஓங்கச் செய்வதற்கு மெய் ஞானிகள் ஆற்றலை நமக்குள் சேர்க்கப் பழக வேண்டும்.

நாம் இதை உணர்ந்து
1.உயிரான ஈசனுக்குள் அதை இணைக்கப்படும் பொழுது அந்த உணர்வுகள் பிரம்மமாகி பிரணவமாகி
2.அந்தப் பிரணவத்தின் தத்துவம் நமக்குள் இயக்கமாகி
3.அந்த உணர்வின் சக்தியாக ஒளியின் சரீரமாக ஒளியின் சுடராக என்றும் நிலையான நிலைகள் பெருக்க முடிகின்றது.

இதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அது நிரந்தரமான ஒளியின் சுடரை நாம் பெற வேண்டும். பொருளை அறியும் உணர்வாகப் பெருக்கிக் கொள்ள முடியும்.

ஆகவே விநாயகர் தத்துவத்தில் காட்டப்பட்டது போன்று மிருக உடலிலிருந்து என்று மனிதனாகத் தோன்றினானோ அவன் முழு முதல் கடவுள் – சிருஷ்டிக்கும் தன்மை.

எப்பொழுது மனித உடலில் பெற்றோமோ இயற்கையில் விளைந்ததை நிறுத்திவிட்டு கொழுக்கட்டையாக சுவை மிக்கதாக நாம் சமைத்து சாப்பிடுகிறோம். விநாயகர் சதுர்த்தி என்று அதை நினைவுபடுத்துகின்றார்கள்.

மிருக நிலையில் இருந்து மனிதனாகத் தோன்றிய பின் தனக்கு வேண்டியதைப் படைத்து
1.தனக்குள் சுவை மிக்க வளர்த்துக் கொள்ளும் நிலைபெற்றவன் நீ மனிதா
2.முழு முதல் கடவுள் நீ… சிருஷ்டிக்கும் நிலைகள் பெற்ற மனிதன் நீ என்று உணர்த்தினார்கள்.

மூஷிகவாகனா…! எக்குணத்தின் தன்மை சுவாசிக்கின்றோமோ இந்த உடலைச் சுமந்து சென்று அந்த வினைகளாக உருவாக்கும். எதை நினைக்கின்றோமோ நம்மை உருவாக்கும் உயிர் அதை வழிநடத்திச் செல்கின்றது

திருட வேண்டும் என்று நினைத்தால் கண்கள் திருடச் செல்ல வழி செய்கின்றது. திருடனுக்குத் தப்பிக்க வேண்டும் என்ற உணர்வுகளையும் இதே கண் வழிகாட்டுகின்றது.

நீ எதை நினைக்கின்றாயோ நீ அதுவாகின்றாய். ஆகவே நீ எங்கே சென்றாலும் என்னை விட்டு நீ பிரிய முடியாது.

நீ திருடச் சென்றாலும் எனக்குள் தெரியும்… பிறருக்கு நன்மை செய்தாலும் எனக்குத் தெரியும்…! எடுத்துக் கொண்ட நிணைவை அதன் வழியைக் காட்டி அதன் வழியே நீ செல்வாய்… அதனின் வழியில் நீ அடுத்த உடலைப் பெறுவாய்…! என்ற
1.கீதையின் மகத்துவத்தை மெய் வழியினை ஒளியின் சுடரை வியாசகர் காட்டி இருக்கிறார் என்றால்
2.அந்த உண்மையின் தத்துவத்தை நீங்கள் பெற வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கின்றேன்.