ஆண்டவன் எங்குள்ளான்…?

ஆண்டவன் எங்குள்ளான்…?

 

நடக்கின்றது பங்குனி உத்திரக் காவடி ஆட்டம்… ஆட்ட்த்தில் கலந்திட்டேன் நானும் அதிலே காவடி ஆடிட…! செப்பிடுவான் என் சிஷ்யனும் (ஞானகுரு) வந்து.

நீ பிறந்த ஊரிலும் பிறந்த ஊர் என்பது உன் முதல் ஜென்மத்தைச் சொல்கின்றேன்… மிகவும் முக்கியம்…! நீ பிறந்த ஊரிலும் உன்னால் ஸ்தாபகம் செய்த கோவிலிலும் நடக்கின்றதப்பா பங்குனி உத்திரம் பெரும் விமரிசையாக.

ஊரின் பெயரைச் சொல்லிவிட்டால் உன் கவனம் எல்லாம் அதனுள்ளேதான். உன் தியானத்திற்கு விடுகின்றேன்… கண்டிடுவாய்… அந்நிலையில் காவடியையும் கண்டிடுவாய்.

அழகான துறையினிலே உன் அருளால் அமைந்ததப்பா… அத்திருஸ்தலமே…! உனது புகழ் உலகமெங்கும் ஓங்கிடும் நிலையில் இருந்திட்டாய் போன ஜென்மத்திலும்.
1.உன் பெயருக்கும்… உன் உடலின் பெயருக்கும்… போன ஜென்மத்திற்கும் தொடர்பு உள்ளதப்பா.
2.இந்நிலையை எந்த ஜோசியனும் சொன்னானா…?

உலகெங்கும் தெரிந்த கோயில் இந்த ஜென்மத்திலும் உன்னுடன் தொடர்புடைய கோவில்… இப்பொழுது இருக்கும் நிலையில் தொடர்பில்லை.

உன் நினைவில் போகரின் ஸ்தாபகத்தால் வந்த ஸ்தலம் என்ற எண்ணம் தான் நிலை புரிந்ததா…! போகரின் எண்ணம் எல்லாம் உன் நினைவில் வந்திடுவதும் போன ஜென்மத் தொடர்பினால் தான்.

போகர் தான் பெற்ற பயனால் இன்றும் உள்ளார்… என்றும் இருப்பார் முருகனாகவே…! பெரும் முருகர் ஸ்தலமைத்தாய்…! முதல் ஜென்மத்தில் விட்ட சிறு குறையினால் வந்ததப்பா இந்த ஜென்மம்.

விட்ட குறையை இந்த ஜென்ம நிலையில் ஸ்தாபிதம் செய்து விடப்பா…! போகரின் நிலையில் வந்திடவே ஸ்தாபிதம் செய்திடப்பா…! செய்த பலனினால் தான் உன் துடிப்பும் ஆர்வமும் அதிவேகமும் போகரும் பகர்ந்திடுவார் அவசரக்காரன் என்று.

நான் சொன்ன நிலையைப் பார்த்தாயா…! உன் நிலையை எண்ணிப்பார்… உன் துடிப்பும் வேகமும் தான் உன் நிலையை உயர்த்தி விட்டது.

விட்ட குறையை முடித்திடப்பா…!
1.உன் துடிப்பினாலும் துரிதத்தினாலும் எந்நிலையிலும் துரிதமுள்ள நீ…
2.என் வழியில் உன் நிலை அமைதியில் வருகின்றதப்பா (தியான நிலை).
3.அந்நிலையிலேயே தொடரட்டும் ஜெப நிலை. வடிகால் அமைத்து விட்டேன்… பாய்ந்திடட்டும்… பரிபக்குவமாக வளர்ந்திடுவாய்.

பங்குனி உத்திரத்தில் பகர்ந்துரைத்தேன் உத்திரத்தின் தன்மை எல்லாம் ஒரு நிலையில் உள்ள மனிதர்கள் ஒன்று சேர்ந்து மகிழ்ந்திடவே உத்திர நாட்கள் அமைந்ததப்பா.

அன்புடனே அன்னதானம் பகிர்ந்துண்டு ஆண்டவனை நினைத்திடத் தான் “பண்டிகை நாட்கள்” எல்லாம் பாரினில் வந்ததப்பா…!

இன்றுள்ள நிலை எல்லாம் ஒட்டு மொத்தமாகச் சேர்த்து வருடம் முழுவதும் வேண்டும் வேண்டுதலை… தன் நிலை உயர்த்திட எடுக்கின்றார்கள் காவடியை. வெறும் களியாட்டம் நடக்கின்றது.

காவடியில்…. “தெய்வ அருள் வந்திடும்… அந்நாளில் பகர்ந்திடும் சொற்கள்” எல்லாம் பாமரர்களுக்கு நல்ல உணர்வுகளை அளித்திடுவார்கள் அச்சித்தர்கள்.

அருள் வரும் தன்மை எல்லாம் இன்றைய நிலையில் யார் வருகிறார்களப்பா…? (தன் நிலையைக் கேட்பதற்கு ஆவி நிலையை அழைக்கின்றார்கள்).
1.அவர்கள் உடலில் முருகனும் விநாயகரும் வருவதல்ல அருள் நிலையில்.
2.ஆவி உலகத் தன்மை தான் சிலரின் உடலில் வந்து ஆடுகிறது… சில அம்மன் கோவில்களில் வருவதெல்லாம் ஆவி நிலைகள் தான்.

சித்தர்களின் நிலை எல்லாம் சில அபூர்வத் தன்மைகளிலே தான் தோன்றிவிடும்.
1.சித்தர் நிலை வருவதெல்லாம் சீருடனும் சிறப்புடனும் சொல் ஆற்றலுடனும் மிக அவசியமான நிலையில் வந்திடுமப்பா.
2.ஒரு நொடி தான் பகர்ந்திடுவர் பரிபக்குவ நிலையில்…!
3.உலக ஆசைகள் உள்ள சித்தர்கள் தான் வருவார்கள் (அதுவும் என்னைப் போல்).

ஆவியின் தன்மை வைத்துத் தான் அழைக்கின்றார்கள் பெரும் ஜாதகக்காரர்களும் சாமியார்களும் சில வைத்தியர்களும் கூட…! தன் நிலையில் ஆவியின் நிலையை நிறுத்திக் கொண்டு அவ்வாவிகளின் உதவியுடன் செய்கின்றார்கள் இந்நிலையெல்லாம்.

செய்யட்டும் செய்யட்டும்… நன்மைகளை செய்யட்டும்… ஆண்டவர் ரூபத்தில் வந்தாலும் ஆவிகள் செய்தாலும் நன்மைக்கே செய்யட்டும்…!

ஆவியின் தன்மையை வைத்து ஆண்டவனையே இழுக்கின்றார்கள் பெரும் ஆணவக்காரர்கள். குட்டிச்சாத்தானை வைத்துக்கொண்டு குடிகளைக் கெடுக்கிறார்கள்

ஆவியின் பசிக்கு அளிக்கின்றான் பல உணவுகளை. ஆண்டவனின் பெயரால் ஆண்டவனின் பெயரையே சக்கி மாதாவின் ஜோதியையே மாற்றி விட்டார்கள் குட்டிச்சாத்தான்கள்.

உலக நிலையையே மாற்றுகின்றது இந்தக் குட்டிச்சாத்தான்கள். “ஒற்றன் வடிவிலும்” உள்ளான் இக்குட்டிச்சாத்தான். ஆட்சி நடத்துகின்ற பெரும் ஆணவக்காரனிடமும் உள்ளான் இக்குட்டிச்சாத்தான்… செய்யும் வேலையெல்லாம் அந்தக் குட்டிச்சாத்தானால் தான்…! குட்டிச்சாத்தானின் பசிக்கும் தான் தன் கழிவைத் தானே பருகுகின்றான்

உலக நிலையைப் பார்த்தாயா…!

குட்டிச்சாத்தானின் வேலைகளை எல்லாம்… அந்த ஆவிகளை அடக்க ஆண்டவன் இல்லையா…? என்றிடுவாய்.

ஆண்டவர் எங்கப்பா உள்ளார்…? அவனவன் மனமே தான் ஆண்டவன் என்று பகர்ந்திட்டேன்.
1.அவன் மனமே குட்டிச்சாத்தானிடம் சிக்கியுள்ள பொழுது
2.ஆண்டவன் எப்படிக் காப்பாற்றுவான்…?

பெரும் திருடனும் அழைக்கின்றான் ஆண்டவனை… அன்புடன் மழலையும் அழைக்கின்றது ஆண்டவனை…! எந்நிலைக்கும் அவன் ஜோதி நிலைதான்.

அவன் நிலையில் இருந்துதான்… அவன் ஆசி பெற்ற சித்தர்கள் ஆளுகின்றார்கள் மனிதர்களை…!
1.அவரவரின் மனநிலைக்கேற்ப அவர்கள் அழைக்கும் தன்மைக்கு
2.அவரவர் புரிந்திடும் நிலையிலும் சித்தர்கள் அருள்கின்றார்கள்.

முருகா என்று அழைத்திட்டவர்களுக்கு… அவன் அழைக்கும் நிலையில் அன்புடன் அழைப்பவர்களுக்கு அவன் கஷ்டத்தையும் அவன் நிலையையும் உணர்ந்து அருளுகின்றார்கள்… “போகரும் பல சித்தர்களும்…”

அவரவர்களின் இஷ்ட தெய்வத்தை அழைப்பவர்களுக்கும்… அழிவின் நிலையை நாடுகின்றவனுக்கும்… அழைக்கும் தன்மையில் அவ்வழுகிய அணுவின் வழியில் தான் வந்து அவனிடம் அண்டிக் கொள்கின்றது அவன் நிலையில் உள்ள ஆவிகள். ஆனால் இவன் நினைக்கின்றான் ஆண்டவனே இவனுக்குள் அருள் புரிந்தான் என்று.

நல் உணர்வில் நல் நிலையில் நல் நினைவில் உள்ளவர்களுக்கெல்லாம் நல்லோரின் ஆசி பூ மழையாகப் பொழிகின்றது.

தீய நினைவில் உள்ளவரின் நிலையில் எல்லாம் தீய நிலையில் உள்ள ஆவிகள் அண்டிக் கொள்கின்றன. இப்போது புரிகின்றதா ஆண்டவன் எங்குள்ளான்…? என்று.

ஆண்டவன் என்பவன் யாரப்பா…?

இயற்கையில் ஒன்றிட்ட…
1.இயற்கையே தான் ஆண்டவன் காற்றே தான் ஆண்டவன்
2.சூரியனே தான் (வெளிச்சம் ஒளி) ஆண்டவன்.
3.தண்ணீர் தான் ஆண்டவன்
4.ஒளியும் காற்றும் தண்ணீர் இந்த மூன்றும் தான் ஆண்டவன்.
5.இயற்கை அன்னை இயற்கை சக்தி என்பதெல்லாம் இந்த மூன்றும் தான்.

ஆண்டவன் என்பவன் எங்குள்ளான் என்ற நிலை புரிந்ததா…?

இப்பாட நிலையை எந்நிலையிலும் பகர்ந்திடவில்லை நானும். என் சிஷ்யனையும் வாயடக்கி விட்டேன் பல நாட்களாக. உன் நிலைக்குப் புரிய வைத்தேன் சில துளிகள்.

உங்கள் நிலையை உயர்த்திக் கொள்ளுங்கள். கலியுகம் மாறுகின்றது கல்கியுகம் வருகிறது என்பதெல்லாம் இக்கால நிலையைக் கொண்டுதான்.

ஆண்டவன் எங்குள்ளான் என்பவனைக் கேள்… ஆற்று வெள்ள வந்திடும் பொழுது அடித்துச் செல்கின்றானே அனைத்தையும்… “அவன் தானப்பா ஆண்டவன்…” ஒவ்வொரு வழியையும் பிரித்துச் சொல்ல வேண்டுமாப்பா…?

ஆண்டவன் எங்குள்ளான்…? என்பதை… “இந்தப் பாடத்தை” எந்த நூலிலும் படித்திருக்கின்றாயா…?

நம் உயிர் “தாயாக” இருக்கின்றது

நம் உயிர் “தாயாக” இருக்கின்றது

 

சந்தர்ப்பத்தில்… ஒருவர் கோபிக்கும் உணர்வின் தன்மை நமக்குள் பதிவாகி விட்டால்… உயிரியலின் மாற்றங்களில் அதை ஜீவ அணுவாக நம் உயிர் உடலுக்குள் மாற்றிவிடுகின்றது.

அதாவது…
1.எதனின் நினைவை எடுத்து உயிர் நமக்குள் அதை அணுவாக ஆக்கியதோ
2.எந்த நிலைகள் கொண்டு அந்த மனிதனின் உணர்வை சூரியனின் காந்த சக்தி கவந்து வைத்திருக்கின்றதோ
3.அதை உயிர்… அதனின் துடிப்பின் ஈர்ப்பு கொண்டு அந்த உணர்வைக் கிளர்ந்து எடுக்கப்படும் பொழுது
4.நுகர்ந்து தன் ஆன்மாவாக மாற்றி உயிரிலே படும் பொழுது மீண்டும் அந்த நினைவாற்றல் வரும்.

ஆக… கோபம் கொண்ட அணுவின் தன்மையாக நமக்குள் விளைந்திருந்தால்… அதற்கு இரை வேண்டும் போது அது கத்தும்… அதனின் உணர்ச்சியைத் தூண்டும்.

உதாரணமாக… காக்கைகளோ குருவிகளோ கொக்கோ… தன் குஞ்சுகளுக்கு அது இரை தேடிக் கொண்டு வந்து கொடுக்கின்றது. குஞ்சுகள் கத்தும் பொழுது மீனையோ வீட்டில் பூச்சிகளையோ மற்ற பூச்சிகளையோ உணவாகக் கொடுக்கின்றது.

இதைப் போன்று தான் எந்த குணத்தின் தன்மை நாம் நுகர்ந்தோமோ நமது உயிர் அந்த குணத்தின் உணர்வின் அணுவாக விளையச் செய்து விடுகின்றது.
1.அந்த அணுக்கள் தன் பசிக்காக ஏங்கும்போது அதை உருவாக்கிய தாயான உயிர்
2.அதற்கு வேண்டிய நிலைகளை நுகர்கின்றது… ஆன்மாவாக மாறுகின்றது… சுவாசித்த பின் நமக்குள் எண்ணம் ஆகின்றது
3.அந்த மனிதன் கோபித்திருந்தால் நமக்கும் அப்பொழுது கோபம் வரும்… அறியாமலே திடீரென்று கோபம் வரும்.

என்னவென்றே தெரியவில்லை திடீரென்று எனக்குக் கோபம் வந்துவிட்டது என்று சிலர் சொல்வார்கள்.

ஏனென்றால் அந்தக் கார உணர்வின் தன்மை தனக்குள் வளர்த்துக் கொண்டால் அது பசிக்கு ஏங்கினால் போதும்.
1.உயிருடைய வேலை… எந்த மனித உடலிலிருந்து அந்தக் கார உணர்வு வந்ததோ
2.அதை எடுத்து ஆன்மாவாக மாற்றி சுவாசிக்கச் செய்து விளைந்த அணுக்களுக்கு உணவாகக் கொடுக்கும்.

அத்தகைய கோபம் வந்த பின்… வீட்டிலே மனைவியை அடித்து விடுவார், தன் நண்பனைப் பகைமை ஆக்கி விடுவார்… கடை வியாபாரம் இருந்தால் வியாபாரத்தில் வரும் வாடிக்கையாளரிடம் எதிர்த்துப் பேசி சண்டை வரும்.. சர் தான் போயா…! என்பார்.

அறியாமலே இத்தகைய செயல்கள் நடக்கும்…!

ஏனென்றால் உருவான அணுக்கள் அது தன் இனத்தின் தன்மையைப் பெருக்க… அதற்கு உயிர் இப்படி இரைகளைக் கொடுத்துக் கொண்டே தான் இருக்கும்

இதையெல்லாம் மாற்ற வேண்டும் என்பதற்குத்தான் அடிக்கடி அடிக்கடி மகரிஷிகள் உணர்வுகளை உங்களுக்குள் பதிவு செய்து
1.ஒளியான அணுக்களைத் தியானத்தின் மூலமாகவும் ஆத்ம சக்தி மூலமாகவும் உங்களுக்குள் பெருக்கும்படி செய்கிறோம்.
2.அதாவது தீமையின் விளைவுளை மாற்றி அமைக்கும் பயிற்சியாக உங்களுக்கு இதைக் கொடுத்துக் கொண்டு வருகின்றோம்.

ஆகவே மகரிஷிகள் அருள் சக்திகளை அவ்வப்போது எடுத்து உங்களுக்குள் வலுவாகச் சேர்த்துக் கொண்டே வாருங்கள். உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியாக மாற்றுங்கள்.

இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலையை அடையுங்கள் (ஞானகுரு).

நெற்றிக் கண்ணைக் காட்டுதல்

நெற்றிக் கண்ணைக் காட்டுதல்

 

அன்பே சிவம்… அன்பே சத்தியம்… அன்பு இல்லார்க்கு இந்த உலகம் இல்லை… அன்பு… அன்பு…! என்று பாட்டுப் பாடுகின்றார்கள். அந்த அன்பு என்பது ஞானிகளுக்கும் சித்தர்களுக்கும் முதலாம் மந்திரம்.

எல்லோரும் ஞானிகள் சித்தர்கள் ஆகிவிட முடியாது. ஞானிகளாகவும் சித்தர்களாகவும் ஆகித்தான் கடவுள் அருளைப் பெற முடியும் என்பது இல்லை.

சாதாரண மனிதனுக்கு வெறும் அன்பை மட்டும் வைத்துக் கொண்டு ஜீவிதம் செய்து விட முடியாது. அவனவன் காலத்திற்குத் தகுந்த மாதிரி மேடு பள்ளம்… நெளிவு… சுளிவு… எல்லோர் வாழ்க்கையிலும் எல்லாம் இருக்கும்.

ஒரு தந்தை தன் மகனுக்கு அன்பை மட்டும் ஊட்டி வளர்த்தால் அந்த மகன் உருப்படுவானா…?

ஈஸ்வரன் படத்தைப் பார். அவர் கழுத்தில் இருக்கும் பாம்பு… கையில் இருக்கும் சூலாயுதம்… அவர் ஜடாமுடி… நெற்றிக்கண்… தலையில் பிறைச்சந்திரன்… தண்டை சலங்கை… புலித்தோல்… உடுக்கை…! எல்லாம் வைத்துக் கொண்டு இருக்கும் உருவம் தான் சித்தர்களால் சிவனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

எல்லாவற்றையும் தரித்துக் கொண்டு
1.அவர் முகம் மட்டும் அன்பாக சாந்தமாகக் காட்டுகிறார்.
2.இதன் அர்த்தம் என்ன என்று தெரியுமா…?

உருவம் இல்லாத சிவனுக்குச் சித்தர்களால் கொடுத்த உருவத்தில் அவர் அங்கத்தில் தரித்திருக்கும் பொருள்கள் எதற்காக என்று தெரிகிறதா…?

இதன் உள் அர்த்தம்…
1.காட்சி:- வாயைத் திறந்து ஏதோ உள்ளே விடுதல் இந்த மாதிரியான உருவத்தில் பார்க்கும் பொழுது உனக்குப் பயமாக இருக்கும்.
2.காட்சி:- நெற்றிக்கண்ணை எடுத்துக் காட்டுதல். இதைப் பார்த்தவுடன் பயமாக இருக்கிறது அல்லவா…?

தெய்வமாக நெற்றிக்கண்ணைக் காட்டியது… முதலில் பயந்த பிறகு… கடவுளே நெற்றிக்கண்ணைக் காட்டியபோது எனக்கு என்ன பயம்…? என்று இருந்தாய்.

இது போல தந்தை… அன்பினால் மட்டும் மகனை வளர்க்க முடியுமா…? என்று கேட்டேன் அல்லவா. ஈஸ்வரர் நெற்றிக்கண்ணைக் காட்டியது போல் காட்டித் தான் அவனைத் திருத்த வேண்டும்.

இதே மாதிரி தான் அவர் தரித்திருக்கும் ஒவ்வொரு பொருளின் விளக்கமும். சித்தர்கள் மனிதர்களுக்குப் புரிவதற்காக கொடுக்கப்பட்ட உருவங்கள் அனைத்தும் இது போன்றுதான்.

மனதில் பதிய வைத்துக் கொள்.

அன்பினால் மட்டும் வென்று விட முடியுமா…? அன்புடன் மட்டும் இருந்தால் வாழ்க்கையினை நடத்திச் செல்ல முடியுமா…? சாமியிடம் (ஞானகுரு) கேட்டுத் தெரிந்து கொள்.

சாமி வரும் பொழுது வீண் கதைகள் பேசாமல் அவரிடத்தில் விளக்கங்களைக் கேட்டு தெரிந்து கொள்.
1.அவன் என்னிடம் உத்தரவு கேட்பான்
2.நான் சிவனிடம் வாங்கித் தருகின்றேன்…!

பார்த்தாயா…! யாரும் யாரையும் வெல்ல முடியாது.

ஈஸ்வரன் அருள் கிட்ட வேண்டுமா…?

ஈஸ்வரன் அருள் கிட்ட வேண்டுமா…?

 

உன்னை நீ நம்பு… ஈஸ்வரனின் அருள் இங்கே வட்டமிட்டுக் கொண்டே உள்ளது.

முதல் பாடத்தைச் சொல்லிவிட்டேன் இனி அடுத்ததெல்லாம் ஆன்மீக வழிக்குத் தான். உன் தியான நிலையில் மனதை ஒரு நிலை நிறுத்தி ஆண்டவனிடம் ஐக்கியப்படுத்து.

1.உன்னை நீ நம்பு என்பது…
2.உன்னுள் இருக்கும் என்னை நீ காண்… “புரிந்ததா…?”

நீயே நீ அல்ல என்னும் பொழுது உன்னுள் இருக்கும் என்னை நீ சீக்கிரம் காண்பாய்.

மனதை ஒருநிலைப்படுத்த முடியவில்லை என்று கவலைப்படாதே. எதுவும் நினைத்தவுடன் தானாக நடக்கும் என்று நினைக்காதே.
1.உன்னுள் இருக்கும் “என்னையே”
2.நீ தெரிந்து கொள்ளாமல் இருக்கும் பொழுது ஏன் குழப்பம் அடைகின்றாய்…?

நீ கஷ்டத்திலிருந்து தப்பித்து விடலாம் என்று பார்த்தாய்…! தப்பித்து எங்கே சென்று விடலாம் என்று பார்த்தாய்…? தப்பித்து என்னிடம் தான் சேரலாம் என்று இருந்தாய்.

1.நானே உன்னுள் இருக்கும் பொழுது
2.என்னிடம் வந்து சேரலாம் என்று ஏன் இருந்தாய்…?

ஓவ்வொரு உடலிலும் இருக்கும்
1.என்னைப் பரிபக்குவமாக ஏற்றுக் கொள்ளும் எண்ணம் யார் யாருக்கு உள்ளதோ
2.அவர்களுக்கு என் அருள் சீக்கிரமாகவே கிடைக்கும்.

காட்சி:-
ஜக்கில் சுடச்சுட காப்பி…! தட்டில் விட்டு ஆற்றிக் குடிக்கின்றார்.

மனம் கொதிக்கும் நிலையில் இருந்தாலும் “மனதை ஈஸ்வரனிடம் கொடு…! நான் உன்னுள்ளே இருக்கும் பொழுது நீ ஏன் கவலைப்படுகின்றாய்…?

எல்லாம் அவன் செயல் என்கிறாய்…! மரம் நட்டவன் தண்ணீர் ஊற்ற மாட்டானா…? என்பது பழமொழி.

மரம் நட்டவன் நிச்சயம் தண்ணீர் ஊற்றுவான். அதை ஏற்று உறிஞ்சுவது மரத்திடம் தான் உள்ளது. மரம் நட்டதும் தண்ணீர் ஊற்றியதும் ஆண்டவனாக இருக்கின்றான்.
1.மரம் தண்ணீரை ஏற்று எந்த அளவில் காயாகவும் பழமாகவும் பலன் கொடுக்கிறதோ
2.அது மரத்தின் வேலை தான்.

ஒரே இடத்தில் பக்கம் பக்கமாக மரம் வைத்தாலும் சில நன்றாகவும் சில சரியாகவும் காய்ப்பது இல்லை. சில பட்டுப் போகின்றன இதே நிலைதான் மனிதனுக்கும்.

விதியை மாற்ற ஈஸ்வரனிடம் மனதை ஐக்கியப்படுத்து.
1.எல்லாம் அவன் செயல் என்று இருக்காதே
2.அவனே உன்னுள் இருக்கும் பொழுது “பாரத்தை” ஏன் அங்கு போடுகின்றாய்…?

உன்னையே நீ காணும் நாள் சீக்கிரத்தில் உண்டு. அந்த நிலைக்கு நீ உன் மனதைக் கொண்டுவர முயற்சி செய்.

இதையெல்லாம் தினசரி வரிசையாக எழுதிக் கொண்டு வா. நான் உத்தரவு தந்த பிறகு புத்தகமாகப் போடலாம். சரியாக எழுத வேண்டும்.

பிற்கால சந்ததியருக்கு இப்பொழுது இருக்கும் அளவுக்குக் கூட கடவுள் பக்தி இருக்காது. கோவில் என்பது அவர்களுக்கு சினிமா நாடகம் போல பொழுது போக்கு இடமாகப் போய்விடும்.

கோயில் என்பது அவரவர் அந்தஸ்தை காட்டும் இடமாகத்தான் உள்ளது… புரிந்ததா…?

வரும் சந்ததிகளின் காலத்திற்கு “கடவுளின் உண்மை சொரூபம் என்ன…?” என்பதற்கு புத்தகம் தனியாகப் போடலாம்.

“எனக்கு வேண்டியர்… உனக்கு வேண்டியவர்…” என்று யாருக்கும் காட்ட வேண்டாம். கல்லாக என்னை நினைத்து வணங்குபவர்களுக்கு இப்போது சொன்னால் புரியாது.

உனக்கே இத்தனை நாள் கடவுள் என்றால் யார் என்று புரிந்ததா…? சாமி (ஞானகுரு) வந்து விளக்கம் சொல்லியும் குழப்ப நிலையில் தான் இருந்தாய்.

இப்பொழுது கடவுள் என்றால் யார் என்று புரிந்ததா…?

ஒவ்வொரு மனிதனும் சந்தோஷம் என்று எதை நினைக்கின்றானோ… அதற்காக தர்மம் நியாயம் பக்தி என்று எதையும் பார்க்காமல் தன் சந்தோஷத்திற்காகச் செய்ய பார்க்கின்றான்.

சந்தோஷம் என்றால் என்ன…? என்று புரியாத மனிதர்களிடம் எப்படி விளக்குவது…?

எல்லா மனிதர்களும் எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றார்கள்.

மனதை அமைதிப்படுத்தித் தன் நிலையைத் தான் உணர்ந்து மனதில் உள்ள சோர்வு சோகம் குரோதம் மனதில் உள்ள தாழ்வு இதையெல்லாம் விட்டுவிட்டு… எவன் ஒருவன் தர்மம் நியாயம் அன்பைக் கடைபிடிக்கின்றானோ “அவனுக்கு எல்லா அருளும் கிடைக்கும்…”

ஒவ்வொரு மனிதனும் இயற்கையின் (ஆண்டவனின்) ஸ்வரூபத்தை எண்ணி வாழ வேண்டுமப்பா….!

ஒவ்வொரு மனிதனும் இயற்கையின் (ஆண்டவனின்) ஸ்வரூபத்தை எண்ணி வாழ வேண்டுமப்பா….!

 

ஓர் மனிதன் தன் சுவாசத்தினால் எடுக்கும் எண்ணத்தின் அலையை ஒத்துத்தான் அவனது அறிவாற்றல்… குணமும்… உடல் உறுப்பும்… உருவமும்… எல்லாமே இருந்திடும்.
1.அதை எல்லாம் எந்த ஒரு தனி மனிதனுக்கும்
2.ஆண்டவனாக வழி அமைத்துத் தருவதில்லை…! (இது முக்கியம்)

எல்லாமும் ஒன்றாக… ஒன்றிலே எல்லாமும் உள்ள பொழுது.. எதன் அடிப்படைச் சக்தியை எவ்வாத்ம எண்ணம் ஈர்த்து வாழ்கின்றதோ… அதன் தொடர்ச்சி நிலைக்குகந்த அளவு… அறிவாற்றலும் வாழ்க்கை நிலையும் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அமைகின்றது.

ஒருவர் அதிக சுறுசுறுப்புடனும் செயலாற்றும் திறமையுடனும் நல் நிலையில் வாழும் பொழுது அவர் எடுத்துக் கொள்ளும் எண்ண சுவாசத்தின் வளர்ச்சி அமிலத் தன்மையினால்தான் அந்த மனிதன் உயர்கின்றான். அவன் எடுக்கும் நிலைக்கொப்ப ஆவிகளின் (பிற ஆன்மாக்கள்) தொடர்பும் ஏற்படுகின்றது.

மின் அலை எப்படி எந்தெந்த விகித நிலைக்கொப்ப பாய்ச்சப்படுகின்றதோ அதன் நிலைக்கொப்ப ஒளியைத் தரக்கூடிய நிலையையும் எந்தெந்த இயந்திரங்களுக்கு எந்தெந்த விகிதத்தில் மின் அலை பரப்பப்படுகின்றதோ அதன் சக்தி ஓட்டத்தைத் தான் அந்த இயந்திரம் எடுத்து ஓடுகிறது.

அதைப் போல்…
1.எதன் அடிப்படையில்… எதன் விகித நிலைக்கொப்ப..
2.ஒவ்வொரு ஆத்மாவின் எண்ணச் சுவாசமும் உள்ளதோ..
3.அதன் சக்தி நிலையைத்தான் அவன் பெற முடியும்.

அதன் செயலில் தான் அவன் வாழ்க்கையும் அமைகிறதேயன்றி பல கோவில் ஸ்தலங்களுக்குச் சென்று ஆண்டவனை வணங்கி வந்து “பூஜித்துச் சக்தி பெறுவதல்ல…!”

எண்ணத்தின் ஈர்ப்பை உயர்வாக்கி எடுக்கும் சுவாச குண அமிலத்தினால் பலவாக உள்ள இந்தக் காற்றின் அமிலத்திலிருந்து “நமக்குகந்த அமிலத்தை நாமாக எடுத்துக் கொள்ளலாம்…”

இதன் வளர்ச்சியில் நமது எண்ணமும் சுவாசமும் இருக்குமானால் அதன் நிலையில் நாம் எடுக்கும் ஜெப முறையில் நம் எண்ண ஈர்ப்பை நமக்கு மேல் சக்தி வாய்ந்த சித்தர்களின் பால் நம் எண்ணத்தைச் செலுத்திடல் வேண்டும்.

அப்படிச் சித்தர்கள் பால் தொடர்பு கொண்டு எடுக்கும் சுவாச அலையின் தொடர்பினால்… இந்த உடலுடன் மனித உலக வாழ்க்கையில் வாழும் நாம்
1.பிம்பப் பொருளைக் கண்டு பொருளாக வாழும் இந்த வாழ்க்கையிலிருந்து பெற முடியாத “ஞானத்தை”
2.நம் ஈர்ப்பின் ஜெப எண்ணத்தை சித்தர்பால் செலுத்தி
3.அவர்களின் தொடர்பலையின் சக்தி குண அமிலங்களை நாம் பெறும்படி வழிப்படுத்திக் கொண்டால்
4.நம் ஞான வளர்ச்சியின் தொடரில் செல்லும் வழி முறைப் பாதையை அறிந்து கொள்ளலாம்.
5.அந்தப் பாதையை அறிந்து விட்டால் நாம் செல்ல வேண்டிய வழியில் எந்தத் தடங்கலும் இருக்காது.

பலவாக உள்ள உலக வாழ்க்கை எண்ணத்தில் நம் எண்ணத்தை ஒன்றாக்கி… “ஓ…ம்” என்ற ஒலியுடன் சித்தர்கள் பால் நம் எண்ண ஈர்ப்புச் சக்தியை நாம் தந்தோமானால் மெய் ஞானம் பெறும் வழி ஞானம் அறியலாம்.

ஞானத்தின் ஈர்ப்பில் கலந்தோமானால் பல உண்மையின் பொருளை உலகளவுக்கு உணர்த்தலாம்.

ஞானிகளும் சப்தரிஷிகளும் நம் வளர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்காவிட்டால் நம் பூமியில் மனித ஞானம் இன்று “ஞானமும் கண்டிருக்காது… விஞ்ஞானமும் கண்டிருக்காது…!”
1.இன்றைய காலகட்டத்தில் நம் சித்தர்களின் ஒளி சக்திகள்
2.இந்த உலகில் அதிகமாகச் செயல்பட்டுக் கொண்டுள்ளது.

ஆனால் மனித ஞானம் எல்லாமே ஞானத்தின் பால் செல்லும் வழிமுறையற்றுப் பேராசையின் பிடி ஞானத்தில் தன் வலுவான விந்தை காணத் துடிக்கிறது.

மனிதனின் பேராசையின் விபரீத எண்ணச் சுழல் காற்றுகள் பூமியின் சுழற்சியுடன் அதிகப்பட்டு… மோதி… உயிர்ப்பலிகள் அதிகமாகி…
1.ஆவியின் சூழ்ச்சியில்.. அல்லலுக்கந்த வாழ்க்கையில் வாழ்கின்றான் மனிதன் என்பதை
2.அறியாமல் தான் இன்றைய மனிதர்கள் வாழ்கின்றனர்…!

தனதாக உள்ளது எது…? என்பதும் இம் மனித ஞானத்திற்குப் புரியவில்லை. தனி மனிதன் யாரும் வாழவில்லை… “தனியாக” யாருமே எங்கேயுமே வாழ முடியாது.

காற்றையும் நீரையும் நிலத்தையும் தன்னுள் உள்ள பல கோடி அணுக்களையும் வாழ வைத்து… வாழும் மனிதன்…
1.தானாக வாழ்கின்றானா..? அந்தத் “தனது” என்ற பேராசைக்கார மனிதன்…?
2.ஒன்றின் துணையில்லாமல்…
3.ஒன்றுடன் ஒன்றில்லாமல் வாழவே முடியாத மனிதன்
4.”நான்…” என்ற நானாக… வாழ்கின்றானாம்..!

ஒவ்வொரு மனிதனும் இயற்கையின் ஆண்டவனின் ஸ்வரூபத்தை எண்ணி வாழ வேண்டுமப்பா….!

சுவாச நிலை என்ன…? என்று புரிந்திட்டால் உயிருடன் என்றும் அழியாத நிலையில் வாழலாம்

சுவாச நிலை என்ன…? என்று புரிந்திட்டால் உயிருடன் என்றும் அழியாத நிலையில் வாழலாம்

 

நீ வணங்கும்
1.முருகா என்னும் போகரும்…
2.ஈஸ்வரா என்னும் ஈஸ்வரபட்டரும்…
3.வெங்கடாஜலபதி என்னும் பாலாஜி உருவில் வந்த பல கோடி நாமங்கள் பெற்றிட்ட கொங்கணவரும்…
4.கொங்கண மகாதேவரும்… சித்தர்களும் ஞானிகளும்…
5.உன் அறிவுக்கு எட்டாத இந்த உலகில் எல்லாப் பாகங்களிலும் தோன்றி இந்நிலையில் இருக்கும் சித்தாதி சித்தர்களும் ஞானாதி ஞானியர்களும்
6.ஞான ரிஷிகளும் சப்தரிஷிகளும் அருள் சக்தி பெற்று சூட்சம உலகில் ஒளியாக வாழுபவர்கள் தான்…!

அவர்களின் நல் உபதேசத்தைப் பெற்றவர்கள் மற்றவர்கள் நிலைக்குப் புரிந்திடச் செய்திடாமல் சில உபதேசங்களை மட்டுமே மனிதர்களுக்குப் புகட்டினர்.

1.உண்மையின் உயிர் இரகசியத்தை இந்த உலக மக்களுக்குப் புரிந்திடச் செய்யாமல்
2.ஒருவர் எழுதியதைப் பிறிதொருவர் மாற்றி எழுதி
3.தன் தன் ஜீவ வழிக்குப் பொருள் பெற்றிட
4.உலகத் தன்மையையே மறைத்துவிட்டார்கள்… மாற்றிவிட்டார்கள்.

ஜெப நிலை (தியானம்) என்றாலே பெரும் கடினமானது…! என்றும் எல்லோராலும் அதைப் பெற்றிட முடியாது…! என்ற ஒரு கடினத் தன்மையை மனிதர்களின் மனதிலே ஊன்றச் செய்து விட்டனர்.

சாதாரண வாழ்க்கை வாழும் மனிதனால் அது சாத்தியமில்லை என்ற அளவுக்குக் கொண்டு சென்று விட்டார்கள்.

ஆண்டவன் என்றாலே “யார்” என்று புரியாத நிலையில் தெருவின் மூலைக்கும் ஆற்றுப் படுகையின் படிகளில் எல்லாம்
1.அரச மரத்தை நட்டு விநாயகர் என்ற உருவத்தைப் பதித்து
அரச மரத்தைச் சுற்றினால் அருள் பெற்றிடுவாய்…! என்ற வேதத்தை ஊன்றிவிட்டார்கள்.

கடவுள் என்றாலே கல் தான்…! கல் என்ன செய்யும்..? என்ற நிலையில் கடவுள் இல்லை…! என்று ஒரு சாரார் நம்பும்படிச் செய்து விட்டார்கள்.
1.கடவுளைச் சென்று வேண்டுபவர்களும்
2.தன்னுள் தான் கடவுள் உள்ளான்…! என்பதை மறந்து விட்டனர்.

முருகனுக்கு இரண்டு மனைவிகள். மூத்தவள் வெள்ளை இளையவள் கருப்பு. முருகனுக்கே இரண்டு மனைவிகள் உள்ள பொழுது எனக்கு மட்டும் ஏன் தடை…! என்ற வாதங்களைப் பல ரூபத்தில் எழுப்பிக் கொண்டுதான் அந்தக் கடவுளையே வேண்டுகிறார்கள்.

தன்னுள் இருக்கும் கடவுளையே மறந்து அவன் முன்னோர்கள் கதை கட்டிய கடவுளைத் தான் வணங்குகிறார்கள்… தன் வழிக்கு உகந்தபடி…!

புரிகிறதா…?

1.முருகனின் மூவுலக அருளையே மறந்து..
2.அவன் உருவில் உள்ள ஆறு குணங்களையும் மறந்து…
3.முருகனுக்குப் போகரின் வழியில் அளித்திட்ட உருவ அமைப்பையே
4.எந்நிலைக்கு அந்த உருவை அப்போகர் நிறுவினார்…? என்ற நிலையையே மறந்து…
5.தன் வழிக்குப் பல கதைகளைச் சொல்லித் தெருத் தெருவாக முருகன் கதையைப் பெரும் கூத்தாக்கிவிட்டார்கள்.

இக்கலியில் வந்த இக்கலியின் மனிதர்கள்… “இவர்கள் நிலையே இவர்களுக்குப் புரியவில்லை…!” அழியும் உடல்… அழியும் உடல்… என்கிறார்கள். அழியும் உடலல்ல இவ்வாண்டவன் அருளிட்ட இந்த உடல் எல்லாம்.

உலகத் தன்மை அழிவதில்லை. பல நிலைகளைத் தான் இந்த உலகம் பெறுகிறது. உலக நிலையில் மாறுபட்டு மாறுபட்டுச் சுற்றிக் கொண்டே வருகிறது உலகம்.
1.உலகம் என்றென்றும் அழிவதில்லை…
2.காலங்கள் தான் அழிகின்றன… கால நிலைகள் அழிகின்றன.

அழியாத இந்த உலகம் பல அவதாரங்களை மாற்றிக் கொண்டே முதலில் ஆரம்பித்த நிலைக்கே வருகிறது. பிறகும் பல அவதாரங்களை எடுத்துக் கொண்டே சுற்றிக் கொண்டு வருகிறது.

அச்சூரியன் நிலை என்று அஸ்தமிக்கின்றதோ அன்று தான் இந்த உலகம் அழியும்… உயிரணுக்களும் அழியும்… மனிதனும் அழிவான்…!

ஒவ்வொரு மனிதனும் சுவாச நிலை என்ன…? என்று புரிந்திட்டால் இவ்வுயிருடனே என்றுமே அழியாத நிலையில் வாழலாம். அதற்குத்தான் இந்தப் பாட நிலைகள் எல்லாமே…!

நான் – தான்… நீ – நான்… நான் – நீ…!

நான் – தான்… நீ – நான்… நான் – நீ…!

 

ஓம் ஈஸ்வரா குருதேவா…! கருணைஸ்வரூபா… என்னை ஆட்கொண்டு அருள்வாய் ஈஸ்வரா…! நீ ஒளியாக இருப்பது போன்று என் உணர்வின் நினைவலைகள் அனைத்தும் ஒளியின் சுடராக வரவேண்டும்.

1.அந்த நினைவின் அலையாக நீயாக… நானாக வேண்டும்
2.நான் நீயாக வேண்டும் என்ற இந்த உணர்வின் தன்மை கொண்டு பாடுவதுதான்
3.கருணைஸ்வரூபா என்னை ஆட்கொண்டருள்வாய் ஈஸ்வரா என்பது.

நீ (உயிர்) எப்படி ஒளியாக இருக்கின்றாயோ… உணர்வின் தன்மை உனதாக இருக்க வேண்டும்.
1,எனதின் நிலைகள் உனதாக இருக்க வேண்டும்
2.உனதின் நிலைகள் எனதாக இருக்க வேண்டும்
3.நீ நானாக இருக்க வேண்டும்…! என்ற இந்த நிலையை எண்ணுவதற்குத் தான் “ஓம் ஈஸ்வரா குருதேவா…” என்பது,

ஆதிசக்தியின் அருள் பெற்ற ஈஸ்வரா குருதேவா…! ஆதியிலே விஷம்… விஷமற்ற நிலைகளில் தாக்கப்படும் பொழுது அது இயக்கமாகி சூடாகி அதனின் உணர்வு கொண்டு அது இயக்கச் சக்தியாக மாறுகின்றது…!

வெப்பம் பராசக்தி ஆகிறது… காந்தம் லட்சுமி ஆக மாறுகின்றது… இந்த விஷம் அதற்குள் “கருமாரியாக நின்று” அது இயக்கச் சக்தியாக அணுவாகின்றது.

இந்த இயக்கத்தைப் போலவே “நம் உயிருக்குள் நஞ்சின் தாக்குதல் தாங்காது இயக்கச் சக்தியாக ஆகி சூடாகி… அந்த உணர்வின் ஈர்ப்பு சக்தியாகி…” தன் உணர்வின் சக்தியை இந்த உடலை உருவாக்கும் உயிராக இருக்கின்றது என்பதைத்தான் ஆதிசக்தியின் அருள் பெற்ற ஈஸ்வரா குருதேவா உயிர் கருணைஸ்வரூபா என்னை ஆட்கொண்டருள்வாய் ஈஸ்வரா குருதேவா என்பது.

1.நஞ்சின் இயக்கமாக
2.துடிப்பின் இயக்கமாக
3.உயிரின் இயக்கமாகி
4.உயிரின் இயக்கம் வெப்பமாகி
5.நாம் எண்ணிய நிலைகள் காந்தமாகி
6.அதனை இணைத்து நாம் படைக்கும் திறனாக
7.என் உயிராக எனக்குள் இருந்து இயங்கும் நிலை என்பதை உணர்த்தச் செய்வது…
8.நான் யார்…? என்ற நிலையை இந்த உயிரின் இயக்கமாகத்தான் நானாகின்றேன் (இதை இணர வேண்டும்).

“அந்த நானின் தன்மை விளைந்து” (அந்த உணர்வின் தன்மை) அதுவே தானாகின்றது. தானின் நினைவு உணர்வு ஆகும்பொழுது ஒளியாகின்றது
1.நான் தானாக வேண்டும்
2.தான் நானாக வேண்டும் என்ற நிலையில்
3.இதைப் போன்ற ஞானிகள் காட்டிய அருள் வழியினைப் பெற வேண்டும் என்பதற்குத்தான் இதைப் பாடுவது “உயிரை நினைத்து…”

என் நினைவை எங்கெங்கோ அலைய விட்டு என் ஆசை என்னுள்ளே வளர்ந்திடாமல் என்னுள்ளே என்றுமே இருந்துவிடு ஈஸ்வரா.

இந்த உயிரின் தன்மை… உயிர் ஒளியாக இருப்பது போன்று
1.என்றும் நான் ஒளியான நிலைகளாக
2.உன்னுடன் ஒன்றியே நான் ஒளியின் சரீரமாக
3.நான் நீயாக வேண்டும் நீ நானாக வேண்டும்.

ஒளியின் சிகரமாக… நான் தானாகித்தான் நானாகி… அந்த நிலைகள் கொண்டு இந்த உடலின் தன்மை பெற்றாலும்… “என்றும் ஒளியின் சிகரமாக இருக்கும் பொழுது…” நீ நானாகி… நான் நீயாக வேண்டும்…! என்ற இந்த உணர்வின் தன்மை குரு காட்டிய அருள் வழியில் நான் (ஞானகுரு) வேண்டுகின்றேன்.

உணர்வின் தன்மை ஒளியாக மாற வேண்டும் என்ற நினைவு கொண்டு அந்த நிலையான ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்ற இந்த பாடலின் நோக்கத்தை
1.நாம் பரிபூரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று உங்கள் உயிரை வேண்டி
2.அதை நீங்கள் அனைவரும் பெற வேண்டும் என்று வேண்டுகின்றேன்.

“ஈசனின் சக்தியையே” தன் உடல் முழுவதும் ஈர்க்கச் செய்திடலாம்…! புரிந்ததா…?

“ஈசனின் சக்தியையே” தன் உடல் முழுவதும் ஈர்க்கச் செய்திடலாம்…! புரிந்ததா…?

 

சாமியார் ஒருவன்… நானே கடவுள்…! நானே தெய்வம்…! என்கிறான். அவ்விடம் உள்ள கருவின் வேலை வரைக்கும் தான்… அவன் வேலை எல்லாம்…!

ஆண்டவனின் சக்தியை அறிந்திடாமல் “அவனே கடவுள்..” என்கிறான். ஆண்டவன் என்றால் யார் என்றே அவனுக்குத் தெரிந்திடாது. அந்தக் கருவையே ஆண்டவன் என்கிறான்.

பல பூஜைகள் செய்து வருபவர்களின் எண்ணத்தையும் அவர்களின் கடந்த கால நிலையையும் கண்டிடலாம். இதைப் போன்ற நிலையை வைத்துத்தான் பல ஜோசியங்கள் கோவில்களில் உடுக்கை அடித்துச் சாமி கேட்பது எல்லாமே…!

இவ்வாவிகள் அறிந்து வந்து சொல்வது தான் இவை எல்லாம். மை போட்டுக் கேட்கிறார்கள். ஆண்டவனிடம் பூ கேட்கிறார்கள் என்பதெல்லாம் என்னப்பா…? இவ்வாவிகளின் வேலை தான்.

அருளுடன் தெய்வ நம்பிக்கையும் தன் உடலை விட்டுப் பிரிந்த ஆவிகள் எல்லாமே இந்நிலைக்கு வருகிறது. இதைப் போல உள்ள ஆவிகள் அனைத்துமே உடலை விட்டுப் பிரிந்தவுடன் மறு ஜென்மம் எடுப்பதில்லை. ஆயிரத்தில் கோடியில் ஒன்று தான் உடனே மறு ஜென்மம் எய்துகிறது.

அவசரத்தினால் எடுக்கும் ஜென்மத்தினால் அங்ககீனமுடன் குறையாகப் பிறப்பது குறைப்பிரசவம் குறையுடன் பிறக்கும் குழந்தைகள் நிலை எல்லாமே இது தான்…!
1.முன் ஜென்மத்தில் விட்ட குறையை
2.ஆவி உலகில் இருந்து அறிந்திட “அவகாசம் இல்லாமல்” வந்து குறையுடன் பிறக்கின்றது.

ஆனால் நல்ல நிலையில் ஆவி உலகில் சுற்றும் மறு ஜென்மம் எடுக்கும் வரை உள்ள ஆவிகள் தன் நிலை உணர்ந்து தன் நிலைக்கு ஏற்ற இடமாகத்தான் பிறக்கும்.

1.குழந்தை பிறப்பதற்கு முதல் ஆவி உலகில் உள்ள வரை அவரவருக்கு முன் ஜென்மம் தெரியும் என்றேன்.
2.ஆவி உலகில் உள்ள பொழுது எந்நிலையில் பிறக்கலாம் என்று தான் தெரியும்.
3.பிறந்த பின் தன் வாழ்க்கை நிலை எப்படி இருக்கும் என்பது தெரிந்திடாது.
4.பிறந்த பின் முன் ஜென்மமும் ஆவி உலகமும் அறிந்திட முடியாது. இப்பிறவிக்கு எல்லாமே மறைக்கப்படுகிறது.
5.இந்நிலையில் தான் ஈசனின் சக்தியே விளையாடுகிறது.

பிறப்பு இறப்பு ஆவி உலகம் எல்லாம் அறிந்த மனிதனால் அந்த ஈசனின் சக்தியை மட்டும் அறிந்திட முடிவதில்லை. பல கோணங்களில் ஆண்டவன் என்று வணங்குகிறான்.

அந்த ஈசனின் சக்தியை உணர்ந்த மகா தவ முனிவர்களும் இந்த மனிதர்களுக்குப் புகட்டிடவில்லை. அந்தச் சக்தி நிலையைப் பற்றித் தெரிந்திருந்தாலும்
1.இக்கலியில் வந்த மனிதர்கள்
2.அதையும் தன் வழிக்கு உண்ண காசாக்கி இருப்பார்கள்.

அதனால் தான் முனிவர்கள் நிலையில் தன்னையே தன் உடலையே அச்சக்தியின் அருளுக்கு அடிபணிய வைத்து அச்சக்தியின் அருள் எப்படி உள்ளது…? எந்நிலையில் அந்தச் சக்தியின் அருளைப் பெற்று மக்களுக்கு அருளிடலாம் என்று தான் போகரின் நிலை எல்லாம் வந்ததப்பா…!

உன் நிலையில் ஜெபமிருக்கின்றாய். அஜ்ஜெபத்தின் நிலையில் ஈசனின் சக்தியை உன் நிலைக்கு ஈர்த்திடப்பா…!

எப்படி ஈர்ப்பது என்கிறாய்…? கண்ணில் இல்லையப்பா ஒளி எல்லாம்.
1.இவ்வெண்ணத்தில்… உன் உயிரில்.. புருவத்தின் மேல்…
2.நெற்றியில் இந்நிலையில் தான் ஒளியப்பா…!

கனவில் பார்க்கின்றாய் பல நிலைகளை.. கண்களை மூடிக் கொண்டு…! அந்நிலை எப்படித் தெரிகின்றது…? கடும் இருட்டில் பல பிராணிகள் பூனை எலியைப் பிடிக்கின்றது. எலி பூனையைக் கண்டு தப்பி ஓடுகின்றது. நாய்க்கும் நரிக்கும் பாம்புக்கும் எப்படியப்பா இருட்டில் கண் தெரிகின்றது…?

சூரிய ஒளியில் இருந்துதான் கண் தெரிகிறது… கண் பார்வையினால்… என்று எண்ணுகிறாய்…!

தவ யோக முனிவர்கள் எல்லாம் அவர்கள் அமர்ந்த இடத்திலிருந்தே அனைத்தையும் அறிந்திட்டார்களே…! அது எப்படியப்பா…? ஒவ்வொரு மனிதருக்கும் அவ் ஈசனின் சக்தியில் எல்லா அருளும் உண்டப்பா..!
1.அவரவர்கள் எடுத்து அவர்களின் நிலையை அறிந்திட்டால்
2,கண்ணும் வேண்டாம்… உண்ண உணவும் வேண்டாம்…!
3.அவ் ஈசனின் சக்தியையே தன் உடல் முழுவதும் ஈர்க்கச் செய்திடலாம்… புரிந்ததா…?

ஒவ்வொருவரும் அவ் ஈசனின் சக்தியில் இருந்து பெற்றிருப்பதால் அவரவர்கள் வழியிலிருந்தே அருள் புரிகிறார்கள். இந்நிலை தான் கொங்கணவருக்கும் போகருக்கும் அகஸ்தியருக்கும் கோலமாமகரிஷிக்கும் ஐயப்பனுக்கும் இன்னும் பல மகரிஷிகளுக்கும்…!

1.ஆண்டவன் என்றால் இப்பொழுது யார் என்று புரிந்ததா…?
2.பல வழிச் சாமியார்களின் நிலையும் கோவில்களின் நிலையும் புரிகிறதா…?
3.ஞானிகள் சித்தர்கள் மகரிஷிகள் நிலையும் புரிகிறதா..?

இந்தப் பாட நிலையை வைத்து நான் யார்…? நீ யார் என்னும் நிலை புரிந்திருக்கும்.
1.உன்னையே நீ வணங்கு.
2.உன்னுள்ளே ஈசன் உள்ள பொழுது உன்னுள்ளே அவ் ஈசனின் சக்தியை ஈர்த்திடப்பா..!
3.அந்நிலையில் அறிந்திடுவாய் எல்லாமே…!

சூரியனைத் தான் கடவுளாக அன்று வணங்கினார்கள்

சூரியனைத் தான் கடவுளாக அன்று வணங்கினார்கள்

 

ஆதியில் ஆண்டவனை எந்த ரூபத்தில் வணங்கினார்கள்..?

உதய காலத்தில் ஆற்றுப் படுகையிலும் குளங்கள் கடல் இப்படி உள்ள இடங்களில் அந்நீரில் நின்று அந்தச் சூரியனின் சக்தியை சூரிய உதய காலத்தில் எண்ணி வணங்கினார்கள்.

அந்த நிலையில் வருண பகவான்… வாயு பகவான்… சூரிய பகவான்… என்று அந்தப் பகவானையே இந்நிலையில் கண்டு வணங்கி ஜெபித்தார்கள்.

1.காற்றும் மழையும் அவ்வொளியும் இல்லாவிட்டால் ஜீவனே இல்லை.
2.ஜீவனைத் தந்த சக்தி இந்த மூன்றுக்கும் தான் உள்ளது என்ற நிலையில்
3.இந்த மூன்றையுமே தெய்வமாக்கி வணங்கினார்கள்.
4.வணங்கினார்கள் என்ன…? அந்த நிலை கொண்டுதான் நாமும் வணங்க வேண்டும்.

அந்த நிலையிலிருந்து தான் நம் உயிர்ணுவிற்கு நம் ஆத்மாவிற்கே உயிர்த் துடிப்பு வந்தது. அந்நிலையில் அருள் பெற்ற நம் ஆத்மா அவற்றைத் தான் “ஆதி முதல் தெய்வமாக” வணங்கிப் போற்ற வேண்டும்.

ஆதியில் வந்த ஆண்டவனையே தன் விஞ்ஞான ஆராய்ச்சிக்காக எடுத்துக் கொண்ட மனிதனப்பா இன்றைய மனிதன்.

இன்றைய மனிதன் நம்பும் நிலை எல்லாம்..
1.அவன் போடும் கணக்குப்படி தேதியிலும் கைரேகைகளிலும் ஜாதகத்திலும் பெரும் நம்பிக்கை வைத்து
2.தன்னுள்ளேயே அந்த ஆண்டவனின் சக்தியை மறந்து விட்டு இன்று உலகம் முழுவதுமே இந்த நிலையில் தான் நம்பி வாழ்கிறது.
3.நாளும் நட்சத்திரமும் தேதியும் இவன் வைத்த கணக்கு தான்…!

ஆதியில் வாழ்ந்த மனிதன் அந்தச் சூரியனின் சக்தி கொண்டு ஒளி நம் நிலத்தில் படும் நிலை கொண்டு “நேரமும் காலமும்” அறிந்து செயல்பட்டான்.

அன்று பல பெரியவர்கள் இந்த இந்த நாட்கள் மழை பெய்யும்.. வெயில் அதிகமாக இருக்கும்… என்றெல்லாம் தான் அந்த ஞானத்தை வைத்து மக்களுக்கு அறிவுறுத்தினார்கள்.

இன்றைய வளர்ந்த விஞ்ஞான மனிதன் தன் அறிவைக் கொண்டு பல செயல் ரூபங்களையும் பல உபயோக நிலை கொண்ட பல உன்னதப் பொருள்களையும் கண்டிட்டான்.

அவ்வாறு தான் கண்ட நிலையை ஒன்றுடன் ஒன்று பொருத்தி வாழ்ந்து
1.உத்தம நிலையில் வாழ்ந்திடாமல்
2.பேராசை நிலை கொண்டு அழிவு நிலைக்கு ஏனப்பா செல்ல வேண்டும்..?

இன்று மனித மனங்களில் சுவாச நிலையே ஒருவரைப் போற்றியும்… ஒருவரைத் தூற்றியுமே… வாழ்வதாக உள்ளது. நம் மனித ஜென்மத்தில் தான் இந்தப் போற்றலும் தூற்றலும்.

போற்றலுக்கும் தூற்றலுக்குமா நாம் பிறவி எடுத்தோம்…!

ஆண்டவன் சக்தியிலிருந்து மகத்தான உன்னத நிலையில் ஆறறிவு படைத்து மனிதனாகப் பிறவி எடுத்துள்ளோம். அந்த நிலைக்கு அந்த ஆண்டவனின் சக்தியை நாம் உபயோகப்படுத்தாமல் அவன் தந்த சக்தி கொண்டு நம்மை நாம் அழித்து வாழ்கின்றோம்.

அதற்காகத்தான் இச்சக்தியை ஆண்டவன் நமக்கு அளித்தானா…?

மிருக ஜெந்துக்கு ஐந்தறிவு படைத்தான் ஆண்டவன் என்கிறோம். அந்த மிருக ஜெந்து போற்றலுக்கும் தூற்றலுக்கும் ஏங்குவதில்லை. பொருளுக்கும் ஆடை ஆபரணங்களுக்கும் அவைகளிடம் ஆசை இல்லை.

அவைகளின் நிலை தான் மனிதன் சொல்வது போல் ஐந்து அறிவு ஆயிற்றே..! அவைகளின் நிலைக்கு எப்படியப்பா இந்த நிலைகளைக் கண்டிட முடியும்…?

அம்மிருகத்தின் நிலையில் உள்ள உயர்ந்த குணம் ஒற்றுமையான குணம் அதன் அறிவுத் தன்மை இன்றைய ஆறறிவு படைத்த மனிதனுக்கு எங்கப்பா உள்ளது…?

மிருகங்களும் பறவைகளும் எந்தக் கடிகாரத்தை வைத்து எந்தத் தேதியை வைத்து நாளும் மணியும் கணக்கிட்டன…?

நாம் நினைக்கின்றோம்… மனிதனுக்குத் தான் எல்லா நிலையும் தெரியும் என்று…! பறவைகள் வாழும் பரிபக்குவமான வாழ்க்கை நிலையை மனிதர்கள் பார்த்து வாழ வேண்டுமப்பா…!

மிருகங்கள் நிலைக்கு என்ன தெரியும்…! நம்மைப் போல் அதற்குத்தான் ஆறறிவு இல்லையே…! என்கின்றான் மனிதன். அனால் இவன் பெற்ற பொக்கிஷத்தைத்தான் இவன் சிதற விடுகின்றான் என்பதை அறியவில்லை.

இது தான் இன்றைய உலக நிலை…!

நுகர்ந்த உணர்வின் வழியில் உயிர் நம்மை இயக்கிவிடக் கூடாது

நுகர்ந்த உணர்வின் வழியில் உயிர் நம்மை இயக்கிவிடக் கூடாது

 

இந்த உலகம் இருள் சூழ்ந்த நிலையினை நோக்கி ரொம்பவும் நெருங்கிச் சென்று கொண்டுள்ளது. நீங்கள் ஒவ்வொருவரும் இதைத் தெளிவாக உணர்ந்து கொள்ளுங்கள்.

அணுகுண்டுகளுக்கு மனிதர்கள் தப்பித்தாலும் அதில் வெளி வரும் அணுக் கதிரியக்கங்களும் அதிலே கருகிய விஷத் தன்மைகளும் பூமியின் நடுமையும் அடைந்து பூராவுமே கொதிகலனாக ஆகி…
1.மேலே இருக்கக்கூடிய நிலப்பகுதிகளில் எல்லாம் வெப்பங்கள் அதிகமாகி
2.தீயில் வேக வைத்தது போன்று நம்மைப் பூமிக்குள் கொண்டு சென்று வேக வைத்துவிடும்
3.குண்டுகளுக்குத் தப்பினாலும் கூட… இதிலிருந்து யாரும் தப்ப முடியாது

ஏற்கனவே 30 40 வருடங்களுக்கு முன் சொல்லி உள்ளேன் இத்தகைய கதிரியக்கங்கள் நம் பூமிக்குள் என்ன செய்யும்…? என்று…!

இந்த பூமி மட்டுமல்ல பிரபஞ்சத்தில் மற்ற கோள்களிலும் அணுக் கதிரியக்கங்கள் வளர்ந்து விட்டது. அதை துருவத்தின் வழி கவரும் பொழுது நம் பூமி வேகமாக உருகும் தன்மை வருகின்றது. பூகம்பங்கள் ஏற்படுகின்றது நில நடுக்கங்கள் வருகின்றது.

இதிலிருந்து தப்புவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்…?

எந்த நிமிடம் எதுவாக இருந்தாலும் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சென்றடைதல் வேண்டும்… பிறவி இல்லாத நிலையை நாம் அடைய வேண்டும்.

தீமைகள் புகாது தடுக்கும் சேனாதிபதி நமது ஆறாவது அறிவு கார்த்திகேயா… பிரம்மாவைச் சிறை பிடித்தான் முருகன்.

உதாரணமாக வேதனை என்ற உணர்வை எடுத்தால் நமது உயிர் அதை நமக்குள் பிரம்மமாக உருவாக்கி அடிக்கடி வேதனைப்படும்படி வைத்து விடுகின்றது.

ஆனால் நாம் சொன்னபடி இந்த உயிரை இயக்க வேண்டும்…!

நாம் எண்ணியதைத்தான் உயிர் இயக்குகின்றது… அப்போது அந்த அருள் உணர்வைப் பெற வேண்டும் என்று முன்னிலைப்படுத்தி… தீமையை நீக்கும் உணர்வாக பிரம்மமாக்கி நமக்குள் அதை உருவாக்க வேண்டும்.

நம்முடைய எண்ணம் தீமைகளை நீக்கும் உணர்வாக வளர்ச்சி பெறும்…
1.ஆகவே பிரம்மாவைச் சிறை பிடித்தான் முருகன்
2.அதாவது நான் சொன்னபடி இந்த உயிர் கேட்க வேண்டும்
3.அதன் வழி இந்த உடலை இயக்க வேண்டும்
4.நுகர்ந்த உணர்வுகள் வழி… உயிர் நம்மை இயக்கக் கூடாது.

தீமை நமக்குள் சிருஷ்டியாகக் கூடாது…! என்பதைத் தான் “பிரம்மாவைச் சிறை பிடித்தான் முருகன்… ஆறாவது அறிவு…” என்ற நிலை தெளிவாகக் கூறப்பட்டுள்ளது

இதை மனதில் வைத்து அருள் வழி வாழ்ந்து இருளைப் போக்கி பேரருளைப் பெற தியானித்து அந்த அரும் பெரும் சக்திகளை உங்களுக்குள் பெருக்கிக் கொள்ளுங்கள்.